உலக இந்து சமய செய்தி மடல் 2-1-2022 (Post No.10,517)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,517

Date uploaded in London – –    2 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை JANUARY 2-ஆ ம் தேதி 2022 ஆம் ஆண்டு

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

xxxx

சபரிமலையில் மகரவிளக்கு காலம் துவக்கம்

சபரிமலையில் மகரவிளக்கு கால நெய்யபிஷேகம்  துவங்கியது. நான்கு நாள் இடைவெளிக்கு பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் மண்டலபூஜை முடிந்து டிச.26 ல் அடைக்கப்பட்ட நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறக்க, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிேஷகம் நடத்தி நெய்யபிேஷகத்தை துவக்கி வைத்தார். பின்னர் கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.

நெய்யபிஷேகம் ஜன.18 வரை நடைபெறும். பக்தர்கள் நிலக்கல், பம்பை வழி மட்டுமல்லாமல் எருமேலி, அழுதை, கரிமலை வழியாகவும் வரத்துவங்கி உள்ளனர்.பெருவழிப்பாதையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யானை உள்ளிட்ட வன விலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது. முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி எருமேலி மற்றும் பம்பையில் தொடர்ந்து செயல்படுகிறது.

XXXXX

தஞ்சையில் ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு

தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.

தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான பச்சை மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் கூறியதாவது: தஞ்சை அருளானந்தநகர் சாமியப்பன் என்பவரது வங்கி லாக்கரில் இருந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்ளது. எவ்வித ஆவணங்களும் இல்லாததால் பச்சை மரகத லிங்கம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு, ரூ.500 கோடியாகும்.

மீட்கப்பட்ட சிலை 2016ல் நாகை திருக்குவளையில் உள்ள கோயிலில் காணாமல் போனது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாமியப்பனுக்கு எப்படி மரகத லிங்கம் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Xxxx

திருத்தணி கோவிலில் நடைபெறும் படித்திருவிழாவில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் டிச., 31-ம் தேதி திருப்படித் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளன இந்த படிக்கட்டுகள் ஒரு வருடத்திற்கான நாட்களை குறிப்பதால் ஆங்கில புத்தாண்டு வழிபாடு இங்கு விமரிசையாக நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். படிகளில் மஞ்சள், குங்குமம் பூசி கற்பூரம் ஏற்றி வழிபடுவர்.

அதன்படி டிசம்பர் 31-ம் தேதி  திருத்தணி கோவிலில் படித்திருவிழா நடைபெற்றது. காலை 8.30 மணி அளவில் திருத்தணி மலைக்கோவில் அடிவாரத்தில் எம்.எல்.ஏக்கள். ,அதிகாரிகள் கலந்து கொண்டு படித்து விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் 50-க்கும் மேற்பட்ட பஜனை குழுவினர், ஒவ்வொரு திருபடிகள் வழியாக தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்தனர்.


பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு படிகளுக்கும் மஞ்சள், குங்குமம், வைத்து மலர் தூவி வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் செய்துஇருந்தனர். புத்தாண்டு தினமான நேற்று சிறப்பு தரிசனமும் நடைபெற் றது.

Xxxxx

காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோயிலில்  மீண்டும் தரிசனம் துவக்கம்

காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவிலில் வழக்கமான தரிசனம் துவங்கிவிட்டது. என்றும் இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட சலசலப்பால் நிகழ்ந்த ஜன நெரிசலை அதிகாரிகள் ஐந்தே நிமிடத்தில் கட்டுப்படுத்தினர் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சனிக்கிழமையன்று 27000 பேர் மாதா வைஷ்ணவி தேவியை தரிசனம் செய்தனர்.

 இரண்டு நாட்களுக்கு முன்னால் வைஷ்ணவ தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

காஷ்மீரின் கட்ரா என்ற பகுதியில் வைஷ்ணவ தேவி கோயில் உள்ளது. புத்தாண்டு என்பதால் ஆயிரக்கணக்கானவர்கள் தரிசனம் செய்ய வந்திருந்தனர். கூட்டம் அதிகம் வர பக்தர்கள் முண்டியடித்தனர். வரிசையில் இருந்தவர்கள் பலர் அம்மனை வணங்க வேகமாக செல்ல முற்பட்டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது.

விபத்து குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.  மாநில  அரசும் பெரும் உதவித்தொகையை அறிவித்தது

பக்தர்களில் இளம் வயதினரும்  இருந்தனர். அதிலுள்ள இரண்டு குழுக்களிடம் ஏற்பட்ட மோதலே  ஜன நெரிசலை உண்டாக்கியது என்று பெரிய போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இந்த விபத்து பற்றி விசாரித்து எதிர்காலத்தில் இப்படி நடக்காமல்  தடுக்க மூன்று பேர் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது

xxx

பாலாஜி வெங்கடேச பெருமாள் உண்டியல் வருவாய் ரூ.833 கோடி

திருப்பதி திருமலையில் உள்ள பாலாஜி வெங்கடேச பெருமாள் கோவிலில் கடந்தாண்டு உண்டியல் காணிக்கை 833 கோடி ரூபாய் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் உண்டியல் வருவாயும் குறைந்துள்ளது. உண்டியல் வருமானம் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் பெரிய வருமானமாக கருதப்படுகிறது.

கடந்தாண்டு உண்டியல் வருவாய் பெருமளவில் குறைந்து உள்ளது.வழக்கமாக 1,200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கிடைத்து வந்த ஆண்டு உண்டியல் வருவாய், இந்தாண்டு 833 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது. மேலும் 1.04 கோடி பக்தர்கள் மட்டுமே இந்தாண்டு ஏழுமலையானை தரிசனம் செய்துஉள்ளனர்; 48.75 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்; 5.96 கோடி லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

வழக்கமாக நாளொன்றுக்கு சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசிப்பர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சில நாட்களில் மட்டும் கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஏழுமலையானுக்கு கார் நன்கொடை

ஏழுமலையானுக்கு ‘இன்னோவா’ கார் நன்கொடையாக வழங்கப்பட்டது.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் விஸ்வநாத் என்பவர் 29 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா கிரஸ்டா காரை, நேற்று காலை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார். தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டியிடம் காருக்கான சாவி மற்றும் ஆவணங்களை விஸ்வநாத் அளித்தார்.


Xxx

திருப்பதியில் புத்தாண்டு விசே‌ஷ பூஜைகள் ரத்து

திருப்பதி கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி விசே‌ஷ பூஜைகள் பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக விசே‌ஷ பூஜைகள், கூடுதலாக பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது ரத்து செய்யப்பட்டன.


வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஜனவரி மாதத்திற்கான ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.



கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று நேரடியாக வழங்கப்பட இருந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி 10-ந்தேதி வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி கோவிலில் ஜனவரி 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை முக்கிய வி.ஐ.பி. பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர்.


பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது.
ஜனவரி 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் தரிசனம் வழங்கப்படும்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மட்டுமே வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Xxxx

அனைவருக்கும்   ஞான மயம் குழுவினர்  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிகின்றனர் .

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND

நன்றி, வணக்கம்

 tags- tamilhindu, newsroundup, 212022 

உலக இந்து சமய செய்தி மடல் 5-12-2021 (Post No.10413)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,413

Date uploaded in London – –   5 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை டிசம்பர் 5 -ஆ ம் தேதி 2021 ஆம் ஆண்டு

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

Xxxx

கிருஷ்ணர் சிலையால் மதுராவில் பரபரப்பு! போலீசார் குவிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியான மதுரா நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுரா நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் பகுதி உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் இருப்பதாக கருதப்படுகிறது. அந்த பகுதியில் தற்போது ஒரு மசூதி இருக்கிறது , அந்த மசூதிக்குள் புகுந்து கிருஷ்ணர் சிலையை வைக்க உள்ளதாகவும் 4  அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.  அவர்கள் குறிப்பிடும் மசூதிக்கு மிக அருகாமையில் கேஷவ் தேவ் கோயிலும் இருப்பதால் அப்பகுதியில் அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அகில பாரத இந்து மகா சபா, ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி நிர்மன் நியாஸ், நாராயணி சேனா மற்றும் ஸ்ரீகிருஷ்ண முக்தி தளம் ஆகிய நான்கு அமைப்புகளும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் இப்போது ஒரு மசூதி உள்ளது, எனினும் அங்கு சிலையை வைப்போம் என்று அவர்கள் கூறி உள்ளனர்.

அவர்களுடைய இந்த மனுவை நிராகரித்துள்ள மாவட்ட நீதிபதி, அமைதியை சீர்குலைக்கும் எந்த்வொரு நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு பணிக்காக மதுரா நகரம் மூன்றாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் அப்பகுதி உள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மசூதியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

XXXX

ஐயப்ப பக்தர்களுக்கு நிதி உதவி, இந்து மக்கள் கட்சி கோரிக்கை

அறநிலையத்துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், 5,000 ஏழை பக்தர்கள், சபரி மலை யாத்திரை மேற்கொள்ள, 6,000 ரூபாய் மானியம் வழங்க வேண்டும்’ என்று, இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்து மக்கள் கட்சி, ஈரோடு மாவட்ட செயற்குழு, பொதுக்குழு கூட்டம், பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில்  நடந்தது. மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.

இதில் பங்கேற்ற, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது: தமிழகத்தில், அனைத்து கோவில்களிலும் வழிபாடு தொடங்கி விட்டது. ராமேஸ்வரத்தில் புனித தீர்த்தங்கள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால், காசிக்கு இணையான திருத்தலமான பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், திதி, தர்ப்பணம் தர தடை தொடர்கிறது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு, டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க கூடாது. இதை வலியுறுத்தி டிச.,6ல், அனைத்து டோல்கேட்களிலும் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தவுள்ளோம்.

அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும், 5,000 ஏழை பக்தர்கள், சபரிமலை யாத்திரை மேற்கொள்ள, 6,000 ரூபாய் மானியம் வழங்க வேண்டும். கோவை மண்டலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை முடக்கி வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்து மக்கள் வெளியிட்ட ட்விட்டர் அறிவிப்பில் ஹஜ் யாத்திரைக்காக முஸ்லீம்களுக்கும், ஜெருசேலம் யாத்திரைக்காக கிறிஸ்தவர்களுக்கும் பெருமளவு நிதி வழங்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளது . இந்து மக்கள் பெரும்பலாளாகவுள்ள தமிழ் நாட்டில் தமிழ்நாடு அரசு இந்துக்களுக்கு எந்த உதவியும் வழங்காதது பெரிய மனக்கசப்பை ஏற்படுத்தி வருகிறது. வடக்கேயுள்ள புனிதத் தலங்களுக்குச் செல்ல இந்து மத அர்ச்சகர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது,.

XXXXX

கோவில் இடிப்பு விவகாரம் டி.ஆர்.ஓ., மீது புகார்

ஸ்ரீபெரும்புதுார்-சிவன் கோவில் இடிக்கப்பட்ட விவகாரத்தில், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் மீது, ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில், ஹிந்து அமைப்பினர் நேற்று புகார் அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, கிளாய் கிராமத்தில், தபோவனம் அறக்கட்டளை சார்பில், கனக காளீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் ஸ்ரீபெரும்புதுார் ஏரி கலங்கல் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக, வருவாய்த் துறை சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.முன்னறிவிப்பின்றி, நவ., 25ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்ற குழுவினர், பொக்லைன் இயந்திரத்தால் கோவிலை இடித்து தரைமட்டமாக்கினர்.

இதை கண்டித்து, ஹிந்து அமைப்பினர், 50க்கும் மேற்பட்டோர் பேரணியாக ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் அலுவலகம் சென்றனர்.அவகாசம் வழங்காமல் கோவிலை இடித்து, பொருட்சேதம் ஏற்படுத்தியதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கோவில் இருந்த இடத்தில் 15 சென்ட் பட்டா நிலத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என, தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்திற்கு சென்ற அவர்கள், கோவிலை இடித்த மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், நில அளவை ஆய்வாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் மனு அளித்தனர்.

XXX

பாபர் வருகைக்கு முன் இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே: அசாம் முதல்வர்

‘ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. முகலாய மன்னர் பாபர் வருவதற்கு முன், இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களாக தான் இருந்தனர்,” என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.

அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நேற்று அவர் கூறியதாவது: ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. உலகில் எந்த நாட்டில் ஹிந்துக்கள் வசித்தாலும், அவர்கள் இந்திய வம்சாவளியினராக தான் இருப்பர்.

முகலாய மன்னர் பாபர் 1526ல் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு முன் வரை இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டுமே இருந்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டால், அவர்கள் எப்போது வேண்டு மானாலும் இந்தியாவுக்கு வரலாம்; அது, அவர்களது உரிமை.

கோவில் கட்டுவது, கோவிலை சீரமைப்பது ஆகிய பணிகள் மதவாதமாக கூறப்படுவது கண்டிக்கத்தக்கது. கோவில்கள் கட்டுவதும், சீரமைப்பதும் ஹிந்துக்களின் உரிமை. ஒரு ஹிந்துவால் மட்டுமே உண்மையான மதச்சார்பின்மைவாதியாக இருக்க முடியும். ஹிந்துத்வா என்பது ஒரு வாழ்க்கை முறை. இதை தடுக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது.

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஹிந்துத்வா இந்தியாவில் உள்ளது. இங்குள்ள கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களின் முன்னோர்கள் ஹிந்துவாகத் தான் இருந்தனர். இந்தியா இருக்கும் வரை ஹிந்துத்வாவும் இருக்கும். இவ்வாறு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.

XXXX

தமிழ் புத்தாண்டு மாற்றம்? ஹிந்து முன்னணி எதிர்ப்பு!

 தமிழ் புத்தாண்டு என தை முதல் நாளை அறிவிக்க, ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் அரசு, மக்கள் உணர்வை மதிக்காமல், தமிழ் புத்தாண்டின் மரபுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், தமிழர்களின் மாண்பை சீர்குலைக்கிறது.புத்தாண்டு என்பது ஒரு நாள் விழா. தை திருநாள் என்பது போகி, பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளி கொண்டாட்டம், விநாயகர் சதுர்த்தி என தமிழர் பண்டிகைகளையும், ஹிந்து வழிபாட்டையும் குறை கூறுவது வழக்கமாக உள்ளது. இதன் பின்னணியில், மதமாற்ற சக்திகளின் சதி உள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

XXXXX

வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் துவக்கம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பகல்பத்து உற்சவத்துடன், வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. திவ்ய தேசங்களில் முதன்மையான, பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா,  ஜனவரி, 4ம் தேதி வரை நடக்கிறது.

. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது, பூலோக வைகுண்டம் என்ற சிறப்புகளை கொண்டது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது. 3-ம் தேதி 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது .


வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் என அழைக்கப்படும் பரமபதவாசல் வரும் 14ம் தேதியன்று அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்படும். அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது.

 
ஏகாதசி பெருவிழா துவங்கியதை முன்னிட்டு, ஸ்ரீரங்கமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Xxxxx

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஒரே நாளில் 27, 840 பேர் சாமி தரிசனம்

சனிக்கிழமையன்று ஒரே நாளில் 42,354 பக்தர்கள் தரிசனம் செய்ய சபரிமலையில் குவிந்தனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை, 27,840 பக்தர்கள் தரிசனம் செய்து இருந்த நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் 42,354 பக்தர்கள் தரிசனம் செய்ய காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இதனால் வரும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் மகரவிளக்கு தினமான 2022ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வரை ‘வெர்ச்சுவல் க்யூ’,மூலம் தினசரி முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக அதிகரிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. அதோடு ‘ஸ்பாட் புக்கிங்’ முன்பதிவு மூலம் தினசரி 5000 பக்தர்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

XXX

திருமலை மற்றும் திருப்பதியில் மீண்டும் தரிசன டிக்கெட்

சமீபத்தில் திருமலை மற்றும் திருப்பதியில் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதுடன் மலைப் பாதையில் மண் சரிவும் ஏற்பட்டது.

இதனால் திருமலைக்கு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த நாட்களில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தும், திருமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்காக தேவஸ்தானம் ஒரு புதிய வாய்ப்பை வழங்கி உள்ளது.

நவ., 18ம் – டிச., 10 வரையிலாத தேதிகளுக்கு 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருமலைக்கு வர முடியாத நிலையில் அவர்கள் தங்கள் தரிசன தேதியை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தேவஸ்தான இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன.

xxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND

நன்றி, வணக்கம்

tags- hindutamil, newsroundup, 5122021

உலக இந்து சமய செய்தி மடல் 21-11-2021 (Post No.10,364)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,364

Date uploaded in London – –   21 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை நவம்பர் 21 -ம் தேதி 2021

ஆம் ஆண்டு

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

Xxxx

கார்த்திகை திருவிழா-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நவம்பர் 19ம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது.

மகாதீபம் ஏற்றுவதற்கு தூய செம்பினால் செய்யப்பட்ட தீப கொப்பரை பயன்படுத்தப்பட்டது. தீப கொப்பரை, தீபத்திற்கு தேவையான நெய், திரி ஆகியவை கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மகா தீபம் ஏற்றுவதற்காக 3 ஆயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. தீப நெய் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையாகும். இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் காட்சியளிக்கும். கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலைக்கு வர முடியாதவர்கள் இந்த 11 நாட்களில் வந்து மகாதீபத்தை தரிசனம் செய்து கொள்ளலாம்.

40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

மாலையில் கோவிலில் சாமி சன்னதியில் இருந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஆடியபடி தனித்தனியாக வெளியே வந்து சாமி சன்னதி முன்பு உள்ள தீப மண்டபத்தில் இருந்த தங்க விமானத்தில் எழுந்தருளினர்.

அதைத்தொடர்ந்து சுமார் 6 மணியளவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் அருகே வந்து காட்சி அளித்தார். பின்னர் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கிரிவலம் சென்ற பக்தர்கள், நகரின் வீதிகள் மற்றும் வீடுகளின் மாடிகளில் நின்றிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கம் எழுப்பி பரவசத்துடன் மகாதீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர்.

XXX

ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்கள்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கோவில்களில் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்கள் ஏற்றப்பட்டது.

நாமக்கல்லில் கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 19ம் தேதி வெள்ளிக்கிழமையன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண்கள் வீடுகள், தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் நேற்று 1,008 தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.

பின்னர் நாமக்கல் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

இதேபோல் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டன.

மேலும் நகர் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீதிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்ததை காண முடிந்தது. பெரும்பாலான கோவில்களின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சுற்றிலும் நின்ற பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு உப்பை தூவினர்.

XXX

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்


பெரியகார்த்திகையான  வெள்ளிக்கிழமையன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாலை 6 மணிக்கு பொற்றாமரைகுளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பிரகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. மீனாட்சி, சுந்தரேசுவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

பின்னர் அவர்கள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதியில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளினார்கள். அங்கு இரவு 7 மணிக்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Xxxxxx

திருமலையில் கனமழை- பாலாஜி கோவிலைச் சுற்றி வெள்ளம்

திருப்பதி: திருமலையில் பெய்த கன மழை காரணமாக அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மலைப் பாதையில் 13 இடங்களில் மண் சரிந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மழை காரணமாக தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் வேறு ஒரு நாளில் வந்து தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கிஉள்ளது

திருப்பதி அருகே பாடிபேட்ட பகுதியில் சொர்ணமுகி ஆற்றங்கரையில் பழங்கால சிவன் கோவில் இருந்தது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக சிவன் கோவில் முற்றிலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. 

திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில் மழையா ல் சாமி தரிசனமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதே போல கேரளத்தில் சபரிமலையில் கன  மழை காரணமாக சனிக்கிழமைய ன்று  அய்யப்ப சாமி தரிசனம்  நிறுத்தி வைக்கப்பட்டது.

XXXX

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்: மத்திய அமைச்சர்

”ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்,” என மத்திய அமைச்சர் முரளிதரன் வலியுறுத்தினார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே சில தினங்களுக்கு முன் எலப்புள்ளியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.,பிரமுகர் சஞ்ஜித் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரது வீட்டிற்கு, வெளியுறவுத்துறை துணை அமைச்சர் முரளிதரன் வந்தார். சஞ்ஜித் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதன் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலத்தில் இது போன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு மாநில அரசு தான் பொறுப்பு ஏற்கவேண்டும். சஞ்ஜித் கொலை வழக்கில் போலீஸ் விசாரணையை தொய்வு ஏற்படுத்த சில சக்திகள் மாநில அரசின் பின்னால் செயல்படுகின்றன.

எனவே, இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ., ) விசாரணை நடத்த கேரள அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு, முரளிதரன் தெரிவித்தார்.இதன்பின், திருச்சூர் மாவட்டம் சாவக்காட்டில் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் பிஜுவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் அளித்துள்ளனர்.

சஞ்சித்  என்பவரை  மனைவியின் கண் முன்பாக முஸ்லீம் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெட்டிக் கொன்றதாக பாரதீய ஜனதா குற்றம் சாட்டுகிறது. இதுவரை கேரள போலீசார் யாரும் கைது செய்யாதது மேலும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. ஏனெனில் அவர்கள் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளது.

சஞ்ஜித் கொலை செய்யப்பட்டபோது, அப்பகுதியில் ஒரு போலீஸ்காரர் இருந்துள்ளார். இது தெரிந்தும், போலீசார் குற்றவாளிகளை தப்பவிட்டுள்ளனர். கொலை சம்பவம் பதிவான சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் இருந்தும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க திணறுகின்றனர். இவை போலீஸ் விசாரணையின் தொய்வினை காட்டுகிறது.


இதில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளின் அழுத்தம் உள்ளது. குற்றவாளிகளை பிடிப்பதில் போலீஸ் தாமதம் செய்தால், மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க கோரி நாளை (22ம் தேதி ) மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளோம்.இவ்வாறு, சுரேந்திரன் தெரிவித்தார்.

XXXX

நரேந்திர கிரி மரண வழக்கு குற்றப் பத்திரிகை தாக்கல்

நரேந்திர கிரி மரணம் தொடர்பான வழக்கில், அவரது சீடர் உட்பட மூன்று பேருக்கு எதிராக, சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள பாகம்பரி மடத்தில் செப்., 20ல், மடத்தின் தலைவரும், ‘அகில பாரதிய அகார பரிஷத்’ என்ற சாதுக்களுக்கான அமைப்பின் தலைவருமான நரேந்திர கிரி, துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அவரது சீடர் ஆனந்த் கிரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.


இந்நிலையில் இந்த வழக்கில், அலகாபாத் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.அதில் ஆனந்த் கிரி, அலகாபாத் ஆஞ்சநேயர் கோவில் பூசாரி ஆத்யா திவாரி மற்றும் அவரது மகன் சந்தீப் திவாரி ஆகிய மூன்று பேரும், சதி செய்து நரேந்திர கிரியை தற்கொலைக்கு துாண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

XXX

சபரிமலையில் ‘ஹலால்’ சர்க்கரையா? விளக்கம் கேட்டது கேரள ஐகோர்ட்

 சபரிமலையில் பயன்படுத்துவது ‘ஹலால்’ சர்க்கரை என தகவல் பரவி வரும் நிலையில் அது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் மாநில அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதமான அரவணை பாயாசம் தயாரிக்க சர்க்கரை சப்ளை செய்யும் உரிமை டெண்டர் மூலம் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்துதான் சர்க்கரை வருகிறது. சில நாட்களாக பம்பை குடோனில் இருந்து வரும் சர்க்கரை சாக்குகளில் ‘ஹலால்’ என்ற முத்திரை உள்ளது; இது தொடர்பான வீடியாக்களும் வெளியானது.

இந்நிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி சன்னிதானம் போலீசில் கொடுத்த புகாரில், அரவணை தயாரிப்பு ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும், ஹலால் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது என்றும் வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சபரிமலை கர்ம சமிதி ஒருங்கிணைப்பாளர் குமார், கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அப்பம், அரவணை தயாரிக்க ‘ஹலால்’ முத்திரை உள்ள சர்க்கரையை பயன்படுத்த தடை விதிக்கும் படி கோரியுள்ளார்.

இதில் ஆஜாராகி விளக்கமளித்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு வழக்கறிஞர், 2019ல் வாங்கிய சர்க்கரையில் சில பாக்கெட்டுகளில் ஹலால் முத்திரை இருந்தது என்றும், இது வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப தயாரிக்கப்பட்டடு தவறுதலாக வந்து விட்டது என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும் படி கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

XXXX

லண்டனிலிருந்து இரண்டு செய்திகள்

தீபாவளித்  திரு நாளை ஒட்டி  பிரிட்டிஷ் பிரதமர் பாரிஸ் ஜான்சனும் பிரிட்டிஷ் உட்துறை அமைச்சர் ப் ரிதி படேலும் லண்டனில் உள்ள நீஸ்டன்  சுவாமி நாராயணன் கோவிலுக்கு நவம்பர் 7ம் தேதி விஜயம் செய்தனர். அங்குள்ள சுவாமிநாராயணரின் பா ல வடிவ சிலைக்கு அபிஷேகமும் செய்தனர். பின்னர் சுவாமி நாராயண் தொண்டர்கள் , கோவிட்  வைரஸை எதிர்த்து செய்து வரும் பணிகளைக் காட்டும் கண்காட்சியையும் பார்வையிட்டுப் பாராட்டினார்கள்

இது ஒரு புறம் இருக்க, இந்தியாவின் ஒடிசா மாநில பூரி நகரில் உள்ள ஜகன்னாத் கோவிலைப் போல பிரிட்டனிலும் ஒரு கோவில் கட்டும் பணி  துவக்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழாவும் பூஜையும் சவுத்தாலி ல் உள்ள ராமர் கோவிலில் நடந்தது 4 மில்லியன் பவுண்ட் செலவில் 2024ல் கோவிலை எழுப்புவதற்கு ஸ்ரீ ஜெகன்நாத் சொ சைட்டி முடிவு செய்துள்ள து.

ஒரிஸ்ஸாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வேப்ப மரத்தின் அடிமரத்திலிருந்து செதுக்கப்பட்ட , ஜெகான்நாதன் பலபத்ரன், சுபத்ரா , சுதர்சன சக்ரம் ஆகியோருக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட து

XXXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND

நன்றி, வணக்கம்

tamilhindu, newsroundup, 211121

உலக இந்து சமய செய்தி மடல் 15-8-2021 (Post No.9979)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9979

Date uploaded in London – 15 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை AUGUST 15  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

நேயர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்

XXXX

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்-

58 பேருக்கு பணிநியமன ஆணை



அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 1972ல் சட்டம் கொண்டு வந்தார். தற்போதைய திமுக அரசு இதனை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சி எடுத்தது.


இதையடுத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணையை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 14- ஆம் தேதியன்று, வழங்கினார்.

மேலும் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், ஓதுவோர் உள்பட மொத்தம் 216 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.

தமிழில் அர்ச்சனை புதிதல்ல‘ : ஹிந்து அறநிலையத் துறை கமிஷனர் விளக்கம்

‘கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் முறை, புதிதாக வந்ததல்ல’ என, ஹிந்து அறநிலையத் துறை கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார்.


‘கோவில்களில், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய, சட்ட உரிமை உள்ளதா’ என்று கேள்வி எழுப்பிய, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவருக்கு, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் அளித்துள்ள பதில்: தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம், புதிய திட்டம் இல்லை. இத்திட்டம், 1974ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 1996ல் புத்துயிர் பெற்றது. 1974, 1998 ஆண்டுகளில், இத்திட்டத்தை எதிர்த்து, பல வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில், 1992ல் புகார்தாரர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சார்பில் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, கோவில்களில் ஆகம விதிப்படி சமஸ்கிருத வழிபாடு உள்ளது. அதேநேரம், ஒப்பற்ற தமிழ் பக்தி இலக்கியமான தேவாரம், திருவாசகமும் ஏற்கப்பட்டது. தமிழில் அர்ச்சனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இருப்பினும், ஆகம ரீதியான அர்ச்சனைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோருக்கு, அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Xxxx

பொங்கல் வைத்து தலையில் சுமந்து அம்மனுக்கு படைத்த கவர்னர் தமிழிசை

தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை, பொங்கல் வைத்து தலையில் சுமந்து, அம்மனுக்குப் படைத்து வழிபட்டார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராகவும் உள்ளார். தமிழகத்தில் ஆடிப் பண்டிகை கொண்டாடுவது போல் தெலங்கானாவில் “போனாலு” என்ற கலாச்சாரப் பாரம்பரிய விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் நிறைவு விழா ஆடி அமாவாசை அன்று நடக்கும். அந்நிகழ்வில் பங்கேற்க ஆளுநர் தமிழிசை தெலங்கானா சென்றுள்ளார்.

தெலங்கானா ராஜ்பவனில் ஆடி அமாவாசையன்று நடைபெற்ற போனாலு திருவிழாவில் பெண்கள் பொங்கல் வைத்து, தலையில் சுமந்து சென்று அம்மனுக்குப் படைத்து வழிபட்டனர்.

அதையடுத்து அவர் பாரம்பரிய முறைப்படி போனாலு பூஜையில் பங்கேற்றார். அவர் ராஜ்பவனில் பொங்கல் வைத்து, அதைத் தலையில் சுமந்து சென்று அம்மனுக்குப் படையலிட்டு வழிபட்டார்.

xxxxxxx

காஷ்மீரில் கீர்பவானி துர்கா கோவிலில் ராகுல் வழிபாடு

காஷ்மீர் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று, கந்தர்பல் மாவட்டத்தின் துல்முல்லாவில் உள்ள கீர்பவானி துர்கா கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார். அத்துடன் ஹஸ்ரத்பல் தர்காவிலும் பிரார்த்தனை செய்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமதுவின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காஷ் மீருக்கு வந்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை ராகுல் காந்தி திறந்து வைத்து தொண்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.  

XXXX

முதல்வர் மனைவி திருமலையில் வழிபாடு

திருப்பதி/திருமலை பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, ஆகஸ்ட் 8ம் தேதி  காலை குடும்பத்தினருடன் வழிபட்டார்.

ஆகஸ்ட் 7-ம் தேதி  இரவு குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர், காலை, ‘வி.ஐ.பி., பிரேக்’ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள், வேத ஆசீர்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து, தீர்த்தம், லட்டு பிரசாதங்கள் வழங்கினர்.

xxxxx

திருப்பதி கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ. 55.5 கோடி

திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.55 கோடியே 58 லட்சம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

ஜூலை மாதம் கிடைத்த வருமானம் குறித்து திருமலை, திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 5 லட்சத்து 32 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஜூலை மாத உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.55 கோடியே 58 லட்சம் கிடைத்தது. இ.உண்டியல் மூலமாக ரூ.3 கோடியே 97 லட்சம் கிடைத்தது. 35 லட்சத்து 26 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

7 லட்சத்து 13 ஆயிரம் பக்தர்களுக்கு தறிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கி உள்ளனர். 

Xxxx

வங்க தேசத்தில் அட்டூழியம்; 4 இந்துக் கோவில்கள் சூறை

வங்கதேசத்தில் நான்கு ஹிந்து கோவில்களை சூறையாடியதாக 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ருப்ஷா உபசிலா மாவட்டம் ஷியாலி நகரில், இரு மதத்தினர் இடையே சமீபத்தில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு கும்பல் அங்குள்ள ஹிந்து கோவிலுக்குள் புகுந்து கடவுள் சிலைகளை சேதப்படுத்தியது. இதையடுத்து ஷியாலி புர்பபரா பகுதிக்குச் சென்ற கும்பல் ஹரி மந்திர், துர்கா மந்திர், கோவிந்தா மந்திர் ஆகிய கோவில்களில் புகுந்து அங்கிருந்த கடவுள் சிலைகளை சூறையாடியது. அப்போதும் வெறி அடங்காமல் ஹிந்து சமூகத்தினரின் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தினர். இந்த வன்முறை தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து இமாம் மவுலானா நசிமுதின் கூறியதாவது:மசூதியில் தொழுகை நடக்கும்போது சிலர் பஜனை பாடல்கள் பாடி வந்தனர். அவர்களிடம் தொழுகை நடக்கும் போது பஜனை வேண்டாம் என்றேன். அப்போது ஒருவர் என்னை தள்ளியதால் வாய்த் தகராறு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டை ருப்ஷா உபாசிலா பூஜா உத்ஜபன் பரிஷத் பொதுச் செயலர் கிருஷ்ண கோபால் சென் மறுத்துள்ளார். ”இமாமை யாரும் தள்ளவில்லை. வாய்த் தகராறு முடிந்த பின் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர் கள் இங்கு வந்து கோவில்கள், கடைகள், வீடுகளை சூறையாடினர்,” என்றார்.

Xxxxxxx

ராமர் கோவில் கட்டுமானத்தை பக்தர்கள் பார்க்க அனுமதி

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, அடித்தளம் அமைக்கும் பணி 60 சதவீதம் முடிந்து விட்டது.

கோவிலின் கட்டுமான பணிகளை பார்க்க அனுமதிப்பது என ராமர் கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

இதற்காக, தற்காலிக கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு சுவர் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில், துவாரங்களுடன் கூடிய 15 அடி அகல இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. அந்த வேலிக்கு பின்னால் இருந்தபடி, கட்டுமான பணிகளை பக்தர்கள் பார்க்கலாம்

என்று அறக்கட்டளை நிர்வாகி சம்பத்ராய் தெரிவித்தார்.

Xxxx

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் முக்தி அடைந்தார்


77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் , உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர்  பொருத்தப்பட்டது.

மதுரை ஆதீனத்தின் உயிர் வெள்ளிக் கிழமை இரவில் பிரிந்தது.

தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு தமிழக முதல்வர்.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

XXXX

மதுரை ஆதீனத்தின் புதிய 293வது குருமகா சன்னிதானம் தேர்வு.

ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் நியமிக்கபட்டுள்ளார். சிலநாட்கள் சென்ற பின்பு ஆதினப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.

xxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

 tags- Tamil hindu, Newsroundup, 1582021

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 15-8 -2021 (Post No.9978)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9978

Date uploaded in London – 15 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN

XXX

WE WISH YOU ALL A VERY HAPPY INDEPENDENCE DAY.

XXXX

Sri Aurobindo’s 150th birth anniversary celebrations at Auroville, Ashram TODAY

HERE IS SOME NEWS FROM PUDUCHERRY:

Auroville will bring together a programme to commemorate Sri Aurobindo’s 150th birth anniversary celebrations on August 15.

A live streaming of the function is organised, according to a release from the Auroville Foundation. Aurovillians participate in the invocation of Sri Aurobindo’s Gayatri Mantra at dawn.

A website has been specially created for the 150th year for event updates, articles, blogs and links dedicated to the exploration of Sri Aurobindo as the year progresses

Sri Aurobindo Ashram will also have a quiet celebration of the 150th birth anniversary of Sri Aurobindo today with darshan of the Samadhi.

Visitors will be allowed to the Samadhi and they will be presented a darshan day card which will have messages based on the philosophy of Sri Aurobindo and his spiritual collaborator Mirra Alfassa, known as the Mother of the Ashram.

 XXXX

Centre grants Rs 55 crore aid for Simhachalam temple development in Andhra Pradesh

The Centre has sanctioned Rs 55 crore for the development of Simhachalam temple under the Pilgrimage Rejuvenation And Spiritual Augmentation Drive (PRASAD), ANDHRA PRADESH Minister for Tourism Muttamsetti Srinivasa Rao said on Friday. A Central team led by Under Secretary SS Varma arrived IN VISHAKAPATNAM on Friday to review PRASAD scheme proposals.

Speaking to media persons after a meeting with the Central team, the minister said they had sent proposals worth Rs 70 crore for the development of the temple as part of the temple tourism scheme and owing to the pandemic, there was a delay in approval. He said the plan to construct an underpass was shelved following suggestion of the Chinna Jear Swamy that it will be in violation of ‘Agama Sastra’. Hence, it has been decided to revive the steps route from Madhavadhara to Simhahachalam.  

As part of the development of temple pushkarini for the convenience of devotees, a bathing ghat and changing rooms will be constructed. A queue complex on the model of Tirumala with a capacity of 2,000 people will be constructed atop Simhachalam.

A hall with all amenities for devotees will be constructed at the foothill. A walking track will be laid around the Simhachalam hill for the convenience of people who undertake circumambulation (giri pradakshina) on the occasion of Giri Pournami every year.

On Giri Pournami, thousands of people undertake a 32-km trek (pradakshina)

Union Tourism Under Secretary SS Varma said they will submit a report within 10 days. Earlier, the team led by Varma visited Simhachalam temple.

XXX

Onam: KTDC to hold payasam fests

The Kerala Tourism Development Corporation will organise payasam festivals across KERALA state from Wednesday as part of Onam celebrations. Expert chefs of KTDC would come out with delicious payasams without compromising on the traditional taste, quality and aroma of the dessert.  

The payasam sale counter will be opened at KTDC Grand Chaithram at Thampanoor, IN THIRUVANANTHAPURAM from Wednesday till the Thiruvonam day on August 21 and will be working from 9 am to 9 pm.

Payasam counters will also be operated in other towns in Kerala.

Payasam is a sweet liquid with milk and spices served in Hindu festivals.

Xxx

Miscreants attack Hindu temples in Bangladesh

Miscreants attacked at least four Hindu temples, some shops and households belonging to the minority community in Bangladesh’s Khulna district, prompting police to arrest ten people and beef up security in the area, according to a media report.

The incident took place on Saturday LAST WEEK in Shiali village in Rupsha Upazila following a heated altercation between Hindu and Muslim residents on Friday night, the Dhaka Tribune NEWSPAPER  reported.

According to local residents and victims, the miscreants first attacked the Shiali Mahasmashan temple.

They vandalised the idols in the temple and the crematorium.

From there, they went to the Shiali Purbapara area, where they vandalised the idols of Hindu gods and goddesses in Hari Mandir, Durga Mandir and the Govinda Mandir, the report said.

Six shops and two homes of the local Hindu community members were also vandalised, it said.

Krishna Gopal Sen, general secretary of Rupsha Upazila Puja Udjapan Parishad, said that at least 10 idols at four temples were vandalised during the attacks.

The Hindus were going towards the temple while singing kirtan during the Esha prayers, one of the five mandatory Islamic prayers, which led to the scuffle, said the local mosque’s Imam Maulana Nazim Uddin.

XXXX

8-yr-old Hindu boy becomes youngest person charged with blasphemy in Pak

An eight-year-old Hindu boy is being held in protective police custody in Pakistan after becoming the youngest person ever to be charged with blasphemy in the country, a media report said on Monday.

According to the Guardian news report, the boy’s family is in hiding and many of the Hindu community in the conservative district of Rahim Yar Khan in Punjab province, have fled their homes after a Muslim crowd attacked a Hindu temple after the boy’s release on bail last week.

On August 7, 20 people were arrested in connection with the temple attack.

The boy is accused of intentionally urinating on a carpet in the library of a madrassa, where religious books were kept, last month.

Speaking from an undisclosed location, a member of the boy’s family told the Guardian: “He (the boy) is not even aware of such blasphemy issues, and he has been falsely indulged in these matters. He still doesn’t understand what his crime was and why he was kept in jail for a week.

“We have left our shops and work, the entire community is scared and we fear backlash. We don’t want to return to this area. Blasphemy charges filed against a child have shocked even legal experts in Pakistan.

XXXX

77-year-old pontiff of the Madurai Aadheenam no more 

The 77-year-old pontiff of the Madurai Aadheenam, Arunagirinatha Gnanasambantha Desika Paramacharya Swamigal, breathed his last at a private hospital IN MADURAI  on Friday. He was undergoing treatment for respiratory illness. 

The Madurai Adheenam, considered one of the oldest Saivite adheenams (Hindu monastery) in the State, is said to have been established more than a millennium ago and rejuvenated by Thirugnana Sambandar, one of the Nayanmars.

The pontiff was a native of Sirkazhi and joined the Dharmapuram Aadheenam as a disciple soon after his schooling. Since 1980, Arunagirinatha Swamigal, who was formerly a journalist with the DMK’s mouthpiece ‘Murasoli’, has been serving as the 292nd pontiff of the Madurai Aadheenam, which is the hereditary trustee of three temples in Thanjavur district.

With fugitive godman Nithyananda staking his claim as the successor of Arunagirinathar, the chambers of the Madurai Aadheenam, located near the Meenakshi Sundareswarar Temple, were sealed late on Thursday night by the pontiff of the Dharmapuram Aadheenam, Masilamani Swamigal from Mayiladuthurai.

XXXX

THAT IS THE END OF NEWS FROM AKASA DHWANI

READ BY BRAHANNAYAKI SATHYANARAYANAN

PLEASE WAIT FOR TAMIL NEWS

XXXXXXXXXXXXX

tags – newsroundup, hindu, 1582021, 

உலக இந்து சமய செய்தி மடல் 11-7-2021 (Post.9840)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9840

Date uploaded in London –11 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 11 -ஆம் தேதி —  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 306 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: அமைச்சர் தகவல்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன. மற்ற இடத்தில் குடியிருப்புகளும், கடைகளும் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளாக உள்ளது. அதில் இருப்பவர்கள் உரிய மனு அளித்தால், வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் நோய்த் தொற்றில் இருந்து விடுபட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுவோம், மக்களும் வேண்டிக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

xxx

கூசமூக வலைதளத்தில் கணக்கு துவங்கிய ஆர்.எஸ்.எஸ்.

‘கூ’ சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.

‘டுவிட்டர், பேஸ்புக்’ போன்ற சமூக வலைதளங்களை போல், ‘கூ’ என்ற பெயரில் சமூக வலைதளத்தை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மயங்க் பிடாவட்கா ஆகியோர் துவக்கினர். இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ட சட்டவிதிகளை ஏற்க மறுத்து வருவதால், டுவிட்டருக்கும், மத்திய அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. இதையடுத்து இந்தியர்கள் பலரும், கூ சமூக வலைதளத்தில் கணக்கு துவக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ளே உள்ளிட்ட பலர், கூ சமூக வலை தளத்தில் இணைந்து உள்ளனர். இந்நிலையில் கூ சமூக வலைதளத்தில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் கணக்கு துவக்கப்பட்டு உள்ளது.

இது பற்றி ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘தொண்டர்கள் மற்றும் மக்களை, இந்திய மொழிகளில் தொடர்பு கொள்ளும் நோக்கில், கூ சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., இணைந்துள்ளது’ என்றார்.

கூ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘கூ சமூகவலைதளத்தில், 65 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர்.இப்போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கணக்கு துவக்கியுள்ளதால், விரைவில் பயனாளர்கள் எண்ணிக்கை, ஒரு கோடியை தாண்டும்’ என, கூறப்பட்டுள்ளது

XXX

முஸ்லிம்கள் ஆபத்தில் இல்லை” – மோகன்பகவத்

காஸியாபாத்: இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யாருக்கும் ஆபத்து இல்லை. முஸ்லிம்கள், இந்துக்கள் என்ற இரு குழுக்கள் வேண்டாம். இணைந்து வாழ்வதே நாட்டின் வளர்ச்சிக்க உகந்தது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் உபியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூட்டம் காசியாபாத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மோகன் பகவத் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்களே அல்ல . வழிபாட்டை வைத்து மக்களை வேறுபடுத்த முடியாது. அனைத்து இந்தியர்களுக்கும் டிஎன்ஏ ஒன்றுதான் . இந்தியா போன்ற ஒரு ஜனநாயகத்தில், இந்துக்கள் அல்லது முஸ்லிம்களைக் காட்டிலும் இந்தியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் .முஸ்லிம்கள் இங்கு வாழக்கூடாது என்று கூறுபவர் ஒரு இந்து அல்ல. பசு புனிதமானது. இதனை கொல்வது தவறு, இதுபோல் ஒரு மனிதனை கொல்வதும் இந்து தர்மத்திற்கு எதிரானது. இவர்கள் மீது சட்டம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 40,000 ஆண்டுகளாக நாம் அனைவரும் ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்கிற சதி வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். முஸ்லிம்களுக்கு எந்த விதமான ஆபத்திலும் இல்லை. நாட்டில் ஒற்றுமை இல்லை என்றால் வளர்ச்சி சாத்தியமில்லை. ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் ஒருவருக்கு ஒருவர் பேசுவது அவசியம் இவ்வாறு அவர் கூறினார்.

XXXX

செருப்பு அணிந்து பூஜை, உதயநிதிக்கு கண்டனம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், சென்னையில் நடந்த, புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில், செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார்: சென்னை, வியாசர்பாடி எம்.ஜி.ஆர்., நகரில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது. தேர்தலுக்கு முன், ‘நான் கடவுள் நம்பிக்கை அற்றவன்’ என்று பேசிய உதயநிதி, காலில் செருப்பு அணிந்து, ஹிந்து சமய கடவுள் படங்களை அவமதிக்கும் வகையில் நடந்து உள்ளார்.

கருணாநிதி சமாதிக்கு, செருப்பு அணியாது செல்லும் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், ஹிந்து கடவுள்களை, செருப்பு அணிந்து அவமதித்தது ஏற்க முடியாதது. இதற்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்.

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா: தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், பூமி பூஜை நிகழ்வுகளில், கலந்து கொள்வதை தவிர்க்கலாம். ஆனால், கடவுளை அவமதிப்பது போல, காலில் செருப்பு அணிந்து கொண்டு, பூஜை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

XXXX

திருப்பதி கோவில் பிரசாதங்களின் விலை உயர்வு

திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தினமும் பல்வேறு வகையான பூைஜகள் நடந்து வருகிறது. அர்ஜித சேவைகள் மற்றும் பூைஜகளின்போது மூலவர் ஏழுமலையானுக்கு வடை, அப்பம், தோசை, முறுக்கு, ஜிலேபி, லட்டு உள்பட 12 வகையான பிரசாதங்கள் நைவேத்தியமாக வைக்கப் படுகின்றன. இந்தப் பிரசாதங்கள் கோவில் உள்ளே மடப்பள்ளியில் 

தயாரிக்கப்படுகின்றன. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பிரசாதங்களின் விலையை உயர்த்தி உள்ளது.

முறுக்கு, ஜிலேபி 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், 25 ரூபாய் இருந்த சிறிய லட்டு 50 ரூபாயாகவும், 100 ரூபாய் இருந்த பெரிய லட்டு 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை திருப்பாவாடை சேவை நடப்பது வழக்கம். அதில் மூலவருக்கு முறுக்கு, ஜிலேபி ஆகியவை நைவேத்தியம் செய்து, அவைகளை முன்பதிவு செய்த வி.ஐ.பி. பக்தர்களுக்கு மட்டும் கொடுப்பது வழக்கம். அதில் பிரசாதம் மீதியானால் தேவஸ்தான உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் 

அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்குவார்கள். ஒருசில நைவேத்திய பிரசாதம் எக்காரணத்தைக் கொண்டும் பக்தர்களுக்கு விற்கப்பட மாட்டாது.

ஆனால் தற்போது முறுக்கு, ஜிலேபி பிரசாதங்களின் விலை 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இனி இந்த நைவேத்திய பிரசாதங்கள் விற்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ைநவேத்திய பிரசாதங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வர உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகார சபை ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் முதன்ைமச் செயல் அலுவலருமான ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.

XXXXX

புரி ரத யாத்திரை செல்லும் பகுதிகளில் 11 முதல் 13-ந் தேதி வரை 144 தடை – கோவில் நிர்வாகக்குழு முடிவு

ஒடிசாவில் ஆண்டுதோறும் நடைபெறும் உலக புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை, வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் ரத யாத்திரையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் ரத யாத்திரை செல்லும் பகுதிகளில் தடையை மீறி பக்தர்கள் பங்கேற்காமல் இருப்பதற்காக, ரத யாத்திரை செல்லும் கிராண்ட் சாலையில் 144 தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி வருகிற 11-ந்தேதி இரவு முதல் 13-ந்தேதி காலை வரை இந்த தடை அமல்படுத்த கோவில் நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது.

யாத்திரை செல்லும் பகுதிகளில் சாலையின் இருபுறமும் இருக்கும் வீடுகளில் வசிக்கும் பக்தர்கள் இந்த யாத்திரையை தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புகழ்பெற்ற 3 தேர்களையும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் சேவையாளர்கள் இழுத்து செல்வார்கள் எனவும், இதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த சேவையாளர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புரியில் மட்டும் யாத்திரை : உச்ச நீதிமன்றம் உத்தரவு

‘கொரோனா வைரஸ் பரவல் உள்ள நிலையில் எந்த துணிச்சலான நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஒடிசாவின் புரியில் மட்டுமே ரத யாத்திரை நடத்த வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்தாண்டு புரியில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.மாநிலம் முழுதும் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன.அவற்றை ஒடிசா உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதை எதிர்த்து வைரஸ் பரவலால் கடந்தாண்டைவிட இந்தாண்டு அதிக பலியை சந்தித்துள்ளோம்.மாநிலம் முழுதும் ரத யாத்திரை நடத்துவது சரியாக இருக்காது. கடவுள் விரும்பினால் அடுத்தாண்டு சிறப்பாக கொண்டாடலாம். புரியைத் தவிர மற்ற இடங்களில் ரத யாத்திரை நடத்த அனுமதிக்க முடியாது.இவ்வாறு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

XXXX

பெண் அர்ச்சகர் நியமனம் அவசியமா?

‘தமிழக கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டப்படி, அடுத்த 100 நாட்களில் பணி நியமனம் வழங்கப்படும். முக்கிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். அது குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்படும். ”அது மட்டுமல்ல, தமிழகத்தில் பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது. அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அர்ச்சகர் பற்றாக்குறை உள்ள கோவில்களில் பெண்கள் நியமிக்கப்படுவர்,” என, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

இது, தமிழக அரசியல்வாதிகள், ஆன்மிகவாதி களிடையே பெரும் விவாதப் பொருளானது. தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி, இதுபற்றி கூறியதாவது:அர்ச்சகர்கள் என்பவர்கள், அரசு ஊழியர்கள் அல்ல; அவர்கள் பூஜிக்கும் கடவுளின் ஊழியர்கள். அவர்கள், வணங்கும் கடவுளுக்கும், பூஜை செய்யும் கோவிலின் ஆகம விதிகளுக்கும் கட்டுப்பட்டவர்களாகவே இருப்பர்.ஆகம விதிகளை பின்பற்றி பூஜை செய்யும் கோவிலுக்கு செல்லும் முன், அர்ச்சகர்கள், தங்கள் வீடுகளிலும், வழிபாடுகளை நடத்துவர். மணமானவர்கள், ஆச்சார்யார்கள், வாழ்நாள் அர்ச்சகர்கள் என, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விதிகள் உள்ளன. விதிகளை கடைப்பிடிக்கும் முன், முறைப்படி தீட்சையும் பெறுகின்றனர்.


அர்ச்சகர்கள் கோவிலுக்குள் நுழையும் முன், பஞ்ச சுத்திகரணா என்னும், ஐந்து வித சுத்தத்தை கடைப்பிடிப்பர்.. இந்த விதிகளை தொய்வில்லாமல் பின்பற்றுவோர், அந்தந்த கோவிலுக்கு உரிய ஆகம விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகராகலாம். சமூக சமத்துவம் என்ற பெயரில், அனைத்து கோவில்களிலும் பெண்களை அர்ச்சகராக்கலாம் என்பது, மேற்கத்திய கலாசாரத்தை ஒன்றிய கருத்தாக இருக்கலாம்.ஹிந்து மதத்தில், பெண்கள் தெய்வத்துக்கு நிகராக மதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மதங்களில் இல்லாத வகையில், பெண் தெய்வ வழிபாடும் உள்ளது. பெண்கள் வழிபடும் இல்லங்களில், தேவதைகள் வசிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பெண்கள் அர்ச்சகராவதில் பல சிக்கல்கள் உள்ளன.

அரசு என்பது மதச்சார்பற்ற கொள்கை உடையது. கோவில்கள் என்பவை, மதச் சின்னங்கள். இதில், அரசு தலையிடுவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, பெண் அர்ச்சகர் நியமனத்தில், அனைத்து தரப்பு வல்லுனர் குழுவை நியமித்து, கருத்து கேட்டு முடிவு எடுப்பதே சிறந்தது.இவ்வாறு அவர் கூறினார். நாகசாமி தொல்லியல் அறிஞர் –

XXX

சிவகிரி மடத்தின் முன்னாள் தலைவர் சுவாமி பிரகாஷானந்தா, 99 வயதில் இறந்தார்

சிவகிரி மடத்தின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலத்தின் பழமையான ஆன்மீகத் தலைவர்களில் ஒருவருமான சுவாமி பிரகாஷானந்தா வயது தொடர்பான வியாதிகளால் இறந்தார் என்று மட வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. அவருக்கு வயது 99.

ஆன்மீகத் தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தவர்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அடங்குவர்.

பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், சுவாமி பிரகாஷானந்தாவை அறிவு மற்றும் ஆன்மீகத்தின் கலங்கரை விளக்கம் என்று பாராட்டினார்.

“சுவாமி பிரகாஷானந்தா ஜி அறிவு மற்றும் ஆன்மீகத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தார். அவரது தன்னலமற்ற சேவை செயல்கள் ஏழை ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தன. உன்னதமான எண்ணங்களை பிரபலப்படுத்துவதில் அவர் முன்னிலை வகித்தார்
ஸ்ரீ நாராயண குரு. அவரது மறைவால் வேதனை. ஓம் சாந்தி, ”என்று ட்வீட் TWEET செய்துள்ளார்.

சுவாமி பிரகாஷானந்தா, -சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவால் நிறுவப்பட்ட சிவகிரி மடத்தை உலகளவில் மதிக்கப்படும் ஆன்மீக மையமாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்திருந்தார்.

XXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN


நன்றி, வணக்கம்

XXXXXXXXXXXXX

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 6-6-2021 (Post 9696)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9696

Date uploaded in London – –6 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(Compiled from Popular National Dailies)

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

– Read by SUJATHA RENGANATHAN .

Xxxx

World Environment Day: Namaami Gange volunteers distribute plants, carry out cleaning drive in Varanasi

Members of the team also appealed to the residents of the area to maintain the cleanliness of nearby areas and not pollute the river Ganges. Many were seen diving in and collecting debris from the river bed in baskets.

“It is our aim to keep river Ganga clean. We have appealed to the people to help us in our endeavour. During the COVID-19 pandemic, the river had cleaned up a little bit but it is very polluted again. We don’t want people to take this issue lightly,” said a team member

The ‘Namaami Gange Programme’, is one of the Central government’s flagship programmes to clean the river Ganga. it was launched in June 2014 with a budget of Rs 20,000 crore.

World Environment Day is celebrated annually on June 5 across the globe .

Xxx

Chunks of raw meat found in Assam temple, 5 arrested

Five persons were arrested on Saturday for allegedly placing chunks of raw meat inside a temple in Assam’s Dhubri district, a police officer said.

Tension had gripped Jinkata Part-II village in Golakgunj police station area on Friday after pieces of meat were found in the Kali temple, he said. Locals took to the streets, seeking immediate arrest of the culprits, Additional Superintendent of Police (ASP) Rosyrani Sarma said.

The police had to rush to the spot to bring the situation under control, the ASP said. A massive manhunt was launched and five persons were subsequently arrested on Saturday, Sarma said, stressing that a strict vigil was being maintained in the area to avoid any untoward incident. The meat pieces have been sent to the state forensic laboratory for examination, he added.

XXXX

Ayurveda-Allopathy COVID-19 treatment study effective in Gujarat

Ayurveda along with standard Allopathic treatment has been found to be effective on COVID- 19 patients in a study done by the Gujarat government’s AYUSH department with the approval of an expert Allopathic committee, officials said on Tuesday.

The study was conducted on two groups of patients admitted in the 1200-bed COVID facility in the civic hospital in Ahmedabad, with set A receiving standard Allopathic treatment and group B getting a government-approved fixed protocol of Ayurvedic and Allopathic treatments, an official release said.

“Patients receiving Ayurvedic treatment along with Allopathic treatment recovered faster, and their symptoms were relieved faster compared to those who received only standard Allopathic treatment,” it said.

Xxxxx

Anandaiah to make medicine for 75,000 Covid-infected in Andhra Pradesh

Elaborate arrangements are being made to distribute the herbal medicine of Bonigi Anandaiah of Krishnapatnam to Covid-infected persons in Andhra Pradesh, to start with, and elsewhere later.

For those booking the medicine online, a deal was struck with the postal department and a private courier service to deliver the medicine in rural areas and urban areas respectively.

An official said on Wednesday that permission has been sought to create an E-commerce platform, with a payment gateway, to enable those booking the medicine online to pay the postal/courier charges.

The Nellore district administration has lent its support by arranging a machine and material to pack the medicine in sachets.

Anandaiah sought five days’ time to procure all the ingredients to start preparation of the concoction.

Anandaiah has plans to prepare his herbal medicine for Covid cure to 75,000 infected patients across Andhra Pradesh.

Since honey is a main ingredient in the medicine, officials have arranged a tie-up with the Girijan Cooperative Corporation to supply large quantities of honey.

Similarly, the district forest officer has been asked to help Anandaiah secure different varieties of herbs being used in his concoction.

xxxx

Adityanath, Ramdev now in varsity curriculum

Uttar Pradesh Chief Minister Adityanath and yoga guru Ramdev will now be part of the Chaudhary Charan Singh University curriculum.

University officials said that this is part of their effort to teach students about their “ancient cultural heritage and the architects of this heritage”.

Yogi Adityanath’s ‘Hathyoga Ka Swaroop va Sadhna’ and Ramdev’s ‘Yog Sadhna va Yog Chikitsa Rahasya’ will be part of the first year, second semester undergraduate philosophy curriculum.

It can also be taken as an elective subject by students, along with other courses.

Prof Y. Vimla, pro vice-chancellor of the university, said: “The Board of Studies on philosophy has decided that the works of Yogi Adityanath and Ramdev would be included in the syllabus. The two books have been recommended by the state government and endorsed by the Board of Studies of the university”. The recommendation from the state government was made to the University Grants Commission (UGC).

Under the New Education Policy, the UGC has come up with a new curriculum that allows universities to decide what makes up 30 per cent of the syllabus for each course. This 30 per cent is designed to keep regional relevance in mind.

Xxxx

Fire causes extensive damage at Mandaikadu Bhagavathy temple

A major fire broke out at the Mandaikadu Bhagavathy temple, a famous pilgrim centre frequented by devotees from Kerala, near Colachel in Kanyakumari district in Tamil Nadu, triggering panic among residents here on Wednesday morning. No  injury or death have been reported.

The fire is suspected to have started   from a lamp lit inside the sanctum sanctorum after the deeparadhana ritual in the morning. It is also speculated that short circuit might have been the reason. A disaster was averted as there were no devotees inside the temple or on the premises due to Covid-induced lockdown restrictions. 

The fire was first noticed by the temple priest around 7am. There was extensive damage to the tune of lakhs of rupees as per the initial estimate. However, there was no damage to the idol.

Xxxxx

14,000 temple workers, priests get cash assistance and dry ration from Tamil Nadu government

In a bid to support temple workers and priests during the on-going COVID-19 pandemic, the Tamil Nadu government has announced a cash assistance of Rs 4,000 along with 10 kg rice and 15 varieties of dry ration. Minister of Hindu Religious and Charitable Endowments (HR&CE) department PK Sekar Babu made the announcement on Monday and also confirmed that 14,000 workers will be benefitted by the decision.

As per the official sources, in 36,000 temples in Tamil Nadu under the HR&CE department; as many as 34,000 temples (pit of 36,000) have revenue less than Rs 10,000 a year. Priests in many of these temples and other workers do not receive a steady income.

Following demands from priests and workers, Chief Minister MK Stalin had ordered Rs 4,000 as cash assistance along with 10kg rice and 15 varieties of groceries.

The order is implemented from June 3, and nearly 14,000 temple workers and priests are set to benefit from the move, added sources.

xxx

Hindu temple opens in former school in Bath after long campaign

Members of Bath’s Hindu community have their own temple after a 17-year-long campaign.

They used to have to travel to Bristol, Birmingham, or London to worship but have now taken over part of a former school on the outskirts of the city.

The Shree Jagannatha Temple is not only the first in Bath, it is the first of its kind in Europe. Bath is the largest city in the county of Somerset, England, known for and named after its Roman-built baths

Jagannath – Lord of the universe – is a deity worshipped by Hindus across India and Bangladesh. He is seen by many as an incarnation of Lord Krishna.

Painted wooden idols of Jagannath, his brother Balabhadra, and sister Subhadra were brought to Bath from the temple at Puri in India. The deities were installed at the opening of the Shree Jagannatha Temple at the former Bath Community Academy on 22 May 2021.

Xxx

THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

Please Wait for our Tamil News Bulletin

tags-  newsroundup, 662021

உலக இந்து சமய செய்தி மடல் 30-5-2021 (Post No.9667)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9667

Date uploaded in London – –30 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று May   30 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.

Xxxx

ஆயுர்வேத மருந்தை தயாரிக்க திருப்பதி தேவஸ்தானம் உதவும்

ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை தேவையான அளவில் தயாரித்து அளிக்க திருப்பதி- திருமலை தேவஸ்தானம் முன் வந்துள்ளது.

ஆந்திராவின் நெல்லுார் மாவட்டம், கிருஷ்ணபட்டணத்தைச் சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கி வந்தார்.

இந்த மருந்தின் மேல் மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை வந்துள்ளது. இந்நிலையில், இந்த மருந்து குறித்து அறிந்த, திருப்பதி திருமலை தேவஸ்தானம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுர்வேத பல்கலைகழக அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரை நேரடியாக கிருஷ்ணபட்டணம் அனுப்பி உள்ளது.

அவர்கள், ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவை சந்தித்து உரையாடி, மருந்து தயாரிக்கப் பயன்படும் வனமூலிகைகள், அதன் தயாரிப்பு முறைகள் உள்ளிட்டவற்றை நேரடியாக பார்வையிட்டனர்.



 

ஆயுஷ் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட துறைகளிடமிருந்து உரிய அனுமதி கிடைத்ததும், இந்த ஆயுர்வேத மருந்தை அதிக அளவில் தயாரித்து மக்களுக்கு வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மிக பெரிய ஆயுர்வேத பல்கலைக்கழகம் மற்றும் மருந்து தயாரிப்பு கூடம் திருப்பதியில் உள்ளது. எனவே, இந்த மருந்தை தயாரித்து தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகம் வாயிலாக மக்களுக்கு வினியோகிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது

Xxxx

பாபா ராம்தேவ் சவால்! அவங்க அப்பா வந்தாலும் என்னை கைது செய்ய முடியாது!!

அவங்க அப்பா வந்தாலும் என்னை கைது செய்ய முடியாது என பாபா ராம் தேவ் பேசியிருக்கும் வீடியோ மேலும் சர்ச்சையாகியுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்துக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அறிவுறுத்தலின் பேரில் அவர் தனது கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

சமீபத்தில் பாபா ராம்தேவ் பேசிய வீடியோவில், “அலோபதி மருத்துவத்தாலும், தடுப்பூசியாலும் 10 ஆயிரம் மருத்துவர்கள், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது என்றும், இந்த முறையை நீக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் விமர்சனம் செய்தார்.

இதுதொடர்பாக பாபா ராம்தேவ் 15 நாள்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும், இல்லையெனில் ரூ.1,000 கோடி நஷ்டஈடு கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

.

பாபா ராம்தேவின் கருத்துக்களால் சர்ச்சை உருவானதைத் தொடர்ந்து அந்த வீடியோ பதிவிலிருந்து அக்கருத்துக்கள் நீக்கப்பட்டன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், “நாங்கள் என்றும் அலோபதி மருத்துவத்திற்க்கு எதிரானவர்கள் அல்ல. அந்நிகழ்வில் பாபா ராம்தேவ் அவர்கள் தனக்கு வாட்ஸ் ஆப்பில் பரவலாக பகிரப்பட்ட கருத்துகளையே மேடையில் படித்துக் காட்டினார். இதற்கும் அவருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறோம்” என்கிறது அந்த நிறுவனம்.

பதஞ்சலி நிறுவனம் குற்றச்சாட்டு

இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜே ஏ ஜெயபால் இந்தியாவை கிறிஸ்தவ மயமாக்க சதி செய்வதாகவும் அதனால்தான் ஆயுர்வேதம் மற்றும் யோகா முறைகளைக் குறை கூ றுவதாகவும்  யோகா குரு பாபா ராமதேவின் உதவியாளர் ஆசார்ய பாலகிருஷ்ணா டிவிட்டரில் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் பாபா ராம்தேவின் மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், “அவங்க அப்பனால் கூட என்னைக் கைது செய்ய முடியாது. அவர்கள் சும்மா கத்திக்கொண்டு இருக்கிறார்கள்” என்று ராம்தேவ் பேசுகிறார்.

xxxxx

கேரள தேவசம் போர்டின் வருவாய் ரூ.261 கோடியில் இருந்து ரூ.21 கோடியாக சரிவு

திருவாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், ஆண்டு வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைந்துள்ளது.


கேரள மாநிலத்தின் தென் மாவட்டங்களில் உள்ள சபரிமலை உட்பட அனைத்து கோவில்களும் திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்தக் கோவில்களிலிருந்து கிடைக்கும் வருவாய், தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு உதவுகிறது. ஊதியம், ஓய்வூதியம் என, ஆண்டுக்கு ரூ.40 கோடி அளவுக்கு செலவு செய்யப்படுகிறது.


கோவிட் காரணமாக கடந்த 2020ம் ஆண்டிலேயே சபரிமலையில் பக்தர்களின் அனுமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கோயில் மூலம் கிடைக்கும் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது ஆண்டு வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைந்துள்ளது. இதனால், செலவுகளை மேற்கொள்ள மாநில அரசிடம் தேவசம்போர்ட் நிதி கோரியுள்ளது. தற்போது கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள கோவில்களின் வருவாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

xxxx

தமிழ்நாட்டு அமைச்சர்களின் பங்களாக்கள் வாஸ்துப்படி மாற்றி அமைப்பு!

புதிய அமைச்சர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பங்களாக்களை, வாஸ்துப்படி மாற்றி அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

சென்னை, கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்காக 70 அரசு பங்களாக்கள் உள்ளன. இவற்றை பொதுப்பணி துறையினர் பராமரித்து வருகின்றனர்.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில் 30 அமைச்சர்களுக்கு, பங்களாக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

முதல்வர் ஸ்டாலின், தனக்கு பங்களா வேண்டாம் என்று கூறி விட்டார். மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், வேலு ஆகியோர் சென்னையில் வசிப்பதால், அவர்களுக்கும் அரசு பங்களாக்கள் ஒதுக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.., வேண்டுகோளை ஏற்று, அவர் தங்கியுள்ள பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது.


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்களாக்களை காலி செய்து வருகின்றனர். ஐந்து பேர் இன்னும் காலி செய்யவில்லை. இந்நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்களில் வாஸ்துப்படி சில பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் தி.மு.க., அமைச்சர்கள் பலர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களது வீட்டை வாஸ்துப்படி மாற்றி அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. அமைச்சர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, புதிதாக படுக்கை, சோபா, நாற்காலிகள், மின் விசிறி, ‘ஏசி’ மற்றும் மின் விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன.

Xxxxx

அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது கடந்த May 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது. பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி புனிதநீர் அடங்கிய 108 கலசங்கள் வைத்து கடந்த 26-ந் தேதி மாலையில் இருந்து 4 கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து 27-ந் தேதி பகலிலும் கோவிலில் கலசங்கள் வைத்து மகா யாகம் நடந்தது.

ரமேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை கூறினர். தற்போது கொரோனா ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கலசங்களில் உள்ள புனித நீர் மூலம் அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர்.

Xxxx

திருப்பதியில் கருட வாரதி மேம்பாலத் திட்டம்

ஆந்திர நிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேசப் பெருமாளை பக்தர்கள்  நாள்தோறும் பல்லாயிரக்கணக்கில் சென்று தரிசனம் செய்து வந்தனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பக்தர்கள் வரத்து பெரிதும் குறைந்துள்ளது. திருப்பதி நகரில் கருட வாரதி என்ற பெயரில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

இதற்கான பணிகளை கபிலதீர்த்தம் சர்க்கிள் வரை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கிலும் தொடர்ச்சியாக பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலத்தை விரைவாக கட்டி முடிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



பாலம் கட்டுமானப் பணிகளை திருப்பதி நகராட்சி பூங்கா அருகே தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தேவஸ்தான தலைமை பொறியாளர் ரமேஷ் ரெட்டி உடனிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ரெட்டி, நான்கு வழி மேம்பாலமாக கட்டப்பட்டு வரும் கருட வாரதியை அலிபிரி டோல்கேட் வரை நீட்டிக்க வேண்டும்.



இதன்மூலம் திருமலைக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். பல்வேறு சிக்னல்களில் நின்று செல்வது தடுக்கப்பட்டு கால விரயத்தை தவிர்க்கலாம். திருமலைக்கு நடைபயணமாக செல்ல விரும்பும் பக்தர்களும் அலிபிரிக்கு விரைவாக சென்றடைய முடியும்.



இதற்கான கூடுதல் செலவு குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அதில் உரிய முடிவெடுத்த பின்னர் செலவை ஏற்பது இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

xxxxx

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜர் கோவிலில் திருஞானசம்பந்தர்-தோத்திரப்பூர்ணாம்பிகைக்கு திருக்கல்யாணம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் சிவலோக தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருஞானசம்பந்தருக்கும் அந்த பகுதியில் உள்ள திருநல்லூரை சேர்ந்த நம்பியாண்டார் நம்பி மகள் தோத்திரப்பூர்ணாம்பிகைக்கும் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் திருமணம் நடைபெற்ற வரலாறு உள்ளது.

அந்த ஐதீகத்தின்படி ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் இரவு 10 மணிக்கு திருஞானசம்பந்தர்- தோத்திரப்பூர்ணாம்பிகைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.


இதனையடுத்து மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின்னர் சாமி-அம்மன் வீதி உலா நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்றனர். பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

Xxxxx

கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம்

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர்.

முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே செவ்வாய்க்கிழமை) அனைத்து முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா எளிமையாக நடைபெறறது.

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் . கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பூஜைகளில் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் அவதரித்ததும் நிருவாணமடைந்ததும் இதே திதியிற்தான் என்பர்.

Xxxx

கோவை ஈஷா  அமைப்பின்  கொரோனா தடுப்பு சேவை!

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பிபிஇ கிட்டுகள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன.

அத்துடன், கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை மயானத்திற்குக் கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன.

கோவை வந்திருந்த அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் கொரோனா தொற்று சிகிச்சை தொடர்பாக ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் நாகராஜன், அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.


அப்போது அவர்களிடம் கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் கோவை அரசு மருத்துவமனைக்கு 500 பிபிஇ கிட்கள், 5 ஆயிரம் என்95 மாஸ்க்கள், 500 சிபிஏபி முக கவசங்கள் வழங்கப்பட்டன.


ஈஷா சார்பில் கோவையில் உள்ள கிராமங்களில் செய்யப்படும் சேவைகள் குறித்து நிருபர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் யோகப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்பது, முன் களப் பணியாளர்களுக்கு முக கவசம் சானிடைசர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.



அதேபோல் தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பில் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா நோயாளிகளைத் தகனம் செய்யும் சேவையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

xxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags- tamilhindu, newsroundup, 30521