மாயன் மையானான் BY A NARAYANAN
Date Posted 24 December 2021
மண் தோன்றிய மங்கை
கண்டதெல்லாம் கண்ணனாக
வண்ணக் கவிதையாய் தீட்டிய
பண்ணோடிணையும் பாசுரங்கள்
விண்ணோரும் கேட்டு வியந்தனரோ
எண்ணத்திலடங்காதோனை தன்
கண்ணிடும் மையாகத் தீட்டத்
திண்ணமாய் இருக்கிறாளோ இம்
மண்ணுலக ஆரணங்கோ.
நாராயணன்
xxxxxxxxxxxxxxxxxxxxxx
பழனி
POSTED ON 23-12-2021
குன்றுதோரும் , நின்றோன் கோலமயிலேறி
ஞாலமெலாம் சுற்றி வந்தும் கை நழுவிய
பழம் வேழமுகன் கை காண அப்பனையும்
அன்னையையும் அண்ணனையும் துறந்து
ஆண்டி கோலமாயிருந்தும் அண்டியோர்
வேண்டியதை ஈன்றிடும் தருமசிவபாலன்
கிட்டாப்பழத்தால் எட்டா ஞானப் பழமாய்
நின்ற குன்றே பழம் நீ மருவிய பழனி
நித்தத்தில் சித்தமாய் நின்றோன் தாளடி
நின்றோர் நிலமிசை நீடு வாழ்வர்
நாராயணன்
RITTEN BY DR. A. NARAYANAN
Post No. 10,450 a
Date uploaded in London – – 22 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
விரிசடையோன் செஞ்சடையோன்
பனி நீர் கங்கை திரு முடியோன்
பிறை சூடியோன் பீடுடையோன்
நெருப்பாக நெற்றிக்கண்ணுடையோன்
கரு நாகம் மாலையாயுடையோன்
திரு நீறு பூசுடர் மேனியுடையோன்
புலித்தோல் ஆடையுடையோன்
ஆல கால விடம் கண்டமுடையோன்
உடல் பாதியில் உமையுடையோன்
உடுக்கை ஒரு கையுடையோன்
மறு கை மழு உடையோன்
தூக்கிய திருவடி ஆடிய பாதத்தைத்
வீடு பெற நாடுவோர் வீடடைவீரே
நாராயணன்
Tags- சிவரூபம்