
Date: 29 JANUARY 2018
Time uploaded in London- 5-47 am
COMPILED by S NAGARAJAN
Post No. 4674
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.
பாரதி போற்றி ஆயிரம் – 39
பாடல்கள் 222 முதல் 231
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கவிஞர் தமிழழகன் பாடல்கள்
கோகிலக் கவிஞன்!
தெய்வத் தமிழினில் செய்வதே பாட்டெனச்
சிந்தை உயர்த்திடுவான் – அதைக்
கைவரும் மாகலை காட்டி நமையும்
கனவில் பெயர்த்திடு வான்
ஞாலம் வியந்திடக் காலம் கடந்தும் மெய்ஞ்
ஞான ரதம் விடுவான்; – அதன்
மூலம் புதுயுகச் சீலம் நமக்குற
மோன பதம் நடுவான்!
நாட்டொரு மைக்கெனக் கூட்டழைப் பிட்டு
நவயுகம் காட்டிடு வான்; – இசைப்
பாட்டும் பனுவலும் பாரதத் தாயின்
பணிக்குமே சூட்டிடுவான்!
எத்தொழிலையும் இகழ்ச்சி இல் லாமல்
இயற்றுக முன்னம் என்பான்; – தவ
உத்தமர் தாம் அவர் உண்மைத்தெய் வங்களாகி
ஓங்குக பின்னும் என்பான்!
பெண்அடி மையினை எண்ணிடும் மூடர் தம்
பேச்சினைத் தூற்றுமென்பான்; – அவர்
மண்ணடி மை யற மாதா பராசக்தி
மாறிய தோற்ற மென்பான்!
சாதிகள் ஏதென்றும் சண்டை ஏ தென்றும்
சகோதர வாதிடுவான்; – யார்க்கும்
நீதிகள் சொல்வதில் நிச்சயம் மாறாத
நேர்மையும் ஓதிடு வான்!
புல்லிலும் வைரப் புதுப்படை வாங்கி முன்
போருக் கெனத் திமிர்வான்; – நெடு
வில்லிலும் வாளிலும் வெல்படை வாணி
விஜய னொடும் நிமிர்வான்!
பழமை உரத்தின் செழுமையி லே வேர்ப்
பலாவின் புதுமை செய்வான்; – அவை
முழுமையும் பின்னர்ப் பழமையாய் மாற
முனையும் விதமும் சொல்வான்!
தனி என வாழும் மனிதனுக் கும்சமு
தாயத்தின் பங்கை இட்டான்; – அதற்(கு)
இனி ஓர் விதி செய்வம் என்றுமுன் கூறி
இதயமும் நன்கு தொட்டான்!
பாரதி இவ்வரும் பண்புறு நாட்டின்
பரவசக் கோகிலமாம்! – அவன்
பேர் எதி லும் நிற்கப் பேணுவோர் வாழ்வெலாம்
பின்பும் குதூகலமாம்!
தமிழழகன்: சந்தக்கவிமணி என்ற பட்டம் பெற்றுள்ள இவர் ஏராளமான கவிதைகளைப் புனைந்துள்ளார். பாரதிதாசன் விருது பெற்றுள்ளார்.
தொகுப்பாளர் குறிப்பு: 7-12-1975 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கவிதை.
நன்றி: கவிஞர் தமிழழகன்; நன்றி: தினமணி சுடர்
***