Written by London Swaminathan
Date: 5 May 2017
Time uploaded in London: 6-16 am
Post No. 3880
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை தமிழ்ப் புலவர்கள் அழகாகச் சொல்லுகின்றனர்:
1.காலை எழுந்திரு
2.பிறர் காணாமல் புணர் (மறைவாக செக்ஸ்)
3.மாலையிலும் குளி
4.பிற பெண்களிடம் போகாமல் உன் மனையில் புகு.
5.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை)
6.எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்).
காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல்
மாலை குளித்து மனை புகுதல் – சால
உற்றாரோடுண்ணல் உறவாடலிவ் வாறும்
கற்றாயோ காக்கைக் குணம்
வள்ளுவனும் தமிழ் வேதமாகிய திருக்குறளில் செப்பினான்:
“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது” (குறள் 481)
பொருள்:-
பகல் நேரத்தில் பெரிய கோட்டானைச் சிறிய காகம் கூட வென்றுவிடும். அதனால் பகைவரை வெல்லக் கருதும் மன்னன், ஏற்ற காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு ஆந்தைகள் எப்படித் தூண்டின என்பது பற்றியும் ஒரு கட்டுரையில் முன்னரே தந்து விட்டேன்
“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள” (குறள் 527)
காகம், உணவு கிடைத்தால், அதனை மறைத்துத் தான் மட்டும் உண்ணாது, மற்ற காகங்களையும் அழைத்து உண்ணும். அதுபோன்றவர்களுக்கே செல்வச் சிறப்பு கிட்டும்
My articles on Crows
INDIAN CROW by Mark Twine ; 9 February 2013
Date : 5 August 2015
Strange Belief about Crows in India and Britain!!
Research Article No. 1678; Dated 26 February 2015.
Strange Bird Stories in Mahabharata!
Research Article no. 1711; dated 12 March 2015
பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் ஒரு அதிசயம்!!
Research Article No. 1679; Dated 27 February 2015.
28 March 2013
–Subahm–