Hanuman is No.4- Kamban on God! (Post No.5281)

Written by London swaminathan

Date: 2 August 2018

 

Time uploaded in London – 13-14    (British Summer Time)

 

Post No. 5281

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

Kamban, the Tamil poet who lived one thousand years ago, is considered one of the greatest of poets of India. He gave us the Valmiki Ramayana in Tamil verses. Though he himself said that he followed Valmiki, he deviated from Valmiki in several anecdotes.

He refers to the Trinity- Brahma,Vishnu and Shiva. He deals with Omkara and Upanishads.

 
He used the words Upanishad, Om , Vedas and Valmiki in several places . His prayer in the beginning of last kanda “Yuddha kanda” is interesting.Kamban says in the very first verse,

“TO THOSE WHO SAY HE IS ONE, HE IS ONE
TO THOSE WHO SAY HE IS MANY, HE IS MANY
HE IS NOT, YET HE IS; NOWHERE AND EVERYWHERE
HOW THEN ALAS! CAN THE LIKES OF US
EXCEPT THROUGH FAITH ACCEPT HIS BEING?”

Radhakrishnan , former President of India and a great philosopher also says,”if god is somewhere , he is every where”.

Kambar (Kamaban) lived in a period that followed the age when Saivites and Vaishnavites clashed with each other on the topic of Who is the Supreme God – Shiva or Vishnu?

Kamban never indulged in such petty fights. He praised Rama as an incarnation, but kept on praising Shiva as well. His epithets for Shiva were sweet and multi coloured. It is in hundreds of verses.


Hanumar is the Fourth God
!

In the chapter ‘The Phantom Sita’ of Yuddha kanda, Kamba Ramayana,
Through the mouth of Malyavan, Kamban praised Anjaneya:

“If he wants to alter the norms
He will do it through main force
Why is it said that the prime gods are Three ?
This can be but a thoughtless notion
With Hanuman their number is Four

Kamban wants to say that next to the Hindu Trinity, Brahma, Vishnu Shiva, Hanuman is the greatest.

Tulsi das also praised Him as an incarnation of Lord Shiva
Sankar suvan kesari nandan
Tej pratap maha jag vandan- Hanuman Chalisa verse

Xxx

And Kamban concludes his magnumopus Ramayana with the following two verses,

“The great one who had arrived
From Sesha in heaven to Ayodhya on earth
Ruled with his brothers guarding Dharma and the earth
So that all in heaven and below
And in the seven worlds, hailed and praised him
As Our Lord, and gladly did his bidding”.

“Those who tell the story of Rama
Who appeared on earth to kill Ravana
And guard all the world, and with his brothers
Stands as the one beyond the beyond
Will become kings and conquer even Death.”

(Translation of Tamil Verses by P S Sundaram, Tamil Nadu Government Publicaion)

–Subham–

 

பஜ கோவிந்தம் தோன்றிய கதை (Post No.5280)

Written by London swaminathan

Date: 2 August 2018

 

Time uploaded in London – 6-36 am    (British Summer Time)

 

Post No. 5280

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பஜ கோவிந்தம் என்பது ஆதி சங்கரர் இயற்றிய ஏராளமான துதிகளில் ஒன்று. இது பற்றிய சுவையான கதை உண்டு.31 ஸ்லோகங்கள் உடைய இந்த துதியில் முதல் 12 ஆதி சங்கரரால் இயற்றப்பட்டவை, ஏனையவை அவருடன் சென்ற சீடர்கள் 14 பேராலும் மற்றோராலும் பாடப்பட்டவை.

 

எளிய ஸம்ஸ்க்ருதத்தில் அரிய கருத்துகளைக் கொண்ட இந்த பாட்டின உண்மையான பெயர் வேறு! பஜ கோவிந்தம் அல்ல!

 

‘மோகத்துக்கு (ஆசை) சம்மட்டி அடி’ கொடுக்கும் பாடல் என்பதால் இதை ‘மோக முத்கர’ என்றும் அழைப்பர்.

 

31 பாடல்களில் முதல் 12, ஆதி சங்கரரால் இயற்றப்பட்டதால் அந்த 12 பாடல் தொகுதிக்கு ‘த்வாதஸ மஞ்சரிக ஸ்தோத்ரம்’ என்று பெயர். 14 சீடர்கள் பாடிச் சேர்த்த பகுதிக்கு ‘சதுர்தஸ மஞ்சரிக ஸ்தோத்திரம்’ என்று பெயர்.

 

31 பாடல்களுக்கும் பொதுவான பெயர் ‘பஜ கோவிந்தம்’. இந்த 4 வரிகள் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் பாடப்படுவதால், அந்த  நூலுக்கே அந்த வரிகளின் பெயர் — பஜ கோவிந்தம் — என்று அமைந்துவிட்டது.

 

இந்துக்களின் புனித நகரான காசியில் ஆதி சங்கரர் தனது 14 சீடர்களுடன் நடந்து கொண்டிருந்தார். வயதான ஒருவர் ஸம்ஸ்க்ருத இலக்கண பாடத்தை ‘டுக்ருஞ்கரணே’, ‘டுக்ருஞ்கரணே’  என்று நெட்டுரு போட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஆதி சங்கரருக்குக் கோபம் வந்தது என்பதை விட கருணை பிறந்தது என்றே சொல்ல வேண்டும்; இல்லாவிடில் இவ்வளவு அருமையான நூல், துதி நமக்குக் கிடைத்திருக்காது.

 

மூட புத்தியுளவரே! சாகப் போகும் தருணத்தில் இந்த இலக்கண விதிகள் உமக்கு உதவிக்கு வருமா? சாகும் நேரத்தில் சங்கரா, சங்கரா என்றாலாவது போகும் வழிக்கு புண்ணியம் சேர்க்கலாமே என்று 12 துதிகளில் அறிவுரை பகன்றார்.

 

31 ஸ்லோகங்களையும் படித்தறிய எத்தனையோ புத்தகங்கள் உள. முதல் பாட்டை மட்டும் இங்கே தருகிறேன்.

 

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

பஜ கோவிந்தம் மூடமதே

ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

ந ஹி ந ஹி ரக்ஷதி டுக்ருஞ்கரணே

 

 

“கோவிந்தனைத் துதி (கடவுளைத் துதி) , கோவிந்தனைத் துதி (கடவுளைத் துதி) மூடனே! குறித்த நேரம் (மரண காலம்) வரும்போது இலக்கண விதிகள் உன்னைக் காக்காது.”

 

இங்கே இலக்கண விதிகள் என்பது, இறைவனைப் பற்றிப் பேசாத கதை கட்டுரைகள் முதலியன எனப் பொருள் கொள்ள வேண்டும். மேலும் ‘டுக்ருஞ்கரணே’ என்ற இலக்கண விதி பாணினியின் தாது பாடத்தில் உள்ளது என்றும் அறிஞர்கள் விளம்புவர்.

 

பஜகோவிந்தத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் தமிழ் வேதமாகிய திருக்குறளில் இருந்து ஒவ்வொரு குறளை ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம். இதோ இந்த முதல் பாட்டின் கருத்தை இரண்டாவது குறளில் காணலாம்.

 

 

கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின் (2)

 

“அறிவே வடிவாய் விளங்கும் கடவுளின் திருவடிகளை ஒருவன் நாள்தோறும் வணங்கவில்லை எனில் கல்வியால் (டுக்ருஞ்கரணே) என்ன பயன்?”

 

இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனையுடைத்தால், ஒருவரை ஒருவர் பார்த்துதான் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை.

‘செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில்

சிந்தனை ஒன்றுடையாள்’ என்பது பாரதியின் வாக்கு அல்லவா!

 

சுபம்

இயற்கை வளத்தைப் பாதுகாப்போம்! (Post No.5279)

Written by S NAGARAJAN

Date: 2 August 2018

 

Time uploaded in London – 5-48 am    (British Summer Time)

 

Post No. 5279

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலையில் ஒலிபரப்பிய சுற்றுப்புறச் சூழல் உரைகளில் நான்காவது உரை

இயற்கை வளத்தைப் பாதுகாப்போம்!

இயற்கை வளத்தை இடையறாது மனிதன் அழித்து வருவதால் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவும், குடிநீரும் பற்றாக்குறையாக் இருக்கும் இழிநிலை ஏற்பட்டுள்ளது.

 

நாம் சுவாசிக்கும் காற்றும், உண்ணும் உணவும், நம்மை நோய்களிலிருந்து காக்கும் அரிய வகை மூலிகைகளும், உயிர் வாழ இன்றியமையாத நீரும்,  தாவர வளமும் விலங்கு வளமும் இல்லாமல் இருக்காது. ஆக ஒன்றை ஒன்று சார்ந்த தாவர மற்றும் விலங்கு வளம் காக்கப்பட வேண்டியது சுற்றுப்புறச் சூழலின் சமச்சீர்த்தன்மைக்கு இன்றியமையாதது.

 

பண்டாக்கள் (Pandas) மட்டுமே மூங்கில் தளிர்களை உண்ணும். சீனாவில் மூங்கில் காடுகள் அழிக்கப்படவே அங்கு பண்டா இனமே இல்லாமல் போனது. சீனாவில் காடுகள் அழிக்கப்பட்டபோது புலிகள் வாழ இடமில்லாமல் அவை தவிக்க ஆரம்பித்தன. அவற்றை பெருமளவில் மக்கள் கொன்று குவித்தனர். தப்பிப் பிழைத்த புலிகள், ஆப்பிரிக்க காடுகளுக்கு அனுப்பப்படவே அவை அங்கு மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தன. ஆகவே காட்டு வளம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை அனைவரும் உணர முடியும்.

 

பயோடைவர்ஸிடி எனப்படும் உயிரினவகை வேறுபாட்டில் ஏற்படும் இழப்பு பல்வேறு அபாயங்களை ஏற்படுத்தும். ஆசியா பசிப்பிகில் இன்று மிக அதிக அளவில் இருக்கும் மீன் வகைகள் 2048இல் ஒன்று கூட இருக்காது; அமெரிக்காவில் குடிநீர் தட்டுப்பாடு, ஐரோப்பாவில் 42% சதவிகிதம் உயிரினங்களின் இழப்பு ஆகியவை இயற்கை வளத்திற்கு மனிதன் ஏற்படுத்திய கேட்டினால் உருவானவையே.

பிரான்ஸில் பறவை இனங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

 

உயிரினவகை வேறுபாடு பற்றிய ஒரு ஆய்வு நூறு நாடுகளைச் சேர்ந்த 550 நிபுணர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. ஆய்வை முடிக்க மூன்று வருடங்கள் ஆயின. 129 நாடுகளின் அரசுகளினால் அங்கீகரிக்கப்பட்ட உயிரின வகை வேறுபாடு பற்றிய அறிக்கை உலகளாவிய விதத்தில் செயல்படுத்தும் ஒரு செயல் திட்டத்திற்கான அடிப்படை விஷயங்களை முன் வைக்கிறது.

 

பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருவதற்கான முக்கிய காரணம் வேட்டையாடுதலே. சீதோஷ்ண நிலை மாறுதல், உலகம் வெப்பமயமாதல், விஷ வாயுக்கள் மற்றும் அபாயகரமான நச்சுப் பொருள்கள் ஆகியவையும் இதர பல காரணங்களாகும்.

 

350 கோடி வருடங்களாக பல்வேறு ஜீவராசிகள் பூமியில் இருந்து வந்துள்ளன. அவற்றில் 95 விழுக்காடு இன்று இல்லாமல் போய் விட்டன. உலகளாவிய விதத்தில் இப்படி பல்வகை உயிரினங்கள் இல்லாமல் போவது சாதாரண காலத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது.

 

ஆகவே மிருக மற்றும் தாவர வகைகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும்.

 

***

 

குருவைப் பார்த்து சிரித்த சிஷ்யன்! (Post No.5278)

Written by London swaminathan

Date: 1 August 2018

 

Time uploaded in London – 9-24 am    (British Summer Time)

 

Post No. 5278

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஒரு நாள் மாலை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், தன் குரு தோதாபுரியோடு அமர்ந்து இருந்தார். அவர் வளர்த்து இருந்த நெருப்பின் அருகில் இருவரும் அமர்ந்து இருந்தனர். இரண்டுபேரும் தங்களை மறந்து வேதாந்தப் பேச்சில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது கோயில் தோட்டக்காரன் சுருட்டைப் பற்றவைக்க அந்த நெருப்பிலிருந்து எரியும் விறகு ஒன்றை எடுத்து வந்தான். முதலில் தோதாபுரி இதை கவனிக்கவில்லை. அவன் நெருப்பை எடுத்ததும் பார்த்துவிட்டார். அவருக்கு அளவில்லாத கோபம் வந்துவிட்டது.

 

பிரம்மமயமான நெருப்பிலிருந்து சுருட்டு பற்ற வைப்பதா? என்று  எண்ணிய அவர், அவனைக் கண்டபடி திட்டிவிட்டு, அடிப்பதற்கே போய்விட்டார். இதைக் கண்ட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் “என்ன இது? என்ன இது?” என்று  பரவச நிலையில் உரக்கக் கூவியபடி, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

 

தோதாபுரி, தனது சீடனின் விசித்திரமான நடவடிக்கையைக் கண்டு “ஏன் சிரிக்கிறாய்? அவன் செய்தது தவறான காரியம் இல்லையா?” என்றார்.

 

 

ஒருவாறு சிரிப்பை அடக்கிக்கொண்ட ராமகிருஷ்ணர் (பரமஹம்சர்), தோதாபுரியைப் பார்த்து,  “உங்களுடைய அத்வைத ஞானத்தின் ஆழம் என்னைச் சிரிக்க வைத்துவிட்டது. இவ்வளவு நேரம் என்னிடம், பிரம்மம் ஒன்றே உண்மை, உலகத்தில் உள்ள உள்ள ஒவ்வொரு பொருளும் அந்தப் பிரம்மத்தின் தோற்றமே என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள்; அதன்படி பார்த்தால் அந்த நெருப்பும் பிரம்மம்; அதை எடுத்துச் சுருட்டுப் பற்றவைத்த தோட்டக்காரனும் பிரம்மம்; சுருட்டைப் பற்ற வைக்கிற செயலும் பிரம்மம். பிரம்மம் பிரம்மத்தைப் பற்ற வைக்கிறது. அப்படியிருக்க தோட்டக்காரன் செய்தது அக்கிரமம் என்று நீங்கள் அவனை அடிக்க ஓடுகிறீர்களே! எல்லோரும் ஆட்டிப் படைக்கும் மாயையின் சக்திதான் எப்படிப்பட்டது என்று நினைத்தேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை” என்றார்.

 

அதைக்கேட்டதும் தோதாபுரி அசந்தே போய்விட்டார். நெடு நேரம் அவரால் ஒன்றுமே பேசமுடியவில்லை. பிறகு நிதானமாக, “ஆமாம் நீ சொல்வது சரிதான். கோபத்தில் நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன்; எதனிடமும் பற்றுக்கொள்வதும் ஆபத்துதான். இனிமேல் கோபம் கொள்ள மாட்டேன்”  என்றார். அது போலவே அன்றிலிருந்து கோபப்படுவதை விட்டுவிட்டார்.

 

xxxx

 

யானைப் பாகன் பிரம்மம்!

 

(2014 பிப்ரவரியில் எழுதிய கதை)

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை:

“ஒரு குரு, தனது சிஷ்யனுக்கு, உபதேசம் செய்தார். நீயும் பிரம்மம், நானும் பிரம்மம். எல்லாம் கடவுள் என்று. சிஷ்யன் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டுக் கொண்டான். வெளியே ஞானத் திமிருடன், செருக்குடன் நடந்தான். ஒரு மதம் பிடித்த யானை அவ்வழியே வந்தது. அனைவரும் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினர். யானைப் பாகனும் ‘விலகிப் போ, விலகிப் போ’ என்று கத்தினான்.

 

அவனோ, நானும் பிரம்மம், இந்த யானையும் பிரம்மம், நான் எதற்கு நகர வேண்டும்? என்றான். அவனை யானை துதிக்கையால் சுழற்றி தூக்கி எறிந்தது.

ரத்தக் காயங்களுடன் குருவிடம் வந்து முக்கி முனகிய வாறே, குருவே! நானும் பிரம்மம், யானையும் பிரம்மம், ஆனால் அந்தப் பிரம்மம் இந்தப் பிரம்மனைத் தூக்கிப் போட்டுக் காயப்படுத்தியது. ஏனோ? என்றான்.

சிஷ்யா!, சிறிது விளக்கமாகச் சொல். யானை தனியாக ஓடி வந்ததா? மற்ற யாரும் அங்கு இல்லையா?

குருவே, யானைப் பாகன் விரட்டவே எல்லோரும் ஓடிவிட்டனர். நான் அவன் சொன்னதை மறுத்து நானும் பிரம்மம் , யானையும் பிரம்மம் என்று வாளாவிருந்தேன்.

சிஷ்யா!, யானையை பிரம்மம் என்று நீ கருதினாய். அதன் மீதிருந்த பாகன் என்ற பிரம்மம் சொன்னதை கேட்கவில்லையே. அவனும் பிரம்மம்தானே! என்றார்.

ஆக, குரு சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் குருவின் கட்டளையை மீறியதால் அவர் துயரம் அடைந்தார்.

 

–subham–

STORY BEHIND ‘BHAJA GOVINDAM’ HYMN (Post No.5277)

Written by London swaminathan

Date: 1 August 2018

 

Time uploaded in London – 6- 52 am    (British Summer Time)

 

Post No. 5277

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

What is Bhaja Govindam?

Bhaja Govindam is a hymn in Sanskrit. Adi Shankara wrote part of it i.e. first 12 stanzas.

Bhaja Govindam teaches the fundamentals of Vedanta in simple, musical verses. Children can easily learn the Advaita philosophy of Shankara through these verses. Young men can remove all his delusions, and so the poem is also called as ‘Moha Mudgara’ (it means the hammer that strikes at delusion).

 

A popular story describes the circumstances in which this great poem broke out from the inspiring heart of the Teacher Shankara. It is said that once in Benares (Varanasi/ Kasi)  Shankara along with his fourteen disciples (followers) was going , he overheard an old pundit (scholar) repeating to himself grammar rules. Shankara realised that it is a mere intellectual accomplishment and thus wasting his time in life.  Immediately he burst forth into these stanzas, known as Moha Mudghara, now popularly known as Bhaja Govindam.

 

“Grammar rules will never help anyone at the time of death. While living, strive to realise the deathless state of purity and perfection.”

The opening stanza is repeated as a refrain or chorus, at the end of the each of the following verses. First twelve stanzas were given out by Shankara himself. They go under the name of the Dwadasaha- Manjarika- Stotram (A hymn which is a bunch of twelve verse-blossoms) . Shankara’s followers, inspired by the Guru, added one each and those fourteen are called Caturdasa Manjarika Stotra ( a hymn which is a bunch of fourteen verse-blossoms). At the end Shankara concluded it with a few more stanzas totalling 31 stanzas.

 

I am giving below the first stanza:

Bhaja Govindam, Bhaja Govindam,

Govindam Bhaja Mudamathe

Samprapte sannihite Kale

Na Hi Na Hi  Rakshati Dukurunckarane

 

Meaning:

“Seek Govind (god), Seek Govind (god), Oh Fool!

When the appointed time comes (death), grammar rules surely will not save you”.

 

The grammar-rule that has been indicated here stands for “all secular knowledge and possessions”. The grammatical formula mentioned here in DUKRUNCKARANE is from the Dhatupada of Panini’s grammar treatise Sidhanta Kaumudi.

 

Tiru Valluvar in his Tamil Veda ‘Tirukkural’ also emphasise this point:

 

‘Learning and scholarship are of no avail if they do not lead

One to worship at the wise one’s divine feet’- Kural 2

In fact we can compare every stanza of Bhaja Govindam with Tamil Couplets in Tirukkural!

 

Source book- Bhajagovindam by Chinmaya mission with my inputs on Tirukkural.

–Subham–

 

 

ஜெயகாந்தனின் ‘பாரதி பாடம்’ (Post No.5276)

Written by S Nagarajan

Date: 1 August 2018

 

Time uploaded in London – 6-10 am    (British Summer Time)

 

Post No. 5276

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 55

ஜெயகாந்தனின் ‘பாரதி பாடம்

 

ச.நாகராஜன்

 

அறிமுகம் தேவையில்லாத எழுத்தாளர் ஜெயகாந்தன். பாரதி பக்தர். அவர் குழந்தைகளுக்காக பாரதி வழியில் பாடம் நடத்த வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். தற்காலத்தில் நடைமுறையில் உள்ள கல்வி முறை நமக்கொரு சாபக்கேடு ஆகும் என்பது அவர் கருத்து.

வானொலி நிலையம் முன் வர, 13 வாரங்கள் வானொலி மூலமாக அவர் இந்தப் புதிய பாரதி பாடத்தை வழங்கினார்.

இதை 1974ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தன்று கலைஞன் பதிப்பகம் (தி.நகர், சென்னை – 17) முதல் பதிப்பாக வெளியிட்டது.100 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் 13 அத்தியாயங்கள் உள்ளன.

அவை : விளையாட்டு, பறவைகள், நாய், பாட்டமுதம், தெய்வம், ஜாதியும் சமூகமும், வருணமும் தர்மமும், குடும்பம், ஆணும் பெண்ணும், நமது சமயம், நமது பண்பாடு, சமதர்மம், கல்வி.

இணைப்பாக பாப்பாப் பாட்டு மற்றும் முரசு உள்ளது.

ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் வினாக்களும், பயிற்சியும் உள்ளது.

 

குழந்தைகளுக்காக பாரதியை அவர் அறிமுகப்படுத்தி அவர்  எடுத்துரைக்க்கும் கருத்துக்களில் சில :

பாட்டமுதம் என்ற அத்தியாயம்:

மகாகவி பாரதியாருக்குப் பாடல்களின் மீதும் செவியுணர்வின் மீதும் வியப்புக் கலந்த பிரீதி உண்டு.

கானப்பறவை கலகலெனும் ஓசை, காற்று மரங்களின் இடையே காட்டுகின்ற இசைகள், ஆற்று நீர் ஓசை, அருவி ஒலி, பெருங்கடலின் நிற்காத பேரோசை, மானுடப் பெண்கள் ஊனுருகப் பாடுவது, ஏற்றமிறைப்பவர்களின் இசை, நெல் குத்தும் பெண்களின்குக்கூவெனக் கொஞ்சும் ஒலி, சுண்ணாம்பு இடிப்பவர்களின் சுவைமிகுந்த பண்கள், பண்ணைகளில் வேலை செய்யும் பெண்களிடம் பழகும் பல பாடல்கள், வட்டமிட்டுப் பெண்கள் கும்மியடிக்கிறபொழுது ஏற்படும் வளைக்கரங்களின் ஒலி, வேயின் குழல், வீணை போன்ற மனிதர்களால் வாசிக்கப்படும் பல கருவிகள் முதலியவற்றிலிருந்து எழுகின்ற வாழ்க்கைப் பாட்டும், இயற்கை இசையும் நாட்டில் மட்டுமல்லாமல் காட்டிலும் ஒலிக்கும் என்னும் பாரதியாரின் வரிகளிலிருந்தே அவரது இசைக்காதலை அறிய முடிகிறது.

 

தெய்வம் என்ற அத்தியாயம்

வேதம் என்பது பாரதத்தின் பொதுச் சொத்து. வீரம் என்பது வேதத்தைச் சார்ந்தெழுந்த நல்லுணர்வு. இவை எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டு உலக மாந்தரோடு இணைந்து ஒற்றுமை காண்பதும் உயர்வு அடைவதும் நமது பாரதத்தின் வழியாகும்.

 

ஜாதியும் சமூகமும் என்ற அத்தியாயம்.

குழந்தைகளாகிய உமக்கு ஜாதிகள் இல்லை. நீங்கள் அனைவருமே மேலோர்.

ஒரு மரம் எவ்வளவு காலம் வாழ்கிறதோ அதைப் பொறுத்துத் தான் வைரத்தன்மை பெறுகிறது. வைரம் பாய்ந்த மரத்தை எரிப்பது கூடச் சிரமம். அவை பூமியில் புதைந்து பல காலம் பூமியினுள் வாழ்ந்ததால் கரியாக மாறி அவற்றுள் வைரம் கனன்று விடுகிறது. அது போலவே நமது இந்திய வாழ்க்கைமுறை உலகின் மிகப் பழைய விருட்சமாகும். போர்களாலும் அந்நியக் கொடுங்கோலர்களாலும் மனிதச் சிறுமைகளினாலும் நமது நாகரிக விருட்சம் பல சமயங்களில் புதையுண்டு போயிருப்பதாகத் தோன்றலாம்; ஆனால் அது உண்மை அன்று. நாமே அதனுள் கனியும் வைரங்கள்.

 

என்று பிறந்தது என்று எவரும் அறியாத நம் வேதம் இன்றும் வாழ்கிறது என்று இசை பாடலாம்.

 

ஆணும் பெண்ணும் என்ற அத்தியாயம்

மனித உயிர்களுக்குப் பொதுவாகிய ஞானம் பெண் மக்களுக்குச் சிறப்பாக அமைந்துள்ளது என்பது பாரதி வாக்கு.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்புவி

   பேணி வளர்த்திடும் ஈசன்

மண்ணுக்குள்ளே சில மூடர்நல்ல

    மாதர் அறிவைக் கெடுத்தார்

என்று நமது குரு கடந்த காலத்தில் வாழ்ந்த கருத்துக் குருடர்களின் காது செவிடுபட முரசுப் பாட்டில் முழங்குகிறார்.

 

நமது சமயம் என்ற அத்தியாயம்

பாரதத்தில் பிறந்த எவருமே வேறு மதத்தைத் தழுவாதிருக்கும் பட்சத்தில் ஹிந்துக்களே ஆவர். வடிவங்களையும் வணங்கலாம்; வடிவம் இல்லாமலும் ஆராதிக்கலாம்; இயற்கைக் காட்சியையும் வணங்கலாம். ஏன், ஓர் எறும்பையும் வணங்கலாம் என்பது ஹிந்து தர்மம். இதில் சிறப்பாக அந்தணர் தீயை வணங்குவர். ஞாயிறு வணக்கம் முதில் ஒரு மிருகத்தைத் தொழுவது வரை ஹிந்து மதம் அனுமதிக்கிறது.

 

சமதர்மம் என்ற அத்தியாயம்

நம் குரு பாரதி வாழ்ந்த காலத்தில் உலக அரங்கில் சமத்துவம், சகோதரத்துவம், சமாதானம் என்ற சொற்றொடர்களைப் பல அறிஞர்கள் பிரகடனம் செய்து கொண்டிருந்தனர். இந்த மேலோரின் குரல்களை பாரதி தமது மொழியில் மேலும் சிறப்பாக எதிரொலி செய்து ஏற்றமும் தந்தார்.

 

கல்வி என்ற அத்தியாயம்

நமது எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்ற தேசியக் கல்விக்கு அவர் வித்திட்டிருக்கிறார். தேசியக் கல்வி குறித்து பாரதி கூறுவனவற்றைக் கேட்போம்.

தேச பாஷையே பிரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்து விடக் கூடாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திடுகபாரத தேசம் முழுவதிலும் சம்ஸ்கிருதம் வாழ்கநம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூரணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் சம்ஸ்கிருதப் பயிற்சி மென்மேலும் ஓங்குக! தமிழ் நாட்டில் தமிழ் மொழி தலைமையேற்றுத் தழைத்திடுக!

இரண்டாவதாக ஆரம்ப பூகோளம்

மூன்றாவதாக சமயக் கல்வி

நான்காவதாக ராஜ்ய சாஸ்திரம்

ஐந்தாவது பொருள் நூல்

ஆறாவதாக ஸயன்ஸ்

ஏழாவதாகக் கைத்தொழில்

எட்டாவதாக சரீரப் பயிற்சி

ஒன்பது யாத்திரைகளின் மூலம் கல்வி

 

ஒன்பது பகுதிகள் கொண்ட பாரதியின் கல்வித் திட்டத்தை ஜெயகாந்தன் பாரதியின் சொற்களில் முழுமையாகத் தருகிறார்.

 

நூலின் இறுதிப் பாரா இது:-

பாரதி கல்வி தழைப்பதாக! பாரதம் பாரதரால்  சிறந்து நிலைப்பதாக!

குரு வாழ்க! குருவே துணை!!

  நூலின் இந்த இறுதி வார்த்தைகளை நாமும் சேர்ந்து எதிரொலிக்க ஆசைப்படுகிறோம்.

குழந்தைகளுக்காக பாரதியை அறிமுகப்படுத்த ஜெயகாந்தன் எடுத்த வானொலி உரை என்னும் நல்ல முயற்சி இந்த நூலாக மலர்ந்துள்ளது.

பாரதி அன்பர்கள் படித்து பாரதி இயலில் சேர்க்க வேண்டிய நூல் இது!

***