Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
சாயிபாபா உருவாக்கிய நிரந்தராக்னியான துனியும் அவரது ஷீர்டி வாசமும்!
ச. நாகராஜன்
ஷீர்டிக்கு வருவதற்கு முன்னால் சாயிபாபா ஔரங்காபாத்திற்கு அருகில் உள்ள ஒரு காட்டில் வசித்து வந்தார். சாந்த்பாய் படேல் என்பவர் ஒரு சமயம் அவரைக் காட்டில் கண்டு பேயோ பிசாசோ என்று பயந்து விட்டார்.
பாபா, அவரை நோக்கி, “நான் பேயும் அல்ல, பிசாசும் அல்ல, வா, என் அருகில் வா” என்றார்.
சாந்த்பாய் பாபாவிடம், “எனது குதிரையை இழந்து நான்கு நாட்கள் ஆகி விட்டன. அதைத் தேடிக் கொண்டு வருகிறேன். அதைக் கண்டுபிடிக்காத வரை எனக்கு உணவே வேண்டாம்” என்றார்.
‘குதிரை இந்தப் பக்கம் வந்ததா, அதை நீங்கள் பார்த்தீர்களா?’ என்று சாந்த்பாய் கேட்க உடனே பாபா தாம் அதை விரட்டவில்லை என்றும் தூரத்தில் உள்ள ஒரு வேலியின் அருகில் மேய்ந்து கொண்டிருக்கிறது
என்றும் கூறினார். அவர் கையைக் காட்டிய திசையில் சென்ற சாந்த்ராம் தனது குதிரையைக் கண்டுபிடித்து அதன் மேல் ஏறி உட்கார்ந்து பாபாவிடம் வந்தார்.
சாந்த்பாயுடன் தூப்கேடா என்ற கிராமத்திற்குச் சென்ற பாபா அவர் இல்லத்தில் வசிக்கலானார்.
ஷீர்டியில் சாந்த்பாயின் மனைவியின் தம்பி மகனுக்கு கல்யாணம் நடக்கவிருந்தது. அப்போது பாபா மாப்பிள்ளை வரிசையுடன் சேரந்து ஷீர்டிக்கு வந்தார்.
ஷீர்டி கிராமத்தின் ஆரம்பத்திலேயே கண்டோபா கோவில் இருக்கிறது.
அது கிராமத்தை விட்டுச் சற்று விலகியும் அடர்த்தியான மரங்களின் அருகேயும் உள்ள கோவில்.
அதைப் பார்த்த பாபா அது தான் வசிப்பதற்கு உகந்த இடம் என்று அதைத் தேர்ந்தெடுத்து அங்கே வசிக்கலாம் என்று அங்கே சென்றார்.
ஆனால் அதைக் கட்டிய மகல்ஸாபதி பாபாவை உள்ளே விடவில்லை.
உடனே பாபா ஷீரடி ஊருக்குள் சென்று கோட் நீம் என்ற தித்திக்கும் வேப்பமரத்தைத் தான் வசிக்கும் இடமாக ஆக்கிக் கொண்டார்.
இரவும் பகலும் அங்கேயே இருக்க ஆரம்பித்த அவர் உணவருந்தும் வேளையில் மட்டும் ஷீரடி ஊருக்குள் சென்று அங்கிருந்த குறிப்பிட்ட் ஐந்து வீடுகளில் எதிரில் நின்று பிக்ஷை கேட்கலானார். அவர்களும் பிக்ஷை அளித்தனர்.
பின்னர் பாபா மழைக்காலங்களில் அங்கிருந்த ஒரு பாழும் மசூதியில்
தங்க ஆரம்பித்தார். அங்கு ஒரு பள்ளத்தைத் தோண்டி அக்னியையும் கட்டைகளையும் போட்டு நிரந்தராக்னியை ஸ்தாபித்தார்.
அன்று அவர் ஆரம்பித்த அந்த அக்னி இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது.
அதற்கு துனி என்று பெயர்.
ஊரில் அவர் யாருடனும் ஆரம்பகாலத்தில் பேசவில்லை. யாருக்கேனும் வியாதி என்றால் அவர்களின் வியாதியைக் குணப்படுத்தி வந்தார். பூச்செடிகளை நட்டு கிடைக்கும் பூக்களை கோவில்களுக்குக் கொடுத்து வந்தார்.
இவரது கீர்த்தி சிறிது சிறிதாகப் பரவ ஆரம்பித்தது.
அவரது அபூர்வ ஆற்றலைக் கண்டவர்கள் அவர் ஒரு பெரிய மகான் என்று உணர ஆரம்பித்து வணங்க ஆரம்பித்தனர்.
நாளடைவில் ஷீர்டியின் பெருமை உலகத்திற்குத் தெரிய ஆரம்பித்தது.
இன்று ஷீர்டிக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று பாபாவின் அருளைப் பெற்று வருகின்றனர்.
Upset Hindus worldwide are seeking official apology from Mondelēz International, “one of Australia’s largest food manufacturers” with “125-year history in Australia”, for non-disclosure of beef in some of its products; and immediate recall of all such items.,
Distinguished Hindu statesman Rajan Zed, in a statement in Nevada today, said that it was shocking for Hindus to learn that majority of its Pascall and The Natural Confectionery Co. products, which they had been eating for years, reportedly contained beef, while beef was not explicitly mentioned under the ingredients listed on the packages/boxes.
Zed, who is President of Universal Society of Hinduism, stated that the majority of its Pascall and The Natural Confectionery Co. products contained gelatine, but the source of gelatine was not mentioned under the “Ingredients” on packages/boxes. In a response to Zed, Raymond Jerard, Consumer Care Consultant of Mondelēz International, wrote: “majority of our Pascall and The Natural Confectionery Co. products do contain gelatine” and we “can confirm that the gelatine we use in our products is derived from beef”.
Consumption of beef is highly conflicting to Hindu beliefs. Cow, the seat of many deities, is sacred and has long been venerated in Hinduism; Rajan Zed points out.
It was a very serious issue for the devotees in Australia and would severely hurt their feelings if they would come to know that they were unknowingly eating beef-laced popular snacks, Zed noted.
Is this how Mondelēz, which claims “We deeply know our consumers”, wanted to follow through its “ambition” of providing “consumers with the right snack, for the right moment, made in the right way”; Rajan Zed wondered.
Zed further said that it was hard to comprehend that why Mondelēz; whose claimed purpose is to “empower people to snack right” with “high-quality snacks that nourish life’s moments, that consumers can feel good about”; did not mention explicitly under the ingredients on the package/box the source of gelatine used in its products.
Now was the time for Mondelēz, whose tagline is “snacking made right” and whose
“Mindful Snacking” strategy included “Providing clear labeling” and “Marketing responsibly in line with ethical standards”; to admit their error of not being transparent enough to mention in clear and simple terms what was inside the package/box so that an ordinary consumer could make right and appropriate choices, Rajan Zed indicated. Moreover, in future, Mondelēz should explicitly list beef in the ingredients on the pack/box when beef was present in the product, Zed added.
Hinduism was the oldest and third largest religion of the world with about 1.2 billion adherents and a rich philosophical thought and it should not be taken frivolously. No faith, larger or smaller, should be mishandled; Zed remarked.
Besides apologizing, Zed urged Mondelēz Australia President Toby Smith and Mondelēz International CEO Dirk Van De Put to recall all food items containing gelatine where source of gelatine was not clearly mentioned; and later replace these with items which markedly declared source of gelatin under the ingredients label.
Gelatine/gelatin is procured from various animal body parts and is usually used as a gelling agent in food (also used for clarification of vinegar, juices and wine). It can be from cows, pigs, fish, chicken, etc.; but there are animal-free and plant-based alternatives to gelatine, like seaweed extracts.
Mondelēz International, Inc.; one of the world’s largest snacking companies, claims to empower “people to snack right in over 150 countries around the world”. With 2024 net revenues of approximately $36.4 billion, it claims to “hold the #1 global position in biscuits (cookies and crackers) and #2 in chocolate”.
Mondelēz Australia, headquartered in Melbourne, is the custodian of iconic brands including Cadbury Dairy Milk, The Natural Confectionery Company, Oreo, Pascall, Olina’s Bakehouse and Philadelphia Cream Cheese. It operates six manufacturing sites in Suttontown (South Australia); Ringwood, Scoresby, and Croydon (Victoria); and Claremont and Burnie (Tasmania).
Date uploaded in Sydney, Australia – 24 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலியாவில் பார்க்க வேண்டிய இடங்கள்: சிட்னி நகர சக்தி கோவில்; லிஸ்கர் கார்ட்ன்ஸ் (Post.13,357)
சென்ற இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது சிட்னி முருகன் கோவில், வெங்கடேஸ்வரா கோவில் நான்டியன் புத்தர் கோவில் முதலியவற்றைத் தரிசித்து எழுதினேன். இப்போதைய விஜயம் மூன்றாவது விஜயம் ஆகும் . புதிய இடங்களைக் காணவேண்டும் என்ற ஆசையில் நேற்று சிட்னி சக்தி கோவிலுக்கும் அதற்கு முதல் நாள் லிஸ்கார் கார்ட்னஸ் என்னும் தோட்டத்துக்கும் சென்று வந்தோம் . இரண்டும் பார்க்க வேண்டிய இடங்கள்; அந்த இடத்தை அடைந்துவிட்டால் அரை மணி முதல் ஒரு மணி நேரம் போதுமானதாகும் .
Lisgar Gardensலிஸ்கர் கார்ட்ன்ஸ்
லிஸ்கார் கார்ட்ன்ஸ் என்பது ஆறரை ஏக்கர் பரப்புள்ள மரங்கள், புதர்கள் நிறைந்த பகுதி ஆகும் . பெரிய ஷாப்பிங் மால் உள்ள இடத்திற்கு அருகில் இருந்தாலும் காட்டுப் பகுதி போலவே உள்ளது
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் மாக்ஸ் காட்டன் என்பவர் இந்த நிலத்தை வாங்கினார் அவருக்கு கமில்லியா மலர்களை மிகவும் பிடிக்கும் ஆகையால் 70 வகை கமில்லியா மலர்ச் செடிகளை வளர்த்தார். இந்த இடம் சம தரை இல்லாமல் மேடும் பள்ளமும் நிறைந்தது; கீழே ஓடைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன சிறிய நீர்வீழ்ச்சியும் இருக்கிறது .
இந்த இடத்தின் சிறப்பு வெறும் மலர்ச் செடிகள் மட்டுமல்ல. பல்லி , ஒணான் வகைகளில் ஒன்று நீரில் வசிக்கும் வகை ஆகும். இதை கிழக்கத்திய வாட்டர் டிராகன் என்பார்கள் மூன்று அடி நீளம் வரை வளரும் ராட்சதப் பல்லி இது. நாங்கள் போனபோது குட்டிகளை மட்டும் கண்டோம்.
சுமார் ஒரு மணி நேரத்துக்குள் சுற்றிப்பார்த்து விடலாம் கானக நடைப் பயணம் செய்ய விரும்புவோருக்கு புதர் வழிப் பாதைகளும் உள்ளன.
***
சிட்னி சக்தி கோவில் மிகவும் சிறியது ; 150 பேர்தான் கோவிலுக்குள் எந்த ஒரு நேரத்திலும் இருக்கலாம். மேலும் மக்கள் வசிக்கும் பகுதியில் கோவில் இருப்பதால் காலையிலும் மாலையிலும் இரண்டு மணி நேரம்தான் கோவிலைத் திறக்க வேண்டும் என்று நகர கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. விழா நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் கூடுதல் நேரம் திறந்திருக்கும்
***
பிஜி என்னும் நாட்டிலிருந்து வந்த இந்துக்கள் 1990 முதல் பிரார்த்தனைக்காக சந்தித்தனர் . 2010- ம் ஆண்டு முதல் தற்போதைய இடத்தில் கோவில் இருந்து வருகிறது .
இதை துர்கா கோவில் என்றும் அழைப்பார்கள் ; முக்கிய சந்நிதியில் சக்தி தேவியும் இரு புறமும் பிள்ளையார், முருகன் சந்நிதிகளும் உள்ளன . சக்திக்கு முன்னால்,மீனாட்சி , சிவலிங்கம் ஆகிய மூ ர்த்திகளும் இருக்கின்றனர் ; இவை உள்ள மண்டபத்துக்கு வெளியே நவக்கிரக சந்நிதி , சிவலிங்கம், அனுமார் சிலைகள் இருக்கின்றன.
பெரிய ம ண் டபம் ஒன்று அய்யப்பன் பூஜைக்குப் பயன்படுத்தப்படுகிறது கோவிலின் சுவர்களில் எல்லா தேவிமார்களும் சுதை உருவத்தில் காட்சி தருகின்றனர்
கோவில் திறக்கும் நேரம் குறைவானபோதும் பக்தர்கள் தொடர்ந்து வருவதைக் கண்டேன்; பலரும் அர்ச்சனைத் தட்டுகளுடன் வந்து அர்ச்சனையும் செய்தனர் ; ஒரே ஒரு குருக்கள் இருந்தார்.
எல்லா முக்கியத் திருவிழாக்களையும் கோவில் கொண்டாடுகிறது .
Date uploaded in Sydney, Australia – 24 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
My Visit to Sydney Shakti Temple and Lisgar Gardens (Post No.15,356)
During my last two visits to Australia, I covered Sydney Murugan Temple, Venkateswara temple and Nantien (Wollongong) Buddhist temple. This is my third visit and so I decided to explore new temples in New South Wales state in Australia. We went to Sydney Shakti temple, also called Durga Temple, yesterday. It is a small temple started by Hindus from Fiji Island country in the 1990s. The present temple building was constructed in 2010. Since it is in a residential area, the opening times are restricted by the local council. It is opened two hours in the morning and two hours in the evening.
In spite of restricted hours, devotees visit the temple in good numbers. I saw a constant flow of devotees entering and leaving the temple. On either side of the tall and attractive main deity Shakti, it has Lord Ganesh and Lord Skanda (Murugan in Tamil). It is a small hall which can accommodate 150 people. All the Hindu festivals are celebrated here. During weekends and festival days the opening hours are extended. It is better to consult the temple website for precise information.
Shiva linga, goddess Meenakshi are also worshipped in the main hall. Devotees come with plates filled with flowers and fruits and do the Archana through the priest there. Outside the main hall there is a shrine with Navagrahas (Nine Planets). In the outer prakara/corridor Hanuman statue is also installed. One big hall is there for Ayyappa Puja.
The temple wall is decorated with different forms of goddesss such as Bhuvaneswari, Visalakshi, Mariamman. One needs just half hour to complete the Darshan / viewing.
In the heart of busy shopping area in Hornsby Shire council in Sydney we have a beautiful gardens spreading over 6.5 acres. It is very near the Westfield shopping mall. It is a woody area bought and developed by Max Cotton about 150 years ago. It is famous for two things:
70 Varieties of Camellia Plants
Water Lizards known as Eastern Dragons
Max Cotton loved camellia flowers and so he planted 70 different varieties of the plants. Now there are 300 such plants.
The day before the temple visit, we went to Lisgar Gardens. Though we saw only few flowers, the woody area with creeks, streams and small waterfalls allowed us to breath fresh air. We could smell the fragrance of the flowers. We also saw the water lizards. The eastern water dragons grow up to 90 CMS. The Hornby Shire council bought these gardens and opened it for public. It looks like a forest and one has to go down and down. Those who are adventurous can take the loop walks and go deeper into the bushes.
The garden is closed at 5 pm and signposted to guide the visitors. A surprising thing in Australia is there are well maintained gardens and woody areas very near the cities. Public are not even allowed to cut native trees even inside their houses.
–subham—
Tags- My visit, London swaminathan, Sydney Shakti temple, Lisgar Gardens, Water Dragons, Lizards, Camellia flowers
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஜனவரி 23 நேதாஜி தினம்!
மாவீரர் நேதாஜி!
ச. நாகராஜன்
பாரதத்தின் அற்புதமான மாவீரர்களில் அண்மைக் காலத்தில் தோன்றி அனைவரையும் அதிசயிக்க வைத்தவர் மாவீரர் நேதாஜி!
அவரது வாழ்க்கை வரலாறு அனைத்து இந்தியர்களாலும் அறியப்பட வேண்டிய ஒன்று. அவரது வரலாற்றை நன்கு படித்து அறிந்தவர்கள் தனக்குத் தெரிந்த அனைவருக்கும் அதை உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டும்.
கல்கத்தாவில் வாழ்ந்து வந்த காயஸ்த குடும்பங்களில் ஒன்று ஜானகிதாஸ் போஸ் குடும்பம்.பிரபாவதி என்ற நற்குண மங்கையை இவர் மணந்தார். இவர்களுக்கு மகனாக சுபாஷ் சந்திர போஸ் 1897ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி பிறந்தார். சுபாஷுக்கு எட்டு மூத்த சகோதர சகோதரிகளும் ஐந்து இளைய சகோதர சகோதரிகளும் இருந்தனர். அதாவது 14 குழந்தைகளில் இவர் ஐந்தாவதாகப் பிறந்தார்.
இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களின் நிறவெறி ஆதிக்கத்தைக் கண்டு அவர் திகைத்தார். எப்படியேனும் ஆங்கில ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்று அவர் துடித்தார்.
மகாத்மா காந்திஜி சுபாஷை வெகுவாக நேசித்தார்.1938ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த வருடம் அவர் தலைவராகத் தொடர்வார் என்று அனைவருமெ எதிர்பார்த்த போது பட்டாபி சீதாராமையா அவரை எதிர்த்து நிற்பார் என்று அறிவிக்கப்பட்டது. மகாத்மா பட்டாபி சீதாராமையாவை ஆதரித்தார்.
மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை 2597. அதில் 1580 வாக்குகளை போஸ் பெற்றார். பட்டாபி சீதாராமையா 1377 வாக்குகளைப் பெற்றார்.
200 வாக்கு வித்தியாசத்தில் போஸ் வென்றார்.
சீதாராமையாவின் தோல்வியைத் தனது தோல்வியாக மகாத்மா கருந்தினார். போஸ் மிகவும் வருந்தி தனது தலைமைப் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
1939ம் ஆண்டு மே மாதம் பார்வர்டு ப்ளாக் கட்சியை அமைக்க அவர் தீர்மானித்தார்.
இதற்கிடையில் ஹிட்லர் போலந்தின் மீது படையெடுத்து செப்டம்பர் மூன்றாம் தேதி இரண்டாம் உலக மகா யுத்தத்தை ஆரம்பித்தான்.
பிரிட்டிஷார் தனது அடக்குமுறையைக் கையாண்டு அவரை கைது செய்தது. சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்ற சுபாஷின் அதிரடி அறிவிப்பைக் கண்டு அரண்டு போன பிரிட்டிஷ் அரசு ஆறு நாள் உண்ணாவிரதத்திற்குப் பின்னர் அவரை விடுதலை செய்தது.
இந்தியாவிலிருந்து தப்ப நினைத்த போஸ் அதன்படியே
1941ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி மௌல்வி ஜியாவுடின் என்று மௌல்வி வேஷம் போட்டவாறே பெஷாவரை அடைந்தார். பின்னர் ஜெர்மனியை அடைந்த அவர் அங்கு ஜெர்மானிய அதிகாரிகளுடன் பேசினார்.
இதற்கிடையில் ஜெர்மனி 1941ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி ரஷியாவின் மீது படையெடுத்தது. இது மிகவும் முட்டாள்தனமான செயல் என்று கருதினார் போஸ்.
1941ம் ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி “ஃப்ரீ இண்டியா செண்டர்” என்ற ஒரு மையத்தை ஆரம்பித்த போஸ் ரேடியோ மூலம் பிரசாரம் செய்வது, இந்திய விடுதலைக்காக சேனை ஒன்றைத் திரட்டுவது ஆகிய இரு நோக்கங்களைக் குறிக்கோளாகக் கொண்டார்.
ஜனகன மண தேசீய கீதமாக அறிவிக்கப்பட்டது. ஜெய்ஹிந்த் என்ற கோஷம் உருவாக்கப்பட்டது. ஒருவரை ஒருவர் பார்க்கும் போது இந்த கோஷம் எழுப்பப்பட்டது. நேதாஜி என்று மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு அழைக்கப்படலானார் சுபாஷ்.
1943ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சிங்கப்பூரில் நடந்த ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தில் இந்திய விடுதலைக்கான தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றார். தற்காலிக ஆஜாத் ஹிந்த் அரசு உருவானது.
மறு நாள் 5ம் தேதி சிங்கப்பூர் டவுன்ஹாலுக்கு எதிரில் இருந்த மைதானத்தில் இந்திய தேசீய ராணுவத்தின் அணிவகுப்பைப் பார்வையிட்டு சல்யூட் மரியாதையை ஏற்றார் நேதாஜி.
ஒன்பது நாடுகள் நேதாஜியின் தற்காலிக அரசை அங்கீகரித்தன.
அக்டோபர் 29ம் தேதி நேதாஜியை டோக்கியோவில் ஜப்பானிய சக்கரவர்த்தி முழு மரியாதையுடன் வரவேற்றார். உலகிலேயே பெண்கள் மட்டும் கொண்ட ஜான்ஸிராணி பெண்கள் படைப்பிரிவை அவர் தொடங்கினார்
1944ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி விடுதலைப் போரின் முதல் சங்கநாதம் முழங்கியது. மார்ச் 18ம் தேதி இந்திய தேசீய ராணுவம் பர்மிய எல்லையைக் கடந்தது. பர்மா வழியே சென்று இந்தியாவைப் பிடிப்பதே நேதாஜியின் நோக்கம்.
தற்காலிக இந்திய அரசின் தலைவராக விளங்கிய அவர் எட்டு மந்திரிகளை நியமித்தார்.
எட்டு முனைகளில் போர் நடைபெற்றது. ஆங்கிலேய சேனை அரண்டு ஓடியது. இன்னும் சில மணி நேரங்களில் இம்பால் வீழ்ந்து விடும் என்ற நிலையில் இயற்கை சதி செய்தது. ஒயாத மழை. ராணுவம் பின்வாங்க உத்தரவிட்டார் நேதாஜி..
ஆனால் 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிலைமை சற்று மாறியது.
பர்மாவில் பிரிட்டிஷ் படைகள் பியின்மனா என்ற இடத்தில் முன்னேறக் கூடும் என்பதை அறிந்த அவர் ரங்கூனை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஜப்பான் சரணாகதி அடைந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி சூரியன் உதயமான போது நேதாஜி பாங்காக்கிலிருந்து சைகோனுக்கு விமானம் மூலம் பயணமானார்.
“தெரியாத இடத்தில் சாகஸம் செய்யப் போகும் பயணம் இது” என்று இந்தப் பயணத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.
ஆனால் 18ம் தேதி காலையில் அவர் விமான விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தியை உலகம் அடுத்த நாள் அறிந்தது. அவருடன் கூடச் சென்ற ஹபீப் அவரது அஸ்தியைப் பெற்றார்.
இது தான் சுருக்கமாக மாவீரரான நேதாஜியின் வரலாறு.
ஆனால் அவர் விமான விபத்தில் இறக்கவில்லை என்ற செய்தியை உலகமே நம்பியது. 2025ம் ஆண்டு முடிய ஏராளமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன!
உலகம் உண்மையான ஆவணங்களை இன்று வரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டே இருக்கிறது.
வாழ்க நேதாஜியின் புகழ்! ஜெய்ஹிந்த்!!
**
குறிப்பு: இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நூலின் சுருக்கம்.
Date uploaded in Sydney, Australia – 23 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற் கடல் கடையும் காட்சி
விஷத்தைக் குடிப்பதற்குத் தயாராக நிற்கும் சிவ பெருமான்
Lord Siva on top
சுவர்ணபூமி bவிமான நிலையத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற் கடல் கடையும் காட்சி
London Swaminathan in Swarnabhumi Airport
வலம்புரிச் சங்கு
விஷத்தைக் குடிப்பதற்குத் தயாராக நிற்கும் சிவ பெருமான்
கடலைக் கடையும் இடத்தில் லண்டன் சுவாமிநாதன்
Thailand is a Buddhist country. There are innumerable Buddha temples; but it had a Hindu past. South Asian countries including Thailand came under the rule of different dynasties at different times. They were all supporters of Hinduism. Ramayana and Mahabharata sculptures and paintings are everywhere.
The name of the airport in Bangkok is Swarnabhumi (Golden Earth) airport, where a huge statue of Churning the Milky Ocean from the Puranas is installed.
If one reads the names of Thai kings, one will find pure Sanskrit names.
If one reads the history of Thai literature, one can find Ramkien (Thai Ramayana) Dhananjai stories. They are copies of Tenali Rama stories of South India. Even the name Dhanajay is Sanskrit.
All the scripts of South east Asian countries have their roots in Brahmi script of India. Some are derived from Pallava Grantha of Tamil Nadu.
The official emblem of the government is Garuda , Vahana of Vishnu. Last ten kings have the title, Rama. Present king is Rama X.
***
The Grand Palace in the capital city has about 200 paintings showing the Ramayana anecdotes. Grand Palace statues have Sanskrit names like Apsaras, Asura Pakshi, Kinnara etc. Figures of Garuda and Naga are in hundreds.
Indra’s name is everywhere. One can see boards or signposts with Indra’s name. I saw Indra’s Vahana Airavata with four heads in road junctions.
Mother Earth worship also has only Sanskrit names such as Dharani, Prithvi, Vasundhara for Earth.
***
Royal Ploughing ceremony done annually which reminds of Ploughing ceremony of Janaka in Ramayana. Ayuthaya (Ayodhya) was previous capital of Thailand.
National Flower of the country is Cassia Fistula. It is used in Ayurvedic medicines and in worship of Lord Siva. In Tamil it is called Kondrai.
Brahmin Priests are officiating the Royal ceremonies Tamil Tiruvempavai is used in Royal palace.
Thai New Year coincides with Tamil New Year Day in April because they are based on Solar movement.
தேசீய சின்னம் கருடன் National Emblem of Thailand Garudan
National Flower Cassia fistula தேசீய மலர் – சிவ பெருமானுக்குகந்த கொன்றை மலர்
–subham—
Tags- Hinduism , in Thailand, Indra, Churning the ocean, Airavata
Date uploaded in Sydney, Australia – 23 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
In the last post “HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-28; இந்துமத கலைச்சொல் அகராதி-28 (Post No.15,317) Date uploaded in London – 28 December 2025” we have covered letter D.
Now we will look at words beginning with letter E
E—WORDS
ஏகாதசி
மாதம் தோறும் இரண்டு ஏகாதசி நாட்கள் வருகின்றன. அமாவாசை அல்லது பெளர்ணமியிலிருந்து வரும் பதினோராவது நாள் ஏகாதசி . ஏகாதச என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் பொருள் 11 . அன்றைய தினம் இந்துக்கள் உபவாசம்/ உண்ணாவிரதம் கடைப் பிடிக்கிறார்கள்; குறிப்பாக வைஷ்ணவர்கள் இதில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள் ; வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமாக உள்ளது . மன்னர்கள் ருக்மாங்கதன், அம்பரீஷன் போன்றோர் ஏகாதசி விரதம் அனுஷ்டித்து அடைந்த பலன்களை புராணங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன.
Ekadasi (ekaadasi)
Ekadasi is the Eleventh day of the lunar fortnight that is sacred to Vishnu. It is a day of fasting and devotion. There is a great deal of literature on Ekadasi Vrata. Two Ekadasi days occur in every calendar month. Orthodox Hindus follow Ekadasi fasting. Vaikunda Ekadasi is the most important one. Kings Rukmangatha and Amabareeha fasted on the Ekadasi days and obtained great benefits according to the Puranas. The eleventh day is calculated from the New Moon and Full Moon Days.
***
ஏகலவ்யன் / ஏகலைவன்
மஹாபாரதத்தில் வரும் சாதாரண மனிதர்களின் கதைகளில் மிக முக்கியமானது ஏகலைவன் கதை . சுய முயற்சியால் ஒருவர் தனக்குத் தானே கற்பித்துக்கொண்டு முன்னேற முடியும் என்பதைக் காட்டும் உலகின் முதல் சம்பவம் இது. குரு என்னும் ஆசிரியர்க்கு மரியாதை காட்டுவதையும் அர்ப்பணம் செய்வதையும் விளக்கும் அரிய சம்பவம் இது. அரச வம்சத்துக்கு மட்டும் வில்வித்தையையும் அஸ்திரங்களையும் கற்பிக்கும் பொறுப்பு துரோணாச்சாரியாருடையது ; ஏகலைவன் என்னும் காட்டுவாசி வில்வித்தையைக் கற்க விரும்பியபோது அதற்கு துரோணர் இணங்கவில்லை. அவனோ துரோணரின் சிலையைச் செய்து அதற்கு முன்னால் வில்வித்தை பயின்று அர்ஜுனனுக்கு நிகராக திறமை பெற்றான் . ஒரு நாய் குரைக்காமல் இருக்க அவன் விட்ட அம்பு அவன் திறமையை வெளிப்படுத்தியது. துரோணர் விசாரணையில் அது ஏகலைவன் செயல் என்று தெரிந்தவுடன் அவனை அழைத்தார்; அவன் துரோணர் தான் தனது குரு என்றவுடன் அவன் இனிமேலும் அம்பு விடாமல் இருப்பதற்காக, கட்டைவிரலைக் குருதட்சிணையாக கேட்டார். அவனும் தயங்காமல் கட்டை விரலைத் வெட்டிக் கொடுத்தான். இதை அர்ப்பண மனப்பான்மையின், குரு பக்தியின் உச்சகட்டம் என்று உலகம் போற்றுகிறது.
Ekalavya
A self taught student and warrior from Nishadas community. Nishadas were forest dwellers. He approached Dronacharya, teacher of Royal princes Pandavas and Kauravas. He refused to teach him because he could teach only Kshatriyas. Ekalavya practised archery on his own but had Drona as his Guru/teacher in his mind. His skill came to light when he shot a dog with an arrow to stop it barking. Drona came to know about it and his enquiry revealed Ekalavya had Drona as his Guru. To stop him competing with the royals, Drona demanded his thumb as Guru Dakshnia (Fees to the teacher). Ekalavya cut off his thumb. His story in Mahabharata is a story of dedication, self teaching and respect for Teacher/Guru.
***
ஏக தந்த
விநாயகரின் 16 முக்கிய நாமங்களில் ஒன்று ஒற்றைக்கொம்பன் / ஏக தந்தன். நாடு முழுதுமுள்ள கணபதி விக்கிரகங்கள், சிலைகளில் யானை முகத்திலுள்ள இரண்டு தந்தங்களில் ஒன்று உடைப்பட்டிருக்கும் வேத வியாசர், மஹாபாரத இதிகாசத்தை எழுதுவதற்காக பிள்ளையாரை அழைத்தபோது, அவர் ஒரு தந்தத்தினை உடைத்து அதை எழுது கோலாகப் பயன்படுத்தினார் என்பது இதன் பின்னாலுள்ள சம்பவம் ஆகும் .
Ekadanta
This is one of the important names of Lord Ganesh. Meaning is One Tusked. All the idols or statues of Lord Ganesh are made with one broken tusk. The story behind this is that he broke one of his tusks and used it as the pen to write the story of Mahabharata dictated by Veda Vysa.
***
ஈஸ்வரன்/ ஈஸ்வரி
இதன் பொதுவான அர்த்தம் கடவுள் ; ஆயினும் பெரும்பாலும் சிவன் பெயர்கள் ஈஸ்வரன் என்றும், பார்வதியின் பெயர் ஈஸ்வரி என்றும் முடியும் ; ஏனைய கடவுளர்களின் பெயர்களில் இது அரிதாகவே இடம்பெறும். உதாரணம் – ஏகாம்பரேச்வரர் , சுந்தரஸ்வரர், சோமேஸ்வரர் , ராமேஸ்வரர் , பரமேஸ்வரர் ; காமேச்வரீ , பரமேஸ்வரீ.
(சனீஸ்வரன் என்பது தவறு; சனைச்சரன் என்றால் மெதுவாகச் செல்வோன் என்று பொருள்; நவக்கிரககங்களில் மிக மெதுவாகச் சூரியனைச் சுற்றும் கிரகம் சனி)
Eswar / an
The word means God. The word is added to Siva’s different forms. Very rarely added to other gods as suffix. Example- Parameswar/an, Sundareswar, Someswar, Rameswar
Eswari
It means Goddess generally used as suffix to Parvati, Siva’s wife.
Example – Kameswari, Parameswari
***
ஏகநாதர்
மஹாராஷ்டிரா சாது, சன்யாசிகளில் புகழ்பெற்றவர் ஏகநாதர் . விட்டல் என்னும் பண்டரீபுர பாண்டுரங்கனின் மீது கவி பாடியவர். பக்தி இயக்கத்தில் ஈடுபட்ட இவர், இறைவனுக்கு முன்னால் ஜாதி குலம் என்ற வே று பாடில்லை என்ற செய்தியையும் பரப்பினார். பைதான் நகரில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஷாட ஏகாதசி அன்று பிறந்தார் . மராத்தி மொழியிலும் சம்ஸ்க்ருதத்திலும் பாகவதம், ராமாயணம் ருக்மிணி ஸ்வயம்வர கதைகளை எழுதினார். இவருடைய தந்தை பெயர் சூர்யநாராயணன், தாயார் பெயர் ருக்மிணிபாய்; அவர் கிரிஜா பாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார் . இவருடைய குரு நாமதேவர் , ஜனார்த்தன சுவாமி ஆகியோர் ஆவர் .
Eknath/a
One of the great saints of Maharastra. His Gurus wereGuru – Janardan Swami, Namdev. Birth Date – Ashadha Ekadashi, 1533. His father was Suryanarayan and mother was Rukminibai. He married Girijabai. He was born at Paithan and spread Bhakti/devotion and equality. As a poet he composed devotional hymns in vernacular Marathi. His literary contributions include Eknathi Bhagavata, Bhavarth Ramayan. He also composed Rukmini Swayamwar haastamalk in Sanskrit. He worshipped Vittal of Pandharpur.
***
ஏழுமலை
திருப்பதி- திருமலையில் குடிகொண்டுள்ள பெருமாளின் பெயர் களில் ஒன்று ஏழுமலை /யான். ஏழு குன்றுகளைக் கடந்து சென்று பெருமாளை வழிபடுவதால் அவருக்கு மலையப்பன் , ஏழுமலை என்ற பெயர்களும் வேங்கடாசலபதி, பாலாஜி என்ற பெயர்களும் உண்டு. தமிழர்கள், குழந்தைகளுக்கு ஏழுமலை என்று பெயர் சூட்டுகிறார்கள் (மதுரையில் என்னுடன் தினமணி பத்திரிகையில் சீனியர் சப் எடிட்டராகப் பணியாற்றியவர்களில் ஒருவரின் பெயர் ஏழுமலை. அவர் யாதவர் .
Elumalai
Meaning is Seven Hillls. The seven hills stand for Tirupati- Tirumala Hills where the richest temple of Balaji Venkaeswara is located. Tamils use this as personal name.
***
இளங்கோ
ஐம்பெரும் தமிழ்க்காப்பியங்களில் மிகவும் புகப்பெற்றது சிலப்பதிகாரம். அதை எழுதியவர் இளங்கோ ; அவர் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்று சொல்லுவர் ; சிலப்பதிகார நிகழ்ச்சிகள் சங்க காலத்தில் நடந்தாலும் சிலப்பதிகார நடையும் மொழியும் பிற்காலத்தியது என்பதே ஆராய்ச்சியாளரின் துணிபு ; ஏராளமான ஸம்ஸ்க்ருதச் சொற்களையும் புராணக்கதைகளையும் உள்ளடக்கியது சிலப்பதிகாரம் .
Elango
Great Tamil poets who composed Tamil epic Silappadikaram Though the story of the epic is from second century Tamil Nadu, the language of the poem is from fifth century CE or later.
***
எல்லோரா குகைக்கோவில்கள்
எல்லோரா குகைக்கோவில்கள் உலக அதிசயம் ஆகும் . முப்பதுக்கும் மேற்பட்ட குகைக் கோவில்களில் இந்து, பெளத்த, சமண மத சிலைகள் உள்ளன. இங்குள்ள கயிலாசநாதர் சிவன் கோவில் பொறியியல் அறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது; காரணம் ? மேலேயிருந்து கோவில் கட்டத்துவங்கி கீழே அடித்தளம் வரை சென்று அமைத்துள்ளனர் ;இரண்டாவது அங்கு கீழ்மட்டம் வரை தோண்டப்பட்ட கற்களின் அளவும் அவை அங்கு இப்போது இல்லாமலிருப்பதும் ஒரு அதிசயம் ஆகும். அற்புதமான சிற்பங்களையும் ஓவியங்களையும் கொண்ட இந்த சிவன் கோவில் மஹாராஷ்டிர மாநிலத்தில் அவுரங்காபாத் அருகே அமைந்துள்ளது. ராஷ்ட்டிரக்கூட மன்னர் காலத்தில் துவங்கிய குகைக்கோயில் பணிகள் யாதவ வம்ச ஆட்சி வரை நடந்துள்ளது ;அதாவது பொது ஆண்டு 600- ல் துவங்கி ஆயிரமாவது ஆண்டுக்கும் பின்னால் வரை செல்கிறது சுமார் 600 ஆண்டுகள் குகைக்கோவில்களைத் தோண்டியுள்ளனர்.
Ellora
Cave temples in Maharashtra featuring Hindu, Buddhist and Jain deities. The constructions began around 600 CE and contiuted for another 500 years. The Kings of Rashtrakuta Dynasty and Yadava dynasty were behind these excavations. Of all the temples, chariot shaped
Kalasanatha Temple of Lord Siva is the most famous one. The construction of these temples are considered engineering marvel. Over 30 caves are accessible to generalpublic. The caves are near Aurangabad.
***
ஏகாம்பரேஸ்வரர் சிவன் கோவில்
காஞ்சீபுரத்தில் நூற்றுக்கும் மேலான கோவில்கள் இருந்த போதும் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்து நிற்பது ஏகாம்பரேஸ்வரர் சிவன் கோவில்தான் . பதினோரு நிலை ராஜ கோபுரத்தின் உயரம் 172 அடி.பொது ஆண்டு 600 முதல் விஜயநகரப் பேரரசு காலம் வரை ஆயிரம் ஆண்டு வரலாறு உடையது. ஆம்ர என்றால் மாமரம். அதன் கீழ் சிவலிங்கத்தைப் பார்வதி வழிபட்டதால் ஏக / ஒரு மாமரம் அடியில் வீற்றிருக்கும் சிவன் என்ற பெயர் பெற்றது; தல விருட்சமான மாமரத்தை இன்றும் காணலாம் . நல்ல சிலைகளும் கல்வெட்டுகளும் நிறைந்த கோவில் . பஞ்சபூதத் தலங்களில் பூமியைக் குறிக்கும் பிருத்வீ தலம் இது, ஆயிரம் கால் மண்டபம், 1008 சிவலிங்கங்கள் ,இசைத்தூண்கள் முதலியன இதற்கு மேலும் புகழ் சேர்க்கின்றன எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் சிவலிங்கத்தின் மீது சூரிய கிரணங்கள்படும்படி கோவிலைச் சிற்பிகள் அமைத்துள்ளனர் இது ஒரு பொறியியல் அதிசயம். அப்போது கோவிலின் முக்கிய விழாவான பங்குனி உத்தர விழா கொண்டாடப்படுகிறது.
Ekambareswar
Famous Siva temple in Kanchipuram in Tamil Nadu. It has a majestic 11 storey tower and the huge temple has good sculptures and historical inscriptions. The construction began around 600 CE and continued to Vijayangaar period of 15th century. One of the Pancha Bhuta shrines representing Prithvi/Earth.
The 172 feet Raja Gopuram is a marvelous piece of architectural wonder built by the Vijayanagara empire.The “Sthala Vriksham” or temple tree ,a mango tree under which Kamakshi worshipped the Shiv Lingam is still present here. The other significant features of the temple include the “Aayiram Kaal Mandapam” or the 1000 pillared hall, 1008 Shiv Lingams that adorn the inner walls of the temple and the ten musical pillars at the inner corridor of the temple. Another architectural brilliance is that the sun rays falls directly on the Shiva linga every 19, 20 and 21 of the Panguni month (March-April) which is hen the most important festival of the Ekambareswarar Temple is celebrated, the Panguni Uthiram.
***
எலிபண்ட்/ யானை
இந்துமதத்தில் யானைக்கும் பசுமாட்டுக்கும் முக்கிய இடம் உண்டு . கோவில்களிலும் மடங்களிலும் கோ (பசு) பூஜை , கஜ (யானை) பூஜை செய்கின்றனர் ; கணபதியின் முகமும் பிரணவம் என்னும் ஓம்கார வடிவமும் யானையின் துதிக்கையில் உள்ளது ; யானையின் மீது பவனி வரும் தகுதி உற்சவ மூர்த்திகளுக்கும் மடாதிபதிகளும் அரசர்களுக்கும் மட்டுமே இருக்கிறது. இப என்னும் ரிக்வேத ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்ததே எலிபண்ட் என்னும் ஆங்கிலச் சொல் ஆகும் . யானை வளர்க்கும் கலையை இந்துக்கள் மேம்படுத்தி கஜ சாஸ்திர நூல்களையும் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிவைத்துள்ளனர் . மகாபாரத கால அச்வத்தாமா முதல் பிரபல யானைகளின் பெயர்களும் இந்துக்களின் வரலாற்றில் இடம்பெறுள்ளன.
Elephant
Elephant is one of the sacred animals in Hinduism. Lord Ganesh is elephant faced and the temples and Mutts do Go Puja (worship of Cow) and Gaja Puja (worship of elephant). Hindus developed the scientific study of elephants and have written Gaja Sastra. Famous names of elephants are available from Mahabharata period. The trunk of the elephant represents the Pranava- Om. Rig Vedic Sanskrit word IBHA is the root of the English word Elephant.
***
எமுஷா
இந்தச் சொல் வராகத்தைக் குறிக்கும். ரிக் வேதம் முதல் கையாளப்படும் இச்சொல் சுமேரிய, ஆப்ரிக்க மொழிகளிலும் உளது ரிக் வேதத்தில் இந்திரன் வராகத்தைக் கொன்றதாக ஒரு கதை உள்ளது. சதபத பிரமாணம் முதலிய நூல்களில் வராக அவதாரத்தின் மூலக்கதை இருக்கிறது.
Emusha (Boar)
A strange name in Rig Veda representing Varaha/Boar. Later in the Puranas we have Varaha Avatara of Vishnu.
Sanskrit dictionary
Emūṣa (एमूष):—[from emuṣam] m. Name of the boar which raised up the earth, [Śatapatha-brāhmaṇa xiv, 1, 2, 11; Kāṭhaka]. Interesting fact about this word is similar sounded words exist in Sumeraan and African languages.
–subham—
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-29; இந்துமத கலைச்சொல் அகராதி-29 , E letter words, Emusha, Ekadasi, Elango, Ekalavya. Part 29
தர்மத்தின் சாரத்தை என்னிடம் கேள்; கேட்டபின் அதை சரியாகப் புரிந்து கொள்!
ஒரு காரியமானது தனக்கு ப்ரதிகூலமாக இருப்பதாக எண்ணும் (கஷ்டத்தைத் தருவதாக எண்ணும்) ஒருவன் அதே காரியத்தை மற்றவர்களுக்குச் செய்யக் கூடாது.
இதுவே தர்மத்தின் சாரம்!
மேலோர்களால் அதிக மதிப்புடையதாக கருதப்படுவது எது?
ந காமான்ன ச சம்ரப்பான்ன த்வேஷாத்தர்மமுத்சுஜேத் |
தர்ம ஏவ பரோ லோகே இஹ வாப்யாஸ்ரய: சதாம் ||
காமத்தாலோ அல்லது மூர்க்கத்தனமான முயற்சியாலோ அல்லது வெறுப்பாலோ ஒருவன் தர்மத்தை மறுக்கக் கூடாது. இந்த உலகில் மேலோர்களால் தர்மமே அதிக மதிப்பை உடையதாகக் கருதப்படுகிறது.
தர்மம் எட்டு விதம்!
யக்ஞாத்யயனநதானானி தப: சத்யம் க்ஷமா தயா |
அலோப இதி மார்கோயம் தர்மஸ்யாஷ்டவித: ஸ்ம்ருத: ||
தர்மம் எட்டு வழிகளில் இருப்பதாக விளக்கப்படுகிறது.
யக்ஞம் செய்தல், கற்றல், தானம் வழங்கல், தவம், சத்யம் கடைப்பிடித்தல், பொறுமை, தயை, பற்றில்லாமை ஆகிய இந்த எட்டுமே தர்மத்தின் லக்ஷணங்களாகும்.
தர்மத்திலிருந்தே அனைத்தும் வருகிறது!
தர்மாத்தர்த: ப்ரபவதி தர்மாத்ப்ரபவதே சுகம் |
தர்மேண லபதே சர்வம் தர்மசாரமிதம் ஜகத் ||
தர்மத்திலிருந்தே செல்வம் வருகிறது. தர்மத்திலிருந்தே புண்யம் கிடைக்கிறது. அனைத்துமே தர்மத்திலிருந்தே கிடைக்கப் பெறுகிறது. உண்மையில் இந்த உலகமே தர்மத்தின் சாரம் தான்!
Date uploaded in Sydney, Australia – 22 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தாய்லாந்தில் நான் கண்ட அதிசய பூமாதேவி வழிபாடு; அதர்வண வேத பூமி சூக்த எதிரொலி !
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமா தேவியை இந்துக்கள் வழிபட்ட செய்தி அதர்வண வேதத்தில் உள்ளது. பூமி சூக்தம் / பிருத்வீ சூக்தம் என்னும் சம்ஸ்க்ருத கவிதை பூமியையும் அதன் செல்வத்தையும் அற்புதமாக வருணிக்கிறது புறச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்திய முதல் கவிதை அது ; இந்த பூமா தேவியை தாய்லாந்து மக்களும் தென்கிழக்காசிய நாடுகளின் மக்களும் வழிபடுகின்றனர். தோட்டங்களிலும் தெருச் சந்திப்புகளிலும் புத்த சமயக் கோவில்களிலும் பூமா தேவி சிலைகளும் பொம்மைகளும் உள்ளன அதற்கு பெளத்த மதத்தினர் பயபக்தியுடன் ஊது பத்தி ஏற்றி வழிபடுகின்றனர்.
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து , பாங்காக் பாலஸ் என்னும் அரண்மனை 15 நிமிட நடைதான் என்று ஹோட்டல் பெண்மணி சொன்னார் ; நாங்களும் நடை கட்டினோம். ஒரு சாலைச் சந்திப்பில் இளம் சிட்டு களும் இளைஞர்களும் ஒரு சிலையைச் சுற்றிக் கூட்டமாகக் கூடி இருந்தனர். அது என்ன சிலை என்று வியப்புடன் அருகில் சென்றோம்; அங்கு பலரும் போட்டி போட்டுக்கொண்டு ஊதுபத்தி ஏற்றிக் கொண்டிருந்தனர்; பலர் பூச்செண்டுகளை சமர்ப்பித்தனர் என்ன சிலை என்று கேட்டபோது மதர் எர்த் = அன்னை பூமி= பூமா தேவி என்றனர் ; எங்களுக்கு ஒரே வியப்பு.
கொஞ்ச நேரத்தில் அரண்மனையை அடைந்தோம் அங்கும் ஒரு மண்டபத்தில், பூமா தேவியைக் கண்டோம் ; பாங்காக் நகரினைவிட்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு விமானத்தில் ஏறும் முதல் நாள் ௭-௧-௨௦௨௬ல் வேறொரு பெரிய தங்க புத்தர் கோவிலுக்குச் சென்றோம் அங்கும் பூமாதேவியைத் தரிசித்தோம் ; இவ்வாறு மும்முறை அவளைத் தரிசித்தவுடன் தாய் மக்களுக்கு ஏன் அவள் மீது இவ்வளவு அன்பு என்பதை படித்து அறிந்தேன்.
***
புத்தமதக் கதை என்ன?
புத்த பகவான் போதி / அரச மரத்துக்கு அடியில் தவம் செய்து கொண்டிருந்தாராம்; அப்போது அவர் தவம் வெற்றி பெற்றால் தனக்கு ஆபத்து என்று உணர்ந்த மாரன் என்னும் துஷ்ட தேவதை அவருடைய தவத்தைக் கெடுக்க அவரைத் தீண்ட வந்தான் . உடனே பூமாதேவி புத்தருக்கு மேலே நின்று தனது நீண்ட தலை முடியிலுள்ள நீரைப் பிழிந்தாள்; அந்த நீர் மாரனை அடித்துக் கொண்டு சென்றுவிட்டது என்பது பெளத்தர்கள் சொல்லும் கதை .
பூமா தேவி ஏன் வந்தாள்? புத்த பகவானின் கை காட்டும் முத்திரைகள் பல; அதில் ஒன்று பூமி ஸ்பர்ச முத்திரை ; புத்தர் இந்த பூமி ஸ்பர்ச முத்திரையால் பூமியைத் தொட்டவுடன் அவள் வந்தாள் என்பது விளக்கம்.
அதர்வண வேத சொற்கள்
என்னுடைய விளக்கம் என்ன வென்றால் இந்தக் கதைகளுக்கு புராதன பெளத்த புனித நூல்களில் ஆதாரம் இல்லை ; இவைகளுக்கெல்லாம் அதர்வ வேத பூமா தேவி வருணனையும் கங்காதேவி பற்றிய புராதனக் கதைகளும் காரணம்.; தாய் லாந்தில் பூமாதேவி பற்றிய எல்லா சொற்களும் தூய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ; அவை அனைத்தும் அதர்வண வேதத்தில் இருக்கின்றன. .அவைகளைக் காண்போம்.
தாய்லாந்தின் முக்கிய அரசியல் கட்சியான ஜனநாயகக் கட்சியின் சின்னமும் தண்ணீர் வாரியத்தின் சின்னமும் இந்த தேவிதான் .
Phra Mae Thoranee
Mae Thoranee Vasudhara, Phra Mae Thorani, Prithvi, Bhumi
தரணி, வசுந்தரா, பூமி, ப்ருத்வீ, வசுதரா
மா = மாதா
ப்ரா= ஸ்ரீ
மாரன்- காம தேவன், மன்மதன் ; ஆசைகள்
Vasundharā (वसुन्धरा).—A name for mother earth meaning “she who has very fertile soil and unlimited wealth”.Vasuṃdharā (वसुंधरा).—The earth; नानारत्ना वसुंधरा (nānāratnā vasuṃdharā); R.4.7; वसुंधरा काल इवोप्तबीजा (vasuṃdharā kāla ivoptabījā) Ś.6.24.
Dharaṇi (धरणि) or Dharaṇī (धरणी).—f. [dhṛ-ani vā ṅīp]
1) The earth; लुठति धरणिशयने बहु विलपति तव नाम (luṭhati dharaṇiśayane bahu vilapati tava nāma) Gītagovinda 5.
2) Ground, soil.
***
Atharva veda says
” Mata Bhumi putroham prithivyah ” (माताभूमिपुत्रोहंपृथिव्या🙂 Meaning “Earth is my mother I am her son”.
There are scores of other verses that glorify Mother Earth. The hymn of these verses is known as “Prithivi Sukta ” in AtharvaVeda .In these verses, prithi is described as vasudhara or vasudha (Possessor of wealth).
பூமா தேவியைப் புகழந்து அவளுக்குத் தாயார் என்று பெண்ணின் உருவம் கொடுத்ததும் இந்துக்கள்தான் ; பூமியின் செலவச் செழிப்பையும் புறச் சூழல் மகிமையையும் முதலில் எடுத்துரைத்தவும் இந்துக்கள்தான். வெள்ளைக்காரர்களை கூட அதர்வண வேதத்துக்கு கொடுக்கும் தேதி மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னந்தியது என்பதாகும்; நாமோ ஆவை மனித இனம் தோன்றியது முதல் அவை வானத்தில் ஒலி ரூபத்தில் இருக்கிறது என்று சொல்கிறோம்.
மாரன் (காம தேவன்; ஆசைகளின் ஒட்டுமொத்த உருவம் ); அன்னை பூமியும் புத்தரும்
ஜனநாயகக் கட்சியின் சின்னமும் தண்ணீர் வாரியத்தின் சின்னமும்
***
லண்டன் சுவாமிநாதன் புஸ்தகம் :
அதர்வண வேத பூமி சூக்தம்
சொல்லும் வியப்பான செய்திகள், லண்டன் சுவாமிநாதன்
—subham—
Tags- தாய்லாந்து, பூமாதேவி வழிபாடு, மதர் எர்த் , புத்தர், பெளத்த மதக் கதை , பாங்காக் நகரம் , மாரன், பூமி ஸ்பர்ச முத்திரை, லண்டன் சுவாமிநாதன், படங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2026 ஹெல்த்கேர் ஜனவரி இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!
2026ம் ஆண்டில் l……
உடல்நல மேம்பாட்டிற்கான அருமையான பரிந்துரைகள்!!
ச. நாகராஜன்
2026ம் ஆண்டு உற்சாகமாகப் பிறந்து விட்டது. உலகம் முழுவதும் கொண்டாட்டம் தான்!
உடல்நல மேம்பாட்டிற்கான பரிந்துரைகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.
அவற்றில் சில இதோ:
உடல்பயிற்சி செய்க
சீராக உடல்பயிற்சி செய்வது உடல்நலத்தையும் மனநலத்தையும் சீராக்குகிறது. செண்டர்ஸ் ஃபார் டிஸீஸ் கண்ட்ரோல் (Centers for Disease Control – CDC) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி 1)உடல்பயிற்சியானது உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வழி வகுக்கிறது,
2)இதய சம்பந்தமான நோய்கள் பற்றிய அபாயத்தை நீக்குகிறது,
போதுமான நீரைப் பருகாவிடில் உங்கள் உடல் சோர்வடையும். கவனம் சிதறி விடும். ஆகவே ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 8 டம்ளர் நீரை அருந்த வேண்டும்.
உங்கள் உடல்நலத்தைப் பற்றி சீராக ஆய்வு செய்க
Fitness Tacking காலத்திற்கேற்ற அவசிய ஆய்வாக ஆகி விட்டது. இதற்கான பல APPS உங்கள் போனில் உள்ளன; ஸ்மார்ட் வாட்சிலும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி நீங்கள் நடைபயிற்சியில் எத்தனை அடிகள் எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று கண்காணிக்கலாம். உங்கள் இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் அளக்கலாம்; கண்காணிக்கலாம். ஒரு சிறிய நோட்புக்கில் இவற்றைப் பதிவு செய்து கொள்ளலாம். தேவையெனில் உடனே மருத்துவரை அணுகலாம்.
மல்டிவிடமின் சாப்பிடுங்கள்
சீரான உணவுத் திட்டம் இருந்தபோதும் கூட சில சமயம் அவசரத்தையும் பல்வேறு நெருக்கடியான வேலைகளைக் கருதியும் நாம் சத்தான உணவை மேற்கொள்ள முடிவதில்லை. ஆகவே டாக்டர்களின் பரிந்துரையின் படி மல்டிவிடமின் சாப்பிடலாம்.
பணி செய்யும் போது 30 நிமிடம் நிற்கப் பழகுங்கள்
வேலை, வேலை, வேலை! சாப்பிடக் கூட மறக்கும்படியான அழுத்தம். உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை கொலம்பியா பல்கலைக்கழகம் மேற்கொண்டது. அது நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது உடல்நலத்தைப் பாதிக்கிறது என்பதைக் கண்டறிந்து பணி செய்யும் போது அரைமணி நேரத்திற்கு ஒருமுறை நில்லுங்கள் என்கிறது. சில அடிகள் நடக்கவும் செய்யலாம்.
இயற்கையோடு இயைந்து பழகுங்கள்
இயற்கை பல உடல் மற்றும் உள்ள நோய்களைத் தீர்க்க வல்லது. முடிந்தபோதெல்லாம் இயற்கை வனப்பைக் காணச் செல்லுங்கள். உற்சாகமான மனநிலையைப் பெறலாம். புத்துணர்ச்சி பெறலாம்.
மூலிகைகள், கீரைகளை உணவில் சேருங்கள்
இயற்கை தந்த கொடையான மூலிகைகள் மற்றும் கீரைகளை முடிந்த அளவு உணவில் சேருங்கள்.
தேவையான அளவு ஆழ்ந்த உறக்கம் தேவை
குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் நன்கு உறங்க வேண்டும்.போன், கம்ப்யூட்டர், டிவி ஆகியவற்றை ஒரு மணி நேரம் முன்னாலேயே மூடி விட்டு உறங்கப் பழகுங்கள்.
ஆர்கானிக் உணவைச் சேருங்கள்
நன்கு பயிரிடப்பட்ட ஆர்கானிக் உணவு வகைகளை உணவில் சேர்ப்பதில் குறியாக இருங்கள்.
நன்றி பாராட்டுங்கள்
உங்கள் வாழ்வை வளமாக்க உதவும் அனைத்து குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சமூகத்தில் இணைந்து வாழும் அண்டை அயலார் ஆகியோரிடம் நன்றி பாராட்டத் தவறாதீர்கள். ஒரு டயரியில் குறித்து வைத்துக் கொண்டு அனைவரையும் பாராட்டப் பழகுங்கள்.
புத்தகம் படியுங்கள்
டிவி, கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பார்ப்பதை விட்டு விட்டு நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்.
அதிக பழவகைகளைச் சேர்த்து சாப்பிடுங்கள்
நல்ல பழங்களையும் புதிதாக பயிரிடப்பட்ட கறிகாய்களையும் உணவுத் திட்டத்தில் சேருங்கள் குளிர்சாதனப்பெட்டியில் பழைய உணவு வகைகளைச் சேர்த்து வைத்து சாப்பிடுவதைத் தவிருங்கள்.
ஜீனியைக் கட்டுப்படுத்துவது உங்கள் எடையைச் சீராக்கும். அனைத்து சத்துணவு உட்கொள்ளலையும் பயன்படச் செய்யும். இதை ஒரு குறிக்கோளாக வைத்து சர்க்கரை வேண்டாம் என்று தைரியமாகச் சொல்லி அதைத் தவிர்த்து விடுங்கள்.
தியானம் செய்க
தியானத்தின் பலன்களைப் பற்றி அன்றாடம் வெளிவரும் செய்திகளைப் படித்தாலேயே போதும் அது எவ்வளவு இன்றியமையாதது என்பதைத் தெரிந்து கொள்ள! சில நிமிட தியானம் உங்கள் மன ஆற்றலை மேம்படுத்தும். உடலை வளப்படுத்தும்.
இசை கேட்டு இன்புறுக
சங்கீத சௌபாக்கியம் என்றும் குன்றாத நல் பாக்கியம். உங்கள் கவலையையும் மனச்சோர்வையும் போக்க வல்லது இசை. தேர்ந்தெடுத்த இசைப் பாடல்களைக் கேட்டு மகிழ்வதை அன்றாடப் பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
குடும்பத்தினரிடமும் நண்பர்களுடனும் பழகுங்கள்
நெடுநேரம் தனியே தனித்திருப்பதை விட்டுவிட்டு குடும்பத்தினருடன் அளவளாவுங்கள். நண்பர்களைச் சந்திக்க மறக்காதீர்கள்.
மினரல்கள் தேவை
சில மினரல்கள் நல்ல உடல்நலத்தைக் கொள்வதற்கு அவசியம் தேவை. கால்சியம் மற்றும் மக்னீஷியத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். உங்கள் குடும்ப மருத்துவரிடம் கலந்தாலோசித்து தேவையான மினரல்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
நல்ல பொழுதுபோக்கு தேவை
கிரிக்கெட், டென்னிஸ் செஸ் – ஏதோ ஒரு பொழுதுபோக்கு தேவை. உங்களுக்குப் பிடித்த விஷயம் ஒன்றில் மனதை ஈடுபடுத்துங்கள்.
வாழ்க்கையே உற்சாகமயமாக இருக்கும்.
அன்றாட வேலைகளைத் திட்டமிடுங்கள்
பரபரப்புடன் ஓடி ஓடி வேலை செய்யாமல் அன்றாடப் பணிகளைத் திட்டமிடுங்கள். பொருள்களை அதனதன் இடத்தில் வைத்துப் பராமரியுங்கள். நேரமும் மிச்சமாகும்; படபடப்பும் குறையும்.
என்ன நண்பர்களே! 2026க்குத் தயாரா? உடல்நலமும் மன நலமும் மேலோங்கட்டும்.