அம்பலவாணர் எழுதிய அறப்பளீசுர சதகத்தில் மேலும் இரண்டு பாடல்களை எடுத்துக்கொள்வோம்.
முதல் பாடலில் விலக்க வேண்டிய உணவு வகைகள் என்ன என்ன என்று சொல்கிறார்.
எந்த உணவுகளை விலக்க வேண்டும் என்று சொன்னவர் காரணத்தை விளம்பவில்லை. இவை பழைய நூலில் உள்ளவை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார். விளக்கில்லாத இடங்களில் சாப்பிடக்கூடாது, பழைய, கெட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் மஹாத்மா காந்திக்குப் பிடித்த ஆட்டுப்பாலை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார் ? என்று தெரியவில்லை. வெங்காயம், உள்ளிப்பூண்டு , முருங்கைக் காய், காளான் முதலியவற்றை ஆன்மீக நாட்டம் உடையோர் சேர்ப்பதில்லை ; வேறு சில காய்களையும் விலக்கியமைக்கு நமக்கு விளக்கம் தேவைப்படுகிறது
Xxx
இரண்டாம் பாடலில் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள குற்றங்களை சொல்கிறார்
கங்கை நதிக்கு வெள்ளப்பெருக்கின்போது வரும் நுரை குற்றம்.
நிலவுக்கு அதிலுள்ள களங்கம் குற்றம் ;
தவ சீலர்களுக்கு கோபமே குற்றம் ; உடனே நமக்கு துர்வாசர் நினைப்பு வருகிறது. கோபத்தினால் வரக்கூடிய தீங்குகள் பற்றி முன்னரே சதகத்தில் கண்டோம். .குணமென்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது (குறள் 29)
பேரரசர்கள் ஆராயாமல் முடிவு செய்வது மன்னர்களின் தோஷம். உடனே நமக்கு கோவலனைக் கொன்ற பாண்டிய மன்னன் நினைவுக்கு வரும்
xxxx
விஷம்- விடம் , பாஷை- பாடை என்று ஆவது போல தோஷம் என்ற சொல் தோடம் ஆகியுள்ளது.
xxxxxx
கைவிலைக் குக்கொளும் பால் அசப் பால், வரும்
காராக் கறந்த வெண்பால்
காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறு
காந்திக் கரிந்த சோறு,
செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,
தென்னை வெல்லம் லாவகம்,
சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடு
சிறப்பில்வெண் கத்த ரிக்காய்,
எவ்வம்இல் சிவன்கோயில் நிர்மாலி யம் கிரணம்,
இலகுசுட ரில்லா தவூண்,
இவையெலாம் சீலமுடை யோர்களுக் காகா
எனப்பழைய நூலுரை செயும்
ஐவகைப் புலன்வென்ற முனிவர்விண் ணவர்போற்றும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஐவகைப்புலன் வென்ற முனிவர் விண்ணவர் போற்றும்
அமலனே – ஐந்து புலன்களையும் வென்ற முனிவரும் வானவரும் வாழ்த்தும்
தூயவனே!, அருமை ……. தேவனே!, கைவிலைக்குக் கொளும் பால் –
விலைக்கு வாங்கும் பாலும், அசப்பால் – ஆட்டுப்பாலும், வரும் கார் ஆகறந்த வெண்பால் – வரும் காரா பசுவினிடம் கறந்த வெண்மையான பாலும்,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கடத்தப்பட்ட 32000 கேரளப் பெண்கள் – ஒரு சோகக் கதை!
ச.நாகராஜன்
எனது பெயர் ஷாலினி உன்னிகிருஷ்ணன். ஒரு நர்சாக ஆகி மனித குலத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.
இப்போது நான் பாதிமா பா. ஆப்கானிஸ்தானத்தில் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன்.
நான் மட்டும் இப்படி இல்லை.
32000 பெண்கள் என்னப்போலவே மதம் மாற்றப்பட்டு, சிரியா, யேமன் பாலைவனங்களில் புதைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒரு கோரமான விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – கேரளாவில் சாதாரணப் பெண்களை மதம் மாற்றி தீவிரவாதிகளாக ஆக்குவது வெளிப்படையாகவே நடைபெறுகிறது.
அவர்களைத் தடுத்து நிறுத்த யாருமே இல்லையா?
இது தான் எனது கதை!
இன்னும் 32000 பெண்களின் கதை!
இப்படிச் சொல்வது யார் தெரியுமா? எங்கு தெரியுமா?
ஒரு திரைப்பட முன்னோட்டத்தில்.
திரைப்படத்தின் பெயர் :- தி கேரளா ஸ்டோரி (The Kerala Story)
திரைப்படத்தில் ஷாலினியாகத் தோன்றும் அடா ஷர்மா இப்படி முன்னோட்டத்தில் கூறி அனைவரையும் திகைக்க வைக்கிறார்.
ஆதி சங்கரரின் ஜன்ம பூமியில் இப்படி ஒரு அவலம் என்பதை நினைத்தாலே மனம் திகைக்கிறது.
ஹிந்துப் பெண்மணிகளை வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றி அவர்களைத் தீவிரவாதிகளாக ஆக்குவதை கம்யூனிஸ அரசு கண்டுகொள்வதே இல்லை என்பது கூடுதல் செய்தி.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் The Kerala Story அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.
இந்தப் படத்தை இயக்கியவர் – விபுல் அம்ருத்லால் ஷா.
இந்திய திரைப்பட உலகில் குறிப்பிடத் தகுந்த தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர்.
இந்தப் படத்தின் முன்னோட்டம் 2022 நவம்பர் 3ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
முன்னோட்டத்தின் நேரம் சுமார் ஒன்றரை நிமிடம்.
இதைப் பார்த்தவுடன் பொங்கியது காங்கிரஸ்.
இதைத் தடை செய்ய வேண்டும் என்றது.
கேரள போலீஸ் வழக்கு ஒன்றைப் பதிவு செய்திருக்கிறது.
32000 என்ற எண்ணிக்கை தவறு என்று கூறினர் சிலர்.
ஆனால் படத் தயாரிப்பைச் சேர்ந்தவர்களோ இது சரி தான், இதற்கான சரியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என்கின்றனர்.
இந்த எண் என்னுடையது அல்ல. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வந்த தகவல் இது. உமன் சாண்டி கேரள முதல் மந்திரியாக இருந்த போது அவரே அசெம்பிளியில் இதைக் கூறி இருக்கிறார். இதற்கான சரியான ஆவணங்கள் என்னிடம் உள்ளன.
இது தயாரிப்பு பக்கத்திலிருந்து வந்த செய்தி.
மூலம் ஆங்கிலத்தில் :-
This figure (32,000) is not mine. It was a piece of news in The Times of India… one thing I can tell you is that Oommen Chandy, the (then) chief minister of Kerala, had placed this number in the state assembly. So this is not my number, I have got all the documents with me,” he was quoted as saying by Alt News.
12 ஆண்டுகளில் 32000 பெண்கள் இப்படி மதம் மாற்றப்பட்டுள்ளனராம்!
படத்தைப் பார்த்து உண்மைகளைக் கண்டறிந்து மத்திய அரசு ஷாலினிகளின் உண்மை நிலவரங்களைக் கண்டறிய வேண்டும்.
இனியும் ஷாலினிகள் பாத்திமாக்களாக வலுக் கட்டாயமாக ஆக்கப்படக் கூடாது.
இதில் இருவித கருத்துக்களே இருக்க முடியாது!
2023 ஆம் வெளியீடு என்று எதிர்பார்க்கப்படும் கேரளா ஸ்டோரி வருமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!
***
Tags- Kerala story, film, கடத்தப்பட்ட, 32000, கேரளப் பெண்கள் , சோகக் கதை
எந்த நாளில் புத்தாடை அணியலாம் என்று அம்பலவாணர், முதல் பாட்டில் சொல்கிறார் ஞாயிறு, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் புத்தாடைகளை அணிக! என்கிறார்.
பின்னர் 3 பாடல்களில் சகுனங்கள் பற்றிப் பாடி, ஒரு பெரிய லிஸ்ட்-ஐ நமக்கு விட்டுச் சென்றுள்ளார் அறப்பளீசுர சதகம் எழுதிய அம்பல வாணக் கவிராயர் .
நாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நாட்களில் யாரவது புதுச் சட்டை போட்டுக்கொண்டு வந்தால் கோடிக் கிள்ளு என்று சொல்லி அந்தப் பையனைக் கிள்ளுவோம். அவ்வாறு நானும் கோடி உடுத்திய நாட்களில் கிள்ளு வாங்கியிருக்கிறேன். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை
xxxx
மூன்று பாடல்களில் அவர் சகுனம் பற்றிப் பாடியதிலிருந்து அதில் அவருக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையை அறிய முடிகிறது.
சங்க இலக்கியத்தில், காட்டில் வேட்டை ஆடப் புறப்பட்ட காட்டுப் பன்றி கூட சகுனம் பார்த்ததாக உள்ளது
சகுன சாஸ்திரம் பற்றிய குறிப்புகள் தமிழில் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதைப் போல சம்ஸ்க்ருதத்தில் கூட காணமுடியாது. ஸம்ஸ்க்ருதத்தில் அதற்காகவே உள்ள தனி நூலை விட்டுவிட்டால் பொதுவாக ராமாயணம், மஹாபாரதம், காளிதாசன் காவியங்கள் போன்ற நூல்களில் அங்குமிங்கும் குறிப்புகள் காணக்கிடக்கின்றன. ஆயினும் தமிழில் சங்க நூல்கள் என்ற 18 மேல்கணக்கு நூல்களிலும் காணப்படும் சகுனக் குறிப்புகளைப் போல ஒரே இடத்தில், வேறு எங்கும் காண முடியாது.
தொல்காப்பியம் துவங்கி சங்க நூல்கள் 18-லும் சுமார் 25 இடங்களுக்கு மேல் சகுனக் குறிப்புகள் இருக்கின்றன. சங்க நூல்களான பத்து ப்பாட்டுக்கும் எட்டுத் தொகைக்கும் பின்னர் எழுந்த சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களில் மேலும் பல குறிப்புகள் உள்ளன. சிங்கார வேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியும் அறப்பளீசுர சதகம் போல நீண்ட சகுனப் பட்டியலைத் தருகிறது ; திருக்குறளில் தும்மல் சாஸ்திரம் வருகிறது. தமிழ்ப் பழமொழிகளில் நிறைய சகுன சாஸ்திரக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன. கம்பராமாயணத்தில் இன்னும் அதிகமாகக் கிடைக்கின்றன
நரி இடமாகப் போனால் என்ன, வலமாகப் போனால் என்ன,, மேலே விழுந்து பிடுங்காமல் போனால் போதும்
ஊருக்கெல்லாம் சோதிடம் சொல்லும் கெளலி (பல்லி ) கழனிப் பானையில் விழுந்ததாம் –இப்படி நிறைய உள்ளன.
தொல்காப்பியத்தில் தலைவனுக்கு பிறந்த நாள் அடிப்படையில் ஜாதகம் கணித்து வருங்காலம் உரைப்பது இளம்பூரணர் உரையால் நமக்குத் தெரியவருகிறது . அதில் பறவை சாஸ்திரம் ‘புள்’ என்று சொல்லப்பட்டுள்ளது ஆனந்த விகடன் அகராதி நிமித்தம், நிமித்திகன் என்ற சொற்களுக்கு சோதிட அடிப்படையில் பொருள் கூறுகிறது. சகுனம், நிமித்தம் என்பதெல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள். தமிழில் விரிச்சி, குறி சொல்லுதல் நல்ல நேரம், இடை அறிதல் , செவ்வியறிதல் என்ற சொற்களில் இதைக் காண்கிறோம். தும்மல், கண் துடிப்பு ஆகிய தனிச் சொற்களும் சகுனத்தைக் காட்டும்.
சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் பயணம் செய்யக்கூடாத திசைகளை வாரசூலம் என்ற பாடல்களில் காணலாம் அப்படி பயணம் செய்ய நேர்ந்தால் என்ன பரிகாரம்/ தானம் கொடுக்க வேண்டும் என்றும் உள்ளது. திருமூலர் திருமந்திரத்திலும் வாரசூலை உள்ளது. இதோ தொல்காப்பியக் குறிப்பு
அச்சமும் உவகையும் எச்சமி ன்றி
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலம் கண்ணிய ஓம்படை உளப்பட
-தொல் . புற .30
அச்சமாவது தீமை வரும் என்று அஞ்சுதல் , உவகையாவது நன்மை வரும் என்று மகிழ்தல் ; நாளாவது நன்னாள், தீய நாள் ; காலம் கண்ணுதலாவது வருங்காலம் குறித்தல் என்று இளம்பூரணர் விளக்கம் அளித்துள்ளார்
நல்ல சகுனங்கள் என்ன?
62. சகுனம் – 1
முதல் பாடலில் எந்த எந்த பிராணிகள் வலமிருந்து இடமாகச் சென்றால் நல்லது என்று நீண்ட பிராணிகள் பட்டியல் தருகிறார். பலரும் பயப்படும் ஆந்தை, பூனை கூட குறுக்கே போகலாம். ஆனால் வலதா இடதா என்பது முக்கியம். அவை மேலே இடிக்கக்கூடாது , கைகால்களில் அகப்படக்கூடாது, தும்மல் இருமல் போடக்கூடாது அவை எல்லாம் நல்ல தல்ல என்கிறார் அமபலவாணர்.
XXX
63. சகுனம் – 2
சகுனம் பற்றிய இரண்டாவது பாடலிலும் எந்த பிராணிகள் வலமாக வந்தால் நல்லது என்று சொல்கிறார். இறுதியில் என்ன என்ன ஒலிகள் காதில் விழுந்தால் நல்லது என்றும் ஒரு பட்டியல் கொடுக்கிறார்.
xxxx
கெட்ட சகுனங்கள் என்ன ?
64. சகுனம் – 3
சகுனம் பற்றிய மூன்றாவது பாடலில் தலைவிரி கோலமாக வருவோர், ஒரு பிராமணன் வருதல் முதலியன கெட்ட சகுனம், இரட்டை பிராமணர், அழகிய சுமங்கலிகள் , வண்ணான் , பால்குடம் முதலியன நல்ல சகுனம் என்பார்.
வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் ஸம்ஹிதாவில் சகுனங்கள் பற்றிப் பாடியுள்ளார்
சகுனம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு பறவை என்று பொருள்; பறவைகள் பறப்பதை ஒட்டி எழுந்த சாஸ்திரம் சகுன சாஸ்திரம் ஆகும். பஞ்சாங்கத்தில் இன்றும் கூட பல்லி சாஸ்திரம், பஞ்ச பட்சி சாஸ்திரம் ஆகியன பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
ரிக் வேத காலம் முதல் சகுன சாஸ்திரம் இருந்து வருகிறது
ஹைட்ரஜன் வாயு பற்றிய சுவையான விஷயங்களைத் தொடர்ந்து காண்போம்.
ஹைட்ரஜன் Hydrogen என்ற சொல் கிரேக்க மொழியில் பிறந்தது; ஹைட்ரோ Hydro என்றால் தண்ணீர் ஜெனி Gene என்றால் தோற்றுவிப்பது (ஜனனி= தாயார் என்பது சம்ஸ்க்ருதம்)
பிரபஞ்சத்தின் 88 சதவிகிதம் ஹைட்ரஜன் வாயுவால் நிரம்பி இருக்கிறது.
மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு (Big Bang) நிகழ்ந்த காலத்தே, மூன்று மூலகங்கள்/ தனிமங்கள் பிறந்தன ; அவை ஹைட்ரஜன் வாயு , ஹீலியம் வாயு மற்றும் லிதியம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தில் ஒவ்வொரு வினாடியும் பல கோடி ஹைட்ரஜன் குண்டுகள் வெடித்த வண்ணமுள்ளன. இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்னும் வாயுவை உண்டாக்கும்போது இந்த பிரம்மாண்டமான சக்தி கிடைக்கிறது . பூமியிலும் விஞ்ஞானிகள் இவ்வாறு சோதனை முறையில் ஹைட்ரஜன் குண்டுகளை வெடித்தனர்.
அணுகுண்டு (Atomic bomb) என்பது யுரேனியம், ப்ளூட்டோனியம் போன்ற உலோகங்களின் அணுவைப் பிளப்பதாகும் ; ஹைட்ரஜன் குண்டு (Hydrogen Bomb) இதற்கு நேர் மாறானது; இரண்டு அணுக்களை இணைப்பதாகும் .
ஹைட்ரஜன் குண்டு , முன்னர் அமெரிக்கா உபயோகித்த சின்ன அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்தவை. இரண்டாவது உலக மஹாயுத்தத்தின்போது அமெரிக்கா 2 ஜப்பானிய நகரங்கள் மீது சின்ன அணு குண்டுகளை போட்டு ஒரு நொடியில் இரண்டு லட்சம் பேரைக் கொன்றது. அது வெளியிட்ட சக்தி 10,000 TNTடிஎன்டி க்கு சமமானது. ஒரு ஹைட்ரஜன் குண்டு ஒரு லட்சம் TNT டி.என்.டி வெடிமருந்துக்குச் சமமானது.
பெரிய ஹைட்ரஜன் குண்டுகள் மில்லியன் டன் TNT டி என் டி வெடிமருந்து வெடிப்பதற்குச் சமமானவை
சூரியன் என்பது நட்சத்திர வகைகளில் சிறிய நட்சத்திரம்தான். அதில் ஒவ்வொரு வினாடியும் 60 கோடி டன் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப்படுகின்றது
இனி ஹைட்ரஜன் வாயு பற்றிக் காண்போம்
பூமியின் ஈர்ப்பு விசையையும் தாண்டித் தப்பித்துச் செல்லவல்லது இந்த வாயு. குரு (Jupiter) என்னும் வியாழன் கிரகம் அளவுக்கு ஈர்ப்பு விசை இருந்தால்தான் இதை பிடித்துவைக்க முடியும். கள்ளனுக்கும் குள்ளன் ஹைட்ரஜன்!
மருத்துவத்தில் ஹைட்ரஜன்
நம்முடைய உடலில் பெரும்பாலும் தண்ணீர்தான் உள்ளது. ஒரு நாளைக்கு மனிதனுக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் தேவை. இதில் பாதி தண்ணீர் மூலமும், மீதிப்பாதி உணவு வகைகளிருந்தும் நமக்கு கிடைக்கிறது
உடலில் உள்ள தண்ணீரை 65 சதவிகிதம் என்றும் அதில் ஹைட்ரஜனின் அளவு 11 சதவிகிதம் என்றும் ஆராய்சசியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் இது உள்ளது; குறிப்பாக DNA டி என் ஏ என்னும் மரபணுவில் இருக்கிறது நம்முடைய உடலில் உள்ள ரத்தம் பொதுவாக அமிலத் தன்மை (acidic) வாய்ந்தது. உடலில் தண்ணீர் வற்றிப்போன நிலையில் (Dehydrated Condition) , தண்ணீரை உடனே கொடுத்தால் மாரடைப்பு வந்துவிடும். ஆகையால் சொட்டுச் சொட்டாக ஏற்றுவர். ஏனெனில் இதயம் திடீரென்று அதிகத் தண்ணீரை ஏற்காது.
இதை மருத்துவ ரீதியில் விளக்குகிறார்கள். அதாவது இருதயத்தின் தசைகளில் உள்ள சோடியம் பொட்டாசியம் ‘அயான்’களின் சமச் சீர் நிலையை (It upsets the balance of sodium , potassium ions in heart muscle) பாதிக்கிறது. இருதய நோயுள்ளவர்களின் இருதய திசுக்களில் சோடியம் – ஹைட்ரஜன் பரிமாற்றம் ( exchange of sodium, hydrogen ions in heart tissues )முக்கிய பங்கு வகிக்கிறது.
தண்ணீர் இல்லாமல் மனிதன் வாழமுடியாது; இதையே ஹைட்ரஜன் இல்லாமல் வாழ முடியாது என்று சொன்னாலும் தவறில்லை
xxxx
வரலாறு
1671-ல் இதை ராபர்ட் பாயில் (Robert Boyle) என்பவர் சோதனைச் சாலையில் உருவாக்கினார். ஆயினும் ஹைட்ரஜனைக் கண்டுபிடித்த பெருமை லண்டனில் வசித்த பைத்தியக்கார (eccentric), பணக்கார ஆராய்ச்சியாளர் ஹென்றி காவென்டிஷுக்கு (Henry Cavendish 1731-1810) தான் கிடைத்தது . அவர் லண்டனில் தனி சோதனைச் சாலை வைத்து பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார். இதனால் இவரை ஒரு மாதிரியான ஆள் (eccentric) என்று சொல்லத் துவங்கினர். பிரெஞ்சு ஆராய்ச்யாளர் அந்தோணி லவாய்ச்சியர் (Antoine Lavoisier) தான், இதற்கு ஹைட்ரஜன் என்று பெயர் சூட்டினார்.
xxx
ஹைட்ரஜன் பலூன் (Hot Air Balloons) பயணம்
இந்த வாயு மிகவும் லேசானதால் இதை பெரிய பலூனில் ஏற்றி , அத்துடன் இணைத்த கூடை வடிவ பயணப்பெட்டியில் மனிதர்களை வான வெளிக்கு அழைத்துச் சென்றனர். குறிப்பாக சுற்றுலாத் தலங்களை மேலேயிருந்து காண இது பயன்பட்டது . பின்னர் ஹைட்ரஜன் விமானங்களையும் பறக்கவிட்டனர் ; இவைகளை ஷெப்பலின் (ZEPPELINS ) என்று அழைப்பர். பல ஐரோப்பிய நகரங்களுக்கு இடையில் இவை பயணப் போக்குவரத்துக்கு பயன்பட்டன. 1914ல் முதல் உலகப்போர் வெடித்தபோது 35, 000 பயணிகள் வரை இதை பயன்படுத்தினர். ஆயினும் 1937ம் ஆண்டில் ஏற்பட்ட விபத்து இதற்க்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துத் தந்தது. ஹைட்ரஜன் வாயு கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டு 35 பேர் இறந்தனர் . முதல் உலக யுத்தத்தில் லண்டன் மீது குண்டு போடக்கூட, ஜெர்மனி ஹைட்ரஜன் (Zeppelins) பலூன்களைப் பயன்படுத்தியது
ஹைட்ரஜன் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய வாயு.
xxxx
பொருளாதார உபயோகம்
பெரும்பாலும் ரசாயன தொழிற்சாலைகளில் இந்த வாயு பயன்படுகிறது. அமெரிக்காவில் ஹைட்ரஜன் வாயுவை, நாடு முழுதும் கொண்டுசெல்ல தனி குழாய்ப்பாதையே இருக்கிறது. Ethanol எதனால், Methanol மெதனால் தயாரிக்கும் ஆலைகளில். அம்மோனியா உரம் தயாரிக்கும் ஆலைகளில், இது அதிகம் பயன்படுகிறது. திரவ நிலையில் இருக்கும் தாவர எண்ணெய்களை ‘மார்ஜரின்’ போல கட்டியாக மாற்றும் ஆலைகளிலும் இதற்கு வேலை உண்டு . உயர்ந்த வெப்பம் தேவைப்படும் வெல்டிங் Welding தொழிற்சாலைகளில் சிறிதளவு பயன்படுகிறது.
அமெரிக்கா , விண்வெளி ஆராய்ச்சிக்கும் இதைப்பயன்படுத்துகிறது திரவ நிலையிலுள்ள ஹைட்ரஜனைப் பயன்படுத்தி பிரம்மாண்டமான ரயில் மற்றும் சாலை வாகனங்களை இயக்குகிறது.
விண்வெளிக்குச் சென்று திரும்பிவரும் Space Shuttle ஸ்பேஸ் ஷட்டில் விண்கலத்துக்கு 5 லட்சம் லிட்டர் திரவ நிலை ஆக்சிஜனும் 15 லட்சம் லிட்டர் திரவ நிலை ஹைட்ரஜனும் தேவை . இவைகளைச் சேமித்துவைக்கவோ அதைவிட பெரிய டாங்குகள் (Tanks) தேவை.
xxx
ஹைட்ரஜன் பஸ்கள், கார்கள் (Hydrogen Buses and Cars)
இப்பொழுது ஐரோப்பிய நகரங்களில் ஹைட்ரஜன் பஸ்களையும் கார்களையும் அதிகம் பயன்படுத்துகின்றனர் பெட்ரோலைவிட விலையும் குறைவு;. காற்று மாசுபடுவதும் இல்லை..
‘அவன் தண்ணீரில் கூட கார் ஓட்டுவான்’ என்று கிண்டலாகச் சொன்ன மொழி இப்பொழுது உண்மையாகி விட்டது . தண்ணீரை ஹைட்ரஜன், ஆக்சிஜன் என்று பிரித்து அவற்றின் சக்தியில் வாகனங்கள் ஒட்டப்படுகின்றன.
ஹைட்ரஜன் பஸ்களும், கார்களும் லண்டனில் அதிகம் பயன்படுகின்றன. மின்சக்தி அல்லது ஹைட்ரஜன் சக்தி அல்லது இரண்டையும் கலந்த (Hybrid Vehicles) சக்தியை மட்டுமே பயன்படுத்த லண்டன் சபை திட்டமிட்டுள்ளது . எதிர்காலத்தில் புறச்சூழலை மாசுபடுத்தும் பஸ்கள் இருக்கக்கூடாது என்பது அவர்கள் அணுகுமுறை. இத்தகைய பஸ்கள் பூனை போல சப்தம் இன்றி இயங்குகின்றன. பின்னால் வாகனம் வ்ருவதை சப்தத்தால் அறிய முடியாது.!
xxx
ரசாயன குணங்கள் Chemical Properties
குறியீடு H (எச்)
அணு எண் -1
உருகு நிலை – மைனஸ் 259 டிகிரி C
கொதி நிலை – மைனஸ் 253 டிகிரி C
இந்த வாயு நிறமற்றது; மணமற்றது எளிதில் தீப்பிடித்து எரியக்கூடியது (Highly inflammable) .
ஆர்த்தோ Ortho ஹைட்ரஜன் , பாரா Para ஹைட்ரஜன் என்ற இரண்டு நிலையில் காற்றில் உள்ளது .
மூலக உலகிலேயே ஐசடோப்புகளுக்கு தனிப் பெயர் உடைய பெருமை இந்த வாயுவுக்கு மட்டுமே உண்டு.
ஒரு ஐசடோப்- டெட்டூரியம் (Deuterium ), மற்றொன்று- ட்ரைஷியம் (Tritium); மூன்றாவது ஐசடோப் -ஹைட்ரஜன் 1 (Hydrogen 1) என்று அழைக்கப்படும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருள்வாயே! – 10 (85 முதல் 94 முடிய)
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
85) சிதம்பரம்
மோக வாரிதி தனிலே நாடொறு
மூழ்கு வேனுன தடியா ராகிய
மோன ஞானிக ளுடனே சேரவு மருள்வாயே
பாடல் எண் 484 – ‘தாது மாமலர்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : காமக்கடலில் தினமும் மூழ்குகின்ற நான் உன்னுடைய அடியவர்களாகிய மௌன ஞானிகளுடன் சேர்ந்து பழகுவதற்கு அருள்வாயாக!
86) சிதம்பரம்
விலைமாதர்
காத லாயவ ரோடு பாழ்வினை
மூழ்கி யேழ்நர காழு மூடனை
காரி பாருமை யாசி வாபத மருள்வாயே
பாடல் எண் 486 – ‘நீல மாமுகில்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வேசிகளுடன் ஆசை பூண்டவனாய் பாழ்படுத்தும் வினையிலே மூழ்கி, ஏழு நரகங்களிலும் ஆழ்ந்து விடும் முழு முட்டாளாக இருப்பினும், என்னை கண் பார்த்து அருளும் ஐயா, சிவபதம் தந்து அருள்வாயாக!
87) சிதம்பரம்
அவரோடே
பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர
கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன
பதம்பற் றிப்புக ழானது கூறிட அருள்வாயே
பாடல் எண் 489 – ‘இணங்கித் தட்பொடு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இத்தைகைய பொது மகளிரோடு இன்பத்தை அனுபவித்துக் கொண்டு, கொடுமை வாய்ந்த பெரிய நரகத்தை அடைந்து பிணமாகி விடாமல், உனது திருவடியைப் பற்றி உன் திருப்புகழைக் கூற எனக்கு அருள்வாயாக!
88) சிதம்பரம்
அருவரு வொழிய வடிவுள பொருளை
அலம்வர அடியேற் கருள்வாயே
பாடல் எண் 494 – ‘தறுகணன் மறலி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வெறுப்பேற்றும் செயல்கள் ஒழிந்து, பேரின்ப வடிவம் உள்ள சற்குணப் பொருளை அமைதியோடு அறியும்படி எந்தனுக்கு நீ
அருள்வாயாக!
89) சிதம்பரம்
ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர
மாகக்கொள வேமுத்தியை யருள்வாயே
பாடல் எண் 507 – ‘நீலக் குழலார்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஆசையுடன் உனது திருவடியின் மேல் புத்தியை வைத்து மெய்ஞ் ஞானத்துடன் நற்பலனைப் பெறவே முக்தியை அருள்வாயாக!
90) சிதம்பரம்
இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி
இப்படிக்கு மோக்ஷ மருள்வாயே
பாடல் எண் 510 – ‘மச்ச மெச்சு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இத்தகைய உடம்பை ஒழித்து, அந்த சுத்த, அழியாத தேகத்தில் என்னைப் புகுத்தி, இவ்வாறு வீட்டு இன்பத்தைத் தந்து அருள்வாயாக!
91) சிதம்பரம்
சித்தெ லாமொரு மித்துன தாறினம்
வைத்து நாயென ருட்பெற வேபொருள்
செப்பி யாறுமு கப்பரி வோடுணர் வருள்வாயே
பாடல் எண் 514 – ‘முத்த மோகன‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சித்தி எல்லாம் ஒன்று கூடி அமைந்துள்ள உன்னுடைய ஆறு எழுத்தை முறைப்படி வைத்து, அடியேன் உன் திருவருளைப் பெறுமாறு (அந்த ஆறெழுத்தின்) பொருளை விளக்கிச் சொல்லி, உனது திருமுகங்கள் ஆறும் கருணை கொண்டவனாய் ஞானத்தை அருள்வாயாக!
ஆறுமுகங்களுக்கான விளக்கங்கள் ஏராளம் உள்ளன.
ஏறு மயில் ஏறி எனும் பாடலைக் காணலாம்.
சக்திகள் ஆறு : ஆதி சக்தி, இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி, பராசக்தி, குடிலா (ஓங்கார) சக்தி
பீஜங்கள் ஆறு : அகரம், உகரம், மகரம், நாதம், விந்து, கலை
அத்துவாக்கள் ஆறு : மந்திரம், பதம், வண்ணம், புவனம், கலை, தத்துவம்
இறைக்குணங்கள் ஆறு : ஸர்வக்ஞத சக்தி – பூரண அறிவுடன் இருக்கும்.
நித்ய திருப்தி சக்தி – எல்லா அனுக்ரகமும் புரியும்.
அநாதிபோத சக்தி – எல்லா உயிர்களுக்கும் ஞானத்தைத் தரும்.
ஸர்வ சுதந்திர சக்தி – ஆன்மாக்களுக்கு முக்தியைத் தரும்.
அலுப்த சக்தி – ஐந்தொழிலைப் புரியும்.
அநந்த சக்தி – எல்லா ஆற்றலையும் உண்டாக்கும்.
குணங்கள் ஆறு – ஐஸ்வர்யம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம்.
92) சோலை மேவிய குன்று
பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய
பண்புசேர் பாத தாமரை யருள்வாயே
பாடல் எண் 516 – ‘வஞ்சமே கோடி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வரிசையாக தேவர்கள் தொழ நின்ற பெருமை விளங்கும் பண்புகள் பொருந்திய திருவடித் தாமரைகளை எனக்கு அருள்வாயாக!
93) கயிலை மலை
இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ
ரிளையவ னெனவித் தார மருள்வாயே
பாடல் எண் 517 – ‘திருநிலம் ‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, (அத்தகைய கலப்பால்) இவ்வுடல் நிலைபட்டதெனப் பொருந்தி, தேவர்கள் இவன் இளையவன் என்னு என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும் பேற்றை அருள்வாயாக!
94) கயிலை மலை
ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ
நாளுங் களிக்கபத மருள்வாயே
பாடல் எண் 518 – ‘தேனுந்து முக்கனிகள் ‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சிவ ஞானம் பெருகி வரவும், மகிழ்ச்சி ஊறும் சிவானந்த மோக்ஷத்தில், அடியேன் எந்த நாளும் மகிழ்ந்திருக்குமாறு நின் திருவடையைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
இறைவனின் கருணையால் விளையாடுகிறேன், ஓடுகிறேன், படிக்கிறேன் , தினமும் (நல்லவற்றைக்) காண்கிறேன், கேட்கிறேன், முகர்கிறேன் . இரவில் சுகமாய் தூங்குகிறேன்.
Xxx
ஜரா மரண துக்கேஷு ராஜ்ய லாப சுகேஷு ச
ந பிபேமி ந ஹ்ருஷ்யாமி தேன ஜீவாமி அநாமயஹ
மூப்பு, மரணம், துயரம், அரசாங்க சலுகைகள், சுகங்கள் இவைகள் பற்றி பயப்படுவது இல்லை; (அதாவது வருமா வராதா என்று கவலைப்படுவதில்லை). விரும்பியது கிடைத்ததால் சந்தோஷப்படவும் மாட்டேன் .; ஆகையால்தான் நான் நோயற்றவனாக வாழ்கின்றேன்.
xxxx
பிசிராந்தையார் யார்?
சங்க காலப் புலவர். அவர் பாடிய நரை முடி இல்லாமைப் பாடல் மிகவும் பிரஸித்தம்:
“ஐயா, தொண்டுக் கிழமாகிவிட்டீரே; முடி மட்டும் கருக்கவில்லையே; ஏதேனும் கூந்தல் வளர் தைலம் தடவுகிறீரோ” என்று எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். அவர் சொல்லுகிறார்:- “ஐயன்மீர் என் வீட்டிலும் ஓம் சாந்தி, நாட்டிலும் ஓம் சாந்தி, என் மனதிலும் ஓம் சாந்தி; இப்படி சாந்தி நிலவுகையில் முடி எப்படி நரைக்கும்?” என்று பாடுகிறார்:–
யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதிராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர் என் இளையரும்: வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதன் தலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே
——(புறநானூறு ,பாடல் எண். 191)
பொருள்:-
நுமக்குச் சென்ற ஆண்டுகளோ பலவாயின; இருந்தும் நரைமுடி காணவில்லை. இது எப்படி? என்று கேட்கிறீர்களா?
என் மனைவி நல்லவள்; என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்; என்னிடம் பணிபுரியும் ஏவலரோ நான் ‘எள் என்றால் எண்ணை யாக’ நிற்பர்; குறிப்பறிந்து ஒழுகும் தன்மையர். என் அரசன், எந்த தவற்றையும் செய்யான்; இதற்கெல்லாம் மேலாக என் ஊரிலுள்ள அறிஞர்கள் புலன்களை வென்று, உயர்ந்த குறிக்கோள் உடையவர்கள். (எனக்கு கவலையே இல்லை; கவலை இல்லாதோருக்கு நரை முடி வராதே!)
புறநானூற்றிலுள்ள பாடல் 191
Xxx
இந்துக்கள் பெரிய சைக்காலஜிஸ்ட்கள் Psychologists ; மன இயல் நிபுணர்கள் ; உள்ள இயல் அறிஞர்கள் ; கவலை இல்லாத மனிதனாக வாழ்க்கை நடத்தினால் தலை முடி கூட கருக்காது; 100 ஆண்டுகள் நோய் நொடி இல்லாமல் வாழலாம் . ஆனால் அப்படிக் கவலை இல்லாமல் வாழ மூன்று அம்சங்கள் தேவை :-
ஓம் சாந்தி – மனதில் அமைதி
ஓம் சாந்தி – குடும்பத்தில் அமைதி
ஓம் சாந்தி – நாட்டில் அமைதி
நான் அமைதியாக இருக்கிறேன். இதில் வியப்பில்லை ; என் மனைவி, மகன்கள், வீட்டு வேலைக்காரர்கள் அனைவரும் நான் எண்ணியத்தைச் செய்து முடிக்கின்றனர் . அது மட்டுமா ? நான் வசிக்கும் ஊரில் சத் சங்கம் இருக்கிறது. அங்கு எல்லோரும் ஆய்ந்து, அவிந்து, அடங்கிய, கொள்கைச் சான்றோர்.
ஆதாவது அவர்கள் எல்லோரும் படித்தவர்கள் ; கற்கக் கசடறக் கற்று அதன் பின்னர், அதற்குத் தக நின்றவர்கள். அதாவது படித்த அகம்பாவம் இன்றி , வித்யா விநய சம்பந்னே என்றவாறு அடக்கம் மிக்கவர்கள் ; அது மட்டுமல்ல; கட்சிமாறிகள் அல்ல. அவர்கள் கொள்கைச் சான்றோர்.; தான் ஏற்ற தருமத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு நின்று ஒழுகும் கொள்கை உடையோர் . இது பழங்காலத் தமிழகத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது .
Xxxx
கவலை இல்லாத மனிதன்.
கவலை இல்லாத மனிதன் , 1960 ஆம் ஆண்டுத் திரைப்படம்
இந்தத் திரைப்படத்தில் உள்ள பாடல் ஓரளவுக்கு கவலை இல்லாத மனிதன் கொள்கையைக் காட்டுகிறது
“கவலை இல்லாத மனிதன்.
கவலை இல்லாத மனிதன்.
உலகத்தை அறிந்தவன்
துணிந்தவன் அவனே
கவலையில்லாத மனிதன்
போவதைக் கண்டு கலங்காமல்
வருவதைக் கண்டு மயங்காமல்
மெய் தளராமல் கை நடுங்காமல்
உண்மையை, பொய்யை, உணர்ந்தவனே
உலகத்தை அறிந்தவன்
துணிந்தவன் அவனே
கவலையில்லாத மனிதன்
வாழ்க்கை என்பது நாடகமே
வந்து போனவர் ஆயிரமே
கொண்டு சென்றவர் யாரும் இல்லை
கொடுத்துப் போனதும் நினைவும் இல்லை
அந்த நாடகம் இன்னும் முடியவில்லை
மறுநாளைக்கு வருவதும் தெரியவில்லை
உலகத்தை அறிந்தவன்
துணிந்தவன் அவனே
கவலையில்லாத மனிதன்.
வாழ்வை அறிந்தவன் சம்சாரி
வாழப் பயந்தவன் சன்னியாசி
கண்ணீர் வடிப்பவன் மூடனடா
காலத்தை வென்றவன் வீரனடா
நல் இன்பத்தைத் தேடி உறவாடு
நீ எழுந்திடு மனிதா விளையாடு
Xxxxx
இதை பகவத் கீதையிலும்– 12 ஆவது அத்தியாயத்தில் (12-13 to 12-20) — கிருஷ்ண பரமாத்மா விளக்குகிறார் . கவலை இல்லாத மனிதன் இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவன் ; தமிழில் இதை இருமை அல்லது இரட்டை என்பர். சம்ஸ்க்ருதத்தில் த்வந்த்வம் என்பர்; இன்ப துன்பம் , சீத உஷ்ணம், இரவு பகல், ஏற்ற தாழ்வு, பெரியோர் சிறியோர் — இவைகளைப் பொருட்படுத்தாமல் சம பார்வை உடையவர்கள் ; கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே பாடலிலும் இக்கருத்து வருகிறது.
—subham—
Tags-கவலை இல்லாத மனிதன், யாண்டு பலவாக நரையிலவாகுதல், பிசிராந்தையார்
பிரியாடிக் டேபிள்(Periodic Table) என்னும் மூலக (தனிம)அட்டவணையில் உள்ள 118 மூலகங்களில் இதுவரை 45 மூலகங்கள் பற்றிய சுவையான விஷயங்களைக் கண்டோம் . இன்று 46 ஆவது தனிமம் ஆன ஹைட்ரஜன் பற்றிய சுவையான விஷயங்களை முதலில் காண்போம்.
இதோ ஹைட்ரஜன் (Hydrogen) பற்றிய சுவையான விஷயங்கள் :–
ஹைட்ரஜன் வாயுதான் எல்லாவற்றிலும் முதல் பரிசு பெறுகிறது .
வாயுக்களில் மிகவும் லேசானது ஹைட்ரஜன் ;
மூலக அட்டவணையில் முதலில் நிற்பது ஹைட்ரஜன் ;
பிரபஞ்சம் தோன்றியபோது முதலில் தோன்றியது ஹைட்ரஜன் ;
பிரபஞ்சத்தில் அதிக அளவில் உள்ள மூலகம் ஹைட்ரஜன் ;
விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களும் நமது சூரியனும் பயன்படுத்தும் எரிபொருள் ஹைட்ரஜன் ;
உலக உயிரினங்களுக்கு மூலாதாரமாக விளங்கும் தண்ணீர் H₂O இருப்பதற் குக் காரணம் ஹைட்ரஜன் .
இது நடந்து கொள்ளும் முறை எல்லோரையும் வியப்பில் ஆழ்ந்த்துகிறது .
இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவும் சேர்ந்தால் தண்ணீர் H₂O கிடைக்கும் என்பது ரசாயனம் படிக்கும் மாணவர்களுக்குத் தெரிந்த தகவல்தான் . ஆயினும் இந்த தண்ணீர் மட்டும் விஞ்ஞானிகளுக்கு பல வியப்பான விஷயங்களைத் தெரிவிக்கிறது .
தண்ணீர் என்பது மிகவும் லேசான molecule மூலக்கூறு; இயற்கை விதிகளின் படி இது வாயு ரூபத்தில் இருக்கவேண்டும். ஆனால் அப்படியில்லை தண்ணீரைப்போல இரண்டு மடங்கு கனம் உடைய ஹைட்ரஜன் ஸல்பைட் Hydrogen Sulfide , வாயு உருவத்தில் இருக்கிறது.
திட உருவத்தில் உள்ள எல்லாம், திரவத்தைவிட கனமானது; இயற்கை விதிப்படி, அந்த திடப்பொருள், திரவத்தில் மூழ்கிவிடும். தண்ணீர் மூ லக்கூற்றை 0 டிகிரியாகக் குளிர்விக்கையில் அது ஐஸ் கட்டியாக மாறுகிறது. இது ஏன் தண்ணீருக்குள் மூழ்காமல் மிதக்கிறது என்பதும் விஞ்ஞானிகளுக்கு விளங்ககாத புதிராக இருந்தது ; இப்போது ஒருவழியாக ஒரு விஞ்ஞான விளக்கம் கிடைத்தாலும் அதன் நடவடிக்கை ஒரு வினோதமே .
அறிவியல் தெரிந்தவர்கள் மட்டும் கீழேயுள்ள விளக்கத்தைப் படியுங்கள்,
The reason is that each water molecule in ice forms four hydrogen bonds to surrounding water molecules and in doing so arranges itself into a crystal with a very open lattice, making it less dense than liquid water, so it floats.
தமிழில் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அது நான்கு கைகளை உண்டாக்கிக்கொண்டு அருகிலுள்ள 4 கை பெண்களுடன் கை கோர்த்துக்கொண்டு ஜாலியாக நீச்சல் அடிக்கிறது
xxxx
தண்ணீரைப் புகழாத உலக இலக்கியங்கள் கிடையாது. உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதம் தண்ணீரைப் புகழ்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்துக்கள், பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள எந்தச் சடங்கினையும் செய்ய முடியாது. கோவிலில் விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்வது போல, பிராமணர்கள் ஒரு நாளைக்கு மூன்று தடவை மந்திரம் சொல்லி தலையில் தண்ணீரைத் தெளித்துக் கொள்ளுவர். 12 இறைவன் திருநாமங்களைச் சொல்லி தண்ணீரை இறைவனுக்கே அளிப்பர். காயத்ரீ மந்திரத்தைச் சொல்லியும் இறைவன் கொடுத்த தண்ணீரையே (குளம் அல்லது ஆற்றில்) இறைவனுக்குக் கொடுத்து தேங்க்ஸ்thanks சொல்லுவார்கள் ; அதாவது தண்ணீர் இல்லாத இந்துமத சடங்கு இல்லை. ஏனெனில் இந்துக்கள் வெளிநாட்டிலிருந்து வரவில்லை. கங்கை சிந்து நதிக்கரையில் பிறந்தவர்கள். வேற்று மதக்காரர்கள் தண்ணீரை அதிகம் பயன்படுத்துவதில்லை.
Xxx
மீண்டும் அறிவியலை விவாதிப்போம்
தண்ணீர் இல்லாவிடில் இந்த பூமி ஐஸ் கட்டி போல ஆகிவிடும். திரவ ரூபத்திலும் நீராவி ரூபத்திலும் உலகத்தின் வெப்ப நிலையை உயர்த்துவது தண்ணீர்தான் . தண்ணீர் என்பது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் உடையது என்பதை மறந்துவிடாதீர்கள் . அதனால்தான் இந்த தண்ணீர் பற்றி இங்கு கதைக்கிறோம்.
வாயு ரூபத்தில்/ வடிவில் உள்ள நீர், நமது காற்று மண்டலத்தில் 4 சதவிகிதம் இருக்கிறது. இது பூமியைச் சுற்றி கண்ணாடிப் பெட்டி வைத்துள்ளது போல இருப்பதால் காற்று மண்டலத்தை 30 டிகிரி C அதிகரிக்கிறது. அது இல்லாவிடில் பூமியின் சராசரி வெப்ப நிலை மைனஸ் 20 டிகிரியாக இருக்கும்; கூட்டிக் கழித்துப் பார்த்தால் பூமிக்கு சராசரி + 15 டிகிரி C வெப்பத்தைத் தருகிறது. இதே போல கடலில் உள்ள தண்ணீரும் பூமியின் வெப்பத்தை அதிகரிக்கிறது . வினோதமாக இல்லையா? தண்ணீர் இருந்தால் குளிரும் என்றல்லவா சொல்லுவோம்.
xxx
இன்னும் ஒரு அதிசயத்தைக் காண்போம் .
தண்ணீரை பானையில் வைத்து அடுப்பில் சூடேயேற்றினால் அது 100 டிகிரி C யில் ஆவி ஆகும். இது நாம் வசிக்கும் கடல் மட்டத்தில் உள்ள நகரங்களில் மட்டும்தான். உயரே போகப்போக அது மாறும்; ஏனெனில் மேலே செல்லச் செல்ல காற்றழுத்தம் குறைகிறது எவரெஸ்ட் சிகர உச்சியில் தண்ணீரைக் கொதிக்க வைத்தால் அது 75 டிகிரியிலேயே ஆவி ஆகிவிடும். அதற்கு நேர் மாறாக மிகவும் ஆழத்துக்குச் சென்றால், தண்ணீர் கொதிக்க 374 டிகிரி வெப்பம் தேவை. அதாவது தரை மட்ட காற்றழுத்தத்தைப்போல 220 மடங்கு அழுத்தம் இருக்கும். அதற்கும் மேலே போனால் வேறு ஒரு அதிசயம் நிகழும். தண்ணீர் ஆனது சூப்பர் கிரிட்டிக்கல் ப்ளூஉய்ட் Super Critical Fluid — திரவம் ஆகும். அப்படியானால் என்ன? அது எதையும் கரைத்து விடும். எண்ணெய் போன்ற பொருளும் கரைந்து விடும். அப்படிக் கரைகையில் அது பாதியாகச் சுருங்கி விடும்.
தாவரம் போன்ற பசுமைப்பொருட்களை அதில் வைத்தால் எரிந்துவிடும் சாக்கடைக் கழிவுகளை எரித்து அகற்ற இதை பயன்படுத்தலாமே என்ற யோசனைகளும் முன் வைக்கப்பட்டன. ஆனால அதற்கு ஒரு தடை உண்டு. இதன் சக்தி, தங்கம் போன்ற, அரிக்கவே முடியாத , உலோகக்கங்களையும் அரித்து விடும்.
xxx
தண்ணீர் பற்றிய கடைசி விஞ்ஞான அதிசயத்தை ப்பார்ப்போம் .
கன நீர் என்பதை D2O’ டி 2 ஓ’ என்பர் ; சாதாரண நீர் H₂O எச் 2 ஓ . இது ஹைட்ரஜனின் ஒரு ஐசடோப்பான டெடூரியம் (Deuterium) என்பதால் உண்டாகிறது. அணு உலைகளில் இந்த கன நீரைப் பயன்படுத்துகிறார்கள். இதை ஒருவர் குடித்தால் நீண்ட காலம் உயிர் வாழ முடியாது. ஏனெனில் நம்முடைய உடலில் உள்ள செல் களிலும் தண்ணீர் உள்ளது . கன நீர் இருந்தால் அவை சாதாரண முறையில் செயல்பட முடியாது.
xxx
தண்ணீர் புராணத்தை முடித்துக் கொண்டு ஹைட்ரஜன் புராணத்துக்கு வருவோம்.
சூரியனிலும் நட்சத்திரங்களிலும் ஒவ்வொரு வினாடியும் வெடித்துக்கொண்டு இருக்கும் பல்லாயிரம் கோடி ஹைட்ரஜன் குண்டுகள் பற்றிக் காண்போம்.
English words used in the article:Super Critical liquid, Heavy water, Deuterium , Atmospheric pressure
To be continued……………………………………………………..
tags- ஹைட்ரஜன் , தண்ணீர், கன நீர் Super Critical liquid, Heavy water, Deuterium , Atmospheric pressure
அறப்பளீசுர சதகம் பாடல் 58-ல் அறநெறிப்படி வாழ்வோர் வேறு அறங்கள் செய்ய வேண்டியதில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. ஏறத்தாழ புத்தர் சொன்னதுதான். அவர் கடவுள் பற்றி ஒன்றுமே பேசவில்லை; எட்டு அறநெறிக் கொள்கைகளை பின்பற்றினால் போதும் என்கிறார் ; வள்ளுவனும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றான். மேலும் பல குறள்களில் உலகமே கைகூப்பித் தொழும் என்று முடிக்கிறான்; அதாவது கொல்லாமை, வாய்மை, பிறர் பொருள் நயவாமை, சினமின்மை, யான், எனது என்னும் எண்ணம் இல்லாமை முதலியன எல்லோரையும் வணங்கச் செய்யும் என்கிறான். இவை அனைத்தும் இந்து மதக் கருத்துகள் என்றாலும் இந்து மதம் பல படிகளைச் (Steps) சொல்லி அதன் மூலம் மேலே வரச் சொல்கிறது.
இதோ அம்பலவாணர் கூற்று:-
ஒழுக்கம் உடையோருக்கு யாத்திரை தேவை இல்லை ;
கொலை களவு செய்யாதோருக்கு வேறு தர்மம் தேவை இல்லை;
ஆசையையும் கருமித்தனத்தையும் விட்டவர்களுக்கு வேறு அறம் தேவை இல்லை
உள்ளத்தில் தூய்மை இருந்தால் கங்கை நதியில் ஸ்னானம் செய்யப்போகவேண்டாம்
உன் தொண்டரை வணங்குவோர் உன்னை வணங்கத் தேவை இல்லை
நல்ல பிராமணர்களை போற்றுவோர் இறைவனுக்கு அர்ச்சனை செய்யத் தேவை இல்லை.
அறப்பளீசுர சதகம் 58. இவையே போதும்
பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்துளோர்
பூவலம் செயவேண் டுமோ?
பொல்லாத கொலைகள விலாதநன் னெறியுளோர்
புகழ்அறம் செயவேண் டுமோ?
நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்
நல்லறம் செயவேண் டுமோ?
நன்மனோ சுத்தியுண் டானபேர் மேலும்ஒரு
நதிபடிந் திடவேண் டுமோ?
மெய்யாநின் அடியரைப் பரவுவோர் உன்பதம்
விரும்பிவழி படவேண் டுமோ?
வேதியர் தமைப்பூசை பண்ணுவோர் வானவரை
வேண்டி அர்ச் சனைசெய் வரோ?
ஐயா றுடன்கமலை சோணா சலந்தில்லை
அதிபனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஐயாறுடன் கமலை சோணாசலம் தில்லை அதிபனே –
திருவையாறு, திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய நகரங்களின்
தீய கொலையும் களவும் அற்ற நல்லொழுக்கமுடையவர் புகழத்தக்க
அறங்களைச் செய்தல் வேண்டுமோ?, நையாத காமத்தை லோபத்தை
விட்டபேர் நல்லறம் செயவேண்டுமோ – மெலியாத ஆசையையும்
ஈயாமையையும் விட்டவர்கள் வேறு நல்ல அறத்தை நாடல்வேண்டுமோ?,
நல் மனோ சுத்தி உண்டானபேர் மேலும் ஒரு நதிபடிந் திடவேண்டுமோ –
நல்ல உளத்தூய்மை பெற்றவர்கள் வேறாக ஒரு தூய ஆற்றில் முழுகுதல் வேண்டுமோ?, நின் அடியரை மெய்யா(க) பரவுவோர் உன்பதம் விரும்பி
வழிபட வேண்டுமோ – உன் தொண்டரை உண்மையாக வணங்குவோர் நின் திருவடியைப் போற்றுதலும் வேண்டுமோ?, வேதியர் தமைப்பூசை
பண்ணுவோர் வானவரை வேண்டி அர்ச்சனை செய்வரோ – மறையவரை
வணங்குவோர் வானவரை விரும்பி மலரிட்டு வழிபடல் வேண்டுமோ?
(க-து.) நன்னெறியில் நிற்போர் வேறு அறங்கள் செய்ய
வேண்டியதில்லை.
XxxxXxxxx
ஆயிரத்தில் ஒருவர் யார்?
பாடல் 59.ல் பத்து, நூறு ஆயிரம் என்று டெசிமல் சிஸ்டப்படி அடுக்கி கோடி வரை எண்களைச் சொல்லி. யார் அப்படி கோடியில் ஒருவர் என்று முடிக்கிறார். புதுமையான அணுகு முறை. கிருஷ்ணர் கூட பகவத் கீதையில் ஆயிரத்தில் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர், என்று திரும்ப திரும்ப சொல்கிறாரே தவிர 10 முதல் கோடி வரை எண்களை பயன் படுத்தவில்லை.
பத்துக்கு ஒருவன் நல்ல பேச்சாளன் (இது நம்ம ஊர் பட்டிமன்ற கேஸுகள் )
நூற்றுக்கு ஒருவர் நல்ல பாடகர் ( இது நம்ம ஊர் சங்கீத சபா கேஸுகள் )
ஆயிரத்தில் ஒருவர் சங்கீத உபந்யாசம் செய்வோர் (இப்போது விசாகா ஹரி போன்றோர் உணமையிலேயே ஆயிரத்துக்கு ஒன்றாகிவிட்டது!)
பத்தாயிரத்தில் ஒருவர் இதன் சிறப்பை அறிந்தவர் .
லட்சத்தில் ஒருவர்தான் அவர்களுக்கு பொருளுதவி செய்கின்றனர்
கோடியில் ஒருவர்தான் த்ரிகால ஞானி
அது உண்மையே; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், ரமண மஹரிஷி , ராமகிருஷ்ண பரமஹம்சர் , சேஷாத்ரி சுவாமிகள் , மா ஆனந்த மயி போன்ற ஞானிகள் கோடியில் ஒன்றுதான்
பகவத் கீதையில் 7, 8, 11ம் அத்தியாயங்களில் 7 இடங்களில் ஆயிரம் என்ற சொற் பிரயோகம் வருகிறது
அறப்பளீசுர சதகம் 59. அரியர்
பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!
பாடுவோர் நூற்றில் ஒருவர்!
பார்மீதில் ஆயிரத் தொருவர்விதி தப்பாது
பாடிப்ர சங்க மிடுவோர்!
இதனருமை அறிகுவோர் பதினா யிரத்தொருவர்!
இதையறிந் திதயம் மகிழ்வாய்
ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவே
இலக்கத்தி லேயொ ருவராம்!
துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்
தூயர்கோ டியில்ஒ ருவர் ஆம்.
தொல்லுலகு புகழ்காசி யேகாம் பரம்கைலை
சூழும்அவி நாசி பேரூர்
அதிகமுள வெண்காடு செங்காடு காளத்தி
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) தொல் உலகு புகழ் – பழைமையான உலகம் போற்றுகிற,
திருச்செங்கோடும் திருக்காளத்தியும் இடமாகக் கொண்ட முதல்வனே!, சபை மெச்சிடப் பேசுவோர் பதின்மரில் ஒருத்தர் – அவை புகழும்படி பேசுவோர் பத்துக்கு ஒருவர், பாடுவோர் நூற்றில் ஒருவர் – (இனிமையாகப்) பாடுவோர் நூற்றுக்கு ஒருவர், விதிதப்பாது பாடி பிரசங்கம் இடுவோர் பார்மீதில்
ஆயிரத்து ஒருவர் – முறை தவறாமற் பாடிச் சொற்பொழிவு செய்வோர் உலகில் ஆயிரத்தில் ஒருவர், இதன் அருமை அறிகுவோர் பதினாயிரத்து ஒருவர் – இந்தச் சொற்பொழிவின் சிறப்பைத் தெரிந்தவர் பதினாயிரவரில்ஒருவர், இதை அறிந்து இதயம் மகிழ்வாய் ஈகின்ற பேர் – இதன் பெருமையை உணர்ந்து மனமகிழ்வுடன் பெருளளிப்போர், புவியிலே அருமையாகவே இலக்கத்திலே ஒருவர் ஆம் – உலகில் அருமையாக இலட்சத்துக்கு ஒருவர் ஆவர், துதிபெருக வரும் மூன்று காலமும் அறிந்த மெய்த்தூயர் கோடியில் ஒருவர்ஆம் – புகழ் மிக வரும் முக்காலமும்
உணர்ந்த உண்மையான் நல்லோர் கோடி மக்களில் ஒருவர் ஆவர்.
Xxxx
கற்புக்கரசிகள்
கற்புக்கரசிகள் பட்டியலில் அருந்ததி, நளாயினி, சீதாதேவி, சந்திரமதி, திரௌபதி ஆகியோர் செய்த அரிய செயல்களை அம்பல வாணர் குறிப்பிடுகிறார் . இந்துக்கள் அனைவரும் அறிந்த புராண, இதிஹாஸக் கதைகள் இவை. விளக்கத் தேவை இல்லை.
சம்ஸ்க்ருதத்தில் வேறு ஒரு பட்டியல் கிடைக்கிறது
‘பஞ்சகன்யா’ என்பது இந்து மதத்தில் ஐந்து பதிவ்ரதைகளைக் குறிக்கும். அந்தக் காலத்தில் எல்லோரும் காலையில் எழுந்தவுடன் ‘பிராத ஸ்மரணம்’ என்ற புனிதர் பட்டியலை வாசிப்பார்கள்- அதாவது மனப்பாடமாக, குளிக்கும்போதோ, பெண்கள் சமைக்கும்போதோ சொல்லுவார்கள். இப்பொழுது அதை, ஆர்.எஸ்.எஸ். இயக்க ஷாகாக்களில் மட்டுமே கேட்க முடிகிறது.
அஹல்யா, த்ரௌபதீ, சீதா, தாரா மண்டோதரி ததா
பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்
–என்பது அந்த வடமொழி பாட்டின் வரிகள்.
அஹல்யா, த்ரௌபதீ,சீதா, தாரா மண்டோதரி ஆகிய ஐந்து பெண்களை நினைத்தால் எல்லா பாவங்களும் போய்விடும்
தகடூரைத் (இன்றைய தர்மபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான் கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதிகமான்.
ஒரு நாள் பருத்திப்பள்ளிக் காட்டில் இருக்கும் கஞ்சமலை மீது உள்ள கருங்காடு என்னும் பகுதியில் அவன் சஞ்சரித்தான்.
அப்போது ஒரு துறவி அவனைப் பார்த்து அவனிடம் ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்து, “இந்த நெல்லிக்கனியை உண்பவருக்கு நரை திரை வராது; அவர் நீண்ட நாள் உயிர் வாழ்வார். இதை நீ உண்பாயேல் நெடு நாள் வாழ்ந்திருந்து புலவர்களை ஆதரித்து, தமிழை நன்கு வளர்த்து, நீதியோடு நாட்டைக் காக்க முடியும்” என்றார்.
அதை ஏற்றுக் கொண்ட அதிகமான் தன்னிடம் அதை பத்திரமாக வைத்திருந்தான்.
ஒரு நாள் ஔவையார் அவனிடம் வரவே, அந்தக் கனியை ஔவையிடம் கொடுத்து அதன் வரலாற்றையும் கூறி, “ அம்மையே! இதை உண்டு நீண்ட நாள் வாழப் பெற்று பல அரிய தமிழ் நூல்களை இயற்றி உலகத்திற்கு அருள் பாலிப்பீராக!’ என்று வேண்டினான்.
சிறுபாணாற்றுப்படையில் கீழ்க்கண்ட வரிகள் இந்த வரலாற்றை உரைக்கிறது:
“மால் வரைக் –
கமஞ் சூழ் சாரற்க வினியநெல்லி
யமிழ்து விளை தீங்கனி யௌவைக் கீத்த
வுரவுச் சினங் கனலு மொளிதிகழ் நெடுவே
லரவக் கடற்றானை யதிகனும்”
அடுத்து கரபுரநாதர் புராணம் என்ற நூலில் கீழ்க்கண்ட பாடல்களும் இந்த வரலாற்றை விரித்துரைக்கிறது:
கரூரை ஆண்ட புகழ்ச்சோழர் ஒரு முறை, ‘நமக்குத் திறை கொடுக்க மறுக்கும் அதிகன் எங்கு உள்ளான்?’ என்று கேட்ட பொழுது அதற்கு பதிலாக, ‘ஓங்கு எயில் சூழ் மலையில்’ உறையும் அதிகமானைக் குறிப்பிடுவதை புகழ்ச்சோழர் புராணம் இப்படிக் குறிப்பிடுகிறது:
அதியமான் ஒரு முறை பாண்டியன் நெடுஞ்சடையனோடு போர் புரிந்தான்.
இந்தப் போர் பற்றி நெடுஞ்சடையனது தான சாஸனம் ஒன்று இப்படிக் குறிப்பிடுகிறது:
மாயிரும் பெரும் புனற் காவிரி வடகரை
ஆயிரவேலி அயிரூர் தன்னிலும்
புகழி யூருந் திகழ்வே லதியனை
ஓடுபுறங் கண்டவன்
இதில் கொங்கில், காவிரி வடகரையில் வாளவந்தி நாட்டின் உபநாடு ஆன விமலை நாட்டு அயிலூரூ – ரிலும் , அக்காவிரியின் தென்கரையில் கிழங்கு நாட்டுப் புகழியூரிலும் அதியன் போர் புரிந்திருக்கிறான் என்பது பெறப்படுகிறது.
இது, கொங்குமண்டல சதகம் பாடல் 80 இல் வலியுறுத்தப்படுவதையும் காண்கிறோம். நாமக்கல்லில் இந்த சாஸனம் உள்ளது.
ஆகவே அதியனின் ஆட்சி இங்கும் பரவி இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இப்படிப்பட்ட அரும் வள்ளலைப் பற்றி கொங்குமண்டல சதகம் 42ஆம் பாடலில் பெருமையுடன் குறிப்பிடுகிறது.
பாடல் :
சாதலை நீக்கு மருநெல்லி தன்னைத் தமிழ்சொலௌவைக்
காதர வோடு கொடுத்தவன் கன்னலை யங்குநின்று
மேதினி மீதிற் கொடுவந்து நட்டவன் மேன்மரபோர்
மாதிரஞ் சூழரண் மேவுவ துங்கொங்கு மண்டலமே
பொருள் : நெடுநாள் வாழும் படி சாதலை நீக்கும் அருமையான நெல்லிக் கனிதன்னை தமிழ் வளர்க்கும் ஔவையாருக்குக் கொடுத்தவனும், இவ்வுலகில் கரும்புப் பயிரைக் கொண்டு வந்து நட்டு உற்பத்தி செய்தவனின் வழி வந்தவனும், கொல்லிக் கூற்றமாகிய மலையரணை உடையவனுமாகிய அதிகமானுங் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாம்.