
WRITTEN BY S NAGARAJAN
Date: 6 May 2016
Post No. 2785
Time uploaded in London :– 5-51 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)
ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்..
சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.
நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 3
ச.நாகராஜன்
மூலம் – மதுரை
மதுரை: தத்தன் என்னும் பாண்டியன் அரசாளுகையில் சமணர் அனுப்பிய நாகம் உமிழ்ந்த விஷத்தின் கொடுமை சிவபெருமானுடைய சடையில் இருந்த சந்திரனிடத்துள்ள அமுதத்துளியால் சமனதமுற்று மதுரமாயிற்று. அதனால் இந்தத் தலம் மதுரை என்ற பெயரைப் பெற்றது. திருவாலவாய், திரு நள்ளாறு, திரு முடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு மாடங்கள் கூடும் இடமாகையால் நான்மாடக் கூடல் என்ற பெயர் பெற்றது.சிவபெருமானின் அழகிய வடிவைக் கண்டு மகிழ்ந்த இந்திரன் சிவனுக்குச் சொக்கன் என்ற திருநாமம் சாத்தித் தொழுதான்.பாண்டியனுக்காக கால் மாறி ஆடிய திருவிளையாடல் உள்ளிட்ட 64 திருவிளையாடல்களின் அற்புதத் தலம்.
பூராடம் – திருச்செந்தூர்
திருச்செந்தூர்: முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக அமைந்த கடற்கரைத் தலம். வள்ளி தெய்வானையுடன் முருகன் வீற்றிருக்கும் திருத்தலம். சூரபத்மனை போரில் வென்ற தலமும் இதுவே. ஐப்பசி மாதம் நடக்கும் சூரசம்ஹாரத் திருவிழா பிரபலமான ஒன்று. நாழிக் கிணறு தீர்த்தம் கடலின் அருகே இருந்த போதும் உப்புக் கரிக்காமல் சுவையாக இருப்பது விந்தைக்குரிய ஒன்று.

Tiruchendur Skanda
உத்திராடம் – சஙகரநயினார் கோவில்
சங்கரநயினார் கோவில் : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தலம். இறைவன்: சங்கரலிங்க ஸ்வாமி இறைவி: கோமதி அம்மன் என்னும் ஆவுடையம்மன். உக்கிரபாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழம் பெரும் கோவில். ஆடி மாதத்தில் நடக்கும் ஆடித்தவசு திருவிழா பிரபலமானது. அம்மன் சிவனை வேண்டி ஊசிமுனையின் மேலிருந்து தவம் புரியும் திருத்தலம். அம்மனின் வேண்டுகோளை ஏற்று சங்கரநாராயணராக இறைவன் காட்சி கொடுத்த திருத்தலம். உடம்பில் கட்டி உள்ளிட்ட நோய்களிலிருந்து காக்கும் அரும் தலம்.
திருவோணம் – அர்த்தோதயம், மகோதயம்
அவிட்டம், சதயம் – காளஹஸ்தி, மல்லிகார்ஜுனம், கோகர்ணம் (சிவராத்திரி)
காளஹஸ்தி: இறைவன்: காளத்திநாதர் இறைவி: ஞானப் பூங்கோதை.கண்ணப்பர் அருள் பெற்ற தலம். சிலந்தி, பாம்பு, யானை வழிபட்டுப் பேறு பெற்ற தலம், பொன்முகலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது சிறந்த ராகு- கேது க்ஷேத்திரமாகும்.
கோகர்ணம்: வடநாட்டில் அமைந்துள்ள தலம். இறைவன்: மஹாபல நாதர் இறைவி: கோகர்ண நாயகி தீர்த்தம் :கோடி தீர்த்தம்
பூரட்டாதி, உத்திரட்டாதி – திருவாரூர் (தேவதீர்த்தம்)
ரேவதி – திருக்கடையூர் (அமிருத தீர்த்தம், திருவாவடுதுறை (மாஸம் பூர்வ பட்சத்தில் ஆரம்பமாகி அமரபட்சத்தில் தீர்த்தம் – அமரபட்சம்.
-தொடரும்
You must be logged in to post a comment.