
Date: 15 DECEMBER 2017
Time uploaded in London- 5-38 am
COMPILED BY S NAGARAJAN
Post No. 4495
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாடல்கள் 25 முதல் 30
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
பாரதி பாமாலை
ம.க.சிவசுப்பிரமணியன்
பாடல் எண்: 25 முதல் 30
1
தெய்வம் அறிவென்றார் தாழ்வுயர்வு சாதியிலே
செய்தல் சிறியோர் செயலென்றார் – உய்வதற்கே
வீரம் துணையென்றார் வீட்டின்பம் காட்டுகவிக்
கார மணிவிப்பேன் யான்
2
ஒன்றே யிறையென்றார் ஒற்றுமைதான் நம்மவர்க்கே
யென்றுந் துணயென்றா ரெல்லோர்க்கும் – நன்றாகும்
கல்வி வளர்க்கும் கருத்துறுவீர் என்றகவிச்
செல்வர் தமிழுக்குச் சேய்
3
பாட்டுத் திறத்தாலே பாருலகைப் பாலிக்கும்
நாட்டமது கொண்டோனை நானிலத்தில் – கூட்டுவித்த
எல்லாம் வலனாம் எழிலிறைக்கே வாழ்த்துக்கள்
சொல்வோம் பெறுவோம் சுகம்
4
கூற்றம் வருமென்றுக் கூவிக் கலங்காதீர்!
ஆற்றுவீர் நற்பணிகள் அஞ்சாதீர் – போற்றுவீர்
தெய்வம் உளதென்பீர்! தேறுவீர்! என நமக்கே
உய்யவழி சொன்னான் உணர்ந்து.
5
காக்கை குருவிஎங்கள் கூட்டமென வுரைத்தான்
யாக்கை புரந்திவிடுவீர் யாவருமே! – நோக்கமது
ஓங்குகவே என்றென்றும் ஒன்றிடுவீர் என்றினைய
பாங்குரைக்கும் பாரதியின் பா.
6
எத்திக்கும் முத்தமிழை ஏற்றமுறச் செய்வதுவும்
தித்திக்கும் கல்வி திகழ்வதுவும் – சித்திக்கும்
நல்லறமே நாட்டில் நிலவுதலும் வேண்டுமென்று
சொல்லியவர் செந்தமிழர் சொத்து.
தமிழ்க் குயில் கவிதைத் தொகுப்பில் கவிஞரைப் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:
ம.க.சிவசுப்பிரமணியன்: ‘வித்துவான்’ பட்டம் பெற்றவர். சொல்வன்மை உடையவர். சேதுபதி உயர்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுபவர்.
****
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.