Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Following is the list I have compiled from various books. Now Hindus only worship goddesses and other religions worship only God as male ‘He’. Wherever they can’t change the faith of the people on Goddesses, they installed Virgin Mary, Madonna or a demoness and called them Pagan gods. Anyway this Greek -Roman gods comparison will be helpful to see how they have changed Hindu Goddesses. For instance, Vedas refer to Vastu as deity of the land, plot or house. Today we see Vastu Sastra is followed by everyone. Big organisations consult Vastu experts. If you enter British Library in London , you can see a fountain with flowing water. All are reshaping their buildings on the basis of Vedic Vastu. They changed the names in Greek and Italy as Hestia and Vesta etc. Goddess Durga is seen throughout Middle East. All the vahanas are seen from Indus valley to Sumeria and Egypt.
Aphrodite -Venus
Ares – Mars
Artemis -Diana
Athene -Minerva
Cronus-Saturn
Demeter -Ceres
Dionysus –Bacchus
Eos – Aurora
Erinyes – Furies
Eros – Cupid
Gaea (Gaia or Ge)- Tellus/Terra
Hades/ Haides- Pluto
Hebe – Juventas
Helius – Sol
Hemera – Dies
Hephasestus /Hephaistos – Vulcan
Here/ here – Juno
Hermes – Mercury
Hestia – Vesta
Moerae /Moirai – Fates
Nike – Victory
Nyx – Nox
Persephone- Proserpina
Poseidon – Neptune
Rhea – Ops
Selene Luna
Tyche – Fortune
Uranus/ Ouranos – Caelus
Zeus – Jupiter
xxxx
Following is the list I posted in 2014
Hindu – Slav
Varun – Perun Haridasva Hors / sun Surya Hors / sun Moksha Mukosh / death
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சிந்து சமவெளி நாகரீகம் என்றும் சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் என்றும் அழைக்கப்படும் நாகரீகம் தொடர்பான அகழ்வாய்வுகளில் அவர்கள் பின்பற்றிய சமயம் (மதம்) தொடர்பான பல முத்திரைகள் கிடைத்துள்ளன. இவைகள் அனைத்தும் இந்து மதம் தொடர்பான முத்திரைகளே என்று பெரும்பாலான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தானிலுள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களில் கிடைத்த முத்திரைகளில் மிகவும் முக்கியமானது “பசுபதி” முத்திரையாகும்.
“பசுபதி” முத்திரையில் ஒரு கடவுள் ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அவரைச் சுற்றி யானை, புலி, காண்டா மிருகம், எருமை ஆகிய நிற்கின்றன.
அவரது தலையில் கொம்பு போன்ற மகுடம் உள்ளது. இந்து மத யஜூர்வேதத்தில் சிவபெருமானை பிராணிகளின் தலைவன் (பசு பதி) என்று ரிஷிகள் வருணிக்கின்றனர். ஆகையால் இந்த முத்திரையிலுள்ள கடவுள் சிவன் அல்லது சிவபெருமானின் மூல வடிவம் (Proto Siva) என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து வெளியிட்டனர்.
பழைய நாகரீகங்களில் கடவுளோ அல்லது மக்கள் தலைவர்களோ இப்படி ‘கொம்புள்ள கிரீடங்கள்’ அணிவதைக் காண்கிறோம். காளை மாடு அல்லது எருமை மாட்டின் கொம்பு தாங்கிய தலைக் கவசங்களையோ மகுடங்களையோ அணிவது வழக்கம். பல பழங்குடி இனத்தலைவர்கள் இதை இன்றும் பின்பற்றுகின்றனர். தமிழ் இலக்கியமும் சம்ஸ்க்ருத இலக்கியமும் மன்னர்களோ மக்களில் சிறந்தோரையோ ஏறு (BULL காளை) என்று போற்றுகின்றனர்.
மன்னர் ஏறு (பதிற் 38/10) குட்டுவர் ஏறு (பதிற் 90-26) புலவர் ஏறு (பத்துப்பாட்டு 1-2, 6-8) பரதவர் போர் ஏறு (பத்துப்பாட்டு 6-44) புயல் ஏறு (ஆற்றல் மிக்க மழை) உறுமின் ஏறு (ஆற்றல் மிக்க இடி) என்று சங்கப் புலவர்கள் பாடுகின்றனர். முதலில் மனிதனுக்கு மட்டும் பயன்படுத்திய “ஏறு” பின்னர் மிகப்பெரிய மழை, இடி போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இன்றும் கூட ஆங்கிலத்தில் ‘GIANT’ ‘MONSTER’ போன்ற சொற்களை இப்படி பலவாறாகப் பயன்படுத்துகிறோம். சம்ஸ்க்ருதத்தில் “இந்திரனை” BULL காளை என்று வேதங்கள் போற்றுகின்றன. இதை இன்றும் கூட மன்னர்களுக்கும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் கூட பயன்படுத்துகிறோம். ராஜேந்திரன் மகேந்திரன் கஜேந்திரன் (யானைகளில் தலைமை யானை) மச்சேந்திரன் மிருகேந்திரன் (சிங்கம்) புவனேந்திரன் என்று பல ‘இந்திரன்’களைப் பார்க்கிறோம்.
சீக்கியர்கள் (பஞ்ஜாப்) தங்களின் பெயருக்குப் பின்னால் “சிங்” (சிங்கம்) என்று சேர்த்துக் கொண்டனர். ரோமானிய மன்னர்களும் “சீசர்” (கேசரி – சிசர்) என்றும் அழைத்துக் கொண்டனர்.
ஆகவே தலைமைப் பதவியிலுள்ளவர்கள் ஆதிகாலத்தில் அதற்கு அடையாளமாக காளையின் கொம்பை அணிவது வழக்கம்.
“கொம்பு“ என்றால் யானையின் தந்தம். “கொம்பன்“ என்றால் தந்தமுள்ள ‘பெரிய தலைமை யானை’ என்ற பொருளும் தமிழில் வழங்குகிறது. இதனால்தானோ என்னவோ தமிழில் “நீ என்ன பெரிய கொம்பனா?“ என்ற சொற்றொடர் வழங்குகிறது போலும். யாரேனும் சிறப்பான கௌரவத்தையோ மரியாதையையோ எதிர்பார்த்து நின்றால் அவரது கர்வத்தைக் குறிக்க இந்த மரபுச் சொற்றொடர் பயன்படுத்தப் படுகிறது.
புகழ் பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞன் காளிதாசன் கூட “கொம்பு“ “கொம்பு சீவல்“ பற்றிக் கூறுகிறான். “கொம்பு“ என்றால் கர்வம் என்றும் சாதாரண கொம்பு என்றும் பொருள் உண்டு. ரகு வம்ச மகாகாவியத்தில் காண்டா மிருகங்களை தசரதன் வேட்டையாடுவதை காளிதாசன் பாடுகிறான் (9-62). கருணையின் பொருட்டு காண்டா மிருகங்களைக் கொல்லாது அதன் கொம்புகளை மட்டும் சீவினானாம் தசரதன். அதாவது மன்னர்களைக் கொல்லாமல் அவர்களுடைய கர்வத்தை மட்டும் வெட்டி வீழ்த்தினான் என்பது காளிதாசன் கவிதையின் உட்பொருள்.
காளிதாசன் ரகுவம்சத்தில் “வீர்ய ச்ருங்கன்” (11-72) என்று கூறுகிறான். மகாபாரதத்திலும் ச்ருங்கவான் (9-52) ச்ருங்கி (1-40) என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
காளிதாசனுக்கு முன்னர் வாழ்ந்த வால்மீகியும் தனது ராமாயணத்தில் ‘அரசர்களுள் ஏறு’ ‘மனிதர்களில் ஏறு’ சொற்களைப் (BULL Among Kings, BULL Among Men) பயன்படுத்துகிறார். சிந்து சமவெளி முத்திரைகளில் அடிக்கடி காணப்படும் காளை/ BULL முத்திரை இப்படிப்பட்ட “ஏறு” (தலைவன், சிறந்தவன்) என்பதை குறிப்பதாக இருக்கலாம். மிருகங்களின் தலைவனான சிங்கத்தைக் குறிக்கவும் இதை பயன்படுத்தலாம். மனிதர்களில் சிறந்த ராஜாக்களைக் குறிக்கவும் (ராஜேந்திரன்) இதைப் பயன்படுத்தலாம். ஆனால் இரண்டையும் வேறுபடுத்த ஏதேனும் ஒரு குறியீடு (DIACRITICAL MARK) அவசியம்.
INDUS-SARASVATI VALLEY PAUPATI- PROTO SIVA
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கொம்பன்
மகாபாரதத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் விஷ்ணு சஹஸ்ரநாமம் மிகப்பழமையான சஹஸ்ரநாமம் (சஹஸ்ரநாமம் = ஆயிரம் பெயர்கள்) ஆகும். இதைப் பின்பற்றியே பிற்காலத்தில் எல்லாக் கடவுள் சஹஸ்ரநாமங்கள் தோன்றின என்றால் தவறில்லை. இதில் வேதகாலக் கடவுளரும் சிவன், முருகன், கணபதி ஆகிய கடவுளரைக் குறிக்கும் சொற்களும் இருப்பதே இதை வேறுபடுத்திக் காட்டும்.
இதில் கொம்பு பற்றியும் பல நாமங்கள் உள்ளன. விஷ்ணுவைப் போற்றும் ஆயிரம் நாமங்களில் மஹா ச்ருங்காய (536), ச்ருங்கினே (797) —-நைக ச்ருங்காய (763, ) சதுர் தர்ம்ஷ்ட்ராய (நான்கு பற்கள்/கொம்பு உடையவர்) என்றெல்லாம் வருகின்றன. “பெரிய கொம்பன்”, ஒரு கொம்பு மட்டும் இல்லாமல் பல கொம்புகள் உடையவன் என்றும் இதன் பொருள். விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு முதல், முதலில் உரை எழுதிய ஆதிசங்கரர் தனது உரையில் சத்வாரி ச்ருங்காஹா – (ரிக் வேதம் 4-58-3), (தைத்ரிய ஆரண்யகம் 1-10-17) என்று குறிப்பிடுவதை எடுத்துக் காட்டுகிறார். இதைப் பார்க்கையில் “பசுபதி” முத்திரை சிவனா விஷ்ணுவா அல்லது இவர்களுக்கு முந்திய மூலக் கடவுளா என்ற வினா எழுகிறது.
சிந்து சமவெளி முத்திரையிலுள்ள பசுபதி போலவே ஐரிஷ் (அயர்லாந்து) கடவுளின் உருவமும் உள்ளது. அக்கடவுளின் பெயரும் கொம்பன்”தான் (CERNUNNOS) பெயர் மருவி இன்று CERUNNO என்று அழைக்கப்படுகிறார். இது ஹாலந்தில் ஒரு புதை குழியில் (GUNDESTRUP CAULDRON) கண்டெடுக்கப்பட்ட உலோகத்தாலான பெரிய அண்டாவில் பொறிக்கப்பட்டு உள்ளது. சுமார் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது சிந்து சமவெளி “பசுபதி” முத்திரை கி.மு. 1800–க்கும் முந்தியது.
சிந்து சமவெளியின் பசுபதி முத்திரையில் உள்ள நான்கு மிருகங்களும் நான்கு வர்ணத்தையோ நான்கு இன மக்களையோ குறிக்கலாம். யானை பிராமணர்களையும், புலி க்ஷத்ரியர்களையும், காண்டாமிருகம் வைஸ்யர்களையும், எருமை சூத்திரர்களையும் குறித்திருக்கலாம். பசுபதி ஆசனத்தின் கிழேயுள்ள ஆடு ஐந்தாம் வருணத்தையோ அல்லது வெளிநாட்டினரையோ குறித்திருக்கலாம். பைபிலில் (DANIEL 7) நான்கு மிருகங்கள் கனவில் வந்ததை விளக்குகையில் நான்கு நாட்டு அல்லது நான்கு இன மக்கள் என்றே வியாக்கியானம் செய்கின்றனர். கீழே ஆடு இருப்பதால் இந்த பசுபதியை அக்கினி தேவனாகவும் கருதலாம்.
பசுபதி முத்திரையில் நான்கு மிருகங்கள் உள்ளன யானை, எருது, காண்டாமிருகம், புலி உள்ளன. இவை இந்திரன், யமன், வருணன், வாயு/ மித்திரன் ஆகியவற்றை குறிப்பனவா?
PAUPATI IN BAHRAIN/DILMUN
இந்திரன் – இந்திரன் வாகனம்
யமன் – எருமை வாகனம்
வருணன்- கொம்பு (சுறா அல்லது காண்டா மிருகம் )
புலி – சாஸ்தா அல்லது தேவி
கீழேயுள்ள மான் அல்லது ஆடு- அக்கினி தேவன்
வேதத்தில் குறிப்பிடப்படும் ஏக ச்ருங்கியும் சிந்து வெளி ஒற்றைக் கொம்பு மிருக முத்திரையும் ஒன்றா என்றும் ஆராய்வது அவசியம். தமிழில் ‘கோண் மா’ என்ற சொல் எருமையை யோ அல்லது காண் டா மிருகத்தையோ குறிக்கும்..
மிருகங்களால் சூழப்பட்ட கடவுள் உருவம் முதலில் சிந்து/சரஸ்வதி நதிக்கரையில் கிடைத்தது. பின்னர் ஹாலந்தில் அதைப் போன்ற ஐரிஷ் கடவுள் சிலை கிடைத்தது. நான் செய்த ஆராய்சசியில் அதே போல மத்திய கிழக்கு — பஹ் ரைன் தீவிலும் கிடைத்துள்ளது. ஐரிஷ் என்பது ஆரிய மொழிகளின் நஃபிரிவு என்பர் . மத் தியக் கிளக்கோ இந்திய கலாச்சாரத்திலிருந்து மிகவும் வேறுபட்டது மூன்று வெவ்வேறு இடங்களில் இதுபோல கிடைத்திருப்பதா ல் சிந்துவெளி மக்கள் யார் என்று கேள்வி எ ழுகிறது ; எழுத்தைப் படிக்கும்போதுதான் உண்மை புலப்படும் .
–சுபம்–
TAGS -PASUPATI SEAL, INDUS VALLEY, BAHRAIN, DILMUN, IRISH, CERUNNOS, பஹ்ரைன், சிந்துவெளி, பசுபதி , அயர்லாந்து
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
THIS TALK WAS BROADCAST ON 11TH APRIL IN GNANA MAYAM CHANNEL VIA ZOOM AND FACEBOOK
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 11-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்! இப்போது வேக யுகத்தில் வாழ்கிறோம் நாம். காலையில் எழுந்து குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பி வேலைக்குப் போகும் ஆண், பெண் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி,வெளியே செல்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விடுகிறது.
இந்த நிலையிலும் பாரம்பரிய பழக்கத்தை விடாது ஒரு சின்ன நமஸ்காரத்தைச் (சைனீ ஸ் நமஸ்காரம் – வளைந்து ஒரு சின்னக் கும்பிடு) செய்து விட்டு ஓட வேண்டிய நிலை.
இந்தக் ‘கலிகால கஷ்டத்தை’ எல்லாம் உணர்ந்து தான் நம் முன்னோர் எந்தக் கஷ்டத்தையும் போக்கி தேவையான இஷ்ட பூர்த்தி அருளும் விதத்தில் அஷ்டகங்களை அருளியுள்ளனர்.
அஷ்டகம் என்றால் எட்டுத் துதிப் பாடல்கள் என்று பொருள்.
சிவபிரானிலிருந்து ஆதி சங்கரர் வரை பல்வேறு ரிஷிகள், அருளாளர்கள் முடிய அருளிய அற்புதமான அஷ்டகங்கள் ஏராளம் உள்ளன.
நமக்கு எந்தக் கஷ்டம் இருக்கிறதோ அதைப் போக்க வல்ல அஷ்டகங்களைச் சொல்ல இரண்டு நிமிடங்களே ஆகும். இதைச் சொல்ல நேரம் இல்லை என்று சொல்லவே முடியாது.
சற்று நேரம் இருப்பவர்களுக்கோ மெய்மறந்து இனிய இசையுடன் சொல்லும் போது ஒரு இனிமையான உலகமே தனியாகத் தோன்றும். அன்னம் கிடைக்க, வியாதி போக, செல்வம் செழிக்க, படிப்பு வர, படைப்பாற்றல் மேம்பட, உயர் பதவி கிட்ட, எதிரிகள் அழிய, ஆன்ம லாபம் பெற, முக்தி அடைய என்று ஒவ்வொருவரின் இஷ்டத்திற்கும் தக, அது பூர்த்தியாக அருளாளர்கள் அருளியுள்ள அஷ்டகங்களை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குரு மூலமாக உபதேசமும் பெறலாம்.
எத்தனை அஷ்டகங்கள் உள்ளன? ஒரு ரெடி ரெஃபரன்ஸாக – உடனடி பார்வைக்காக – 100 + அஷ்டகங்களின் பெயரை உடனே கூற முடியும்! அவற்றைப் படிக்கலாம்; பயன் பெறலாம்.
சில முக்கிய அஷ்டகங்களைப் பற்றி இங்கு பார்ப்போம். அனைத்து அஷ்டகங்களுமே தேர்ந்தெடுத்த மந்திரச் சொற்கள் கொண்டவை; ஓசை நயம் உடையவை!
சூர்யாஷ்டகம் : சிவபிரான் அருளியது. கண் ரோகம் உள்ளிட்ட சகல வியாதிகளையும் போக்க வல்லது.
ஆதி தேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர |
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்து தே ||
என்று ஆரம்பிக்கும் இது (காரண்டியுடன்) ஆரோக்கியத்தை நல்கும் அஷ்டகம் என்று சொல்லலாம்
தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்: தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் என்று பிரபலமாகக் கூறப்படும் இந்த அஷ்டகம் பிரம்மாண்டமான சக்தியைத் தன்னுள் அடக்கி இருக்கும் ஒரு அஷ்டகம். ஆதி சங்கரர் அருளியுள்ள இதற்கு சுரேஸ்வராசாரியர் மாநஸோல்லாஸம் என்ற அற்புதமான உரையினை இயற்றி அருளியுள்ளார். இவர் சாரதா பீடத்தை (சிருங்கேரி பீடம்) முதன் முதலாக அலங்கரித்தவர். தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தின் ஒவ்வொரு மூல ஸ்லோகத்திற்கும் அவதாரிகையுடன் 365 ஸ்லோகங்களால் 10 உல்லாஸங்களில் விளக்கவுரையை சுரேஸ்வரர் அருளியுள்ளார். அற்புதமான இந்த நூலில் சூன்யவாதம், ஸமுதாயவாதம் உள்ளிட்டவை அலசப்படுகிறது; ஆத்ம இயல்பு மிகத் தெளிவாக விளக்கப்படுகிறது. எட்டு ஸ்லோகங்களில் பிரபஞ்ச மர்மத்தை விளக்கும் இந்த அஷ்டகம் எல்லா அஷ்டகங்களிலும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்று.
மஹாலக்ஷ்மி அஷ்டகம்: பாரத நாட்டில் எல்லோராலும் தினமும் சொல்லப்பட்டு வரும் அஷ்டகம் இது. செல்வம் பெருக,தரித்திரம் தொலைய, பல்வேறு நலங்களைப் பெற இந்த அஷ்டகத்தைச் சொல்லலாம்.
தோடகாஷ்டகம்: குருபக்தியை விளக்கும் தோடகாசார்யரின் வரலாறு மிகவும் சுவையானது. ஆதி சங்கரரின் நான்கு முக்கிய சிஷ்யர்களில் ஒருவர் ஆனந்தகிரி. குரு கைங்கரியத்தைச் செய்வது ஒன்றே அவருக்குப் பிரதானமாக இருந்தது. ஒருநாள் தனது சீடர்களுக்குப் பாடம் எடுக்கும் போது அதை ஆரம்பிக்காமல் ஆனந்தகிரியின் வருகைக்காகக் காத்திருந்தார் சங்கரர். மற்றவர்கள், ‘ஆனந்தகிரிக்கு என்ன தெரியும்? அவர் வரவில்லை என்றால் ஒன்றும் பாதகம் இல்லை’ என்று சொல்லிக் கேலி செய்தனர். ஆனந்தகிரியின் ‘குரு சேவா’ பெருமையை சங்கரர் அனைவருக்கும் உணர்த்த அருள் பாலித்தார். ஆனந்தகிரி அங்கு பாடம் கேட்க வரும் போதே தோடகம் என்னும் விருத்தத்தில்,
“விதிதாகில சாஸ்திர ஸுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த நிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம
பவ சங்கர தேசிக மே சரணம் ||
என்று ஆரம்பித்து எட்டு ஸ்லோகங்களைக் கூறினார், இது தோடகாஷ்டகம் என்று பெயர் பெற்றது. ஆனந்தகிரி அன்றிலிருந்து தோடகாசார்யார் என்னும் பெயரை அடைந்து புகழ் பெற்றார். குரு பக்தி சகல ஞானத்தையும் க்ஷண நேரத்தில் அருளும் என்பதற்கு எடுத்துக் காட்டு தோடகாஷ்டகம். கடைசி ஸ்லோகத்தில் செல்வமோ படிப்போ இல்லாத எனக்கு குருவே உங்களது கருணையை அருளுங்கள் என்று அவர் கூறுவது உளத்தை உருக்கும். இதை அனுதினமும் சொல்பவர்களுக்கு குருவின் கிருபையால் சகல நன்மைகளும் உடனே சித்திக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
நடேசாஷ்டகம்: மிக அருமையான இந்த அஷ்டகத்தை காஞ்சி பெரியவாள் பிரபலப்படுத்தினார். இந்த அபூர்வமான அஷ்டகம் பிறந்த வரலாறு சுவையான ஒன்று. பதஞ்சலி என்ற பெயருடைய மஹரிஷி உடலில் இடுப்புக்கு மேலே மனித உருவமும் அதற்குக் கீழே பாம்பின் அமைப்பையும் பெற்றவர். புலியின் கால்களைப் போன்ற கால்களைப் பெற்றவர் வியாக்ரபாதர் என்னும் ரிஷி. இவர்கள் இதர தேவர்களுடனும் ரிஷிகளுடனும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவத்தைச் சிதம்பரத்தில் கண்டு களித்தவண்ணம் இருந்தனர். ஒரு சமயம் வியாக்ரபாதர், பதஞ்சலி ரிஷியைப் பார்த்து, “உமக்கு காலுமில்லை, கொம்புகளும் இல்லை. நடராஜ பெருமானின் நடனத்தை உம்மால் எப்படி ரசிக்க முடியும்?” என்று கேலி செய்தார். இதற்கு பதஞ்சலி முனிவர் பதிலேதும் கூறவில்லை. நடராஜரைத் தியானித்து எட்டு ஸ்லோகங்களைக் கூறி அவரைத் துதித்தார். இந்த அபூர்வமான ஸ்லோகங்களில் ஒன்றில் கூட காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் ஒன்று கூட இல்லை.
அதாவது கா, மா, சா போன்ற எழுத்துக்களுக்கு கால் போட்டு எழுத வேண்டும். கோ மோ, சோ போன்ற எழுத்துக்களுக்கு கொம்பு போட்டு எழுத வேண்டும். பதஞ்சலி ரிஷி அருளிய ஸ்லோகங்களில் இப்படிப்பட்ட காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் ஒன்று கூட இல்லை. இப்படிப்பட்ட அருமையான ஸ்லோகங்களைக் கேட்ட நடராஜ பெருமான் அவருக்கு அருள் பாலிக்க அனைவரும் பதஞ்சலி ரிஷியின் பக்தியின் பெருமையை உணர்ந்தனர். இந்த அஷ்டகம் சம்பு நடன ஸ்தோத்திரம் என்றும் கூறப்படும்.இதை ஓதுபவர்கள் சிவபிரானின் பாதத்தை அடைவர். துக்கத்தைத் தரும் பிறவிக் கடலிலிருந்து மீள்வர் என்று இதன் பலனைப் பற்றி கடைசி ஸ்லோகம் அருளுகிறது.
நடேசாஷ்டகத்தின் முதல் ஸ்லோகம் இது:
ஸதஞ்சிதம் உதஞ்சித நிகுஞ்சிதபதம்
ஜலஜ்ஜலஞ்சலித மஞ்ஜூகடகம்
பதஞ்சலி த்ருகஞ்ஜநம் அநஞ்ஜனம்
அசஞ்சலபதம் ஜனன பஞ்சநகரம் |
கதம்பருசிம் அம்பரவஸம் பரமம் அம்புத
கதம்பக விடம்பக கலம்
சிதம்புதமணிம் புத ஹ்ருதம்புஜ ரவிம்
பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||
இந்த ஸ்லோகத்தில் காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் இல்லாததையும் சொற்கள் நடம் புரியும் அற்புதத்தையும் பார்க்கலாம்!
சரஸ்வத்யஷ்டகம்: சரஸ்வதி தேவியின் அருள் பெற்று நல்ல படிப்புடன் கல்வி மேன்மை பெற சொல்ல வேண்டிய அஷ்டகம் இது.
லிங்காஷ்டகம் : சிவ லோக ப்ராப்தியை அடைய விரும்புவோர் சொல்ல வேண்டிய அற்புதமான இந்த அஷ்டகத்தை பல்லாயிரக் கணக்கானோர் சொல்லி வருவது கண்கூடு.
ஸ்ரீ ராகவாஷ்டகம் : ராகவம் கருணாகரம் முனி ஸேவிதம் என்று ஆரம்பிக்கும் இந்த அஷ்டகம் இனிய இசையுடன் பாடும் போது உளத்தை உருக்கும்; மன நிம்மதியைத் தரும். இதே போல கிருஷ்ணாஷ்டகம், ராமாஷ்டகம் உள்ளிட்டவை குறிப்பிட்ட அவதாரங்களைப் போற்றித் துதிக்கப்படுபவை.
மதுராஷ்டகம்: ஸ்ரீ வல்லபாச்சார்யார் இயற்றி அருளியுள்ள பிரசித்தி பெற்ற அஷ்டகம் மதுராஷ்டகம். இனிமையான கண்ணனை மதுரமாக வர்ணிக்கும் அற்புத இனிய சொற்களைக் கொண்டது இது.
அதரம் மதுரம் வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹசிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
என்ற சொற்கோவையில் மயங்காதோர் இருக்க முடியாது. கிருஷ்ண பக்திக்கான அஷ்டகம் இதுவே
பவானி அஷ்டகம் : ஆதி சங்கரர் அருளியது இது. பவன் என்பது சிவபிரானின் எட்டு முக்கிய நாமங்களில் ஒன்று. பவனின் பத்தினி பவானி. ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரியில் பவானித்வம் என்ற (22வது) ஸ்லோகம் பொருள் பொதிந்த ஒன்று. பவானி என்று பக்தை/பக்தன் ஆரம்பிக்கும் போதே – பவானி த்வம் – பவானி நான் உனது அடிமை என்று சொல்வதற்கு முன்னாலேயே – ‘பவானித்வம்’ என்ற ச்ரேஷ்ட நிலையை அனுக்ரஹிக்கிறாள். அந்த பவானியைத் துதிக்கும் எட்டு ஸ்லோகங்கள் கொண்ட பவானி அஷ்டகம் மிகவும் பிரபலமானது. பவானியாகவே ஆகும் தன்மையை நல்கும் இது தீர்க்க சுமங்கலி பாக்யத்துடன் இதர அனைத்து பாக்யங்களையும் தர வல்லது.
ந தாதோ ந மாதா ந பந்தூ ந தாதா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்த்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமை வ
கதிஸ்த்வம் கதி ஸ்த்வம் த்வமேகா பவானீ |
என்று ஆரம்பிக்கும் பவானி அஷ்டகம் சகல சௌபாக்யம் தரும் அஷ்டகம் ஆகும்.
முத்தான பத்து அஷ்டகங்களைப் பார்த்தோம்.இன்னும் நவக்ரஹ மங்களாஷ்டகம் போன்றவை நவகிரக தோஷங்களையும் இதர தோஷங்களையும் நீக்க வல்லவை!
சுதர்சனாஷ்டகம் :- 8 + பலஸ்துதி, ஆக 9 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கிய சுதர்சனாஷ்டகம் மிகவும் பிரசித்தமான ஒன்று. விஷ்ணுவின் சுதர்சன சக்ரத்தை நோக்கி செய்யப்படும் துதிகள் இவை. விஷ்ணுவின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் முதலாவதானது சுதர்சனம். சில ஆலயங்களில் சுதர்சனருக்குத் தனி சந்நிதி உண்டு. திருமோகூரில் குறிப்பிடத்தகுந்த சுதர்சன சந்நிதி உள்ளது.
பாஞ்சராத்ர ஆகமத்தின் பழைய சம்ஹிதையான அஹிர்புத்ன்ய சம்ஹிதையில் சுதர்சனத்தின் பெருமை பல அத்தியாயங்களில் விளக்கப்படுகிறது.
கவிதை ஜாலங்களுடன் சக்தி வாய்ந்த வார்த்தைகள் மூலம் தேசிகர் இந்த அஷ்டகத்தில் சுதர்சனரைப் போற்றுகிறார்.
திருப்புட்குழியில் வாழ்ந்து வந்தோரின் கொடிய ஜுரம் போக இந்த அஷ்டகத்தை தேசிகர் இயற்றியதாகக் கூறப்படுகிறது. இன்னொரு சாரார் தேசிகர் வாதுக்குச் செல்லு முன் இதை இயற்றி வாதுக்குச் சென்றதாகவும் மற்ற தத்துவங்களை முன்வைத்தோர் தோற்று விட்டதாகவும் கூறுகின்றனர்.
இதில் உள்ள எட்டு ஸ்லோகங்களை அர்த்தத்துடன் மனதில் ஊன்றிப் படிப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும் என்று உறுதி கூறுகிறார் ஒன்பதாவது ஸ்லோகத்தில், ஸ்ரீ வேதாந்த தேசிகர்.
அஷ்டகங்களின் பெருமையை வார்த்தைகளால் விளக்க முடியாது.
ஏராளமான அஷ்டகங்களில் நூறு அஷ்டகங்களின் பட்டியல் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. இவற்றின் பெருமையை அறிந்து தங்களுக்குத் தேவையான அஷ்டகத்தை ஓதி இஷ்ட சித்தி அடையலாம். அனைத்து அஷ்டகங்களும் பெரும்பாலும் இணையதளத்தில் கிடைக்கிறது. கீழே ஒரே அஷ்டகத்தின் பெயர் இருமுறை குறிக்கப்பட்டிருந்தால் இரு வேறு மகான்கள் துதி செய்து அருளிய அஷ்டகம் அது எனக் கொள்ள வேண்டும்.
100 அஷ்டகம்
சூர்யாஷ்டகம்
ராகவாஷ்டகம்
தோடகாஷ்டகம்
நடேசாஷ்டகம்
மஹாலக்ஷ்மி அஷ்டகம்
கணேச அஷ்டகம்
கிருஷ்ணாஷ்டகம்
சரஸ்வதி அஷ்டகம்
துர்காஷ்டகம்
லிங்காஷ்டகம்
பவானி அஷ்டகம்
ரங்கநாதாஷ்டகம்
காளிகாஷ்டகம்
ராமாஷ்டகம்
ராமாஷ்டகம்
அச்யுதாஷ்டகம்
ஸ்ரீ வேதவ்யாஸ அஷ்டகம்
விஸ்வநாதாஷ்டகம்
நவக்ரஹ மங்களாஷ்டகம்
சுதர்ஸனாஷ்டகம்
வில்வாஷ்டகம்
துளஸி அஷ்டகம்
ஸ்ரீமத் மங்களமூர்த்யஷ்டகம்
ராஜபுர கங்காஷ்டகம்
நிர்வாணாஷ்டகம்
ஸ்ரீ லக்ஷ்ம்யஷ்டகம்
ஸ்ரீ வில்வநாதாஷ்டகம்
கங்காதாராஷ்டகம்
ஹம்ஸாஷ்டகம்
பகவந்நாம ரத்னமாலாஷ்டகம்
ஹரிஹராஷ்டகம்
மனோரதாஷ்டகம்
ஸ்ரீ ஹரிசரண அஷ்டகம்
சிவராமாஷ்டகம்
ப்ரஷ்டாஷ்டகம்
நர்மதாஷ்டகம்
புஷ்கராஷ்டகம்
ஸ்ரீ மணிகர்ணகாஷ்டகம்
ஹனுமத் அஷ்டகம்
கங்காஷ்டகம் –
கங்காஷ்டகம் – வால்மீகி
கங்காஷ்டகம்
யமுனாஷ்டகம்
யமுனாஷ்டகம்
வித்யார்த்திதாஷ்டகம்
ந்ருஸிம்ஹபாரத்யஷ்டகம்
சங்கராசார்ஷ்டகம்
விஹாரிணோஷ்டகம்
குர்வஷ்டகம்
ஜகன்னாதாஷ்டகம்
ஸ்ரீ கோவிந்தாஷ்டகம்
ஸ்ரீ கோபாலாஷ்டகம்
ஸ்ரீ பிந்துமாதவாஷ்டகம்
பாண்டுரங்க அஷ்டகம்
ரகுநாதாஷ்டகம்
ராமசந்த்ராஷ்டகம்
சாரதாஷ்டகம்
ஷீதலாஷ்டகம்
பகவத் அஷ்டகம்
சங்கடா நாமாஷ்டகம்
அம்பாஷ்டகம்
சரஸ்வத்யஷ்டகம்
தேவியஷ்டகம்
பாதாவ்ஷாஷ்டகம்
வாராஹிநிக்ரஹாஷ்டகம்
தாராஷ்டகம்
ஸ்ரீ காலாந்தகாஷ்டகம்
சிவாஷ்டகம்
சந்த்ரசூடாலாஷ்டகம்
காலபைரவாஷ்டகம்
விஸ்வரேஷ்வராஷ்டகம்
மஹாதேவ்யாஷ்டகம்
வைத்யநாதாஷ்டகம்
பசுபத்யஷ்டகம்
சிவநாமாவல்யஷ்டகம்
ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம்
ரமாபத்யாஷ்டகம்
விஷ்ணோரஷ்டகம்
ஸ்ரீ ஹரிநாமாஷ்டகம்
ஸ்ரீ ஹரிஸ்மரணாஷ்டகம்
ருத்ராஷ்டகம்
மதுராஷ்டகம்
கணநாயகாஷ்டகம்
சௌர்யாஷ்டகம்
நடராஜாஷ்டகம்
சிவநாமாவளியஷ்டகம்
அகஸ்த்யாஷ்டகம்
ஜம்புநாதாஷ்டகம்
ஸதாசிவாஷ்டகம்
சோணாத்ரிநாதாஷ்டகம்
பரமாத்மாஷ்டகம்
கோஷ்டேஸ்வர அஷ்டகம்
சாஸ்தா அஷ்டகம்
தேவராஜ அஷ்டகம்
யமாஷ்டகம்
அமிலாஷ்டகம்
ஸ்வர்ணாகர்ஷண பைரவா
ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்
சாரதாபுஜங்காஷ்டகம்
அட்டால சுந்தராஷ்டகம்
அஷ்டகங்களை ஓதுவோம். அனைத்து நலன்களையும் பெறுவோம். நன்றி, வணக்கம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
There is a beautiful verse in Chandogya Upanishad which describes the ancient Hindu society.
This was the condition that existed at least 3000 years ago in India.
“Within my realm (Janapada ) there is no thief
No misser, nor a drinking man
None altarless, none ignorant,
Nno man unchaste , no wife unchaste.”
–Asvapati of Kekaya
The same ideals are described in several discourses of the Mahabharata. The Vidura Niti in the
Mahabharata is a summary of those ideals of virtue and common sense which were cultivated by the Janapada citizens.
Panini mentioned it with the word Vainayika 5-4-34. It is in the Santi parva of 68-4 of Mahabharata.
The Vainayika functions of the Janapada state are described at length in the epic in a chapter
in Santi parva 68.1-61 where we see
‘Yadi raja na paalayet’.
Dharma is the base on which the society rests. We see it inUdyoga parva of the epic.
‘Namo Dharmaya mahate dharmo dharayati prajaha’- Udyoga parva 137-9
Panini uses ‘Dhaarmika’, ‘Dharmam charati’ 4-4-41
‘Charati’ means habitual moral conduct or practice of virtue. Dharma denoted both justice and virtue.
This ideal is embodied in the famous words of king Asvapati of Kekaya which he uttered in the presence of such citizens who were householders possessing magnificent mansions (Mahasala), supplied with all the luxuries that Janapada life would provide, but who still chose the Path of virtue and learning (Maha strotriya ).
Source book- India as known to Panini by VS Agrawala
Xxx
Kambar in Ramayana
Kambar in Ramayana also describes such a society
When Kambar describes the conditions of the people in Ayodhya, he says,
“There is no untimely death because there is no crime;
There is no anger because everyone behaves”
He continued in another verse,
“No one donated anything because there is no one to accept it;
No one’s valour is seen because no one came for a fight;
There is no truth visible because no one spoke a lie;
Every one is learned and so there is elementary education!
This is only a rough translation. In short people had no needs. Every one is happy
and the society is peaceful.
Valmiki also says the same in his Ramayana( Please see the link below for my old article)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று APRIL 11 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
அரசின் கட்டுப்பாட்டில் இருந்து 51 கோயில்கள் விடுவிப்பு: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு
உத்தரகண்டில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதாக அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார்.
உத்தரகண்டில் புதிய முதல்வராக பொறுப்பேற்ற தீரத் சிங் ராவத், சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின்போது, ‘சார் தாம் தேவஸ்தானம்’ மேலாண்மை மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு கவர்னர் பேபி ராணி மவுரியா, ஒப்புதல் வழங்கியதை அடுத்து, மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார். இதில், பத்ரிநாத், கேதர்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி உள்ளிட்ட கோயில்களும் அடங்கும்.
‘உத்தரகண்ட் மாநிலம் போன்று, தமிழகத்தில் உள்ள கோவில்களையும், அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது:உத்தரகண்ட் மாநில அரசு, 51 கோவில்களை, அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துள்ளது. இது, மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில், அரசு கட்டுப்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட இந்த கோவில்கள், மீண்டும் சமூகத்திடமே வழங்கப்பட்டுள்ளன. இது, மிகப்பெரிய முன்னேற்றம்.கோவில்கள், பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை, உத்தரகண்ட் அரசு உணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது
உத்தரகண்ட் அரசின் அறிவிப்பை பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி வரவேற்றுள்ளார்.
XXXX
காசி கோவில் பகுதியில் தொல்பொருள் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு
வாரணாசியில், விஸ்வ நாதர் கோவில் – ஞானவாபி மசூதி அமைந்துள்ள வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர், வி.எஸ்.ரஸ்தோகி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
வாரணாசியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காசி விஸ்வநாதர் கோவில், முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் இடித்து தள்ளப்பட்டது. அங்கு, மசூதி கட்டப்பட்டுள்ளது. இது வரலாற்று பூர்வமான உண்மை.
முகலாயர் ஆட்சி முடிந்த பின்,மசூதிக்கு அருகே, விஸ்வநாதர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. அதனால், காசி விஸ்வநாதர் கோவில், ஞானவாபி மசூதி வளாகத்தை, ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த வளாகத்தில், தொல்பொருள் ஆய்வு நடத்தினால், விஸ்வநாதர் கோவில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கும். அந்த வளாகத்தில் தான், கோவிலை இடிக்கும் போது இருந்த, விஸ்வநாதர் லிங்கமும் புதைக்கப்பட்டுள்ளது. என கூறப்பட்டு இருந்தது.
தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள, மசூதி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல ஆண்டுகளாக, இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்கான செலவை, மாநில அரசு ஏற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதை வரவேற்று பலரும் சமூகவலைதளமான டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அவுரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து தான் ஞான வாபி மசூதியை கட்டினார் என்பதை பலரும் சுட்டிக்காட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்
XXXXX
ஆஞ்சநேயர் பிறப்பிடம்: யுகாதி வருடப்பிறப்பில் ஆதாரங்கள் வெளியிடப்படும்
ஆஞ்சநேயர் பிறப்பிடம், திருமலையில் உள்ள அஞ்னாத்திரி மலைத் தொடர் என்பதற்கான ஆதாரங்களை, தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி அன்று வெளியிட உள்ளதாக, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையான் குடியிருக்கும் திருமலை, ஆஞ்சநேயரின் பிறப்பிடமாகவும் அடையாளம் காணப்பட உள்ளது. இதுகுறித்து பல புராண இதிகாசங்களை ஆராய்ந்து அறிய, ஆறு பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை, திருமலை தேவஸ்தானம் அமைத்தது. அவர்களும், பல புராணங்கள், கிரந்தங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து உள்ளனர்.
அதன்படி, ஆஞ்சநேயர், சேஷாசல மலையில் உள்ள அஞ்னாத்திரியில் பிறந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு தகவல்களை, வரும், 13ம் தேதி தெலுங்கு வருட பிறப்பான யுகாதிஅன்று தேவஸ்தானம் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.
ஆஞ்சனேய பக்தர்கள் இதை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றனர். ஏற்கனவே வேறு சில மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில்தான் அநுமன் பிறந்தான் என்று அறிவித்துள்ளன . தகவல் வெளயான பின்னர் ஞான மயம் குழு அதை விரிவாக வெளியிடும் .
XXXX
கொரோனா பரவல் – புகழ்பெற்ற கோவிலில் தரிசனம் முழுவதும் ரத்து!!
கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான சீரடி சாய் பாபா கோவிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோவிலும் ஏப்ரல் 30ம் தேதி வரை மூடப்படுகிறது
ஆந்திரத்திலுள்ள திருப்பதி பாலாஜி கோவிலிலும் இலவச தரிசனம் ரத்தாகிறது
ஏப்ரல்11ஆம்தேதிஇரவுடன்இலவசதரிசனம்முடிவடையும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. மேலும் நாளொன்றுக்கு300ரூபாய்டிக்கெட்30ஆயிரம்பேருக்குமட்டுமேவழங்கப்படும் என திருப்பதிதேவஸ்தானம்அறிவித்துள்ளது.
xxxx
காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை கட்டமைக்க மத்திய அரசு திட்டம்
அயோத்தியிலிருந்து, காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை, உத்தர பிரதேசத்தில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பாரதீ ய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட ம் என்ற இடத்துக்கு முதலில் சென்றார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலிருந்து, சித்ரகூட்டிற்கு ராமர் சென்ற பாதையை, ‘ராம் வன் காமன் மார்க்‘ என்ற பெயரில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.‘அயோத்தியிலிருந்து, 210 கி.மீ., துாரத்தில் உள்ள சித்ரகூட்டிற்கு, பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜெத்வாரா, ராஜாபூர் வழியாக தனிப்பாதை கட்டமைக்கப்பட உள்ளது‘ என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
ராமாயணத்தில், ராமபிரான், 14 ஆண்டுகள் காட்டில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பல பகுதிகள், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ளன. மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதல்வர்; காங்கிரசைச் சேர்ந்த பாஹெல் ஆகியோரும், தங்கள் மாநிலங்களில் ராமர் காட்டுக்கு சென்ற பாதையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
XXXX
மதுரை சித்திரை திருவிழா ரத்து
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாத திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்.
கடந்தாண்டு கொரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற இருந்த சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.
கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், “கொரோனா பரவல் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. எனவேதான் கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மதுரை சித்திரை திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டைப்போல் கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடைபெறும்.” என்றார்.
XXXX
‘கோயில் அடிமை நிறுத்து’ இயக்கம்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவு
‘கோயில் அடிமை நிறுத்து‘ இயக்கத்திற்கு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மனிதனை நல்வழிப்படுத்துவதில் முக்கிய கேந்திரங்களாக கோயில்கள் உள்ளன. கோயில் கட்டுவதற்கு பூமியை தேர்ந்தெடுத்தல் துவங்கி சூரியன், சந்திரன் இருக்கும் வரை அங்குள்ள விக்ரகங்கள் சக்தியுடன் விளங்க வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் மிகவும் அக்கறை செலுத்தியுள்ளனர்.
கோயில்களை முழுமையாக பராமரிக்க முடியாத நிலை தற்போது நிலவுகிறது. நம்முடைய பெருமைகளை காப்பாற்றுவதில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. காவிரி அன்னையை பாதுகாக்கவும், திருக்கோயில்களை பராமரிக்கவும் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தற்போது பெரும் முயற்சி எடுத்து வருகிறார். 3 கோடி மக்களை ஒருங்கிணைத்து இந்த திருக்கோயில் அடிமை நிறுத்து‘ இயக்கம் மூலம் விமோசனம் அளிக்க முயற்சிக்கிறார்.
தர்ம சிந்தனை உள்ள பெரியவர்கள், ஆன்மிக அறிஞர்கள், சாஸ்திரம் அறிந்தவர்கள், பக்தர்கள், பொதுமக்கள், ஆன்றோர், சான்றோர் பொறுப்பில் கோயில்கள் வர வேண்டும். எந்த நோக்கத்திற்காக கோயில்கள் உருவாக்கப்பட்டனவோ அவற்றை நவீன அறிவியல் உதவி கொண்டு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். திருப்பதி நிர்வாகம் போன்று கலை வளர்க்கும், கல்வி வழங்கும் நிலையங்களாக கோயில்கள் மாற வேண்டும்.
கோயில்களை பாதுகாக்க துவங்கப்படும் இந்த முயற்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்
xxxxx
கீதா பிரஸ்‘ தலைவர் காலமானார்
‘கீதா பிரஸ்‘ தலைவர் ராதேஷியாம் கெம்கா, 87வயதில் , காலமானார்.உத்தர பிரதேச மாநிலம் கோ ர க்பூரில், 1923 முதல் செயல்பட்டு வரும் அச்சகம், கீதா பிரஸ்.
பகவத் கீதை, ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் உள்ளிட்ட ஹிந்து மத புத்தகங்களை அச்சடித்து, குறைந்த விலையில், கீதா பிரஸ் விற்பனை செய்து வருகிறது. கீதா பிரஸ் தலைவர் ராதேஷியாம் கெம்கா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர் இறந்தார். அவரது மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் 38 ஆண்டுகளுக்கு கல்யாண் என்ற பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தி வந்தார் .
xxxx
இன்னும் ஒரு துயரச் செய்தி
சைவ உலகில் புகழ் பெற்ற சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி என் ராமச்ச ந்திரன் காலமானார்.வழக்கறிஞ ராக வாழவைத் துவங்கியபோதும் தமிழ் இலக்கிய சேவை மூலம் பிரபலமாகி டாக்டர் பட்டம் பெற்றார். சைவ சமயத் துறையில் பெரும் புலமை பெற்ற அவர் சைவ நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இரு மொழிகளிலும் சொற்பொழிவாற்றி தமிழுக்கும் சைவத்துக்கும் சேவை ஆற்றினார். பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் பாடல்கள் அப்பர் தேவாரம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். லண்டனுக்கு பல முறை விஜயம் செய்த அவர், இங்கு வாழும் தமிழ் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.
கீதா பிரஸ் உரிமையாளர் ராதேஷியாம் குடும்பத்துக்கும் டாக்டர் டி .என் ஆர் . குடும்பத்துக்கும் ஞான மயம் குழு, ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவிக்கின்றது
XXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Read by SUJATHA RENGANATHAN .
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
– Read by SUJATHA RENGANATHAN .
XXXX
Kashi Vishwanath Temple-Gyaana vaapi Mosque Complex Case
A Varanasi civil court on Thursday ordered the Archaeological Survey of India to ‘survey’ the Gyaana vaapi Mosque located next to the Kashi Vishwanath Temple after petitioners representing the temple claimed that the land on which the mosque stood actually belonged to them.
The petition was opposed by the Gyanvyapi Mosque management committee, Anjuman Intazamia Masazid,
The Varanasi court’s order upends the Places of Worship Act of 1991, which declared that “the religious character of a place of worship existing on August 15, 1947, shall continue to be the same as it existed on that date” and that “no suit, appeal or other proceeding with respect to … such matter shall lie on or after such commencement in any court, tribunal or other authority.”
The law was passed in the wake of the agitation underway at the time by Hindutva groups for various mosques – including the Babri Masjid in Ayodhya, the Gyanvapi mosque in Varanasi and the Idgah in Mathura – to be converted into temples.
The bench also dismissed the defendants’ argument that revenue records proved the mosque was not on disputed property.
In addition to a physical survey by the ASI, the court also ordered that a five-member committee be constituted comprising experts in archaeology. Two of the members should ideally be from the minority community, the court said.
The temple side’s petitioner, Vijay Shankar Rastogi, along with four others, claims that the Gyanvapi Mosque came up in 1669 after Mughal emperor Aurangzeb pulled down a portion of the 2,000-year-old Kashi Vishwanath Temple. Rastogi said he has filed the petition in his capacity as the next friend of the Ancient Idol of Swambhu Lord Vishweshwar.
Waqf Board to move Allahabad HC against verdict ordering ASI survey of Varanasi’s Gyanwapi mosque
Central Waqf Board chairperson Zufar Ahmad Farooqui said that the order was ‘questionable’ because no evidence has been produced before the court that suggests that there was a prior existing temple at the site of the mosque. He said on Thursday that it would challenge in the high court the Varanasi court order on the disputed premises claimed both by the Kashi Vishwanath temple and the Gyana waapi mosque.
XXXX
RAM SETU CASE
In the mean time another case also hit the headlines of news papers
The Supreme Court on Thursday directed that the plea seeking National Heritage Status for Ram Sethu be listed on April 26th before the “next Chief Justice of India NV RAMANA who is set to hold office of the Chief Justice of India with effect from 24th April. A three-judge Bench of CJI Bobde, Justice Bopanna and Justice Ramana will hear the case
xxxx
Siddhivinayak temple and Shirdi Sai Baba temple shut
Amid the rising COVID-19 cases in Maharashtra, the Shri Saibaba Sansthan Trust has decided to shut Sai Baba temple in Shirdi, Maharashtra from April 5, 2021. The temple will remain closed till April 30, 2021. Mumbai’s Siddhivinayak temple will also remain closed till further orders.
Along with the Sai temple, the Prasadalaya and the Bhakta Niwas will also be closed for devotees. During this time, the Puja recitation and all the programs in the temple will be done through the pandits who worship in the temple.
COVID-19 hospital and other hospitals started by the Trust will remain operational while the temple remains closed.
Xxx
Balaji Temple to stop free darshan from April 12
Tirumala Tirupati Devasthanams has decided to temporarily suspend issuance of free Sarva Darshan tokens to devotees under current booking system from 12th of this month. It has taken this decision following Covid-19 cases rising once again across the country as well as in the temple city.
In a statement on Wednesday, TTD made it clear that Slotted Sarva Darshan (SSD) tokens will be issued at Bhudevi complex and Vishnu Nivasam in Tirupati only till the evening of April 11.
“There has been a spurt in Coronavirus cases in Tirupati city again. Since thousands of devotees wait at Bhudevi complex and Vishnu Nivasam for SSD tokens, the prospect of Covid-19 cases multiplying is likely. Hence, the temple body has decided to temporarily suspend issuance of free darshan tokens,” a temple official explained.
Xxxx
Uttarakhand to free 51 Hindu Temples from Govt control
In a landmark decision, Uttarakhand Chief Minister Tirath Singh Rawat has announced to free 51 temples and shrines including Badrinath, Kedarnath, Yamunotri, and Gangotri from government control.
The newly appointed CM has overturned the decision taken by his predecessor Trivendra Singh Rawat.
Uttarakhand Chief Minister Tirath Singh Rawat has decided to free 51 Hindu Temples from government control.
The decision comes after intense protests against the decision by the state government to takeover the administration of the Temples earlier.
The BJP in Tamil Nadu had also promised that a separate board of saints and scholars will be appointed to manage the administration of the state should they come to power.
The current decision by the Uttarakhand CM came after a meeting with a Visva Hindu Parishad delegation.
Uttarakhand CM took this big decision on his birthday, the 9th of April.
xxxx
Travancore Devaswom Board to launch probe in death of Temple elephant
The Board in its meeting on Friday entrusted P Bijoy, TDB’s Vigilance SP, the task of probing the incident.
The Devaswom Board also suspended two mahouts, Pradeep and K A Ajeesh, pending enquiry after prima facia it was ascertained that there were lapses from their side. G Baiju, Deputy Devaswom Commissioner, Harippad, has been shifted from his post in connection with the elephant’s death on Thursday.
The animal of late had been having health ailments. Despite its delicate health, the TDB officials allowed the mahouts to parade the animals in a temple festival after the board’s veterinarian deemed it was fit for the ordeal. However, the Animal rights activists flayed the decision and pressurized the TDB to bring the elephant back before the temple festival.
Xxx
Muslim man’s library with 3,000 copies of Bhagavad Gita torched by miscreants in Karnataka
In a tragic incident, miscreants have allegedly set ablaze a public library run by a 62-year-old daily wage labourer that had a collection of 11,000 books including three thousand copies of Bhagavad Gita, in Mysuru on Friday.
Syed Isaaq had become a popular face among the residents of Rajiv Nagar and Shanti Nagar in the city as he took up a bold step of setting up a library giving free access to all the residents in the region for the last 10 years.
“At 4 am, a man residing next to the library informed me that there was a fire inside. When I rushed to the library which is just a stone’s throw away distance, I could only see them being reduced to ashes,” said Isaaq in teary eyes.
Every day, over 100-150 people would visit his library. Issaq would purchase over 17 newspapers including the ones in Kannada, English, Urdu and Tamil.
“The library had over 3,000 exquisite collections of Bhagavad Gita, over a 1,000 copies of Quran and Bible besides thousands of books of various genres which I sourced from donors,” he says.
Though he did not spend money from his pocket, he used to spend nearly Rs 6,000 for the maintenance of the library and on the purchase of newspapers.
Following this incident, Issaq approached the Udayagiri police station and lodged a complaint against the miscreants. Police have filed an FIR under the IPC section 436 and have launched an operation to nab the culprits.
However, the incident has not deterred Issaq. “I will not cow down. I will rebuild the library from the scratch”.
“I was deprived of education and I want to ensure that others should not face my plight. I want people to learn, read and speak Kannada and will rebuild it again,” he said.
Xxx
Gita Press president Radheshyam Khemka passes away at 87
The president of Gita Press, Radheshyam Khemka, passed away in Varanasi following a brief illness, his family members said last Sunday.
He was 87. Khemka died last week Saturday afternoon and his last rites were performed at the Harishchandra Ghat, they said.
He was under treatment at a private hospital in Ravindrapuri.
Prime Minister Narendra Modi condoled the death of Khemka, noting he remained active in various social services throughout his life.
Modi noted that Khemka took Sanatan literature to the masses.
In Gorakhpur, a prayer meeting was organised at the Gita Press and all its employees attended it, the press’ product manager Lal Mani Tripathi said.
Khemka for 38 years was the editor of the prominent ‘Kalyan’ magazine printed at the press.
His last edited the magazine’s April 2021 issue.
In total, Khemka has edited 38 yearly special issues of the magazine and 460 normal issues of ‘Kalyan’, according to the press’ officials.
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath condoled the demise of Khemka.
Xxxx
Dr T N R is no more
Gnanamayam team regrets to announce the demise of Sekkizaar Adippodi Dr T N Ramachandran who was a great Tamil scholar. He was an authority on Tamil Saivite literature. He has edited lot of Tamil books and translated Bharati poems, Pattinathar verses and Thevaram hymns into English. Though he was a lawyer by profession he was awarded doctorate for his contribution to Tamil language. He has visited London many times and addressed the gatherings here in Sri Lankan and South Indian associations.
xxxxx
THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –
ஸ்ரீ மஹா பெரியவாள் சரணம்! ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சப்த மோக்ஷபுரிகளில் நடு நாயகமாகத் திகழ்வதும், பஞ்ச பூத தலங்களில் பிருதிவி தலமாகத் திகழ்வதும், சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்வதும், 108 வைஷ்ணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகத் திகழ்வதுமான காஞ்சீபுரம் ஆகும். ஏகாம்பரேஸ்வரர் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளிட்ட ஏராளமான கோவில்களைக் கொண்டுள்ள இந்த நகரம், சைவ வைஷ்ணவ ஒற்றுமை காட்டும் சிறந்த தலமும் ஆகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள இது சென்னையிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு, நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சி என்ற சம்ஸ்கிருத ஸ்லோகம், நகரங்களில் சிறந்தது காஞ்சீபுரம் என்று கூறுகிறது. காஞ்சீபுரம் என்றவுடனேயே நம் கண் முன் தோன்றுவது காமாக்ஷி அம்மன் திருவுருவமே! 51 சக்தி பீடங்களில் பிரதானமான காமராஜ பீடம் என்றும் ஸ்ரீகாமகோடி பீடம் என்றும் இது அழைக்கப்படுகிறது.
காமங்களை அதாவது விருப்பங்களை பூர்த்தி செய்யும் அக்ஷி – கண்களை உடையவள் என்ற பொருள் பட காமாக்ஷி என்று துதிக்கப் பெறும் இந்த அன்னையைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உள்ளன.
ஸ்ரீகாமாக்ஷி தேவி தன் வலது கண்ணால் பிரம்மாவையும் இடது கண்ணால் மஹா விஷ்ணுவையும் கடாக்ஷித்து அருளி ப்ரம்மாவிற்கு ‘கா’ என்று கூறப்படும் சரஸ்வதியையும் விஷ்ணுவிற்கு ‘மா’ என்று கூறப்படும் லக்ஷ்மியையும் தன் கண்களிலிருந்து கிடைக்கும்படி அருளிச் செய்ததால் காமாக்ஷி என்ற பெயரைப் பெற்றாள் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.காமாக்ஷி தேவி காஞ்சியில் பிலாகாச ரூபத்திலும், ஸ்ரீசக்ர வடிவத்திலும் சதுர்புஜங்களோடுகாயத்ரி மண்டபத்தில் கொலுவீற்றிருக்கிறாள். இங்கு அன்னை பராசக்தி, காமாக்ஷியாக தோன்றிய வரலாற்றை புராணம் நன்கு விவரிக்கிறது.
முன்னொரு காலத்தில் பந்தகாசுரன் என்னும் அசுரன் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து வரங்கள் பல பெற்று தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் துன்பங்களைத் தொடர்ந்து செய்து வந்தான். எல்லையற்ற துன்பம் அனுபவித்த அனைவரும் சிவனிடம் தஞ்சம் புகுந்து தம்மைக் காத்தருளுமாறு வேண்ட, பிரம்மாவிடமிருந்து பல வரங்கள் பெற்ற இவனிடமிருந்து அனைவரையும் காக்கும் வல்லமை கொண்டவள் பராசக்தியே, என்பதைநன்கு உணர்ந்த சிவபிரான், தேவர்களை வடக்கே கோமுகம் என்ற இடத்தில் உள்ள பிலத்தினுள் நுழைந்து தெற்கே காஞ்சிபுரத்தில் உள்ள பிலத்தின் வழியே வெளி வந்து, அன்னையை வழிபடுவதே அவர்கள் துன்பத்தைப் போக்கும் என்று கூறி அருள் பாலித்தார். அதன்படியே தேவர்கள் வடக்கே உள்ள பிலத்தினுள் நுழைந்து, தெற்கே காஞ்சியில், பில துவாரம் வழியே வெளி வந்தனர். அங்கே காமகோடி பீடத்தின் அருகே உள்ள ஒரு செண்பக மரத்தில், கிளி வடிவம் கொண்டு அன்னையை வழிபட ஆரம்பித்தனர்.
தேவர்களின் துன்பத்தை அறிந்த தேவி அவர்களுக்கு அருள் புரிய மனம் கொண்டு மிகுந்த கோபத்துடன் பிலத்திலிருந்து வெளிப்பட்டாள். கைலாயத்தில் பந்தகாசுரன் நித்திரை செய்வதை அறிந்த தேவி, அவனது கண்டத்தில் ஒரு பாதத்தையும் மார்பில் மற்றொரு பாதத்தையும் வைத்து, 18 புஜங்களுடன் 18 ஆயுதங்களைத் தரித்து, பைரவ ரூபிணியாகத் தோன்றி, அவனது தலையை அறுத்து, சிகையைப் பிடித்து, ஐந்து வயது கன்னிகையாகத் தோன்றி, காமகோடி பீடமாகிய பிலத் துவாரத்தை வந்து அடைந்தாள். கன்னிகை கையில் இருந்த அசுரனின் தலையைக் கண்ட தேவர்கள் பயந்து மயங்கி வீழ்ந்தனர். உடனே அவர்கள் பயத்தைப் போக்கும் வண்ணம் அதி சுந்தர திருமேனியுடன், சர்வாலங்கார பூஷிதையாக, பட்டாடை உடுத்திய சிறு பெண் போல, தேவி தேவர்களுக்குக் காட்சி அளித்தாள். தேவர்கள் மகிழ்ந்து தேவியை வணங்கிக் கொண்டாடினர். தேவி அவர்களிடம் ஒரு பெரும் பள்ளம் தோண்டி பந்தகனைப் புதைத்து ஜெயஸ்தம்பத்தை நாட்டுமாறு பணித்தாள். இன்னும் இதன் விரிவான வரலாற்றைப் புராணம் தொடர்கிறது.
காமாக்ஷியின் நான்கு கரங்களில் ஒன்றில் கரும்பினால் ஆன வில்லும் இன்னொன்றில் புஷ்பங்களால ஆன அம்புகளும் உண்டு. மீதி இரு கரங்களில் பாசமும் அங்குசமும் உண்டு. காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில் அம்பிகைக்குத் தனி சந்நிதி கிடையாது. ஏனெனில் அங்கு இருக்கத் தக்க சக்திகள் அனைத்தும் காமாக்ஷியிடம் கலந்திருப்பதே காரணம் ஆகும். ஸ்ரீ சங்கர பகவத்பாதர் இங்கு ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்து ஸ்ரீசக்ர வடிவத்தில் ஆலயத்தை புதுப்பித்தார். அங்கு சர்வக்ஞ பீடத்தை ஸ்தாபித்து, பீடாரோஹணம் செய்தார். தன் பணியை முடித்த அவர் காமாக்ஷியின் சந்நிதியில் விதேஹ கைவல்யம் அடைந்தார். ஆதி சங்கரரின் மறு அவதாரமாகத் தோன்றி 68வது பீடாதிபதியாக இருந்து அருள் பாலித்த மஹா பெரியவாளும் காஞ்சிபுரத்தையே தன் அருளாட்சியின் தலை நகரமாகக் கொண்டிருந்தது குறிப்பிடத் தகுந்தது. மஹா பெரியவாளின் அதிஷ்டானமும் காஞ்சியில் உள்ளது.
இங்கு ராஜகோபுரத்தின் வழியே நுழைந்து மதிலைக் கடந்து சென்றதும் உயர்ந்த த்வஜ ஸ்தம்பமும் பலிபீடமும் உள்ளன. உள்ளே சுக்ரவார மண்டபம் உள்ளது. அதை அடுத்து விக்ன நிவாரண கணபதியையும் துர்வாச முனிவரையும் தரிசிக்கலாம். 24 காயத்ரி அக்ஷரங்களை அனுசரித்து இங்கு 24 தூண்களைக் கொண்டுள்ள காயத்ரி மண்டபத்தில், கொலு வீற்றிருக்கும் ஸ்ரீ காமாக்ஷி அம்மனை தரிசித்தோர், இந்தப் பிறவி எடுத்த பெரும் பயனை அடைந்தவர் ஆவர். மூல காமாக்ஷிக்கு வலப்புறம் தவக் கோலத்தில், தபஸ் காமாக்ஷி காட்சி தருகிறாள்.
கச்சி என்று இலக்கியம் புகழும் இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மொத்தம் 17 பதிகங்களையும் அருணகிரிநாதர் 44 பாடல்களையும் பாடி அருளியுள்ளனர். ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்து அருளியுள்ள தலமும் இதுவே தான்! காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வழிபட்டு வரும் அன்னை காமாக்ஷி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். காமாக்ஷி தேவி சரணம், ஆதி சங்கர பகவத்பாதர் சரணம்.மஹா பெரியவாள் சரணம் குரு ப்ரஹ்மா குரு விஷ்ணுர் குருர் தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம: திருஞானசம்பந்தர் அருள் வாக்கு:
மதி ஆர் கச்சி, நதி ஏகம்பம், விதியால் ஏத்தப் பதி ஆவாரே! நன்றி, வணக்கம்!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது தொடர்கிறது.
புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 5 கட்டுரை எண் 9382 வெளியான தேதி 15-3-2021
யுதிஷ்டிர மன்னவனே! விதர்மம், பரதர்மம், ஆபாஸ தர்மம், உபமா தர்மம், சல தர்மம் ஆகிய இந்த ஐந்து (அ)தர்மங்களும் அதர்மம் ஆகிற மரத்தின் கிளைகளாகும். தர்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவன் இவற்றை அதர்மங்களைப் போலத் துறக்க வேண்டும்.
எதைத் தர்மம் என்கிற புத்தியுடன் செய்தாலும் தன் வர்ணாசிரம தர்மங்களுக்குத் தடை நேருமோ அதை விதர்மம் என்பார்கள்.
க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தர்மத்தை, பிராமணர்கள் செய்வார்களாயின் அது அவர்களுக்குப் பர தர்மம் ஆகும்.
வேதத்திற்கு இணங்காத ஆகமங்களில் சொல்லப்பட்ட பாஷண்ட தர்மம் உபமா தர்மம் ஆகும். பிறரை வஞ்சிப்பதற்காகச் செய்யும் தர்மமும் உபமா தர்மமே.
சாஸ்திரங்களில் உள்ள சப்தங்களுக்கு வேறு பொருள் கூறிச் செய்யும் தர்மம் சல தர்மம் ஆகும். செய்தோம் என்கிற பேருக்குச் செய்யும் தர்மமும் சல தர்மமே. (எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால்) கோ தானம் செய்தோம் என்கிற பேரில் சாகக் கிடக்கும் பசுவைத் தானம் செய்தல் ஆகும்.
தம்முடைய இஷ்டப்படி நான்கு ஆசிரமங்களிலும் சேராமல் தனியே ஏற்படுத்திக் கொள்கிற அவதூதாஸ்ரமம் முதலியன ஆபாஸ தர்மமாம்.
இவற்றை விலக்க வேண்டும் என்ற இந்தப் பகுதி ஸ்ரீமத் பாகவதத்தில் ஸப்தம ஸ்கந்தத்தில் 15ஆம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.
*
19. பிரம்மத்தின் இலக்கணம்!
தேவியானவள் பர்வதராஜனை நோக்கிக் கூறுவது:-
இனி பிரம்மத்தின் இலக்கணத்தைக் கேட்பாயாக! இந்த பரமாத்மாவுக்கு ஜனனம், மரணம் இல்லை. கர்ம ஜனனமும் கிடையாது.
இது நித்யமானது. சாஸ்வதமானது. அனாதி.
சரீரம் இம்சிக்கப்பட்டாலும் இது இம்சிக்கப்படுவதில்லை.
எவன் ஒருவன் இந்த ஆத்மா இம்சைப்படுவதாக நினைக்கின்றானோ, எவன் ஒருவன் இது இம்சிக்கப்பட்டதாக நினைக்கின்றானோ இந்த இரண்டு பேரும் தெரிந்தவர்கள் அல்லர்.
இது ஒருவரைத் துன்பம் செய்வதுமில்லை;ஒருவனால் துன்பப்படுவதும் இல்லை.
அணுவுக்கு அணுவாயும், மஹத்துக்கு மஹத்தாயும் இருக்கின்ற இந்த பரமாத்மா, சகல பிராணிகளுடைய இதய குகையில் வைக்கப்பட்டிருக்கிறது.
அத்தன்மையதான இந்த பரமாத்மாவை துக்கரஹிதனாக இருக்கின்ற ஜீவாத்மா ஆனவன் அந்த பிரம்மத்தின் பிரசாதத்தினாலே, அப்பரமாத்மாவினுடைய மஹிமைகளைத் தானும் உடையவனாகின்றான்.
இந்த ஆத்மாவை ரதமுடையவனாக அறிவாய்!
(எப்படி எனில்) சரீரம் ரதமாகவும், சாரதி புத்தியாகவும், இந்திரியங்கள் குதிரைகளாகவும், மனம் கடிவாளமாகவும், விஷயங்கள் சஞ்சரிக்கும் இடமாகவும் கொண்டு இந்திரியங்களோடும் மனதோடும் கூடி விஷயானுபவங்களை ஆன்மா அனுபவிக்கிறதாகச் சொல்லுகின்றபடியால் அந்த விதமாகவே அறியக் கடவாய்.
இந்தப் பகுதி ஸ்ரீமத் தேவி பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் 34ஆம் அத்தியாயத்தில் வருகிறது.
*
20. கன்னியின் கைவளை தந்த உபதேசம்!
ஒரு பிராமணன் யது மன்னனுக்குக் கூறுவதில் ஒரு பகுதி இது:-
“ஒரு சமயம் பெண் ஒருத்தி தாய் தந்தை முதலியோர் வெளியில் சென்றிருந்த சமயம் தன்னை மணம் பேசி முடிக்கும் பொருட்டுத் தன் வீட்டிற்குச் சிலர் வந்திருப்பதைக் கண்டு தானே அவர்களை வரவேற்று பூஜித்தாள். அந்தப் பெண் வந்தவர்களின் உணவுக்காக சாலி என்னும் தானியத்தை தான் ஒருத்தியாகவே குத்திக் கொண்டிருக்கையில் அவள் கையில் இருந்த சங்கு வளையல்கள் பேரொலி செய்தன. அப்பொழுது கூரிய புத்தியை உடைய அந்தப் பெண் அப்படி நெல்லைக் குத்துவது கீழான செயல் என்றும், இது வந்தவர்களுக்குத் தெரியுமாயின், “ஓ! இவள் தானே நெல்லைக் குத்துகிறாளே! இவளுக்கு உறவினர் யாரும் இல்லையோ! இவள் ஏழை தான்!” என்று நினைப்பார்கள் என்றும் ஆகையால் அந்தச் செயல் தனக்குத் தகாது என்றும் நினைத்து வெட்கமடைந்து தன் கைகளில் இருந்த வளையல்களை ஒவ்வொன்றாக உடைத்துக் கொண்டு வந்து, இரண்டிரண்டாக வைத்துக் கொண்டாள். அப்பால் மறுபடியும் நெல்லைக் குத்த ஆரம்பித்தாள். அவ்விரண்டு வளைகளிலிருந்து மீண்டும் ஒலி எழும்பலாயிற்று. பிறகு அந்த இரண்டு வளையல்களில் ஒன்றை உடைத்து ஒரே ஒரு வளையலை மட்டும் இரு கரங்களில் அணிந்தாள். இப்போது சப்தம் எழவில்லை.
லோக தத்துவங்களை அறிய வேண்டும் என்னும் கருத்துடன் நான் பல்வேறு இடங்களில் சுற்றிக் கொண்டிருக்கையில் அந்தக் கன்னியை நான் பார்த்து அவளிடமிருந்து இந்த உபதேசத்தைக் கற்றுக் கொண்டேன். இதில் என்ன
உபதேசம் என்றால், சொல்கிறேன், கேள்!
ஓரிடத்தில் பலர் சேர்வார்களாயின் கலகம் உண்டாகும். இருவர் சேர்ந்தாலும் கூட ஒருவருக்கொருவர் பேச்சு நேரிடும். ஆகையால் கலகமும் பேச்சும் நேராதிருக்கும் பொருட்டு, கன்னியின் கைவளை போல் தனியனாகவே திரிய வேண்டும். கன்னியின் கைவளையிலிருந்து இந்த விஷயத்தை நான் தெரிந்து கொண்டேன்.”
இந்தப் பகுதி ஸ்ரீமத் பாகவதத்தில் 11ஆம் ஸ்கந்தத்தில் 9ஆம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.