May 2020 London Swaminathan Articles, Index-90 (Post No.9983)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9983

Date uploaded in London – 16 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9900 PLUS POSTS.

May2020 Index 90

Don’t Guess Everything! You may be Wrong,7907;May 1,2020

Hindus invented Coins: It is in Rigveda and Panini-1;7914;2/5

Panini’s Amazing information on Coins,7919;3/5

Proof for Panini’s knowledge of Tamil Nadu 2700 years ago,

7923;4/5

Agastya’s Travel to Karaitivu in Sri Lanka from Kasi, 7927;5/5

Tamil information from Valmiki Ramayana,7931;6/5

Panini s Time: When did he live? 7934;7/5

Swami s crossword 852020;7941

Who will be born as a rat or a dog or an Ass? Manu s list,7942;8/5

King and the Saint,7947;9/5

Brahmin, who acted as a Ghostbuster 7952;0/5

Swami’s Crossword 1052020;7953

Hindu Music in Panini s Grammar Book,7959;11/5

Swami’s crossword 1252020;7964

Strange Hindu Haircut Punishments,7969;13/5

Tamil Dog is the first one in the world to get a Statue,7976;14/5

How did Churchill escape Death in the World War II, 7982;15/5

Swami’s crossword 1652020;7988

Secret of Vedas:Aurobindo,7993;17/5

Aurobindo s Quotations on the Vedas and the Upanishads,8000;18/5

Musical Saint Aanaya Nayanar,8005;19/5

Swami s crossword 2052020;8012

Panini knew Greek and Hebrew?,801920/5

Tamil- Sanskrit Relationship- Part 1 by PSS Shastri, 8017;21/5

Tamil- Sanskrit………..part 2;8023;22/5

Bishop Caldwell is wrong

Yavanas in 3500 BCE in India, Yavana Munda in Panini, 8027;23/5

Tamil Sanskrit………….3;23/5

Tamil Sanskrit………….4;8035;24/5

Tamil Sanskrit…………5;8041; 25/5

More blunders of Bishop Caldwell, 25/5

Rig Vedic Sanskrit words in Sangam Tamil literature ,part 6; 8047;26/5

Bomb shell thrown at two key Tamil words, Tamil Sanskrit words 6,8048;26/5

Rig Vedic Sanskrit words…8054;27/5

Tamil Sanskrit….7; post 8055;27/5

Tamil Sanskrit…….8;28/5

Rig Sanskrit Vedic words 3; 8063;28/5

Love is the magnet from which god cannot escape,8066;29/5

One soldier acted as severally others, and won the battle,30/5

Rig Vedic words,,,,,,,,,8079:31 May 2020

xxx

TAMIL ARTICLES PUBLISHED IN MAY 2020

நட்சத்திரங்களில் எது முதல் நட்சத்திரம்?7908,மே 1, 2020

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி- த .கு.போ.152020,7910

பாணினி புஸ்தகத்தில் நாணய மர்மம், 7913,2/5

நிஷ்கா தங்கள் காசுகள் முதல் அலெக்ஸாண்டர்

நாணயம் வரை ,7918, 3/5

பாணினிக்கு 2700 ஆண்டுக்கு முன்னரே தமிழ்நாடு

தெரியும், 7922, 4/5

காசி முதல் காரைத் தீவு வரை  அகஸ்தியர் பயணம் – மிகப்

பழைய நூல் தகவல், 7926, ,5/5

வால்மீகி ராமாயணத்தில் தமிழர்கள் ; 3000 ஆண்டு தமிழ்

வரலாறு, 7930, 6/5

எந்த நூல், என்ன காலம்? அறிஞர்கள் கருத்து ,7935, 7/5

த .கு.போ.752020,7937

ப்ரோமின் மூலகம் பற்றிய சுவையான செய்திகள், 7940, 8/5

த .கு.போ.952020, 7946

த .கு.போ.1152020, 7958

பாம்பு, பல்லி , பன்றி , நாய், கழுதையாக யார் பிறப்பர்?

மநு நூல் தரும் பட்டியல் 7945, 9/5, மநு 51

இரண்டு துரும்பு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7950,10/5

இரண்டு எறும்பு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7956,11/5

கரும்பு பற்றிய  இரண்டு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7962,12/5

ஆசை  பற்றிய  இரண்டு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7967,13/5

சங்க இலக்கியத்தில் சம்ஸ்க்ருத வாத்யங்கள் , 7970, 13/5

சிந்து சமவெளியில் சிரைத்த மீசை , 7974, 14/5

யானை  பற்றிய  இரண்டு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7975,14/5

பானை  பற்றிய  இரண்டு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7980,15/5

பொய்கை ஆழ்வாரின் அற்புதச் சொல்வீச்சு, 7979,15/5

த .கு.போ.1652020, 7987

தமிழில் ரிக்வேதக் கவிதைகள் -1, 7991,17/5

அரிசி பற்றிய  இரண்டு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7994,17/5

பானை  பற்றிய  இரண்டு பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7980,15/5

அதர்வ வேத அகநானூறு அபூர்வ ஒற்றுமை , 7997, 18/5

பாம்பு பற்றிய 3 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,7999,18/5

தமிழில் ரிக்வேதக் கவிதைகள் -2,8003, 19/5

பாணினி- பதஞ்சலி சொல்லும் மின்னல் ரஹசியம்,

கொத்தமல்லி அதிசயம், 8008, 20/5

மீன்  பற்றிய 3 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8011,20/5

தேன்  பற்றிய 3 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8018,21/5

தொல்காப்பியம் பற்றி பலர் கருத்துக்கள், 8015,21/5

யவன முண்டா : பாணினி தகவல் ,8021, 22/5

கத்தரிக்காய்  பற்றிய 3 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8024,22/5

பூசணிக்காய்   பற்றிய 3 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8029,23/5

வாழைப்பழம்  :3 பழமொழிகள் கண்டுபிடியுங்கள்,8036,24/5

பலாப்பழம் : 3 பழமொழிகள் கண்டுபிடியுங்கள்,8042,25/5

மாம்பழம், மாங்காய்  : 3  பழமொழிகள் கண்டுபிடியுங்கள்,8049, 26/5

இரத்தம் உறிஞ்சும் அட்டை வைத்தியம் , 8033, 24/5

நாய்கள்  : 4 பழமொழிகள்  கண்டுபிடியுங்கள்,8056, 27/5

குறுந்தொகைப் பாடலில் ஒரு கதை, ஒரு புதிர், 8045, 26/5

குட்டிக்கதை கழுதைப் பிரம்மச்சாரி, 8052, 27/5

மயில்: 4 பழமொழிகள்  கண்டுபிடியுங்கள்,8061, 28/5

பனைமரம்   : 4 பழமொழிகள்  கண்டுபிடியுங்கள்,8068, 29/5

தென்னை மரம் பற்றிய  3 பழமொழிகள்  கண்டுபிடியுங்கள்,8073, 30/5

கிளியாகப் பிறந்த புத்தர் சொன்ன நீதி, 8059, 28/5

வளமான வாழ்வு பற்றி 30 பழமொழிகள் ,8071, 30/5

ஒரு கதை- பழமும் தின்று கொட்டையும் போட்டது யார் ?8077, 8077, மே 31, 2020

வேப்ப  மரம் பற்றிய  4 பழமொழிகள்  கண்டுபிடியுங்கள்,8080, 31/5/2020

—subham—

tags – Swaminathan, Index 90, May 2020, articles, 

இந்துக்களைப் புகழ்ந்த பிரெஞ்சு நாவல் ஆசிரியர் ரோமைன் ரோலண்ட் (Post. 9982)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9982

Date uploaded in London – 16 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நோபல் பரிசு வென்றவர். பிரெஞ்ச் மொழி எழுத்தாளர். நாவல்களையும், நாடகங்களையும்  கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர். காந்திஜியின் நண்பர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சரைப் போற்றி புஸ்தகம் எழுதியவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோமைன் ரோலண்ட் ROMAIN ROLLAND (பிரெஞ்ச் மொழியில் இதை உச்சரிக்கும் போது ரொமான் ரோலான்  என்ற ஒலியே வரும்); பிரான்ஸ் நாட்டின் அறிஞர்; ரஷ்யாவின் நண்பர் .

1915ம் ஆண்டில் ரொமான் லோனாவுக்கு / ரோமைன் ரோலண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இவர் பலருடைய வாழ்க்கைச் சரிதங்களையும் இயற்றினார். அவருடைய நாவல்களின் தனிச் சிறப்பு என்னவென்றால் கதாநாயகனை பிறப்பு முதல் இறப்பு வரை — தொட்டில் முதல் சுடுகாடு வரை – காட்டுவதாகும்

பிரான்சில், க்ளமெசி CLAMECY  என்ற ஊரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். பாரிசிலும் ரோம் நகரிலும் பயின்ற அவருக்கு 1895ல் டாக்டர் பட்டம் Ph.D. கிடைத்தது. பாரிஸ் நகரில் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் ECOLE NORMALE 29 வயதிலேயே கலைகளின் வரலாறு கற்பிக்கும் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் புகழ்பெற்ற சார்போன் SORBONNE பல்கலைக் கழகத்தில் வேலை கிடைத்தது.

வேலையில் இருக்கும்போதே நாடகங்களை எழுதத்  துவங்கினார் . பிரெஞ்சுப் புரட்சி பற்றி அவரெழுதிய நாடகங்கள் 1930ம் ஆண்டுகளில் புகழ்க் கொடி நாட்டின.

ரோமைன் ரோலண்ட் எழுதிய புகழ்பெற்ற புஸ்தகம் பல தொகுதிகளாக வெளிவந்த ஷான் கிறிஸ்டோப் JEAN CHRISTOPHE  ஆகும். அவர் ஷான் JEAN என்ற பெயரில் ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கினார். அந்த கதாபாத்திரம் ஒரு இசை மேதை மட்டும் அல்ல; அறநெறி வாழ்க்கை வாழும் ஒரு புனிதரும் கூட. அந்த நாவலுக்கு வரவேற்பும் எதிர்தரப்பு விமர்சனங்களும் வந்தன . அதே நேரத்தில் அவர் புகழ்பெற்ற இசை உலக மேதை பீதோவன் BEETHOVEN போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதி பதிப்பித்ததார்.

‘புதியதோர் உலகம் செய்வோம்; கெட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்’ என்ற கருத்துப்பட ABOVE THE BATTLE ‘அபவ் தி பேட்டில்’ என்ற நூலை எழுதினார். இதற்கு முதல் உலகப் போர் காலத்தில் நல்ல ஆதரவு கிடைத்தது. ரோமைன் ரோலண்டை சமாதான தூதுவராக அனைவரும் கண்டனர். ஆனால் சொந்த நாடான பிரான்சில் அது எதிர்ப்புப் புயலையும் தோற்றுவித்தது.

பின்னர் மீண்டும் பல தொகுதிகளாக வெளிவரும் THE ENCHANTED SOUL ‘தி என்சான்டட் சோல்’ என்ற நாவலை எழுதினார். இது கம்யூனிச சித்ததந்தத்தின் மீது அதிக ஆர்வம்/ கவர்ச்சி  ஏற்படுவது பற்றிய நாவல். கதையில் ஒரு கதாநாயகி சுதந்திர சிந்தனை படைத்த பெண்மணி. அவருக்கு சொத்து உடைமைகளை வைத்துக் கொள்வதன் மீது வெறுப்பு வருகிறது.

இதற்குப் பின்னர் அவர் ஹிட்லர் தலைமையில் உருவான பாசிஸ கொள்கைகளை எதிர்த்தார். இரண்டாவது யுத்த காலத்தில் பாசிசத்தை எதிர்த்து எழுதினார். இவ்வாறு சமாதான ஆதரவு, பாசிஸ எதிர்ப்பு, ஆன்மீகத்துக்கு ஆதரவு என்ற பலவகை முகங்கள் அவருக்கு இருந்தன. இந்து  மதத்தின் பேரில் பெரு மதிப்பு கொண்டிருந்த அவர் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் , அவருடைய சீடரான சுவாமி விவேகானந்தர்  மற்றும் மஹாத்மா காந்தி பற்றி நூல்களையும் கட்டுரைகளையும் எழுதினார். இதனால் அவருடைய பெயரும் புகழும் இந்தியாவிலும் பரவியது .

பிறந்த தேதி – ஜனவரி 29, 1866

இறந்த தேதி–டிசம்பர் 30, 1944

வாழ்ந்த ஆண்டுகள் – 78

எழுதிய நூல்கள் (நாவல் , நாடகம், வாழ்க்கை வரலாறு)

1900- DANTON

1902 – THE FORTEENTH OF JULY

1902 – LIFE OF BEETHOVEN

1904 – LIFE OF MICHELANGELO

1904- 1912 – JEAN CHRISTOPHE ; 10 VOLS

1910- HANDEL

1911 – LIFE OF TOLSTOY

1914-1919 – JOURNAL OF THE WAR YEARS

1915- ABOVE THE BATTLE

1922- 1933 – THE ENCHANTED SOUL; 6 VOLS

1924 – MAHATMA GANDHI

1929 – LIFE OF  RAMAKRISHNA; ESSAYS

1930-  LIFE OF VIVEKANANDA; ESSAYS

–SUBHAM–

 tags -இந்து, பிரெஞ்சு, நாவல் ஆசிரியர் , ரோமைன் ரோலண்ட் , Romain Rolland,

ஆலயம் அறிவோம்! வைஷ்ணவ தேவி திருத்தலம்! (Post No.9981)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9981

Date uploaded in London – –   16 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 15-8-2021 அன்று ஒளிபரப்பான உரை!

வைஷ்ணவ தேவி திருத்தலம்!

சங்க சக்ர கதா தத்தே விஷ்ணுமாதா ததாரிஹா |

விஷ்ணுரூபாதவா தேவீ  வைஷ்ணவீ  தேன கீயதே ||

விஷ்ணுவைப் போல சங்க, சக்ர, கதைகளைத் தரிப்பதாலும், அவருக்கு ஜனனியாக இருப்பதாலும், அவரைப் போலவே எதிரிகளை சம்ஹாரம் செய்வதாலும் வைஷ்ணவீ – விஷ்ணுவைச் சேர்ந்தவள் – என்ற பெயர் அம்பிகைக்கு ஏற்பட்டிருக்கிறது!

 ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சக்தி தலங்களுள் தலையாய ஒன்றான வைஷ்ணவ தேவி திருத்தலமாகும். இந்தத் தலமானது திரிகூட மலையில் 5200 அடி உயரத்தில் கட்ரா நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஜம்மு நகரிலிருந்து 42 கிலோமீட்டரில் உள்ளது இது. சுமார் 14 கிலோமீட்டர் மலையில் நடைப்பயணமாக இயற்கைச் சூழலில் சென்று ஆலயத்தை அடையலாம். மலை மீது நடக்க முடியாதவர்கள் குதிரையை அமர்த்திக் கொண்டு செல்லலாம்.திரிகூட மலையைப் பற்றி ரிக்வேதம் கூறுவதால் இது மிகப் பழங்காலத்திலிருந்தே இருந்து வந்த தலம் என்பதை அறியலாம்.

மலையின் உச்சியில் உள்ள குகைக் கோவிலில் முப்பெரும் தேவிகளான லக்ஷ்மி, சரஸ்வதி, காளி ஆகியோர் குடி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர். குகை 30 மீட்டர் நீளத்தையும் ஒன்றரை மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளது. குகையின் முடிவில் மூன்று பாறைகள் ஸ்வயம்புவாகத் தோன்றி சூலத்தின் மூன்று முனைகள் போல அமைந்துள்ளன. இப்பாறைகளே தேவியரின் அருவ வடிவம்; இவையே மாதா ராணியாக வழிபடப்பட்டு வருகிறது.

வைஷ்ணவி கோவிலைப் பற்றிய புராதன வரலாறு உண்டு. திரேதா யுகத்தில் பேய்களின் கொடுங்கோன்மை உச்சகட்டத்தை அடைந்த சமயம் லக்ஷ்மி, சரஸ்வதி, காளி ஆகிய முப்பெரும் தேவியரும் ஒளிப்பிழம்பான வைஷ்ணவி தேவியை திரிகூட உச்சி மலையில் உருவாக்கினர். பூமியை வாட்டிய அனைத்துப் பேய்களையும் வைஷ்ணவி தேவி மாய்த்தார். பின்னர் அவர் பூமியில் இருக்கத் திருவுளம் கொண்டு பாரதத்தின் தென்பாகத்தில் வாழ்ந்த ரத்னாகர் சாகர் – சம்ரிதி தேவி ஆகிய தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். ரத்னாகர் அவருக்கு வைஷ்ணவி என்ற திருநாமத்தைச் சூட்டினார். ஒன்பது வயதில் அவர் ராமரை வழிபடலானார். அவர் முன் தோன்றிய ராமர் இந்த அவதாரத்தில் ஏக பத்தினி விரதனாக இருக்கும் தான், அடுத்து வரும் கல்கி அவதாரத்தில் அவரை மணப்பதாகக் கூறி அருளினார்.

வைஷ்ணவி தேவி ராமரின் வெற்றிக்காக திரிகூட மலையில் உள்ள குகையில் நவராத்திரி ஒன்பது நாட்களும் தவம் மேற்கொண்டார். ராமர் வெற்றி பெற்றார். அதை நினைவு கூரும் வண்ணம்  இந்த நாட்களில் ராமாயணம் படிக்கும் வழக்கம் இன்றும் நீடிக்கிறது. அவர் திரிகுடா என அழைக்கப் படலானார்.                                         

இன்னொரு வரலாறும் உண்டு. கட்ராவிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹன்சாலி என்ற கிராமத்தில்  ஸ்ரீதரர் என்றொரு பக்தர் வசித்து வந்தார். அவர் முன் வைஷ்ணவி தேவி மிக்க அழகு வாய்ந்த பெண்ணாகத் தோன்றினார். அவர்  ஸ்ரீதரிடம் பக்தர்களுக்கு விருந்து படைக்கும் பண்டாரா என்ற ஒரு விருந்தை அளிக்குமாறு வேண்டிக் கொண்டார். அதற்கு இணங்கிய  ஸ்ரீதர் அனைவரையும் விருந்துக்கு அழைத்தார். அருகிலுள்ள இடங்களில் வசிக்கும் மக்களையும் விருந்துக்கு அழைக்கப் புறப்பட்டார். ‘பைரவ் நாத்’ என்ற பெயர் கொண்ட சுயநலம் வாய்ந்த அரக்கனையும் அவர் விருந்திற்கு அழைத்தார். பைரவ்நாத் ஸ்ரீதரிடம் விருந்து நன்றாக நடக்குமா என்று கேட்க ஸ்ரீதர் மிகுந்த கவலையுற்றார். ஆனால் அந்தப் பெண் மீண்டும் தோன்றி விருந்து அழகுற நடக்கும் என்றாள். அப்படியே பண்டாரா சிறப்பாக நடந்தது. வியப்புற்ற பைரவ்நாத் இதற்குக் காரணமாக அமைந்த அந்தப் பெண்ணைத் தேடி திரிகூட மலைகளில் ஒன்பது மாதம் அலைந்தார். ஆனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தப் பெண் அங்கிருந்து செல்லும் முன்பாக ஒரு அம்பை பூமியில் நோக்கிச் செலுத்தினாள். அங்கு பூமியிலிருந்து ஒரு நீரூற்று பீறிட்டுப் பொங்கியது. அது ஆறாகப் பெருகியது. அதுவே பாணகங்கை ஆறாகும். அதில் குளிப்போர் பாவங்கள் அனைத்தும் போகும்; தேவியின் திருவருளும் கூடும்.

பாணகங்கை ஆற்றின் கரையோரம் தேவியின் திருவடித் தடங்களை இன்றும் யாரும் காணலாம். ஆகவே இந்த ஆற்றின் கரைகளை சரண் பாதுகா என மக்கள் அழைக்கின்றனர்.

பின்னர் வைஷ்ணவி தேவி அத்கவரி என்ற இடத்தில் கர்ப்ஜூன் என்ற குகையில் இருந்து பல மாதங்கள் தவம் புரிந்தார். பைரவர் ஒருவாறாக தேவியைக் கண்டுபிடித்து அவரைக் கொலை செய்ய முயன்ற போது தேவியானவள் உக்கிரமான காளி ரூபம் எடுத்து பைரவரது தலையைத் துண்டித்தார். தேவி இப்படி காளியாக உருமாறியது தர்பார் என்ற இடத்திலுள்ள குகையின் வாயிலின் அருகே நடந்தது. தேவி பைரவரின் தலையைத் துண்டிக்கவே அந்த தலை விழுந்த இடம் பைரவ் காடி என்று அழைக்கப்படுகிறது. இது புனிதமான அந்தக் குகையிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தனது மரணத் தறுவாயில் பைரவர், தேவியிடம் தன்னை மன்னித்து அருள் பாலிக்குமாறு கூறவே, அன்னையும் அவருக்கு முக்தி அளித்தார்.

தன்னை தரிசிக்க அங்கு வரும் அனைவரும் தனது தரிசினத்திற்குப் பின்னர் பைரவரின் கோவிலுக்கும் சென்று தரிசித்தாலேயே யாத்திரை பூரணமாகும் என்னும் வரத்தையும் அளித்தார். தேவி தன்னை மூன்று சூல வடிவு கொண்ட பாறைகளாக மாற்றிக் கொண்டு அங்கேயே நீண்ட தவத்தில் ஆழ்ந்தார். தேவியைத் தேடி வந்த ஸ்ரீதர் இறுதியில் குகையை அடைந்தார். தேவியின் திரிசூலத்தைக் கண்டு அதை பல்வேறு வழிகளில் வழிபட ஆரம்பித்தார். மனம் குளிர்ந்த தேவி அவருக்குத் தரிசனம் தந்தார். அவரை ஆசீர்வதித்ததோடு தன்னை தரிசிக்க வரும் லக்ஷக்கணக்கான பக்தர்களையும் இன்றும் அவர் அருள் பாலித்துக் காத்து வருகிறார்.

மக்கள் லக்ஷக்கணக்கில் தரிசனத்திற்காக வருவதால் முன் அனுமதிச் சீட்டு பெற்றுக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 50000 பக்தர்களே செல்லலாம் என்ற கட்டுப்பாடு இப்போது விதிக்கப்பட்டிருக்கிறது. வைஷ்ணவி தேவி பற்றி தொலைக்காட்சித் தொடர்களும் பல திரைப்படங்களும் வெளி வந்துள்ளன. காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வைஷ்ணவி தேவிஅனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.  லலிதா சஹஸ்ரநாமத்தில் 892வது நாமமாக அமைவது இது: ஓம் வைஷ்ணவீ  நமஹா, ஓம்!

நன்றி வணக்கம்!

**

Tags — ஆலயம் அறிவோம், வைஷ்ணவ தேவி,  திருத்தலம், கோவில் 

சித்த ஜெயம் ஒன்றே மாயையிலிருந்து விடுபட வழி : காதியின் கதை (Post.9980)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9980

Date uploaded in London –  16 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோக வாசிஷ்ட கதைகள்

சித்த ஜெயம் ஒன்றே மாயையிலிருந்து விடுபட வழி : காதியின் கதை!

ச.நாகராஜன்

யோகவாசிஷ்டத்தில் உபாஸன ப்ரகரணத்தில் வரும் கதை இது.

      மஹரிஷி வசிஷ்டர் அன்புடன் ராமரை நோக்கி, “சித்த ஜெயமே அதாவது மனதை ஜெயிப்பதே மாயையிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும்” என்று கூறி விட்டு அதை விளக்குவதற்காக காதியின் கதையைக் கூற ஆரம்பித்தார்.

     காதி பல கலைகளும் அறிந்த நன்கு படித்த ஒரு மனிதன். இளம் வயதிலிருந்தே காதிக்கு வாழ்வின் இன்பங்கள் எல்லாம் பிடிக்கவில்லை. வளர்ந்த நிலையில் தவம் புரிய ஆசைப்பட்ட அவன் விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற விரும்பினான். ஆகவே தன் மனைவியையும் மக்களையும் துறந்து தவம் புரிய கானகம் நோக்கிச் சென்றான். கடுமையான தவம் புரியவே அவன் முன் விஷ்ணு தோன்றினார். விஷ்ணுவிடம் காதி, மாயை எப்படி உதிக்கிறது என்றும் மாயை என்றால் என்ன என்று அறிய ஆசைப்படுவதாகவும் கூறினான். அப்படியே ஆகட்டும் என்று அவன் ஆசை நிறைவேற விஷ்ணு ஆசீர்வதித்தார்.

ஒரு நாள் காதி ஏரி ஒன்றில் குளிக்கச் சென்றான். குளிக்கும் போது தான் இறந்து விட்டதாகவும் தன் உடலை எரித்து விட்டதாகவும் அவன் உணர்ந்தான். சண்டாள குலத்தில் ஒரு குடும்பத்தில் அவன் பிறந்ததாகவும் அதே குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவன் மணந்து கொண்டதாகவும் அவனுக்குத் தோன்றியது.

பின்னர் ஒரு நாள் பயங்கரமான மழை ஒன்று பெய்ய அதில் அவனது குடும்பம் முற்றும் அழிந்தது. மிகுந்த துக்கத்துடன் அவன் காட்டில் அலையலானான்.அலைந்தவாறே அவன் ஒரு நகரத்தை அடைந்தான். அங்கு ஒரு பெரிய ஊர்வலம் யானை ஒன்று முன்னே செல்ல வந்து கொண்டிருந்தது. அந்த யானை அவன்  முன்னே வந்து நின்றது. அவனைத் தும்பிக்கையால் தூக்கி தன் முதுகின் மீது அமர்த்தியது. அந்த ஊர்வலத்தில் வந்தவர்கள் அந்த நகரத்தைச் சேர்ந்த மக்கள். யானையோ பட்டத்து யானை. அது அந்த ராஜ்யத்திற்கான அரசனைத் தேர்வு செய்ய வந்தது. அவன் நேராக அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு முடி சூட்டப்பட்டது. அந்த ராஜ்யத்தை அவன் திறம்பட ஆட்சி புரியலானான்.

ஒரு நாள் தனியாக அவன் அருகில் இருந்த ஒரு காட்டிற்குச் சென்றான். அங்கு பழங்குடியினர் வசிக்கும் ஒரு கிராமத்தை அவன் கண்டான். அந்த பழங்குடி மக்கள் அவனை அன்புடன் வரவேற்றனர். தங்களில் ஒருவன் அரசனாக்கப்பட்டதால் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 நகரத்து மக்களுக்கு தங்களது அரசன் ஒரு தாழ்ந்த குலத்திலிருந்து வந்தவன் என்பது சில நாட்களில் தெரிய வந்தது. அவனைத் தங்கள் அரசனாக ஏற்றுக் கொண்ட தங்கள் முட்டாள்தனத்தை நினைத்து அவர்கள் வேதனைப் பட ஆரம்பித்தனர். அவர்கள் அவனை ஒரு தாழ்ந்த குலத்தவனைப் போலவே எண்ணலாயினர்; நடத்த ஆரம்பித்தனர். அவனால் தங்களுக்கு தீட்டு ஏற்பட்டு விட்டதாக அவர்கள் கருத ஆரம்பித்தனர். ஆகவே தமக்குத் தாமே தீயிட்டுக்கொண்டு தீக்குளிக்க அவர்கள் தீர்மானித்தனர். இதையெல்லாம் கண்ட காதி மிகுந்த துக்கம் அடைந்தான். அந்தத் தீயில் தானே விழுந்து உயிரை விடத் தீர்மானித்தான். அவன் உடல் எரிந்து கொண்டிருக்கும் போது திடீரென்று தனது கனவு நிலையிலிருந்து விழித்த காதி தான் ஏரியில் குளித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.

ஆக இப்படி காதி ஒரு சில கணங்களிலேயே இறப்பு, பிறப்பு, திருமணம், குடும்பம் சர்வநாசம் அடைந்தது, அரசனாக முடி சூடியது, திருப்பி வெறுத்து ஒதுக்கப்பட்டது, மறுபடி மரணம் அடைந்தது ஆகிய அனைத்தையும் அனுபவங்களாக அனுபவித்தான்.

 தான் யார் என்றும் எப்படி இப்படிப் பல்வேறு அனுபவங்களைக் குளித்துக் கொண்டிருக்கும் ஒரு சில கணங்களிலேயே தான் அடைய முடிந்தது என்றும் காதி எண்ணி எண்ணி ஆச்சரியப்பட்டான்.

  ஒரு நாள் காதியின் ஆசிரமத்திற்கு ஒருவர் விஜயம் செய்தார். அவர், தாழ்ந்த குலத்தவன் ஆட்சி புரியும் ஒரு ராஜ்யத்திற்குத் தான் சென்றதாகவும், அந்த ராஜ்யத்தின் அரசன் தான் தாழ்ந்த குலத்தவன் என்று அறியப்பட்டதால், தன்னைத் தானே எரியும் நெருப்பில் விழுந்து உயிரை விட்டு விட்டதாகவும் கூறினார். அத்தோடு அவர் அப்படிப்பட்ட ஒரு தேசத்தில் தான் சிறிது காலம் வசித்ததற்கு பிராயசித்தம் செய்ய பிரயாகைக்குச் சென்றதாகவும் கூறினார்.

தனது வாழ்க்கை சம்பவங்களோடு ஒத்திருக்கும் அவரது இப்படிப்பட்ட தகவலைக் கேட்ட காதி மிகுந்த ஆச்சரியத்திற்குள்ளானான். அவர் கூறியது உண்மைதானா என்பதை அறிய அவனுக்கு ஆசை வந்தது. அவன் அந்த ராஜ்யத்திற்குச் சென்று அந்த மக்கள் கூறியதைக் கேட்டான். தான் கேட்ட விவரங்கள் அப்படியே தனது அனுபவங்களுடன் ஒத்திருந்ததைக் கேட்ட காதி பிரமித்துப் போனான்.

 அவன் விஷ்ணு தனக்குக் கொடுத்த வரத்தை இப்போது எண்ணிப் பார்த்தான்.இது தான் மாயை, மனதின் சக்தி என்று இப்போது அவன் புரிந்து கொண்டான். இருந்த போதிலும் ஒரு அற்ப கனவானது எப்படி நிஜமாக இருக்க முடியும் என்ற ஆச்சரியம் அவ்னை விட்டு அகலவில்லை. மறுபடியும் அவன் தவம் புரிய ஆரம்பித்தான்.

 விஷ்ணு அவன் முன் தோன்றினார். அவன் கனவில் கண்ட அனைத்தும் மற்றும் நிஜமாகப் பார்த்த அனைத்தும் ஆக இந்த இரண்டுமே உண்மை இல்லை என்றார். அவை இரண்டுமே அவன் மனதில் உதித்தவையே என்றார் விஷ்ணு.

 காதிக்கு விஷ்ணு கூறிய விளக்கத்தால் திருப்தி ஏற்படவில்லை. அவன் உடனே பழங்குடியினர் வசிக்கும் அந்த கிராமத்திற்குச் சென்றான். அவர்கள் கூறியது அனைத்தும் தான் அனுபவித்ததை ஒத்திருந்ததை மீண்டும் ஒரு முறை அவன் கண்டான்.

  மறுபடியும் தவம் புரிய ஆரம்பித்தான். விஷ்ணு அவன் முன் தோன்றினார். காதி மீண்டும் ஒரு முறை அந்தக் கதையை சரி பார்த்ததாக அவர் கூறினார். ஒரு விஷயத்தைப் பலரும் கூறி விட்டதால் அது உண்மை என்றில்லை என்று கூறிய விஷ்ணு, தன்னை ஒரு தாழ்ந்த குலத்தவன் என்று அவன் எண்ணி வருகின்ற வரையில் அவனால் அந்த மாயையிலிருந்து விடுபடமுடியாது என்றார். தனது வாஸனையால் அவன் வெல்லப்பட்டான் என்றார் விஷ்ணு. பிறகு அவர் மனத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளைச் செய்யுமாறு அவனுக்கு அறிவுறுத்தினார். காதியும் தனது மனதை அடக்கும் பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்தான். நாளடைவில் தாழ்ந்த குலம் என்ற மாயை உணர்வு அவனை விட்டு நீங்கியது. இறுதியில் அவன் ஜீவன் முக்தனானான்.

        இந்தக் கதை எவ்வளவு தவம் செய்து மனதின் சக்தியை ஒருவன் பெற்றாலும் கூட மாயையிலிருந்து எப்படி  அவனால் விடுபட முடியவில்லை என்பதை உணர்த்துகிறது. மனதைப் பற்றியும் ஆத்மனைப் பற்றியும் விசாரம் செய்வது என்றே ஒரே வழி மட்டுமே உதவும் என்பதையும் காதியின் கதை நமக்கு உணர்த்துகிறது. ஆத்மஞானத்தை அடைய வேண்டும் என்று ஒருவன் தீர்மானித்து விட்டான் என்றால், உடனேயே அதற்கான தீவிரமான முயற்சியை அவன் மேற்கொண்டால் மட்டுமே அவன் அதை அடைவான்.

வசிஷ்டரின் இந்தக் கதையால் ராமர் பேருண்மையை அறிந்து கொண்டார்; நாமும் தான்!

***

INDEX

யோக வாஷிடம், உபாஸன ப்ரகரணம்

சித்த ஜெயமே மாயையிலிருந்து விடுபட வழி

வசிஷ்டர் ராமனுக்குக் கூறும் காதியின் கதை

காதியின் தவம், விஷ்ணு அவன் முன் தோன்றி மாயை பற்றி விளக்குதல்

காதியின் அனுபவங்கள்

tags- யோக வாசிஷ்ட கதை, காதி

PLEASE JOIN US TODAY MONDAY 16-8-2021

16 -8– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -7  MTS

PRAYER –  MRS ANNAPURANI PANCHANATHAN

ABHANGAM BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT SRI RAGHAVENDRA– 13 MTS

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -7

LONDON SWAMINATHAN’S ARTICLE – 8 MTS OR TIRUVASAGAM SONG

MANGALAM – 3 MTS

TOTAL TIME- APPR. 50 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME ; BST;

 6-30 PM INDIAN TIME.

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

 TAGS – PUBLICITY1682021

உலக இந்து சமய செய்தி மடல் 15-8-2021 (Post No.9979)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9979

Date uploaded in London – 15 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை AUGUST 15  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

நேயர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்

XXXX

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்-

58 பேருக்கு பணிநியமன ஆணை



அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 1972ல் சட்டம் கொண்டு வந்தார். தற்போதைய திமுக அரசு இதனை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சி எடுத்தது.


இதையடுத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணையை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 14- ஆம் தேதியன்று, வழங்கினார்.

மேலும் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், ஓதுவோர் உள்பட மொத்தம் 216 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.

தமிழில் அர்ச்சனை புதிதல்ல‘ : ஹிந்து அறநிலையத் துறை கமிஷனர் விளக்கம்

‘கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் முறை, புதிதாக வந்ததல்ல’ என, ஹிந்து அறநிலையத் துறை கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார்.


‘கோவில்களில், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய, சட்ட உரிமை உள்ளதா’ என்று கேள்வி எழுப்பிய, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவருக்கு, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் அளித்துள்ள பதில்: தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம், புதிய திட்டம் இல்லை. இத்திட்டம், 1974ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 1996ல் புத்துயிர் பெற்றது. 1974, 1998 ஆண்டுகளில், இத்திட்டத்தை எதிர்த்து, பல வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில், 1992ல் புகார்தாரர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சார்பில் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, கோவில்களில் ஆகம விதிப்படி சமஸ்கிருத வழிபாடு உள்ளது. அதேநேரம், ஒப்பற்ற தமிழ் பக்தி இலக்கியமான தேவாரம், திருவாசகமும் ஏற்கப்பட்டது. தமிழில் அர்ச்சனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இருப்பினும், ஆகம ரீதியான அர்ச்சனைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோருக்கு, அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Xxxx

பொங்கல் வைத்து தலையில் சுமந்து அம்மனுக்கு படைத்த கவர்னர் தமிழிசை

தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை, பொங்கல் வைத்து தலையில் சுமந்து, அம்மனுக்குப் படைத்து வழிபட்டார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராகவும் உள்ளார். தமிழகத்தில் ஆடிப் பண்டிகை கொண்டாடுவது போல் தெலங்கானாவில் “போனாலு” என்ற கலாச்சாரப் பாரம்பரிய விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் நிறைவு விழா ஆடி அமாவாசை அன்று நடக்கும். அந்நிகழ்வில் பங்கேற்க ஆளுநர் தமிழிசை தெலங்கானா சென்றுள்ளார்.

தெலங்கானா ராஜ்பவனில் ஆடி அமாவாசையன்று நடைபெற்ற போனாலு திருவிழாவில் பெண்கள் பொங்கல் வைத்து, தலையில் சுமந்து சென்று அம்மனுக்குப் படைத்து வழிபட்டனர்.

அதையடுத்து அவர் பாரம்பரிய முறைப்படி போனாலு பூஜையில் பங்கேற்றார். அவர் ராஜ்பவனில் பொங்கல் வைத்து, அதைத் தலையில் சுமந்து சென்று அம்மனுக்குப் படையலிட்டு வழிபட்டார்.

xxxxxxx

காஷ்மீரில் கீர்பவானி துர்கா கோவிலில் ராகுல் வழிபாடு

காஷ்மீர் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று, கந்தர்பல் மாவட்டத்தின் துல்முல்லாவில் உள்ள கீர்பவானி துர்கா கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார். அத்துடன் ஹஸ்ரத்பல் தர்காவிலும் பிரார்த்தனை செய்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமதுவின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காஷ் மீருக்கு வந்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை ராகுல் காந்தி திறந்து வைத்து தொண்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.  

XXXX

முதல்வர் மனைவி திருமலையில் வழிபாடு

திருப்பதி/திருமலை பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, ஆகஸ்ட் 8ம் தேதி  காலை குடும்பத்தினருடன் வழிபட்டார்.

ஆகஸ்ட் 7-ம் தேதி  இரவு குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர், காலை, ‘வி.ஐ.பி., பிரேக்’ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள், வேத ஆசீர்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து, தீர்த்தம், லட்டு பிரசாதங்கள் வழங்கினர்.

xxxxx

திருப்பதி கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ. 55.5 கோடி

திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.55 கோடியே 58 லட்சம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

ஜூலை மாதம் கிடைத்த வருமானம் குறித்து திருமலை, திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 5 லட்சத்து 32 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஜூலை மாத உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.55 கோடியே 58 லட்சம் கிடைத்தது. இ.உண்டியல் மூலமாக ரூ.3 கோடியே 97 லட்சம் கிடைத்தது. 35 லட்சத்து 26 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

7 லட்சத்து 13 ஆயிரம் பக்தர்களுக்கு தறிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கி உள்ளனர். 

Xxxx

வங்க தேசத்தில் அட்டூழியம்; 4 இந்துக் கோவில்கள் சூறை

வங்கதேசத்தில் நான்கு ஹிந்து கோவில்களை சூறையாடியதாக 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ருப்ஷா உபசிலா மாவட்டம் ஷியாலி நகரில், இரு மதத்தினர் இடையே சமீபத்தில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு கும்பல் அங்குள்ள ஹிந்து கோவிலுக்குள் புகுந்து கடவுள் சிலைகளை சேதப்படுத்தியது. இதையடுத்து ஷியாலி புர்பபரா பகுதிக்குச் சென்ற கும்பல் ஹரி மந்திர், துர்கா மந்திர், கோவிந்தா மந்திர் ஆகிய கோவில்களில் புகுந்து அங்கிருந்த கடவுள் சிலைகளை சூறையாடியது. அப்போதும் வெறி அடங்காமல் ஹிந்து சமூகத்தினரின் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தினர். இந்த வன்முறை தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து இமாம் மவுலானா நசிமுதின் கூறியதாவது:மசூதியில் தொழுகை நடக்கும்போது சிலர் பஜனை பாடல்கள் பாடி வந்தனர். அவர்களிடம் தொழுகை நடக்கும் போது பஜனை வேண்டாம் என்றேன். அப்போது ஒருவர் என்னை தள்ளியதால் வாய்த் தகராறு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டை ருப்ஷா உபாசிலா பூஜா உத்ஜபன் பரிஷத் பொதுச் செயலர் கிருஷ்ண கோபால் சென் மறுத்துள்ளார். ”இமாமை யாரும் தள்ளவில்லை. வாய்த் தகராறு முடிந்த பின் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர் கள் இங்கு வந்து கோவில்கள், கடைகள், வீடுகளை சூறையாடினர்,” என்றார்.

Xxxxxxx

ராமர் கோவில் கட்டுமானத்தை பக்தர்கள் பார்க்க அனுமதி

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, அடித்தளம் அமைக்கும் பணி 60 சதவீதம் முடிந்து விட்டது.

கோவிலின் கட்டுமான பணிகளை பார்க்க அனுமதிப்பது என ராமர் கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

இதற்காக, தற்காலிக கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு சுவர் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில், துவாரங்களுடன் கூடிய 15 அடி அகல இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. அந்த வேலிக்கு பின்னால் இருந்தபடி, கட்டுமான பணிகளை பக்தர்கள் பார்க்கலாம்

என்று அறக்கட்டளை நிர்வாகி சம்பத்ராய் தெரிவித்தார்.

Xxxx

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் முக்தி அடைந்தார்


77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் , உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர்  பொருத்தப்பட்டது.

மதுரை ஆதீனத்தின் உயிர் வெள்ளிக் கிழமை இரவில் பிரிந்தது.

தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு தமிழக முதல்வர்.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

XXXX

மதுரை ஆதீனத்தின் புதிய 293வது குருமகா சன்னிதானம் தேர்வு.

ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் நியமிக்கபட்டுள்ளார். சிலநாட்கள் சென்ற பின்பு ஆதினப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.

xxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

 tags- Tamil hindu, Newsroundup, 1582021

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 15-8 -2021 (Post No.9978)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9978

Date uploaded in London – 15 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN

XXX

WE WISH YOU ALL A VERY HAPPY INDEPENDENCE DAY.

XXXX

Sri Aurobindo’s 150th birth anniversary celebrations at Auroville, Ashram TODAY

HERE IS SOME NEWS FROM PUDUCHERRY:

Auroville will bring together a programme to commemorate Sri Aurobindo’s 150th birth anniversary celebrations on August 15.

A live streaming of the function is organised, according to a release from the Auroville Foundation. Aurovillians participate in the invocation of Sri Aurobindo’s Gayatri Mantra at dawn.

A website has been specially created for the 150th year for event updates, articles, blogs and links dedicated to the exploration of Sri Aurobindo as the year progresses

Sri Aurobindo Ashram will also have a quiet celebration of the 150th birth anniversary of Sri Aurobindo today with darshan of the Samadhi.

Visitors will be allowed to the Samadhi and they will be presented a darshan day card which will have messages based on the philosophy of Sri Aurobindo and his spiritual collaborator Mirra Alfassa, known as the Mother of the Ashram.

 XXXX

Centre grants Rs 55 crore aid for Simhachalam temple development in Andhra Pradesh

The Centre has sanctioned Rs 55 crore for the development of Simhachalam temple under the Pilgrimage Rejuvenation And Spiritual Augmentation Drive (PRASAD), ANDHRA PRADESH Minister for Tourism Muttamsetti Srinivasa Rao said on Friday. A Central team led by Under Secretary SS Varma arrived IN VISHAKAPATNAM on Friday to review PRASAD scheme proposals.

Speaking to media persons after a meeting with the Central team, the minister said they had sent proposals worth Rs 70 crore for the development of the temple as part of the temple tourism scheme and owing to the pandemic, there was a delay in approval. He said the plan to construct an underpass was shelved following suggestion of the Chinna Jear Swamy that it will be in violation of ‘Agama Sastra’. Hence, it has been decided to revive the steps route from Madhavadhara to Simhahachalam.  

As part of the development of temple pushkarini for the convenience of devotees, a bathing ghat and changing rooms will be constructed. A queue complex on the model of Tirumala with a capacity of 2,000 people will be constructed atop Simhachalam.

A hall with all amenities for devotees will be constructed at the foothill. A walking track will be laid around the Simhachalam hill for the convenience of people who undertake circumambulation (giri pradakshina) on the occasion of Giri Pournami every year.

On Giri Pournami, thousands of people undertake a 32-km trek (pradakshina)

Union Tourism Under Secretary SS Varma said they will submit a report within 10 days. Earlier, the team led by Varma visited Simhachalam temple.

XXX

Onam: KTDC to hold payasam fests

The Kerala Tourism Development Corporation will organise payasam festivals across KERALA state from Wednesday as part of Onam celebrations. Expert chefs of KTDC would come out with delicious payasams without compromising on the traditional taste, quality and aroma of the dessert.  

The payasam sale counter will be opened at KTDC Grand Chaithram at Thampanoor, IN THIRUVANANTHAPURAM from Wednesday till the Thiruvonam day on August 21 and will be working from 9 am to 9 pm.

Payasam counters will also be operated in other towns in Kerala.

Payasam is a sweet liquid with milk and spices served in Hindu festivals.

Xxx

Miscreants attack Hindu temples in Bangladesh

Miscreants attacked at least four Hindu temples, some shops and households belonging to the minority community in Bangladesh’s Khulna district, prompting police to arrest ten people and beef up security in the area, according to a media report.

The incident took place on Saturday LAST WEEK in Shiali village in Rupsha Upazila following a heated altercation between Hindu and Muslim residents on Friday night, the Dhaka Tribune NEWSPAPER  reported.

According to local residents and victims, the miscreants first attacked the Shiali Mahasmashan temple.

They vandalised the idols in the temple and the crematorium.

From there, they went to the Shiali Purbapara area, where they vandalised the idols of Hindu gods and goddesses in Hari Mandir, Durga Mandir and the Govinda Mandir, the report said.

Six shops and two homes of the local Hindu community members were also vandalised, it said.

Krishna Gopal Sen, general secretary of Rupsha Upazila Puja Udjapan Parishad, said that at least 10 idols at four temples were vandalised during the attacks.

The Hindus were going towards the temple while singing kirtan during the Esha prayers, one of the five mandatory Islamic prayers, which led to the scuffle, said the local mosque’s Imam Maulana Nazim Uddin.

XXXX

8-yr-old Hindu boy becomes youngest person charged with blasphemy in Pak

An eight-year-old Hindu boy is being held in protective police custody in Pakistan after becoming the youngest person ever to be charged with blasphemy in the country, a media report said on Monday.

According to the Guardian news report, the boy’s family is in hiding and many of the Hindu community in the conservative district of Rahim Yar Khan in Punjab province, have fled their homes after a Muslim crowd attacked a Hindu temple after the boy’s release on bail last week.

On August 7, 20 people were arrested in connection with the temple attack.

The boy is accused of intentionally urinating on a carpet in the library of a madrassa, where religious books were kept, last month.

Speaking from an undisclosed location, a member of the boy’s family told the Guardian: “He (the boy) is not even aware of such blasphemy issues, and he has been falsely indulged in these matters. He still doesn’t understand what his crime was and why he was kept in jail for a week.

“We have left our shops and work, the entire community is scared and we fear backlash. We don’t want to return to this area. Blasphemy charges filed against a child have shocked even legal experts in Pakistan.

XXXX

77-year-old pontiff of the Madurai Aadheenam no more 

The 77-year-old pontiff of the Madurai Aadheenam, Arunagirinatha Gnanasambantha Desika Paramacharya Swamigal, breathed his last at a private hospital IN MADURAI  on Friday. He was undergoing treatment for respiratory illness. 

The Madurai Adheenam, considered one of the oldest Saivite adheenams (Hindu monastery) in the State, is said to have been established more than a millennium ago and rejuvenated by Thirugnana Sambandar, one of the Nayanmars.

The pontiff was a native of Sirkazhi and joined the Dharmapuram Aadheenam as a disciple soon after his schooling. Since 1980, Arunagirinatha Swamigal, who was formerly a journalist with the DMK’s mouthpiece ‘Murasoli’, has been serving as the 292nd pontiff of the Madurai Aadheenam, which is the hereditary trustee of three temples in Thanjavur district.

With fugitive godman Nithyananda staking his claim as the successor of Arunagirinathar, the chambers of the Madurai Aadheenam, located near the Meenakshi Sundareswarar Temple, were sealed late on Thursday night by the pontiff of the Dharmapuram Aadheenam, Masilamani Swamigal from Mayiladuthurai.

XXXX

THAT IS THE END OF NEWS FROM AKASA DHWANI

READ BY BRAHANNAYAKI SATHYANARAYANAN

PLEASE WAIT FOR TAMIL NEWS

XXXXXXXXXXXXX

tags – newsroundup, hindu, 1582021, 

தெய்வத் தமிழ் கண்டவர்! (Post No.9977)

MR AND MRS V SANTANAM, MADURAI.

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9977

Date uploaded in London –  15 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ வெ.சந்தானம் அவர்களின் நினைவு தினம். அஞ்சலிக் கட்டுரை!

தெய்வத் தமிழ் கண்டவர்!

ச.நாகராஜன்

இன்று ஆகஸ்ட் 15. நமது சுதந்திர தினம். அந்த சுதந்திரத்தை வாங்கத் தங்கள் சுகபோகங்களைத் தியாகம் செய்து நாட்டிற்காக உழைத்த நல்லோர் பலர்.

அவர்களில் ஒருவர் எனது தந்தையார் தினமணி வெ.சந்தானம் அவர்கள். மதுரையில் அவர் தினமணி மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய காலம் ஒரு பொன்னான காலம். அது தெய்வீகமான காலம் என்றே சொல்லலாம்.

நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர்கள் ஆத்திகவாதிகளை கேலி செய்வதும் கிண்டல் செய்வதுமாக இருந்த அந்த சமயத்தில் ஆன்மிகத்திற்கு என்று ஒரு ‘காலம் (COLUMN) வேண்டும் என்று நிர்ணயித்தவர். அதன்படியே தினமணி நாளிதழில் ஆன்மீகத்திற்கு ஒரு COLUMN  தந்தார். சில சமயம் அது ஒரு பக்கமாகக் கூட மிளிர்ந்தது. காஞ்சி பரமாசார்யாள், சிருங்கேரி மஹா பெரியவாள் உள்ளிட்ட ஆன்மீகத் தலைவர்களின் உரைகள் ஒரு பக்கம், இன்னும் தேசம் தெய்வீகம் இரண்டும் இரு கண்கள் என முழங்கிய அஞ்சாநெஞ்சர் தேவர் திரு முத்துராமலிங்கத் தேவரின் அர்த்தமுள்ள உரைகள் ஒரு புறம், ஆங்காங்கே ஆன்மிக உரைகளை லக்ஷக்கணக்கான மக்களுக்கு ஆற்றி வந்த கிருபானந்த் வாரியார் உரைகள் ஒரு புறம் இன்ன பிற அறிஞர்கள், உபந்யாசகர்களின் உரைகள் ஒரு புறம் என்று அவற்றைத் தினமும் தினமணியில் பிரசுரித்து  மக்களை ஆன்மீக சிகரத்தில் அவர் ஏற்றினார்.

தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள் நடத்திய திருமந்திர மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றினார். திருப்புகழ், திருப்பாவை மாநாடுகளில் உரை நிகழ்த்தினார்.

பல்வெறு ஆன்மீக புத்தகங்கள் வெளி வர ஊக்கமூட்டினார். அவற்றில் சிலவற்றிற்கு முன்னுரையும் தந்தார்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க நாத்திகவாதிகள் தமிழைத் தவறாகச் சித்தரித்து நாத்திகத் தமிழாக மாற்றி அகநானூறே ஆடி வா, புறநானூறே பொங்கி வா என்று தமிழரைத் திசை மாற்றிய போது ‘தெய்வத் தமிழை தமிழர்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்று தெய்வத் தமிழைக் கண்டார்.

ஆம், மதுரையில் தெய்வத் தமிழ்ச் சங்கம் என்று ஒரு சங்கத்தை ஆரம்பித்து பிரம்மாண்டமான ஒரு விழாவை நடத்தினார். அதில் மதுரையின் பிரபல வழக்கறிஞர் திரு கே.லெக்ஷ்மிநரசிம்மன் உள்ளிட்ட பலரும் முனைப்பாக ஈடுபட்டனர். கல்லல் ராமநாதன் என்று ஒரு புகழ்பெற்ற இசைக் கலைஞர் வில்லுப்பாட்டு மூலம் ஆன்மீகத்தைப் பரப்பி வந்தார். அவரது மனைவியும் ஒரு இசைக் கலைஞர். இருவரும் இணைந்து தெய்வத் தமிழ் நிகழ்வுகளை வில்லுப்பாட்டாக இசைத்தனர். கூட்டம் வியந்து போற்றியது – தெய்வத் தமிழ் சங்கத்தை.

ஸ்ரீ சத்யசாயிபாபாவை கலியுக அவதாரமாக இனம் கண்டவர் அருளாளர் வெ.சந்தானம். அவர் மேல் தானாகப் பொங்கி வந்த கீர்த்தனைகளைத் தொகுத்தார். பாரதரத்னா திருமதி எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் சகோதரர் திரு எம்.எஸ்.சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான இசைக்கலைஞர்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவர். பல்வேறு ராகங்களில் அந்தக் கீர்த்தனைகளை இசைத்துக் காட்டுவர். பல இசைக்கச்சேரிகளில் பாடல்கள் அரங்கேறின.

அவற்றைப் பற்றி ஒரு இண்டர்வியூவில் ஸ்ரீ சத்யசாயிபாபா, ‘பாடலை நீ இயற்றும் போதே அதை நான் கேட்டு விட்டேன். பதங்கள் நாட்டியமாடி துள்ளி குதிக்கின்றனஎன்றார். 

108 கீர்த்தனைகளின் தொகுப்பு பின்னர் நூலாக வந்தது.

ஸ்ரீ சத்யசாயிபாபா அவர் மேல் மாறா அன்பு கொண்டிருந்தார். சென்னையில் ஆபட்ஸ்பரியில் நடந்த மாபெரும் விழாவிற்கு உரை ஆற்ற அவரை அழைத்தார்.

தன்னை அவர் அழைத்திருக்க மாட்டார், அது கே.சந்தானம் என்ற நிபுணராக இருக்கக் கூடும் என்று அழைத்தவரிம் திரு சந்தானம் கூற, “இல்லை, இல்லை, நாங்கள் மிகத் தெளிவாகத் தான் கூறுகிறோம். பாபா, மதுரை தினமணி சந்தானத்தை அழையுங்கள் என்று ஆணையிட்டார் என்று கூறினர்.

ஒரு நாள், திரு ஆர்.ஆர்.ராமநாதன் செட்டியார் வீட்டிற்கு திடீரென வருகை புரிந்தார் பாபா அப்போது ஹாலில் அமர்ந்திருந்த எனது தந்தையாரைக் கண்ட அவர் மனம் மிக மகிழ்ந்து அவர் அருகே வந்தார். ஆசீர்வதித்தார்.

இப்படிப் பல நிகழ்வுகள்.

அச்சன்கோவிலை ஸ்தாபித்த ஆயக்குடி ஸ்வாமிஜி கிருஷ்ணாஜியைக் குருவாக ஏற்ற திரு சந்தானம் தினமும் காலையில் கணபதி ஹோமம் செய்வதை வழக்கமாகக் கொண்டார் – அவரது உபதேசத்தை அனுக்ரஹமாகக் கொண்டு.

அவருடனான அனுபவங்கள் ஒரு பெரும் புத்தக அளவில் எழுதக் கூடிய வியப்பும் பிரமிப்பும் தரக்கூடிய அற்புத நிகழ்ச்சிகளாக அமைந்தன.

இன்னும் ஸ்வாமி சாந்தானந்தா, அஷ்டபதி பாடி ராதா கல்யாணத்தைப் பரப்பிய புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான மகான்களுடன் மிக நெருக்கமாக அவர் இருந்தார். ஸ்வாமி சாந்தானந்தா வீட்டிற்கு வந்து பிக்ஷை ஏற்பார். கோபால கிருஷ்ண பாகவதர், அவரது மகன் சஞ்சீவி பாகவதர் உள்ளிட்டோர் இல்லத்திற்கு வருகை புரிவர்.

சிருங்கேரி மகா சந்நிதானம் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த ஸ்வாமிகள் ஒரு முறை சந்தானம் அவர்கள் இல்லத்திற்கு வருகை புரிந்தார். ‘என்ன வேணும், கேள் என்றார். ‘நானும் எனது குடும்பமும் இந்து மதத்தில் மாறாத பற்று கொண்டு அதன் உயர்வை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று வரம் கேட்கவே, அருகிலிருந்த அனைவரையும் பரபரப்பாக அழைத்த அவர், “பாருங்கள், என்ன கேட்கிறார் பாருங்கள் என்று சொல்லி மகிழ்ந்து ஒவ்வொருவராக குடும்ப உறுப்பினர்களை அழைத்து அனுக்ரஹித்தார்.

இப்படி ஏராளமான உத்வெகமூட்டும் சம்பவங்கள் உண்டு.

திருப்பாவை கழகங்களையும்  வடக்காடிவீதி திருப்புகழ் சபையையும், பன்னிருதிருமுறை மன்றத்தையும் இன்ன பிற நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்தீக சபாக்களையும் வளர்த்தார். அங்கெல்லாம் சமயம் கிடைத்தபோதெல்லாம் சென்று ஆன்மீக உரைகள் ஆற்றினார்.

தெய்வீகமாக வாழ்ந்த அவர் தெய்வத் தமிழுக்காக ஆற்றிய பணியை அவர் மறைந்த இந்த நாளில்  மனம் மெய் மொழிகளால் நினைத்து வியந்து சிரம் தாழ்த்தி கரம் கூப்பி  அவருக்கு அஞ்சலி செய்கிறோம்.

வாழ்க தெய்வத் தமிழ்! வளர்க அவர் புகழ்!

***

INDEX

தினமணி மதுரைப் பதிப்பு, வெ.சந்தானம், சுதந்திரப் போராட்டவீரர்,

ஸ்ரீசத்யசாயி பாபா, கீதங்கள், சந்திப்பு

காஞ்சி ஆசார்யாள், சிருங்கேரி ஆசார்யாள்,

ஸ்ரீமுத்துராமலிங்கத்தேவர், ஸ்ரீகிருபானந்த வாரியார்

tags -தினமணி வெ .சந்தானம்

V SANTANAM INVITED KANCHI PARAMACHARYA TO MADURAI DINAMANI OFFICE.

V SANTANAM WHEN HE WENT TO VELLORE JAIL WITH K KAMARAJ DURING INDIAN INDEPENDENCE STRUGGLE.
–SUBHAM–

மஹரிஷி அரவிந்தர் – 2 (Post No.9976)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9976

Date uploaded in London –  15 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹரிஷி அரவிந்தர் – 2

ச.நாகராஜன்

அரவிந்தர் புதுவை வந்த தினத்திலிருந்து ஒரு அற்புதமான நட்பு அவருக்கும் மஹாகவி பாரதியாருக்கும் இடையே எழுந்தது. நட்பின் அபூர்வ விளைவுகளாக வேத ஆராய்ச்சி நடந்தது. அரவிந்தர் தமிழ்க் கவிதைகளை இரசித்து, ஆண்டாள், பாசுரத்தை (To the Cuckoo, I dreamed a dream) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பாரதியார் அவரை  தினமும் சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். ஏராளமான வேத சூக்தங்களை பாரதியார் அரவிந்தரிடமிருந்து கற்றார்.

அரவிந்தர் மேல் பேரன்பு கொண்டிருந்த மகாகவி, அவரைப் புகழ்ந்து,

“ஆதிசிவன் மேலிருக்கும் நாகப் பாம்பே  – எங்கள்        

        அரவிந்தப் பேர் புனைந்த அன்புப் பாம்பே!                  சோதிப்படத் தூக்கி நட மாடி வருவாய்! – அந்தச்                  

         சோலை நிழலால் எமது துன்பம் ஒழிவோம்!”             என்று பாடினார்.

பெரும்பாலும் மாலை நேரங்களில் அரவிந்தரை பாரதியார் சந்திப்பது தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் புதுவை வாழ்க்கை சகிக்க முடியாத ஒரு நிலை ஏற்படவே பாரதியார் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார்.

கடைசியாக அரவிந்தரிடமிருந்து விடை பெறும் நாளும் வந்தது.

அந்த நாளைப் பற்றி பாரதியாரின் புதல்வியான சகுந்தலா பாரதி தனது நூலில் இப்படி விவரிக்கிறார்:

“ஸ்ரீ அரவிந்தரிடம்  கடைசிமுறையாக் என் தந்தை  விடை பெறப் போனபோது அவர்கள் தனியறையில் சம்பாஷணை நடத்தியதால் அதன் விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் விடைபெற்றுத் திரும்புகையில் ஸ்ரீ அரவிந்தரின் சாந்தி நிறைந்த ஞானவொளி வீசும் கண்கள் கண்ணீரால் மங்கியிருந்தன. என் தந்தையின் வீர விழிகளில் கண்ணீர் ததும்பி நின்றது. அது மட்டும் தான் நான் கண்டேன்.

ஸ்ரீ அரவிந்தரது ஆசீர்வாதத்தைப் பெற்று வீடு திரும்பினோம்.”

ஆங்கில சாம்ராஜ்யத்தையே ஆட்டுவித்த மகாவீரர், ஆன்மீக சிகரத்தில் ஏறி புதிய யோக சக்தியைப் பூவுலகில் இறக்கியவர் அரவிந்தர்.

தன் பாட்டுத்திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வந்தவர் தமிழ்க் கவிஞர் பாரதியார். வாராது வந்த மாமணி. வீயாச் சிறப்புடையவர். இவர்களின் கண்களில் பிரிவினால் அரும்பியது நீர் என்றால் அது புனித நீர் அல்லவா!

கொடுத்த வைத்த புதுவை பூமி சரித்திரத்தில் புனித பூமியாக நிரந்தர இடம் பெற்று விட்டது! அரவிந்தருக்கு திவ்ய திருஷ்டி உண்டு. எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்பே அவர் அறிவார். எழுத்தாளரான வ.ரா. எனப்படும் ராமசாமி தன்னிடம் வருவதை அவர் முன் கூட்டியே கண்டார். அதே போல புதுவை கவர்னராக வருபவரையும் அவர் முன்பாகவே கண்டார். இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் ஆகஸ்டு 15 1947. அவரது பிறந்த நாள் ஆகஸ்ட் 15. இது தற்செயலான ஒன்று இல்லை, தொடர்பு உண்டு என்றார் அவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினை என்பது செயற்கையான ஒன்று. அது போகவேண்டும். போகும் என்று தீர்க்கதரிசனமாக அவர் உரைத்துள்ளார். பாரத தேசத்தின் புகழோங்கிய மேன்மையை அது மீண்டும் பெறும் காலம் மிக சமீபத்தில் உள்ளது என்ற சத்திய வாக்கையும் அவர் அருளியுள்ளார்.

       யோக சாதனையில் முழுவதுமாக இறங்கிய அரவிந்தர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு அதில் தீவிரமாக ஈடுபட்டார். 1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் நாள் அவர் சமாதியை அடைந்தார். அவரது பொன்னுடல் ஒளியுடன் அப்படியே தொடர்ந்து இருந்தது.நான்கு நாட்கள் கழித்து டிசம்பர் மாதம் ஒன்பதாம் நாளன்று அன்னையின் அருளுரையின் பேரில் அவர் உடல் ஒரு பேழையில் வைக்கப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது.

அரவிந்தர் மீண்டும் வருவார்

பிரம்மாண்டமான சக்தியை பூவுலகில் இறக்கும் பெரும் காரியத்தில் அவர் வெற்றி பெரும் தருணத்தில் அவர் முன்பாக பேரருள் சக்தி இரண்டு விருப்பத் தேர்வுகளை வைத்தது. ஒன்று அவர் தனிப்பட்ட முறையில் மேலான  முக்தி நிலையை எயதலாம். இன்னொன்று அவர் புவியை மேம்படுத்துவதற்காக இறக்க முயலும் அருள் சக்தியை தற்போதைய உடலை விட்டு விட்டு இன்னொரு  உடல் எடுத்தால் மட்டுமே முடியும்.

அரவிந்த மஹரிஷி தனது முக்தி நிலையை விரும்பவில்லை. மாறாகத் தன் உடலை உகுத்து விட்டு இன்னொரு  முறை புவிக்கு வந்து, விட்டு விட்டுச் சென்ற பணியைப் பூர்த்தி செய்து பேரருள் சக்தியை இறக்கும் விருப்பத் தேர்வைத் தேர்ந்தெடுத்தார்.

அவரே கூறிய படி இன்னொரு முறை நான் தோன்றுவேன் என்ற அவரது வாக்கு பலிக்காமல் போகாது.

அரவிந்தம்  மீண்டும் புவியில்  மலரும். அப்போது ஜீவ ஒளியுட்ன புத்துலகம தோன்றி அனைவரும் மேலாம் நிலையை எய்துவர்.

அரவிந்தரைப் படிப்போம்

ஆரம்ப சாதகர்கள் அரவிந்தரின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்து அவர் கூறிய யோக முறையை அனுஷ்டானத்தில் கொண்டு வருவதன் மூலம அவரது பணிக்கு அணில் சேது அணை கட்டுவதில் ஆற்றிய சேவை போன்று சேவையைச் செய்ய முடியும்.

அரவிந்தரின் யோக முறை தனி ஒரு முறை என்பதாலும் இது வரை அப்படி ஒரு முறையை யாரும் கடைப்பிடிக்கவில்லை என்பதாலும் அது ஒப்பற்ற ஒன்றாக இலங்குகிறது.

அந்த முறையை உலகிற்கு இந்தியாவே அளிக்க முடியும். அளிக்கும் என்பது அவரது வாக்கு.

1997ஆம் ஆண்டு அரவிந்த ஆஸ்ரமம் அரவிந்தரின் எழுத்துக்களைத் தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்டது. அவரது எழுத்துக்கள் அனைத்தும் முறையே தொகுக்கப்பட்டு 36 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இதை இணையதளத்திலிருந்து பிடிஎஃப் வடிவில் – PDF FORMAT இல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 37வது தொகுதி இந்த தொகுதிகளில் அடங்கி இருப்பவற்றிற்கான INDEX ஆக அமைகிறது.

https://www.aurobindo.ru/workings/sa/index_e.htm என்ற தளத்தில் இவை பற்றிய விவரங்களைக் காணலாம்.

பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட இந்த அரவிந்த இலக்கியம் படிப்போருக்கு ஆன்மீகத்தில் பல இரகசியங்கள் எளிதாகப் புரிந்து விடும்.

எடுத்துக்காட்டிற்காக அவர் கூறியவற்றில் ஒன்றே ஒன்றை – கடவுளரின் அர்த்தங்களை – அவர் விவரித்துள்ளபடி பார்ப்போம்.

கடவுளரின் அர்த்தங்களை  அவரும் அன்னையும் (அரவிந்த ஆசிரம அன்னை) தெளிவாகக் கூறுகின்றனர்.

ஒரு பிரம்மாண்டமான  மஹா சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்குகிறது. அதுவே ஆத்ய சக்தி.

பிரபஞ்ச இறைத்தன்மையின் மூன்று பெரும் சக்திகள் மற்றும் ஆளுமை கொண்டவர்களே பிரம்மா,விஷ்ணு, சிவன்.

உருவாக்கம், படைப்புக்குப் பின்னால் இருப்பவர் பிரம்மா.

படைப்பவர் விஷ்ணு

தவத்திற்கு சிவன்

தெய்வீக சக்தியே தேவி

சிங்கத்துடன் கூடிய துர்க்கையே தெய்வீக பிரக்ஞை

மஹாகாளி உயரிய மட்டத்தில் உள்ளவள். தங்க மயமாக ஜொலிப்பவள்.

கடவுளர் தெய்வீகப் பணிகளை ஆற்றுபவர்கள்.

விக்கினங்களை நீக்க கணேசர்.

வெற்றியைத் தர முருகன்.

பக்திக்கு ஹனுமான்.

தெய்வீக அன்புக்கு ஸ்ரீ கிருஷ்ணர்

முழு அன்புமயத்திற்கு ராதை.

இதை உணர்ந்து வழிபட்டால் வாழ்க்கையில் உயர்வு நிச்சயம். அரவிந்தரும் அன்னையும் இப்படி ஏராளமான ஆன்மீக இரகசியங்களைக் கூறி அருளியுள்ளனர்.:

எங்கும் நிறை சக்தி அரவிந்த சக்தி

நிரோத்பரன் ஒரு முறை அவரைக் கேட்ட கேள்விக்கு எந்த ஒருவர் ஆழ்ந்த சிரத்தையுடன் ஆன்ம ஞானம் சித்திக்க விரும்பினாலும் அது தானாகவே அவர் காதில் விழுந்து விடும் என்று கூறி அருளியிருக்கிறார்.

ஒரு மேம்பட்ட சக்திக்காக தன் உடலை உகுத்து எங்கும் பரவியிருக்கும் அவரின் அருள் அரவிந்த பகதர்களுக்கு மட்டுமே உரிய ஒன்று இல்லை; எல்லோருக்கும் எல்லோரிடமும் அவரது கருணை மழை பொழிந்து கொண்டே இருக்கும்.

அவரை நினைவில் கொண்டு முன்னேறுவோம்!

நன்றி, வணக்கம்.

                           ********

tags- அரவிந்தர் – 2

PLEASE JOIN US TODAY SUNDAY 15-8-2021

15-8-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer – LONDON BALASUBRAHMANYAN

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON VAISHNAVI DEVI TEMPLE IN JAMMU KASHMIR8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY RANI SRINIVASAN

–20 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 60 minutes 

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME ; BST;

 6-30 PM INDIAN TIME.

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

 tags- publicity1582021