காளிதாஸன் மீது போஜனின் நட்பு!!(Post No.2815)

kalidasa-

Kalidasa Statue in China

Written  BY S NAGARAJAN
Date: 16 May 2016

 

Post No. 2815

 

 

Time uploaded in London :–  5-27 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

சமஸ்கிருதச் செல்வம்

 

காளிதாஸன் மீது போஜனின் நட்பு!!

ச.நாகராஜன்

abhijnanasakuntalam_of_kalidas

World Famous Drama Sakunatala of Kalidasa

மாபெரும் மன்னனான போஜன் சிறந்த அறிவாளியும் கூட.

அவன் காளிதாஸன் மீது வைத்திருந்த அன்பை வார்த்தைகளால் விளக்க முடியாது. என்றாலும் கூட அந்த மாபெரும் மன்னன் காளிதாஸன் மீது தான் கொண்டிருக்கும்  அன்பை தன் வார்த்தைகளிலேயே விளக்குகிறான் இப்படி:

 

கச்சதம் திஷ்டதோ வாபி ஜாக்ரத: ஸ்வதோபி வா

மா மூன்மன: கதாசித் மே த்வயா விரஹிதம் கவே

 

போஜ மஹாராஜன் காளிதாஸனைப் பார்த்து நேரில் கூறுவது இந்தக் கவிதையாக மலர்ந்துள்ளது.

 

“ஓ, கவிஞரே! நடக்கும் போதும் சும்மா இருக்கும் போதும், விழித்திருக்கும் போதும் அல்லது தூங்கும் போதும் எனது மனம் உன்னை விட்டு ஒரு பொழுதும் விலகி இருக்காது.”

 

எப்படி ஒரு அருமையான நட்பு மன்னன் – கவிஞன் நட்பு!

அறிவுக்கு மன்னன் கொடுத்த மதிப்பு அந்த அரிய நட்பு!

 

இதை S.B.Nair  அழகுற ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார் இப்படி:

 

When walking or keeping still, when waking or sleeping may my mind never remain far away from you, O, the Poet!

 

இந்த அரிய கவிதைக் கூற்று பல்லகரின் போஜ ப்ரபந்தத்தில் 158வது செய்யுளாக அமைகிறது!

 

வரலாறு கூறும் ஒரு அரிய நட்பு போஜ – காளிதாஸன் நட்பு!

 

xxxxxx

 

சமஸ்கிருத செல்வம்

இறந்ததற்குச் சமம்!

ச.நாகராஜன்

 

கங்கை, வித்யா, குழந்தை, யக்ஞ தட்சிணை இவற்றின் மதிப்பை எப்படி அறிவது?

 

சாணக்யர்  தெளிவாகக் கூறுகிறார் இப்படி:

 

கங்கா ஹீனோ ஹதோ தேஷோ வித்யா ஹீனம் ஹதம் குலம்

அப்ரசுதா ஹதோ நாரீ   ஹதோ யக்ஞஸ்த்வ தக்ஷிணா:

 

இதன் பொருள் என்ன?

 

கங்கை இல்லாத தேசம் இறந்த சுடுகாடு தான்!

ஞானம் அல்லது படிப்பறிவு இல்லாத குடும்பம் செத்த குடும்பம் தான்!

 

குழந்தை இல்லாத பெண் இருந்தும் இறந்தவளே!

யக்ஞ தட்சிணை தராத யக்ஞம் பயனற்ற யக்ஞமே!

 

இதை எஸ்.பி. நாயர் (S.B.Nair)  ஆங்கிலத்தில் அழகுற இப்படி மொழியாக்கம் செய்கிறார்:

 

Dead is a land without Ganga:

Dead is a family without wisdom:

Dead is a barren woman;

Dead is a sacrifice not followed by gifts (to the Brahmanas)

 

சுருக்கமாகச் சொல்லும் போதே அழுத்தமாகச் சொல்வது கவிஞர்களின் இயல்பு. இப்போது கங்கை, வித்யா, குழந்தை, யக்ஞ தட்சிணை ஆகியவற்றின் மதிப்பும் முக்கியத்துவமும் நன்கு புரிகிறது, இல்லையா!

*********

 

Leave a comment

Leave a comment