CARTOONS ARE MIRRORS OF CURRENT AFFAIRS 17 JULY 2024

 MORE CARTOONS FROM DECCAN CHRONICLE.

POSTED HERE ON 17 JULY 2024

–SUBHAM—

CARTOONS, JULY 17, 2024

திருமூலரும் ஆதிசங்கரரும்- திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை- 36 (Post No.13,449)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,449

Date uploaded in London – 17 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 36

திருமூலர் பசுபதி,பாசம் எனும் சைவ சித்தாந்த கருத்துக்களை முன்வைத்தவர். ஆதிசங்கரரோ  அஹம்  பிரம்மாஸ்மி , தத்வ மசி  என்ற அத்வைத கருத்துக்களை முன் வைத்தவர். ஆயினும் திரு மூலர் ஏனைய 17 சித்தர்களிலிருந்து வேறுபட்ட ஒரு சித்தர் என்பதால் சங்கரருக்கும் மூலருக்கும் இடையே சில ஒற்றுமைகளைக் காணமுடிகிறது’.

கீழ்கண்ட பாடல்கள் அவர் சங்கரர்  சொல்லும் அத்வைதத்துக்கு நெருங்கியவர் என்பதைக் காட்டுகின்றன

ஆதி சங்கரர் சொன்ன எல்லாவற்றையும் அறிந்தவர்,   தான் என்பதைக் காட்டுவதற்காக கடைசி பாடலை நெருங்கும் பொழுது ஆதிசங்கரர்  பெயரையே பகிரங்கமாக அறிவித்து விடுகிறார் திருமூலர், 

புஸ்தகம் எழுதுவோர் முன்னுரையில் இன்னார் இன்னாருக்கு தான் நன்றிக் கடன்பட்டவர் என்று பெயர்களை எல்லாம் எழுதுவார்கள். கம்பன் கடைசியில் முக்கியமான ராமன் மகுடாபிஷேகப் பாடலில் தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலுக்கு நன்றி சொல்லுவார். அது போல ஆதி சங்கரர்  பெயரை  திருமந்திரத்தின் இறுதிப்   பாடலுக்கு சற்று முன்னர் காண்கிறோம்.

எல்லாப்  பாடல்களையும் கொடுக்காமல் எடுத்துக் காட்டாக சில பாடல்களைத் தருகிறேன்

ஆதி சங்கரன்

2998. பலவுடன் சென்றஅப் பார்முழு தீசன்

செலவறி வாரில்லை சேயன் அணியன்

அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி

பலவில தாய்நிற்கும் பான்மைவல் லானே.

3043: He is One and Many

The Lord is with creation all

None know His coming and going,

He is distant, He is near;

He is constant, He is Sankara,

He is the Primal Being;

Multiple He is, One He is,

He Our Primal Lord.

இறைவன் சர்வ வியாபி என்ற தலைப்பில் அவர் இதைச் சொல்கிறார் . இறைவனை நம்பும் அடியார்க்கு அவர் நெருக்கமானவர். அல்லாதோருக்கு தொலைவில் நிற்பவர்.இதுவும் உபநிஷத் வாக்கியம் ஆகும்.

xxxx

தேவதத்தன்

தேவதத்தன் என்பவனை உதாரணமாகக் காட்டுவதை சங்கரர் துதிகளிலும் புத்தர் உரைகளிலும் காணலாம்.

ஆகிய வச்சோயந் தேவதத் தன்னிடத்

தாகிய விட்டு விடாத விலக்கணைத்

தாகுப சாந்தமே தொந்தத் தசியென்ப

ஆகிய சீவன் பரன்சிவன் ஆமே.

2493 Jiva in Different Places and Times

Deva Datta is one and same person;

But through time and place he different appears;

Unto it,

If Jiva transcends time and place,

He and Siva one becomes (So-ham)

In Thom-Tat-Asi,

Jiva in body one with Primal Cause is;

Attaining True Jnana

Jiva becomes Para Siva.

சோயம்‌ தேவதத்தன்‌ = அவனே தேவதத்தன்‌ .

தேவதத்தன்‌ என்பவன்‌ ஓரிடத்தில்‌ இல்லறத்தானாக

இருந்தபோதும்‌, பிறிதோரிடத்தில்‌ அரசனாயிருந்தபோதும்‌,

மற்றோரிடத்தில்‌ துறவியாயிருந்தபோதும்‌, இவையனைத்தும்‌

ஒழிந்து நின்றபோதும்‌, தேவதத்தனே ஆவான்‌. அதுபோல

விட்டும்‌ விடாத இலக்கண வாய்பாட்டால்‌ சீவன்‌ சிவன்‌

இணைந்த நிலை (ஜீவப்பிரஉற்ம ஐக்கியம்‌ ) சுபாவ சித்தமாக

இருக்கின்றது என்று அறிவது.

தேவ தத்தன் என்ற பெயரை பரிகாசப் பெயராகப் பயன்படுத்துவர்; புத்தரின் வம்சத்தில் தோன்றிய இளவரசன் தேவ தத்ததன் ; ஒரு முறை  புத்தரை அணுகி தன்னை வாரிசாக நியமிக்கக் கோரினான் . புத்தர் மறுக்கவே போட்டி சங்கத்தை ஆரம்பித்தான். புத்தரைக் கொல்ல  முயற்சி செய்தான் . பின்னர்  கடும் நோய்வாய்ப் பட்டபோது புத்தரைக் காண எண்ணி புறப்பட்டான். அப்போது  பள்ளத்தில் விழுந்து புதையுண்டு இறந்த பின்னர்  நரகத்துக்குச் சென்றான் என்று பெளத்த நூல்கள் செப்புகின்றன ; ஆகையால் இது கிண்டல் , கேலி செய்ய உதவும் பெயர்

Xxxxxx

தத்வமஸி- நீயே அதுவாக இருக்கிறாய் = தத்+ த்வம் + அசி = நீயே  கடவுள் = நான்கு மகா வாக்கியங்களில் ஒன்று

ஆறா றகன்ற வணுத்தொம் பதஞ்சுத்தம்

ஈறான தற்பர மெய்துப சாந்தத்துப்

பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து

வீறான தொந்தத் தசி தத்வ மசியே.

தத்வமஸி- 2526- 27,28, 33

xxx

2490. தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே

அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு

அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து

உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே. 3

2490 Tvam-Tat-Asi Becomes Tat-Tvam-Asi

Attain the State of Tvam-Tat-Asi

Through coursing breath (in Yogic Way)

Consider it as the Tenth State of (Turiya) experience;

Endless is that Experience;

Alter that expression so

That Siva (Tat) stands first

(That is Tat-Tvam-Asi, or Tatvamasi)

Thus meditate on it and ascend.

xxxx

 வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து

உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை

மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து

அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே. 4

2491 As Tatvamasi, Practise Yoga

Thus altering the expression

Into Tatvamasi with Siva (Tat) first

Fix your thought on bliss of Svarupa;

And gently hold to your heart

The Pranava mantra (that is “Aum”);

When Jiva thus practises Yoga

He realizes Truth

And stands, in Grace accepted.

xxxxx

பாரதி அறுபத்தாறு கவிதையில் பாரதியும் அதையே சொல்லுவார்

பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்

பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:

சாமி நீ;   சாமி நீ;   கடவுள் நீயே;

தத்வமஸி;  தத்வமஸி;   நீயே அஃதாம்;

பூமியிலே நீ கடவு ளில்லை யென்று

புகல்வது  நின் மனத்துள்ளே புகுந்த மாயை;

சாமிநீ   அம் மாயை தன்னை நீக்கிச்

சதாகாலம் ‘சிவோஹ’மென்று சாதிப் பாயே!— பாரதி

Xxxx

வேதாந்தம்

வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதி பொருளைக் காண்பதாகும். உலகம் முழுதும் இந்தச் சொல்லை அத்வைத தத்துவத்தைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர். திருமூலரும் இதைச் சொல்கிறார்.

துவந்தத் தசியே தொந்தத் தசியும்

அவைமன்னு மந்நுவயத் தேக மான

தவமன்னு தத்துவ மசிவே தாந்த

சிவமாகும் அதுஞ்சித் தாந்த வேதமே.

xxxx

இரண்டு பறவைகள் – உபநிஷத் கதை 2894, 1969

அன்ன மிரண்டுள ஆற்றங் கரையினில்

துன்னி யிரண்டுந் துனே ப் பிரியாதன

தன்னிலே யன்னம் தனியொன்ற தென்றக்கால்

பின்ன மடவன்னம் பேறனுகாதே. (2006)  1969

சிவனும் சீவனும் பிரியாது உடனுமாறு கூறுகின்றது..

2006 Cosmic Bindu and Micro-Cosmic Bindu Are Inseparate

Two the swans on the river bank (of life)

The two swans separation know not,

If one Jiva says he is by himself,

Then that foolish swan, Grace receives not.

இரண்டு பறவைகள் கதையை காஞ்சிப் பெரியவர் (1894-1994) நீண்ட காலத்துக்கு முன்னரே சொற்பொழிவில் விளக்கியுள்ளார் அவை ஜீவாத்மா, பரமாத்மா. அந்தக் கதையை பைபிள் எடுத்துக்கொண்டு ஆத்மா என்பதை ஆதாம் என்றும் ஜீவ என்பதை ஈவ்= ஏவாள் என்றும் மாற்றிவிட்டார்கள். காஞ்சி மஹா சுவாமிகள் சொன்ன இந்த விஷயத்தை நான் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பைபிளில் சம்ஸ்க்ருதம் என்ற கட்டுரையிலும் உலகை மாற்றிய மூன்று ஆப்பிள்கள் என்ற கட்டுரையிலும் எழுதியுள்ளேன்.

xxxx

போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு

மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்

தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்

வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.

பொழிப்புரை : இருவகை மலர்களின் வண்டுகள் போல்வன வாகிய உயிர்கள், தாம் தாம் விரும்பும் வழியில் வேட்கை மிக்குச் செல் கின்றவாற்றால், அவற்றது நெஞ்சத் தாமரையில் வாழ்கின்ற சத்தியும் இருவேறு வகைப்பட்டு, உரிய காலத்தில் இருவேறு நூல்களைக் கற்கச் செய்து அவைகட்குக் கருணை புரிந்து, எஞ்ஞான்றும் அவைகளோடு உடனாய் நிற்பாள்.

xxxx

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரையிலிருந்து

ஒன்றாகக் காண்பதே காட்சி

ஒன்றாகக் காண்பதே காட்சி (அவ்வை பாடல் வரி) என்ற வாசகம் — இரண்டு இருக்குபோதுதான் பயம் இருக்கும் என்ற உபநிடத வாக்கியத்தில் இருந்து உண்டானதே. 1-4-1

கடவுள் தன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டார்: கணவன் மனைவி என்று. மனைவியை கணவனின் மற்றொரு பாதி (தி அதர் ஹாப்) என்று கூறுவதற்கு இதுதான் முக்கியக் காரணம். பிற்காலத்தில் வந்த அர்த்தநாரீஸ்வரன் உருவத்துக்கு (மாதொருபாகன்) மூர்த்திக்கு இதுவே மூலம். இதையே பைபிள் ஆதாம் என்பவர் இடது பக்க விலா எலும்பை முறித்து பெண்ணை உருவாக்கியதாகச் சொல்லுகிறது. இடது பக்கத்தில் தேவி இருப்பது இந்து மதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆதாம் என்பது ஆத்மா என்பதன் திரிபு. பரம ஆத்மா தன்னை ஜீவ ஆத்மா என்று இரண்டாக வேறு படுத்தியதே இக்கதை. இதையே உபநிடதத்தில் இரண்டு பறவைகள் கதையாகவும் காண்கிறோம். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இது பற்றி அற்புத விளக்கம் கொடுத்துள்ளார். நானும் ஏற்கனவே ‘த்ரீ ஆப்பிள்ஸ் தட் சேஞ்ட் த ஓர்ல்ட்’ என்ற கட்டுரையிலும் , ‘பைபிளில் சம்ஸ்கிருதம்’ என்ற கட்டுரையிலும் எழுதி இருக்கிறேன்.

xxxx

மஹாவாக்கியம்-2287

தத்துவ ஞானம் – 2291

xxxx

உபநிஷத் எதிரொலி

அப்பு/ உப்பு-2905

சேயன், அணியன் –2296/ பகவத் கீதை 1515

உன்னை நீ அறிவாய் எனும் கருத்து  -2315, 2290/ உபநிஷத், சாக்ரடீஸ் எதிரொலி

மறை ஈறு= உபநிஷத் = வேத அந்தம்- 2318,2329, 2343-2348, 2353-56, 2746

ஓம்- 410, 560, 839, 864, 897, 902, 923, 924, 031-934, 936, 941, 949, 988, 1049, 1182, 1188, 1198, 1217, 1257, 1380, 1381, 1516, 1531, 1585, 1680, 1721/22,  2119, 2194, 2435, 2447, 2452, 2455, 2530, 2626-31, 2781

–SUBHAM–

TAGS–திருமூலர், ஆதிசங்கரர்,- திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 36, அத்வைதம், சைவ சித்தாந்தம், இரண்டு பறவைகள் , உபநிஷத் கதை

ராமாயணத்தில் சாபங்கள் (44) அனரண்யன் ராவணனுக்குக் கொடுத்த சாபம்! (Post.13,448)

Ravana lifting Kailsh

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.448

Date uploaded in London – 17 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (44) 

ராமாயணத்தில் சாபங்கள் (44) அனரண்யன் ராவணனுக்குக் கொடுத்த சாபம்!

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில் பதினேழாவது ஸர்க்கமாக அமைவது, “அனரண்யன் சபித்தல்’ என்ற ஸர்க்கம்.

ராவணன் தனது பலத்தில் செருக்கு கொண்டு மருத்தரை அடக்கி விட்டு ஒவ்வொரு நகரமாகச் சுற்றலானான். எல்லா மன்னர்களிடமும் சென்று, “ஒன்று என்னுடன் போர் புரி அல்லது தோற்றதாக ஒப்புக் கொள்” என்றான். அனைவரும் தோற்றதாகவே ஒப்புக் கொண்டனர்.

அயோத்தி நகரை ஆண்டு வந்த அனரண்யன் என்ற அரசர் மட்டும் ராவணனைத் தன்னுடன் போரிட அழைத்தார். உக்கிரமான போர் நடைபெற்றது. ராவணன் அவரது தலையில் அடிக்க அவர் தேரிலிருந்து கீழே விழுந்தார்.

ராவணன் அவரை பரிகசித்தான். அனரண்யன் ராவணனை நோக்கி, “உன்னால் நான் ஜெயிக்கப்படவில்லை. விதி வசத்தால் நான் மரணமடைகிறேன். நீ ஒரு காரண கருவி தான். இக்ஷ்வாகு வம்சத்தை அவமானம் செய்து விட்டாய்” என்று கூறிவிட்டு, ராவணன் மீது சாபத்தை விடுத்தார்.

யதி தத்தம் யதி ஹுதம் யதி மே சுக்ருதம் தப: |

யதி குப்தா: ப்ரஜா: சம்யத் ததா சத்யம் வசோஸ்து மே ||

மே – எனது

ப்ரஜா: – பிரஜைகள்

சம்யக் – தருமத்திற்கு குறைவின்றி

குப்தா: – பரிபாலிக்கப்பட்டார்கள்

யதி -என்னும் பட்சத்தில்

தப: – தவ பாக்கியமும்

சுக்ருதம் – புண்ணியங்களின் பயனும்

யதி – இருக்கும் பட்சத்தில்

துத்தம் – செய்யப்பட்ட தெய்வ சமர்ப்பணங்களின் பயனும்

யதி – இருக்கும் பட்சத்தில்

தத்தம் – கொடுக்கப்பட்ட தானங்களின் பயனும்

யதி – இருக்கும் பட்சத்தில்

ததா – அப்போது

மே வச: – எனது வாக்கு

சத்யம் – அப்படியே நடைபெற்றதாக

அஸ்து – விளங்கட்டும்.

உத்பத்ஸ்யதே குலே ஹ்ராஸ்மின்னிக்ஷ்வாகூணாம் மஹாத்மனாம் |

ராமோ தாசரதிர்நாம யஸ்தே ப்ராணான்ஹரின்யதி ||

மஹாத்மனாம் – மிக்க மேன்மை பெற்றவர்களாகிய

இக்ஷ்வாகூணாம் – இக்ஷ்வாகுக்களின்

அஸ்மி – இந்த

குலே ஹி – குலத்திலேயே

தாசரதி: – தசரதன் என்பவனுக்குப் புதல்வனாய்

ராம: – ராமன்

நாம – எனப் பெயருள்ளவன்

உத்பத்ஸ்யதே – அவதரிக்கப் போகிறான்

ய: – அவன்

தே – உனது

ப்ராணான் – உயிரை

ஹரின்யதி – ஒழிப்பான்

உத்தரகாண்டம் 19-ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 29 & 30

இப்படி அனரண்யன் சாபம் இடவே வானத்திலிருந்து பூமாரி பொழிந்தது. தேவ துந்துபி மேக முழக்கத்திற்கு ஈடாக அடிக்கப்பட்டது.

இவ்வாறாக அகத்திய முனிவர் அனரண்யன் வரலாறை ஶ்ரீ ராமருக்கு உரைத்தார்.

**

Time and Place -My Research Notes on VC – Part 13 (Post No.13,447)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,447

Date uploaded in London – 16 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Let us take three more verses from Viveka Chudamani (VC)

https://www.wisdomlib.org/hinduism/book/vivekachudamani/d/doc144464.html

अधिकारिणमाशास्ते फलसिद्धिर्विशेषतः ।
उपाया देशकालाद्याः सन्त्यस्मिन्सहकारिणः ॥ १४ ॥

adhikāriṇamāśāste phalasiddhirviśeṣataḥ |
upāyā deśakālādyāḥ santyasminsahakāriṇaḥ || 14 ||

14. Success depends essentially on a qualified aspirant; time, place and other such means are but auxiliaries in this regard.

XXXX

अतो विचारः कर्तव्यो जिज्ञासोरात्मवस्तुनः ।
समासाद्य दयासिन्धुं गुरुं ब्रह्मविदुत्तमम् ॥ १५ ॥

ato vicāraḥ kartavyo jijñāsorātmavastunaḥ |
samāsādya dayāsindhuṃ guruṃ brahmaviduttamam || 15 ||

15. Hence the seeker after the Reality of the Ātman should take to reasoning, after duly approaching the Guru – who should be the best of the knowers of Brahman, and an ocean of mercy.

XXXX

मेधावी पुरुषो विद्वानुहापोहविचक्षणः ।
अधिकार्यात्मविद्यायामुक्तलक्षणलक्षितः ॥ १६ ॥

medhāvī puruṣo vidvānuhāpohavicakṣaṇaḥ |
adhikāryātmavidyāyāmuktalakṣaṇalakṣitaḥ || 16 ||

16. An intelligent and learned man skilled in arguing in favour of the Scriptures and in refuting counter-arguments against them – one who has got the above characteristics is the fit recipient of the knowledge of the Ātman.

xxxx

Adi Sankara gives simple advice to novices,

Aspiration and qualification, then time and place are necessary for Success.

Tamil poet Tiru Valluvar also insists time and place but in a different context, i.e.  a ruler who wants to win over his enemy; but it is a general advice too.

Next, Sankara advises to get a Guru; there also he says about the Guru’s qualification; Guru must be ocean of mercy. Sankara used a beautiful word for guru ‘DAYAA SINDHU’-Ocean of Mercy.

The third thing he insists is knowledge of arguments and counter arguments. This shows the age of Sankara. He lived in a time when arguments were held in big university centres like Varanasi, Pataliputra and Daksha Sila. Sankara won so many scholars and converted them to his side. We know how he won Mandanamishra and his wife Sarasavaani in a debate. When Buddhism and Jainism had the full support of the rulers, Sankara had a difficult time, yet won great scholars in debates. Moreover, if one argues his case again and again, he becomes firm in his belief.

Tamil poet Valluvar also insisted conviction, time and place.

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.—483

Is there anything impossible if the right means are adopted and the right hour chosen – Kural 483

Can any work be hard in very fact,
If men use fitting means in timely act?- Kural 483

We may compare it with Shakespeare and Napoleon

Impossible is a word to be found only in the dictionary of fools–Napoleon Bonaparte

And Shakespeare agrees

There is a tide in the affairs of men

Which, taken at the flood, leads on the fortune.( Macbeth of Shakespeare)

xxxx

Time and Place from Valluvar’s Tiruk Kural

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்.– குறள் 484:

The pendant world’s dominion may be won,

In fitting time and place by action done.- Kural 484

Or

A man, aspiring to conquer the whole world too, will succeed

If he chooses the right time and place- 484

We know how Netaji Subash Chandra Bose and Hitler lost. Both invaded at the wrong time. Weather was against them

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.–குறள் 489:

‘Use the right opportunity’– is a very important advice. If we miss the opportunity, we will regret later. Great Gurus were there even in the recent past. But we didn’t realise their greatness at that time. Now we regret that we did not meet them. When we become older and older we regret how we missed the Himalayan shrines. And now we regret how we missed Bharat Ratnam musicians Bhimsen Joshi and M S Subbulakshmi.

xxx

About aspirations and attempts

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.–குறள் 616:

Effort brings fortune’s sure increase,
Its absence brings to nothingness.- Kural 616

xxxx

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும். –619

Though fate-divine should make your labour vain;
Effort its labour’s sure reward will gain-619

Valluvar believed in Newton’s third law of motion

Sir Isaac Newton’s third law of motion states that “every action has an equal and opposite reaction”.

Even if you involve yourself in bad actions, you will have proportional success. It is a natural law. The harder you try, more successful you will be. We see even bad opposition parties win in an election because of hard work. So an aspirant must try hard to go higher and higher.

In Tamil there is a proverb “if you want to climb palmyra tree one can lift you up to his height, then you must try to go up”.

—subham—

Tags- Viveka Chudamani (VC), aspiration, time, place, Guru, ocean of mercy., Newton, Macbeth

வர்கல் சரஸ்வதி கோவில் (Post No.13,446)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,446

Date uploaded in London – 16 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்; PART- 9

வா்கல் சரஸ்வதி கோவில் (Wargal Saraswati Temple) , அல்லது ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோவில், தெலுங்கானாவில் உள்ள சித்திப்பேட்டை என்னும் மாவட்டதில் இருக்கிறது . இந்த சரஸ்வதி கோவிலை காஞ்சி சங்கர மடம் பராமாிக்கிறது.  யயவரம் சந்திரசேகர சா்மாவின் முயற்சியால் இது கட்டப்பட்டது.. இங்கு சனீஸ்வரன் (சனைச்சரன் = மந்தமாக நகர்பவன் ) கோவிலும் உள்ளது.

கோவிலானது கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு மலையில் அமைந்துள்ளது. அதே மலையடிவாரத்தில் வேறு பல தெய்வங்களின் கோவில்களும் உள்ளன:

ஸ்ரீ லட்சுமி கணபதி கோவில்

ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோவில்

சனீஸ்வரன் (சனைச்சரன் ) கோவில்

சிவன் கோவில்

ஒரு சில வைஷ்ணவ கோவில்கள், இப்போது முற்றிலுமாக சேதமடைந்து, மூலஸ்தானத்தில் விக்ரகங்கள் ” இல்லாமல் காணப்படுகிறது.

வர்கல் சரஸ்வதி கோவிலில்  பல வித சேவைகள் உண்டு . இந்துக்களின் கல்வித் தெய்வம் சரஸ்வதி ஆதலால்

பல குடும்பங்கள் தங்களின் குழந்தைகளுக்கு அக்ஷர அப்பியாசம் செய்வதற்குக்  குழந்தைகளை அழைத்து வருகின்றனர்..இதற்கு சிறிய கட்டணம் உண்டு. கோவிலில் பக்தா்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இந்த  நித்ய அன்னதானம்த்துக்கு நன்கொடை கொடுக்கலாம் .

ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் வசந்த பஞ்சமி மற்றும் சரத் கால  நவராத்திாி திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கோவிலின் ஒரு சிறப்பு வேத பாடசாலை ஆகும்.பல மாணவா்கள் வேதங்களைக் கற்பதற்காக இந்தப் பள்ளிக்கூடத்துக்கு (பாடசாலை) வருகின்றனர்.

கோவில் வரலாறு 

ஸதாசிவ ஸமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் |

அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

सदाशिव-समारम्भां शङ्कराचार्य-मध्यमाम्।

अस्मदाचार्य-प्रयन्तां वन्दे गुरु परम्पराम् ॥

Beginning from Lord sadaashiva himself, jagadguru shankaraachaarya in the middle, up until my own guru – I prostrate to the entire guru-paramparaa.

சந்திரசேகர சர்மா என்ற அறிஞரின் முயற்சியில் இந்தக் கோவில் உருவானது . கோவிலைக் கட்டுவதற்கான இடத்தைத் தேடியபோது வார்கல் மலையில் முன்னரே மேலும் பல கோவில்களும், ஒரு குகையில் சிவன் கோவிலும் இருந்ததால் அந்தக் குன்றினையே தேர்ந்தெடுத்தனர்.

1989–ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992–ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது  .புஷ்பகிரி பீடம் ஸ்ரீ வித்யா நரசிம்ம பாரதி சுவாமிகள் முன்னிலையில் இது நடந்தது. கோவிலைத் துவக்கியவரே இதைக் காஞ்சி காமகோடி சங்கராச்சார்யார் மடத்தின் பராமரிப்பில் விடவேண்டும் என்று 1999–ம் ஆண்டில் கேட்டுக் கொண்டதைக் கோவில் நிர்வாகக் கமிட்டியும் ஏற்றது. மடத்தின் வழிகாட்டுதலின் பேரில் பூஜைகள் நடக்கின்றன.

தெலுங்கானாவில் பாசர் என்னுமிடத்தில் உள்ள புகழ்பெற்ற ஞான சரஸ்வதி ஆலயம் பற்றி முன்னரே கட்டுரை வெளியிட்டோம். அதற்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்று விளங்கும் சரஸ்வதி கோவில் இது.

சரஸ்வதி கோவில், சனீஸ்வரன் கோவில், வர்கல், தெலுங்கானா

கோவிலின் வெப் சைட்டில் முழுவிவரங்களும் உள்ளன

https://sriwargalvidyasaraswathi.org

xxxx

எப்படிப் போவது?

ஹைதராபாத்திலிருந்து 100 கிலோமீ ட்டர் , வாரங்கல்லிலிருந்து 92 100 கிலோமீட்டர் தொலைவில் மாவட்டத் தலை நகர் சித்திப்பேட்டை உள்ளது . சித்திப்பேட்டையிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் வார்கல் கோவில் இருக்கிறது

xxx

கோவில் திறக்கும் நேரம்

Temple Timings

Monday to Thusday

Morning Session காலையில்

06.00 am to 01.00 pm

Friday to Sunday

Morning Session

06.00 am to 02.00 pm

All days எல்லா நாட்களிலும் மாலையில்

Evening Session

04.00pm to 08.00pm

xxxx

தொடர்பு முகவரி

Sri Vidya Saraswathi Sri Shaneshchara Temples,

(Under Kanchi KamaKoti Peetham) Vill & Mandal: Wargal – 502279, District: Siddipet, Telangana

Mobile: 9247851122, 9291277118, 9248151122

–subham-

Tags- வர்கல் ,சரஸ்வதி கோவில், ஆந்திர மாநிலத்தின் , 108 கோவில்கள்,  PART- 9

ராமாயணத்தில் சாபங்கள் (43) வேதவதீ ராவணனுக்குக் கொடுத்த சாபம்! (Post No.13,445)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.445

Date uploaded in London – 16 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (43) 

ராமாயணத்தில் சாபங்கள் (43) வேதவதீ ராவணனுக்குக் கொடுத்த சாபம்!

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில் பதினேழாவது ஸர்க்கமாக அமைவது, “வேதவதீ சாபம்’ என்ற ஸர்க்கம்.

ஒரு காலத்தில் ராவணன் பூமண்டலத்தில் திரிந்து கொண்டிருந்த சமயம் இமயமலைச் சாரலில் தவம் புரிந்து கொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணைக் கண்டான்.

“பெண்ணே, நீ யார்? உனது யௌவனத்திற்கு ஒவ்வாத இதை ஏன் அனுஷ்டிக்கிறாய்?” என்று கேட்டான்.

அந்தப் பெண் அதிதி பூஜையை உரிய படி செய்து விட்டு, “எனது தந்தை குசத்வஜர் என்ற பிரம்ம ரிஷி. பிரஹஸ்பதியின் புதல்வர். அவரது பெண்ணான எனது பெயர் வேதவதீ. என்னை தேவர்கள், கந்தர்வர்கள் உள்ளிட்டோர் மணப்பதற்காகப் பெண் கேட்டு வந்தனர். தந்தையார் விஷ்ணுவையே மருமகனாக மனதில் நிர்ணயித்து விட்டார். அந்தச் சமயத்தில் சம்பு என்ற ராக்ஷஸ அரசன் எனது தந்தையார் தூங்கிக் கொண்டிருந்த போது அவரைக் கொன்றான். இதனால் துக்கமடைந்த எனது தாயார் அவரது உடலுடன் அக்கினியில் பிரவேசித்தாள். நான் என் தந்தையாரின் மனோரதத்தை நிறைவேற்றுவதாக சங்கல்பம் கொண்டு நாராயணனையே மனதால்  ஸ்திரமாய் வரித்து வருகிறேன்” என்றாள்.

ராவணன், “ நான் தசக்ரீவன். லங்கா அதிபதி. எனது மனைவியாக நீ ஆகி விடு” என்றான்.

‘இப்படி எல்லாம் உளறாதே’ என்று வேதவதீ சொல்லிக் கொண்டிருக்கும் போது அவளது கூந்தலை ராவணன் உள்ளங்கையால் தொட்டான்.

உடனே கோபம் கொண்ட வேதவதீ அந்தக் கூந்தலை அறுத்தாள். அவளது கையே கத்தியாக ஆனது. அக்கினியை வளர்த்து உடலை அதில் அர்ப்பணிக்க தீர்மானித்த அவள் கோபம் கொண்டு ராவணனைப் பார்த்து இப்படி மொழிந்தாள்:

யஸ்மாத் தர்ஷிதா சாஹம் த்வயா பாபாத்மா வனே |

தஸ்மாத்த்வம் வதார்தம் ஹி சமுத்பத்ஸ்யே ஹ்ருஹம் புன: ||

அஹம் – நான்

பாபாத்மா – பாபாத்மாவாகிய

த்வயா – உன்னால்

வனே – காட்டில்

தர்ஷிதா – கை தீண்டப்பட்டேன்

யஸ்மாத் தஸ்மாத் – அந்தக் காரணத்தால்

தவ – உனது

வதார்தம் ச – மரணத்திற்காகவே

அஹம் ஹி – நானே

புன: து – இன்னொரு தரமும்

சமுத்பஸ்யே – ஆவிர்ப்பவிக்கப்போகிறேன்

ந ஹி சக்யம் ஸ்திரியா ஹன்ந்தும் புருஷ: பாபநிஸ்சய: |

சாபே த்வயி மயோத்ப்ருஷ்டே தபசஸ்ச வ்யயோ பவேத் |\

ஸ்திரியா – பெண்ணாகிய

மயா – என்னால்

த்வயி – உன் பேரில்

சாபே – சாபம்

உத்ருஷ்டே ச – இடப்பட்டதேயாகில்

தபஸ: – தவப் பெருமைக்கு

வ்யய: – குறைவு

பவேத் – ஏற்படும்

பாபநிஸ்சய: – பாவத் தொழிலே புரியும்

புருஷ ஹி – புருஷனாக இருந்தும்

ஹந்தும் – கொன்று விட

சக்யம் ந – விதியில்லை

யதி த்வம்ஸ்தி மயா கிஞ்சித்க்ருதம் தத்தம் ஹுதம் ததா |

தஸ்மாத்த்வயோனிஜா சாத்வீ  பவேயம் தர்மிண: சுதா ||

தஸ்மாத் – ஆகையால்

மயா – என்னால்

க்ருதம் து – செய்யப்பட்ட புண்யங்களின் பலனும்

தத்தம் து – கொடுக்கப்பட்ட தானங்களின் பலனும்

ஹுதம் ததா – செய்யப்பட்ட தெய்வ சமர்ப்பணங்களின் பலனும்

கிஞ்சித் – கொஞ்சமேனும் இருக்கிறதென்றால்

அயோனிஜா – அயோனிஜையாக – (கர்ப்பவழி இல்லாமல் பிறப்பவளாய்)

தர்மிண: – ஒரு தர்மாத்மாவின்

சாத்வி – அருமை

சுதா – பெண்ணாக

பவேயம் – விளங்குவேன்

 உத்தரகாண்டம், பதினேழாவது ஸர்க்கம், ஸ்லோகங்கள் 31 முதல் 34 முடிய

இவ்வாறு சொல்லி விட்டு வேதவதீ  அக்னியில் குதித்து விட்டாள்.அப்போது ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தது.

அகத்திய முனி இப்படிக் கூறிவிட்டு, “தேவரீர் நீரே விஷ்ணு. சீதையே வேதவதீ” என்று  உண்மையை ஶ்ரீ ராமருக்குக் கூறுகிறார்.

யுத்தகாண்டத்தில் வேதவதீயின் இந்த சாபத்தையும் ராவணன் நினைவு கூர்கிறான்.

அறுபதாவது ஸர்க்கம், ஸ்லோகம் 10, 11

சபதோஹம் வேதவத்யா ச யதா ஸா தர்ஷிதா புரா |

சேயம் சீதா மஹாபாகா ஜாதா ஜனகநந்தினீ ||

புரா – முன்னால்

யதா – எப்பொழுது

ஸா – அவள்

தர்ஷிதா – தீண்டப்பட்டாளோ அப்போது

வேதவத்யா  – வேதவதீ என்ற அவளால்

அஹம் – நாம்

சபத: – சபிக்கப்பட்டேன்

ஜனக நந்தினி – ஜனகரின் மகளாய்

மஹாபாகா – பேரெழில் வாய்ந்தவளாய்

ஜாதா – பிறந்து

சீதா – சீதா என்ற பெயருடன் விளங்கும்

இயம் – இவள்

ஸா ச – அவளே தான்.

இப்படி ராவணன் தனக்கு முன்னால் கொடுக்கப்பட்ட சாபத்தை யுத்த காண்டத்தில் நினைவு கூர்கிறான். இதை அடுத்து நந்தீஸ்வரர், ரம்பை, வருணனின் மகள் கொடுத்த சாபத்தையும் கூறுகிறான்.

**

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-20 (Post No.13,444)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,444

Date uploaded in London – 15 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,444

Date uploaded in London – 15 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

வரலாற்று ரகசியங்கள் continued……………………..

ஹிட்லரின் ஸ்வஸ்திகா

ஸ்வஸ்தித , ஸ்வஸ்திக்ருத் ,ஸ்வஸ்தி, ஸ்வஸ்திபுக்,ஸ்வஸ்திதட்சிண – நாம எண்கள் 901,902, 903,904,905

ஸ்வஸ்தி என்றால் மங்களகரமான ; மொத்தத்தில் எல்லோருக்கும் மங்களத்தை அளிப்பவர் விஷ்ணு. உலகம் முழுதும் ஒரு சின்னம் காணப்படுகிறது அதை ஸ்வஸ்திகா சின்னம் என்ற சம்ஸ்க்ருத மொழிச் சொல்லால் மட்டுமே குறிப்பர். இந்துக்களின் கோவிலிலும் , கடைகளின் சுவரிலும், வடக்கத்திய கல்யாணப் பத்திரிக்கைகளிலும் இன்றும் காணப்படும் இந்தச் சின்னம் கிரேக்க நாட்டுப் பானைகளிலும் சிந்து-சரஸ்வதி நதி தீர  நாகரீக முத்திரைகளிலும் 3000 ஆண்டுகளாக காணப்படுகிறது இதைப் பொறிப்பதன் காரணம் மங்களத்தை உண்டாக்கும் என்பதே.

ஆனால் இப்போது இந்த சின்னத்தைக் கண்டால் ஐரோப்பாவே நடுங்குகிறது. போலீசார் உங்களைக் கைது செய்துவிடுவார்கள். ஏனேனில் ஹிட்லர் தனது கொடியில் பயன்படுத்திய சின்னம் இது

ஹிட்லர் ஏன் இந்தக் கொடியில் , ராணுவ உடையில் ஸ்வஸ்திகா சின்னம் போட்டார் என்றால் மாக்ஸ்முல்லர் கும்பல் செய்த பிரசாரம். ஹிட்லர் தனது சுய சரிதையில் ஆரியரைப் புகழ்ந்து எழுதியுள்ளார். அதற்கு காரணம் அதே ஜெர்மனியைச் சேர்ந்த மாக்ஸ் முல்லர் நாம் ஜெர்மானியர்கள்; ரிக் வேதத்தை எழுதிய புலவர்களும் ஆரியர்கள் என்று சாகும் வரை மாக்ஸ் முல்லர் பிரசாரம் செய்ததே! . இன்றும் தப்பித் தவறி ஸ்வஸ்திகா சின்னத்துடன் ஐரோப்பாவுக்கு வந்தால் உங்களுக்கு அடி உதை கிடைப்பது நிச்சயம் . இந்த ஜு லை (2024) மாதம் நடந்த பிரெஞ்சுத் தேர்தலில் ஒரு பெண் வேட்பாளர் சுவஸ்திகா சின்ன தொப்பி அணிந்து இருந்தார். உடனே அவரை அந்தக் கட்சியே போட்டியிலிருந்து அகற்றியது. அதுவும் அவர் எப்போதோ தொப்பி அணிந்து போஸ்  கொடுத்ததை எதிர்க் கட்சிகள் கண்டு பிடித்து வெளியிடவே அவர் ‘கதை’ முடிந்தது.

லண்டனில் 18 ஆண்டுகளுக்கு நான் நடத்திய நான்கு சங்கங்களில் ஒன்று உலக இந்து மஹா சங்கம். அதன் சார்பில் ஒரு இன்னிசைக் கச்சேரி ஏற்பாடு செய்தேன் . பெரும்பாலான நிகழ்ச்சி அழைப்பிதழ்  பத்திரிகைகளை நானே வீட்டில் கம்பியூட்டரில் டிசைன் செய்து எல்லோருக்கும் ஈ மெயில் அல்லது தபாலில் அனுப்பிவிடுவேன். இந்த முறை இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்றோர் இருவர் டாக்டர்கள். அவர்களுக்கும் சில அழைப்பிதழ்களைக்  கொடுத்து உங்கள் வெள்ளைக்கார நண்பர்களையும் அழைத்து வாருங்கள் என்றேன். மறுநாள் மிகப்பதட்டத்தோடு எனக்குப் போன் செய்து, சுவாமிநாதன் முதலில் அழைப்பிதழ்களை எரித்து விடுங்கள். நானே புதிதாக வேண்டுமானாலும் உடனே அச்சடித்துத் தருகிறேன் என்றார் ; எனக்கும் அதிர்ச்சி ! என்னை அறியாமலே ஏதேனும் பெரிய பிழை வந்துவிட்டதோ என்று எண்ணி, காரணத்தை வினவினேன். நீங்கள் கொடுத்த பத்ரிக்கையில் பார்ட்ரில் ஸ்வஸ்திகா சின்னத்தைப் போட்டுவிட்டீர்கள். என் நண்பர்களுக்கு பெரும் அதிர்ச்சி. என்னை உங்கள் அமைப்பு ஹிட்லர் ஆதரவாளர்களா, இது அரசியல் கூட்டமா? அல்லது  கச்சேரியா ? என்று கேட்டுவிட்டார்கள்  என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தார். எனக்கு ஒரே சிரிப்பு. ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு தயவு செய்து அவர்களிடம் சொல்லுங்கள்- இது இந்துக்களின் மங்களச் சின்னம் ; இந்தியா முழுதும் இன்றும்  இது புனித சின்னமாகக்  கருதப்படுகிறது.ஆ னால் பார்ட்டரை மாற்றி பூக்கள் பார்ட்டரைப் போட்டு ஒரு மணி நேரத்தில் உங்களுக்கு அனுப்புகிறேன். ஆனால் சங்க உறுப்பினர் அனைவருக்கும் இதைத்தான் அனுப்புவேன்; கவலைப்படாதீர்கள் என்றேன்.

எங்கள் வீட்டுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்கா அனுப்பிய விலை மதிப்புமிக்க கல்யாணப் பத்திரிகையில் கூட ஸ்வஸ்திகா சின்னம்தான் இருந்தது; தமிழர்கள் பிள்ளையார் சுழியைப்  பயன்படுத்துவது போல வடக்கத்திய இந்துக்கள் ஸ்வஸ்திகாவைப் பயன்படுத்துவர்.

ஜெர்மன் படைகள் இரண்டாம் உலக யுத்தத்துக்கு முன்னர் ஆஸ்திரியாவையும் ஆக்கரமித்திருந்தது . இப்போது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கட்டிடம் உயரத்திலிருந்து பாரத்தால் ஸ்வஸ்திகா போல வடிவம் தெரிகிறது என்று அழித்து புதிய கட்டிடம் கட்டினார்கள். ஸ்வஸ்திகாவைக் கண்டால் ஹிட்லரையே நேரில் பார்த்தது போல பயப்படுகிறார்கள். தீவிர வலதுசாரிக் கட்சிகள்வேறு பல இடங்களில் இதைப்பொறித்து யூதர்களுக்கு  மிரட்டல் விடுக்கிறார்கள். இத்தனைக்கும் மூல காரணம் மாக்ஸ்முல்லர்,  கால்டுவெல்   கும்பலின் ஆரிய குடியேற்றப் பிரசாரம் தான்.

இப்போதும் தமிழ் கல்வட்டுப் புஸ்தகங்களைப் படித்தீர்களானால் ஸ்வஸ்தி ஸ்ரீ என்றுதான் கல்வெட்டுக்கள் துவங்கும் ஸ்வஸ்திகா வடிவ கிணற்றையே தமிழ் மன்னர்கள் வெட்டி வைத்திருக்கிறார்கள்.

xxxx

நந்தஹ — நாம எண் 528–

சங்கரர் தரும் பொருள் -வேண்டியவை எல்லாம் நிரம்பியவர்; அல்லது விஷய சுகங்களைக் கடந்தவர். பொதுவான பொருள் –மகிழ்ச்சி, வளர்ச்சி.

என் கருத்து

விஷ்ணு ஸஹஸ்ரநாம சொற்களில் நந்த, குப்த , ஸ்ரீ விஜய ஆகியவற்றை பெரிய வம்சங்கள் எடுத்துக் கொண்டன. நந்த வம்சத்திலிருந்துதான்  இந்தியாவின் வரலாறே துவங்குகிறது அதற்கு முந்தைய 1500 வருஷம் வெறும் பூஜ்யம் ; இந்தியாவில் ஒன்றுமே இல்லை என்று வெள்ளை க்காரன் புஸ்தகம் எழுதி வைத்துள்ளான் . கி. மு 1800 வாக்கில் சிந்து -சரஸ்வதி தீர நாகரிகம் அழிந்தபின்னர் 1200 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நந்த வம்சம் என்பது ஆட்சி செய்தது என்பது அவர்களின் ‘கப்ஸா’. ஆ னால் அந்த நந்த வம்சத்தினர் சூத்திரர்கள். க்ஷத்ரியர்கள் அல்ல. சாசாணக்கியன் என்ற கறுத்த பிராமணனை சாப்பா ட்டுப் பந்தியில் கிண்டல் செய்தபோது அவன் குடுமியை அவிழ்த்துப் போட்டு உன் வம்ஸத்தை வேரறுக்கும் வரை குடுமியைக் கட்டமாட்டேன் என்று சபதம் செய்தான்.இதை திருவள்ளுவரும் பாடி இருக்கிறார். பெரியாரைப் பகைத்தால் பெரிய அரசுகள்இடை மு றிந்து விழும் என்கிறது குறள் .

மயில் வளர்க்கும் ஜாதி (மயூர= மோரிய)இளைஞர்களைக் கூப்பிட்டு அலெக்ஸ்சாண்டரையே நடுங்க வைத்த நந்தர்களை ஒழித்துக்கட்டினார் சாணக்கியர். சாணக்கியர் இந்த வரலாறு பல சம்ஸ்க்ருத நாடகங்களை உருவாக்கியது தமிழிலும் சாணக்கிய சபதம் வந்தது.

xxxx

அசோக – நாம எண் 336-

சங்கரர்  தரும் பொருள்- சோகம் அற்றவர் ; பசி , தாகம் , விசனம்/துக்கம், மயக்கம், மூப்பு, மரணம் ஆகிய ஆறு குறைகள் இல்லாதவர் .

வரலாற்றில்  புகழ் பெற்ற அசோக மாமன்னரை அறியாதோர் யாருமிலர்; தனது மகன், மகளையே புத்த மதத்திற்குக் கொடுத்து, ஆசியா முழுதும் புத்த மத்ததைப்  பரப்பினார் . இந்துக்கள் வெறும் ஓலைகளிலும் துணியிலும்  மட்டும் எழுதி வந்ததை மாற்றி முதல் முதலில் பாறைகளில் கல்வெட்டுகளைப்  பொறித்தார் ; அதனால் அசைக்க முடியாத வரலாற்றுச் சான்றுகள் நமக்குக் கிடைத்தன

.xxxx

சித்தார்த்தஹ- நாம எண் 252-

வேண்டியவெல்லாம்  தமக்குத் தாமே பெற்றிருப்பவர். கீதையிலும் -22ல் இதை கிருஷ்ணன் சொல்கிறார்.செய்யவேண்டிய கருமம் எனக்கு மூவுலகிலும் இல்லை; அடைய வேண்டிய பொருளும் எதுவுமில்லை .

வரலாற்று நோக்கில் பார்த்தால் சித்தார்த்தன் என்பது கெளதம புத்தரின் இயற் பெயர் ஆகும் . அவர் வாழ்ந்த காலம் 600 BCE

xxxx

மஹேந்த்ரஹ- நாம எண்  268-

ஈஸ்வரருக்கும் ஈஸ்வரர் என்பது பொருள் .

வரலாற்று நோக்கில் பார்த்தால் பல்லவர்களின் மிகச் சிறந்த மன்னன் மஹேந்திர பல்லவன் ஆவார். அவர் வாழ்ந்தது 600 CE.. சிற்பக் கலையிலும் எழுத்துத் துறையிலும் வல்லவர். மத்த விலாஸப் ப்ரஹசனம் என்னும் சம்ஸ்க்ருத நகைச்சுவை நாடகத்தை எழுதியவர்; பல குகைக் கோவில்களைக் கட்டியவர். முன்னர் அபராஜித என்ற பல்லவனின் பெயரைக் கண்டோம். நரசிம்ம என்ற சொல்லும் வி..ச.வில் வருகிறது. இந்தத் துதி மூன்று பெரிய பல்லவர்களுக்குப் பெயர்களை அளித்தது குறிப்பிடத் தக்கது

மேற்கூறிய பட்டியல் வரலாற்றில் வி..ச..வின் தாக்கத்தைக் காட்டுகிறது.

தொடர்ந்து மேலும் காண்போம்.

subham—

TAGS-வரலாற்று ரகசியங்கள் , விஷ்ணு சஹஸ்ரநாமம் (வி.ச.), ஸ்வஸ்திகா, ஹிட்லர்

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்; PART- 8 (Post No.13,443)

BHAGYALAKSHMI TEMPLE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,443

Date uploaded in London – 15 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஹைதராபாத் கோவில்கள் தொடர்ச்சி ……ஹைதராபாத் நகரம் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது

ஸ்வயம்பூ சென்னகேசவ சுவாமி கோவில்

Swayambhu Chennakesava Swamy Temple

இது ஒரு சிவன் கோவில் . ஹைதராபாத்திலுள்ள பழைய கோவில்களில் இதுவும் ஒன்று.

வெள்ளை கற்களால் கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் , சிவ பக்தர்களுக்கு முக்கியமான கோவில் ஆகும்.

விஜயநகர வம்சத்துக்கு பின்னால் எழும்பிய, 600 ஆண்டுகள் பழமையான, கோவில்.சந்திராயானகுட்டாவில் இருக்கும் மலைப்பாறைகளைக் குடைந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவை அழகான சிற்பங்கள் . வரலாற்று நோக்கில் பலரும் அணுகும் கோவில்

XXXX

சூரியன் கோவில்

இது 1959ம் ஆண்டில் கட்டப்பட்டது.. பசுமை மரங்கள் சூழ்ந்த இடத்தில் வண்ணமிகு கோபுரம் கவர்ச்சியுடன் நிற்கிறது

Timings: 6:30 AM-12:30 PM & 5:00 PM-7:30 PM

Location: Aruna Enclave, Trimulgherry, Hyderabad – 500015, Near SP Colony

Sri Surya Devalayam, Trimulgherry is now available on Whatsapp and Telegram.

Please reach us out on +91 – 95425 52425

Mail id : srisurya.devalayam@gmail.com

Address Secunderabad, Tirumalagiri, Telangana 500015.

XXXX

நரசிம்ம சுவாமி கோவில்

இது ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. அங்கு ஐந்து வெவ்வேறு நரசிம்மர்களை தரிசிக்கலாம்.அமைதியான சொல்நிலையை விரும்புவோர்  இந்த இனத்திற்குச் செல்லலாம்.

Timings: Morning and Evening

Location: Nampally Gutta

XXXX

தத்தாத்ரேயர் கோவில்

அண்மைக்காலத்தில் தோன்றிய தத்தாத்ரேயர் கோவில் சீதாராம் பாக் என்னுமிடத்தில் உள்ளது.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நரசிம்மாவதாரம் ஒன்று . வார இறுதி நாட்களில் அதிகம் பக்தர்கள் வருகிறார்கள்.

Timings: 6:00 AM-11:00 AM and 4:00 PM-8:00 PM

Location: Sitaram Bagh, Hyderabad, Telangana-500006.

XXXX

அஷ்ட லட்சுமி கோவில்

எட்டு வகையான லெட்சுமி உருவங்களும் தனித்தனி சந்நிதிகளில் இருக்கின்றன . சென்னையில் உள்ள அஷ்ட லெட்சுமி கோவில் போலவே கட்டப்பட்டுள்ளது.1996 முதல் இயங்கிவரும் இக்கோவில் , தில்சுக் கக்கருக்கும், எல்.பி நகருக்கும் இடையே உள்ளது ;பளிங்கனுக்கு கற்கள் போல பளபளக்கும் இக்கோவில் இரவு நேர மின் ஒளியிலும் நிலவு ஒளியிலும் பார்க்கப் பரவசம் ஊட்டும்;

அமைதியான  சூழ்நிலை உடைய கோவில்.

Timings: 6:00 AM-9:00 PM

Location: Vasavi colony, Ramakrishnapuram, Kothapeta, Hyderabad, Telangana-500035

XXXX

இஸ்கான் கோவில் ISKCON Temple Hyderabad

இஸ்கான் என்பது ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் சுருக்கப்பெயர் ; அங்கு ராதா கிருஷ்ணர் மூர்த்திகளைக் காணலாம் . எப்போதும் ஹரேகிருஷ்ணா பக்தர்களின் பஜனை ஒலியைக் கேட்கலாம் . அதிகளாயில் திறக்கும் கோவில் இது.

Timings: 4:30 AM-8:30 PM

Location: Hare Krishna Land, Nampally Station Road, Abids

XXXX

ஸ்ரீ கணேஷ் கோவில், செகந்திராபாத் Sri Ganesh Temple, Secunderabad

ராம்கோடி பகுதியில் உள்ளது. இங்குள்ள  சிவ லிங்கமும் ஒப்பற்றது

ஹைதராபாத்தும்,செகந்தராபாத்தும் இரட்டை நகரங்கள். அங்குள்ள பிள்ளையார் கோவில்,  200 ஆண்டுப்  பழைய கோவில். பிள்ளையார் முக்கிய சந்நிதியில் இருக்கிறார்.; மேலும் ஆறு சந்நிதிகளில் நவக்கிரகங்கள், உமா மகேஸ்வரர், ஆஞ்சனேயர் , முருகன், சிவ பிரான் மூர்த்திகளைத் தரிசனம் செய்யலாம். நகரின் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே கோவில் அமைந்துள்ளது.

XXXX

ஹரேகிருஷ்ணா பொற்கோவில்

இது மிகவும் புதிய கோவில் 2018ம் ஆண்டில்தான் கட்டப்பட்டது நரசிம்ம சுவாமிக்கு ஒரு சந்நிதியும் , ராதா கிருஷ்ணருக்கு ஒரு சந்நிதியும் தனித்தனியே உள்ளன. பஞ்சரா  ஹில்ஸ் சாலை 12ல் கோவில்  இருக்கிறது. நரசிம்ம சுவாமிக்கு ஸ்வயம்பு உருவம் என்று சொல்லப்படுகிறது.

xxxx

ஸ்ரீ பாக்யலட்சுமி கோவில்

Shri Bhagya Laxmi Mandir, Charminar

எல்லோரும் நன்கறிந்த சார்மினார் சின்னம் உள்ள பகுதியில் பாக்ய லெட்சுமி கோவில் அமைந்துள்ளது 1960 ஆம் ஆண்டுகளில் உருவான கோவில்;. கோர்ட் வரை சென்ற கோவில்; சதவிரயத்தமாகக் கட்டப்பட்டதாக வழக்கு தொடர்ந்தபோது,  இனி விரிவாக்கம் செய்யக்கூடாது என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது.லெட்சுமி தே விக்குரிய வெள்ளிக்கிழமை முதலிய நாட்களில் பகதர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

xxxx

சாய் பாபா கோவில்

Sai Baba Temple Dilsukhnagar

தில்சுக் நகரில் 1990 முதல் பிரபலமாகி வரும் கோவில்.அங்கு காலையிலும் மாலையிலும் ஷீரடி பாபாவுக்கு மராத்தி பாணி  பூஜை , ஆரத்தி நடைபெறுகிறது. வியாழக் கிழமைகளில் அதிக கூட்டம் வருகிறது ; கோவில் இருக்குமிடம்- தில்சுக் நகர்.

-இவை தவிர சமண தீர்த்தங்கரை கோவில், புத்தர் கோவில் ஆகியனவும்கட்டப்பட்டுள்ளன.

–SUBHAM—

Tags- சக்தி கணபதி ,அஷ்டலெட்சுமி , புகழ்பெற்ற 108 கோவில்கள், PART- 8, ஆந்திரம், தெலுங்கானா , ஹைதராபாத், செகந்தராபாத்

ராமாயணத்தில் சாபங்கள் (42) நந்தீஸ்வரர் ராவணனுக்கு சாபம் கொடுத்தது! (Post No.13,442)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.442

Date uploaded in London – 15 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ராமாயணத்தில் சாபங்கள் (42) 

ராமாயணத்தில் சாபங்கள் (42) நந்தீஸ்வரர் ராவணனுக்கு சாபம் கொடுத்தது! 

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில் பதினாறாவது ஸர்க்கமாக அமைவது, “ராவணன் என்ற பெயரை பெற்றது’. 

ராவணன் தன்னுடைய தமையனான குபேரனது இடத்தை அடைந்து அவனுடன் போரிட்டு அவனை வென்றான். குபேரனது புஷ்பக விமானத்தையும் பறித்துக் கொண்டான். 

அந்த விமானத்தில் ஏறி சுப்ரமண்யக் கடவுள் இருக்கும் சரவணம் என்ற இடத்திற்க்குச் சென்றான். அங்கு விமானம் அசையாமல் நின்று விட்டது.

இதற்குக் காரணம் என்ன என்று அவன் யோசிக்கும் வேளையில் சிவபிரானின் அனுசரராகிய நந்தீஸ்வரர் ராவணனிடம் வந்தார்.  வானர முகத்துடன் அவர் வந்ததைக் கண்ட ராவணன் பெரிதாக நகைத்தான்.

உடனே நந்தீஸ்வரர் அவனை நோக்கி இப்படி சாபம் ஒன்றைக் கொடுத்தார்:

யஸ்மாத்வானர மூர்த்தி மாம் த்ருஷ்ட்வா ராக்ஷஸ துர்மதே |

மௌக்யார்த்த்வமவஜானிஷே பரிஹாஸம் ச முச்சஸி |\

துர்மதே – புத்தி கெட்ட

ராக்ஷஸ – ராக்ஷஸனே

மாம் – என்னை

வானரமூர்தி – வானர உருவத்துடன் இருப்பதை

த்ருஷ்ட்வா – பார்த்து

யஸ்மாத் – அக்காரணத்தால்

பரிஹாஸம் ச முச்சஸி – பரிஹாஸமாய் நகைக்கின்றனை!

மௌக்யார்த் – மூடத்தனத்தால்

த்வம் – நீ

அவஜானிஷே – அல்பமாய் நினைக்கின்றாய்

தஸ்மாந்மத்ரூபசம்பன்னா மத்வீர்யே சமதேஜஸ: |

உத்பத்ஸ்யந்தி வதார்தம் ஹி குலஸ்ய தவ வானரா: ||

தஸ்மாத் – இதன் காரணமாக

தவ – உனது

குலஸ்ய ஹி – குலத்திற்கே

வதார்த – கருவழிக்க

மத்ரூபசம்பன்னா – எனது ரூபம் கொண்டவர்களும்

மத்வீர்யசம தேஜஸ: – எனக்குச் சமமான வீர்யமும் பராக்கிரமும் கொண்டவர்களான

வானரா: – வானரர்கள்

உத்பத்ஸ்யந்தி – உற்பவிப்பார்கள்

கிம் த்விதானீம் மயா சக்யம் ஹந்தும் த்வாம் ஹே நிஷாசர |

ந ஹந்தவ்யோ ஹதஸ்த்வம் ஹி பூர்வமேவ ஸ்வகர்மபி: ||

ஹே நிஷாசர் – அடே அரக்கனே

இதானீம் – இப்போதே

மயா – என்னால்

த்வாம் – உன்னை

ஹந்தும் – கொல்வதற்கு

சக்யம் – சாத்தியம் தான்.

கிம் து – அப்படி இருந்தும்

த்வம் – நீ

ஸ்வகர்மபி: – உன்னுடைய கர்மங்களால்

ஹத: – கொல்லப்பட்டவனாய்

பூர்வ ஏவ ஹி – முன்னமேயே ஏற்பட்டிருக்கும் காரணத்தால்

ஹந்தவ்ய: – (என்னால் இப்போது) கொல்லப்பட வேண்டியவனாக

ந – இல்லை

–    உத்தரகாண்டம் பதினாறாவது ஸர்க்கம், ஸ்லோகங்கள் 14 முதல் 16 முடிய

இதைச் சற்றும் பொருட்படுத்தாத ராவணன் மலையைப் பெயர்த்து எறிகிறேன் என்று கைலாய மலையை அசைத்தான்.

பரமேஸ்வரன் தன் திருவடிப் பெருவிரலினால் விளையாட்டாக மலையை அழுத்தினார். ராவணன் கைகள் நசுக்குண்டன. அவன் ஓவென அலறினான். அனைவரும் அவனை சிவபிரானைத் துதிக்குமாறு கூற அவன் அவரைப் பல தோத்திரங்களால் துதித்தான்.

சிவன் அவனுக்கு அருளி, சந்திரஹாஸம் என்ற வாளைக் கொடுத்தார். “இப்படி அலறியதால் மூவுலகமும் சப்திக்கப் பெற்றதாய் விளங்கிற்று. ஆகவே நீ ராவணன் என்ற பெயரால் விளங்குவாய்” என்று சிவபிரான் கூறியருளினார்.

இதன் தொடர்பாக சுந்தரகாண்டத்தில் 50வது ஸர்க்கத்தில் வரும் 2 மற்றும் 3வது ஸ்லோகங்களையும் பார்க்கலாம்.

ராவணன் தனக்கு முன்னே வந்து நிற்கும் வானர மூர்த்தியான ஹனுமானைப் பார்த்தவுடன் அவன் முன்பு கைலாயத்தில் நந்தீஸ்வரிடம் வாங்கிய சாபம் நினைவுக்கு வர இப்படிக் கூறுகிறான்:-

கிமேஷ பகவான்நந்தீ பவேத்சாக்ஷாதிஹாகத: |

கிம் – என்ன இது?!

ஏஷ: – இவன்

நந்தோ பகவாந் நந்தி பகவானே

சாக்ஷாத் – கண்கூடாக

இஹ ஆகத: – இங்கு வந்தவனாக

பவேத் – ஆக வேண்டும்

யேன சப்தோஸ்மி கைலாஸே மயா சஞ்சாலிதே புரா |

ஸோயம் வானரமூர்த்தி: ஸ்யாத் கிம்ஸ்வித்தானோபி வாஸுர: ||

புரா – முன்னர்

மயா – என்னால்

கைலாஸே – கைலாய மலை

சஞ்சாலிதே – குலுக்கப்பட்ட போது

யேன – எவனால்

சபத: அஸ்மி – நான் சபிக்கப்பட்டேனோ

ஸ: -அவன்

அயம் – இந்த

வானரமூர்தி: – வானரமூர்த்தியாய்

கிம் ஸ்வித் – ஒருக்கால்

ஸ்யாத் அபி – வந்து விட்டானோ!

வா – அல்லது

பாண: அசுர: – பாணாஸுர்னாய் இருக்குமோ?

இவ்வாறு ராவணன் தனக்குள் ஆலோசிக்கிறான். அவன் தான் பெற்ற சாபத்தை இங்கு நினவு கூர்கிறான்.

யுத்த காண்டத்தில் 60வது ஸர்க்கம் ‘கும்பகர்ணனை விழிக்கச் செய்வது’ என்னும் ஸர்க்கம்.

ஶ்ரீ ராமரது பாணங்களை நினைத்து உள்ளம் வெதும்பிய ராவணன் தனது பழைய சாபங்கள் அனைத்தையும் இங்கு நினைவு கூர்கிறான்.

உமா நந்தீஸ்வர்ஸ்சாபி ரம்பா வருணகன்யகா!

யதோக்தாஸ்தபஸா ப்ராப்தம் ந மித்யா ருஷிபாஷிதம் ||

உமா – பார்வதியும்

நந்தீஸ்வர – நந்தீஸ்வரரும்

ரம்பா – ரம்பையும்

வருணகன்யகா ச – வருணனின் மகளும்

தபஸா – மன வேதனையால்

யதோக்தா: – எதை வேண்டினார்களோ அது

ப்ராப்தம் – கிடைத்து விட்டது

ருஷிபாஷிதம் – வேதங்களின் நுட்பம் அறிந்த ரிஷிகளின் சொற்கள்

அபி மித்யா ந – பொய்யாகவே இல்லை. 

அனைத்து சாபங்களும் ஒருங்கே கூடி உரிய வேளையில் பலிக்கிறது.

**

Rope or Snake : My Research Notes on VC- Part 12 (Post No.13,441)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,441

Date uploaded in London – 14 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Let us take two more verses from the Viveka Chudaamani  (VC) of Adi Sankara

Verse12 and 13

सम्यग्विचारतः सिद्धा रज्जुतत्त्वावधारणा ।
भ्रान्तोदितमहासर्पभयदुःखविनाशिनी ॥ १२ ॥

samyagvicārataḥ siddhā rajjutattvāvadhāraṇā |
bhrāntoditamahāsarpabhayaduḥkhavināśinī || 12 ||

12. By adequate reasoning the conviction of the reality about the rope is gained, which puts an end to the great fear and misery caused by the snake worked up in the deluded mind. 

Notes:

[Reality of the rope—i. e. that it is a rope and not a snake, for which it was mistaken. ]

*************

अर्थस्य निश्चयो दृष्टो विचारेण हितोक्तितः ।
न स्नानेन न दानेन प्राणायमशतेन वा ॥ १३ ॥

arthasya niścayo dṛṣṭo vicāreṇa hitoktitaḥ |
na snānena na dānena prāṇāyamaśatena vā || 13 ||

13. The conviction of the Truth is seen to proceed from reasoning upon the salutary counsel of the wise, and not by bathing in the sacred waters, nor by gifts, nor by hundreds of Prāṇāyāmas (control of the vital force).

https://www.wisdomlib.org/hinduism/book/vivekachudamani/d/doc144461.html

Aaadi Sankara’s favourite simile is Rope and Snake

My opinion is that Bhaja Govindam of Sankara and his disciples is High School Syllabus and Viveka Chudamani is University Syllabus. In the former he gives grand messages in simple language and in the latter he gives spiritual jargon to convey the same. Adi (aadi) Sankara used some cliché to illustrate his points ; rope and snake, pot and empty space are a few.

In the above two verses he made the following points:

Seeing snake in the rope in night is an illusion.

Salutary counsel of the wise helps us.

Neither pilgrimage nor charity nor Yogasanas help anyone to realise the ultimate truth.

A man steps on the rope in the night time and ears that he was bitten by a snake it comes out of ignorance.  A wise man will explain to him it is only a rope and there is no need for panicking.

In the next sloka Sankara explained that theertha yaatraa/ pilgrimages, a lot of donations to good causes and daily breathing exercises are not enough to reah the ultimate goal

Let us compare it with what other great men say about it,

suramandira-taru-mūla-nivāsaḥ
śayyā bhūtalamajinaṃ vāsaḥ ।
sarva-parigraha-bhōgatyāgaḥ
kasya sukhaṃ na karōti virāgaḥ ॥ 19 Bhaja govindam verse 

living in temples or at the foot of trees, sleeping on the ground, wearing deer’s skin, renouncing all possessions and their enjoyment- to whom will not dispassion bring happiness?

****

arthamanarthaṃ bhāvaya nityaṃ

nāstitataḥ sukhalēśaḥ satyam ।

putrādapi dhanabhājāṃ bhītiḥ

sarvatraiṣā vihitā rītiḥ ॥ 30 ॥

Wealth is no good; thus reflect always; there is not the least happiness therefrom; this is the truth. For the wealthy, there’s even fear from a son. Everywhere this is the mode.

*****

prāṇāyāmaṃ pratyāhāraṃ

nityānitya vivēkavichāram ।

jāpyasamētasamādhividhānaṃ

kurvavadhānaṃ mahadavadhānam ॥ 31

The regulation of the breadth, the withdrawal of the  senses, the inquiry consisting  in the discrimination between the eternal and the non- eternal , the method of mind control associated with the muttering of mantras – perform these  with great care. (This verse is slightly different from what Sankara daid in verse 12

xxxx

Swami Vivekananda says

Rituals are the kindergarten  of religion.

He means that one has to leave them aside and go up.

Ramakrishna paramahamsa says

Not all the fish that live in River Ganga attain Moksha .

He is truly a man to whom money is a servant; but on the other hand,those who don’t know how to make a proper use of it, hardy deserve to be called men.

xxx

Appar says

கங்கை யாடிலென் காவிடி யாடிலென்

கொங்கு தண்குமரித்துறை யாடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்

எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே

What great is bathing in ganga? 

What great is bathing in kAviri? 

What great is bathing in fragrant cool kumari? 

What great is bathing in rising waters of the grand ocean? 

There is nothing for one who does not think, “God is everywhere”

*****

Pattinathar says

ஆரூரர் இங்கிருக்க

அவ்வூர்த் திருநாளென்

றூர்கள்தோறும்

உழலுவீர்; — நேரே

உளக்குறிப்பை நாடாத

ஊமர்காள்! நீவீர்

விளக்கிருக்கத் தீத்தேடுவீர்

When all Gods are same why are you running from one place to another! Oh Ye dumb! When there is an oil lamp burning in front of you, why do search for fire?

We have got similar verses in many Tamil hymns.

–subham—

Tags- Rope or Snake , illusion, My Research Notes on VC , Part 12, pilgrimage, holy bat