QUIZ சிம்லா பத்து QUIZ  (Post No.12,986)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,986

Date uploaded in London – –   5 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Quiz Serial No.108

xxxxx

1.சிம்லா (Shimla) நகர் எங்கே இருக்கிறது ?

xxxxx

2.சிம்லா நகரின் பெயர் எப்படி ஏற்பட்டது ?

xxxx

3.சிம்லா நகரின் ஜாகு ஹனுமார் கோவிலின் சிறப்புக்கு காரணம் என்ன ?

xxxx

4.யுனெஸ்கோ UNESCO கலாசார சின்னமாக அறிவித்த ரயில் பாதையின் சிறப்பு என்ன ?

xxxx

5.ஜாகு மந்திர் தவிர வேறு என்ன கோவில்கள் உள்ளன?

xxxx

6.மியூசியங்கள் எத்தனை உள்ளன ?

xxxx

7.சிம்லாவில் எத்தனை குன்றுகள் இருக்கின்றன என்ன வாங்கலாம் ?

xxxx

8.இயற்கை ரசிகர்களுக்கு என்ன இருக்கிறது ?

xxxx

9.துணிகர விளையாட்டுகளுக்கு வசதிகள் உண்டா  ?

xxxx

10.சிம்லாவில் ரிட்ஜ் Ridge  என்பது என்ன ?

xxxxx

விடைகள்

1.ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தலை நகர் சிம்லா. இது இமய மலை வாசஸ்தலம்;  இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரக்கூடிய நகரம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் கோடைகால தலைநகராக இருந்தது. சண்டீகர் நகரிலிருந்து 120  கி.மீ  பஞ்சாபிலுள்ள சில நகர்களிலிருந்தும் வரலாம். KALKA கல்கா என்பது மிக அருகிலுள்ள புகழ்பெற்ற நகரம்.

xxxx

2.சியாமளா என்பது தேவியின் பெயர்களில் ஒன்று; அந்தக் கோவிலின் பெயர் மருவி சிம்லா என்று மாறிவிட்டது . ஷியாம்லாவின் இன்னும் ஒரு வடிவம் காளி. நகருக்குப் பெயர் வழங்கிய காளி பாரி கோவில் (Kali Bari is a temple dedicated to Goddess Kali’s fearless incarnation Shyamala ) இப்பொழுது வழிபாட்டில் உள்ளது .

Xxxx

3. சிம்லா நகரின் ஜாகு மந்திர் Jakhoo temple ஆலயம் 8000  அடி உயர ஜாகு குன்றில் இருக்கிறது . இதுதான் உயரமான சிகரம்  இங்கிருந்து பனி படர்ந்த மற்ற இமயமலைச் சிகரங்களைக் காணலாம். 8500  அடி உயரத்தில் 108  அடி உயர ஹனுமான் சிலையை நிறுவியுள்ளனர் ; கோவில் மிகவும் பழைய கோவில் ; உயரமான சிலை தற்காலத்தில் நிறுவப்பட்டது . அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு வருவதற்கு கம்பி ரயில் சேவையும் உண்டு .

Xxxx

4.கல்கா என்னும் இடத்திலிருந்து மலை மீதுள்ள சிம்லாவுக்குச் செல்ல குறுகிய ரயில் பாதையை பிரிட்டிஷார் அமைத்தனர் ; இதை விளையாட்டு ரயில் (டாய் ட்ரெய்ன்) Kalka – Shimla Toy Train என்று அழைப்பார்கள் . 96  கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஏழு மணி நேரம் ஆகிறது. போகும் வழி முழுதும் இயற்கைக் காட்சிகளை ரசித்த வண்ணம் செல்லலாம்.

இந்த சின்ன ரயில் 102  சுரங்கப்பாதைகளைக் கடந்து செல்லும். மிகவும் நீளமான சுரங்கம் 3752  அடி நீளம் உடையது . போகும் வழியில் 200  க்கும்  அதிகமான பாலங்கள் உள்ளன . ரயில் பாதையின் அகலம் இரண்டரை அடிதான் . இதை நேரோ காஜ் Narrow Gauge என்பார்கள்

xxxxx

5.இன்னும் ஒரு புகழ்பெற்ற கோவில் தாரா தேவி கோவில் . மேலும் சங்கட மோசன கோவில், திங்கு மாதா கோவில் , கமலா தேவி கோவில் ஆகியனவும் இருக்கின்றன .

xxxx

6. ஸ்டேட் மியூசியத்தில் இந்த வட்டார ஓவியங்கள், நகைகள், துணிமணிகள் ஆகியவற்றைக் காணலாம். 1974m  ஆண்டில் அமைக்கப்பட்டது. ( A collection of paintings, jewellery, and textiles of the region can be found at the State Museum (built-in 1974)

.Johnnie’s Wax Museum ஜானிஸ் வேக்ஸ் மியூசியத்தில் இந்திய பிரமுகர்களின் மெழுகு பொம்மைகளைக் கண்டு ரசிக்கலாம். அவை மேடம் துஸாட்ஸ் போல தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன .

அன்னடேல் ராணுவ மியூசியம் Annadale has the Army Heritage Museum which is a notable tourist destination on its own, and also a golf course and a helipad .

xxxxx

7.சிம்லாவில் ஏழு குன்றுகள் உள்ளன.

சிம்லா வட்டாரரக்க காடுகளில் மரங்கள் மிகுதி; இங்கு மரத்தினால் ஆன பொம்மைகள் , அலங்காரப் பெட்டிகள், கூடைகள், ஆகியவற்றை சுற்றுலாப்பயணிகள் வாங்கிச் செல்வர் . மேலும் உலோகத்தால் ஆன, செயற்கை மணிக்கால ஆன நினைவுச் சின்னங்கள் நகைகளும் நிறைய விலைபோகின்றன. சால்வைகள், கம்பளங்கள் ஆகியன இந்த வட்டாரத்துக்குரிய பாணியில் செய்யப்படுவதால் அவைகளும் கடைகளில்  அதிகமாக விற்கப்படுகின்றன .

xxxxx

CHADWICK FALLS

8.இங்கு தாவரவியல் பூங்கா, பறவைகள் பூங்கா ஆகியன உள்ளன அன்ன டேல் என்னும் பகுதியில் தேவதாரு , பைன் மரக்காடுகளைக் காணலாம் . குப்ரி Kufri  என்னும் இடமும் இயற்ககைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கும் இடம் ஆகும் ; இது ஒரு காலத்தில் நேபாளத்தின் பகுதி! சாத்விக்  நீர்வீழ்ச்சி ,  இமயமலை தேசிய பூங்கா ஆகியன குறிப்பிட தக்க .

xxxxx

9.பனிச்சறுக்கு , மலைஏறுதல் , பனி க்கட்டி  விளையாட்டுகள் , ஐஸ் ஸ்கேட்டிங், குதிரை சவாரி , Ice Skating , மலை சைக்கிள் ரேஸ் Mountain Biking என்று எல்லா வகை சாகசச்  செயல்களையும்  செய்யலாம்;  ஆறு ஓடும் வேகத்தில் படகு சவாரி  River Water Rafting , பாரா கிளைடிங் Paragliding ஆகியன குறிப்பிட தக்கன.

xxxxx

10.ரிட்ஜ் Ridge என்பது நகரிலுள்ள விசாலமான இடம். இங்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய கோடை விழா நடக்கும் .

KALKA-SHIMLA TOY TRAIN 

—subham—-

Tags- சிம்லா, சியாமளா தேவி , கோவில், காளி, டாய் ட்ரெய்ன், Toy Train, Shimla , ஜாகு மந்திர் , அனுமன் சிலை , உயரமான

இறந்தவர்கள் செல்லும் மூன்று வழிகள் – ரமணீயம், நிராபாதம், துர்த்தர்சம்! (Post 12,985)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,985

Date uploaded in London – — 5 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கர்ம ரகசியம்! – 5

இறந்தவர்கள் செல்லும் மூன்று வழிகள் – ரமணீயம்நிராபாதம்துர்த்தர்சம்!

ச.நாகராஜன்

Picture of Hell in Yama Loka

யம சபை வர்ணனையை வன பர்வத்தில் பார்த்து விட்டோம்.

யம லோகத்திற்கு  மனிதர்கள் போவது எப்படி, யமதூதர்கள் எப்படிப்பட்டவர் என்பன உள்ளிட்ட பல கேள்விகள் எழுகின்றன.

இதை உமாதேவியார் மஹேஸ்வரனிடத்தில் கேட்கிறார். அவரும் அந்த ரகசிய விஷயங்களை உமாதேவியாருக்கு விளக்குகிறார்.

இதை அநுசாஸனபர்வம் 229ஆம் அத்தியாயத்தில் காணலாம்,

தேவியின் கேள்விகள் :

1) யம தண்டனைகள் எப்படிப்பட்டவை

2) யம தூதர்கள் எப்படிப்பட்டவர்?

3) இறந்த பிராணிகள் யமலோகத்திற்குப் போவதெப்படி?

4) யமனுடைய வீடு எப்படிப்பட்டது?

5) அவன் மக்களைத் தண்டிக்கும் வகை யாது?

இந்தக் கேள்விகள் எல்லாம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவர் மனதிலும் எழுகிறது. இதையே தான் நமக்காகப் பார்வதி கேட்கிறார். பரமேஸ்வரன் பதில் சொல்கிறார்.

இப்படிப்பட்ட நுட்பமான ரகசிய விஷயங்களை பீஷ்மர் தர்மருக்குச் சொல்கிறார். அதை வியாஸ பகவான் மஹாபாரதத்தில் அப்படியே நமக்குத் தருகிறார்.

பரமேஸ்வரன் பார்வதி தேவியார் கேட்ட கேள்விகளுக்குப் பதிலைச் சொல்கிறார் இப்படி:

picture of Hell and torture 

யமனுடைய கிருஹம்

தென் திசையில் யமனுடைய வீடு பெரிதாக இருக்கிறது.

அது விசித்திரமாகவும், அழகாகவும், அநேகம் பொருள்கள் அமைந்ததாகவும் இருக்கிறது. அது பித்ரு தேவதைகளாலும் பிரேதர்களின் கூட்டங்களாலும் (ஒருவகைப் பேய்) யமதூதர்களாலும், கர்மங்களில் அகப்பட்ட பல பிராணிக் கூட்டங்களாலும் நிரம்பியிருக்கிறது.

உலகத்தின் நன்மையில் ஊக்கமுள்ள யமன் தண்டித்துக் கொண்டு எப்போதும் அங்கே இருக்கிறான். அவன் தன் உள்ளத்தினால் பிராணிகளின் நல்வினை தீவினைகளை எப்போதும் அறிகிறான். அங்கிருந்து கொண்டு எல்லா இடங்களிலுமுள்ள பிராணிக் கூட்டங்களையும் நினைத்தவுடன் ஸம்ஹரித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய மாயா ரூபங்களான பாசங்கள் தேவர்களாலும் அசுரர்களாலும் கூட அறியப்படுவதில்லை. அவனுடைய பெரிய சரித்திரத்தை மனிதன் எவன் அறிவான்?

யமதூதர்கள்

கர்மம் முடிந்த பிராணிகளை அந்தக் காரணம் பற்றிக் கிளம்புகின்றவர்களான யம தூதர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் அவர்களைப் பிடித்துக் கொண்டு போகின்றனர்.

உலகில் பிராணிகள் தாம் செய்யும் கர்மத்தினால் உத்தமமாகவும் அதமமாகவும் மத்தியமமாகவும் இருக்கின்றன. அவைகளின் அவற்றின் தகுதியின்படி எடுத்துக் கொண்டு யமனிடம் போகின்றனர்.

தர்மிஷ்டர்கள் உத்தமர்கள் என்று அறி.

அவர்கள் தேவர்கள் போல சுவர்க்கத்தில் இருப்பவர்கள்.

கர்மத்தினால் மூவுலகிலும் ஜனிப்பவர்கள் மத்தியமர்கள்.

திர்யக் ஜாதியில் பிறப்பவர்களும்  நரகம் போகின்றவர்களும் மனிதர்களின் அதமர்கள்.

 இறந்த பிராணிகள் யமலோகத்திற்கு போவதெப்படி? 

இவர்கள் செல்லும் வழிகள் மூன்று வழிகளாக அறியப்படுகின்றன.

அவை கீழ்க்கண்ட பெயர் உள்ளவை

1) ரமணீயம்

2) நிராபாதம்

3)துர்த்தர்சம்

 ரமணீயம் என்னும் மார்க்கமானது கொடிகளும், கொடி மரங்களும் நிரம்பி விளங்கி ஜலம் தெளித்துப் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், தூபங்கள் போடப்பட்டும், போகிறவர்களின் மனதைக் கவர்வதாகவும், போகிறவர்களுக்கு இனிமையான காற்றுள்ளதாகவும் இருக்கும்.

 நிராபாதம் என்னும் மார்க்கமானது ஒளியோடு நன்றாகச் செய்யப்பட்டிருக்கும்.

 மூன்றாவதாகிய துர்த்தர்சம் என்னும் மார்க்கம் கெட்ட வாசனையுள்ளதாகவும், இருள் மூடியதாகவும், கற்களும், நாய்ப்பற்களும்,மிக நிரம்பி கரடுமுரடாகவும் புழு பூச்சிகள் நிறைந்ததாகவும் நடக்க கஷ்டமானதாகவும் இருக்கும்

 உத்தம, மத்திம, அதமர்களை மரண காலத்தில் யமதூதர்கள் இந்த மூன்று வழிகளிலேயே கொண்டு செல்வர்.

உத்தமர்கள் இறந்து போகும் போது அவர்களை யமதூதர்கள் சிறந்த உடை உடுத்தி வந்து சுகமாக ரமணீயம் மார்க்கம் வழியே கொண்டு செல்வர்.

**

London Swaminathan’s Latest English Book on Maharashtra Temples


WRITTEN BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – –   4 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

This is my 116th Book (and 114th published by Pustaka.co.in; Thanks to the Pustaka.co.in; other two titles were published by me before I took the FREE service of Pustaka.co.in) 

If anyone has written  more than 116 books from abroad (from outside India,) please let me know. I want to salute such great authors. Please remember my books are  are not stories. Mine are Non Fiction Titles.

***** 

How can you read my books ON LINE for a small amount?

Please Support all Authors.

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

Book title – Guide to 108 Famous Temples in Maharashtra

Contents

1.Famous Hindu Shrines in Maharashtra- Part 1

2.Ambarnath and other  Shiva Temples

3.Bhimashankara Jyotirlinga Temple

4.Chindwada Ganapati Temple

5.Ashtavinayak Ganpati Temples

6.Kolhapur Mahalakshmi, Tuljapur Bhavani Temples

7. Saptasrngivasini, Renuka Devi  Temples

8. Amba Jogai Yamai Temples

9.Famous Shiva Temples

10.More Jyotirlinga Shrines

11.Parali Vaidhyanatha Temple

12.More Shiva Temples   

13.Four Temples in Mahabaleshwar

14.Important Temples in Mumbai

15.Uttara Chidambaram and Pandharpur

16.Shirdi and Panchavati

17.Jejuri Khandoba Temple

18.More Devi  Temples

19.Last Part of 108 Famous Hindu Shrines in Maharashtra 

20.Strange Haldi Festival in Maharashtra

21.Two Marathi Proverbs on Lord Dattatreya

22. A Rare Tree in Alandi Jnaneswar Samadhi

23.Golden Ganesh in British Prime Minister’s House  

24.Lord Ganesh enters White House

25.Sun Worship in Shakespeare’s Song

*********************

 FOREWORD

In the first part of the book , I have given brief descriptions of 108 famous Hindu temples in Maharashtra. Like Tamil Nadu, we have a lot of temples for Shiva, Vishnu and Goddesses there. Four of the 12 Jyotirlinga Shrines attract millions of people every year. Like Sabarimalai in Kerala, lakhs of devotees walk to Pandharpur every year. In addition to the temples, Samadhis of holy saints like Shirdi Baba, Tukram, Jnandev, Samartha Ramdas and others are worshipped by millions. Like the divine Tamil hymns Tevaram, Tiruvasagam and Divya Prabandham, Marathi Abhangs are in thousands. They are household songs in Maharashtra.

 Ashta Vinayak temples and Mumbai temples are visited by film personalities from Bollywood. Veera Shivaji and freedom fighter Bala Gangadhara Tilak made Bhavani worship and Ganesh worship very popular. Grama devatas like Khandoba are unknown in other parts of India. With beautiful groves of Western Ghats (Sahyadri Mountain) in the background, these temples have been a solace to millions of Hindus.

In the second part I have included a few stories of Lord Ganesh entering White House, Ten, Downing Street in London and Haldi festival.

My guide gives direction to or location of all the temples. If one keeps it in hand, one can plan the journey well and avoid wastage of time.

London Swaminathan

October 2023

Swami_48@yahoo.com

THANKS FOR YOUR SUPPORT.

XXXXXX

ABOUT THE BOOK AND THE AUTHOR

Book Title – Guide to 108 Famous Temples in Maharashtra

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- English

Published  – 2024

Subject – Religion

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 8000 articles and 116 Tamil and English Books

Visited 15 Countries:

India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, Greece and Sri Lanka

******

Tamil book on Maharashtra Temples written by me is also available.

Tags- Maharashtra temples, London swaminathan .

QUIZ அதிசய காமாக்யா கோவில் பத்து QUIZ(Post No.12,984)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,984

Date uploaded in London – –   4 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 QUIZ SERIAL No.107

1.காமாக்யா கோவில் எங்கே இருக்கிறது ?

XXXX

2.காமாக்யா கோவிலில் என்ன அதிசயம் ?

XXXX

3.காமாக்யா என்றால் என்ன ?

XXXX

4.காமாக்யா கோவில்லுக்குள் ஆண்கள் வரலாமா ?

xxxx

5.மாத விலக்கை எப்படி கடைப்பிடிக்கிறார்கள் ?

xxxx

6.தேவிக்கு மிருக பலி கொடுக்கப்படுகிறதா ?

xxxx

7.முஸ்லீம்கள் இந்தக் கோவிலை எப்போது தாக்கி அழித்தார்கள்?

xxxx

8.கோவிலின் மிகப்பெரிய விழா எது ?

XXXX

9.கோவிலின் சிறப்பு பிரசாதம் என்ன ?

xxxx.

10.தேவியின் மாத விலக்கை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் ?

XXXX

விடைகள்

1.அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரமான  குவஹாத்தி நகரில்  நிலாசால பர்வதத்தின் மேல் காமாக்யா கோவில் உள்ளது . இது 51 சக்தி பீடங்களில் ஒன்று .

XXXX

2.தக்ஷ யக்ஞத்தில் கணவனை அவமானப்படுத்திய தந்தையைக் கண்டித்து பார்வதி தேவி /தாட்சாயினி தீக்குளித்தாள் . தாட்சாயினி சடலத்தைத் ஏந்தியவாறு சிவ பெருமான் கோர தாண்டவம் ஆடினார். அப்போது உமை/ தாட்சாயினி அம்மனின் உறுப்புகள் விழுந்த ஒவ்வொரு இடமும் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கும் மாபெரும் சக்திக் கேந்திரங்களாக மாறின. அதில் அம்மனின் பெண் உறுப்பு/ யோனி விழுந்த இடம் குவாஹாத்தி காமாக்யா பீடம் ஆகும் ; ஆகையால் இங்கு பெண் உறுப்பை சக்தியின் அம்சமாக வழிபடுகிறார்கள்.

XXXX

3.மற்றை நம் காமங்கள் என்று திருப்பாவையில் ஆண்டாளும் பாடுகிறாள்; தற்காலத்தில் இதை செக்ஸ் விஷயங்களில் மட்டும் பயன் படுத்துகிறார்கள் ஆனால் பொதுவான சம்ஸ்கிருத அர்த்தம் ஒருவரின்  ஆசைகள். காமேஸ்வரி என்பது தேவியின் இன்னும் ஒரு பெயர்; பக்தர்களின் இச்சைகளை/ விருப்பங்களை பூர்த்தி செய்ப்பவள் என்பது இதன் பொருள்.

XXXX

4.வட இந்தியாவில், முருகன் சந்நிதிக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்ற தடை இருக்கிறது ; அது போல ஆண்கள் நுழையக்கூடாது  என்ற தடையும் சில கோவில்களில் உள்ளது ; இது அம்மனின் மாத விலக்கு ஏற்படும் 3 நாட்களில் மட்டும்தான் ; அவ்வாறே  காமாக்யா கோவிலுக்குள் ஆண்களும் அம்மனின் மாதவிலக்கு காலத்தில் வர முடியாது. கேரளத்தில் சில கோவில்களிலும் அம்மனின் மாதவிலக்கு கடைப்பிடிக்கப்படுகிறது .

Xxxx

5.கருவறையை சிவப்பு நிற வஸ்திரத்தால் மூடி மறைத்துவிடுகின்றனர். அந்த மூன்று நாட்களில் ஆண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் . ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் மாதவிலக்கு நாட்களில்  கருவறையை மூடிவிடுகிறார்கள்.

Xxxx

6.ஆம்; உண்டு. தமிழ் நாட்டில் ஆடு, கிடா வெட்டி அம்மனைக் கும்பிடுவது போல இங்கு எருமையை வெட்டி சாமி கும்பிடுவது வழக்கம் . முன்னர் நூற்றுக்கணக்கில் எருமைகள் பலி / நேர்த்திக்கடன் என்ற பெயரில் நடந்தது. இப்போது அடையாள பூர்வமாக சம்பிரதாயப்படி எருமைகள் பலி கொடுக்கப்படுகின்றன.

நாள்தோறும் உலகில் நூறு நூறு ஆயிரம் கோடி நாய், பன்றி, பசு பல்லி, பாம்பு, ஒட்டகங்கள்,  குதிரைகளும் பல்லாயிரம் கோடி மீன்களும் திமிங்கிலங்ககளும் கசாப்புக் கடைகளில் விற்கப்படுகின்றன. அவைகளைத் தடுக்க முடியாதவர்கள் இதைப்பற்றி கேள்வி கேட்க அருகதை அற்றவர்களே ! பில்லியன் கணக்கில் ஆடுகளும் கோழிகளும் நாள்தோறும் கொல்லப்படுகின்றன.

XXXX

7.சுலைமான் கர்ரானி Sulaiman Karrani (1566–1572) என்ற மதவெறியனின் படைத்தளபதியும் ,ஹுசைன் ஷா (1500 CE) என்ற மதவெறிபிடித்தவனின் படைகளும் கோவிலை தாக்கி அழித்தன. பின்னர் வந்த இந்து மன்னர்கள் கோவிலை புனர் நிர்மாணம் செய்தார்கள் .

XXXX

8.இந்த விழாவுக்கு அம்புபாச்சி விழா  (Ambubachi Mela) என்று பெயர் . ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தேவிக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது ஜூன் மாதத்தை ஒட்டி இந்த விழா வரும். மூன்று நாட்களுக்கு கோவில் மூடப்படும். மூன்று நாட்களில் பக்தர்கள் சமைக்கக்கூடாது. பூஜை செய்யக்கூடாது. புனித நூல்களைப் படிக்கக்கூடாது. விவசாயம் செய்யக்கூடாது போன்ற சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. நாலாவது நாளன்று கோவில் திறக்கப்படும் . மேற்கு வாங்க , அஸ்ஸாம் திரிபுரா முதலிய மாநில சாக்தர்கள் / சக்தியை வழிபடுவோர் வெவ்வேறு கலர் உடைகளை வந்து தேவியை வணங்குவார்கள்;

XXXX

9.தேவி சிலைக்கு அணிவிக்கப்பட்ட ஆடைகளை பிரசாதமாக வினியோகிக்கிறார்கள் . இதில் அங்கடோக், அங்க வஸ்திரம் என இரண்டு வகை உண்டு . அங்கடோக் என்பது தேவியின் யோனியை மூடுவதற்கு பயன்படுத்திய சிவப்பு நிறத் துணியின் பகுதியாகும் . பக்தர்களும் தேங்காய், பழம், பூ ஆகியவற்றோடு சிவப்புத்துணியையும் அம்மனுக்கு கொடுக்கிறார்கள்

xxxx

10.ஆஷாட அல்லது ஆடி மாதத்தில் ஏழாவது நாள் முதல் பத்தாவது நாள் வரை மாதவிடாய்க் காலமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது .

ஏனைய காலங்களில் மாதவிடாய் கணிப்பது அர்ச்சகரின் கைகளில் உள்ளது ; கேரளத்தில் செங்கன்னூர் பகவதி அம்மன் துணியில் சிவப்புக்கறையைக் கண்டால் உடனே தாழமன் மடத்திலுள்ள பெண்களிடம் அனுப்புவார்கள் ; அவர்கள் மாதவிலக்கு பற்றி முடிவு சொல்லுவார்கள் .

XXXX Subham XXXX

TAGS – ,காமாக்யா கோவில் பத்து , மாதவிடாய், அம்புபாச்சி விழா  , தேவி, மிருக பலி

மயிலுக்கும் அரசனுக்கும் சிலேடை! (Post No.12,983)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,983

Date uploaded in London – — 4  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மஹாபாரத ரகசியம்

மயிலுக்கும் அரசனுக்கும் சிலேடை!

ச.நாகராஜன்

ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும்?

மயிலைப் போல இருக்க வேண்டும்.

இந்தக் காலத்தில் அரசர்கள் இல்லையே? நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள், அரசை ஆளுகின்ற பெரிய பொறுப்பில் இருக்கின்றவர்கள் மயிலைப் போல இருக்க வேண்டும்.

இதை மஹாபாரதத்தில் பீஷ்ம பிதாமகர் தர்மபுத்திரருக்குச் சொல்கிறார்.

சாந்திபர்வம் 120வது அத்தியாயத்தில் இதன் முழு விவரத்தையும் பார்க்கலாம்.

இங்கே அதன் சுருக்கம் தரப்படுகிறது.

1) மயிலானது பல வர்ணங்களுடைய தோகைகளை எவ்விதம் தரிக்கிறதோ அதே போலவே தர்மம் அறிந்த அரசன் பலவிதமான ரூபத்தை (உருவத்தை) கொள்ள வேண்டும்.கடுமை, கபடம் (வரி வாங்குதல்) இவற்றோடு சத்தியம் நேர்மை, தைரியம் ஆகியவற்றை அடைந்து நடுநிலைமையுடன் இருக்க வேண்டும்.அதாவது சிக்ஷையில் குரூரனாகவும் ரக்ஷையில் சாந்தனாகவும் இருக்க வேண்டும்.

எந்த விஷயத்தில் எவ்வித உருவம் இருக்க வேண்டுமோ அந்த விஷயத்தில் அந்த உருவத்தைக் காட்ட வேண்டும்.

 இப்படி பல உருவமுடைய அரசனுக்கு சூக்ஷ்மமான விஷயமும் நாசமடையாது.

2) மயிலானது சரத் காலத்தில் சப்தமிடாமல் இருப்பது போல அரசன் எப்போதும் மந்த்ராலோசனையை வெளியிடாமல் காக்க வேண்டும்.

3) மயிலானது இனிமையான குரலும் உடம்பின் அழகும் தன் செய்கையில் சாமர்த்தியமும் பொருந்தி இருப்பது போல அரசன் அழகான சொற்களைக் கொண்டு, சம்பத்துள்ளவனாகவும் சாஸ்திரங்களில் சமர்த்தனாகவும் இருக்க வேண்டும்.

4) நீரருவிகளில்  மயிலானது நாட்டமுடையதாக இருப்பது போல  அரசன் வரவு செலவுகளில் கவனமுள்ளவனாக இருக்க வேண்டும்.

5) மயிலானது மலையிலுள்ள மழை ஜலங்களை அடுப்பது போல அரசன் சித்தி பெற்ற அந்தணர்களை அடுக்க வேண்டும்.

6) மயில் எப்போதும் தன் தலையிலுள்ள சிகையை எப்போதும் தூக்கி வைத்துக் கொண்டிருப்பது போல பொருளில் விருப்பமுள்ள அரசன் இயற்கையில் தர்மிஷ்டன் என்று பிறர் நினைக்கும்படியாக தர்மத்துக்குக் கொடி கட்டுவது போல அடையாளங்களைக் காண்பிக்க வேண்டும்.

7) மயிலானது தன்னைப் பாதுகாத்துக் கொண்டு பாம்பு முதலியவற்றை அடிக்க எப்போதும் ஜாக்ரதையாக இருப்பது போல அரசன் எப்போதும் தண்டத்தை மேற்கொண்டவனும் ஆசாரத்தில் அஜாக்ரதையாக இல்லாதவனுமாக இருக்க வேண்டும்.

8) மயிலானது தான் இருக்கும் மரத்திலிருந்து அதிக செழுமையுள்ள மரத்துக்குச் செல்வது போல அரசன் உலகிலுள்ள வரவு செலவு கணக்கைக் கண்டு வரவு அதிகமும் செலவு குறைவாகவும் உள்ள காரியங்களைச் செய்ய வேண்டும்.

மதுரஸத்தைப் பெருகவிடும் பனைமரத்தின் ஒரு பக்கத்தில் மதுவை எடுப்பது போல ஜனங்களுக்கு இம்சையில்லாமல் உலகத்திலுள்ள வரவு செலவுகளுக்குத் தக்கபடி வரியை வாங்க வேண்டும்.

9) தன் கூட்டத்தார்களில் தானே உத்தரவு செய்கின்றவனும், எதிரியினுடைய பூமியில் உள்ள தானியங்களை குதிரை முதலியவற்றின் நடைகளால் அழிக்கின்றவனாகவும் இருக்க வேண்டும். தனது பக்கத்தில் செழுமை அடைந்த பிறகு சஞ்சரிக்க வேண்டும். தன் குறையைக் கவனிக்க வேண்டும்.

10) மயில் தன் தோற்றத்தினாலேயே காக்கை முதலியவற்றின்  குறைகளைக் காட்டுவது போல தன் நேர்மையினாலேயே எதிரிகளின் குற்றங்கள் வெளியாகும் படி இருத்தல் வேண்டும்.

11) மயில் உயர்ந்த செழிப்புள்ள மலைகளை அடுத்திருப்பது போல அரசன் உயர்ந்தவர்களும் விருத்தி அடைந்தவர்களும், மலை போன்றவர்களுமான அரசர்களை அடுக்க வேண்டும்.

12) மயில் வேனிற்காலத்தில் மரத்தில் மறைந்து ஒன்றுவது போல ரகசிய்மாக  ரக்ஷகனை அடைய வேண்டும்.

13) மயில் ராத்திரியில் வெளிப்படாது. மயில் வருஷ காலத்தில் களிப்பது போல இரவில் ஜனமில்லாத இடத்தில் களிக்க வேண்டும்.

14) மயிலினுடைய குணம் போலவே பெண்களால் ரக்ஷிக்கப்பட்டவனாக சஞ்சரிக்க வேண்டும். கவசத்தை விடக்கூடாது. தானே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

15) மயில் தான் சஞ்சரிக்கும் இடங்களில் போடப்பட்ட வலைகளை விலக்கிக் கொள்வது போல அரசன் ஒற்றர்களால் காண்பிக்கப்பட்ட இடங்களில் கபடமாக (தன்னைக் கொல்வதற்காக) வைக்கப்பட்ட  விஷம் உள்ளிட்டவற்றை விலக்க வேண்டும்.

16) மயிலானது விஷமும் கோபமும் கோணலான நடையுமுள்ள பாம்புகளைக் கொல்வது போல அதிக விஷமுள்ளவர்களும் கோபமுள்ளவர்களும் கோணலான நடையுள்ளவர்களுமான எதிரிகளைக் கொல்ல வேண்டும்.

17) மயில், புழு முதலியவற்றை வெறுக்காதது போல இகழ்ச்சியாய் இருப்பவர்களிடத்தில் பொறாமை படக்கூடாது.

18) மயில் உறுதியான பக்ஷங்களை (தோகைகளை) அடைந்திருப்பது போல அரசனானவன் உறுதியான மந்திரி முதலிய தன் பக்ஷங்களை நிலைக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

19) மயிலானது எப்போதும் தன் பக்ஷங்களை (தோகைகளை)  விரிவாக்கிக் கொள்வது போல தன் பக்ஷத்தார்களை (தன்னை ஆதரிப்பவர்களை) அரசன் பரவச் செய்து கொள்ள வேண்டும்.

அரசன் இப்படி மயில் போலத் தன் ராஜ்யத்தை பரிபாலிக்க வேண்டும்.

இதை அப்படியே அரசன் என்பதற்கு பதிலாக Prime Minister/ Chief Minister

அல்லது மிகப் பெரும் நிறுவனத்தின் CEO – Chief Executive Officer அல்லது  General Manager என்றோ கூட வைத்துக் கொண்டு பொருத்திப் பார்க்கலாம்!

தலைவனும் மயிலுக்குமான சிலேடை மஹாபாரதத்தின் பொக்கிஷ உரைகளில் ஒன்று!

**

London Swaminathan’s New Book on Karnataka Temples (Tamil)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – –   3  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Title-  கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

பொருளடக்கம்

1.கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் -Part 1 (பெங்களூர் கோவில்கள்)

2.சோமேஸ்வர, மல்லேஸ்வர, நாகேஸ்வர கோவில்கள்

3.சிக்க திருப்பதி, முக்திநாகா, போக நந்தீஸ்வர கோவில்கள்

4.பீமலிங்கேஸ்வரர், நான்கு முக மலையில் 4 கடவுள் கோவில்கள்

5. ரேவண சித்தேஸ்வர, சங்கமேஸ்வர, மட்டூர் வட்டார கோவில்கள்

6.மாண்ட்யா வட்டாரக் கோவில்கள்  

7.நிமிஷாம்பா, பஞ்ச லிங்கேஸ்வரர், நரசிம்ம சுவாமி கோவில்கள்

8.முக்தனாதேஸ்வர, மல்லிகார்ஜுன, மேலுகோட்டை செலுவ நாராயணர் கோவில்கள்

9.பஞ்ச நாராயண க்ஷேத்ரங்கள்

10.ஆண்டாள் கண் ஒளிரும் எடத்தலை கோவில்

11.புலி மீது வந்த சித்தர் கோவில், திப்பு சுல்தான் எரித்த சிவன் கோவில்கள்

12.காந்திஜிக்கு தினசரி பூஜை! கடுங்காப்பி பிரசாதம்

13. தர்மஸ்தலம், குக்கே சுப்ரமண்யர் கோவில்கள்

14. உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன், ஆனகுட்ட விநாயகர் கோவில்கள்

15.மூகாம்பிகை, சாரதாம்பிகை, முருதேஸ்வர்

16. அன்னபூர்ணேஸ்வரி, அம்ருதேஸ்வரர் கோவில்கள்

17.ஒரே வாரம் திறக்கும் அதிசயக் கோவில்!

18.பேலூர், சிரவண பெலகோலா கோவில்கள்

19.ஒன்பது நரசிம்மர் சிலைகள்!

20. மலைக்கல்லு திருப்பதி கோவில், அரிசிக்கரே ஈஸ்வரன் கோவில்

21.கப்பல் வடிவில் அதிசய கோவில்!

22.ஓம் வடிவ கடற்கரை!

23.காந்திஜி நுழைய மறுத்த கோவில்!

24.கோவிலில் பெரிய பீமன் முரசு!

25.அனுமன் பிறந்த கிஷ்கிந்தா !

26.உலகப் புகழ்பெற்ற ஹம்பி:

27. கடக் GADAG வட்டார கோவில்கள்

28.கனககிரி கனகாசலபதி கோவில் 

29.பாதாமி குகைகள், இந்து சமய ஓவியங்கள்!!

30.ஐஹோல் கோவில்கள்

31.பட்டடக்கல் கோவில்கள்

 *************************

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title-  கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  -2024

Subject – Religion

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 8000 articles and 116 Tamil and English Books

 Visited Countries

India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, Sri Lanka and Greece

**************

முன்னுரை

தமிழ்நாட்டைப்போலவே எண்ணற்ற, புகழ் பெற்ற இந்து சமயக் கோவில்களை உடைய மாநிலம் கர்நாடகம். இங்கு புகழ்பெற்ற சமண ஆலயங்களும் இருப்பது கூடுதல் சிறப்பு. சிரவண பெலகோலாவில் உள்ள உலகின் மிகப்பெரிய ஒற்றைக் கல் கோமடேச்வர் சிலை , மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில் நந்தி, பேலூர், ஹளபீடு , சோம்நாத்பூர் சிற்பங்கள் பெருமளவில் புஸ்தகங்களில் காணப்படுகின்றன . இது ஒரு புறமிருக்க, மூகாம்பிகை, சாரதாம்பிகை கோவில்கள் ஆகியன தேவி பக்தர்களைக் கவர்ந்து இழுக்கின்றன . காவிரி நதியின் இருமருங்கிலுமுள்ள சிவன், விஷ்ணு கோவில்கள் சைவ, வைணவ பக்தர்களுக்கு பக்திப் பரவசம் ஊட்டுகின்றன.. காவிரி தோன்றுமிடத்தில் உள்ள தலங்களும் , பல நதிகளுடன் சங்கமிக்கும் இடங்களும் குக்கே சுப்ரமண்யர் கோவிலும்  குறிப்பிடத்தக்கவை.

முருதேஸ்வரில் உள்ள பிரம்மாண்ட சிவபெருமான் சிலை கடலோரமாக உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சிறிய கோவில்களும் இந்த நூலில் இடம்பிடித்துள்ளன . எல்லாவற்றுக்கும் மேலாக ஹம்பி, ஐஹோல், பட்டடக்கல் ஆகியவற்றில் உள்ள குகைக் கோவில்களும் ஓவியங்களும் யுனெஸ்கோவின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன.

நுளம்பர் , ஹொய்சாளர் , சாளுக்கியர் முதலிய வம்ச மன்னர்களின் ஆதரவுடன் பெருகிய கோவில்கள் அந்தந்தக் கால  புகழ்பெற்ற சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டி நிற்கின்றன. கோவில்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் நமக்கு வரலாற்றுப் பொக்கிஷமாக இருக்கின்றன .

இவ்வாறு மக்களின் பக்தி, கலை ரசனை , சுற்றுலா, வரலாற்று உணர்வு  ஆகியவற்றை வழங்கும் கோவில்களையும், சின்னங்களையும் காப்பாற்றி வருங்கால சந்ததியினருக்கு வழங்குவது நமது கடமை ஆகும். கர்நாடக கோவில்கள் பற்றி தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகள் இருந்தபோதிலும். புஸ்தகம் எதுவும் இல்லை ; சுற்றுலா கைடுகள் கோவிலைத் தவிர ஏனைய விஷயங்களையும் சேர்ப்பதால் பக்தர்களுக்குப் பயன்படுவதில்லை . அந்தக் குறையை இந்த நூல் போக்கும் என்று எண்ணுகிறேன் . முதலில் நான் எழுதிய மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் என்ற நூலுக்குக் கிடைத்த ஆதரவு இந்த கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்  நூலுக்கும் கிடைக்கும்  என்று  நம்புகிறேன் . இது என்னுடைய  107 ஆவது நூல்.

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

செப்டம்பர் 2023

Swami_48@yahoo.com

HOW CAN YOU GET THESE BOOKS?

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

QUIZ  பஞ்ச கேதார் பத்து QUIZ (Post No.12,982)

Kalpeshwar/ Kapileshwar temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,982

Date uploaded in London – –   3  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Kalpeshwar 

QUIZ SERIAL No.106

1.பஞ்ச கேதார் என்று  அழைக்கப்படும் ஐந்து கேதார ஸ்தலங்கள் எங்கே உள்ளன ?

XXXX

2.கேதார்நாத்தின் சிறப்பு என்ன?

XXXXX

3.இரண்டாவது கேதார் ஸ்தலமான துங்க நாத் எங்கே இருக்கிறது அதன் சிறப்பு / விசேஷம் என்ன?

XXXXX

4.ருத்ரநாத் எங்கே இருக்கிறது ?

XXXXX

5.நாலாவது ஸ்தலமான மகா மத்யேஸ்வர் கோவில் எங்கே இருக்கிறது ?

XXXX

6.கடைசியில் தரிசிக்கும் கல்பேஷ்வர் Kalpeshwar Temple (कल्पेश्वर) சிவன் கோவிலின் சிறப்பு என்ன ?

XXXXX

7.ஐந்து கேதார்களையும் ஐந்து பிரயாகைகளையும் சார் தாம் தலங்களையும் இணைக்கும் அம்சம் எது?அதற்கு என்ன சான்று?

XXXXX

8.பஞ்சகேதார் தலங்களை சிவபெருமானின் உடலில் உள்ள அங்கங்களாகவும் சொல்லுவார்கள்அவை யாவை ?

XXXXX

9.ஐந்து கோவில்களும் எப்போதும் திறந்திருக்குமா ?

xxxxx

10.இந்த ஐந்து தலங்களுக்கும் நேபாளத்துக்கு உள்ள தொடர்பு என்ன ?

xxxx

Tunganath Shiva Temple

விடைகள்

1.இமய மலையில் உத்தர கண்ட் மாநிலத்தில் ஐந்து கேதார ஸ்தலங்கள் உள்ளன. அவை :

கேதார் நாத் கோவில்

துங்கநாத் கோவில்

ருத்ரநாத் கோவில்

மத்திய  மஹேஸ்வர் கோவில்

கல்பேஷ்வர் கோவில்.

இவை அனைத்தும் சிவன் கோவில்கள்

Kedarnath – 1st Panch Kedar

Tungnath – 2nd Panch Kedar

Rudranath – 3rd Pancha Kedar

Madhyamaheshwar, –4th Pancha Kedar

Kalpeshwar, 5th Pancha Kedar

இவைகளை மேற்கூறிய வரிசையிலேயே தரிசிக்கவேண்டும் என்பது சம்பிரதாயம் .

XXXXX

கேதார்நாத் கோவில் மிகவும் பிரசித்தமானது ; 12  ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்று. பனி மூடிய ஆறு காலம் கோவில் மூடப்படும். ரிஷிகேஷ் நகரிலிருந்து 223  கி.மீ தொலைவு. மந்தாகினி நதி உற்பத்தியாகும் இடத்திற்கு அருகில் இருக்கிறது (  சார் சதாம்- கேதார்நாத் 10) கட்டுரையில் விவரம் உள்ளது .

XXXXX

3. केदारनाथ கேதார்நாத் உயரம்  3,583 மீட்டர்11,755  அடிகள்  ; துங்கநாத்  (तुङ्गनाथ)(3,680 m or 12,070 ft),அதையும்  விட மேல் இருக்கிறது.

இந்தியாவில் உயரமான சிவன் கோவில் துங்கநாத் கோவில் ஆகும் ; இங்குள்ள சிவலிங்கம் ஸ்வயம்பு லிங்கம்; அதாவது மனிதன் செதுக்கவில்லை. தானாக பூமியில் தோன்றிய லிங்கம். ஆதியில் பாண்டவர்கள் கட்டிய கோவில் ; போரில் தங்கள் செய்த பாவங்கள் தொலைய அவர்கள் இதை எழுப்பினார்கள் . பாண்டவர் உருவங்களும் உள. பிற்காலத்தில் ஆதி சங்கரர் இதை புனர் நிர்மாணித்தார் . அவருடைய சிலையும் இங்கே கருவறையில் உளது . மேலும் உள்ள பல சிலைகளில் கால் பைரவர் , வேத வியாசரை சிலைகள் குறிப்பிடத்தக்கன. 

XXXXX

4.இங்கும் இயற்கையில் அமைந்த சிவன் உருவமே ; இந்தக் கோவிலில் சிவன் , முகத்துடன் அருள்பாலிக்கிறார் ; மற்ற இடங்களில் உருவமற்ற லிங்கமே உளது. இதை நீலகண்டன் என்று உள்ளூர்வாசிகள் அழைக்கிறார்கள்; 2286 மீட்டர் உயரத்தில் இமய மலையின் அடர்ந்த காடுகளுக்கு இடையே இந்தக் கோவில் இருக்கிறது இங்கிருந்து இமயமலைச் சிகரங்களான நந்த தேவி, நந்த கண்டி , திரிசூலி,  ஹாத்தி பர்வத் ஆகியவற்றைக் கண்டு களிக்கலாம் . அருகில் அனுசுயா தேவி கோவில் இருக்கிறது . கோவிலுக்குப்  பின்னால் வைதரணி நதி ஓடுகிறது. கோவிலுக்கு அருகில் சூர்ய குண்டம், சந்திர குண்டம், தாரா குண்டம் ஆகிய புனித நீர்நிலைகளைக் காணலாம். தாரா என்றால் நட்சத்திரம்.

பஞ்ச ஸ்தலங்களில் இதுதான் கடினமான பாதை  உடைய கோவில். கோபேஸ்வர் வரை சாலையுள்ளது ; இங்கிருந்தோ ஜோஷிர்மட் என்னும் இடத்திலிருந்தோ மைல் கணக்கில் நடந்து செல்ல வேண்டும்

XXXXX

6.பஞ்ச  கேதார் ஸ்தலங்களில் மிகவும் எளிதில் தரிசிக்கக்கூடிய கோவில் கல்பேஷ்வர் கோவில்தான். ரிஷிகேஷிலிருந்து உக்ரம் உர் கம் என்னும் கிராமத்துக்குச் சென்றால் அங்கிருந்து ஐந்து  கி.மீ தொலைவில் கோவிலை அடையலாம். இங்கே ஜடாதார் என்ற பெயரில் சிவனை வணங்குகிறார்கள்.

 உர்கம் பள்ளத்தாக்கு மிகவும் இயற்கை வனப்புமிக்கது. அகஸ்தியர் தவம் செய்ததும், துர்வாசர் கற்பக விருட்சத்தை தின் கீழ் தவம் செய்ததும் இங்குதான்  . ஊர்வசி தோன்றியது , குந்தி வரம்பெற்றது இல்லம் இங்குதான் என்றும் செப்புவார்கள்.

ஐந்து கேதார்களுக்கும் சென்றபின்னர் கட்டாயம் பத்ரிநாத்துக்குச் சென்று விஷ்ணுவை வணங்க வேண்டும் என்ற சம்பிரதாகாயமும் இந்தப் பிரதேச மக்களிடம் உளது.

XXXXX

7.ஆதிசங்கரர் இந்த எல்லா கோவில்களிலும் சம்பந்தப்பட்டிருக்கிறார். ஆதிகால கோவில்களை புனர் நிர்மாணம் செய்திருக்கிறார் ; தென் இந்திய அர்ச்சகர்களை நியமித்தது வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் ஒற்றுமைப்படுத்தியுள்ளார். நாடன் நாட்டின் நான்கு மூலைகளில் நான்கு படங்களை நிறுவி பாரதம் ஒன்றே என்றும் காட்டியுள்ளார். பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதாரையும் அர்ச்சகராக நியமித்து புரட்சி செய்து இருக்கிறார் . மேற்கூறிய பல கோவில்களில் அவரது சிலை அல்லது சந்நிதி இருக்கிறது

XXXXX

8.கேதார்நாத்* ~ ஈசனின் உடல்;

துங்கநாத்* ~ ஈசனின் புஜம்;

ருத்ரநாத்* ~ ஈசனின் முகம்;

மத்மஹேஷ்வர்* ~ ஈசனின் தொப்புள்;

கபிலேஷ்வர்* ~ ஈசனின் தலைமுடி.

XXXXX

9.இல்லை. கல்பேஷ்வர் கோவில் மட்டும்தான் ஆண்டு முழுதும் திறந்திருக்கும். ஏனைய நான்கு கேதார்களும் பனிக்காலத்தில் ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும். உற்சவ மூர்த்திகளை மட்டும் உகிமத்தில் வைத்து வழிபடுவார்கள் .

XXXXX

10.நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் பசுபதிநாதசிவன் கோவில் இருக்கிறது. முன் காலத்தில் கேதார்நாத் இந்தப் பட்டியலில் இல்லை ; பசுபதிநாத் கோவில்தான் இருந்தது பிற்காலத்தில்

கேதார் நாத்தை சேர்த்துவிட்டார்கள். இந்த ஐந்து கோவில்களில் பெரும்பாலானவை நேபாள கோபுர அம்சத்தினைக் கொண்டு  இருப்பது இதற்குச் சான்று என்பது ஒரு வாதம். மேலும் நேபாள கோரக்நாத் சம்பிரதாயத்தின்ர்  பின்பற்றும் நடைமுறைகள், இந்த யாத்திரையிலும் பின்பற்றப்படுகிறது..

–subham—

Tags- கல்பேஷ்வர் கோவில், துங்கநாத், காளிமத் கோவில், பஞ்ச கேதார் பத்து, Quiz,

S.Nagarajan Article Index : JANUARY  2024 (Post No.12,981)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,981

Date uploaded in London – — 3  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

SNR Article Index : JANUARY  2024

JANUARY  2024

1-1-2024 12872 தந்த்ர சாஸ்திரங்கள்                                   2-1-2024 12876 லங்கணம் பரமௌஷதம்!                            3-1-2024 12879 யானையைப் பரிசாகப் பெற்ற புலவர் வீரராகவ முதலியார்! 4-1-2024 12882 SNR Article Index : DECEMBER  2023

5-1-2024 12885 பை’ – விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதை!                          6-1-2024 12889 கே செரா செரா –  Whatever will be, will be!                                    7-1-2024 12892 சிக்கலான கேள்விகளுக்கு விடை தருவது இந்து மதம்   ஒன்றே!                                                                                                                              8-1-2024 12895 அதிகஸ்யாதிகம் பலம்! – ஒரு வரி சுபாஷிதங்கள்         9-1-2024 12898 கர்ம ரகசியம்! –                                                                                      10-1-2024 12901 கர்ம ரகசியம்! – 2.                                                                         11-1-2024 12904 விவேகானந்த அதிசயம்! – 1                                                                        12-1-2024 12908 விவேகானந்த அதிசயம்! – 2                                                                  13-1-2024 12911  நியூக்ளியர் மன இறுக்கச் சோதனை!  – ஜனவரி 2024    ஹெல்த்கேர் மாத இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை                                     14-1-2024 12914 கர்ம ரகசியம்! – 3.                                                                                            15-1-2024 12917  KARMA RAHASYA  – 1

16-1-2024 12921 தாமஸ் ஆல்வா எடிஸன் – உழைப்பால் உயர்ந்த    மேதை!  – 1   10-1-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. 17-1-2024 12925 தாமஸ் ஆல்வா எடிஸன் – உழைப்பால் உயர்ந்த     மேதை!  – 2  10-1-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை    18-1-2024 12929 கனவு காணுங்கள்; கனவை நனவாக்குங்கள் – இளைஞர்களின் வழிகாட்டி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் – 1 – 17-1-24 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை19-1-2024 12932 கனவு காணுங்கள்; கனவை நனவாக்குங்கள் – இளைஞர்களின் வழிகாட்டி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் – 2 – 17-1-24 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை                 20-

1-2024 12936 ராம நாம மஹிமை – 1

21-1-2024 12939 ராம நாம மஹிமை – 2                                 22-1-2024 12943 ராம நாம மஹிமை – 3                                                                             23-1-2024 12946 ராம நாம மஹிமை – 4                                                                              24-1-2024 12950 ராம நாம மஹிமை – 5                                                                              25-1-2024 12953  கர்ம ரகசியம்! – 4 வாங்க சார் யமலோகத்திற்கு ஒரு விஸிட் – உயிரோடிருக்கும் போதே                                   26-1-2024 12956 டாட்டாவின் வெற்றி ரகசியம் – 1   மாலைமலர் 24-1-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை                            27-1-2024 12959 டாட்டாவின் வெற்றி ரகசியம் – 2   மாலைமலர் 24-1-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை                                                                   28-1-2024  12962 புத்தக அறிமுகம் அஹம் ஸ்புரணா.தமிழில்                                            29-1-2024 12966 ராம நாம மஹிமை – 6                                                                 30-1-2024 12969 தைப்பூச நன்னாளில் வழிபாடு! – 1

25-1-2024 அன்று ஞானமயம் சார்பில் நடைபெற்ற தைப்பூச நன்னாள் விழாவில் ZOOM வாயிலாக இணையதளத்தில் நடந்த ஒளிபரப்பில் ச.நாகராஜன் ஆற்றிய உரையின் முதல் பகுதி                               31-1-2024 12972 தைப்பூச நன்னாளில் வழிபாடு! – 2 உரையின் இறுதிப் பகுதி

***********************

QUIZ பஞ்சப் பிரயாகை பத்து QUIZ (Post No.12,980)

Picture of Deva Prayag 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,980

Date uploaded in London – –   2  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 QUIZ SERIAL No.105

1.பஞ்சப் பிரயாகை என்னும் ஐந்து ஸ்தலங்கள் யாவை ?

xxxx

2.விஷ்ணு பிரயாகையில் எந்த இரண்டு நதிகள் கலக்கின்றன?

xxxx

3.நந்தப் பிரயாகையில் எந்த இரண்டு நதிகள் சங்கமிக்கின்றன ?

xxxx

4.கர்ணப் பிரயாகைக்கு ஏன் அந்தப் பெயர் ஏற்பட்டது ?

xxxx

5.கர்ணப் பிரயாகையில் கோவில்கள் இருக்கிறதா ?

xxxx

6.அலக் நந்தாவுடன் மந்தாகினி சங்கமிக்கும் இடத்திற்கு என்ன பெயர்ஏன் அப்படி அழைக்கின்றனர்?

xxxx

7.தேவப் பிரயாகையில் சிறப்பு என்ன ?

xxxx

8.கண்டம் என்னும் கடி நகர் சிறப்பு பெறுவதற்கு காரணம் என்ன ?

xxxx

9.கண்டம் என்னும் கடிநகரை / தேவைப் ப்ரயாகையை அடைவது எப்படி ?

xxxx

10 .பஞ்ச பிரயாகை என்ன தூரத்தில் அமைந்துள்ளன ?

xxxx

Karna Prayag

விடைகள்

1.கர்ணப் பிரயாகை , நந்தப்பிரயாகை  , ருத்ரப் பிரயாகை  , தேவப் பிரயாகை , விஷ்ணுப்  பிரயாகை  ஆகிய ஐந்து ஸ்தலங்களை பஞ்சப் பிரயாகை என்று அழைப்பார்கள் .பஞ்ச என்றால் ஐந்து ; பிரயாகை என்றால் நதிகள் கூடும் இடம்; தமிழில் கூடல் என்போம். பெரிய பிரயாகையை  திரிவேணி சங்கம், பிரயாக்ராஜ், அலகாபாத் என்று அழைப்போம். மேற்கூறிய ஐந்து பிரயாகைகளும் உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலையில் உள்ளன . நதிகள் கூடும் இடம், நதிகள் கடலில் கலக்கும் இடம், நதிகள் தோன்றும் இடம்– எல்லாவற்றையும் இந்துக்கள் புனிதமாகக் கருதுவார்கள் ; வேறு எந்த கலாசாரத்திலும் இது கிடையாது ; இந்துக்கள் இதே நாட்டில் தோன்றியதால் நீரின் மீது மதிப்பு செலுத்துவார்கள்; நீர் பற்றிய மந்திரங்கள் ரிக் வேதத்தில் உள்ளன .

xxxxx

2. டோலி கங்கா என்ற நதி அலக்நந்தாவுடன் கூடும் இடம் விஷ்ணு விஷ்ணு பிரயாகையாகும். இது நாரதர் தவம் இயற்றிய புனிதத்தலம்.

Xxxx

3.அலக்நந்தாவுடன் மந்தாகினி கலக்கும் இடம் இது .

நந்தப் பிரயாகையில் கோபேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. 24 கதவுகளுடன் பெரிய கோயில்.

Xxxx

4.சூரிய பகவான், கர்னணனுக்கு தெய்வீக  கர்ண குண்டலங்களைக் கொடுத்த இடம் இது. அதனால் இப்பெயர்;  சுவாமி விவேகாநந்தர் மூன்று வாரங்களுக்குத்   தியானம் செய்த புனித இடம்; இங்கே அலக்நந்தாவுடன் பிண்டார் நதி இணைகிறது .

xxxx

5.கர்ணனுக்கும் உமாதேவிக்கும் கோயில்கள் உள்ளன.

Xxxx

6.ருத்ர பிரயாகை என்று பெயர் ; இது சிவன் தாண்டவம் ஆடிய இடம் என்பதால் ருத்ர  பிரயாகை எனப்படுகிறது . இங்கு நாரதர் தவம் செய்ததற்கு அடையாளமாக நாரதர் சிலா என்ற பாறை இருக்கிறது . பத்ரிக்கும் கேதாருக்கும் செல்லும் பாதைகள் பிரியும் இடம் இதுதான்

Xxxxx

7. இங்குதான் அலக்நந்தாவுடன் பாகீரதி நதி கலந்து கங்கை என்ற பெயரில் சமவெளியில் காலடி எடுத்துவைக்கிறது. இன்னும் ஒரு சிறப்பு சரஸ்வதி நதி, இங்குள்ள ராமரின்    பாதத்திலிருந்து மீண்டும் வெளிப்பட்டு கங்கையுடன் கலக்கிறது . ரகுநாத்ஜி கோவிலில் ‘ராம் குண்டம்’  என்ற இடத்தில் ராமரின் பாதங்கள் இருக்கின்றன. தேவ சர்மா என்ற ரிஷி இங்கு தவம் இயற்றினார் ;அவர் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது.  முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்யும் இடம்,. சிவன், காளி, ஹனுமான் கோவில்கள் உள்ளன.  இதுதான் ஆழ்வார்கள் பாடிய கண்டம் என்னும் கடி நகர் என்ற திருத்தலம்.

xxxx

8.இங்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமாள் திருத்தலம் இருக்கிறது . 108 வைணவ தலங்களில் ஒன்று.

மூலவர் பெயர் – நீலமேகப்பெருமாள்;

தாயார் – புண்டரீகவல்லி ;

கோவிலுக்குப் பின்னால் அழகான, சிறிய ஹனுமார் இருக்கிறார் ; ராமர், பிரம்மா, தசரதன், பரத்வாஜர் ஆகியோர் வந்த இடம் . தேவப் பிரயாகை என்பது இதுதான்

xxxx

9.ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத் செல்லும் சாலையில் 70  கி.மீ; பத்ரிநாத்துக்குச் செல்லும் வைணவர்கள் , திரும்பி வருகையில் ரகுநாத்ஜி கோவிலுக்கு சென்று வருகிறார்கள். ஆதி சங்கரர் ஸ்தாபித்த மூர்த்தி இது;

Xxxx

10.ரிஷிகேஷிலிருந்து ஒவ்வொரு பிரயாகைக்கும் உள்ள தொலைவு::

விஷ்ணு பிரயாகைக்கு   256  கி.மீ

நந்தப் பிரயாகைக்கு– 190   கி.மீ

கர்ணப் பிரயாகைக்கு-  169   கி.மீ

ருத்ர பிரயாகைக்கு – 140    கி.மீ

தேவப் பிரயாகைக்கு – 70  கி.மீ

 —subham—                    

Tags-  பஞ்ச பிரயாகை, Quiz, கர்ணப் பிரயாகை , நந்தப்பிரயாகை  , ருத்ரப் பிரயாகை  , தேவப் பிரயாகை , விஷ்ணுப்  பிரயாகை 

London Swaminathan’s Tamil Book on Burma & Confucius

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – –   2  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கன்பூசியஸ், பர்மா பற்றிய

அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

பொருளடக்கம்

1.ஆயுர்வேத சிகிச்சையும் அல்லோபதி சிகிச்சையும் -1

2.ஆயுர்வேத சிகிச்சையும் அல்லோபதி சிகிச்சையும் -2

3.கிருஷ்ணர் கையும் கிறிஸ்து கையும் குணப்படுத்தியது எப்படி?- Part 1

4.கிருஷ்ணர் கையும் கிறிஸ்து கையும் குணப்படுத்தியது எப்படி?- Part 2

5.கன்பூசியஸ் வாழ்வில் சுவையான சம்பவங்கள்

6.இரண்டு முயல்களைத் துரத்தாதே! பரமஹம்சரும் கன்பூசியஸும்

7. சினம்/ கோபம்: கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார் !- 1 

8. நல்லவை கேட்க!கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார்- 2

9.தன் நம்பிக்கை : கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார்- 3

10.தமிழ்ப் பழமொழிகளில் கன்பூசியஸ் தத்துவம் 

11. அதிகம் அடிபட்டவர் சிவபெருமான் !

12. அப்பர் பற்றிய அரிய தகவல்கள்– சொ. சொ. மீ. உரை

13. சிவபெருமான் நேரில் வந்தபோது நடந்தது என்ன?

14. ஞான சம்பந்தர் பற்றி அரிய தகவல்கள்: சொ சொ மீ. உரை

15. திருவாசகம் பற்றிய அரிய தகவல்கள்-1

16. திருவாசகம் பற்றிய அரிய தகவல்கள்-2

17. தெரிந்த ஊர், தெரிந்த கதை: புதிய விளக்கங்கள்!!

18.பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள்: வெற்றிலை

எச்சிலால் ராஜா பதவி போச்சு !- 1

19.பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள் -2

20. பர்மாவில் தமிழ் இந்துக் கோவில்கள்

21. பர்மா முழுதும் சம்ஸ்க்ருதம் -1

22. பர்மா முழுதும் சம்ஸ்க்ருதம் -2

23. பிரிட்டிஷ் பிரதமர் வீட்டில் தங்கப்  பிள்ளையார் !

24. பிஸினஸ் மேன் Business Man பற்றி குட்டிக்கதை

25. தமிழ் அதிசயம்! ஒரே எழுத்துக்கு  45 அர்த்தம் !!

26. நிவேதிதா வாழ்க்கையில் நடந்த அற்புதம்;  லண்டனில் சிலை திறப்பு

27. லண்டன் முருகன் தேர் திருவிழா; London Skanda Temple Rath Yatra 2023

28. இலண்டன் திருப்புகழ் விழா LONDON THIRUPPUGAZ FESTIVAL

29. லண்டன் ஹரே கிருஷ்ண ரத யாத்ரா London Ratha Yatra

30.மேலை நாடுகளில் சோதிடம் வளர்கிறது

31. ஆரூடம் கேட்பது, குறி சொல்லுவது உண்மையே! பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒப்புதல்  

************************

முன்னுரை

இந்த நூல், அண்மையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இதில் முக்கியமாக இடம்பெறுவது சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் பற்றியும் பர்மா வரலாறு பற்றியும்  உள்ள சுவையான செய்திகளாகும். இன்று புத்த மத நாடாகக் காட்சி தரும் பர்மா என்னும் மியான்மாரில் (Burma / Myanmar) ஒரு காலத்தில் இந்து மதம் தழைத்தோங்கி இருந்தது. அதற்கான சான்றுகளைத் தந்துள்ளேன். சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் பற்றி  தமிழ் பத்திரிகைகள் கவனம் செலுத்தின ; ஆனால் அவருடைய பொன்மொழிகள் அனைத்தும்  நமது இந்து மத நூல்களில் உள்ள கருத்துக்கள்தான் என்பதை. இதுவரை யாரும் சுட்டிக் காட்டாததால்  அவற்றை ஓரளவுக்கு கீதை, குறள் , தமிழ் , ஸம்ஸ்க்ருதப் பழ மொழிகளுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன்.

கட்டுரை எழுதிய காலத்தில் வந்த ஜோதிடச் செய்திகளும் ஆயுர்வேதச் செய்திகளும்  கட்டுரைகளாக சேர்க்கப்பட்டுள்ளளன.

இறுதியாக லண்டனில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைப்  பற்றிய சிறிய விமர்சனங்களும் உள்ளன ; முப்பது ஆண்டுகளாக நடந்து வரும் ஹரே கிருஷ்ணா இயக்க ரத யாத்திரை, லண்டன் முருகன் கோவில்  ரத யாத்திரை, ஆண்டுதோறும் நடந்துவரும் திருப்புகழ் விழா, மற்றும் சகோதரி நிவேதிதா சிலைத் திறப்பு விழா ஆகியவற்றைச் சுருக்கமாகக் கொடுத்துள்ளேன் ; முடிந்த அளவு, படங்களையும் சேர்த்து இருக்கிறேன்.  அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதே நோக்கம் .

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

Swami_48@yahoo.com

செப்டம்பர் 2023

Title-  கன்பூசியஸ்பர்மா பற்றிய அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – 2024

Subject – History and Culture

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 8000 articles and 116 Tamil and English Books

Visited 15 Countries

India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, Sri Lanka and Greece

**************

 இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

 Tags- கன்பூசியஸ், பர்மா ,அரிய தகவல்கள்,ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழா,