
Post No. 8575
Date uploaded in London – 26 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜோதிடக் கட்டுரை– சொன்னாலும் வெட்கமடா, சொல்லா விட்டால் துக்கமடா!
சார்! சார் !! உங்க அப்பாயிண்ட்மெண்ட் வேண்டுமே?? ஒரு
பெண்ணின் குரல்…….
நான்- வாங்க மேடம் (Madam) …..வாங்க, உங்களுக்கென்ன அப்பாயிண்ட்

மெண்ட் appointment ??? என்று பக்கத்துத் தெரு மேடத்திற்கு ஒரு சேரைப் போட்டு
உட்காரச் சொன்னேன். ரொம்ப தெரிந்தவர் .
பேமலி family friend நண்பரும் கூட….வெகு நேரம் அமைதியாக
உட்கார்ந்திருந்தார் அவர்…….. சோகமே வடிவாக……
உங்களுக்கென்ன கஷ்டம், சின்ன வயசு(40) உங்கள்
வீட்டுக்காரர் மற்றவருக்கெல்லாம் வீடு கட்டி கொடுக்கிறார்
உங்களுக்கும் 2 வீடுகள் உள்ளன. 2 “ஆடி” (Audi) கார்கள் உள்ளன…..
உங்களுக்கென்ன கொடுத்து வைத்தவர்……என்றேன் நான்.
(எனக்கும் கொஞ்சம் பொறாமைதான்………)
அவள் மவுனமாக இருந்தாள். நான தயவு செய்து உங்கள்
மனக்குறை என்னவென்று சொல்லுங்கள். என்னால் முடிந்தவரை
தீர்க்க முயற்சிக்கிறேன்
சொல்ல வெட்கமாக இருக்கிறது. எனக்கும் என் மகளுக்கும்
(வயது 12) மயிர் வளர்வதே இல்லை. இருக்கிற முடியும்
கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து கொண்டே வருகிறது.
கல்யாணம் காட்சி என்றால் சவரிக்கொண்டை வைத்து
கிளம்ப நேரமாவதுடன் போதும் போதும் என்றாகி விடுகிறது.
எல்லோரும் என்னையே பார்ப்பது போல் ஓர் உணர்ச்சி……

நன ஷாக் (shock) ஆகி விட்டேன். எவ்வளவோ பேர்கள் என்னிடம்
வந்து , என் மகளுக்கு எப்போ கல்யாணம் நடக்கும்,மகனுக்கு
I I T யில் இடம் கிடைக்குமா? ,மகள் FOREIGN போவாளா?
வீடு இந்த ஜன்மத்தில் வாங்குவேனா? என்ற கேள்விகளினால்
துளைக்கப்பட்ட நான் “எனக்கு மயிர் முளைக்க வில்லை,வளரவும்
இல்லை” என்ற கேள்விகள் என்னை துளைத்தன.
பழைய பழமொழி ஞாபகத்தற்கு வந்தது.
‘வயிற்றுக்கு கூழு இல்லை என்பவனுக்கும்
காலுக்கு செருப்பு இல்லை எனபவனுக்கும் ஒரே கவலை தான்’–
என்னடா இது மேடத்திற்கு (எனக்கு ) வந்த சோதனை??.??
மேடத்தின் முகம் சோகத்தால் நிரம்பியது. கண்களில் கண்ணீர்,
வராத குறைதான் …………
கேவலம் ஒரு மயிருக்குக்குப்போய் இவ்வளவு மரியாதையா???
சரி, இனிமேல் “அவரை “மரியாதையாக “அந்த “வார்ததையை
வாபஸ் வாங்கிக் கொண்டு முடி “என்றே அழைப்போம்.
இதில் அவருடைய புருஷனுக்கும் முடி நரைத்து வருகிறதாம்
ஏன் என்ன செய்யலாம்? என்று கேட்டுக் கொண்டு வா…….
ஆனால் எனக்கு என்று சொல்லாதே……”எங்க பேமலி (family) யில்
ஒருத்தருக்கு என்று சொல்”
தடுக்கி விழுந்தால் beauty parlours வாசப்படிமேல் தான் விழுகிறோம்.
தெருவுக்குத் தெரு அழகு நிலையங்கள் (பெண்களுக்கு மட்டும்
போர்டுகள . T V.யில்ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் விதம் விதமான
கம்பேனியிலிருந்து விதம் விதமான விளம்பரங்கள்!!!
ஐஸ்வர்ய ராய் முதல் எல்லா உலக அழகிகளும், இனிமேல்
உலக அழகிகளாகப் போகிறவர்களும் முடியை இப்படி திருப்பி
அப்படித் திருப்பி ,கழுத்தை வெட்டி, விளம்பரங்களைப் பார்த்து
அலுத்து விட்டது……..இது பெண்களுக்கு…..
(பெண்களின் அழகே முடியில் தான் இருக்கறது்
சீவி சிங்காரிச்சு…….. எத்தனை சினிமாவில் பாட்டு கேட்டிருறோம்)
ஆண்களுக்கு பத்ரிக்கையில் விதமான டோபா விளம்பரங்கள்
அதிலும முடியை கருப்பாக மாற்ற T V மிலிடரி வளம்பரங்கள்
எக்கச்சக்கம் போங்கள்!!!!

இதையெல்லாம் பார்த்துதான் காலஞ்சென்ற திரு சோ அவர்கள்
தலையை மொட்டை அடித்துக் கொண்டார். தலைக்கு வார
சீப்பு வேண்டாம், எண்ணெய் வேண்டாம்,தலையை அதிகமாக
துவட்ட வேண்டாம்,பார்பர் ஷாப்பில் மணிக்கணக்காக உட்கார
வேண்டாம்,அதற்கான பணமும் மிச்சம்……நேரமும் மிச்சம்
நான் எந்த விதமான மூலிகைத் தைலமோ,மருந்தோ
அல்லது டோபாவோ வைத்துக் கொள்ளச் சொல்லப் போவதில்லை.
ஆனால் எந்த கிரகத்தினால் இப்படி வருகிறது….அதற்கென்ன,
பரிகாரம்???
என்ன….எவ்வளவு பெரிய சமாசரத்தை இவ்வளவு சிம்பிளாக
முடிக்கிறீங்களே??? என்று நீங்கள் கூறுவது என் காதில்
விழுகிறது……..
மேட்டரை இத்தோடு விடுங்கள்…. ஏனென்றால் உலகெங்கும்
முடியைப் பற்றி 1232 ஆராய்சி நிலயங்கள் முடியை பிய்த்துக்
கொண்டு ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றன!!!!
நல்லொதொரு ரிசல்ட் வர அந்த ‘திருப்பதி பெருமாளை’த்தான்
வேண்டுகிறேன். திருப்பதி, முடி, என்றவுடன் ஞாபகத்துக்கு வந்தது
ஒரு விஷயம்.
2019 வருடம் மொட்டை அடித்துக்கொண்டவர்கள்
12 லட்சத்து 88ஆயிரம் பேர்.
முடியின் எடை-17,ஆயிரத்து 200 கிலோ!
ஏலம் போன தொகை -7 கோடியே 69 லட்சம்!!!- (தகவல்கூகுள்)
சுமார் ஒரு. கிலோ முடி விலை சுமார் ரூ4, 700/-
உலகத்திலேயே அதிக முடி ஏற்றுமதி இந்தியாவிலிருந்துதானாம்
சரி விஷயத்திற்கு வருவோம்.
அழகான முடிக்கு அதிபதி சுக்கரன். கேதுவுக்கும் பங்கு உண்டு.
ஆனால மெயின் பங்கு சுக்கிரனுக்கே!!!
சுக்கிரன் லக்னத்தில் இருந்தாலோ, ஆட்சி உச்சம் பெற்றாலோ
அந்த பெண் ‘லக்கி கேர்ல்!!!’ அவ்வளவு அழகான முடி அமையும்
மகரத்தில் உச்சமானால் கேட்வே வேண்டாம் நீளத்திற்கு!,,,
சரி உதிர்வதற்குக் காரணம் உடல்சூட்டினால்..
சூரியன் உச்சமானலோ செவ்வாயுடன் சேர்ந்திருந்தாலோ,செவ்வாய்
சனியுடன் ராகு சேர்தந்திருந்தாலோ முடி கொட்டோ
கொட்டுன்னு கொட்டும்.(.கொல்லை பக்கம் நின்று தலையை வாரவும்)
சனி , ராகு,கேது, சூரியன் ,செவ்வாய் இவர்களை எல்லாம் நீங்களே
வைத்துக் கொள்ளுங்கள்…… பரிகாரம் என்ன ???
தினமும்சூரிய நமஸ்காரம் செய்வது,( இது உடம்புக்கும் நல்லது)
சூரியன் சம்பந்தமான ஸ்தோஸ்திரங்கள் சொல்வது;
உடல்சூடு தணிக்கும் உணவுப் பண்டங்களை உண்பது,
சூடு தணிக்கும் தைலங்கள் உபயோகிப்பது,
மகாலட்சுமியை வணங்கி ஸ்தோஸ்திரம் சொல்வது
பணம் வருவதற்கும் இவளே காரணம்; ஆகையினால் ஒரே கல்லில்
இரண்டு மாங்காய்!!! நிறைய முடி வளர என் ஆசீர்வாதம்!!!
திருப்தியுடன் சென்றாள் அந்தப் பெண்மணி…….
முடி புராணம் முற்றியது…….
TAGS – சொன்னாலும் வெட்கமடா, மொட்டை, முடி, மயிர்