திருப்பாவை ராகங்கள் (Post No.13,347)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,347

Date uploaded in London – 17 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஆண்டாள் பாடிய 30 திருப்பாவைப்  பாடல்களுக்கும்  இசை மேதை அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் உரிய ராகங்களைப் போட்டார். அதை எம் எல் வசந்த குமாரி  தனது இனிய குரலில் பாடவே திருப்பாவையானது  தமிழ் நாட்டின் கோவில்களிலும் பட்டி தொட்டிகளிலும் முழங்கத் துவங்கியது , அந்த ராகங்களில் பாடல்களைக் கேட்கும்போது நாம் ஆண்டாளின் அருகில் நிற்பது போலவே தோன்றும். இதோ பாடல்களும் ராகங்களும்:

பாடல் 1) மார்கழித் திங்கள் ராகம்: நாட்டை

பாடல் 2) வையத்து வாழ்வீர்காள்! ராகம்: கௌள

பாடல் 3) ஓங்கி உலகளந்த ராகம்: ஆரபி

பாடல் 4) ஆழி மழைக்கண்ணா! ராகம்: வராளி

பாடல் 5) மாயனை மன்னு ராகம்: ஸ்ரீராகம்

பாடல் 6) புள்ளும் சிலம்பின ராகம்: சங்கராபரணம்
பாடல் 7) கீசுகீசு என்றெங்கும் ராகம்: பைரவி

பாடல் 8) கீழ்வானம் வெள்ளென்று ராகம்: தன்யாஸி

பாடல் 9) தூமணி மாடத்து ராகம்: ஹமீர்கல்யாணி

பாடல் 10) நோற்றுச் சுவர்க்கம் ராகம்: தோடி

பாடல் 11) கற்றுக் கறவை ராகம்: ஹுஸேனி

பாடல் 12) கனைத்திளங் கற்றெருமை ராகம்: கேதார கௌள

பாடல் 13) புள்ளின்வாய் ராகம்: அடாணா

பாடல் 14) உங்கள் புழக்கடை ராகம்: ஆனந்த பைரவி

பாடல் 15) எல்லே இளங்கிளியே! ராகம்: பேகடா

பாடல் 16) நாயகனாய் நின்ற ராகம்: மோஹனம்

பாடல் 17) அம்பரமே தண்ணீரே ராகம்: கல்யாணி

பாடல் 18) உந்து மதகளிற்றன் ராகம்: ஸாவேரி

பாடல் 19)  குத்து விளக்கெரிய ராகம்: ஸஹானா

பாடல் 20) முப்பத்து மூவர் ராகம்: செஞ்சுருட்டி

பாடல் 21) ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி ராகம்: நாதநாமக்ரியா

பாடல் 22) அங்கண்மா ஞாலத்தரசர் ராகம்: யமுனா கல்யாணி

பாடல் 23) மாரி மலைமுழஞ்சில் ராகம்: பிலஹரி

பாடல் 24) அன்று இவ்வுலகம் ராகம்: சிந்துபைரவி

பாடல் 25) ஒருத்தி மகனாய் பிறந்து ராகம்: பெஹாக்

பாடல் 26) மாலே மணிவண்ணா ராகம்: குந்தல வராளி

பாடல் 27) கூடாரை வெல்லும் ராகம்: பூர்விகல்யாணி

பாடல் 28) கறவைகள் பின்சென்று ராகம்: காம்போதி

பாடல் 29) சிற்றஞ்சிறுகாலே ராகம்: மத்யமாவதி

பாடல் 30) வங்கக்கடல் கடைந்த ராகம்: சுருட்டி

Thanks to Tamil Brahmins website.

—-subham—

Tags- அரியக்குடி, எம்.எல்.வி. ஆண்டாள், திருப்பாவை ராகம்

ராமாயணத்தில் சாபங்கள் (28) ஸ்தூலசிரஸ் முனிவர் கபந்தனுக்குத் தந்த சாபம்! (Post.13,346)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.346

Date uploaded in London – 17 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (28) 

ராமாயணத்தில் சாபங்கள் (28) ஸ்தூலசிரஸ் முனிவர் கபந்தனுக்குத் தந்த சாபம்! 

ச.நாகராஜன்

சீதையைத் தேடிச் சென்ற ராமரும் லக்ஷ்மணரும் தண்டகாரண்யத்தைக் கடந்து தெற்கு நோக்கிச் சென்று க்ரௌஞ்சாரண்யம் என்ற இடத்தை அடைந்தனர்.

அப்போது  அங்கு ஒரு குகையில் அயோமுகி என்ற கொடிய தோற்றமுடைய ஒரு அரக்கியைக் கண்டனர். அவள் லக்ஷ்மணரைக் கட்டி அணைக்க, கோபம் கொண்ட லக்ஷ்மணர் அவளது மார்பகங்கள், காது மூக்கு இவற்றை வெட்டுகிறார். அவள் வந்த வழியே அலறியவாறு ஓடி விட்டாள்.

பின்னர் அவர்கள் மிகப் பெரிய உடலைக் கொண்டவனும், அகன்ற மார்பை உடையவனுமான ஒரு அரக்கனைக் கண்டனர். அவனுக்குத் தலையும் கழுத்தும் இல்லை. அவன் வயிற்றில் வாய் இருந்தது. மார்பில் அமைக்கப்பட்ட நெற்றியிலிருந்து ஒரு கண்ணால் ராம லக்ஷ்மணரைப் பார்த்த அவன், அவர்களின் வழியை மறைத்துக் கொண்டு நின்றான்.

கபந்தன் என்ற அந்த அரக்கன் ராம லக்ஷ்மணர் இருவரையும் கட்டிப் பிடித்து உங்களை விழுங்குவேன் என்றான்.. ராமர் அவனது வலது கரத்தை வெட்ட லக்ஷ்மணர் அவனது இடது கையை அறுத்துத் தள்ளுகிறார். அவன் ஓவென்று அலறி பூமியில் விழுந்தான். அவன் நீங்கள் யார்? என்று வினவ லக்ஷ்மணர் இவரே ஶ்ரீ ராமர் என்றும் தான் அவரது தம்பி லக்ஷ்மணர் என்றும் கூறுகிறார்.

நீ யார் என்று கபந்தனை லக்ஷ்மணர் கேட்க அவன் தனது பழைய உருவம் வரப்போகிறது என்பதை அறிந்து மிகுந்த சந்தோஷத்துடன் தனது சாபம் பற்றிய வரலாறைக் கூறுகிறான்.

“பூர்வ காலத்தில் சந்திரனுக்கு ஒப்பான ரூபத்துடன் நான் இருந்தேன். ஒரு பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டு காட்டில் வசித்த முனிவர்களைப் பாதித்து வந்தேன். அப்போது ஸ்தூலசிரஸ் என்ற முனிவர் என்னால் அவமானப்படுத்தப்பட்டார். கோபம் கொண்ட அவர் எனக்கு சாபத்தை இட்டார்.”

கபந்தன் கூறுவது இது:

தேனாஹமுக்த: ப்ரேக்ஷ்யைவம் கோரஷாபாபிதாயினா |

ஏததேவ ந்ருஷம்சம் தே ரூபமஸ்து விகர்ஹிதம் ||

ஏவம் – மேற்கண்டதை (கபந்தனால் அவமானப்படுத்தப்பட்டதை)

ப்ரேக்ஷ்ய – அவர் சிந்தையில் கொண்டு

கோர ஷாபாபிதாயினா – கொடிய சாபத்தை இடும் வகையில்

தேன – அவரால் (ஸ்தூலசிரஸ் முனிவரால்_

அஹம் – நான்

உக்த: – பின்வருமாறு சபிக்கப்பட்டேன்

தே – “உனக்கு

ஏதத் – இந்த

விகர்ஹிதம் – எல்லோராலும் வெறுக்கப்பட்ட

ந்ருஷம்சம் – கோரமான

ரூபம் ஏவ – உருவமே

அஸ்து – சாஸ்வதமாக் இருக்கக் கடவது

ஸ மயா யாசித: க்ருத்தச்சாபஸ்யாந்தோ பவேதிதி |
அபிசாபக்ருதஸ்யேதி தேனேதம் பாஷிதம் வச: ||

அபிசாபக்ருதஸ்ய – அபசாரத்தால் விளைந்த

ஷாபஸ்ய – சாபத்திற்கு

அந்த: – விமோசனம்

பவேத் – ஏற்பட வேண்டும்

இதி – என்று

மயா – என்னால்

க்ருத்த: – சினம் கொண்டிருந்த

ஸ: அவர்

யாசித: – யாசிக்கப்பட்டார்.

இதி – இக்காரணத்தால்

தேன – அவரால்

இதம் – பின்வரும்

வச: – மொழியானது

பாஷிதம் – சொல்லப்பட்டது

யதா சித்வா புஜௌ ராமஸ்த்வாம் தஹேத்விஜனே வனே |

சதா த்வம் ப்ராப்ஸ்ய ஸே ரூபம் ஸ்வமேவ விபுலம் சுபம் ||

ராம: – ஶ்ரீ ராமர்

புஜை – இரு கரங்களை

சித்வா – துண்டாக்கி

த்வாம் – உன்னை

விஜனே – நிர்ஜனமான

வனே – காட்டில்

யதா – எப்போது

தஹேத் – தகனம் செய்கிறாரோ

ததா – அப்போது

த்வம் ஏவ – நீயும்

விபுலம் – அசிந்த்யமானதும்

சுபம் – அழகானதுமான

ஸ்வே ரூபம் – உனது பிறவி ரூபத்தை\

ப்ராப்ஸ்யஸே – அடைவாய்

ஆரண்ய காண்டம், ஸர்க்கம் 71, ஸ்லோகங்கள் 4, 5 & 6)

இவ்வாறு கூறுகிறான் கபந்தன். தொடர்ந்து தான் யார் என்பதை அவன் விளக்குகிறான்.

“தனு என்னும் தானவனது அழகுடன் கூடிய புதல்வனான என்னை இந்த ரூபத்தை அடையுமாறு இந்திரன் சாபம் கொடுத்தான்.”

இந்திரன் சாபம் கொடுத்த வரலாறை அடுத்துப் பார்ப்போம்.

**

உலகம் உருண்டை : திருமூலர்,  திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 23 (Post 13,345)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,345

Date uploaded in London – 16 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

உலகம் உருண்டை என்ற கருத்து அதர்வண வேதம் முதல் எல்லா தமிழ் நூல்களிலும் சம்ஸ்க்ருத நூல்களிலும்  பூமியை வருணிக்கும் இடத்தில் காணப்படுகிறது . பூமியைச் சொல்லும்போது கட,,,,,,யோ நிலத்தையோ வட்டம் என்று வருணிப்பதைக் காணலாம். இதை வேத கால மனிதர்களே சொன்னதுதான் அதிசயம். புவியியல் பாடத்துக்கே நாங்கள் படிக்கும் காலத்தில் பூகோளப் பாடம் தான்  .கோளம் என்றால் என்ன என்று விளக்கத் தேவை இல்லை .

சிறுவயதில் பூமி உருண்டை வடிவம் என்பதை எப்படி அறிவாய்? என்ற மூன்று மார்க் கேள்விக்கு நாங்கள் எழுதும் பதில்- கடலில் நின்று பார்த்தால் கப்பலின் அடிப்பாகமும் நடுப்பாகுதியும் கொஞ்சசம் கொஞ்சசமாமாக மறையும். பின்னர் தான் கொடி மரம் மறையும்; இத்திலி ருந்து பூமி வட் டமானது  என்பதை அறியலாம்.

கிரகண காலத்தை கணக்கிடுவோருக்கும் பூமி உருண்டை வடிவமானது என்று தெரியும்  ; அண்டம்  என்றால் முட்டை, பிரபஞ்சம் என்று இரு பொருள்  இப்போதெல்லாம் விண்வெளியிலிருந்து பார்த்ததால், பெரிய நீல நிறக் கோலிக் குண்டு தான் என்று இப்போது பார்க்க முடிகிறது

இதோ திருவாசகப் பாடல்:–

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்                               

 அளப்பருந் தன்மை வளப்பெரும் காட்சி                               

ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்                                    

நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன                                  

இல் நுழை கதிரின் துன்அணுப் புரையச்     

–திரு அண்டப் பகுதி, திருவாசகம்

இதில் அண்டம் என்பது உருண்டை வடிவானது, அது நூற்றுக்கணக்கான கோடி அண்டங்களாக விரிவடைகிறது என்ற வானவியல் கருத்துகள் சொல்லப்படுகிறது.

இந்தப் பிரபஞ்சம் காற்றால் ஊதப்படும் பலூன் போல விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதெல்லாம் தற்காலக் கண்டுபிடிப்புகள். ஆனால் இதை சம்ஸ்கிருத நூல்களும் , தமிழ் நூல்ல்களும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செப்பிவிட்டன.

திருமூலர் இயற்றிய திருமந்திரப்  பாடல்கள்

உலகம் உருண்டை –

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு

வட்டத் திரை அனல் மாநிலம் ஆகாயம்

ஒட்டி உயிர் நிலை என்னும் இக் காயப்பை

கட்டி அவிழ்ப்பான் கண் நுதல் காணுமே.

(ப. இ.) எண்புலமாகிய எட்டுத் திசைகளிலும் ஆருயிர்கட்கு இன்பம் எய்துதற்பொருட்டு வழங்குவது காற்றெனப்படும். உலகை வட்டமாக ஆடைபோல் சூழ்ந்திருக்கும் கடல் ஈண்டு வட்டத்திரை எனப்பட்டது.. மாநிலம் – பெரிய நிலம். ஆகாயம் – விசும்பு. எனவே, காற்று, நீர், தீ, நிலம், வானம் என்னும் ஐம்பெரும் பூதக் கூட்டரவால் ஆயது உயிர் நிலை. இதனைக் காயப்பை என்ப. இவ்வுடல்களைப் படைத்து அருளால் கட்டிப் பிணைப்பவன் சிவபெருமான்.

இருவினையொப்பு உற்ற காலத்து அப் பெரும் கட்டினை அவிழ்த்தருள்பவனும் அவனே. அவன் அருள் வடிவாம் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் என்க.

441 : Life and Death are Acts of God

He is the Wind that Blows in Directions Eight

He is the wavy ocean that girdles the earth,

He is fire, earth and sky;

Know this:

He is the One that binds and unbinds

The body that holds life precious.

(அ. சி.) வட்டத்திரை – கடல்.

xxxx

இந்தப் பாடல் சிறிய வேறுபாடுகளுடன் இரண்டு இடங்ககளில் வருகிறது

522. செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்

பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்

மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன்

மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

2068. செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்

பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்

மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வான்

மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே. 2

2068 Speak Truth

He who this sea-girt world created

He knows all;

Men falsehoods many utter,

Let them the Truth speak;

He will make Celestials revere them

–He, that is of the lustrous dark throat.

Or

The Truth of Lord’s Blue-Throat
Ye men!,
Who in this sea-girt globe live
In falsehood and flattery!
Why His throat gleams dark,
He knows who made it so;
When you realize the truth
He will make,
Celestial beings bow to you.

xxxxxx

பூமியில் பெரும்பகுதி கடல் என்பதும் இந்துக்களுக்குத் தெரியும் ; இப்போது புவியியல் புஸ்தககங்களில்  70 சதவிகிதம் கடல் 30 சதவிகித நிலப்பரப்பில்தான்  200க்கும் மேலானநாடுகளள்  இருக்கின்றன என்று படிக்கிறோம். தமிழர்களும் சம்ஸ்க்ருத அறிஞர்களும் எப்போதும் பூமியை ஆழி சூழ் உலகு, சமுத்திர வசனே  தேவி समुद्रवसने देवि पर्वतस्तनमण्डले ।

विष्णुपत्नि नमस्तुभ्यं पादस्पर्शं क्षमस्वमे ॥

Samudra-Vasane Devi Parvata-Stana-Mannddale |

Vissnnu-Patni Namas-Tubhyam Paada-Sparsham Kssamasva-Me ||

Meaning:

1: (Oh Mother Earth) O Devi, You Who have the Ocean as Your Garments, and Mountains as Your Bosom,

2: O Consort of Lord Vishnu, Salutations to You; Please Forgive my Touch of the Feet (on Earth, which is Your Holy Body).

என்றுதான் பாடுவார்கள். திருமூலரும் இந்த இரண்டு உண்மைகளை பாடல்கள் மூலம் விளம்புகிறார்.

சமுத்திர வசனே தேவி! கடல் ஆடையை உடுத்திய பூமித் தாயே! பர்வதங்களே உன் மார்பகங்கள் . விஷ்ணுவின் துணைவியே! உன் புனித உடல் மீது (நிலம்/ தரை) கால்களை வைத்து எழுந்திருக்கிறேன். மன்னிக்கவும்; உடனக்குநமஸ்காரம் என்று சொல்லித்தான் இந்துக்கள் படுக்கையை விட்டு எழுந்திருப்பார்கள் . இன்றும் பல லட்சம் ஆர் எஸ் எஸ் காரர்கள் இதைச் சொல்லித்தான் காலையில் பூமியில் காலை வைக்கிறார்கள்

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்

தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு,

பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,

ஏழ்-இரண்டு ஆண்டின் வா” என்று, இயம்பினன் அரசன்’ என்றாள் 

— இது கைகேயி , ராமபிரானிடம் சொன்னது; கம்பராமாயணப் பாடல்

ஆழி சூழ் உலகம் எல்லாம்== கடல் சூழ்ந்த இந்த நிலப்பரப்பை

ஆகையால் பூமி வட்ட வடிவம், கடல்தான் பெரும் பகுதி  என்பன எல்லாம் இந்துக்குழந்தைகள் இளம் வயதிலேயே கற்ற்றுக்கொண்டு விடுகின்றன

—subham—

Tags- திருமூலர்,  திருமந்திரம்  , பூமி வட்டம், கோளம் , கடல் ஆடை , உருண்டை , பெரும்பாகம் , சமுத்திரம்

நாஸா விண்வெளி ஸ்தாபனத்தில் ஸம்ஸ்க்ருதத் துறை (Post No.13,344)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,344

Date uploaded in London – 16 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பெங்களூரு ஜூன் 14, 2024,

கர்நாடக கவர்னர் ஜெலோட்,  பெங்களூருவிலுள்ள சம்ஸ்க்ருத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சொற்பொழிவு ஆற்றுகையில் அமெரிக்காவிலுள்ள நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் அட்மினிஸ்டரேஷன் செர்வீஸ் எனப்படும்  NASA /நாஸா அமைப்பில் சம்ஸ்க்ருத ஆராய்ச்சிக்காகவே தனிப் பிரிவு இருப்பதாக கூறினார் .

கர்நாடக கவர்னர் Thaawarchand Gehlot  கர்நாடக சம்ஸ்க்ருத பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் மேலும் கூறியதாவது,

“மாநில மொழியுடன் ஸம்ஸ்க்ருதத்தையும் படிப்பதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.சம்ஸ்க்ருத மொழியிலுள்ள ஓலைச்சுவடிகளை ஆராய் வதற்கென்றே அமெரிக்காவில் நாஸா விண்வெளி ஸ்தாபனத்தில் ஒரு பிரிவு துவங்கப்பட்டுள்ளது . சம்ஸ்க்ருத மொழிதான் இந்தியாவின் ஆன்மா.அதுதான் இந்தியாவின் பாரம்பர்யத்தைப் கற்பிக்கும் மொழி. ஸம்ஸ்க்ருதம் மேல் எனக்குள்ள பற்றினால் ராஜ்ய சபையிலும் லோக சபையிலும் நான் மெம்பரானபோது சம்ஸ்க்ருத மொழியிலேயே உறுதி மொழி எடுத்தேன். மேலும் முன் காலத்தில் அறிஞர்கள் அனைவரும் சம்ஸ்க்ருத மொழியிலேயே கருத்துக் பரிமாற்றம் செய்துகொண்டனர். விவாதம் நடத்தினார்கள்”.

“மேலை நாடுகள் சம்ஸ்க்ருத மொழியின் சிறப்பினை அறிந்துள்ளன . அமெரிக்காவிலுள்ள ரிக் பிரிக்ஸ் Rick Briggs என்ற விஞ்ஞானி இம்மொழியின் இலக்கணம் பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். கம்பியூட்டரில் பயன்படுத்தும் கணித மொழிக்காக 60,000 சம்ஸ்க்ருத ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து வருகிறார். அமெரிக்கா, ஜெர்மனி போனற நாடுகள் இம்மொழியின் அருமை பெருமைகளை அறிந்துள்ளன ; உத்தரகண்ட் மாநிலத்தில் இது இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் மத்தூரில் இது பேச்சு மொழியாக இருக்கிறது உலகெங்கிலும் உள்ள பல்கலைக் கழகங்களும் இதைக் கற்பிக்கின்றன. சம்ஸ்க்ருத மொழி ஒரு அறிவுக் களஞ்சியம். அதில் எல்லா விஷயங்களும் உள்ளன.”

XXXX

பெங்களூருவிலுள்ள சம்ஸ்க்ருத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1004 மாணவ மாணவிகள் பல்வேறு பட்டங்களைப்  பெற்றனர். சம்ஸ்க்ருத பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் அஹல்யா சர்மா மற்றும் பல சம்ஸ்க்ருத அறிஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

44 மாணவர்கள் பி எச். டி . பட்டம் பெற்றனர்  90 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.  ஆறு பேருக்கு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

—SUBHAM—

TAGS- NASA , நாஸா , சம்ஸ்க்ருத ஆராய்ச்சி   , தனிப் பிரிவு , கர்நாடக கவர்னர், ரிக் பிரிக்ஸ், Rick Briggs, சம்ஸ்க்ருத பல்கலைக்கழகம்

London: Over 700 attend Indian High Commission’s Yoga event in Trafalgar Square

compiled BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – 16 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

15 JUNE 2024 (News Paper Reports)

Ahead of International Yoga Day, the High Commission of India in the United Kingdom organised a yoga event at Trafalgar Square which witnessed the significant participation of more than 700 enthusiastic people.

Since 2015, the International Day of Yoga is celebrated across the world annually on June 21, following its adoption by the United Nations in 2014.
While speaking to ANI, the Indian High Commissioner Vikram Doraiswami said, “It was a great pleasure to be able to have well over 700 people here in this central spot in London. With the iconic statues all around it. And of course, to have multiple yoga schools come here and lead us in the practice of yoga.”

Further, he also emphasized that in London, diverse communities participated, “exemplifying the point that our Prime Minister has said, that yoga unites everybody and that yoga is for everybody.”

In response to a question, about what’s different this year, the Indian envoy Doraiswami highlighted that this year, there were more participants, additional yoga schools involved, and a greater diversity of communities present.

“But the idea wasn’t to be different, the idea was to be, to take through the continuity of yoga as a means of healing and as a means of growing,” he added.


Further, a UK citizen Inderpal Ohri Chandel also spoke with ANI and highlighted that the theme for this year is ‘women’s empowerment’ adding that she also emphasized the significance of yoga for Indians and Asians, considering it a vital part of their heritage that fosters cultural connection and importance.

 “The big thing is that today the members of the Indian Cricket Deaf Team have also come here because their matches will be with Great Britain,” she added.

Hirdesh Gupta said, “We are here today at Trafalgar Square to celebrate the 10th International Day of Yoga organised by the High Commission of India. A lot of people here have joined in today to celebrate yoga. We want to thank PM Modi for recognising Yoga at the United Nations. Now, everybody is adopting yoga and making it a part of their day-to-day life.”

–SUBHAM—

TAGS- YOGA DEMO, LONDON TRAFALGAR SQUARE, YOGA DAY, 700 PEOPLE

ராமாயணத்தில் சாபங்கள் (27) ராமர் மலையைப் பார்த்து உன்னை அழிப்பேன் என்று கூறியது! (Post No.13,343)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.343

Date uploaded in London – 16 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (27)

 ராமாயணத்தில் சாபங்கள் (27) ஶ்ரீ ராமர் மலையைப் பார்த்து உன்னை அழிப்பேன் என்று கூறியது!

ச.நாகராஜன் 

சீதையைத் தேடி ராமரும் லக்ஷ்மணரும் ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே சென்றனர். அங்குள்ள மான்களைப் பார்த்து சீதை எங்கே என்று கேட்க அவை ஆகாயத்தைப் பார்த்து தென் திசையை நோக்கின.

இதனால் தென் திசை நோக்கி சீதை சென்றிருக்கிறாள் என்று ஊகித்த ராமர் அந்த திசை வழியே செல்லலானார்.

கோதாவரி நதியிடம் சீதை எங்கே என்று கேட்டார்; பதில் இல்லை.

ராவணனுக்கு பயந்து யாருக்கும் பதிலைச் சொல்ல தைரியம் வரவில்லை.

அங்கு உதிர்ந்து கிடந்த புஷ்பங்களைப் பார்த்த ராமர் தான் சீதைக்குக் கொடுத்த புஷ்பங்கள் போல இவை இருக்கின்றனவே என்று லக்ஷ்மணரிடம் கூறிப் புலம்புகிறார்.

பின்னர் அவர் அங்கிருந்த மலையைப் பார்த்துக் கூறலானார் இப்படி:

ததோ தாசரதி ராம உவாச ச சிலோச்சயம் |

ஆரண்ய காண்டம், 64-ம் ஸர்க்கம், 34-ம் ஸ்லோகம்

தத: – அப்போது

தாசரதி – தசரதரின் குமாரரான

ராம – ராமர்

சிலோச்சயம் – பர்வதத்தைப் பார்த்து

உவாச ச – பேசலானார்

மம பாணாக்னிநிர்தக்தோ பவிஷ்யஸி |

அசேவ்ய: சந்ததம் சைவ நிஸ்த்ருணதுமபல்லவ: ||

ஆரண்ய காண்டம், 64-ம் ஸர்க்கம், 35-ம் ஸ்லோகம்

மம – எனது

பாணாக்னிநி நிர்தக்த: – பாணங்களின் அக்கினியால் எரிந்ததாயும்

நிஸ்திருண தும பல்லவ: ச – புல், மரம், தளிர் எல்லாம் ஒழிந்ததாயும்

சந்ததம் – எக்காலத்திலும்

அசேவ்ய: ஏவ – ஒருவராலும் எட்டிப்பார்க்கப்படாததாகவும்

பஸ்மிபூத: – பஸ்மமாக

பவிஷ்யதி – நீ ஆகப் போகிறாய்

இமாம் வா சரிதம் சாத்ய ஷோஷயிஷ்யாமி லக்ஷ்மண |

யதி நாக்யாதி மே சீதாமத்ய சந்தைரிபானனாம் ||

லக்ஷ்மண – லக்ஷ்மணா!

அத்ய – இப்போது

சந்த்ர நிபானனாம் – சந்திரனை நிகர்த்த முகத்தை உடைய

சீதாம் – சீதையைப் பற்றி’

மே – எனக்கு

ஆக்யாதி ந யதி – தெரிவிக்காத பட்சத்தில்

அத்ய ச – இப்பொழுதே

இமாம் – இந்த

சரிதம் வா – நதியையும்

ஷோஷயிஷ்யாமி – வற்றும்படி செய்கிறேன்

ஆரண்ய காண்டம், 64-ம் ஸர்க்கம், 36-ம் ஸ்லோகம்

இப்படி ராமர் மலையையும் நதியையும் சபித்து விடுவேன் என்று கூறுகிறார். ஆனால் சபிக்கவில்லை. இதை நிபந்தனையுடன் கூடிய சாபம் (Condtional) என்றே சொல்லலாம்.

பின்னர் அங்கு கிடந்த சீதா தேவியின் ஆபரணங்களின் துணுக்குகள்,  இறைந்து கிடந்த புஷ்பங்கள், ரத்தத் துளிகள்  ஆகியவற்றைப் பார்க்கிறார். கோபத்தால் கொதித்த அவரை லக்ஷ்மணர் சமாதானப்படுத்தி கோபத்தை அடக்குமாறு வேண்டுகிறார்.

**

NASA has a Sanskrit Department!


NASA has a Sanskrit Department!

 compiled BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – 14 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

15 June 2024, Bengaluru

‘Soul of India’: NASA has department for Sanskrit manuscripts research, Karnataka Governor tells students Gehlot was delivering the convocation address at the Karnataka Sanskrit University (KSU), of which he is the Chancellor. He advised parents to a… allow their children to learn Sanskrit along with the local language.

Bengaluru: Hailing Sanskrit as “the soul of India”, Karnataka Governor Thaawarchand Gehlot on Friday said US space agency NASA had started a department dedicated for research on manuscripts in the ancient language.

Gehlot was delivering the convocation address at the Karnataka Sanskrit University (KSU), of which he is the Chancellor. He advised parents to allow their children to learn Sanskrit along with the local language.

According to Gehlot, Sanskrit is the language of knowledge in Indian tradition. He said he is “obsessed” with Sanskrit and that is why he took oath in that language at Lok Sabha and Rajya Sabha. “Sanskrit is the soul of India and a repository of vas…

of vast knowledge. Historically, Sanskrit was the language of discourse among scholars across the country and was used in all important matters,” Gehlot said.

Gehlot said even western nations realised the value of Sanskrit. “Rick Briggs, a renowned NASA scientist, highlighted the greatness of Sanskrit, particularly its grammar. NASA, recognising its potential for computer software, established a dedicated . department for researching over 60,000 Sanskrit manuscripts. Countries like the USA and Germany are conducting significant research in this field,” Gehlot said. Sanskrit, Gehlot said, is treated as the second official language in Uttarakhand.

“It is the spoken language in Mathur, Karnataka, and remains a commonly spoken language in various parts of India. Many universities worldwide teach Sanskrit, and those proficient in the language have a promising future,” he said.

At the convocation, 1,004 students received various degrees. Honorary D.Litt degrees were awarded to Basavamurthy Madara Chennaiah Swami, Sadguru Dundeshwara Swami, Prof Gauri Mahulikar of Chinmaya International Foundation, Pallathadka Ghanapati Sha… Pallathadka Ghanapati Shankara Narayana Bhat, Hithlahally Acharya Sooryanarayana Bhat and Acharya A Haridas Bhat. Higher Education minister Dr MC Sudhakar, Sanskrit scholar H V Nagaraja Rao, KSU Vice-Chancellor Dr Ahalya Sharma and others were present.(Deccan Herald Newspaper)

Add from The New Indian Express

1,100 graduate from Samskrit University

BENGALURU: The Karnataka Samskrit University held its 10th and 11th Convocation on Friday. A total of 1,100 students graduated, including 44 students who received their PhDs. Ninety students were also awarded gold medals for their exceptional performance and six honorary doctorates were given out.

Governor Thaawarchand Gehlot emphasised the value of education and knowledge. Highlighting the significance of Sanskrit, he said, “Sanskrit is the language of knowledge in Indian tradition. It is the soul of India and a repository of vast knowledge. Historically, Sanskrit was the language of discourse among scholars across the country and was used in all important matters.” He said Sanskrit has received significant scientific recognition.

“From NASA scientist Rick Briggs highlighting the greatness of Sanskrit, particularly its grammar to NASA recognising its potential for computer software and establishing a department for researching over 60,000 Sanskrit manuscripts, the language remains relevant today,” he said.

–subham—

NASA, Sanskrit, Department, 60,000 manuscripts, NASA scientist Rick Briggs

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்- 6 (Post No.13,342)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,342

Date uploaded in London – 15 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஸர்வ ப்ரஹரணாயுதஹ — நாம எண் 1000

விஷ்ணு ஸஹஸ்ரநாம பராயணம் செய்வோர் ஸர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி என்று இரண்டு முறை சொல்ல வேண்டும்.

எய்துவது எல்லாம் ஆயுதமாய்க் கொண்டவர் .(ஆயுதங்களாக நினைக்கப்படாத அவருக்கு நரசிம்மாவதாரத்தில் ஆயுதமாக மாறியதை நாம் அறிவோம்)சத்திய சங்கல்பரும் சர்வேஸ்வரரும் ஆவதை இது குறிக்கும் என்கிறார் சங்கரர். அவர் காட்டும் மேற்கோள் – ஏஷ ஸர்வேஸ்வரஹ (மாண்டூக்ய உபநிஷத் 6).

பிருஹன் நாரதீய உபநிஷத் 1-51-10 சொல்வதாவது :

ஓம்காரஸ் ச ‘தா -ஸப்தஸ் ச த்வவ் ஏதெள பிரஹ்மணஹ புரா

கண்டம் பித்வா விநிர்யாதெள தஸ்மாத் மங்களிகா உபெள 

பொருள்

ஓம் என்ற சப்தமும் அதஹ என்ற சப்தமும் பிரம்மாவின் வாயிலிருந்து வந்தன ஆகையால் அவ்விரண்டும் மங்களம் வாய்ந்தவை.நமஹ என்பது வணங் குதலைக் குறிக்கும்.

ஈஸா வாஸ்ய உபநிஷத் சொல்கிறது: பூயிஸ்ட்டாம் தே நாம உக்திம் விதேம – நாங்கள் மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறோம்.

ஹரியை வணங்குவது எவ்வளவு புனிதமானது என்பதை கீக்கண்ட ஸ்லோகங்களும் விளக்கும்.

தன்யம் தத் ஏவ லக்னம் தன் நக்ஷத்ரம் ததேவ புண்யம் அஹஹ

கரணஸ்ய  ச  சா சித்திர் யாத்ரா ஹரிஹி ப்ராங் நமஸ் க்ரித்யே

பொருள்

எந்த லக்கினத்தில் ஹரி வணங்கப் பட்டாரோ அதுவே புனிதமானது., எந்த நட்சத்திரத்தில் ஹரி வணங்கப் பட்டாரோ அதுவே புனிதமானது., இது மனதிற்கு சந்தோசம் அளிக்கிறது

இதில் வரும் பிராக் என்பது முதல் என்ற பொருள் தரும் . ஆயினும் இறுதியிலும்  வணக்கம் சொல்லப்படும்.

வணங்குவதன் மூலம் கிடைக்கும் பலன் பற்றி மஹாபாரதம் சாந்தி பர்வமும் 47-91 கூறுகிறது,

ஏகோபி க்ருஷ்ணஸ்ய க்ருத ப்ரணாமோ

தசாஸ்வமேதா வப்ருதேன துல்யஹ

தசாஸ்வமேதி புணரேதி ஜன்ம

க்ருஷ்ண ப்ரணாமி ந புனர் பவாய

பொருள்

கிருஷ்ணனுக்குப் போடும் ஒரு கும்பிடு பத்து அஸ்வமேதம் செய்து அதன் முடிவில் அவப்ருத ஸ்நானம் செய்ததற்குச் சமம். பத்து அஸ்வமேதம் செய்தவனுக்கு மறுபிறப்பு உண்டு. கிருஷ்ணனுக்கு ஒரு நமஸ்காரம் செய்தவனுக்கோ மறு பிறப்பே கிடையாது.

XX

சாந்தி பர்வம் 47-90

அதசீ புஷ்ப -ஸங்காசம் பீதவாஸஸ -மச்யுதம்

ஏ நமச்யந்தி கோவிந்தம் ந தேஷாம் வித்யதே பயம்

ஒரு குறையுமில்லாத கோவிந்தனை வணங்குவோருக்கு பயம் என்பதே இராது. அவர் உடுத்தும் உடை மஞ்சள் ; அவருடைய வண்ணமோ நீலம்.

லோக த்ரயாதிபதீம் அப்ரதிம ப்ரபாவ

மிசத் ப்ராணாம்யசிரஸா ப்ரபவிஷ்ணும் இஸம்

ஜன்மாந்தர- ப்ரளய – கல்ப- ஸஹஸ்ர ஜாத

மாஸு ப்ரசாந்திம் உபயாதி நரஸ்ய  பாபம்

பொருள்

மூவுலகங்களுக்கு அதிபதியும் உலகத்தை தோற்றுவித்தவனுமான, எல்லையற்ற சக்தி உடையவனுமான  இறைவனை, ஒருவன் கும்பிட்டால் அவன் எண்ணற்ற பிறப்புகளில் செய்த  மற்றும் கல்ப காலங்களில் செய்த பாவங்களும் அழிந்துபோகும்

XXXX

தாமோதரஹ – நாம எண் 367

உதார குணமுள்ள மனதைப்  பெற்றவன்.நல்ல மனக் கட்டுப்பாடு (தர்மம்) உடையவன் .

பிரம்மாண்ட புராணத்தில் 76-13-14 வரும் ஸ்லோகம்

ததர்ஸ சால்ப தந்தாஸ்யம் ஸ்மித ஹாஸம் ச பாலகம்

தயோர் மத்யகதம் பத்தம்  தாம்னா காதம் ததோதரே

பொருள்

கோகுலவாசிகள் சிரித்த முகமுடைய பாலனைப் பார்த்தனர்.இரண்டு மரங்களுக்கு இடையில் வயிற்றில் கயிற்றால்  கட்டப்பட்டு இருந்தான்  உதரத்தில் தாம/கயிறு கட்டப்பட்டு இருந்ததால் அவனை தாமோதரன் என்கிறார்கள்.

வியாசர் சொல்கிறார்,

தாமானி லோக நாமானி தானி யஸ்யோதரந்தரே

தேனை தாமோதரோ தேவஹ ஸ்ரீதரஹ ஸ்ரீ ஸமாச்ரிதஹ

பொருள்   

தாம என்றால் உலகங்கள் ; யார் வயிற்றில்  இந்த உலகங்கள் இயங்குகின்றனவோ அந்த ஆண்டவனுக்கு தாமோதர, ஸ்ரீதர, ஸ்ரீனிவாச என்ற பெயர்களுமுண்டு .

என் கருத்து

புறநானூற்றிலும் சங்க நூல்களிலும்  செய்யுள் இயற்றிய புலவர்களில் தாமோதரன், கேசவன் , விஷ்ணு முதலிய பெயர்கள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் சூட்டப்பட்டன. விஷ்ணு தாசன் என்பதை விண்ணன் தாயன் என்றும் காமக் கண்ணியார்  என்பதை காமாட்சி என்றும் எழுதினர். கண்ணதாசன் என்பதை தாயங் கண்ணன் என்று எழுதினார்கள்

XXXX

க்ஷோபணாஹா — நாம எண்  374-

சிருஷ்டி காலத்தில் பிரக்ருதியையும் புருஷனையும் உட்புகுந்து கலக்குபவர் .விஷ்ணு புராணம்1-2-29 சொல்வதாவது:-

பிரக்ருதிம் புருஷஞ்சைவ  ப்ரவிஸ்யாத் மேச்சயா ஹரிஹி

க்ஷோபயாமாஸ பகவான் சர்ககாலே வ்யாயாவ்ய யெள

பொருள்

சிருஷ்டி காலத்தில்  என்றுமுள்ள ஹரியானவர், மாறக்கூடிய ப்ரக்ருதி மாறாத புருஷன் ஆகியவற்றில் நுழைந்து கிளர்ச்சியை உண்டுபண்ணுகிறார்

(இதை மாபெரும் வெடிப்பு- பிக் பேங் — என்று நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன்)

Xxxxx

ஹவிர் ஹரிஹி — நாம எண் 359-

யாகங்களில் ஹவிர் பாகத்தை ஏற்றுக் கொள்கிறவர் ; பகவத் கீதை 9-24:

अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।

न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥९- २४॥

அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச |

ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஸ்²ச்யவந்தி தே || 9- 24||

நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்; என்னை மனிதர் உள்ளபடி அறியார்; ஆதலால் நழுவி வீழ்வர்.

புருஷோத்தமனே ஹவிஸ்ஸாகவும் இருப்பதால் ஹவிஹி ; புருஷஸூக்தமும் அபத்னன் புருஷம் பஸூம் – என்கிறது.

மனிதர்களின் பாவத்தையும் பிறவிப்பிணியையும் போக்குவதால் ஹரிஹி அல்லது ஹரி என்றால் நீலவண்ண கண்ணன் என்றும் பொருள்.

இதை ஹரி, ஹவி என்ற இரண்டு சொற்களாகவும் கொள்ளலாம்

மஹாபாரதம் சாந்தி பர்வம்352-3 கூறுவதாவது:

ஹராம் யகஞ் ஸ்மர்த்ரூணாம் ச ஹவிர்பாகம் க்ரதுஷ் வஹம்

வர்ண ஸ் சமே ஹரிர்-வேதி தஸ்மாத் தரிரஹம்  ஸ்ம்ருதஹ

பொருள்

என்னை நினைப்போரின் பாவங்களை நான் அழிக்கிறேன் ;நான் யாகத்தில் வரும் ஹவிஸ் என்னும் சோற்றையும் எடுத்துக்கொள்கிறேன் . என்னுடைய வர்ணம் மகிழ்ச்சியூட்டும் நீலம் ஆகும். ஆகையால் என்னை ஹரி என்கிறார்கள் .

XXXX

அதுலஹ — நாம எண் 355-

ஒப்பற்றவர்.

ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸஹ — ச்வேதஸ்வைத்தாரா உபநிஷத் 4-19.

பரமாத்மனுக்கு சமமானவர் எவருமிலர் அவருடைய நாமம் பெருமைமிக்கது.

****

பகவத் கீதை 11-43 சொல்வதாவது,

पितासि लोकस्य चराचरस्य

त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान् ।

न त्वत्समोऽस्त्यभ्यधिकः कुतोऽन्यो

लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव ॥११- ४३॥

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய

த்வமஸ்ய பூஜ்யஸ்²ச கு³ருர்க³ரீயாந் |

ந த்வத்ஸமோஸ்த்யப்யதிக: குதோந்யோ

லோகத்ரயேப்யப்ரதிமப்ரபாவ || 11- 43||

சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய். இவ்வுலகத்தால் தொழத்தக்கனை; மிகவும் சிறந்த குரு நீ. உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்கு மேல் வேறுயாவர்? மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!

xxxx

க்ருஷ்ணஹ — நாம எண் 550

கிருஷ்ணர் எனப்பெயர்கொண்ட வியாசர்

க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும்

குகோஹ்யன்யஹ புண்டரீகாக்ஷான்  மஹாபாரதக்ருத் பவேத் — விஷ்ணு புராணம் 3-4-5

பொருள்

க்ருஷ்ண த்வைபாயனர் என்ற பெயர்கொண்ட வியாஸர் நாராயணனே ஆவார் மஹாபாரதம் போன்ற ஒரு நூலை தாமரைக்கு கண்ணன் ஆன கடவுள் தவிர வேறு யார் செய்ய முடியும்?

To be continued……

 TAGS-

 விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்- 6

பால் சாப்பிடுவது நல்லதா ? கெட்டதா ? – Part 2 (Post No.13,341)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,341

Date uploaded in London – 15 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பால் சாப்பிடுவது நல்லதா கெட்டதா–  நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி

எச்சரிக்கை

இந்தக்கட்டுரையின் பிற் பகுதியில்  என் சொந்தக் கதையும் வரும்; தேவையானால், நேரம் இருந்தால் அதைப்படியுங்கள்! 

இந்துக்கள் எப்படி பசுமாடுகளை நடத்தினார்கள் ?  மது பர்க்க என்றால் என்ன? எனக்கு ஏற்பட்ட கசப்பான வேகன் அனுபவங்கள் ; எனக்கு என் பேரக் குழந்தைகள் செய்யும் உதவி! ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் தருகிறேன்.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா;

வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா.– மஹா கவி பாரதியார்

xxx

மது பர்க்க என்றால் என்ன?

வேகன் Vegan என்பது இந்தியாவில் இல்லாத ஒரு கொள்கை. நம்முடைய ரிஷி முனிவர்கள் அனைவரும் பாலும் தேனும் சாப்பிட்டு வளர்ந்தார்கள். ஆனால் தேனீக்களின் உயிருக்கோ பசுமாட்டின் உயிருக்கோ ஆபத்து வராமல் அதைச் செய்தனர். புது மணத்  தம்பதிகளுக்கும் , வீட்டிற்கு வந்த விருந்தாளிகளுக்கும், முனிவர்களின் ஆஸ்ரமத்தில் நுழைவோருக்கும்  மதுபர்க்கம் கொடுப்பது வழக்கம். இதை புராண இதிகாசங்களில் காண்கிறோம். இது ஆரோக்கியமானது; சக்தி கொடுப்பது; விருந்தாளியை இனிமையாக வரவேற்பதை ஒத்தது . இன்று நாம் காப்பி, டீ  கொடுப்பது போன்றது;  மது பர்க்கம் என்பது தேனுடன் பாலோ, தயிரோ நெய்யோ  கலந்தது .

More About Madhuparka from Wisdomlib.com

Madhuparka (मधुपर्क) refers to “articles of homage” (i.e., “Madhuparka is a mixture of honey, butter, sugar, curd and water offered to a guest when he first comes to the house”)

Madhuparka (मधुपर्क).—An offering of milk and honey;1 Paraśurāma was treated with it by Agastya.2

Madhuparka (मधुपर्क) refers to the “reception of the bride-groom at the bride’s house” and represents one of the various Marriage Rites (saskāra) according to the Āpastamba-gṛhya-sūtra

Madhuparka (मधुपर्क).—

1) ‘a mixture of honey’, a respectful offering made to a guest or to the bridegroom on his arrival at the door of the father of the bride; (its usual ingredients are five:dadhi sarpirjala kaudra sitā caitaiśca pañcabhi | procyate madhuparka); समांसो मधुपर्कः (samāso madhuparka) Uttararāmacarita 4; असिस्वदद्यन्मधु- पर्कमर्पितं स तद् व्यधात्तर्कमुदर्कदर्शिनाम् । यदैष पास्यन्मधु भीमजाधरं मिषेण पुण्याहविधिं तदा कृतम् (asisvadadyanmadhu- parkamarpita sa tad vyadhāttarkamudarkadarśinām | yadaia pāsyanmadhu bhīmajādhara miea puyāhavidhi tadā ktam) N.16.13; Manusmṛti 3.119 et seq.

2) the ceremony of receiving a guest.

 A dish of curds, ghee and honey, to be offered to a respectable guest on his arrival. E. madhu honey, pc to sprinkle, aff. ghañ .

இந்துக்கள் எப்படி பசுமாடுகளை நடத்தினார்கள்?

வெள்ளைக்காரர்கள் போல பால் வற்றிய பசுக்களை இந்துக்கள் கொல்லவில்லை . அவைகளை கோ சாலையில் வைத்து இறுதிவரை காப்பாற்றினார்கள் .சாப்பாடு போட்ட அம்மாவை கிழவி யானவுடன் கொல்வது போல மேல் நாட்டினர்  வயதான பசுக்களைக் கொல்கிறார்கள். மேல் நாட்டில் பசு மாட்டை ஒன்றரை வருடத்துக்கு ஒரு முறை கர்பமாக்குவது போல இந்துக்கள் செய்யவில்லை. செயற்கைக் கருத்தரிப்பையும் கையாளவில்லை.

வேதத்தில் அடிக்கடி வரும் உவமை வாத்சல்யம். பசுவானது அதன் கன்றிடம் காட்டும் அன்பு வாத்சல்யம். வத்ச என்றால் கன்று. இதிலிருந்துதான் வாக்ஸீன் என்ற மருந்து தொடர்பான சொல்லும் வந்தது .இந்த வாத்சல்யம் என்பதை அன்புக்கு உவமையாக  பிற்கால சம்ஸ்க்ருத நூல்களும் கையாண்டன.

பசுவை தெய்வமாகப் போற்றியது இந்து கலாசாரம். இந்தியாவுக்கு வெளியே பிறந்த மதங்கள், பசுவை விலங்குகளாக கருதியதோடு அல்லாமல் அதை தெரு நாய்களுக்கும் கீழ்த்தரமாக நடத்துகின்றனர். மாடுகளையும் பன்றிகளையும் கோழிக்குஞ்சுகளையும் அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை அனிமல் ரைட்ஸ் Animal Rights  காரர்கள் பள்ளிச் சிறுவர்களுக்கு டாக்குமென்டரியாகப் போட்டுக் காட்டியவுடன் வெள்ளைக்கார சிறுவர்களும் வெஜிட்டேரியங்களாக மாறி வருகிநின்றனர் .

மேலை நாடுகள் போல மிஷின்களை வைத்து,  ஒட்ட ஓட்ட பால் கறப்பது போல அல்லாமல், இந்துக்கள், கன்றுக்கு பால் கொடுத்த பின்னர்தான் கறந்தனர் அல்லது கன்றுக்குத் தேவையான பாலை  மிச்சம் வைத்தனர். பிறந்த கன்றினை அம்மா பார்க்கும் முன்பே பறித்துச் செல்லும் வழக்கமும் இல்லை.

இந்தியாவில் பசுக்களுக்கு வைக்கோல்/வைக்கல் அல்லது புல்  அகத்திக் கீரை முதலிய வெஜிட்டேரியன் Vegetarian உணவே கொடுக்கப்படுகிறது . மேலை நாடுகளில் எலும்பு பவுடர் Bone Meal) போன்ற அசைவ உணவுகளும் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் ‘மேட் கவ் டிசீஸ்’ Mad Cow Disease என்னும் பயங்கர நோய் பரவியவுடன் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. இந்த நோய் ஏற்பட்ட இடங்களில் பல்லாயிரம் பசுக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

என் சொந்தக் கதை  

டின்னர் லேடிகள் ஜாக்கிரதை !Dinner lady advice!)

என்னுடைய ஒரு பேரக்குழந்தைக்கு வயது 6. அவனுடன் பேச்சுக் கொடுத்தபோது ஒரு ரகசியம் வெளியானது.

தாத்தா ! டின்னர் லேடி சொல்றா; சிக்கன் CHICKEN  சாப்பிட்டா  நல்லது; உடம்பில பலம் வரும்னு.

உடனேயே நான் சொன்னேன்; அது தப்பு; மகாபாரதம் முதலிய கதைகளில் பிராமணர் துரோணர் போனர்வர்கள்தான் கமாண்ட ர்களாக இருந்தனர். அவர்கள் சிக்கன் சாப்பிட்டதாக சொல்லவில்லை. யானை, காண்டாமிருகம், குதிரை, காளை மாடு  எல்லாம் மாமிசம் சாப்பிடுவதில்லை . ஆகையால் டின்னர் லேடி சொல்லுவதை நம்பாதே என்றேன்.

(இந்தப் பள்ளிக்கூடத்தின்   தலைமை ஆசிரியை முஸ்லீம்; ஆகையால் முஸ்லீம் டின்னர் லேடிக்களை நியமித்திருக்கிறார் போலும். டினார் லேடி என்போர் பள்ளிக்குழந்தைகள் லன்ச் சாப்பிடும் பொது பகுதி நேர வேலை செய்வோர். இது நான் வசிக்கும் லண்டனில் சென்ற ஆண்டு நடந்தது; மேலை நாடுகளில், குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இது போல நிறைய பிரச்சனைகள் வருகின்றன. கல்வி அதிகாரிகளும் முஸ்லீம் பள்ளிகளை எச்சரித்து வருகின்றனர்.

Pupils at six small Muslim private schools in East London are at risk of extremist views and radicalisation, says Ofsted’s chief inspector. Sir Michael Wilshaw said the pupils’ “physical and educational welfare is at serious risk” following a series of emergency inspections.

பேரக் குழந்தையின் உதவி

நான் பிறப்பிலேயே வெஜிட்டேரியன் எங்கள் வீட்டில் கைலி கட்டும் ஆட்கள் கிடையாது; மது பாட்டில்கள் கிடையாது . மாமிசமும் கிடையாது என் குழந்தைகளையும் , பேரக்குழந்தைகளையும் பகுதி நேரமாக கவனித்த (Part Time Babysitters, Child minders ) பேபி சீட்டர்கள் சைல்ட் மைண்டர்கள்: — இரண்டு ஐரிஷ் பெண்மணிகள், 2 பிராமணப் பெண்மணிகள், ஒரு பாகிஸ்தானிய பெண்மணி. ஒரு பிராமண பெண்மணியைத் தவிர மற்ற எல்லோரும் நாங்கள் சொன்ன வெஜிட்டேரியன் வரைமுறைகளை தாண்டியதே இல்லை. ஒரு பிராமண பெண்மணி மட்டும், குழந்தைகளுக்கு சிக்கன், முட்டை எல்லாம் கொடுக்கலாமில்லியோ? என் பையன் பெண்ணுக்கு நான் கொடுக்கிறேன் அப்பத்தான் பலம் வரும் என்றாள் ; எனக்கும் என் மனைவிக்கும் தூக்கிவாரிப் போட்டது .

அடக் கடவுளே; எங்கள் குடும்பத்தில் அந்த வழக்கம்  இல்லை. தயவு செய்து கண்ணில் காட்டிவிடாதீர்கள் என்று கெஞ்சாக் குறை யாக வேண்டிக்கொண்டோம் . பின்னர் லண்டனிலேயே மூன்று சிக்கன் பிராமணக் குடும்பங்களை சந்தித்து விட்டோம்!!!. மேலை நாட்டில் இந்துப் பண்பாட்டின்படி குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினம்!

எனக்கு அசைவ உணவுகளை பார்க்கக்கூட பிடிக்காது ; இதனால் லண்டன் ரோட்டில் அந்தப்பக்கம் கண் செல்லாமல் நடந்து விடுவேன் . இரவு நேரத்தில் குக்கரி — உணவு சம்பந்தமான டாக்குமெண்டரிகளை (Cookery Documentaries) 6 வயதுப் பேரக்குழந்தையுடன் அமர்ந்து பார்ப்பேன். அப்போது ஒரு வெஜிட்டேரியன் ஐட்டம் வரும்; அடுத்ததாக நான் வெஜிட்டேரியன் டிஷ் வரும். உடனே கண்களை மூடிக்கொண்டு “ஐயோ இது போன வுடன் என்னிடம் சொல்லு” என்று என் பேரனிடம் வேண்டுவேன். அடுத்ததாக திடீரென்று ஒரு அசைவ உணவு வரும். அவன் “தாத்தா கண்ணை மூடு ,கண்ணை மூடு என்று சொல்லிச் சிரிப்பான். அவனுடன் நான் கண்ணா மூச்சி  விளையாட்டு விளையாடுவதாக அவனுக்கு நினைப்பு; எனக்கோ அருவருப்பு. சின்னக் குழந்தைகளுக்கு நம்முடைய பிலாசபி புரியுமா? இருந்த போதிலும் அவன் அவ்வப்போது எனக்கு செய்த உதவியை மறக்க முடியாது.

என்னுடைய 3 (வேகன் VEGAN) கசப்பான அனுபவங்கள் !

நான் பிரென்ட் வட்டார (லண்டன் வெம்பிளி) சாக்ரே (Standing Advisory Council for Religious Education) அமைப்பில் இந்து மத பிரதிநிதியாக சேவை செயதேன் . ஆண்டு பொதுச் சபைக்கூட்டத்தில் வெஜிட்டேரியன் உணவு வேண்டும் என்ற பாக்ஸை டிக் செய் திருந்தேன். நீ வேகன் தானே என்று சொல்லி ஓரு லேடி ஓர் பாக்சை  கொண்டுவந்து வைத்தாள் ; அதாவது விமானத்தில் டயாபடீஸ் காரர்களுக்கு முதலில் உணவு பரிமாறுவது போல ஸ்பெஷல் மரியாதை. அந்த பாக்ஸில் பழத்துண்டுகளும் இலை தழை களும் மட்டுமே இருந்தன. அந்த லேடிக்கு வெஜிட்டேரியன் –வேகன் வேறுபாடு தெரியவில்லை . நான் நைசாக அதை ஒதுக்கிவிட்டு மெயின் க்யூவில் நின்று எனக்கு வேண்டிய உணவு வகைகளை எடுத்துக்கொண்டேன்; தப்பித் தவறி விமானத்தில் வேகன் என்று சொல்லிவிடாதீர்கள்; அங்கும் இப்படித்தான் இலைதழைகளைக் கொடுப்பார்கள்.

குடும்பத்துடன் வியன்னா (ஆஸ்திரியா), மாட்ரிட் (ஸ்பெயின்) போயிருந்தோம். பெரிய பச்சை வர்ண  போர்டில் வேகன் ரெஸ்டாரண்ட் என்று எழுதியிருந்தனர் .மகிழ்ச்சி  பொங்க ஒரு பெரிய டேபிளைப் பிடித்து , நாக்கில் உமிழ் நீர் சுரக்க மெனு அட்டையைப் புரட்டினேன். Dad /டாட் என்று சொல்லிக்கொண்டு என் பையன் ஒரு பக்கத்தைக் காட்டினான். உலகிலுள்ள பிரபல நண்டு , மீன் , இறால் வகை உணவுகளைப் பட்டியல் போட்ட  ஐட்டத்தைக் கண்டு திடுக்கிட்டோம். அவர்கள் கணக்கில் வேகன் என்றால் பால் பண்ணை உணவுகள் கூடாது; கடல் உணவுகள் ஓ.கே  ஒரு வழியாக மனத்தைத் தேற்றிக்கொண்டு NO FISH, NO EGG, NO MEAT, NO CHICKEN: ONLY VEGETARIAN FOOD, PLEASE !!!நோ பிஷ், நோ எக் , நோ மீட், ஒன்லி  வெஜிட்டேரியன் என்று சொல்லி  வெஜிட்டேரியன் மட்டும் ஆர்டர் செய்தோம்.

இன்னொரு இடத்தில் இரவு 9 மணி ஆகிவிட்டது ; எல்லோருக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. இறுதியாக ஒரு தாய் (தாய் லாந்து) உணவு விடுதியைக் கண்டுபிடித்து வெஜிட்டேரியன் கிடைக்குமா ? என்று கேட்டோம். கிடைக்கும் என்றார்கள்; ஒரே சந்தோஷம். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட்டோம் என்று மகிழ்ந்தோம். வழக்கம் போல பல்லவி பாடினோம்- NO FISH, NO EGG, NO MEAT, NO CHICKEN: ONLY VEGETARIAN FOOD, PLEASE !!!நோ பிஷ், நோ எக், நோ மீட், நோ சிக்கன் என்ற பல்லவி பாடினோம். அந்தபெண்மணி சொன்னாள் :  நாங்கள் பிஷ் ஆயில் போட்டுத்தான் சமைப்போம் என்றாள் . தேங்க்  யூ; குட் நைட் என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினோம் . ஏகாதசி விரதம் அனுஷ்டிக்காமல் இருந்ததற்காக கடவுள் கொடுத்த தண்டனை என்று சொல்லி ரொட்டி பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டோம்.   பேரக் குழந்தைகள் அதற்குள்த் தூங்கிவிட்டன.

—subham—

Tags-மதுபர்க்கம், என்றால் என்ன, வேகன், VEGAN எலும்பு பவுடர், பால் சாப்பிடுவது, நல்லதா கெட்டதா, வாத்சல்யம். கசப்பான அனுபவங்கள், டின்னர் லேடிகள், என் சொந்தக் கதை  , milking

ராமாயணத்தில் சாபங்கள் (26) அந்தணருக்கு பதில் சொல்லாவிடில் சபிப்பாரோ என்ற சீதாதேவியின் எண்ணம்!Post.13,340)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.340

Date uploaded in London – 14 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ராமாயணத்தில் சாபங்கள் (26) 

ராமாயணத்தில் சாபங்கள் (26) அந்தணருக்கு பதில் சொல்லாவிடில் சபிப்பாரோ என்ற சீதாதேவியின் எண்ணம்! 

ச.நாகராஜன் 

மாயமானாக வந்த மாரீசனை ராமன் தன் அஸ்திரத்தால் அடிக்க அவன் அடிபட்டுத் தரையில் விழுகிறான்.

ராமனது குரலைப் போன்று, “ஹா சீதே! ஹா, லக்ஷ்மணா” என்று கத்தியவாறே அவன் உயிரை விடுகிறான்.

இந்தக் குரலைக் கேட்ட சீதை லக்ஷ்மணனை வற்புறுத்தி ராமனைத் தேடுமாறு அனுப்ப, சீதை இருந்த குடிலுக்கு ராவணன் அந்தணர் வேடத்தில் அதிதியாக வருகிறான்.

ஆரண்ய காண்டம் 46வது ஸர்க்கம் ஆச்ரமத்திற்கு ராவணன் வருவதைப் பற்றிச் சொல்கிறது.

சந்நியாசி வேஷம் தரித்து அழகான காவித்துணி உடுத்தியவனாய் குடை உடையவனாய் பாதுகைகளை அணிந்து தோளில் அழகிய தண்டத்தையும் கமண்டலத்தையும் வைத்துக் கொண்டு சீதா தேவியை அணுகிய ராவணன், “சுந்தரீ, ஸ்த்ரீ ரத்தினமே! நீ யார்?” என்றான்.

“நீ யாரைச் சேர்ந்தவள்? எங்கிருந்து வந்திருக்கிறாய்? என்ன காரணமாக தனியாக அரக்கர்கள் வசிக்கும் பயங்கரமான தண்டகாரண்ய பிரதேசத்தில் வசிக்கின்றாய்?” என்று இப்படி அடுக்கடுக்காய் கேள்விகளை ராவணன் தொடுக்கிறான்.

அவனை ஒரு புண்ணீயவானாகக் கருதிய சீதை அவனை வரவேற்று உபசரிக்கிறாள்.

“உட்காருங்கள்! இதோ பாத்யம்! தங்களுக்குப் பழவகை சித்தமாக இருக்கிறது” என்று வந்த சந்நியாசியைப் பார்த்து சீதை உபசரிக்கிறாள்.

ஆரண்ய காண்டம் 47-வது ஸர்க்கம் ராவணனை திரஸ்கரிப்பது என்ற ஸர்க்கமாகும்.

தனக்குள்ளேயே ஆலோசிக்கிறாள் சீதை.

ப்ராஹ்மணச்சாதிதிஸாயமனுக்தகோ ஹி சபேத் மாம் |

இதி த்யாத்வா முகூர்த்தம் து சீதா வசனமப்ரவீத் ||

–    ஆரண்ய காண்டம் 47-ம் ஸர்க்கம், இரண்டாம் ஸ்லோகம்

சீதா – சீதா தேவி

அயம் – “இவர்

அதிதி – அதிதி

ச  – மேலும்

ப்ராஹ்மண ச – அந்தணர்

அநுக்த: ஹி – பதில் சொல்லப்படாவிட்டால்

மாம் சபேத என்னை சபிப்பார்”

இதி – என்று

முகூர்த்தம் – கொஞ்ச நேரம்

த்யாத்வா து – ஆலோசனை செய்து விட்டு

வசனம் – பின்வரும் சொல்லை

அப்ரவீத் – அருளிச் செய்தனள்.

 வந்த அதிதிக்கு பதில் சொல்லாவிடில் அவர் சபிப்பார் என்று சீதா தேவி தனக்குள் ஆலோசிப்பது வரும் சாபத்தைத் தவிர்க்கும் எண்ணமாக அமைகிறது. சாபம் இங்கு தரப்படாவிட்டாலும் சாபம் வரலாம் என்ற பயம் இங்கு தொனிக்கிறது. 

ஆகவே அவர் பின்னர் தன்னை ராமரின் மனைவி சீதை என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்.

***