
Written by S. NAGARAJAN
Date: 12 October 2016
Time uploaded in London: 5-41 AM
Post No.3243
Pictures are taken from various sources; thanks
Contact :– swami_48@yahoo.com
7-10-–2016 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
நான் வெட்டிய கடைசி உருளைக்கிழங்கு!
ச.நாகராஜன்
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பிரபல இயற்பியல் விஞ்ஞானியான சர் எர்னஸ்ட் ருதர்போர்ட் (Sir Ernest Rutherford 1871-1937) ) நியூஜிலாந்தைச் சேர்ந்தவர். அவருக்கு மலர்ச் செடிகளின் மீது ஆர்வமும் இல்லை, தோட்டப் பராமரிப்பில் இஷடமும் இல்லை. ஆனால் இளவயதில் தோட்ட வேலை செய்ய வேண்டியிருந்தது. ஒரு நாள் குடும்பத்திற்குச் சொந்தமான பண்ணைத் தோட்டத்தில் உருளைக்கிழங்கை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தான் அவருக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது. அவர் பெரிதும் படிக்க விரும்பிய கேம்பிரிட்ஜில் படிப்பதற்கான ஸ்காலர்ஷிப் அவருக்குக் கிடைத்து விட்டதென்ற செய்தி கேட்டு ஆனந்தக் கூத்தாடினார். கையிலிருந்த மண்வெட்டியைத் தூக்கி எறிந்தவாறே,”இது தான் நான் வெட்டிய கடைசி உருளைக் கிழங்கு” என்று கூறி விட்டுத் தோட்டத்தை விட்டுப் புறப்பட்டார்.
அவரின் விஞ்ஞான சாதனைகள் அனைவரும் அறிந்ததே!
****
You must be logged in to post a comment.