TAMIL GRAMMARIAN TOLKAPPIANAR IS TRNADHUMAGNI (Post No.11180)

Picture– Trnabindhu in Indonesia found with Agastya statue

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,180

Date uploaded in London – 9  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Sir,

Please accept my namaskarams. Many thanks for your detailed reply. I bought your book on Tamil words in Rg Veda. It is really wonderful and contains lot of valuable information. Many thanks for your great service to Tamil and hinduism, 

Regarding the books written by Sri Lakshminarayanan, both the numbers you gave seem to be old numbers. So could not use them. I will try in the book shops you said. 

I have a question in the book you wrote. You have mentioned how Vedic truths are mentioned in Tamil texts. We have Sanskrit words used in Tamil ancient literature, In the same way, are Tamil words used in Sanskrit literature?  Any references for this will be the same. 

And regarding Tholkappiar, I got the below verses from Bhogar 7000 shared by Dr Jayashree Saranathan explaining that Tholkappiar(Thrunadhoomagni) is son of Jamadagni (or from Jamadgni’s lineage). 

Verse 5948.
கூறினார் இன்னமொரு குறிப்பைக்கேளு கூரான புலிப்பாணி மைந்தாபாரு
மீறியதோர் திரணாக்கிய முனிவரப்பா மிக்கான பிறந்ததொரு வண்மைசொல்வேன்
ஆறுபுடை திங்களாம் புரட்டாசியப்பா வப்பனே திருவாரிரை ரெண்டாம்பாதம்
வீறுபுகழ் சாத்திரத்தை மனதிலுன்னி விருப்பமுடன் பாடிவைத்தார் நூலிதாமே

Verse 5949.
நூலான மார்க்கமது யாதென்றாக்கால் நுணுக்கமுடன் ஜெமதக்னி பெற்றபாலன்
கோலான குறத்தியிட சற்புத்திரந்தான் குறிப்பான பிரதிலோமன் என்னலாகும்
பாலான மார்க்கமது யாதென்றாக்கால் பட்சமுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
காலான புலிப்பாணி மைந்தாபாரு கசடற்ற புத்திரனே புகல்வேன்பாரே

L.H,  9th August 2022

xxx

Answer to your Question

Dear L.H.

Dr Jayashree Saranathan is very much reliable. She does not write anything without proof or evidence.. But the quoted Bogar’s 7000 belongs to very late period. . I say this by looking at the language of the verse. All Sidhdhars are placed after 8th or 9th century.. But Tolkappiar alias Trunadumagni is placed in first century BCE or first century CE. I place him around 500 CE on the basis of third Adhikaram that is Porul Adhikaram. Tolkappiar may belong to first century BCE, but Tolkappiam belongs to 5th century CE is my view.

The same problem is with Silappadikaram as well. The story belongs to second century CE, but Silappadikaram belongs to 500 CE. So do Tiruvalluvar. The language and the contents betray their age. Look at the Sanskrit word Adhikaram in all the three books.

But Jayashree is not the only one who says about Trunadumagni alias Tolkappiar. It is even in P T Srinivasa  Iyengar’s History of the Tamils written in 1930s.

Here is what he says on page 211

“Agattiyanar’s grammar, called after him Agattiyam, is not extant now, but the grammar composed by his pupil, Trnadhuumaagni, son of a Jamadagni, more familiarly known as Tolkaappiyanaar, is still extant. It is professedly based on the Agattiyam.

……

These Brahmana authors found that Tamil poetry was so utterly different from Sanskrit poetry in subject matter and literray conventions that they thought it is neccessary to include in their grammar a discussion of these subjects also. The later chapters of Tolkappiam, as Trnadhumagni’s book is called,after the Tamil name of the author, deal with every kind of incident in the course of love and war (Agam and Puram)  about which alone the Tamil poets sang in a peculiar way. From the later part of Tolkappiam, called Porul Adhikaram, can be constructed a full picture of the type of life led by the Tamil people……..

 On Page 224 he gives the story of Trnadhumgni’s clash with Agastya, as given by the most famous Tamil commentator Nachinarkiniar and rejects that story as the worst myth.

So from this , we come to know that Nachinarkiniyar was the one who called Tolkappiar as Trnadhumagni. Commentator Nachi lived 700 years before our time.

I bought Iyengar’s book, Third Edition, reprint by Asian Educational Services, Delhi, Madras, in 1989.

London Swaminathan, London, 9-8-2022

TOLKAPPIAR STATUE IN INDONESIA? (Post No.7884)

https://tamilandvedas.com › 2020/04/26 › tolkappiar-st…

26 Apr 2020 — In his commentary on the prefatory ode to Tolkappiam , called Paayiram that Agattiyanar/ Agastya asked his disciple Trnadhumagni/Tolkappian to …

Tags- TAMIL GRAMMARIAN, TOLKAPPIANAR,  TRNADHUMAGNI, Boghar, Nachinarkiniyar

காலசூரி வம்ச அரசர் மீது சீனிவாசன் எழுதிய கவிதைக் கல்வெட்டு (Post.11179)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,179

Date uploaded in London – 9  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பில்ஹரி கல்வெட்டு (Bilhari Inscription) என்றும் ஜபல்பூர் கல்வெட்டு(Jabalpur) என்றும் அறியப்பட்ட கல்வெட்டு ஆயிரம் ஆண்டுக்கும் மேலான பழமையுடைத்து. கலசூரி (கல சூரி என்பதே சரியான உச்சரிப்பு.).

வம்சத்தினர் மத்தியப் பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆண்டனர். ஜபல்பூர்  நகரிலிருந்து ஆறு மைல் தொலைவில் இருந்த த்ரிபுரி (Tripuri)  நகரிலிருந்து அவர்கள் ஆட்சி செய்தனர். சூரி என்றால் கத்தி என்று பொருள். கல்லி என்றால் மீசை என்று அர்த்தம். இவர்கள் கத்தி போல மீசை வைத்துக் கொண்டதால் இப்படிப்பெயர் வந்ததாக ஒரு சாரார் கருதுவர். இந்த வம்சத்தில் கொடிகட்டிப் பறந்தவன்  கங்கேய தேவன்.(1015-1041 CE). அவருக்கு முன்னதாக ஆண்டவர் இரண்டாம் யுவ ராஜ தேவன் (CE 980-990). இந்த வம்சத்தினர் பற்றி வி.வி. மிராஷி ( V V MIRASHI) என்பவர் ஆராய்ச்சி செய்து நூல்களை எழுதியுள்ளார். இந்த வம்சம் சேதி நாட்டு அரசர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள் .

இரண்டாம் யுவராஜ தேவ காலத்தில் வாழ்ந்தவர்  கவிஞர் ஸ்ரீனிவாச (Srinivasa). அந்த மன்னரைப் புகழ்ந்து 45 ஸம்ஸ்க்ருதக் கவிகளை இயற்றினார். ஹேஹயர் வம்சம் , அத்ரி மகரிஷி முதல் யுவராஜா வரை வந்த மன்னர்களை பாடும் பிரசஸ்தி / புகழுரை இது. அந்த வம்சத்தில் வாழ்ந்த புராண கால மன்னன் கார்த்த வீர்யார்ஜுனன் மிகவும் புகழ் பெற்றவன்.கவிஞன் சீனிவாச, ஸ்திர நந்த என்பவரின் மகன்.

கல்வெட்டிலுள்ள  கவிதையின் இரண்டாம் பகுதியை யாத்தவர் பெயர் திர என்பவர் மகனான ஸஜ்ஜன ஆவார். கல்வெட்டின் கடைசி பகுதியை யாத்தவர் காயஸ்தர் (எழுதியவர்) ஸீரூக ஆவார். 87 செய்யுட்களுக்கு மேலுள்ளது இந்தக் கவிதைக் கல்வெட்டு.

பல சைவ குருமார்களின் பெயர்களையும் இந்தக் கல்வெட்டு பட்டியல் இடுகிறது. சேதி இளவரசன் கவியூரவர்ஷனின் மனைவி/ ராணி ஒரு சிவன் கோவில் காட்டியது பற்றியும் கடம்பகுஹாவில் இருந்து குடி ஏறிய மத்தமயூரா  பிரிவு சைவ அடியார்களுக்கு சில கிராமங்களை தானம் கொடுத்தது பற்றியும் கவிதை பாடுகிறது.

செய்யுள் 85-ல் இந்தக் கவிதையைக் கண்டு வியந்த கவிஞன் ராஜசேகரனின் வாசகம் உளது. அவர் அரசவைக்கு விஜயம் செய்தபோது இந்தக் கவிதையைப் பார்த்தார் என்றும் தெரிகிறது.  கவிதைக் கல்வெட்டில் இந்தியாவின் பல பகுதிகள் குறிப்பிடப்படுகின்றன.சீனிவாச எழுதிய கவிதைப்  பகுதியை விட ஸஜ்ஜன எழுதிய பகுதி கொஞ்சம் தரத்தில் தாழ்ந்துள்ளது.

என் கருத்து

இந்தக் கல்வெட்டு மூலம் நமக்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தோரின் பெயர்களை அறிய முடிகிறது. இப்போது சீனிவாசன் என்ற பெயரை விட  வேறு பெயர்களைக் காண முடியவில்லை.. இந்தக் கல்வெட்டில் காணப்படும் அரசர்கள், சைவ அடியார்களை ஆராய வேண்டும்; அந்தக் காலத்தில் பெண்கள் எந்த அளவுக்கு பக்தி சிரத்தையுடன் சிவன் கோவில்களைக் கட்டினார்கள், சைவ அடியார்களுக்கு எவ்வளவு தானம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் நோக்கற்பாலது. கோவில்கள் இல்லாவிடில் நமக்கு அக்கால வரலாறே தெரியாமல் போயிருக்கும். கலசூரி வம்சத்தினரின் அமர கண்டக்  கோவிலும்  , அவர்களுடைய நர்த்தனம் ஆடும் கணபதி யும் கலைஞர்களால் மிகவும் பாராட்டப்படுகின்றன.

தமிழக கல்வெட்டுகளில் உள்ள அரசர், எழுத்தர் பெயர்களையும், இடப் பெயர்களையும் தொகுத்து வெளியிட வேண்டும்; என் கையிலுள்ள ஆங்கிலப் புஸ்தகத்தில் 800 ஸம்ஸ்க்ருத, பிராகிருதக் கவிஞர்களின் பெயர்கள் அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

SOURCE – SANSKRIT AND PRAKRIT POETS KNOWN FROM INSCRIPTIONS’, D B DISKALKAR, PUNE, 1993 (WITH MY INPUTS)

xxx

Amarakantak temple; from Wikipedia

tags- காலசூரி வம்ச அரசர், சீனிவாசன், கவிதைக் கல்வெட்டு,

செப்பு மொழி இருபத்தியேழு! (Post No.11178)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,178

Date uploaded in London – –    9  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

செப்பு மொழி இருபத்தியேழு!

ச.நாகராஜன்

1.ஒரு குருடன் பணத்தைப் பார்த்தால் அவனுக்கு உடனே பார்வை வந்து விடுகிறது.

ஒரு குருக்கள் பணத்தைப் பார்த்தால் அவர் தனது சாஸ்திரங்களையே விற்று விடுகிறார்.

When a blind man sees money his eyes open

When a priest sees money he sells his scriptures

2. நீரானது ஒரு கப்பலை  மிதக்க வைக்கவும் முடியும்; மூழ்கடிக்கவும் முடியும்

Water can both float and sink a ship.

 3. பல்லக்கில் அமர்ந்திருப்பவனும் மனிதன் தான்; அவனைச் சுமப்பவனும் மனிதன் தான்!

He who sits in the palanquin and those who carry it are all men.

4. மனிதர்கள் பிசாசைப் பார்த்து பாதி பயப்படுகிறார்கள். பிசாசுகளோ மனிதர்களைப் பார்த்து பாதிக்கு மேலும் பயப்படுகிறது.

Men are half afraid of ghosts; ghosts are more than half afraid of men.

5. சாப்பிட போதுமானவை இருந்து உடுக்க துணிகளும் இருக்கும் போது நல்நடத்தைகளும் நீதிநெறிகளும் தோன்றுகின்றன.

Men there is enough to eat and to wear manners and morals appear.

6. அவனைக் கொன்றால் அவனிடம் உயிரே இல்லை; அவனை வெட்டினால் அவனிடம் சதையே இல்லை.

If I kill him he has no skin; if I cut him he has no flesh.

7. அரசனுக்கு முன்னால் ஒரு போதும் தமாஷ் செய்யாதே!

Never joke before a prince.

8. Heaven provides the man, earth the grave for him.

வானம் பொழிகிறது; பூமி அவனைப் புதைக்கிறது!

9. உயிரோடிருக்கும் போது உயிர் தெரிவதில்லை. செத்த போதோ உடல் தெரிவதில்லை!

Alive, we know not the soul, dead, we know not the body.

10. நீ புலியைப் பார்க்காதிருக்கலாம். ஆனால் அது உன்னைப் பார்க்காமல் இருக்காது!

You may miss the tiger; but he won’t miss.

11. தனி ஒரு இலை அசையும் போது எல்லாக் கிளைகளும் ஆடும்.

When a single leaf moves, all the branches shake.

12. அதிர்ஷ்ட காலம் வரும் போது யார் தான் வராமலிருப்பார்கள்?

அது வரவில்லையெனில் எவர் தான் வருவார்?

If a lucky time come, who does not come?

If it does not come, who comes!

13. சூதாட்ட களத்தில் அப்பனும் இல்லை; மகனும் இல்லை!

In the gambling ring, – no father  and  son.

14. ஒரு ராஜ்யத்தை ஆள்வது சுலபம்; ஆனால் ஒரு குடும்பத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கஷ்டம்!

To rule a kingdom is easy; to control a family is difficult.

15. விறகு காட்டில் விற்கப்படாது; மீன் ஏரியில் விற்கப்படாது.

Firewood is not sold in a forest;

Fish is not sold on the lake.

16. ஒரு கையால் தட்டினால் ஓசை வராது.

There is no sound when we clap with only one hand.

17. ஒரு விவசாயி பசியினால் செத்தான்; அவன் தலையணையில் இருந்தன விதைகள்!

A farmer dies from hunger

At his pillow, the seeds.

18. முழு முட்டாள் தன் மனைவியை நினைத்து கர்வப்படுவான்.

அரை முட்டாளோ தன் குழந்தையை நினைத்து!

Quite a fool is proud of his wife;

Half a fool of his child

19. விம்மி அழுது துக்கப்பட்டு முடிந்தவுடன் யார்

செத்தது என்று கேட்டானாம்!

After sobbing and grieving

He asks who is dead.

20. வெடிமருந்தை எடுத்துக் கொண்டு தீயில் குதித்தானாம்!

Carrying gunpowder, he jumps into the fire.

21. ஏற முடியாத ஒரு மரத்தை நீ அண்ணாந்து பார்க்கத் தேவையில்லை.

A tree you cannot climb, you need not bother to look up at.

22. இருட்டில் நடக்க பட்டாடை அணிந்தாளாம்!

Dressing in silk for a walk in the dark.

23. குருடன் நதியைக் குற்றம் சொன்னானாம்!

The blind man blames the river.

24. வாய் சொல்கின்ற அளவு கண்கள் சொல்லும்.

The eyes say as much as the mouth.

25. நிர்வாணமான ஒருவன் ஒருபோதும் எதையும்

இழந்தது கிடையாது.

No naked man ever lost anything.

26. அழுகின்ற குழந்தை மேலும் மாஜிஸ்ட்ரேட் மேலும் நம்மால் ஒரு அதிகாரத்தையும் செலுத்த முடியாது.

We have no power over a crying child or a magistrate.

27. ஆயிரம் பாய்கள் கொண்ட ஒரு அறையில் நீ தூங்கினாலும் உன்னால் ஒரு பாயின் மீது தான் தூங்க முடியும்.

Even if you sleep in a thousand- mat room, you can only sleep

on one mat.

இவை அனைத்தும் ஜப்பானிய, சீன, தென் கொரிய பழமொழிகளாகும்.

அனுபவத்தின் அடிப்படையில் வழக்கில் உள்ள இவை அனைத்தும்

பொதுவாகப் பார்த்தால் அனைத்து நாட்டுக்கும் பொதுவானவையே.

அனைத்து நாடுகளிலும் வெவ்வேறு வார்த்தைகளால் வெவ்வேறு விதமாக இந்தக் கருத்துக்கள் கூறப்படுகின்றன!

**tags- செப்பு மொழி

புத்தக அறிமுகம் – 23

ரிஷிகள் பூமி!

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. ரிஷிகள் பூமி!

2. மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல்

3. மஹரிஷி அத்ரி!

4. மஹரிஷி அங்கிரஸ்!

5. மஹரிஷி அபாந்த்ரதமஸ்! (ஸாரஸ்வத்; அவரே வியாஸர்!)

6. மஹரிஷி ஆபஸ்தம்பர்!

7. மஹரிஷி அரிஷ்டநேமி – சாவுக்குப் பயமில்லை!

8. மஹரிஷி ஆருணி; மஹரிஷி ஆஸுரி!

9. மஹரிஷி ஆபவர்! நஷ்டம் ஏற்படாமலிருக்க கார்த்தவீர்யார்ஜுனன் நாமம்!!

10. மஹரிஷி ஜாபாலி!

11. மஹரிஷி சரபங்கர்!

12. மஹரிஷி அக்னிபர் – ஐந்து கந்தர்வ மங்கைகளைக் கவர்ந்தவர்!

13. மஹரிஷி சூளி!

14. மஹரிஷி உதங்கர்!

15. மஹரிஷி கபிலர்! – கங்கை பூமிக்கு வந்த வரலாறு!

16. மஹரிஷி சண்டகௌசிகர் : ஜராசந்தனின் பிறப்பு வரலாறு!

17. மஹரிஷி கார்க்கியர்

18. மஹரிஷி சமீகர்! – மஹாபாரதம் சம்பந்தமாக சந்தேகங்களைத் தீர்த்த பக்ஷிகள்!

19. மஹரிஷி சாத்வத்: கிருபர், கிருபி தோற்றம் பற்றிய வரலாறு!

20. மஹரிஷிகள் யாஜர், உபயாஜர் – திருஷ்டத்தும்னன், திரௌபதி பிறப்பு!

21. மஹரிஷி காமண்டகர்!

22. சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்!

23. மஹரிஷி அஸிதர்!

24. மஹரிஷி தேவலர் என்னும் அஷ்டாவக்ரர்!

25. மஹரிஷி காத்யாயனர்!

26. மஹரிஷி கக்ஷீவான் : விசித்திர யானை மீது வருபவரையே மணப்பேன் என்ற கன்னியை மணந்தவர்!

27. மஹரிஷி தனுஸாக்ஷர்!

28. மஹரிஷி தமனர்!

29. மஹரிஷி சதானந்தர்!

30. மஹரிஷி க்ரது!

*

இந்த நூலுக்கு நான் அளித்த என்னுரையில் ஒரு பகுதி :

என்னுரை

பாரத பூமி ரிஷிகள் பூமி; ஆன்மீக பூமி.

இமயம் முதல் குமரி வரை ரிஷிகளின் பாதங்கள் பட்ட பூமி.

எடுத்துக்காட்டிற்காக முதல் அத்தியாயத்திலேயே தமிழகத்தில் ரிஷிகளுடன் தொடர்பு கொண்ட தலங்கள் சுட்டிக் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.

இதே போல பாரத தேசமெங்கும் ரிஷிகளுடன் தொடர்பு கொண்ட தலங்கள், நகர்கள் ஏராளம் உள்ளன.

ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்க உரைகளில் 1893 செப்டம்பர் 19ஆம் தேதி ஆற்றிய உரையில் ரிஷிகள் பற்றிக் கூறியது பொருள் பொதிந்த

ஒன்றாகும். அவர் கூறியது:-

“ஆன்மாவிற்கு ஆன்மாவிற்கு உள்ள தொடர்பு, தனிப்பட்டவர்களுக்கும் அவர்களைப் படைத்தவருக்கும் உள்ள தொடர்பு ஆகியவை பற்றிய விதிகளைக் கண்டு பிடித்தவர்கள் ரிஷிகள்; அவர்கள் கூறியவை எந்தக் காலத்திற்கும் பொருந்தும்.

அவர்கள் கூறிய விதிகளும் கொள்கைகளும் சரிதான் என்பதை அறிய நிரூபணம் இந்த விதிகளைச் சரிபார்த்தலே. அவர்கள் உலகிற்கு அளிக்கும் சவால் சரி பாருங்கள் என்பது தான்!”

ஸ்வாமி விவேகானந்தர் இன்னொரு சமயம் கூறியது : “ரிஷிகள் காலத்தால் முற்பட்டவர்கள்; அவர்கள் கூறுவதை உலகம் அறிய நெடுங்காலமாகும்.”

ஆக இப்படிப்பட்ட ரிஷிகளைப் பற்றிய ஒரு அறிமுக நூலே இது.

இந்த ஆரம்பத்தைத் தொடர்ந்து அவர்களை முற்றிலுமாக அறிந்து அவர்கள் கூறிய ரகசியங்களை அறிய ஒரு ஆவலைத் தூண்டுவதே இந்த நூலின் நோக்கமாகும்.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!

14-1-22

ச.நாகராஜன்
பங்களூர்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Halayudha Stotra in Inscriptions (Post No.11,177)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,177

Date uploaded in London – 8  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Halayudha Stotra in Inscriptions

We have seen a lot of books on Indian literature, but there are very few books that give the literary wonders in Indian inscriptions, stone epigraphs and copper plates. Most of them are in praise of the kings who donated lands or money given to Brahmin scholars. But there are some inscriptions which are inscribed with hymns just dedicated to gods.

There is a beautiful Swastika shaped water well in Tiruvellarai, a town near Trichy, in Tamil Nadu. There we find a four line verse in praise of Vishnu. It is behind the Pundarikakshan temple in the town. It is written during the time of Pallava king Danti varma around 800 CE. The temple is older than Dantivarman period, because Periyazvar and other Vaishnavite Saints have sung in praise of the god residing there.

Though it is a 4 line verse, the message it gives is very important; it says life is short and worship god without delay.

(Stotra, Stuti- hymn on gods)

Nowadays it has become a fashion to inscribe the verses of local saints on the walls of the temples. We can see big marble slabs with those holy verses in several Tamil Nadu temples.  Probably all of them copied what one great poet by name Halayudha did in Gujarat. He was from the village Navagrama in Hugly district in Bengal. He composed the well known Halayudha stotra, a hymn on Shiva. He composed this 63 verses long hymn on the god during the rule of Paramar king Vakpati Munja who ruled from 974 to 993 CE.

They are inscribed on four stone slabs fixed on the southern wall of Amareswara temple at Mandhata on the banks of the river Narmada. It is in Madhya Pradesh.

The date of the inscription is 1063 CE. That shows the inscription was made some time after the poet.

Under the hymn is a colophon verse which gives an account of the author. At the end of the stotra is another hymn called Siva dwadasa stotra describing  Jyotir Lingas and some Saivaite teachers.

Halayudha served in the court of two kings-

Rashtrakuta king Krishna III, 934-967

Paramara king Vakpati Munja, 974-993

Besides the well known Siva hymn, the poet is known to be the author of the following literary works:

Kavirahasya, a pedantic work of Sanskrit grammar;

Abhidana ratnamala;

Mritasanjivini, a commentary on Pingala s Chandasutra.

There were three more poets or scholars with the same name Halayudha.

One Halayudha, belonging to Vatsa gotra, was the son of Dhananjaiya . He was a great scholar in the court of 12th century ruler of Bengal Lakshmana sena. He wrote

Brahmana sarvasva

Pandita sarvasva

Mimamsa sarvasva

Two more Halayudhas served two more Sena kings of Bengal.

Halayudha means a man with a plough, the name of Balarama, brother of Krishna.

Source book:– Sanskrit and Prakrit Poets known from Inscriptions, Prof. DB Diskalkar,Pune, 1993, with my inputs

Xxx Subham xxx

Tags- Halayudha, stotra, hymn on Shiva, Tiruvellarai, Swastika well, Inscription

கல்வெட்டில் மறைந்து கிடக்கும் கவிஞன் சோமேஸ்வர தேவன் (Post.11,176)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,176

Date uploaded in London – 8  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

இற்றைக்கு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் இலக்கியத்துறையில் பெரும்சாதனைகள் புரிந்த ஒரு கல்வெட்டுக் கவிஞன் சோமேஸ்வர தேவன்.

குஜராத்தில் வாழ்ந்த அவரது படைப்புகள் பற்றி அக்காலக் கல்வெட்டுகள் யேசுகின்றன ; ஆயினும் அவற்றில் பெரும்பாலான படைப்புகள் நமக்குக் கிடைத்தில.

சோமேஸ்வர தேவனின் தந்தை, தாயார் – குமார, லெட்சுமி

சகோதரர் பெயர்கள் – மஹாதேவ, விஜய

கோத்ரம் – நாகர பிராஹ்மணன், வசிஷ்ட கோத்ர

ஆசிரியர் பெயர் – பிரஹ்லாதன தேவ

கவிஞனின் மூதாதையர்கள் – சோள , லல்ல சர்மா, முஞ்ச, சோம , ஆம , சர்மா, குமார , சர்வதேவ, , அமிக, சர்வ தேவ, குமார , அ மிக,

இவர்கள் 10 சாளுக்கிய அரசர்களின் அவையில் பணிபுரிந்த 10 பேர் பட்டியல்

கல்வெட்டிலுள்ள சாளுக்கிய அரசர்கள்- சாமுண்ட ராஜ, துர்லப ராஜ பீமா, கர்ண, சித்த ராஜ ஜெய சிம்ம, குமாரபால, அஜயபால மூல ராஜ, பீமா

இவர்கள் 250 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். பலரும் யாக யக்ஞங்கள் செய்தனர்.

சோமேஸ்வர தேவ ஒரு பல்துறை வித்தகர். மஹா காவ்யம் , நாடகம், சுபாஷிதம், ஸ்தோத்ரம், பிரசஸ்தி (புகழுரை)  யாத்தவர் ..

அவர் எழுதிய மஹா காவ்யங்கள் – கீர்த்தி கெளமுதி , சுரதோத்ஸவ

எழுதிய நாடகம் – உல்லாச ராகவ

எழுதிய துதி – ராம சதகம், 100 செய்யுட்கள் உடையது.

தனிப்பாடல்/சுபாஷித தொகுப்பு- கர்ணாம்ரித பிரபா

குமார பால என்ற மன்னர் சரிதத்தை அவர் எழுதினார். அது இப்போது கிடைக்கவில்லை

கீழ்கண்ட கல்வெட்டுகள், பிரசஸ்திகளுடன் (மன்னர் மீதான புகழ் உரைகள்) கிடைத்து இருக்கின்றன

1)அபு, தேல்வட , அரசன் விரதவால மற்றும் அவனது சமண மத அமைச்சர்கள் வஸ்துப்பால , தேஜாபால மீதான 74 செய்யுட்கள்

2)வஸ்துப்பால கோவிலில் உள்ள 2 கிர்னார் கல்வெட்டுகள்

3)சத்ருஞ்ஜய பிரசஸ்தி

4)தபோய், வைத்யநாத பிரசஸ்தி

5)தோல்காவிலுள்ள வீரநாராயண கோவிலில் 108 ஸ்லோகங்களுடன் ஒரு பிரசஸ்தி இருந்தது ; ஆனால் இபோது இல்லை.. அவருக்கு போட்டியாக இருந்த கவிஞர் ஹரிஹர பற்றி பிரபந்த கோச நூலில் ராஜசேகரன் என்பவர் எழுதிய குறிப்பில் இந்த தகவல் உள்ளது.

குஜராத்தை ஆண்ட மன்னர்கள் சோமேஸ்வர தேவை மிகவும் மதித்தனர். அவர் அரசவைக் கவிஞர் மட்டும் அல்ல. அரசவைப் புரோகிதரும் ஆவார்.. காளிதாசரை  மிகவும் மதிக்கும் அவர், காளிதாசர் மீதும் கவி இயற்றினார் சுரதோத்ஸவ காவியத்தில் உள்ள அந்தக் கவிதை பினருமாறு-

ஸ்ரீ காளிதாஸஸ்ய வசோ விசார் யா நைவால்ய காவ்யே ரமதே மதிர் மே

கிம் பாரிஜாதம் பரிஹ்ருத்ய அந்த பிருங்காலி ரானந்ததி ஸிந்து வாரே

இன்னும் ஒரு இடத்தில் காளிதாசனை பிறவிக் கவிஞர் என்றும், ஸ்ரீ ராமனுடைய வாழ்க்கையையே நேரில் கண்டவர் என்றும் புகழ்கிறார். பாண என்ற கவிஞரையும் அவர் போற்றுகிறார்.

இந்தக் கல்வெட்டு ஒருவரின் பெற்றோர், சகோதரர், பல அரசவைக் கவிஞர்கள், பல மன்னர்கள், பல கோவில்கள்,  உதலிய பல்வேறு தகவல்களை வெளியிடுவதால் மிகவும் முக்கியமான ஒன்றாகும் .

Xxx subham xxx

tags- கவிஞன் , சோமேஸ்வர தேவன், கல்வெட்டு

உங்களின் பாராசூட்டை பாக் செய்வது யார்? (Post No.11175)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,175

Date uploaded in London – –    8  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

உங்களின் பாராசூட்டை பாக் செய்வது யார்?

ச.நாகராஜன்

சார்லஸ் ப்ளம்ப் (Charles Plumb) அமெரிக்காவில் கான்ஸாஸில் ஒரு பண்ணையில் வளர்ந்தவர்.  கடற்படை அகாடமியில் சேர்ந்த அவர் தனது திறமையால் பைலட்டாக ஆனார்.

அவருக்கு ‘டாப் கன்’ (TOP GUN) என்ற திட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

ஜெட் ஃபைட்டராக ஆன அவர் உக்கிரமான வடக்கு வியட்நாம் போரில் 75 முறை விமானத்தில் பறந்து சாகஸ செயல்களைச் செய்தார்.

இறுதியில் 75வது முறையாக அவர் வியட்நாமில் பறக்கும் போது, அவரது பணி முடிய இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் போது, வியட்நாமில் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

பாராசூட் மூலமாகத் தப்பிக்க முயன்ற போது ஹனாய் அருகே அவர் எதிரிகளால் பிடிக்கப்பட்டார்.

ஆறு வருட காலம் வியட்நாமிய சிறையில் அவர் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். சரியாகச் சொல்லப் போனால் 2103 நாட்கள், எட்டு அடிக்கு எட்டு அடி கொண்ட ஒரு செல்லில் அவர் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளானார். C

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் சில காலம் தொடர்ந்து பணியில் இருந்தார். பின்னர் பணி ஓய்வு பெற்றார்.

ஒரு நாள் தனது மனைவி மகனுடன் அமெரிக்க ஹோட்டல் ஒன்றில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் அருகே ஒரு மனிதர் வந்தார்.

“நீங்கள் ப்ளம்ப் தானே!. வியட்நாமுக்கு ஜெட் ஃபைட்டரில் பறந்தவர் ஆயிற்றே, சரி தானா?” என்றார் அவர்.

ப்ளம்பிற்கு அவர் யார் என்றே தெரியவில்லை. குழப்பமாக இருந்தது.

“அது எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டார் அவர்.

“நான் தான் உங்கள் பாராசூட்டை பாக் செய்தவன்” என்று பதில் சொன்னார் அந்த மனிதர்.

பின்னர் மெதுவாகத் தன் தலையை ஆட்டியவாறெ அவர் கூறினார்: “அது நன்கு வேலை செய்தது என்று நான் நினைக்கிறேன்”

உடனடியாக ப்ளம்ப் பதில் சொன்னார் ;”அது அற்புதமாக வேலை செய்தது. இல்லையென்றால் நான் இப்படி உங்களுடன் பேசிக் கொண்டிருக்க மாட்டேன்!”

அன்று முழுவதும் ப்ளம்ப் தான் ஒரு போதும் முன்னர் பேசி இராத அந்த மனிதரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.

தனது உயிரே அவர் கையில் இருந்ததை அப்போது தான் அவர் உணர்ந்து கொண்டார். அவர் கப்பலில்  இருந்த போது அந்த மனிதரை எத்தனை முறை பார்த்திருக்கக் கூடும். ஒரு முறை கூட அவரைப் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்ததில்லை; பேசியதில்லை..

பின்னால் சார்லஸ் ப்ளம்ப் அனைவரையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் சுயமுன்னேற்றப் பேச்சாளராகத் திகழ்ந்தார்.

தனது உரைகளில் மறந்து விடாமல் அவர் அரங்கத்தில் உள்ள அனைவரையும் பார்த்துக் கேட்கும் ஒரு கேள்வி:

“உங்கள் பாராசூட்டை பாக் செய்தது யார்?”

நம்மில் ஒவ்வொருவரும் உடல்ரீதியிலான பாராசூட், மன ரீதியிலான பாரசூட், உணர்வு ரீதியிலான பாராசூட் மற்றும் ஆன்மீக ரீதியிலான பாராசுட்டி ஆகியவற்றின் தேவையைக் கொண்டுள்ளோம்.

நமது வாழ்வில் பலரும் நமக்கு பாராசூட்டை பத்திரமாக மடித்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நாம் தான் அவர்களை இனம் காண வேண்டும். பாராட்ட வேண்டும். பரிசுகள் வழங்க வேண்டும்.

தினமும் நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வி : ‘எனது பாராசூட்டை மடித்து வைப்பது யார்?’ என்று தான்!

***

புத்தக அறிமுகம் – 22

வெற்றிக்குத் திருக்குறள்!

பொருளடக்கம்

என்னுரை

1. எவை எவை வேண்டும்? – வள்ளுவரின் அறிவுரை!

2. எவை எவை வேண்டாம்? – வள்ளுவரின் அறிவுரை!

3. வள்ளுவரின் சுடும் குறள்கள்!

4. பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்பாக்கள்!

5. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 1

6. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 2

7. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 3

8. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 4

9. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 5

10. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 6

11. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 7

12. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 8

13. பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 9

14. வள்ளுவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி!

15. மனிதரில் எத்தனை வகை? வள்ளுவரின் பதில்!

16. வள்ளுவர் அறிவுறுத்தும் விரைந்து செய்ய வேண்டிய மூன்று செயல்கள்!

17. வள்ளுவர் குறளில் கையாண்ட வடமொழிச் சொற்கள்

18. வால்டேரும் வள்ளுவரின் திருக்குறளும்!

19. பொய்யும் மெய்யும் – திருவள்ளுவர், பர்ட்ரெண்ட் ரஸ்ஸல், மஹாத்மா காந்திஜி, துர்வாஸர்!

20. திருக்குறளுக்குத் தற்காலத்தில் சிறந்த உரைநூல் இதோ!

21. திருக்குறளில் தேவர் உலகம் வள்ளுவரும், வானவரும்!

22. திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! – 1

23. திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! -2

24.சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! -1

25. சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! – 2

26. அரவிந்தர் ஆக்கிய குறள் தமிழாக்கம்!

27. முடிவுரை

நூலாசிரியர் பற்றிய குறிப்பு

*

இந்த நூலுக்கு நான் அளித்த என்னுரையில் ஒரு பகுதி :

என்னுரை

உலகத்தில் உள்ள ஒப்பற்ற நூல்களில் முதலிடத்தைப் பெறும் அதிசய நூல் திருக்குறள்.

இதில் உள்ள 4310 சொற்களை ‘திருக்குறள் சொல்லடைவு’ என்ற தனது நூலில் தமிழ் மணி சாமி.வேலாயுதம் பிள்ளை அவர்கள் விளக்கி அரும் பணி ஆற்றியுள்ளார். 1952இல் வெளிவந்த நூல் இது.

இந்தச் சொற்கள் மூலம் உலகம் முழுமைக்கும் பொதுவான, எந்தக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமான, ஒரு நூலை இயற்றியுள்ள வள்ளுவரின் மாண்பை எப்படிப்பட்ட சொற்களாலும் விளக்கி விட முடியாது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் மூலம் பல்வேறு வழிகளில் அவற்றை இணைத்துப் பொருள் காண வழி வகுத்துள்ள வள்ளுவரே வள்ளுவர்.

அவருக்கு இணை யாரும் இருக்க முடியாது.

மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால், வாழ்க்கையில் வெற்றி பெற உறுதுணையாக அமையும் நூல் இதுவே.

பலகாலும் இதைப் படித்து மகிழ்ந்து வருபவன் என்ற முறையில் இதை ஆராய்ந்து என்னிடம் வைத்திருக்கும் குறிப்புகளைக் கொண்டு அவ்வப்பொழுது கட்டுரைகள் படைத்து வந்தேன். அவற்றின் தொகுப்பே இது.

இதை www.tamilandvedas.com இல் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன் வந்த PUSTAKA DIGITAL MEDIA வின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பங்களூர்
13-1-2022

ச.நாகராஜன்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

tags- பாராசூட்

கல்வெட்டில் ஒரு ஸ்தோத்திரம்- ஹலாயுத ஸ்தோத்திரம் (Post  No.11174)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,174

Date uploaded in London – 7  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

தற்காலத்தில் கோவில்களின் சுவர்களில் தேவாரம், திவ்யப் பிரபந்தம் , திருமந்திரம் , திருப்புகழ், அபிராமி அந்தாதி துதிகளை, திருக்குறள் போன்ற நீதி நூல்களை பொறி ப்பது  வழக்கமாகிவிட்டது. ஆனால் இந்த வழக்கத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஹலாயுதன் என்பவர் செய்து இருக்கிறார்.

மத்திய பிரதேசத்தில் நர்மதா நதிக்கரையில் மாந்தாதா என்னும் இடத்தில் அமரேஸ்வரா கோவில் இருக்கிறது. அதன் சுவற்றில் சிவ பெருமான் மீது  ஹலாயுதர் என்பவர் இயற்றிய ஹலாயுத ஸ்தோத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.பரமார வம்சத்தைச் சேர்ந்த முஞ்ஜா என்ற மன்னரின் அவைக்கள புலவர் அவர்.. அது கி.பி.1063ல் எழுதப்பட்டது . 63 செய்யுட்களைக் கொண்ட அந்த துதியின் பின்னால், செய்யுளை இயற்றியவர் பற்றிய குறிப்பும் உளது.

அதைத்தொடர்ந்து சிவ துவாதச ஸ்தோத்திரம்  ஒன்றும் காணப்படுகிறது. அதில் துவாதச (12) ஜோதிர்லிங்க பற்றிப் பாடியுள்ளார் . விவேக ராசின் என்பவரின் சீடரும் சாபல கோத்திரத்தவரும் ஆன கந்தத்வஜர் என்றும் உள்ளது. அந்தக் கவிஞர் ஒரு சைவத் துறவி என்றும் ராஷ்ட்ர கூட வம்ச மன்னர் மூன்றாம் கிருஷ்ணர் சபையிலும் கிபி. 934-967 பரமார  வம்ச அரசர் வாக்பதி முஞ்ச சபையிலும் 974-993 பணியாற்றியவர் என்றும் தெரிகிறது

ஹலாயுதன் வேறு சில நூல்களையும் இயற்றியுள்ளார் ; அவையாவன-

கவி ரஹஸ்ய – சம்ஸ்க்ருத இலக்கணம் பற்றியது மூன்றாம் கிருஷ்ணர் என்ற மன்னர் பற்றிய புகழுரையும் இணைக்கப்பட்டுள்ளது.

அபிதான ரத்ன மாலா

ம்ருத சஞ்சீவினி — இது பிங்கலரின் சாந்த சூத்ரம் மீதான வியாக்கியானம்/ உரை

ஹலாயுத: – ஹல என்றால் கலப்பை . இது கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராமரின் நாமம்.; தமிழ் சொல் கலப்பை என்பதும் ஹல என்பதும் ஒரே வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தன.

முன்காலத்தில் சைவ பெயர் கொண்டவர்கள் விஷ்ணு மீதும், வைஷ்ணவ பெயர் கொண்டவர்கள் சிவன் மீதும் துதிகளை இயற்றி வந்தனர். பிற்காலத்தில் வேற்றுமை பெருகவே அந்த வழக்கம் அருகிவிட்டது

கல்வெட்டுகளில் துதிகளை பொறிப்பதால் அவை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் உள்ளது.

xxx

இவர் தவிர மேலும் மூன்று ஹலாயுதர்கள் வாழ்ந்தனர்.வங்காளத்தைச் சேர்ந்த லட்சுமண சேனா மன்னரின் அவையில் இருந்த ஹலாயுதன் , வத்ச கோத்ர தனஞ்சயனின் மகன் ஆவார்.அவர் பிராஹ்மண ஸர்வஸ்வ  , பந்த ஸர்வஸ்வ , மீமாம்ச ஸர்வஸ்வ  ஆகியவற்றை எழுதியவர்.

மேலும் இரண்டு ஹலாயுதர்கள் சேன வம்ச அரசர்களிடம் பணியாற்றினர்..

Xxx

தமிழ் மொழியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நீண்ட துதிகள் பொறித்த கல்வெட்டுகள் இல்லை.ஆனால் தந்தி வர்ம பல்லவனின் (CE 800) திருவெள்ளறைப் பாடல் கல்வெட்டு குறிப்பிடத்தக்கது

திருவெள்ளறை சுவஸ்திகா கிணறு

திருச்சிக்கு அருகில் திருவெள்ளறை என்னும் ஊரில் புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவில் உள்ளது. பெரியாழ்வார் முதலிய ஆழ்வார்களால் பாடப்பெற்றதால் குறைந்தது 1400 ஆண்டுக்கால வரலாறு பெற்ற கோவில் இது. கோவிலுக்குப் பின் புறம் இந்துக்களின் புனிதத் சின்னமான சுவஸ்திகா வடிவில் ஒரு கிணறு உள்ளது. அதில் அருமையான பாடல் உள்ளது. நேற்று வாழ்ந்த ஒருவன் இன்று இல்லை என்னும் சிறப்புடையது இந்த உலகம் என்று வள்ளுவன் பாடுகிறான். மஹாபாரதம் யக்ஷப் பிரஸ்னத்திலும் இக்கருத்து உள்ளது. ஆகையால் இறைவனை உடனே பாடிப் பரவுவோம் என்கிறார்கள் பெரியோர்கள்

 பல்லவ மன்னன் தந்திவர்மனால் உருவாக்கப்பெற்ற இது மாற்பிடுகு பெருங்கிணறு என்று அழைக்கப்பெறும்.. கி.பி 800ல் ஆலம்பக் கிழான் விசைய நல்லூழான் என்பவன் தோண்டி அமைத்தான் இந்த கிணற்றின் சுவற்றில் ஒரு கல்வெட்டு பாடல் ஆலம்பாக்கத்து கம்பன் அறையனால்  பொறிக்கப்பெற்றுள்ளது,

ஸ்ரீ கண்டார் காணா உலகத்திற் காதல் செய்து நில்லாதேய்

பண்டேய் பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நைய்யாதேய்

தண்டார் மூப்பு வந்து உன்னைத் தளரச் செய்து நில்லாமுன்

உண்டேல் உண்டு மிக்கது உலகமறிய வைம்மினேய்!

—சுபம் —

TAGS- ஸ்வஸ்திகா கிணறு, திருவெள்ளறை, கண்டார் காணா , ஹலாயுத, ஸ்தோத்திரம், கல்வெட்டு

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்! (Post No.11,173)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,173

Date uploaded in London – –    7  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 13

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்!

ச.நாகராஜன்

இன்றைய தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருச்செங்கோடு ஆகும்.

பழைய காலத்தில் இது திருக்கொடிமாடச் செங்குன்றனூர் என்றும் திருச்செங்கோட்டாங்குடி என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

செந்நிறத்தில் அமைந்த மலை உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் மாதொரு பாகர் சந்நிதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் இல்லாமல் 6 அடி உயரமுடன் முழுத் திருமேனியுடன் காட்சி யளித்து அருள் பாலிக்கிறார்.

பாதி வேட்டி, பாதி புடவை என அர்த்தநாரீஸ்வர விளக்கத்தின் வடிவமாக மூலவர் காட்சி அளிக்கிறார். முழு வடிவமும் வெள்ளை பாஷாணத்தால் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தைப் பற்றிய சுவைமிகு வரலாறு ஒன்று உண்டு.

ஒரு சமயம் கைலாயத்தில் சிவபிரானை வணங்குவதற்கு மஹரிஷி பிருங்கி வந்தார்.

பரமசிவத்தைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியதே என்று எண்ணிய முனிவர் பார்வதியாரை வணங்க வேண்டாம் என்று நினைத்து சிவபிரானை மட்டும் வணங்கிச் சென்றார். இன்னொரு நாள் சிவபிரானும் உமாதேவியாரும் ஓர் ஆசனத்தில்  பிரிவு இல்லாமல் இறுக அணைந்து வீற்றிருத்தலைக் கண்ட முனிவர் ஒரு வண்டின் உருவத்தை எடுத்துப் பறந்து இருவரின் இடையே இருந்த இடைவெளியில் புகுந்து சிவனை மட்டும் வலம் செய்து, பறந்து சென்றார்.

தேவி சினம் கொண்டாள்.

“என்னை வழிபடாமல் அவமதித்தாய். ஆகவே உன் உடலில் உள்ள என் கூறாக உள்ள அனைத்தும் நீங்கட்டும்” எனக் கூறினாள். உடனே தேவியின் அம்சமான ஊன் முதலியன பிருங்கி முனிவரின் உடலிலிருந்து நீங்கின.

வலுவை இழந்த முனிவர் கீழே விழுந்தார்.

சிவபிரான் முனிவரை நோக்கி, “கிரணம் இன்றி சூரியன் இல்லை. சூடு இன்றி நெருப்பு இல்லை. சக்தி இன்றி சிவம் இல்லை. இந்த உண்மை காணாது மயங்கினையே” என்று கூறி அருள் பாலித்து முனிவரைத் தேற்றினார்.

உண்மையை உணர்ந்த பிருங்கி மாமுனிவர் மனம் மிக மகிழ்ந்து பார்வதி பரமேஸ்வரரை வணங்கி அருள் வேண்டினார்.

சிவம் வேறு, நாம் வேறாக இருத்தலினால் அன்றோ ஒரு முனிவன் ‘நம்மை இகழ நேர்ந்தது’ என்று எண்ணிய தேவியார் கேதாரம், காசி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை முதலிய திருத்தலங்களில் தவம் புரிந்து திருச்செங்கோட்டில் எழுந்தருளி கேதார கௌரி விரதம் இயற்றி சிவபிரானின் இடது பாகம்தனைப் பெற்றார். அர்த்தநாரீஸ்வரராகத் தோற்றமளித்தார்.

இதைத் திருச்செங்கோட்டு புராணம் இப்படி விவரிக்கிறது:

பணிமலையி லெழுந்தருளிப் பரைக்கொருபா கங்கொடுத்த பரிசின் தோற்றம்

அணிமணித்தண் டுச்சியின் மூன் றங்குலியை வளைத்தமைந்த வனப்புக் கொப்பா

மணிவரைமா துமையிடத்து வைத்தணைத்து மகரகுழை வலத்தேநாலத்

தணிவிலொளி தயங்கியதண் டரளமணித் தோடிருபா லாகித் தானே.

திருஞானசம்பந்தர் தேவாரப் பாடலில்,

வெந்தவெண் ணீறணிந்து விரிநூறிகழ் மார்பினல்ல

பந்தண வும்விரலா ளொருபாக மமர்ந்தருளிக்

கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச்செங் குன்றூர்நின்ற

அந்தணனைத் தொழுவா ரவல மறுப்பாரே

என்று கூறி அர்த்தநாரீஸ்வரரைப் பாடிப் பரவுகிறார்.

இத்தகு பெருமை வாய்ந்த திருச்செங்கோடு கொங்குமண்டலத்தில் உள்ளதேயாம் என்று கூறி கொங்குமண்டல சதகம் புகழ்கிறது.

சதகத்தின் 13வது பாடலாக அமைந்துள்ள பாடல் இது:

நெடுவா ரிதிபுடை சூழல கத்தி னிமலியுமை

யொடுவாகு பெற்ற திருமேனி காணு முயிர்கட்கெல்லாம்

நடுவாக நின்ற பரஞ்சோதி தானர்த்த நாரிச்சிவ

வடிவான துந்திருச் செங்கோடு சூழ்கொங்கு மண்டலமே

இதன் பொருள் : கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் உமாதேவியாரோடு சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் என்று ஒரு வடிவாகத் திகழும் திருச்செங்கோடு மேவியது கொங்கு மண்டலமே என்பதாம்.

***

Tags- திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர்,

புத்தக அறிமுகம் – 21

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் – 6

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

1. நீரின்றி அமையாது உலகு!

2. பழையதிலிருந்து கற்போம்; உயர்வோம்!

3. பசுமைக் கட்டிடம் அமைப்போம்!

4. பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்ப்போம்!

5. பிளாஸ்டிக் பொருள்களின் நச்சுத் தன்மை!

6. ஒவ்வொருநாளும் சுற்றுப்புறச் சூழலைக் காப்போம்!

7. அரிய உயிரின வகை வேறுபாட்டைக் காப்போம்!

8. காற்றின் தரம் பற்றிய குறியீட்டு எண்!

9. இல்லங்களில் ஆற்றல் திறனைக் கூட்ட வழிகள்!

10. மரங்களை நடுவோம்; பூமியைக் காப்போம்!

11. நீரைச் சேமிப்போம்!

12. மழை நீரைச் சேகரிப்போம்!

13. பிளாஸ்டிக்கை எதிர்த்து ஒரு போர்!

14. வாழ்க்கைமுறையை மாற்றுவோம்!

15. உத்வேகமூட்டும் இயற்கை ஆர்வலர்கள்!

16. மரங்களைப் பாதுகாப்போம்; பேப்பரைத் தவிர்ப்போம்!

17. சின்னச் சின்ன செயல்கள்; பெரிய லாபம்!

18. இமயமலை பனிப்பாறைகள் உருகும் அபாயம்!

19. உலகின் தட்பவெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்!

20. எலக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகம்!

21. காடுகளைப் பாதுகாப்போம்!

22. தட்ப வெப்ப மாற்றத்தால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடு!

23. சுற்றுப்புறத்தைக் காக்கும் வழிகள்!

24. உத்வேகமூட்டும் தகவல்கள்!

25. சூரிய சக்தியைப் பயன்படுத்துவோம்!

26. கழிவுப் பொருள்களைக் குறைப்போம்!

27. ‘ஸ்வச்ச பாரத்’ உருவாக்குவோம்!

28. தேனீக்கள் இல்லாத உலகில் வாழ முடியாது!

29. பறவைகள் இல்லாத உலகம்!

30. சரும வியாதிகளைத் தவிர்க்க மாசில்லா சுற்றுப்புறச் சூழல் தேவை!

31. ஒரு அவசர செய்தியை அனைவருக்கும் பரப்புவோம்!

32. பிளாஸ்டிக் அபாயம் : புவியைக் காக்க உத்வேகமூட்டும் வழிகாட்டிகள்!

33. பிளாஸ்டிக் அபாயம் : புவியைக் காக்க உத்வேகமூட்டும் புதிய வழிகள்!

34. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க நவீன் சாதனங்களின் பயன்பாடு!

35. நிலத்தடி நீரைச் சேமிப்போம்!

36. ஓசோனைக் காப்போம்!

37. ஒலிமாசால் ஏற்படும் கேடுகள்!

38. உத்வேகமூட்டும் ஆர்வலராக மாறலாமே!

39. ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை!

40. சுற்றுப்புறச் சூழலைக் காப்பதற்கு ஒவ்வொருவரும் உதவலாம்!

41. புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பெரும் அபாயம்!

*

அணிந்துரை

திரு ச.நாகராஜன் அவர்கள் எழுதியுள்ள ‘சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்’ என்ற அருமையான, பயனுள்ள நூலைப் படித்து மகிழ்ந்தேன்.

திரு ச.நாகராஜன் ஓர் சிறந்த இலக்கியவாதி. சமூக சிந்தனையாளர். பேச்சாளர். இயல், இசை, நாடகம், அறிவியல் சார்ந்த இலக்கியங்களைப் புத்தகங்களாகவும், பத்திரிகைகளில் கட்டுரைகளாகவும் எல்லோருக்கும் பயன் தரும் வகையில் அவர் பல ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். அகில இந்திய வானொலியில் அவருடைய சுற்றுப்புறச் சூழல் பற்றிய உரைகள் ஏராளம் இடம் பெற்றுள்ளன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பல்வேறு மேடைகளிலும் சொற்பொழிவாற்றி எண்ணற்ற தமிழ் நெஞ்சங்களின் இதயம் கவர்ந்தவர். ஆன்மீகம், இலக்கியம், ஜோதிடம், அறிவியல் போன்ற பல துறைகளில் எந்த ஒரு விஷயத்திற்கும் நம் ஐயம் தீரும் வகையில் விடையளிப்பார்.

இன்று உலகெங்கும் உள்ள நாடுகளின் தலைவர்கள் அச்சத்தோடு பார்ப்பது, சீரழிந்து, மாசுபட்டு, சிதையும் சுற்றுப்புறச் சூழல் பற்றியே.

இந்த நூலில் சுற்றுப்புறச் சூழல் பற்றி பல்வேறு கோணங்களில் தகவல்களைத் திரட்டி அலசி ஆராய்ந்து நல்ல கருத்துக்களைத் தெளிவுறத் தந்துள்ளார். 41 கட்டுரைகளில், நம் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் நீர், நிலம், காற்று, ஆகாயம் என அனைத்தும் மாசு படும் விதத்தை அருமையாக விவரித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநில ‘நௌலா’ திட்டம் பற்றிய புதுச் செய்தி வழங்குவதோடு, பசுமைக் கட்டிடம் – Green Building – பற்றி, அதன் அவசியத்தையும் விளக்குகிறார். பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டிய அவசியம், நச்சு இரசாயனங்களால் ஏற்படும் கேடுகள், ஒலியால் ஏற்படும் மாசு, அரிய வகை உயிரினங்கள் அழிந்து விடும் அபாயம் பற்றி விவரித்துள்ளார். வீட்டு உபயோகப் பொருள்களை எவ்வாறு பராமரித்து சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கலாம் என்பதற்கான வழி முறைகளையும் வாழ்க்கை முறையை எவ்வாறு அதற்குத் தக மாற்றுவது என்பது பற்றியும் கூறுகிறார். தேனீக்கள் அழிந்து விட்டால் உலகமே நான்கு ஆண்டுகளில் அழிந்து விடும் என்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கூற்றை நமக்குச் சொல்லி எச்சரிக்கிறார். இன்றைய கால கட்டத்தில், அவசியம் நாம் செயல்பட வேண்டிய தருணத்தை எடுத்துரைக்கிறார்.

நீர் சேமிப்பு, மரம் வளர்த்தல், காடுகளைப் பாதுகாத்தல், வாகனங்கள் உருவாக்கும் மாசு, தட்ப வெப்ப நிலையால் ஏற்படு ஆரோக்கிய சீர் கேடு பற்றி எடுத்துரைத்து நம் சிந்தனைக்கு உரம் இடுகிறார்.

சூழலைப் பாதுகாக்க எளிய வழிகளைத் தெரிவிப்பதோடு, சூரிய சக்தியைப் பயன்படுத்தல், வன விலங்குகளைப் பாதுகாத்தல் போன்றவற்றை விவரித்து, நம்மையும் சுற்றுச் சூழல் ஆர்வலராக மாற்றி, சமுதாயம் பயன்படும் நபராக மாறச் சொல்வது நமக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்தப் புவியை வாழ்வதற்கேற்ற தூய்மையான ஒரு கிரகமாக எதிர் கால சந்ததியினருக்கு, நாம் விட்டுச் செல்ல வேண்டிய அவசியத்தை உணர்த்தும் அற்புதமான நூல் இது.

இதனைப் படித்து, மரம் நடுதல், நீர் சேமித்தல், பிளாஸ்டிக்கைத் தவிர்த்தல், பிற உயிரினங்களைப் பாதுகாத்தல் போன்ற நற்செயல்களில் நாம் ஈடுபடுவோமாக.

திரு நாகராஜன் தந்துள்ள இந்த நூல் மிகவும் பயனுள்ளது.

மகத்தான அவரின் பணிக்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லோரிடமும் இந்நூலை எடுத்துச் சென்று, சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது கடமையாகும். மேலும் இது போல் அவர், உபயோகமான நூல்களை வெளியிட, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

சென்னை – 11
24-12-2021

சந்தானம் சூரியநாராயணன் M.Sc. M.Phil
(Retd) முதல்வர், சரஸ்வதி நாராயணன் கல்லூரி, மதுரை

*

இந்த நூலுக்கு நான் அளித்த என்னுரையில் ஒரு பகுதி :

என்னுரை

அகில இந்திய வானொலி நிலையம் காலையில் ஒலிபரப்பும் ‘சுற்றுப்புறச் சூழல் சிந்தனை’ பகுதிக்கான உரைகளை கடந்த பல ஆண்டுகளாக அவ்வப்பொழுது வழங்கி வந்தேன். அதன் தொகுப்பை ஒவ்வொரு பாகமாக வெளியிட்டும் வந்தேன். இது ஆறாவது தொகுதி.

இந்த பூமியைக் காக்கும் விழிப்புணர்வைத் தொடர்ந்து ஊட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே இன்றைய நிலை.

அதற்கான ஒரு சிறு முயற்சியே இந்த நூல்.

இந்த நூலுக்கு அழகிய முன்னுரை அளித்து என்னை கௌரவித்த திரு சூரியநாராயணன் அவர்களுக்கு என் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி அரும் சாதனைகளைப் படைத்துள்ளார். அத்துடன் அவர் வயலின் வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற ஒரு நிபுணர். பஞ்சமி நாளன்று பல்வேறு பிரபலமான இசைக் கலைஞர்களை இல்லத்திற்கு அழைத்து கச்சேரிகளை நடத்தி இசை வளர்த்து இசை பட வாழ்பவர். இசைக் கலை நுட்பங்களை நன்கு அறிந்த அவருக்குக் கலாநிதி பட்டம் கிடைத்ததில் வியப்பே இல்லை. பல்வேறு சேவா நிறுவனங்களில் முக்கியப் பங்காற்றி பாரம்பரியம் காக்கும் பண்பாளரான அவர் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலரும் கூட.

அவர் இந்த நூலுக்கான அணிந்துரை அளித்திருப்பது மிகவும் பொருத்தமானது.

இந்த நூலை வெளியிட முன் வந்த Pustaka Digital Media நிறுவன உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக.

பங்களூர்
24-12-2021

ச.நாகராஜன்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

INTERESTING WORDS IN BHAGAVAD GITA – TWO DOORS (Post No.11172)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,172

Date uploaded in London – 6  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

English word DOOR is derived from the Sanskrit word DWAAR. Lord Krishna used it in at least two places to give us an important message.

In the Bhagavad Gita, Lord Krishna used it to tell us about the Gate Way (door) to Heaven and Gate Way to Hell. Anyone who reads crime news in Newspapers would agree with Lord Krishna.

First look at the slokas and then we will discuss it.

यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम् |
सुखिन: क्षत्रिया: पार्थ लभन्ते युद्धमीदृशम् || 2-32||

yadṛichchhayā chopapannaṁ swarga-dvāram apāvṛitam
sukhinaḥ kṣhatriyāḥ pārtha labhante yuddham īdṛiśham

Happy are the Kshatriyas (warriors), O Partha/Arjuna, for whom such a war comes of its own accord as an open door to heaven.

My comments

All religions say that fighting for own country or religion and dying in such a fighting will take one to Heaven. In Tamil Sangam poems, we see a mother rejoicing after his son died in the war heroically fighting for his country. This Veera Maathaa (Heroic Mother) concept is seen in the Rig Veda as well.

Hindus never believed in absolute Ahimsa/non violence. And the 200 ++++ countries in the world also agree with the Hindus. Army, Navy and Air Force employ the highest number of people in the world. Western countries make big money by selling arms to fighting groups. We also salute our ever vigilant heroic soldiers guarding our borders in the snow clad Himalayas.

We see Asuras and Demons in all religious books and the goodies are always fighting  for the welfare of people. Hindus believe in the Tenth Avatar- Kalki Avatar – who will destroy the bad people. In the Fourth Chapter of Bhagavad Gita Lord Krishna says Sambhavaami Yuge Yuge he would manifest himself in every era to protect the good and destroy the evil forces. So Hindus expect another fighting.

Vyasa makes it clear in Udhyoga Parva of Mahabharata as well:

O, you Tiger among men! There are only two types who can pierce the constellation of the Sun (and reach the sphere of Brahman); the one is the Sanyasin who is steeped in Yoga and the other is the warrior who falls in the battle field while fighting– Udhyoga Parva 3-65

Dvau imauv purusavyaaghra suuryamandala bhedinau

Parivrat yogayuktas ca rane  caabhimukho hatah

Xxx

Gate Way to Hell

त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मन: |
काम: क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् || 21||

tri-vidhaṁ narakasyedaṁ dvāraṁ nāśhanam ātmanaḥ
kāmaḥ krodhas tathā lobhas tasmād etat trayaṁ tyajet

There are three gates leading to the hell of self-destruction for the soul—lust, anger, and greed.

Therefore, one should abandon all three.

My comments

I used to go to HM Prisons every week to see Hindu prisoners in England. Hindu prisoners are very few compared to the huge number of Muslim and Christian prisoners. But when Hindu prisoners come with their friends belonging to other religions, they will tell me the stories of their friends as well. For all the prisoners, the reason for coming into the prison is same- Kaama, Krodha, Lobha= Sex, Anger, Greediness.

Everyday we read crime news in newspapers. One  can easily divide the offenders into these three types. Lord Krishna told us at least 5000 years ago.

So if we remember these doors or gate ways, we can chose the best or at least avoid the worst.

–subham–

Tags- gate way, Heaven, Hell, Door,Lord Krishna, Bhagavad Gita 

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-74 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (last part) Post 11171

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,171

Date uploaded in London – 6  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-74 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Last Part)

ஹர்ஷம் 1-12 மகிழ்ச்சியை

ஹர்ஷாமர்ஷபயோத் வேகைஹி 12-15 மகிழ்ச்சி, சினம், அச்சம்,

மனக் கிளர்ச்சி – இவைகளிலிருந்து

ஹவிஹி  4-24  அர்ப்பணிக்கப்படும் பொருள்

ஹஸ்தாத் 1-29 கையிலிருந்து

ஹஸ்தினி 5-18 யானை இடத்து

ஹானிஹி 2-65  அழிவு

ஹிதகாம்யயா 10-1  நன்மையை விரும்பி

ஹிதம் 18-64  நன்மையை

ஹித்வா  2-33 விட்டு விலகி

ஹினஸ்தி 13-28  அழித்தல்

ஹிமாலயஹ 10-25  இமய மலை

ஹிம்ஸாத்மகஹ 18-27  பிறருக்கு துன்பம் விளைவிக்கும்

நோக்கத்துடன்

ஹிம்ஸாம் 18-25 துன்பத்தையும்

ஹுதம் 17-28   செய்யப்பட்ட ஹோமம்

ஹ்ருத ஞானாஹா 7-20  அறிவிழந்தவர்கள்

ஹ்ருத் ஸ்தம் 4-42  உள்ளத்தில் உறைவது

ஹ்ருதய தெளர் பல்யம் 2-3  மனத் தளர்ச்சியை

ஹ்ருதயானி 1-19   இருதயங்களை

ஹ்ருதி 8-12  இருதயத்தில்

ஹ்ருத் தேசே 18-61 இருதயத்துக்குள்ளும்      20 words

ஹ்ருத் யாஹா 17-8  இன்பம் அளிக்கும்

ஹ்ருஷி தஹ 11-45  மகிழ்ச்சி

ஹ்ருஷீ கேச 11-36  கிருஷ்ணா

ஹ்ருஷீ கேசம் 1-20 கிருஷ்ணனிடம்

ஹ்ருஷ்ட ரோமா  11-14 புளகாங்கிதனாய் , மயிர்க்கூச்சம் அடைந்து

ஹ்ருஷ்யதி 12-17  மகிழ்கிறான், மகிழ்தல்

ஹ்ருஷ்யாமி 18-77 மகிழ்ச்சி அடைகிறேன்

ஹே 11-41 அடே

ஹேதவஹ 18-15  காரணங்கள்

ஹேதுனா 9-10  காரணத்தால்

ஹேது மத்பிஹி 13-4  காரணங்களுடன் கூடியதும்

ஹேது ஹு 13-20 ஹேதுவாக, காரணமாக

ஹேதோ ஹோ 1-35  பொருட்டு, காரணமாக

ஹ்ரியதே 6-44  கவரப்படுகிறான்

ஹ்ரீ ஹி 16-2  நாணம்

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் இத்துடன் நிறைவு பெற்றது . பகவத் கீதையில் 3865 சொற்கள் உள்ளன என்பது ஒரு கணக்கு. இவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகையில் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் .

இதை புஸ்தகமாகப் பெற விரும்புவோர் எங்களுக்கு எழுதவும். தேவைக்கேற்ப புஸ்தகங்கள் அச்சடிக்கப்படும் .ஈ புக் E BOOK வடிவிலும் கிடைக்கும் .

35 words are added from this part 74

மங்களம்! சுப மங்களம் !!

–சுபம் —

Tags – Gita words index 74, last part.