வாரியார் சொன்ன கிழவி கதை; நரை  ஏன் வருகிறது ? (Post No.11,830)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,830

Date uploaded in London – –  23 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்

     இதய பாவ னாதீத …… மருள்வாயே- திருப்புகழ்

தமிழில் பொருள்படைத்த , நகைச் சுவை மிக்க சமயச் செற்பொழிவுகளை நமக்கு வழங்கிச் சென்றவர் திருமுருக கிருபானந்த வாரியார் . அவர் ஆற்றிய  சொற்பொழிவில் கேட்ட ஒரு கதை இதோ:–

 ( எனது சொற்களில் வடிக்கிறேன் ; பிழை இருப்பின் எமதே )

இந்த பூமியில் எவ்வளவோ உயிரினங்கள் இருக்கின்றன. காக்கைக்கு மயிர் நரைத்து வெள்ளைக் காக்கை ஆனதுண்டா? பன்றிக்கு மயிர் நரைத்து வெள்ளைப் பன்றி ஆகிறதா? ஆனால் மனிதனுக்கு மட்டும் நரை வருகிறதே  ஏன் ?

ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது .

என்னுடைய ஊர் காங்கேய நல்லூர்; அங்கிருந்து ஒரு வயதானவர் என்னைப் பார்க்க வந்தார். ஏன் மறுமணம் செய்யவில்லை என்றேன்? பையன்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார்

அவருக்கு நரை  வந்தும் ஆசை விடவில்லை (மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது ).

யாருக்கு ஆசை விட்டது? நரையை மறைக்க கருப்பு டை Dye (சாயம் வேறு).

மிருகங்கள் உண்ணவும் உறங்கவும் வாழ்கின்றன

மனிதர்கள் எண்ணவும் (பிறருக்காக) இரங்கவும் வாழ்கின்றனர் .

ஏன் இறைவன் மனிதனுக்கு நரையைக் கொடுத்தான் ?

அதுதான் இறைவன் அனுப்பும் First Notice முதல் நோட்டீஸ் . உனது காலம் விரைவில் முடியப்  போகிறது. இப்போதாவது இறைவனை நினை; நாலு பேருக்கு உதவி செய் .

கொஞ்சம் நாளுக்குப் பின்னர் கண்ணாடி தேவைப்படுகிறது .

அது கடவுள் அனுப்பும் Second Notice இரண்டாவது நோட்டீஸ்.

பின்னர் பற்கள் ஆட்டம் காணும். அது Third Notice from God மூன்றாவது நோட்டீஸ் .

அதற்கு அடுத்துவரும் நோட்டீஸ் Last Notice from God – மரணம் .

நரை வந்த பின்னரும் இறை – வனை நினையாவிட்டால் அது நமது பிழை.

வயதான மனிதனுக்குத் தள்ளாதவன் என்று ஏன் தெரியுமா பெயர் ?

அவன் எதையும் வேண்டாம் என்று  தள்ளாதவன்!!

ஆசையை ஒதுக்கித் தள்ளாதவன்!!!

(தள்ளாத வயதில் பொல்லாத ஆசைகள்)

புதுமணத் தம்பதிகள் ரயில் பெட்டியில் உட்கார்ந்து இருக்கினறனர்; இவனோ  தள்ளாதவன். அந்தப் பெண்ணை வெறித்து வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறான்!!

Xxxxx

கிழவி கதை

ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள் ; பொல்லாத கிழவி. எதையும் எடுத்துக்கொண்டு விடுவாள்; எதையும் யாருக்கும் கொடுத்ததில்லை ; தானம்  கொடுத்ததில்லை ; அவளும் இறந்தாள் ; நரகத்துக்குச் சென்றாள் ; கடும் துயரம் . அந்தப் பக்கம் வந்த தேவ தூதரிடம் அப்பா , கெஞ்சிக் கேட்கிறேன்; என்னை இங்கிருந்து வெளியே எடு– என்றாள்

அவன் கேட்டான் – நீ எப்போதாவது தானம் தருமம் செய்து இருக்கிறாயா ? யாருக்காவது காசு போட்டு  தருமம்  செய்து இருக்கிறாயா? 

பரிசாகத் தருவது தானம் ; இல்லாதவருக்குக் கொடுப்பது தருமம் ; தருமம் போட்டாயா ?

பாட்டி சொன்னாள் : ஒரு குருடன் தட்டில் காலணா காசு போட்டேன் ; ஆனால் அவன் பார்க்க முடியாததால் அவன் தட்டிலிருந்து நாலணா எடுத்துக் கொண்டேன் .

அடிப் பாவி !!

தேவதூதன்: வேறு என்ன நல்லது செய்தாய்?

என்னிடம் ஒரு அணா  இருந்தது; அந்தக் காலத்தில் அதற்கு 12 தம்பிடிகள். 12 வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டேன். அப்போது ஒருவர் வந்து வயிறு பசிக்கிறது என்றார் . நான் எதையும் கொடுக்கவில்லை. கடைசி வாழைப்பழம் பாதி அழுகி இருந்ததால் அதைத் தூக்கி எறிந்தேன். அவர் பாதி வாழைப்பழத்தைச் சாப்பிட்டுச் சென்றார் – என்றாள்.

அடக்கிழவி ! வா உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்றான் தேவதூதன்.

நரகத்தில் ஒளியே கிடையாது; கும் மிருட்டு; இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த 4 பாவிகள் , நைஸாக கிழவியின் காலை பிடித்துக்கொண்டார்கள் ; சொர்க்கத்துக்கு வந்த கிழவி பெரிய ஒளியை, வெளிச்சத்தைப்பார்த்து மகிழ்ந்தாள். அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது. ஒருவர் பின் ஒருவராக நாலு பேர் அவளுடைய காலைப் பிடித்துக் கொண்டு மேலே வருவது.

டேய் ! யாரடாவன்? எனது அரை வாழைப்பழத்துக்கு நான் சொர்க்கம் செல்கிறேன். நீங்கள் எப்படியடா வர முடியும்? என்றாள்

அவள் மீண்டும் நரகத்துக்குள் விழுந்தாள் யாரோ ஒருவனுக்கு கொடுத்த அரை  வாழைப்பழத்தை எனது என்று சொல்லி சொந்தம் கொண்டாடினாள் .

இதனால்தான் அருணகிரி நாதர் யான் எனது என்ற எண்ணத்திலிருந்து விடுதலை கேட்டு திருப்புகழ் பாடினார்.

எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ

     மெளிது சால மேலாக …… வுரையாடும்

எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்

     இதய பாவ னாதீத …… மருள்வாயே

என்கிறார் அருணகிரிநாதர்

((எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம் … நமனையும்

தாக்குவது போல் ஆகாயம் வரை பறந்து போகும் மனத்தின் தன்மை

எளிது சால மேலாக உரையாடும் … மிகவும் எளிதான வகையில்

மேலெழுந்து ஆணவத்துடன் பேசுகின்ற

எனது யானும் வேறாகி … எனது என்ற மமகாரமும், நான் என்ற

அகங்காரமும் நீங்கி,

எவரும் யாதும் யான் ஆகும் … பிற பொருள்கள் யாவும் நானே

ஆகக்கூடிய

இதய பாவன அதீதம் அருள்வாயே … மனோ பாவத்திற்கு எட்டாத

பெரு நிலையைத் தந்து அருள்வாயாக.(தமிழிலும் ஆங்கிலத்திலும்

    பொருள் எழுதியது    ஸ்ரீ கோபால சுந்தரம்;kaumaram.com)

யான், எனது என்ற எண்ணம் அகல வேண்டும்; எல்லோருக்கும் உதவ வேண்டும்.

Xxxx

கவிழ்த்த பானையும் ; விரியாத பாய் மரமும்

மழையே பெய்யாத ராயல சீமையில் ஒரு நாள் மழை கொட்டித்தீர்த்தது . எல்லோரும் வீட்டிலுள்ள அண்டா , குண்டா, பானை, சட்டி எல்லாவற்றையும், ஓட்டிலிருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் வைத்து நிரப்பிக்கொண்டு இருந்தனர் ; ஒரு கிழவி இருந்தாள் ; உடலை நகர்த்த முடியாத அளவு பலவீனம்;பேத்தியை அழைத்தாள் :

அடியே வீட்டிலுள்ள பானைகளை அந்த ஓட்டுத் தண்ணீர் விழும் இடத்தில் வையடி ; தண்ணீர் எல்லாம் வீணாக்கப் போகிறதே என்றாள் .

அந்தச் சிறுமி ‘கேரம் போர்டு’ carrom board  விளையாடிக்கொண்டிருந்தாள் ; வேண்டா வெறுப்பாக நாலு பானைகளை நாலு இடங்களில் வைத்தாள்

மழையும் நின்றது ; பாட்டி ஆர்வத்தோடு மெல்ல நகர்ந்து வந்து பார்த்தாள் ; பானையில் ஒரு சொட்டுக்கூட தண்ணீர் இல்லை. ஏன் ?

அந்த அறியாத சிறுமி பானைகளைத் தலைகீழாக கவிழ்த்து வைத்திருந்தாள்

நாமும் அது போலத்தான் இருக்கிறோம். இறைவன் அருள் மழை பொ ழிகிறான் ; நாம் கவிழ்த்த பானைகளாக இருக்கிறோம் ; திறந்த மனது இருக்க வேண்டும் ; மனது அகன்று விசாலமாக இருக்க வேண்டும் .

xxx

நாகப்பட்டினத்தில் 12 பாய் மரக்கப்பல்கள் இருந்தன.

துறை முகத்தில் கடலில் அந்த மரக்கப்பல்கள் நின்றன ;

நல்ல காற்று அடித்தது ; நாலு கப்பல்கள் அழகாகச் சென்றன .

நகராத 8 கப்பல்கள் காற்று ஒழிக காற்று ஒழிக ;என்று கோஷம் போட்டன .

அது காற்றின் பிழை அன்று; நான்கு கப்பல்களின் பாய் மரம் விரிந்து இருந்தன ; அவை காற்றின் சக்தியால் அழகாக மிதந்து சென்றன; மீதி எட்டுக் கப்பல்களின் பாய் மரம் ஒடுங்கி இருந்தன .

நாமும் அப்படித்தான் இருக்கிறோம்; இறைவனின் அருள் காற்று வீசிக்கொண்டே இருக்கிறது ; அதை ஏந்துவதற்கு நமக்கு விரிந்த மனம், திறந்த மனம் வேண்டும்

(கடவுள் ஒழிக என்று கோஷமிட்டுப் பலன் இல்லை).

நாம் எல்லோரும் இறைவனின் அருள் மழையையும் , அருள் காற்றையும் பெற வேண்டும் .

எல்லாம் எல்லோருக்கும் சொந்தம் . அருணகிரிநாதர் வேண்டியது போல யான், எனது என்ற எண்ணத்திலிருந்து விடுதலை பெறவேண்டும்

(வாரியார் சொற்பொழிவில் கேட்டதில் நினைவில் நின்றதை எழுதியுள்ளேன் ).

அனைவரும் யூ டியூபிலும் , ஒலித் தட்டு , ஒலி நாடாக்களில் கேட்டு மகிழ்க.

–subham—

Tags- கிருபானந்த வாரியார் , யான், எனது, கிழவி கதை, கவிழ்ந்த பானை , பாய்மரக் கப்பல் , தள்ளாதவன், நரை , ஏன்

இறைவன் கொடுத்த அங்கங்களைக் காப்பது எப்படி? (Post No.11,829)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,829

Date uploaded in London –   23 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

மஹாபாரத மர்மம்!

இறைவன் கொடுத்த அங்கங்களைக் காப்பது எப்படி?

ச.நாகராஜன்

இறைவன் மனிதனைப் படைத்து பல அங்கங்களைக் கொடுத்திருக்கிறான். அதைக் காக்கும் விதத்தையும் பெரியோர் மூலமாக நம்மை அறிய வைக்கிறான்.

மஹாபாரதத்தில் விளக்கப்படாத ரகசியம் எதுவுமில்லை.

இந்த அங்க ரகசியங்களையும் சாந்தி பர்வம் 275வது அத்தியாயத்தில் விளக்கமாகக் காணலாம்.

கைகள் முதலானவற்றைக் கொண்டு நான்கு துவாரங்களைக் கொண்டது மனித சரீரம்.

சரீரம், இந்திரியம், மனம், புத்தி என்ற நான்கு முகங்களைக் கொண்டவன் புருஷன்.

வேதவாக்கியத்தால் விராட், ஹிரண்டகர்ப்பன், அந்தர்யாமி, சுத்தம் என்கின்ற நான்கு விதமாக ஜீவன் அடைகிறான்.

கைகளும் வாக்கும் உதரமும் ஜனன ஸ்தானம் என்கின்ற குறியும் அந்தத் தேவர்களுக்கு வாயில்கள்.

அந்த வாயில்களை ஒவ்வொருவரும் காக்க வேண்டும்.

எப்படிக் காப்பது?

கைகால்களைப் பாதுகாப்பது எப்படி?

புத்திசாலியாக இருக்கும் ஒருவன் சொக்கட்டான் காய்களால் சூதாட்டம் ஆடக் கூடாது.

பிறருடைய பொருளைக் கவரக் கூடாது.

உறவினரல்லாதவருடைய ஹவிஸைக் கிரகிக்கக் கூடாது. அதாவது அவருக்கு யாகம் செய்விக்கக் கூடாது.

கோபமடைந்து ஒருவரை அடிக்கக் கூடாது.

இப்படி இருந்தால் அவனுடைய கால்களும் கைகளும் நன்கு பாதுகாக்கப்பட்டவையாக ஆகும்.

வாக்கைப் பாதுகாப்பது எப்படி?

கடும் சொல்லைச் சொல்லக் கூடாது.

வீண் வார்த்தை சொல்லக் கூடாது.

கோள் சொல்லக் கூடாது.

மற்றவரைக் குறித்து அபவாதம் சொல்லக் கூடாது.

சத்தியத்தையே விரதமாகக் கொள்ள வேண்டும்.

அஜாக்கிரதையின்றி மிதமாகப் பேச வேண்டும்.

இப்படி இருந்தால் ஒருவனுடைய வாக்கு நன்கு காக்கப்பட்டதாகும்.

உதரவாயிலைக் காப்பது எப்படி?

உணவு உட்கொள்ளாமல் இருக்கக் கூடாது.

அதிக உணவையும் உட்கொள்ளக் கூடாது.

நாக்கு சபலமின்றி இருத்தல் வேண்டும்.

உணவைத் தேடி பெரியோர் வரத்தக்க வகையில் இருத்தல் வேண்டும்.

சரீர யாத்திரைக்குத் தேவையான அளவு உணவை உட்கொள்ள வேண்டும்.

இப்படி இருப்பவனது உதரவாயில் (வயிறு) நன்கு காக்கப்பட்டதாகும்.

ஜனன ஸ்தானம் எனப்படும் குறியைக் காப்பது எப்படி?

பிறன்  மனைவியை விரும்பக் கூடாது.

ருதுவில்லாத காலத்தில் தனது மனைவியை உறவுக்கு அழைக்கக்கூடாது.

பத்நி விரதனாக இருக்க வேண்டும். அதாவது விவாம் செய்து கொள்ளாத பெண்களை விலக்க வேண்டும்.

இப்படிப்பட்டவனுடைய ஜனன ஸ்தானம் எனப்படும் குறி நன்கு காக்கப்பட்டதாகும்.

இப்படி எந்த புத்திசாலியினுடைய குறி, உதரம், கைகள், நான்காவதான வாக்கு ஆகிய நான்கு வாயில்களும் நன்கு காப்பாற்றப்படுகின்றனவோ அவன் தான் இரு பிறப்பை உடையவன்.

இந்த துவாரங்களைக் காப்பாற்றாதவனுக்கு அனைத்துமே பயனற்றவை ஆகி விடும்.

இது கபிலருக்கும் ஸ்யூரமரஸ்மிக்கும் நடந்த உரையாடலில் இடம் பெறுகிறது.

இந்த உரையாடலில் ஏராளமான ரகசிய விஷயங்களைப் பற்றி முற்றிலுமாக அறிய முடிகிறது.

***

கும்பகோணத்தில் அற்புத ராமாயண சிற்பங்கள், சிலைகள் (Post.11,828)- Part 2


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,828

Date uploaded in London – –  22 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

KUMBAKONAM RAMASWAMI TEMPLE; TAMIL NADU.

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN ON 19TH FEBRUARY 2023

PART TWO

KUMBAKONAM RAMASWAMI TEMPLE; TAMIL NADU.

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN ON 19TH FEBRUARY 2023

–SUBHAM—

TAGS- KUMBAKONAM, RAMASWAMI TEMPLE, SCULPTURES, கும்பகோணத்தில்,  அற்புத ,ராமாயண சிற்பங்கள், சிலைகள்,

கும்பகோணத்தில் அற்புத ராமாயண சிற்பங்கள், சிலைகள் (Post.11,827)- Part 1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,827

Date uploaded in London – –  22 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஆயிரம் கண் போதாது  வண்ணக்கிளியே

குடந்தைக் கோவிலைக் காண்பதற்கு –வண்ணக்கிளியே

ராமசாமி கோவிலைக் காண்பதற்கு –வண்ணக்கிளியே

என்று பாடத் தோன்றுகிறது . முதலில் பக்தியுடன் ராம பிரான் குடும்பத்தைப் பார்த்து, ரசித்து, , பக்தி செலுத்திவிட்டுப் பின்னர் ராமாயணக் காட்சிகளைக் காட்டும் சிற்பங்களையும் சித்திரங்களையும் மணிக்கணக்கில் ரசிக்கலாம் .

ஆயினும் பிப்ரவரி 19ம் தேதி (2023) தேதியன்று 5 மணி நேரத்துக்குள் ஆறு கோவில்களை பார்க்கத் திட்டமிட்டதால். என்னுடைய I pad ஐ பேட் மூலம் முடிந்த மட்டும் படம் பிடித்தேன் .

(ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே ….

ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே

குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே- பாவை விளக்கு திரைப்படப்  பாடல்).

XXX

முதலில் ராமசாமியைத் தரிசிப்போம். மாலை நாலரை மணி வாக்கில் கோவிலுக்குள் நுழைந்துவிட்டோம். பட்டாசார்யார் சரியாக 5 மணிக்கு சந்நிதியைத் திறந்தார். அற்புத தரிசனம்.

ராமன் பட்டாபிஷேகக் காட்சியில் லக்ஷ்மணன், சீதா தேவி, பாரத, சத்ருக்னன் ஆகியோரை ஒருங்கே காணலாம். அவர்கள் சாமரம் வீசிக்கொண்டிருக்க ஆஞ்சநேயர் வீணாகானம் செய்கிறார். ராமாயண பாராயண புஸ்தகமும் வைத்திருக்கிறார். இராமச்சந்திர மூர்த்தியும் சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கின்றார்கள். பரதன் குடை பிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீச, இலக்குமணன் கோதண்டத்தை தாங்கிய வண்ணம் கரங்குவித்து காட்சி தருகிறார். இது தஞ்சை நாயக்கர் காலத்தில் தோன்றிய கோவில். ஆகையால் மங்களாசாசனம் செய்யப்படவில்லை; அதாவது ஆழ்வார்கள் அறியாத புதிய கோவில் இது. சுமார் 500 ஆண்டுக்குட்பட்டதே . ஆனால் உருவத் திருமேனிகள் கம்பீரமாகக் காட்சி தருகின்றன. பார்த்தால் மறக்க முடியாத அற்புத வடிவங்கள்.

xxxx

கோவிலா கலைக்கூடமா ?

சந்நிதிக்கு முன்னர் உள்ள மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. அங்கு ராமாயணக் காட்சிகளையும் தசாவதார உருவங்களையும் தனித் தனியே தூண்கள் தோறும் காணலாம்.

பிரகாரத்தில் ராமாயணக் கதையை சித்திர ராமாயணமாக வரைந்து வண்ணமும் தீட்டியுள்ளனர். ஒவ்வொரு படத்தையும் ராமாயணக் கதை அறிந்தவர்கள் நன்றாக ரசிக்கலாம்.

சிற்பங்களுடன் சுமார் 60 தூண்களும்,, சுவர்களில்  200 சித்திரங்களும் இருக்கின்றன.

XXXX

இந்த இடத்திற்கு இன்னும் கொஞ்சம்  பாதுகாப்பும் பராமரிப்பும் தேவை. சித்திரங்களை  நெருங்காமல் இருக்க கயிறு கட்டி இருக்கிறார்கள். அது படம் எடுப்பதை பாதிக்கிறது . சில அடி தூரத்தில் கம்பி வேலி போட்டால் படங்களையும் பாதுகாக்கலாம் . மற்றவர்கள் படமும் எடுக்கலாம். கோவில் நிர்வாகமே அங்குள்ள சிற்பங்களையும் படங்களையும் அச்சிட்டு விற்கலாம்.

100 MORE PICTURES ARE COMING

—SUBHAM—

TAGS– ராமசாமி கோவில், கும்பகோணம், ராமாயண, சிற்பங்கள், சித்திரங்கள்

நீடித்த ஆயுள் பெற ஒரு வழி : சிருங்கேரி ஆசார்யாளின் அருளுரை!(11,826)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,826

Date uploaded in London –   22 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

நீடித்த ஆயுள் பெற ஒரு வழி : சிருங்கேரி ஆசார்யாளின் அருளுரை!

ச.நாகராஜன்

 சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் தக்ஷிணாம்னாய சிருங்கேரி சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதிகளாக 35 வருடங்கள் திகழ்ந்தார்கள்.

அவர் ஆற்றிய அருளுரைகள் பல; நிகழ்த்திய லீலைகள் பல.

மஹாஸ்வாமிகள் பிங்கள வருடம் ஆச்விஜ மாதம் கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசி திதி – 13-11-1917 அன்று பெங்களூர் நகரில் கைபு ராமா சாஸ்திரிகள் மற்றும் வெங்கடலக்ஷ்மி அம்மாள் ஆகிய புண்ணிய தம்பதிகளுக்கு மூத்த புத்திரனாக அவதரித்தார்கள்.

அவருக்கு ஶ்ரீநிவாஸன் என்ற பெயர் சூட்டப்பட்டது.

ப்ராஜபதி வருடம் – 1931ஆம் ஆண்டு அவர் சந்யாஸ ஆஸ்ரமத்தை ஏற்றார்.

ஜய வருடம் – 1954இல் – ஶ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் பீடாதிபதியாக ஆனார்கள்.

அவர் புகழ் எங்கும் பரவியது.

சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியான பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் குருவின் தரிசனத்திற்காக 24-8-1954 அன்று சிருங்கேரி வந்தார். தரிசனம் பெற்றார். மகிழ்ச்சியுற்றார்.

ஏராளமான ஞானிகள், தலைவர்கள், சாதகர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் உலகெங்கிலுமிருந்து வந்து அவரை தரிசித்தார்கள். அருளாசி பெற்றார்கள்.

சுக்ல வருடம் பாத்ரபத சுக்ல ஸப்தமி – 21-9-1989 அன்று அவர் விதேஹ முக்தி அடைந்தார்கள்.

அவர் 21-12-1982 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் பரமஹம்ஸி கங்கா ஆசிரமம் என்ற இடத்தில்  ஒரு மாபெரும் கூட்டத்தில் அருளுரை வழங்கினார்.

அப்போது அம்பாளைத் தகுந்த வகையில் தியானம் செய்து எவ்வாறு மக்கள் தங்களுக்கு வேண்டியதை அடையலாம் என்ற ரகசியத்தையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

நீண்ட ஆயுளை விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்?

அதற்கான ஆதார பூர்வமான ஸ்லோகத்தை அவர் அப்போது கூறி அருளினார் இப்படி:

சீர்ஷாம்போருஹமத்யே சீதலபீயூஷவர்ஷிணீம் பவதீம் |

அநுதினமனுசிந்தயதாமாயுஷ்யம் பவதி புஷ்கலமவன்யாம் ||

தலையிலுள்ள தாமரையினுள் இருந்து கொண்டு அம்பாள் குளிர்ந்த அம்ருதத்தைப் பொழிவதாக யார் அனுதினமும் தியானிப்பார்களோ அவர்களின் ஆயுள் இவ்வுலகில் அதிகரிக்கும்.

ஆசார்யாள் பின்னர் லம்பிகா யோகம் என்னும் அதிசய யோகம் பற்றி விளக்கினார். சாஸ்திரம் மட்டுமின்றி, நமது அனுபவமும் கூட தலையில் ஒரு தாமரை இருப்பதையே உணர்த்துகிறது என்றும் அவர் அந்த உரையில் அருளினார்.

லலிதா சஹஸ்ர நாமத்தில் 105வது நாமமாக வரும் நாமம்:

ஸஹஸ்ராராம்புஜாரூடா

ஸஹஸ்ர (கணக்கில்லாத) தளங்களையுடையது ஸஹஸ்ரார பத்மம். ப்ரும்ஹ ரந்த்ரத்தின் கீழ் இருப்பது. அந்த பத்மத்தின் மேல் எழுந்தருளியிருப்பவள். (அங்கு வரும்படி செய்யப்பட்டவள்)

அடுத்த 106வது நாமமாகத் திகழ்வது :

ஸுதா ஸாராபி வர்ஷிணீ

மேலே சொல்லியபடி ஸஹஸ்ரார பத்மத்தின் நடுவிலிருக்கும் சந்த்ர மண்டலத்திலிருந்து அம்ருதத்தை (ஸமஸ்த நாடிகளிலும்)

பெருகும் படி செய்கிறவள்.

சௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரர்,

ஸுதாதாரா ஸாரை: சரணயுகலாந்தர் விகலிதை:

ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புநரபி ரஸாம்நாய மஹஸ:

–    சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் 10

என்று கூறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.

இந்த ஸ்லோகத்தின் பொருள்:

தாயே! உன் திருவடிகளிலிருந்து பெருகுகின்ற அமிர்தத்தின் பிரவாகத்தால், உடலிலுள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளை நனைக்கிறாய். பிறகு சந்திர மண்டலத்திலிருந்து உன் இருப்பிடமான

ஆதார சக்ரத்தை அடைந்து, த உருவத்தைச் சர்ப்பம் போல் வட்டமாக அமைத்துக் கொண்டு சிறிய துவாரமுள்ளதும், தாமரைக் கிழங்கு போன்றதுமான மூலாதார சக்ரத்தில் யோக நித்திரையில் அமர்ந்திருக்கிறாய்.

இம்மாதிரி அம்ருதப்ரவாஹம் ஆவதைப் பற்றி சுருதியும் கூறுகிறது இப்படி:-

அம்ருதஸ்ய தாரா பஹுதா தோஹமானம் |

சரணம் கோ லோகே ஸுதிதாம் ததாது |

இந்த நாமமானது, ஸுதாதாராபிவரிஷிணீ என்றும் சொல்லப்படும்.

மனித குலத்தின் மீதுள்ள எல்லையற்ற கருணையால் அவ்வப்பொழுது தோன்றும் ஆசார்யர்கள் இப்படிப்பட்ட ரகசியங்களை உசிதமான சமயத்தில் எடுத்துரைத்து வந்திருக்கின்றனர்.

அந்த வகையில் நீடித்த ஆயுளுக்கான ரகசியத்தை இப்படி சிருங்கேரி மஹா ஸ்வாமிகள் எடுத்துரைத்துள்ளார்.

ஆதாரம் நன்றி : – யோகமும் ஞானமும் ஜீவன் முக்தியும்

சிருங்கேரி ஜகத்குருவின்  ஆன்மீக சாதனை என்னும் தெய்வீக லீலை குறித்த விவரங்களை அருமையாகத் தரும் நூல்

கிடைக்கும் இடம் : ஶ்ரீ வித்யாதீர்த்த ஃபவுண்டேஷன், Sri Vidyatheertha Foundation, G 8, Sai Karuna Apartments, 49 Five Furlong Road, Guindy, Chennai 600032

போன் : 90031 92825

***

எனது தந்தையார் மதுரை தினமணி பொறுப்பாசிரியராக இருந்த போது அவ்வப்பொழுது சிருங்கேரி ஜகத்குரு அவர்களின் அருளுரையைப் பிரசுரிப்பது வழக்கம்.

ஶ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்கள் மதுரைக்கு விஜயம் செய்த போது எங்கள் இல்லத்தில் எழுந்தருளி பரிபூரண ஆசிகளை வழங்கியதோடு ஒவ்வொருவருக்கும் ப்ரசாதம் கொடுத்து அனுக்ரஹித்தார்.

Beautiful Architecture of Thiruvalamchuzi Temple (Post No.11,825)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,825

Date uploaded in London – –  21 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Location

Six kilometres from Kumbakonam in Tamil Nadu.

Thiruvalam chuzi means Holy Right Whorl or Turn

People believed that the River Kaveri took a right turn here and so it is called by this name. Others believe that the trunk of the elephant faced god Vinayaka is turning or curving towards right is the reason for the name. Both may be right.

Appar , one of the Four Great Saivite Singers, composed  hymns on the God Siva here.

Siva temple famous for its architectural pillars and granite windows.

Ganesh here is called White Vinayaka = Swetha Vinayaka.

Moreover its made up of sea shells (Sea Animal shells and white in colour)

There is a beautiful Ashta Bhuja Kali- Eight Armed.

The temple needs renovation and refurbishment.

I took some pictures from outside.

I always avoid taking the pictures of the idols.

We went there in February 2023.

There are paintings/ pictures on the wall; they need protection and preservation as well.

Swamimalai , one of the Six Abodes of Lord Skanda/ Murugan/ Kartikeyan is very near.

–subham—

Tags – Ashta bhuja Kali, White Ganesh, Swetha Vinayaka, Thiruvalam chuzi.

குடந்தை சக்ரபாணியும் சாரங்கபாணியும் (Post No.11,824)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,824

Date uploaded in London – –  21 MARCH 2023                  

Contact –swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

திருமங்கை ஆழ்வார் அருளிய திரு எழு கூற்றிருக்கை 

கும்பகோணத்துக்கு பிப்ரவரி 19, 2023 அன்று மதியம் 3 மணிக்குச் சென்றோம். இரவு எட்டரை மணிக்குள் 6 கோவில்களைத் தரிசித்தோம். அதாவது ஒரே கல்லில் ஆறு மாங்காய்கள் !

ராமசாமி,சக்ரபாணி, சாரங்கபாணி , கரும்பாயிரம் பிள்ளையார் , நாகேஸ்வரர், கும்பேஸ்வரர் கோவில்கள்.

கும்பகோணத்திலும் சுற்று வட்டாரங்களிலும் உள்ள கோவில்களைத் தரிசிக்க பல வாரங்கள் தேவைப்படும்.

முதலில் சாரங்க பாணி கோவிலையும் சக்ரபாணிகோவிலையும் தரிசிப்போம்.

குடந்தை சாரங்கபாணி கோவிலுக்கு பாஸ்கர க்ஷேத்ரம் என்ற பெயரும் உண்டு. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

மூலவர் சாரங்க பாணி, ஆராவமுதன்

தாயார் – கோமளவல்லி , படிதாண்டாப்பத்தினி

ஹேம ரிஷியின் புதல்வியாகத் தோன்றிய கோமளவல்லியை பெருமாள் மணந்ததாக ஐதீகம்

 தீர்த்தம் –ஹேம புஷ்கரிணி (பொற்றாமரை)

திருமங்கை ஆழ்வார் அருளிய திரு எழு கூற்றிருக்கை 

 இங்கு சயன திருக்கோலத்தில் இருந்தாலும் இந்த வடிவம், உத்தான சாயி என்று அழைக்கப்படுகிறார். திருமழிசை ஆழ்வாருக்காக “கிடந்தவாறு எழுந்திருக்க ” முயலும் நிலையில் இருப்பதால் இந்தப் பெயர்.

பெருமாளுக்கு எதிரே நதி தேவதைகள்  வணங்குவது  இந்தக் கோவிலின் சிறப்பு.

இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், நாதமுனிகள், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தொகுக்கத் துவங்கியதும் இங்குதான். திருவா

ய்மொழிகளைக் கேட்டவுடன் அவருக்கு இந்த எண்ணம் உதித்தது.

மேலும் ஒரு சிறப்பு திருமழிசை ஆழ்வாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவருக்குத் தரிசனம் கொடுத்ததாகும். இந்தக் கோலத்தைக் கருவறையில் காணலாம்.

பெருமாளின் சித்திரைத் தேர் மிகவும் பிரசித்தமானது. பெருமாள் சந்நிதியே தேர் வடிவ மண்டபத்தல் சக்கரங்களுடன் காணப்படுகிறது  மஹேந்திர பல்லவனால் கட்டப்பட்ட மண்டபமும் இருக்கிறது.

ஆழ்வார் அருளிய நாலாயிரம் பாசுரங்களையும்  தொகுத்த நாதமுனிகள் பெருமாளை ஆராவமுதாழ்வான் என்று போற்றினார் . நம்மாழ்வார் திராவிட சுருதி தர்சகர் என்கிறார்.

ஏழு ஆழ்வார்கள் 51 பாசுரங்கள் பாடி மங்களா சாஸனம்  செய்த பெருமை உடையது.

Xxxx

சக்ரபாணி கோவில் 

சக்ரபாணி கோவிலில் , பெருமாள் அஷ்ட புஜங்களுடன் காட்சி தருகிறார்.சாரங்க பாணியும் சக்ர பாணியும் சகோதர்கள் என்று கருதப்படுவதால் பல உற்சவங்கள் சேர்த்து நடைபெறுகின்றன.

தாயார் விஜயவல்லி , சுதர்சனவல்லி

இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது

xxxx

12 கருட சேவை

கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.

 முதலாம் சரபோஜியின்  (கி.பி.1712-1728) பித்தளை உருவம்  கோயில் மண்டபத்தில் சுமார் 6 அடி உயரமுடைய, நின்ற நிலையில்  உள்ளது. அதற்கு அருகே சுமார் 3 அடி உயரமுடைய ஒரு பெண்ணின் உருவமும் பித்தளையில் உள்ளது.

விஷ்ணுவுக்கு 3 கண்கள்

மூன்று கண்களுடன் ஸ்ரீ சக்கரபாணி இருப்பதால் சிவபெருமானை போல இவருக்கும், பூ துளசி, குங்குமம் போன்றவற்றுடன் வில்வ இலைகளாலான அர்ச்சனையும் செய்யப்படுகிறது. சூரிய பகவான், பிரம்ம தேவர், அக்னி பகவான், மார்க்கண்டேயர் போன்றோர் வழிபட்ட தலம் இது.

–subham— 

Tags –  சக்கரபாணி , சாரங்க பாணி, நாதமுனிகள், திவ்வியப்பிரபந்தம், கும்பகோணம், கோவில், முக்கண் , 12 கருட சேவை, திருமங்கை ஆழ்வார் , திரு எழு கூற்றிருக்கை 

கோவில் சொத்தை துஷ்பிரயோகம் செய்யும் திராவிட மாடல் அதிகாரிகளுக்காக ஒரு ராமாயண சம்பவம்! (11,823)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,823

Date uploaded in London –   21 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com  

கோவில் சொத்தை துஷ்பிரயோகம் செய்யும் திராவிட மாடல் அதிகாரிகளுக்காக ஒரு ராமாயண சம்பவம்!

ச.நாகராஜன் 

ஒவ்வொரு நாளும் யூ டியூபில், செய்தித் தாளில், தொலைக்காட்சி செய்திகளில் கோவிலில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்க்கும் போது, கேட்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது.

கோவில் பணத்தில் சொகுசு கார், கோவில் பிரகாரத்திலேயே நிற்கிறது.

அர்ச்சகர் பணம் அம்பேல்.

கோவில் நிலத்தைச் சொந்தக்காரர்களுக்கும், லஞ்சம் தரும் வியாபாரிகளுக்கும் தரத் தயார்!

இப்படி நூற்றுக் கணக்கான அவலங்கள்.

இந்த திராவிட மாடல் டிரஸ்டிகளுக்கும் கோவில் சொத்தைக் கொள்ளையடிக்கும் கும்பலுக்கும் என்ன கதி கிடைக்கும்?

ஓ, ராமா. ஒரு பதிலைச் சொல்லேன்.

பதில் கிடைத்தது வால்மீகி ராமாயணத்தில்!

வாருங்கள் ராமாயணத்திற்குள் புகுவோம்!!

*

ராமராஜ்யம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு விதவை இல்லை. ஒரு பிச்சைக்காரன் இல்லை.

கொடுக்க யாரும் இல்லை, ஏனெனில் கொள்வோர் இல்லை.

வண்மை இல்லை ஓர் வறும இன்மையால்.

இப்படி கம்பனின் வர்ணனைப்படி அற்புதமாக நடந்து கொண்டிருந்தது ராம ராஜ்யம்.

அரண்மனை வாயில் வெறிச்சோடிக் கிடக்கும் எப்போதும்.

ஏன், யாருக்கும் எந்தக் குறையும் இல்லையே, இருந்தால் தானே அரண்மனை வாசலில் வந்து நிற்க வேண்டும்?

*

ஒரு நாள் ராமர் லட்சுமணனை அழைத்தார். ‘லட்சுமணா. அரண்மனை வாசலுக்குப் போய் யாராவது நிற்கிறார்களா, பார்த்து வா’ என்றார்.

லட்சுமணருக்கு ஒரே ஆச்சரியம்!

ராம ராஜ்யத்தில் ஒரு குறை இருக்குமா, என்ன!

என்றாலும் அண்ணா சொல்கிறாரே போய்ப் பார்ப்போம் என்று வாசலுக்கு வந்து பார்த்தார்.

யாரையும் காணோம்.

திரும்பிச் சென்று ராமரிடம், ‘யாரும் இல்லை’, என்றார்.

இந்த முறை ராமர், “ நீ மீண்டும் சென்று கவனமாகப் பார்.” என்றார்.

லட்சுமணர் திரும்பி அரண்மனை வாயிலுக்கு வந்தார்.

யாரும் இல்லை.

ஆனால் அண்ணா கவனமாகப் பார்க்கச் சொல்லி இருக்கிறாரே!

கவனமாக லட்சுமணர் பார்த்தார்.

ஒரு நாய் வாலை ஆட்டிக் கொண்டு முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தது.

லட்சுமணர் அதன் அருகே சென்றார்.

“என்ன, எதாவது சொல்ல வேண்டுமா? உள்ளே வா!” என்றார்.

“சொல்ல வேண்டும். ஆனால் நாய்ப் பிறப்பான நாங்கள் அரண்மனைக்குள் வரலாமா, கூடாதே” என்றது நாய்.

“இல்லை, இல்லை, யார் வேண்டுமானாலும் வரலாம், வா, வா” என்று நாயை அழைத்துக் கொண்டு ராமரிடம் சென்றார்.

*

ராமர் நாயைக் கூர்ந்து பார்த்தார்.

அதன் மண்டையில் அடிபட்டதற்கான ரத்தக் காயங்கள் மூன்று இருந்தன.

திகைத்த ராமர், “என்ன ஆயிற்று? சொல், ஏன் மண்டையில் காயம்?” என்று பரிவுடன் கேட்டார்.

நாய் பேச ஆரம்பித்தது : “நான் ஒன்றுமே செய்யவில்லை. நடந்து வந்து கொண்டிருந்தேன். சர்வசித்தி என்ற பிராம்மணன் என் தலையில் அடித்தான். இப்படிக் காயங்கள் ஏற்பட்டன. நீங்கள் தான் நீதி வழங்க வேண்டும்” என்றது நாய்.

ராமர் அரசவையைக் கூட்டினார்.

அந்த சர்வசித்தி பிராம்மணனை உடனே அவைக்கு அழைத்து வர ஆணை பிறப்பித்தார்.

பிராமணனும் வந்து சேர்ந்தார்.

“ஏன் இப்படிச் செய்தீர்?” என்று ராமர் பிராமணனைக் கேட்டார்.

பிராமணன் ராமரைப் பார்த்து, “ஓ! ராமா! பசியோடு நடந்து வந்து கொண்டிருந்தேன். இந்த நாய் நடு வழியில் வந்து நின்று வாலை ஆட்டி என்னை ஏளனம் செய்வது போல நடந்து கொண்டது. கோபம் வந்தது. களைப்பு, பசி! என்ன செய்வதென்று தெரியவில்லை. அது நடந்து கொண்ட விதத்திற்காக அடித்தேன். சிறு காயங்கள் ஏற்பட்டு விட்டன” என்றார்.

அரசவையினர், பிராமணனை தண்டிக்கும் அளவு இது பெரிய குற்றமில்லை என்று அபிப்ராயப்பட்டனர்.

ஆனால் நாய் ராமரைப் பார்த்து, ‘நான் தண்டனையைச் சொல்லலாமா’ என்று கேட்டது.

ராமர் அனுமதிக்கவே நாய், “இந்த பிராமணனை காலாஞ்சர் மடத்தின் தலைவராக நியமித்து விடுங்கள்” என்றது.

அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

ப்ரம்மாண்டமான மடத்தின் அதிபதியாக அவரை அமர்த்துவதா?

ராமர் நாய் சொல்வதற்கு இணங்கினார்.

பிராம்மணன் நன்கு அலங்கரிக்கப்பட்டு பெரிய யானையின் மீது ஆசனத்தில் அமர்த்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

அவையினர் பலரும் நாயைப் பார்த்து, “ ஒரு சந்தேகம்! இது தண்டனை அல்ல, வரம்! எவ்வளவு பெரிய கௌரவம் இது. இதை தண்டனையாக எப்படி எடுத்துக் கொள்வது?” என்று கேட்டனர்.

*

நாய் பதில் அளிக்க ஆரம்பித்தது:

“நான் இந்த ஜன்மத்தில் நாய். போன ஜன்மத்தில் ஒரு பெரிய மடாதிபதி. எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன். ஆனால் அன்றாட வாழ்க்கையில் தேவ திரவியங்களை எடுத்துப் பயன்படுத்தினேன். உண்டேன். அதனால் தான் எனக்கு இந்த இழிபிறப்பு கிடைத்து விட்டது. ஆகவே பிராமணனுக்கு எனக்குத் தெரிந்த அளவில் சரியான தண்டனையைத் தான் கொடுத்திருக்கிறேன்.” – இப்படி பதில் சொல்லியது நாய்.

அனவைரும் விஷயத்தை நன்கு புரிந்து கொண்டனர்.

கோவில் சொத்தைக் கொள்ளை அடிப்போருக்கு உரித்தான நரகம் எது?

கோவில் தெய்வ சொத்தை துஷ்பிரயோகம் செய்வது, மனைவி, பிராமணர், மற்றவர் சொத்தை அபகரிப்பது, ஒரு மைனரின் சொத்தை அபகரிப்பது இப்படிப்பட்ட செயல் படுபாதகச் செயல். இதைச் செய்தவருக்கு அவிச்சின்ன நரகமும் நாய்ப் பிறப்பும் தான் கிடைக்கும்.

இதை அவையோர் உணர்ந்தனர்.

நாயைப் புகழ்ந்தனர். நாய் தன் வாலை நன்றியுடன் ஆட்டியது.

*

திராவிட மாடல் கோவில் சொத்துக் கொள்ளையர்களுக்கு என்ன கதி என்று இனி நாம் எண்ண வேண்டாம்.

வால்மீகி ராமாயணத்திலேயே பதில் இருக்கிறது.

சிவன் சொத்துக் குல நாசம் என்று வழி வழியாக நமது முன்னோர் கூறியதோடு கோவிலில் அர்ச்சகர் கொடுக்கும் விபூதியில் நெற்றியில் இட்டது போக மீதியை அங்கேயே கோவிலிலேயே விட்டு விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பதை இப்போது நினைக்கத் தோன்றுகிறது!

என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை முறை ஹிந்து வாழ்க்கை முறை!

கோவிலைக் காப்போம்! இறைவனின் உடைமைகளை துஷ் பிரயோகம் செய்ய அனுமதியோம் இனி! – கொள்ளையரின் நலன் கருதியே!!!!

***

சுக்கிரன் பரிகார ஸ்தலம் கஞ்சனூர் (Post No.11,822)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,822

Date uploaded in London – –  20 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தில், சூரியனார்கோவில் ஸ்தலத்தைப் பார்த்துவிட்டு சுக்கிரன் (வெள்ளி) கிரக பரிகார ஸ்தலமான திருக் கஞ்சனூருக்குச் சென்றோம் கும்பகோணத்திலிருந்து 20 கிலோமீட்டர் செல்லவேண்டும் .

மாயவரம்- தஞ்சாவூர் மார்க்கத்தில் நாரசிங்கன்பேட்டை ரயில் நிலயத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது

இங்குள்ள சிவன் கோவிலில் சுவாமி பெயர்- அக்கினீசுவரர்

தேவியின் திருநாமம் – கற்பக நாயகி

சுக்கிரனுக்கு இங்கு தனி சந்நிதி இருப்பது சிறப்புடைய விஷயமாகும்

நடராஜர், சிவகாமி அம்மையார் உருவங்கள் இங்கு  சிலைகள் உருவத்தில் உள்ளன. வேறு இடங்களில் பஞ்சலோகத்தில் அவர்களைக் காண்கிறோம்.

அப்பர், சுந்தரர் ஆகிய இரு தேவார அடியார்கள் இங்குள்ள சிவ பெருமானைப் பாடிப் பரவியுள்ளனர்.

மானக்கஞ்சார நாயனார் அவதரித்த தலம்.

கலிக்காம நாயனார் திருமணம் நடைபெற்ற தலம்.

இந்த தலத்தின் மரம்- புரச மரம்  (இதன் இலைகள் யாகத்தில் நெய்யையும் அவிஸையும் எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.)

ஹரதத்த சிவாசாரியார் சைவத்தின் மேன்மையை ஸ்தாபித்த தலம் . அவருக்குத் தனி ஆலயம் இருக்கிறது. அவர் பூஜித்த சிவலிங்கமும் இருக்கிறது .

கோயிலுக்குக் கிழக்கில் அக்கினி தீர்த்தம் அமைந்துள்ளது.

அக்கினியும் பிரமனும் பூஜித்த தலம்.

இங்கு அற்புதமான  செப்புத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பலருடைய ரோகங்களைத் தீர்த்த இறைவன் இவர் என்று பல தல புராணக்கதைகள் இருக்கின்றன. ஜாதகத்தில் சுக்கிர தோஷமுள்ளவர்கள் வந்தால் அவைகள் நீங்கும் என்பதால் நிறைய பக்தர்கள் வருகின்றனர்

பராசர முனிவருக்கு சிவன் தாண்டவ கோலத்தைக் காட்டியதால் பராசபுரம் என்றும், பிரம்மனுக்கு திருமண கோலத்தைக் காட்டியதால் பிரம்மபுரி  என்றும், கம்சன் என்ற வடநாட்டு மன்னனுக்கு நோயைத் தீர்த்தத்தால் கம்சனூர்/ கஞ்சனூர் என்றும் இந்த ஊர் அழைக்கப்படுகிறது

சுரைக்காய் பக்தர் என்பவர் தன் மனைவியுடன் காட்சி தருகிறார். அவருடைய வரலாறும் செவிவழியாக வந்துள்ளது. அவர் சுரைக்காயை விற்று வாழ்க்கை நடத்திய பொழுது, கடைசி சுரைக்காயை விதைக்காக வைத்திருந்ததாகவும் சிவனடியார் போல இறைவனே வந்து யாசித்தபோது அவர் ஏது செய்வதென்று திகைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.  பாதி  சுரைக்காய் கறிக்கு, மீதி பாதி விதைக்கு என்று சிவனே சொன்னார் என்றும் கதை போகிறது. இதனால் இவர் சிலையும் இடம்பெற்றுவிட்டது.

ஹரதத்தர் என்ற  பெரியார் ஒரு வைணவக்  குடும்பத்தில் பிறந்தாலும் சிவனை வழிபட்டு பல அற்புதங்களைச்  செய்தார் . ஒரு பிராமணர் தவறுதலாக ஒரு பசுவின் கன்று மரணம் அடையக்  காரணமாகியதால் பயந்து நடுங்கினார். சிவ பெருமானின் ஐந்தழுத்தை உச்சரித்தால் பாவம் நீங்கிவிடும் என்று சொல்லியும் அவர் நம்பவில்லை. உடனே ஹரதத்தர் அவரைப் புல்லைப்பறித்துக் கொணருமாறு கூறினார். கோவிலில் இருந்த கல் நந்தியிடம் அதைக் காட்டி இந்தக் கல் நந்தி புல்லைச் சாப்பிடுமானால் சிவனின் பஞ்சாட்சரமும் உமது பாவத்தை நீக்கும் என்று சொன்னவுடன் கல் நந்தி  புல்லைச் சாப்பிட்டதாம். இவ்வாறு பல அற்புதங்கள் நிறைந்த இடம் என்பதால் மக்கள் நம்பிக்கையுடன் இங்கு வருகின்றனர்.

நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத் தீர்ப்பு என்ற பாரதியார் வாசகமும் இதை உறுதிப்படுத்துகிறது.

Xxxx

அப்பர் அருளிய தேவாரம்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : ஆறாம்-திருமுறை

மூவிலைநற் சூலம்வல னேந்தி னானை மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை நாவலனை நரைவிடையொன் றேறு வானை நால்வேத மாறங்க மாயி னானை ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங் காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.   1

தலையேந்து கையானை என்பார்த் தானைச் சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக் குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக் கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை மலையானை மற்றொப்பா ரில்லா தானை மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங் கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.   2

 –subham–

Tags- கஞ்சனூர் , சுக்கிரன் தலம்,

ஹரதத்தர், புரச மரம், பராசர முனிவர் , அப்பர்

திருடனின் கம்பு! (Post No.11,821)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,821

Date uploaded in London –   20 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருடனின் கம்பு!

ச.நாகராஜன்

பழைய காலத்தில் நியாயாதிபதிகள் எவ்வளவு புத்திகூர்மையுடன், தர்க்கரீதியாக, துப்பறிவதில் சிறந்து விளங்கினர் என்பதற்கு ஒரு சம்பவம் சொல்லப்படும். 

அது இது தான்: 

ஒரு கிராமத்தில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவரிடம் இரண்டு வேலைக்காரர்கள் வேலை பார்த்து வந்தனர்.

செல்வந்தர் அவர்களைப் பெரிதும் நம்பினார். அவர்களும் நன்கு நடந்து கொண்டு வந்தனர்.

நாளடைவில் நம்பிக்கையின் பேரில் வீட்டின் பொறுப்பை அவர்களிடமே தந்தார் செல்வந்தர்.

தனது நகைகளை அவர் பத்திரமாக ஒரு பீரோவில் வைத்துப் பூட்டி இருந்தார். சாவி பீரோவின் மேலேயே வைக்கப்பட்டிருந்தது.

ஒரு நாள் தனது பீரோவைத் திறந்த செல்வந்தர் திடுக்குற்றார்.

நகைகளைக் காணோம்.

வீட்டில் இருப்பதே இரு வேலைக்காரர்கள் தான்; உடனே வேலைக்காரர்களை அழைத்த அவர், ‘யார் நகைகளைத் திருடியது, உண்மையைச் சொல்லுங்கள்’ என்றார்.

இருவரும் தாங்கள் திருடவில்லை என்று உறுதியாகக் கூறினர்.

ஊர் நியாயாதிபதியிடம் சென்ற செல்வந்தர் நடந்ததைக் கூறினார்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டார் நியாயாதிபதி.

அவர் மிகுந்த புத்திகூர்மை உள்ளவர். திருடர்களின் சைக்காலஜி தெரிந்தவர்.

அவர் திடமாக செல்வந்தரிடம் இவர்கள் இருவருமே நிரபராதிகள் போலத் தான் எனக்குத் தோன்றுகிறது என்றார்.

இதைக் கேட்ட இரு வேலைக்காரர்களும் மகிழ்ந்தனர். அவர்களில் ஒருவனே நகை முழுவதையும் எடுத்திருந்தான். அவன் இன்னும் அதிகமாக மகிழ்ச்சியுற்றான்.

பின்னர் செல்வந்தரைத் தன் அருகே அழைத்த நியாயாதிபதி, “இருந்தாலும் உங்கள் திருப்திக்காக இதை நிரூபிக்க முயல்கிறேன்” என்று சொல்லி விட்டு அவர் காதோடு ரகசியமாகப் பேச ஆரம்பித்தார்.

அவர் தனது பேச்சை ரகசியமாக ஆனால் சற்று உரக்கவே சொன்னார்.

அதை இரு வேலைக்காரர்களும் உன்னிப்பாகக் கேட்டனர்.

“என்னிடம் மர்ம மூங்கில் தடிகள் இரண்டு உள்ளன. இரண்டும் ஒரே அளவு உயரம் கொண்டவையே. அந்த இரண்டையும் இவர்களிடம் ஆளுக்கு ஒன்றாகத் தருகிறேன். அதில் மர்மம் என்னவென்றால் திருடியவன் கையில் சென்ற தடி இரவு நேரத்தில் ஆறு அங்குலம் வளர்ந்து விடும். நாளை பார்ப்போம்” என்றார்.

“இரு வேலைக்காரர்களிடம் நாளைக்குக் காலை இதைக் கொண்டு வாருங்கள், இப்போது போகலாம்” என்றார்.

நல்ல வேலைக்காரன் தடியை வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அதை ஒரு ஓரத்தில் பத்திரமாகச் சாத்தி வைத்தான்.

திருட்டு வேலைக்காரனோ சற்று சிந்தித்தான்.

“இரவில் ஆறு அங்குலம் திருடியவனின் தடி வளரப் போகிறது. ஆகவே சரியாக ஆறு அங்குலத்தை இப்போது வெட்டி விடுவோம். அப்போது நாளைக்கு தடி சரியான பழைய உயரத்தை அடைந்து விடும்” என்று எண்ணினான்.

சரியாக ஆறு அங்குலம் தடியை வெட்டினான்.

மறுநாள் காலை இருவரும் நியாயாதிபதியிடம் குறித்த நேரத்தில் சென்றனர்.

திருட்டு வேலைக்காரனின் தடி ஆறு அங்குலம் குறைந்திருந்தது.

அவனைச் சுட்டிக் காட்டிய நியாயாதிபதி, செல்வந்தரிடம், “இவன் தான் உங்கள் நகையைத் திருடியவன்” என்றார்.

திருட்டு வேலைக்காரனோ கத்தினான் :”நேற்று நீங்கள் திருடியவனின் தடி ஆறு அங்குலம் வளரும் என்று சொன்னீர்களே! என் தடி ஆறு அங்குலம் குறைவாக அல்லவா உள்ளது” என்றான்.

“உனது தவறான செய்கையால் உன் மனச்சாட்சி உன்னை உறுத்தவே நீ தான் ஆறு அங்குலம் தடியை வெட்டினாய். இந்தத் தடி நியாயத்தை இப்படித் தான் வழங்கும்” என்றார் நியாயாதிபதி.

அந்த வேலைக்காரனின் வீட்டைச் சோதனை போட்ட போது அனைத்து நகைகளும் கிடைத்தன.

செல்வந்தர் நியாயாதிபதியின் புத்திகூர்மையை எண்ணி வியந்தார்.

அந்தக் கால நியாயாதிபதியின் செயல்பாட்டை விளக்கும் சம்பவம் இது!

—subham—