SANKARA DIG VIJAYA BY VIDHYARANYA SWAMIGAL WAS TRANSLATED INTO TAMIL AND ENGLISH BY MEE RAJAGOPALAN OF LONDON . THE BOOK IN FOUR VOLUMES WAS LAUNCHED IN LONDON ON SUNDAY 7 9 2025. SWAMINI SRI ATMAPRAKASHA NANDA SARASWATI PRESIDED OVER THE EVENT AND LAUNCHED THE BOOK. LONDON SWAMINATHAN WAS ONE OF THE SPEAKERS.
All posts by Tamil and Vedas
BOOK LAUNCH IN LONDON ON SUNDAY 7 9 2025
Posted by Tamil and Vedas on September 8, 2025
https://tamilandvedas.com/2025/09/08/book-launch-in-london-on-sunday-7-9-2025/
GNANAMAYAM 7 9 2025 RECORDINGS.
Posted by Tamil and Vedas on September 8, 2025
https://tamilandvedas.com/2025/09/08/gnanamayam-7-9-2025-recordings/
TALK ON AANAAYA NAAYANAAR AND NANDANAAR
Posted by Tamil and Vedas on September 8, 2025
https://tamilandvedas.com/2025/09/08/talk-on-aanaaya-naayanaar-and-nandanaar/
GNANAMAYAM 7th September 2025 BROADCAST SUMMARY
Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .
London Time 1 PM (British Summer Time)
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .
****
Prayer -Mrs. Jayanthi Sundar Team –Mrs Latha Murthy
***
NEWS BULLETIN
Vaishnavi Anand from London presented World Hindu News in Tamil
****
Brhannayaki Sathyanarayanan from Bengaluru speaks on
SWAMIMALAI Temple
****
Talk by Professor S Suryanarayanan, Chennai
Topic- Information from Stories
****
SPECIAL EVENT-
Talk on Periya Puranam by
Sri T R RAMESH son of Sekkizhar Adippodi Dr T N Ramachandran and Lawyer and PRESIDENT, HINDU TEMPLE WORSHIPPERS COMMITTEE.
Anaya Nayanar, Nandanar
******
ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 7 September 2025
நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .
***
இறைவணக்கம் – திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்-Mrs Latha Murthy
****
உலக இந்துமத செய்தி மடல்-
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்து வழங்கும் செய்தி செய்தி மடல்.
***
ஆலயம் அறிவோம் —திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —
சொற்பொழிவு– தலைப்பு- சுவாமிமலை ஆலயம்
****
சென்னைப் பேராசிரியர் எஸ். சூரிய நாராயணன்
சொற்பொழிவு
தலைப்பு- கதைகள்- தகவல்கள்
****
இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:
சொற்பொழிவு — பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு
Anaya Nayanar, Nandanar
திரு T R ரமேஷ் அவர்கள்
கோவில் செல்லுவோர் சங்கத் தலைவர் , வழக்கறிஞர்
son of Sekkizhar Adippodi Dr T N Ramachandran and Lawyer and PRESIDENT, HINDU TEMPLE WORSHIPPERS COMMITTEE.
****
Anchored by London Swaminathan from London and Kalyanji from India.
****
JOIN US ON EVERY SUNDAY.
—subham—
Tags-Gnanamayam Broadcast, 7-9- 2025, programme
—subham—
tags -7 9 2025 broadcast, summary
Posted by Tamil and Vedas on September 8, 2025
https://tamilandvedas.com/2025/09/08/gnanamayam-7th-september-2025-broadcast-summary/
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் (Post No.14956)
Post No. 14,956
Date uploaded in London – 8 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி 2025-ம் ஆண்டு
****
இன்று சந்திர கிரஹணம் ; இந்தியாவிலும் உலகின் பெரும்பகுதியிலும் தெரியும். தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்கிளிலும் கிரஹண காலத்தில் கோவிலைத் தற்காலிகமாக மூடி விடுவார்கள் ; சில இடங்களில் சந்நிதிகளை மட்டும் மூடுவார்கள்; ஆகையால் இன்று ஞாயிற்றுக்கிழமை கிரஹண காலத்தில் கோவிலுக்குச் செல்வதானால் முன்கூட்டி விசாரித்துவிட்டுச் செல்லவும் .
கிரஹண காலத்தில் பிரார்த்தனை செய்வது, மந்திரங்களை ஜபிப்பது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை . வீட்டிலேயே இதைச் செய்யலாம் .
***
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மீட்பு வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மீட்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு விரிவான பதில் மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துகளை மீட்டு பாதுகாக்கவும், கோயில் புதுப்பிப்பு பணிகளை முடித்து விரைவாகக் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடக் கோரியும் திருத்தொண்டர் அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை மீட்க 2021ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக் குறித்து விரிவான அறிக்கைத் தாக்கல செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
***
ஒணம் பண்டிகை கொண்டாட்டங்கள்
மலையாள மொழி பேசும் மக்கள் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் இந்த பண்டிகைக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதே போன்று தமிழகக் கேரளா எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளிலும் அத்தம் நட்சத்திரம் முதலே கொண்டாட்டம் களைகட்டியது. அத்தப்பூ கோலப் போட்டி, ஊஞ்சல் ஆட்டம், உறியடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெறறன. தொடர்ந்து அறுசுவை உணவான ஓணம் சத்யா உணவை அனைவரும் ருசித்து உண்டனர் .
அசுர அரசனான மகாபலி மன்னன் பெரிய யாகம் ஒன்றுநடத்தினான்.அந்த யாகம் வெற்றிகரமாக நடத்தினால் இந்திரலோகமே அவனது வசமாகும்.இதனால் கலக்கம் அடைந்த தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். தேவர்களை காப்பதற்காக மூன்று அடி உயரமான வாமன வடிவம் எடுத்து மகாவிஷ்ணு யாகம் நடக்கும் இடத்திற்கு சென்றார். மூன்று அடி நிலம் வேண்டும் என்ற வரம் கேட்ட வாமனருக்கு மகாபலி மன்னன் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை வாமனரின் கைகளில் விட்டதும் விண்ணுக்கும், மண்ணுக்கும் ஆக திரு விக்ரமனாக உருவெடுத்த மகாவிஷ்ணு -முதல் அடி வானத்தை,இரண்டாவது அடி பூமியையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடம் இல்லாததால் தன்னுடைய தலைமை காட்டிய மகாபலி தலை மீது கால் வைத்து அவரை பாதாள லோகத்திற்கு அனுப்பினார் ஆண்டுக்கு ஒரு முறை தன்னுடைய மக்களை காண பூமிக்கு வரவும் மகாபலிக்கு வரம் அளித்தார். மகாவிஷ்ணுவின் வரத்தின் படி ஆண்டுக்கு ஒரு முறை தனது மக்களை காண மகாபலி பூமிக்கு வரும் ஆவணி மாத திருவோண நட்சத்திர தினமே ஓணம் பண்டிகையாக கேரள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாட்டமாக இந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி திருவோண நட்சத்திரம் நாள் வரை கொண்டாடப்பட்டது.
பத்து நாட்கள் நடைபெறும் பண்டிகையில் 64 வகையான ஓணம் சத்தியா விருந்து, படகு போட்டிகள்,வண்ண வண்ண அழகான மலர்களால் கோலமிட்டு மிக பிரம்மாண்டமாக ஓணம் கொண்டாடப்படுவது வழக்கம்.






**********************************
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகத்தின் 5 ஆண்டு நிதி நிலை அறிக்கை தேவை; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகத்தை மாதிரி நுாலகமாக வகைப்படுத்த தாக்கலான வழக்கில் அதன் 5 ஆண்டு கால நிதி நிலை அறிக்கை, ஆண்டறிக்கை, அனுமதிக்கப்பட்ட, காலியாக உள்ள பணியிட விபரங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சென்னை பிரபாகரன் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகம் ஆசியாவின் பழமையான நுாலகங்களில் ஒன்று. இது 16 ம் நுாற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது. பின் மராட்டிய மன்னர்களால் குறிப்பாக இரண்டாம் சரபோஜி மன்னரால் (1798-1832) மேம்படுத்தப்பட்டது.
தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, உருது, மராத்தியில் 60 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளன. இவை இந்தியாவின் அறிவுசார் மற்றும் கலாசார பாரம்பரிய பங்களிப்புகள். ரூ.1.65 கோடியில் ஓலைச்சுவடிகள், புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குதல், சமஸ்கிருத புத்தகங்கள் மொழிபெயர்ப்பு, ஓவியங்களை பாதுகாக்க மற்றும் நுாலகத்தை சீரமைக்க அரசு 2012 ல் திட்டமிட்டது. இதை முழுமையாக செயல்படுத்தவில்லை. அலுவலர் பணியிடங்களை நிரப்பவில்லை. உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை. இதனால் அரிய ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் சேதமடைகின்றன.
மத்திய கலாசாரத்துறை தேசிய நுாலகங்கள் இயக்கத்தை 2014 ல் துவக்கியது. இதன்படி தேசிய மெய்நிகர் நுாலகம் உருவாக்குதல், பின்தங்கிய மாவட்டங்களில் நுாலகங்களை மேம்படுத்துதல், நெட்வொர்க் இணைப்பு வழங்கும் நோக்கில் ரூ. 400 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சரஸ்வதி மகால் நுாலகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுாலகங்கள் இயக்கத்தின் கீழ் சரஸ்வதி மகால் நுாலகத்தை மாதிரி நுாலகமாக வகைப்படுத்தி, டிஜிட்டல் மயமாக்கி மேம்படுத்த நிதி ஒதுக்க வலியுறுத்தி மத்திய கலாசாரத்துறை செயலர், தமிழக தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜரானார்.
தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான்: இந்நுாலகத்தை வரலாறு மற்றும் கலாசார அடையாள முக்கியத்துவம் வாய்ந்த இடமாக ஆக.,1 ல் அரசு அறிவித்துள்ளது.
தற்குரிய செலவு, பராமரிப்பிற்கான நிதியை அரசு வழங்கும். தேசிய நுாலகங்கள் இயக்கத்தின் கீழ் மாதிரி நுாலகமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நுாலகத்தின் 5 ஆண்டுகால நிதி நிலை அறிக்கை, ஆண்டறிக்கை, அனுமதிக்கப்பட்ட மற்றும் காலியாக உள்ள பணியிட விபரங்களை அரசு தரப்பில் செப்., 16 ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
*****
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகத்தினர், பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற திரௌபதி முர்மு, ஆண்டாள் யானைக்கு பழங்கள் வழங்கி ஆசி பெற்றார்.
இதையடுத்து மூலவர் சன்னதிக்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ரங்கநாதரை மனமுருகி வழிபட்டார். குடியரசு தலைவர் வருகையை ஒட்டி கோயிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து டெல்லி புறப்பட்ட திரௌபதி முர்முவை காண, திருச்சி கொள்ளிடம் பஞ்சக்கரை அருகே ஏராளமான மக்கள் காத்திருந்தனர். அப்போது அவர்களை கண்ட திரௌபதி முர்மு காரில் இருந்து இறங்கிச் சென்று, நலம் விசாரித்தார். மேலும் தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் அங்கிருந்த குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்குமாறு அறிவுறுத்தினார்.
*****
செப்டமபர் 20 பம்பையில் ஐயப்ப சங்கமம்
ஐயப்பன் மாநாட்டுக்கு சர்ச்சைக்குரிய பெண்ணுக்கு அழைப்பா? அமைச்சர் கொடுத்த விளக்கம்
இந்தக் கூட்டம் பெரும் சர்ச்சைக்குளாகி இருகிறது கடவுள் நம்பிக்கையில்லாத , இந்து விரோத மார்க்ஸீய, திராவிடக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
திருவனந்தபுரம்: உலக ஐயப்பன் சங்கமம் மாநாட்டுக்கு சர்ச்சைக்குரிய பெண்ணாக பார்க்கப்படும் பிந்து அம்மணி க்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் விளக்கம் அளித்துள்ளார்.
கேரளாவின் பம்பையில் உலக அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைக்கிறார். ‘இந்த விழாவில் பங்கேற்க அண்டை மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் உள்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.,
2019ம் ஆண்டு சபரிமலைக்கு அத்துமீறி நுழைந்த பிந்து அம்மணி என்ற பெண்ணும், உலக ஐயப்பன் சங்கமம் மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்குமாறு கேரள அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இது குறித்து தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் கூறுகையில், ‘மாநில அரசுடன் இணைந்து திருவனந்தபுரம் தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் அவரை (பிந்து அம்மணி) அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. எந்தவொரு வகையிலும் அவர் ஐயப்பா சங்கமத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்,’ என்றார்.
****
நிலச்சரிவு: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-ம் நாளாக நிறுத்தம்
காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-வது நாளாக நேற்றும் நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பாதையில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 34 பக்தர்கள் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். இதையடுத்து வைஷ்ணவி தேவி கோயிலுக்கான யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
எனினும், நிலச்சரிவு ஏற்பட்டபோது பக்தர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரம், கோயிலில் உள்ள பூஜாரிகள் தொடர்ந்து தினமும் பூஜை செய்து வருகின்றனர்.
****
திருப்பதி கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் பிராணதான அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கில் பணம் சேர்ந்து வருகிறது .
உலகிலேயே பணக்காரக்கடவுள் என்று பெயர் பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஏழை மக்களுக்கு சேவை செய்ய பல அறக்கட்டளைகளை நடத்திவருகிற்து சில தினங்களுக்கு முன்னர் ஒரு கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர் ஒரு கோடியே பதினோரு லட்சம் ரூபாயை பிராணதான அறக்கட்டளைக்கு அளித்தார் . வணிகர் பி.வி ரவிக்குமாரும் கோடிக்கணக்கில் அளித்தார். ஜனவரி மாதம் சென்னையைச் சேர்ந்த வர்த்தமான ஜெயின், ஐந்து கோடிக்கும் மேலாக நன்கொடை அளித்தது குறிப்பிடத்தக்கது ;இது ஏழை மக்களின் மருத்துவ வசதி மற்றும் பசுக்களை பராமரிக்கும் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது.
கூகுள் நிறுவன துணைத்தலைவர் தோட்டா சந்திரசேகர் சமீபத்தில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் பிராணதான அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.
****
உலக அரசியலில் கோலோச்சும் இந்திய வம்சாவளியினர்
புதுடில்லி: இந்திய வம்சாவளியை சேர்ந்த 261 பேர் பல்வேறு நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக ராஜ்யசபா எம்பி சாந்தம் சிங் சாந்துவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பலர், வெளிநாடுகளில் அரசியல் நிர்வாகம், சர்வதேச அமைப்புகளில் முக்கிய பதவி வகித்து வருகின்றனர்.
உலகில் 204 நாடுகளில் 3.43 கோடி இந்தியர்கள் வசித்து வருகின்றனர். பாகிஸ்தான், கியூபா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சான் மரினோவில் மட்டும் எந்த இந்தியர்களும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்ட இந்தியர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்
மொரிஷியஸ் -45
கயானா -33
பிரிட்டன் 31
பிரான்ஸ் -24
கனடா -22
சூரினாம் -21
டிரினிடாட் & டொபாகோ – 18
மலேஷியா, பிஜி -தலா 18
அமெரிக்கா – 6 இந்திய வம்சாவளியினர் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வாகி உள்ளனர்.
உலகளவில் அதிக இந்தியர்கள் வசிக்கும் 10 நாடுகள்!
அமெரிக்கா,ஐக்கிய அரபு எமீரேட், கனடா, மலேஷியா
சவுதி அரேபியா,இலங்கை,தென் ஆப்ரிக்கா , பிரிட்டன
ஆஸ்திரேலியா ஆகும்.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு செப்டம்பர் மாதம் 14–ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags – World Hindu News, 7 -9-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi
Posted by Tamil and Vedas on September 8, 2025
https://tamilandvedas.com/2025/09/08/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d-22/
ஆலயம் அறிவோம்! சுவாமிமலை (Post No.14,955)
WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14, 955
Date uploaded in London – 8 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
7-9-2025 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட் உரை!
சுவாமிமலை
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
காமியத்தழுந்தி யிளையாதே
காலர் கைப் படிந்து மடியாதே
ஓமெழுத்தில் அன்பு மிக ஊறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே
தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா
ஏமவெற்புயர்ந்த மயில்வீரா
ஏரகத்தமர்ந்த பெருமாளே
அருணகிரிநாதர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது முருகப் பெருமானின் அறுபடை வீட்டுத் தலங்களுள் நான்காவது படைவீடாக அமையும் சுவாமி மலை தலமாகும்.
இத்திருத்தலம் கும்பகோணத்திற்கு மேற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. திருவேரகம் என்று பிரசித்தி பெற்ற இந்தத் தலத்திற்கு குருமலை, தாத்ரி கிரி, சுந்தராசலம், சிரகிரி, சிவகரி என்ற பெயர்களும் உண்டு.
இறைவன் : சுவாமிநாதர்
தல விருட்சம் : நெல்லி
தீர்த்தங்கள் : வஜ்ஜிர தீர்த்தம், குமாரதாரை தீர்த்தம், சரவண தீர்த்தம், நேத்திர தீர்த்தம், மற்றும் பிரம்ம தீர்த்தம்.
செயற்கைக் குன்றாக அமையும் இந்த சுவாமிமலை, தரையிலிருந்து 60 அடி உயரத்தில் உள்ளது. 300 அடி நீளமும் 295 அடி அகலமும் கொண்ட இந்தக் கோவிலுக்கு மூன்று வாயில்கள் உள்ளன. பிரதான வாயிலாக அமைவது தெற்கு வாயில். இதில் ஐந்து அடுக்கு கொண்ட ராஜ கோபுரம் உள்ளது.
மேல் கோவிலில் சுவாமிநாதன் எழுந்தருளி அருள் பாலிக்க, கீழ்க் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. சிவபிரானை வலம் வருகையில் தட்சிணாமூர்த்தி, தல விநாயகர், சோமாஸ்கந்தர், , விசாலாட்சி, விஸ்வநாதர் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், துர்க்கை, சண்டேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இதன் வடகிழக்கில் உற்சவ மண்டபம் எனப்படும் வசந்த மண்டபம் உள்ளது.
படிகள் மீது ஏறி மேலே செல்லும் போது 28 படிகளைத் தாண்டிச் சென்றால் இரண்டாவது சுற்றுப் பிரகாரம் காணப்படும். இதன் கிழக்குப் பகுதியில் முருகன் சிவபிரானுக்கு பிரணவ உபதேசம் செய்யும் சுதைச் சிற்பம் உள்ளது.
இரண்டாவது பிரகாரத்தில் தென் பக்கம் 12 படிகள் ஏறிச் சென்றால் தல கணபதியாக விளங்கும் நேத்திர விநாயகர் எழுந்ந்தருளிக் காட்சியளிக்கிறார். உள்ளே இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவத யானையைப் பார்க்கலாம். இடது புறத்தில் கார்த்தவீர்யார்ஜுனன் சிலையும் மேற்கில் உற்சவ மூர்த்திகளான வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யரையும் தரிசிக்கலாம்.
மேலே சுவாமிநாதன் சந்நிதியில் சுவாமிநாதன் வலது கையில் தண்டமும் இடது கையை இடுப்பில் அமர்த்தியும் சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும் மார்பில் பூணூல், ருத்திராட்சம் விளங்க ஒரு கையில் சக்தி வேலுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார்.
இத்திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உள்ளன.
முன்னொரு காலத்தில் பிருகு முனிவர் கடும் தவம் ஒன்றை மேற்கொண்டார். தன் தவத்தைக் கலைக்கும் வகையில் யார் வந்தாலும் அவர்கள் பிரம்மஞானத்தை மறந்து விடுவார்கள் என்று கடும் சாபம் கொடுத்தார். பிறகு தவத்தை ஆரம்பித்தார். அவரது தவத்தின் உக்கிரம் தேவர்களைச் சுட்டெரிக்கவே எல்லா தேவர்களும் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். சிவபிரான் மனம் கனிந்தார். நேராக பிருகு முனிவரிடம் சென்றார். சிவபிரானை தரிசித்த பிருகு முனிவர் மிகவும் மகிழ்ந்தார். ஆனால் தான் கொடுத்த சாபம் நினைவுக்கு வரவே அவர் மிகவும் வருந்தினார். ஆனால் சிவபிரானோ, “முனிவரே, கவலைப்பட வேண்டாம். மறந்த ஞானத்தைத் தர முருகன் வந்து உபதேசிப்பான்” என்று கூறி அருளினார்.
ஆணவத்தால் கர்வம் மேலிட இருந்த பிரம்மாவிடம் முருகப்பிரான் பிரணவத்தின் உண்மைப் பொருளைக் கேட்க அவர் பதில் சொல்ல முடியாது விழித்தார். உடனே முருகன் அவர் தலையில் ஒரு குட்டு குட்டினார். அவரையும் பல தேவர்களையும் சிறையில் அடைத்தார்.
சிவபிரானிடம் முருகன் பிரணவத்தின் பொருளைக் கேட்க அவர் பிருகு முனிவரின் சாபத்தால் அதை மறந்த நிலையில் இருந்தார். தனக்குத் தெரியவில்லை என்று கூறினார். உடனே முருகன் சிவபிரானையும் பிரம்மாவையும் இந்தத் தலத்திற்கு அழைத்து வந்து பிரணவத்தின் உண்மைப் பொருளை உபதேசித்தார். தகப்பனுக்கே உபதேசித்த அப்பன் சாமி ஆனார். மிகவும் சக்தி வாய்ந்த தலமாக சுவாமிமலை ஆனது.
இன்னும் சில வரலாறுகளும் இந்தத் தலம் பற்றி உண்டு.
முன்னொரு காலத்தில் பிரகதீஸ்வரர் என்ற ஒரு அந்தணர் இருந்தார். பல தலங்களுக்கும் யாத்திரையை மேற்கொண்ட அவர் இந்தத் தலத்திற்கு வந்து சுவாமியை நேரில் கண்டு ஆசி பெற்றார். தன் ஆயுள் முழுவதும் சுவாமிநாதனை வழிபட எண்ணம் கொண்ட அவர் இங்கேயே ஒரு ஆசிரமம் அமைத்து முருகனை வழிபடலானார்.
இன்னொரு அந்தணனின் வரலாறும் உண்டு. பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்ட ஒரு அந்தணன் அதற்குப் பிராயச்சித்தம் தேடி இந்தத் தலத்திற்கு வந்தான். அவனிடம் பிரகதீஸ்வரர், “ கவலைப் படாதே. நீ பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தால் இங்கு வந்திருக்கிறாய். ஒரு வரலாற்றைக் கேள். பிறருடைய ஆடைகளைத் திருடி வந்த ஒரு திருடன் வெண்குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டான். ஒரு நாள் அவன் இங்குள்ள ஒரு வீட்டின் திண்ணையில் இரவில் தங்கினான். வீட்டார் அனைவரும் தூங்கியவுடன் உள்ளே நுழைந்த அவன் ஆபரணங்களை எல்லாம் திருடிக் கொண்டிருந்தான். சத்தம்கேட்டுக் கண் விழித்த அந்த வீட்டார் அவனைப் பிடிக்க முயலும் போது அவன் ஓடலானான். ஓடும் வழியில் வஜ்ர தீர்த்தத்தில் தடுக்கி விழுந்தான். இரவு முழுவதும் அந்தக் கிணற்றில் இருந்த அவனைக் காலையில் மக்கள் பிடித்து வெளியேற்றினர். என்ன ஆச்சரியம்! அவன் உடலில் இருந்த வெண்குஷ்டம் மறைந்திருந்தது. தீர்த்தத்தின் மகிமையை உணர்ந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். திருடன் தான் செய்த செயலுக்கு மன்னிப்புக் கேட்டு திருந்தினான். வஜ்ர தீர்த்தத்தின் மகிமை உலகிற்குத் தெரிந்தது. ஆகவே, நீயும் இந்த புண்ணிய தீர்த்தத்தில் நீராடு. உன் தோஷம் போய்விடும்” என்று இவ்வாறு உரைத்து அருளினார். அந்த அந்த்ணனும் அப்படியே செய்ய அவன் தோஷம் நீங்கியது.
வியாஸ மஹரிஷியின் புதல்வரான சுக மஹரிஷி இந்தத் தலத்தில் கந்தனை தரிசித்து அருள் பெற்றார்.
இங்குள்ள நேத்திர விநாயகர் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.
கொங்குநாட்டைச் சேர்ந்த ஒருவன் பிறவிக் குருடன். அவன் தல யாத்திரையாக இந்தத் தலத்திற்கு வந்தான். பசியால் வருந்திய அவன் காவிரி நதிக்குத் தட்டுத் தடுமாறி சென்று நீராடினான். மீண்டும் நேத்திர புஷ்கரணியில் நீராடி ஆலயத்திற்கு வந்து விநாயகர் சந்நிதியை அடைந்தான். அங்கு அவரை மனதார வேண்டினான். விநாயகர் அருள் புரிந்தார். அவர் கருணையால் அக்கணமே கண் பார்வையைப் பெற்றான். அந்த நாள் முதல் இந்த் விநாயகர் நேத்திர விநாயகர் என்று அழைக்கப்படலானார்.
இங்குள்ள மீனாட்சி சுந்தரேசர் விக்ரஹம் ஸ்தாபிக்கப்பட்டதற்கு ஒரு சுவையான வரலாறு ஒன்று உண்டு.
மதுரையை அரசாண்ட சிறந்த சிவபக்தனான வரகுணபாண்டியன் ஒரு முறை பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டான். அந்த தோஷம் நீங்க அவன் திருவிடைமருதூரை நோக்கி வரும் போது இறைவனின் கட்டளையால் இந்தத் தலத்தில் தங்கினான். அன்னை மீனாட்சியையும் சுந்தரேவரரையும் தரிசிக்காமல் உண்பதில்லை என்ற விரதத்தை மேற்கொண்டிருந்த அவன் இந்தத் தலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் விக்ரஹங்களை ஸ்தாபித்து வணங்கி பின் திருவிடைமருதூருக்குச் சென்றான்.
இங்கு ஐராவதம் யானை வந்ததற்கும் ஒரு வரலாறு உண்டு.
ஹரிகேசன் என்ற் ஒரு கொடிய அரக்கனின் படையெடுப்பால் இந்திரன் பெரும் தொல்லைக்கு ஆளானான். தன் வலிமையையும் இழந்தான். அவன் இந்தத் தலத்திற்கு வந்து முருகனை வழிபட, முருகனின் திருவருள் அவனுக்குக் கிடைத்தது. இழந்த தன் வலிமையைப் பெற்ற இந்திரன் அதற்கு நன்றிக் கடனாக தனது வாகனமான ஐராவதத்தை நிறுத்தி வணங்கினான். முருகன் சந்நிதியில் அவனை நோக்கி இருக்க வேண்டிய மயில் இத்தலத்தில் இல்லை. அதற்கு பதிலாக ஐராவதம் இருப்பதை இன்றும் காணலாம்.
இந்தத் தலத்தில் அருணகிரிநாதர் 49 திருப்புகழ் பாடல்களை இயற்றி அருளியுள்ளார்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து அருளும் சுவாமிநாதர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
நன்றி, வணக்கம்.
Posted by Tamil and Vedas on September 8, 2025
https://tamilandvedas.com/2025/09/08/%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-post-n/
ஐஸ்லாண்டின் மர்மக் குள்ளர்கள் – ஹுல்டுக்கள்! (Post No.14,954)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,954
Date uploaded in London – —8 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
7-9-25 தினமணி கதிர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ஐஸ்லாண்டின் மர்மக் குள்ளர்கள் – ஹுல்டுக்கள்!
ச. நாகராஜன்
பூமியில் மனிதர்களைத் தவிர வேற்று உலகவாசிகளும் வசிக்கிறார்களா அல்லது மனித ஆற்றலையும் விஞ்சிய சூப்பர் ஆற்றலுடன் மறைந்து வாழும் இனமும் உள்ளதா?
இந்தக் கேள்விக்கு விசித்திரமான விடை கிடைத்தது ஐஸ்லாண்டில்.
ஐஸ்லாண்ட் என்பது ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையில் அமைந்துள்ள எரிமலைப் பகுதி நிறைந்துள்ள குட்டி நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 39817 சதுரமைல்கள் . மக்கள் ஜனத்தொகை 3,91,810. இங்குள்ள மக்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள்.
இங்கு வாழ்கின்ற பலரும் பல மர்மமான குள்ளர்களைக் கண்டதாக அடிக்கடி கூறி வந்தனர். இதைப் பகுத்தறிவுவாதிகள் நம்பவில்லை.

அகுரேய்ரி என்பது ஐஸ்லாண்டில் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய நகரமாகும்.
அங்குள்ள நேச்சுரல் ஹிஸ்டரி மியூஸியத்தின் மேனேஜராகப் பணி புரிந்த ஹெல்ஜி ஹால்கிரிமேஸன் என்பவர், “பல நேர்மையான மனிதர்கள் கூட அந்தக் குள்ள மனிதர்களைத் தாங்களே நேரில் காணும் வரை அதை நம்பவில்லை” என்று கூறினார்.
அந்த மனிதர்கள் தாங்கள் வாழும் பகுதியை மிகவும் நேசிப்பவர்கள். தங்கள் “நாட்டை” வேறு ஒருவரும் ஆக்கிரமித்து விடக் கூடாது என்பதில் தீவிரமாய் இருப்பவர்கள். அப்படி யாரேனும் அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்தால் அதை ‘அவர்கள் வழியில்’ எதிர்ப்பார்கள்!
1962ம் வருடம் அகுரேய்ரியி,ல் ஒரு புதிய துறைமுகம் கட்டும் பணி ஆரம்பமாயிற்று.
வந்தது பல்வேறு விதமான பிரச்சினைகள்.
அங்கு துறைமுகம் அமைப்பதற்காக பாறைகளை வெடிபொருள்களை வைத்து உடைக்கப் பார்த்தவர்கள் ஆச்சரியப்படும்படியாக பாறைகளை உடைக்கவே முடியவில்லை. எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் வெடிபொருள் சாதனம் இயங்கவே இயங்காது. அத்தோடு அங்கு வேலை பார்த்த அனைவருக்கும் வெடிக்காயங்களும் பல்வேறு வியாதிகளும் வர ஆரம்பித்தன திடீர் திடீர் என்று நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்கள் பயந்தே போனார்கள்.
இனி இங்கு தங்களால் வேலை பார்க்க முடியாது என்ற நிலைக்கு அவர்கள் வந்த போது ஓலாஃபுர் பால்டர்ஸன் என்ற மனிதர் அவர்களிடம் வந்து இந்த பிரச்சினைக்குத் தான் தீர்வு காண்பதாக உறுதி அளித்தார்.
இதெல்லாம் மர்மக்குள்ளர்கள் தங்கள் பிரதேசத்தை மனிதர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் செய்யும் வேலை என்ற பால்டர்ஸன் அவர்களுடன் தான் பேசுவதாகக் கூறினார்
மத்தியஸ்தம் பேசி விஷயத்தைச் சுமுகமாக முடிக்க வேண்டும் என்பதற்காக அவர் அகுரேய்ரியின் மாஜிஸ்ட்ரேட்டின் அனுமதியைக் கோரினார். அவரும் மகிழ்ச்சியுடன் தன் அனுமதியை வழங்கினார்.
என்ன ஆச்சரியம், அதற்குப் பின்னர் விஷயங்கள் சுமுகமாக அரங்கேறின.
மக்கள் ஒருவாறாக மர்மக் குள்ளர்கள் இருப்பதை நம்ப ஆரம்பித்தனர்.
1984ல் மீண்டும் ஒரு பிரச்சினை தோன்றியது.
இந்த முறை ஐஸ்லாண்டின் சாலை அமைக்கும் பிரிவு அகுரேய்ரி அருகே ஒரு புதிய சாலையை அமைக்க ஆரம்பித்தது. வந்தது பிரச்சினை.
அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பல்வேறு நோய்கள் வர ஆரம்பித்தன. எக்ஸ்கவேட்டர்கள் படார் படாரென திடீரென்று உடைந்தன. அனைவரும் பயந்து போனார்கள்.
ஹெல்ஜி ஹால்கிரிமேஸன் கூறினார் : “விஞ்ஞானம் விளக்க முடியாத விஷயங்கள் ஏராளம் உலகில் உள்ளன”.
தோர் மக்னூஸன் என்பவர், “இப்படி சிலர் இருப்பதாகச் சொல்பவர்கள் உடனடியாகத் தங்கள் கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்” என்று நக்கலாகக் கூறினார்.
ஆனால் ஐஸ்லாண்ட் மக்கள் இவர்களை ஹுல்டு மக்கள் (HULDUFOLK) என்று இனம் கண்டு கூறுகின்றனர் இவர்களின் மேல் உதடிற்கு மேலே ஒரு பிளவு இருக்கும். எப்போதும் சாம்பல் நிற ஆடைகளையே உடுத்தும் இவர்கள் கறுத்த முடியை உடையவர்கள். மறைந்து பிறர் கண்ணுக்குத் தெரியாமல் வாழ்பவர்கள். அவர்கள் நினைத்தால் தான் அவர்கள் உருவத்தைக் காண முடியும்.
ஐஸ்லாண்டில் நான்கு தேசீய விடுமுறைகள் இவர்களுடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. புத்தாண்டு தினம், ஜனவரி 6ம் தேதி (இது 13ம் நாள் என்று அழைக்கப்படுகிறது) மிட்ஸம்மர் இரவு, கிறிஸ்துமஸ் இரவு ஆகியவையே அந்த நான்கு விடுமுறை தினங்கள். கிறிஸ்துமஸிற்கு முன்பாக அனைத்து வீடுகளையும் சுத்தம் செய்து சிறிது உணவை இந்த ஹுல்டுகளுக்காக ஐஸ்லாண்ட் மக்கள் வைக்கின்றனர். புத்தாண்டு தினத்தன்று இவர்கள் புது இடங்களுக்குப் போய் விடுவார்களாம். அவர்களுக்கு வழி தெரிய வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே ஏராளமான மெழுகுவர்த்திகளை ஐஸ்லாண்ட் மக்கள் ஏற்றி வைப்பது இன்றும் நடைபெறுகிறது! மிட்ஸம்மர் தினமான ஜூன் 24ம் தேதி அன்று சாலை சந்திப்புகளில் உட்காரக் கூடாது என்பது ஐஸ்லாண்ட் மக்களின் நம்பிக்கை. உட்கார்ந்தால் அவர்களை ஹுல்டுக்கள் பிடித்துக் கொண்டு விடுவார்கள் என்கின்றனர் அவர்கள்.
2013ம் ஆண்டில் அல்ஃடேனியஸிலிருந்து ரெய்க்ஜவிக் என்ற இடத்திற்கு ஒரு சாலை போடுவதாக ஐஸ்லாண்டில் ஒரு திட்டம் எழுந்த போது சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். காரணம் அது அங்கு பாறைகளில் மறைந்து வாழும் ஹூல்டுக்களுக்கு பாதகம் விளைவிக்கும் என்பது தான்!
ஹுல்டுக்களைப் பற்றிய ஏராளமான நாவல்கள் வந்து விட்டன. யூ டியூபிலும் பல சுவையான விவரங்களைப் பார்க்கலாம்!
ஆக, இன்றும் விஞ்ஞானம் விளக்க முடியாத மர்ம இனம் இருப்பதை ஐஸ்லாண்ட் மக்கள் நம்புகின்றனர்.
ஏனெனில் அனுபவிப்பது அவர்கள் அல்லவா!
**
Posted by Tamil and Vedas on September 8, 2025
https://tamilandvedas.com/2025/09/08/%e0%ae%90%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/
Who is a Good Wife? Mahabharata Answers- Part 5 (Post No14,953)
Post No. 14,953
Date uploaded in London – 7 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Satyavan-Savitri story from Vana Parva of Mahabharata continued…………………
Savitri
Near my husband no place can be too far.
Human beings do not trust even themselves as they trust the saints; it is from love trust arises and because the saints have love for all, people have trust in them.
Yama
Blessed one! What you have said that I have not heard before except from you. It gives me great satisfaction. excepting the life of Satyavan, ask for a fourth boon and go back.
Savitri
May I with Satyavan have hundred sons, who brave and courageous, will continue our family line. This is the fourth boon I seek from you, Lord of Death.
And the Lord of Death granted that wish of Savitri as well. You will have hundred sons, who brave and courageous, who will enhance your happiness. Now go back, he said to her.
Savitri
With the power of truth, the saints keep sun on its course and sustain the earth. It is from the saints that the present, the past and the future derive their support, being with the saintly, people do not suffer.
Given to the good of the others, selflessly, the saints do not look upon each other with narrow concerns of the self.
The blessings of the saints never in vain. Nobody feels reduced by the saints, nor anybody’s self-interest suffer. In the nearness of the saints the three get united: blessings, self-esteem and the self-interest. the saints are thus protectors of the world.
Yama
The more you speak, and say in words most elegant, the things that I have deep meaning and are agreeable to mind and heart, the greater grows my feelings of bhakti for you. Ask from me, some exceptional boon.
Savitri
You have bestowed upon me the boon of having a hundred sons of my own that cannot come true without my union with my husband, whose life you are taking away. Therefore, I seek from you this last boon that Satyavan restored to life, for without him I am like dead. Without my husband, I have no desire for the prosperities of the world, nor any desire for any heavenly existence. Without him I do not even with to live.
Saying THATHAASTU (that shall be so) Yama released from the cord of mortality.
The Mahabharata shows how one’s pain is because of the pain of the other; Satyavan’s pain at the pain of anxiety of his father and mother and Savitri’s pain for both. To reassure Satyavan wiping his tears, she spoke to him thus:
Savitri
If I have ever done Tapasya (penance) in its true discipline, then may this night be blessed both for my mother-in-law and father-in-law and blessed for my husband.
They reached home from the dark forest as fast as they could.
All the seers from nearby Ashramas including Suvarcha, Gautama, Bharadwaj, Dhalbha, Ghaumya praised Savitri’s victory over Yama.
—subham—
Tags – Good wife Satyavan Savitri, Vana parva, Mahabharata. Part-5
Posted by Tamil and Vedas on September 7, 2025
https://tamilandvedas.com/2025/09/07/who-is-a-good-wife-mahabharata-answers-part-5-post-no14953/
There is many an axe that strikes a fallen tree (Post No.14,952)
Post No. 14,952
Date uploaded in London – 7 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Proverbs on Trees- part 7
There is many an axe that strikes a fallen tree.
In the shelter of a single tree a thousand sheep will collect (many want to benefit from a rich man).
With dry wood green wood also burns.
–Turkish proverbs
The tree is climbed by means of a notch..
Bend the twig while it is green (said in training the young).
–South African
A tree that affords the shade, do not order it to be cut down.
–Egyptian
When a single tree is exposed to the wind, it breaks.
The crooked tree says he has been bent to the earth.
One sits on a crooked tree to fell a straight one.
A tree without a crown (top) is not shaken by the wind.
Crooked wood makes crooked ashes.
In crooked wood one recognises the artist.
The wood that refuses a forest fire doesn’t refuse a bonfire.
From Dahomey in Africa.
Tamil proverbs on trees continue…………………………
3383. செட்டியாரே செட்டியாரே என்றால், சீரகம் பண எடை முக்காற் பணம் என்கிறார்.
When I respectfully call him Chettiyar, he says that a fanam weight of cumin is sold for three fourths of a fanam.
3384. செட்டி வீட்டிற் பணம் இருக்கிறது, ஆலமரத்தில் பேய் இருக்கிறது.
Wealth is in the houses of merchants, demons are in banyan trees.
3375. செடியிலே வணங்காத்தா மரத்திலே வணங்கும் ?
If it would not bend as a sapling, will it bend as a tree?
3257. சிறு ரூபத்தை உடைய பேரும் அரும்பொருளைச் செய்வார்: அதுபோல, சிறு விதை ஆகிய ஆலமரம் பெரு நிழலைக் கொடுக்கும்.
Those who are of inferior stature may accomplish difficult things: the seed of the banyan is small, but the tree affords a large shade.
3229. சிம்பிலே வளையாதது தடித்தால் வளையப்போகிறதா?
If when it is a twig it cannot be bent, will it bend when it has become a large tree?
3540. தச்சன் பெண்சாதி தரையிலே, கொல்லன் பெண்சாதி கொம்பிலே.
The wife of the carpenter is on the floor, and the wife of the smith is on the branch of a tree.
3634. தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு, பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு.
A flourishing tree has shade, a woman who has recently borne a child, has milk.
3696. தன்னைத் தானே தான் பழிக்குமாம் தென்னமரத்திலே குரங்கு இருந்து.
It is said that the monkey that mocks at the top of the cocoanut tree mocks itself.
3725. தாய் ஒரு பாக்கு, தான் கமுகந்தோப்பு என்கிறாள்.
She says that her mother is only a nut, while she herself is a grove of arica-nut trees.
3949. தென்னமரத்திற் பாதி என்னை வளர்த்தாள் பாவி .
I am half the height of a cocoanut tree, she who brought me up is a sinner.
3950. தென்னமரத்திலே தேள் கொட்டப் பனைமரத்திலே நெறி கட்டினது போல.
As when the scorpion stung the cocoanut tree, the palmyra tree had a glandular swelling.
3992. தை ஈனாப் புல்லும் இல்லை , மாசி ஈனா மரமும் இல்லை.
There is no grass that does notgrow in January, nor tree that does not sprout in February.
4018. தோட்டம் நிலைத்தல்லவோ தென்னம்பிள்ளை வைக்கவேண்டும்.
It is after laying out the garden plot, is it not, that cocoanut trees are planted.
4039. நச்சு மரம் ஆனாலும் நட்டவர்கள் வெட்டுவார்களா?
Though a poisonous tree, will those who planted it cut it down?
4051. நடு ஊரில் நச்சுமரம் பழுத்து என்ன?
Of what use is the ripening of the fruit of a poisonous tree in the middle of a village ?
4102. நல்ல மரம் நச்சுக் கனியைத் தராது, நச்சு மரத்திலே நல்ல கனியும் வராது.
A good tree yields not poisonous fruit, nor a poisonous tree good fruit.
4103. நல்ல மரத்தில் முளைத்த புல்லுருவிபோல.
Like a mistletoe growing on a good tree.
4108. நல்லவர்கள் ஒரு நாள் செய்த உபகாரத்தை மறவார்; அதுபோல, பனை ஒரு நாள் விதைத்துத் தண்ணீர் விட்டவனுக்கு பலன் கொடுக்கும்.
The good never forget a benefit; in like manner a palmyrah tree yields its produce to him who planted and watered it.
4182. நாய் கெட்ட கேட்டுக்கு மாமரத்து நிழல், அது கெட்ட கேட்டுக்குப் புளியிட்ட கறி.
Mean as the dog is, he has the shade of a mango tree, his curry is flavoured with acid.
4214. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி, ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.
Naladiyar and the distichs of Valluvar are terse in construction, the twigs of the banian tree and the Acacia are good for the teeth.
The tender fibre of the banian and Acacia are said to cure a gumboil, and therefore they are used for cleaning the teeth.
to be continued……………………………….
Tags- Proverbs on trees, part 7
Posted by Tamil and Vedas on September 7, 2025
https://tamilandvedas.com/2025/09/07/there-is-many-an-axe-that-strikes-a-fallen-tree-post-no-14952/
ஒருவர் மூளையை முழுவதுமாக நிரப்ப முடியுமா? (Post No.14,951)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,951
Date uploaded in London – —7 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கல்கிஆன்லைன் இதழில் 5-7-25 அன்று வெளியான கட்டுரை!
ஒருவர் மூளையை முழுவதுமாக நிரப்ப முடியுமா?
ச. நாகராஜன்

காலம் காலமாக விஞ்ஞானிகளும் சாமானியரும் கேட்கும் ஒரு கேள்வி : ஒருவர் தனது மூளையை முழுவதுமாக நிரப்ப முடியுமா?
பதில் : முடியாது! முடியவே முடியாது!
மரணம் சம்பவிக்கும் வரை மூளை இயங்கிக் கொண்டே இருக்கும்; அதன் திறனைக் கூட்டிக் கொள்ளும் சக்தி அதற்கு உண்டு.
மாறாக மூளையை முழுவதுமாக நிரப்பிக் கொள்ளலாம் என்று யாரேனும் சொன்னால் அது தவறானது; உள்நோக்கம் கொண்டது என்று உணர்ந்து அவரிடமிருந்து அகன்று விடலாம்!
சமீப காலம் வரை மூளையில் புதிய செல்கள் உருவாக முடியாது என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் புதிய செல்களை மூளை உருவாக்குகிறது என்பது இப்போதைய கண்டுபிடிப்பாகும்.
மூளை என்பது ஒரு முடிவே இல்லாத நூலகம் போல! அதில் வரிசையாக உள்ள பீரோக்களில் எண்ணற்ற நினவுகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. அதற்கு முடிவு அல்லது நிரம்பி விட்டது என்ற ஒரு நிலை உண்டா? இல்லை என்பதே பதில்.
ஒருவர் தன் மூளை ஆற்றலை நூறு சதவிகிதம் பயன்படுத்த முடியுமா? தாராளமாக! இதற்கு மூளை பயிற்சிகளை ஒருவர் மேற்கொண்டால் 90 சதவிகிதம் என்ற நிலையை அடையலாம்.
மூளையின் பல பகுதிக:ள் எப்போதுமே ,மிகுந்த ஆற்றலுடன் செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. இதை நியூரோ இமேஜிங் தொழில்நுட்பம் (NEUROIMAGING TECHNOLOTY) நிரூபிக்கிறது.
பொஸிட் ரான் எமிஷன் டோமோகிராபி மற்றும் மாக்னெடிக் ரெஸொனென்ஸ் இமேஜிங் (POSITRON EMISSION TOMOGRAPHY – PET AND MAGNETIC RESONANCE IMAGING – MRI) ஆகியவை உயிருள்ள ஒருவரின் மூளை செயல்பாடுகளைத் திறம்படக் கண்காணிக்கிறது.
எடுத்துக்காட்டாக டேனியல் டாமெட் பற்றிக் கூறலாம். 1979 ஜனவரி 31ம் தேதி பிறந்த டாமெட் 2004ம் ஆண்டு ‘பை’ யின் இலக்கங்களை வரிசையாகக் கூற ஆரம்பித்தார். தன் நினைவிலிருந்து வரிசையாக 22514 இலக்கங்களை ஐந்து மணிநேரம் ஒன்பது நிமிடங்கள் கூறிக் கொண்டே இருந்தார். அதுவரை இருந்த உலக ரிகார்டை முறியடித்தார். இலக்கங்கள் மூளையில் வந்து கொண்டே இருக்கின்றன என்றார் அவர். Extraordinary People என்ற ஒரு டாகுமெண்டரி படம் அவரைப் பற்றி நன்கு விவரிக்கிறது.
இது போல நூற்றுக் கணக்கானோரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
நினைவாற்றலைக் கூட்ட ஏராளமான வழிகள் உள்ளன.
சில வழிகள் இதோ:
அனைத்துப் புலன்களையும் பயன்படுத்தும் செயல்களை மேற்கொள்ளலாம். ஒரு உணவு விடுதிக்குச் சென்று புதிய உணவு வகையைக் கேட்டு அதை எடுத்துச் சாப்பிடால் அதை முகர்தல், தொடுதல், பார்த்தல், கேட்டல், சுவைத்தல் ஆகிய அனைத்துப் புலன்களுக்கும் வேலை உண்டு.
புதிய ஒரு கலையைக் கற்கலாம். ஓவியம், இசை இப்படி ஆய கலைகள் அறுபத்திநான்கு உண்டு.
ஒரு கலையை இன்னொருவருக்குக் கற்பிக்கலாம்.
இசையைக் கேட்கலாம்; பாடலாம்.
நடனம் கற்கலாம்; ஆடலாம்!
ஒவ்வொரு நாளும் சில புதிய வார்த்தைகளைக் கற்கலாம்.
மூளைக்கு வேலை தரும் புதிர்கள், குறுக்கெழுத்துப் போட்டி உள்ளிட்டவற்றில் சிறிது நேரம் ஈடுபடலாம்.
தியானம், மூளை ஆற்றலைக் கூட்டும் ஒரு நல்ல பயிற்சி.
இப்படி ஏராளமான வழிகள் உள்ளன; நமக்கு உகந்த, பிடித்த ஒரு வழியை மேற்கொண்டால் மூளை திறம்படச் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.
அது வளர்ந்து கொண்டே தான் இருக்கும்; அதை முழுவதுமாக நிரப்ப முடியவே முடியாது!
***
Posted by Tamil and Vedas on September 7, 2025
https://tamilandvedas.com/2025/09/07/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/