
Post No. 11,834
Date uploaded in London – – 24 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

அருணகிரி நாதர் பாடிய சிறுவாபுரி முருகனை வேண்டித் துதித்த பின்னர், பெரிய பாளையம் சென்று பவானி அம்மனைத் தரிசித்தோம். அங்கிருந்த கூட்டத்தையும் பெண்களின் பக்தியையும் கண்டபொழுதே அவள் வரம் கொடுக்கும் சக்தி தேவி என்பது புரிந்தது. வரிசையின் நின்று அம்மனைத் தரிசித்ததால், அம்மன் திருப்தியாக தரிசனம் தந்தாள். அதுவோ பிப்ரவரி மாத (2023-ம் ஆண்டு) வெள்ளிக்கிழமை வேறு; கூட்டத்துக்கு கேட்கவா வேண்டும்.
பெரிய பாளையம் எங்கே உள்ளது ?
பெரியபாளையம் என்னும் ஊர், சென்னையிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காலை எ ட்டு மணிக்குப் புறப்பட்டு சிறுவாபுரி முருகனையும் பெரிய பாளையம் பவானி அம்மனையும் தரிசித்துவிட்டு நாலே மணி நேரத்துக்குள் பெரம்பூருக்குLUNCH லஞ்ச் சாப்பிட வந்துவிட்டோம்.
பவானி அம்மனின் சிறப்பு என்ன?
இது பெரிய பெரிய கோவில். முதலில் வரம் தரும் அற்புத. விநாயகர் கோவில். பின்னர் பெரிய த்வஜ ஸ்தம்பத்துடன் அம்மன் கோவில்.. விநாயகர் சந்நிதியை ஒட்டி அன்னை மாதங்கியின் சந்நிதி இருக்கிறது.
பவானி அம்மனின் சந்நிதிக்கு எதிரே பெரிய குத்து விளக்குகள். அதில் நெய் ஊற்றி வழிபட்டால் நேர்ந்தது நிறைவேறும் என்பதால் பெண்கள் கூட்டம் . அருகிலேயே மாவிளக்கு ஏற்றும் பகுதிப் பரவசம் ஊட்டும் காட்சிகள்.
அம்மன் திருமுகம் அருள் பொழியும் முகம். மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.
அம்மனைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தால் உற்சவர் நமக்கு தரிசனம் தருகிறார்..
வெளிப்பிரகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமருடன் (விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று) மற்றும் நாகர் ஆகிய சன்னிதிகளைத் தரிசிக்க முடியும்.
சங்கு சக்கரத்துடன் காட்சி தரும் அன்னையை நாராயணீ என்று புராணங்கள் போற்றும்.
இங்குள்ள பவானி, கிருஷ்ணனை கம்சனிடமிருந்து காப்பாற்றிய சகோதரி என்ற நம்பிக்கையும் நிலவுகிறது (கிருஷ்ணன் பிறப்பு பற்றிய கதையை அறிந்தவர்களுக்கு இது விளங்கும்).
நாங்கள் தரிசனம் முடித்துவிட்டு வருகையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, உடலைக் கட்டாந்தரையில் உருட்டிக்கொண்டு அங்கப் பிரதட்சிணம் செய்த காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. பக்திக்கு எல்லை உண்டோ?
கிராம தெய்வங்கள் திராவிட தெய்வங்கள் என்றும், சிவன் விஷ்ணு, பிள்ளையார், கந்தன் ஆகியோர் இறக்குமதித் தெய்வங்கள் என்றும் சில அசட்டுப்பிஸட்டுக்கள் புரட்டி எழுதுவதை படித்திருப்பீர்கள். இவையெல்லாம் பேத்தல், பிதற்றல் என்பது காஞ்சி பரமாசார்யாரின் சொற்பொழிவிவுகளைப் படித்தோருக்கு நன்கு விளங்கும். பவானி, ரேணுகா, அம்மன், மஹா மாயா (மகாமாயீ) ராகா தேவி (ராக்காயீ) மூகாம்பிகை (மூக்காயீ) ஆயீ , காளி , மதுர காளி , மாரி , ஆத்தா முனி ஆண்டி , ஆர்ய (அய்யனார்), சாஸ்தா (சாத்தன்) முதலியன எல்லாம் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள். மேலும் இவர்களில் பல பெயர்கள் ரிக்வேதத்தில் கூட இருக்கினறன.
தெய்வங்களில் ஆரிய, திராவிட பேதத்தைக் காட்டும் பி.எச் .டி . காரர்களுக்கு செமை அடி கொடுக்கும் கிராமீய தெய்வங்களைப் போற்றி வழிபடுவோம்.. பல பிராமண குடும்பங்களுக்கு கிராமீய தெய்வங்கள்தான் குல தெய்வம் என்பதும் அரைவேக்காடுகளுக்குத் தெரியாது . இதுகளுக்கும் அதுகளுக்கும் டாக்டர் பட்டம் கொடுக்கும் அறிவிலிகளுக்கு புத்தி தடுமாறாமல் இருக்க இறைவியை வேண்டுவோம்.
ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லுகையில், இருபுறமும் உள்ள கடைகளையும், பூ, பழம் விற்போரையும் காணுகையில் நாள் தோறும் பல கோடி மக்களுக்கு வயிற்றுப் பிழைப்பு நடக்க இந்தக் கோவில்கள்தான் உதவுகின்றன என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. அதைவிட இந்த பிரமாண்டமான கோவிலை எழுப்பியபோது வேலையில் ஈடுபட்ட கட்டிடக் தொழிலாளர்களின் , சிற்பிகளின் வாழ்க்கை முன்னேறியதையும் நினைவுகொள்ள வேண்டும்.பூக்களையும், பழங்களையும் பயிரிடும் விவசாயிகளுக்கு திருவிழா நாட்கள் வந்தால் கொண்டாட்டம்தான். நல்ல போனஸ் கிடைக்கும் .
ஒருவேளை கோவில்களை எள்ளி நகையாடும் திராவிடங்களும் பிற மதங்களும் வெற்றி பெற்றால், இந்தப் பல கோடி மக்களும் வேலை இழப்பார்கள் ; அந்த நிலை வராமல் தடுப்பது இந்துக்களின் கடமை.

–subham—

Tags–பவானி அம்மன், பெரியபாளையம், மாவிளக்கு, குத்துவிளக்கு, கிராம தெய்வங்கள்