இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!- Part 2 (10,893)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 10,893

Date uploaded in London – –    26 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பாஸாவின் பிரஹஸன வசனங்களைப் படிக்குமுன் நாடகக் கதையைச் சற்று மேலோட்ட மாகத் தெரிந்து கொண்டால் அவர் செய்யும் கேலியை வெகுவாக ரசிக்க முடியும்……..

கௌசாம்பி நகர மன்னன் உதயணன் ஓர் உல்லாச விரும்பி. ஒருசமயம் வாசுகியின் சகோ தரன் வசுநேமியை ஓர் இக்கட்டிலிருந்து மீட்டதால், அதற்கு நன்றிக் கடனாகத் தன்னிடமிருந்த கோஷவதி எனும் மந்திர வீணையை வசுநேமி அரசனுக்களித்தான். அதை நேர்த்தியாக வாசிக் கவும் பயிற்சியளித்தான். அதன் இசையால் முரட்டுக் காட்டு யானைகளையும், மதம் பிடித்த மத்தகங்களையும் அடக்கி ஆளமுடியும். அந்த வித்தையிலும் உதயணன் கைதேர்ந்தவனாக விளங்கினான். பின்னாளில் வாஸவதத்தையைக் கவர்ந்துசெல்ல அவனுக்கு இது உதவப் போகிறது. இதற்கிடையே அவந்தி இளவரசி வாஸவதத்தயைப் பற்றிக் கேள்வியுற்றவன் அவள் மீது காதல் வயப்படுகிறான்.

தன் ஆளுகைக்கு உட்படாத உதயணைனை வீழ்த்திச் சிறைபிடிக்க அவந்தி அரசன் பிரத்யோதா எனும் சண்டமஹாசேனன் சூழ்ச்சி செய்கிறான். உதயணன் வேட்டையாட வரும் சமயம் தனது யானைக் கூட்டங்களுக்கு இடையே ஒரு பொம்மை மரயானைக்குள் வீரர்களை மறைத்து வைத்து (ட்ரோஜன் ஹார்ஸ் ஞாபகம் வருகிறதா?) அவனைப் பிடிக்க முனைகிறான்.கோஷவதி வீணையை மீட்டியவாறு வந்த உதயணன் “வீராதி வீரன், பூபால நாதன் ஊறெண்ணி மாற்றோர் சூதிட்ட வலையில்” சிக்கி சிறைபடுகிறான். இதைக் கேள்வியுற்ற வத்ஸராஜனின் மதியூகி மந்திரி யௌகந்தராயணன் உதயணனை விடுவிக்க மாறுவேடத்தில் தன் சகாக்களுடன்அவந்தி நகர் சென்று, ஒற்றர்களை எல்லாவிடத்திலும் புகுத்துகிறான். இளவரசியின் யானை பத்திரா வதியின் பாகன் ஆஷாடகனை தன்வயப்படுத்தி அவன் மூலமாகவே தன் ஒற்றன் காத்திர சேவகன் என்பவனை மாற்று மாவுத்தனாக அமர்த்துகிறான். “நிலவைக் கொள்ளும் பாம்பை, நிகர்வார் கையின் மீள, நலியா தரசைக் கொணர்வேன்” என்றும், “மை கொண்ட நீள்விழிக் குமரியை, மன்னனைக் கௌசாம்பி சேர்த்துவேன், நைகின்ற நிலை தீர்ப்பன், இன்றேல் நான் யௌகந்தராயணன் அன்றே!” என்றும் சூளுரைக்கிறான். இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை விளக்குவதே மீதிக் கதையாகும்….

மாற்று மாவுத்தன் காத்திரசேவகன் அறிமுகமாகும் காட்சியிலிருந்துக் கேலியும், பரிகாசப் பேச் சுக்கும் கொஞ்சமும் குறைவில்லை. சாராயக் கடையில் மதுவை ருசித்தவாறு வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறான்.பாஸா அவனுக்கு வைத்துள்ளப் பெயரிலேயே நகைச்சுவை மிளிர் கிறது. காத்திரசேவகா= பார்க்கும் வேலையைப் புறக்கணித்து, தன் உடம்பைப் பராமரித்துக் கொள்பவன் என்று பொருள். அதைத் தான் அவன் செய்து கொண்டிருக்கிறான். இளவரசி வாஸ வதத்தை தன் யானை பத்திராவதியுடன் நீராட ஏரிக்குச் செல்லவிருந்ததால், சேனாவீரன் பாக னைத் தேடிச் சுற்றி அலைந்துவிட்டு முடிவில் அப்படிப்பட்டவர்கள் தஞ்சமடையும் அந்த மது சாலைக்கு வந்து சேருகிறான். கடையிலிருந்துத் தனக்குத் தானே பேசிக்கொண்டு வெளியே வருகிறான் காத்திரசேவகன்

பாகன் : யார் என்னை இப்படிக் கூவிக் கூவி அழைப்பது? என்னைப் பார்த்து விட்டமாமனாரோ? இப்போதுதானே அவர் தொட்டுக் கொள்ள மிளகுப் பொடி,உப்பு, நெய் கலந்த மாமிச உருண்டை யைக் கொடுத்துவிட்டுச் சென்றார். டேய், காத்திரசேவகா, நீ குடித்தால் மனையாட்டி குதூகலிக் கிறாள்! ஆனால் மாமியாரோ தடியெடுத்து அடிக்க வருகிறாள், என்ன செய்வது? பிறர் சொல் கேட்டுக் குடிக்காமல் இருப்பவர்கள் அடி முட்டாள்கள்!

  நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது அதிர்ஷ்டமே

  மதுவில் சொட்டச்சொட்ட நனைந்து குடிப்பது ஆனந்தமே

  மதுவில் மூழ்கிக் குளிப்பது பரமானந்தமே 

  மதுவைக் குடித்துத் திக்குமுக்காடுவது எல்லாவற்றுக்கும் மேல் பேரானந்தமே என்று பாடுகிறான்.

வீரன் : ஐயகோ! இதோ வருகிறானே காத்திரசேவகன், குடித்ததால் கண்கள் அடர்ந்தச் செந்நிறச் செம்பருத்திப் பூக்கள் போன்று சிவப்பாய் இருக்கின்றனவே! அடேய் மாவுத்தா உன்னை எங்கெல்லாம் தேடுவது,பத்திராவதியையும் காணவில்லை. இளவரசியார் நீராடப் போகணும், சீக்கிரம் கிளம்பு!

பாகன் : அப்பனே! இதோ பார். சொர்க்க பூமியில் நீயும் நானும் மட்டுமா குடிக்கிறோம், எல்லாரும் குடித்துக் கொண்டு இருக்கிறார்கள். சந்தோஷம், எங்கும் சந்தோஷம்!

வீரன் : இருக்கட்டும்,இருக்கட்டும். பத்திராவதியை அரண்மனைக்கு அழைத்துச் செல்லாமல் இங்கே ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறாய், சொல்!

பாகன் : சுற்றிக் கொண்டு இருக்கிறேனா, நானா? மாமனார் கொடுத்த ‘ஊறுகாயு’டன் மதுவை சுவைக்கிறேன். நண்பனே கோபப்படாதே! இப்போது என்ன செய்யணும், சொல்!

வீரன் : போதும், உன் பிதற்றலை நிறுத்து. உன்னிடமிருந்து வீசும் சாராய வாடை எனக்குக் குமட்டுகிறது. உடனே பத்திராவதியை அழைத்துக் கொண்டு வா!

பாகன் : அப்படியா? வா,வா, ஓடி வா பத்திராவதி, நீராடப் போகலாம்! ஆனால், ஐயோ அவளை எப்படி அங்குசம் இல்லாமல் அடக்கி அழைத்துச் செல்ல முடியும்? அதைத்தான் அடகு வைத்து மது ரசம் குடித்து விட்டேனே! என்ன செய்வது?

வீரன் : அட என்னப்பா? பத்திராவதியே சாது. அதுக்கு ஏன் அங்குசமெல்லாம், தேவையே இல்லை. நேரம் கடத்தாமல் அவளைக் கூப்பிடு, ஓடி வருவாள்!

பாகன் : சரி, சரி இதோ கூப்பிடுகிறேன். வா, அம்மா பத்திராவதி, இளவரசியார் கூப்பிடு கிறாராம் போகலாம் வா! அட, சே! போதை தலைக்கேறியதில் மறந்து விட்டேனே! அவளைப் பிணைக்கும் இரும்புச் சங்கிலியையும் அடகு வைத்து விட்டேனே, என்ன செய்வது?

(அட, இப்படியும் ஒரு வழி இருக்கா, “டாஸ்மாக்” கில் ‘ட்ரை’ பண்ணலாமா?–தமிழகக் குடிமக னின் மூளையில் “பல்ப்” எரிந்தது!)

வீரன் : உனக்கு இது கூடத் தெரியாதா? அவளை மலர்ச் சரங்களாலேயே கட்டி விடலாம், சங்கிலி எதுக்கு வீணாக? போ, உடனே போ!

பாகன் : அப்படியென்றால் சரிதான்! அம்மா பத்திராவதி, கன்றுக்குட்டி போல் துள்ளிக் குதித்து ஓடி வா, பார்க்கலாம்! வா, வா சீக்கிரம் வந்துவிடு! ஐயோ, என்ன ஞாபக மறதி! அவளுடைய கழுத்து கண்டாமணியையும் அல்லவா விற்றுக் குடித்து விட்டேன்!

வீரன் :  நீராடத்தானே போகப் போகிறாள்? அதுக்கு எதற்கு கழுத்தில் மணி அணியணும், அநாவசியம். சீக்கிரம் அவளை அழைத்து வா!

பாகன் : சரி! அம்மாடி, பத்திராவதி ஓடி வந்துவிடு மா! என்னைச் சோதிக்காதே! ஆனால், அச்சச்சோ! சாட்டையையும் விற்றுத் தொலைத்து விட்டேனே, என்ன செய்வது?

வீரன் :  சாட்டையை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்துவிட முடியும்? அது இல்லாமலிருப்பதும் சரியே! சீக்கிரம். இளவரசியார் கோபிப்பார்கள். ஓடு உடனே!

பாகன் : பத்திராவதி, என் செல்லமே, அசைந்து, அசைந்து ஓடி வா பார்க்கலாம்….ஐய்யையோ, நான்…நான்…

வீரன் :  இப்போ என்ன செய்து விட்டாய், சொல்லு!

பாகன் : ஹையோ! பத்திரா…பத்திராவதி.. அதை எப்படிச் சொல்வேன்? பத்திரா, ஹோ, பத்திரா!

வீரன் :  என்னவாயிற்று, இளவரசியின் செல்ல பத்திராவதிக்கு, சொல்

பாகன் : நான் ஒரு மடையன். மது போதையில் என்ன செய்தேன் என்றே புரியவில்லை! மேன்மேலும் குடிக்கும் ஆர்வத்தில் பத்திராவதியையும் அடகு வைத்து விட்டேனே! ராஜ சமூகத்துக்கு என்ன பதில் சொல்வேன்?

வீரன் :  பரவாயில்லை அது உன் குற்றமில்லை! தான் கொடுத்த சாராயத்துக்கு ஈடாக ராஜாங் கத்து யானையைக் கூட குதுவை (அடைமானம்) வைத்துக் கொள்ளும் துணிவு பெற்ற மது சாலைத் தலைவன் மீதே குற்றம், கவலைப்படாதே. அவை திரும்ப வந்துவிடும்.

(சபாஷ்! “டாஸ்மாக்”  சட்டத்தில் இந்த விதிமுறையையும் சேர்த்துக் கொள்ளச் சொன்னால் அது நமக்கு நல்லதா,கெடுதலா, ஆராயச் சொல்லணும்!– குடிமகனின் ‘மைண்ட் வாய்ஸ்!’)

பாகன் : ஐயோ! உன் முதலுக்கு வரவேண்டிய வட்டியை இழக்காதே என்று அவனுக்குச் சொன்னேனே!

வீரன் :  அடேய், உன் புலம்பலை நிறுத்தித் தொலை! அது என்ன பெரும் சத்தம், கேட்கிறதா?

பாகன் : அப்பனே அது என்னவென்று எனக்குத் தெரியும். சாராயக் கடையிலிருந்துப் பிளிறிக் கொண்டு தெறித்து பத்திராவதி ஓடுகிறாள்! வா, நாமும் ஓடுவோம்!…….

இத்துடன் உதயணனும் வாஸவதத்தையைக் கவர்ந்து பட்டத்து யானை நளாகிரியுடனும், யௌகந்தராயணனின் யுக்தியாலும் தப்பித்துச் சென்றுவிடுகிறான். நாடகத்தின் இப்பகுதி  மிகச் சுவாரசியமானது.

நினைத்துப் பாருங்கள், அன்றையப் பண்டமாற்று முறை இன்றும் புழக்கத்தில் இருந்தால் குடி மகன்களின் வீட்டுச் சாமான்கள் எல்லாம் “டாஸ்மாக்” கடைகளில் தான் தஞ்சம் புகுந்திருக்கும்!

அடுத்து ஹிந்தி இலக்கிய வானில் சஞ்சரிப்போம், வாருங்கள்……………தொடரும்

                   ————————————————————————–

BRA IS IMPORTANT ப்ரா மொழிகள் (Post No.10,892)

 BRA IS IMPORTANT ப்ரா மொழிகள்  (Post No.10,892)
Compiled  BY KATTU  KUTTY , CHENNAI   Post No. 10,892   Date uploaded in London – –   26 APRIL  2022          Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com       ஞான  மொழிகள்-39                                                       Kattu kutty

                         ப்ரா மொழிகள் 

ᴛᴏᴅᴀʏ ɪs ᴡᴏʀʟᴅ *ʙʀᴀ* ᴅᴀʏ!

ɴᴇᴠᴇʀ ᴜɴᴅᴇʀ ᴇsᴛɪᴍᴀᴛᴇ ᴛʜᴇ ɪᴍᴘᴏʀᴛᴀɴᴄᴇ ᴏғ
ᴛʜᴇ *ʙʀᴀ*

ǫ: sᴛʀɪᴘᴇᴅ ʙʀᴀ?
 ᴢᴇ *ʙʀᴀ*

ǫ: ᴘᴏɪsᴏɴᴏᴜs ʙʀᴀ?
 ᴄᴏ *ʙʀᴀ*

ǫ: ᴍᴀᴛʜᴇᴍᴀᴛɪᴄᴀʟ ʙʀᴀ?
 ᴀʟɢᴇ *ʙʀᴀ*

ǫ: sᴜɴsɪɢɴ ʙʀᴀ?
 ʟɪ *ʙʀᴀ*

ǫ: ᴍᴀɢɪᴄᴀʟ ʙʀᴀ?
 ᴀᴀ *ʙʀᴀ* ᴋᴀ ᴅᴀ *ʙʀᴀ*

ǫ: ʀᴇʟɪɢɪᴏᴜs ʙʀᴀ?
 *ʙʀᴀ* ʜᴍɪɴ!

ǫ: ᴍᴇᴛᴀʟʟɪᴄ ʙʀᴀ?
 *ʙʀᴀ* ss

ǫ: ᴀɴᴊᴇʟɪɴᴀ ᴊᴏʟɪᴇ’s ʙʀᴀ?
 *ʙʀᴀ* ᴅ ᴘɪᴛᴛ

ǫ: ʙᴏᴛᴀɴʏ ʙʀᴀ?
 *ʙʀᴀ* ɴᴄʜ

ǫ: ᴍᴀʀᴋᴇᴛɪɴɢ ʙʀᴀ?
 *ʙʀᴀ* ɴᴅ!

ǫ: ᴘᴜɴᴄᴛᴜᴀᴛɪᴏɴ ʙʀᴀ?
 *ʙʀᴀ* ᴄᴋᴇᴛ.

ǫ: sᴄᴀʀʏ ʙʀᴀ?

ɢʜᴀ *ʙʀᴀ* ᴀʜᴀᴛ.

ǫ: ʀᴏᴏᴍ ғᴜʟʟ ᴏғ ʙʀᴀ’s?
 ʟɪ *ʙʀᴀ* ʀʏ.

ǫ: ᴀʟᴄʜᴏʜʟɪᴄ ʙʀᴀ?
 *ʙʀᴀ* ɴᴅʏ.

ǫ: sᴜʀɴᴀᴍᴇ ʙʀᴀ?
 ᴄʜʜᴀ *ʙʀᴀ*

ǫ: ᴄᴏᴜɴᴛʀʏ ʙʀᴀ?
 *ʙʀᴀ* ᴢɪʟ

ǫ: ʙʀᴀ ᴡʜɪᴄʜ ʙᴇᴄᴀᴍᴇ ᴛʜᴇ ᴀᴍᴇʀɪᴄᴀɴ ᴘʀᴇsɪᴅᴇɴᴛ
ᴀɴᴅ ɪɴsᴘɪʀᴇᴅ ᴛʜᴇ ᴡʜᴏʟᴇ ᴡᴏʀʟᴅ?
ᴀ *ʙʀᴀ* ʜᴀᴍ ʟɪɴᴄᴏʟɴ!

ᴀɴᴅ ᴜ ᴛʜᴏᴜɢʜᴛ ᴏɴʟʏ ᴡᴏᴍᴇɴ ᴜsᴇ ᴀ ʙʀᴀ !!!
ʜᴏᴡ
*ʙʀᴀ* ɪɴʟᴇss”.

 ʜᴀᴘᴘʏ ʙʀᴀ ᴅᴀʏ

*ᴅᴏɴ’ᴛ ʟᴀᴜɢʜ ᴀʟᴏɴᴇ sʜᴀʀᴇ ɪᴛ ᴡɪᴛʜ ғʀɪᴇɴᴅs, ʙʀᴀʟᴇss, ᴏʀ ᴡɪᴛʜ ʙʀᴀ*.                                                                        ***
Tags- Bra

இந்தோனேஷியாவில் சப்தபலோன் கொடுத்த சாபம்!–2 (Post No.10,891)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,891

Date uploaded in London – –     26 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இந்தோனேஷியாவில் சப்தபலோன் கொடுத்த சாபம்! – 2

ச.நாகராஜன்

ஜயாபயா என்ற பெயருடைய மன்னன் கிழக்கு ஜாவா பேரரசில் கேதிரி அரசை கி.பி. 1135 முதல் 1157 முடிய ஆண்டு வந்தான். அளவற்ற வளத்தையும் செல்வத்தையும் கொண்டு அவன் அரசாண்டான். அவனை புகழ் மொழியான ‘ரது அடில்’ (இவனே அரசன்) என்று கூறி அனைவரும் புகழ்ந்தனர்.

ஒரே குழப்பமயமாக இருந்த காலத்தில் தனது நிர்வாகத் திறமையால் சட்டம் ஒழுங்கை அவன் சீர்படுத்தினான். அவனது சீர்திருத்தங்கள் இன்றும் கூட இந்தோனேஷிய பண்பாட்டில் எதிரொலிக்கிறது.

ஜயாபயா ஹிந்து இலக்கியங்களையும் போற்றி ஆதரித்தான். எம்பு பனுலு மற்றும் எம்பு சேடா ஆகிய கவிஞர்களை அவன் ஆதரித்தான்.

அவனது அரசாட்சியைக் கண்ட மக்கள் அவன் விஷ்ணுவின் அவதாரமே தான் என்று கருதினர். அவனும் அப்படி தான் கடவுளின் அவதாரம் என்று சொல்லப்படுவதை நம்பினான்.

பல்வேறு வரலாற்று புத்தகங்களின் படி அவன் பிரம்மாவின் பேரனுக்குப் பேரனுக்குப் பேரன் என்று கருதப்பட்டான்.

பல தீர்க்கதரிசன (ஜோதிட) கூற்றுக்களை அவன் தனது ‘செரட் ஜயாபயா’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறான்.

அது வாய்மொழியாக பரம்பரை பரம்பரையாக வழங்கப்பட்டு வந்தது.  1835இல் அது எழுத்து வடிவில் எழுதப்பட்டது. அந்த பழைய பிரதி இன்றும் உள்ளது.

அவனது ஜோதிட தீர்க்கதரிசனக் கூற்றுகளில் ஒன்று ஜாவா வெள்ளைத் தோல் உடையவரால் நெடுங்காலம் ஆளப்படும் என்பது.

அவன் இறந்த 400 ஆண்டுகளுக்குப் பின்னர், 1595இல் டச்சுக்காரர்கள் பிடியில்  ஜாவா சிக்கியது.

வெள்ளையரிடமிருந்து மஞ்சள் தோலை உடையவர்கள் ஜாவாவை மீட்டு தாங்கள் ஆளத் தொடங்குவர் என்றும் அவன் குறிப்பிட்டிருக்கிறான்.

அது அப்படியே உண்மையானது.

ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப் போரின் போது ஜாவா மீது படை எடுத்தனர்; டச்சுக் காலனி ஆதிக்கத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வந்தனர்.

ஒரு சோளக்கருதின் ஆயுளை விட மிகக் குறுகிய காலமே அந்த மஞ்சள் தோல்காரர்கள் ஆள்வர் என்பதையும் அவன் குறிப்பிட்டிருக்கிறான்.

இந்த சோளக்கருதின் ஆயுள் காலம் என்பது நடக்கவில்லை என்றாலும் இதர இரண்டு ஜோதிடக் கூற்றுகளும் அப்படியே நடந்துள்ளன.

ஆகவே அவன் விஷ்ணுவின் அவதாரமே தான் என்று இந்தோனேஷிய மக்கள் இன்றும் நம்புகின்றனர்.

ஆதாரம் : Kolkata Weekly Truth – Volume 89 No 30 Dated 19-11-2021

நன்றி : Truth

மேற்கண்ட கட்டுரையைப் படித்த பின்னர் நமக்குத் தோன்றுவது இந்தோனேஷியாவின் வரலாறு புதிதாக எழுதப்படும் என்பது தான். அதன் புகழோங்கிய ஹிந்துப் பண்பாட்டின் அடிப்படையிலான பண்டைய காலத்தை அது மீண்டும் பெறப் போகிறது.

வாழ்த்துவோம் ஹிந்து பண்பாடு செழிக்க இருக்கும் இந்தோனேஷியாவை!

**

Tags- சப்தபலோன்  சாபம்! – 2

பகவத் கீதையில் சுவையான சொல் சித்திரரதன் -2 (Post No.10, 890)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,890

Date uploaded in London – –    25 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதையில் சுவையான சொல் சித்திரரதன் -2

கட்டுரையின் இரண்டாவது பகுதி இது ; முதல் பகுதியில் பகவான் கிருஷ்ணர்  பகவத் கீதையில் “கந்தர்வர்களுள் நான் சித்திரரதன்” என்று சொன்னதையும், ரிக் வேதம் “சிந்து சமவெளியை ஆண்ட சித்ரன் என்ற அரசனே அரசன்; மற்றவர் எல்லோரும் சிற்றரசர்கள்” என்று புகழ்வதையும் கண்டோம்.

இதில் நமக்கு முக்கியமான செய்தி கிடைத்தது. அதாவது சரஸ்வதி- சிந்து நதி நாகரீகத்தில் சித்ரன் என்ற ஒரு வள்ளல் இருந்தான் என்று.

அதைவிட சுவையான செய்தி கிடைத்துள்ளது. கீத்- மெக்டொனால்ட் வெளியிட்ட வேத கால சொல் அட்டவணையில் (Vedic Index வேதிக் இன்டெக்ஸ்):– சோபரி என்னும் கவிஞர் அவரை (சித்ரன்) எலி என்று சொன்னதாகவும் எழுதி இருக்கின்றனர். கேரளத்தை எலி வம்சம் (மூஷிக Mushika Dynasty) ) ஆண்டதை நாம் அறிவோம். அதற்கும் சித்ரனுக்கும் உள்ள தொடர்பை ஆராய வேண்டும்

xxxx

மார்ட்டன் ஸ்மித் (Dates and Dynasties in Earliest India by R Mortan Smith) என்பவர் இந்திய அரசர்களின் காலம் என்ற நூலில் சித்ரரத யாதவ் என்ற மன்னரை கி.மு.1580ல் வைக்கிறார். ஆகவே ‘சித்ர’ என்ற சொல் வரும் இடங்களை இந்திய அறிஞர்கள் மகாநாடு கூட்டி ஆராய வேண்டும் . அது மட்டுமல்ல ; சிந்து–சரஸ்வதி நதி தீர மன்னர் பட்டியலில் உள்ள, பாரி போலவும் ,மாரி போலவும், வாரி வழங்கிய சித்ரனை ஆராய வேண்டும்.

xxx

இனி மஹாபாரதம் சொல்லும் சித்ரரதன் கதைகளைக் காண்போம்.

சித்ரரதன் எண் 1

இவன் கந்தர்வர்கள் தலைவன். பாண்டவர்கள் ஏக சக்ர நகரிலிருந்து, பாஞ்சாலம் (தற்கால பஞ்சாப்) நோக்கிச் சென்றபோது அவர்களைத் தடுத்து நிறுத்தியவன். அர்ஜுனன் , அந்த சித்ரரதனைப் பிடித்துக் கட்டிப்போட்டவுடன் அவனுடைய மனைவி கும்பிநாசி கெஞ்சியதால் சித்ரரதனை விடுவித்தான். அதற்குக் கைமாறாக சில தெய்வீக  ஆயுத ரகசியங்களை (Modern Weapons from Alien World)  அவன் அர்ஜுனனுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு, என்றுமே களைப்பு அடையாத தெய்வீக குதிரைகளையும் பரிசாகத் தந்தான் . புறப்படுவதற்கு முன்னர் ஒரு புரோகிதரை உதவிக்கு நியமித்துக் கொள்ளுங்கள் என்று ஆ லோசனையும் வழங்கினான் சித்ரரதன்.

எனது கருத்து

‘என்றுமே களைப்பு அடையாத’ என்பது குதிரை பொம்மை பூட்டிய நவீன எந்திரங்களாக இருக்கலாம். ஏனெனில் இதற்கு அடுத்து வரும் பகுதி வெளி உலக (Extra Terrestrial)  தெய்வீக ஆயுதங்கள் பற்றி இயம்புகிறது .

XXX

சித்ரரதன் எண் 2

இவன் முன் காலத்தில் அங்க தேசத்தை ஆண்டவன் . பிரபாவதியின் சகோதரியான ருசியை மணந்தவன் .

எனது கருத்து

என்ன அதிசயம் பாருங்கள் ! மஹாபாரத யுத்தம் நடந்து 5000 ஆண்டுகள் ஆனதாக இந்துக்கள் நம்புகின்றனர். அவ்வாறே பஞ்சாங்கத்தில் கலியுக ஆண்டுகளை காண்கிறோம். அதற்கு முன்னரும் பெண்களின் பெயர்கள், நதிகளின் பெயர்கள் “வதி” என்னும் பின்னொட்டுகளுடன் (suffix)  முடிவதை ரிக்வேதமும் காட்டுகிறது. இன்றும் கூட நாம் பிரபாவதி, ருசி என்று குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுகிறோம். ஆனால் ‘சித்ர’ என்ற பெயர்களை ஏன் விட்டுவிட்டோம் என்று ஆராய வேண்டும்.

XXX

சித்ரரதன் எண் 3

இந்த சித்ரரதன் பாஞ்சால இளவரசன் . அவன் மஹாபாரத யுத்தத்தில் துரோணரால் கொல்லப்பட்டான். அவனுடைய சகோதர்கள் பெயர்கள் – வீரகேது, சித்ரகேது , சுதன்வா , சித்ரவர்மா .

XXX

சித்ர சேன

இந்த மனிதர்  பற்றிதான்  நீண்ட கதை உள்ளது. ஒருவேளை இவருக்கும் சித்ரரதன் என்னு பெயர் இருந்திருக்கலாம் . மஹாபாரதம் வன பர்வத்தில் வரும் கதை இதோ :-

இவர் கந்தர்வர் தலைவன்.

அர்ஜுனன்  (Divine Weapons)  தெய்வீக ஆயுதங்களைப் பெறுவதற்காக  வானுலகத்தில் 5 ஆண்டுகள் வசித்தான் . சொர்க்கத்தில் வசித்த சித்திரசேனன், இந்திரன் கட்டளைக்கு இணங்கி அர்ஜுனனுக்கு சங்கீதம், நடனம் ஆகியவற்றைக் கற்பித்தான் . சித்ரசேனனுக்கு அர்ஜுனனை மிகவும் பிடித்துவிட்டது. அர்ஜுனனை மீண்டும் பூமிக்குத் திரும்பிச் செல்லவிடக்கூடாது என்று கருதி, இந்திரனின் அனுமதியுடன் ஊர்வசியை அனுப்பி  மயக்கப்பார்த்தான். அர்ஜுனனுக்குக் கோபம் வந்தது;  சாபம் கொடுத்தான். உடனே இந்திரன் மூலம், சித்ரரதன் சமாதானம் செய்தான்.  அந்த சமாதான உடன்பாடிக்கை அர்ஜுனனுக்கு சாதகமாகவே இருந்தது. அர்ஜுனன் ஸ்பேஸ் ஷட்டில் (space shuttle )மூலம் வேற்று உலகத்தில் (Extra Terrestrial Planet)  இருந்து பூமிக்குத் திரும்பினான் .

சித்ர சேனனுக்கு அர்ஜுனனை மிகவும் பிடித்துப் போனதால் பூமியில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்துவந்தான். காட்டில் வசித்தபோதும் பாண்டவர்களைத் தீர்த்துக்கட்ட துரியோதனன் செய்த சதி அவனுக்குத் தெரிந்தது. பூமிக்கு ப் படைகளுடன் வந்து  து  ரியோதனனைத் தாக்கிச் சிறை பிடித்தான். யுதிஷ்டிரருக்கு நல்ல மனது. வெளி உலக வாசி வந்து , பூமியில் வசிக்கும் நம்மை வசப்படுத்தக்கூடாது என்று எண்ணி, அர்ஜுனா, நீ போய் துரியோதனனை மீட்டு வா என்று அனுப்பினான். எதிரியாக இருப்பவன் சித்திரசேனன் என்பதை அறிந்து அதிர்ச்சி; ஆனால் சித்ர சேனனுக்கோ ஒரே மகிழ்ச்சி. தன்னுடைய பூவுலக நண்பனை இவ்வளவு எளிதில் சந்தித்து வீட்டோமே என்று எண்ணி அகம் மகிழ்ந்தான் ; உளம் குளிர்ந்தான். சண்டையே வேண்டாம்; இதோ கைதி துரியோதனன்; அழைத்துச் செல் என்றான் .

இவர்களைத் தவிர பாண்டிய நாட்டரசி  சித்ராங்கதா உள்பட நிறைய “சித்ர”  பெயர்கள் மஹாபாரதத்தில் உள்ளன.

எனது கருத்து

கந்தர்வர் என்ற பெயரில் இரு வகை மக்களைக் காண்கிறோம்; ஒரு பிரிவினர் பூலோக வாசிகள்; நன்கு பாடக்கூடியவர்களை கந்தர்வர் என்றும் கந்தர்வ கானம் இசைப்பவர் என்றும் இன்றும் புகழ்கிறோம் . பிரபல இசை மேதை பால கந்தர்வாவுக்கு நாம் தபால்தலையும் போட்டு சிறப்பித்துள்ளோம். இன்னொரு கந்தர்வர் (Ultra Modern Space Weapons) அதி நவீன மாடர்ன் வெப்னஸ்  அறிந்தவர்கள். அவர்கள் ஸ்பேஸ் ஷட்டில் (Space Shuttle) முதலிய விண்ணுலக பயண வசதி உடையவர்கள். அர்ஜுனனை மாதலி என்பவன் வேறு உலகத்திற்கு ‘ஸ்பேஸ் ஷட்டிலில்’ அழைத்துச் சென்ற வன பர்வ கதை  பற்றி முன்னரே இந்த பிளாக்கில் எழுதியுள்ளேன் (Inter Continental Space Shuttle Travel by Arjuna in Vana Parva of Mahabharata) . மஹாபாரத யுத்தத்தில் பிரம்மாஸ்திரம் என்னும் ஒருவகை அணு ஆயுதம் (Brahmastra= Nuclear weapon)  பயன்படுத்தப்பட்டதையும் முன்னரே எழுதியுள்ளேன்.

இப்பொழுது அந்த கந்தர்வர்களை சிந்து சமவெளியுடன் தொடர்பு   படுத்தும் குறிப்புகள் கிடைத்துள்ளன. மேலும்  மஹாசித்ரன் என்ற புலவரை புற நானூற்றின் பத்து பாடல்களிலும் காண்கிறோம். ரிக் வேதத்திலும் பகவத் கீதையிலும் சித்ரன் உள்ளது. மணிபுர / பாண்டிய நாட்டு அழகி சித்ராங்கதை பற்றியும் நாம் அறிவோம். ஆக பாண்டிய நாட்டு சித்ர மர்மத்தைத் துலக்குவது நம் கடமை.

திருவிளையாடல் புராணமும். சிங்கார வேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி முதலிய நூல்கள் சித்ர என்ற பெயர் அடங்கிய பாண்டிய மன்னர்கள் பற்றியும் தகவல் தருகின்றன.. ஆராய்ச்சியைத் தொடர்வது தமிழர்தம் கடமை.!

–சுபம்–

Tags-  சித்ரன், சித்திர ரதன் , சித்திராங்கதா , பாண்டியன், ஊர்வசி , சித்திரசேனன் , கந்தர்வர், வெளி உலகவாசிகள், நவீன, தெய்வீக, ஆயுதங்கள்

இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!- Part 1 (10,899)

WRITTEN BY B KANNAN, DELHI

Post No. 10,889

Date uploaded in London – –   25 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!- 1

Written By B.Kannan,Delhi

அன்புடைய தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.

இப்பதிவில் தமிழ், சம்ஸ்க்ருதம், இந்தி மொழிகளில் கவிஞர்கள் சிலர் குறும்பு, குசும்பு, நக்கல், கேலி, பரிகாசம், நையாண்டி கலந்தத் தொனியில் தங்கள் புலமையைப் பாக்கள் மூலம் எப்படி வெளிக்காட்டி இருக்கிறார்கள் என்பதைக் காண்போம்………

முதல் ஏழு வள்ளல்களில் ஒருவனாகிய நளனது வரலாற்றைக் கூறும் நூல்கள் தமிழில் இரண்டுள்ளன. அவற்றுள் தலையாயது நளவெண்பா. மற்றொன்று நைடதம் என்னும் நற்காவி யமாகும். ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்று புலவரெல்லாம் வியந்து போற்றும் சிறந்த கவிஞரா கிய புகழேந்தியார் நளவெண்பா நூலை இயற்றினார். ‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ என்று நாவலர் நயந்து போற்றும் நைடதக் காவியத்தை நற்றமிழ் வல்ல சிற்றரசனாகிய அதிவீரராம பாண்டியன் ஆக்கினான்.

புகழேந்தியார் தன்னை ஆதரித்த குறுநில மன்னனாகிய சந்திரன் சுவர்க்கியின் அன்பான வேண் டுகோளுக்கு இணங்கியே நளவெண்பாவை யாத்தனர் என்பர். ஆதலின் செய்ந்நன்றி மறவாச் செந்தமிழ்ப் புலவராகிய புகழேந்தியார், தம் நூலில் அம்மன்னனைத் தக்கவாறு போற்றிப் பரவு கின்றார், மனுமுறை தவறாது செங்கோல் செலுத்திய அம் மன்னனே ‘மாமனு நூல் வாழ வரு சந்திரன் சுவர்க்கி’ என்று வாழ்த்தினார். அவனது வளம் பொருந்திய மள்ளுவ நாட்டைச் சொல் லும்போது, ‘வண்டார் வள வயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான் – தண்டார் புனை சந்திரன் சுவர்க்கி’ என்றும் போற்றினார். அவனது கொடை நலத்தைக் கொண்டாடும் புலவர்,‘தாருவெனப் பார்மேல் தருசந்திரன் சுவர்க்கி’ என்றும், ‘சங்கநிதிபோல் தருசந்திரன் சுவர்க்கி’ என்றும் குறிப்பி டுகிறார்.

கொடை வள்ளலாகிய சந்திரன் சுவர்க்கியின் அரசவையில் புகழேந்தியார் தம் நளவெண்பா நூலை அரங்கேற்றினர். அப்போது அந்திப் பொழுதின் வருணனையைக் குறிக்கும் அழகியப் பாடலொன்றைப் பாடிப் புலவர் விளக்கினார். மேற்கே செக்கர் வானம் பட்டுக்கம்பளம் விரித்துக் கொண்டிருந்தது. இயற்கை எனும் சூரியன் மெல்லச் சாயும் அந்திப் பொழுதும் வந்தது. புகழேந் திப் புலவர் அதனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். மல்லிகைப் பூவின் நறுமணம்அவரை இழுத்தது. மெல்லத் திரும்பி முல்லைப் பந்தரின் அருகே இருந்த மல்லிகைச் செடியைப் பார்த் தார். அச்செடியில் தேன் பருக வந்த வண்டு வட்டமடித்து மல்லிகையில் அமர்ந்து ரீங்காரம் செய்வதைக் கண்டார்.

புகழேந்திப் புலவரின் கவி உள்ளத்தின் நெஞ்சிலே – ‘பகல் முழுவதும் பல வண்ண மலர்களில் தேனருந்திய வண்டல்லவா அது! மல்லிகை, முல்லை வெண்மலர்கள் விரிந்து மணம் கமழ, அந்தி மாலைப் பொழுது அரச கம்பீரத்துடன் மெல்ல நடந்து செல்கிறதே’ என்ற உணர்வலை கள் அலை மோதின. அவற்றின் வெளிப்பாடாய்ப் பிறந்ததே இந்த வெண்பா.

“மல்லிகையே வெண்சங்கா வண்டூத, வான்கரும்பு

வில்லி கணை தெரிந்து மெய்காப்ப,-முல்லையெனும்

மென் மாலை தோளசைய, மெல்ல நடந்ததே

புன் மாலை அந்திப் பொழுது.”  (நளவெண்பா: 106)

‘மல்லிகைப் பூவை வெண்ணிறச் சங்காய் தேன் வண்டு ஊதி முழங்க, வெண்கரும்பு வில்லை உடைய மன்மதன் ( வால்=வெண்மை + கரும்பு = வான்கரும்பு எனப்புணரும்.  கரும்பின் மேல்

வெண்சாம்பல் இருப்பதால் வான்கரும்பு என்பர்). அம்புகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு,வசந்தம்  மெய்காப்பாளனாகப் பக்கத்தில் வர, மென்மையான முல்லை மாலை தோளில் அசைய, சிறு பொழுதாகிய மாலைக்கால (புன்மாலை) அந்திப்பொழுது மெல்ல நடந்து செல்கிறதே’ என்கிறார்.

பாட்டையும் விளக்கத்தையும் கேட்ட புலவரெல்லாம் உள்ளங் கிளர்ந்து முகமலர்ந்துத் தலை யசைத்தனர். ஒரு புலவர் மட்டும் எழுந்து, இந்த உவமான வர்ணனையில் தவறுள்ளதெனத் தடை கூறினார். சங்கினை ஊதுபவன் அதன் அடிப்புறத்திலன்றோ வாய்வைத்து ஊதுதல் மரபு; அவ்வாறிருக்க,மலரின் மேற்புறத்திலிருந்து ஊதும் வண்டு சங்கூதுவானை யொப்பதுஎங்ஙனம் ? ஆதலின் இக்கற்பனை தவறுடையதாகும் என்று புகழேந்தியார் கருத்தை மறுத்துரைத்தார். இங்குப் புகழேந்தியாரின் புலமை வெளிப்பட்டது.

அது கேட்ட புகழேந்தியார் மகிழ்வோடு அப்புலவரை நோக்கினார். “நீர் கூறிய கருத்துப் பொருத் தமுடையதே; ஆயினும் கள்ளுண்டவனின் நிலைமை எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பது யாவரும் அறிந்த ஒன்று! அவன் கண்களுக்கு அனைத்தும் தலைகீழாய்த்தான் தெரியுமல்லவா? களிமயக்குடன் சங்கை ஊதுவான், அதன் பின்பக்கம் முன்பக்கங்களை அவனால்கண்டுகொள்ள முடியுமா? ஆதலால் பகல் முழுவதும் பறந்துபறந்து மலர்களில் மதுவருந்திய மயக்கத்தில் இருந்த வண்டும் அந்தி வேளையில் களிகொண்டு பூவின் மேல் அமர்ந்து ஊதிற்று; இதில் ஏதும் ஐயமுண்டோ?” என்று அவையிலிருந்தப் புலவரெல்லாம் வியக்குமாறு விடையிறுத்து மேற் சென்றார். மறுப்புரைக் கூறிய புலவர் வாயடைத்து வாளா அமர்ந்தார் 

இந்நிகழ்ச்சி, புகழேந்தியாரின் நிகரிலாப் புலமை நயத்தையும், சமத்காரத் திறனையும் விளக்குவதாக அமைந்துள்ளது., அல்லவா?

                          —————————————————-

இப்போது, சம்ஸ்க்ருதக் காவியத்தில் பொதிந்துள்ள, கேலி, பரிகாசம், நையாண்டி கலந்து வெளிப்படும் நகைச்சுவையைக் காண்போம். கவி ஜயதேவர் குறிப்பிடுவது போல் ‘கவிதை மூலம் சிரிக்க வைப்பவர் மகாகவி பாஸா’ (भासो हस:) ஆவார். கவி குணாட்யா (6 C.E) பைசாசி மொழியில் எழுதிய ‘பிரஹத்கதா’ (நெடுங்கதை) தொகுப்பில் இடம் பெறுகிறது வீரசாகசங்கள் புரியும் வத்ஸராஜன், கௌசாம்பி நகர அரசன் உதயணனின் சரித்திரம். அதன் பின்னணியில்  முழுக்க முழுக்க அரசியலைப் பிரதானமாக வைத்து, நான்கு அங்கங்களுடன்  ‘பிரதிக்ஞா யௌகந்தராயணம் राप्रतिज्ञायौगन्धरायणम्य), யௌகந்தராயணின் சபதம், என்ற ஒரு சிறு காவிய நாடகத்தை இயற்றினார். இதில் வரும் ஒரு சம்பவத்தில் தான்  அவர் நம்மைக் கவிதை மூலம் சிரிக்க வைக்கிறார். அது ஒரு பிரஹஸன (கேலி, பரிகாசம்) சம்பாஷணையாகும். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் எழுதிய முழு நையாண்டி நாடகம் ‘மத்தவிலாஸ (மதுபானப் பிரியர்களின் களியாட்டம்) பிரஹஸனம்’ போல் இல்லாவிட்டாலும் இங்கு வெகு நன்றாகவே அந்த யுக்தியைக் கையாண்டிருக்கிறார்.

இதன் மூன்றாம் அங்கத்தில் மதுக்கடையைச் சுற்றி விவரிக்கப்படும் சம்பவங்கள் ‘மத்த விலாச”த்தில் வருவது போலவே நகைச்சுவையுடன் களியாட்டக் கூத்தாக அமைக்கப் பட்டுள்ளன. பல்லவ மன்னன், கபாலிகன், புத்த பிக்கு, ஒரு மொடாக்குடி யாசிப்பவன் ஆகியோரைப் பரிகசிக்கும் போது, கவி பாஸா, ஒற்றன், மதுபானப் பிரியனானப் பைத்தி யக்காரன், புத்த பிக்கு ஆகிய மூவரை வைத்துக் கொண்டு நையாண்டி செய்கிறார்.

இதுதான் அக்காலக்கட்டத்தில் பரவலாக நடைமுறையில் இருந்த வழக்கம், போலும்!                                                                              

இதைப் படிக்கும் போது இன்றையத் தமிழகக் குடிமகன்களின் செயல்பாடுகளும், ‘டாஸ்மாக்’ கடைகளின் முன் நடக்கும் களேபரங்களும் நினைவுக்கு வந்தால் நாம் என்ன செய்வது?!

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, இந்நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது.

TO BE CONTINUED ……………………………

TAGS- நையாண்டி, பரிகாசம், ,மகேந்திரவர்மன் ‘மத்தவிலாஸ பிரஹஸனம்,  மதுபானப் பிரியர்,  

காதால் கெடுவது மான், நாவால் கெடுவது மீன் (Post No.10,888)

compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,888

Date uploaded in London – –   25 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான  மொழிகள்- 38 contd…..

கண்ணால் கெடுவது விட்டில்,

காதால் கெடுவது மான்,

நாவால் கெடுவது மீன்,

மூக்கால் கெடுவது வண்டு,

ஸ்பரிசத்தால் கெடுவது யானை,

ஐம்புலன்களினாலும் கெடுவது மனிதன்

xxxx

படுத்தே இருப்பவர்க்கு பாயும்,

பேசியே திரிபவர்க்கு வாயும்,

பகையாகும்.

ஆரோக்யத்திற்கு பாயையும்,

ஆனந்ததிற்கு வாயையும்

சுருட்டுதல் நலமாகும்.

Xxxx

முயலின் வெற்றி அதன் காலில்,

பெண்ணின் வெற்றி நடத்தையால்,

மனிதனின் வெற்றி அவன் பெருந்தன்மையால்!!!

தீப்பெட்டித் தொழிலில் வேலை பார்க்கும் சிறுவனே!

நீ சிலுவையைச் சுமக்கும் சின்ன ஏசு!!!

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்,

கருணையுள்ள நெஞ்சிலே கோவில் கொள்கிறான்!!!

XXXX

                      ஞான மொழிகள்-45

                                                      Kattu kutty

                    ஸ்மார்ட் மொழிகள்!

பழமொழி படித்திருப்பீர்கள் முதுமொழி படித்திருப்பீர்கள் 


ஆனால் smart மொழி படித்திருக்க மாட்டீர்கள்


1 . அகத்தின் அழகு status இல் தெரியும் . 


2 . like இட்டவரை உள்ளளவும் நினை . 


3 . இக்கரை மாட்டுக்கு அக்கரை google maps 


4 . அழுத பிள்ளை games விளையாடும் . 


5 . block பண்ணின பூனை chat இனை நாடாது . 


6 . பல நாள் திருடன் cctv இல் அகப்படுவான் 


7 . iphone apple சாப்பிட உதவாது 


8 . பழகப் பழக PUBG உம் விளங்கும் 


9 . ஓசி wifi உள்ள போதே download பண்ணிக் கொள் 


10 . சீனா தேசம் சென்றாலும் ஊர் roaming ஐ வைத்துக் கொள்


11 . அன்பான சினேகிதனை wifi hotspot இல் அறியலாம் . 


12 . இறக்கப் போனாலும் selfie எடுத்துட்டு போ . 


13 . unlimited data என்றால் பிணமும் வாய் பிளக்கும் . 


14 . சொறி பிடித்தவன் கையும் smartphone பிடித்தவன் கையும் சும்மா இருக்காது . 


15 . comments மேல் comments அடித்தால் post உம் நிறையும் . 


16 . 20’s kids கு தெரியுமா 90’s kids இன் அனுபவங்கள் . 


17 . முற்பகல் post செய்யின் பிற்பகல் viral ஆகும் . 


18 . i phone 11 pro கு கொட்டாவி விடாதே . 


19 . 4G இல் download ஆகாதது 2G இல் download ஆகுமா ? 


20 . திக்கற்றவனுக்கு Google maps ஏ துணை 

*** 

TO BE CONTINUED……………………

 tags-  காதால் கெடுவது மான், நாவால் , மீன், ஞான மொழிகள், ஸ்மார்ட் மொழிகள்!

இந்தோனேஷியாவில் சப்தபலோன் கொடுத்த சாபம்! – 1 (Post No.10,887)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,887

Date uploaded in London – –     25 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இந்தோனேஷியாவில் சப்தபலோன் கொடுத்த சாபம்! – 1

ச.நாகராஜன்

ஆச்சரியம்! ஆனால் உண்மை!!

இது உண்மையில் நம் முன்னே இப்போது நடக்கும் சம்பவம்.

23-10-2021 அன்று திவாகர் தத்தா ஹோம் நியூஸ் ரிபோர்ட்ஸ் வோர்ல்ட் – இல்

தரும் செய்தி இது. (Dibakar Dutta writes in Home News Reports World on 23 Octobeer 2021)

மஜபஹித்  சாம்ராஜ்யத்தின் மன்னனான ஐந்தாம் ப்ரவிஜயன்(King Brawijaya V of the Majapahit Empire).  1478ஆம் ஆண்டு ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினான். அப்போது ஹிந்து குருவான சப்தபாலன் (  Hindu Priest Sabdapalon) அது பொறுக்க மாட்டாமல் ஒரு சாபம் கொடுத்தார். தானே 500 வருடங்கள் கழித்து வந்து ஹிந்து தர்மத்தின் புகழை நிலை நிறுத்துவதாக அவர் கூறினார்.

2021 அக்டோபர் 26ஆம் தேதி.

இந்தோனேஷியாவில் பாலியில் சுக்மவதி சுகர்ணோபுத்ரி இஸ்லாமிலிருந்து ஹிந்து மதத்திற்குத் திரும்பப் போவதாக அறிவிப்பு வெளியானது..

சுக்மவதி சுகர்ணோபுத்ரி இந்தோனேஷியாவை நிறுவிய ஸ்தாபகரான சுகர்ணோவுக்கும் சுகர்ணோவின் மூன்றாவது மனைவியான பத்மாவதிக்கும் பிறந்தவர்.

அவர் இந்தோனேஷியாவின் ஐந்தாவது ஜனாதிபதியான மேகவதி சுகர்ணோபுத்ரியின் சகோதரியும் ஆவார்.

இந்தோனேஷியானின் ஆட்சிபீட அதிகாரத்தில் சக்தி வாய்ந்த குடும்பத்தில் ஒருவராக அமையும் சுக்மவதியின் இந்த தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

பாலியைச் சேர்ந்த அவரது பாட்டியார் இடா ஆயு ந்யோமன் ராய் ஸ்ரிம்பென் அவர்களின் ஊக்குவிப்பே இதற்குக் காரணமாகும்.

இதற்கு முன்னரே சுக்மவதி பல ஹிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்; ஹிந்து மடாதிபதிகள் பலருடனும் பேசியுள்ளார்.

இப்படி அவர் ஹிந்துவாக மாற அவரது சகோதரர்களான குண்டூர் சோயகர்ணோபுத்ர மற்றும் குரு சோயகர்ணோபுத்ர ஆகியோரும் சகோதரியான மேகவதி சுகர்ணோபுத்ரியும் ஆதரவு தந்துள்ளனர்.

அவரது மகன் மற்றும் மகளான முஹம்மத் புத்ர பெரிவிரா உடாமா, இளவரசர் ஹர்யோ பாண்றஜர்னா சுமத்ரா ஜிவானெகரா மற்றும் குஸ்தி ரடன் ஆயு புத்ரி சினிவதி ஆகியோரும் இதற்கு ஆதரவாக உள்ளனர்.

சுகர்ணோ மையம் பாலியிலிருந்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று இந்தோனேஷியா தான் மிகப் பெரிய இஸ்லாமிய நாடாக உள்ளது. முன்னொரு காலத்தில் இந்த தீவில் ஹிந்து மதம் செல்வாக்குள்ள ஒரு மதமாகத் திகழ்ந்தது.

கி.பி.முதல் நூற்றாண்டில் ஜாவா, சுமத்ரா ஆகியா தீவுகளில் ஹிந்து மதம் பரவியது. 15ஆம் நூற்றாண்டு வரை இதன் புகழ் மங்கவில்லை.

இஸ்லாமின் வருகையை ஒட்டி ஹிந்து மதம் க்ஷீணமடையத் தொடங்கியது.

இந்த நாடும் இஸ்லாமியர் அதிகமுள்ள நாடாக மாறியது.

இன்று இந்தோனேஷியாவில் உள்ள ஹிந்துக்கள் அவர்களின்  முன்னோர்களான மன்னன் ஜயபய மற்றும் குரு சப்தபாலனின் தீர்க்கதரிசன வாக்கைப் பெரிதும் நம்புகின்றனர்.

சப்த பாலனின் தீர்க்கதரிசன வாக்கு

சப்தபாலன் மன்னன் ஐந்தாம் ப்ரவிஜயனின் அரசவையில் செல்வாக்குள்ள ஒரு ராஜகுருவாக இருந்தார். 1478ஆம் ஆண்டு அந்த நாடு இஸ்லாமியரிடம் வீழ்ச்சி அடையும் சமயம் அவர் இஸ்லாமுக்கு மாறினார்.

சப்தபாலன் மன்னனுக்கு சாபம் அளித்தார்.

தான் இன்னும் 500 ஆண்டுகளில் அரசில் லஞ்சம் தாண்டவமாடும் போது, இயற்கை சீரழிவுகளின் போது மீண்டும் வருவதாக சபதமிட்டார்.

இஸ்லாமின் பிடியிலிருந்து இந்தோனேஷியாவை விடுவிப்பதாக அவர் சபதமிட்டதோடு மீண்டும் பழைய புகழுடன் ஹிந்து மதத்தை நிலைநாட்டப் போவதாகவும் அறிவித்தார்.

கல்பவிருக்ஷத்தின் படி சப்தபாலனின் கூற்று இது தான்:

ஜாவா நாட்டில் டான் ஹ்யாங் (தேவர்களுக்கும் ஆவிகளுக்கும்) மற்றும் ராணிக்கும் ஊழியன் நான். விகௌ மனுமானஸா, சகுட்ரம், பம்பாங் சக்ரி தொடங்கி பரம்பரை பரம்பரையாக  இன்று வரை நான் ஜாவா அரச குடும்பத்தின் ஊழியனாவேன். 2000 ஆண்டுகளாக இன்று வரை ஒன்றும் இங்குள்ளோரின் மதத்தில்  எதுவும் மாறவில்லை.  ஜாவானிய அரச வமிசத்தாருக்கு நான் ஊழியம் செய்யவே உள்ளேன்.  இதோ, இன்று நான் விடை பெறுகிறேன். எனது மூலத்திற்கு நான் திரும்புகிறேன். ஆனால் நமது அரசருக்கு ஒன்று மட்டும் நினவில் இருக்கட்டும், 500 வருடங்கள் கழித்து நான் மீண்டும் நம்  மதத்தை நிலை நாட்டுவேன்.”

சப்தபாலன் தீர்க்கதரிசனவாக்காகக் கூறியது “ எனது அரசனே! நீங்கள் இஸ்லாமுக்கு மாறினால் உங்கள் வம்சம் அழிந்து படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஜாவானியர்கள் ஜாவாவை விட்டுச் செல்வர். ஜாவானியர்கள் மற்ற நாடுகளைப் பின்பற்ற வேண்டி வரும்.

ஆனால் வருங்காலத்தில் ஒரு நாள் உலகம் ஜாவானியர்களால் வழி நடத்தப்படும்.

தான் மறையும் முன்னர் சப்தபாலன் ஒரு எச்சரிக்கையை விடுத்தார்:

“ 500 வருடங்கள் கழித்து நான் வந்து ஆன்மீகத்தை ஜாவாவெங்கிலும் மீண்டும் புனருத்தாரணம் செய்வேன். இதை மறுப்பவர்கள் அழிந்து படுவர். அவர்கள் அரக்கர்களுக்கு இரையாவர். அவர்கள் அனைவரும் ஒழிந்துபடும் வரை நான் திருப்தி அடைய மாட்டேன்.”

அவர் ஜனங்களை நோக்கி தன் வருகை குறித்தும் கூறினார்:

“ மவுண்ட் மெராபி பொங்கி எரிமலைக் குழம்பு தென்மேற்கில் பரவி கோரமான நாற்றத்தைத் தரும் போது நான் வருவதற்கான அறிகுறி அது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.”

இதை மெய்ப்பிக்கும் வகையில் 1978ஆம் ஆண்டு ஹிந்து கோவில்கள் இந்த தீவில் கட்டப்பட்டன. ஏராளமான முஸ்லீம்கள் தாய்மதமான ஹிந்து மதத்திற்கு திரும்பினர். மவுண்ட் செமெருவும் பொங்கி வழிந்தது.

இதுவே சப்தபாலன் வருவதற்கான அறிகுறி என அனைத்து ஹிந்துக்களும் நம்பலாயினர்.

***

தொடரும்

TAGS- இந்தோனேஷியா, சப்தபலோன், சாபம், சப்தபாலன், சுக்மவதி , மேகவதி சுகர்ணோபுத்ரி

BHAGAVAD GITA ‘CHITRA RATHA’ MYSTERY SOLVED-2 (Post No.10,886)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,886

Date uploaded in London – –    24 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

THIS IS PART TWO

There are three Chitrarathas in Mahabharata.

1.Chtraratha

A Gandharva chief who tried to stop the Pandavas when they were on their way from Ekachakra to Panchala. Arjuna, however, captured him but he was released after pleading by his wife Kumbhinasi. In return Chitra Ratha imparted to Arjuna some Gandharva knowledge on warfare and gave him divine knowledge of warfare and gave him divine horses which never become tired . Before retiring he advised the Pandavas to appoint a priest for their own benefit.

Xxx

2.Chitraratha

King of Anga in ancient time. Husband of Ruchi’s sister Prabhavati

xxx

3.Chitraratha

A Panchala prince who, along with his brothers Veeraketu, Sudhanva , Chitraketu and Chitravarma, was killed by Drona in the Mahabharata war.

Xxx

Apart from these three people there is one

Chitrasena, described as the Chief of Gandharvas.

During Arjuna’s five years stay in Swarga to acquire divine weapons, Chitrasena befriended him and at Indra’s request taught him the celestial art of music and dancing.

He was anxious to prolong Arjuna’s stay in Swarga (Paradise) and with Indra’s permission he asked the Apsara Urvasi to amuse and enchant to such an extent that he would not want to go back to earth. However when Urvashi’s attempts misfired and it led to her cursing Arjuna severely, it was Chitrasena who intervened with Indra and got the curse softened to Arjuna’s advantage.

Later Arjuna returned to earth; Chitrasena with his divine vision saw that Duryodhna had evil intentions to harass Pandavas while they were still banished to the forest. He therefore went down to the earth with his Gandharva army and encountered the Kaurava forces in the battle. While Karna had to escape for his life, Duryodhana was captured alive. While Yudhishthira out of the goodness of his heart asked Arjuna to fight against the Gandharvas in order to obtain Duryodhana’s release. Chitra sena was glad to meet his old friend once again. He released Duryodhana in Arjuna’s care and went back to Swarga.

Xxx

There are seven more “Chitra” prefixed names in the Mahabharata.

Chitrasena and Chitraratha may be one and the same person or there may be more than one chief among them.

Even Rigvedic passage said there were many kings on the banks of river Sarasvati. So we can guess more than one Gandharva kings.

Xxx

Following is from Dowson’s Dictionary of Mythology

Gandharvas

The heavenly Gandharva of the Vedas is a deity who knew and revealed the secrets of heaven and divine truths in general. He is thought by Goldstucker to have been a personification of the fire of the Sun. The Gandharvas generally had their dwelling in the sky or atmosphere and one of their offices was to prepare the heavenly Soma juice for the gods. They had a great partiality for women, and had a mystic power over them.

The Atharva Veda speaks of the 6333 Gandharvas. The Gandharvas of later times are similar in character. They have charge of the Soma, are skilled in medicine, regulate the asterisms and are fond of women. Those of Indra’s heaven are generally intended by the term, and they are singers and musicians who attend the banquets of the gods.

The Puranas give contradictory accounts of the origins of the Gandharvas . The Vishnu Purana says, in one place, that they were born from Brahma, imbibing melody. Drinking of the goddess of speech,t hey were born and thence their appellation,

Gaam dayantah = Gandharva

Later on, it says they were the offspring of Kashyapa and his wife Arishta.

The Harivamsa states that they sprang from Brahma’s nose and also they were descended from Muni, another of Kashyapa’s wife. Chitra Ratha was chief of the Gandharvas ; and the Apsarasses were their wives or mistresses.

The cities of the Gandharvas are often referred to as being splendid .

The Vishnu Purana has the Gandharvas fighting with the Nagas in the infernal region, whose dominions they seized and whose treasures they plundered. The Naga chief appealed to Vishnu for relief and he promised to appear in the form of Purukutsa to help them. There upon the Nagas sent their sister Narmada to this Purukutsa, and she conducted him to the regions below where he destroyed the Gandharvas .

They are sometimes calling Gaatus and Pulakas. In the Mahabharata, a race of people dwelling in the hills and wilds is so called.

The science of music and dance including drama is called  Gandharva Veda.

Chitra Ratha means ‘ one who has a fine car.’

Xxx

Last but not the least, Vedic Index adds,

The Rigveda contains a Danastuti (8-21-18) of a prince Citra.

The latter legend attributes this panegyric to Sobhari, and describes Citra as a king of the Rats (Brihaddevata 7-58)

My comments:- It is interesting to note there was a Dynasty of Mushikas (Rat) in Kerala.

SOURCE BOOKS:-

Who is Who in the Mahabharata by S Mazumdar, B V Bhavan, 1988

Dowson’s Dictionary of Hindu Mythology

Vedic Index by Keith and Mac Donell

Xxx Subham xxx

 tags –  Gandharva, Mushika Dynasty, Chitraratha, Chitrasena, Arjuna

பகவத் கீதையில் சுவையான சொல் சித்ரரதன் (Post No.10,885)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,885

Date uploaded in London – –    24 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

கந்தர்வானாம் சித்ரரதஹ — பகவத் கீதை 10-26

கந்தர்வர்களில் நான் சித்திரதன் – கிருஷ்ண பரமாத்மா (B G 10-26)

பகவத் கீதையில் நிறைய மர்மமான , சுவையான, பொருள் விளக்கப்படாத சொற்கள் நிறைய உள . அவைகளை யாரும் கண்டு கொள்வதே இல்லை. ஏனெனில் கீதை என்பது ஒரு ஆன்மீக நூல். அதில் வரக்கூடிய வேறு விஷயங்கள் மற்றும் உவமைகள் பற்றி விளக்கத் தேவை இல்லை என்று பாராமுகமாக இருந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட சொற்களில் சித்ர ரதன் என்னும் கந்தர்வ மன்னன், உசன கவி என்னும் பழங்காலப் புலவர், உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை, ஐராவதம் என்னும் யானை , வாசுகி என்னும் பாம்பு, மிருக ராஜா சிங்கம், பறவை ராஜா கருடன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்..

இந்தச் சொற்களில் கச்ச தேவயானி போன்ற சில திரைப்படங்களால் சுக்ராசார்யார் அவருடைய தந்தை உசன கவி பற்றி கொஞ்சமாவது வெளி உலகிற்குத் தெரியும். சுக்ராச்சார்யார் அசுரர் குரு என்பதால், தேவர்களும் அசுரர்களும் நம்மவர்களே என்பதும் வெளிநாட்டுப் பறங்கித் தலையர் கூறுவது போல அவர்கள் இந்துக்களின் எதிரிகள்– அதாவது வேற்று இனத்தினர் – என்பது பொய்யென்றும் புலப்படும். மேலும் இந்திரன், அக்கினி, வருணன் , ருத்ரன் முதலிய தெய்வங்களை அசுரர் என்று அழைக்கும் பழைய பகுதிகளும் உலகிலேயே பழைய நூலான ரிக்வேதத்தில் இருப்பதும் கண்கூடு.

மேலும் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானவர் உசன கவி; ரிக்வேத காலத்திலேயே இவர் பழங் காலப் புலவர் ஆகிவிட்டார். அவர் மரபில், அதாவது காப்பிய குடியில் வந்தவர்தான் நமது பெருமைமிகு “ஒல்காப் புலவன் தொல்காப்பியன்”, மற்றும் சங்கப் புலவர் காப்பியாற்றுக் காப்பியனானர்.

கவி= காவிய = காப்பிய என்பதை மொழியியல் வல்லுநர்கள் அறிவர்.இவை ஒரு புறமிருக்க இன்றைய தலைப்புக்கு வருவோம்.

சித்திர ரத என்னும் சொல்லே சுவையான சொல். ஏனெனில் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல் நூற்றுக் கணக்கான இடங்களில் பழைய நூல்களில் வருகிறது எவருமே ஆராயவில்லை. ஆராய்ந்தால் டாக்டர் பட்டம் கிடைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழ் பாடல்களை இயற்றிய 450 புலவர்களில் ஒருவர் பெயர் பெருஞ் சித்திரனார் ; ஸம்ஸ்க்ருதத்தில் மஹா சித்ரன் . அதே பெயரில் ரிக் வேதத்தில் ஒரு புலவர் இருக்கிறார்; அவர் பெயர் சித்ர மஹா வசிஷ்ட.

பெருஞ் சித்ரனார் பாடிய பாடல்கள் புறநானுற்றில் இருக்கின்றன; அவை கடை ஏழு வள்ளைகளைப் புகழ்வதால் சங்க கால இறுதியில்- அதாவது 1700 ஆண்டுகளுக்கு முன்னர் — வாழ்ந்திருக்க வேண்டும். அவர் மன்னர்களின் வள்ளன்மையைப் புகழும்போது மழை போலப் பொழிகிறார்கள் என்பார். இதுவும் ரிக் வேத உவமை.

புறநானூ ற்றில் பெருஞ் சித்திரனார் (மஹா சித்ரன்) பாடிய பாடல்கள் :- 158 முதல் 163 வரை; 207, 208, 237, 238

xxx

ரிக் வேத மன்னன் ஒருவன் பெயர் சித்ரன். அவரைப் பற்றிக் காண்பதற்கு முன்னதாக ‘சித்ர’ என்ற சொல் பற்றிய சுவையான விஷயங்களைச் சொல்கிறேன் :-

தமிழர்களுக்கு முதல் முதலில் என்சைக்ளோபீடியா உண்டாக்கியவர் சிங்கார வேலு முதலியார். அவர் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ‘அபிதான சிந்தாமணி’ என்ற பெயரில் இதை அச்சி ட்ட்டார் .

(இங்கு லண்டனில் எனது டேபிளில் எப்போதும் இருக்கும் நூல்களில் இதுவும் ஒன்று)

xxxx

அபிதான சிந்தாமணியில் 50-க்கும் மேலான ‘சித்திர’ — சொற்களைக் காணலாம். பல நதிகள், மலைகள், ஓவியங்கள், கவிகள்/பாடல்கள் முதலியவற்றுடன் சித்ர முன் ஓட்டாக (Prefix) வரும். அவற்றில் இன்றைய தலைப்பில் உள்ள சித்திர ரதன் கீழ் 15 விளக்கங்கள் உள . அவர்களில் பகவத் கீதையில் கண்ணன் சொன்ன சித்திரதன் யார் என்பதை ஆராயவே இக்கட்டுரை. மர்மத்தைத் துலக்க முயற்சிக்கிறேன் .

ஒரு எச்சரிக்கை !

கஸ்தியர், வசிஷ்டர் போன்ற பெயர்கள் வரும் போது எந்த அகஸ்தியர் என்று அறிய வேண்டும். இந்திரன் என்ற பெயரில் ஆயிரத்துக்கும் மேலான மந்திரங்கள் ரிக் வேதத்தில் உள்ளன; வெள்ளைக்காரப் பயல்களையும், மார்க்சீய, திராவிடக் கும்பல்களையும்  திணறடித்து உளரவைத்த சொல் இந்திரன்; காஞ்சி பரமாசார்ய சுவாமிகளின் (1894-1994) உபன்யாசங்களைப் படித்தோருக்கு இந்திரன் என்பது ஒரு ஆள் அல்ல. அது போப்பாண்டவர், சங்கராசார்யார், தலாய் லாமா , முதலமைச்சர், பிரதம மந்திரி என்பது போல ஒரு டைட்டில் Title என்பது.

போப்பாண்டவர்களில் (இலங்கைத் தமிழில் பாப்பரசர் ) 23 பேருக்கு ஜான் John என்று பெயர்; எகிப்திய மன்னர்களில் 11 மன்னர் பெயர்கள் ராம் செஸ் Rameses  (ரமேஷன் அல்லது ராம சேஷன்). தச ரதர் என்ற பெயர்களில் 5 மன்னர்கள் உண்டு. ஒருவர் அசோக சக்ரவர்த்தியின் பேரன். ராமாயண தசரதனை நாம் எல்லோரும் அறிவோம் . துருக்கியை கி.மு 1400-ல் ஆண்ட தசரதனின் கடிதங்கள் எகிப்தில் அமர்னா கடிதங்கள் (Amarna Letters) என்ற பெயரில் உள்ளன ; இந்த 5 பேருடன் என் விருதுநகர் நண்பர் தசரத நாடாரென்பவரையும் சேர்த்துக்கொள்ளலாம் . வெளிநாட்டுக்கார்கள் புத்திசாலிகள் .தற்காலத்தில் புஸ்தகம் எழுதும் போது ஜான்-11, ஜான் 23 என்று கைதி போல நம்பர் போட்டு விடுகின்றனர். நாம் அகஸ்தியர் 27 என்று நம்பர் போடாமல் எழுதியதால் மஹா குல , குள , குய ……… குழப்பம் !!!!

இவ்வளவு பீடிகை எதற்கென்றால் கிருஷ்ண பரமாத்தமா பகவத் கீதையின் பத்தாவது அத்தியாயத்தில் சொன்ன சித்திரரதன் யார் ?

இந்த மர்மத்தைத் துலக்க கீழ்கண்ட ரிக் வேத மந்திரம் உதவுகிறது. இது என் ஆராய்ச்சி!! பகவத் கீதைக்கு உரை எழுதிய மஹாத்மா காந்தியோ, வினோபா பாவேயோ , பால கங்காதர திலகரோ, திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தரோ ராமகிருஷ்ணமடத்தின் அறிஞர் அண்ணாவோ , இன்னும் நூற்றுக்கணக்கான சாமியார்களோ சொல்லவில்லை ; ஏனெனில் அவர்களெழுதியது ஆன்மீக உரை.

இதோ ரிக்வேத வரிகள் :-

8-21-17

பகைவனுக்கு இந்திரனா இத்தனை பெருஞ் செல்வத்தைத் தந்தான்? செளபாக்கியவதியான சரஸ்வதியா செல்வத்தைத் தந்தாள்? அல்லது சித்திரனே , நீயா?

8-21-18

சித்திரனே அரசன் ! ஸரஸ்வதி நதியின் கரையில் வசிக்கும் மற்றவர்கள் எல்லாம் சிற்றசர்களே . அவன் எல்லையற்ற ஆயிரக்கணக்கான தானங்களால் , மழையால் இன்புறுத்தும் பர்ஜன்யனைப் போல, இந்த நிலவுலகத்தை ஆனந்தத்தில் ஆழ்த்தினான்.

இதில் ‘சித்ரன்’ என்றே உளது; ஆனால் ‘சித்ர ரதன்’ என்பதை நாம் ஊகித்தறியலாம் . அது சரி, பகவத் கீதையில் கிருஷ்ணன் ‘கந்தர்வர்களில் நான் சித்திர ரதன்’ (ப.கீ. 10-26) என்றல்லவா சொல்கிறார். இங்கு ‘கந்தர்வர்’ என்பதும் இல்லையே? என்பர் சிலர்.

இதில் மேலும் ஒரு சுவையான  செய்தி வருகிறது. சிந்து சமவெளி நாகரீகம் என்பது சரஸ்வதி உள்ளிட்ட ஏழு நதிகளின் பூமி (சப்த சிந்து) என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். அது ஒருகாலத்தில் கந்தர்வர் கீழே இருந்தது. அங்கு பாரத நாட்டியம் ஆடும்  பெண்மணியின் சிலையும் நமக்கு கிடைத்துள்ளது. ராமாயண லவ, குசர்கள் சிந்துவெளியையும் தம் வசமாக்கிய செய்தியும் நமக்குத் தெரியும் (சிந்து சமவெளி பற்றிய எனது 25 ஆராய்ச்சிக் கட்டுரைகளை படிக்கவும்)

சரி யார் இந்தக் கந்தர்வர்கள்? சித்திர ரதன் கதை என்ன ?

வெள்ளித் திரையில் காண்க !!!

— தொடரும்

tags-  ரிக் வேத மன்னன், சித்ரன், கந்தர்வர்கள், சித்திர ரதன், பகவத் கீதை, 10-26

A man who wants a pretty nurse, must be  Patient! (Post No.10,884)

COMPILED BY KATTU KUTTY, CHENNAI

Post No. 10,884

Date uploaded in London – –   24 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் 38

kattu kutty

Brilliant puns :



1) A man who wants a pretty nurse, must be (a)  patient


2) A man who leaps off a cliff, jumps to a conclusion


3) A man running in front of a car gets tired. And a man running behind a car, gets exhausted


4) War doesn’t determine who is right, it determines who is left.


5) A man who drives like hell, is bound to get there.


6) A lion will not cheat his wife, but a Tiger wood!


7) Toilets are a great place to think. No wonder they are called “Sochalayas”…


xxxx


Strange but true !!!!
1 – Inspite of so many colours – White is considered Class.


2 – Inspite of so many voices & sounds – Silence is considered ultimate.


3 – Inspite of so much to eat – Fasting is considered healthy.


4 – Inspite of so much to travel & explore – Meditating under trees & on mountains is considered superior.


5 – Inspite of so much to see – Closing your eyes & looking within is Apex.


6 – Inspite of listening to all the outside world – Voice from inside you is eternal.


7 – Inspite of a sweet charming life – A Peaceful Soul is Solace & Divine.

Trust your Senses. Live a Great Life.

xxx

A small dot can stop a big sentence,

but a few more dots can give continuity .

Amazing but true.

Every ending can be a new beginning!!!

Xxxx

Success can neither magical nor mysterious .

Success is the natural consequence of

Consistently applying basic fundamentals!!!

The best cosmetics of life :

TRUTH – for lips,

SYMPATHY – for eyes,

PRAYER – for voice,

CHARITY – for hands,

SMILE – for face and

LOVE – for heart.

Use them well and make life beautiful !!!

Value is more expensive than price!!!

REMEMBER

MOST OF YOUR STRESS COMES THE WAY YOU RESPOND

NOT THE WAY THE LIFE IS.

ADJUST YOUR ATTITUDE, AND ALL THAT EXTRA STRESS IS GONE.

xxxx

A -Action

C -Changes

T -Things

xxx

If you want to achieve greatness,

Stop asking for permission.

xxxx

W O M E N

W- Wonderful wife

O – Outstanding friend

M – Marvelous daughter

E – Enjoying sister

N – Nice gift of mother

xxxxx

Lucky means, who get the opportunity,

Brilliant means, who create the opportunity,

Winner means who uses the opportunity.

xxx

A question was asked in a seminar.

Why employee don’t discuss with their problems with

Their management ???

The best answer came from a real frustrated employee,

‘You cannot discuss your malaria problems with the

Mosquito’.

Xxx

It is very simple to be happy,

But is very difficult to be simple.

Xxxx

Every relationship is a like glass.

A scratch on any side will

Reflect on the other side.

xxx

Helping one person might not change the world,

But it might change the world for one person.

 Xxxxx Subham xxxx