ஹிந்தி படப் பாடல்கள் – 14 லதா மங்கேஷ்கரின் காதல் பாடல்கள் (Post No.7865)

WRITTEN BY R. NANJAPPA                                       

Post No.7865

Date uploaded in London – – 22 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

 ஹிந்தி படப் பாடல்கள் – 14

லதா மங்கேஷ்கரின் காதல் பாடல்கள்!

  R. Nanjappa

காதல் பாடல்கள்-லதா மங்கேஷ்கர்

ஹிந்தி சினிமாவுலகில் லாதா மங்கேஷ்கரின் பங்கு அலாதியானது.1948

முதல் 35 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பாடியவர். எல்லா நாயகிகளுக்கும்

அவர் குரல் பொருந்தியது. எல்லாவிதமான பாடல்களுக்கும் பொருந்தியது.

இது எப்படி சாத்தியமாயிற்று?

லதாவின் குரல் மனிதக் குரல் போன்றதல்ல, அது ஏதோ வாத்யம் போன்றது,

அது தான் அப்படிப் பாட முடிகிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா

பத்திரிகையில் 15 வருஷங்களுக்கு முன் சங்கீத அறிஞர் ஒருவர் எழுதினார்.

அதுவே உண்மை போலும்!

ஆனால் 60 வருடங்களாகத் தொடர்ந்து கேட்டு வருபவர்களுக்கு ஒரு

விஷயம்  நன்கு புரிகிறது: லதாவின் குரல் 50களில் மிக இனிமையாக

இருந்தது. 60 களில் மாறிவிட்டது. 70களில் சகிக்கவில்லை.

நாம் திரை இசையின் பொற்காலப் பாடல்களைப் பார்த்து வருகிறோம்.

இவற்றில் லதாவின் பாடல்களுக்கு இணையே இல்லை என்பதில் சந்தேகமே

இல்லை, இவர் 50 களில் பாடிய மூன்று பாடல்களைப் பார்ப்போம்.

மன் மே கிஸீ கீ

मन में किसी की प्रीत बसा ले
मतवाले, मतवाले
मन में किसी की प्रीत बसा ले
किसी को मन का मीत बना ले
मीत बना ले
मतवाले, मतवाले
मन में किसी की प्रीत बसा ले  

மன் மே கிஸீகி ப்ரீத் பஸாலே

மத்வாலே, மத்வாலே

கிசஸீ கோ மன் கா மீத் பனாலே

மீத் பனாலே

மத்வாலே மத்வாலே

பித்துப் பிடித்தவனே!

உன் மனதில் யாருக்காகவாவது அன்பை வளர்த்துக்கொள்!

யாரையாவது மனதிற்கு  உகந்தவளாகக்கொள்!

பித்துப் பிடித்தவனே!

इस दुनियाँ में किसी का हो जा
किसी को कर ले अपना
इस दुनियाँ में किसी का हो जा
किसी को कर ले अपना
प्रीत बना ले ये जीवन को एक सुहाना सपना
एक सुहाना सपना
जीवन में ये ज्योत जगा ले
मतवाले, मतवाले
मन में किसी की प्रीत बसा ले 

இஸ் துனியாமே கிஸீ கா ஹோ ஜா

கிஸீ கோ கர் லே அப்னா

ப்ரீத் பனாலே, யே ஜீவன் கோ  ஏக் சுஹானீ ஸப்னா

ஏக் ஸுஹானி ஸப்னா

ஜீவன் மே யே  ஜ்யோத் ஜகா லே

மத் வாலே மத்வாலே

மன் மே கிஸீ கீ ப்ரீத் பஸா லே

இந்த உலகில் யாருக்காவது சொந்தம் என்று ஆகிவிடு!

யாரையாவது உனக்குச் சொந்தமாக்கிக்கொள்!

அன்பை வளர்த்துக் கொள்வதுஇது இந்த உலகின் இன்பக் கனவு!

ஆம் ஒரு இன்பக் கனவு

வாழ்க்கையில் இந்த விளக்கை ஏற்று!

பித்துப் பிடித்தவனே!

மனதில் யாருக்காகிலும் அன்பை வளர்த்துக்கொள்!

प्रीत सताए प्रीत रुलाए
जिया में आग लगाए
प्रीत सताए प्रीत रुलाए
जिया में आग लगाए
जलनेवाला हँसते हँसते फिर भी जलता जाए
फिर भी जलता जाए
प्रीत के हैं अन्दाज़ निराले
मतवाले, मतवाले

ப்ரீத் ஸதாயே ப்ரீத் ருலாயே

ஜியா மே ஆக்  லகாயே

ஜல்னேவாலே ஹன்ஸ்தே ஹன்ஸ்தே ஃபிர் பீ  ஜல்தா ஜாயே

ஃபிர் பீ ஜல்தா ஜாயே

ப்ரீத் கே ஹை அந்தாஃஜ் நிராலே

மத்வாலே, மத்வாலே

அன்பு அலைக்கழிக்கும், அன்பு அழவைக்கும்!

சிந்தையில் நெருப்பை இடும்!

ஆனாலும் என்ன, இந்த நெருப்பில் எரிகிறவர்கள் சிரித்துக்கொண்டே இருப்பர்!

ஆம், சிரித்தவாறே இருப்பர்!

அன்பின் இயல்பு அலாதியானது!

பைத்தியமே!

मन में किसी की प्रीत बसा ले

मतवाले, मतवाले 

மன் மே கிஸீ கீ ப்ரீத் பஸா லே

மத்வாலே, மத்வாலே

மனதில் யாருக்காக வாவது அன்பை வளார்த்துக்கொள்

ஓ பித்தனே!

Song: Man mein kisi ki  Film: Aram 1951 Lyricist: Rajinder Krishan

Music: Anil Biswas    Singer: Lata

இதைக் காதல் பாட்டு எனச் சொல்வது சரியா?

சரிதான்ஏனெனில் இது காதலின் அருமையை, அதன் அவசியத்தை எடுத்துச்

சொல்கிறது!

To belong to someone -to make some one ours- is the foundation of social life. 

It dissolves our petty ego, but makes us bigger, better, greater persons!

இது பியானோவை வைத்து பாடும் பாடல். பொதுவாக , இத்தகைய

பாடல்களில் ஹீரோ பியானோ வாசித்துக்கொண்டே பாடுவார்! இது மடமை.

பியானோ பெரிய , வாசிக்கச் சிரமமான வாத்யம். பார்க்காமல் வாசிக்க

இயலாது, வாசித்துக் கொண்டே பாடுவது  நடவாது! இந்தப் பாடலில் 

பாடுபவர் வேறு, பியானோ வாசிப்பவர் வேறு! இயல்பாகப்

படமாக்கப்பட்டிருக்கிறது!

அனில் பிஸ்வாஸ் நமது மூத்த இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர்

தான் ஹிந்தி திரை இசையில் முதலில் ஆர்கெஸ்ட்ராவை அறிமுகம்

செய்தவர்இப்பாட்டிற்கு மனதைத்தொடும் விதத்தில் இசை அமைத்திருக்கிறார். சொக்கிப்

போகிறோம்.

எத்தனை எளிய சொற்களில் இனிய கருத்தைச் சொல்கிறார்  ராஜேந்த்ர

க்ரிஷன்!

லதாவின் குரலும் பாடிய விதமும் அபாரம்! இது ஒரிஜினல் லதா

தேன் போல் இனிக்கும் பாடல்!

ஸோகயா ஸாரா ஃஜமானா

सो गया सारा ज़माना नींद क्यों आती नहीं                                                                

ऐ हवा जाकर उसे तू साथ क्यों लाती नहीं                                                               

चाँद पहले भी निकलता था मगर ऐसा न था                                                              

आज ऐसी बात क्यों है ये समझ आती नहीं                                                               

चाँदनी कुछ चाँद से कह कर ज़मीं पे आ गई                                                            

 जाने क्या देखा यहाँ अन लौट कर जाती नहीं

ஸோ கயா ஸாரா ஃஜமானா நீந்த் க்யோ(ன்) ஆதீ  நஹீ

யே ஹவா ஜாகர் உஸே தூ ஸாத்  க்யோ(ன்) லாதீ நஹீ

உலகம் பூராவும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டது

ஏனோ, எனக்கு மட்டும் உறக்கம் வரவில்லை!

யே காற்றே ! நீ  போய் ஏன் அவரைக் கையோடு கூட்டிவரக்கூடாதா?

சாந்த் பஹலே பீ நிகல்தா தா மகர் ஐஸா தா

ஆஜ் அஸீ பாத்  க்யோ(ன்) ஹை 

யே ஸமஜ் ஆதீ நஹீ

சந்திரன் முன்பும் தான் வந்துகொண்டிருந்தது

ஆனால் இப்படி  இல்லையே!

இன்று அப்படி என்ன ஆகிவிட்டது?

எனக்கு ஒன்றும் புரியவில்லையே!

சாந்த்னி குச் சாந்த் ஸே கஹ கர்  ஃஜமீன் பே கயீ

ஜானே க்யா தேகா யஹ(ன்) ஆஜ் லௌட் கர் ஜாதீ நஹீ

சந்திரனின் கிரணங்கள் ஏதோ சந்திரனிடம் சொல்லிவிட்டு

பூமிக்கு வந்து  விட்டன!

இங்கு என்ன கண்டனவோ தெரியவில்லை

திரும்பிப் போக மறுக்கின்றன!

Song: So gaya sara zamana  Film:Miss Mary 1957 Lyricist: Rajinder Krishan

Music: Hemant Kumar Singer: Lata

எத்தனை எளிய பாட்டு! எத்தனை இனிய பாட்டு!

எத்தனை எளிய சொற்களில் காதலை விளக்கிவிட்டார்!

உறக்கம் காற்று,, சந்திரன்இவை காதல் இலக்கியத்தில் நீங்கா இடம்

பெற்றவை. இவற்றை வைத்தே நிலையை விளக்கி விட்டார்.

இதற்கு மனதிற்கினிய விதத்தில் பாஹடி ராகத்தில் இசை அமைத்திருக்கிறார்

ஹேமந்த் குமார்.

இந்த மிஸ் மேரி படம் தமிழ் மிஸ்ஸியம்மாவின் ஹிந்தி வடிவம்இந்தப்

பாட்டு, தமிழில் வரும்மாயமே நானறியேன்என்ற இடத்தில் ஹிந்தியில்

வருவது. தமிழில் இசை அமைத்தவர் எஸ்.ராஜேஸ்வர் ராவ். அனைத்தும்

கர்னாடக ராகத்தில் அமைந்தவை. ஹிந்தியிலும் ஹிந்துஸ்தானி ராகங்களில்

அமைந்த பாடல்கள்தான். இந்த இரு மொழிப் பாடல்களை ஒப்பிட்டுப்

பார்க்கலாம்!

லதாவின் இனிய குரல்

யே ஃஜிந்தகீ உஸீ கீ ஹை

ये ज़िन्दगी उसी की है, जो किसी का हो गया
प्यार ही में खो गया
ये ज़िन्दगी उसी

யே ஃஜிந்தகீ உஸீ  கி ஹை, ஜோ கிஸீ கா ஹோ கயா

ப்யார் ஹீ மே கோ கயா

யே  ஃஜிந்தகீ உஸீ கீ  ஹை

தன்  வாழ்க்கையை வேறு ஒருவருக்கே யார் அர்பணிக்கிறார்களோ,

அவர்களுக்கே இந்த உலகம் சொந்தம்!

அன்பிலேயே யார் மறைந்து போகிறார்களோ

அவர்களுக்கே இந்த உலகம் சொந்தம்!

ये बहार, ये समा, कह रहा है प्यार कर
किसी की आरज़ू में अपने दिल को बेक़रार कर
ज़िन्दगी है बेवफ़ा, लूट प्यार का मज़ा
ये ज़िन्दगी उसी की है

யே பஹார், யே ஸமா, கஹ் ரஹா  ஹை ப்யார் கர்

கிஸீ கீ ஆர்ஃஜூ மே அப்னே தில் கோ பேகரார் கர்

ஃஜிந்தகீ ஹை பேவஃபா, லூட் ப்யார் கா மஃஜா

யே ஜிந்தகீ உஸீ கீ ஹை….

இந்த வசந்தம். இந்த இனிய பொழுது

அன்பு செலுத்து என்று சொல்கிறது!

யாரிடமாவது கொண்ட காதலால் உன் இதயத்தையே 

இழந்துவிடு என்று சொல்கிறது!

இந்த வாழ்க்கைஅது விசுவாசமற்றது

அன்பினால் வரும் ஆனந்தத்தை  அனுபவி!

அவர்களுக்கே இந்த உலகம் சொந்தம்.


धड़क रहा है दिल तो क्या, दिल की धड़कनें ना गिन
फिर कहाँ ये फ़ुर्सतें, फिर कहाँ ये रातदिन
रही है ये सदा, मस्तियों में झूम जा
ये ज़िन्दगी उसी की है

தடக் ரஹா ஹை தில் தோ க்யா, தில் கீ தட்கனே நா கின்

ஃபிர் கஹா(ன்) யே ஃபுர்ஸதே, ஃபிர் கஹா(ன்) யே ராத் தின்

ரஹீ ஹை யே ஸதா, மஸ்தியோ(ன்) மே டூப் ஜா

யே ஃஜிந்தகீ உஸீ கீ ஹை….

இதயம் படபட வெனத் துடிக்கிறதா?

அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாதே!

இந்தப் பொழுது மீண்டும் வருமா?

இந்த இரவும் பகலும் மீண்டும் வருமா?

இந்த இன்பத்தில் ஆழ்ந்துவிடு– 

என்ற குரல் வந்துகொண்டிருக்கிறது!

அவர்களுக்கே இந்த உலகம் சொந்தம்!

Song: Ye Zindagi usi ki hai Film: Anarkali 1953 Lyricist: Rajinder

Krishan Music: C.Ramchandra   Singer: Lata Mangeshkar

In the annals of Indian cinema, there is no more sublime song. There is no other

song like this. This is the supreme. superlative Ode to Love. A song like this

has not been written again or composed or sung. 

There is a heart -touching quality to the lyrics, heart-rending quality in the

melody. One whose heart does not melt on hearing this, probably has no heart!

Though this is sung in a happy mood, it touches us deep down. It tells us how

fleeting is time, how short our life, and so how precious is Love!

Those who wrote this song, composed its melody and sang it- they all must be

Gandharvas, without any doubt.

When we talk of this song, we cannot take another title on our lips at the

same time..

This is the supreme achievement of Hindi Cine Music. This is the tribute to the

heart of India.

A nobler sentiment on Love was never uttered by any other tongue. A more

touching song was never composed. A more touching rendering could not even

be attempted by anyone else.

This song is mainly in the Raag Bhimpalasi, with a  mix of  Kaafi and Kirwani . 

This melody cannot   be straight-jacketed. Such melodies happen once in a

lifetime, once in history.

The beautiful Sitar in this piece was played by Ustad Abdul  Halim Jaffer Khan.

We bow to all these masters, and feel they have done full justice to the theme

of Love.

This song will live on, as long as people cherish true Love in their hearts.

This song will make us live better as long as we listen to its meaning

and  mind its message.

காதலைப் பற்றி இதற்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது?

இன்று நாம் பார்த்த இந்த மூன்று பாடல்களுமே ராஜேந்த்ர கிரிஷன்

எழுதியவை! இதுவும் தற்செயலாக நிகழ்ந்ததே. யே ஃஜிந்தகீ உஸீ கி ஹை

அவருக்கு அமரத்தன்மை பெற்றுத் தந்துவிட்டது!

                               

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 14, லதா , காதல் பாடல்கள்,

xxxxxxx subham xxxx

பூமி தினம் : 50வது ஆண்டு விழா! (Post 7864)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7864

Date uploaded in London – – 22 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஏப்ரல் 22 – பூமி தினம் : கோகுலம் கதிர் ஏப்ரல் 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

புதியதோர் சபதம் செய்வோம்; பூமியைக் காப்போம்!

பூமி தினம் : 50வது ஆண்டு விழா!

ச.நாகராஜன்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி பூமி தினம் உலக மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருவதை அனைவரும் அறிவோம்.

1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி அமெரிக்காவில் முதல் பூமி தினம் கொண்டாடப்பட்டது;  ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பயிலும்  மாணவ, மாணவியர் இரண்டு கோடிப் பேர் இதில் பங்கு கொண்டனர். இன்றோ 2020இல் 50வது ஆண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் 192 நாடுகளில் பல கோடி மக்கள் பங்கு கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சியாக இது மாறி விட்டது.

அமெரிக்காவில் விஸ்கான்ஸின் செனேட்டரான கேலார்ட் நெல்ஸன் (Gaylord Nelson) அரும்பாடுபட்டு ‘எர்த் டே’-ஐ – பூமி தினத்தை 1970இல் உருவாக்கினார்.

1990 ஆம் ஆண்டு வாக்கில் இது உலகளாவிய இயக்கமாக மாறியது. 2009ஆம் ஆண்டு ஐ.நா.சபை இதை அதிகாரபூர்வமான பூமி காக்கும் தினமாக அறிவித்ததோடு பெயரை அகில உலக அன்னை பூமி தினம் – (International Mother Earth Day) என்று மாற்றியது.

   பூமி தினத்திற்கெனத் தனியாக ஒரு கொடி உண்டு. இதற்கு ஈகாலஜி ஃப்ளாக் (Ecology Flag) என்று பெயர். ரான் காப் (Ron Cobb) என்ற ஒரு கார்டூனிஸ்ட் தான் முதன் முதலில் இதை உருவாக்கினார். இதில் இடம் பெற்றுள்ள இரு ஆங்கில எழுத்துக்களான ‘E’ மற்றும் ‘O’ ஆகியவை Environment மற்றும் Organism ஆகிய வார்த்தைகளின் முதல் எழுத்திலிருந்து எடுக்கப்பட்டு கிரேக்க எழுத்துப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதின்மூன்று பட்டைகள் பச்சை மற்றும் வெண்மை நிறங்களில் மாறி மாறி இடம் பெறுகின்றன.

பூமி தினத்திற்காகத் தனிப் பாடல் ஒன்றும் உண்டு.

2009ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ, ‘எர்த்’ என்ற ஒரு விளக்கப்படத்தை அருமையாகத் தயாரித்து அதில் நான்கு விலங்கினக் குடும்பங்கள் குடிபெயர்ந்து செல்லும் பாதையை விளக்கியது.

2011ஆம் ஆண்டு பூமி தினத்தன்று 280 லட்சம் மரங்கள் ஆப்கானிஸ்தானில் நடப்பட்டு அரிய சாதனை படைக்கப்பட்டது.

2012ஆம் ஆண்டு சீனாவில் ஒரு லட்சம் பேர் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப் புகை வெளியேறுவதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சைக்கிள்களை ஓட்டி விழிப்புணர்வு ஊட்டினர்.

பூமி தினத்தன்று ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதக் கொண்டாட்டம் உண்டு. குழந்தைகள் குப்பைகளை அகற்றுகின்றனர். மாணவ, மாணவியர் மரங்களை நடுகின்றனர். இயற்கை ஆர்வலர்கள் பவளப்பாறைகளச் சுத்தம் செய்கின்றனர்; மக்கள் ஆங்காங்கே இது பற்றிய திரைப்படங்களைக் காண்பிக்க ஏற்பாடு செய்கின்றனர். சாமான்யனிலிருந்து நாட்டுத் தலைவர்கள் வரை  பூமி நமது சந்ததியினருக்கு எதிர்காலத்தில் சரியானபடி ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது குறித்த கொள்கையையும் அதற்கான வழிமுறைகளையும் யோசித்துப் பல திட்டங்களை அமுல் படுத்துகின்றனர்.

பிரபஞ்சத்தில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஏதுவாக, மிகவும் அரிதாக, தனித்தன்மை கொண்ட கிரகமாகத் திகழும் பூமியை உலக மக்கள் அனைவரும் நேசித்துக் கொண்டாடும் தினம் இது!

நெதர்லாந்திலிருந்து முதலில் விண்வெளிக்கு யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜன்ஸி மூலம் 1985ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற இயற்பியல் வல்லுநரான உப்போ ஜோஹன்னஸ் ஓகெல்ஸ் ( Woppo  Johannes Ochkels) விண்வெளியிலிருந்து பூமிப் பந்தைப் பார்த்த போது அவருக்கு உயரிய ஆன்மீக சிந்தனைகள் தோன்றின. 2014ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி புற்று நோயினால் மரணமடைந்த அவர் மருத்துவ மனையில் படுத்தபடியே தான் இறப்பதற்கு முதல் நாளன்று பூமி வாழ் மக்களுக்கு ஒரு தொலைக்காட்சி பேட்டி தந்தார்.

அதில் உருக்கமாக உணர்ச்சி ததும்ப, ‘தனக்கு வந்தது போல பூமிக்கும் கான்ஸர் வந்து விடக்கூடாது; இதை எப்படியேனும் எல்லோரும் இணைந்து காக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

“இந்த பூமி மிக்க மதிப்பு வாய்ந்தது. இது  ஒன்றே தான் நமக்கான வசிப்பிடம். இரண்டாவது பூமி இல்லை. இதை எப்படியேனும் காக்க வேண்டும்” என்றார் அவர்.

இப்போது பூமிக்கு இருக்கும் ஆபத்துக்கள் பல!

இன்று வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுவான கார்பன் மானாக்ஸைடு பூமியின் வெப்பம் கூடி பூமி வெப்பமயமாதலுக்கான முக்கிய காரணமாக அமைகிறது.

இந்த வாயுவே தலைவலி, கிறுகிறுப்பு, தடுமாற்றம், நினவாற்றல் இழப்பு, வாந்தி எடுத்தல், சுவாசிப்பதில் சிரமம் மார்பு வலி, கோமாவில் இருத்தல் போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.  குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை கூடுதலாக விளைவிக்கும் இதைக் கட்டுப்படுத்தினால் பூமியும் பிழைக்கும்; பூமி வாழ் மக்களும் பிழைப்பர்.

அடுத்து இயற்கையின் ஒரு அற்புதமான அமைப்பான பயோ டைவர்ஸிடி (Bio diversity) எனப்படும் உயிரினவகை வேறுபாடு அல்லது பல்லுயிர்ப் பெருக்கம் இன்று அழிந்து பட்டு வருகிறது. பறவைகள், விலங்கினங்கள் மற்றும் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

பூமியின் ஆரோக்கியமும் சமச்சீர்த்தன்மையும் இந்த பல்வேறு உயிரினங்களைச் சார்ந்தே இருக்கிறது என்பது ஒரு முக்கியச்  செய்தி!

பூமியில் 30 விழுக்காட்டுப் பரப்பளவே காடுகள் உள்ளன. ஆனால் இந்தக் காடுகளிலேயே

பூமியில் உயிர் வாழும் பல்வேறு உயிரினங்களில் 80 விழுக்காடு வாழ்கின்றன. ஆக தன்னுடன் சேர்ந்து வாழும் உயிரின வகைகளை அழிக்காமலும் அவை வசிக்கும் காடுகளை அழிக்காமலும் இருக்க வேண்டிய பெரும் பொறுப்பு மனித குலத்தைச் சார்ந்திருக்கிறது.

மனம் போன போக்கில் மரங்களை வெட்டி வீழ்த்திச் சுற்றுப்புறச் சூழலுக்குப் பெருங்கேட்டை பலரும் செய்து வரும் இந்தக் காலத்தில் பூமி தினத்தில் பூமியைக் காக்க சூளுரை கொண்ட பலர் மனித குலத்திற்கே வழிகாட்டியாகத் திகழ்கின்றனர்.

எடுத்துக்காட்டாக தனிநபர் ஒருவர் தனியாகவே பெரும்காட்டை உருவாக்கியதைச் சுட்டிக் காட்டலாம்.

கௌஹாத்தியிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோர்ஹாட்டை அடுத்துள்ள பிரம்மபுத்ரா நதியின் படுகை அருகே உள்ள பெரும் மணற்பரப்பில் ஜாதவ் பேரிக் (Jadav Payerig) என்பவர் ஒரு காட்டையே அமைத்துள்ளார். 550 ஹெக்டேர்  நிலப்பரப்பில் இவர் அமைத்துள்ள காடு தனி மனிதன் அமைத்துள்ள காடுகளில் மிகப் பெரிய ஒன்றாகும்.

1979ஆம் ஆண்டு பிரம்மபுத்ரா நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான பாம்புகள் மணற்பரப்பில் ஒதுங்க அருகில் மரம் ஏதும் இல்லாததால் மடிந்தன. இதைப் பார்த்து மனம் நெகிழ்ந்த பதினாறே வயதான சிறுவன் ஜாதவ் அந்த உயிரினங்களைக் காக்க காடு ஒன்று அமைப்பது என்று உறுதி பூண்டான். இடைவிடாத உழைப்பினால் காட்டையும் உருவாக்கி பாம்புகள், பறவையினங்கள், யானைகள் ஏன் புலிகள் கூட விரும்பி வசிக்கும் காட்டை உருவாக்கினான். ஜாதவின் செல்லப்பெயர் மொலாய். அற்புதமான காட்டை மொலாய் உருவாக்கிக் காட்டிய அதிசயத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த மக்கள் இந்தக் காட்டிற்கு மொலாய்க் காடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

பூமியைக் காக்கும் ஒரு அங்கமாகவும் மனித குல முழுவதும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியின் அடையாளமாகவும் பொலிவியா நாட்டின் அன்னை பூமிச் சட்டம் திகழ்கிறது.

மனிதனுக்கு அரசியல் சட்டங்கள் தரும் உரிமை போல அன்னை பூமிக்கும் பதினோரு உரிமைகளை பூமிச் சட்டம் வழங்குகிறது!

வாழ்வதற்கான உரிமை, மனிதன் ஏற்படுத்தும் சுற்றுப்புறச்சூழல் மாசுகளைத் தடுத்து ஆதார வளங்களைக் காத்துக் கொள்ளும் உரிமை, சுத்த நீரைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, தூய காற்றை நிலை நிறுத்திக் கொள்ளும் உரிமை, இயற்கையின் சமச்சீரைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, சுற்றுப்புறச்சூழல் மாசுகளைத் தடுப்பதற்கான உரிமை, மரபணு மாற்றங்களை இயற்கையின் செல்லுலர் அமைப்புகளில் ஏற்படாமல் பாதுகாக்கும் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அன்னை பூமிக்கு உண்டு!

இந்தச் சட்டம் உலக மக்களுக்கு உணர்த்தும் பேருண்மை என்னவெனில் “அன்னை பூமி ஒரு உயிருள்ள ஜீவன்” என்பது தான்!

பூமியின் இத்தனை அருமை பெருமைகளையும், உண்மைகளையும் உணர்ந்து பூமியைக் காக்க எப்பாடும் படுவேன் என்று ஒவ்வொருவரும் உறுதி பூண்டு சூளுரை எடுக்க வேண்டிய ஒரு தினம் பூமி தினம்! ஏப்ரல் 22ஐ மறவாதீர்!

பூமி தினம், 50வது ஆண்டு விழா, earth day

****

SWAMI CROSSWORD 2142020 (Post No.7863)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7863

Date uploaded in London – 21 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ACROSS

1.– 8 letters- – Veda of music chants; third Veda

6.– 7– One of the 8 greats in the Assembly of Krishnadeva Raya; he is famous for his Telugu poem on the nose of a woman.

7. – Hindi name based on Sanskrit word for deathless, ever living

8. – 6- English word minister came from this Sanskrit word.

9.– 5–Planet in Sanskrit- total nine heavenly bodies in astrology

10. – 5—a day of Brahma- 4-32 billion years in Hindu Puranas

11.– 4–food in Sanskrit; mainly made of rice

12.MADURAI-  –7–city in Tamil Nadu where Big Shiva temple is located. It is one of the 100 wonders in the world.

XXX

DOWN

1. – 9 letters – currency with 100 units in Vedic time; also 100 years of life in Sanskrit greetings

2.–8– Mahamagam is held once in 12 years in Kumbakonam, Tamil Nadu. The tamilized word is given here.

3.  — 6 – tiger

4. – 8– Mars in Sanskrit.

5.ANGI –4—long loose garment ornaments made with pearls,

—subham–

PRINCE AND THE ASCETIC (Post No.7862)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No.7862

Date uploaded in London – 21 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

I am of one form. No one knows Me. I am always pure Consciousness.

–Kailvalypanishad 21

KNOW THYSELF, YOURSELF— SOCRATES

A Prince approached a Guru in the Himalayas and said to him,

Swami, you must be in contact with God?

Yes.

Now, I want to reach God . Can you help me?

Sure, that is my business.

How do I go about it? asked the Prince.

Well, how do your subjects go about seeing you?

Oh, I am accessible to anybody, all they have to do is let my secretary know .

Oh, that is easy then, said the Swami. God follow s the same principle. Just give me your card and I will pass it on. No problem.

So the Prince gave him his card . The swami looked at it and said, isn’t this your name?.

Yes.

God wants to know who is coming. He doesn’t want to know your name. The name belongs to you. It is your possession, but God wants to know who the possessor is .

Then the Prince wrote on the card that he was the Prince of the country and then the swami said

Son, isn’t this your position?

Yes.

He doesn’t want to know the position. This is your possession. Who are you?

This went on with the Prince scribbling all over the card, until, finally he wrote,

Human being, to which the Mahatma said ,

Yes. I know you are not a bird or a fox. You are a human being. That is your species. You belong to it. But who are you?

The Prince took the card back and went away because he understood he didn’t know who he was. He thought and thought until he understood. And then he never went back. He had met the person he wanted to meet.

Swami Vivekananda said,

He is an atheist who does not believe in himself

Xxx

HEAVEN AND HELL

There are three pathways to hell which destroy a human being; lust, anger and greed. Therefore give up these things.

–Bhagavad Gita 16-21

There is a Ramakrishna Swami who always tells the novices.

I am not afraid of heaven or hell.

You know I have beautiful handwriting. If I go to heaven, god will say, come here and do my correspondence. If I go to hell, the day the god of hell discovers my handwriting he will put me to the same job. So it doesn’t make any difference where I go.

We make our heaven or hell depending upon how we use our opportunities.

Heaven is a calm and healthy mind.

tags – prince, ascetic, heaven, hell, know yourself,

–subham —

நாடகத்தில் யாருக்கு என்ன கலர்? என்ன மொழி? (Post No.7861)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7861

Date uploaded in London – 21 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

யவனர்கள் பற்றிய எல்லா குறிப்புகளையும் தொகுத்து வழங்கும்– ‘ இந்திய இலக்கியத்தில் யோனர்களும் யவனர்களும்’ — என்ற ஆங்கில நூல் (பின்னிஷ் ஓரியண்டல் சொசைட்டி) நாட்டிய சாஸ்திரத்தில் யவனர்கள் பற்றி என்ன சொல்லி இருக்கிறது என்பதைத் தருகிறது. அவர்கள் பேசிய மொழி, அவர்கள் முக வர்ணம் பற்றி  சுவையான விஷ்யங்களைத் தருகின்றன.

Yonas and Yavanas in Indian Literature, Klaus Karttunen, Finnish Oriental Society,, Helsinki

முதலில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பரத முனி எழுதிய சம்ஸ்க்ருத நூலான நாட்டிய சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதை ப் பார்ப்போம்:-

பரத நாட்ய சாஸ்த்ர 13-59

இதில் தென்னக மக்களுடன் யவனர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோசலாஸ் தோஸலாஸ் சைவ கலிங்கா யவனாஹா காசாஹா

த்ராவிடாந்த்ரமஹாராஷ்டிர  வைஸ்னா  வை வானவா சஜாஹா

இதில் கலிங்க , யவன, திராவிட , ஆந்திர, மகாராஷ்டிரா என்ற வரிசை வருவது பலரையும் வியப்புக்குள்ளாக்குகிறது

எனது கருத்து :-

தமிழ் நாட்டில் பல இடங்களில் யவனர் சேரிகள் (காலனிகள்) இருந்ததாக பழந்தமிழ் நூல்கள் செப்புகின்றன . அவர்களில் பலர் நாடகக் கலையைப் பயின்றிருக்கலாம் .

மேலும் முன்னொரு கட்டுரையில் நான் நான்கு வகையான, யவன,யோனர்களை தமிழ் , சம்ஸ்க்ருத இலக்கியங்கள் பாடியிருப்பதைக் காட்டி இருக்கிறேன் . சங்கத் தமிழ் நூல்கள் காட்டும் யவனர்கள் இத்தாலியிலிருந்து வந்த ரோமானியர். பிற்கால தமிழ் நூல் காட்டும் ‘யவன தச்சர்கள்’ வடமேற்கு இந்தியாவின் ஒரிஜினல், ஆதி யவனர்கள் . அதற்குப் பின்னர் சம்ஸ்க்ருத இலக்கியம் பேசும் யவனர்கள் அலெக்ஸ்சாண்டருடன் வந்த கிரேக்க நாட்டவர். துலுக்கர் படையெடுப்புக்குப் பின்னர் ‘யவனர்கள் , யோனர்கள்’ என்போர் அராபியர்கள் அல்லது துலுக்கர்கள் (துருக்கர்கள்). ஆகவே இவர்களில் பெரும்பாலும்  தென்னக காலனிகளில் வசித்த இத்தாலியர்களே / ரோமானியர்களே .

(இரண்டாம் நூற்றாண்டு கிரேக்க குறு நாடகத்தில்  கன்னட அல்லது துளு  மொழி சொற்கள் உள்ளன என்பர். ஆயினும் இம்மொழிகள் உருவானது இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே.)

பரத முனிவர் இன்னுமொரு இடத்தில் எந்தெந்த வகுப்பினருக்கு முகத்தில் என்ன சாயம் பூசி நடிக்கவோ, நடனமாடவோ வைக்கவேண்டும் என்று இயம்புகிறார்:–

பாரத நாட்ய சாஸ்திரம் 23-105

கிராடபார்பராந்த்ராஸ் ச த்ரமிலாஹா காசிகோசலாஹா

புலிந்தா தக்ஷிணாட்யாஸ் ச ப்ராயேன த் வசிதா ஸ்ம்ருதாஹா

சகாஸ் ச யவனாஸ் சைவ பஹ்லவா வாஹ்லிகா தயாஹா

ப்ராயேன கௌரவாஹா கர்தவ்யா உத்தராம்யே  ஸ்திரிதா திசம்

இதன் பொருள் என்ன?

கிராட , பார்பர , ஆந்திர , த்ராவிட,  காசி, கோசல நாட்டவர்க்கும்

புலிந்தர்களுக்கும் தென்னாட்டினருக்கும் – மாநிறம் அல்லது கருப்பு.

வடக்கேயுள்ள சகரர், யவனர், பஹ் லவர்கள் , பாஹ்லிகர்ளுக்கு – இளம் சிவப்பு நிறம் ;

ஜாதிகளைப்  பொறுத்தமட்டில் , பிராஹ்மணர்கள் , க்ஷத்ரியர்களை இளம் சிவப்பு வண்ணத்திலும், வைஸ்ய, சூத்ர வர்ணத்தாரை கருநீல வண்ணத்திலும் காட்டும் வகையில் ‘மேக் அப்’ (Make up) போடுக.

xxx

காவ்யமீமாம்ச நூல்

ராஜசேகரன் எழுதிய காவ்யமீமாம்சம்  கீழ்கண்ட செய்தியை அளிக்கிறது —

காவ்யம் 17

யவனர்கள் முதலியோரின் இருப்பிடம்

தேவசபாவைத் தாண்டிச் சென்றால் மேற்கத்திய தேசங்கள் வரும் –

அவை சுராஷ்ட்ரம் , தசரேக, த்ரவன, ப்ருகு கச்ச , கட்ச் , அற்புத, அனர்த்த, பிராஹ்மண வாஹ , யவன தேசம்.

(இதிலுள்ள பிராஹ்மண தேசத்தை பாணினி (5-2-81)யும்,  பதஞ்சலியும் குறிப்பிடுகின்றனர். அது இப்போதும் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் பிராஹ்மணாபாத் என்ற நகரமாக இருக்கிறது .இதுபற்றி பிராமண நாடு, சூத்திர நாடு என்ற எனது கட்டுரையில் விவரித்துள்ளேன். அலெக்ஸ்சாண்டருடன் வந்த வரலாற்று ஆசிரியர்கள் இதை கிரேக்க மொழியில் ‘பிராஹ்மனோய்’  Brachmanoi என்று எழுதிவைத்துள்ளனர்.)

இதே வரிசையில் மலைகள், நதிகள் ஆகியவற்றையும் காவ்ய மீமாம்சம் குறிப்பிடுகிறது:–

கோவர்த்தன , கிரிநாகர , தேவசபா , மால்ய சிகர, அற்புத.

நதிகள் – ஸரஸ்வதீ , ஸ்வப்ரவதீ , வார்த்தக்னீ , ,மஹா ஹிடிம்பா.

Xxx

ரஸார்ணவ சுதாகர’

இதற்குப் பின்னர் 1400ம் ஆண்டு வாக்கில் சிம்மபூபால என்கிற மன்னன், ‘ரஸார்ணவ சுதாகர’ என்ற நாடக நூலில்  யவன கதா பாத்திரங்கள் என்ன மொழியைப் பேசவேண்டும் என்று சம்ஸ்க்ருதத்தில் எழுதி இருக்கிறார் —

கீழ்த்தர, மத்தியதர வர்க்க நடிகர்கள்/கதா பாத்திரங்கள் – ஸுரஸேனி ;

ரவுடிகள், கீழானவர்கள் – மாகதி ;

ராக்ஷஸர்கள், பேய், பிசாசுகள் — பைசாசி;

சண்டாளர்கள், யவனர்கள் – ஆப பிராஹ்ம்ச .

tags — பரத , நாட்டிய சாஸ்திரம், யவனர், நிறம், மொழி, காவ்ய மீமாம்சம்

–subham–

WONDER ROCK IN TAMIL NADU! (Post No.7860)

A boulder move: The Krishna’s Butter Ball or Vaanirai Kal, as it is known to locals, has been sitting on a 45-degree slope in Mahabalipuram for over 1,300 years.

Compiled BY LONDON SWAMINATHAN

Post No.7860

Date uploaded in London – 21 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

FOLLOWING IS A PICTURE WRITE UP THAT WAS PUBLISHED BY DAILY MAIL NEWS PAER IN 2016. I AM REPRODUCING IT TO SHOW HOW MUCH THE FOREIGNERS APPRECIATE SUCH THINGS WHILE WE TAKE THEM FOR GRANTED. BEAUTIFUL PICTURES ARE ATTACHED

 Teetering: Unsurprisingly the abnormal rock is popular with tourists and locals, who pose for daredevil photographs under its base.

Rock and NOT roll: The mystery of the 250-ton boulder that has defied gravity for over 1,300 years (but hasn’t stopped daredevil tourists posing under it)

  • The Krishna’s Butter Ball or Vaanirai Kal, as it is known to locals, sits on a 45-degree slope in south India
  •  
  •  In 1908 Governor of Madras Arthur Lawley is said to have used seven elephants to move it without having any luck
  •  
  • Some believe that it was put in place by the gods, others by aliens – and geologists argue it’s a natural formation 

By BECKY PEMBERTON FOR MAILONLINE

PUBLISHED: 09:04, 8 April 2016 | UPDATED: 09:24, 8 April 2016

Only those with nerves of steel dare stand under this teetering 250-ton rock in India that perches precariously on a hill. 

The Krishna’s Butter Ball or Vaanirai Kal (Stone of the Sky God), as it is known to locals, has been sitting on a 45-degree slope in Mahabalipuram for over 1,300 years.

The 20ft rock appears to defy gravity, looking like it’s going to roll at any moment – and all attempts to move it have been in vain.

A boulder move: The Krishna’s Butter Ball or Vaanirai Kal, as it is known to locals, has been sitting on a 45-degree slope in Mahabalipuram for over 1,300 years.

Teetering: Unsurprisingly the abnormal rock is popular with tourists and locals, who pose for daredevil photographs under its base

Under a rock: The 20ft feature appears to defy gravity – and all attempts to shift it from its position so far have been in vain

Hindu folklore says that deity Lord Krishna would often steal handfuls of butter from his mother’s jar, and this natural boulder is attributed to the mass of butter that he pinched

While many have said that it was placed in its position by the Gods who wanted to prove their power, or by extra terrestrial beings thousands of years ago, scientists say that the rock is simply a natural formation.

Under a rock: The 20ft feature appears to defy gravity – and all attempts to shift it from its position so far have been in vain

Source – Daily Mail on line

tags — Mahabalipuram, butter ball, Krishna, wonder rock, stone ball

—-subham—

ஹிந்தி படப் பாடல்கள் – 13 – லதா மங்கேஷ்கரின் ஆட்சி! (Post Mo.7859)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7859

Date uploaded in London – – 21 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 13 – பெண் பாடகிகள் – லதா மங்கேஷ்கரின் ஆட்சி!

R. Nanjappa

கலையும் கலைஞனும்

கலை பற்றி பேசினால் கலைஞனைப் பற்றியும் பேசவேண்டி வருகிறது. கலைக்கு உருவம் கொடுப்பது கலைஞன் தானே!

உலகப் புகழ்பெற்ற சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ ஒரு நாள் ரோம் நகரின் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். ஒரு வீடு இடிக்கப்பட்டுக் கிடந்தது. அதனிடையே ஒரு பெரிய பளிங்குக் கல்லும் கிடந்தது. அதைச் சற்றுக் கவனித்த ஏஞ்சலோ, அதில் ஒரு அழகிய சிற்பம் வடித்தார். கண்டவர்கள் வியந்தனர். ஆஹா, உடைந்து கிடந்த கல்லில் இததனை அழகிய சிற்பமா என வியந்தார் ஒருவர். ‘அன்பரே! சிற்பம் அதில் புதைந்து கிடந்தது. அந்தக் கல்லிலிருந்து வேண்டாத பகுதிகளை அகற்றியது மட்டும் தான் என் வேலைஎன்றார் ஏஞ்சலோ. சிற்பம் சிற்பியின் மனதில் தான் உதிக்கிறது! Art lives in and through the artiist!

மலையே உன் நிலையை நீ பாராய்; கலைஞன் கை உளியாலே, கற்பனைத் திறத்தாலே”  என்று ஒரு பாட்டுவணங்காமுடி படத்தில் வரும்தஞ்சை ராமையா தாஸ் எழுதியது. கற்பனைத் திறத்தாலே கல் கலையாகிறது!

Stone is Prakruti-nature; sculpture is Samskruti-art and culture! The transformation is due to the artist!

புலவர்கள் பெண்களை வர்ணிக்கும் போதுசிற்பி செதுக்காத பொற்சிலையேஎன்பார்கள்! இப்படி எழுதினார் கே.பி.காமாக்ஷி என்ற கவி. இப்பாட்டை .எம். ராஜா தன் மதுரக் குரலில் பாடினார், ‘எதிர்பாராததுஎன்ற படத்தில்.

நம் இசையமைப்பாளர்களும் சிற்பிகள் தான்! ராகம் என்பது பெரிய பர்வதம் போன்றது. அதில் வேண்டிய சில பகுதிகளை மட்டும் வைத்து பாட்டின் மெட்டை உருவாக்குகிறார்கள்! கற்பனைத் திறத்திற்கேற்ப வெவ்வேறு மெட்டுகள்! கற்பனை இன்றி கையில் என்ன உளி இருந்தென்ன பயன்

கல்கி‘. ‘தேவன்பேனா பிடித்தால் இலக்கியம் பிறக்கிறது; கோபுலு, சில்பி பென்சில் எடுத்தால்  கார்டூன், சித்திரம் ஆகிறது. நம்மால் கிறுக்கத்தானே இயலும்! கலைஞன் இன்றிக் கலை வாழுமா?

பாடகரின் குரல் வளம் இயற்கை தந்தது. சங்கீதத்தை முறையாகக் கற்போர் குரல் மேலும் பண்படுகிறது. ஒவ்வொருவர் குரலுக்கும் ஒரு தனித் தன்மை உண்டுபலம், பலவீனம் உண்டு. இதை உணர்ந்து குரலுக்கேற்றபடி மெட்டமைத்து பாடச் செய்வது இசையமைப்பாளார்தான். இந்த வகையிலும் இவர் சிற்பிதான். பாட்டு பிரபலமானால் பாடகனைப் புகழ்கின்றனர். இது அவ்வளவு சரியல்ல!

எல்லா இசையமைப்பாளர்களும் எல்லா பாடகர்களையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. முஹம்மத் ரஃபியின் குரலில் இனிமை உண்டு, கம்பீரம் உண்டு; ஆனால் இதைச் சரியாக வெளிப்படுத்தியவர்கள் எத்தனைபேர்? நௌஷத், நய்யார், பர்மன்ஜெய்தேவ் போன்ற சிலர்தான்.

இதில் எஸ்.டி.பர்மன் எப்படி உழைத்தார் என்று  அனில் பிஸ்வாஸ் சொல்லியிருக்கிறார். ரஃபி பஞ்சாபிகுரல் கனமாக இருக்கும். பர்மன் பெங்காலிஅதுவும் நாட்டுப்புற இசையிலும் சாஸ்திரீய இசையிலும் நாட்டம் உள்ளவர். இவர் பாணிக்கு ரஃபியின் குரல் ஏற்றதல்ல என்று கருதினார். குருதத் ப்யாஸா படம் எடுத்தபோது, ரஃபியின் குரல் அவருக்கு  பின்னணீக் குரலாக ஏற்கெனவே  நன்குஅறிமுகமாகியிருந்தது. அதனால் ப்யாஸாவிலும் ரஃபி குரலிலேயே பாட்டு இருக்கவேண்டும் என்று சொன்னார். இதற்காக பர்மன் தினமும் ரஃபியை வரவழைத்து அவருக்கு குரல் பயிற்சி கொடுத்தாராம். ப்யாஸா படத்தில் ரஃபியின் பாட்டுக்கள் அமோகமாக இருந்தன ஆனால் பின்னிருந்த பர்மனின்  உழைப்பு  எத்தனை பேருக்குத் தெரியும் ? பாடகர்களை ஒரேயடியாகப் புகழ்வது தவறு.

இதே பர்மனுக்கு தலத் முகம்மது குரல் அவ்வளவாகப் பிடிக்காது! ‘சுஜாதா’ படத்தில் ஒரு பாட்டை தலத் பாடவேண்டும் என டைரக்டர்  பிமல் ராய் சொல்லிவிட்டார். பாட்டு பதிவாவதற்குமுன்  ரிகார்டு அறையில் பர்மன் தலத்திடம்” நீ தயவு செய்து என் பாட்டைக் கெடுத்துவிடாதே –

Please don’t spoil my song’என்று சொன்னாராம்! தலத் கோபத்தை அடக்கிக்கொண்டு பாடினார். “ஜல்தே ஹை ஜிஸ்கேலியேஎன்ற அந்தப் பாட்டு சூபர் ஹிட் ஆனதுஇதில் பெருமை முழுதும் தலத் குரலுக்கே! இந்தப் பாட்டை வேறு எவர் குரலிலும் நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலவில்லை!   இங்கு பர்மன் இடறினார்ஆம்,

Even Homer nods!

பாடகிகள்லதா மங்கேஷ்கர்.

 பாடகிகள் என்று வந்தால், 35 ஆண்டுகளுக்குமேல் லதா மங்கேஷ்கரின் ஆட்சிதான். ஷம்ஷாத் பேகம், கீதா தத், ஆஷா போன்ஸ்லே, மீனா கபூர், கமல் பாரோட், சுமன் கல்யாண்புர் என்று பலர் இருந்தாலும் லதாவின்கையே ஓங்கியிருந்தது. லதா வேறு யாரையும் வர, வளர விடவில்லை! இது வெறும் வதந்தியல்ல. உதாரணத்திற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன்.

1955ல் உரன் கடோலா என்ற படம் வந்தது. நௌஷத்தின் ஹிட் இசை கொண்டது. இது தமிழில்வான ரதம்என்ற பெயரில் டப் செய்யப்பட்டது ஹிந்தியில் லதா பாடிய பாடல்களைத் தமிழில் பாட பாலஸரஸ்வதி தேவி என்ற பாடகி தேர்வுசெய்யப் பட்டார். [ குரல் மிக இனிமையானதுதேன் போல் இருக்கும்: “கலையாத ஆசைக் கனவே எந்தன் கருத்தை விட்டகலா நினைவேஎன்றராஜராஜன்படத்துப் பாடல் இவர் பாடியது. சிலருக்கு நினைவிருக்கலாம். “நீல வண்ணக் கண்ணா வாடாபாட்டையும் இவர்தான் பாடினார்.] நௌஷத் இவரை பம்பாய்க்கு அழைத்து ரிஹர்ஸல் எல்லாம் முடித்து ஒரு பாடலையும் பதிவுசெய்துவிட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்ட லதா , தமிழ் பாட்டுக்களையும் தானே பாடவேண்டுமென்றுஅடம்பிடித்தார். நௌஷத் பின்வாங்கினார். பாலஸரஸ்வதிக்கு கல்தாதான்! தமிழ் பாட்டுக்களும் லதா குரலிலேயே பதிவாயின. ( ரஃபி பாட்டுக்களைத் தமிழில் பாடியவர், டி..மோதி. அருமையாகப் பாடியிருக்கிறார்.)

இன்னொரு சம்பவம். 1962 சீன ஆக்ரமிப்புக்குப்பின், தேச பக்திப் பாடல் ஒன்றை கவி பிரதீப் எழுதினார். “மேரே வதன் கே லோகோஎன்ற இந்தப் பாட்டிற்கு சி.ராம்சந்த்ரா இசையமைத்தார். ஆஷா போன்ஸ்லேயுடன் சேர்ந்து லதா பாடுவதாக ஏற்பாடு. டெல்லியில் பிரதமர் நேரு முன்னிலையில் பாடவேண்டும். ரிஹர்சல் எல்லாம் முடிந்துஎல்லோரும் டெல்லி போக விமான டிக்கெட்டும் வாங்கியாயிற்று. கடைசி நிமிஷத்தில், லதா, இதைத் தானே பாடவேண்டுமென்று கவி பிரதீப்பைக்  கட்டாயப் படுத்தினார். பிரதீப் ராம்சந்த்ராவை நெருக்கவேண்டியதாயிற்று. இதில் முக்கிய விஷயம் , அந்த நாட்களில் ராம் சந்த்ராவுக்கும் லதாவுக்குமிடையே பேச்சுவார்த்தை கூட இல்லை! இறுதியில் லதாவே பாடினார்!

லதா கையாண்ட இன்னொரு முறை, எந்த  இசையமைப்பாளரானாலும் , ஹீரோயின் பாட்டுக்கள், முக்கிய பாடல்கள், நல்ல மெட்டுக்கள் ஆகியவை லதாவுக்கே வரவேண்டும்! அதனால்தான் ஹிந்திப் படங்களின் பிரபல சோலோ பாடல்கள் பெரும்பாலும் லதா குரலிலேயே இருக்கின்றன! மற்றவர்களுக்கு டூயட்கோரஸ், கிளப் பாடல்கள்  போன்றவைதான். லதாவின் இந்தப் போக்கை நான்லதாகிரிஎன்று கருதுவேன்.  [குண்டாகிரி, தாதாகிரி போன்றவை  நம் ஊர் கட்டைபஞ்சாயத்து போன்ற முறைகளைக் குறிக்கும் சொற்கள்.] லதா இல்லாமல்  திரை இசை இல்லை என்ற நிலை உருவாகியதுலதாவைமஹாராணிஎன்றே மறைவில் பேசிக்கொள்வர்! லதா இல்லாமல் இறுதிவரை  இசை அமைத்தவர் .பி.நய்யார் ஒருவர்தான்

காதல் பாட்டு-பாடகிகள்

இதை எல்லாம் ஏன் இங்கே சொல்லவேண்டியதாயிற்றுபாடகிகள் பாடிய காதல் பாட்டுக்கள் என்று தேடினால் பிறர் பாடிய பாட்டு ஒன்று கூடத் தேறாது! டூயட் கிடைக்கும், தனிப் பாடல் கிடைக்காது!

கோரே கோரே !

गोरे गोरे बांके छोरे कभी मेरी गली आया करो
गोरी गोरी बांकी चोरी चाहे रोज़ बुलाया करो

கோரே கோரே   பா(ன்)கே சோரே

கபீ மேரி கலீ ஆயா கரோ

கோரீ கோரீ பா(ன்)கீ  சோரீ

சாஹே ரோஜ் புலாயா கரோ

அழகிய யுவனே, அழகிய யுவனே

எப்பொழுதுதாவது எங்கள் இடத்திற்கு வருவதுதானே?

அழகிய பெண்ணே, அழகிய பெண்ணே,

வேண்டுமென்றால் தினமும் அழைப்பது தானே!


रोज़ रोज़ मुलाकात अच्छी नहीं

प्यार में ऐसी बात अच्छी नहीं
थोड़ा थोड़ा मिलना थोड़ी सी जुदाई
सदा चांदनी रात अच्छी नहीं
छोडो छोडो जिया तोड़ो
किसी और को जलाया करो
गोरी गोरी बांकी चोरी

ரோஜ் ரோஜ் முலாகாத் அச்சீ நஹீ

ப்யார் மே ஐஸீ பாத் அச்சீ நஹீ

தோடா டோடா மில்னா தோடீ ஸி ஜுதாயி

சதா சாந்த்னீ  ராத் அச்சீ நஹீ

சோடோ சோடோ ஜியா தோடோ

கிஸீ ஔர் கோ ஜலாயா கரோ

கோரீ கோரீ……….

தினம் தினம் கூடிப் பேசுவது நல்லதல்லவே!

காதலில் இந்தப் போக்கு நல்லதல்லவே!

சிறிது சிறிது பேச்சுசிறிது  சிறிது பிரிவு– (இதுதான் சரி)

தினமும் பௌர்ணமி சரிவராதே

இந்தப் பேச்செல்லாம்  சொல்லி மனதில் வெறுப்பேற்றாதே

வேறு யாரிடமாவது வைத்துக்கொள்

அழகிய பெண்ணே, அழகிய பெண்ணே…..

छोटी सी बात पर ये लड़ाई
प्यार की दुहाई है प्यार की दुहाई
अँखियो में अंखिया दाल के तो देखो
चेहरे पे गुस्सा है दिल में सफ़ाई
घडी घडी बड़ी बड़ी

अच्छी बाते ना बनाया करो
गोरी गोरी बांकी चोरी
चाहे रोज़ बुलाया करो
गोर गोर बांके छोरे


சோடீ ஸி பாத் பர் லடாயீ

ப்யார் கீ துஹாயீ ஹை ப்யார்கீ துஹாயீ

(ன்)கியோ மே (ன்)கியா டால் கே தோ தேகோ

சேஹ்ரே பே குஸ்ஸா ஔர் தி மே சஃபாயீ

கடீ கடீ படி படீ

அச்சீ பாத் பனாயா கரோ

கோரீ கோரீ மா(ன்)கீ சோரி

சாஹே ரோஜ் புலாயா கரோ

சின்னச் சின்ன விஷயத்திற்கு இப்படிச் சண்டையா?

இல்லை, இது காதலின் போக்குதான்!

கண்களோடு கண்களைப் பொருத்திப் பார்!

முகத்தில் கோபம் பொய், மனதில் எதுவுமில்லை  என்று தெரியும்!

ஏன் இப்படி ஏதோ உளறுகிறாய்?

ஏதோ காரணம் சொல்லித்  திரியாதே!

அழகிய பெண்ணே, அழகிய பெண்ணே ..

Song: Gore Gore Film: Samadhi 1950  Lyricist: Rajinder Krishan..

Music: C.Ramchandra  Singers: Ameerbai Karnataki, Lata Mangeshkar

இது கல்லூரி மாணவிகள் இரு பிரிவாகப்  பிரிந்து நடத்தும் ஒரு நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்பட்ட பாடல். இது காதல் பாடலா? இது காதலின் இயல்பைச் சித்தரிக்கும் பாடல்!

இங்கே ஒரு ரகசியத்தைச் சொல்கிறார் கவி. சிறிது பிரிவே காதலுக்குச் சுவை கூட்டுவது. இதை  விரஹம் என்பர். அதே போல் சிறுசிறு சச்சரவுகள். இதைத் திருவள்ளூவர் சொல்கிறார்:

ஊடலின் தோன்றும் சிறுதுளி நல்லளி

வாடினும் பாடு பெறும்                 1322

ஊடுதல் காமத்திற் கின்பம்; அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.                 1330

நம் இலக்கிய மரபு எப்படிக் கவிகளால்  தொடரப்படுகிறது, பாருங்கள்!

There is a universal quality in poetry, which itself is universal language!

This tune is based on an American song ‘Chico Chico from Puerto Rico”, by Edmundo  Ross.. This was a smash hit. It was C.Ramchandra who introduced Western beat in our cine music. The two ladies sing in contrasting styles! Amirbai was a popular singer before Lata, but lost market after Lata’s coming. Here she sings for the male group, while Lata sings for the heroine! Rajinder Krishan’s lyric is superb.

 தமிழில் இந்த மெட்டு  “ஐயா சாமீ, ஆவோஜீ சாமீஎன்ற பாட்டாக வந்தது

.

जाने क्या तूने कही
जाने क्या मैंने सुनी
बात कुछ बन ही गई

ஜானே க்யா தூ நே கஹீ

ஜானே க்யா மைனே ஸுனீ

பாத் குச் பன் ஹீ கயீ..

நீ என்ன  சொன்னாயோ?

நான் என்ன கேட்டேனோ

ஏதோ விஷயம் நடந்திருக்கிறது!

सनसनाहट सी हुई, थरथराहट सी हुई
जाग उठे ख़्वाब कई, बात कुछ बन ही गई
जाने क्या तूने कही

ஸன்ஸனாஹட் ஸீ ஹுயீ,

தர்தராஹட் ஸீ ஹுயீ

ஜாக் உடே க்வாப் கயீ,பாத் குச் பன் ஹீ கயீ

ஜானே க்யா

ஏதோ விவரம் விளங்காத பேச்சு,,

ஏதோ உடலில் ஒரு அசைவு

ஏதோ கனவு விழித்துக்கொண்டது

ஏதோ விஷயம் நடந்திருக்கிறது

नैन झुकझुक के उठे, पाँव रुकरुक के उठे
गयी चाल नई, बात कुछ बन ही गई
जाने क्या तूने कही..

 நைன் ஜுக் ஜுக் கே உடே,

பா(ன்)வ் ருக் ருக் கே உடே

ஆகயீ சால் நயீ,

பத் குச் பன் ஹீ கயீ

ஜானே க்யா….

பார்வை மெல்லமெல்ல மேலெழுந்தது

கால்கள் தடுமாறி நடந்தன

புதிய நடை பிறந்தது

ஏதோ விஷயம் நடந்திருக்கிறது

ज़ुल्फ़ शाने पे मुड़ी, एक खुशबू सी उड़ी
खुल गए राज़ कई, बात कुछ बन ही गई
जाने क्या तूने कही… 

ஜுல்ஃப் ானே பே முடீ,

ஏக் குஷ்பூ ஸீ உடீ

குல் கயே ராஜ் கயீ,

பாத் குச் பன் ஹீ கயீ

ஜானே க்யா தூனே கஹீ….

கூந்தல் அவிழ்ந்து தோளில் புரண்டது

மெல்லிய மணம் கமழ்ந்தது

ஏதோ ரகசியம் வெளிவந்தது

ஏதோ விஷயம் நடந்திருக்கிறது!

நீ சொன்னது என்னவோ, நான் கேட்டது என்னவொ!

Song: Jane kya tune kahi  Film: Pyaasa 1957 Lyricist: Sahir Ludhianvi

Music: S.D.Burman  Singer: Geeta Dutt

இந்தப் பாட்டு அசல் கவிதை. ஒரு கவிதான் மொழிபெயர்க்க முடியும். காதல் வசப்பட்ட  மன நிலையை குறிப்பால் உணர்த்தும் வரிகள்.

இதை சினிமாவுக்காக ஸாஹிர் எழுதவில்லை. ப்யாஸா படம் ஒரு கவிஞன் வாழ்க்கை பற்றியது. இதை எடுப்பது என்று முடிவானவுடன்  தான் ஏற்கெனவே எழுதிவைத்திருந்த பல கவிதைகளை குரு தத்திடம் கொடுத்து வேண்டியதை எடுத்துக்கொள்ளச் சொன்னார். ஒரு வரி, இரண்டு வரி எனப் பல கவிதைகளை குருதத் எடுத்துக்கொண்டார். அப்படி எடுத்தது இந்தக் கவிதை. ஆனால் இதை கதாநாயகி மீது படமாக்கவில்லை! அதனால் தான் சில பாடல்களைத் தனித்துப் படிப்பது சிறந்தது!

இதற்கு பர்மனின் இசை அபாரம்! பல புதிய உத்திகளைக் கையாண்டார்ரிகார்டிஸ்ட் முகுல் போஸ் உதவியுடன்! சைனா மணி Bells  பயன்பாடு புதுமையானது!

இது கீதா தத் பாடிய மிகப் புகழ்பெற்ற பாடல். அவரின் குரலில் ஒரு கவர்ச்சி இருக்கும். பல காரணங்களினால் இவர் அதிகம் பாடவில்லை. லதாவின் ஆதிக்கத்தினால் நாயகிகளுக்குப் பாடும் வலுவான பாடல்கள் இவருக்குக் கிடைக்கவில்லை.

இந்தப் பாடலின் மெட்டு வங்காள மொழியில் பர்மன் பாடிய தனிப்பாடல் ஒன்றின் மீது அமைந்தது.

Mono dilo na bandhu  என்ற அந்தப் பாடலும் ஹிட் ஆனதே!

ஸுமன் கல்யாண்பூர் குரல் ஏறத்தாழ லதாகுரல் போன்றே இருக்கும். ஆஷா  குரல் தனிப்பட்டதுஇவர்களுக்கும் தனிப்பட்ட காதல் பாட்டுக்கள் அதிகம் இல்லை.

இனி, நாம் லதாவின் பாடல்களைப் பார்க்கலாம்.

tags — லதா மங்கேஷ்கர், ஹிந்தி படப் பாடல்கள் – 13

****

எலக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகம்! (Post No.7858)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7858

Date uploaded in London – – 21 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில்

பத்தாவது (கடைசி) உரை

(10-3-2020 அன்று ஒலிபரப்பானது)

எலக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகம்!

தட்பவெப்ப நிலை மாற்றத்திலிருந்து உலகைக் காக்க வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்கு ஒரு சிறந்த வழியாக இப்போது உலகெங்கும் படிம எரிபொருள் தேவைப்படாத எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

1888ஆம் ஆண்டு  பிரான்ஸை சேர்ந்த ஒருவரால் எலக்ட்ரிக் கார் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. மணிக்கு 63.16 கிலோமீட்டர் இது ஓடியது. அடுத்த ஆண்டே லா ஜமைஸ் காண்டெண்ட் (La Jamais Contente) என்ற எலக்ட்ரிக் கார் மணிக்கு 105.88 கிலோமீட்டர் ஓடி முதல் சாதனையை முறியடித்தது. ஆனால் எலக்ட்ரிக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகளை நூறு கிலோமீட்டருக்கு ஒரு முறை சார்ஜ் செய்ய வேண்டியிருந்ததால் இதைப் பயன்படுத்த யாரும் முன்வரவில்லை. ஆனால் இன்றோ பல்வித முன்னேற்றங்களுடன் சத்தமே இல்லாத, வெகு தூரம் ஓடும் எலக்ட்ரிக் கார்கள் சந்தைக்கு வந்துள்ளன.

இதில் முன்னோடியாக இருப்பது உலகின் தலை சிறந்த நிறுவனமான டெஸ்லா. டெஸ்லாவைத் தொடர்ந்து ஏராளமான நிறுவனங்கள் மின்சக்தி வாகனங்களைத் தயாரிக்க ஆரம்பித்து விட்டன. அடுத்த ஐந்து வருடங்களில் 34 புது மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பது ஒரு சுவையான செய்தி. இப்போது இருக்கும் கார்கள், பஸ்கள் என்னென்ன வசதிகள் கொண்டிருக்கின்றனவோ அதை விட கூடுதல் வசதிகளுடன் இவை தயாரிக்கப்படும்.

பல லட்சம் எலக்ட்ரிக் கார்கள் உலகெங்கும் இன்று ஓடுகின்றன. ஜெர்மனியில் மட்டும் பத்து லட்சம் கார்கள் இயக்கப்படுகின்ற்ன.

நார்வே 2025லும் இந்தியா 2030லும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் 2040லும் பெருமளவில் எலக்ட்ரிக் வாகனங்களை சாலைகளில் இயங்கச் செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவை அனைத்தும் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் நாசகரமான வாயுவான கார்பன் டை ஆக்ஸைடை வெளிப்படுத்தாது; ஆகவே சூழல் மேம்படும். அத்துடன் மக்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

அடுத்து, சூரிய சக்தியால் இயங்கும் வாகனங்களும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இவை பயன்பாட்டுக்கு வரும் போது முற்றிலுமாக வளி மண்டலம் நச்சு வாயுக்களிலிருந்து காக்கப்படும். இந்த மாற்றத்தை வரவேற்று பெட்ரோல், டீஸல் வாகனங்களைத் தவிர்ப்போமாக!

 Script by S.Nagarajan (ச.நாகராஜன்)

TAGS சூரிய சக்தி,எலக்ட்ரிக் கார்கள்

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி2042020 (Post No.7857)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7857

Date uploaded in London – 20 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1. — (9)- மதுரைக்கு கோவிலைப் புதுப்பித்தவர். மஹால் என்னும் அரண்மனையை இன்றும் காணலாம்

5.– (3) நன்னாரி போன்ற ஒரு கிழங்கு ; மலையில் விளையும்; பிராமணர் வீடுகளில் ஊறுகாய் போடுவர்

6. – (8) ஒட்டக்கூத்தர் பாடியது; சிவன் புகழ் பாடுவது

8. – (3) தாய்க்கும் பிள்ளைக்கும் இடையேயான அன்பு.

10.–(9)  திருவாதவூர ர் புராணத்தை எழுதியவர்.

12. — பொன்னியின் செல்வன் நாவலில் எல்லோருக்கும் பிடித்த குதிரை வீரன் 

14. — (4) வலமிருந்து இடம் செல்க பாக்களில் வல்லவரை இப்படிப்புகழ்வர்

XXXX

கீழே

1. – (9) சீவக சிந்தாமணியை எழுதியவர்.

2. – (5) பார்வதியின் தமிழ் பெயர்

3. – (3) இந்தியாவின் கிழக்குப் பகுதி தீவுகளில் வசித்த இனம். பாம்பின் பெயர்

4. – (4) சூப்பரிண்டென் ட் , மேற்பார்வையாளன்

7. – (3) அஷ்டமா சித்திகளில் ஒன்று; மலை போல உடலைக் கனக்க வைக்கும் சக்தி

9.– (4) எட்டு கிராம் தங்கம்

11.– (3) தேவலோக சிற்பி

13. – (2) சுவாமியுடன் பவனி வரும்; ஊர்கூடி இழுப்பார்கள்

14. / (4) கீழிருந்து மேல் செல்க- அதிக அறிவில்லாத பொது ஜனம்

XXXXX

ASCETIC WHO ROLLED BOULDERS EVERYDAY AND LAUGHED(Post.7856)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No.7856

Date uploaded in London – 20 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

“Out of many thousands of men scarcely one strives to know me. Of those who strive , scarcely one knows me in Truth”.

—Bhagavad Gita 7-3

There is a story of a Mahatma— Great Soul— who, for many years, got up each morning and began pushing a huge boulder to the top of a hill. For six hours he would struggle with his boulder until he reached the top. As soon as he did so he kicked the boulder and it came tumbling down. Within minutes it lay at the bottom of the hill again. The Mahatma laughed out loud and then he came down for the day.

As you can imagine he became a tourist attraction. Everybody came to see the potty old fellow, until one day, two of his disciples turned up. They had been searching for him to ask him to return to the Himalayas and teach them.

He is crackers,said the local people.

“But, you see, said his disciples, who were themselves very developed souls, all his tremendous effort has been to bring you and me to understand what we have never understood. Each one of us has spent millions of lifetimes struggling to the top of material evolution . We are within the reach of godhood and then, for the sheer thrill of worldly pleasures which will be gone in a flash, we kick ourselves down again.

Sisyphus rolling the marble block up the hill.

My comments

SISYPHUS IN GREEK MYTHOLOGY

There is a similar story in Greece.

Sisyohus, son of Aeolus, was a king of Corinth whose character was so bad that he was condemned in the lower world to roll up hill a great  block  of marble which fell to the bottom as soon as he had got it to the summit.

Xxx

NARADA’S TRAVEL TO HEAVEN

In the Puranas there is a story of Narada, the great seer and jester, on his way to heaven as was often his inclination, when he passed a sage in meditating in the mountains. The sage greeted Narada and asked where he was going.

I am on my way to heaven, replied Narada.

Is there any thing you want while I am there?

Well, yes, said the sage,

Could you find out for me please how many more lives before I Self Realise.

Narada promised to find out for the fellow and went on his way.

Before long he came to the second mediating sage. The conversation went the same way as the earlier one and Narada left having made the same promise.

In a few months he returned from heaven and met the first sage.

What news, Mahatma? Called the sage. Now this sage was a very highly developed spirit and was on the verge of realisation, but Narada said to him,

Not so good, my friend. You see that tamarind tree. Count the number of leaves on that tree and you have the number of lives you have yet to live.

The sage clasped his hands in joy. I am so happy. Now at least I have only a finite number of lives before I Self Realise.

Then Narada came to the second sage, who called out,

What news, Mahatma?

Now this sage was a long way yet from self realisation and had many many lives to go. But Narada said to him,

Very good news. This is your last generation and you are off, free for ever.

The sages eye nearly popped out of his head.

O my goodness. Let me pack quickly and leave for the city while there is still time. So much to do. So much to see.

I think both the stories told by Sadhu Partasarathy, quoted by Kerry Brown.

‘The Essential Teachings of Hinduism’

Tags – Mahatma, sage, boulder, Narada, Heaven, Sisyphus

Xxx Subham xxxx