OLDEST ROBOT IN THE WORLD WAS A HINDU ROBOT ! (Post No.10,941)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,941

Date uploaded in London – –    5 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

xxx

There is a very interesting story about a robot in the Hindu scriptures. First let me give the story as we find it in Thaneswar Sarmah’s book (New Trends in the Interpretation of the Vedas)

Sarmah has compiled the story from three books : Brhad devata, Mahabharata and Harivamsa.

Brahma has six Manasaputras (created by his mental power) and one of them was Marichi. His son was Kasyapa. He married 13 of Daksha’s daughters and though Aditi, Diti, Danu, Kadru and others he became the father of Devas, Daityas, Danavas, Nagas, Yakshas, Gandharvas, Apsaras, Kinnaras etc. This explodes the myths of Max Muller gangs and Marxist Gangs who said that they belong to different races and Vedic Aryans clashed with the aborigines (Daityas and Danavas).

Even the Rig Veda called Indra, Agni, Mitra, Varuna and others as Asuras in its early parts. In Brhad Aranyaka Upanishad we see Devas, Asuras and Menfolk going together to god to get some advice and the God said D,D,D. (D D D Story is already given in this blog) It shows they lived together and they all respected god.

XXX

Here is the story of VISVAVATH AND SARANYU

KASYAPA produced 12 Adityas through Aditi, the eldest daughter of Daksha Prajapati. Tvasta and Visvavath were two of thm.

Tvasta was a great carpenter and sculptor. He fashioned all types of chariots, missiles and weapons for warriors. He had Visvakarman, Trisiras (Visvarupa), Vrtra as sons and Saranyu daughter.

In course of time Visvavat married Saranyu. They gave birth to twins Yama- Yami. After sometime, Saranyu got bored for two reasons. Her husband was going out in the morning to give light to the world as Sun/Aditya and return only in the evening. He was too hot for Saranyu. Just to break this monotony, Saranyu, being the daughter of great carpenter(Architect, Engineer), built her own image and gave it life. She tutored the image what to do in the house (a robot with life). She took the form of a mare (female horse) and wandered happily.

Visvavat couldn’t find that his wife was away, because the image (robot) did all the work perfectly. He even had a child through the image and he was known as Manu, the first king of human race.

(The word man came from Manu; the words technology, technical, Architect, technic etc came from Daksha, Taksha)

When Tvasta found out the image was not his wife Saranyu, he also took the form of a horse and went in search of Saranyu. They met and had one more set of twins known as Asvins  (Asvin= people from horse). Dasra and Nasatya are the twins (Asvins)

Xxx

My Comments

The story shows cousin marriage; moreover, it shows some knowledge in making images and infusing life into it. They looked like real life images like we see in Madame Tussauds Museum. So I consider them as robots. Not even Japanese’ advanced technology in Robotics produced a robot which  can give birth to baby robots.

Interpreting the image of Saranyu as a robot with life is my own interpretation. Even if one doesn’t believe the story, one would have to admit the seed of Robotics is there. Earlier I showed that Lord Shiva was the first man to use Bluetooth to listen to music. When two devotees Asvatharan and Kampatharan requested Lord Shiva to listen to their music Siva made them as ear studs and wore it. Siva was listening to their 24 hour music. But he did not patent it like Sony Walkman!!

Please see the links:

H for Hindu | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › h-f…

26 Nov 2018 — HEAVENLY MUSICIAN’ USED BY LORD SHIVA LIKE ‘WALKMAN‘ (SONY) IN HIS EARS TO LISTEN TO MUSIC · LORD SHIVA · AN ANCIENT KING; ALSO THE NAME OF AN …


Hindu God with “an IPod” | Tamil and Vedas

https://tamilandvedas.com › hindu-g…

13 Feb 2013 — When Sony invented Walkman, ear phones became a household thing. Even then it was big and uncomfortable to keep it in the pocket.


Da……………Da……………Da Story | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/02/19 › dadada-story

19 Feb 2014 — Da meant Datta (Give, Donate) for humans. Human beings were miserly. They have to share the wealth. Even before Karl Marx and Engels spread the …

Missing: DDD ‎| Must include: DDD


biology | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › biology

28 Dec 2021 — This story of 3 DDD sounds from the Thunder show that Hindus used Nature to Teach and to Learn. This story shows Opposition Party/ Asura …

–subham—

Tags : Visvavat, Saraanyu, Robot, Robotics, Tvasta, Daksha, Tech, Taksha

—subham—

உலகின் முதல் ரோபாட்– இந்துக்கள் கண்டுபிடிப்பு ! (Post No.10,940)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,940

Date uploaded in London – –    5 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

உலகில் முதல் முதலில் காதில் Ear Phone இயர் போன் மாட்டிக்கொண்டு இசை கேட்பதைக் கண்டுபிடித்தது இந்துக்கள் என்பதை முன்னர் கண்டோம் . அஸ்வதரன், கம்பத்தரன் என்ற இரண்டு பேர் எங்கள் இசையை எப்போதும் கேட்கவேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்ட அவரும் அவ்விருவரை காதில் அணியும் தோ டுகளாகச் செய்து 24 மணி நேர இசை கேட்பதையும் இதனால் ‘தோடுடைய செவியன்’ என்று திருஞான சம்பந்தர் பாடியதையும் அறிவீர்கள் (எனது 213ம் ஆண்டு கட்டுரை இணைப்பைக்  கீழே காண்க)

யமா- யமி என்னும் இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுத்தவர்கள் விஸ்வவத் – சரண்யூ (Visvavat- Saranyu)  தம்பதியர் ஆவர். இவர்களில் சரண்யூ என்ற பெண்மணி இயந்திர மனிதன்= ரோபாட் ROBOT ஆகிய கதை பிருஹத் தேவதா, மஹாபாரதம், ஹரிவம்சம் ஆகிய நூல்களில் உள்ளது . இந்த சுவை யான கதையைக் காண்போம்

பிரம்மா தனது மனத்தின் மூலமாக ஆறு பேரை உருவாக்கினார் . அவர்களை மானஸ புத்திரர்கள் என்பர். அவர்களின் பெயர்கள் :– மரீசி, அத்ரி, ஆங்கிரஸ் புலஸ்திய, புலஹ, க்ரது .

இவர்களில் மிகவும் முக்கியமானவர் மரீசி. அவருடைய புதல்வர் காஸ்யபர்; அவர்தான் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானவர் . அவர் திராவிடங்களுக்கும் மார்க்சீயர்களுக்கும், மாக்ஸ்முல்லர்களுக்கும், கால்டு வெல்களுக்கும் வெடிகுண்டு வைப்பவர். அந்தக் கழிசடைகளைத் தூள் தூள் ஆக்குகிறார். இந்துக்கள் வெளிநாட்டில் இருந்து வந்தனர் என்று இந்தக் குமபல்கள் ஆயிரக்கணக்கில் புஸ்தககங்களையும் கட்டுரைகளையும் எழுதிக்குவித்துள்ளன. ஆரியர்கள் என்போர் குடியேறிகள் Migrants என்றும் அதற்கு முன்னர் மத்தியதரைக்கடல் பகுதியிலிருந்து குடியேறியவர்கள் திராவி டர்கள் என்றும் அவர்கள் கூறினர் ; அரக்கர்கள், ராக்ஷஸர்கள் உண்மையில் பூர்வ குடி Aborigines மக்கள் என்றும் கதை கட்டினர் .இததகைய கயவர்கள் மீது அணுகுண்டு வீசுகிறார் காஸ்யப முனிவர்.

அதாவது அரக்கர்களும் தேவர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளளைகள் அல்லது ஒரே தந்தைக்கு இரு பெண்கள் மூலம் பிறந்தவர்கள் என்று இந்துக்கள் கூறுகின்றனர். உலகம் தோன்றிய நாள் முதல் இவர்கள் இருவரும் இருக்கின்றனர். ரிக் வேதத்தில் இந்திரன், அக்கினி, மித்ரன் வருணன் ஆகியோர் அசுரர் என்றே முதலில் அழைக்கப்பட்டனர். அசுரர்களும், தேவர்களும், மனிதர்களும் சென்று இறைவனிடம் ஒரு சொல் தாரீர் என்று Advice அறிவுரை கேட்க அவர் த , த ,த என்று சொன்ன கதை 2800 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங் காட்டு உபநிஷதத்தில் உள்ளது (முன்னரே த த ,த  கதையை எழுதியுள்ளேன்); இப்போது காசியபர் கதைக்குத் திரும்புவோம் .

பெருங்காட்டு உபநிடதம் = பிருஹத் ஆரண்யக உபநிஷதம்

தக்ஷப் பிரஜாபதிக்கு 50 பெண்கள். அவர்களில் 13 பேரை காஸ்யபர் கல்யாணம் செய்துகொண்டார்.அவர்களுடைய பெயர்கள் :

அதிதி

திதி

தனு

காலா, அநாயு, ஸிம்ஹிகா, முனி, க்ரோதா , ப்ராதா அரிஷ்டா விநதா , கபிலா, கத்ரு . அவர்களில் மிக முக்கியமானவர்கள் முதல் மூவர்.

இந்த 3 பேரிடமிருந்துதான் தேவர்கள் தைத்யர்கள், தானவர்கள் வந்தனர். ஏனையோரிடமிருந்து நாகர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள் முதலானோர் வந்தனர் என்கிறது இந்துமத நூல்கள். பறங்கித் தலையர்களும் மார்க்ஸீயங்களும் புஸ்தகம் எழுதியபின்னர் நமது தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் உள்ள உண்மை எவருக்கும் தெரியாமலேயே போய்விட்டது .

அரசியலில் எப்படி ஓரிரு கட்சிகள் உடைந்தும் பல கடசிகள் ஆகி பின்னர் இணைந்து புதிய கட்சிகள் உருவாகின்றனவோ, நாடுகள் சிதறி மீண்டும் ஒன்றுபட்டு புதிய நாடுகள் உருவாகின்றனவோ அதுபோல இந்த தேவர், அரக்கர்/அசுரர் /தானவர்  போன்ற குழுக்களிலும் வரலாறு உண்டு. அதை தற்போது பின்ணிக்குத் தள்ளுவோம்..

பிரஜாபதி என்றால் மக்களை, மக்கள் குழுக்களை உருவாக்கியவர் என்று பொருள். பிரம்மா முதல் அவர் சந்ததி வரை பலரையும் இப்படி அழைப்பர்.

தக்ஷப் பிரஜாபதியின் மூத்த மகளை — அதிதியை — மணந்தவர் காஸ்யப பிரஜாபதி. அதிதி என்ற பெண்மானியைத்தான் கடவுளரின் தாய் என்று ரிக்வேதம் போற்றுகிறது . அதிதிக்குப் பிறந்தவர்கள் ஆதித்யர்கள் ; அவர்கள் 12 பேர் .

தாத, மித்ர , அர்யமா சக்ர , வருண, பக, விஸ்வவத்  , பூசா , சவிதா , த்வஷ்டா , விஷ்ணு

இவர்களில் விஸ்வவத் மற்றும் த்வஷ்டா கதையைத்தான் நாம் படிக்கப்போகிறோம் .

அதிதியின் 11ஆவது மகன் த்வஷ்டா. பெரிய என்ஜினீயர். விமானம் முதல் ரதம் /கார் வரை வடிவமைத்தவர். பெரிய தச்சன். கட்டிடம், ரதம் மட்டுமின்றி ஏவுகணைகள், ஆயுதங்களையும் உருவாக்கியவர் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்துதான் தச்சர், டெக்ட், ஆர்க்கிடெக்ட், டெக் னாலஜி , டெக்னீஷியன், டெக்னிக் முதலிய நூற்றுக் கணக்கான ஆங்கிலச் சொற்கள் வந்தன. த்வஷ்டாவின் மகன் விஸ்வகர்மன் அதன் பொருள் – எல்லாம் செய்யவல்லவர் . இன்றும் நாம் விஸ்வ கர்ம சமுதாயத்தைப் பார்க்கிறோம்.விஷ்வ கர்மனோடு த்ரிசிரஸ் (மூன்று தலையன், விஸ்வ ரூபன்  ), விருத்திரன் என்ற இரண்டு மகன்களும் உண்டு. சரண்யூ என்ற புதல்வியும் உண்டு.

விஸ்வ வத், த்வஷ்டாவின் மகளான சரண்யூவை திருமணம் செய்துகொண்டதாக பிருஹத் தேவதா , நீதி மஞ்சரி, ஹரிவம்சம் (மஹா பாரதத்தின் பிற்சேர்க்கை) சொல்லுகின்றன இவ்விருவருக்குப் பிறந்தவர்கள்தான் யமா -யமி  இரட்டைக்குழந்தைகள் .இரட்டையர் பிறந்த பின்னர் சரண் யூவுக்கு  மிகவும் BORE போர் அடித்தது. கணவன் பன்னிரு ஆதித்யர்களில் ஒருவன் அல்லவா? அந்த சூரிய பகவான் காலையில் புறப்பட்டால் இராவில்தான் வீட்டுக்கு வருவார். மறுநாள் காலையில் உதிக்கப் போய்விடுவார்; அத்தோடு உடம்பு முழுக்க சூரிய வெப்பம். சரண் யூவுக்குத்  தங்க முடியவில்லை  வாழ்க்கை இப்படி DULL ‘டல்’ அடிக்கத் துவங்கியவுடன் அவளுக்கு ஒரு idea ஐடியா கிடைத்தது. தந்தை, த்வஷ்டா  பெரிய என்ஜினீயர் ஆயிற்றே . இந்தப் பெண்மணியும் தன்னைப்போலவே ஒரு உருவம் (Image) சமைக்கிறாள் அந்த Robot ரோபாட்டுக்கு உயிரும் கொடுக்கிறாள்  அது வீட்டு வேலைகளைச் செவ்வனே செய்தது. சரண் ஒரு பெண் குதிரை (Mare)  வடிவம் எடுத்து ஜாலியாக ஊர் சுற்றுகிறாள் .

இதே நேரத்தில் சரண் அமைத்த ரோபாட்டுக்கும் விச்வவத்துக்கும் ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. அதுதான் மனு MANU . மனித குலத்தின் மூதாதையர்; மேன் MAN என்ற ஆங்கிலச் சொல், மானுடன், மனுஷன், மனிதத்ன் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் மனு விலிருந்து வந்தவையே.

கொஞ்ச காலத்துக்குப் பின்னர் தங்கள் வீட்டில் இருப்பது சரண் அல்ல, அவள் போன்ற உருவம் கொண்ட ROBOT ரோபாட் என்பது விஸ்வவத்துக்குப் புரிகிறது. அவரும் குதிரை வடிவம் எடுத்துக் கொண்டு சரண் யூவைத் தேடுகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்த்தித்தன் விளைவாக இரட்டையர் பிறக்கின்றனர். அவர்கள்தான் தஸ்ரா , நாஸத்ய என்ற பெயர் கொண்ட அஸ்வினி (Asvins)  தேவர்கள் ஆவர்

இந்தக் கதை சிற்சில வேறுபாடுகளுடன் வெவ்வேறு புராணங்களில் உளது. மேலும் சரணின் பெயர் சம்க்ஞா என்றும் இருக்கிறது.

இதில் நம்ப முடியாத விஷயங்கள் சில இருந்தாலும் ஒரு உருவத்தை உண்டாக்கி அதற்கு உயிர் கொடுத்து உலவ வைக்க முடியும் (ROBOTICS ரோபோடிக்ஸ்)  என்ற அறிவியல் கருத்து இருக்கிறது. எவ்வளவோ புதிய ரோபாட்டுகளை உருவாக்கும் ஜப்பானும் கூட குழந்தை பிறக்க வைக்கும் மனித ரோபாட்டை உருவாக்க வில்லை. ஆனால் நமது சரண்யூ கதையில் அதையும் காண்கிறோம்; விஞ்ஞான புனைக்கதைகள் SCIENCE FICTION எழுதும் எவரும் தான்தான் அந்த ‘ஐடியா’வைக் கண்டுபிடித்தேன் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அத்தனையும் புராண இதிஹாசங்களில் உள்ளன. மஹாபாரதத்தில் உள்ள CLONING க்ளோனிங், TEST TUBE BABY டெஸ்ட் ட்யூப் பேபி, SEX CHANGE OPERATION செக்ஸ்  மாற்ற ஆபரேஷன் முதலிய 10 அறிவியல் கருத்துக்களை முன்னரே எழுதியுள்ளேன்

சிவன் கேட்ட இசை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

14 Feb 2013 — உலக வலம் பேடண்ட் உரிமையும் எம்பி 3 இசைக் கருவி, இயர் போன் (காது ஒலிக் கருவி) …


த……….த……….த……….:- தேசிய கீதம் ஆக்கலாமே!

https://tamilandvedas.com › த-த-த-…

· Translate this page

19 Feb 2014 — …..….. என்ற மூன்று எழுத்துக்களை (சொற்களை) பிரபலமாக்கியோர் மூவர்.


“த, த, த” கதையும் காஞ்சி சங்கராச்சார்யார் பாடலும் …

https://tamilandvedas.com › த-த-த-…

· Translate this page

3 May 2021 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. if u want the article in word …

–SUBHAM—

TAGS- சரண்யூ , விஸ்வவத் , ரோபாட் , அறிவியல் , புனைக் கதை,

WHERE CAN WE FIND THE BIGGEST LIES? (Post No.10,939)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,939

Date uploaded in London – –   5 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

What is the difference between the mother and a wife???

A woman brings to the world crying and other ensures you

Continue to do so……..

XXX

TWO DIFFICULT THINGS TO ACHIEVE

1. To plant your ideas on some one else head

2. To  put some one else money into your pocket.

The one who succeeds in-the first one is called

TEACHER.

And the second is called

BUSINESS MAN.

The person who succeeds in both is called “WIFE”.

The one who fails in both is called

“HUSBAND”.

XXX

WHERE DO YOU FIND THE BEST LIES?

1.    LOVE LETTER.

2.    LEAVE LETTER.

XXXX

What are lizards???

Awesome answer by a kid

The poor crocodiles forgot to have horlicks

When they were young!!!

XXX

What is pizza….???

A pizza….is just a paratha went abroad

For higher education!!!

XXX

Husband- i found alladin magic lamp today

Wife – what did you ask???

Hus- I ask to increase your brain ten times.

Wife-oh dear,I love you and thank you very much!!!

Hus- but it said multiplication doesn’t apply with zero……..

XXX

NICE DEFINITION OF TIME

Tme is slow when you wait.!

Time is fast when you are late!

Time is deadly when you are sad!

Time is short when you are happy!

Time is endless when you are in pain!

Time is long when you feel bored!

Every time, time is determined by your FEELINGS

and your PSYCHOLOGICAL conditions and NOT

By the clocks.

SO HAVE A NICE TIME ALWAYS !!!

XXX SUBHAM XXX 

ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் (Post No.10,938)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,938

Date uploaded in London – –   5 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 54

Kattukutty

மனைவி – நேத்திக்கு வைரத்தோடு கேட்டதற்கு மாட்டேன்னுட்டு

இன்னிக்க வாங்கிண்டு வந்திருக்கேள்???

கணவன் – பொண்டாட்டி கேட்டதை வாங்கி தராட்டா அடுத்த

ஜன்மத்திலேயும் அவதான் பொண்டாட்டியா வருவாளாம்ன்னு

பெரியவா சொல்லியிருக்காளாம்,அதான் பயந்து போய் வாங்காண்டு

வந்துட்டேன்………

இன்பமோ, துன்பமோ,

வெற்றியோ, தோல்வியோ,

கஷ்டமோ, நஷ்டமோ,

வாழ்வோ, தாழ்வோ,

தன்க்கு நடக்கும்வரை

உலகத்தில் நடக்கும்

எல்லாமே வேடிக்கைதான்………

ஒரு ஆண் திட்டுவதை ஒரு பெண் அமைதியாக, பொறுமையாக

சிரித்துக் கொண்டே கேட்டால் அது CUSTOMUR CARE ல்

மட்டும்தான்!!!

“குருவே…..என் தவறுகளை நான எவ்வாறு உணருவது???

“டெட் ஈஸி மகனே!…….உன் மனைவியின் ஒரே ஒரு தவறை

மட்டும் சுட்டிக்காட்டு……அவளே உன்னுடைய, மற்றும் உன்

பரம்பரை…..சொந்த பந்தம்……நண்பர்கள் எல்லோருடைய

தவறுகளையும் தோண்டி எடுத்து தந்துவிடுவாள்”!!!!

இதய அடைப்பு (heart attack)அறிகுறி ஏற்பட்டால்

பயப்பட வேண்டாம்.

உடனடியாக இரண்டு ‘கல் உப்பு’ எடுத்து நாக்கின்

அடியில், அல்லது உதட்டின் அடியில் வைத்து சிறிதளவு

தண்ணீர் குடித்தால் தாற்காலிகமாக குணமடையும்

சின்ன வயசுலே மி்ஸ்ஸுக்கு பயப்படறதும்,

பெரிய வயசுலே மிஸ்ஸஸுக்கு பயப்படறதும்,

ஆண்களின் சாபம்………

XXXX

ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்….???

நீ கல்யாணம்பண்ணிக்கணும்ன்னு நினைக்கிறது ஆசை.

அதுக்கப்பறம் சந்தோஷமா இருக்கணும்ன்னு நினைச்சா

அது பேராசை…….

நீ பணக்காரணாகனும்ன்னு நினைக்கறது ஆசை.

ஆனா நோட்டு அடிச்சு பணக்காரணாகனும்ன்னு நினைச்சா

அது பேராசை…….

நீ வெளி நாடு போகணும்ன்னு நினைச்சா அது ஆசை.

ஆனா நீயே பாஸ்போர்ட் தயாரிக்கணும்ன்னு நினைச்சா

அது பேராசை…….

XXX

நம் நட்டில் பாகுபலி மட்டும்தான்,பொண்டாட்டியோட

சேர்ந்து எதிரியோட சண்டை போடறான்.

மத்தவனுக்கெல்லாம், பொண்டாட்டி கூட சண்ட

போடவே நேரம் சரியாயிருக்கு……….

XXX subham xxxx

குழந்தைகள் விரும்பும் நாடு! (Post No.10,937)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,937

Date uploaded in London – –     5 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

3-5-2022 தேதியிட்ட மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

குழந்தைகள் விரும்பும் நாடு!

ச.நாகராஜன்

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த நாடு எது? சந்தேகமே இல்லை. பெல்ஜியம் தான்.

ஏனெனில் அவர்களின் அழகை ‘எடுத்துக் காட்டும்’ அழகிய கண்ணாடிகளை பெல்ஜியம் தானே தருகிறது. அவர்களின் அழகைக் ‘கூட்டும்’ வைரம் கொண்ட நாடும் அது தான். குழந்தைகளுக்கோ எனில் இனிப்புள்ள, மணமுள்ள உலகின் தரம் வாய்ந்த சாக்லட்டை விதவிதமாக அந்த நாடு தானே தருகிறது! ஆகவே அழகையும் இனிமையையும் போற்றும் அனைவரும் விரும்பும் நாடாக அது அமைவதில் ஆச்சரியமே இல்லை.

விழிப்புணர்வு தேவை

வெளிநாடுகளுக்கு விமானப் பயணம் மேற்கொள்வோர் பயண நேரம் முழுவதும் விழிப்புடன் இருப்பது அவசியம். கொரானா பற்றிய விதிகளை அறிந்து கொள்ளவும் வேண்டும். இது காலத்தின் கட்டாயமாக ஆகி விட்டது.

ஒவ்வொரு விமானப் பயணத்திலும் ஒவ்வொரு புது அனுபவமும் அதையொட்டிய பாடமும் கிடைக்கும்.

அதி நவீன் தொழில்நுட்ப பயிற்சிக்காக தொழில்துறை குழுவினருடன் நான் பெல்ஜியத்தின் தலை நகரான ப்ரஸ்ஸல்ஸ் நோக்கிப் பயணம் மேற்கொண்டேன். ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து இன்னொரு விமானம் மூலம் ப்ரஸ்ஸல்ஸ் செல்ல வேண்டும். பயணத்தில் ஏற்பட்ட தாமதத்தால் ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்தை அடைந்த போது இன்னும் சில நிமிடங்களில் அடுத்த விமானம் புறப்படும் நேரம் அமைந்து விட்டது. போர்டிங் பாஸ் தரும் கவுண்டர் மூடப்படும் நேரம் அது! ஃப்ராங்க்பர்ட் விமான நிலையமோ மிகப் பெரியது. என்ன செய்வது? எங்கள் போர்டிங் பாஸ் வாங்க எந்த கேட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதைக் கூட அறிந்து கொள்ள நேரமில்லாத நிலை. குழுவினருக்கு ஒரே பதற்றம்.

பிரம்மாண்டமான நீள நெடுக இருந்த விமானநிலையத்தில் முதல் டெஸ்கில் இருந்த ஒரு இளம் பெண்மணியை அணுகினேன்.

ஒரு நிமிடத்தில் எங்கள் பிரச்சினையைச் சொன்னேன். “நல்ல காரியத்தைச் செய்தீர்கள்” என்று என்னை, தன்னை உடனே அணுகியதற்காகப் பாராட்டிய அந்த இளம் பெண், போனை எடுத்து ஏதோ பிரெஞ்சு மொழியில் பேசினார். பின்னர், “கவலைப்பட வேண்டாம். நீங்கள் இல்லாமல் கேட் மூடப்படமாட்டாது, வாருங்கள் என்னுடன்” என்று எங்களை விரைவாக அழைத்துச் சென்றார். உரிய கேட்டிற்கு கொண்டு விட்டார். அங்கிருந்தோர் உடனடியாக எங்களுக்கு விமானத்தில் அமர போர்டிங் பாஸ் தந்தனர்.

ஒரு இக்கட்டான சூழ்நிலையை உடனடியாக சமாளிக்க வேண்டியது ஒவ்வொரு பயணத்திலும் மிக அவசியம்.

ப்ரஸ்ஸல்ஸில் இறங்கியவுடன் எங்களை அழைத்துச் செல்ல,  எங்களை வரவேற்கும் ஒரு போர்டுடன் இளைஞர் ஒருவர் தயாராக இருந்தார். அவர் காட்டிய வேனில் ஏறி உட்கார்ந்தோம். டிரைவர் இருக்கையில் அமர்ந்த அவர் ஒரு பாட்டைப் போட்டு விட்டார். அதற்கேற்ப உல்லாசமாக உடலை ஆட்டிக் கொண்டே வேனை ஓட்டினார்.

நாங்கள் செல்ல வேண்டிய ஊர் ரோஸலேர் என்னும் அழகிய நகரம். 87 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அதை சுமார் 45 நிமிடங்களில் அடைந்தோம். வேன் பறந்தது. இயற்கைக் காட்சிகள் இரு புறமும் பறந்தன.

வேனை ஓட்டிய இளைஞரின் ஆட்டமும் பாட்டமும் ஏன் என பெல்ஜியம் நாட்டில் புகுந்தவுடனேயே தெரிந்து விட்டது. உலகில் அதிக கலை நிகழ்ச்சிகள் நடக்கும் நாடு பெல்ஜியமே.

வீதிகளில் ஆரம்பித்து அரங்கங்கள் வரை ஆங்காங்கே ஏதேனுமொரு நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும்.

மக்கள் கலைப் பிரியர்கள். ஆகவே தான் அதை திருவிழாக்களின் நாடு என்று சொல்கின்றனர்.

குழந்தை இல்லை என்றால் கூடுதல் வரி!

மிகுந்த குளிர் பிரதேசம் என்பதால் பிரம்மாண்டமான தொழிலகம் எல்லாப் பக்கங்களும் நன்கு மூடப்பட்டு வெப்பமூட்டும் ஹீட்டர் வசதியுடன் அமைந்திருந்தது.

பேசினால் வாயிலிருந்து புகை வரும்; ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்த காட்சிகளை நேரில் அனுபவிக்க நேரிடும்.

தங்குவதற்கு அருமையான ஹோட்டல்கள் ஏராளம் உண்டு.

டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மூன்று மொழிகள் அதிகார பூர்வ மொழிகளாகும்.

இதன் பரப்பளவு 11780 சதுர மைல். ஜனத்தொகை 110 லட்சம். வெப்பநிலை குறைந்த பட்சம் 3 டிகிரி செல்ஸியஸ் அதிக பட்சம் 18 டிகிரி செல்ஸியஸ்.

மக்கள் ஜனத்தொகை மிகவும் குறைவு என்பதால் குழந்தை பெறுவதை அரசு ஊக்குவிக்கிறது.  குழந்தை இல்லை என்றால் அதிகம் வரி செலுத்த வேண்டும்! இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊர் மிகுந்த அமைதியுடன் இலங்குகிறது.

800 வகையான பீரை பெல்ஜியம் தயாரிப்பதால் பெல்ஜியம் பீருக்கு ஏக டிமாண்ட்.

ஓய்வெடுக்க விரும்புவோர் விரும்பும் நாடு இது. ஏனெனில் ஸ்பா என்ற நகரிலிருந்தே இன்று நாம் சென்னையிலும் கூடக் காணும் ஸ்பாக்கள் உருவாயின.

சாக்லட் தயாரிப்பு மையங்கள்

ஆங்காங்கே சாக்லட் எப்படி தயாரிப்பது என்பதற்கு பயிற்சி மையங்கள் உள்ளன. (தினசரி சாக்லட் வொர்க்‌ஷாப் உண்டு) குழந்தைகள் தங்கள் மனதிற்குப் பிடித்த வடிவத்தில் சாக்லட்களைத் தயாரிப்பது பார்க்க வேண்டிய காட்சியாகும்.

ஒவ்வொரு சாக்லட்டிற்கும் தனி வடிவமைப்பு, தோற்றம், ருசி, வாசனை உண்டு.

கோகோ பட்டர் மூலம் தயாரிக்கப்படும் சாக்லட்டுகளில் பல வகைகள் உண்டு. இப்போது காலத்திற்கேற்ப ஷுகர் – ஃப்ரீ  (ஷுகர் இல்லாத) சாக்லட்டுகளும் சந்தைக்கு வந்து விட்டன.

ப்ரஸ்ஸில்ஸில் உள்ள சாக்லட் மியூஸியமும் பார்க்க வேண்டிய ஒன்று. இந்த சாக்லட் கம்பெனிகளை நிறுவியவர்களைப்  பற்றிய உத்வேகமூட்டும் உண்மைச் சம்பவங்களும் வரலாறுகளும் மிக்க சுவையானவை.  உலகின் தலை சிறந்த சாக்லட்டுகளைத் தயாரிக்கும் பெல்ஜியம் 400 வருடமாக சாக்லட் தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஆறு லட்சம் டன் சாக்லட்டை இது உற்பத்தி செய்கிறது. 2000 கம்பெனிகள் மற்றும் கடைகள் சாக்லட் விற்பனைக்கென்றே இங்கு உள்ளன. ப்ரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் மட்டும் வருடத்திற்கு 800 டன் சாக்லட் விற்பனையாகிறது.

பார்க்க வேண்டிய இடங்கள் பெல்ஜியத்தில் ஏராளம் உண்டு.

அட்டோமியம்

எக்ஸ்போ 58 என்ற 1958 ஆண்டு நடத்தப்பட்ட உலக விழாவிற்காக ப்ரஸ்ஸல்ஸ் நகரில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னக் கட்டிடம் இது. 335 அடிகள் உயரம் கொண்ட இது. இரும்பு படிகத்தின் அணு அமைப்பை நினைவு படுத்தும் இது அந்த படிக் மூல அமைப்பின் அளவைப் போல  165 பில்லியன் மடங்கு பெரிதானது. (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி). இங்கு ஒன்பது கோளங்கள் உள்ளன. ஒரு கோளத்திலிருந்து இன்னொரு கோளத்திற்குச் செல்ல வழி உண்டு. இங்குள்ள பல்வேறு காட்சிக் கூடங்கள் நம்மை பிரமிக்க வைக்கும். உச்சிக்குச் சென்று ப்ரஸ்ஸல்ஸ் நகரத்தைப் பார்த்தால் பிரமித்து விடுவோம். அட்டோமியம் என்ற பெயர் ஆடம் (அணு- Atom)  மற்றும் (Aluminium) அலுமினியம் ஆகிய இரண்டு சொற்களின் சேர்க்கையாகும்.

ப்ரஸ்ஸல்ஸ் மினி- யூரோப்

அவசியம் பார்க்க வேண்டிய இந்தப் பூங்கா ஐரோப்பாவின் சிறிய அளவிலான அமைப்பாகும். நுழைவுக் கட்டணம் உண்டு. பிக் பென் உள்ளிட்ட ஒவ்வொரு ஊரின் சிறப்பு அம்சங்களைப் பார்க்க முடியாதவர்கள் இங்கு வரலாம். ஐரோப்பாவின் 80 நகரங்களையும் 350 சிறப்புக் கட்டிடங்களையும் இங்கு சிறிய வடிவில் ஒரே இடத்தில் கண்டு மகிழலாம். வருடா வருடம் சுமார் மூன்றரை லட்சம் பேர் இங்கு வருகை தருகின்றனர்.

ஆடோ வோர்ல்ட் மியூஸியம்

உலகில் மோட்டார் தொழில் எப்படி தொடங்கியது என்பதிலிருந்து இன்றைய நவீன் வாகனங்கள் வரை அனைத்தையும் காட்சிப்படுத்துகிறது இந்தக் கண்காட்சியகம். சுமார் 250 வாகனங்களை இங்கு கண்டு மகிழலாம். வாகன சம்பந்தமான சிறப்பு நிகழ்ச்சிகளும் அவ்வப்பொழுது இங்கு நடைபெறுவதால் நாம் செல்லும் நேரத்தில் உள்ள நிகழ்ச்சியையும் கண்டு மகிழலாம்.

ஹாப் ஆன் ஹாப் பஸ் டூர்

ப்ரஸ்ஸல்ஸில் அனைத்து இடங்களையும் வரிசையாகப் பார்க்க வழி வகை செய்வது இந்த பஸ் பயணம். வரிசையாக ஒவ்வொரு இடமாகச் சென்று அதைப் பற்றிய விவரங்களையும் ஏற்கனவே ரிகார்ட் செய்யப்பட்ட பதிவு வழியே தரும் பயணம் இது. பொடானிகல் கார்டன், பெல்ஜியம் காமிக் ஸ்ட்ரிப் செண்டர் என ஏராளமான இடங்களைப் பற்றிய அறிமுகம் நமக்குக் கிடைக்கும்.

கெண்ட் போட் சவாரி

 ப்ரஸ்ஸல்ஸிற்கு மேற்கே 55 கிலோமீட்டரில் அமைந்துள்ள கெண்ட் நகரில் அனைத்து இடங்களையும் படகில் 50 நிமிடங்கள் பயணம் மேற்கொண்டு பார்க்கலாம். இங்குள்ள செயின்ட் பாவோ கதீட்ரல் பழமையானது. பழம் பெரும் கோட்டைகள் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்கள் உள்ள இடம் இது என்பதால் அனைவரும் வருகை புரியும் இடங்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது. பெல்ஜியமே கோட்டைகள் அதிகம் உள்ள நாடு தான்!

அண்ட்வெர்ப் வைரங்கள்

இன்னும் அதிக பட்ஜெட்டையும் விடுமுறை நாட்களையும் கொண்டோர் அண்ட்வெர்ப், மெச்லீன்,  டீ ஹான் பீச் என சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்று மகிழலாம். அண்ட்வெர்ப் வைர வியாபாரிகள் விரும்பும் நகர். இதுவே உலகின் வைரங்களின் தலை நகர் என்று அழைக்கப்படுகிறது. அவ்வளவு ஜொலிக்கும் தரம் வாய்ந்த வைரங்களைக் கொண்டுள்ளது அண்ட்வெர்ப்.

தமிழ் இலக்கியத்தில் பெல்ஜியம்!

பெல்ஜியத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஒரு முக்கிய தொடர்பு உண்டு. ஆம், மஹாகவி பாரதியார் அறத்திற்காகப் போராடி இந்த நாடு தோல்வியுற்ற போது அதைப் பாராட்டிப் பாடியுள்ளார்.

1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி அன்று திடீரென்று ஜெர்மானியப் படை இந்த நாட்டின் வழியே தன் படை செல்ல அனுமதி வேண்டும் என்று கோரியது. என்றுமே சமாதானத்தை விரும்பிய பெல்ஜியம் 3ஆம் தேதி தனது உறுதியான மறுப்பைத் தெரிவித்து விட்டது. உடனே 4ஆம் தேதியன்று இந்த நாட்டின் மீது ஜெர்மனி படை எடுத்தது. அன்று தான் முதலாம் உலகப் போர் துவங்கியது.

‘அறத்தினால் வீழ்ந்து விட்டாய்’ என்று மனம் நெகிழ்ந்து பாடி பெல்ஜியத்தைப் பாராட்டிய பாரதியார் ‘திறத்தினால் எளியையாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்’ என்று மனமாரப் பாராட்டிப் பாடினார். தர்ம வழியில் நின்று அந்தப் போரில் அடிபட்டு தற்காலிகத் தோல்வியைத் தழுவினாலும் பின்னர் செழிப்புற உயர்ந்து எழுந்து நின்றது பெல்ஜியம்.

இன்று உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக அது திகழ்கிறது.

பெல்ஜியக் கொடுமை

பெல்ஜியம் நாட்டில் உள்ள ஒரே ஒரு கொடுமை என்னவெனில் அங்கு சாக்லட் கடையில் நுழைந்து விதவிதமாக இருக்கும் வகைகளில் எதைத் தேர்ந்தெடுத்து வாங்குவது என்று தெரியாமல் குழம்பித் தவிப்பது தான் என்று வேடிக்கையாகப் பயணிகள் சொல்வது வழக்கம்.

இங்கு நுழைந்தவுடன் கலோரி எண்ணிக்கையில் சாக்லட்டினால் உடலில் ஏறும் கலோரியைச் சேர்ப்பதை மறந்து விடுங்கள் என்பது சாக்லட் பிரியர்களின் வேண்டுகோள்.

ஒரே வரியில் பெல்ஜியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் இனிப்பைத் தந்து ஜொலிக்கும் நாடு என்று கூறலாம்.

***

Tags-  அண்ட்வெர்ப் வைரங்கள், பெல்ஜியம்

OLDEST MESSENGER POEM IN THE WORLD (Post No.10,936)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,936

Date uploaded in London – –    4 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Messenger poem is a genre unique to Sanskrit and Tamil. Kalidasa the most famous Indian poet, made it popular through his poem ‘Meghaduta’ (Cloud Messenger) . Kalidasa triggered a literary revolution by writing a whole poem where a cloud is the messenger carrying the message of a Yaksha to his lady love. His poem inspired Indian writers to write 85 books in Tamil and over sixty books in Sanskrit . Tamils took some time to write a whole book in this genre but we have apostrophes in Tamil Sangam corpus.

Sangam age Tamil poets used this technic 2000 years ago. Mostly the women used to address parrots, cuckoos, bees, insects, swans, goose, heron or inanimate objects like cloud, rain, flowers etc.

Kalidasa probably copied his predecessors, particularly Valmiki , author of Ramayana. Hanuman, who is projected as a monkey went to Sri Lanka with a message from Rama to Sita. He took Rama’s ring as a proof. This technique of using some jewellery as a memento or symbol is found in the dramas of Kalidasa. This shows his indebtedness to Valmiki.

In the Mahabharata, under Nalopaakhyaana (story of Nala and Damayanthi), we see Nala sending goose as a messenger to the beauty queen Damayanthi. She returned a reply to his message through that bird. This is a very popular story and Tamil has its own version. But scholars are debating which one of the two epics was put to writing first. So we may say that one of them inspired many writers.

Many of the writers on this topic of ‘Messenger poems’  (Duta Kavyas) miss another messenger found in the Rig Veda, the oldest book in the world. Dog Sarama was sent as a messenger in the Rig Veda. Greeks borrowed this story and changed the name to Hermes, because letter ‘S’ is not in Persian and Greek. That is why we got Hindu from River Sindhu/Indus and dog Hermes from Sarama or Sarameya.

I have already written about the story of Sarama (please see the links below)

Many authors have already listed the important Duta Kavyas in Tamil and Sanskrit. Later Bengali, Malayali, Kannada and Telugu writers also used this genre.

Here are some interesting details about Messenger poems:

Candraduta (moon) was composed by Jambukavi in 8th or 9th century.

Pavanaduta (wind) was done by Dhoyi of Kerala

Kokila sandesam (Cuckoo) was written by Uddandakavi in 15th century.

Another poem with the same name Megadhuta was written by  Meru tunga in 15th century.

Kachiappa Munivar did Kachi Ananda ruttiresar in 18th century.

Azakar Killai (parrot)vitu Tutu was written by Palapattai Chokkanatha Kavirayar.

Devotees and philosophers used this type of poetry to spread spiritual message as well. Umapati Sivacharya’s Nenju Vitu Tutu, Hamsa Sandesa by an anonymous author, several poems by Saivite saints Manikka Vasagar, Sundarar and Andal also spread spiritual matter through Duta poems. Even freedom fighters used it in Gandhi Vitu Tutu. But the strangest thing about it, is two pomes titled Pana Vitu Tutu and Pukaiyilai vitu tutu, money and tobacco respectively. Film songs also use this genre where we see the actresses are seeking the help of birds to get some positive message from the lovers.

Sarama | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › sarama

25 Jun 2015 — Sarama, Indra’s messenger, tracks the cows and asks for them in Indra’s name, but is mocked by the Panis”. Clearly there is a basic difference …


Vedic Sarama and Greek Hermes!! | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2015/06/24 › vedic-sarama…

24 Jun 2015 — Who is Sarama? In the Rig Veda (10-108) the dog of Indra is called Sarama. It has got two children and they are called Sarameyas.


TAMIL DOG IS THE FIRST DOG IN THE WORLD TO GET A …

http://swamiindology.blogspot.com › 2020/05 › tamil-d…

14 May 2020 — Rig Veda dog SARAMA and Mahabharata Dog that walked with the Pandavas to death may be more famous; but we don’t have statues for them.

–subham—

 tags – messenger poems, Duta kavyas, Sarama, Dog messenger, Kalidasa, Nala, Tamil, 

நாய் விடு தூது – உலகின் முதல் தூதுக் கவிதை (Post No.10,935)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,935

Date uploaded in London – –    4 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நாய் விடு தூது – உலகின் முதல் தூதுக் கவிதை

தமிழ் மொழியில் நிறைய தூதுக் கவிதைகள் (Messenger Poems)  உள்ளன.சங்க காலத்தில் பெண்கள் கிளி, குயில், அன்னம், நாரை, வண்டு , மேகம் முதலியவற்றுடன் (Apostrophe) பேசுவார்கள் ; அவைகள் மூலமாக காதல் செய்தி அனுப்புவார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உத்தியை சம்ஸ்க்ருதம், தமிழ் மொழிகளில் மட்டுமே காணலாம்.

தமிழர்களுக்கும் முன்னதாக இந்தத்துறையில் காளிதாசன் எழுதிய நூல் மேக தூதம் என்ற பெயரில் உலகப் புகழ் பெற்றது; இலக்கிய உலகத்தில் அந்த நூல் பெரும் புரட்சியை உருவாக்கியது. அவரைத் தொடர்ந்து பலரும் இப்படி முழு நீள தூதுக் கவிதை நூல்களை எழுதத் துவங்கினர். தமிழில் இப்படி தனி ஒரு நூல் வருவதற்கு நீண்ட காலம் பிடித்தது. ஆனால் சிறிய கவிதைகள் சங்க காலத்தில் தோன்றின. காளிதாசன் உலகப் புகழ் பெற்ற இந்து மன்னன் விக்ரமாதித்தன் வாழ்ந்த காலத்தில் அவனுடைய ஆஸ்தான புலவராக இருந்தார். அதாவது 2100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அவரது நூல்களின் தாக்கத்தை கபிலர் எழுதிய குறிஞ்சிப் பாட்டில் காணலாம்.

காளிதாசரின் ‘ஒரிஜினல் ஐடியா’ Original Idea வா  இந்த தூதுக் கவிதை; இல்லை. காளிதாசரின் நூல்களுக்கு பழங்காலத்தில்  75 பேருக்கும் மேலானோர் உரை எழுதினார்கள். அவர்களில் மிகவும் பிரசித்தமானவர் மல்லிநாதர். வால்மீகி முனிவரின் ராமாயணம்தான் காளி தாசருக்கு ஊற்றுணர்ச்சி தந்தது என்கிறார். ராமாயணத்தில் நாம் குரங்கு/ அனுமன் விடு தூதுக் கவிதையைக் காண்கிறோம். ராமன் அனுப்பிய செய்தியுடன் சீதையைச் சந்தித்து மோதிரத்தையம் கொடுத்து, மீண்டும் ‘குட் நியூஸ்’ Good News  கொண்டுவந்து ராமனிடம் சபாஷ் வாங்குகிறார் அனுமன். இந்த அனுமன் தூது – குரங்கு விடு தூதுதான் காளிதாஸருக்கு ஐடியா Idea கொடுத்தது என்பதற்கு மற்றும் ஒரு சான்று வால்மீகி ராமாயண கணையாழி போல காளிதாசரின் ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு மோதிரம் அல்லது நகை முக்கிய இடம் பெறும் . ஆக அவர் வால்மீகி தாசர் என்பது வெள்ளிடை மலை.

அப்படியானால் ராமாயணத்தில் வரும் அனுமன் தூது விடு தூதுதான் உலகின் முதல் தூதுக் கவிதையா? இல்லை .

ரிக் வேதத்தில் வரும் ‘நாய் விடு தூது’தான் உலகின் முதல் தூதுக் கவிதை. தூது என்பது ஸம்ஸ்க்ருதச் சொல். இதுபற்றி திருவள்ளுவரும் ஒரு அதிகாரம் எழுதியுள்ளார். உலகில் தூது, தூதர், அவர்களுக்கான நெறிமுறை முதலியவற்றை வகுத்தவர்கள் இந்துக்கள்தான் என்பது ரிக்வேதம் முதல் தாரா, தாரா வந்தாரா, சங்கதி ஏதும் சொன்னாரா என்ற தமிழ் சினிமாப்பாட்டு வரை உள்ள பாடல்கள் உறுதி செய்கின்றன.

முதலில் எழுத்து வடிவில் வந்தது மஹாபாரதமா அல்லது ராமாயணமா என்பதில் இருவேறு  கருத்துக்கள் உள்ளன. எதுவாயினும் மஹாபாரதத்தில் உள்ள அன்னம் விடு தூது மிகவும் அறியப்பட்ட தூது ஆகும். நளன் , அந்தப் பறவை மூலம் தமயந்திக்குத் தூது விடுவதும் உடனே தமயந்தி பதில் அனுப்புவதும் மஹாபாரத நளோபாக்கியானத்தில் வருகிறது

xxx

ரிக்வேதம் உலகின் பழமையான நூல்; உலகின் முதல் கவிதைத் தொகுப்பு நூல். அதில் சரமா என்ற நாய் தூது போகும் செய்தி வருகிறது. கிரேக்க நாட்டில் அது ஹர்மஸ்  (Hermes) என்ற பெயரில் வருகிறது; கிரேக்க , பாரசீக மொழிகளில் ‘ச’ என்னும் எழுத்து இல்லாததால் ‘சிந்து’ என்பதை ‘ஹிந்து’ என்றனர்; ‘சரமா’ என்பதை ‘ஹரமா , ஹெர்மஸ்’ என்றனர்.

சரமா தூது, அதற்கு லஞ்சம் கொடுக்க நடந்த முயற்சிகள் பற்றி முன்னரே எழுதியுள்ளேன் (இணைப்புகளைக் காண்க)

xxx

தமிழிலும் ஸம்ஸ்க்ருத்திலும் தூது இலக்கியம் எந்த அளவுக்கு வளர்ந்தன என்பதை எனக்கும் முன்னரே பலர் பட்டியலிட்டுள்ளனர். அவற்றின் சுருக்கத்தை மட்டும் காண்போம்:-

சங்க காலத்தில் பெண்கள், தன்  காதலன் வருகைக்காக காத்திருக்கும் போது , உயிருள்ள பிராணிகள் பறவைகளுடன் பேசுவார்கள்; உயிரற்ற ஜடப்பொருள்களுடனும் பேசுவார்கள். நாய், குரங்கு முதலியவற்றைத் தொடர்ந்து காளிதாசன் மே கத்துடன் பேசியதைக் கண்டோம் ; தமிழர்களும் இந்த உத்தியைக் கடைப்பிடித்தனர்.

மேக தூதம் போலவே எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் ஜம்பு கவி  என்பவர்  ‘சந்திர தூத’ இயற்றினார். 12-ம் நூற்றாண்டில் தோயி (Dhoyi) என்ற கவிஞர் பவன தூத (காற்று விடு தூது ) இயற்றினார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் , வங்காளி , கன்னடம் முதலிய மொழிகளிலும் தூத காவியங்கள் மலர காளிதாசன் வழிவகுத்தார். தூத அல்லது சந்தேச என்ற சொல் காவியங்களில் பயன்படுகிறது . 15-ம் நூற்றாண்டில் உத்தண்ட கவி என்பவர் கோகிலா ஸந்தேசம் (குயில் விடு தூது) இயற்றினார் . இது காஞ்சி நகரிலிருந்து கேரளத்தில் உள்ளவருக்கு விடப்பட்ட காதல் செய்தி.

xxx

காளிதாசனில் உள்ள விஞ்ஞான  அணுகுமுறையை மற்ற தூத காவியங்களில் காண முடியாது.

காளிதாசன் உலகின் முதல்Tourist Guide டூரிஸ்ட் கைடு ; போகும் வழியில் உள்ள நகரங்களையும் காடு மலைகளையும் வருணித்து படிப்போருக்கு பூகோள, வரலாற்றுச் செய்திகளை  அளிக்கிறான் .

மேலும் அவன்தான் முதல் பயணக்கட்டுரை (Travelogue Writer) எழுதியவன் என்றும் சொல்லலாம். மஹாபாரதம், ராமாயணத்தில் இது போன்ற வருணனைகள் இருந்தாலும் புராணக்கதைகளும் நம்ப முடியாத விஷயங்களும் இருக்கும்.

காளிதாசன் வானிலை இயல் மன்னன் (Meteorologist) . முதல் முதலில் (Mapped South West Monsoon) தென் மேற்குப் பருவக்காற்று விந்திய மலை முதல் இமய மலை வரையே எந்தப் பாதையில் செல்கிறது என்பதையும் காட்டுகிறான். பறவைகள் குடியேற்றம் (Bird Migration) பற்றியும் காளிதாசன் செல்கிறான் . பிற் காலத்தில் புறநானூற்றுப் புலவர் முதல் சத்திமுற்றத்துப் புலவர் வரை “நாராய், நாராய், செங்கால் நாராய்” (Northward Return Journey of Migratory Birds) என்று பாட வழிவகுத்தார் இவ்வகையில் காளிதாசனின் மேக விடு தூது சிறப்புடைத்து. மேகம் மூலம் ஒரு யக்ஷன் தனது காதலிக்கு அனுப்பிய செய்தியைக் கொண்டது ஆகும்.

xxx

சமய விஷயங்களைப் பரப்பவும் தூத காவியம் பயன்பட்டது. நேமிநாதரை துறவறத்தை விட்டு வீட்டுக்குத் திரும்புமாறு அழைக்கும் சமண மத காவியம் மேக தூதம் என்ற பெயரிலேயே அமைந்துள்ளது. மேரு துங்க என்பவர் எழுதியது இது . கச்சியப்ப முனிவர் எழுதிய கச்சி ஆனந்தருத்திரேசர் , பலபட்டடை சொக்கநாத கவிராயர் எழுதிய அழகர் கிள்ளைவிடு தூது முதலியன தற்காலத்தியவை; அதாவது சில நூற்றாண்டு பழமை உடைத்து

சொக்க நாத கவிராயரின் பண (Money)  விடு தூது, புலவர் பெயர் தெரியாத ஹம்ச சந்தேசம், உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய நெஞ்சுவிடுதூது முதலியன தத்துவ விஷயங்களைப் பேசின. அரசியலிலும் தூது புகுந்து ‘காந்தி விடு தூது’ நூலைத் தோற்றுவித்தது .

சினிமாப் பாடல்களிலும் பறவைகளிடம் காதலியர் பேசி தூது விடும் காட்சியைக் காண்கிறோம். தமிழ் மொழியில் எண்பதுக்கும் மேலான பிற்கால நூல்களும் சம்ஸ்க்ருதத்தில் 60-க்கும் மேலான முற்கால நூல்களும் உள

ரிக் வேத காலத்தில் நாய் விடு தூதாகத் துவங்கிய கவிதை தமிழில் புகையிலை (Tobacco)  விடு தூதுவரை பரவியது . இந்தப் புரட்சிக்கு வித்திட்ட காளிதாசனை எவரும் மறக்க முடியாது .

சரமா | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › சர…

பாணீக்கள் என்போர் லஞ்சம் கொடுக்க முன்வந்தபோது இந்திரனின் தூதராகச் சென்ற நாய் சரமா …


சரமேயஸ் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › சர…

25 Jun 2015 — 6.பாணிக்கள், இந்திரனின் பசுக்களைத் திருடிச் சென்று குகைகளில் வைத்தனர். சரமா …

–subham-#

TAGS-  தூத காவியங்கள், மேகதூதம், காளிதாசன், சரமா , ரிக்வேதம், நாய், சங்க இலக்கியம் , தூது, Messenger Poems

PAST is experience, PRESENT is experiment, FUTURE is expectation! (Post No.10,934)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,934

Date uploaded in London – –   4 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

To be old and wise, you first be young and stupid

Wokers play football,

Managers play tennis,

Bosses play snooker

and

C E O ‘S play golf.

Moral of the story:

As you go up in the ladder

Your balls become smaller!!!’

XXX

Power and money are fruit of life.

But family and friends are roots of life.

We can manage without fruits, but

can never stand without roots.

XXX

75%of indian women’s name ends with ‘A’

15% of indian women’s name ends with ‘I’

If you don’t believe it pl chek with your mother sister

Wife’s and daughters names !!!

XXX

PAST

is experience

PRESENT

Is experiment

FUTURE

Is expectation

Use your experience in your experiments

to achieve your expectations !!!

XXX

A married man’s honest confession

“I always read my wife’s horoscope

First to see what kind of day I am going to have”

XXX

A WOMAS APOLOGY

 I am sorry, but it was your fault!!!

Arguing with woman is getting arrested.

Everything you say and will be used against you !!!

XXX

Son

Dad i want to get married.

Father

Apologize first……….

What is the difference between a priest,

a lawyer and a politician ???

A priest would not tell a lie.

A lawyer could not tell the truth,

And

A politician doesn’t know the difference!!!

R.K laxman

Teacher

Can you tell me two great “kings”who have brought happiness

And peace into people s lives????

Student

Smo “KING” and drin “KING”

Words are free to use, but may prove to be very costly

If misused……no one can touch words…….

But words can touch any ones heart!!!

XXX

LIFE IS A QUESTION WHICH NOBODY CAN ANSWER

&

DEATH IS AN ANSWER AND NOBODY CAN QUESTION IT

SO

ENJOY THE QUESTION TILL YOU GET THE ANSWER !!!

***

 tags- Past, Present, Future

JOKES நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ? (Post No.10,933)

Compiled BY KATTU KUTTY , CHENNAI

Post No. 10,933

Date uploaded in London – – 4 MAY 2022

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 57

Kattukutty

உலகத்துலேயே நல்லவன் திருடன் தான்..

எப்படின்னு கேக்கறிங்களா…?

ஒரு டாக்டரோட எதிர்பார்ப்பு எல்லாரும் நோயாளியா இருக்கனும்ன்னு…

ஒரு வக்கீலோட எதிர்பார்ப்பு எல்லாருக்கும் நிறைய பிரச்சனை இருக்கனும்ன்னு…

ஒரு போலீசோட எதிர்பார்ப்பு எல்லாரும் கிரிமினலா இருக்கணும்ன்னு…

ஒரு மெக்கானிக்கோட எதிர்பார்ப்பு எல்லாரோட காரும் ப்ரேக் டவுன் ஆகணும்ன்னு…

ஒரு டென்டிஸ்ட்டோட எதிர்பார்ப்பு எல்லார் பல்லும் சொத்தையாகணும்ன்னு…

ஒரு வெட்டியானோட எதிர்பார்ப்பு எல்லாரும் எப்ப சாவான்னு…

ஆனா திருடன் மட்டும் தான்

எல்லாரும் நல்லா வசதியா வாழணும்..

அம்புட்டு பயலும் நைட்டு நிம்மதியா தூங்கணும்ன்னு எதிர்பார்ப்பான்…

இப்படி அடுத்தவங்க நல்லாருக்கணும்ன்னு நினைக்கற ஒரு

ஒப்பற்ற ஜீவன பொசுக்கு பொசுக்குன்னு புடிச்சு உள்ளார போட்டறோமே

இது நியாயமா?

ஜோக்.. ஜோக்..

xxx

1) “நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?

“நாய்கிட்டதான் கேக்கணும் “

“அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!”

xxx

2) “நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி,

என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு.

“அப்புறம்”

அப்புறம் என்ன……..

காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!

xxxx

3) “சார், என்ன இது ?”

“கொஸ்டீன் பேப்பர்”

“சார், இது என்ன?”

“ஆன்சர் பேப்பர்”

“என்ன ஒரு அக்கிரமம் சார்,

கொஸ்டீசன் பேப்பர்லே கொஸ்டீன் இருக்கு,

ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!

xxx

4) “எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?”

“நான்தான் சொன்னேனே, அவளுக்கு ‘வீசிங்’ ப்ராப்ளம் இருக்குன்னு.!!”

xxx

5)””என்னப்பா…எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?”

“கொஸ்டீன் பேப்பர் “லீக்” ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!”

xxx

6) “வாங்க … வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது …. வாங்கிப் பாருங்க”

“அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே …. எப்படி கிழிப்பே ?”

xxx

7) “நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு?”

“ஏன் கேக்கறே”

“திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்’னு

கேக்கறாங்க !!”

xxx

சிரிcha போChe…..

No : 1

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,

Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சி கிட்டே இருக்கான்..!!!

xxxx

No: 2

உன் பேரு என்ன..?

” சௌமியா “

உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,

பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

xxx

No : 3 ( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா ” கோவா “

xxx

No : 4

( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க…!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா…

xxx

No : 5

நடிகர் simbu : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு

மக்களுக்கு பொது சேவை பண்ணலாம்னு இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே அது மக்களுக்கு பண்ற பொதுசேவை

தானே

xxx

No : 6

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க

மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை… உங்களுக்கு..

xxx

No : 7 ( கல்யாண மண்டபம்.. )

“வாங்க., வாங்க..!!

நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?

பொண்ணு வீட்டுக்காரரா..? “

” ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!!”

xxx

No: 8

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி

Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?

அவர் : தெரியுது…

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!


மனம் வெளுக்க வழி! (Post No.10,932)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,932

Date uploaded in London – –     4 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மனம் வெளுக்க வழி!

ச.நாகராஜன்

மனம் வெளுக்க வழி இல்லையே, எங்கள் முத்துமாரியம்மா என்று பாடினார் மஹாகவி பாரதியார்.

இதே கருத்தைத் தாயுமானவரும் முன்னமேயே வலியுறுத்தி இருக்கிறார்.

மனத்தை நிலை நிறுத்தி நல்லனவற்றில் ஈடுபடச் செய்ய ஒரு வழி உண்டா?

உண்டு என்று சொல்கிறது இராமாயண இதிஹாஸம்.

துளஸிதாஸரின் ராமசரித மானஸத்தை விரிவாக விளக்கி உபந்யாசம் செய்த பெரியோருள் முராரி பாபு என்பவரும் ஒருவர்.

அவர் கல்கத்தாவில் 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி நிகழ்த்திய உரையில் இதைப் பற்றி அழகுற விளக்குகிறார்.

ராமர் யமுனை நதிக் கரையை அடைந்தவுடன் அவரைப் பார்க்க ஏராளமானோர் வந்தனர். அவர்களுள் தாபஸுக்களும் இருந்தனர்.

அதாவது தபஸ்விகள்.

தாபஸு என்றால் என்ன?

தா என்றால் தாளம், லயம், சந்தம் இவை ஒருங்கிணைந்தவர் என்று பொருள். அதாவது வாழ்க்கை முழுவதும் நேர்த்தியாக அமைந்த லய சுத்தமான கட்டுப்பாடு இருப்பதாகும்.

ப என்றால் பவித்ரதா அதாவது தூய்மையும் தெய்வீகமும் இணைந்த தன்மை

சு என்றால் சுந்தரதா. அதாவது தெய்வீக அழகு.

ஒரு குழந்தையின் முகத்தைப் பார்த்தாலேயே நாம் உத்வேகம் பெறுகிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். ஆக இந்த கள்ளம் கபடமில்லாத குழந்தையின் அழகு எப்படி வந்தது என்று வியந்து அந்தக் குழந்தையின் தாய், தந்தையைப் பார்க்கிறோம்.

சுந்தரம் அதாவது அழகின் தாய், தந்தை யார்?

சத்யம் சிவம் ஆகியவையே தாய் தந்தை. சத்யம் சுந்தரதின் தாய். சிவம் தந்தை.

ஆகவே தபஸ் என்பது தூய்மை, கள்ளங்கபடமற்ற தன்மை, அழகு, சத்யம், ஒளி பொருந்திய உள்ளார்ந்த வலிமை ஆகிய அனைத்தும் கொண்டதே ஆகும். தாபஸுக்கள் இவை அனைத்தும் கொண்டவர்கள்.

பொறாமை, பேராசை, கீழானவற்றில் ஈர்ப்பு உள்ளிட்ட பல அழுக்குகள் மனதைச் சுற்றி இருக்கும் போது அதை வெளுப்பது தான் எப்படி?

அதற்குத் தான் ஒரு வழியை துளஸிதாஸர் காட்டுகிறார்.

வினு சத்ஸங்க நஹி ஹரி கதா

  தேஹி வினு மோஹ ந சாரா |

மோஹ கயே வினு ராமபத்

  தோழி ந த்ருட அனுராக ||

சத்ஸங்கம் இல்லாமல் ஒருவரும் பாகவத கதையைக் கேட்க முடியாது. பாகவத கதை சொல்லும் மஹாத்மா இல்லாமல் ஒருவரும் ராமரின் சரணாரவிந்தத்தை அடைய முடியாது.

இதை அழகுற முராரி பாபு விளக்கி நல்ல ஒரு எடுத்துக்காட்டையும் கூறினார்.

மனதை ஒரு விமானத்துடன் அவர் ஒப்பிட்டார்.

ஒரு விமானம் பறக்க மூன்று நிலைகள் உண்டு.

சுத்தோகரண், ஊஞ்சிகரண், ரூபாந்தர்.

சுத்தோகரண் என்பது விமானத்தை நன்கு சுத்தமாக்கி அதன் ஒவ்வொரு பாகத்தையும் சரிபார்த்து சரியான ஒழுங்கில் வைத்திருப்பதாகும்.

அடுத்து ஊஞ்சிகரண் என்பது விமானம் பறக்கும் நிலை.

அதற்கு தூய்மைப்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தேவை.

அடுத்து ரூபாந்தர் என்ற நிலை. முதல் இரண்டும் சரியாக இருப்பின் விமானம் ஆகாயத்தில் தனது இலக்கை நோக்கி வேகமாக ஒரு வித தடையுமின்றிச் செல்கிறது.

இங்கு பக்தனும் தனது மனம், உடல், ஆன்மாவைச் சுத்தப்படுத்தி ஒழுங்கு படுத்தி ஸத்ஸங்கம் தரும் ஸத்கதாவை எரிபொருளாகக் கொண்டு பறக்க ஆரம்பித்தால் அவன் கிருபையினால் நிரப்பப்பட்டு அவனது லக்ஷியத்தை நோக்கி அடையுமாறு செய்யப்படுவான்.

ஸத்ஸங்கம் என்ன செய்யும்?

பர்த்ருஹரி நீதி சதகத்தில் அழகுற இப்படி விளக்குகிறார்:

 ஸத்ஸங்கம் எதைத் தான் செய்யாது?

ஜாட்யம் தியோ ஹரதி ஸிஞ்சதி வாசி ஸத்யம்

மாநோந்நதிம் திஸதி பாபமபாகரோதி |

சேத: ப்ரஸாதயதி திக்ஷூ தநோதி கீர்திம்

ஸத்ஸங்கதி: கதய கிம் ந கரோதி பும்ஸாம் ||

இதன் பொருள்:

பும்ஸாம் – மனிதர்களுக்கு

ஸத்ஸங்கதி: – நல்லோர்களின் சேர்க்கையானது

கிம் ந கரோதி – எதைத் தான் செய்யாது

கதய – சொல்

திய: – புத்தியின்

ஜாட்யம் – மந்தத்தை

ஹரதி – போக்குகிறது

வாசி – வாக்கில்

ஸத்யம் – ஸத்யத்தை

ஸிஞ்சதி – ஊற்றுகிறது

மானோந்நதிம் – உயர்ந்த கௌரவத்தை

திசதி – கொடுக்கிறது

பாபம் – பாபத்தை

அபாகரோதி – போக்கடிக்கிறது

சேத: – மனதை

ப்ரஸாதயதி – தெளிவாக்குகிறது

திக்ஷூ – நான்கு திக்கிலும்

கீர்த்திம் – கீர்த்தியை

தநோதி – பரவச் செய்கிறது.

நல்லோரின் சேர்க்கை புத்தியினுடைய மூடத்தனத்தை நீக்கி விடுகிறது. பேச்சில் சத்தியத்தைத் தருகிறது. சம்மானத்தில் உண்டாகும் அதிக பெருமையை (அதிக கௌரவத்தை) கொடுக்கிறது. பாபத்தைப் போக்கடிக்கிறது. மனதைத் தெளிவாக்குகிறது. நான்கு திசைகளிலும் புகழைப் பரவச் செய்கிறது. மனிதர்களுக்கு ஸத் ஸங்கம் எந்த நன்மையைத் தான் செய்யவில்லை (ஓ, தோழனே நீ சொல்!)

ஸத்ஸங்கம் அடைந்தவுடன் மனம் சொல்கிறது :

நஷ்ட மோஹ: கத சந்தேஹ:

மோகம் ஒழிந்தது; சந்தேகம் அகன்றது.

ஆதி சங்கரர மோக்ஷம் என்பதற்கான விளக்கத்தை அழகுறச் சொல்கிறார்:

மோ என்றா மோஹம் க்ஷ என்றால் க்ஷயம் அதாவது நாசமடைவது.

மோஹம் அகல்வதே மோக்ஷம் ஆகும்.

இதைத் தருவது ஸத்ஸங்கமே!

துளஸிதாசர் வழியே இதை அறியும் போது ஆனந்தம் ஏற்படுகிறதல்லவா?

***

tags-  துளஸிதாசர், மனம் , வழி!