Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விண்வெளிச் செய்தி
21-12-2024 கல்கிஆன்லைன் வெளியிட்ட கட்டுரை
உலக சாதனையை முறியடித்த சீன விண்வெளி வீரர்கள்!
ச. நாகராஜன்
நன்றி : படம் : சி எம் எஸ் ஈ ஓ
கங்கணம் கட்டிக் கொண்டு சீனா சந்திரனை அடைய தனது முன்னேற்றத்தை உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கிறது.
சீன விண்வெளி வீரர்கள் சீனாவுக்கான பிரத்யேக விண்வெளி நிலையமான டியாங்காங் நிலையத்திலிருந்து ஒன்பது மணி நேரத்திற்கும் அதிகமாக விண்வெளியில் நடந்து ஏற்கனவே உள்ள உலக சாதனையை முறியடித்துள்ளார்கள்.
10 நிமிட நேரம் அதிகம் நடந்து ஏற்கனவே உள்ள சாதனையை இவர்கள் முறியடித்தது குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயமாகும்.
சீன விண்வெளி வீரர்களான காய் ஸுயேஸேயும் சாங் லிங்டாங்கும் (Cai Xushe and Song Lingdong) சென்ஷோ 19 விண்கலத் திட்டத்தில் 2024 டிசம்பர் 16ம் நாள் திங்கள் இரவன்று விண்வெளி நிலையத்திலிருந்து வெளியே வந்து டிசம்பர் 17ம்நாளான செவ்வாயன்று காலை வரை நடை பயின்றனர்.
இதை சீனாவின் மனித இயக்க விண்வெளி பொறியியல் அலுவலகம் (CMSEO –Chinas’ Manned Space Engineering Office) உறுதிப்படுத்தி விட்டது.
இது முந்தைய சாதனையான EVA எனப்படும்எக்ஸ்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிடியை முறியடித்திருக்கிறது என்று நாஸாவும் அறிவித்து விட்டது. முந்தைய சாதனை எட்டு மணி நேரம் 56 நிமிடங்களாகும்.
நாஸா விண்வெளிக்கு அனுப்பிய அமெரிக்க விண்வெளிவீரர்களான ஜேம்ஸ் வாஸ் மற்றும் சூசன் ஹெல்ம்ஸ் ஆகியர் பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து வெளியே வந்து 2001 மார்ச் மாதம் இந்த சாதனையை நிகழ்த்தினர்.
டியாங்காங்கிற்கு சென்ஷோ 19 விண்கலமானது ஆறு மாதம் தங்குவதற்கான திட்டத்தோடு அக்டோபர் 29ம் தேதி வந்தது.
இந்த விண்வெளி நடையின் போது காய் ஸுயேஸேயும் சாங்கும் மிகுந்த நெருக்கத்துடன் சாதனையைச் செய்தனர். விண்கலத்தின் உள்ளேயிருந்து இன்னொரு வீரரான வாங் ஹாவோஸே அவர்களுக்கு உதவி செய்தார்.
விண்வெளி நிலையத்திலிருந்து ஒரு ரோபாட் கை உதவியது. கீழே பூமியில் தரை நிலையத்தில் அறிவியல் ஆய்வாளர்கள் விண்வெளி நிலையத்தின் குப்பையிலிருந்து பாதுகாக்கும் சாதனத்தை நிறுவி முடித்தனர். இதர பாதுகாப்புப் பணிகளையும் அவர்கள் நிறைவேற்றி உறுதி செய்தனர். இந்தச் செய்தியை முழுமையாக 17-12-24 செவ்வாய்க் கிழமையன்று சி எம் எஸ் ஈ ஓ (CMSEO) உறுதி செய்தது.
34 வயதான சாங் இந்த எக்ஸ்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிடி பணியைத் திறம்பட முடித்து விட்டார் என்று பெருமிதத்துடன் கூறியது.
இந்த விண்வெளி நடையை டிசம்பர் 17ம் தேதி ஜி எம் டி நேரம் இரவு 11.51 p.mக்கு சென்ஷோ கமாண்டரான காய் ஆரம்பித்தார். 90 நிமிடங்களுக்குப் பிறகு அவருடன் இணைந்தார் சாங்.
இருவரும் காலை 8.57க்கு மீண்டும் உள்ளே சென்றனர். அதாவது இந்த ஒன்பது மணி நேரம் ஆறு நிமிடங்கள் என்பது பழைய சாதனையை விட பத்து நிமிடங்கள் அதிகம் என்பதால் சீன வீரர்கள் புது சாதனையை உருவாக்கி விட்டனர்.
இது சீனாவின் விண்வெளி கலத்திலிருந்து வெளியே வரும் 17வது முயற்சியாகும்.
டியாந்ஹே (Tianhe) எனப்படும் அடிப்படை கலமானது 2021 ஏப்ரல் மாதம் விண்வெளியை அடைய இன்னும் கூடுதலாக வென்ஷியன் மற்றும் மெங்ஷியன் (Wentian and Mengtian) என்ற இரு கலங்கள் 2022 ஜூலை மற்றும் நவம்பரில் தாய்க் கலத்துடன் இணைந்தன. இது ‘T’ வடிவில் உள்ளது; பூமிக்கு வெளியில் உள்ள விண்வெளி நிலையமாக இது தன்னுடைய ஓடுபாதையில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சீனா சந்திரனின் மீது பதித்த தன் பார்வையை விடுவதாயில்லை.
வெவ்வேறு ஆயத்த பணிகளை மிகுந்த பொருள் செலவில் அது திறம்பட செய்து வருகிறது!
GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS
Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe
London Time 12 Noon
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
12-1-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி
ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்.
GNANAMAYAM SUNDAY BROADCAST 12-1-2025
VIA ZOOM, FACE BOOK, YOU TUBE
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES
***
Prayer by Somasundaram from Tirunelveli.
****
World Hindu News in Tamil was presented by Vaishnavi Anand from London
***
Bengaluru Nagarajan spoke on Swami Vivekananda
***
Mrs. Brahannayaki Sathyanarayan spoke on Dakshineswaram from Bengaluru
***
Interview with Nellai R C Raja, Editor, Health care Magazine.
London swaminathan based in Sydney interviewed Mr R C Raja .
***
Kalyanji anchored it.
***
If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.
It is on Every Sunday for one hour.
உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்
***
ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – தக்ஷிணேஸ்வரம் காளி கோவில்
***
பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு — ஸ்வாமி விவேகானந்தர்
***
சிறப்பு பேட்டி அளிப்பவர் – நெல்லை திரு R.C.ராஜா, ஆசிரியர், ஹெல்த் கேர் பத்திரிகை
ஹெல்த் கேர் பத்திரிகை பற்றி …….
இந்த பத்திரிகை ஒரு சேவை மனப்பான்மையை அடிப்படையாக கொண்டது. அதன் வளர்ச்சியின் முக்கிய பங்கு வகித்தவர்கள் பலர். விளம்பரதாரர்கள்,நுண்ணறிவு கொண்ட எழுத்தாளர்கள் மற்றும் மருத்துவர்கள். அவர்களது பங்களிப்பு ஆகியவை இன்று இந்த பத்திரிகையின் முன்னேற்றத்தை அடைய உதவியுள்ளது.
திரு.சந்தனம் நாகராஜன், திரு.சுவாமிநாதன், திரு.வெ. சுப்பிரமணியன், மூலிகை ஆர்வலர் திரு.குப்புசாமி, மருத்துவர் மகாதேவன் மற்றும் சொல்வனம் இணைய இதழ் ஆசிரியர் உள்ளிட்ட தலைமை எழுத்தாளர்கள் பணம் பெறாமல், தங்கள் திறமையை பகிர்ந்து மக்களின் ஆரோக்கியத்திற்கு அர்ப்பணித்துள்ளனர்.
இந்த பத்திரிகையில் மருத்துவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவர்கள் இல்லாவிட்டால், இந்த பத்திரிகையின் பெரும்பாலான வாசகர்களின் சந்தேகங்களையும்,கேள்விகளையும் தீர்த்து இருக்க முடியாது. மருத்துவத் துறையில் உள்ள தேர்ச்சி மற்றும் அனுபவம் கொண்டவர்கள் தங்கள் அறிவை வழங்கி, மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான புரிந்துணர்வு வழங்குவதன் மூலம் பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினர்.
இனிவரும் காலங்களிலும்,ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதன் பரவலான பயன்பாடு பற்றி மேலும் புதிய அறிவியல் முன்னேற்றத் தகவல் வழங்குதல் என்ற நோக்கத்தோடு, இந்த பத்திரிகை தொடர்ந்து மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை பரப்பும் பணியில் உள்ளது.
****
Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.
****
JOIN US ON SUNDAYS.
—subham—
TAGS- SUNDAY 12-1-2025 , summary GNANAMAYAM BROADCAST, three continents
Date uploaded in Sydney, Australia – 13 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
collected from popular newspapers and edited by me.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைவாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 12–ம் தேதி 2025-ம் ஆண்டு
****
நேயர்கள் அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துக்கள் !
மகர சங்கராந்தி , திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள் !
பொங்கலோ பொங்கல் !!!
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக !
****
முதலில் கும்பமேளா செய்தி!
மஹா கும்பமேளா மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்: யோகி ஆதித்யநாத் கணிப்பு
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பிரயாக்ராஜில், நாளை 13 ம் தேதி முதல் பிப்., 26 ம் தேதி வரை, 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா நடக்க உள்ளது. இது உலகின் மிகப்பெரிய விழா ஆகும்.
இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 45 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹா கும்பமேளாவுக்கு ரூ.5,000 கோடி செலவிடப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு முதல்வர் யோகி ஆதியநாத், இந்த மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழாவின் மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று பதில் கொடுத்துள்ளார்.
அரசுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், ஓட்டல்கள் உணவகங்கள் என அனைத்திற்கும் ஒரு நபருக்கு ரூ.5,000 என்று கணக்கிட்டால் கூட, வாரணாசியில் மட்டும் ரூ.80,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
அயோத்தி, பிரயாக்ராஜ், மதுரா உள்ளிட்ட நகரங்களின் வளர்ச்சியை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. மாறாக, சாதி, மதம், மொழியின் அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்தி பார்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள், என யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார்.
*****
கும்பமேளாவையொட்டி நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரெயில்
கும்பமேளா விழா வுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்றுலா ரயிலை இயக்க, இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) ஏற்பாடு செய்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து காசிக்கு 12 நாட்கள் சுற்றுலா செல்ல, நபர் ஒருவருக்கு ரூ, 26 ஆயிரத்து 850 வசூலிக்கப்படுகிறது என்று தெரிவித்தது. கட்டணத்திற்கு ஏற்ப ரயில் பயண வகுப்பு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதி ஆகியவை வழங்கப்படுகிறது.
“பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக காசிக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, சிறப்பு சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் இருந்து பிப்ரவரி 5 அதிகாலை 01.00 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்து, மதுரையிலிருந்து காலை 6 மணிக்கு காசிக்கு புறப்பட்டு, பிப்ரவரி 7 மதியம் 12.30 மணிக்கு காசி சென்றடைகிறது.
இதனையடுத்து, பிப்ரவரி 7 மாலை கங்கா ஆரத்தி பார்த்து, மறுநாள் (பிப்ரவரி 8) முழுவதும் பிராக்யாராஜ் பகுதியில் சுற்றுலா செல்லுதல். தொடர்ந்து, பிப்ரவரி 9 காசி விஸ்வநாதர், விசாலாட்சி, காலபைரவர், சாரநாத் கோவில்களுக்கு சுற்றுலா செல்லுதல். பிப்ரவரி 10 அயோத்தியா சரயு நதி மற்றும் ராம ஜென்ம பூமி கோயிலில் வழிபாடு செய்து, அன்று இரவு திருநெல்வேலிக்கு புறப்படும்படி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, சுற்றுலா ரயில் பிப்ரவரி 13 அதிகாலை 02.50 மணிக்கு மதுரை வந்து, மீண்டும் காலை 07.30 புறப்பட்டு திருநெல்வேலி சென்றடைகிறது.
அகில பாரதிய க்ராஹக் பஞ்சயத் அமைப்பின் சீரிய முயற்சியால் சென்னையில் இருந்தும் கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளன.
********
கோவில்களை விடுவிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் போராட்டம்
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து இந்தக் கோவில்களை விடுவிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் ஜனவரி ஐந்தாம் தேதி பெரிய போராட்டத்தினைத் துவக்கியுள்ளது கிறிஸ்தவ, முஸ்லீம் வழிபாட்டுத்தலங்களை அரசு கட்டு படுத்தவில்லை. இந்துக்கள் பெரும்பலானக வாழும் நாட்டில் இந்துக்கோவில்களை மட்டும் அரசு கட்டுப்பாட்டில் வைக்கக்கூடாது என்று பரிஷத் வாதாடுகிறது . கோவில் நிர்வாகம் பக்தியுள்ள பக்தர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதற்காக கிளர்ச்சி துவக்கப்பட்டுள்ளது .
பரிஷத்தின் போராட்டம் ஆந்திர மாநில விஜயவாடா நகரில் துவங்கியது.
கோவில் நிர்வாகம் எப்படி, யாரின் கீழ் இருக்க வேண்டும் என்ற விதி முறைகளை வகுத்துக் கொடுள்ள ப்பதற்காக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சமத்ய தலைவர்கள் அடங்கிய குழு ஒன்றினையும் அமைத்துள்ளது .
கோவில்களில் இந்து அல்லாதவருக்கும் சமய நமபிக்கை அல்லாதவருக்கும் வேலை கொடுக்கக்கூடாது ; முன்னரே உள்ள ஊழியர்களையும் நீக்க வேண்டும் என்றும் கோரியது
மாநில அளவில் தார்மீகக் கவுன்சிலை நிறுவி மாவட்டம் தோறும் கவுன்சிலின் கிளைகளை அமைக்கவும் தீர்மானித்தது ; இவைகள் தான் கோவில்களின் ட்ரஸ்டிக்களை– தர்ம கர்த்தாக்களைத் தேர்ந்தெடுக்கும் என்றும் கூறியது .
கோவில்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கடைகளை இந்துக்கள் மட்டுமே நடத்தவேண்டும் ; அந்த வருமானத்தை சமய பணிகளுக்கு மட்டுமே செலவழிக்க வேண்டும் என்பது பரிஷத்தின் மற்றோரு கோரிக்கை ஆகும்
******
கோயில் நிர்வாகத்தை ஆன்மீகவாதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் – அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்!
திருப்பரங்குன்றத்தில் ஆடு, சேவல்களை அறுப்போம் என கூறினால், தமிழகம் முழுவதும் முருக பக்தர்களை திரட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் பெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் நலன் வேண்டி திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகரில் உள்ள ஸ்ரீமுத்தாரம்மன் சாண்டி கோயிலில் நடைபெற்ற சண்டியாகத்தில், அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அறுபடை வீடான திருப்பரங்குன்றத்தில் உள்ள கந்தர் மலையை சிக்கந்தர் மலை எனக் கூறுவதுடன், ஆடு, சேவல் அறுப்போம் என கூறுவது தவறு என்று அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டார். அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்தும், தொடர் போராட்டம் நடத்துவது குறித்தும் திருப்பரங்குன்றம் முருக பக்தர்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
*****
கோவில் அருகே மாட்டுக்கறி பிரியாணி கடை; பொதுமக்கள் ஆவேச மறியல்
கோவை உடையாம்பாளையத்தில், கோவில் அருகே மாட்டுக்கறி பிரியாணி கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊர் மக்கள் ஆவேச மறியலில் ஈடுபட்டனர்.
கோவை உடையாம்பாளையத்தில் மாரியம்மன் கோவில், வீரமாச்சியம்மன் கோவில் மற்றும் கருப்பராயன் கோவில் உள்ளது. வீரமாச்சியம்மன் கோவில் முன்பு, சில நாட்களுக்கு முன்னர் தள்ளு வண்டியில் ஒருவர் மாட்டுக்கறி பிரியாணிக் கடை போட்டிருந்தார். இதற்கு ஊர் மக்கள் சார்பில் உள்ளூர் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
‘தங்கள் ஊரில், கோவில், பள்ளி அமைந்துள்ள பொது இடத்தில் மாட்டுக்கறி பிரியாணிக்கடை போடக்கூடாது; இது ஊர் கட்டுப்பாடு என்றும், கடையை தள்ளி அமைத்துக்கொள்ளும்படியும்’ ஊர் பிரமுகர்கள் வலியுறுத்தினர். இவ்வாறு வலியுறுத்திய பாரதீய ஜனதாக கட்சியின் நிர்வாகி சுப்பிரமணி என்பவருக்கும், மாட்டுக்கறி பிரியாணி கடை போட்டிருந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடை உரிமையாளர் கடையை வேறு இடத்திற்கு மாற்ற ஒப்புக் கொண்ட நிலையில், அவரது மனைவி ஆயிஷா, ‘கடையை மாற்ற முடியாது’ எனக்கூறினார். பா.ஜ., நிர்வாகி சுப்பிரமணி பேசியதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
போலீசார், மாட்டுக்கறி பிரியாணி விற்பனையை தடுத்ததாக சுப்ரமணி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த தகவல் பரவியதும், ஊர் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடையாம்பாளையம் மக்கள், கோவில் அருகே சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், மாட்டுக்கறி பிரியாணி கடை போட அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியும், தீர்மானம் நிறைவேற்றினர்.
*****
திருப்பதியில் இலவச தரிசன டோக்கனுக்காக குவிந்த பக்தர்கள் – கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு
திருப்பதியில் வெங்கடாசலபதி கோவிலில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 6 பேர் உயிரிழந்தனர் .
திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமானது வைகுண்ட ஏகாதசி விழா. மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். அதன்படி ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஜனவரி 19-ஆம் தேதி வரை பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜன 8 ஆம் தேதி விஷ்ணு நிவாஸம் பகுதியில் நடைபெற்ற இலவச டோக்கன் விநியோகத்தின் போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடியதால், பக்தர்கள் இடையே கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இந்த விபத்தில், சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். வட்டார போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ,ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ,திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
******
கோவில்களில் விஐபி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் – குடியரசு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்
ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் நாட்டின் மிகப்பெரிய’ வளாகத்தை’ ஜக்தீப் தன்கர் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி வைத்தார்.
விஐபி தரிசனம் என்ற எண்ணமே தெய்வீகத்திற்கு எதிரானது என்பதால், விஐபி தரிசன கலாச்சாரத்தை கோயில்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று குடியரசு துணை ஜனாதிபதி
கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் நாட்டின் மிகப்பெரிய ‘வரிசை வளாகத்தை’ குடியரசு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். இந்த வசதி ‘ஸ்ரீசாநித்யா’ என்று அழைக்கப்படுகிறது. இதனையடுத்து உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “ஒருவருக்கு முன்னுரிமை அளித்து விவிஐபி அல்லது விஐபி என்று முத்திரை குத்துவதுசமத்துவம் எனும் கருத்தை இழிவுபடுத்துகிறது. சமத்துவத்தின் பார்வையில் விஐபி கலாச்சாரத்திற்கு இந்த சமூகத்தில் இடமில்லை. கோவில்களில் விஐபி கலாச்சாரத்தை அகற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
அரசியல் தலைவர்கள் மற்றும் அரசில் உயர் பதவி வகிப்போரை மிக முக்கிய மானவர்கள் என்று கருதி தரிசனத்தில் அவர்களுக்கு முன்னுரிமை தருவது வி ஐ பி — அதாவது வெரி இம்பார்ட்டண்ட் பெர்சன் தரிசனம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னால்,
திருப்பதி மலையில் விஐபி கலாச்சாரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அறிவுறுத்தினார்
****
சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்படுகிறது.
சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. சபரிமலையில் மண்டல, மகர விளக்கு கால சீசன் தொடங்கியதும் எருமேலியில் பேட்டை துள்ளல் தொடங்கினாலும் மகரஜோதிக்கு முன்னோடியாக அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த இரண்டு குழுவினரும் பேட்டை துள்ளி முடிந்ததும் எருமேலியில் பேட்டை துள்ளல் நிறைவு பெறும்
பந்தளம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணங்கள் மகரஜோதி நாள் முதல், 5 நாட்கள் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும். சபரிமலையில் குடிகொண்ட ஐயப்பனை காண பந்தள மன்னர் ஆபரணங்களுடன் வந்ததை நினைவு கூறும் வகையில் இந்த திருவாபரண பவனி நடக்கிறது.
இது ஜன.14 மாலை 6:20 மணிக்கு சன்னிதானம் வந்தடையும்.
ஜன.13 ல் பம்பையில் பம்பை விளக்கும், பம்பை விருந்தும் நடைபெறும். ஜன. 14 காலை 8:45 மணிக்கு மகர சங்கரம பூஜையும், அன்று மாலை 6:30 மணிக்கு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது.
*****
மகாசிவராத்திரி: நெல்லையில் 16-ம் தேதி முதல் ஆதியோகி ரத யாத்திரை!
திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கூடங்குளம், அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் வரும் 16-ஆம் தேதி முதல் இந்த ரதம் பயணிக்க உள்ளது. அதனைத்தனைத் தொடர்ந்து 21-ஆம் தேதி தொடங்கி தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வலம் வர இருக்கிறது.
வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ஆதியோகி திருவுருவச் சிலையுடன் கூடிய திருத்தேரினை நூற்றுக்கணக்கான சிவாங்கா பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து கோவை வெள்ளியங்கிரி வரை கிட்டத்தட்ட 500 கிமீ தூரம் பாத யாத்திரையாக இழுத்து வர உள்ளனர். அத்தேரில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரின் திருவுருவச் சிலைகளும் இடம் பெற்று இருக்கும்.
******
அமெரிக்க எம் பி. பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம்
அமெரிக்காவில் இரண்டு சபைகளில் ஒன்றான அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினராக தேர்வாகிய இந்திய வம்சாவளி சுஹாஸ் சுப்ரமணியம் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்து உறுப்பினர் பதவியை ஏற்றார்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சுஹாஸ் சுப்ரமணியம், புனித இந்து நூலான பகவத் கீதையின் மீது பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இதற்கு முன்னர்,
அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஹிந்து அமெரிக்கரான துளசி கபார்ட்டு ம் பகவத் கீதையின் மீது சத்திய ப் பிரமாணம் செய்து பதவி ஏற்றது குறிப்பிட்டது தக்கது .
119-வது அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது 4 இந்து உறுப்பினர்கள் உள்ளனர். ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா மற்றும் ஸ்ரீ தனேதார்ஆகியோருடன் சுப்ரமணியமும் இந்த வரிசையில் இணைந்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினர் 3-வது பெரிய மத குழுவாக உள்ளனர். முதல் இடத்தில் கிறிஸ்தவர்கள் (461 பேர்), 2-வது இடத்தில் யூதர்கள் (32 பேர்) உள்ளனர். 3 புத்த மத உறுப்பினர்களும் உள்ளனர
அமெரிக்க அரசியலில் ஹிந்து- அமெரிக்கர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கான அடையாளம் இது.
******
ஆருத்ரா உற்சவ விழா
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று 12 -ஆம் தேதியும், நாளை 13 -ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.
நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னர், கொடி மரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல், நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் அடுத்துள்ள செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
******
தமிழக அரசுகோயில்களை முறையாக பராமரிப்பதில்லை –பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு!
கோயில்களை விட்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என அண்ணாமலை கூறியது அருமையான கருத்து எனவும், இதற்காகவே அவருக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வேண்டும் என்றும் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயில்கள் பாழடைந்து நிலையில் இருப்பதற்கு ஆளுங்கட்சியினரே காரணம் எனறும், தமிழக அரசு கோயில்களை முறையாக புனரமைப்பதில்லை எனறும் அவர் குற்றம்சாட்டினார்.
கோயிலுக்குள் செல்ல விரும்பாத ஸ்டாலின் அதை நிர்வாகம் செய்வது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அறநிலையத்துறை கோயில்களை விட்டு வெளியேற வேண்டும் என கூறியதாகவும், இதற்காக அவருக்க தனி மெஜாரிட்டி கிடைக்க வேண்டும் என பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.
*******
ராமேஸ்வரம் கோவில் உண்டியல் வசூல்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், ஒரு கோடியே 98 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக கோவில் இணை ஆணையர் தெரிவித்தார் மேலும், 50 கிராம் தங்கம், 7 கிலோ வெள்ளி, 158 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்தது
*****
இதோ ஒரு சுவையான செய்தி
தீப்பெட்டிக்குள் அடங்கும் இரு பட்டு சேலைகளை தயாரித்த பக்தர்!
ஆந்திர மாநிலம், திருப்பதியில் ஏழுமலையானுக்கு தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையிலான பட்டு சேலையை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.
சிரிசில்லாவை சேர்ந்த விஜய் என்பவர் நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் வெமுலவாடாவில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கும், திருப்பதி ஏழுமலையானுக்கும் தீப்பெட்டியில் அடங்கும் அளவுக்கு இரு பட்டுச் சேலைகளை நெய்துள்ளார்’குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசிக்க வந்த விஜய், தான் நெய்த பட்டு சேலையை காணிக்கையாக வழங்கினார்.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
பின்பு நின்னை அல்லால் – காளி – பிறிது நானும் உண்டோ!
– மகாகவி பாரதியார் புகழ் ஓங்குக
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது மேற்கு வங்க மாநிலத்திநன் தலைநகரான கொல்கத்தாவில் தக்ஷிணேஸ்வர் என்னும் பகுதியில் அமைந்துள்ள பவதாரிணி காளி கோவில் ஆகும். கொல்கத்தாவிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.
கொல்கத்தாவை விமானம் மூலமாகவும் ரயில் மூலமாகவும் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்து மூலமாகவும் அடையலாம்.
.ஹீக்ளி ஆற்றில் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.
இறைவன் : சிவன் மற்றும் கிருஷ்ணர்
இறைவி : பவதாரிணி அல்லது காளி மற்றும் ராதா
ஒன்பது விமானம் போன்ற அமைப்புகளைக் கொண்டு விளங்கும் இந்தக் கோவிலைச் சுற்றி வெளியிடமும் , அதைச் சுற்றியுள்ள மதிலின் உட்புறத்தில் பல அறைகளும் உள்ளன.
ஆற்றங்கரையில் பன்னிரண்டு சிறு கோவில்கள் உள்ளன.
கடைசியில் உள்ள சிவன் கோவிலுக்கு அருகே வடமேற்கு மூலையில் உள்ள ஒரு கூடத்தில் தான் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தார்.
இந்தக் கோவில் எழுந்ததைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
1847-ம் ஆண்டில் இப்பகுதியின் ஜமீந்தாரிணியாக விளங்கிய ராணி ராஸமணி தேவியார் புனிதத்தலமான காசிக்கு யாத்திரை ஒன்றை மேற்கொள்ள விரும்பினார். தேவையான பொருள்கள் சேகரிக்கப்பட்டு உறவினர்கள், வேலையாட்களுடனும் 24 படகுகளில் அங்கு செல்ல ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன.
கிளம்புவதற்கு முதல் நாள் ராணியார் கனவு ஒன்றைக் கண்டார். அதில் தோன்றிய காளி, காசிக்கு வந்து தரிசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், கங்கை ஆற்றங்கரையில் தனக்கென அழகிய கோவில் ஒன்றை நிர்மாணித்து அங்கேயே வழிபட்டால் போதும் என்றும் அருளுரை கூறினாள்.
உடனடியாக ராணியார் பெரும் நிலப்பகுதியை வாங்கிக் கோவிலை அழகுறக் கட்டி முடித்தார்.
1855ம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
கோவில் திறக்கப்பட்ட போது நாடு முழுவதிலுமிருந்து ஒரு லட்சம் அந்தணர்கள் விழாவைச் சிறப்பிக்க அழைக்கப்பட்டனர்.
கோவிலின் குருக்களாக ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் தமையனாரான ராம்குமார் நியமிக்கப்பட்டார்.
அவர் அடுத்த ஆண்டே காலமாகவே அந்த குருக்கள் பணியை இராமகிருஷ்ண பரமஹம்ஸர் மேற்கொண்டார். பரமஹம்ஸரின் தேவியார் அன்னை சாரதாமணி தேவியாரும் இங்கேயே வந்து குடியேறினார்.
அதிலிருந்து பரமஹம்ஸர் 1886-ம் ஆண்டு மறையும் வரையில் சுமார் 30 ஆண்டுகள் காளி கோவிலுக்கு குருக்களாக இருந்து கோவிலின் பெருமையையும் புகழையும் பெருமளவு உயர்த்தினார்.
கோவில் வங்காளக் கட்டிடக் கலையின் சிறப்பு அம்சமான நவரத்னா அல்லது ஒன்பது கோபுர பாணியில் அமைக்கப்பட்டது. மூன்று நிலைகள் கொண்ட தெற்கு நோக்கிய கோவிலாக இது அமைந்துள்ளது. இரண்டு நிலைகளில் நான்கு கோபுரங்களையும் முடிவில் ஒரு கோபுரத்தையும் கொண்டுள்ளது. 46 அடி சதுர வடிவில் உள்ள கோவில் 100 அடி உயரத்திற்கு மேல் இருக்கிறது. கோவிலை அடைய படிக்கட்டுகளும் உண்டு.
கோவிலின் கர்பக்ருஹத்தில் காளி தேவியின் சிலை உள்ளது.
லலிதா சஹஸ்ர நாமத்தில் 751வது நாமமாக அமைகிறது மஹாகாளீ என்ற நாமம். காலத்தின் முடிவைச் செய்கின்றவள் என்பதனால் காளீ என்ற பெயரை அம்பிகை பெறுகிறாள், காலனான மிருத்யுவிற்கும் முடிவு செய்வதனால் இவள் மஹா காளீ ஆகிறாள்.
பவதாரிணி என்று இங்குள்ள தேவி அழைக்கப்படுகிறாள். சிவபிரானின் மார்பில் தேவி நிற்கிறாள்.
இன்னும் இரண்டு சிலைகளும் வெள்ளியால் ஆன ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை சிம்மாசனத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரதான ஆட்- சலா என்ற வங்காள கட்டிடக் கலையில், கிழக்கு நோக்கி 12 சிவன் கோவில்கள் வரிசை, பிரதான சிவன் கோவிலுக்கு அருகில், ஹூக்ளி ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ளன.
கோவிலின் வடகிழக்கில் விஷ்ணு கோவில் உள்ளது. இதை ராதா காந்தர் என்றும் சொல்வர். இந்தக் கோவிலுக்குள் வெள்ளி சிம்மாசனத்தில் இருபத்தியொன்றரை அங்குலம் கொண்ட கிருஷ்ணருடன் 16 அங்குலம் உள்ள ராதையின் சிலையும் உள்ளது.
காளிகோவிலை நிர்மாணித்த ராணி ராஸமணி தேவியாருக்கும் இங்கு ஒரு சிறு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள பஞ்சவடி பகுதி மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். ஆல், அரசு, வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து மரங்கள் சூழ்ந்த இந்த பஞ்சவடி பகுதியில் தான் பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் மற்றும் பரமஹம்ஸரின் இதர சீடர்கள் ஆன்மீக சாதனையை மேற்கொண்டனர். பரமஹம்ஸர் அருளால் விவேகானந்தர் காளியை தரிசனம் செய்து உத்வேகம் பெற்று பாரதத்தை எழுச்சி பெறச் செய்தார். அப்படிப்பட்ட புண்யமான திருத்தலம் இதுவே என்பதை யாராலும் மறக்க முடியாது.
பல்லாண்டுகளாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பவதாரிணி தேவியும் கிருஷ்ணரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
1969ம் ஆண்டு அபல்லோ 11 விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்களின் அனுபவத்தை அப்படியே பெற ஒரு புதிய கைக்கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர கடிகாரத்தின் (MOON WATCH) அளவு 38.1 x 44.2 x13.05 mm தான். விலை 818 டாலர்கள்.
இரண்டு வண்ணத்தில் இதன் ஸ்ட்ராப் கிடைக்கிறது.
ஐந்து வருட காலம் கஷ்டப்பட்டு உழைத்து இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.
சந்திரனை நோக்கிச் சென்ற அபல்லோ 11 விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் சென்ற போது அனைத்து விதமான தகவல் தொடர்புக்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் இரண்டு ப்ரீஃப் கேஸ் அளவுள்ள கம்ப்யூட்டர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. இரண்டு பெரிய அறைகள் தேவைப்படுகின்ற அளவு இருந்த கம்ப்யூட்டர்கள் விண்வெளிப் பயணத்திற்காக அதே திறனுடன் இந்தச் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டன.
இந்தச் சிறிய சாதனங்களை வைத்துத் தான் அவர்கள் வெற்றிகரமாகப் பயணத்தை முடித்தார்கள்.
ஐம்பத்தைந்து வருடங்கள் கழித்து அபல்லோ இன்ஸ்ட்ருமென்ட்ஸ் என்ற நிறுவனம் இந்த அபல்லோ கைடன்ஸ் கம்ப்யூட்டரை (AGC – Apollo Guidance Computer) கையில் அணிந்து கொள்ளும் ரிஸ்ட் வாட்ச் அளவுக்குச் செய்வதில் வெற்றி கண்டு விட்டது. யார் வேண்டுமானாலும் இதை இப்போது கையில் அணிந்து கொள்ளலாம். டிஸ்க் கீ என்று உச்சரிக்கப்படும் டிஸ்ப்ளே கீ போர்டு சிஸ்டம்(DSKY – Display and Keyboad System) ஒன்றை வைத்துத் தான் விண்வெளி வீரர்கள் ஆணைகளைப் பிறப்பித்தார்கள். இதை அணிபவர்கள் அவர்களைப் போலவே பேசிக் கொள்ளலாம்;சந்திரனுக்குப் பறக்கலாம்! (ராக்கெட், விண்கலம் இல்லாமல் தான்!)
அபல்லோ இன்ஸ்ட்ருமெண்ட்ஸின் உயர் தலைமை அதிகாரியான மார்க் க்ளேடன் (Mark Clayton) அபல்லோ விண்வெளி வீரர்கள் உபயோகித்தது போல ஒன்றை ஆப்பீள் வாட்சாக உருவாக்க முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே இருந்தார். அவர் ஒரு விண்வெளி ஆர்வலர். சிந்தித்ததைச் செயலில் கொண்டு வந்தார்.
ஒரிஜினல் வரைபடங்களை வாங்கிய ஒரு பெரும் குழு இதைத் தயாரிக்க ஆர்மபித்தது. இதில் இரண்டு ஃபார்முலா 1 பொறியாளர்களும் இணைந்தனர்..
ஆயிரக்கணக்கான பஞ்ச் கார்டுகளை விண்வெளியில் எப்படி உபயோகிக்க முடியும்? ஆகவே இதை உருவாக்கிய நிபுணர்கள் எண்களைப் பயன்படுத்தினர். இந்த நம்பர்களே பெயர்ச்சொல் (NOUNS) மற்றும் வினைச்சொல் (VERBS) ஆகிய குறியூடுகளைக் குறிக்க உதவின.
இதன் மூலம் கடிகாரத்தில் மணியையும் அவ்வப்பொழுது மாற்றிக் கொள்ளலாம். 200 வினைச்சொல் மற்றும் பெயர்ச்சொற்கள் அப்போது உபயோகிக்கப்பட்டன.
4:6:1 என்ற ஸ்கேல் அளவில் இது சுருக்கப்பட்டு இப்போதுள்ள கடிகார அளவில் சந்தைக்கு வருகிறது.
இதை அணிந்து கொண்டு தங்கள் கம்ப்யூட்டரில் விண்ணில் ஏவப்படும் விண்கல மாதிரியான ஸ்பேஸ் ஃப்ளைட் சிமுலேடருடன் இதை இணைத்து விண்ணில் பறக்க ஆரம்பிக்கலாம்.
இதன் உள்ளே இருக்கும் எல் ஈ டி விளக்குகள் விண்வெளி வீரர்கள் உபயோகித்தபோது எந்த வண்ணத்தில் ஒளி வந்ததோ அதே போல வருவதற்காக பில்டர்களும் இதில் அமைக்கப்பட்டுள்ளன.
அபல்லோ 11 விண்கலமானது 1969 ஜூலை மாதம் 16ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இது 1969 ஜூலை மாதம் 24ம் தேதி பூமிக்குத் திரும்பியது.
இதில் தான் சந்திரனில் முதலில் காலடி பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்கு ஏகினார். அவருடன் மைக்கேல் காலின்ஸும் எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர்.
ஜூலை மாதம் 20ம் தேதி இரவு 10.56க்கு நிலவில் இறங்கி ஆர்ம்ஸ்ட்ராங் நடந்தார். புதிய சரித்திரத்தைப் படைத்தார்!
1969ல் விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குப் பறந்த அனுபவத்தை 55 ஆண்டுகளுக்கும் பின் கையில் கடிகாரம் அணிந்து கொண்டே பெற முடியும் என்பது ஒரு அறிவியல் அதிசயம் அல்லவா?
Date uploaded in Sydney, Australia – 12 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மருந்து மரங்கள்
பல தாவரங்களை பழங்குடி மக்கள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துவது குறிப்பிடத் தக்கது
ஆஸ்திரேலியாவில் விசித்திரமான விலங்குகள் மட்டுமின்றி விநோதத் தாவரங்களும் இருக்கின்றன. இந்த நாட்டிற்குள் அனுமதியின்றி புதிய தாவரங்களையோ விதைகளையோ எவரும் கொண்டுவர முடியாது; வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தில் நிரப்பவேண்டிய அட்டைகளைலும் இது பற்றிய கேள்விகள் இருக்கும் அவைகளில் YES எஸ் /இருக்கிறது என்று சொன்னால் கஸ்டம்ஸ் அதிகாரிகள் உங்களை முழு அளவு சோதனை செய்வார்கள்; ஆஸ்திரேலியாவின் தனிப்பட்ட புறச்சகுழலைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை ; சாலையின் இரு மருங்கிலும் இந்தியாவின் கேரள மாநிலம் போல மரங்கள், செடிகள் இருக்கும்; ஒரே வித்தியாசம்; இங்கே மிக உயரமான மரங்கள் .
நாம் எல்லோரும் யூகாலிப்டஸ் என்னும் தலைவலித் தைலத்தை உபயோகிக்கிறோம். இந்த யூகாலிப்டஸ் மரத்தையும் இந்தியாவில் காணலாம்; ஆனால் இதில் 900 வகைகள் உண்டு என்பது நமக்குத் தெரியாது. அவைகளில் ஐம்பது வகை மரங்களின் இலைகளை மட்டுமே கோவாலா என்னும் ஆஸ்திரேலிய மரக்கரடிகள் சாப்பிடுகின்றன. அவைகளுக்குக்கூட இதன் வேறுபாடுகளும் வகைகளும் தெரியும்!
Australia enjoys an estimated 24,000 species of Australian native plants.
ஆஸ்திரேலியாவில் மட்டும் 24,000 வகை புதிய வகைத் தாவரங்கள் இருக்கின்றன. இவை அதிக தண்ணீரும் ,உரங்களும் இல்லாமல் வீட்டுத் தோட்டங்களில் கூட வளரும் ;புறச்சூழலைக் காப்பதோடு இந்த கண்டத்துக்கே உரிய விலங்குகள் பறவைகளையும் இவை காப்பாற்றுகின்றன.
ஆஸ்திரேலிய அதிசயங்களில் ஒன்று உலகிலேயே உயரமான மரம் ஆகும் யூகாலிப்டஸ் மரம். இதன் உயரம் 330 அடி. இதன் பெயர் செஞ்சூரியன் டாஸ்மேனியா தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. யூகலிப்டஸ் கோந்து போன்ற திரவத்தைச் சுரப்பதால் இவைகளை கோந்து மரம் . Gum trees got their name from their gummy tree sap என்றும் சொல்லுவார்கள்; அவற்றின் அடி மரம் சேதப்படுகையில் கோந்து போன்ற பசையைச் சுரக்கின்றன.
மலர்களில் இதழ்கள் இலலாமல் மகரந்த கேசரம் மட்டும் நீட்டிக்கொண்டு இருக்கும் விதைகளும் உண்டு.
Gum tree leaves are full of a substance called cineole.
அவை சுரக்கும் சினியோல் என்னும் ரசாயனம் மனிதர்களுக்கு விஷம் போன்றது கோவாலா, போஸ்ஸம் போன்ற பிராணிகள் மட்டுமே அதைத் தாங்கி நிற்கும்
இந்த சினியோல் இருப்பதால்தான் பூச்சிகளை விரட்டவும் தலைவலி உடல் வலியைப் போக்கவும் நாம் இதைப் பயன்படுத்துகிறோம்.
The best didgeridoos are made from eucalyptus wood.
ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் இந்த வகை மரத்திலிருந்துதான் டிட்ஜரீடு இசைக் கருவிகளைத் தயாரிக்கின்றனர்.
இவைகளில் பெரும்பாலான வகை மரங்கள் பசுமையாகக் காணப்படும்.
இவைகளில் மிகவும் அரிய வகையை நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்தனர் பனியுக மரம் என்று அதற்குப் பெயர் இதுவரை அவ்வகையில் ஆறு மரங்களைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
புகழ்பெற்ற சிட்னி நகரம் இருக்கும் மாகாணம் நியூ சவுத் வேல்ஸ் ; அதன் தேசீய சின்னம் வரதா மலர் ; 125 ஆண்டுகளுக்கு முன்னர் இதுதான் ஆஸ்திரேலிய தேசீய மலராகவும் இருந்தது
இதை வரம் தரும் மரம் என்றாலும் பொருந்தும். காரணம் என்னெவெனில் தாய்ப் பால் இல்லாத, கிடைக்காத பெண்கள் இதன் தேனையே குழந்தைகளுக்கு கொடுத்து வளர்க்கின்றனர் நாம் இப்போது பால் பவுடர் கலந்து கொடுப்பது போல இவைகளைக் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள் பழங்குடி மக்கள்.
இதில் வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கிறது; பெரும்பாலும் செவ்வண்ண பூக்களுடன் இருந்தாலும் பல நிறங்களில் வளரும் செடிகளும் உண்டு தேன் சுரப்பதால் நிறைய பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இது உணவு ஆகிறது. மன அழுத்தம் மனக் கவலையைப் போக்கவும் இதன் தேன் பயன்படுகிறது .
Aboriginal mothers would use the nectar of the Waratah as an alternative food source for babies not getting enough milk from mothers or when weening off the breast. The nectar was also used to relieve anxiety and stress.
இவைகளில் ஐந்து வகைகள் உள. இவைகளின் ஒரு குணம் காட்டுத் தீயையும் கடந்து வாழ்வதாகும் .
****
டைனசோரஸ் மிருகங்களைவிடப் பழமையான மரங்கள்
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசரஸ் என்ற ராட்சத மிருகங்கள் பூமியிலிருந்து மறைந்தன. அந்தக் காலத்தில் வாழ்ந்த தாவரங்கள் கிரேவில்லியாஸ் எனப்படும் சிலந்தி மலர் மரங்களாகும் இவ்வகை மலர்கள் கண்டங்கள் உடைந்து பிரியும் முன்னிருந்த கோண்ட் வானா (காண்டவ வனம் என்பதன் மருவு) நிலப்பரப்பினைச் சேர்ந்தவை இப்போது தென் ஆப்பிரிக்காவிலும் இவ்வகை செடிகள் இருப்பதால் இதைக் கண்டு பிடித்தனர்
இவைகளில் முன்னூறு வகை உண்டு.
Grevilleas have an ancestry older than dinosaurs
Australian native grevilleas, also known as spider flowers, include more than 300 species.
சிலந்தியின் கால்களை போல நான்கு குழல்வடிவ இதழ்கள நீட்டிக்கொண்டிருக்கும்
Grevilleas have an ancestry older than dinosaurs. They originated on the super-continent Gondwana, and are closely related to banksias, waratahs, and the proteas of Southern Africa.
இந்த மலர்களில் இனிய திரவம் சுரப்பதால் பழங்குடி மக்கள், இவைகளிலிருந்து பானங்களைத் தயாரிக்கிறார்கள்
ஆனால் இந்த மலர் வகைகளில் சில விஷம் உள்ளவை ஆகையால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். சில்கி ஓக் silky oak (Grevillea Rrobusta) என்னும் விஷ சத்துள்ள மரம் முப்பது மீட்டர் உயரத்துக்கு வளரும்.
Some types or cultivars of grevillea have poisonous nectar that contains cyanide.
பறவைகளும் பட்டுப்பூச்சிகளும் தேனீக்களும் இந்த மலர்களை நாடி வந்து வட்டமிடுகின்றன.
****
பியர் பானம் தரும் மரம்
Hop bush was used for brewing beer
ஹாப் புஷ் என்னும் தாவரம் ஆஸ்திரேலியா ,முழுதும் வளர்கின்றன. கசப்பான விதைகளை எடுத்து குடி பானம் தயாரித்தனர்
பழங்குடி மக்களில் சிலர் இதை வலி நிவாரணியாகவும் பயன்படுத்துகின்றனர். .
இது விரைவில் வளரும் தாவரம் என்பதோடு தேனை அதிகம் சுரப்பதால் தேனீ வளர்ப்போரும் இதை வளர்க்கின்றனர்.
****
The Lily Pilly ‘லில்லி பில்லி ’ என்னும் செடிகளில் பல வகைகள் உள்ளன. இவற்றின் பழ ங்களை சாப்பிட்டாலாம்; ஜாம் செய்யலாம் . பலவகை நோய்களுக்கும் இது மருந்து. வேலியில் வளரும்; இதில் பறவைகளும் கூடு கட்டி வசிக்கின்றன .
****
கங்காரு பாதம் Kangaroo paws (Anigozanthos sp.)
இன்னொரு செடிக்குப் பெயர் கங்காரு பாதம் இவற்றின் மலர்கள் கங்காரு பாதம் போல இருக்கும் ; இந்த மலர் மேற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தின் தேசீய மலர்.
இவைகளின் கிழங்குகளை பழங்குடி மக்கள் உணவாகச் சாப்பிடுகிறார்கள்; அவற்றில் ஸ்டார்ச் என்னும் மாவுச் சத்து அதிகம் இருக்கிறது. இவைகளை மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர் .
இவைகளை பல்வேறு பழங்குடி மக்கள் பல பெயர்களில் அழைக்கின்றனர் அவை ‘Nollamara’, ‘Kurulbrang’ and ‘Yonga Marra’.
நல்ல மர்ரா , எங்க மர்ரா குருளைபரங்கா .
இவைகள் தமிழ்ச் சொற்களாகவும் இருக்கலாம்.
நல்ல மரம் , எங்கள் மரம் என்று தொனிப்பதைக் கவனிக்கவும்.
****
ஆஸ்திரேலிய ஜிவந்தி /ஜவந்திப் பூ டெய்சி everlasting daisy/(Xerochrysum).இவை பட்டுப்பூச்சிகளுக்கும் தேனீக்களுக்கும் உதவும் மலர்ச் செடிகள். இவைகளின் மகரந்தத்துக்குள் தூள் பல பூச்சிகளுக்கு உணவாகும் .
***
பாட்டில் பிரஷ்The bottlebrush (Callistemon) is medicinal
பாட்டில்களைச் சுத்தப்படுத்துவதற்கு நாம் பயன்படுத்தும் பிரஷ் போல இருப்பதால் இவைகளை இப்படி அழைக்கிறார்கள் ; ஆயினும் பழங்குடி மக்களின் மொழியில் வேறு பெயர்கள்.
இவைகளில் ஐம்பது வகைகள் இருக்கின்றன இவைகளை மருந்தாகவும் உபயோகிக்கின்றனர். காக்காட்டு போன்ற பறவைகளும் , குருவிகளும் இவற்றின் விதைகளை சாப்பிடும். பூக்களில் தேனும் சுரப்பதால் அவைகளும் தேன்சிட்டுகளுக்கு உணவு.
இவை கடினமான வலுவான தாவரங்கள் என்பதால் எளிதில் அழியாது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சக்காளான் , தொற்றுக் கிருமிகளால் வரும் நோய்களுக்கு இவற்றைக் காலாகாலமாகப் பயன்படுத்துகின்றனர்.bacterial, fungal, viral and parasite infections.
****
ஆயிரம் வகை கருவேல மரங்கள் .There are over 1000 types of Australian wattle (Acacia) இந்தியாவிலும் முள் உள்ள வேல மரங்கள் பல வகை; இதே போல ஆஸ்திரேலியாவிலும் ஆயிரம் வகைகள் இருக்கின்றன; தாவர இயல் படித்தோர் இதை அகேஷியா குடும்பம் என்பர்
ஒரு வகை பொன்னிற மலர்கள் உடைய அகேஷியா மரத்தின் பூக்கள்தான் ஆஸ்திரேலியாவின் தேசீய மலர்ச் சின்னம் இந்தியாவுக்கு தாமரை மலர் இருப்பது போல .
The Golden Wattle (Acacia pycnantha) is Australia’s national floral emblem
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ அடிக்கடி ஏற்படுகிறது அத்தகைய இடங்களில் உடனே வளர்வது இந்த வேல மர வகைதான்.
எறும்புகளுக்கும் வேல மரங்களுக்கும் தனி உறவு உள்ளது ; இதன் விதைகளை எறும்புகள் தங்கள் வசிப்பிடங்களுக்குக் கொண்டு சென்று, மேலேயுள்ள எண்ணைப்பத சதையை மட்டும் சாப்பிட்டுவிட்டு விதைகளை விட்டுவிடும்; அவை மீண்டும் முளைக்கின்றன. பறவைகளும் வண்டுகளும் தேனீக்களும் இந்த மலர்களை நாடிவருகினறன
வேல மரங்கள் நைட்ரஜன் வாயுவை ஈர்த்து வேர்களில் சேமித்து உரமாகவும் அளிக்கின்றன.
****
இரவு ராணி பான்ஸ்கியா
The Native banksias are nocturnal
இந்த வகை மலர்ச் செடிகளில் 173 Banksia வகைகள் இருக்கின்றன. பெரும்பாலானவை ஆஸ்திரேலியாவில் மட்டுமே உள; மரங்களாக வளரும் இவை இரவி வு நேரத்தில் மணத்தைப் பரப்புவதால் வவ்வால் முதல் ஓபோசம்வரை இரவு நேரத்தில் உலவும் பிராணிகள் (Honey Possum, pygmy possums, gliders, and bats) அங்கே வருகின்றன. பல வண்ண மலர்களில் உள்ள தேனை உறிஞ்சசுகின்றன; இவைகளில் சில வகை தரைகளை ஒட்டி வளரும் . cockatoos, காக்காட்டு பறவைகள் மலரின் பல பகுதிகளையும் விதைகளையும் உண்ணும்.
பழங்குடி மக்கள் இவைகளின் மலர்த் தேனை அருந்துவதோடு ஒரு வித பானத்தைத் தயாரிக்கவும் மலர்களைப் பயன்படுத்துகின்றன. மருந்தாகவும் உபயோகிக்கின்றனர்.
வீட்டில் ரொட்டியைச் சுட்டால், ரோஸ்ட் செய்தால் என்ன மணம் வருமோ அந்த மணத்தை மலர்கள் வெளியிடுகின்றன !
****
There are 107 orchid genera containing more than 1200 species growing in Australia. Most are unique to this country.
ஆஸ்திரேலிய ஆர்க்கிட் மலர்கள்
ஆர்க்கிட் மலர்கள் , மழை வனக் காடுகளில் மட்டுமே வளரும் இப்போது பலரும் விற்பனைக்காகவும் அழகிற்காகவும் வளர்ப்பதால் அரிய தாவரங்கள் எளிதில் கிடைக்கின்றன. 107 பிரிவுகளை சேர்ந்த எண்ணூறு வகைகளை தாவர ஆர்வலர்கள் வளர்க்கின்றனர் இவைகளில் பெரும்பாலானவை இந்த நாட்டுத் தாவரங்கள் ஆகும்.
இவைகளில் பெரும்பாலானவை மரக்கிளைகளில் உள்ள இடுக்குகளிலும் பாறை இடுக்குகளிலும் வளரும்; வேர்கள் தொங்கிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் காடுகளில் பத்து புதிய வகை ஆர்க்கிட் மலர்களைக் கண்டு பிடிக்கிறார்கள்;
—subham—
Tags- வினோத தாவரங்கள், யூகலிப்டஸ், தாய்ப்பால், பியர், தேன், ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 3, மருந்து மரங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விவேகானந்தர் அவதார தினம் : 12-1-1863
சமாதி : 4-7-1902
ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் சில சுவையான சம்பவங்கள்!
ச. நாகராஜன்
ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஒவ்வொன்றும் ஒரு உண்மையை வெளிப்படுத்தும்.
அவற்றில் சில இதோ:
1
இந்தியாவை நேசி!
ஸ்வாமி விவேகானந்தர் அல்மொராவில் இருந்த போது நடந்த சம்பவம் இது:
அங்கிருந்த மேலை நாட்டு பக்தையான மெக்லவுட் ஸ்வாமிஜியிடம், “ஸ்வாமிஜி, உங்களுக்கும் மிகச் சிறப்பாக சேவை செய்ய வேண்டும் எனில் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
உடனே ஸ்வாமிஜி, “இந்தியாவை நேசி!” என்று பதில் அளித்தார்.
ஸ்வாமிக்கு இந்தியா மீது இருந்த அளவு கடந்த அன்பு இப்படி அவ்வப்பொழுது வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது!
2
குரு தட்சிணை!
ஸ்வாமிஜி 1899 ஆகஸ்ட் 28ம் தேதியன்று நியூயார்க்கை அடைந்தார்.
நியூயார்க்கிலிருந்து 80 மைல் தொலைவில் இருந்த ரிஜ்லிமேனரில் (RIDGELY MANOR) அவரும் துரியானந்தரும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது ஒரு பெரிய வீடு.
அங்கு இருந்தவர்களில் ஒருவர் மிஸ் ஸ்டம். அவர் ஒரு ஓவியர். ஒரு நாள் ஸ்வாமிஜி அவரிடம், “சும்மா இருப்பதை விட ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபட விரும்புகிறேன். நீங்கள் ஏன் எனக்கு ஓவியம் கற்றுத் தரக் கூடாது?” என்று கேட்டார்.
ஸ்டம் உடனடியாக அதற்கு இசைந்தார்., தேவையான பொருள்கள் வாங்கப்பட்டன. ஓவியப் பயிற்சி தொடங்குவதற்கு ஒரு நாளும் குறிக்கப்பட்டது. குறித்த நாளில் குறித்த நேரத்தில் ஸ்வாமிஜி சென்றார். கையில் ஒரு சிவந்த ஆப்பிளை எடுத்துச் சென்ற அவர் பணிவுடன் தலை வணங்கியபடி அதை ஸ்டம்மிடம் குரு தட்சிணையாகத் தந்தார்.
ஸ்டம்முக்கு ஒன்றும் புரியவில்லை. இது என்ன என்று அவர் கேட்க, ஸ்வாமிஜி, “நான் உங்கள் மாணவன். பாடங்கள் பலன் அளிப்பதற்காக இதனை தட்சிணையாக நான் உங்களுக்குத் தருகிறேன்” என்றார்.
மிக விரைவாக ஓவியக் கலையைக் கற்றுக் கொண்ட அவர் சிறப்பாக ஓவியம் வரையத் தொடங்கினார்.
வியந்து போனார் ஸ்டம்.
அவர் எழுதினார்:
“எத்தைகைய மாணவர் அவர்! எதையும் ஒரு முறை சொன்னால் போதும். அப்படியே அதைப் பிடித்துக் கொள்வார். அவரது மனஒருமைப்பாடும் நினைவாற்றலும் அபாரமானவை. அவர் வரைந்த ஓவியங்களை ஏதோ அதைக் கற்கும ஒருவர் வரைந்ததாக நினைக்க முடியாது. அப்படி அவை சிறப்பாக இருந்தன”
3
நைனிடாலைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியர் சர்பரஸ் ஹூஸைன் என்பவர், அவர் அத்வைத வேதாந்தத்தின் பால் ஈர்க்கப்பட்டார். ஸ்வாமிஜியால் அவர் மிகவும் கவரப்பட்டார். ஒரு நாள் அவர் ஸ்வாமிஜியிடம், “ ஸ்வாமிஜி! நீங்கள் ஒரு அவதார புருஷர் என்று இனி வரும் காலத்தில் மக்கள் கொண்டாடும் போது ஒன்றை மட்டும் நினவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படிக் கொண்டாடிய முதல் மனிதன் முஸ்லிமாகிய நான் தான்” என்றார்.
தனது பெயரை அவரை முகம்மதானந்தர் என்று மாற்றி வைத்துக் கொண்டார். அவரைச் சந்தித்த நாளிலிருந்து தன்னை அவரது சீடராகவே கருதினார்.
அவருக்கு ஸ்வாமிஜி எழுதிய கடிதத்தில் வேதாந்தம் மற்றும் இஸ்லாமிய சங்கமத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
வேதாந்த மூளை, இஸ்லாமிய உடல் – இதுவே நம் தாய்நாட்டிற்கான ஒரே நம்பிக்கை என்றார் ஸ்வாமிஜி!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-1-2025 ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களிலிருந்து ஞாயிறு தோறும் (இந்திய நேரம் மாலை 5.30 மணிக்கு) ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை
திருமந்திர நூலானது பாயிரத்தில் அவையடக்கம், ஆகமச் சிறப்பு, வேதச் சிறப்பு உள்ளிட்ட ஒன்பது பகுதிகளைக் கொண்டது.
முதல் தந்திரத்தில் அன்புடைமை, கல்வி, கொல்லாமை, தானச்சிறப்பு உள்ளிட்ட 24 பகுதிகளையும், இரண்டாம் தந்திரத்தில் கரு உற்பத்தி, குரு நிந்தை, சிவ நிந்தை, தீர்த்தம் உள்ளிட்ட 25 பகுதிகளையும் மூன்றாம் தந்திரத்தில் அட்டமா சித்தி, அட்டாங்க யோகம், பிராணாயாமம் உள்ளிட்ட 20 பகுதிகளையும் நான்காம் தந்திரத்தில் அர்ச்சனை, நவகுண்டம், பைரவி மந்திரம் உள்ளிட்ட 13 பகுதிகளையும் ஐந்தாம் தந்திரத்தில் கிரியை, சரியை, சன்மார்க்கம், சாமீபம், சாயுச்சியம் உள்ளிட்ட 20 பகுதிகளையும் ஆறாம் தந்திரத்தில் சிவகுரு தரிசனம், சிவ வேடம் திருவடிப்பேறு உள்ளிட்ட 14 பகுதிகளையும் ஏழாம் தந்திரத்தில் அடியார் பெருமை, கூடா ஒழுக்கம், சிவலிங்கம் உள்ளிட்ட 38 பகுதிகளையும் எட்டாம் தந்திரத்தில் உடல் விடல், பத்தியுடைமை, முக்குற்றம், மும்முத்தி உள்ளிட்ட 43 பகுதிகளையும் ஒன்பதாம் தந்திரத்தில் ஊழ், ஒளி, தோத்திரம், வாழ்த்து உள்ளிட்ட 23 பகுதிகளையும் கொண்டுள்ளது. மொத்த பகுதிகள் 229.
தந்திரம் என்பது ஆகமத்தின் வேறொரு பெயராகும். ஒன்பது ஆகமங்களில் உள்ளவற்றை இந்தத் தந்திரங்கள் கொண்டுள்ளன.
திருமந்திரம் ஒரு யோகானுபவ நூல். குரு மூலமாகவே இதனுடைய முழு அர்த்தத்தையும் நாம் உணர முடியும்.
திருமூலர் நெடுங்காலம் உயிர் வாழ்ந்தவர் என்பதை
‘தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகம் இருந்தேனே – திருமந்திரம் பாடல் 74
என்பதாலும்
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி என்ற எண்பதாவது பாடலாலும் அறிய முடிகிறது.
இவரை சிவபிரான் தன்னை நன்றாகத் தமிழில் பாடுவதற்காகவே படைத்தான் என்பதை இவரே
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே (பாடல் 81)
என்று கூறி இருக்கிறார்.
அற்புதமான திருமந்திரம் 3000 பாடல்களில் சில முக்கியமான அடிகளை இப்போது பார்ப்போம்:
சிவனொடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை – 3
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் – 85
பதியினைப் போற் பசு பாசம் அனாதி – 115
ஒருமையுள் ஆமை போல் உள் ஐந்தடக்கி
இருமையுங் கேட்டிருந்தார் புரை அற்றே – 133
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே – 145
வேதாந்தமானது வேட்கை ஒழிந்திடம் – 229
நல்லாரைக் காலன் நணுக கில்லானே – 238
வேட நெறி நில்லார் வேடம் பூண்டு என் பயன்? – 240
ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் – 250
அன்போடுருகி அகங்குழைவார்க்கன்றி
என்போன் மணியினை எய்த ஒண்ணாதே – 272
பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின் – 298
ஈசனடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் – 534
பெரியாருடன் கூடல் பேரின்பமாமே – 545
உடம்பால் அழியில் உயிரார் அழிவர்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – 724
சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது- 1459
சைவம் சிவனுடன் சம்பந்தமானது – 1512
குருவே சிவம் எனக் கூறினன் நந்தி – 1581
ஒடுங்கி நிலை பெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவதில்லை நமனும் அங்கில்லை – 1624
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் – 1726
அருள் கண் இல்லாதார்க்கு அரும் பொருள் தோன்றா – 1808
வல்ல பரிசால் உரைமின் வாய்மையை – 2108
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் – 2104
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் – 2108
ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவனே – 504, 2175
வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை – 2303
அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் – 270
3000 பாடல்களையும் வெவ்வேறு விதமாகப் பிரித்துப் படித்து மகிழலாம்.
எந்தக் கேள்விக்கும் இதோ பதில் என்பதே திருமூலரின் திருமந்திரப்பாணி.
உதாரணத்திற்கு ஒரு கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.
இறைவன் எங்கு உள்ளான்? கடினமான கேள்விக்கு திருமூலரின் பதில் இதோ:
காலினில் உறும் கரும்பினிற் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை
காவலன் எங்கும் கலந்து நின்றானே – பாடல் 2639
ஒரு நாடகக் காட்சியை நான்கு அடிகளில் காட்டுகிறார் திருமூலர் ஒரு பாடலில்
அடப் பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே.
இன்றைய நாட்களில் நாம் காணும் காட்சியை அன்றே காட்டி விட்டார் திருமூலர்.
மனைவி அருமையாக சமைத்து உணவு படைக்க அதை கணவன் உண்டான். பின்னர் மடக்கொடியான பேரழகியான தன் மனைவியுடன் ஊஞ்சலில் ஆடியவாறே வெற்றிலை பாக்கைச் சுண்ணாம்புடன் சேர்த்துப் போட்டு நாக்கு சிவ சிவக்க ஆனந்தம் அடைந்தான்.
அப்போது லெப்ட் சைடில் இடது புறத்தில் சிறிது வலி என்றான். ஹார்ட் அட்டாக்!.
ஆ என்று கிடக்கப் படுத்தான். கிடந்து ஒழிந்தானே.
என்ன அருமையான நாட்டு நடப்பைச் சுட்டிக் காட்டுகிறார் திருமூலர்.
இப்படி நூற்றுக் கணக்கான பாடல்களில் அவர் காட்டும் சித்திரங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.
தமிழே தனக்குப் படைத்துக் கொண்ட ஒரு அற்புதமான தமிழ் நூல் திருமந்திரம். அதைத் தந்த அருளாளர் சிவபிரானின் அருளால் தோன்றியவரே என்று கூறி என் உரையை முடிக்க விழைகிறேன்.
இறுதியாக ஒரு விஷயம்:
பல நூல்களையும் கற்று ஆராய்ந்த ஔவையார் தனது முடிவாகச் சொல்லும் ஒரு தீர்ப்பு இது: