
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 6 March 2019
GMT Time uploaded in London – 11-43 am
Post No. 6159
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
இது 26 வயதில் இறந்த மஹா மேதை ராஜம் ஐயர்-பகுதி 3
முதலில் IN BULLET POINTS புல்லட் பயிண்ட்ஸ்
சாந்தாநந்த சுவாமிகளை தரிசித்தது முதல் ராஜம் ஐயர்க்கு உலக வேலைகளில் ஆர்வம் குறைந்து நிஷ்டையும் தியானமும் அதிகரித்தது.சென்னை செல்வந்தர்கள் ஒரு பத்திரிக்கை நடத்தி அதில் சாந்தானந்த சுவாமிகளின் உபந்யாசங்களையும் வேதாந்த விஷயத்தையும் வெளியிட விரும்பினர்.
அந்த நேரத்தில் சுவாமி விவேகாநந்தர் சென்னை விஜயம் செய்ததால், அவரும் ராஜம் ஐயரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரும் கொஞ்ச நேரம் பேசினர். சுவாமிகளும் ‘’பிரபுத்த பாரதம் என்ற பெயரில் (விழிப்படைந்த பாரதம்) பத்திரிக்கையை நடத்துங்கள் என்று கூறி, அது எப்படி இருக்க வேண்டும் என்று நீண்ட அறிவுரை வழங்கினார்.
முதல் ஆண்டுக்குள்ளேயே 1500 சந்தாதாரர் 4500 சந்தாதரர்களாக உயர்ந்தது . இது ராஜம் ஐயரின் பெருமையைக் காட்டுவதாக இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு பத்திரிக்கை மிகவும் பிரமாதமாக ராஜம் ஐயரின் கட்டுரைகளுடன் வெளி வந்தது. அவர் அகால மரணம் அடைந்தவுடன் ‘ராஜம் ஐயர் இறந்து விட்டதால் பத்திரிகையை நிறுத்துகிறோம்‘ என்று அறிவிப்பு வெளியிட்டு நிறுத்திவிட்டனர். பின்னர் இப்பத்திரிக்கை வடக்கிலிருந்து வெளியானது.
சுவாமி விவேகாநந்தரின் நீண்ட அறிவுரை, ராஜம் ஐயரின் படைப்புகள் , பத்திரிக்கையின் நோக்கம் ஆகியவற்றை இணைப்பில் காண்க.
—தொடரும்














–subham–