Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
23-2-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
சுயமுன்னேற்றம்
எவரையும் கவர 6 அற்புத விதிகள்! கொஞ்சம் கேளுங்களேன்!!
ச. நாகராஜன்
உங்களுடன் பேசுவதையே ஒரு பாக்கியமாக மற்றவர் நினைக்க வேண்டுமா?
அனைவரும் மிக்க நட்புடன் முதல் சாய்ஸாக உங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா?
இதோ இருக்கிறது தங்க விதிகள் ஆறு.
இதைக் கடைப்பிடியுங்கள். அப்புறம் பாருங்கள், நீங்கள் எப்படி மதிக்கப்படுகிறீர்கள் என்று!
1) இடையில் குறுக்கிட்டுப் பேசுவதை நிறுத்துங்கள்.
நண்பர்களோ அல்லது அலுவலக அதிகாரிகளோ உங்களுடன் பேசும் போது இடையிட்டுக் குறுக்கே பேசுவதை நிறுத்துங்கள். அது மட்டுமல்ல, உங்கள் மனதிற்குள் பேசுவதையும் நிறுத்துங்கள். பேசுபவர் பேசி முடிக்கட்டும்.
மற்றவர்களுக்காக அவர்களது வார்த்தைகளை நாமே உருவாக்கீப் பேசி முடிக்க நாம் எப்போதுமே ரெடி தான். அவர்கள் என்ன பேசப் போகிறார்கள், என்ன வார்த்தைகளை பயன்படுத்தப் போகிறார்கள் என்று அறியும் மகாத்மாக்ககள் நாம் தான்! – இது தான் எல்லோருடைய பொதுவான அணுகுமுறை. இதை விட்டொழியுங்கள்!
அவர்கள் பேசுவதைப் பேசி முடிக்கட்டும் – அவர்கள் பாணியில், அவர்கள் சொற்களாலேயே!
2) ஓய்வுடன் இருங்கள். மனச்சோர்வு, கவலை, டென்ஷன் ஆகியவை உங்கள் கேட்கும் திறனைப் பெருமளவு இழக்கச் செய்கிறது.
3) எதிரில் பேசுபவரை ஆவலுடன் பேசும்படி செய்யுங்கள். நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள், விருப்பத்துடன் செவி மடுக்கிறீர்கள் என்பதை அவர் நன்கு உணர வேண்டும். அவர் முகத்தைப் பார்க்காமல் அவர் தோளையோ அல்லது எங்கேயோ ஒரு மூலையையோ பார்க்காமல் அவரையே கவனியுங்கள். ஒருவேளை அவர் சொல்வதில் குறிப்புகள் எடுக்க வேண்டுமெனில் அது எவ்வளவு முக்கியமானது என்றும் உங்கள் நினைவாற்றல் திறன் சற்று குறைவு தான் என்றும் வெளிப்படையாகச் சொல்லி விடுங்கள். இது அவருக்குப் பெருமையைத் தான் தரும்.
4) நீங்கள் எதிரில் இருப்பவரின் பேச்சைக் கேட்பது அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிவதற்காகத் தான். அவர் சொல்வதை எப்படி அவருக்கு எதிராக விவாதத்தில் பயன்படுத்தலாம் என்பதற்காக அல்ல – இதை நினைவில் கொள்ளுங்கள்.
5) உங்களுக்கென்று ஒவ்வொரு விஷயத்திலும் அபிப்ராயம் உண்டு தான்! அது எதிரிலிருப்பவர் சொல்வதற்கு மாறாகவும் இருக்கக் கூடும். ஆகவே உங்கள் அபிப்ராயங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு உள்ளார்ந்த முனைப்புடன் அவர் சொல்வதை முழுவதுமாகக் கவனியுங்கள்.
6) தர்க்கரீதியாக மட்டும் கேட்பது போதாது; உணர்ச்சியுடனும் கேட்க வேண்டும். அவர் மூளையிலும் இதயத்திலும் நீங்கள் இடம் பெற வேண்டும். பேசும் போது அவர் சொல்லாமல் விட்டதையும் நீங்கள் சற்று கவனிக்க வேண்டும். ஒருவர் சொல்லாமல் விடுவது சொல்வதை விட சில சமயம் முக்கியமானதாக இருக்கக் கூடும். கேட்பது ஒரு உயிருள்ள இயக்கம், அதுவும் ஒருவரை முதல் முறையாக நீங்கள் பார்த்துப் பேசுகிறீர்கள் என்றால் இது மிக மிக முக்கியம். இந்தச் சமயத்தில் அவர் என்ன சொல்கிறார் என்பதற்கு அதிக நேரம் கொடுங்கள். நீங்கள் சொல்ல வேண்டியதைச் சுருக்கிக் கொள்ளுங்கள்!
இனி பாருங்கள், நட்பு வட்டம், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் உங்களின் மதிப்பு எப்படி கூடுகிறதென்று!
திருவள்ளுவர் கூறுவது எல்லாக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமானது:-
Date uploaded in Sydney, Australia – 27 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
When I read that Museum of Sydney deals with aborigine culture, I decided to go to the museum. I went there on 26th February 2025; but I was disappointed because there were only documentary shows in three different dark rooms. I watched part of each documentary. One showed the etchings on rocks done by the aborigines. Though the documentaries are informative, nothing came from original aboriginal objects or paintings.
One documentary showed how the English occupied Australia, New Zealand and other islands. Beautiful flowers and plants discovered by the English were shown on huge screens. As a botany student I watched it keenly.
But my disappointment was partly gone when I got a printed card with aborigine words. As an amateur linguist, I went through it and found nothing was related to Tamil or Sanskrit.
But one should not jump to any conclusion based on one card matter. We know that 250 languages are/were spoken by the tribes in the vast Australian continent. 250 groups of people came to the continent from different places in different times. A few may be from Tamil or Sanskrit speaking areas of India. (My old articles on this site show their relationship with India).
Here are the words found on the card, freely available from the Museum of Sydney. They are from EORA tribe who lived in Sydney region before the English occupation.
The Eora are an Aboriginal Australian people who were the original inhabitants of the Sydney region. The term “Eora” is an Aboriginal word that means “the people” or “from this place”
Bamal – earth, clay, the ground
Nangamay- dream
Waruvi- girl
Bangala- basket
Guwing- sun
Murungal-thunder
Dyinuragang-old woman
Ganing-cave
Ngaramang-dance
Gayanayung-oldman
Buruwa-cloud
Nuwi-boat (only word close to Sanskrit Nauka; English word Navy came from it)
Wungarra-boy
Bara-fish hook made from shell, wood or bone
Gunang-spear
Garrigarrang-sea
Warrawal-milky way
Mungi-lightning
Duruga-meteor, falling star
Dganaba-laughter
Garadyigan-doctor ,clever man
Buruwang-island
****
My Analysis :
Aboriginal words have RR in many place names:
Example- Canberra, Parramatta
They end with NG sound like Chinese and North East Indianlanguages:
Example- Beijing, Da Nang, Shillong, Kurung
Most of the words have long AA sound.
—Subham—
Tags—Museum of Sydney, Aboriginal words, languages, My visit, Eora tribe, word list, relationship, Tamil, Sanskrit
Date uploaded in Sydney, Australia – 27 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எல்லோருக்கும் முன்னுதாரணமான மனிதன் என்றும் கடவுள் என்றும் பல புலவர்கள் ராமனை வருணித்தனர் . கம்பன் சொன்னதை நாம் எல்லோரும் அறிவோம் .
ராமபிரான் பற்றி கம்பன்
மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்–
வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்
****
இராம நாமம் நமக்கு என்ன என்ன தரும்?
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.
****
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.
இராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் (நல் அறிவு), புகழ், லெட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே ஜன—மரணச் சுழலில் இருந்து விடுதலையும் கிட்டும்.
****
பிராமணர்கள் செய்யும் தர்ப்பண மந்திரத்தில் ராமன் என்ற நாமத்தைச் சொன்னால் எல்லா பபாவங்களும் அகன்றுவிடும் ; சந்தேகமே இல்லை என்று சொல்லி ஸங்கல்பம் செய்கின்றனர்
பொருள்:— அசுத்தமாகவாயினும், சுத்தமாகவாயினும் எந்த நிலையில் இருந்தாலும் எவன் ஒருவன் தாமரைக் கண்ணனை நினைக்கின்றானோ அவன் உள்ளும் புறமும் சுத்தமானவனே.
மனதாலோ, வாக்காலோ, செயலாலோ வந்தடைந்த பாவம் ஸ்ரீ ராமனை நினைத்த மாத்திரத்திலேயே கழிந்து போகும். இதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீ ராம ராம ராம.
****
தியாகராஜர், பத்ராசலம் ராமதாசர் ஆகியோர் ராம நாமத்தை உயிர் மூச்சாகக் கொண்டனர் .
மஹாத்மா காந்தி தனக்கு கஷ்டம் நேரிட்டபோதெல்லாம் ராம நாமமே தன்னைக் காப்பாற்றியது என்று சொன்னார் .
ராம நாமம் பற்றி மஹாத்மா காந்தி பொன்மொழிகள்
இறைவனை அறிய பிரம்மச்சர்யம்
மின்சாரம் சக்தி வாய்ந்தது ; எல்லோரும் அதனால் பயனடைய முடியாது. சில விதிகளைப் பின்பற்றினால்தான் அதை உற்பத்தி செய்ய முடியும் . அதற்கு உயிர் கிடையாது; மனிதன் கஷ்டப்பட்டுதான் அதைப்பற்றிய முழு அறிவையும் அடைகிறான் ; அதே போலவே நாம் கடவுள் என்று அழைக்கும் சக்தியும் , அவன் பற்றிய விதிகளை அறிந்தால் நம்முள் இருப்பதை அறியலாம்.கடவுளின் விதிகளை அறிவது மெத்த கடினம் என்பதை நாம் அறிவோம், கடவுளை அடைய, ஒரு விதி பிரம்மச்சர்யம் ஆகும். இதை நான் அனுபவத்தில் கண்டேன். துளசிதாஸ் போன்ற பத்தர்கள் இந்த செம்மையான வழியைக் காட்டுகின்றனர். எனக்கு ராம நாமத்தின் சக்தி நான் உருளி காஞ்சன் கிராமத்தில் இருந்தபோது தெரிந்தது.
என்னுடைய சொந்த அனுபவத்துக்கு முக்கியம் தரவேண்டாம்.எனக்கு அந்த கிராமத்த்தில் தான் ராமநாமத்தின் சக்தி தெரிந்தது எல்லா பிரச்சனைகளுக்கும் ராமா நாமம் தீர்வு தரும்;யார் ஒருவன் இந்த நாமத்தைப் பயன்படுத்துகிறானோ அவன் சிறிது முயற்சி செய்தாலும் பெரும்பலனை அடைகிறான்.
இதே பாதையில் செல்லும் நான் ஒன்று சொல்லுவேன்; பிரம்மசர்யத்துக்குத் தேவையான மற்ற கட்டுப்பாடுகள் இந்த ராம நாமத்தின் முன்னர் கொசுறு போன்றதே.. இந்த ஈடு இணையற்ற கருவியை அறியும் முயற்சியில் நாடும் வழிமுறை யாது, நாடித் தேடும் பொருள் யாது என்பதுகூட மறைந்து போகிறது .ராம நாமத்தை இருதயத்தில் நிறுத்தினால் அதன் அபூர்வ சக்தியை அறியலாம் இவ்வழியில் இறைவனை அடைய 11 விதிகள் இருப்பதைக் கண்டோம். சத்தியம் என்னும் வழியாக ராமன் என்னும் பொருளைத் தேடினோம்.ராம நாமமும் சத்தியமும் ஒன்றே அல்லவா ?
மீண்டும் பழைய விஷயத்துக்கு வருகிறேன் ;பிரம்மச்சர்யம் என்பதன் சரியான பொருள் ஜனன உறுப்பின் மீது முழுக்கட்டுப்பாடு பெறுவதாகும். அதற்கான தங்கச் சாவி ராமநாமம் ஆகும்.
–ஹரிஜன் இதழ் 22-6-1947
****
ராம நாமத்தை முஸ்லீம்கள் எதிர்க்கக்கூடாது!
என்னுடைய பிரார்த்தனைக் கூட்டங்களில் நான் சொல்லும் ராமநாம ராமன் வரலாற்று புருஷனல்ல.அயோத்தி மன்னன் தசரதனின் மகனும் அல்ல. அவன் சனாதன புருஷன். அவனுக்கு சமமான இரண்டாமவன் எவனுமிலன் ; அத்தகைய ராமனையே நான் வணங்குகிறேன் ; அவன் உதவியையே நாடுகிறேன்; எல்லோருக்கும் உரியவன். முஸ்லீம்கள் அல்லது வேறு எவரும் அவன் பெயரை ஏற்க மறுக்கக் கூடாது. கடவுளை ராமநாமம் என்று கடவுளையே கட்டுப்படுத்த தேவை இல்லை அவர்கள் வேண்டுமானால் தனக்குள்ளே அல்லா என்று சொல்லிக்கொள்ளலாம் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷித செல்வம்
விதியின் வலிமை!
ச. நாகராஜன்
சுபாஷித ஸ்லோகங்கள் வாழ்க்கைக்கு உதவும் பலவித விஷயங்களை சுவாரசியமாகத் தருபவை.
சிலவற்றை இங்குக் காண்போம்.
விதியும் முயற்சியும்
க்ருத: புருஷகார: சன் சோபி தைவேன சித்யதி | ததாஸ்ய கர்மண: கர்துர: அபிநிர்வர்ததே பலம் ||
மனிதனின் இடைவிடா முயற்சி விதியினால் வெற்றி அடைகிறது.
விதியினாலேயே ஒருவன் ஒருவன் இடைவிடாமல் உழைத்து வெற்றியை அடைகிறான்.
விதி தனித்து பலன் தராது!
க்ருத: புருஷகாரஸ் து தைவ மேவானுவர்ததே |
ந தைவமக்ருதே கிஞ்சித் கஸ்யவித் தாதுமர்ஹதி ||
மனிதனின் சக்தியானது இடைவிடா முயற்சியினால் விதியையே பின்பற்றுகிறது; ஆனால் முயற்சி வேண்டி இருக்கும் போது விதி தனித்து எந்த வித பலனையும் தராது.
கர்மங்களின் விளைவுகளை எப்போது அனுபவிக்கவேண்டி வரும்?
க்ருதகர்மக்ஷயோ நாஸ்தி கல்பகோடி ஷதைரபி |
அவஸ்யமேவ போக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் ||
ஒரு மனிதன் செய்த கர்மங்களின் விளைவுகள் கோடி கல்பங்கள் சென்றாலும் அழியாது. ஒருவனது கர்மங்களின் விளைவுகளை அவை நல்லவையோ கெட்டவையோ அவன் அனுபவித்தே ஆக வேண்டும்.
கடமையைச் செய்த வேலைக்காரனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தனது கடமையைச் செய்த ஒரு வேலைக்காரனின் உழைப்பை நிச்சயமாகத் துன்பப்படும்படி விடக்கூடாது அவனது பணியை இதயபூர்வமாகவும் சொல்லினாலும் பார்வையினாலும் பாராட்டி அவனை மகிழ வைக்கவேண்டும்.
நூறு வருஷம் வாழ்வதை ஒரு நாள் எதைச் செய்வது மேலானது?
க்ருதகங்கோதகஸ்நானம் ச் ருதபாரதசத்கதம் |
அசிந்தாச்யுதபாதாப்ஜம் தினம் கல்பசதாத் வரம் ||
ஒரு நாள்
கங்கையில் ஸ்நானம் செய்வது,
மஹாபாரதக் கதையைக் கேட்பது
விஷ்ணுவின் பாதங்களை நமஸ்கரிப்பது ஆகியவை நூறு நூறு வருஷங்கள் வாழ்வதை விட மேலானது.
எவன் ஒருவன் நன்றி உள்ளவனாக இருக்கிறானோ, தார்மிகமாக இருக்கிறானோ, சத்யவாதியாக இருக்கிறானோ, பெரிய மனதுடன் இருக்கிறானோ, பக்தியுள்ளவனாக இருக்கிறானோ, தன் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ, தனது மரியாதை,மதிப்பைக் காத்து வைத்திருக்கிறானோ, ஒருபொழுதும் நண்பனைக் கைவிடாமல் இருக்கிறானோ அவனையே நண்பனாகக் கொள்ள வேண்டும்.
எப்போது ஒருவனுக்கு ஒருபோதும் துன்பம் வராது?
க்ருதஞஸ்வாமிஸம்சர்கம் உத்தமஸ்த்ரீ பரிக்ரஹம் |
குர்தன் மித்ரலோபம் ச நரோ நைவாதசோந்ததி ||
ஒரு பெரும் மகானின் தொடர்பு, ஒரு கற்புள்ள மனைவியைத் திருமணம் செய்து கொள்வது, பேராசை இல்லாத ஒருவனை நண்பனாகக் கொள்வது ஆகிய இவற்றை எவன் ஒருவன் கொண்டிருக்கிறானோ அவனுக்கு ஒருபோதும் துன்பம் வராது!
Date uploaded in Sydney, Australia – 26 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 29
சிட்னியில் இலவசமாகப் பார்க்கக்கூடிய கடைசி மியூசியத்தையும் பார்த்துவிட இன்று பிப்ரவரி 26-ஆம் தேதி (2025) சென்றேன் ஆனால் ஓவியங்கள் படங்கள் இல்லை. ஆதிவாசிகள் மற்றும் ஆஸ்திரேலிய வரலாற்றைக் கூறும் டாக்குமெண்டரி படங்கள் மட்டும் மூன்று அறைகளில் ஓடிக்கொண்டிருந்தன. யார் வேண்டுமானாலும் உட்கார்ந்து பார்க்கலாம். அவைகளில் ஆதிவாசிகளின் வாழ்க்கை பற்றிய பாறை வரைபடங்கள், கிறுக்கல்கள் மூலம் விளக்கினார்கள் ; ஆஸ்திரேலியக் குடியேற்றத்தின்போது வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்த தாவரங்களை படங்களுடன் விளக்கும் டாக்குமெண்டரி படமுமிருந்தது.
அந்தக்கால கப்பல்களின் மாடல் வடிவங்களும் காட்சியில் இருந்தன.
நான் கண்ட சுவையான விஷயம் ஆதிவாசிகளின் மொழி பற்றி அவர்கள் கொடுத்த அட்டைப்படம் ஆகும். மியூசியம் இடம்பெற்ற இடத்தில் வாழ்ந்த பழங்குடி இன. மக்கள் பேசிய சொற்கள் அந்த அட்டையில் உள. அவைகளைக் கீழே கொடுக்கிறேன். மொழியியல் அறிவு படைத்தோர் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் அந்த சொற்களுடன் எந்த தொடர்புமில்லை என்பதை அறிவார்கள்
The Eora are an Aboriginal Australian people who were the original inhabitants of the Sydney region. The term “Eora” is an Aboriginal word that means “the people” or “from this place”
ஆஸ்திரேலியாவில் 250 ஆதிவாசி இனங்கள் இருப்பதை நாம் அறிவோம்; சிட்னி நகர் இப்போதுள்ள இடத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வசித்த இனம் இயோரா எனப்படும். இயோரா என்றால் மக்கள் அல்லது இந்த இடத்திலிருந்து என்று பொருள்.
Date uploaded in Sydney, Australia – 26 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
26225
1
2
3
4
5
6
7
8
Across
1.name for all the ten incarnations of Lord Vishnu
5.Mewar king who foght against Akbar.
8. Story or speech sweet as nectar.
Down
1.Krishna’s city in Gujarat under the sea.
2.One of the Jyotirlinga shrines in Gujarat
3. xxxxx refers to “(1) Stage of life, either student (brahmacārī), householder (gṛhastha), retired (vānaprastha) or renounced (sannyāsa)[; also hermitage
4. A goddess to whom one may offer an oblation when desiring a son; even Tamil villagers have this Goddess name.
6.To break, to tear in Sanskrit
7.love, affection in Hindi and many North Indian languages.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
20-2-25 அன்று கல்கி ஆன் லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
மூளை ஆராய்ச்சி
மூளையின் முன்மடல் (FRONTAL LOBE) மூளையின் உள்ளே ஒரு குட்டி மூளை!
ச. நாகராஜன்
மனித மூளை பற்றிய ஆராய்ச்சியில் அவ்வப்பொழுது நமக்குக் கிடைக்கும் தகவல்கள் நம்மை மலைக்க வைக்கின்றன.
ஒரு தகவலை அடுத்து வரும் இன்னொரு தகவல் முந்தைய தகவலைப் புறம் தள்ளி இன்னும் அதிகமாக பிரமிக்க வைக்கிறது.
எடுத்துக்காட்டாக மூளையில் எத்தனை செல்கள் உள்ளன என்பதைக் கணக்கிட்ட விஞ்ஞானிகள் 14 கோடி என்று எண்ணிக்கையைத் “துல்லியமாகக்” கூறினர்.
அடேயப்பா என்று பிரமித்தோம்.
அடுத்து இப்போது 86 பில்லியன் அதாவது 8600 கோடி நியூரான்கள் மூளையில் உள்ளன என்ற தகவல் வந்தது. பூமியில் உள்ள மனிதர்களை விட பல மடங்கு அதிகம் இது என்று கணக்கிட்டு அடேயப்பா என்று இன்னும் பிரமித்தோம்.
இப்போதோ கோடானு கோடி நியூரான்கள் உள்ளன. ஒவ்வொன்றும் செயல்பாடுடையது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை எதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்று திகைக்கிறோம்!
புதிதாகப் பிறந்த குழந்தைக்கே 100 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்) நியூரான்கள் இருக்கிறதென்றும் ஒரு நிமிடத்திற்கு இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் நரம்பு செல்கள் என்ற விகிதத்தில் அது சாதாரணமாக வளர்ச்சி அடையும் என்றும் தெரியவருகிறது.
இதைப் பற்றிய விஞ்ஞானக் கட்டுரைகள் மூளை மாடலை வைத்து விளக்குகின்றன!
மூளையின் பகுதிகள் ஒவ்வொன்றும் ஒரு அதிசயமே. இடது பக்க மூளை வலது பக்க மூளை என்று பலகாலமாக சொல்லப்பட்டு வந்த அதிசயங்கள் ஒரு பக்கம்! ஃப்ரண்டல் லோப் மற்றும் கார்டெக்ஸ் எனப்படும் புறணி உள்ளிட்ட மூளை அதிசயங்கள் இன்னொரு பக்கம்.
FRONTAL LOBE (ஃப்ரண்டல் லோப்) எனப்படும் மூளையின் முன் மடலைப் பற்றிய ஆராய்ச்சியை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உடலியல் வல்லுநரான டெல்காடோ(Physiologist DELGADO) என்பவர் அவரது நோயாளியிடம் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று தன்னருகில் இருந்த ஒரு பட்டனை அமுக்கினார்.
எதிரில் இருந்தவரிடம் அவ்வளவாக வீரியம் இல்லாத ஒரு மின்சக்தி, அவரது மூளை முன்மடலில் பாய்ந்தது.
பேசிக்கொண்டே இருந்தவர் திடிரென்று ஒரு வார்த்தை சொல்லும்போதே பாதியில் பேச்சை நிறுத்தினார். அப்படியே செயலற்று இருந்தார்.
டெல்காடோ மின்சக்தியை நிறுத்தினார்.
அவரை நோக்கி, “எப்படி உணர்கிறீர்கள்?” என்றார்.
“எனது மூளை செயலற்று நின்றுவிட்டதைப் போல உணர்ந்தேன். மதுவைக் குடித்தால் போதைமயக்கம் வருமே அதுபோலத்தான் இருந்தது” என்றார்.
ஃப்ரண்டல் லோப்! – மூளையின் உள்ளே உள்ள குட்டி மூளை செய்யும் அற்புதம் இது.
மிருகங்களில் பலவற்றிற்கு இந்த உறுப்பே கிடையாது.
இதற்கும், கார்டெக்ஸ் எனப்படும் புறணிக்கும் (மூளையின் மேல் உறைக்கும்- CORTEX) நிறையத்தொடர்புகள் உண்டு.
இதை ஆராய அனோகின் (Anokhin) என்ற மூளையியல் பேராசிரியரும் அவருக்கு உதவி செய்த பெண்மணியான டாக்டர் நினா ஷுமிலினா(Dr. Nina Shumilina) என்பவரும் பல ஆராய்ச்சிகளை நாய்கள் மீது செய்தனர்.
முதல் மாடியிலிருந்து ஜன்னல் வழியே ஒரு பிஸ்கட்டைத் தூக்கி எறிந்த போது அதைப் பார்த்த நாய் அறையின் கதவு இருக்கும் வழியாக வெளியே வந்து படிகள் வழியே இறங்கித் தோட்டத்திற்குச் சென்று சரியாக அந்த பிஸ்கட்டைக் கண்டுபிடித்து வாயில் கவ்விக் கொண்டு சந்தோஷமாக வந்தது.
இது நாயின் மூளைச் செயல்பாட்டைக் காண்பிக்கும் ஒரு நிகழ்ச்சி.
ஆனால் நினா தான் வளர்த்த ஏழு நாய்களின் மூளை மடல்களையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றினார். Frontal Lokbectomy எனப்படும் இந்த ஆபரேஷனுக்குப் பின்னர் நடந்தது என்ன?
நாய்களின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டபோது ஓடி வரும் அவைகள், இப்போது சோம்பேறித்தனமாக தலையை உயர்த்தின.
உணவுத் துண்டுகளைத் தூக்கி எறிந்த போது ஒன்று விடாது பொறுக்கித் தின்னும் அந்த நாய்கள் எதிரில் அதன் பார்வையில் இருந்த ஒரு துணுக்கை மட்டுமே எடுத்துக் கொண்டன.
இப்படி ஒவ்வொரு செயல்பாட்டிலும் மாறுதலைக் கண்டார் நினா.
மூளையின் முன்மடல் எவ்வளவு முக்கியம் என்பதை அவரது ஆராய்ச்சிகள் உறுதிப் படுத்தின.
இந்த ஆய்வுகள் மேம்படுத்தப்பட்டு இப்போது மனித மூளையின் முன்மடலை ஆக்கபூர்வமாக இயங்க வைக்க வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றைச் செய்வது சுலபம் தான்!
விஞ்ஞானிகள் பரிந்துரைக்கும் வழிகள்:-
1) வார்த்தை விளையாட்டுகளை விளையாடுங்கள். வார்த்தை புதிர் போன்றவை – எதானாலும் சரிதான்!
2) மூளைக்கான குறுக்கெழுத்துப் போட்டி, மற்றும் ப்ரெய்ன் கேம்ஸ் -மூளை விளையாட்டுகளை -விளையாடுங்கள்.
3) ஒரு புதிய சமையல் ரெசிபியை செய்து பாருங்கள்.
4) உடற்பயிற்சியை மறக்காமல் தினம் தோறும் செய்யுங்கள். நடைப்பயிற்சி சாலச் சிறந்தது.
5) தியானம் அவசியம்.
6) சரியான தூக்கம் அன்றாடம் தேவை.
7) உணவில் பீட்ரூட் சேர்க்க வேண்டும். அதில் நைட்ரேட் உள்ளது. அது இரத்த நாளங்களை விரிவாக்க உதவும்.
இவற்றோடு சமூக சேவை செய்வது மூளையை ஊக்குவிக்கிறது என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மூளையின் முன்மடல் நன்கு இயங்கினால் நமக்கு வெற்றி தான்!
Date uploaded in Sydney, Australia – 25 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Festivals –Ramkrishna Jayanti-1; World Women’s Day-8; Masi Magam-12; Holika dahan -13; Holi- 14 and Karadaiyan Nonbu; Chhatrapati Shivaji Maharaj Jayanti-17; Parsi New Year-20; Ugadi or Gudi Padwa or Telugu New Year- 30, Muslim Festival Ramzan- 31.
Full moon/ Purnima 13; New moon/Amavas 29;
Ekadashi – Hindu Fasting Days -09/10, 25/26;
AUSPICIOUS DAYS
IN SOUTH INDIA –MARCH 2 , 3 திங்கள், 9 , 10 ,, 12 புதன், 16 , 17 .
*****
auspicious/ Shubh Muhurats according to North Indian Customs:
1st March 2025 (Saturday), 2nd March 2025 (Sunday),
6th March 2025 (Thursday), 7th March 2025 (Friday),
12th March 2025 (Wednesday).
****
MIRABAI QUOTES ARE TAKEN FROM DIFFERENT WEBSITES, THANKS.
March 1 Saturday
“Don’t forget love;
it will bring all the madness you need
to unfurl yourself across
the universe.”
****
March 2 Sunday
“I want you to have this,
all the beauty in my eyes, and the grace of my mouth,
all the splendor of my strength,
****
March 3 Monday
“My Love, He is here inside. He does not leave.
He does not need to arrive.”
****
March 4 Tuesday,
“I am not of this body, not of this world; I am of Krishna, and Krishna is of me.”
****
March 5 Wednesday
“His music fills the air, and my soul dances to His divine melody.”
****
March 6 Thursday
“Even the gods envy those who are touched by the Lord’s love.”
****
March 7 Friday
“The path to Krishna is paved with faith, surrender, and undying love.”
****
March 8 Saturday
“In His eyes, I see the universe; in His embrace, I find my eternal home.”
****
March 9 Sunday
“I came for the sake of love-devotion; seeing the world, I wept.”
*****
March 10 Monday
I have no fear, no worries; I am completely surrendered to the will of my Beloved.
****
March 11 Tuesday
“My heart is like a flower, blooming in the garden of love; Krishna is the gardener who tends to it with care.”
****
March 12 Wednesday
“I have found true happiness in the company of my Beloved; nothing else matters to me.”
****
March 13 Thursday
“I am like a bee, intoxicated by the nectar of Krishna’s love; I cannot bear to be separated from Him.”
****
March 14 Friday
“Krishna is my refuge, my shelter, my everything. In His arms, I find peace and contentment.”
Date uploaded in Sydney, Australia – 25 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Across
1.Holiest Hindu book from Kurukshetra
5. In Sanskrit, “it means “water pot,” “bowl,” or a small pond, essentially referring to a vessel used to hold water; it can also signify “jasmine flower” depending on context.
11.a kind of pulse; black gram, Dolichos pilosus..main ingredient of Idli, Dosa and Vada
12. One of the Three Powers; other two being Gnan and Kriya Shakti
Down
1…… sage was one of the seven great sages, the SaptaRishis. He is a ManasaPutra (wish-born-son) of Lord Brahma. His father is Brahma, who simply wished him into existence, to assist in the process of creation. He is married to Khyati, the daughter of Daksha. He has two sons by her, named Dhata and Vidhata.
2. is a multifaceted goddess in various traditions, primarily revered in Hinduism as another name for Parvati, the divine consort of Lord Shiva. Also A young girl eight years old
3. A tapasvinī famed in Ṛgveda. She was the grand-daughter of Dṛgata maharṣi and daughter of sage Kakṣīvān. As she contracted leprosy in her very childhood nobody came forward to marry her. Ultimately she composed a mantra in praise of Aśvinīdevas. They cured xxxxxxx of leprosy and she got married. (Ṛgveda, Maṇḍala 1, Anuvāka 7, Sūkta 117).
4. this Kashmiri town name was mentioned in the Nilamata Purana and other texts. According to the Gazetteer of Kashmir and Ladak, it is named after xxxxx the great serpent of Vishnu and the emblem of eternity. Later it was distorted to endless spring during Muslim rule.
7.fried spicy doughnut of Tamils ↑
10.Sanskrit meaning- sound, shrieking;howling, roaring; Hindi meaning Semolina with which Dosa and Kesari made.
13.Goddess; English word SIR and Tamil word THIRU derived from it according to Linguists↑