பாரதி போற்றி ஆயிரம் – 32 (Post No.4642)

Date: 21 JANUARY 2018

 

Time uploaded in London- 6-12 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4642

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

பாரதி போற்றி ஆயிரம் – 32

  பாடல்கள் 180 முதல் 187

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

 பாரதியும் பாரதிதாசனும் (தொடர்ச்சி)

 

“காதலி னாலுயிர் தோன்றும் – இங்கு

     காதலி னாலுயிர் வீ ரத்தி லேறும்

காதலி னாலறி வெய்தும் – இங்கு

    காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்!

 

பாரதி சொன்னத னாலே – காதல்

    பாட்டர்கள்  நெஞ்சிலும் ஏறுந் தன் னாலே!

பாரதி தாசனும் சொன்னார் – எனின்

    பாரதி சொன்னதன் பின்பவர் சொன்னார்!

 

பிள்ளைக் கனியினைக் காட்டி – இன்பம்

   பெற்றவன் மற்றவர் பெற்றிடத் தந்தான்!

வெள்ளை மனத்தொரு பெண்ணின் – நெஞ்சில்

    வீ ழ்ந்தவன் நமையும் வீ ழ்ந்திடச் செய்தான்!

 

கற்பனை வாழ்விது மாயம் – எனக்

    காட்டிய சாமிகள் சாத்திரச் சாயம்

விற்பனன் பாரதி சொல்லில் – கெட

   வீ ழ்வது தான் அவன் காவிய மாயம்!

 

நிற்பது ஊர்வது யாவும் – இந்த

   நீணிலத் துள்ளநல் லின்பங்கள் யாவும்

அற்புதச் சிந்தனை யாவும் – நிலை

    ஆவதில்லை என்ற சூதரைக் கொண்டா!

 

சோலை மரங்க ளனைத்தும் –தினம்

    தோன்றுவ தேயொரு விதையினி றென்றால்

சோலைகள் பொய்யென லாமோ – இதைச்

    சொல்லொடு சேர்ப்பவர் மூடர்க ளன்றோ?

 

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தன் – புவி

    பேணி வளர்த்திடு மீசன்!

மண்ணுக் குள்ளேசில மூடர் – நல்ல –

    மாத ரறிவைக் கெடுத்தார்!

 

எண்ணித் துடித்தவன் சொன்னான் – “கண்கள்

    இரண்டினி லொன்றைக் கெடுத்திட லாமோ?

பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்

    பேதமை யற்றிடும்! ஆம்; – இது உண்மை!

(அடுத்த பகுதியுடன் இக்கவிதை முடியும்)

 

கவிஞர் கண்ணதாசன்: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்

***

 

 

Leave a comment

Leave a comment