ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 13 (Post 14,136)

Written by London Swaminathan

Post No. 14,136

Date uploaded in Sydney, Australia – 24 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

சிரிக்கும் பறவை கூகாபர்ரா ;கொண்டையுள்ள காக்காட்டு; தமிழ்ப் பெயருள்ள கோமாளிப் பறவை !

EMU BIRDS

ஆஸ்திரேலியாவின் வினோத விலங்குகளான கங்காரு, வல்லபி, கோவாலா, பிளாட்டிபஸ், எகிட்ணா, ஓபோஸ்ஸம் , பண்டிகூட் பற்றிக் கண்டோம் . இதே போல பறவைகளிலும் விநோதப் பறவைகள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே வசிக்கின்றன. அருகாமையிலுள்ள நியூகினி, நியூசிலாந்து ஆகியவற்றுக்கும் சிலர் கொண்டு சென்றதால் அங்கும் காணக்கிடக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் மரம் இல்லாத பகுதிகள் பாலைவனமும் நகரின் மையப்பகுதி மட்டுமே. ஆகையால் உயர்ந்த — மிக உயர்ந்த – மரங்களில் பறவைகள் சுகமாக வசிக்கின்றன. பேட்டைக்குப் பேட்டை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளை ரிசர்வ் என்று போர்டு போட்டிருப்பார்கள்; பூங்காங்களும் உண்டு ;ஆகையால் பறவைகளை —வண்ண வண்ண கிளிகள் , மிக மிக சிறிய சிட்டுக்குருவிகள் கூக்கபரராக்கள், புறாக்கள் ஆகியவற்றைக்  காணலாம். காக்காட்டு  என்ற வெள்ளைப் பறவை மஞ்சள் கொண்டையுடன் அழகாகக் காட்சி தரும். ஆனால் யாருக்கும் பிடிக்காது; அதிக இரைச்சல் உள்ள பறவை. இந்திய காகங்கள் போல எங்கும் திரியும்  இவை தவிர கொண்டையுள்ள புறா, புஷ் டர்கி எனப்படும் வான்கோழி ஆகியவையும் எங்கும் திரியும்  பறவைப்   பிரியர்களுக்கு சொர்க்க பூமி இது..

வீட்டுத் தோட்டங்களில் பறவைகளுக்கு இரை போட தனியே சின்னப் பானைகளைத் தொங்க விட்டிருப்பார்கள்; அதில் தானியங்களைப் போட்டால் வண்ணக்கிளிகள் நிறைய வருகின்றன. ஐபிஸ் எனப்படும் எகிப்திய கொக்குகளும் , கடலோரமாக பெலிகன், கடற் கழுகுகளும் எப்போதும் இருக்கும். எல்லா ஏரிகளிலும் வாத்து, குள்ள வாத்து ஆகியவற்றையும் காணலாம். பறவைகள் பற்றி அறியாதோரும் இருபது வகைப் பறவைகளையாவது தினமும் பார்த்துவிடுவார்கள். ஆஸ்திரேலியா முழுதும் இவை வசிக்கின்றன

****

சிற்சில பறவைகளை மட்டும் காண்போம்


எமு

எமு என்னும் பறவைகள் மிகப்  பெரியவை; ஆஸ்திரேலியாவுக்கே உரித்தான பறவை. இதனால் கங்காருவுடன் இதையும் ஆஸ்திரேலிய தேசீய சின்னத்தில் காணலாம் இந்தப் பறவைகளை இப்பொழுது இந்தியா உள்பட பல நாடுகளில் பண்ணைகளில் வளர்க்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான டாஸ்மேனியா தீவிலிருந்து எல்லா எமு பறவைகளையும் வெள்ளைக்கார ஆக்கிரமிப்பாளர்கள் கொன்று குவித்ததால் அங்கு எமு பறவைகள் அறவே அழிந்துவிட்டன . உலகில் மிகப்பெரிய பறவை ஆஸ்ட்ரிச். அதற்கு அடுத்த பெரிய பறவை எமு.

***

கூக்காபர்ரா என் சிரிக்கிறது ?

இவை மீன்கொத்தி வகைப் பறவைகள் ; பாம்பு, பல்லி முதல் சிறு பூச்சிகள் வரை எல்லாவற்றையும் தின்னும். விக்கல் எடுப்பது போல சப்தம் போடும்; இறுதியில் ஹாஹாஹா என்று முடியும்  இதனால் இவைகளை சிரிக்கும் பறவைகள் என்றழைப்பார்கள் . வீடுகளில் பொறுமையாக அமர்ந்து பூச்சியைக் கண்டவுடன் பாய்ந்து பிடிக்கும். சில வகை கூக்காபர்ரா ஒரு அடிக்கு மேல் வளரும். மனிதர்களுடன் கூச்சமில்லாமல் பழகும். கையில் உணவு வைத்திருந்தால் வந்து அமரும்.

****  

காக்காட்டு 

கிளி போல மூக்கு; மயில் போல கொண்டை ; கொக்குபோல வெண்மை ; சிட்னி நகரம் முழுதும் காணலாம். இப்போது இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் தீவுகள் வரை பரவியுள்ளன பெரும்பாலும் விதைகள் கொட்டைகள் பழங்கள் பூக்களையே சாப்பிடும்; பூச்சிகளையும் உண்ணும் மரப்பொந்துகளில் வசிக்கும் இவைகளில் நாற்பதுக்கும் மேலான வகைகள் இருப்பதால் இளம் சிவப்பு, கருப்பு காக்காட்டுகளையும் பார்க்கலா.ம் கர்ண கடூ ரமான சப்தம் உடையவை  இந்தியக் குயில்களுக்கு நேர் எதிர்ப்பதம்!

***

வண்ணக் கிளிகள்

நாம் ராஜ நாகம் என்று சொல்லுவது போல ராஜ கிளிகள் உண்டு; அவை பஞ்சவர்ணக் கிளிகள் ; பழங்கள், கொட்டைகள் தானியங்களை உண்ணும்; பல வீட்டுத் தோட்டங்களிலும் இவைகளுக்கு உணவு படைக்கிறார்கள்  கிழக்கு ஆஸ்திரேலியா முழுதும் இவை இருக்கின்றன

*****

சர்க்கஸ் செய்யும் கலா pink Galahs பறவை

கிள்ளை—மேலும் ஒரு தமிழ்ச் சொல்

ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் கிளா kilaa (கிளி) என்றனர். அதை வெள்ளைக்காரர்கள் pink Galahs கலா ஆக்கிவிட்டார்கள் இவை இளம் சிவப்பு கழுத்துடையவை. விதைகளை உண்டு வாழும். ஆயிரக் கணக்கில்  கூட்டமாகப் பறந்து போகும் .கிளி/கிள்ளை  என்ற தமிழ்ச் சொல் ஆஸ்திரேலியா வரை பறந்து வந்துள்ளது என்றும் சொல்லலாம் ; ஆஸ்திரேலிய கொச்சை மொழியில் கலா Galahs என்றால் கோமாளி; இந்தப் பறவையின் பெயரை அப்படிப்   பயன்படுத்தக்   காரணம் கலா Galahs பறவை நிறைய சர்க்கஸ் வேலைகளை செய்யும்; தலை கீழாகத் தொங்கும்; கம்பி வழியே சறுக்கி விழும்.

*****

கருப்பு அன்னம் The black swan (Cygnus atratus)

தென் கிழக்கு தென் மேற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும்  கருப்பு அன்னம்  மேற்கு ஆஸ்திரேலியாவின் சின்னம் ஆகும்நம்ப முடியாதது என்ற பொருளில் ஐரோப்பியர்கள் இதை பயன்படுத்தினர். ஏனென்றால் அன்னப்பறவைகள் உலகம் முழுதும் வெள்ளை நிறத்தில் இருக்கையில் கருப்பு நிறத்தில் எப்படி அன்னம் இருக்க முடியும் என்று கேலி செய்து நடக்க முடியாததுநம்பக்கூடாதது என்ற பொருளில் பிளாக் ஸ்வான் என்ற சொல்லை பயன்படுத்தினர்; இந்த அதிசய பறவை ஆஸ்திரேலியாவில் வாழ்கிறது. அதிசயம் என்னவென்றால் பறக்கும்போது வெள்ளை இறக்கை தெரியும்.

இது அன்னப் பறவை வகை என்றாலும் கருப்பு இறக்கைகளையும் சிவப்பு மூக்கையும் கொண்டது. பறக்கும்போது அடிப்புற வெள்ளை இறக்கை தெரியும். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குடியேற்றம் செய்யும் நீரில் வாழும் பெரிய பறவை . ஆஸ்திரேலியாவின் தென்பகுதியில் சுத்த நீர், உப்பு நீர், கலங்கிய நீர் எல்லாவற்றிலும் வாழ்கின்றன..

****

ஐபிஸ் கொக்குகள் IBIS

இவை நீண்ட மூக்கு உடைய நீர்ப்பறவைகள்  சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர்  இது ஆஸ்திரேலியாவில் இல்லை. புதிய குடியேறிகள்!!

ஆறு சென்டிமீட்டர் அளவேயுள்ள குருவிகள் முதல் பெரிய — அதாவது — இந்தியா முதலிய இடங்களில் காணும்–  சைஸ் வரையுள்ள நூற்றுக்கணக்கான வகைகள் ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படுகின்றன. இதில் நீல நிறக்குருவிகளும் வால் பிளவுட குருவிகளும் அடங்கும். அத்தனை வகைப் பறவைகளையும் ஆஸ்திரேலிய மியூசியத்தில் மேல் மாடியிலுள்ள படங்களில் காணலாம்.

–subham—

Tags– சிரிக்கும் பறவை கூகாபர்ரா , காக்காட்டு; தமிழ்ப் பெயருள்ள கோமாளிப் பறவை ! ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம், பாருங்கள்!- Part 13

ராமலிங்க சுவாமிகளின் 3 முக்கியப் பாடல்கள் -Part 16 (last part) Post.14,135

Written by London Swaminathan

Post No. 14,135

Date uploaded in Sydney, Australia – 24 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 16

ராமலிங்க சுவாமிகளின் மூன்று முக்கியப்பாடல்கள்

(வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரைகள் நிறைவு)

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரைகளை நிறைவு செய்ய மூன்று முக்கியப்   பாடல்ககளை  தெரிவு செய்துள்ளேன் .

அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்களில் ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் ………..  பாடல் போல ஏனைய பாடல்கள் பிரபலம் அடையாவிட்டாலும்  சங்கீத வித்வான்களால் பாடப்பெற்ற மற்றுமொரு பாடல்  அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டுகொண்ட தெய்வம்  – என்ற பாடல் ஆகும் .

1

பெர்ற  தாய்தனை மக மறந்தாலும் என்ற பாடலை முன்னரே கண்டோம்; அதே தொனியில் அமைந்த இன்னும் ஒரு செய்யுள்

தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண் டடித்தால்

 தாயுடன் அணைப்பள் தாய் அடித்தால்

பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கெனக்கு

பேசிய தந்தையும் தாயும்

பொடித்திரு மேனி அம்பலத்தாடும்

புனித நீ ஆதலால் என்னை

அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்

அம்மை அப்பா இனி ஆற்றேன்

இதில் மாணிக்கவாசகரின் திருவாசகத் தொனியைக் காணலாம் ; அழுதால் அவனைப் பெறலாமே என்கிறார் மாணிக்கவாசகர்.

*****

பாரதி மீது  தாக்கம்

ராமலிங்க சுவாமிகளுக்குப் பின்னர் வாழ்ந்தவர் பாரதியார் . ஆயினும் இருவர் பாடல்களிலும் பல ஒற்றுமைகளைக் காண்கிறோம். எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று இருவரும் வேண்டினர் ; அதுமட்டுமல்ல சமுதாய புரட்சியும் செய் தனர்.

சூத்திரனுக்கொரு நீதி தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,

சாத்திரம் சொல்லிடு மாயின்

அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”.

என்றான் பாரதி .

***

எல்லாரும் ஓர் குலம் – எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்;

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர்- நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் — ஆம் என்றும் இயம்பினான் பாரதி.

***

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

வெள்ளைப் பறங்கியை துரை என்ற காலமும் போச்சே”– என்றும் பாடினான் பாரதி.

2

இதை வள்ளலார் ராமலிங்க சுவாமிகளும் பாரதிக்கு முன்னரே பாடிவிட்டார்:-

1. இதுநல்ல தருணம் – அருள்செய்ய

இதுநல்ல தருணம்.

2. பொதுநல்ல நடம்வல்ல புண்ணிய ரேகேளும்

பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன். இதுநல்ல

கண்ணிகள்

3. மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது

வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது

கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது

கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல

4. குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று

குதித்த  மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று

வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது

விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. இதுநல்ல

5. கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று

கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று

தாபமும் சோபமும் தான்தானே சென்றது

தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது. இதுநல்ல

6. கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது

கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது

புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று

பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று.

7. இதுநல்ல தருணம் – அருள்செய்ய

இதுநல்ல தருணம்.—- ராமலிங்க சுவாமிகளின் திருவருட்பா பாடல்.

***

பாரதியும் நல்ல காலம் வருகுது பாடலில் இதை எதிரொலிக்கிறார்

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;

நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது;

சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;

சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!

வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு. 1

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;

படிப்பு வளருது;பாவம் தொலையுது;

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,

போவான்,போவான்,ஐயோவென்று போவான்! 2

*****

3

இறுதியாக வள்ளலார் தனது பாடல்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக வைத்த பாடலைக் காண்போம் . கண்டசாலா முதல் தண்டபாணி தேசிகர் வரை எல்லா பாடகர்களும் பாடிய புகழ்பெற்ற பாடல் இது .

அச்சோப் பத்து

ஆறாம் திருமுறை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்

எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

2. எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்

என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்

நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்

நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்

கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்

காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்

செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

3. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்

வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்

காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்

சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.

4. என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்

என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்

பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்

பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்

அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்

அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்

சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

5. எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்

எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்

நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்

நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்

பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்

பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்

திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

6. இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்

இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்

எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்

எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்

பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்

பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்

செச்சைமலர் எனவிளங்குந் திருமேனித் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

7. சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்

சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்

மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்

மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்

ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்

எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்

தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

8. தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்

துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்

மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்

மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்

ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்

ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்

தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

9. எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்

எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்

அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்

அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்

ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்

ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்

செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

10. சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்

சத்திகளால்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்

நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா

நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்

பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்

பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்

சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

திருவருட்பா 

சிதம்பரம் என்னும் சிற்சபையில் சிவகாமியுடன் உறையும் நடராஜனே தனது குலதெய்வம் என்று பாடி முடிக்கிறார். திருமந்திர, திருவாசகக் கருத்துக்களையும் பிழிந்து தந்துள்ளார். மாண்டவரை எழுப்ப முடியும் என்ற கருத்தை மீண்டும் பாடுகிறார். தன்னைப் போல எல்லோரையும் பேரானந்த நிலைக்கு இட்டுச் செல்லும் பொன்னம்பலவாணனைப் புகழ்கிறார் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்.

வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் பாடல்களை எம் எஸ் சுப்புலட்சுமி முதல் இப்போதுள்ள பிரபல பாடகர்கள் வரை பலரும் பாடிய பாடல்கள் அனைத்தும் யூ டியூபில் கிடைக்கின்றன. நான் கேட்டு ஆனந்தம் அடைவதைப் போல அவைகளை அனைவரும் கேட்டு மகிழவேண்டும். .யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

(வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரைகள் நிறைவு)

—SUBHAM—

TAGS — வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை -16, last part

ராமலிங்க சுவாமிகளின்,  மூன்று முக்கியப் பாடல்கள்

Hindu Crossword 24 1 25 (Post No.14,134)


Written by London Swaminathan

Post No. 14,134

Date uploaded in Sydney, Australia – 24 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 12  3  4  5 
         
6        
      7   
         
 8    9   
  10      
         
  11      

ACROSS

1Jyotirlinga shrine in Andhra Pradesh

6.Father of Raghu in Raghuvamsa of Kalidasa

7.Sanskrit word for hero; prefix of many Hindu kings

9.palmyra tree or “the sap of a palm tree,toddy

10.Praiser, singer in Sanskrit

11. Dark coloured, worthy of worship, charming in Sanskrit

XXXXXX

DOWN

2.Chhatrapati Shivaji renovated this fort and made it his capital in 1674 AD. 

3. Mystical diagram (yantra) used in the Shri Vidya worship; goddess lives in the middle

4.Indra’s elephant

5.Grandson of Krishna and Rukmini

8.Higher, supreme, absolute in Sanskrit

S 1R2IS 3AI 4LA 5M
 A R R N 
D6ILIPA I 
 G C V 7IRA
 A H A U 
P 8D A T9ADI
A R10KVA D 
R  R   H 
A R11ADHYA 

—SUBHAM—

tags–Crossword24125

ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் (Post .14,133)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,133

Date uploaded in Sydney, Australia – –24 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் அத்தியாயம் 12

ச. நாகராஜன்

ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்!

ஐக்கிய அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் ஆப்ரஹாம் லிங்கன் (பிறப்பு 12-2-1809 இறப்பு 15-4-1865). அனைவரிடமும் நன்மதிப்பைப் பெற்ற இவரது வாழ்வில் நூற்றுக் கணக்கான சுவையான சம்பவங்கள் உண்டு. அவற்றில் சில இதோ:

எதிரிகளை அழிப்பது எப்படி?

ஜனாதிபதியாக ஆப்ரஹாம் லிங்கன் (ABRAHAM LINCOLN) இருந்த போது ஒரு முறை அவரது எதிர்க்கட்சியினரைப் பற்றி மிகவும் அன்பாகவும் உயர்வாகவும் புகழ் மொழிகளைச் சொன்னார் லிங்கன். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்மணி எப்படி இவர் இவ்வளவு அன்பாக எதிரிகளைப் புகழலாம் என்று கேட்டார். அதற்கு லிங்கன் உடனே, “ அம்மணீ! அவர்களை நான் நண்பர்களாக்கிக் கொண்ட போதே எதிரிகள் அழியவில்லையா என்ன?” என்று கேட்டார்.

லிங்கன் மிகுந்த புத்திகூர்மையுடன் அனைவரையும் கவர்வதில் வல்லவர், நல்லவர்!

லிங்கனின் அறிவார்வம்

லிங்கன் எந்த விஷயத்தையும் ஆர்வம் உந்த அறிந்து கொள்வது வழக்கம்.

ஒரு முறை அவரது நண்பர்களுள் ஒருவர் அவரிடம், “லிங்கன், நயாகரா நீர்வீழ்ச்சியின் முன் நின்று அதைப் பார்த்த போது உங்களுக்கு என்ன தோன்றியது” என்று கேட்டார்.

ஒரு கணம் யோசித்த லிங்கன், “உலகத்தில் இவ்வளவு நீரும் இந்த நீர்வீழ்ச்சிக்கு எப்படி வந்து சேர்கிறது? என்று தோன்றியது” என்றார்.

வால்நட் விஷயம்

ரோலண்ட் டில்லர் (ROLAND DILLER) என்பவர் லிங்கனின் பக்கத்து வீட்டுக்காரர். அவர் கூறிய சம்பவம் இது.

ஒரு நாள் வாசலில் ஏகப்பட்ட சத்தம். என்னெவென்று பார்க்க வெளியே வந்தேன். இரண்டு குழந்தைகள் லிங்கனைச் சூழ்ந்து கொண்டு பெரிதாகச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தன.

நான் லிங்கனை நோக்கி, “ லிங்கன், என்ன விஷயம் என்று கேட்டேன்.

“என்னவா? உலகத்தில் எப்போதும் எங்கும் உள்ள விஷயம் தான் இங்கும். என்னிடம் மூன்று வால்நட் இருக்கிறது. இந்தக் குழந்தைகள் ஆளுக்கு இரண்டு வேண்டும் என்று அடம் பிடிக்கின்றன” என்றார்.

உலக நடப்பை நகைச்சுவையுடன் சுட்டிக் காட்டி விட்டார் லிங்கன்!

கல்லறைக்குச் செல்லும் குதிரை

ஒரு முறை லிங்கன் ஒரு அரசியல் மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்ல வேண்டியதாக இருந்தது. எதிரிகளிடமிருந்து பணம் பெற்று குதிரைக்குத் தீவனம் போடும் ஒரு ஊழியர் வேண்டுமென்றே குதிரையை மெல்ல வழி நடத்திச் சென்று கொண்டிருந்தார். லிங்கன் அந்தக் கூட்டத்திற்குப் போகக் கூடாது என்பது அவர் எண்ணம். ஆனாலும் ஒரு வழியாகக் கூட்டத்திற்குச் சென்று அதில் கலந்து கொண்ட லிங்கன் மீண்டும் திரும்பிச் செல்ல அந்தக் குதிரை வண்டிக்காரரிடம் வந்தார்.

குதிரையை ஓட்டி வந்தவரிடம் லிங்கன்,”என்ன இந்தக் குதிரையை சவ ஊர்வலத்திற்குத் தான் கொண்டு செல்வீர்களோ?” என்று கேட்டார்.

திடுக்கிட்ட குதிரையோட்டி, “இல்லையே” என்றார்.

“நல்ல வேளை! உங்கள் பதில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒருவேளை இந்தக் குதிரைகள் சவ ஊர்வலத்தில் சவத்தைக் கல்லறைக்குக் கொண்டு சென்றால் அவரை மீட்பது என்பது நடக்கவே நடக்காதே (RESURRECTION) என்று கவலையாக இருந்தது” என்று கிண்டலடித்தார்.

குதிரை வண்டிக்காரர் வெட்கித் தலை குனிந்தார்.

அற்புத மனிதர் லிங்கன்

ஃப்ரெடெரிக் டக்ளஸ் (FREDERICK DOUGLASS) என்பவர் ஒரு நீக்ரோ இனத் தலைவர். பெரிய எழுத்தாளரும் கூட. அவரை ஒரு முறை லிங்கன் தன்னுடன் ஜனாதிபதி மாளிகையான ஒய்ட் ஹவுஸில் விருந்துண்ண அழைத்தார்.

அவரும் விருந்துக்குச் சென்று விருந்துண்டார்.

இந்த விருந்தைப் பற்றி அவர் சொல்லும் போதெல்லாம், “விருந்துண்ணச் சென்று ஒரு மணி நேரம் வெள்ளைக்காரரான லிங்கனுடன் கழித்த நான் ஒரு முறை கூட அவரால் நான் ஒரு நீக்ரோ என்று நினைவுபடுத்தப்படவில்லை. நான் சந்தித்த இப்படிப்பட்ட ஒரே ஒரு வெள்ளைக்கார மனிதர் இவர் தான்” என்று கூறுவது வழக்கமாயிற்று.

லிங்கன் அனைவரையும் சரி சமமாக மதித்து நடத்தியவர் என்பது அனைவரும் போற்றும் ஒரு விஷயம்! 

***

அத்தியாயம்11 வெளியான தேதி 22-11-23 கட்டுரை எண் 12748

My Visit to Lake Paramatta and Darling Harbour in Sydney (Post No.14,132)

Written by London Swaminathan

Post No. 14,132

Date uploaded in Sydney, Australia – 23 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

There are some known places in Sydney (Australia) which attract local residents and tourists. We went to Lake Paramatta on 22nd and Darling Harbour on 23rd January, 2025. Train is the best transport to go into city (Darling Harbour).

Those who come from London or England can see all the station names here as well (Epping, Lewisham, Croydon in Sydney). We have Liverpool, Newcastle in Australia. The English migrants named street, areas and towns from where they came.

Darling Harbour has a big park for children with many activities. There are lot of restaurants in the to cater to every taste. Children can play and bathe in the water fountains.

Paramatta lake is a place where children and adults can swim safely under the supervision of coast/ life guards.

More details about Darling Harbour

Darling Harbour Fireworks are the ultimate Sydney experience for local Sydneysider or those just visiting. These free, dazzling displays paint the harbour sky with vibrant colour, creating a magical atmosphere that’s pure Sydney. The dates and times are in website. In 2025

9pm Saturdays 4, 11, 18 & 25 January

9pm Saturdays 1, 8, 15 & 22 February and so on.

Best places to watch fire works-Darling Harbour’s best waterfront restaurants and bars at Cockle Bay Wharf .


 The best free outdoor cinema of the summer is here! Warner Bros. Discovery has returned with some of their most iconic films, as well as new favourites. The dates and film titles are announced in websites. Sydney Festival in Summer (January, February) have lot of ticketed music, dance, circus events.

Those who don’t want to spend may just go around with their children and grand children and enjoy the waterfront, parks etc. you may require half a day or a full day to it.

Australian open Tennis and major sporting events are shown on huge screens.

****

More details about Paramatta Lake

Swimming, picnicking, bushwalking and pedal boating, Lake Parramatta is an amazing place of natural beauty to enjoy with friends and family.

With the lake open for swimming from October each year, the summer season is the time to shake winter off and reserve a spot by the water.

Fully patrolled by lifeguards, the designated swimming area is safe for children to splash and paddle and big enough for adults to get some laps in.

You may hire kayaks, canoes, paddleboats, stand up paddle boards and row boats on offer. All levels of ability are welcome to enjoy a few hours on the water.

Bushwalk around the tracks: There are four walking routes to around the lake.

History of Aborigines

The name Paramatta itself shows it belongs to sons of the soil.

A significant place for the traditional owners of the land the Darug people, evidence still remains of the regular usage of and occupation by the Aboriginal Burramattagal clan within Lake Parramatta Reserve and Hunts Creek.

Their shelter caves, hand-stencils, stone flaking, tree scars and midden deposits are still there .

The local Aboriginal community and City of Parramatta Council have in recent years established a Bushfoods Garden and Walk to show these remarkable items to visitors .

Wherever you go in Australia there will be a board showing to which of the 250 aborigine groups it belongs to. People will salute and show respect to them (in words)  for stealing and occupying their land. It is one way of pacifying them. Since they are in a small minority and so scattered in a very large continent, they are also powerless.

—- subham—-

Tags – My visit, Lake Paramatta, Darling Harbour

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 12 (Post.14,131)

london swaminathan with his son in opera house

Written by London Swaminathan

Post No. 14,131

Date uploaded in Sydney, Australia – 23 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

pictures taken by london swaminathan

சிட்னி நகர ஆபரா ஹவுஸ்

பிக் பென் மணிக்கூண்டைப் பார்த்தால் லண்டன்  என்று சொல்லிவிடுவோம்; பாரீஸ் நகருக்கு ஜபல் டவர் சின்னம். நியூயூயார்க்கநகருக்கு லிபர்டி சுதந்திராதேவி சின்னம்; அதே போல சிட்னி நகருக்கு ஆபரா ஹவுஸ் சின்னம் ; இது ஆஸ்திரேலியாவையும் நினைவு படுத்தும் சின்னம்.

 Since its grand opening on 20 October 1973, the Opera House has stood as a beacon of artistic expression, leaving an indelible mark on the global stage. Its iconic silhouette has become a symbol of Sydney, and Australia.

இது 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி திறக்கப்பட்டது.

இங்கிலாந்தின் குயின் எலிசபெத் மஹா ராணி திறந்து வைத்தார் அதற்குப்பின்னர் பலமுறை வந்து சென்றார் .

இந்த இடத்தில் பெரிய இன்னிசை நிகழ்சசிகள் நடைபெறும்; அது தவிர கூட்டங்களும் நடைபெறும்; அவைகளுக்கு கட்டண உண்டு ஆனால் இலவசமாக கட்டிடத்தைச் சுற்றி வரலாம்

சில சுவையான செய்திகளைச்  சொல்கிறேன்

முதலில் இதைக் கட்டுவதற்கு எழுபது  லட்சம் ஆஸ்திரேலிய  டாலர் ஆகும் என்று திட்டம் போட்டார்கள்; ஆயினும் கட்டிடத்தை முடிக்க ஒரு கோடி டாலருக்கு மேல் ஆனது.  பெரும்பாலான அத்தொகை லாட்டரி மூலமா கிடைத்துவிட்டது ; லக்கி ப்ரைஸ் என்று சொல்லலாம்

The original cost estimate to build Sydney Opera House was $7 million. The final cost was $102 million and it was largely paid for by a State Lottery.

இந்தக் கட்டிடத்துக்கு வரைபடங்கள் தேவை என்று ஒரு போட்டியை அறிவித்தவுடன் 233 படங்கள் 233 designs வந்தன. இறுதியில் டென்மார்க் நாட்டினைச் சேர்ந்த ஜான் உத்சவ்ன் Jørn Utzon வெற்றி பெற்றார் அவருக்கு 5000 பவுன் பரிசுத்த தொகை கிடைத்தது. இது நடந்த ஆண்டு 1956.

நான்கே ஆண்டுகளில் கட்டி முடிப்போம் என்றார்கள்; ஆனால் ராமர் காட்டுக்குச் சென்ற ஆண்டுகள் ஆயின (14)!

1959 -ல் துவங்கி 1973 ல் முடித்தார்கள் ; பத்தாயிரம் பேர் வேலை பார்த்து முடித்த கட்டிடம் இது.

யுனெஸ்கோ–வின்  உலக பாரம்பரியமிக்க இடங்களில் இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது.

சுவீடனில் தயாரிக்கப்பட்ட பத்து லட்சத்துக்கு மேலான ஓடுகள்  1-62 ஹெக்டேர் கூரையை அலங்கரிக்கின்றன.

இசைக்கருவிகள் சரியான சுருதியில் இருப்பதற்கு குறிப்பிட்ட வெப்பமும் காற்றின் ஈரப்பதமும் இருக்க வேண்டு; ஆகையால் கச்சேரி மண்டபத்தில் சிட்னி சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா இசைக்கும்போது வெப்ப நிலை  22.5 degrees ஆக பராமரிக்கப்படுகிறது .

கட்டிடத்தின் வெப்ப நிலையைப் பராமரிப்பதற்கு துறைமுக கடல் நீர் பயன்படுகிறது கட்டிடத்தைச் சுற்றி கடல் நீர்க்குழாய்கள் செல்கின்றன.  குகாய்களின் நீளம் 35  கிலோமீட்டர்.

ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேலானோர் ஆபரா ஹவுஸைக் காண்பதற்கு வருகிறார்கள்

famous sydney harbour bridge with london swaminathan

 ஒரு சம்பவத்துக்குப் பின்னர் ஒரு தியேட்டரில் வலை அடிக்க நேரிட்டது; ஒரு இசை நிகழ்ச்சியில் கோழிக் குஞ்சுகளைப் பயன்படுத்தினார்கள்; ஒரு குஞ்சு பறந்து போய் ஒருவரின் இசைக்கருவியில் அமர்ந்து கொண்டது ; பின்னர் சுருதி தப்பி, இசையை தற்காலிகமாக நிறுத்த நேரிட்டது . இது நடந்தது 1980 ஆம் ஆண்டு.

ஆண்டுதோறும் சீனப்   புத்தாண்டினை இங்கு கொண்டாடிவருகிறார்கள்; ஆஸ்திரேலியாவில் இன வாரியாகப்பார்த்தால் வெள்ளைக்காரர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் சீனர்களும் வியட்நாமியரும்தான்!

எப்படிப் போவது ?

The Sydney Opera House is a six-minute walk from Circular Quay, which is regularly served by public buses, trains and ferries to Circular Quay.

சர்குலர் கீ என்னும் இடத்திலிருந்து ஆறு நிமிடங்கள் நடந்தால் ஆபரா ஹவுஸுக்கு வந்துவிடலாம்அந்த இடத்தை ரயில்பஸ்,  கார்படகு சர்வீஸ் மூலம் அடையலாம்.

ஆபரா ஹவுசில் ஏழு மண்டபங்கள் இருக்கின்றன ; அவைகளை வாடகைக்கு எடுத்து  இன்னிசை நிகழ்ச்சிகளையும் வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தலாம்.

picture taken from my ferry in Paramatta River

The Sydney Opera House in Sydney, Australia has seven performance venues: 

  • Concert Hall: The largest venue, with a seating capacity of 2,679
  • Opera Theatre: Seats 1,547
  • Drama Theatre: Seats 544
  • Playhouse: Seats 398
  • Studio Theatre: Seats 364
  • Forecourt: An iconic outdoor space with harbour views
  • Utzon Room: A small, elegant space with excellent acoustics

Each venue has its own rehearsal space. The Sydney Opera House also has restaurants, bars, souvenir shops, and meeting rooms. 

இவை தவிர கூட்டங்களை நடத்தும் சிறிய ஹால்கள், உணவு விடுதி, ரிகர்சல் என்னும் ஒத்திகை பார்க்கும் அறைகள் ,  கடைகளும் உண்டு. ஐயாயிரம் இருக்கைகளுக்கு மேல் இருப்பதால் ஒரே நேரத்தில் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்  .

 நான் படகிலிருந்தும்  உள்ளேசென்றும் எடுத்த படங்களை இணைத்துள்ளேன்.

அவர்களுடைய வெப்சைட்டில் இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளையும் வரைபடத்தையும் பார்க்கலாம்.

–subham—

Tags- ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 12, சிட்னி நகர ஆபரா ஹவுஸ்

கவலை வேண்டாங்க! பூமியின் அடியில் இருக்குது போதுமான ‘பவர்’! (Post.14,130)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,130

Date uploaded in Sydney, Australia – –23 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

(14-1-25 kalkionlineல் பிரசுரமான கட்டுரை

எரிபொருள் அறிவியல்

கவலை வேண்டாங்க! பூமியின் அடியில் இருக்குது போதுமான பவர்!

ச. நாகராஜன்

பூமியில் எரிபொருள் தீரப்போகிறது என்று அவ்வப்பொழுது அச்சுறுத்தல் செய்தி வந்து கொண்டே இருக்கிறது அல்லவா?

இனி கவலை வேண்டாங்க! பூமியின் அடியில் இருக்குது போதுமான சக்தி என்று ஒரு ஆறுதல் செய்தியை சயின்ஸ் அட்வான்ஸஸ் (Science Advances) பத்திரிகை தனது 2024 டிசம்பர் 13ம் தேதி இதழில் வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பெட்ரோலிய புவியியல் இரசாயன வல்லுநரான ஜியாப்ரி எல்லிஸ் (Geoffrey Ellis,a petroleum geochemist at the U.S. Geological Survey (USGS)) மற்றும் சாரா ஜெல்மன் (Sarah Gelman) ஆகிய இரு ஆய்வாளர்கள் கண்டுபிடித்த இந்த செய்தி ஆறுதல் அளிக்கும் செய்தி.

பூமியில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் எல்லா சக்தியைப் போல் இரு மடங்கு ஹைட்ரஜன் பவர் பூமியின் அடியில் இருக்கிறது என்பது அவர்கள் தரும் ஊக்கமூட்டும் செய்தியாகும்.

இதுவரை இவ்வளவு பெரிய ஆற்றல் பூமிக்கு அடியில் இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் அறியவில்லை. ஆனால் மேற்கு ஆப்பிரிக்காவிலும்  அல்பேனியம் க்ரோமியம் சுரங்கத்திலும் ஹைட்ரஜன் இருப்பதைக் கண்டபோது அவர்களின் ஆச்சரியத்திற்கு எல்லையே இல்லாமல் போனது! பூமிக்கு அடியில் ஏராளமாக ஹைட்ரஜன் சேமிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற ஒரு புதிய பார்வையே அப்போது தான் அவர்களுக்குக் கிடைத்தது.

இன்னும் இருநூறு வருடம். படிமப்பாறை எரிபொருளை (Fossil Fuel) நம்பி இருக்கும் நமக்கு பூமிக்கு அடியில் உள்ள இந்த ஹைட்ரஜன் ஆற்றலில் ஒரு துளி கிடைத்தால் கூடப் போதுமாம் படிமப்பாறை எரிபொருளுக்கு டாட்டா சொல்லி விடலாமாம்! இருநூறு வருடங்களுக்கு கவலையே இல்லை!

10 டிரில்லியன் டன் (ஒரு டிரில்லியன் என்றால் ஒன்றுக்குப் பக்கத்தில் 12 பூஜ்யங்களைக் கொண்ட எண்) இருக்கக் கூடும் என்பது அவர்களின் கணிப்பு. ஆனால் நிச்சயமாக பூமிக்கு அடியில் 6.2 டிரில்லியன் டன் (அதாவது 5.6 மெட்ரிக் டன்)  ஹைட்ரஜன் பாறைகளில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன என்பது அவர்களின் ஆய்வு மூலம் உறுதியானது.

அதாவது பூமிக்கு அடியில் உள்ள எண்ணெயின் அளவு போல 26 மடங்கு இது அதிகமாம்.

ஹைட்ரஜன் ஒரு தூய்மையான ஆற்றலின் ஆதாரமாகும். தொழிலகங்களுக்குத் தேவையான மின்சக்தி மற்றும் வாகனங்களை ஒட்டுவதற்கான எரிபொருள் ஆகியவற்றை ஹைட்ரஜனிலிருந்து பெற முடியும் என்பது அனைவரும் அறிந்ததே!

2 சதவிகித ஹைட்ரஜன் ஆற்றல் 124 பில்லியன் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) டன் வாயுவுக்கு சமம்.

ஹைட்ரஜனிலிருந்து பெறப்படும் சக்திக்கு “க்ரீன் ஹைட்ரஜன்” என்று பெயர். படிமப் பாறைகளைலிருந்து வரும் சக்திக்கு “ப்ளூ ஹைட்ரஜன்” என்று பெயர்!

நமக்குக் கிடைக்கப்போவது இனி க்ரீன் ஹைட்ரஜன்!

இதில் ஒரு பெரிய பயன் என்னவென்றால் இந்த ஆற்றலைத் தேவையான போது எடுத்துக் கொள்ளலாம். இதை எடுத்து ஒரு இடத்தில் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை!

கடற்கரைக்கு வெகுதூரத்தில் அல்லது அதிக ஆழத்தில் இருக்கும் இந்த  ஆற்றலை எங்கு இருக்கிறது என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும்

விஞ்ஞானிகளுக்கு சவாலான விஷயம் இந்த ஹைட்ரஜன் பாறைகள் எந்த இடத்தில் உள்ளன என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க வேண்டியது தான்!

***

Hindu Crossword2212025 (Post No.14,129)

Written by London Swaminathan

Post No. 14,129

Date uploaded in Sydney, Australia – 22 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1     2
       
3      
 4     
5 6 7  
8      
       
       
9      

Across

1.The slogan heard from Varkari devotees on their way to Pandharpur Temple.

3.The star that is close to Moon in Hindu mythology.

5.Karnataka city which has the name of the temple there; also called twin city with Davangere (14 km away).  

8. In the context of Sikhism, it is pertaining to Akal or the Supreme Power”, “divine”) also member of Sikh political parties.

9.Word for Business man in Sanskrit and Tamil.

*****

Down

1.One of the Avatars of Vishnu in Boar form.

2. Mars in Hindu Astrology and Astronomy

4.Hindu Spring Festival of Colours– go up

6.Krishna’s favourite Gopi.

7.handicapped, also mean less; without.

V1ITTALA2
AL    N
R3OHINIG
AH4    A
H5AR6IH7AR
A8KALI A
 SD N K
 AH A A
V9YAPARI

—subham—

Tags –Crossword22125

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 11 (Post.14,128)

Written by London Swaminathan

Post No. 14,128

Date uploaded in Sydney, Australia – 22 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 BEACH PICTURES TAKEN BY LONDON SWAMINATHAN 

பத்தாயிரம் கடற்கரைகள்

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 11

ஆஸ்திரேலியா உலகிலேயே ஆறாவது பெரிய நாடு. ஒரு கண்டத்தையே நாடாக  அழைக்கும்  பெருமை உடைத்து இது; மேலும் அழகான கடற்கரைகள் நிரம்பிய நாடு; இதன் கடற்கரையின் நீளம் 36,000 கிலோமீட்டர்கள் .

கிழக்கில் பசிபிக் மஹா சமுத்திரமும் மேற்கிலும் வடக்கிலும் இந்து மஹாசமுத்திரமும் அலைகளை அள்ளிவீசும் அழகான நாடு ;ஜனத்தொகையோ மிகக்குறைவு.

சுற்றுலாப்பயணிகள் செல்லும் பத்தாயிரம் கடற்கரைகள் உள்ளன. சிட்னி நகரிலேயே புகழ்பெற்றன பாண்டி பீச் உள்ளது  அங்கே உள்ளூர்க் கார்களையும் சுற்றுலாப்பயணிகளையும் எப்போதும் காணலாம். இவ்வளவு கடற்கரைகள் இருந்தபோதிலும் நான் சென்றது நாலைந்து கடற்கரைகள்தான் சில இடங்களில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதைக் கண்டேன். கடல் தாவரங்கள் கொத்து கொத்தாக கரை ஒதுங்குவதைக் கண்டேன். கிளிஞ்சல்களும் கிடைக்கின்றன. வட கோடியில் கேர்ன்ஸ் என்னும் இடத்திற்குச் சென்று பவளைப் பாறைகளையும் பார்த்தேன்

சிட்னி நகர பாண்டி பீச் சென்னை மெரீனா கடர்களை போல புகழ்பெற்றது. ஆனால் தைவிட சுத்தமானது; கடை கன்னிகள் இல்லாதது . எல்லா கடலோர சுற்றுலாத் தலங்களிலும் நீர் விளையாட்டுகள் அதிகம்; பள்ளிக்கூடங்களில் நீச்சல் கட்டாய பயிற்சி. இதனால் நீச்சல் தெரியாத சிறுவர்கள், இளைஞர்கள் இல்லை என்றே சொல்லலாம்.  பேட்டை பேட்டையாக  நீச்சல் குளங்களும் உண்டு .

நீர் விளையாட்டுகளுக்காகப் போகும் இளம் ஜோடிகளை எல்லாக் கடற்கைரைகளிலும் காணலாம். அவர்களுக்கு ஆஸ்திரேலியா ஒரு சுவர்க்கம்.

குறிப்பிடத்தக்க சில கடற்கரைகளைக் காண்போம்

Bondi Beach பாண்டி பீச்

Located in Sydney, this iconic beach is known for its sun-drenched sand, surf lessons, and the famous Bondi Icebergs ocean pool.

சிட்னியில் உள்ள பாண்டி  பீச் எளிதில் போகக்கூடியது; ஏராளமான பஸ்கள் நிமிடத்துக்கு நிமிடம் வந்து கொண்டிருக்கும். கற்றகரைய ஒட்டி நீச்சல் குளங்களையும் கட்டியிருக்கிறார்கள்; வெள்ளை மணலில் உட்கார்ந்தது (காதல்) கதைகளை பேசலாம் ஆனால் சன் க்ரீம் போடாமல் ஆஸ்திரேலியர்கள் வர மாட்டார்கள்; இங்கு சூரிய ஒளி மூலம் வரும் தோல் புற்றுநோய் (Sun Cream to prevent Skin Cancer)  அதிகம்.

கடலில் மிதக்க ஆசைப்பட்டால் சர்பிங் பயிற்சியும் பெறலாம் (காசு கொடுத்து) ; ஆஸ்திரேலியாவில் எல்லாம் ஆனை விலை குதிரை விலை ; விலைவாசியில் லண்டனைத் தோற்கடித்துவிடும் லண்டன் விலையை இரண்டால் பெருக்கிக்கொள்க

****

நீலக்கல் வளைகுடா

இது சிட்னிக்கு நேர் எதிர்ப்புறம் 2500 மைல்களுக்கு அப்பால் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது ; கடல் நீளம் என்ற வருணனைக்கு பொருத்தமான இடம் ; நிங்களூ Ningaloo Reef. பவளப் பாறைகளையும் காணலாம் 

Turquoise Bay

Located in Cape Range National Park in Western Australia, this beach is known for its bright blue waters and proximity to the Ningaloo Reef.

*****

கின்னஸ் புஸ்தக பீச் – வெள்ளை வெளேர் கடற்கரை

Hyams Beach

Located in Jervis Bay, New South Wales, this beach is known for its white sand, which has been recorded in the Guinness Book of Records as the whitest in the world.

சிட்னி நகரம் இடம்பெற்றுள்ள மாநிலம் நியூ சவுத் வேல்ஸ்; இங்கேயுள்ள ஹையம்ஸ்  பீச்/ கடற்கரை  உலகிலேயே வெண்மணல் உடைய கடற்கரை என்ற தலைப்பில் கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம் பெற்றது.

****

கடற்கரையில் ஒட்டக சவாரி

பாலை வனம் உள்ள மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனத்திலும் ஒட்டக சவாரி இருப்பதில் வியப்பில்லை சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் வெள்ளைக்காரர்கள் ஓட்டகங்களைக் கொண்டு  வந்து ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தியதால் இங்கு அரபு நாடுகளை விட ஒட்டக எண்ணிக்கை பெருத்துவிட்டது மேற்கு ஆஸ்திரேலிய கேபிள் பீச் சுப் க்குப் போனால் ஒட்டக சவாரி செய்தவாறே கடலில் சூரியன் அஸ்தமிப்பதையும் காணலாம் ; பதினான்கு மைல் தூரத்துக்கு  வெள்ளை நிறைத்தில் மணல் பிரகாசிக்கும்

Cable Beach

Great for: Camel rides and magical sunsets

The iconic Cable Beach is located in Broome, on the northern border of Western Australia. This beach is famous for its 22km (14mi) of soft white sand, where visitors can enjoy the calm blue water and show-stopper sunsets. Soak up the golden glow on a camel train, where you’ll traverse the beach on the back of a camel during sunset.

*****

கங்காரு பீச்

கடற்கரையில் கங்காருக்களும்  சூரிய ஒளிக்குளியல்  எடுப்பதைக் காண ஆசைப்பட்டால் மேற்கு ஆஸ்திரேலியா லக்கி பெ கடற்கரைக்குப் போகவேண்டும்

Great for: Australia’s famous sunbathing kangaroos

If your idea of a beach day involves hanging out with laid-back kangaroos on dazzling white sand, then Lucky Bay’s name rings true for you. Down in Western Australia’s southwest corner, Lucky Bay is a beautiful crescent of white sand and turquoise water in Cape Le Grand National Park.

****

டால்பின்கள் சீல்களைக் காண

தெற்கு ஆஸ்திரேலிய கங்காரு தீவில் பல அழகான கடற்கரைகள் உள. விவோன் பீச்சுக்குப் போனால் டால்பின்கள், கடல் சிங்கங்கள் எனப்படும் seals and dolphins சீல்கள் ஆகியவற்றைக் காணலாம். 

Vivonne Bay Beach

Great for: Natural beauty and local wildlife

South Australia’s Kangaroo Island is enveloped by picture-perfect beaches, with Vivonne Bay Beach often dubbed the most beautiful. There’s not a lot around this beach – but that’s what makes it so special. Picture an immaculate stretch of sand, crystal-clear waters home to playful seals and dolphins, and miles of unspoiled bush known as the Vivonne Bay Conservation Park.

  ****

BLUE BOTTLE JELLY FISH

MIGHTY PACIFIC OCEAN

SEA WEEDS

ஆயிரக் கணக்காண  பீச்சுகளைப் பட்டியலிட்டு ,போகும் வழி  தங்கும் இடம் , சாப்பிட உணவுவிடுதிகள் முதலியவற்றைப் பட்டியலிட்ட புஸ்தகங்கள் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். 

—SUBHAM—

Tags- பத்தாயிரம் கடற்கரைகள், ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 11

நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் கடும் தாக்கு-15 (Post No.14,127)

Written by London Swaminathan

Post No. 14,127

Date uploaded in Sydney, Australia – 22 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 15

நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் —மனு, வள்ளுவர், மாணிக்கவாசகர் திருமூலர், ராமலிங்க சுவாமிகள் — கடும் தாக்கு

நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் மனு, வள்ளுவர், மாணிக்கவாசகர் திருமூலர், ராமலிங்க சுவாமிகள் கடும் தாக்கு

வள்ளலார் சொன்னது என்ன ?

பிண்ணாக்கு! நாத்திகர் மீது வள்ளலார் கடும் தாக்கு !

நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு

நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு

சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு

செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு”.– வள்ளலார் பாடல்

இதுவரை கண்ணில் படாத ஒரு அற்புதப் பாடல் கண்ணில் பட்டது.. இதோ அந்தப்பாடல்!

முதல் பத்தியில் கண்புருவப்பூட்டு  என்பது நெற்றிக்கண் எனப்படும் ஞானக் கண் திறப்பது பற்றி என்று அறிஞர்கள் கூறுவார்கள்

அதற்கு அடுத்த பத்தியில் மேருமலைக் காட்சிகளை வருணிக்கிறார். அது யோகம் பற்றியது.

அதைத் தொடர்ந்து இரண்டு பத்திகளில் என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.என்ற வரிகள் வள்ளலார் அடைந்த ஞானத்தைக் காட்டுகிறது

அடுத்த பத்தியில் அருட்கடலில் ஓடம் ஏறி கரைசேர்ந்து தீப ஒளி கண்ட சந்தோஷத்தைக் காட்டுகிறார்.

ஆனால் நான் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புவது கடைசி பத்திதான்

நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு

நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு

சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு

செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.

நாத்திகம் பேசுவோரின் பேச்சு, முடை நாற்றம் வீசும் என்று தாக்குகிறார். அவர்கள் ருசிப்பது  பிண்ணாக்கு என்றும் சாடுகிறார்  இதற்கு நேர் மாறானது தெய்வீகப் பெரியோரின் திருவாக்கு என்றும் பாடுகிறார்.

இதோ முழுப் பாட்டு

கண்புருவப் பூட்டு

கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு

கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு

ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு

ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.

சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு

தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு

இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு

என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு

ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு

எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு

என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்

ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்

தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்

தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.

மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி

மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி

சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி

செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி.

துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு

தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு

தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு

செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.

சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது

தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது

எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது

இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது.

சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு

சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு

இற்பகரும் இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு

என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு

மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு

வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு

மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு.

அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்

அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்

வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்

வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.

நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு

நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு

சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு

செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.

(Source: http://www.thiruarutpa.org/thirumurai/v/T356/tm/kanpuruvap_puuttu)

வள்ளல் பெருமனார் ; தாம் பெற்ற இறை அனுபவத்தின் இரகசியத்தை வெளிப்படையாகக் கூறும் பாடல் இது..

 11 பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தின் தலைப்பே ” கண்புருவப் பூட்டு” ஆகும்

இது திருஅருட்பா ஆறாம் திருமுறையில் 121-ஆம் பதிகமாகும்.

 *****

நாஸ்தீகருக்கு மனுவும் வள்ளுவரும் தரும் சவுக்கடி!

லோப: ஸ்வப்னோ த்ருதி: க்ரௌர்யம் நாஸ்திக்யம் பின்னவ்ருத்திதா

யாசிஷ்ணுதா ப்ரமாதஸ்ச தாமசம் குண லக்ஷணம்—மனு 12-33

பேராசை, தூக்கம், புலனின்ப கட்டுப்பாடில்லாமை, கொடுமை செய்தல், நாத்திகம், தொழில் செய்யாமை, பிச்சை எடுத்தல், சோம்பேறித்தனம் ஆகியன தாமச குண லட்சணம்..

வள்ளுவனும் நாத்திகனை பேய்ப்பயல் என்று திட்டுகிறான்:

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் (குறள் 850)

உலக மக்கள் அனைவரும் உண்டு என்று சொல்லுவதை, ஒருவன் இல்லை என்று சொன்னால் அவனை மனித வடிவில் வந்த பேய் என்று கருதவேண்டும்.

கண்ண பிரானும் கீதையில் இதையே சொல்லி இருக்கிறான்:–

சம்சயாத்மா விநஸ்யதி  சந்தேகபடுபவன் அழிந்தே போய்விடுவான் என்கிறார். மேலும் அத்தகையோருக்கு இக,பர லோகங்களும் இல்லை; சுகமும் இல்லை என்பான் கண்ணன் (4–40)

மாணிக்கவாசகரோ ‘நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்’ என்று திட்டுவார்.

இவை எல்லாம் தமோ குண லட்சணங்கள்.

XXX

நாஸ்தீகர்களுக்கு திருமூலர் பயங்கர எச்சரிக்கை: 

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்கள் பூனையின் கையில் அகப்பட்ட கிளி போல கிழித்தெறி யப்படுவர்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த சண்டையில் அசுரர்கள் அழிந்தார்கள். அது போல, கடவுளை சிறிதளவு எள்ளி  நகையாடினாலும் அழிவு நிச்சயம் .

கோவிலை அழித்தாலோ , பூஜைகளை நிறுத்தினாலோ நாட்டுக்கும் தலைவனுக்கும் அழிவுதான் மிஞ்சும்— திருமூலர்

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே

அளிவுறு வார்அம ராபதி நாடி

எளியனென்று ஈசனை நீசர் இகழில்

கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.- திருமந்திரம்

*****

அப்பகை யாலே அசுரரும் தேவரும்

நற்பகை செய்து நடுவே முடிந்தனர்

எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்

பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே. -திருமந்திரம்

*****

கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்

வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை

முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்

வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே. -திருமந்திரம்

******

ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்

போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்

கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்

சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.– திருமந்திரம்

*****

முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வளம்குன்றும்

கன்னம் களவு மிகுத்திடும் காசினி

என்னரு நந்தி எடுத்துரைத் தானே.- திருமந்திரம்

****

HE WHO KNOWS NOT

He who knows not and knows not he knows not, he is a fool—shun him;

He who knows not and knows he knows not, he is simple—teach him;

He who knows and knows not he knows, he is asleep—wake him;

He who knows and knows he knows, he is wise—follow him!

(An ancient saying from the Middle East)

அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்

அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்

அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே

அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே. — திருமந்திரம்

இது அராபிய பழமொழியுடன் ஒப்பிடக்கூடிய நல்ல பாடல் . மேலும், பஞ்ச தந்திரக் கதைகளில் குரங்கிற்கு உபதேசம் செய்த குருவிக்கு என்ன நேர்ந்தது என்ற கதையையும் நினைவுபடுத்துகிறது.

அறியாமையில் உழல்பவர்களுக்கு அறிவுரை பகராதே; தூங்குகின்றவர்களை தட்டி எழுப்பு. உத்திஷ்டத ஜாக்ரத பிராப்யவரான் நிபோதத எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின்  என்ற  கடோபநிஷத் வாக்கியத்தையும் நினைவுபடுத்தும். ஆண்டாளும் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! என்று அல்லவா சொல்லி தட்டி எழுப்பினாள்!

*****

வள்ளலார் பாடல்கள் சிலவற்றை பள்ளிப் பருவத்திலேயே கற்கும் பாக்கியம் கிடைத்தது .நான் படித்த மதுரை வடக்கு மாசி வீதியில் யாதவர் பள்ளி இருந்தது. பெரும்பாலான ஆசிரியர்கள் பிராமணர்கள்; தமைமை ஆசிரியரோ உச்சுக்குடுமி வைத்து நாமம் போட்ட ஒரு அய்யங்கார். பெயர் எல்லாம் நினைவில்லை. அங்கு வகுப்பறைக்கு வெளியே மழை நீர் போக ஒரு தாழ்வாரம் உண்டு. எல்லா வகுப்பறைகளை இணைக்கும் தாழ்வாரம் அது. அங்கேதான் காலை நேர பிரார்த்தனை. ஒரு பிரியது PERIOD  முடிந்தவுடன் எல்லா வகுப்புகளுக்கும் கேட்பதற்கு மணி அடிக்கும் இடமும் அதுதான் . வாத்தியாரின் நன் மதிப்பை பெற்ற சீனியர் மாணவர் கனமான மணியைக் கையில் தூக்கி அடிப்பார். சேதுபதி உயர் நிலைப்பள்ளியில் வேறு மணி. பெரிய இரும்புப் பாளம் METAL BAR தொங்கும் அதில் ஒரு பியூன் போய் பெரிய கம்பியை  வைத்து அடிப்பார்.

யாதவாஸ்கூல் பற்றி மீண்டும் பார்ப்போம் ;

பள்ளிக்கூடமோ யாதவர் பள்ளி; கும்பிடுவதோ பத்து தப்படி தள்ளி இருக்கும் கிருஷ்ணர் கோவில். மறுபுறமோ ராமையாணச் சாவடி. ஆனால் பள்ளியில் பிரார்த்தனை “கல்லார்க்கும் கற்றவருக்கும் களிப்பருளும் களிப்பே”  என்ற வள்ளலார் பாடல். சில நாட்களுக்கு ஒரு change சேஞ் – சிவ பெருமான் மீது பொன்னர் மேனியனே – தேவார பாடல் .

அப்போது கற்ற வள்ளலார் பாடல் இன்றுவரை மறக்கவில்லை. அதற்குப் பின்னர் அப்பா சொல்லிக் கொடுத்த “முன்னவனே யானை முகத்தவனே”  என்ற கணபதி (வள்ளலார்) பாடல். பின்னர் வீட்டில் அப்பா செய்யும் பஜனையில் “அம்பலத்தரசே அரு மருந்தே” (வள்ளலார் )வந்து விடும். அவ்வப்போது வீட்டுக்கு வரும் சம்பந்த மூர்த்தித்தெரு நாடக நடிகர் மஹாதேவன் “அருட்சோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்- பொருட்சார் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்” (வள்ளலார்) என்பதைப் பாடிக்காட்டுவார் ; எல்லோரும் உருகிப்போவோம். அப்பாவுக்கு பல வள்ளலார் பாடல்கள் அத்துப்படி. எனக்கு  எங்காவது பஜனைப் பாடல் பாட ‘சான்ஸ்’ chance கிடைத்தால் நான் படுவது ‘“அம்பலத்தரசே அரு மருந்தே” தான். அடுத்த வீட்டு ஐயங்கார் வீட்டின் முன்புறம் Modern Scientific Company மாடர்ன் சைன்டிபிக் கம்பெனி . அதன் பின்புறம் வீட்டு ஓனர் Owner செல்லூர் அய்யங்கார் சீனிவாசாயங்கார். பலே  கிண்டல் பேர்வழி.

சத்ய சாயிபாபா படத்தில் விபூதி வருகிறது; பால் வருகிறது; தேன் வருகிறது என்று மதுரை முழுதும் பரபரப்பு. அவரிடம் அது பற்றிப் பேசினால் “டேய் மண்ணெண்னைக்கு ரேஷனில் கியூவில் நிற்கிறோமே; பாபா படத்தில் கெரசின் வந்தால் நன்றாக இருக்குமே!” என்பார். அவர் வீட்டிலும் நான் என் தம்பி முதலியோர் சென்று பஜனை செய்வோம். அப்போது என் பாட்டு அமபலத்தரசே …. தான்.

என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த வரிகள் “தும்பைப் பூ வை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே” என்ற வரியாகும் . அதைப் பாடிப் பாடி மகிழ்வார். ‘தும்பபைப் பூவாக பிறந்தால் சிவன் பாதத்தில் மலராகக் கிடக்கலாம்’ என்பது தாத்பர்யம் .

சென்ற முறை இந்தியா போனபோது என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. வடலூர் சென்று வள்ளலார் சந்நிதிகளை தரிசித்தேன் . மீண்டும் ஒருமுறை திருவருட்பா வாங்கினேன். மறந்து போன “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” பாடலை எல்லாம் மனப்பாடம் செய்தேன்.

–சுபம்—

Tags-, திருமூலர், எச்சரிக்கை, நாத்திகம்  ,நாத்தீகர் மீது, ஐந்து புலவர்கள்,கடும் தாக்கு, part-15,வள்ளலார், ஆராய்ச்சிக் கட்டுரை 15