Swiss Fish and Nazi Fish (Post No.7697)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No.7697

Date uploaded in London – 15 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

At a little stream on the Swiss frontier, a Swiss and a Nazi were fishing from the opposite sides of the water. Great success had attended the Swiss, and he had a handsome string to show for his efforts; whereas the Nazi had not had so much as a nibble.

“Why is it, called the German across the water, that you have so much better luck? Are we not using the same bait?”

“Well, said the Swiss, on this side the fish are not afraid to open their mouths.”

Xxx

We are Free! We are Free!!

On August 1, 1836, the British Parliament abolished slavery in the West Indies, but the decree was not to go into effect for a year. On July 31, 1837, a year after, twenty thousand slaves came together in Jamaica. They put on white robes, and at eleven o clock at night they all knelt, and with faces turned upward they waited for an hour. As the clock struck twelve the twenty thousand former slaves rose up and shouted joyously.

“We are free! We are free!”

Aborigines of Australia

Xxx

(Following is from my 2016  post)

FREEDOM OF INDIA

Harold Laski (British political theorist and economist) has this story to tell:-

I discussed recently with a Hindu I knew – a man of great culture- the question of Indian Independence.

“If England were to withdraw from India,” I said, “wouldn’t the country relapse into a state of anarchy – much like what it was in the 18th century when Clive and Hastings laid the foundation of the British Raj?

My friend assented sadly, “Yes, I suppose you are right.”

 “And that would be followed by a tyranny, or several tyrannies, would it not?”

“Yes, probably”.

And the pendulum would swing back to the anarchy again?”

“Yes”, he said, “yes, I am afraid it would!”, “but it will be our tyranny and our anarchy!’

Harold Laski

Tags – Swiss, Nazi, Fishing, Harold Laski, We are free

–subham–

ஆப்ரஹாம்லிங்கன் கைகள் நடுங்கியது ஏன்? சுவிஸ் மீனும் ஹிட்லர் மீனும் ! (Post.7696)

WRITTEN BY LONDON SWAMINATHAN                   

Post No.7696

Date uploaded in London – – 15 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

அமெரிக்காவில் மஹாத்மா காந்திக்கு இணையாகக் கருதப்படுபவரும், வெள் ளையரின், கறுப்பரின் சம உரிமைக்குப் போராடியவரும், அமெரிக்க சுதந்திர போர் வீரரும், அமெரிக்க ஜனாதிபதியுமான ஆப்ரஹாம் லிங்கன் (Abraham Lincoln) வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனத்தில் கை எழுத்து இடுவதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி இது:-

1863 ஜனவரி 1-ம் தேதியன்று அமெரிக்காவின் அடிமை ஒழிப்பு (Emancipation Proclamation) கறுப்பர் விமோசனம்) பிரகடனம் ஒழிப்பு வெளியானது. இந்தப் பிரகடனத்தில் கையெழுத்து வாங்குவதற்காக அதன் பிரதியை லிங்கனின் காரியரிசி (Secretary Seward) ஸீவார்ட் எடுத்து வந்தார். லிங்கனின் மேஜை மீது பிரகடனத்தை வைத்தார். லிங்கன் அதை ஒரு பார்வை பார்த்தார். மெதுவாக பேனாவை எடுத்தார். அதை மைக் கூட்டில் (Ink pot) தோய்த்தார் .கையெழுத்து இடவேண்டிய இடத்துக்கு பேனா சென்றது. திடீரென்று கையைப் பின்னுக்கு கொண்டு சென்று ஒரு உதறு உதறிவிட்டு பேனாவைக் கீழே போட்டார். பின்னர் மீண்டும் பேனாவை எடுத்தார். முன்னர் செய்த எல்லாவற்றையும் செய்து பேனாவை உதறிவிட்டார்.

இதையெல்லாம் காரியதரிசி வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது செயலாளரின் முகத்தைப் பார்த்து லிங்கன் செப்பியது இதுதான்:-

“இன்று காலை ஒன்பது மணி முதல் என் கைகள் நடுங்கிக் கொண்டே இருக்கின்றன. வலது கை மரமரத்துப் (paralyzed)  போய்விட்டது. என்னுடைய பெயர் ஒரு காலத்தில் வரலாற்றில் இடம்பெறப் போவதாக வைத்துக் கொள்வோம். அது இந்த பிரகடனம் மூலம்தான் இருக்கும். ஏனெனில் என் ஆத்மா (வாழ் நாளின் லட்சியம்)  முழுதும் இதில்தான் இருக்கிறது .இந்த மாபெரும் அறிவிப்பில் நான் கையெழுத்து இடுகையில் என் கைகள் நடுங்கினால் , வருங்காலத்தில் இதை பார்ப்போர் நடுக்கமான தருணத்தில் இட்ட கையெழுத்தைப் பார்த்து, அட ஆப்ரஹாம் லிங்கன் மிக்க தயக்கத்தோடுதான் கையெழுத்துப் போட்டார் என்று சொல்லிவிடுவார்கள்”.

இதற்குப் பின்னர் அவர் உறுதியாகக் கை எழுத்திட்டது எல்லாம் வரலாறு ஆகிவிட்டது. கறுப்பர்களை அமெரிக்க வெள்ளையர்கள், மிருகங்களை வேட்டை ஆடுவது போல ஆப்பிரிக்காவில் இருந்தும் மேற்கிந்தியத் தீவுகளிலும் பிடித்து வந்து, தெரு நாய்களை விட கேவலமாக நடத்தினர். இந்தக் கால கட்டத்தில் அமெரிக்க சுதந்திரப்  போர் வெடித்தது. அமெரிக்காவே இரண்டு கடசியாகப் பிரிந்து உள்நாட்டு யுத்தம் (Civil War) நடந்தது. அப்போது ஆப்ரஹாம் லிங்கன் ஜனாதிபதியாக இருந்தார். மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டு யுத்தம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்டது. இந்தப் பிரகடனமானது அமெரிக்க ஐக்கிய நாட்டில் சேராத கலகம் செய்யும் மாநிலங்களில் (Rebellious States)  உள்ள எல்லாக் கறுப்பின மக்களுக்கும் விடுதலை கிடைக்கும் என்று அறிவித்தது. இது அமெரிக்கா முழுதும் வாழ்ந்த கறுப்பின அடிமைகளுக்கு விடுதலை தராவிடினும் ஒரு பெரிய புதிய சிந்தனையைத் தூண்டிவிட்டது. பல லட்சக் கணக்கான கறுப்பின மக்கள் ராணுவத்தில் சேர்ந்து முழு அமெரிக்காவை உருவாக்கினர்.

ஓர் தலைவன் என்பவன் எதை எதையெல்லாம் பற்றிக் கவலைப்பட வேண்டியிருக்கிறது , சிந்திக்க வேண்டி இருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு.

Xxxxxx

சுவிஸ் மீனும் ஹிட்லர் மீனும் !

சுவிட்ஸர்லாந்து நாட்டுக்கும் ஹிட்லர் (Hitler) ஆண்ட ஜெர்மனிக்கும் இடையே ஓடிய ஆற்றில் இருவர் மீன் பிடித்தனர். சுவிஸ் (Swiss) நாட்டவர் தனது நாட்டுக் கரையில் மீன்பிடித்தார் . எதிர்க்கரையில் ஜெர்மன் நாட்டு எல்லைக்குள் ஹிட்லரின் நாஜிக் (Nazi) கட்ஸிக்காரர் மீன்பிடித்தார் .

சுவிஸ்காரன் தூண்டிலில் மிகப்பெரியாய் மீன்கள் சிக்கின . எடுத்து, எடுத்து கூடைக்குள் போட்டுக்கொண்டே எதிர்க்கரை நாஜியை ஏளனப் பார்வை பார்த்தார் . அந்த நாஜிக்கு மிக அபூர்வமாகவே சிக்கின. அதுவும் கூட சின்ன மீன்கள்தான்.

அந்த நாஜி வியப்புடன் கேட்டார் ,

“ஏய் தூண்டிலில் , நீ என்னடா வைத்திருக்கிறாய்? உனக்கு மட்டும் இவ்வளவு மீன்கள் சிக்குது? உனக்கு இன்னிக்கு அதிருஷ்ட நாளோ?”

அதற்கு சுவிஸ்காரன் பதில் சொன்னான்,

“ஓ அதுவா? என் பக்கமுள்ள மீன்கள் வாயைத் திறக்க பயப்படுவதில்லை!”

(ஹிட்லர் ஆட்சியில் எவரும் வாயைத்  திறந்து எதிர்ப் பேச்சு பேச முடியாது! )

Xxx

வெள்ளைக்காரன் கொடுத்த விடுதலை

வெள்ளைக்காரன் குடியேறிய இடங்களில் எல்லாம் அந்த நாடுகளின் பூர்விகக்குடிகள் மீது செய்த அட்டூழியங்களுக்கு அளவேயில்லை அவர்களை மிருகங்கள் போல பிடித்து வந்து , விலங்கிட்டு வேலை வாங்கினர். பிரிட்டிஷ்காரர்கள் மேற்கிந்தியத் தீவுகளில் இப்படி அட்டூழியம் செய்தனர். மக்கள் சக்தி ஒன்று கூடவே , பெரும்பாலுமுள்ள பூர்வ குடிகளை அடக்கி ஆள முடியாது என்று தெரிந்தது . ரத்தக் களரியைத் தடுப்பதற்காக தாங்களே விடுதலை அறிவித்தனர். அதுவும் கொஞ்சம் கொஞ்ச்ம் ஆக .

தென் ஆப்பிரிக்காவில் இருந்த அடிமைத்தனம் நம் கண்கள் முன்னே நெல்சன் மண்டேலா மூலம் விடுதலை ஆனதைக் கண்டோம் . அது நடக்கும் நாள் வரை பிரிட்டிஷாரும் அதற்கு ‘ஜே’ போட்டு வந்ததை நாம் பத்திரிகைகளில் படித்தோம் .

இதோ மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த ஒரு அரிய காட்சி !

பிரிட்டிஷ் பார்லிமெண்ட் 1836 கஸ்ட் 1-ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளில் (West Indies) அடிமைத் தனம் (abolition of slavery)  கைவிடப்படும் என்று சட்டம் போட்டது. ஆயினும் கறுப்பர்கள் இன்னும் ஓராண்டுக்கு அடிமை விலங்காக இருக்க வேண்டும் .1837-ல்தான் அவர்கள் சுதந்திரப் பறவைகள் என்றும் அறிவித்தனர். ஆண்டாண்டுக் காலமாக அடிமைத் தனத்தில் உழன்ற கறுப்பின மக்கள் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமை காத்தனர். 1837 ஜூலை 31-ம் தேதி வந்தது ; நாளை காலை முதல் நாம் விடுதலைப் பறவைகள் என்ற உணர்வு கொப்பளித்தது. ஆக அதைக் கொண்டாடுவதற்காக ஜமைக்காவில் (Jamaica) பல்லாயிரக்கணக்கான கறுப்பர்கள் ஒன்று கூடினர் . எல்லோரும் வெள்ளை உடை தரித்தனர் . இரவு 11 மணிக்கு எல்லோரும் மண்டியிட்டு வானத்தை நோக்கிப் பிரார்த்தனை செய்தனர் ; இரவு 12 மணிக்கு ஆலய மணிகள் ஒலிக்க துவங்கின.

எல்லோரும் ஒரே குரலில் நாம் விடுதலை ஆகிவிட்டோம் ; நாம் சுதந்திர பறவைகள் என்று ஆனந்தக் கூத்தாடினர் . பாரதியார் பாடிய “ஆடுவோமே ; நாம் பள்ளுப் பாடுவோமே ; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே ; நாம் பள்ளுப் பாடுவோமே”– என்ற பாடலை உண்மையாக்கிய காட்சி இது.

Aborigines of Australia

TAGS —  ஆப்ரகாம் , லிங்கன், ஆப்ரஹாம் ,சுவிஸ் , நாஜி , கறுப்பர், அடிமை, விடுதலை

–Subham–

சந்தோஷத்தை தரும் எட்டு விஷயங்கள் (Post No.7695)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7695

Date uploaded in London – – 15 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

புண்ணியம், விஷயங்கள், சந்தோஷம்

சுபாஷித செல்வம்

புண்ணியம் செய்தோருக்குக் கிடைக்கும் 13 நல்ல விஷயங்களும் சந்தோஷத்தை தரும் எட்டு விஷயங்களும்!

ச.நாகராஜன்

சந்தோஷத்தை தரும் எட்டு விஷயங்கள்!

தானம் க்ஷமா த்ருதி: ப்ரக்ஞா சந்தோஷோ  வாக்நிஷ்டூரா |

ஹ்ரீரஹிம்ஸாவ்யஸநிதா ஸ்நானம் சேதி சுகாவஹா: ||

தானம், பொறுமை, உறுதி, நுண்ணறிவு, சந்தோஷம், இனிய வார்த்தை, குழப்பமின்மை, காயமின்மை, ஸ்நானம் ஆகிய இந்த எட்டும் சந்தோஷத்தைத் தருபவை.

Gift, patience, fortitude, intelligence, happiness, soft words, no embarrassment, abstinence from injury and bath produce pleasure. (Translation by Dr N.P.Unni)

*

புண்ணியம் செய்தோருக்குக் கிடைக்கும் 13 நல்ல விஷயங்கள்!

மானுஷ்யம் வரவம்சஜன்ம விபவோ தீர்காயுராரோக்யதா

சன்மித்ரம் சசுதா சதி ப்ரியதமா பக்திஸ்ச நாராயணே |

வித்வத்வம் சஜனத்வமிந்த்ரியஜய: சத்பாத்ரதானே ரதி:

தே புண்யேன பினா த்ரயோதஷ குணா: சம்சாரீணாம் துர்லபா: ||

மனிதப் பிறவி, நல்ல குடும்பத்தில் பிறப்பு, திறமை, தீர்க்காயுள், ஆரோக்யம், நல்ல நண்பன், பிரியமான மனைவி, நல்ல குழந்தைகள், நாராயணன் மீது பக்தி, வித்வத்வம் (பண்டித அறிவு), பிரபுத்வம், இந்திரிய ஜயம், தேவையுள்ள, நல்லோருக்கு தானம் அளித்தல் இந்த பதிமூன்று அரிதான நல்லவையும்  சம்சாரிகளில் புண்யம் செய்தோருக்கும் மட்டுமே கிடைக்கும்.

Those thirteen merits are rare among the people in their worldly life unless they posses exceptional luck; and these are (enumerated as)

Humanity, noble birth, ability, longevity, health, good friend, wife of nobility, worthy children, devotion to God Narayana, learning, nobility, control of sense organs and tendency of giving donation to worthy people. (Translation by Dr N.P.Unni)

*

நிபுணராக ஐந்து தேவைகள்!

தேஷாடனம் பண்டிதமித்ரதா ச வாராங்கனாராஜசபாப்ரவேஷ: |

சாஸ்த்ராணி சைவாத்ர விலோகிதானி சாதுர்யமூலானி பவந்தி பஞ்ச ||

நிபுணராகத் திகழ இந்த ஐந்தும் தேவை:  பல இடங்களுக்கும் செல்லல், பண்டிதரின் நட்பு, அரசவையில் உள்ளோரிடம் தொடர்பு, அரசர்கள் உள்ள சபையில் பிரவேசம்,  சாஸ்திரங்களில் தேர்ச்சி

Five things requires one’s expertise viz., visiting of places, keeping friendship with the learned, the engagement with the courtesan, the entrance to the assembly of kings and deliberations in scientific matters. (Translation by Dr N.P.Unni)

*

சித்திகள் உருவாகும் விதங்கள்!

ஜன்மோஷதி மந்த்ர தப: சமாதிஜா: சித்தய: |

பிறப்பு, மூலிகைகள், மந்த்ரம், தவம், சமாதி ஆகிய இந்த ஐந்தின் மூலமாக சித்திகள் சித்திக்கும்.

Siddhi – Supernatural power arises out of

Janma – Birth, Aushadhi – Herbs, Mantra – Mantra, Tapah – Penance, Samadhi – Absorption.

*

அரசனின் அரண்மனையில் இடைவிடாது ஒலிக்கும் ஐந்து ஒலிகள்!

பஞ்ச சப்தா ந ஜீர்யந்தே கட்வாங்கஸ்ய நிவேஷனே |

ஸ்வாத்யாயகோஷோ ஜ்யாகோஷோ பிபதாஸ்நீத காதத ||

ஒரு அரசனின் அரண்மனையில் இடைவிடாது ஒலிக்கும் ஐந்து ஒலிகளாவன :  வேத கோஷம், வில் நாணிலிருந்து எழும் சப்தம், குடி, துய்த்து அனுபவி, சாப்பிடு ஆகிய வார்த்தைகள்!

tags– புண்ணியம், விஷயங்கள், சந்தோஷம்

*****

Swami Crossword 1432020 (Post No.7694)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7694

Date uploaded in London – 14 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Across

1. – (8 letters)-mathematician; an Indian satellite is named after him

6. (5)-life breath

8.—(10)- written by Muka Kavi in Sanskrit

9.—(5) Cord used by Vedic Priests to measure the Vedic altars

10.—(9)- Horse sacrifice done by Hindu Kings

11.—(5)- Wisdom

12.—(10)- Big Story written by Gunadhya; now lost

Down

1.—(5 letters) Sanskrit playwright who wrote 13 plays

2.—(7)- hearing, listening; one of the qualities of a bhakta

3.–(4)- name of a river, a grass, reed; also cough

4.—(4)—Wife of Kamadeva; goddess of love

5—(5)- Name of Indra in Buddhist literature

7.—(6)- One of the Ten Avatars of Vishnu; who grew up touching the sky to measure three feet

–subham–

SUN LIGHT ENTERS MADURAI TEMPLE (Post No.7693)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7693

Date uploaded in London – 14 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

SUN LIGHT WONDER IN MADURAI TEMPLE-

IN MADURAI THERE IS A SHIVA TEMPLE IN TEPPAKULAM AREA CALLED MUKTHEESWAR TEMPLE. IT IS ONE OF THE SMALL TEMPLES UNDER THE ADMINISTRATION OF THE BIG AND MOST FAMOUS MADURAI MEENAKSHI SUNDARESWARAR TEMPLE.

SUN LIGHT ENTERS THE SANCTUM SANCTORUM OF THE MUKTHEESWAR TEMPE TWICE EVERY YEAR IN MARCH AND SEPTEMBER. ON WEDNESDAY 11TH MARCH OF THIS YEAR 2020, IT HAPPENED AND SPECIAL PUJAS ARE BEING PERFORMED FOR A NUMBER OF DAYS . LOT OF DEVOTEES GATHERED TO APPRECIATE THE ENGINEERING AND ARCHITECTURAL SKILL OF THE SCULPTORS. THE TEMPLE IS CONSTRUCTED IN SUCH A WAY TO ALLOW THE SUN LIGHT TO COME IN TO THE GARBA GRIHA IN SPRING AND AUTUMN SEASON FOR SOME DAYS. SEVERAL TEMPLES IN SOUTH INDIA HAVE BEEN CONSTRUCTED IN THIS WAY.

THE SUN LIGHT THAT  ENTERED ON 11TH WILL CONTINUE TO ENTER EVERY MORNING UNTIL 23rd MARCH.

SOURCE – NEWS PAPER REPORT POSTED ON FACE BOOK BY DEVAPRIYAJI

TAGS SUN LIGHT ,MADURAI TEMPLE

Lincoln’s Hand was Shaking! Freedom Anecdotes (Post No.7692)

Compiled by London Swaminathan

Post No.7692

Date uploaded in London – 14 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Value of Freedom

You do not know what you are advising us to do, replied the Spartans to a Persian envoy who urged them to submit to Xerxes, for you know what is to be a slave but the sweet ness of freedom you have never tasted. If you felt it, you would tell us to fight for it, not with spears only, but with axes.

Xxx

Abraham Lincoln ‘hesitated’ twice!

When the Emancipation Proclamation was taken to Lincoln by Secretary Seward, for the President’s signature, Lincoln took a pen, dipped it in ink, moved his hand to the place for the signature, held it a moment, then removed his hand and dropped the pen. After a little hesitation, he again took up the pen and went through the same movement as before. Lincoln then turned to Seward and said,

I have been shaking hands since nine o clock this morning, and my right arm is almost paralysed. If my name ever goes into history, it will be for this act, and my whole soul is in it. If my hand trembles when I sign the Proclamation, all who examine the document hereafter will say, “He hesitated”.

Xxxx

Insurrection in Massachusetts

Years ago there was an insurrection in Massachusetts. There were thousands of men in arms against the state authorities. One of the Leaders, Luke Shay, spoke thus at Springfield,

“My boys, said he, they talk to you about liberty; they tell you liberty means the right to do what you have a mind to. That is not liberty. Liberty is the right to make other folks do what you want to have them do”.

Xxx

Catherine the Great on Freedom

Having been subordinated and suppressed for eighteen years, Catherine the Great revelled in doing what she pleased.

“O Freedom”, she wrote,

“The soul of all things: without thee there is no life”. But when the miners and other serfs of the land rebelled, she decided that freedom was too precious to be scattered around, and she wrote to Vyazemsky, who had quelled the revolt with the canon:

“The Russian empire is so vast that any other form of government than that of an autocratic emperor would be detrimental, for every other form fulfils itself more slowly and embodies passions which dissipate its strength.”

Xxxxx Subham xxxx

ஒரே பாடலில் 18 புராணம் (Post No.7691)

Written by London Swaminathan

Post No.7691

Date uploaded in London – 14 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

புராணங்கள் ஏராளம் ; ஆயினும் 18 புராணங்கள் பிரதானம். அந்தப் பதினெட்டு  புராணங்களும்  ஒரே பாடலில்  உளது. விஷ்ணுவின் அவதாரம் இருபதுக்கு மேல் இருந்தாலும் நாம் போற்றித்  துதிப்பது தசாவதாரம்தான். அந்தப் பத்து அவதாரமும் ஒரே பாடலில்  உளது. இப்படி நமக்குப் பாடல்களில் யாத்துத் தருபவர் அம்பலவணக் கவிராயர். 200 ஆண்டுகளுக்கு முன்னர், கொல்லிமலை சதுரகிரி சிவபிரானை அறப்பளிச்சுர சதகத்தில் 100 பாடல்களால் போற்றியவர் .

புராணப் பாடலையும் தசாவதாரப் பாடலையும் காண்போம் .

முதலில்  அவர் சொல்லும் 18 புராணங்கள் :–

முதலில் உள்ளது பௌடிகம் , லிங்கம், மார்க்கண்டேயம், வாமனம் ,

சைவம், மச்சம், கூர்மம், வராஹம், ஸ்கா ந்தம் ,பிரம்மாண்டம்  ஆகிய இவை பத்தும் சிவன் தொடர்புடைய புராணங்கள்;

வைணவம், கருடம், நாரதம் பாகவதம் ஆகிய நான்கு புராணங்கள்  திருமாலின் புகழ் பாடும் புராணங்களாம் .

பத்ம புராணமும், பிரம்ம கைவர்த்தமும் பிரம்மதேவன் தொடர்பான புராணங்கள். இவை தவிர சூரியன் புகழ் படும் சூரிய புராணமும் அக்கினியைப் போற்றும் அக்கினி புராணமும் ஆக மொத்தம் 18 புராணங்கள் .

பவுடியம் என்றால் என்ன?

பவுடியம் , பௌழியம் என்பன ரிக் வேதத்தைக் குறிக்கும் சொற்கள். பஹு ருச  என்றால் ‘நிறைய கவிதைகள்’ என்பது பொருள். ரிக் வேதம் என்ற சொல்லுக்கே ‘கவிதை வேதம்’ என்பதாகும். அப்படிப்பட்ட வேதத்தை ஏன் புராணங்களில் முதலில் வைத்தனர் என்று விளக்கப்படவில்லை ; ஆனால் ரிக் வேதத்தில் பழைய அரசர்களின் கதை , பத்துராஜா யுத்தம் முதலியன உள்ளன . ஒருவேளை அதை மனதிற்கொண்டு இப்படிச் சொன்னார்கள் போலும் . மொழி ஆராய்ச்சி நிபுணரான ஆர் சுவாமிநாத ஐயர் Dravidian Theories by R Swaminatha Ayyar ‘ட்ரவிடியன் தியரிஸ்’ என்ற நூலில் ‘பவுடியம்’ என்பது ‘பஹு ருச’ என்பதன் திரிபே என்று காட்டியுள்ளார் .

பவுடியம் , பௌழியம் பற்றி காஞ்சி பரமாசார்ய  சுவாமிகள் நல்ல விளக்க உரை ஆற்றியுள்ளார் . நச்சினார்க்கினியர் , ஆழ்வார்கள் , கேரள ஓலைச்சு வடிகளில் உள்ள இந்தச் சொல் ரிக்வேதத்தின் ஒரு ஷாகையைக் குறிக்கிறது என்பதை அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

18 புராணங்கள் எவை என்ற பட்டியலில் கருத்து வேறுபாடு உண்டு . பழைய பட்டியல்களை எனது முந்திய கட்டுரைகளில் காண்க.

XXX

பத்து அவதாரங்கள் பட்டியல்

சோமுகாசுரனை வதைத்து, தேவர்களின் துயர் நீக்கி, வேதங்களை எடுத்துவந்த மச்சா வதாரம், தேவர்களுக்கு அமுது கிடைப்பதற்காக எடுத்த ஆமை /கூர்ம அவதாரம் , பெரிய பூமியைப் பாய்போல சுருட்டிச் சென்ற இரண்யாக்ஷனை அழித்தது வராஹாவதாரம் , பொல்லாத கனகன் எனும் இரணியனை வென்றது  நரசிம்மாவதாரம், ஓங்கி உலகை அளந்தது புனிதமான  வாமனாவதாரம் , களிப்புடன் கூத்தாடிய இராவணனை வென்றது ஸ்ரீ ராமாவதாரம் , சூர்ய குல அரசர்களை வேரறுத்த பரசுராம  அவதாரம், உலகத்தின் பயம் நீக்க வந்த கண்ணனும் அவனுடன் அவதரித்த பலராமனும் இரண்டு அவதாரங்கள், இனி வரப்போகும் கல்கி அவதாரம் ஆகிய பத்தும்  அவதாரங்களாம் .

ஜெயதேவர் சம்ஸ்க்ருதத்தில் எழுதிய   அஷ் டபதியில் பலராமனுக்குப் பதிலாகப் புத்தரைச் சேர்த்திருந்தாலும் எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இந்த சதகம் காட்டுகிறது

Tags– ஒரே பாடலில் ,18 புராணம், பவுடியம் , பௌழியம் ,

பத்து அவதாரங்கள்

MY OLD ARTICLES ON PURANAS

புராணங்கள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › புராணங்கள்

  1.  
  2.  

5 Oct 2018 – அதர்வண வேதத்தில் புராணங்கள் பற்றிப் பேசப்படுகிறது. … 18 புராணங்கள் பற்றி முன்னர் வெளியான கட்டுரைகளின் குறிப்பை அடியில் காண்க. புதிய … tamilandvedas.com/tag/புராணங்கள்.


18 புராணங்கள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › 18-புராணங்க…

  1.  
  2.  

11 Jul 2015 – 18 புராணங்கள். வேத வியாசர் தொகுத்த புராணங்கள்:- அக்னி, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்மவைவர்த்த, கருட, ஹரிவம்ச, கூர்ம, …


புராணங்களின் காலம் என்ன? | Tamil and …

tamilandvedas.com › 2013/08/27 › புராணங…

27 Aug 2013 – அதற்குப் பின் புராணங்களில் வரலாறு, பூகோளம், தத்துவம், கதைகள் எனப் பல நூல்கள் … இதற்குக் காரணம் 18 புராணங்கள் சுமார்…


புராணங்கள் புளுகு மூட்டைகளா …

tamilandvedas.com › 2018/10/05 › புராணங…

  1.  

5 Oct 2018 – Research Article Written by London Swaminathan. swami_48@yahoo.com. Date: 5 October 2018. Time uploaded in London –8-47 am (British Summer Time). Post No. 5508. Pictures shown here are taken from various …


18 புராணம் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › 18-புராணம்

6 Sep 2015 – இதன் பின்னர் 18 புராணங்களை எழுதினார். அவைகளில் நான்கு லட்சம் ஸ்லோகங்கள். அதாவது எட்டு லட்சம் வரிகள். சுமார் 40 லட்சம் …


‘புலவர் புராணம்’ | Tamil and Vedas

tamilandvedas.com › tag › புலவர்-புரா…

12 Sep 2018 – WRITTEN by London Swaminathan. swami_48@yahoo.com. Date: 12 September 2018. Time uploaded in London – 8-29 AM (British Summer Time). Post No. 5421. Pictures shown here are taken from various sources …


கல்கி புராணம் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கல்கி-புரா…

  1.  
  2.  

4 Apr 2015 – குலிங்க பக்ஷி பற்றி கல்கி புராணம் கூறுவது முன்னர் நான் எழுதிய “மஹா பாரதத்தில் ஒரு அதிசயப் பறவை” (ஜூலை1, 2014) என்ற …


விஷ்ணு புராணம் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › விஷ்ணு-புர…

  1.  

வேனன் என்ற புராண புருஷன் பற்றி ஒரு சுவையான கதை இருக்கிறது. அந்த … விஷ்ணு புராணத்தில் வேனன் என்னும் கதை வருகிறது. … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact …


பாகவத புராணம் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › பாகவத-புரா…

25 Dec 2018 – Compiled by London Swaminathan swami_48@yahoo.com. Date: 25 December 2018. GMT Time uploaded in London – 7-49 am. Post No. 5830. Pictures shown here are taken from various sources including google, …


பணம் பற்றி பவிஷ்ய புராணம் (Post No …

tamilandvedas.com › 2016/07/21 › பணம்-பற…

  1.  

21 Jul 2016 – பணம் பற்றி பவிஷ்ய புராணம் (Post No.2991). new currency Re1. Written by London … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). பவிஷ்ய புராணம் …


சுமேரியாவில் இந்து புராணக் கதை!

tamilandvedas.com › 2014/05/12 › சுமேரி…

12 May 2014 – நான் பார்த்த வரையில் கருட புராணக் கதை, அதர்வ வேத (பாம்பு) … கருடனைப் பற்றி ரிக்வேதம் முதல் புராணங்கள் வரை மூன்று … ஆங்கிலத்தில் இக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் Please go to swamiindology.blogsot.com or tamilandvedas.wordpress.


புராணங்கள் புளுகு மூட்டைகளா?

tamilandvedas.com › சமயம்-தமிழ் › page

  1.  

T5 Oct 2018 – அதர்வண வேதத்தில் புராணங்கள் பற்றிப் பேசப்படுகிறது. வெளிநாட்டினரும் கூட கி.மு.850 என்று தேதி குறிக்கும் சதபத பிராமணத்தில் புராண … tamilandvedas.com/tag/புராணங்கள். Posts about …


புராண வரலாறு | Tamil and Vedas

tamilandvedas.com › tag › புராண-வரலா…

24 Oct 2019 – Written by S NAGARAJAN swami_48@yahoo.com. Date: 24 OCTOBER 2019. British Summer Time uploaded in London – 6-45 AM Post No. 7131. Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use …


கலியுக முடிவு பற்றி லிங்க …

tamilandvedas.com › 2012/12/19 › கலியுக-…

19 Dec 2012 – இவ் வரிசையில் இதோ மூன்றாவது கட்டுரை: கலியுக முடிவு பற்றி லிங்க புராணம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்: 1.


திருவிளையாடற் புராண கதைகள் …

tamilandvedas.com › tag › திருவிளைய…

28 Dec 2016 – Written by London swaminathan. Date: 28 December 2016. Time uploaded in London:- 11-05 am. Post No.3491. Pictures are taken from different sources; thanks. contact; swami_48@yahoo.com. “அழுத பிள்ளை …

–SUBHAM—

மஹாபாரத ரகசியம் – கடவுளின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்? (Post No.7690)

Written by London Swaminathan

Post No.7690

Date uploaded in London – 14 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ச.நாகராஜன்

உலக வாழ்க்கையில் வெற்றி பெற அனைத்து ரகசியங்களையும் தன்னுள் அடக்கியுள்ள மாபெரும் நூல் மஹாபாரதம்.

இதில் விடை பெற முடியாத கேள்விகளே இல்லை.

பல்வேறு பகுதிகளைக் கோர்த்து ஒரு விஷயம் பற்றிய பல ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும். இதற்காக மஹாபாரதத்தைத் திருப்பித் திருப்பிப் படித்து ரகசியங்களை உணர்ந்து அதன் படி வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளலாம்.

கடவுளின் அருளைப் பெறுவது எப்படி, யார் கடவுளின் அருளைப் பெறுவர் என்ற கேள்விக்கு அநுசாஸன பர்வம் 35ஆம் அத்தியாயம் பதில் சொல்கிறது.

யுதிஷ்டிரர் பீஷ்மரை நோக்கி, “ இந்த உலக வாழ்க்கையில் தனக்கு நன்மையை விரும்பும் ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும்? எப்படிப்பட்ட ஒழுக்கமுள்ளவனாகி உலக வாழ்க்கையை நடத்த வேண்டும்” என்று கேட்கிறார்.

அதற்கு பீஷ்மர் தரும் பதிலில் வெற்றிக்கான வாழ்க்கை ரகசியம் தரப்படுகிறது.

“தான தர்மங்களைச் செய்து பரிசுத்தமான மனதுடன் நாராயணன், சங்கரன் ஆகியோரிடம் பக்தி வைத்தல் வேண்டும்.

சாதுக்களை பூஜித்தல் வேண்டும்.தியானித்து ஜபம் செய்ய வேண்டும்.

அத்துடன் தேகத்தினால் செய்யப்படும் மூன்று வகை கர்மங்கள்,

வாக்கினால் செய்யப்படும் நான்கு வகை கர்மங்கள்,

மனதினால் செய்யப்படும் மூன்று வகை கர்மங்கள்,

ஆக இந்த பத்து வகை கர்மங்களையும் விட்டு விட வேண்டும்.

தேகத்தினால் செய்யப்படும் மூன்று வகை கர்மங்களாவன :-

  1. உயிரைப் போக்குவது
  2. திருடுவது
  3. பிறன் மனைவியைத் தொடுவது

இந்த மூன்று கர்மங்களும் தேகத்தினால் செய்யப்படும் பாவங்கள். இவற்றை முற்றிலுமாக விட்டு விட வேண்டும்.

அடுத்து வாக்கினால் செய்யப்படும் நான்கு வகை கர்மங்களாவன :-

  1. கெட்ட பேச்சு
  2. கடும் சொல்
  3. கோள் சொல்வது
  4. பொய் சொல்வது

இந்த நான்கு கர்மங்களும் வாக்கினால் செய்யப்படும் பாவங்கள். இவற்றை வாக்கினால் செய்யக்கூடாது; மனதினாலும் நினைக்கக் கூடாது.

அடுத்து மனதினால் செய்யப்படும் மூன்று வகை கர்மங்களாவன :-

  1. பிறர் பொருளை விரும்பாமை
  2. எல்லா பிராணிகளிடத்திலும் அன்பு
  3. புண்ய பாவங்களுக்குப் பலன் உண்டு என்ற நம்பிக்கை ஆகிய இந்த மூன்று வகைக் கர்மங்களை மனதினால் செய்து இவற்றிற்கு எதிரானவற்றை விலக்கி விட வேண்டும்.

மனிதன் வாக்கினாலும், தேகத்தினாலும், மனதினாலும் கெட்ட கர்மத்தைச் செய்யக்கூடாது.

இவ்வுலகில் நல்லதையே செய்து நாராயணரிடத்தில் பக்தி உள்ளவன் அவருடைய அருளைப் பெறுவான்; மேலான பதத்தை அடைவான்.”

இப்படிக் கூறி தர்மபுத்திரருக்கு வாழ்க்கையின் வெற்றி ரகசியத்தைச் சொல்வதோடு, கடவுளின் அருளை யார் பெறுவர் என்பதையும் துல்லியமாக விளக்குகிறார் பீஷ்மர்.

இந்த கர்ம ரகசியம் அநுசாஸன பர்வத்தின் முதல் அத்தியாயத்தில் இன்னும் தெளிவாக மனதில் உரைப்பது போலச் சொல்லப்படுகிறது.

பீஷ்மர் தான் உட்பட அனைவரும் கர்மத்தின் வசப்பட்டவர்கள் என்கிறார்.

“இந்த உலகத்தில் கர்மம் ஒரு பாகஸ்தன். ஒவ்வொருவனுக்கும் தன் தன் வினை சம்பந்தமே இலக்கணம்.

கர்மங்கள் ஏவுவதற்குத் தக்கபடி தான் மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏவுகின்றனர்.

மண்ணுருண்டைகளினால் ஒருவன் தான் விரும்பியவற்றை எல்லாம் செய்து கொள்வது போல, மனிதன் கர்மங்களைச் செய்து அவற்றின் பலனைப் பெறுகிறான்.

நிழலும் வெயிலும் எப்போதும் இடைவிடாமல் நெருங்கிச் சேர்ந்திருப்பது போல கர்மமும், அதைச் செய்தவனும் – கார்யமும், கர்த்தாவும் – முன்வினைகளால் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.”

கர்ம ரகசியம் இப்படி விளக்கப்படுகிறது, பீஷ்ம பிதாமகரால்!

இன்னும் ஒரு பெரிய அரிய வாக்கியம் பீஷ்மரால் தர்மபுத்திரரிடம் உரைக்கப்படுகிறது.

“இந்தக் கர்மங்களின் ஸ்வரூபம் புலன்களுக்கு எட்டாத நுட்பமன்றோ?!

ஆம், கர்ம ரகசியம் எளிதில் யாராலும் அறிய முடியாத ஒன்று.

ஆனால், அறியக் கூடியது சாஸ்திர தர்மங்களின் படி நல்லதை எண்ணி, நல்லதைச் செய்தால் நல்லதே நடக்கும் என்பது தான்!

tags- மஹாபாரத ரகசியம், கடவுளின், பீஷ்மர்,

***

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 1332020 (Post no.7689)

Written by London Swaminathan

Post No.7689

Date uploaded in London – 13 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1.—(ஏழு எழுத்து) கணிதமேதை லீலாவதி நூல் எழுதியவர்

6.- (2) விடுமுறை என்பதன் ஹிந்துஸ்தானி வடிவம்

7.–(4) பக்தர்களின் கால்தூசி

8.–(3)- குடித்தால் சாவு

9.–(4) படகு ; படகும் கப்பலும் புறப்பட்ட மாநிலம்  / வலமிருந்து இட ம் செல்க

10.– (3) மும்மூர்த்திகளில் ஒருவர் ; பிறவா யாக்கைப் பெரியோன் 

11.– (5) தொழுனை என்று சங்க இலக்கியம் பாராட்டும் ஆறு  / வலமிருந்து இட ம் செல்க

12.– (5)- புத்தனின் பெயர்களில் ஒன்று

13.—(7) – பெரியாழ்வாரின் பெயர்

கீழே

1.—( 9 எழுத்து)– ஆடு பாம்பே என்று பாடியவர்

2.-  (6) – ராமபிரானால் கொல்லப்பட்ட இரு அரக்கர்

3.– (3)- பருந்து, கருடன் வகைப் பறவை

4.– (6) — நூற்றுவர் கண்ணர் என்று சிலப்பதிகாரம் போற்றும் மன்னர்கள்

5.– (8)- 2800 ஆண்டுகளுக்கு முன்னர் பீ ஹார் மாநிலத்தில் நடந்த அகில

இந்திய தத்துவ மகாநாட்டில் கார்க்கி என்ற பெண்ணால் சவால் வி டப்பட்டவர்.

subham

மேலும் ஒரு நலுங்குப் பாடல் புஸ்தகம் (Post No.7688)

Written by London Swaminathan

Post No.7688

Date uploaded in London – 13 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நலுங்குப்  பாடல்கள்  ஆராய்ச் சி என்ற தலைப்பில் மார்ச் எட்டாம் தேதி இங்கு ஒரு கட்டுரை வெளியிட்டேன். இதோ பிரிட்டிஸிஹ் லைப்ரரியில் கிடைத்த மேலும் ஒரு நூல்

நூலின் பெயர் – கல்யாண கீதம் எழுதியவர் – குன்றத்தூர் அரங்கா ச் சாரியார்.

ஆண்டு -1906

மொத்த பக்கங்கள் 26


நலுங்கு பாடல்கள் ஆராய்ச்சி (Post No …

swamiindology.blogspot.com › post-no7666

5 days ago – … swami_48@yahoo.com. Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blogநலுங்கு பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன் .


தமி்ழ் | Tamil and Vedas

tamilandvedas.com › category › தமி்ழ்

  1.  

நலுங்கு பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன் . … சி.இ.ஓக்கள் மற்றும் ஏராளமானோருக்கு வேலையைப் பங்கிட்டுத் தர வேண்டிய …