
Written by London Swaminathan
Post No.7542
Date uploaded in London – – 6 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

அறப்பளிச்சுர சதகத்தில் 100 அருமையான பாடல்கள் உள . அதில் ஒரு பாடல், எதை அல்லது யாரை எப்படி அடக்கலாம் என்று உரைக்கிறது.

கொடிய , வலிய எருதாக இருந்தால் மூக்கில் கயிறு கட்டி அடக்கிவிடலாம். மதம் பிடித்த பெரிய யானையை அங்குசம் என்னும் ஆயுதத்தால் குத்தி வசப்படுத்தலாம்.
விஷப் பாம்பாக இருந்தால் மந்திரத்தால் அதை அடக்கிவிடலாம் . பாய்ந்து செல்லும் குதிரையாக இருந்தால் கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்தலாம்.
விஷம் போன்ற மனத்தைக்கொண்ட கெட்டவர்களைச் சவுக்கால் அடித்து வசப்படுத்தலாம். அறிஞர்களாக இருந்தால் கோபத்தை நல்ல சிந்தனையால், அறிவால் கட்டுப்படுத்தலாம்.
அடியார்கள் துதித்த மாத்திரத்தில் அருள்புரிய ஓடிவரும் அறப்பளீச்சுரனே, தாமரைப் பாதங்கள் உடையவனே ,சதுரகிரி மலையில் உறைவோனே !
சொற்களின் பொருள் — களிறு – யானை , அரவு- பாம்பு, பரி – குதிரை, வசவிர்த்தி- வசப்படுத்தல், சோர்பந்து – கொறடா , சவுக்கு.
துட்டன்-துஷ்டன்- கெட்டவன் , குவலயம் – உலகம், மதவேள் – மன்மதன் போல அழகுடைய.

அறப்பளீச்சுர சதகம்
அம்பலவாணக் கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு
tags – அடங்காதவர், அடக்குவது , எருது, யானை, அரவு

–subham-