ரிக் வேதத்தில் புறா ஜோதிடம் & தமிழர்களின் அதிசயக் கண்டுபிடிப்பு -2 (Post.10,293)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,293

Date uploaded in London – –   3 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நேற்று வெளியான ‘ரிக் வேதத்தில் புறா ஜோதிடம், தமிழர்களின் அதிசயக் கண்டுபிடிப்பு -1’– என்ற முதல் பகுதியைப் படித்துவிட்டு இதையும் படிக்கவும் .

ரிக் வேத RV.10-165 பாடலில் புறா பற்றிய ஆரூடத்தை நேற்று கண்டோம். ஆனால்  முதலாவது மண்டலத்தில் உள்ள பாடல் சங்கத் தமிழ் இலக்கியத்தில் போல காதல் புறாக்களைக் காட்டுகிறது. புறாக்களை சமாதான தூதுவர்களாக தற்போது மேலை நாடுகள் சித்தரிக்கின்றன. இரண்டாவது உலக மஹா யுத்தம் முடிந்த 50-வது ஆண்டு விழாவினைக் கொண்டாட 1995-ல் பிரிட்டன் வெளியிட்ட இரண்டு பவுன் நாணயத்தில் கூட சமாதானப் புறா ஆலீவ் / ஒலிவ மர இலைகளுடன் பறப்பதை சித்தரித்துள்ளனர்

இந்துக்களின் பரத நாட்டிய முத்திரையில் கபோத / புறா முத்திரையும் ஒன்று.

இந்துக்களின் யோகாசனத்தில் கபோத / புறா ஆசனமும் ஒன்று .

ஆயினும் இணை பிரியா புறா ஜோடிகளை இந்தியா முதலிய நாடுகள் தபால் தலைகளாக வெளியிட்டுள்ளன. இதுவே ரிக் வேத முதலாவது மண்டல மந்திரமும் சங்கத் தமிழ் இலக்கியமும் நமக்குக் காட்டுகின்றன .

இதோ முதலாவது மண்டல மந்திரம் –

இது ரிஷி சுனச்சேபன் , இந்திரனை நோக்கிச் சொல்லும் துதி

ரிக். 1-30-4

இந்த சோமரசம் உனக்காக்கத்தான் படைக்கப்படுகிறதுதன்னுடைய மனைவியான புறவிடம் அன்புடன் நெருங்கும் ஆண் புறா போல நீயும் வருகிறாய் ; எங்கள் துதியை ஏற்றுக் கொள்வாயாக” –1-30-4

எனது உரை

பத்தாவது மண்டலத்தில் ஒரு பயங்கரக் காட்சியைக் கண்டோம்.

இதற்கு அடிக்குறிப்பு எழுதிய Ralph T H Griffith ரால்ப் கிரிப்பித் சொல்கிறார்- “புறாவை அபசகுனப் பறவையாக மக்கள் கருதுகின்றனர். மரண தேவனின் தூதனாகக் கருதுகின்றனர் ; இங்கிலாந்தில் வடக்கு லிங்க்கன்ஸைர் பகுதியில் இப்படி ஒரு நம்பிக்கை இருப்பது, ‘கேள்வி பதில்’ பகுதியில் வெளியாகி இருக்கிறது. மரத்தில் உட்கார்ந்திருக்கும் புறவு வீட்டிற்குள் நுழை ந்தாலோ அல்லது ஆனந்தமாக ஆடி ஓடும்  புறா திடீரென்று சாதுவாகி பேசா மடந்தையாக நின்றாலோ அது சாவுக்கு அறிகுறி” .

இது பற்றி நான் சொல்லுவது – இங்கும் கூட புறா சாகப்போகிறதா அல்லது வீட்டிற்குள் இருக்கும் ஒருவர் சாகப்போகிறாரா என்று தெளிவாக இல்லை.

மேலும் 10-165- 4 மந்திரத்தில் ஆந்தை (screeching owl ) காரணமில்லாமல் அலறுவது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இரண்டையம் இணைத்துப் பார்த்தால் ஆந்தை திடீரென்று அலறுவதும் வீட்டிற்குள் தினசரி அவுபாசனம் செய்யும் இடத்தில் திடீரென்று புறா அமர்ந்ததும் ஏதோ கெட்டது நடக்கப்போவதைத் தெளிவாகக் காட்டுகிறது; ஆந்தை அலறுவதும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் அது குரல் கொடுப்பதும், மரணத்தின் அறிகுறி என்பது தமிழர்களின் நம்பிக்கை. சங்கத் தமிழ்ப் புலவர்கள் பாடிய பாடல்களிலும் ஆந்தை, கோட்டான், கூகை இருக்கும் இடங்கள் சுடுகாடு அல்லது பாழடைந்த இடமாகவே இருக்கிறது. புறம். 364 காண்க.

மேலும் பிராமணர்களின் அக்கிரஹாரம் மிகவும் சுத்தமான இடம். அங்கு நாயும் கோழியும் கூட நுழையாது என்கிறார் சங்கப்  புலவர்- பார்ப்பனர் உருத்திரன் கண்ணனார் – காண்க பெரும். 299, இன்னாநாற்பது -3

ஆக, நாயோ கோழியோ நுழையாத இடத்தில் திடீரென்று ஆந்தையும் புறவும் வந்ததே அப  சகுனமாகக் கருதப்படுகிறது. புறவினால் மட்டும் அப்படி வந்ததாகக் கூற முடியாது என்பதே  என்னுரை.

முதலாவது மண்டலப் ‘பா’வை மொழிபெயர்த்த ஜம்புநாத ஐயர் , கருத்தரித்த பெட்டையிடம் வரும் புறாப் போல என்கிறார். ஒருவேளை கர்ப்பிணிப் புறவு என்பது சாயனர் உரையாக இருக்கும். இது மேலும் அன்பைக் காட்டுகிறது

xxx

தமிழர்கள் கண்ட அற்புதக் காட்சி!

சிபிச் சக்ரவர்த்தி கதையை இந்தியர்கள் எல்லோரும் அறிவர். அக்நி தேவன் புறா வடிவில் வர, அதை கழுகு வடிவில் இந்திரன் துரத்த, அந்தப்புறா சிபிச் சக்ரவர்த்தியின் மடியில் தஞ்சம புகுந்தது. அதைக் காப்பாற்ற அவன் த ன் உடலையே தருவதற்கு துலாபாரம் செய்ய முயன்று தராசுத் தட்டில் ஏறினான். அப்போது இரண்டு தேவர்களும் அவன் பெருந்தன்மையை  உலகத்துக்குக் காட்டவே அவ்வாறு செய்வதாகக் கூறுகின்றனர். இந்தக் கதை புறநானூறு, சிலப்பதிகாரம் நெடுகிலும் உளது. கண்ணகி தான் வாழ்ந்த சோழர்குடி மன்னனாக சிபியை சித்தரிக்கிறாள். அதற்கு முன் சங்க இலக்கியத்திலும் உளது. (என்னுடைய பழைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காண்க – சோழர்கள் தமிழர்களா?) . இரண்டு புறாக்கள் ஒரு வேடனுக்காக தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்ட புறாக்கதையும் மஹாபாரதத்தில் உளது.)

ஆக வடக்கும் தெற்கும் – இமயம் முதல் குமரி– வரை  புறாவை அன்பின் சின்னமாகவே காட்டியுள்ளன.

ஆண்புறா, வெய்யிலில் வாடிய பெண் புறாவுக்கு விசிறி வீசிய பாடல் கலித்தொகையில்  பாலை பாடிய பெருங் கடுங்கோ பாடலில் வருகிறது:

அன்புகொள் மடப்பெடை அசை இய  வருத்தத்தை

மென் சிற கரால் ஆற்றும் புறவு (பாலைக் கலி , பாடல் 10, )

இதைவிட அருமையான ஒரு காட்சியைப் பிராமணப் புலவன் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலையில் படம் போட்டுக் காட்டுகிறார். புறவுகள் ‘கல் உண்ணும் காட்சி’ அது.

உலகம் முழுதும் பல பறவைகள் கற்களை உண்ணுவதும் அது ஜீரணத்துக்காக செய்யப்படும் நிகழ்வு என்பதும், இப்போது யூ ட்யூப்பில் You Tubeல் மலிந்து கிடக்கிறது. மகேஷ் ராஜா என்பவர் நீலகிரி காடுகளில் கல் உண்ணும் பறவையைப் படம்பிடித்துப் போட்டுள்ளார். வடக்கில் ஒரு இந்திக்காரர், இந்தி மொழி வீடியோவில், செம்மை நிற கற்களைப் பொடித்து, பரப்ப அதை புறாக்கள் ஆனந்தமாக உண்ணுவதை யூ ட்யூபில் காணலாம். ஆக இப்போது இது எல்லோரும் அறிந்த செய்தியாகிவிட்டது; ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பார்ப்பான் இதைப்பார்த்து அதை அப்படியே எதிர்கால சந்ததிக்கு எழுதிவைத்த அற்புதத்தைக் காணுங்கள் :-

பட்டினப்பாலை நூலை இயற்றிய பார்ப்பனன் உருத்திரங்கண்ணனாரும் குறிஞ்சிக்கலி இயற்றிய  பார்ப்பனன் கபிலனும் நிறைய இயற்கை அற்புதங்களை நமக்கு அளிக்கின்றனர். பார்ப்பான் கபிலன் நமக்கு 99 மலர்களை குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அளித்தான். குருவி, கிளி மூலம் பாரிக்கு உணவு சேகரித்து மூவேந்தர் முற்றுகையை முறியடித்தான்.’ புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று போற்றப்பட்டான்; ஜாதி வெறியை ஒழித்த முதல் தமிழனும் அவன்தான். அங்கவை , சங்கவை என்ற க்ஷத்ரிய குலப் பெண்களை தனது மகள்கள் போலாகி கருதி திருமணம் செய்வித்தான். இப்படி இரண்டு பிராஹ்மணர்கள் நமக்கு அற்புதமான  செய்தியை 2000 ஆண்டுக்கு முன் எழுதிவைத்தனர்.

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கு

மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம்

மாயிரும் பெடையோ டிரியல் போகிப்

பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்

தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு

—பட்டினப்பாலை , வரிகள் 54-58

xxxx

ஆய் தூவி அனம்என, அணிமயில் பெடை எனத்

 தூதுணம் புறவு எனத் …………………………..

கலித்தொகை 56, கபிலன்  பாடிய குறிஞ்சிக் கலி

தூதுணம் புறவு என்பதற்குக் கல் = தூது , உணம் = உண்ணும் என்று உரைகாரர்கள் செப்புவர்

இதை உலகிற்குப் பதிவு செய்து கொடுத்த 2 அந்தணர்க்கும் வந்தனம் சொல்லுவோம். இப்போது நிறைய You Tube வீடியோ காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்.

ஜோடிப் புறாக்களையும் காதல் புறாக்களையும் கீழ்கண்ட பாடல்களில் காணலாம் :-

குடவாயில் கீரத்தனார் அக நானூறு பாடல் 287, 315ல் புறா பற்றிப் பேசுகிறார்.

குன்றியனார், குறுந்தொகை நூலில் பாடல் 79ல் புறாவைப் பாடுகிறார் .

மகிழ்ச்சியுடன் கொஞ்சும் இரண்டு புறாக்களை கள்ளி மரக்  காய்கள் வெடித்து , ஒலி உண்டாக்கி விரட்டும் காட்சியை வெண் பூதியார் குறுந்தொகைப் பாடல் 174ல் காட்டுகிறார்; ஆக பல இடங்களில் ஜோடிப் புறாக்கள் பறப்பதை தமிழ்ப் புலவர்கள் காணத் தவறவில்லை.

முடிவுரையாக நான் சொல்லுவது புறாக்கள் மூலம் சகுனம் பார்ப்பது இல்லை. ஆனால் அசாதாரண சூழ்நிலையில் அவை வீட்டிற்குள் வந்து, அப்போது ஆந்தையும் அலறினால் மரணம் சம்பவிக்கும் என்பதே சரி  ; பூகம்பம், சுனாமி  போன்ற இயற்கை உற்பாதங்கள்  வருவதற்கு முன்னரும் இப்படி பிராணிகள் அலறுகின்றன.

வாழ்க ஜோடிப் புறாக்கள்  !!

from You Tube

–subham–

tags- ரிக் வேதத்தில் ,புறா ஜோதிடம், தமிழர் ,கண்டுபிடிப்பு , சிபிச் சக்ரவர்த்தி, தூதுணம் புறவு,கல் உண்ணும்,

தமிழர்களின் ஜோதிட நம்பிக்கைகள் (Post No.7458)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7458

Date uploaded in London – 15 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சென்னையில் எனது சகோதரர் நடத்தும் ஜெம்மாலஜி பத்திரிக்கையின் இரண்டாவது இதழில் நான்  — 1999ம் ஆண்டு எழுதிய கட்டுரை –

தலைப்பு – தமிழர்களின் ஜோதிட நம்பிக்கைகள்

வெளியான தேதி – மார்ச் 1999.

நூறு கோண்= ஒரு அணு; தமிழ் ரகசியங்கள் (Post No.6959)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 31 AUGUST 2019
British Summer Time uploaded in London – 18-
22

Post No. 6959

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

சென்னையில் 1968-ம் ஆண்டில் நடந்த உலகத் தமிழ் மகாநாட்டின் போது ஒரு கையேடு (Guide for the Exhibition) வெளியிடப்பட்டது. அதில் தமிழர்களின் அளவை முறைகள் அனைத்தும் ஆதார பூர்வமாக தரப்பட்டுள்ளது. இன்று சில அளவை முறைகளைக் காண்போம்.

TAGS- அணு, கோண், துகள், அளவை முறைகள், தமிழர்

சச்சரி, குச்சரி, பிச்சரின் பிதற்றல் — கம்பனின் சங்கீத அறிவு (Post No.3786)

Written by London swaminathan

 

Date: 4 APRIL 2017

 

Time uploaded in London:- 6-59 am

 

Post No. 3786

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

தமிழர்களின் அபார இசை அறிவை விளக்கும் சில பாடல்களைக் காண்போம்:-

 

நச்சு எனக் கொடிய நாகக் கள்ளொடு குருதி நக்கி

பிச்சரின் பிதற்றி அல்குல் பூந்துகில் கலாபம் பீறி

குச்சரித் திறத்தின் ஓசை களம் கொள குழுக்கொண்டு ஈண்டி

சச்சரிப் பாணி கொட்டி நிறை தடுமறுவாரும்

–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம்

 

பொருள்:

அரக்கியர் சிலர் பாம்பின் விஷம் என்று கூறத்தக்க கள்ளையும், பல வகைப் பிரணிகளின் குருதியையும் குடித்து மயங்கினர்; அதனால் குச்சரி என்னும் பண்ணின் தன்மை குரலில் கலக்க, பைத்தியக்காரர் போலப் பிதற்றினர்; சச்சரி என்னும் தோல் கருவி போலக் கைகளைத் தட்டினர். அல்குலின் மீது அணிந்த மெல்லிய ஆடையையும், கலாபம் என்னும் 25 கோவையுள்ள இடையணியையும் கிழித்துக்கொண்டு மனநிலை  தடுமாறினர்.

 

இந்தப் பாட்டில் இன்னொரு விஷயமும் உள்ளது. 25 கோவையுள்ள கலாபம் என்ற இடையணியையும் அரக்கியர் அணிந்து கொண்டிருந்தனர். வராஹமிஹிரர் என்னும் அறிஞர் 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்னும் என்சைக்ளோபீடியவில் (கலைக் களஞ்சியத்தில்) ஏராளமான கோவையுள்ள முத்து மாலைகளைப் பட்டியலிடுகிறார். உலகிலேயே அதிக நகைகளை அணிந் தவர்கள் இந்துக்கள் இதை 2200 ஆண்டுகளுக்கு முன்னுள்ள பார்ஹுத் சிற்பங்களில்கூடக் காணலாம்.

இன்னொரு பாட்டில் அரக்கியர் வீட்டில் கேட்ட சங்கீத ஒலிகளைக் கம்பன் பாடுகிறான்.

 

சங்கொடு சிலம்பும் நூலும் பாத சாலகமும் தாழ

பொங்கு பல்முரசம் ஆர்ப்ப இல்லுறை தெய்வம் பேணி

கொங்கு அலர் கூந்தல் செவ்வாய் அரம்பையர் பாணிகொட்டி

மங்கல கீதம் பாட மலர்ப் பலி வகுக்கின்றாரை.

 

–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம்

 

 

பொருள்:

கூந்தலையும் செவ்வாயயையும் உடைய தேவ மகளிர், தாளம் போட்ட படி மங்கலப் பாடல்கள் பாடினர். சங்கு வளையல், சிலம்பு, மேகலை, பாதரசம் ஆகிய அணிகலன்களின் ஒலிகள் தாழுமாறு பலவகையான முரசுகள் முழங்கின. அச்சூழலில் இல்லுறை தெய்வத்தை வணங்கி, மலரினால் அருச்சனை செய்யும் அரக்க மகளிரை, சீதையத் தெடிச் சென்ற அனுமான கண்டான்.

 

 

இங்கு அரக்கர் வீட்டில் மங்கல கீதம் ஒலித்தது, முரசுகள் முழங்கியது ஆகிய சங்கீத விஷயங்களைச் சொல்லும் கம்பன், ஆரிய-திராவிட இனவாதப் புரட்டர்களுக்கு ஆப்பு வைப்பதையும் பார்க்க வேண்டும்.

சில வெளிநாட்டு அரைவேக்காடுகளும், திராவிடப் புரட்டர்களும், ராவணன் என்பவன் திராவிடன் என்றெல்லாம் கதைகட்டி, அரசியல் செய்து வருவதை நாம் அறிவோம். ஆனால் இங்கே அரக்க மகளிர் வீட்டிலுள்ள பூஜை அறைகளில் மலர்கொண்டு பூஜை செய்ததைக் கூறுகிறான். ஒவ்வொரு வீட்டிலும் இப்படி இல்லுறை தெய்வம் இருந்ததையும் அந்த தெய்வங்களுக்குத் தமிழர்கள் மலர், இலை (வில்வம், துளசி), புல் (அருகம் புல்) முதலியன கொண்டு பூஜை செய்ததையும் கபிலர் முதலான சங்கப் புலவர்கள் பாடியிருப்பதையும் கவனிக்க வேண்டும், அரக்கர்கள், இத்தோடு, தீய குணங்களுடன் வாழ்ந்தனர் என்பதையும் அறிதல் வேண்டும்.  நமது ஊரிலுள்ள திருடர்களும்   , ஏமாற்றுப் பேர்வழிகளும், கொள்ளையர்களும் கூட தெய்வத்தை பூஜிப்பது போன்றது இது.

 

xxxx

 

நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய “இசைத் தமிழ் அதிசயங்கள்” என்ற கட்டுரையின் ஒரு பகுதியை மட்டும் கீழே தருகிறேன். முழுக்கட்டுரையும் வேண்டுவோர் இதே பிளாக்கில் 4 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரையைக் காண்க.

 

இசைத் தமிழ் அதிசயங்கள்

posted on 31 January 2013; by London swaminathan

1).காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திருக்கிறார்:

துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்

உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கை யோடு

தகுணிதம் துந்துபி டாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்து

அத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்பன் இடம்திரு வாலங் காடே”

 

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

 

 

 பத்துப் பாட்டில்

2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

“ திண்வார் விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

 

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

 

சிலப்பதிகார உரையில்

சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாகத் தரும் பாடல்:
பேரிகை படக மிடக்கை யுடுக்கை
சீர்மிகு மத்தளஞ் சல்லிகை கரடிகை
திமிலை குழமுழாத் தக்கை கணப்பறை
தமருகந் தண்ணுமை தாவிறடாரி
யந்திர முழவொடு சந்திர வலைய
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசாளந்த் துடுமை சிறுபறையடக்க
மாறி றகுனிச்சம் விரலேறு பாகந்
தொக்க வுபாங்கந் துடிபெறும் பாஇயென
மிக்க நூலோர் விரித்துரைத்தனரே
(தோற் கருவிகள்: தண்ணூமை, முழவு, தட்டை, முரசு, பறை, பம்பை, குளிர், தொண்டகச் சிறுபறை, கிணை, பதலை, ஆகுளி, துடி, தடாரி, எல்லரி, மத்தரி.

 

–subham–

 

 

திராவிட (தமிழ)ர்களின் மூட நம்பிக்கைகள் (Post No.3239)

tiger-seal-3  tiger-seal

Picture: Indus Valley Seals with Tiger Gods

Written  by London Swaminathan

 

Date: 10 October 2016

 

Time uploaded in London: 16-22

 

Post No.3239

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

கருப்புத் தோல் உடைய அனைவரும் திராவிடர்கள் அல்லது இந்நாட்டுப் பூர்வ குடிகள் என்றும் மற்றவர்கள் எல்லோரும் வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் என்றும் முத்திரை குத்தினர் நாடு பிடிக்க வந்த வெள்ளைத்தோலினர்.

 

இல்லை திராவிடர்களும் வெளிநாட்டி லிருந்துதான் வந்தனர் என்று கால்டுவெல்களும் கனகசபைகளும் பேசினர். ஆனால் இந்திய இலக்கியங்களோ இங்கே வாழும் மக்கள் அனைவரும் இந்த தேசத்தின் பூர்வ குடிகள் என்றும் உலகெங்கும் சென்று நாகரீகத்தை நிலை நாட்டினர் என்றும் ((ரிக் வேதமும், அதர்வண வேதமும், சங்கத் தமிழ் இலக்கியங்களும்)) செப்புகின்றன.

 

நரபலி, எருமை பலி, களிமண் குடிசை முதலிய பல பழக்க வழக்கங்களை திராவிடர்களின் வழக்கம் என்று மதத்தைப் பரப்பவந்தோர் சித்தரித்துள்ளனர். உண்மை என்னவென்றால் வேத கால, இதிஹாச-புராண கால, சிந்து சமவெளி கால, சங்கத்தமிழ் காலங்களிலேயே மலைஜாதி மக்கள் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. சிறிய எண்ணிக்கையில் இருந்தவர்களுடைய தனிப்பட்ட வாழ்வு யாரையும் பாதிக்கவில்லை. ஆனால் வெளிநாட்டினர் வந்து, அவர்கள் பகுதிக்குள் நுழைந்தவுடன், காம சம்பந்தமான நோய்களும், அமைதி யின்மையும் பரவின.

 

உலகில் மூட நம்பிக்கைகள் இல்லாத சமுதாயமே கிடையாது. இன்றும் கூட மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்கள், டெலிவிஷன் கலைஞர்கள், திரைப்பட நடிகர் நடிகையர், அரசியல்வாதிகள்— சட்டையின் நிறம், புறப்படும் நேரம், நாள் பற்றி பலவிதமான நம்பிக்கைகள்– வைத்திருப்பதைப் பத்திரிக்கை பேட்டிகளில் படிக்கலாம். ஆனால் கருணாநிதியாரின் ‘மஞ்சள் துண்டு’ போல இதற்குப் பல விளக்கங்கள் கொடுத்து மழுப்புவர்.

 

இதோ திராவிடர்களின் பெயரில், வெளிநாட்டினர், பட்டியலிட்ட மூட நம்பிக்கைகள்:–

tiger-seal-2

பழங்குடி மக்களின் ‘புலித்தேவன்’

பழங்குடி இனத்தவர் தாங்கள் புலிகளாகவோ பாம்புகளாகவோ மாறமுடியும் என்று நம்புகின்றனர். ஆன்மாவில் பாதி மட்டும் வெளியே சென்று மிருக உரு எடுத்து, எதிரியைக் கொல்ல முடியும் அல்லது ஆடு, மாடுகளைச் சாப்பிட்டு பசியாற்றிக்கொள்ள முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். இப்படி பாதி உயிர் வெளியே போகையில் சோம்பேறியாய் விடுவர் அல்லது வேலையே செய்யாமல் சோர்ந்துவிடுவர் என்பது அவர்கள் நம்பிக்கை. (இப்படிப் பல புலித் தேவன் முத்திரைகள் சிந்து வெளியில் கிடைக்கின்றன).

 

பெண் வந்தால் அபசகுனம்

 

கோண்ட் இனத்தினர் வேட்டைக்குப் புறப்படும்போது எதிரில் பெண்கள் வந்தால் அபசகுனம். உடனே வீட்டிற்குப் போய்விட்டு, எல்லாப் பெண்களையும் ம றைந்திருக்கும்படி சத்தம் கொடுத்துவிட்டு வெளியே வருவர்.

 

(இதை எழுதும்போது எனக்கு என்னுடைய சென்னை புரசவாக்கம் சித்தி நாள் தோறும் செய்யும் செயல் நினைவுக்கு வருகிறது. எனது சித்தப்பா பக்ககா தி.மு.க. சாமி, பூமி நம்பிக்கை கிடையாது. ஆனால் சித்தியின் பூஜை வழிபாடுகளைத் தடுக்க மாட்டார். தினமும் அலுவலகம் செல்லும்போது மட்டும் மனைவியின் சொல்லுக்கு, ‘மந்திரத்துக்குக் கட்டுண்ட பாம்பு போல’ கட்டுப்படுவார். முத லில் சித்தி வாசல் வரை சென்று இரு புறமும் எட்டிப்பார்ப்பார். எந்த அபசகுனமும் இல்லை என்று தெரிந்தவுடன் கையால் சைகை தருவார். உடனே, தயாராக வாசலில் நின்றுகொண்டிருக்கும் சித்தப்பா புறப்படுவார். நாங்கள் மதுரையிலிருந்து சென்று அவர் வீட்டில் தங்கும் போதெல்லாம் இதை வேடிக்கை பார்ப்போம். இந்து மத சகுன சாஸ்திரப்படி, விதவை, ஒரு பிராமணன் ஆகியோர் வந்தால் அபசகுனம்)

 

கோண்டு இனப் பெண் மாதவிலக்கு காலத்தில் அந்த வீட்டிலுள்ள யாரும்  வேட்டைக்குப் போக மாட்டார்கள். அப்படிப்போனால் ஒரு மிருகமும் சிக்காது என்பது அவர்களுடைய (மூட) நம்பிக்கை!

crow2

காகா நண்பன்!

கோண்ட் இன மக்கள் காகத்தைக் கொல்ல மாட்டார்கள். காகத்தைக் கொன்றால் ஒரு நண்பனைக் கொன்றதற்குச் சமம்! இதற்கு ஒரு கதை சொல்லுவார்கள். கடவுள் உலகத்தைப் படைத்த காலத்தில் ஒர் வயதான ஆணும் பெண்ணும் அவர்களுடைய ஐந்து பிள்ளைகளுடன் வசித்துவந்தனர். கொள்ளை நோய் வந்து ஒருவர் ஒருவர் பின் ஒருவராக ஐந்து பிள்ளைகளும் இறந்தார்கள். பெற்றோர்களோ மிகவும் வயதானவர்கள்; வறியவர்களும் கூட. ஆகையால் சடலங்களை எடுத்துச் சென்று தகனம் செய்ய இயலவில்லை. சடலங்களை வீட்டிற்கு அருகிலேயே தூக்கி எறிந்துவிட்டனர்.

ஒரு நாள் இரவில் அவர்களுடைய கனவில் விஷ்ணு தோன்றினார். ஒரு காகத்தைப் படைப்பதாகவும், அது இறந்தவர்களின் சடலத்தைத் தின்றுவிடும் என்றும் கனவில் சொன்னார். ஆகையால் காகங்கள் நண்பர்கள்.

 

 

ஏழாம் நம்பர் ஆகாது!

seven-fire

குறவர்கள் திருடப் போவதற்கு முன்னால் சகுனம் பார்ப்பார்கள். ஏழு என்ற எண் அவர்களுக்குத் துரதிருஷ்டமானது. ஆகையால் ஏழு பேராகச் செல்லமாட்டார்கள். அப்படி ஏழு பேராகச் செல்ல நேர்ந்தால், கன்னம் வைக்கப் பயன்படும் கருவியை ஒரு ஆளாகக் கருதி எட்டு பேர் என்று சொல்லிக் கொள்வார்கள். போகும் வழியில் விதவை, பால் பானை, மாடு கத்துதல் ஆகியாவற்றை அப சகுனமாக கருதுவர். திருமணமாகி வந்தவன், சிறையிலிருந்து வந்தவன் ஆகியோர் திருட்டுக் கும்பலில் இருக்கக்கூடாதாம்.

 

குறவர் இனப் பெண்கள் நீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் வித்தை முதலியன தெரிந்தவர்கள்.  கணவன்மார்கள் நீண்ட நாட்களுக்குத் திரும்பிவராவிடில் கெட்ட சகுனம் ஆம்.  உடனே ஒரு விளக்குமாற்றுக் குச்சியை எடுத்து , அதில் மேலும் பல குச்சிகளைக் கட்டி எண்ணையில் தோய்த்து தண்ணீரில் மிதக்க விடுவர். அது தண்ணீரில் மிதந்தால் கவலைப்படத் தேவை இல்லை. மூழ்கிவிட்டால் கணவனைத் தேடி மனைவி புறப்பட்டுவிடுவாள்.

 

தமிழர்களின் தும்மல் நம்பிக்கை பற்றி திருவள்ளுவர் எழுதிய குறள்கள், பல்லி சொல்லுக்குப் பயப்படுதல், காட்டுப் பன்றி கேட்ட பல்லி சொல்– பற்றிய சங்க இலக்கியப் பாடல்கள்  ஆகியவற்றை முன்னரே பட்டியலிட்டுவிட்டேன். எனது பழைய கட்டுரைகளைப் படித்தறிக.

 

sneeze-03

Read also my articles:

சகுனமும் ஆரூடமும்: வேத கால நம்பிக்கைகள்,Research Article No.1811; Date: 19th April 2015

புதையல் கிடைக்க, காதலில் வெற்றி பெற சோதிடம்!!, Research Article No.1669; Dated 23 February 2015.

டெல்பி ஆரூடமும் குறி சொல்வோரும், ஏப்ரல் 15, 2012

தமிழர்களின் சோதிட நம்பிக்கை

 

Can Birds Predict Your Future? (Posted on 22 July 2012)

Beware of Wagtail Birds: Prediction by Varahamihira (19 February 2015)

How to find water in the Desert? Varahamihira on Water Divination (Posted on 16 February 2015)

Tamil Astrology: Rope Trick for Predictions (Posed on 27 February 2013)

Two Tamil Articles posted on 12 April 2012 on Greek Delphi Oracles and Tamils

Birds and Gods.

 

—SUBHAM–