நந்திக் கலம்பகம் – கவின் மிகு சொற்கள்! (Post No.12,619)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,619

Date uploaded in London –  22 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

நந்திக் கலம்பகம் – கவின் மிகு சொற்கள்!

ச.நாகராஜன் 

சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

பாடல்கள் 88தனிப்பாடல்களாக காணப்படுபவை 27.

S.ராஜம்சென்னை வெளியிட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது.

1. மை வடிவோமலை வடிவோமரகதத்தின் திகழ் வடிவோ,  

  செவ்வடிவோபொன்வடிவோ – சிவனேநின் திருமேனி! (பாடல் 1)

2. அனைத்து உலகில் பிறப்பும் நீஅனைத்து உலகில் இறப்பும் நீ.   அனைத்து உலகில் துன்பமும் நீஅனைத்து உலகில் இன்பமும் நீ (பாடல் 1)

3. ஊழி நீஉலகு நீஉருவும் நீஅருவும் நீஆழி நீஅமுதம் நீஅறமும் நீமறமும் நீ (பாடல் 1)

4. போகாப் பொழுது (பாடல் 2)

5. மணி நகையவர் மனம் நகுவன (பாடல் 7)

6. செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு (பாடல் 11)

7. எனக்கு என்றின் நிலவு என்னும் இளம் பிறையும் எரியே

   சொரிகின்றது (பாடல் 20)

8. அங்கை அகல் வான் மின்னை மெலிவாளைநூலின் இடையாளை

   (பாடல் 24)

9. காவிரி நாட்டு அன்னப் பேடை அதிசயிக்கும் நடையாரை (பாடல்25)

10. விதியின் விளைவு கண்டு யாம் இருப்பது அல்லால்வினையம்

    மற்று உண்டோ? (பாடல் 45)

11. வைத்து என்னை ஆயிரம் செய்தீரே! (பாடல் 46)

12. ஆகிடுக மாமைஅணி கெடுக மேனி (பாடல் 51)

13. மனக்கு இனியான்அவன் இட்ட வழக்கன்றோ வழக்கு (பாடல் 53)

14. மலர்க்குல மாதவி தன் மேல் வண்டு ஆர்க்கும் காலம் (பாடல்56)

15. வரிக்குயில்கள் மாவில் இளந்தளிர் கோதும் காலம் (பாடல் 56)

16. நீல மயில் கோதை இவள் (பாடல் 57)

17.அறம் பெருகும் தனிச் செங்கோல் (பாடல் 60)

18. பகை இன்றிப் பார் புரக்கும் பல்லவர் கோன் (பாடல் 70)

தனிப் பாடல்கள்

1. கைக்குடம் இரண்டும்கனக கும்பக் குடமும் முக்குடமும்

   கொண்டால் (பாடல் 2)

2. ஏம வரை சலிக்கும்ஏழ் ஆழியும் கலங்கும் (பாடல் 5)

3. சிவனை முழுதும் மறவாத சிந்தையான் (பாடல் 8)

4. கவலை பெரிது! பழிகாரர் வந்திலார்! கணவர் உறவு கதையாய்

   முடிந்ததே! (பாடல் 8)

5. மங்கையர் கண் புனல் பொழியமழை பொழியும் காலம் (பாடல் 11)

6. கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம் (பாடல் 11)

7. ஆனி போய் ஆடி வரை ஆவணியின் காலம் (பாடல் 12)

8. பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி (பாடல் 15)

9. வான் உறு மதியை அடைந்தது உன் வதனம் (பாடல் 21)

10. மறி கடல் புகுந்தது உன் கீர்த்தி (பாடல் 21)

11. கான் உறு புலியை அடைந்தது உன் வீரம் (பாடல் 21)

12. கற்பகம் அடைந்தது உன் கரங்கள் (பாடல் 21)

13. தேன் உறு மலராள் அரி இடம் புகுந்தாள் (பாடல் 21)

14. செந்தழல் அடைந்தது உன் மேனி (பாடல் 21)

15. கண் என்பதும் இலையே! மொழி வாய் என்பதும் இலையே;

   காது என்பதும் இலையேஇது காலம் தனில் அடைவோ (பாடல் 25)

16. பருவ முகில் எழுந்து மழை பொழியும் காலம் (பாடல் 26)

17. பெரும் புலவர் தன் கலியைத் தீர்க்கும்  தமிழாகர நந்தி (பாடல் 27)

18. என் கலியைத் தீர்ப்பான் இவன் (பாடல் 27)

***

New Tamil Lesson 6:  Third Case- Instrumental, Social ,மூன்றாம் வேற்றுமை (Post No.12,618)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,618

Date uploaded in London – –  –  21 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மூன்றாம் வேற்றுமை  ஆல் ஓடு  உடன்

In Tamil we call it Third Case and in English it is known as Instrumental and Social  case.

In short it is about using ‘BY’, ‘With’

By Rama, By Krishna, By David, By Suresh, By Mary ஆல் etc.

Also

With Rama, With July, With Mary, With Rajesh ஓடு  உடன்

xxxx

ராமனால் இராவணன் கொல்லப்பட்டடான்

Raamanaal (By Rama) raavavanan (Ravana) Kollap pattaan (was killed= passive voice)

ராமனோடு லெட்சுமணன் சென்றான்

Raamanodu (Wth Rama), Letchumann (Lakhsman) Sendraan (went)

சீதையும் அவர்களோடு சென்றாள் .

Seethaiyum avarkalodu sendraal

Sita also,  with them,  went

xxxx

நான் யாரோடும் பேச மாட்டேன்

Naan yaarodum Pesamaatten

I, with anyone, wont talk

I wont talk to anyone

xxxx

என்னுடன்/ என்னோடு  யார்  லண்டனுக்கு வருகிறீர்கள்?

Ennudan/ ennodu (with me) yaar (who) to London, come?

Who comes to London with me.

Remember the Doubling Rule for En, Un, Kan (eye) , Man (soil or sand)

En+n+udan= Ennudan

Un+n+ Odu = Ennodu

Xxxx

Ennaal Hindi pesa  Mudiyaathu (By me, Hindi, To speak, Cant

என்னால் ஹிந்தி பேச முடியாது ;

I cant speak Hindi.

En+n+aal= Ennaal= By me

xxx

Ennaal thamiz pesa  mudiyum= என்னால் தமிழ் பேச முடியும்

உன்னால் 4 தோசை சாப்பிட முடியுமா ?

By you, 4 Dosai Saappida ,mudiyumaa?

Can you eat four dosas?

xxxx

லதாவால் 10  கிலோ அரிசி மூட்டையை தூக்க முடியாது

Lathaavaal ,10 kilo arisi ,mooottaiyai, thookka mudiyaathu.= By Lathaa, Ten kilo  Arisi Mootaiyai thuuukka muduiuaathu

Latha cant lift Ten Kilo rice bag.

Arisi= Rice; Bag= Moottai or Pai

xxxx

பாலோடு காப்பி கொண்டு வா

Paalodu kaappi konduwaa!

With milk, coffee, bring?

Paal= Milk (paal+Odo= Paalodu

xxxx

சர்க்கரையோடு டீ குடிப்பீர்களா?

Sarkkaraiyodu Tea Kudipprgalaa?

Do you drink tea with Sugar

Sakkarai= Sugar

xxxx

யாரால் தமிழ் எழுத முடியும்

Yaaraal Thamil ezutha mudiyum?

By whom Tamil can write?

Who can write Tamil?

xxxx

கந்தனோடு  போகவேண்டாம்

Kanthanodu Pokavendaam= with kanthan should vo

You should not go with kanthan/Skanda

Kanthan= Skanda; Suntharam + Sundar

சுந்தரத்தோடு போ.

 sutharaththodu Po

With Sundaram Go.

Suntharam is a AMM sounding word; so the old rule is

Sunthara+aththodu= Suntharaththodu

ALWAYS REMEMBER THE RULE ABOUT AMM ENDING WORDS

ALWAYS REMEMBER THE RULE ABOUT ENN, UNN, KANN, MANN

xxxx

கண்களால் பார்க்க முடியும்

Kangalaal Parkkamudium

With eyes we can see

IN TAMIL WE SAY AAL WITH BODY PARTS; IN ENGLISH WE USE WITH

கண்ணால் பார்க்க முடியும்

Kannaal Paarkka mudiyum

With eye we one can see

காதால் கேட்க முடியும்

With ear we can hear

வாயால் சாப்பிட முடியம்; பேசவும் முடியும்.

Vaayaal saappida mudium

With mouth saappita mudiyum

With body parts Tamil likes to use  BY; others use  With.

To be continued……………………………..

Tags- New Tamil Lesson, Part 6, Social case, Instrumental case

திருக்கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 34 (Post No.12617)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,617

Date uploaded in London – –  –  21 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 34

68.திருக்கோவில் சித்திர வேலாயுத கந்தசாமி கோவில்

சித்திர வேலாயுத என்ற அடைமொழியுடன் உள்ள மூன்றாவது கோவில் இது. கிழக்கு இலங்கையில் மட்டக்களப்பு வட்டாரத்தில் உளது .மட்டக்களப்புக்கு தெற்கில் கடலோரமாக 50 மைல் தொலைவு சென்றால் திருக்கோவிலை அடையலாம்; இது பாண்டியர் கால 13 ஆம் நூற்றாண்டுக் கோவில். இந்த ஆலயத்தின் விமானம், எஞ்சி நிற்கும் தூண்களைக் கொண்டு ஆலயத்தின் வயதை தொல் பொருட் துறையினர் கண்டு பிடித்தனர் .

மாயூரம் அருகில் வைத்தீஸ்வரன் கோவில் என்ற ஆலயம் பெயரே ஊர்ப்பெயர் ஆனது போல, இங்கும் திருக்கோவில் என்ற ஆலயமே ஊருக்கும் பெயரைக் கொடுத்துவிட்டது

ராவணன், திருகோண மலையில் உள்ள கோணேஸ்வர லிங்கத்தைக் கும்பிடப்போகும்போது, இங்கு தங்கிச் சென்றான் என்பது கர்ண பரம்பரைக் கதை.  அவன் சென்ற வழியில் எல்லாம் சிவன் கோவில்கள் தோன்றின..

வெட்டா Vedda என்னும் வேடர்கள் வசித்த இடம் இது. அவர்கள் ஈட்டியையும் வில் அம்பினையும் வைத்து மிருகங்களை வேட்டையாடி வந்தனர். ஆகவே ஈட்டி போன்ற வேல் என்பதையும் அவர்கள் வணங்கத் துவங்கினர். அந்த இடங்கள் எல்லாம் பிற்காலத்தில் கோவில்கள் ஆயின.

உகந்த மலை, வெருகல், மண்டூர் முதலிய ஆலயங்கள் இதற்குச் சான்று பகரும்.

இந்த ஆலயங்கள் குறித்து மட்டக்களப்பு மான்மியம் ஒரு செய்தியைத் தருகிறது  அசுரர்களை முருகப்பெருமான் அழித்த போது உண்டான ஒளிக்கதிர்கள் உகந்த மலை, மண்டூர் , திருக்கோவில் ஆகிய 3 இடங்களில் தங்கின. அவை நாவல், தில்லை மரங்களிலும் தங்கின. வேடர்கள் அங்கெல்லாம் வழிபாட்டினைத் துவக்கினார்கள். முன்காலத்தில் இந்த இடம் நாகர் முனை என்னும் துறைமுகமாக விளங்கியது.

மட்டக்களப்பு மான்மியம், திருக்கோவில் தோன்றிய கதையை விரிவாகவே விளம்புகிறது .

பிரசன்ன சித்து என்பவர் இந்தப் பகுதியை ஆண்டபோது, கலிங்க நாட்டிலிருந்து புவனேக கஜபாகு என்ற இளவரசர் வந்தார். அவர் இலங்கையிலுள்ள சிவத் தலங்களைத் தரிசிக்க மனைவியுடன்  வந்தார். அவருக்கு ராஜ உபசாரம் கிடைத்தது. அவருடன் வந்த இளவரசி சோழ நாட்டைச் சேர்ந்தவள். திருக்கோவிலில் ஒரு ஆலயத்தை நிர்மாணிக்க ஆசை கொண்டாள் அது நிறைவேறியது. சோழ  நாட்டுச் சிற்பிகள் வந்து கோவிலை எழுப்பினர்.  இளவரசியின் பெயர் தம்பதி நல்லாள். அவள் பெயரில் இன்றும் தம்பிலு வில்லு என்ற இடமுள்ளது .அவர்கள் இங்கேயே குடியேறினர்  இது நடந்தது கி.பி அல்லது பொது ஆண்டு 28 ஆகும். அவர்களுடய மகன் மனு நேய கஜபாகு,  பெற்றோரின் பணியினைத் தொடர்ந்தான். கோவில் ஏழு நிலைக்கு கோபுரமாக உயர்ந்தது. அவன் பல பாசனைக் குளங்களையும்  வெட்டினான்.

பின்னர் பாண்டிய மன்னர்கள் வந்து கோவிலைப் புதுக்கினர்.

கோவிலில் கண்ட கல்வெட்டு பற்றி HUGH  NEVILLE ஹுயூக் நெவில் தகவல் தருகிறார். அது தேவதானக் கல்வெட்டு; அதாவது தேவாலயத்துக்கு விடப்படும் தானம் பற்றியது. விஜய பாகு தேவர் , 50 ஏக்கர் நிலத்தை கோவிலுக்கு அளித்தார் இந்த தானத்துக்கு ஊறு செய்வோர் கங்கை நதிக்கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்ற வழக்கமான சாபத்துடன் கல்வெட்டு முடிகிறது. கல்வெட்டு குறிப்பிடும் மன்னர் மூன்றாம் விஜயபாகு 1240-1267 அல்லது ஆறாம் விஜயபாகு 1398-  1410 மன்னராக இருக்கலாம்.

1967ம் ஆண்டில் மேலும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது;  இது 16 ஆம் நூற்றாடுக் கல்வெட்டு.

பிற்காலத்தில் போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்கள் கோவில் குருக் களைக்  கொன்று கோவிலையும் இடித்தார்கள் என்றும் ஊரே காலியாகி அந்த இடம் வெறிச்சோடிப்போனது என்றும் பால் ஈ  பியரிஸ் தனது நூலில் எழுதியுள்ளார்.

மத வெறியர்கள் அழித்தபோது கோவிலுக்கு 3 கோபுரங்கள் இருந்த செய்தியை போர்ச்சுகீசிய கிறிஸ்தவப் பாதிரி ரெவரெண்ட்  கிராஸ் எழுதிவைத்துள்ளார்..

டச்சுக்கார, பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில்  இந்தியாவிலிருந்து வந்த வணிகர்குல மக்கள் கோவிலை மீண்டும் கட்டினார்கள். முன்னர் இந்தக் கோவிலின் பெயர்- சிவ ஞான சங்கரர் கோவில் .

இப்போது பூஜைகளுடன் ஜூலை ஆகஸ்ட் அமாவாசையில் நிறைவு பெர்ம் பத்து நாள் உற்சவம் நடக்கிறது.

கதிர்காமக் கந்தனை தரிசிக்க பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு  திருக்கோவில் பல வசதிகளை அளிக்கிறது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆலயத்தை மக்கள், தேசத்துக் கோவில் என்று உரிமை கொண்டாடுவார்கள் ; பெருமை கொள்வர்.

ஏழாம் விஜயபாகுவால் (1513–1521) அவனது பத்தாம் ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட சிதைந்த கல்வெட்டொன்று, இக்கோவிலில் உள்ளது. இதே மன்னனால் நீர்ப்பாசனத்துக்கு “வோவில்” எனும் ஏரி வழங்கப்பட்டதைக் குறிப்பிடும் தம்பிலுவில் கல்வெட்டும், இதே ஆலயத்தில் வைத்துப் பேணப்படுகின்றது.

ஆடி அமாவாசையன்று கோவில் விழா பூர்த்தியாகிறது . ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு நீர்க்கடன் செலுத்துவது மிகவும் முக்கியம் என்பதால் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.

–subham—

Tags- திருக்கோவில்

தமிழ் மொழியை வளர்ப்போம் 21102023 (Post No.12,616)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,616

Date uploaded in London – –  –  21 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தமிழ் மொழியை வளர்ப்போம் 21102023

This is Part 2; First part was posted yesterday

ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து  எடுக்கப்பட்ட “கே ” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்

கே ++ – பைத்தியக்காரன்

கே ++ – கேனோபநிடதம், பைத்தியம்

கே ++ – வள்ளிக்கொடி

கே+ – பரிகாசம் விகடன், சூரியன், பறவை, கணவனுடன் மனைவி செய்யும் விளையாட்டு

கே +++++ – வசந்த மண்டபம்

கே +++++++ –  – மிளகு

கே+++ – அசோகமரம்

கே+++ – கிணறு

கே+++++ – – திரிகால ஞானம்

கே+++ – மீனவன், , வலையன்

கே++ – பன்றி

கே++ – கீழ்ப்படியாமை

கே+++++ – – பகையும் நட்பும் இல்லாத அயலார்

கே++++ –  – குரக்கன்

கே + –  அகழி, கிணறு, குளம், துறவு, தடாகம்

கே +++ – சிவன்

கே ++++– அயோக்கியன்

கே+++ – வெள்ளை காக்கணம்  கொடி

கே ++, ,  – தாழை

கே +++ – அபிநவ தண்டி என்ற பட்டம் பெற்ற ஆந்திர கவி

Xxxxxxx

விடைகள்

கேனன் – பைத்தியக்காரன்

கேனம் – கேனோபநிடதம், பைத்தியம்

கேவல் – வள்ளிக்கொடி

கேலி – பரிகாசம் விகடன், சூரியன், பறவை, கணவனுடன் மனைவி செய்யும் விளையாட்டு

கேலிகிருகம் – வசந்த மண்டபம்

கேவல திரவியம் – மிளகு

கேலிகம் – அசோகமரம்

கேவடம் – கிணறு

கேவல ஞானம் – திரிகால ஞானம்

கேவேடன் – மீனவன், , வலையன்

கேழல் – பன்றி

கேளாமை – கீழ்ப்படியாமை

கேளல் கேளிர் – பகையும் நட்பும் இல்லாத அயலார்

கேழ் வரகு – குரக்கன்

கேணி –  அகழி, கிணறு, குளம், துறவு, தடாகம்

கேதாரன் – சிவன்

கேப்புமாறி – அயோக்கியன்

கேமாச்சி- வெள்ளை காக்கணம்  கொடி

கேதகி, , கேதகை – தாழை

கேதனன் – அபிநவ தண்டி என்ற பட்டம் பெற்ற ஆந்திர கவி

 –subham—

Tags- தமிழ் மொழி,  வளர்ப்போம் 

காஷ்மீர் ஃபைல்ஸ்! (Post No.12,615)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,615

Date uploaded in London –  21 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

காஷ்மீர் ஃபைல்ஸ்!

ச.நாகராஜன்

காஷ்மீர் ஃபைல்ஸில் சொல்ல வேண்டியது ஏராளம் இருக்கிறது.

கொடுங்கோலன் சிக்கந்தர் செய்த மஹா பாதகச் செயலைப் பார்ப்போம்.

ஆண்டு கி.பி. 1394.

சுல்தான் சிக்கந்தர் அரியணை ஏறினான்.

இந்து மதம் என்றாலே அவனுக்கு வெறுப்பு; உடல் எல்லாம் எரியும்.

எல்லா இந்துக்களையும் ஒழிக்க வேண்டும் என்பது அவனது எண்ணம்.

சனாதன ஒழிப்பு – திராவிட மாடல் போல!

ஹிந்துக் கோவில்களை அழித்தொழிக்க தனி ஒரு பிரிவையே அவன் ஏற்படுத்தினான். ஒரு ஆண்டு முழுவதும் அது தீவிரமாகச் செயல்பட்டது.

பிரம்மாண்டமான ‘மார்த்தாண்ட’ கோவில்களை அழிக்க அவன் திட்டமிட்டான்.

ஆனால் அந்த அற்புதமான வலிமையான கோவில்களோ அவனை எள்ளி நகையாடியது தனது திறத்தால்.

சில கோவில்களில் கல்வெட்டாக ஒரு செய்தி பொறிக்கப்பட்டிருந்தது.

அதில் சிக்கந்தர் என்பவன் இந்தக் கோவிலை அழிக்க முயல்வான் என்று பொறிக்கப்பட்டிருந்தது.

அவனுக்கு மட்டும் இந்தக் கல்வெட்டுச் செய்தி தெரிந்திருந்தால் இந்தக் கோவிலை அவன் அழிக்காமல் விட்டிருப்பான். ஹிந்துக்கள் பொய் சொல்பவர்கள் என்று நிரூபிக்க எதையும் செய்யத் தயங்காதவன் அவன். ஆனால் கோவிலை அழித்தான். ஹிந்துக்களின் அறிவார்ந்த முன்னோரின் கணிப்பை நிஜமாக்கினான்.

கோவிலில் அவன் பெயர்த்தெடுத்த வலிமையான பெரிய பாறைகள் ஜும்மா மஜ்ஜித் கட்ட உதவின. பல கற்களை ஆங்காங்கே வைத்து நகரை அழகு படுத்தினான்.

கோவிலை இப்படி சிதிலப்படுத்திய அவன் ஹிந்துக்களின் மீது பார்வையைச் செலுத்தினான்.

அனைத்து ஹிந்துக்களுக்கும் அவன் மூன்றே மூன்று வழிகளைச் சொன்னான்.

1) உடனடியாக இஸ்லாமுக்கு மாறுவது

2) இல்லையேல் காஷ்மீரை விட்டு ஓடிப்போவது

3) அவன் கைகளால் கொல்லப்பட்டு சாவது

ஏராளமானோர் இரண்டாம் வழியைத் தேர்ந்தெடுத்தனர். இந்தக் கயவன் வாழும் ஊரில் இருப்பதே பாவம் என்று குடும்பத்துடன் இடம் பெயர்ந்தனர்.

வேறு வழியே இல்லாதவர்கள் மதம் மாறினர்.

அஞ்சாத நெஞ்சம் படைத்தவர்களோ காஷ்மீரை விட்டுப் போகமாட்டோம்; வழிபாடுகளையும் நிறுத்த மாட்டோம் என்று உறுதியாக நின்றனர். அவர்கள் கொல்லப்பட்டனர்.

ஏழு மணங்கு பூணூல் குவியலை குவியலாகச் செய்து அவன் எரித்தானாம்.

அவ்வளவு பிராமணர்களை அவன் கொலை செய்திருக்கிறான்.

ஹிந்து சாஸ்திரங்களையும் அறநெறி கூறும் புத்தகங்களையும் திரட்டி டால் ஏரியில் அவன் எறிந்தான்.

இந்து மதத்தை ஒழித்து விட்டேன் என்று அகம்பாவத்துடன் அவன் சிரித்தான்.

ஆனால் அந்தப் பாவியால் சனாதனத்தை ஒழிக்க முடிந்ததா?

வரலாறு உண்மையைச் சொல்கிறது. அவன் தான் ஒழிந்து போனான்.

ஆனால் என்றுமுள்ள ஹிந்துமதம் – சனாதனம் – இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது. உலகெங்கும் பரவி வருகிறது.

காஷ்மீர் ஃபைல்ஸின் ஒரு துளி இது!

ஃபைல்ஸின் பல பக்கங்களைப் புரட்டினால் ஹிந்துக்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட அனைத்துக் கொடுமைகளையும் அறியலாம்!

***

New Tamil Lesson 5- இரண்டாம் வேற்றுமை/ Accusative Case (Post No.12,614)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,614

Date uploaded in London – –  –  20 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Let us look at Second case today (him, her, them)

ஐ = ai Second Case suffix

You add second case suffix AI with the subject.

Xxx

கூப்பிடு= Verb= Call, Invite

Avanaik kooppitu = call him (Avan/he+ ai= Avanai) அவனைக் கூப்பிடு

Avalaik kooppitu= call her = அவளைக் கூப்பிடு (She/her Call)

Avarkalaik kooppitu= call them அவர்களைக் கூப்பிடு

Look at the order Verb comes at the end as usual

xxxx

Another rule is Doubling ; if it is a short sound word En, Kan, Un then the letter N is doubled

என் + ன் + ஐ = என்னை = me

உன் + ன் + ஐ = உ ன்னை = you

கண் +ண் + ஐ – கண்ணை = eye+ai

அவன் + ஐ = அவனை him

அவள் + ஐ = அவளை her

Xxxx

Another Rule is for some words or names you insert Y sound or V sound. Look at the examples given below:

ராமனை = Raaman+ai = raamanai (No change; raamaN+ai= raamanai

ஜூலியை = ஜூலி +ய் +ஐ = July+y+ai = jooliyai (Y sound is inserted)

பகவத் கீதையை =+ய் +ஐ = கீதையை = Geethaiyai

If you Tamilize Bhagavad Gita as Geethai, then Y is inserted.

xxxxx

The rule is  with I ending  or E ending, you insert Y Y

ரஞ்சனியை = ரஞ்சனி +ய் +ஐ

இ+ ஐ = யை

xxxx

AA  ending words you insert V V

லதாவைக்  கேள்

ஆ+ஐ = ஆ வை

லதாவை = லதா +வ் +ஐ

பகவத் கீதாவை = கீதா +வ் = கீதாவை = Geethaavai

If you use Sanskrit pronunciation, then V is inserted to make accusative

U ending words also சோமு +வ் +ஐ = சோமுவை = Somuvai

உ+ஐ = வை

RANJANI, SOMU are personal names.

Xxx

பகவத் கீதையை (ய்) தினமும் படியுங்கள் (Bhagavad Geethai Daily Read)

பகவத் கீதாவை (வ் )  தினமும் படியுங்கள் (Bhagavad Geethaa Daily Read)

தினமும்= dinamum= Everyday, Daily

xxxxx

Picture Line- ARASANUM SANYAASIYUM; King and Ascetic (Sanyaasi= Monk, Ascetic)

அது+ஐ = அத் +ஐ= அதை (That)

அதைச் சாப்பிடாதே = Athai saappitaathe =That don’t eat

அவனைக் கேட்காதே = Avanaik Ketkaathe=  Him Don’t ask

இதைச் சாப்பிடு == Ithaich Sappidu= This Eat

xxxx

உன்னைக் கூப்பிட்டார்களா ? Unnaik Kooppittarkalaa ? You did they call?

DID THEY CALL YOU?

என்னை அழைக்கவில்லை Ennai Azaikkavillai = Me they did not invite

THEY DID NOT INVITE ME

XXXX

அவனை  நம்பலாம் = Avanai Nambalaam= Him You may trust= You may trust hiM

ஜேம்ஸை நம்பாதே= Jamesai Nambaathe =  James  don’t trust

XXXX

கண்களை (த்) தொடாதே = கண்கள் +ஐ = Kangalaith thodaathe = Eyes don’t touch

கண்ணை (த்)  தொடாதே = கண் +ண் +ஐ = Kannaith thodaathe = Eye don’t touch

கண் = EYE; கண்கள்= EYES

தொடு = THODU = touch

தொடாதே = THODAATHE = Dont touch

XXXX

யாரைப் பார்க்க வந்தீர்கள் ? = Yaaraip paarkka vantheerkal? Whom to see did you come?

WHO DID YOU WANT/ COME TO SEE?

இதை எங்கே வாங்கினாய்? = Ithai enge Vaanginaay? This where you bought?

Where did you buy this?

XXXXX

ராமனையும் கிருஷ்ணனையும் , லதாவையும், சீதையையும் கல் யாணத்துக்கு அழைப்பேன்= Raamanaiyum, Kirushnananiyum, Lathaavaiyum, seethaiyaiyum Kalyaanaththukku Azaippem

Rama and Krishna and Latha and Seethai to the wedding I will invite

In Tamil we add and= Um with  every name in the sentence unlike English

TAMIL LESSON FROM LONDON-1

Tamil and Vedas

https://tamilandvedas.com › tamil-le…

22 Dec 2021 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. TAMIL LESSON FROM LONDON-1.

To be continued………………………..

Tags- Accusative, Ai

QUIZ நவராத்திரி பத்து QUIZ (Post No.12,613)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,613

Date uploaded in London – –  –  20 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Serial Number 78

1.நவராத்திரி முடிந்தவுடன் வரும் விஜய தசமி யை ஏன் கொண்டாடுகிறோம் விஜய தசமி அன்று இந்தியாவில் துவக்கப்பட்ட அமைப்பு எது?

Xxxx

2.எத்தனை வகை நவராத்திரிகளை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்அவை யாவை ?

xxxx

3.இந்துக்கள் கல்வியைத் துவங்கும் நாள் எது?

xxxx

4. சீமா லங்கனம் என்றால் என்ன?

xxxx

5. தசரா என்றால் என்னஅது எங்கு நடைபெறுகிறது?

xxx

6.நவராத்திரியை மூன்று பகுதிகளாகப் பிரிப்பார்கள் ஏன்?

xxxx

7.பெரிய நவராத்திரி என்று துவங்கும் ?

xxxx

8.இதை குஜராத்திகள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் ?

xxxx

picture- Durga ib Holland Leiden Museum

9.வங்காளத்தில் மாநில அளவில் கொண்டாடப்படும் பண்டிகை எது?

xxxx

10.நவராத்திரியில் ஒன்பது தேவிகள் ஒவ்வொரு நாளிலும் வழிபடப்படுகிறார்கள். அவர்கள் யார் ?

Answers :

1.விஜயதசமியன்று மகிஷாசுரனை தேவி வதம் செய்தாள் . அன்றுதான் ராவணனை ராமபிரான் வதம் செய்து அயோத்திக்குத் திரும்பிய நாள் என்றும் சொல்லுவார்கள் ;ராம்லீலா கொண்டாடப்படுகிறது. அன்று டில்லி போன்ற நகரங்களில் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உருவ பொம்மைகளை எரிப்பார்கள்.

ஆர் எஸ் எஸ் எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 1925 ஆம் ஆண்டு விஜய தசமி அன்று துவங்கப்பட்டது

xxxx

2.சைத்ர  நவராத்திரி, ஆஷாட  நவராத்திரி, சாரதா  நவராத்திரி,

மாக  நவராத்திரி

xxxx

3.பாரம்பர்யத்தைப் பின்பற்றும் இந்துக்கள் விஜய தசமி நாளன்று குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்வார்கள். பிறந்தது முதல் இறக்கும் வரை இந்துக்களுக்கு 40 வகை சடங்குகள் உண்டு. அதில் வித்தியாரம்ப மும்  ஒன்று. குழந்தைகளை நெல் முதலிய தானியங்கள் உள்ள தட்டில் ஹரி அல்லது சிவன் பெயரை கை விரல்களால் எழுத வைப்பார்கள் .

xxxx

4. ஸம்ஸ்க்ருதச் சொல் சீமா என்றால் தமிழில் எல்லை என்று பொருள். முன் காலத்தில் விஜய தசமியன்று மன்னர்கள் எல்லை தாண்டி படை எடுப்பார்கள் . இப்படி எல்லை தாண்டும் சடங்கினை இப்போதும் ராஜா வம்சத்தினர் அடையாள பூர்வமாகக் கடைப்பிடிக்கிறார்கள் லங்கனம் என்றால் தாண்டுதல்.

xxxx

5. நவராத்திரிக்குப் பின்னர் பத்தாவது நாள் விஜய தசமி. அதையே தசரா என்பர். தசரா விழா மைசூர் அரண்மனையில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது . அப்போது யானைகள் ஊர்வலமாக வரும். அதில் பெரிய யானையில் சாமுண்டீச்வரி தேவி உருவத்தை ஏற்றி வருவார்கள்

xxxxx

6.நவ ராத்ரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களுக்கு ஒன்பது இரவுகள் என்று பொருள். மும்மூர்த்திகளின் மனை வியரான துர்கா, லெட்சுமி, சரஸ்வதியை வழிபடும் வகையில் மூன்று தேவியருக்கும் 3 நாட்கள் வீதம் ஒதுக்கப்படுகிறது. கோவில்களிலும்,வீடுகளிலும் இவ்வாறு தேவியை வழிபடுகிறார்கள்.

xxxx

7. தீபாவளிக்கு முன்னர் வரும்  நவராத்திரி சாரதா  நவராத்திரி.; மஹாளய அமாவாசை முடிந்த மறுநாள் நவராத்திரி  துவங்கும் .

xxxx

8.குஜராத்தியர் ஒன்பது நாள் இரவிலும் ஒரு பொது இடத்திலோ கோவிலிலோ சக்தி தேவியின் உருவம் அல்லது ஒரு விளக்கினைச் சுற்றி ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருவார்கள் எல்லாம் இறைவனின் பாடல்களாக இருக்கும். இதை கர்பா என்பார்கள். ஆண்கள் ஆடும் ஆட்டம் டாண்டியா எனப்படும். கோலாட்டமும், கும்மியும்  ஆடல்களில் இருக்கும் ; எல்லோரும் இதற்காக பாரம்பர்ய உடைகளை அணிந்து கொண்டு செல்லுவார்கள் .

xxxx

9.நவராத்திரி மற்றும் விஜயதசமி ஆகிய 10 நாள் உற்சவமாக மேற்கு வங்காளத்திலும் அருகாமை  மாநிலங்களிலும் வீதி தோறும் கொண்டாடப்படும் பண்டிகை இது. துர்க்கை வழிபாட்டோடு புத்தாடை அணிதல், பரிசுகளை பரிமாறிக்கொள்ளல் ஆகியவையும் விழாக்காலத்தில் நடைபெறும். மஹிஷாசுரனை , துர்கா தேவி வதம் செய்ததை , அதாவது தீமையை ஒழித்ததை மக்கள் கொண்டாடுவதே இந்தப் பண்டிகையின் கருத்து துர்கா பூஜா உலகம் முழுதும் வங்காளிளால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

Xxxx

10. ·  முதல் நாள்- சைல புத்ரி, இரண்டாம் நாள் – பிரம்மசாரிணி, 3 ஆம் நாள் சந்திரகாந்தா , 4ம் நாள் -கூஷ்மாண்ட , 5ம் நாள்- ஸ்கந்த மாதா, 6ம் நாள் – காத்யாயனி, 7ம் நாள் –  காள ராத்திரி, 8ம் நாள் மஹா கெளரி, 9. சித்திதாத்ரி (பத்தாம் நாள் மஹிஷாசுரமர்தனி

— subham—

tags- நவராத்திரி, Quiz, கர்பா, டாண்டியா, தசரா , ராம் லீலா, துர்கா பூஜா,

தமிழ் மொழியை வளர்ப்போம் 20102023 (Post No.12,612)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,612

Date uploaded in London – –  –  20 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து  எடுக்கப்பட்ட “வை எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள்

வை+ + = விடியல், வைகுமிடம், தங்குகுதல்,  நாள், கழிதல்

வை+ +  = விடியற்காலம்

வை + + = தமிழ் மாத வரிசையில் இரண்டாம் மாதம்,

வை+ + + + = திருமால் இருப்பிடம்

வை + = மதுரையில் ஓடும் நதி

வை + + + = மாட்டிற்கு மிகவும் பிடித்த உணவு

வை + + + = வணிகம் செய்யும் ஜாதி

வை + + + +  = நவ மணிகளில் ஒன்று

வை + + + = விஷ்ணுவை வணங்கும் பிரிவு

வை+ + + = புராண நதி

வை + + + + = தமயந்தி , விதர்ப்ப நாட்டுப் பெண்

வை + + = சீதை , விதேக  நாட்டுப் பெண்

வை + + + + = கள்ளக்காதலி

வை+ + + + = கருடன்

வை + + + + + +  = சிவபிரானின் டாக்டர் கோலம்

வை + + + + -=குதிரை

வை + + + = பூமி, ஊர்தி, சிவிகை, தேர், எருது

வை + + + = விசேடமாகத் தோன்றுவது, செல்வம்

xxxxx

விடைகள்

வைகல்= விடியல், வைகுமிடம், தங்குகுதல்,  நாள், கழிதல்

வைகறை – விடியற்காலம்

வைகாசி – தமிழ் மாத வரிசையில் இரண்டாம் மாதம்,

வைகுண்டம் – திருமால் இருப்பிடம்

வைகை – மதுரையில் ஓடும் நதி

வைக்கோல் – மாட்டிற்கு மிகவும் பிடித்த உணவு

வைசியர் – வணிகம் செய்யும் ஜாதி

வைடூரியம் – நவ மணிகளில் ஒன்று

வைணவம் – விஷ்ணுவை வணங்கும் பிரிவு

வைதரணி – புராண நதி

வைதர்ப்பி – தமயந்தி , விதர்ப்ப நாட்டுப் பெண்

வைதேகி = சீதை , விதேக  நாட்டுப் பெண்

வைப்பாட்டி = கள்ளக்காதலி

வைநதேயன் = கருடன்

வைத்தியநாதன் = சிவபிரானின் டாக்டர் கோலம்

வைந்தவம் -=குதிரை

வையகம் = பூமி, ஊர்தி, சிவிகை, தேர், எருது

வைபவம் = விசேடமாகத் தோன்றுவது, செல்வம்

—subham—

Tags- தமிழ் மொழி,  வளர்ப்போம் , வை, சொற்கள்

சித்திர வேலாயுத சுவாமி கோவில்: இலங்கைத் தீவின் 108 …..Part 33 (Post.12,611)

Picture of Kumarapuram Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,611

Date uploaded in London – –  –  20 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 33

66.சித்திர வேலாயுத சுவாமி கோவில். குமாரபுரம், முல்லைத் தீவு

முல்லைத்த தீவில் குமாரபுரம் என்ற கிராமத்தில் .சித்திர வேலாயுத சுவாமி கோவில் இருக்கிறது . வெட்டா பழங்குடி மக்கள் பகுதியில் இந்தக் கோவில் துவங்கியது; பழங்குடி மக்களும் வேல் மற்றும் வேலவனை வணங்கி வருகின்றனர் . அவர்கள் கம்புகளையும் இலை தழைகளையும் கொண்டு சிறு குடில்களில் இறைவனை வணங்குவர். காலப்போக்கில் அது பெரிய கோவில் ஆகிவிடும். வன்னி ஆட்சிக்காலத்தில் இருந்த மன்னர்கள், இத்தகைய இடங்களில் கோவில் கட்டினார்கள்.

இக்கோவில் கதிர்காமம் போன்ற பெருமையுடையதென தட்சிண கயிலாய மான்மியம் கூறுகின்றது. அந்நிய மதத்தினர் இந்துக்கோவில்களைத்  தகர்த்து வந்த காலத்தில் இங்குள்ள விக்கிரகமும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது . அப்போது குமாரபுரம் ஜன நடமாட்டமின்றி காடாக மாறியது . பின்னர் 1915ல் வழக்கறிஞர் துரையப்பா , பரமசாமிக் குருக்கள் என்பவரிடம்  கோவிலை  ஒப்படைத்து திறம்பட கோவிலை நடத்திவைத்தார். 1955   ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு நடைபெறும் கந்தர் சஷ்டி விழாவைக் காண்பதற்கு  பெருந்திரளான பக்தர்கள் வருகின்றனர் .

Xxxx

67.வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில் , திருகோணமலை மாவட்டம்

மகாவலி கங்கை நதியின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் சித்திரவேலாயுத சுவாமி கோவில் உள்ளது.  திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வழியில் பாதி தூரத்தில் அமைந்துள்ளது. கதிர்காமத்துக்குப் பாத  யாத்திரை செல்லுவோர் தங்கிச் செல்லும் இடம் இது.

1889 ஆம் ஆண்டில் அகிலேச பிள்ளை எழுதி வெளியிட்ட கோணேச வைபவம் நூலில் இக்கோவில் பற்றி எழுதியுள்ளார். கும்பாபிஷேக மலரில் அருள் சுரக்கும் வெருகலம்பதி  என்ற கட்டுரையில் எஸ் . கணபதி பிள்ளையும் நிறைய தகவல் தந்துள்ளார்.

முருகப்பெருமான் சூரபத்மனுடன் நடத்திய போரில் முருகனின் அம்பு ஒன்று இந்த ஊரில் விழவே , அதை வெட்டர்கள் எடுத்து வணங்கி வந்தனர். குளக்கோடன் மன்னர் ஆட்சிக் காலத்தில் அது கோவிலாக உருப்பெற்றது.

இந்தக் கோவிலின் தோற்றம் சுவையான கதை ஆகும். நல்லை நாத செட்டியார் என்பவர். தமிழ் நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து ஆண்டு தோறும் கதிர்காம யாத்திரை செய்துவந்தார். அவர் திருகோண மலைக்கு வந்து அங்கிருந்து யாத்திரையைத் துவங்குவார். பாதி தூரத்தில் உள்ள வெருகலில் எல்லோரும் தங்கி விட்டு கதிர்காம யாத்திரையைத் துவக்குவது போல செட்டியாரும் தங்கினார்.

  . அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் முருகப்பெருமான் தோன்றி அங்கு ஒரு ஆலயம் அமைக்க கட்டளையிட்டார். இதற்கான பொருளும் அவரிடம் வந்து சேரும் என்றும் கனவில் உரைத்தார். கோவில் கட்டுவதற்குத் தேவையான பணம் புதையலில் கிடைக்கும் என்றும் கூறி, முருகன் மறைந்தார் ; இறைவன் சொன்னபடியே அவருக்குப் பொக்கிஷமும்  கிடைத்தது .செட்டியார் ஆலயம் அமைக்க திரவியம் எடுத்த இடம் இப்பொழுதும், திரவியம் எடுத்த இடம் என்னும் பெயரால் அழைக்கப்படுறது..

கண்டி மன்னன்   கோவிலுக்காக நிறைய தானம் செய்தான். செட்டியாரும் கோவிலைக் கட்டினார். சீரும் சிறப்புடனும் வழிபாடு நடந்த காலத்தில் போர்ச்சுக்கீசிய மத வெறியர்கள் கோவிலைத் தரைமட்டம் ஆக்கினர். பின்னர், பக்தர்கள் சேர்ந்து கோவிலை எழுப்பினர். ஆண்டு தோறும் ஆகஸ்ட்-செப்டம்பர் காலத்தில் வருடாந்திர விழா 18 நாட்களுக்கு நடைபெறும். கதிர்காம பாத  யாத்திரை செல்லுவோர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததுபோல இந்த விழாவையும் தரிசித்து விட்டுச் செல்லுவார்கள் .

இந்தக்கோவிலில் காணப்பட்ட கல்வெட்டு பற்றி ஹுயூஜ்  நெவில் Hugh Neville , Taprobane, 1887 எழுதியுள்ளார் . சுப்பிரமணியனுக்கு நமஸ்காரம் சொல்லிக் கல்வெட்டு துவங்குகிறது கோவிலின் தெற்குச் சுவரை கயிலாய வன்னியரும் மேற்குச் சுவரை சிம்மாபிள்ளையும் வடக்குச் சுவரை மட்டக்களப்புஊர், நீர்க்கொழும்பு  கரையாரும் , கிழக்குச் சுவரை செட்டியார்களும் கட்டியதாக தெரிவிக்கிறது.

கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சித்திர வேலாயுதப் பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

இங்கு மகா மண்டபத்தில் மகாவல்லி, கஜவல்லி சமேதராக ஆறுமுகப் பெருமான், உமையம்மை சமேத சந்திரசேகரர் சிலைகள் தெற்கு வாசல் நோக்கி உள்ளன. வசந்த மண்டபம் வேறாக உள்ளது.

பரிவார மூர்த்திகளான விநாயகருக்கும், பைரவருக்கும் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவிலின் தென்புறத்தில் கதிர்காம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கருவறையான மூலஸ்தானத்தில் முருகன் திருவுருவமோ, வேலோ பிரதிஷ்டை செய்யப்படவில்லை. அட்சர மந்திரம் எழுதி வைக்கப்பட்ட பேழையே கருவறையில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.

இங்கு கதிர்காமத்தில் பூஜை நிகழ்வது போல் திரைமறைவிலேயே பூசை நடைபெறுகிறது. வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயிலுக்கு சற்றுத் தூரத்தில் காவடிப் பிள்ளையார் கோயில் உள்ளது. சித்திரவேலாயுத சுவாமி கோயிலுக்கு கிழக்கு திசையில் வீரபத்திரர் கோயில், தாமரைக்குளம், சூரன் கோட்டை என்பன அமைந்துள்ளன.

—subham—

TAGS–சித்திர வேலாயுத சுவாமி,  கோவில், வெருகல், குமாரபுரம்  ஆலயம்

பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் மகிழ்ச்சி தரும் (Post No.12,610)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,610

Date uploaded in London –  20 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் மகிழ்ச்சி தரும் தேவி!

ச.நாகராஜன்

பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் மகிழ்ச்சி தான்!

ச்ருதம் த்ருஷ்டம் ஸ்ப்ருஷ்டம் ஸ்மிருதமபி ந்ருணான் ஹ்ராதஜனனம்,

ந ரத்னம் ஸ்த்ரீப்யோன்யத க்வசிதபி க்ருதம் லோகபதிநா |

ததர்தம் தர்மார்தௌ விபவவரசௌக்யானி ச ததோ,

க்ருஹே லக்ஷ்ம்யோ மான்யா: சததமபலா மானவிபவை: ||

அந்த அழகியைக் கேட்டாலும், பார்த்தாலும், தொட்டாலும், நினைவுபடுத்திக் கொண்டாலும் இன்பம் தருவதால் அது போன்ற ஒரு ரத்தினம் வேறெங்குமில்லை.

இல்லங்களில் செல்வம் தரும் லக்ஷ்மிக்கு ஒரு கௌரவமான இடம் உண்டு.

இப்படித்தான் அவன் உலகத்திற்கே தலைவனான இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறாள்.

அனைத்து விதத்திலும் மகிழ்ச்சி அடைய செல்வமும் புண்யமும் அடைய அவள் உதவுகிறாள்.

ஆக இப்படி ஒரு தேவியைப் போல அண்டத்தில் வேறொரு தெய்வம் உண்டா என்ன?

கடன் வாங்கியும் நெய் சாப்பிடு!

யாவத்ஜீவேத் சுகம் ஜீவேத்ருணம் க்ருத்வா த்ருதம் பிபேத் |

பஸ்மீபூதஸ்ய தேஹஸ்ய புனராகமனம் க்ருத: ||

எவ்வளவு நாள் வாழ்கிறோமோ அவ்வளவு நாள் சுகமாக வாழ வேண்டும். கடன் வாங்கியும் கூட நெய் சாப்பிட வேண்டும். உடல் சாம்பலாக ஆகி விட்டால் அது எப்படி தனது முந்தைய நிலைக்கு வர முடியும்?

அனுபவி ராஜா அனுபவி! இருக்கும் வரை வாழ்ந்து விடு, இரண்டினில் ஒன்று பார்த்து விடு! – இது வாழும் வகைக்கான ஒரு உபதேசம்!

பரோபகாரி உலகில் அரிதாகவே காணப்படுவர்!

பரோபகாரைகதிய: ஸ்வசுகாய கதஸ்ப்ருஹா: |

ஜகத்ஹிதாய ஜாயந்தே விரலா: சாதவோ புவி ||

மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட நல்லவர்கள், தங்களது மகிழ்ச்சி பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார்கள்.இப்படிப்பட்டவர்கள் மிக அரிதாகவே உலகில் காணப்படுவர்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகலே அறிவு!

பஞ்சபி: சஹ கந்தவ்யம் ஸ்தாதவ்யம் பஞ்சபி: சஹ |

பஞ்சபி: சஹ வக்தவ்யம் ந துக்கம் பஞ்சபி: சஹ ||

ஐந்து பேரோடு சேர்ந்து ஒருவன் செல்ல வேண்டும். அவர்களோடு சேர்ந்தே இருக்க வேண்டும். அவர்களுடன் கூடவே பேச வேண்டும். ஆகவே அவன் துன்பப்பட மாட்டான்.

திருவள்ளுவர் கூற்றை இங்கு ஒப்பு நோக்கலாம்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலாதார் – குறள் 140

நான்கு உபாயங்கள்!

சாம தான பேத தண்டமே எதிரியை வெற்றி கொள்வதற்கான நான்கு உபாயங்கள்!

யானைப் படை, குதிரைப் படை, தேர்ப் படை, காலாட் படை ஆகிய இந்த நான்கு பிரிவுகளே படையின் அங்கங்கள்!

இதைத் தெரிவிக்கும் சுபாஷிதம் இது:

சாமதானே தண்டபேதாவித்யுபாயசதுஷ்டயம் |

ஹஸ்த்யஸ்வரதபாதாதம் சேனாங்கம் ஸ்யாச்சதுஷ்டயம் ||

பசுவைப் பின்பற்றும் கன்று போல கர்மா தொடரும்!

பசு மந்தையில் தன் தாயைக் கண்டு தொடரும் கன்று போல நல்ல கர்மங்களோ அல்லது திய கர்மங்களோ,  செய்த ஒருவனை (தவறாது) பின் தொடரும்.

கர்மா தியரி என்பதை உலகமெங்கும் உள்ள மக்கள் இப்போது அங்கீகரிக்கத் தொடங்கி விட்டனர்.

அதை விளக்கும் ஸ்லோகம் இது:

யதா தேனு சஹஸ்ரேஷு வத்ஸோ விந்ததி  மாதரம் |

ததா சுபாசுபம் கர்ம கர்த்தாரமனுகச்சதி ||

***