PEACOCK MYSTERY: HINDU BIRD IN TURKEY/SYRIA AROUND 1400 BCE- Part 1 (Post No.10,767)

PICTURE OF PEACOCK POTTERY IN HARAPPA

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,767

Date uploaded in London – –    21 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Hindu’s sacred bird peacock is found in Mitannian (1400 BCE) and the mysterious Yazidi  culture of Iraq’s marsh lands. In India it is the vehicle of Goddess Sarasvati and Subrahmnya. Mahabharata character Sikhandi’s meaning is peacock.

Peacock is associated with Gods and Goddesses around the world. Even Khonds and Bhils , aborigenes and tribes venerated the bird. In Greek it is called  TAOS and in Latin it is called PAVUS. Taos is the one linked to India. In Sanskrit  it is called SIKHI by Kalidas and others.

Latin word Pavus or Pava cannot be easily traced to Tamil or Sanskrit.

Sikhi becomes Tuki or Taos or Tahos in Greek

Many people don’t know the Sanskrit word Sikhi and Sikhandi for peacock and linked it with TOKAI in Tamil.

T becomes S in many Tamil and English words.

Tion= Sion

Thaanai in Tamil Sena in Sanskrit.

In colloquial Tamil also it is Th= Ch

Padiththaan = Padichchaan (read)  in spoken Tamil

Kadiththaan = Kadichchan  (bitten) in spoken Tamil

Sikhi is found in Meghaduta of Kalidasa of First century BCE. Great Sanskrit scholars place Kalidasa in the first or second century BCE. 200 of his 1500 similes are used by Tamil Sangam poets.

xxxx

A Kalyanaraman in his book Aryatarangini says about Indus valley pottery:-

“The discovery of the lotus and the peacock design on the pottery , strengthens the case for considering the Indus Valley culture to be Aryan.  Indian archaeologists now believe that the bird motifs on the burial urns corresponds to Vedic theories of the journey of the human soul towards the heaven.(See Kural 338) .  Bhagavad Gita says soul leaving body  is like a person discarding the worn out clothes (BG 2-22).

Tokai for Peacock is used less in Tamil than other two words Mayil and Manjnai. Peacock is associated with Lord Skanda /Murugan in North Indian coins before Sangam Tamil literature. We see Six Faces in Yadheya coins. Later we find it in Sangam Tamil literature. Tamil Murugan is not different from Northern Skanda/ Kartikeya. All the features are same except Valli, a Tamil woman in addition to Deva sena. It is a localised tradition like Andal and Rajamannar/Vishnu. Tuki or Taos in Greek is not Tokai, but Sikhi which  is found earlier than Tamil. More oover most of the words found in Greek are derived from Sanskrit.

xxxx

Peacock in Turkey/ Syria

Satya Swarup Mishra in his book ‘The Aryan Problem – A Linguistic Approach’ says,

“Linguistic evidence in Anatolian is shown above clearly stamps the borrowed element to be of Indo- Aryan origin. In addition to it there is clearly archaeological evidence to show the influence of Indo Aryan on the Mitannians . This evidence is that of peacock.

PEACOCK is an Indian bird. Peacock evidence is a clear proof for movement of Hindus from India into that area, where they have influenced. Burrow’s theory of a third group beside Indo- Aryans and Iranians based on his guess work is fully outweighed by his archaeological evidence.

(Murv = Mayura= Mor in Hindi)

Credit of this evidence of peacock goes to B.Brentjes, who in his paper has discussed the details in great length. Some salient portions may be quoted here.

PICTURE OF PEACOCK HAMMER

“But there is one element novel to Iraq in Mitannian culture and art, which is later on observed in Iranian culture until Islamization of Iran: the peacock, one of the two elements of the ‘Sen-murv’, the lion peacock of the Sassanian art. The first clear pictures showing peacocks in religious context in Mesopotamia are the Nuzi cylinder seals of Mitannian times….

There are two types of peacocks: the griffin with a peacock head and the peacock-dancer, masked and standing beside the holy tree of life. The veneration of the peacock could not have been brought by Mitannians from Central Asia or South Eastern Europe, they must have taken it from the East, as peacocks are the types of bird of India and the peacock dancers are still to be seen all over India. The earliest examples are known from the Harappan culture, from Mohanjo-daro and Harappa: two birds sitting on either side of the  first tree of life  are painted on ceramics. In Iraq the bird was demonised at least since the Mittannians.

The religious role of peacock in India and the Indian influenced Buddhist art in China and Japan need not be questioned…..

It is even possible to trace the peacock as the animal of the battle in Elam till the late third millennium BCE- if it is possible to identify two figured poles  from Susa with peacock symbols (see the picture)  one is a little hammer with two bird heads and a tail with peacock eyes; the other is the oldest proto-Senmurv, a pale stave with a lion head and a peacock tail. The date of the first one is given by a Sulgi inscription on it. So we shall not err if we identify the griffin of the Mitannian seals as fore runner of the Senmurv (lion- peacock.

The second form of peacock veneration by the Mitannians had a long history too.

To be continued …………………………………………..

 TAGS- Peacock, mystery, Harappan pottery, mitannian, Senmurv, Lion peacock, peacock dancers, Susa, Hammer,

400 ரிக்வேத புலவர்கள், ரிஷிகள் பட்டியல்– 8 (Last Part) Post.10,766

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,766

Date uploaded in London – –    21 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

400 ரிக்வேத புலவர்கள், ரிஷிகள் பட்டியல்– 8 (Last Part) Post.10,766

இந்தப் பட்டியலுடன் நிறைவு அடைகிறது

 342.ஸ்ருதவித்  ஆத்ரேய 5-62

ஸ்ருஷ்டிகு காண்வ 8-51

சம்வனன ஆங்கிரஸ  10-191

சம்வர ன ப்ராஜாபத்ய 5-33/34

சம்வர்த ஆங்கிரஸ   10-172

சங்குசுக யாமயான  10-18

சத்யத்ரி வாருணி  10-185

ஸத்யஸ்ரவ  ஆத்ரேய 5-79/80

ஸதா ப்ரண   ஆத்ரேய 5-44

சத்வம்ச காண்வ 8-8

சத்ரி வைரூப  10-114

ஸப்தகு   ஆங்கிரஸ 10-47

சப்தவத்ரி  8-73

சப்தவத்ரி ஆத்ரேய  5-78

சப்திவஜம்ப ர 10-79/80

சப்ர த  பாரத்வா ஜ 10-181

சரமா 10-108

இது முக்கியமான பெயர் . இந்த நாயின் கதை கிரேக்க நாடு வரை சென்று உருமாறிவிட்டது. அந்த மொழியில் ‘ச’ இல்லாததால் பெயரை ஹெர்மஸ் HERMES என்று மாற்றிவிட்டனர்.

XXXX

ஸர்வ ஹரி ஐந்த்ர  10-96

ஸவ்ய ஆங்கிரஸ 1-51/57

சச ஆத்ரேய 5-21

சச என்பதற்கு ஒரு பொருள் முயல்; முன்னர் முயல் காது என்று ஒரு பெயரைக் கண்டோம்.

ஸஹதேவ வார்சகிர  1-100

ஸஹதேவ என்ற பெயர் துருக்கி வரை சென்றுவிட்டது. இந்த மஹா பாரத பெயர் சாதேவனார் என்று தமிழ்ப் புலவர் பட்டியலிலும் வந்து விட்டது.

XXXX

சாதன பெளவன  10-157

சாரிஸ்ர்க்க  சார்ங்க  10-142

ஸர்ப்ப ராக்ஞி  10-189

இந்தப் பெண் கவிஞரின் பெயர் பாம்பு ராணி. சித்து-சரஸ்வதி நதி தீர நாகரீகத்திலும், கிரேக்க நாட்டிலும் இரு கைகளில் 2 பாம்புகளைப் பிடித்துக்கொண்டு நிற்கும் உருவங்களைக் காண்கிறோம். ரிக்வேதத்தில் பாம்புராணி என்று முன்னரே கட்டுரை எழுதியுள்ளேன்.

XXX

சிகதா நிவாவரி  10-86; பெண் கவிஞர்

சிந்துக்க்ஷித்  ப்ரையமேதா 10-75

சிந்துத் த்வீப அம்பரீஷ  10-9

இந்த இரண்டு பெயர்களும் முக்கியமான பெயர்கள். சிந்து-ஸரஸ்வதி நதி தீர INDUS VALLEY, SARASVATI RIVER BNK CIVILIZATION மன்னர்கள்; மகாபாரதத்திலும் சிந்து சமவெளி மன்னர்களைக் காண்கிறோம்.

வேத காலத்திலேயே காசி முதல் ஈரான் வரை புலவர்கள் பெயர்களும் மன்னர் பெயர்களும் இருப்பதாலும் ராமாயண காலத்திலேயே இந்துக்கள் இலங்கை வரை சென்றதாலும் உலகின் மிகப்பெரிய நாகரீகம் இந்து நாகரீகம் என்பது இலக்கியத்தில் நிரூ பிக்கப்படுகிறது

XXXX

ஸுகக்ஷ ஆங்கிரஸ  8-92/93

இவர் பெயர் நல்ல கண். தமிழிலும் நல்ல கண்ணு என்ற பெயர் உண்டு

சுகீர்த்தி காக்ஷி வத  10-131

நல்ல புகழ் என்று பொருள். பொதுவாக கீர்த்தி என்பது பெண்கள் பெயர்களில் அதிகம்

சுதம்பர ஆத்ரேய 5-11/14

இதுவரை வந்த பெயர்களில் குறைந்தது 4 பெயர்களிலாவது எண் 7 (ஸப்த ) இருக்கிறது. உலகில் இப்படி 100, 1000, 3, 7 எண்களுடன் உள்ள பெயர்களை இன்றும் இந்துக்களிடம் மட்டுமே காண்கிறோம். சிந்து வெளியிலும் எண் மூன்றும் ஏழும்தான் அதிகம். அது வேத கால நாகரீகம் என்பதற்கு எண்களையும் ஒரு ஆதாரமாகக் கொள்ளலாம்.

XXXX

371. சுதாஸ் பைஜாவன 10-133

இது வரலாற்றுச் சிறப்புமிக்க பெயர். கால்டு வெல் கும்பலுக்கும் மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும் வேட்டுவைக்கும் மன்னன் பெயர். ரிக் வேதம் முழுதும் பல இடங்களில் இந்த தாஸருக்கு வசிஷ்டர், விசுவாமித்திரர்  ஆதரவு- அநாதரவு பற்றி பேசப்படுகிறது. சுதாஸ் சம்பந்தப்பட்ட வரலாற்றை வைத்து ஒரு கோடு போட்டு அவருக்கு முந்தையவர் யார் யார், பிந்தியவர் யார் யார் என்று கண்டுபிடிக்கலாம். ரிக் வேதத்தில் 500 ஆண்டு கால வரலாறு உள்ளதாக ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பிற்காலத்தில் காளிதாஸ், சூர்தாஸ், துளசிதாஸ்,, புரந்தரதாஸ் , கனக தாஸ் என்று பல பெயர்கள் தோன்ற மூல கரணம் இவர்.

சுகர்ணோ = நல்ல கர்ணன் என்பது போல நல்ல தாசன் = சுதாஸ் என்று பெயர்.

XXXX

ஸு தீதி  ஆங்கிரஸ  8-71

சுபர்ண காண்வ 8-59

சுபர்ண தார்க்ஷ்ய  10-144

சுபந்து கெளபாயன 5-24; 10-57/60

சுமித்ர வாத்ர்யஸ்வ  10-69/70

சுமித்ர கெளத்ஸ 10-105

சுராதா  அல்லது சுமேத  வார்சகிர  1-100

சுவேதா சைரிஷி  10-147

சுஹஸ்த்ய  கெளசே ய  10-41

சுஹோத்ர பாரத்வாஜ  6-31/32

“சு” என்றால் நல்ல என்று பொருள்; தமிழிலும் நிறைய பெண்களும் ஆண்களும் தங்கள் பெயர்களை “நல்”  என்று துவக்கினர் ; அவர்கள் அப்படியே வேத கால மரபைப்  பின்பற்றினர். தமிழில் முன்னொட்டு PREFIX கிடையாது , பின்னொட்டுகள் SUFFIX மட்டுமே உண்டு என்று சொன்ன சிந்துவெளி ஆராய்ச்சி அரை வேக்காடுகளுக்கு செமை அடி கொடுக்கும் பெயர்கள் இவை.

XXX

சூர்யா சாவித்ரி 10-85

உலகம் வியக்கும் கல்யாண மந்திரத்தைப் பாடிய பெண் புலவர்களில் இவரும் ஒருவர்.

XXX

சு வேதா , சு ராதா என்பன பெண் பால் பெயர்களாக இருக்கலாம்.

கஸ்தூரி, மாணிக்கம் போன்ற பெயர்களை பெண்களும் ஆண்களும் வைத்துக் கொள்ளுவதால் கவனத்துடன் செய்ய வேண்டிய ஆராய்ச்சி இது .

XXX

சோபரி  காண்வ  8-19/22

சோமாகுதி  பார்கவ  2-4/7

ஸ்தம்ப மித்ர சாரக  10-142

ஸ்வஸ் யாத் ரேயஹ 5-50/51

ஹரிமந்த ஆங்கிரஸ 9-72

ஹர்யத ப்ராகாத 8-72

ஹவிர்த்தான ஆங்கி 10-11/12

XXXX

ஹிரண்ய கர்ப ப்ராஜா பத்ய 10-121

392.ஹிரண்ய ஸ்தூப ஆங்கிரஸ 1-31/35; 9-4; 9-69

இது வரை 392 புலவர்கள் பெயர்களைக் கண்டோம். இது தவிர யஜுர், சாம, அதர்வண வேதங்களில் மேலும் பல புலவர்கள் பெயர்கள் உள்ளன. செய்யுள் நடையில் உள்ள உபநிஷத்துக்களையும் சேர்த்தால் பட்டியல் இன்னும் நீளும். வெளிநாட்டினர் கணக்குப்படி, அவர்கள் பிற்காலத்தியவர் என்பதால்  நான் இதில் சேர்க்கவில்லை.

XXXX

வேத அநுக்ரமணியைத் (INDEX OF VEDIC POETS AND POEMS)  தொகுத்தவர் அற்புதமான பணியைச் செய்துள்ளார். இதைப் பார்த்த ஹாலன் என்ற மன்னன் 700 ப்ராக்ருத மொழி காதல் பாடல்களைத் தொகுத்தான். அதைப் பார்த்த தமிழர்கள் கி.பி. நாலாம் நூற்றாண்டில் சங்கப் பாடல்களைத் தொகுத்தனர்.

இந்தத் துறையில் — பெயர்கள் பற்றிய விஷயத்தில் — நீண்ட ஆராய்ச்சி தேவை.  YANA “யான” என்று முடியும் பெயர்களை நாம் இப்போது காண முடிவதில்லை. காஸ்யப, அத்ரி முதலிய ரிஷிகள் பெயர்களை இன்றும் கடல்களில் CASPIAN SEA, ADRIATIC SEA  காண்கிறோம்.

ஹிரண்ய என்றால் பொன் / தங்கம் GOLD  ; இது  BIG BANG பிக் பேங் எனப்படும் மாபெரும் பிரபஞ்ச வெடிப்புடன் தொடர்புடைய பெயர்!!!

ஆத்ரேய, ஆங்கிரஸ  ரிஷிகள் வம்சம் அதிகம் காணப்படுகின்றன.

21/27 என்று நான் எழுதி இருந்தால் 21 முதல் 27 வரை அதே புலவர் யாத்தவை என்று பொருள்.

சில எண்கள் இரண்டு புலவர்களுக்கு ஒரே எண்ணாக இருக்கும். அப்படி இருந்தால் இருவரும் சில சில மந்திரங்களைக் கண்டு பிடித்தார்கள் என்று பொருள்.

இந்தப் பட்டியல் ஆங்கில நூலில் இருந்து எடுக்கப்பட்டது. ஒரே துதியில் சிற்சில மந்திரங்களை மட்டும் சில ரிஷிக்கள் பாடியிருப்பார்கள் ; அப்படிப்பட்ட சின்ன குறிப்புகளை நான் COPY ‘காப்பி’ செய்யவில்லை.

ஏற்கனவே பெண் புலவர்கள் பெயர்களையும், மன்னர்கள் பட்டியலையும் தனியாக வெளியிட்டிருக்கிறேன்.

சங்க இலக்கியம் போலவே மன்னர்களும் பெண்களும் கவி புனைந் திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாம் எழுதும் வரலாற்றுப்  புஸ்தகங்களில் இந்தப் பெயர்களைச் சேர்க்க வேண்டும்.

சுபர்ண ,ஸ்யேன  என்பது கருடன், கழுகு , பருந்து EAGLE, FALCON  போன்ற பறவைகளைக் குறிக்கும். இன்று அமெரிக்கா போன்ற நாடுகளின் தேசீய சின்னத்தில் உள்ள கருடன், வேத காலத்தில் சிறப்புமிக்க பறவையாகத் திகழ்ந்தது. கழுகும் , பருந்தும் சோம லதா என்னும் செடியைக் கொண்டு தந்ததாக நிறைய பாடல்கள் உள்ளன. அதற்கெல்லாம் மாக்ஸ்முல்லர், கிரிப்பித் GRIFFITH கும்பல்களால் விளக்கம் சொல்ல முடியவில்லை .

–SUBHAM—

TAGS- 400, ரிக்வேத புலவர்கள்,  ரிஷிகள் , பட்டியல்– 8, 

மங்கையர், மரங்கள், பூங்கொடிகள்! (Post No.10,765)

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

WRITTEN BY B. KANNAN, DELHI
Post No. 10,765
Date uploaded in London – – 21 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வஸந்த விழா
மங்கையர், மரங்கள், பூங்கொடிகள்!
Written By B.Kannan, Delhi

உலகளாவியத் தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.
இப் பதிவில் கவிகளும், புலவர்களும் பெண்கள், மரங்கள், பூங்கொடிகளுக்கு இடையே நிலவும் நெருங்கிய நட்ப்பைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்….

வஸந்த விழா ஆரம்பித்து விட்டாலே மானுடர்கள் மட்டுமின்றி மரம், செடிகொடி களுக்கும் ஒருவிதக் கிளுகிளுப்பு உண்டாகிவிடுகிறதாம். நிழல் விழும் தங்கள் மரத்தடியில் இளம் பெண்டிர் அம்மானை ஆடுவதையும், கிளைகளிலிருந்துத் தொங்கும் ஊஞ்சலில் வேகவேகமாக முன்னும், பின்னும் உந்தித் தள்ளியவாறு மேலும் கீழும் பரவசமுடன் செல்வதையும், பனம்பழத்தை ஒத்த ஸ்தனங்களால் தங்களை அணைத்துக் கொண்டு, கோவைப் பழம் (பிம்பா) போன்ற சிவந்த உதடு களால் முத்தமாரிப் பொழிவதையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்குமாம். பேறுகாலப் பெண்கள் அநுபவிக்கும் ‘மசக்கை’ (தோஹத) சிரமங்கள் இவைகளுக்கும் உண்டாம். அவற்றைப் போக்கக் கூடிய வழிகளை உபயோகித்தால் அவை மன மகிழ்ந்து மலருமாம். .தார் தள்ளாத வாழை, காய்க்காத முருங்கை முதலியவற்றை, முக்கியமாக சூரியகிரகணத்தின் போது உலக்கை கொண்டுச் செல்லமாகத் திட்டி அடித்தால் பலனளிக்கும் என்பதைப் பெரியோர் சொல்லக் கேட்டிருப்போம், அல்லவா?
இதை ருசிகரமாக, சிருங்கார ரசனையுடன் வர்ணிப்பதில் தான் மொழி பேதமின்றி அனைத்துக் கவிஞர்களிடையேப் போட்டா போட்டியே நிலவுகிறது

முதலில் குரு சங்கரரின் சொல்லாடலிலிருந்துப் பயணிப்போம்…
ஆதிசங்கரர் தான் அருளிய சௌந்தர்யலஹரிப் பாடலில் ஒரு ருசிகரமானச் சம்ப வத்தை விவரிக்கிறார். அந்தப் பாடல், இதோ…
नमोवाकं ब्रूमो नयनरमणीयाय पदयो-
स्तवास्मै द्वन्द्वाय स्फुटरुचिरसालक्तकवते ।
असूयत्यत्यन्तं यदभिहननाय स्पृहयते
पशूनामीशानः प्रमदवनकङ्केलितरवे ॥ 85॥
நமோ வாகம் ப்ரூமோ= உன்னைப் போற்றி வணங்குகிறோம், நயந ரமனீயாய= கண்களுக்கு ரம்மியமான, பதயோ:=பாதகமலங்களுக்கு, தவ அஸ்மை த்வந்வாய=உனது இரு பாதங்களும்,
ஸ்புட ருசி ரஸலக்த கவதே=ஒளிவீசும் ஈர மருதோன்றி (செம்பஞ்சு) குழம்புடன் கூடிய, அசூயத் யத்யந்தம்= ரொம்பப் பொறாமையுடன், யத் அபி ஹனனாய= (அக்கால்களால்) உதைபட்டுப் (பூ பூக்க) ஸ்ப்ருஹயதே=விரும்புகிற, பசுனாம் ஈசான:= பசுபதியான சிவன், பிரமத வன=உல்லாச நந்தவனத்தில் இருக்கும், கங்கேலித ரவே= அசோகமரத்தைப் பார்த்து…மேலும்,
சேது நாட்டைச் சேர்ந்த வீரசோழன் (வீரை) கன்னலஞ்சிலை வேள் என்றழைக் கப்படும் கவிராஜப் பண்டிதர், சௌந்தர்யலஹரியைத் தமிழில் வெண்பாவாக இயற்றியுள்ளார். அதிலுள்ள இதற்குரியப் பாடல்:

அரியமென் காவினீபுக் கசோகினிற் பாதமேற்ற
உரியநம் பதத்தை யீதோ வுறுமெனப் பொறாது பெம்மான்
எரியுற மரத்தை நோக்கு மியல்பினைக் கேட்டு யானும்
வரிமலர்ப் பாதம் போற்றும் வளமினி தினிது மாதே.
‘அன்னை பார்வதி தேவி பரமேஸ்வரனுடன் ஒருசமயம் நந்தவனத்துக்குச் சென்றி ருந்தார்..குளிர்ச்சியும் வெப்பமும் மணமுங் கொண்டு அங்குள்ளப் பூஞ்சோலை கூத்தொடு (கூத்து- செடி கொடி மரங்களின் அசைவு) எதிர்கொண்டு உபசரிக்க, அங்கு தென்றல் உலவியது. அங்கிருந்த. அசோகமரத்து மலர்களை விரும்பியஅன்னையார் அதன்மீது தம்முடைய திருப்பாதத்தால் உதைத்தார். உடனே பூமாரிப்பொழிந்தது. அதைக் கண்ணுற்ற பரமசிவானார், தமக்கே உரிய அன்னையின் திருவடி ஸ்பரிசம் இந்த மரமோ அடைவது என்று பொறாமையுடன் அசோகத்தை நோக்கினார். அதனைக் கேட்டு எனக்கும் அம்மையின் திருப்பாதத்தைப் போற்றும் வளம் மேன் மேலும் பெருகட்டும்’ என்பது இவ்விருப் பாடல்களின் பொருளாகும்.

அசோகமரம் மகளிர் பாதம் பட்டால் மலர்வளம் மிக்கதாகும் என்பது வடமொழி இலக்கியங்களில் காணும் கவி மரபு. இதை நாம் காளிதாசனின் “மாளவிகாக்நி மித்ரா” வில் நாயகி மாளவிகாவின் செயலாலும், ஶ்ரீ ஹர்ஷதேவரின் “ரத்னா வளி”யில் இரு நாயகிகளான ராணி வாஸவதத்தை, சாகரிகா வின் செயல்களாலும் அறிகிறோம். இம்மரபு சங்ககாலத்திலேயே தமிழ்மரபுடன் கலந்து விட்டது என்பது அகநானூற்றுப் பாடலொன்றிலிருந்துப் புலனாகிறது.

அகப்பொருள் இலக்கிய மரபில் ‘அறத்தொடு நிற்றல்’ என்றொரு துறை உண்டு. அது, தலைவியின் காதல் களவொழுக்கத்தை அறிந்து வைத்துள்ள தோழி உரிய காலத் தில் அதனைச் செவிலிக்கு உணர்த்துவதாகும்.

அறத்தொடு நிற்றல் என்பது தலைவியின் காதலை வெளிப்படுத்துவது. இந்தத் துறையில் அமைந்த சங்கப் பாடல் பல. அதில் வடமொழி இலக்கிய மரபை ஒட்டி அமைந்துள்ளது 48-வது குறிஞ்சித் திணைப் பாடல்..அது செவிலி கூற்றினைத் தோழி வாங்கிக் கொண்டு மறு மொழியாகக் கூறியது. தங்கால் முடக் கொற்றனார் பாடியது

‘அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
‘பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனி பசந்தனள்’ என வினவுதி. அதன் திறம்
யானும் தெற்றென உணரேன். மேல் நாள்,
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
‘புலி புலி!’ என்னும் பூசல் தோன்ற……..

“அன்னையே! உன் மகள் பாலுங் கூட உண்ணாதவளாய்ப் பெரிய துன்பங்கொண்டு உடல் வெளிறி இளைத்து வருகின்றாள், அது ஏனென என்னை வினவுகின்றாய். அதற்கு என்ன காரணம் எனத் தெளிவாக எனக்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்று தோன்றுகிறது.சில நாட்களுக்கு முன்னம் நானும் அவளும் மற்ற தோழிமாருடன் பூக்கள் மலிந்து மலர்ந்துள்ள மலைச் சாரலுக்கு விளையாடச் சென்றிருந்தோம். பூக்கொய்து விளையாடுகையில் அங்கொரு வேங்கை மரம், கிளை கொம்பெல்லாம் பூத்து மணம் பரப்பி நின்றிருந்ததைக் கண்டோம். ஒரு சிக்கல். அந்தக் கிளைகளெல் லாம் கைக்கெட்டா உயரத்தில் இருந்தன. அந்தக் கிளைகளைத் தாழச் செய்யப் புலி புலி என்று கூக்குரல் எழுப்பினோம்.தன்னைத் தான் கூவி அழைக்கிறோம் என்று எண்ணிய வேங்கை மரம் (வேங்கை=புலி என்றும் பொருள்) மலராத மொட்டுகளை யும் மலரச் செய்து, கிளையைச் சாய்த்து எங்களை உற்று நோக்கியது. கையெட்டும் அளவில் இருக்கும் பூக்களைக் கை நிறையப் பறித்து மகிழ்ச்சியுடன் சூடிக் கொண் டோம்… என்று வர்ணனைப் போகிறது. புலி புலி என மகளிர் கூவினால் வேங்கை மரக் கிளைகள் மலர் கொய்ய ஏதுவாகத் தாழும் என்பது ஒரு பண்டைய நம்பிக்கை. இது புலவர்கள் படைத்துக் கொண்ட இலக்கிய வழக்காகும். இதுவும் தோஹதக் கிரியையின் ஓர் அங்கமாகும்.

இச்சமயம் உவமான சங்கிரஹம்- (இரத்தினச் சுருக்கம் பகுதி) நூலைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அணியிலக்கண வளர்ச்சி வரலாற்றில் உவமைப் பொருட்களைத் தொகுத்துப் பார்க்கும் முயற்சியைக் கையாண்டுள்ளது.இதை எழுதியவர் யாரென்றுத் தெரியவில்லை. 1915-16-ம் ஆண்டுகளில் செந்தமிழ் மாத இதழில் தொடராக வெளி வந்துள்ளது. உவமான சங்கிரகத்தில் சொல்லப்பட்டுள்ள ஒத்த உவமைக் கருத்துக் களையே இதுவும் தருவதால் அதன் ஓர் அங்கமாகவே இதுவும் கருதப்படுகிறது. பிரிவாற்றாமைக்கு உரிய அறிகுறிகள் என்ற தலைப்பில், “மகளிரான் மலர் மரம்” எனும் பகுதியில் கலித்துறையில் அமைந்துள்ள 41வது பாடல், மகளிருக்கும்
மரங்களுக்கும் இடையே நிலவும் உறவை நேர்த்தியாக விவரிக்கிறது.

எண்மா தவிசண் பகம்பாலை புன்னை யெழிற்படவி உட்
கொண்மா மகிழ மராவொ டசோகு குராமுல்லையின்
பண்பாட னீழற் படனட்ட லாடற் பழித்தலுண்ணல்
கண்ணோக்கு தையனைணத் தல்சிரித் தற்கலர்க் காடுருமே
எண் -மதிக்கத் தக்க, மாதவி- குருக்கத்தி சண்பகம் ஏழிலைப் பாலை -, புன்னை–சண்பகம், பாலை, புன்னை, எழில் படலி- அழகிய பாடலி (பாதிரி) கொள்மா – கொள் ளுதர்க்குரிய மா மரம் மகிழ் – மகிழ, அம் மராவுடனே- அழகிய மரா உடனே அசோகு – அசோகம் குரா- குரா முல்லை-முல்லை, மின்- (ஆகிய இவைகள் முறையே இப்படிச் செய்தால்)

மாதவி-பண்பாடல் னீழல்படல்- சண்பக மரம் -நிழல் படுவது, ஏழிலைப் பாலை மரம்- நட்டல் (நட்பு கொள்ளுதல்), புன்னை- (ஆடல்), பாதிரி, பாடலி- (பழித்தல்), மா மரம்- கவரும் பார்வை, மகிழ மரம்- உண்ணல் (நுகருதல், பற்களால் கவ்வுதல்), மரா- கண்ணோக்கு (அருளுடன் பார்ப்பது), அசோகு- காலால் உதைப்பது, குரா-அணைத்தல், முல்லைக்கொடி- சிரித்தல், அலர்க் காடுருமே – மலர்கள் பூத்துக் குலுங்கும்.

விளக்கம்:
மரா= மரா/மராஅம்/மரவம் என இலக்கியங்களில் சொல்லப்படுபவை மூன்று பெரு மரங்கள்–(1) சுருளி/சுள்ளி (சூர்ணீ = வடமொழிப்பெயர்). இதன் பாலிலிருந்துச் சாம்பி ராணி தயாரிக்கப் படுகிறது. மடையன் சாம்பிராணி மரம் என்ற பெயருமுண்டு. (2) கொற்றவை (பாலை) நிலத்தின் யா என்னும் ஆச்சா மரவகைகள்.Shoreatrees,காராச்சா, வெண்மையானப் பூக்களைக் கொண்டது..(3) கடம்பு :செங்கடம்பு (முருகன் அணிவது),
வெண்கடம்பு, பந்துக்கடம்பு (காதம்பரி என்னும் கள் தயாரிப்பது. அம்பாளின் மலர்), …
மரா/ மரா அம் என்ற பெயர் தமிழில் உள்ள அரிதான ஓரு பெயர்ச்சொல் (TAUTONYM) ஆகும். மரம் என்ற தாதுமூலத்தாலேயே அழைக்கும் மரங்கள் இவைதாம்.

மாதவச் சிவஞான முனிவரின் மாணாக்கராகிய கவிராட்சச கச்சியப்ப முனிவர் தம் நூல்களில் வடமொழி இலக்கிய, வைதிக மரபுகளையும் பதிவு செய்துள்ளார்.காஞ்சிப் புராணம் இரண்டாம் காண்டம் கச்சியப்ப முனிவர் அருளியது. இயற்கை வருண னையே காப்பியமாக அமைந்தது. இதில் இளவேனிற்காலத்தில் இளமகளிர் புறத்தே சென்று மலர் கொய்து விளையாடும்போது செய்யும் இத் தோஹதகக் கிரியைகளை யும் அவற்றுக்கு உடம்படும் மரங்களையும் பற்றிக் கீழ்கண்டவாறு விரிவாகப் பாடுகிறார்.

மகளிர் நகைக்க முல்லை மலரும் என்பது கவிமரபு. அல்லிமலரை யணிந்த குழலியராகிய மகளிர், நகை முகத்துடன் முல்லைமலர் கொய்தனர். அது,’முல்லை! உன்னுடைய அரும்புகள் என் மூரலுக்கு நிகராகா’ (மூரல்= புன்சிரிப்பு)என நகையாட,, அம் முல்லையும் பதிலுக்கு, ‘ உன் மூரல் எமதரும்புக்கு நிகராகாமையினால் அல் லவா பல்லும் இதழும் காவலாக உள்ள உம் வாயினுள் போய் ஒளிந்து கொண்டது’ என எதிர்த்துப் பழித்ததுபோல முல்லைக் கொடி மெல்லிய அரும்பு ஈன்றது. அது கண்டு அபராதம் விதிப்பது போன்று மகளிர் அவ்வரும்பினை விரைந்து பறித்தனர். தம்மை இகழ்ந்து பழித்தவரது பல்லைப் பிடுங்குவது போல அச்செயல் இருந்தது. முல்லை அரும்புகள் மகளிரது பற்களுக்கு உவமை. அது பல்தெரியச் சிரிக்கும் புன் முறுவலைக் குறித்தது.

ஏழிலைம்பாலை (ஓரு காம்பில் 7 இலைகள் இருப்பதால் இப்பெயர்) என்னும் மலர் மகளிர் நட்புச் செய்வதால் மலர்வது. சோலையில் ஒரு பெண் ஏழிலைம்பாலை மரத்தைக் கண்டாள். முன்பொரு முறை தன் கணவருடன் நீண்ட கானகத்தில் தனிமையில் சுற்றித் திரிந்தபோது, ஏழிலைம்பாலை மரம் செஞ்ஞாயிறு வெளி யேற்றும் வெம்மை தணிய நறுநிழல் நிறைத்து தளர்ச்சியினை அகற்றியது. அது செய்த நன்றியை நினைந்து அப்பழைய நட்பினை நினைவு கூர்ந்தாரென்னும்படியாக, அவ்வேழிலைம்பாலையில் மணமிக்க மலர்கள் கொய்தாள். மலர் கொய்ததால் வறு மையடைந்த ஏழிலைம்பாலை மரமும் அவள் நட்புக் கொண்டாள் என நினைத்துக் கொத்து விரிந்தது புது மலர் முகிழ்ப்ப மங்கை அதனை நெருங்கிக் கொய்தாள்.

பாதிரிப் பூக்கள் கொய்யவியலா உயரத்தில் இருப்பதைக் கண்டு, மலர் கொய்யும் மகளிர்,அம்மரத்தை இகழ்ந்தனர். ‘பாடகமே! நீ தோடணிந்து நனி பூத்து எங்களை ஒப்ப இருந்தும் எங்களுக்கு இதழ் விரியும் மணமுள்ள போதினை நல்காதது என்னே’ என இகழ்ந்தனர். தோடு சிலேடையாக, மகளிரின் காதணியையும் மலரிதழையும் குறிக்கும். நனி பூத்து, என்பது சிலேடையாக மலர்கள் நிறையப் பூத்திருத்தலையும்
மகளிர்கள் இன்பத்துய்த்தற்குரிய பருவம் எய்தியிருத்தலையும் குறிக்கும். இவ்வாறு இகழ்ந்து கூறப் பெருமை நீங்கும் பழிப்புக்கு அஞ்சி எம்மை இகழாதீர் எனப் பணிந்த தைப் போலக் கைக்கு எட்டாது ஓங்கும் கிளையில் மீண்டும் செறிந்து மலர்ந்து தம் எதிரில் வளையும் அக்கொம்பிலிருந்து பாதிரிமலர்களைக் கொய்தனர். பாதிரி மகளிர் இகழ மலரும் தன்மையது. இது கவி மரபு.

செண்பகம் மகளிரின் நிழல்பட மலர்வது. முழுமதியைப் புறங்கண்டு இறுமாப்புக் கொண்ட அழகிய முகமுடைய மகளிர் சிலர் தங்கள் நிழல்பட்டதனால் முழுதும் அறவே பறிக்குந்தோறும் மீண்டும் மீண்டும் நிரம்பப் பூத்துத் தழைக்கும் காரணத்தை அறியாமல் வண்டு மொய்க்காத சண்பகமரமோ அல்லது உலவாப் பொற்கிழியோ என வியந்து நின்றனர்

மா மகளிரின் பார்வை படத் தழைப்பது. மாந்தளிரின் நிறம் மாமை எனப்படும். மாமை இளமகளிரின் நிறமுமாகும். மகளிர் மாவிளந்தளிரைத் தம்முடைய நிறமொப்பத் தளிர்த்தது என அழுக்காறுற்று பருத்த அடியை உடைய மாவின் செம்மைநிறத் தளிர் அனைத்தையும் கொய்யுந்தோறும், அவர்களுடைய விழிப் பார்வை வீரியத்தினால், அந்தமரமும் எதிர்ப்பது போலத் தளிர்களை மிகுதியாக ஈன்றன., அதற்கு நாணி, அம்மகளிர் தாம் தோற்று விட்டதை ஒத்துக்கொண்டது போலக் கொய்தலை நிறுத்திக் கைசோர்ந்து இளைத்தனர்.

மகிழமரக் கொம்பை மகளிர் பல்லினாற் கவ்வ மலரும். இந்தக் கிளையில் உள்ள மலர்களை நான்தான் முதலில் பறிப்பேன் நான் பறிப்பேன் எனப் போட்டியிட்டுக் கொண்டு பறித்தனர். ஒருசிலர் ஒருகரத்தால் கிளையைப் பற்றிக் கொண்டு மறு கரத்தால் பரித்தனர். அருகில் சிலர், ஒருகையினால் மரக்கொம்பினைப் பற்றி மலர் பறித்துபின், வெற்றி பெற வேண்டும் என எண்ணி மலர்க்கிளையை வாயினால் பற்றிக் கொண்டு இருகைகளினாலும் பறித்தனர். அவ்வாறு பறித்தும் மலர்கள் குறை யாமையைக் கண்ட பிறர் மகிழமரம் நடுநிலைமைக் காக்கவில்லை என்று சினந்து பறித்தலைக் கைவிட்டனர்.

மாதவி- குருக்கத்தி .( வசந்த மல்லி) இது மகளிர் பாட மலர்வது, மெல்லிய பஞ்சு பட்டாலே மிக நடுங்கும் மகளிர் சிலர் தங்கள் தாமரை மலரிதழ் போன்ற வாய் திறந்து தம்மியல்புக்கு ஏற்ப பாடவே, தேன் ஒழுக மாதவிமலர் மிகுதியாகப் பூத்துக் குலுங்கியது. அதனை வேறு சிலரும் வந்து பார்த்துத் தம் கைம்மலரால் அம்மலரை முகத்தில் வியர்வை அரும்பக் கொய்தனர்.

மகளிர் உதைக்க மலர்வது அசோகு. யாழினிசை போல இனிமையாகப் பேசும் மகளிர் சிலர் உயர்ந்த கமுக மரத்தில் கட்டப் பெற்ற ஊஞசலேறி எதிரே இருந்த அசோக மரத்தை, ‘ஒளியுடைய எம் நிறத்தைக் கவர்ந்தீர்’ எனக் கோபித்து உதைத் தலைப் போலத் தம் மெல்லடியால் உதைந்து ஆடினர். அவ்வாறு உதைக்குந்தோறும் மிகுதியாகப் பூத்துத் தரையில் கொட்டும் அசோகமலரினை முயற்சியின்றிக் கிடைத் தமையால் மகிழ்ச்சியுடன் வேறு சிலர் அவற்றை அள்ளிக் கொண்டுச் சென்றார்கள்.

புன்னை மகளிர் ஆடலுக்குப் பூப்பது. ஒலிக்கும் மணிமேகலையும் தவளைபோல ஒலிக்கும் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப, நகைகள் சார்ந்த பொன்னிற முலைகளை உடைய இளமங்கையர் ஆடுதலும் நாட்டியத்தின் சிறப்பாக அமைந்திருத்தலைக் கண்டு பொற்பரிசில்களை எதிர் வீசுவார்போல இளம் புன்னை நறிய மலர்களைப் புதிதாகப் பூத்து உகுப்ப அதிசயத்துடன் விரும்பி சிலர் பறித்துச் சென்றனர்.

மகளிர் தழுவ மலர்வது குரவம்.(மலை வேம்பு, நீண்ட நீல கண்ணாடிக் குப்பி போன்றது) குரவினது மலர் பாவையைப் போல இருப்பதால் பாவை எனப்படும். அம்மானை விளையாட்டில் மணியால் செய்த அம்மானைக் காயைக் குரவம் பாவைக்கு அளிப்பவர் போல மேலே வீச, அது மராமரக் கிளையில் சிக்கித் தங்கியது. அந்த அம்மானைக் காயை எடுப்பதற்குக் குரவ மரத்தின் மேல் ஏற விரும்பி அம்மரத்தை மகளிர் தழுவினர். தாம் அம்மானைக்காயைக் கவர்ந்து கொண்டதாக நினைத்து இவர்கள் தாக்குவர் என அஞ்சிய குரவம் அடிதாழ்ந்து வணங்குவது போலத் தாழவே, கவர்ந்து கொண்ட பொருளோடு அபராதத் தொகை யும் கொடுப்பது போல, அம்மானைக் காயுடன் எமக்குப் பூக்களையுந் தந்ததெனப் புகழ்ந்து குரவ மலர்களைக் கொய்தனர்… என்று வர்ணிக்கிறார் புலவர்.

இதுவரை தமிழ் இலக்கிய மரபைப் பார்த்தோம். அடுத்து சம்ஸ்க்ருதக் கவிகள் இதை எப்படிக் கையாண்டுள்ளார்கள் என்பதைக் காணலாம்.

           -------------------------------------------------------------------------------

tags- வஸந்த விழா, மங்கையர், மரங்கள், பூங்கொடிகள்,

கரந்துறைப் பாட்டு – 1 (Post No.10,764)

PICTURE OF PAMBAN SWAMIKAL CHITRA KAVI FROM ANOTHER BLOG

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,764
Date uploaded in London – – 21 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!
கரந்துறைப் பாட்டு – 1

ச.நாகராஜன்

கரந்துறைப் பாட்டு என்பது சித்திர கவியில் ஒரு வகையாகும்.

ஒரு செய்யுளுக்குள் இன்னொரு செய்யுள் மறைந்திருக்கும் படி
ஒரு பாடலை அமைப்பது கரந்துறைப் பாட்டு ஆகும்.

குறிப்பிட்ட செய்யுளில் இன்னொரு செய்யுளைத் தேடிக் கண்டு பிடிப்பது என்பது ஒரு கடினமான காரியம்.

என்றாலும் இயற்றியவர் அதைச் சொல்லி விட்டாலோ, அல்லது நன்கு கற்றறிந்த ஒரு தமிழ்ப் புலவர் கரந்து உறையும் பாடல் எது என்று சொல்லி விட்டாலோ நமக்கு மகிழ்ச்சி தான்.

உதாரணத்திற்கு தண்டியலங்காரம் தரும் கரந்துறைப் பாடல் இது:

நேரிசை வெண்பா
அகலல்குற் றேரே யதர மமுதம்
பகர்தற் கரிதிடையும் பார்க்கின் – முகமதிய
முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீல
மைத் தடங்கண் வெவ்வேறு வாள்

பாடல் ஒரு பேரழகியைப் பற்றியது.

அவளது அல்குல் (ஜனன உறுப்பு) தேர் போன்றது.
அதரம் அதாவது வாய் இதழ் அமுதம் போன்றது.
சொல்லவே முடியாத அரிய இடையை உடையவள் அவள்.
பார்த்தால் முகம் சந்திரனைப் போல இருக்கும்.
அவள் (முறுவல்) பற்களோ முத்துப் போல இருக்கும்.
மை தடவிய அவளது கரிய கண்கள் நீலோற்பல மலரை ஒக்கும்.
அக்கண்களோ வெவ்வேறு வாள் போலக் கூர்மையாகத் திகழும்.

சரி, இந்த அழகியைப் பற்றிய பாடலில் கரந்து உள்ள அதாவது ஒளிந்து இருக்கும் பாடல் என்ன?

அது தான் வள்ளுவரின் திருக்குறளில் வரும் முதல் குறளாகும்.

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு

இதைக் கண்டுபிடிப்பது எளிது.
என்றாலும் மேலே உள்ள செய்யுளில் கரந்து உறையும் திருக்குறளைக் காண குறள் எழுத்துக்கள் மட்டும் சற்று தடித்த எழுத்துக்களில், சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டிருக்கிறது, கீழே :

அகலல்குற் றேரே யதர மமுதம்
பகர்தற் கரிதிடையும் பார்க்கின் – முகமதிய
முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீல
மைத் தடங்கண் வெவ்வேறு வாள்

குறளில் உள்ள எழுத்துக்கள் 25.
அந்த 25 எழுத்துக்களையும் மேலே உள்ள பாடலில் தடித்த எழுத்துக்களாக சிவப்பு வண்ணத்தில் காணலாம்.

இது இப்படி இருக்க இதைப் பற்றிய இன்னொரு விளக்கமும் உண்டு.
அதை அடுத்துப் பார்ப்போம்.


tags– கரந்துறைப் பாட்டு – 1

PANINI’S 83 MYSTERIOUS WORDS- PART 3 (Post No.10,763)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,763

Date uploaded in London – –    20 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

51.NAVA NAGARA 6-2-89

Like Mahanagara , this city also cant be identified. Only guesswork is done be scholars.

52.Nikaaya 3-3-41 ; residence of monks?

Is it a dwelling place or anything else? No one is sure. In Ramayana meaning changed to a hiding place.

53.Nikaayya 3-1-29 dwelling place

54.Palada 4-2-142; a city

55.Paladii 4-2-110; a town

56.Parpa 5-4-10; wheeled chair

Parsu 6-3-117

Is it a weapon or a community of Persia (Iran) has been debated by scholars. Panini used it to denote a Sanga (group) who live by arms.

Paayya 3-1-129- a weight

Many different weights and measures such as Aacita,Drona, Kamsa, Asvina Kulija are found olny in Panini.

59.Phaanta 7-2-18; meaning, made or obtained  without effort

60.Piiyuksaa 4-3-152, 4-2-80; 8-4-5 – a tree, variety of Plaksa

61.Potra  3-2-183; bent portion of plough

63.Pratiskasa 6-1-152; messenger

63.Pravani 5-4-160; weaver’s shuttle

Raajapratyenas 6-2-60; body guard or Aide de camp

65.Sancaayya 3-1-130; sacrifice

66.Sanghatitha 5-2-52; person whose attendance completes the quorum.

67.Suhita 2-2-11

68.Saalaatura 4-3-94; place name

Later commentators did not say where it is. Now we say this is the birth place of Panini, which is near Lahore in Pakistan.

69.Saphoru 4-1-70

70.Saarada 6-2-9; NEW, RECNT

71.Saarkara 4-2-83; 5-2-104; 5-2-105 , 5-3-107

This is a very interesting word. Panini used it in 4 different senses:-

A town, Honey, Sukkur in Pakistan, Sugar

Later Susruta used it for wine, Srauta sutras used it for melodious verses.

Even in Tamil we use Sakkarai for Sugar today. There is even a famous site in Egypt , Saqqara.

English word Sugar itself came from Sanskrit Sarkara (Sucre in European languages).

Froth and milk are also added by dictionary. Probably the meaning changed slowly. It may be confused with Chakra (wheel0.

The very first verse in the Rig Veda is by a poet named Madhu Chandas (Mr.Honey verse)!

XXX

72.Tadagha 3-2-55; artificer = a skilled craftsman or inventor

73.Tuudi 4-3-94 , a place name

74.Udaja 3-3-69; herding cattle

75.Udasvit 4-2-19; curd

76.Upadhi 5-1-13; part of chariot

77.Varmati 4-3-94; place name; Bamiyan in Afghanistan?

78.Varnu 4-2-103, name of a country; Bannu? A river? Sun?

Vasna 5-1-51, 5-1-56, 5-4-13; sale price or value realised

Vraata 5-2-21, 5-3-113 aboriginal tribe

My research shows Vraata is the origin of Gypsies; outcaste Brahmins and other castes who refused to follow the Sastras. Vedas describe them going in groups in an unruly manner. They are accused of thefts; they were nomads Even Tamil literature refers to an outcaste Brahmin Nakkirar who was making bangles from conch shells.

Rig Veda refers to them in many places:

10-57-5; 10-34-8; 1-163-8; 3-26-2; 9-14-2; AV.2-9-2

Taittiriya Samhita 1-8-10-2

Raghuvamsa – 12-94, Sisupalavadham  4-34

xxxx

81.Vyakti 1-2-51

82.Vyaasraya 5-4-48

83.Yavaka 5-2-3; rice

It is a very interesting word. In Vedas it meant grains in general or rice or barley. But foreign translators misled the world by giving Barley  as meaning everywhere.  Caraka Samhita mentioned nine varieties of RICE under Yavaka.  This gave name to Java in Indonesia.

Y changed to J is seen in several other words as well. The frequent reference to Yava in the Rig Veda shows that it is a predominantly agricultural society, exploding the myths of Max Muller gangs.

Conclusion

If the words are found elsewhere it differs from the meaning given by Panini. Most of them are untouched by Mahabhasya of Patanjali; did he leave them without explanation because everybody knew the meaning?

Most of the words are not used in classical or later literature.

The author DR AVANINDRA KUMAR of ‘Archaic Words in Panini’s Astadhyaayi’ (1981) concludes that dating Panini around 400 BCE is wrong and he must have lived very near the Vedic age, earlier than 4th century BCE.

–subham—

tags- mystery words, Panini, Vrata, Gypsy, Archaic , Sugar, Sarkara

400 ரிக்வேத ரிஷிகள் பட்டியல் – 7 (Post No.10,762)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,762

Date uploaded in London – –    20 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

301. விவ்ரஹ்தா காஸ்யப 10-163

விப்ராத் ஸெளர்ய  10-170

விஸ்வக கார்ஸ் னி  8-86

விஸ்வகர்மா பெளவன  10-81/82

விஸ்வ மணி பெளவன்  10-81/82

விஸ்வமனா  வையாஸ் வன  8-23/26

விஸ்வ வாரா ஆத்ரேயி  5-28

விஸ்வ சாமா  ஆத்ரேய 5-22

விஸ் வாமித்ர  காதினஹ  3-1/12; 3-24/53; 3-57/62; 9-67;10-137

விஸ் வாவசு கந்தர்வ 10-139

விஸ்ணு ப்ராஜாபத்ய  10-184

விஹவ்ய ஆங்கிரஸ 10-128

வீதஹவ்ய ஆங்கிரஸ 6-15

வ்ர்ஷ  ஜான 5-2

வ்ர் ஷகண வாசிஷ்ட 9-97

316. வ்ர்ஷா கபி ஐந்த்ர  10-86

வ்ர்ஷாநாக வாதரசன  10-136

வேன பார்கவ 9-85; 10-123

வேன என்பது வரலாற்றில் முக்கியமான பெயர். அவனைக் கெட்ட அரசர் பட்டியலில் மநு ,சேர்த்துள்ளார். அவனை மக்களே புரட்சி செய்து கொன்றுவிட்டனர். ஆனால் அவன் தொடையைக் கடைந்து ப்ருதிவீ என்ற புத்திரனை உருவாக்கி மன்னன் ஆக்கினர் ரிஷிகள். இதனால் பூமிக்கு ப்ருத்வி என்று பெயர்.பிரெஞ்சுப் புரட்சிக்கும் முன்னர் மக்கள் எழுச்சியில் இறந்த முதல் மன்னன் வேனன். அவன் உடலில் இருந்து CLONING க்ளோனிங் என்னும் அதி நவீன விஞ்ஞான முறையில் வேறு ஒருவர் உருவாக்கப்பட்டது போல கதை செல்கிறது. இந்த வேன பார்கவ ரிஷிக்கும் அந்த மன்னருக்கும் தொடர்பு உண்டா, இருவரும் ஒருவரா என்பது ஆராய்ச்சிக்கு உரிய விஷயம்.

XXX

வைகானசஹ  சதம்  9-66

இதுவரை இரு வைகானச பெயர்கள் வந்துள்ளன. வைஷ்ணவர்கள் பின்பற்றும் வைகானச ஆகமத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டா என்று ஆராயலாம். பெயரில் சதம் / 100 என்ற எண் வந்துள்ளது. முன்னர் 1000 என்ற எண் , சில பெயர்களில் கண்டோம். தமிழில் கண்ணாயிரம் என்ற பெயர்களை இன்றும் காண்கிறோம்.

XXX

வ்யஸ்வ ஆங்கிரஸ  8-26

வ்யாக்ரபாத வாசிஷ்ட 9-97

புலிக்கால் முனிவர் (வ்யாக்ர பாத) தமிழ்நாட்டின் சிதம்பரம் முதலிய ஊ ர்களுடன் தொடர்புடையவர் . தமிழ் நாட்டில் குறைந்தது 9 புலியூர்கள் உண்டு.

சம்யு பார்ஹஸ்பத்ய  6-44/46

சகபூத நார்மே த  10-132

எகிப்து நாட்டில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாண்ட மன்னரின் பெயரும் நார்மெர்  NARMER  . சக த்வீபத்தின் பெயரும் இந்த ரிஷி அல்லது மன்னரின் பெயரில் உள்ளது ஆராய்ச்சிக்குரியது.

பழங்காலத்தில் ஆடசி புரிந்த மன்னர்களும் புரோகிதர் போலவே அதிகாரங்கள் PRIEST KINGS உடையவர்கள். அது மட்டுமல்ல புறநானூற்றில் உள்ளது போலவே பல மன்னர்களும் கவி ஞர்களாக இருந்துள்ளனர். ரிக் வேதம் முழுதும் உள்ள வரலாற்றை சிலர் மட்டுமே ஆராய்ந்துள்ளனர். இது மஹாநாடு கூட்டி ஆராய வேண்டிய விஷயம்.

இந்தப் பெயர் நர்மதை நதியுடன் தொடர்புடையதா என்றும் ஆராயலாம்.

XXXX

சக்தி வாசிஷ்ட  7-32; 9-97; 9-108

வசிஷ்டரின் புதல்வரான சக்தி பற்றியும் விச்வாமித்ரருடன் உள்ள மோதல் பற்றியும் நிறைய கதைகள் உள்ளன.

சங்க யாமயான  10-15

சசி பெளலோமி 10-159

வரும் ஒரு பெண் கவிஞர். 30 பெண் புலவர்கள் பெயரை முன்னரே கொடுத்துள்ளேன்.

சதப்ரபேதன வைரூப  10-113

சபர காக்ஷி வத  10-169

சபர , சபரி என்பதெல்லாம் வேடர் குலப் பெயர்கள்

சச கர்ண காண்வ 8-9

சச கர்ண– என்றால் முயல் காது ; அந்தக் காலத்திலும் இப்படி பட்டப் பெயர்கள் உண்டு. தமிழ்ப் புலவர்களில் ஒருவர் பெயர் நரித் தலை ; அவர் பெயர் நரிவெரூவுத் தலையார்.

XXX

சஸ்வதீ ஆங்கிரஸீ  8-1

பெயரே பெண்பால் புலவர் என்பதைக் காட்டுகிறது.

சார்யாத மானவ  10-92

மநு குடும்பத்தினரின் பெயர்களில் மானவ ஒட்டிக்கொள்ளும் ; இந்தப் பெயர்களை தனியாக ஆராய்தல் அவசியம் ஆகும்.

சச பாரத்வாஜ 10-152

சிபி ஒளசிநார  10-179

தமிழ் இலக்கியத்தில் மிகவும் அடிபடும் மன்னர் சிபிச் சக்ரவர்த்தி; சோழர்கள் தமிழர்கள் அல்ல ; அவர்கள் ஆதிகாலத்தில் வடமேற்கு இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டிற்குக் குடியேறியவர்கள் இதை முன்னரே தனி ஆராய்ச்சிக் கட்டுரையாக எழுதியுள்ளேன். சூரிய குலம் என்று கல்வெட்டுகளில் வருவதற்கு முன்னரே புறநானூற்றின் பழைய பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் புறாவுக்காக உயிர் கொடுத்த சிபியின் பெயர் வருகிறது. தமிழர்களின் பழமையை ரிக் வேத காலத்துக்குத் தள்ளும் குறிப்பு இது. சங்க இலக்கியத்தில் அதிகமாக அடிபடும் மன்னர் சிபி ஒருவரே.

இதே போல அதிய மான் முதலியோர் கரும்பு (இக்ஷ்வாகு) வம்சத்தினர் என்று அவ்வையார் பாடுவது பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரையையும் படிக்கவும்

சிரிம்பித பாரத்வாஜ  10-155

சிசு ஆங்கிரஸ  9-172

இவர் ஞான சம்பந்தர் போல குழந்தையாக  இருக்கும்போதே கவி பாடியவர் போலும் !

சிறு பெண்ணாக வீணை வாசித்து புகழ்பெற்ற பேபி காயத்ரீ , கல்யாணம் ஆகி BABY பேபி பெற்ற பின்னரும் அவரை நாம் பேபி காயத்ரீ என்றே கடைசி வரை அழைக்கிறோம் . அது போல சிசு / பேபி / குழந்தை என்ற பெயர் ஒட்டிக்கொண்டு  இருக்கலாம். எங்கள் வீட்டில் சகோதர சகோதரிகளுக்கு பாட்டு சொல்லிக்கொடுத்தவர் பெயர் பால கிருஷ்ண ஐயங்கார் . அவர் வாக்கிங் ஸ்டிக் WALIKNG STICK இல்லாமல் நடக்க மாட்டார். அவ்வளவு தள்ளாத வயது. இருந்த போதிலும் அவரை நாங்கள் கிழட்டுக் கிருஷ்ண ஐயங்கார் என்று சொல்லவில்லை.

இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் வ்ருஷ கபி / SEXY MONKEY செக்சி குரங்கு என்ற ரிக் வேத பாடலை வைத்து வெளிநாட்டினர் அவர்கள் செய்யும் செக்ஸ் விஷயங்களை எல்லாம் எழுதித் தள்ளியுள்ளனர் ; அந்தப் பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வருவதுடன் இங்கே புலவர் பட்டியலிலும் உளது. ஆக பெயரை மட்டும் வைத்து உளறிக்கொட்டுவோருக்கு இது ஒரு எச்சரிக்கை .

XXX

சுனஸ் சேப ஆஜிகர்த்தி  1-24/30

சுனஸ் சேப என்றால்’ ‘நாய் வால்’ என்று பொருள்; யாகத்தில் பலி கொடுக்க இவரை அரிச்சந்திர மஹாராஜா யூப  கம்பத்தில் கட்டிவைத்திருந்த பொது அந்தப் பக்கம் வந்த விசுவாமித்திரர் புரட்சி செய்கிறார். அவரை விடுவித்து தேவராதன் என்று பெயர் சூட்டி வேத ரிஷி பட்டியலில் சேர்த்துவிட்டார். இந்த நாய்வால்,  அஜீகர்த்தர் என்ற ஏழைப் பிராஹ்மணனின் புதல்வர்.; அவர்கள் நாய்வாலை விற்றுவிடுகின்றனர்.

இறுதியில் நாய்வாலும் பலி இடப்படவில்லை. அதற்க்கு முன்னரோ பின்னரோ புருஷ மேத யக்ஞத்தில் யாரும் பலி இடப்பட்டதாக வரலாறும் இல்லை. ஆனால் பெயரை மட்டும் வைத்து வெள்ளைக்கார ர்கள்  புஸ்தகம் புஸ்தகமாக எழுதித் தள்ளிவிட்டனர் ; உண்மையில் சொல்லப்போனால் பைபிள், பெரிய புராணம் முதலியவற்றில்தான் உண்மையில் நடந்த நர பலி  பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பையனுக்கு ஏன் ‘நாய்வால்’ என்று பெயர் என்பதையும் எவரும் ஆராயவில்லை

உண்மையில் புருஷ மேதம் / மனித யாகம் பதிற்றுப்பத்து என்ற சங்க நூலிலும் உள்ளது.

ஏய் பார்ப்பனப் புலவரே உமது  கவிதை கண்டு மெச்சினோம்; உமக்கு என்ன வேண்டும் என்று சேர மன்னன் வினவுகிறான்.உடனே பாலைக் கெளதமனார் என்ற அந்தப் புலவர் நானும் என் மனைவியும் உடலோடு சொர்க்கம் புகவேண்டும் என்கிறார்கள். அசந்து போன சேர மன்னன் பல்யானை செல் கெழு குட்டுவன், அது எப்படி முடியும் என்று வினவ, நான் சொல்லும்படி பத்து வேள்விகளை இயற்று. பத்தாவது வேள்வியின்போது என்ன நடக்கிறது என்று  பார் என்கிறார் சேர மன்னன் செய்த பத்தாவது யாகத்தன்று பார்ப்பனப் புலவரும் பார்ப்பனியம் மாயமாய் மறைந்து விடுகின்றனர். இதுதான் புருஷ மேத யக்ஞம் என்பது என் கருத்து.

XXX

சுனஹோத்ர பாரத்வாஜ  6-33/34

ஸ்யாவாஸ் வ ஆத்ரேய 5-52/61; 5-81/82; 8-35/38; 9-32

ஸ்யேன ஆக்னேய 10-188

ஸ்யேன என்றால் பருந்து, களுக்கு என்று பொருள்

தமிழில் பல ஆந்தை பெயர்கள் உண்டு. இது ஆந்தையூர் என்பதிலிருந்து வந்ததாகச் செப்புவர். இது விவாதத்துக்குரிய விஷயம்

ஸ்ரத்தா காமாயாநீ  1-151

பெண் புலவர்

ஸ் ருத கக்ஷ ஆங்கிரஸ 8-92

341- ஸ்ருத பந்து  கெளபாயன / லவ்பயான 5-24; 10-57/60

இதுவரை 341 ரிஷிகள் பெயர்கள் பட்டியலிடப்பட்டன

தொடரும் ………………………………

TAGS- ரிஷிகள் பெயர்கள்-7

எழுத்து வருத்தனம் – 1 (Post No.10761)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,761
Date uploaded in London – – 20 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை
எழுத்து வருத்தனம் – 1
ச.நாகராஜன்

எழுத்துக்களை வைத்து சொற்களில் விளையாடும் ஒரு விளையாட்டு எழுத்து வர்த்தனம்.
பொருள் பயக்கின்ற ஒரு மொழியை எடுத்துக் கொள்ள வேண்டியது.
அது தானே வெவ்வேறு சொல்லாய் வெவ்வேறு பொருள் படுமாறு எழுத்துக்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வளர்ப்பது தான் எழுத்து வருத்தனம் என அழைக்கப்படுகிறது.
இதை நன்கு விளக்கி, ‘சித்திர கவி விளக்கம்’ என்ற தனது நூலில் (1939ஆம் ஆண்டு வெளியீடு) வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார் (பரிதிமால் கலைஞர்) தரும் உதாரணப் பாடல் இது :

ஏந்திய வெண்படையும் முன்னா ளெடுத்ததுவும்
பூந்துகிலு மாலுந்தி பூத்ததுவும் – வாய்ந்த
வுலைவி லெழுத்தடைவே யோரொன்றாச் சேர்க்கத்
தலைமலைபொன் றாமரையென் றாம்.

பாடலின் கடைசி அடியில் தலை, மலை, பொன், தாமரை என்ற சொற்கள் அமைவதற்குரிய வழி மேலே உள்ள மூன்று அடிகளில் இருப்பதைப் பாடல் கூறுகிறது.
விளக்கத்தைப் பார்ப்போம்:
மால் – திருமால்
ஏந்திய வெண்மை படையும் – கையில் ஏந்திய படைக்கலமாகிய வெள்ளிய சங்கும்
முன் நாள் எடுத்ததுவும் – முன்னொரு காலத்தில் (இந்திரன் பொழிந்த மழையைத் தடுக்க) மேலே உயரத் தூக்கிப் பிடித்ததும்
பூ துகிலும் – அழகிய ஆடையும்
உந்தி பூத்ததுவும் – நாபியில் மலர்வித்ததும்
(ஆகிய இவற்றில்)
வாய்ந்த – பொருந்திய
உலைவு இல் எழுத்து அடைவே ஓர் ஒன்றா சேர்க்க – குற்றமற்ற எழுத்துக்களை முறையே ஒன்றன் மேல் ஒன்றாகச் சேர்க்க
(அது முறையே)
தலை, மலை, பொன், தாமரை என்று ஆம் – தலை, மலை, பொன், தாமரை என்ற எழுத்துக்களாக ஆகும்.

திருமால் ஏந்திய வெண் படை – சங்கு – அது கம்பு
இந்த கம்பு என்பதில் எடுத்துக் கொண்டது ‘கம்’.
இதன் பொருள் தலை.
இதனுடன் ‘ந’ என்னும் எழுத்தை முன்பு சேர்க்க அது ‘நகம்’ என்ற சொல்லாக ஆகும்.
நகம் என்பதன் பொருள் மலை.
இதனுடன் ‘க’ என்ற எழுத்தைச் சேர்க்க அது ‘கநகம்’ என்ற சொல்லாக ஆகும்.
இதன் பொருள் பொன் என்பதாம்.
இந்தக் கநகம் என்ற சொல்லுக்கு முன்பாக ‘கோ’ என்ற எழுத்தைச் சேர்க்க வருவது ‘கோகநகம்’ என்ற வார்த்தை.
இதன் பொருள் தாமரை.
ஆக, கம், நகம், கநகம், கோகநகம்’ என்று எழுத்து வருத்தனமானதைக் காணலாம்.
சித்திர கவி வரிசையில் எழுத்து வருத்தனம் என்பதும் ஒன்றாகும்.


tags- சித்திர கவி

GNANA MAYAM ZOOM/ FACEBOOK BROADCASTING

SEE US ON FACEBOOK/GNANAMAYAM AT 1 PM LONDON TIME 6-30 PM INDIAN TIME TODAY SUNDAY

PROGRAMME FOR TODAY

PRAYER WITH THIRUPPUGAZ BY MRS JAYANTHI SUNDAR

TEMPLE VISIT IN TAMIL  BY MRS BRHANNAYAKI SATHYANARAYANAN

THIRUKKAZUKKUNDRAM TEMPLE

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS NITHYA SOWMY

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISNAVI ANAND

–SUBHAM–

PANINI’S MYSTERIOUS 83 WORDS- PART 2 (Post No.10,760)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,760

Date uploaded in London – –    19 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

PANINI’S MYSTERIOUS 83 WORDS- PART 1 WAS POSTED YESTERDAY.

36.Harana 4-2-65

37.Kabari 4-1-42

It is found in old Tamil  literature. The meaning is a special type of female coiffure (kesa vesa)

Tamil poet Tiru Valluvar used Kavarimaan (Kural 969) . The deer like animal which gives long hair for dressing women or making chowries.

Tamil dictionary also gives the meaning for both Kavari and Savari fake hair; hair extension. Dancing girls use this to extend the length of their hair during shows. Old women also use it when they lose most of their hair. In the olden days men only took the characters on the stages and they also used this Kabari.

B= V are interchangeable; so do Ka=Sa

chowry- Bushy tail of a Yak

In the same way Koni (Goni in Panini) is also listed in old Tamil Dictionary.

38.Kaakshah 6-3-103

Kaastiira  6-1-152

Kaasuu 5-3-90 (meaning spear)

Kaaraskara 6-1-153

Kuucavaara 4-1-104 and 4-3-94

According to some geographical inferences  it was Kuuca, old name of Turkey; appaearing in a sanskrit manuscript  nd inscriptions from that region. Sanskrit dictionary says ‘ name of a locality’; name of a Rishi

43.Kulattha 4-4-4

Later usage meant autumnal crop or pulase.

Tamils also use Kollu (horsegram)

44.Kulija  5-1-55

45.Kumbaa 3-3-103

In feminine gender it becomes Kumbhi. Tamils also form the feminine gender same way

Kizavan – kizavi or kizathi

Kuravan – Kurathi

Modern Tamil Paatakan – Paataki

According to Vedic Index it denotes a female adornment, connected with the dressing of the hair.

Kumbham in modern usage is Pot (Purna Kumbha)

Tamil lexicon (1935) says Karakam (folk dance with  balancing pots on head)

Tamils used it for gathering grains etc in a comb shape.

English word Comb may be derived from it. We can see Hindu ladies’ coiffure in comb shape. Even people gathering is Kumbal in colloquial language

The verbal root is KUVI; (noun Kuviyal).

46.Kustumburu = Coriander; 6-1-143

In Tamil it s KOTTA MALLI; in Telugu Kottamiri and in Kannada Kotambari.

Susruta (1-217-3; 4-2-100) also used it as a spice.

Tamils use it in everyday cooking.

This shows Panini was familiar with Tamil Customs. Coriander seeds are used as a Masala ingredient in North Indian Menu as well.

Coriander and Black pepper show that Panini was familiar with South India.

47.Kutilikaa 4-4-18

48.Kutu,  Kutupa 5-3-89

Later commentaries explain it as a ‘leather case, container for oil.’

It is a container with narrow neck.

Tamils also has the word KUTUVAI (P=V) in a later period

Even in Chemistry labs he narrow necked glass jars called Kutuvai.

Any vessel with round bottom and long neck to store liquids. Even Surai Kudukkai (bottle guard) has the same shape. Hunters use it to store honey.

49.Mahanagara 6-2-89  means Big City; translated in Tamil it is Peru Nagar. That is in old Tamil as well. But no one knows a particular city with this name.

It may mean any ‘big city’

50.Maasatama 5-2-57; meaning last day of the month

(Can we split it as Masa+ athame?)

Tamil literature use Maatha for Maasa (S=T changes is seen through out Tamil literature and in English as well Sion+Tion)

To be continued……………………………..

400 ரிக்வேத கால புலவர்கள் பட்டியல்-6 (Post No.10,759)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,759

Date uploaded in London – –    19 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேத கால புலவர்கள், முனிவர்கள், ரிஷிகள், கவிஞர்கள்  பட்டியல் -6

கடந்த 5 நாட்களில்  261 புலவர்களைக் கண்டோம்

262.ரஃஷோகா பிராஹ்ம  10-162

ராஹுகண ஆங்கீரஸ 9-37/38

சங்க இலக்கியத்தில் புறநானூற்றுப் புலவர் ஒருவர் பெயர் பிரம்மா.

இதேபோல பிராக்ருத நூலான காதா சப்த சதி யிலும்  கவிஞர் பிரம்மா உண்டு.

ராஹு , கேது முதலிய கிரஹங்கள் பெயர்களையும் இது வரை கண்டோம்.

ராத ஹவ்ய ஆத்ரேய 5-65/66

ரேணு வைஸ்வா மித்ர 9-70; 10-89

ரேப காஸ்யப 8-97

இதில் காணும் பல ரிஷிகளின் பெயர்களை பிராமணர்கள் தினமும் மூன்று முறை சொல்லும் அபிவாதயே மந்திரத்தில் சொல்லுவதால் பிராமணர்கள் 4000 ஆண்டு வரலாற்றின் பெட்டகங்களாக, பொக்கிஷங்களாகத் திகழ்கிறார்கள். சங்க இலக்கியத்தில் உள்ள கோத்திரங்களை முன் ஒரு கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன் .

ரேபசுனு காச்யபவ்  9-99/100

ரோ மஸா  1-126

நல்லவேளை, இப்படி ஒரு முனிவர் பெயர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருந்தால் வெள்ளைக்கார்கள் இவருக்கு ரோமானிய முத்திரை குத்தி இவரும் கைபர் கணவாய் வழியாகப் பின்னர் வந்திருக்கலாம் என்று எழுதியிருப்பார்கள் . இவர் 4000 ஆண்டுகளுக்கு முந்தியவர்.

லப ஐந்த்ர  10–119

இந்திர என்பது ஒரே ஆளின், மன்னரின், கடவுளின் பெயர் அல்ல என்பதற்கு இதுவும் சான்று. ராவணனின் மகன், இந்திரனையும் ஜெயித்ததால் அவனுக்கு இந்திரஜித் என்று பெயர். ஆதிகாலத்தில் வாழ்ந்த அகஸ்திய மகரிஷி இந்திரனை சபித்த கதையையும் படிக்கிறோம். ஆகையால் பல இந்திரர்கள் இருந்ததை அறியலாம்.

லுச தானகா 10-35/36

முன்னர் கண்ட லப என்பதை ‘லவ’ என்றும் சொல்லலாம். ப=வ மாற்றம் நிறைய உண்டு; ஆனால் லுச என்ற பெயர் சுமேரிய, பாபிலோனிய நாகரீகத்தில் வரும் பெயர் ஆகும்.

லோபாமுத்ரா 1-179

இந்தப் பெண்மணி பற்றி நிறைய கதைகள் உண்டு. நச்சினார்க்கினியர், இவரை தொல்காப்பியர் கால பெண்ணாகக் காட்டுகிறார். அது தவறு. இராமாயண கால அகஸ்தியர் வேறு.

தொல்காப்பிய முனிவரின் குரு – அகஸ்தியர் வேறு.

வத்ஸ ஆக்னேய 10-187

வத்ஸ  காண்வ 8-6

வத்ஸ ப்ரி பாலந்தன 9-68; 10-45/46

வம்ரு வைகானஸ  10-99

வருண 10-124

இதை வருணன் என்ற வேத காலக் கடவுளே பாடியதாகவும் சொல்லலாம். அவர் பெயரை வைத்துக் கொண்ட புலவராகவும் இருக்கலாம் ; பெயர் தெரியாத புலவராக இருந்தால் அவர் பாட்டில் வரும் சிறப்பு சொற்றோடரை அவருக்கு சூட்டுவதை ரிக் வேதத்தில் 20, 30 புலவர் விஷயத்தில் காண்கிறோம். சங்க நூல்களைத் தொகுத்தோரும் இப்படி தேய்புரி பழங் கயிறு, செம்புலப் பெயல் நீர் என்று பெயரிட்டுள்ளனர்.; அவர்கள் ரிக் வேதத்தை அப்படியே பின்பற்றியுள்ளனர்.

வவ்ரி ஆத்ரேய  5-19

வச ஆஸ் வ்ய  8-46

வசிஷ்ட மைத்ராவருண 7-1/32; 7-33; 7-34/104;9-67; 9-90; 9-97; 10-137

வசிஷ்ட புத்ரஹ 7-33

வசு பாரத்வாஜ 9-80/82

வசு கர்ண வாசுக்ர 10-65/66

வஸுக்ருது வாசுக்ர 10-20/26

வசுக்ர 10-28

வசுக்ர ஐந்த்ர 10-27; 10-29

வசுக்ர வாசிஷ்ட 9-97

வசுக்ரபத்னீ  இந்திர னுசா 10-28

வசுமனா  ரோவ் ஹிதாஸ்வ   10-179

289. வசுரோசிச ஆங்கிரஸஹ ஸஹஸ்ரம்  8-34

290.வசு ஸ்ருத ஆத்ரேய 5-3/6

291.வசூயவஹ ஆத்ரேயஹ 5-25/6

சுமார்  11 புலவர் பெயரில் வசு என்ற சொல் வந்துள்ளது .

ஆயிரம்  என்ற எண்ணும் இருப்பது குறிப்பிடத்தக்கது .

வாக் ஆம்ப்ருணி  10-125

வாதஜுதி வாதரசன 10-136

வாமதேவ கெளதம 4-1/17; 18, 19; 4-45/48

விப்ர ஜுதி வாதரசன 10-136

விப்ர / வசு பந்து கெளபாயன அல்லது லவ்பயான 5-24;10-57/60

விமத ஐந்த்ர  10-20/26

விமத ப்ராஜாபத்ய 10-20/26

விரூப ஆங்கிரஸ  8-43/44; 8-75

300.விஸ்வவத் ஆதித்ய 9-13

இதுவரை 300 புலவர்கள் பெயர்களைக்  கண்டோம்

To be continued………………………………………

tags- புலவர்கள் பட்டியல்-6