There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.
In part eight, rare pictures of Sringeri Shankaracharyas, Stone Chariot at Hampi, Drawings of Hindu Gods, and Madurai Nayak paintings are posted.
xxxx
Picture: Indra on Airavata
Title -Der Indische Kulturkreis
By H G VON
K DOHRING
Title – Heilige Statten Indiens
By H V GLASENAPP
YEAR 1928, MUNCHEN
Sringeri Shankaracharyas 100 years ago.
Sandstone idol from Prayag
MaduraiStone elephant
Madurai Temple Paintings from Nayak Period
Hampi Stone Ratha
Halabedu Sculptures
Hanuman in Bronze
—subham—
Tags- Rare Pictures, German bok 1928, Sringeri Acharyas, Halabedu, Hampi, Madurai, Nayak Paintings
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 44
கோவில் எண்கள் –59, 60, 61, 62
59. லோகாம்பிகை கோவில்
கேரள மாநில கோழிக்கோடு வட்டாரக் கோவில்களில் மிகவும் முக்கியமானது லோக மகாதேவி கோவில் . இந்தக் கோவில் பல வகைகளிலும் உன்னதமானது .
சங்க இலக்கிய புலவர்களில் ஒருவர் பெயர் சங்க வருணர் நாகரியர். அவர் வடநாட்டிலிருந்து வந்தவர் என்பதை அவர் பெயரே காட்டும். அந்த நாகரியர் வம்சத்தினர் கட்டிய கோவில் இது .அந்தப் புலவர் புறநானூற்றின் 360ஆவது பாடலை யாத்தார்; அது தத்துவப் பாடல்; உலக நிலையாமையை, தந்து மாறன் என்பவனுக்கு எடுத்துச் சொல்லி, அறம் செய்க என்று வலியுறுத்தும் பாடல் .
இதை மெய்ப்பிக்கும் மற்றோர் சான்று தெய்வத்தின் பெயர் லோக மஹா தேவி; தமிழின் புகழை தென் கிழக்கு ஆசியா முழுதும் பரப்பிய ராஜ ராஜனுக்குப் பல மனைவியர் உண்டு. அவர்களில் பட்டத்து அரசியின் பெயர் லோக மகா தேவி ; அது வடகரா கோவில் தெய்வத்தின் பெயர்; அவளுக்கு மற்றும் ஒரு பெயர் தந்தி சக்தி விடங்கி; உலகம் புகழும் தமிழ் அறிஞர் டாக்டர் இரா. நாகசாமி எழுதிய யாவரும் கேளிர் நூலில் சோழர் புகழ் உள்ளது
மூன்றாவது சான்று புறநானூற்றுப் புலவர் கருவூர் பெருஞ் சதுக்கத்துப் பூத நாதனார் பெயரில் உள்ளது அவர் 291ஆவது பாடலை இயற்றியவர். வடகரா கோவிலிலும் பூதத் தேவர் சந்நிதி இருக்கிறது; சேர நாட்டின் புகழ் பாடும் சிலப்பதிகார காவியத்தில் சதுக்க பூதம் பற்றிய சுவையான கதைகள் நிறைய உள்ளன. கருவூர் என்பது சேர நாட்டின் தலைநகர் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆக தமிழ் இலக்கியத்துக்கு உரை எழுதியது போல வடகரா கோவில் தெய்வங்களின் பெயர்கள் உள்ளன.
கோவில் எங்கே இருக்கிறது?
வடகரா கோவில் இருக்கும் இடம் லோகனார் காவு ; இது வடகராவிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மீமுண்டா என்னும் சிற்றூ ரில் அமைந்துள்ளது.
கோழிக்கோட்டிலிருந்து 48 கிலோ மீட்டர் தூரத்தில் வடகரை அமைந்துள்ளது. , கண்ணூர் நகரத்திலிருந்து 44 கி.மீ.
சுவையான கதைகள்
மூகாம்பிகை கோவில் வரலாற்றை அறிந்தோருக்கு ஒரு உண்மை விளங்கும் தேவி சொல்கிறாள்; நான் பின்னாலேயே வருவேன்; ஆனால் திரும்பிப் பார்க்கக்கூடாது ; அதாவது நம்பிக்கை இழக்கும்போது சந்தேகம் வரும்; அப்படி வந்தால் இறைவன் கண்ணுக்குத் தெரிய மாட்டான் . இதே கதைதான் துர்கா என்றும் பகவதி என்றும் பத்ரகாளி என்றும் (எல்லாமே பார்வதியின் பெயர்) வணங்கப்படும் லோகாம்பிகை அம்மன் கதையும் .
வடக்கிலிருந்து வந்த நாகரியர் மக்களின் குல தெய்வம் அவள் ; நான் பின்னால் வருவேன் திரும்பிப் பார்க்கக்கூடாது என்கிறாள் லோகாம்பிகை
போகும் வழியில் கிராம மக்கள் யார் அந்தப் பெண்? என்று வினவவே ஒருவன் திரும்பிப் பார்க்கிறான். தேவி லோகாம்பிகை மறைந்து விடுகிறாள் பின்னர் அந்த இனத் தலைவன் ஒரு அம்பு விட்டு அது விழும் இடத்தில் தேவிக்கு கோவிலை எழுப்பினான்.
சம்ஸ்க்ருத மொழியில் லோகாம்பிகை, ஜகதாம்பிகை , உலகமகா நாயகி என்பன ஒரே பொருளடைத்து .
அம்மன் சன்னிதிக்கு வடக்குப் பக்கம் சிவன், விஷ்ணு ஆகியோருக்குத் தனித்தனிச் சன்னிதிகள் உள .
கோவிலின் வடக்கு வாசலில் மேற்கூரையற்ற சன்னிதி ஒன்றில் கோவிலுக்குப் பாதுகாப்பு தரும் தெய்வமாகப் பூதத்தேவர் கோவில் இருக்கிறது
விருச்சிகம் (கார்த்திகை) மாதம் தொடங்கி 41 நாட்கள் வரை மண்டல விளக்குப் பெருவிழா (மண்டல உற்சவம்) நடைபெறும். பங்குனி என்னும் மீனம் மாதத்தில் எட்டு நாட்கள் மீனம் விழா நடைபெறுகிறது.
மேலும் ஒரு சிறப்பு களரிப்பயிற்று அல்லது களரிப்பயட்டு
சேர நாட்டுக்கே உரித்தான தற்காப்புக் கலையை களரிப்பயிற்று அல்லது களரிப்பயட்டு என்று சொல்லுவார்கள் மலையாள மொழி வழங்கும் பகுதிகளில் மட்டும் இக்கலை உள்ளது இந்தக் கலையைப் பயிலுவோர் அரங்கேற்றம் செய்ய வரும் கோவில் லோகனார் காவு ஆகும். தேவியின் அருள் பெற்றால்தான் வெற்றி கிட்டும் என்பது வீரர்களின் நம்பிக்கை.
வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி, மழு போன்ற ஆயுதங்களை களரி விளையாட்டில் பயன்படுத்துவர்.
XXXX
60. தச்சோளி ஒதேனன் மணிக்கோத் கோவில்
வடகராவிலிருந்து 2 கி.மீ தொலைவில் ஒரு மனிதனுக்கு , வீரனுக்கு அமைக்கப்பட்ட கோவில் இது.
களரிபயட்டுக் கலையில் மிகப்பெரும் வீரனாக விளங்கியவன்
தச்சோளி ஒதேனன்/ ஒதனன்; பல மோதல்களில் வெற்றி வாகை சூடியவன் . பல நூற்றாண்டுகளாக கிராம மக்கள் அவன் புகழை நாட்டுப்புறப் பாடல் வடிவில் பாடி வருகின்றனர் ; அவைகளை வடக்கன் பாட்டுக்கள் என்று சொல்லுவர் . பாடல் பாடுவதோடு நிறுத்தாமல் அவனுக்கு ஒரு கோவிலைக் கட்டி, அதில் அவனுடைய முழு உருவச் சிலையையும் வைத்துள்ளனர் .
ஆண்டுதோறும் இரண்டு நாள் விழா நடக்கும். முதல் நாளில் தீர என்னும் நடனம் நடக்கும் ; லோகநார்காவு கோவிலில்தான் ஒதனன் வழிபட்டதால் அங்கிருந்து ஒரு விளக்கு கொண்டுவரப்படும். நூற்றுக் கணக்கான களரி பயற்று வீரர்கள், கத்தி கேடயங்களுடன் வீரர் உடையில் அணிவகுத்து வருவார்கள்.
இரண்டாம் நாள் விழாவில் ஒதனன் பயன்படுத்திய வாள் , ஊர்வலமாக கோவிலுக்குக் கொண்டுவரப்படும். பின்னர் திரயாட்டம் நடக்கும். அதில் பல்வேரு வீரர்களும் சாகசச் செயல்களை செய்து மக்களை வியப்பில் ஆழ்த்துவார்கள். இரவில் தச்சோளி களி நடைபெறும்.
பகவதி கோவில் மூலமாகவும். களரிப் பயட்டு மூலமாகவும் தென் இந்தியா முழுதும் லோகார்க்காவு புகழ் பரப்பி வருகிறது .
61.கோழிக்கோடு தளி சிவன் கோவில்
கோழிக்கோட்டில் நகரின் நடுவேயுள்ள தளி சிவன் கோவில் பழமையும் , புனிதமும் உள்ள கோவில்; அதை சுவாமி திருமுலபாத் கட்டினார் . சுமார் 700 ஆண்டு வரலாறு நமக்கு கிடைக்கிறது .ரேவதி பட்டதானம் என்னும் சம்ஸ்க்ருத சொற்பொழிவு நடக்கும் இடம். ஏப்ரல் மாதத்தில் எட்டு நாள் விழா நடக்கும் .எல்லா நாட்களிலும் இறைவனை ஊர்வலமாக எடுத்துச் செல்லுவார்கள் .
62.கணபதி கோவில்கள்
வடகராவில் தெரு கணபதி கோவிலும், கோழிக்கோட்டிலிருந்து 18 கி.மீ. தொலைவில் திருவாங்கூர் கணபதி கோவிலும் இருக்கின்றன .விழாவில் தெய்யம் நடனம் நடக்கிறது. சிவராத்திரி உற்சவம் பெரிய அளவில் நடக்கிறது.
63.திருவாங்கூர் நரசிம்ம, பார்த்தசாரதி கோவில்
இந்த நரசிம்ம மூர்த்தியின் கோவிலின் ரதோத்ஸவம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு 7 நாள் உற்சவம் நடக்கிறது. . நாலாவது நாள் நடக்கும் தேர்த் திருவிழாவுக்கு பல்லாயிரக் கணக்கானோர் வருகிறார்கள் பார்த்தசாரதியும், நரசிம்ம மூர்த்தியும் தேரில் இடம்பெறுவார்கள்.
—subham—
Tags- தமிழ் ரகசியம், லோகார்க்காவு, லோகாம்பிகை, தளி , சிவன் கோவில், நாகரியர், களரிப்பயிற்று ,களரிப்பயட்டு, Kalaripayattu, Martial art
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தந்த்ர சாஸ்திரங்கள்
ச.நாகராஜன்
ஹிந்து மதத்தின் தலையாய சாஸ்திர பிரிவுகளில் மிக முக்கியமானது தந்த்ர சாஸ்திரம்.
இதைக் கற்பது மிகவும் கடினம். இதன்படி பிரயோகங்களைச் செய்வது அதை விடக் கடினம்.
இந்த சாஸ்திரங்கள் மிகவும் நுட்பமானவை என்பதால் இது குரு வழியாகவே கற்பிக்கப்பட்டு வந்தது.
இது சம்பந்தமான நூல்கள் நிறைய உண்டு. ஆனால் அவை காலப்போக்கில் அச்சுக்கு வராமல் ஓலைச் சுவடிகளாகவே இருக்கின்றன.
சில நூல்கள் அச்சுப் பதிப்பாகக் கிடைக்கின்றன.
தந்த்ர சாஸ்திரம் ஒரு பிரத்யக்ஷமான விஞ்ஞானம்.
செய்து பார்த்து அதன் பலனைத் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த சாஸ்திரங்களின் தொகுப்பாக அபிதானங்களும் – அதாவது அகராதிகளும் உண்டு.
இந்த அபிதானங்கள் அல்லது கோசங்கள் ஒலியின் மகிமையை உணர்த்துபவை. சப்தத்தையும் அர்த்தத்தையும் நமக்குத் தெளிவாகக் காண்பிப்பவை.
ஒரு குறிப்பிட்ட தேவதையைக் குறித்துச் செய்யப்படும் உபாசனையானது சித்தி பெற வேண்டுமெனில் குருவின் அருளுடன் இதைப் பற்றிய அனைத்தும் மிகத் தெளிவாக அறிந்துகொள்ளப்பட வேண்டும்.
அது போலவே க்ரீம் என்பது காளியின் மந்திரம். இந்த க்ரீம் என்பது க, ர, இ ஆகிய ஒலிகளால் அமைகின்ற ஒன்று.
ஆகமசாஸ்திரங்களில் இந்த மந்திரம் சொல்லப்படும் போது அங்கு இந்த எளிய சேர்க்கை சொல்லப்படுவதில்லை.
இந்த அர்த்தம் அறியப்படவில்லையெனில் ஏகாக்ஷர பீஜமான இது முழுதுமாக அறியப்படமாட்டாது.
அகராதிகள் அக்ஷரங்களின் முழு விவரணத்தையும் தரும்.
ஒரே ஒரு அக்ஷரத்திற்கு நுட்பமான பல அர்த்தங்கள் உண்டு.
‘இ’ என்ற அக்ஷரத்தை எடுத்துக் கொண்டால் மும்மூர்த்திகள், ரதி, கோவிந்தன், வாமாக்ஷி, கமலா, மாயா, லக்ஷ்மி சாந்தி, வைஷ்ணவி ஆகிய அர்த்தங்கள் உண்டு.
தந்த்ராபிதானத்தில் உள்ள சில நூல்களை இங்கு மாதிரிக்காகப் பார்க்கலாம்:
1) மந்த்ராபிதானம் : இதில் அகாரத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு அக்ஷரத்திற்குமான விளக்கம் தரப்படுகிறது.
2) ப்ரகாராந்தர மந்த்ராபிதானம் : இதில் ஓம் என்ற அக்ஷரத்திற்கும் 35 அர்த்தங்கள் தரப்பட்டுள்ளன. அகாரத்திற்கு 42, ஆகாரத்திற்கு 36, இகாரத்திற்கு 29, ஈகாரத்திற்கு 38 அர்த்தங்கள் என இப்படி நுட்பமான விளக்கங்களை இந்த நூலில் காணலாம்.
3) ஏகாக்ஷரகோசம் : இதில் 38 ஸ்லோகங்களில் அக்ஷரங்களுக்கான விளக்கம் காணப்படுகிறது.
4) பீஜநிகண்டு : இதில் சிவபிரான் கூறுகின்ற அக்ஷர மஹிமையைக் காணலாம்.
5) மாத்ருகாநிகண்டு : மந்திரங்களில் வரும் அக்ஷர ஒலிகளுக்கான அர்த்தங்கள் வரிசையாக இதில் தரப்பட்டுள்ளது.
6) ப்ரகாராந்தர மாத்ருகாநிகண்டு ; இந்தா நூலில் ஓம் என்பது துருவன், தாரா, மூலஜோதி, சிவன், அவ்யயன், வேதாத்யா, தாரகா, அவ்யக்தா, சகாதி, பிரணவம் ஆகியவற்றைக் குறிக்கும் என்பதில் ஆரம்பித்து விரிவாக அக்ஷர மஹிமைகளை விவரிக்கிறது.
7. ப்ரகாராந்தர வர்ணநிகண்டு : இதில் ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் உள்ள அர்த்தங்கள் தரப்படுகின்றன.
8. வரதாதந்த்ரத்தில் உள்ள மந்த்ரார்த்தாபிதானம் : இந்த நூலில் சிவன் பார்வதிக்கு கூறும் அக்ஷர மஹிமைகள் தரப்படுகிறது.
9. முத்ராநிகண்டு : இதில் அபூர்வமான முத்திரைகளைப் பற்றிய விரிவான விளக்கத்தைக் காணலாம். மிக நுட்பமான ரகசிய செய்திகளைத் தரும் அற்புதமான நூல் இது.
இந்த நூல்களை திரு ராம் குமார் ராய் சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தந்துள்ளார். இரண்டாம் பதிப்பு பிரசுரமான ஆண்டு- 1984.
இது வாரணாசி Prachya Prakashan ஆல் Indological Reference Seires No 2ஆக வெளியிடப்பட்டுள்ளது.
கால வெள்ளத்தில் இவை மறைந்து போகாமல் காக்கும் பணியை மேற்கொண்ட திரு ராம் குமார் ராய் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தந்திர சாஸ்திரத்தில் ஆர்வமுள்ளோர் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.