
WRITTEN BY S NAGARAJAN
Date: 10 November 2018
Time uploaded in London – 8-52 AM (GMT)
Post No. 5646
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பெங் சுயி– லோ ஷு சதுரம்
ச.நாகராஜன்
கிறிஸ்து பிறப்பதற்கு முன் 2200 ஆண்டுகளுக்கு முன் சீனாவை ஆண்ட மன்னன் யூ, ஒரு நாள் மஞ்சள் நதிக்கரை ஓரம் உலாவப் போனான். அப்போது அங்கு ஒரு ஆமையைப் பார்த்தான். அதன் ஓட்டில் ஒரு சில புள்ளிகள் காணப்பட்டதையும் அவை சதுர வடிவத்தில் உள்ள கட்டங்களில் இருப்பது போலவும் அமைந்திருப்பதையும் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
அந்தப் புள்ளிகளின் கூட்டுத்தொகை ஒரே மாதிரியாக வரவே அவன் ஆச்சரியப்பட்டு தன் அரண்மனைக்கு அதைக் கொண்டு வந்தான். அந்த ஆமைக்கு அன்றிலிருந்து ராஜ உபசாரம் தான்!
ஆமை ஓட்டின் முதுகில் இருந்த மாயச் சதுரம் போலவே தானும் அமைக்க ஆரம்பித்தான். அன்றிலிருந்து மாயச் சதுரத்தின் மகிமை உலகில் பரவ ஆரம்பித்தது.
அந்த மாயச் சதுரத்தின் ரகசியத்தை உணர்ந்தவர்கள் பெங் சுயி என்ற சீன வாஸ்து சாஸ்திரத்தைக் கண்டனர்.
ஆமையின் முதுகில் இருந்த மாயச் சதுரம் இது தான்:

தெற்கு
4 9 2
3 5 7
8 1 6
வடக்கு
இது வியக்க வைக்கும் பல விந்தைகளைக் கொண்டது.
இது லோ ஷு சதுரம் (LO SHU SQUARE) என்று அழைக்கப்படுகிறது.
இதை வைத்தே பெங் சுயி சூத்திரமான The Eight Mansions Formula அமைக்கப்பட்டுள்ளது.
குவா நம்பர் என்ற ஒரு எண் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க குவா சூத்திரம் உள்ளது. இதை ஒவ்வொருவரும் கண்டு பிடித்துக் கொண்டு அதற்குத் தக தன் உத்தியோகத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
பெங் சுயியின் வெற்றிக்கு நிதர்சனமாக நாம் காணும் ஒரு நகரம் ஹாங் காங். மேலை நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் மல்டி நேஷனல் நிறுவனங்கள் இப்போது பெங் சுயி படி தங்கள் வணிகத்தை மேம்படுத்தி வருகின்றன.
வீடு கட்டுவதற்கு விரும்பும் ஒருவர் இந்த பெங் சுயி உத்திகளின் படி வீட்டை அமைத்துக் கொள்ளலாம்; ஏற்கனவே வீட்டைக் கட்டியுள்ளவரும் தங்கள் வீட்டின் பகுதிகளை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.
பெங் சுயி சாஸ்திரத்தில் பிரபலமான லில்லியன் டூ இது பற்றித் தனது புத்தகமான ‘Feng Shui – The complete Guide to the art and practice of Feng Shui’-இல் விளக்கியுள்ளார்.

பெங் சுயி என்றால் காற்றும் நீரும் என்று பொருள். இதை நமது வாழ்க்கையின் வளத்திற்காகப் பயன்படுத்துவதற்கு இதன் அடிப்படை விதிகளை அறிந்து கொள்ள வேண்டும்.
அனைத்தையும் செய்வது ‘ச்சீ’ (Chi) எனப்படும் ஆற்றல் தான்! இந்த ஆற்றலை நமக்கேற்றவாறு முறைப்படுத்துவதற்கு பெங் சுயி உத்திகள் தேவை.
செல்வ வளம், உடல் நலம், மன நிம்மதி என அனைத்தையும் பெங் சுயி மூலம் அடைய முடியும்.
போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்ற லில்லியன் டூ பல வருட காலம் பெங் சுயி பற்றி ஆராய்ந்தார். தான் கற்றவற்றைப் பிறருக்குச் சொல்லித் தர விளைவுகள் அபாரமாக நல்ல விதத்தில் இருந்தன.
அந்த அனைத்து உத்திகளையும் படங்களுடன் விளக்கி 360 பக்கங்கள் கொண்ட இந்த நூலை உருவாக்கி இருக்கிறார்.
ஏழு பகுதிகள் கொண்ட இந்த நூலில் முதல் பாகம் பெங் சுயி உருவான வரலாறை விளக்குகிறது. இரண்டாம் பகுதி பெங் சுயி அடிப்படைகளை விளக்குகிறது.மூன்றாம் பகுதி நமது வீட்டில் இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்குகிறது. நான்காம் பகுதி தனி நபர் மேம்பாட்டுக்கானது. ஐந்தாம் பகுதி நமது தோட்டத்தில் பெங் சுயியைமுதல் எப்படிப் பயன்படுத்தலாம் என்பது பற்றி விளக்குகிறது. வணிக வெற்றிக்கு பெங் சுயி எப்படி உதவும் என்பதை ஆறாம் பகுதியும் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் பெங் சுயியின் உதவியை எப்படி மேற்கொள்ளலாம் என்பதை ஏழாம் பகுதியும் விளக்குகிறது.
யின் மற்றும் யாங் (Yin and Yang) ஆற்றலை எட்டு திசைகளிலும் சமச்சீராக்கி நமது குடும்பத்தையும், நம்மையும் மேம்படுத்தும் இந்த பெங் சுயி ஒரு அற்புதக் கலை.
இதை முறையாக விளக்கும் லில்லியன் டூ புத்தகம் பெங் சுயி ஆர்வலர்களுக்கு ஒரு வரபிரசாதம்.
****
குறிப்பு : இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய மாயச் சதுரமும் கணிதப் புதிர்களும் என்ற நூலில் முதல் அத்தியாயத்தில் உள்ள முதல் மூன்று பாராக்கள் இந்தக் கட்டுரையின் முற்பகுதியாக அமைகிறது.
Tags- யின், யாங், மாயச் சதுரம், லோ ஷு சதுரம்
R.Nanjappa (@Nanjundasarma)
/ November 12, 2018ஃபெங்க் சுயி ஒர் அற்புத ஆற்றல்கொண்ட அணுகுமுறை. இது விஞ்ஞானம், கலை என்ற எந்தக் கட்டுக்குள்ளும் வராது.
இந்தியாவுக்கு உரியது வாஸ்து சாஸ்திரம். ஆனால் வேறு பல சாஸ்திரங்களைப் போல இதன் நுணுக்கங்களும் இன்று நம்மவருக்குத் தெரிவதில்லை. ஏதோ குருட்டாம் போக்கில் சொல்லிவருகின்றனர். நம் பழைய கிராமங்களும். சிறிய ஊர்களும் வாஸ்துப்படி அமைந்திருந்தன அதனால் செழுமையுடனும் அமைதியுடனும் திகழ்ந்தன. இன்று இவை எல்லைமீறிப் பரந்து விரிந்துகொண்டே போகின்றன. அதனால் வாஸ்து விதிகள் மீறப்படுகின்றன. ஒரு ஊரின் வாஸ்து சரியில்லையெனில், அதிலுள்ள எந்த வீடோ, நிறுவனமோ சரியான வாஸ்து கொண்டதாக அமைய முடியாது. மேற்கு நோக்கிப் போகும் கப்பலில் பிரயாணிக்கும் ஒருவன் எப்படி கிழக்கு நோக்கிப் போக இயலும்.
நமது புராதனக் கோயில்கள் வாஸ்துப்படி அமைந்தவை. ஆனால் அதைச் சுற்றியுள்ள ஊரின் வாஸ்து கெட்டுவிட்டதால் கோவில்களும் மகிமை குன்றி வருகின்றன. [ முன்பு வாஸ்து ஊர், கோயில் முதலிய பொது இடங்கள் ஆகியவற்றிற்கே அதிகம் பின்பற்றப்பட்டதெனத் தோன்றுகிறது.]
வீட்டு விஷயத்தில் வாஸ்து பலிப்பதற்கு 5 முக்கிய நிபந்தனைகள் இருக்கின்றன:
1.அந்த ஊரின் அமைப்பு வாஸ்துபடி இருக்கவேண்டும்.
2. ஒரு வீட்டின் அல்லது இடத்தின் வாஸ்து பிற வீட்டின்/இடத்தின் அமைப்பால் மாறலாம்.( ஒரு இடத்தில் புதிய பாலம் அல்லது பள்ளம் வந்தால் அது சுற்றியுள்ள பல வீடுகளைப் பல விதத்தில் பாதிக்கும். அடுத்த வீட்டில் உள்ள மரம், அந்த வீட்டின் திசை, அதன் அளவு ஆகியவை நம் வீட்டைப் பாதிக்கலாம்)
3. வீடு கட்டப் யன்படுத்தும் பொருட்கள் வாஸ்துக்கு விரோதமில்லாமல் இருக்கவேண்டும். ( காங்க்ரீட். இரும்பு, அலுமினியம் போன்றவை வாஸ்துவுக்கு எதிரானவை. பழைய கோவில்களில் இவை இல்லை!)
4. வாஸ்துபலன் ஜாதத்தின் பலனுக்கு உட்பட்டதுதான்.
5. இடம் தோஷமில்லாததாக இருக்கவேண்டும். (பூசுத்தி )
இவற்றை வைத்துப் பார்த்தால் தற்காலச் சூழ்நிலையில் இந்தியாவிற்கு வாஸ்து ஒத்துவராது. கான்க்ரீட், இரும்பு கொண்டு கட்டப்படும்,,இடையில் பல பொதுச் சுவர்களைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஃப்லாட்டுகளுக்கு வாஸ்து பொருந்தாது. பல வாஸ்து கோளாறுகளுக்குப் பரிகாரம் இல்லை- வீட்டை இடித்து அல்லது மாற்றித்தான் கட்டவேண்டும்.
[முறைப்படி வீட்டில் பூஜை, புனஸ்காரங்கள் நிறைந்திருந்தால் வாஸ்து கோளாறுகள் ஓரளவு கட்டுப் படலாம்.அல்லது ஒரு உண்மையான மஹானின் ஆசி இருக்கவேண்டும்.]
இந்தத் தொல்லைகள் எதுவும் ஃபெங்க்சுயியில் இல்லை! நான் ஹாங்காங்க், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் நேரில் பார்த்திருக்கிறேன். அங்கு சீனாவின் கிராமப்பகுதிகளிலிருந்து வரும் ஃபெங்க்சுயி பண்டிதர்கள் ( காலில் செருப்பு அணியாமல் தான் வருவர்) கட்டிடத்திற்கு உரிய அமைப்பைச் சொல்வார்கள். அதன்படி எழும் கட்டிடம் செழித்து விளங்கும். உண்மையான ஃபெங்க் சுயி சரியான முறையில் பின்பற்றப்பட்டால் நிச்சயமாக நல்ல விளைவுகள் வரும்.
இங்கு இவ்வளவு எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது. இந்தியாவின் வாஸ்து சரியாக இல்லை. வடக்கில் நீர், பள்ளம் இருக்கவேண்டிய இடத்தில் பெரிய மலை! தெற்கில் உயர்ந்து மலை இருக்கவேண்டிய இடத்தில் மஹா சமுத்திரம்! இது நமது பொருளாதார வளத்தைப் பாதிக்கிறது. நமது தலை நகரும் டில்லி- அங்கு சென்ற இடமெல்லாம் சமாதிகள் !
[ மும்பை மட்டும் இதற்கு விலக்கு, அது 7 அம்பாள் கோயில்களைக்கொண்ட தீவுகளாக இருந்தது. (மும்பாதேவி, கல்பாதேவி, பிரபாதேவி,என) மஹாலழ்மியின் பூரண கடாக்ஷம் பெற்றது. மும்பையை அடைந்தவர்களுக்கு அம்பாள் சோறு பொடுவாள். அங்கு எல்லோரும் எப்படியோ பிழைத்துக் கொள்வார்கள்.]
நமது முன்னோர்கள் இமயத்தை இறைவனுக்குரியதாக்கினார்கள்! நாடு முழுதும் கோவில் குளங்களை நிறுவினார்கள்- வாஸ்துவின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்தினார்கள். அதனால் இந்தியா செல்வச்செழிப்பில் மிதந்தது. துலுக்கர்கள் வந்ததும் இது படிப்படியாகக் குறைந்தது. ஆனாலும் 18ம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை இந்தியா பொருளாதாரத்தில் சிறந்தே இருந்தது! ஆங்கிலேயர் வந்தபிறகு நமது செல்வம் அழிந்தது-ஏனெனில் அவர்கள் நமது புராதன வழிகளை மதிக்காததுடன் முழுதும் மாற்றினார்கள்! [இது அவர்களையும் பாதித்தது! கல்கத்தாவை விட்டு டில்லியைத் தலை நகராக்கிய பிறகு நாட்டை விட்டே ஓடினார்கள், நமக்குக் கடன் பட்டு ஓடினார்கள்!].
இன்று இந்தியா உள்ள நிலையில் பழைய தெய்வ நம்பிக்கையும் அதைச் சார்ந்த முறைகளும் பின்பற்றப் பட வாய்ப்பில்லை. ஃபெங்க் சுயியைப் பின்பற்றிப் பார்க்கலாமே! ஆனால் இது மேம்போக்காக இல்லாமல் ஆழ்ந்த விஷய அறிவு/அநுபவத்துடன் அமையவேண்டும்!
Santhanam Nagarajan
/ November 13, 2018yes, true! why should not we try this sastra? also we can take the best of maya sastra that is our vastu sastra. There are many experts available even now.