
Picture of Deva Prayag
Date uploaded in London – – 2 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

QUIZ SERIAL No.105
1.பஞ்சப் பிரயாகை என்னும் ஐந்து ஸ்தலங்கள் யாவை ?
xxxx
2.விஷ்ணு பிரயாகையில் எந்த இரண்டு நதிகள் கலக்கின்றன?
xxxx
3.நந்தப் பிரயாகையில் எந்த இரண்டு நதிகள் சங்கமிக்கின்றன ?
xxxx
4.கர்ணப் பிரயாகைக்கு ஏன் அந்தப் பெயர் ஏற்பட்டது ?
xxxx
5.கர்ணப் பிரயாகையில் கோவில்கள் இருக்கிறதா ?
xxxx
6.அலக் நந்தாவுடன் மந்தாகினி சங்கமிக்கும் இடத்திற்கு என்ன பெயர்? ஏன் அப்படி அழைக்கின்றனர்?
xxxx
7.தேவப் பிரயாகையில் சிறப்பு என்ன ?
xxxx
8.கண்டம் என்னும் கடி நகர் சிறப்பு பெறுவதற்கு காரணம் என்ன ?
xxxx
9.கண்டம் என்னும் கடிநகரை / தேவைப் ப்ரயாகையை அடைவது எப்படி ?
xxxx
10 .பஞ்ச பிரயாகை என்ன தூரத்தில் அமைந்துள்ளன ?
xxxx

Karna Prayag
விடைகள்
1.கர்ணப் பிரயாகை , நந்தப்பிரயாகை , ருத்ரப் பிரயாகை , தேவப் பிரயாகை , விஷ்ணுப் பிரயாகை ஆகிய ஐந்து ஸ்தலங்களை பஞ்சப் பிரயாகை என்று அழைப்பார்கள் .பஞ்ச என்றால் ஐந்து ; பிரயாகை என்றால் நதிகள் கூடும் இடம்; தமிழில் கூடல் என்போம். பெரிய பிரயாகையை திரிவேணி சங்கம், பிரயாக்ராஜ், அலகாபாத் என்று அழைப்போம். மேற்கூறிய ஐந்து பிரயாகைகளும் உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலையில் உள்ளன . நதிகள் கூடும் இடம், நதிகள் கடலில் கலக்கும் இடம், நதிகள் தோன்றும் இடம்– எல்லாவற்றையும் இந்துக்கள் புனிதமாகக் கருதுவார்கள் ; வேறு எந்த கலாசாரத்திலும் இது கிடையாது ; இந்துக்கள் இதே நாட்டில் தோன்றியதால் நீரின் மீது மதிப்பு செலுத்துவார்கள்; நீர் பற்றிய மந்திரங்கள் ரிக் வேதத்தில் உள்ளன .
xxxxx
2. டோலி கங்கா என்ற நதி அலக்நந்தாவுடன் கூடும் இடம் விஷ்ணு விஷ்ணு பிரயாகையாகும். இது நாரதர் தவம் இயற்றிய புனிதத்தலம்.
Xxxx
3.அலக்நந்தாவுடன் மந்தாகினி கலக்கும் இடம் இது .
நந்தப் பிரயாகையில் கோபேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. 24 கதவுகளுடன் பெரிய கோயில்.
Xxxx
4.சூரிய பகவான், கர்னணனுக்கு தெய்வீக கர்ண குண்டலங்களைக் கொடுத்த இடம் இது. அதனால் இப்பெயர்; சுவாமி விவேகாநந்தர் மூன்று வாரங்களுக்குத் தியானம் செய்த புனித இடம்; இங்கே அலக்நந்தாவுடன் பிண்டார் நதி இணைகிறது .
xxxx
5.கர்ணனுக்கும் உமாதேவிக்கும் கோயில்கள் உள்ளன.
Xxxx
6.ருத்ர பிரயாகை என்று பெயர் ; இது சிவன் தாண்டவம் ஆடிய இடம் என்பதால் ருத்ர பிரயாகை எனப்படுகிறது . இங்கு நாரதர் தவம் செய்ததற்கு அடையாளமாக நாரதர் சிலா என்ற பாறை இருக்கிறது . பத்ரிக்கும் கேதாருக்கும் செல்லும் பாதைகள் பிரியும் இடம் இதுதான்
Xxxxx
7. இங்குதான் அலக்நந்தாவுடன் பாகீரதி நதி கலந்து கங்கை என்ற பெயரில் சமவெளியில் காலடி எடுத்துவைக்கிறது. இன்னும் ஒரு சிறப்பு சரஸ்வதி நதி, இங்குள்ள ராமரின் பாதத்திலிருந்து மீண்டும் வெளிப்பட்டு கங்கையுடன் கலக்கிறது . ரகுநாத்ஜி கோவிலில் ‘ராம் குண்டம்’ என்ற இடத்தில் ராமரின் பாதங்கள் இருக்கின்றன. தேவ சர்மா என்ற ரிஷி இங்கு தவம் இயற்றினார் ;அவர் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது. முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்யும் இடம்,. சிவன், காளி, ஹனுமான் கோவில்கள் உள்ளன. இதுதான் ஆழ்வார்கள் பாடிய கண்டம் என்னும் கடி நகர் என்ற திருத்தலம்.
xxxx
8.இங்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமாள் திருத்தலம் இருக்கிறது . 108 வைணவ தலங்களில் ஒன்று.
மூலவர் பெயர் – நீலமேகப்பெருமாள்;
தாயார் – புண்டரீகவல்லி ;
கோவிலுக்குப் பின்னால் அழகான, சிறிய ஹனுமார் இருக்கிறார் ; ராமர், பிரம்மா, தசரதன், பரத்வாஜர் ஆகியோர் வந்த இடம் . தேவப் பிரயாகை என்பது இதுதான்
xxxx
9.ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத் செல்லும் சாலையில் 70 கி.மீ; பத்ரிநாத்துக்குச் செல்லும் வைணவர்கள் , திரும்பி வருகையில் ரகுநாத்ஜி கோவிலுக்கு சென்று வருகிறார்கள். ஆதி சங்கரர் ஸ்தாபித்த மூர்த்தி இது;
Xxxx

10.ரிஷிகேஷிலிருந்து ஒவ்வொரு பிரயாகைக்கும் உள்ள தொலைவு::
விஷ்ணு பிரயாகைக்கு 256 கி.மீ
நந்தப் பிரயாகைக்கு– 190 கி.மீ
கர்ணப் பிரயாகைக்கு- 169 கி.மீ
ருத்ர பிரயாகைக்கு – 140 கி.மீ
தேவப் பிரயாகைக்கு – 70 கி.மீ
—subham—
Tags- பஞ்ச பிரயாகை, Quiz, கர்ணப் பிரயாகை , நந்தப்பிரயாகை , ருத்ரப் பிரயாகை , தேவப் பிரயாகை , விஷ்ணுப் பிரயாகை