100 Wonders of Karnataka- Part 4 (Post No.4168)

Compiled by London Swaminathan

 

Date: 27 August 2017

 

Time uploaded in London- 15-24

 

Post No. 4168

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

64.MYSURU

The city of demon Mahisasura who was killed by the presiding deity of the city goddess Chamundeeswary. I t was ruled by the kings of Wodeyar family. Cleanest city in India with beautiful mansions.

 

65.MYSURU PALACE

 

The three storeyed palace was built on an old structure. Durbar Hall and Kalyana Mandapam were decorated with foreign materials. Golden treasurers are in the palace. 200 kilo gold gold throne and a golden Howdah are used in the annual Dasara procession.Millions watch this procession.

 

66.ART GALLERY MUSEUM

Art gallery housed in Jaganmohan Palace and the museum have a very rare collection.

 

67.RAIL MUSEUM
Museum houses priceless locomotives. Folklore museum has a collection of 6500articles Mysuru is one of the oldest zoos in the country.

 

68.LALITHA MAAL PALACE

It is in the outskirts of the city at the foot of the Chamundi Hills. built in European style now it has been converted into a hotel.

69.CHAMUNDI HILLS

IT IS 1065 METRE HIGH AND THE FAMOUS Chamundeeswary Temple is here. 1000 steps and a motorable road are there. Chamundy Temple is believed to be 2000 year old. It is famous for its monolith Nandi (bull) towering nearly 5 metres. It is one of the famous seven Nandis. Gigantic statue of Mahisasura in on the top of the hill.

 

70.NANJANGUD

It is famous for its annual Chariot festival attended by large number of devotees.

 

71.SOMNATHPUR

King Narasimha III built it in 1268. Excellent example of Hoysala architecture. Epic secenes decorate the walls in sculptural form.

72.TALAKAD

The Hindu pilgrim centre on the left bank of the Kaveri river has Pancha Lingas (five lingas). The Panchalinga Darshan is arranged once in 12 years.

 

73.SHIVAMOGGA (SHIMAGA)

It means the face of Lord Shiva. Keladi Nayaks, Kadambas, Gangas, Chaukyas, Rashtrakutas and Vijayanagara rulersruled from very early years.

 

74.18-29 METRES ACCOUNT BOOK

Government Museum in Shivamoga dispalys rare coins, mansuscripts, palm leaves,  and an ancient account book measuring 18-29 long.. Apart from this the Seetha Rama Anjaneya temple in the fort is a fine example of Hoysalas.

75.AGUMBE

IT IS CALLED THE CHIRAPUNJI OF Suth India with maximum rain fall for four monts. It is set in the Tropical Rain Forest region with rare orchid flowers.

Spectacular sunset point 90 kms from Sivamoga is very popular.

 

 

76.BHADRAVATI

Industrial city also known as Steel City.Lakshminarasimha Temple and Rameshwara Templeon the banks of Tunga river are of Hoysala period.

77.GAJANUR

The dam on the River Tunga and the elephant camp are poular.

  1. HUMCHA

Important Jain pilgrim centre with Panchakuta Basadi. Jain Temples are here.

 

79.JOG FALLS/JERASAPPA FALLS

Highest Water Fall in the country with an elevation of almost 1000 ft. River Sharavati falls from the top as four different cascades: Raja, Rani, Roarer and Rocket. It is a thrilling spectacle.

80.KOODALI

Pilgrim and Cultural centre on the confluence of rivers Tunga and Bhadra. A Smartha Mutt was established in the 16th century.

 

  1. MADAGADDE BIRD SANCTURAY

Located on the small island of River Tunga. Surrounded by dense forests. Attracts migratory birds.

82.TAVAREKOPPA

LION SAFARI WAS STARTED IN 1988 AMIDST DENSE FOREST. Other wild animals are also roam the forest.

Agumbe Rain Forest

to be continued………………………….

100 Wonders of Karnataka- Part 3 (Post No.4165)

Compiled by London Swaminathan

 

Date: 26 August 2017

 

Time uploaded in London- 13-27

 

Post No. 4165

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

 

Haveri District

41.HAVERI

Known for Cardamom Export; important centre for Kalamukha sect.

42.RANIBENNUR

Places of attractions: Siddheswar Temple and Tomb of Hazrat Jama Shah.

43.SAVANUR

Nawab’s palace, relics of a fort and annual fair of Sathyabodaswami mutt are very popular.

 

Kodagu (Coorg) District

44.MADIKERI

Hill station at 4000 ft. Famous for coffee plantations, orange groves. The sunset view from the Rajah’s seat is beautiful.

  1. FORT

Built in 182; houses a museum and a temple

45.OMKARESWARA TEMPLE

Built in 1820 and as Vishnu and Shiva. It is a unique blend of Hindu and Muslim styles of architecture.

 

46.ABBEY FALLS

Beautiful picnic site with a waterfall across the Madikere stream.

 

47.BHAGAMANDALA

It is on the confluence of three rivers Kaveri, Kanike and the Suiyothi. Triveni bathing and Bhandeswara attract the tourists.

48.NAGARHOLE

Heballa elephant camp is attractive. It is a wildlife sanctuary with tigers, elephants, panthers and deer.

49.TALAKAVERI

Source of the sacred river Kaveri. it originates from the Brahmagiri Hills. Important Hindu pilgrim centre.

Kolar District

50.KOLAR

Kuvalala is the original name and was the capital of Gannas, Cholas, Vijayanagar kings, British and Tipu Sultan ruled this area.

51.KOLARAMMA TEMPLE

Built by Rajendra Chola. It has Chola inscriptions and ornately carved door.

52.KOLAR BETTA

The hill of Kolar is also called Shata Shata Shringa Parvat ( the hundred peaked mountain).

53.KOLAR GOLD MINES

One of the deepest mines in the world and it is 9959 ft deep. It is called Champion Reef Gold Mine.

54.NANDI HILLS

Health centre and a pilgrim centre. Height 1478 metres. Tipu Sultan and the British stayed there during summer.

Mandya District

55.MANDYA

Annual chariot festival of Janardhanaswamy temple attracts a large number of devotees in April-May. Mandya district is known for its natural beauty.

56.BRINDAVAN GARDENS

 

Brindavan gardens is 19 km from Mysuru. The terraced ornamental garden is built at the foot of the Krishnarajasagar dam. Twinkling lights, musical water fountains, well-lit gardens make it a fairy land in the evenings.

57.K R SAGAR DAM

It is at the confluence of Kaveri, Hemavathi and Lakshmanatirtha Rivers. It was constructed by the famous engineer Vishveswarayya in 1932. The dam is 2621 metres long and 39 metres high; covers an area of 130 sq.kms.

58.KOKREBALLUR SANCTUARY

This bird sanctuary attracts migratory birds. They come from Europe, Africa and Australia.

59.MADDUR

Narasimha temple, built at Hoysala’s time and Varadaraja Temple built before the Chola occupation are famous.

 

60.MELUKOTE

It means High Fort. Cheluwaraya Swami temple has a rich collection of Royal jewellery. The Vairamudi Festival (Diamond crown) is held in March-April. Associated with Sri Ramanuja.

61.RANGANATHA THITTU BIRD SACTUARY

It has three rocky islets with full of trees. It is a paradise for bird watchers.

 

  1. SRIRANGA PATNA

Island capital of Tipu Sultan. Within the ramparts of the fort beautiful palaces are located. Ranganathaswamy temple, Daria Daulatbagh, Tipu’s summr palace are worth visiting.

63.SIVASAMUDRAM

Picturesque waterfalls across the river Kaveri. Asia’s first Hydroelectric power station was constructed here.

to be continued……………………

 

–Subham–

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே – புற நானூறு (Post No.4143)

Written by London Swaminathan

 

Date: 9 August 2017

 

Time uploaded in London- 21-17

 

Post No. 4143

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சங்க இலக்கிய நூல்கள் 18-ல் மிகவும் முக்கியமானது புறநானூறு. தமிழர்களின் வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் அறிந்த வாழ்வியல் கோட்பாடுகளையும் அறிவியல் உண்மைகளையும் எடுத்துரைக்கிறது

 

புற நானூற்றில் 18 ஆவது பாடல் குடபுலவியனார் பாடியது. முதலில் புலவரின் பெயரே பல புதிர்களைப் போடுகிறது. எவருக்கும் சரியாகப் பொருள் சொல்ல முடியவில்லை ஒருவேளை, புலஸ்த்ய மகரிஷியின் குடியைச் சேர்ந்தவரோ என்று (குடி புலஸ்திய) என்று ஐயப்பாடு எழுப்பியோர் உண்டு. ஆனால் அதுவும் சரியாகத் தோன்றவில்லை. இவர் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார்.

 

இந்தப் பாடலில் உள்ள அறிவியல் உண்மைகள் என்ன?

ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை …………

இதைப் பலவகையாக நோக்கலாம்

1, 10, 100, 1000, 10,000, 100,000, கோடி, பத்து கோடி, 100 கோடி, 1000 கோடி

தசாம்ச முறை எனப்படும் டெஸிமல் சிஸ்ட (Decimal System) த்தைக் கண்டுபிடித்தவர்கள் வேத கால ரிஷிகள். உலகின் பழைய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் டெஸிமல் முறை காணப்படுவதோடு சஹஸ்ரநாமம், லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை என்று நம் சமய வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது. இந்துக்களின் பழமொழிகள் கூட டெஸிமல் மு முறையில் இருக்கும். சாபம் இடும் இடங்களில் கூட உன் தலை சுக்கு நூறாக உடையட்டும் என்று தசாம்ச முறையில்தான் இருக்கும்.

அணைகள் கட்ட அறிவுரை

நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்

தட்டோர் அம்ம, இவண் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே

 

மக்களுக்கான குடிநீர் வசதிகளைச் செய்து தா; அணகள் கட்டி நீர்ப்பாசனத்துக் கு உதவுக என்பது புலவரின் அறிவுரை. இது அக்காலத்தில் நடந்த அறப்பணிகளையும் பொதுநல சிந்தனையையும் காட்டுகிறது. புலவர் தனக்கு தங்கம் கொடு, நிலம் கொடு என்று கேட்காமல் பொது மக்களுக்கு வசதிகள் செய்து தா என்று இறைஞ்சுகிறார்.

 

நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே;

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே

உலகில் குடி நீர் இல்லாமல் யாரும் நீண்ட காலம் வாழ முடியாது

யார் ஒருவர் அன்னதானம் செய்கிறாரோ அவர், மற்றவர்களுக்கு உயிர் கொடுத்ததற்குச் சமம்

 

இதை பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் சொல்லுவார்:

அன்னாத் பவதி பூதானி பர்ஜன்யாத் அன்ன ஸம்பவ:

யக்ஞாத் பவதி பர்ஜன்யோ யஜ்ஞ கர்ம ஸமுத்பவ: (3-14)

 

உணவிலிருந்தே உயிர்கள் உண்டாகின்றன

மழையிலுருந்து உணவு உண்டாகின்றது

யக்ஞத்திலிருந்து மழை உண்டாகின்றது

நல்வினைகளில் இருந்து  வேள்வி உண்டாகின்றது.

 

 

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை – என்பது ஆன்றோர் வாக்கு. வள்ளுவரும் பத்தினிப் பெ ண்களால் மழை பெய்யும். நல்லாட்சி நடைபெறும் வேந்தன் நாட்டில்  முயற்சியின்றியே அறுவடைகள் பெருகும் என்றெல்லாம் செப்புகிறார்.

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே = நல்ல நிலமும் நல்ல நீர்ப் பாசனமும் இருந்தால்தான் உணவு விளைச்சல் கிடைக்கும்.

 

மேலும் நீரும் ஒரு உணவு. இதை வள்ளுவரும் சொன்னார்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ  மழைகுறள் 12

உண்பவர்களுக்கு நல்ல உணவுகளை உண்டாக்கி, அவ்வுணவுகளை உண்பவர்க்குத் தாமும் உணவாகி, இருப்பதும் மழையே.

 

இதைத்தான் குடபுலவியனாரும் செப்பினார்.

இன்னொரு படலில் ‘’நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே  மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’’–186- மோசிகீரனார்

என்று சொல்லுவதிலிருந்து நெல்லும் (நிலம்) நீரும் உயிருக்கு இன்றியமையாதவை என்பது புலப்படும்

 

இவைகளை எல்லாம் பார்க்கையில் குடபுலவியனார் ஏன் இப்படிச் சொன்னார் என்று தெளிவாகிறது.

 

உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

 

இது பகவத் கீதையிலும் உள்ளது. தனக்கென மட்டும் உணவு சமைப்பவன் பாவி என்று கண்ணன் உரைப்பான் (பகவத் கீதை 3-13)

யே ஆத்ம காரணாத் பசந்தி, தே பாபா: அகம் புஞ்சதே.

 

இப்பொழுது புறநானூற்றுப் பாடலின் முழுப் பொருளையும் பார்ப்போம்:

கடல் சூழ்ந்த உலகில் முயற்சியால் புகழை நிலைநாட்டிய அரசர் வழி வந்தவனே! சங்கம் எனச் சொல்லப்படும் பெரிய எண் அளவுக்கு உன் வாழ்நாள் அமையட்டும். வாளை, ஆரல், வரால், கெடிற்று மீன்களை உடைய நீர் நிலைலகளையும் உயர்ந்த மதிலிலையும் உடையவனே!

நீ மறுமைச் செல்வம் விரும்பினாலும், மன்னர்களை வென்று புகழ்பெற விரும்பினாலும் அதற்கான வழியை நான் சொல்லித் தருகிறேன்.

நீரை முக்கியமாக கொண்டுள்ள உடம்புக்கு உணவு கொடுத்தவர் உயிர் கொக்டுத்ததற்குச் சமம்.

அந்த நெல்லையும் நீரையும் ஒன்றாகச் சேர்த்தவர் உயிரையும் உடலையும் சேர்த்தவர் ஆவர். நெல் முதலியவற்றை விளைவிக்கும் நிலம் பெரிதாக இருந்தாலும் மன்னன் முயற்சிக்குப் பலன் தராது; ஒரு வழி சொல்லித் தருகிறேன். அதைக் கடைப் பிடிப்பாயாக. பள்ளமான இடத்தில் நீர் தேங்கும்படி செய்தவர்கள் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்த்தவர் ஆவர்; அதோடு புகழும் கிட்டும் அப்படிச் செய்யாதவர் புகழ் நிற்காது. எனவே நீயும் நீர் நிலை பெருகச் செய்வாய்.

 

இதில் 4 வகை மீன்களைச் சொல்லுவதைக் கவனிக்கவும். நீர் சூழ்ந்த உலகம என்னும் அறிவியல் உண்மை சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் திரும்பித் திரும்பி வரும். இந்த பூமியில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் நிரம்பிய உண்மை இந்தியர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும். அது மட்டும் அல்ல; “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்பது மணிமேகலையிலும் நீரின்றமையாது உலகம் என்னும் வரி திருக்குறளிலும் வருவது காண்க. உணவும் நீரும் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்னும் இந்து மதக் கருத்தும் பாரதத்தில் மட்டுமே காணப்படும். பிற நாட்டு இலக்கியத்தில் இப்படிப்பட்ட கொள்கைகளைக் காண முடியாது.

வாழ்க குடபுலவியனார்.

ஔரங்கசீப் பயன்படுத்திய கங்கை நீர்! (Post No.4136)

Date: 7 August 2017

 

Time uploaded in London:- 6-51 am

 

 

Post No.4136

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

புனித கங்கை

 துக்ளக், அக்பர் ஆகியோர் போற்றிப் பயன்படுத்திய கங்கை நீர் பற்றிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரை வெளி வருகிறது.

ஔரங்கசீப் பயன்படுத்திய கங்கை நீர்!

 

ச.நாகராஜன்

 

 

முகலாய மன்னர்களில் ஹிந்து பண்பாட்டையும் ஹிந்துக்களையும் அதிகமாக வெறுத்த ஒரு மன்னன் ஔரங்கசீப் (பிறப்பு :14-10-1618 – மறைவு : 20-2-1707).

 

ஹிந்துக்களுக்கு இஸ்லாமின் பெயரால் அவன் ஆற்றிய கொடுமைகளை எழுத கை நடுங்கும். படித்தாலோ உள்ளம் பதறும்.

அப்படி ஒரு கோரமான பிறவி.

 

அவன் காலத்தில் பிரான்ஸை சேர்ந்த வைத்தியரும் யாத்ரீகருமான பெர்னியர் (Francois Bernier  பிறப்பு: 25-9-1620  மறைவு: 22-9-1688) இந்தியாவில் சுமார் 12 வருட காலம் தங்கி இருந்தார்.

ஔரங்கசீப்பைப் பற்றி அதிகாரபூர்வமான தகவல்களை அவர் தனது நூலான ‘டிராவல்ஸ் இன் தி முகல் எம்பயர்’ (Travels in the Mughal Empire) என்ற நூலில் தந்துள்ளார்.

 

அதில் ஒன்று ஔரங்கசீப் கங்கை நீரைப் பயன்படுத்தியது பற்றியது:

 

He (Aurangzeb) keeps in Delhi and Agra…. Kitchen apparatus, Ganges water and all the other articles necessary for the camp, which the Moghal has always about him, as in his capital, things which are not considered necessary in our kingdoms in Europe”

 

டெல்லியோ ஆக்ராவோ, அவர் (ஔரங்கசீப்) சமையலறை உபகரணங்கள், கங்கை நீர் மற்றும் இதர முகாமிற்குத் தேவையான சாமான்களை தலைநகரில் இருக்கிறார் போலவே தனக்குத் தேவையானவற்றை வைத்துக் கொள்கிறார். அவை ஐரோப்பாவில் உள்ள நமது அரசுகளில் தேவை என்று கருதப்படாதவை.

 

பெர்னியரும் கூட கங்கை நீரைப்  பயன்படுத்தியவரே. அதைப் பற்றி அவர் தனது பயண நூலில் தரும் தகவல்கள் இவை:

 

I shall not be exposed to any of these inconveniences and dangers, as my Nawab has with marked kindness ordered that a new loaf of his own household bread and a Sourai of Ganges water (with which, like every person attached to the court, he has laden several camels) should be presented to me every morning. A Sourai is that tin flagon of water covered with red cloth which a servant carries before his master’s horse.”

356ஆம் பக்கத்தில் அவர் கூறுவது இது:

 

“எனக்கு இது போன்ற அசௌகரியங்களோ அல்லது அபாயங்களோ வராது. ஏனெனில் நவாப் அதீதமான அன்புடன் எனக்கு அவருக்குத் தயாரிக்கப்படும் ரொட்டியையும் ஒரு சௌராய் கங்கை நீரையும் எனக்கு ஒவ்வொரு நாள் காலையும் தருமாறு ஆணையிட்டுள்ளார்.(அரசவையில் உள்ள ஒவ்வொருவருக்கும் பல ஒட்டகங்கள் உள்ளன) ஒரு சௌராய் என்பது தனது எஜமானனின் குதிரைக்கு முன்னால் ஒரு வேலையாள் ஏந்திச் செல்லும் சிவப்புத் துணியால் மூடப்பட்ட குவளையாகும்.

 

 

இதிலிருந்து நாம் அறிவது ஔரங்கசீப் மட்டுமல்ல, அவனது அரசவையில் இருந்த பிரபுக்கள் அனைவருமே கங்கை நீரைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது தான்.

 

லாகூரிலிருந்து 1665ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி எழுதிய தனது கடிதத்தில் பெர்னியர் மீண்டும் கங்கை நீரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

 

அவரது குறிப்பு:

 

The fruits, the sweet meats, the Ganges water, the saltpetre with which it is cooled and the betel are kept in four other tents.”  (page 365)

 

“பழங்கள், இனிப்பூட்டிய மாமிசம், கங்கை நீர், அதைக் குளிர வைக்கும் வெடியுப்பு மற்றும் வெற்றிலை ஆகியவை இதர நான்கு கூடாரங்களில் வைக்கப்பட்டுள்ளன.

 

ஹிந்து கலாசாரம். ஹிந்து மதம், ஹிந்துக்கள் – ஆகிய இவற்றை அறவே வெறுத்த முகலாயர்கள் – துக்ளக் முதல் ஔரங்கசீப் வரை – கங்கை நீரை விரும்பினார்கள்.

அதைத் தாங்கள் செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்றார்கள்.

 

 

தங்கள் சமையலுக்கு அதை மட்டுமே பயன்படுத்தினார்கள்.

அது மட்டுமல்ல, அரசாங்கத்தைச் சேர்ந்த செல்வந்தர்களும், பிரபுக்களும், உயர் அதிகாரிகளும் கூட கங்கை நீரையே பயன்படுத்தினர் என்பது மேற்கூறிய பல குறிப்புகளினால் தெரிய வருகிறது.

 

காலம் காலமாகத் தொன்று தொட்டு ஹிந்துக்கள் போற்றி வரும் கங்கா மாதாவை கடுமையான விதிகளை அனுசரிக்கும் இஸ்லாமியர்களும் போற்றி பயன்படுத்தினார்கள் என்பது சரித்திரம் தரும் உண்மை!

 

கங்கை போன்ற ஒரு புனித நதி உலகில் வேறெங்கும் இல்லை என்பதும் உண்மையே!!

***

 

 

 

 

 

‘வடதிசையதுவே வான் தோய் இமயம்’: புறநானூறு (Post No.4134)

Written by London Swaminathan

 

Date: 5 August 2017

 

Time uploaded in London- 17-46

 

Post No. 4134

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சங்க இலக்கியத்தில் 18 நூல்கள் உண்டு: பத்துப்  பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இரண்டிலும் 18 நூல்கள். இவைகளை பதினெட்டு மேல் கணக்கு நூல்கள் என்றும் பகர்வர். இவைகளில் எதைப் படிக்காவிடிலும் புறநானூற்றின் 400 பாடல்களைப் படித்தாலேயே தமிழர்களின் பெருமையை அறிந்து விடலாம். தமிழ்ப் பண்பாடு என்று எதுவும் கிடையாது என்பதும் விளங்கும். பாரதம் இப்பொழுது உலகில் ஏழாவது பெரிய நாடு. புற நானூற்றுக் காலத்திலோ பாரதம்தான் உலகின் மிகப்பெரிய நாடு. இவ்வளவு பெரிய நாட்டில் பிரதேசத்துக்குப் பிரதேசம் சில புதிய நம்பிக்கைகளும் புதிய வழக்கங்களும் இருப்பது இயல்பே. இது தனிப் பண்பாடு ஆகிவிடாது.

 

என் மனைவி திருநெல்வேலிக்காரி; நான் தஞ்சாவூர்க்காரன்; இருவரும் பிராமணர்கள்; அதிலும் ஒரே பிரிவு- வடமா; ஆயினும் கல்யாணம் நிச்சயமானவுடன் என்ன சீர் செட்டு, எப்படி கல்யாணத்தை நடத்த வேண்டும் என்பதில் விவாதம்!!! எங்கள் வழக்கம் இது, எங்கள் வழக்கம் அது என்று அங்கலாய்ப்பு; பின்னர் ஒரு காம்ப்ரமைஸ் Compromise– இது வேறு வேறு பண்பாடு அல்ல. திருநெல்வேலி அல்வா, பெட்டி வெல்லம், மணப்பாறை முறுக்கு போல சில சிறப்புகளே!

 

இமயம் பற்றியும் கங்கை பற்றியும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பல புலவர்கள் போகிற போக்கில் பாடித் திரிந்தது இந்த நாடு ஒன்று என்பதைக் காட்டும். அது மட்டுமல்ல. வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒன்றுபடுத்தினான் என்று பேசுவோரை முட்டாள்கள் என்றும் காட்டிவிடும். அவன் சாலையும் ரயில் பாதையும் போடுவதற்கு முன்னரே கரிகாலனும் ஆதி சங்கரனும் சேரன் செங்குட்டுவனும் இமயம் முதல் குமரி வரை வலம் வந்த நாடு இது .

 

இதோ முடமோசியார் என்னும் பெண்  புலவர் பாடிய பாடல்:

 

முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே!

ஆழ்க, என் உள்ளம்! போழ்க, என் நாவே!

பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!-

நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி

குவளைப் பைஞ்சுனை பருகி, அயல

தகரத் தண் நிழல் பிணையோடு வதியும்

வடதிசையதுவே வான் தோய் இமயம்

தென் திசை ஆஅய்குடி இன்றாயின்,

பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே.

–பாடல் 132, முடமோசி

“யாவர்க்கும் முன்னால் நினைக்கப்பட வேண்டியவனான ஆய் வள்ளலை பின்னால்தான் நினைத்தேன். அவ்வாறு நினைத்த குற்றத்தால், என் மனம் அழிந்து போவதாகுக. மற்றவரைப் புகழ்ந்த என் நாவும் பிளவு படுவதாகுக. மற்றவர் புகழைக் கேட்ட என் செவியும் தூர்வதாகுக. நரந்தையையும், நறுமணமுள்ள புல்லையும் மேய்ந்த கவரிமான், சுனை நீரைக் குடித்து பெண்மானுடன் தகர மர நிழலில் தங்குகின்ற வடக்கில் உள்ள வானளாவி உயர்ந்த இமய மலையும் தெற்கிலுள்ள ஆய்க்குடியும் இல்லையானால் இந்தப் பரந்த உலகம் தலை கீழாகப் புரண்டுவிடும்”.

 

இப்படி இமய மலையையும் தெற்கிலுள்ள பொதியம் முதலிய மலைகளையையும் ஒப்பிடுவது பாரத ஒற்றுமையையும் பழங்காலத் தமிழர்களின் புவியியல் அறிவையும் காட்டுகிறது. கங்கை நதியையும் பல புலவர்கள் பாராட்டியுள்ளனர்.

 

புறம். பாடல் இரண்டில் முரஞ்சியூர் முடிநாகனார் “பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே” என்று பாடுகிறார்.

 

இதற்கு 600 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த அப்பர் பெருமான் “ஆயிர மாமுக கங்கை என்று வங்காளத்தில் கடலில் கலக்கும் கங்கை நதி பற்றிப் பாடுகிறார். வங்க தேசத்தில் கடலில் கலக்கும் கங்கை, 1000 கிளைகளாகப் பிரிகிறது. இவை எல்லாம் மேப் , அட்லஸ்(Map and Atlas) இல்லாத காலத்தில் நம்மவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது.

 

இவை எல்லாம் காளிதாசன் பாடல்களிலும் உள்ளன. பூமியை அளக்கும் அளவுகோல் என்று இமயமலையை வருணிக்கிறார் காளிதாசன். அதிசயப்படக்கூடிய பூகோள அறிவு இது!

 

–Subham–

 

துக்ளக் விரும்பிய கங்கை நீர்! (Post No.4130)

Written  by S NAGARAJAN

 

Date: 5 August 2017

 

Time uploaded in London:- 6-12 am

 

 

Post No.4130

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

புனித கங்கை

 

 

துக்ளக் விரும்பிய கங்கை நீர்!

 

ச.நாகராஜன்

 

 

ஹிந்து சரித்திரம் கண்ட விசித்திரமான மன்னர்களில் ஒருவர் முகம்மது பின் துக்ளக்.

 

ஒரு கிறுக்குத்தனமான ஆசாமி மன்னராக இருந்தால் என்னென்ன நடக்கலாம் என்பதற்கு துக்ளக் ஆட்சி ஒரு உதாரணம்.

தன் தந்தையின் வெற்றியைக் கொண்டாட ஒரு மர மாளிகையை அமைத்தான் துக்ளக். அதன் அஸ்திவாரத்தைப் பற்றி அவன் கவனம் கொள்ளவில்லை. விளைவு, தந்தையும் அவரது சேனா பிரமுகர்களும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அது இடிந்து வீழ்ந்தது.

தந்தைக்கு நல்ல வரவேற்பு!

 

 

அடுத்து வெள்ளி, தங்க நாணயங்களை தாமிர நாணயங்களாக மாற்றினான் துக்ளக். ஹிந்து பொற்கொல்லர்கள் ஒரிஜினலை விட பிரமாதமாக நாணயங்களைத் தாங்களாகவே தயார் செய்யவே தாமிர நாணயங்களை வாபஸ் வாங்கினான். இந்த விஷ பரிட்சையால் பெருமளவு கஜானா காலி ஆனது.

அடுத்தது தலை நகர் மாற்றம். 40 நாட்கள்  700 மைல் தூரம் தன்னுடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு டெல்லியை விட்டு புது தலை நகரான தௌலதாபாத் நோக்கிச் சென்றான் அவன்.

 

 

பலர் காடுகளில் சென்று ஒளிந்து கொண்டனர். பலர் வழியிலேயே செத்து மடிந்தனர். இந்த விஷ பரிட்சையும் கூட விபரீதத்தில் தான் முடிந்தது.

 

 

துக்ளக் – பல மொழிகள் கற்றவன்; கணிதத்தில் நிபுணன்; அழகாக எழுதுவான். சூஃபி யோகிகளின் பால் பற்று; கடுமையாக் இஸ்லாமிய விதிகளை அனுசரிப்பவன். 1325இல் தந்தையின் மறைவுக்குப் பின் முழு அரசாட்சிப் பொறுப்பை ஏற்றான்.20-3-1351இல் மறைந்தான்.

 

 

அவன் மறைவு கூட சற்று விசித்திரமானது தான். ஒரு அழுகிய மீனைச் சாப்பிட்டு அதனால் அவன் மரணம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது!.

 

இப்படிப்பட்ட துக்ளக் விரும்பி அருந்திய நீர் புனிதமான் கங்கா நீர்

என்றால் அதிசயமாக இல்லை?!

 

மொராக்கோவிலிருந்து இந்தியா வந்த இபுன் பதாதா (1325-1354) என்ற யாத்ரீகர் தனது இந்திய வருகையில் தான் கண்டதை எல்லாம் எழுதி வைத்துள்ளார்.

 

அவர் துக்ளக் ஏற்பாடு செய்திருந்த அஞ்சல் சேவையை விரிவாக எடுத்துரைக்கிறார் இப்படி:

 

 

“This post is quicker than the mounted post. It is sometimes used to transport fruits from Khursan which are highly valued in India; they are put on plates and carried with great speed to the Sultan. In the same way they transport the principal criminals, they are each placed in a stretcher and the carriers run carrying the stretcher on their heads.”

 

 

துகளக் விரும்பி அருந்தியது கங்கா நீர்.

அது தௌலதாபாத்திற்கு இதே போலத் தான் கொண்டு வரப்பட்டது.

 

அது பற்றி இபுன் பதாதா குறிப்பிடுவது இப்படி:

 

“The Sultan’s drinking water is brought to him by the same means when he resides at Dawlatabad from the river Kank ( Ganges) to which the Hindus go on a pilgrimage and which is at a distance of forty days’ journey from there.”

கங்கை நீரை மட்டுமே அருந்தி வந்த முகம்மதிய மன்னர்கள் பலர்.

 

அவர்களுள் துக்ளக்கும் ஒருவர்.

மற்றவர்களைப் பற்றி இன்னொரு கட்டுரையில் காண்போம்.

***

தமிழர்களின் குமரிக் கண்டம் அழிந்தது எப்படி? (Post No.4121)

 

 

Written by London Swaminathan
Date: 2 August 2017
Time uploaded in London- 15-54
Post No. 4121
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

pictures by london swaminathan.

 

 

சிந்து சமவெளி நாகரீக அழிவுக்கும்  , குமரிக்  கண்ட மறைவுக்கும்   கிரேக்க எரிமலை வெடிப்புக்கும் தொடர்பு?

 

கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா – பகுதி 2 (முதல் பகுதி நேற்று வெளியானது)

 

 

 

சான்டோரினி (Santorini Islands) தீவு அழகான பிரமிப்பூட்டும் காட்சிக்கு மட்டும் பெயர்போன இடம் என்று எண்ணிவிடக்கூடாது. அந்த மண்ணில் நின்றபோது எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஏன் என்றால் நான் சிந்து/ சரஸ்வதி நதிச் சமவெளி நாகரீகம் பற்றி எழுதிய 20, 25 கட்டுரைகளுக்கும், ஆரிய- திராவிட ‘புருடா’, ‘கப்ஸா’, ‘பொய் பித்தலாட்டம்’ பற்றி எழுதிய 20, 30 கட்டுரைகளுக்கும் எனது தேரா (Thera/ Santorini சாண்டோரினி) தீவு விஜயத்துக்கும் தொடர்பு உண்டு.

வரலாற்றையே மாற்றிய ஒரு மிகப் பெரிய எரிமலை வெடிப்பு கி.மு 1630ல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பாகும். அதற்கு முன்னரும் பின்னரும் இந்த தேரா/ சாண்டோரினி எரிமலை பல முறை சீறி இருக்கிறது.

 

எரிமலை வெடித்து அதற்குள் ஏற்படும் பள்ளங்களில்  நீர் நிரம்பி ஏற்படும் சமுத்திரப் பகுதிகளை கால்டெரா எனபர். அப்படிப்பட்ட கால்டெரா (Caldera) வில்தான் நான் நின்றேன்.

 

இந்த பிரம்மாண்ட தேரா வெடிப்பு பற்றி பல மர்மங்கள் உள்ளன. தமிழர்களாகிய நாம் குமரிக் கண்டம் மறைந்தது பற்றி எப்படி அங்கலாய்க்கிறோமோ அதே போல கிரேக்க நாட்டு எழுத்தாளர்களும் புலவர்களும் அட்லாண்டீஸ் (Atlantis) என்னும் மர்ம கண்டம் முழுகியது பற்றி நிறைய எழுதி வைத்துள்ளனர். அதை ஏற்காதோரும் இந்த எரிமலை வெடிப்பால் மினோவன் (Minoan Civilization) நாகரீகம் அழிந்ததை ஒப்புக் கொள்வர். இந்த எரிமலை சீற்றத்துக்கும் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சீன ஆட்சிக் குழப்பத்துக்கும், எகிப்திய ஆட்சிக் குழப்பத்துக்கும் (கி.மு.1600) இதுவே காரணம் என்பது வரலாற்றாய்வா ளர்களின் ஊகம். இதை எல்லாம் பார்க்கும் போது நமது குமரிக் கண்டம் மறைந்ததற்கும் சிந்து / சரஸ்வதி நதி தீர நாகரீகம் க்ஷீணம் அடைந்து படிப்படியாக மறைந்ததற்கும் தொடர்பு இருக்கிறது என்பது என் கணிப்பு. ஆகையால்தான் நான் இந்த மண்ணில் நின்றபோது ஒரு பிரமிப்பு, ஆனந்தக் களிப்பு!

2000 தீவுகள் உடைய நாடு!!

 

கிரேக்க நாட்டுக்குச் சொந்தமாக 2000க்கும் மேலான தீவுகள் உள்ளன.

கடலிடையே உள்ள சிறிய குன்றுகளையும் கணக்கில் சேர்த்தால் 6000 தீவுகள் என்றும் சொல்லுவர்.

 

இவ்வளவு தீவுகள் இருந்தாலும் (Crete) க்ரீட் எனப்படும் மினோவன் நாகரீக தலைமையிடமும் இந்த சாண்டோரினி தீவும்தான் முக்கியமானவை.

 

சாண்டோரினி தீவின் தலை நகர் Fபிரா. (Fira)–இயா என்னும் கிராமத்தில் (Oia) சூரிய அஸ்தமனத்தைக் காண ஏராளமானோர் வருவர். கழுதையில் சுற்றிப் பார்க்கவும் வசதி உண்டு. எல்லாவற்றுக்கும் கட்டணம்தான். ஏதன்ஸ் நகரை விட உணவும் உறைவிடமும் அதிக செலவு பிடிக்கும் இடங்கள்.

 

இந்த இடம் ஒரு குறிப்பிட்ட வகை ஒயின் (Wine) செய்வதற்கும் பெயர் பெற்ற இடம். ஆகையால் பழங்காலத்தில் எப்படி ஒயின் செய்தனர் என்பதைக் காட்டும் மியூசியமும் (Winery Museum)  உள்ளது.

அக்ரோதிரி (Akrotiri) என்னும் இடத்தில் தொல்பொருட் துறையினர் மினோவன் நாகரீக தடயங்களைக் கண்டு எடுத்துள்ளனர். அங்கு ஒரு காட்சி சாலையும் இருக்கிறது.

கருப்பு நிற மணல் கடற்கரையும் சிவப்பு மணல் கடற்கரையும் ஒரே தீவில் இருப்பது இயற்கை அதிசயமே.

 

நாங்கள் இயா (oia) கிராமத்தில் கடைத் தெருவில் நின்றபோது நம் ஊரில் மார்கழி மாத பஜனை கோஷ்டி வருவது போல ஒரு கோஷ்டி இசை முழக்கத்துடன் சென்றது. தினமும் நடக்கும் கிரேக்க இசை நடன ஷோவுக்கு விளம்பரம் தேடி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துச் சென்றனர்.

 

ஒரு பழங்கால மொனாஸ்ட்ரிக்கும் (Monastery) சென்று வந்தோம். கிரேக்க நாட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் வகுப்பினர் (Greek Orthodox) அதிகம். இது பிராடெஸ்டண்ட், கதோலிக்கத்திலிருந்து வேறுபட்டது.

 

சுற்றுலா வரும்படியை நம்பியே மக்கள் வாழ்கின்றனர். கிரேக்க நாடு சலவைக் கல் எனப்படும் மார்பிள் (marble) கற்களை அதிகம் உற்பத்தி செய்கிறது. உலக உற்பத்தியில் ஏழு சதவிகிதம் இவர்களுடையதே. கிரேக்கர்களுக்கு என்று சில விசேஷ உணவு வகைகளும் உண்டு. நாங்கள் கிரீக் சாலட் (Greek salad) முதலிய வெஜிட்டேரியன் வகைகளை மட்டும் சுவைத்தோம்.

 

அடுத்த கட்டுரையில் ஏதென்ஸ் அதிசயங்களை எழுதுகிறேன்.

TAGS:- தேரா மினோவன், சிந்துவெளி, குமரிக்கண்டம்

–சுபம்–

கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா (Post No.4118)

Written  by London Swaminathan
Date: 1 August 2017
Time uploaded in London- 20-12
Post No. 4118
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நான் எனது குடும்பத்துடன் ஜூலை (2017) மாதம் கடைசி ஆறு நாட்களுக்கு கிரேக்க நாட்டின் தலை நகர் ஆதென்சுக்கும் (Athens) எரிமலைத் தீவான சாண்டோரினிக்கும் (Santorini Islands) சென்று வந்தேன். நமது இந்து மதம் தொடர்பான விஷயங்களை இரண்டு மூன்று கட்டுரைகளில் தருகிறேன்.

சாண்டோரினி தீவுகள் ஏதென்ஸிலிருரிந்து சுமார் 128 மைல் தொலைவில் உளது. இதன் சிறப்புகள்:

 

  1. இது எரிமலை சீறி, கடலிலிருந்து வீசிய கற்பாறைக் குவியலினால் உண்டான தீவு. வழி நெடுகிலும் கருகிய கற்கள், பெரிய கருமையான பாறைகள் இவைகளைத் தாண்டி மலையேறிச் சென்றால் புகை வெளியே வரும் பெரிய எரிமலைப் பாறையைக் கணலாம். ஆனால் தீப்பிழம்போ, உருகிய எரிமலைக் குழம்போ ( Lava லாவா) கிடையாது. அடுப்பை அணைத்த பின் எவ்வளவு புகையுமோ அவ்வளவுதான்!

 

  1. பின்னர் எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு கந்தக, அமிலப் பாறைகள் வழியே சென்று உடல்நலத்தைக் கெடுக்க வேண்டும் என்று கேட்கலாம். அவர்களே, கர்ப்பமான பெண்கள் வரக்கூடாது. கந்தகப் புகை கருவைப் பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள். நாக்கில் நுரை தள்ள ஆயிரக் கணக்காண அடிகள் உயரே செல்லக் காரணம்……………….?

 

3.பிரமிப்பூட்டும் கண்கொள்ளா இயற்கைக் காட்சிகள். அதள பாதாளத்தில் கடலும் அதில் பவனி வரும் கப்பல்களும் படகுகளும் கண்கொள்ளாக் காட்சி. காமெரா உள்ளவர்கள் தொடர்ந்து படம் எடுத்த வண்ணம் இருப்பர். எத்தனை முறை படம் எடுத்தாலும் ஏதோ புதுப் புது காட்சிகளை எடுப்பது போலவே தோன்றுகிறது. இதில் சூரியனின் வண்ண ஜாலங்கள் வேறு! கடலே பொன்னிறமாக மாறிவிடும்.

 

 

4.இந்தத் தீவில் 90 சதவிகித கட்டிடங்கள் வெள்ளை நிற, நீல நிறக் கலவைதான். நாம் எப்படிக் கோவிலுக்கு சிவப்பு வெள்ளை பயன்படுத்துகிறோமோ அப்படி இவர்கள் வெள்ளை நிறச் சுவர்களின் மேலேயுள்ள கும்பம் போற இடங்களுக்கு நீல நிறம் அடித்திருக்கிறார்கள். இது கிரேக்கர்களுக்கு மிகவும் பிடித்த, புனிதமான வண்ணமாம்.

 

5.சூடான கடல் நீர்!

 

எரிமலையுள்ள இடத்துக்கு பெரிய படகில் சுமார் 100, 200 பேர்களை அழைத்துச் செல்லுவர். அதைப் பார்த்த பின்னர் சூடான வெப்ப நீர் ஊற்று உள்ள கடல் பகுதிக்கு அழைத்துச் செல்லுவர் . யார் யாருக்கு நீந்தத் தெரியுமோ அவர்கள் அனைவரும் கடலில் குதிக்கலாம் என்று அறிவித்தவுடன் அழகிகள், கிழவிகள், குமரன்கள், தொண்டுக் கிழங்கள் எல்லோரும் கடலில் குதிப்பார்கள். அவர்கள் கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளால் சூடுபடுத்தப்பட்ட நீருள்ள பகுதிக்குச் சென்று நீந்துவார்கள். பத்து நிமிடம் ஆன பின்னர் அவர்கள் கப்பலுக்கு (படகுக்கு) திரும்பிவரவேண்டும்.

 

ஒரு இளம் காதல் ஜோடி அருகில் இருந்த கப்பலுக்கு நீந்திச் சென்று ஏறிவிட்டன. உடையோ உடலில் மிக மிகக் குறைவு. கணவன் எங்கள் கப்பலில் கு தித்துவிட்டான். அந்தப் பெண்ணோ பயந்து நடுங்கி ‘’மதில் மேல் பூனையாக’’ தவித்தாள். பின்னர் அனவைரும் வேடிக்கைப் பார்க்கையில் எங்கள் கப்பலுக்குள் குதித்தாள்.

 

இந்த இரண்டு இடங்களுக்குச் சென்று கப்பலில் திரும்பி வர தலைக்கு 20 (Euro) யூரோ கட்டணம். இது சாண்டோரினி தீவுகளில் ஒரு நிகழ்வு. இது போல பல வீரதீர செயல்கள் செய்யலாம்.

 

 

6.ஒவ்வொரு சர்ச் (Church)  மீதும் மணிகலைளை மூன்று அல்லது ஆறு அல்லது பத்து என்று ஒரு பிரமிடு வடிவத்தில் தொங்க விட்டிருக்கிறார்கள்

 

7.கடற்கரை ஓரம் நெடுகிலும் நூற்றுக் கணக்கான ஓலைக் குடைகள் அதற்குக் கீழே இரண்டு படுக்கைகள்; இவை அனைத்தும் வாடகைக்கு விடப்படுகின்றன. ஒரு ஜோடி படுக்கைக்கு பத்து யூரோ. கீழே அரை நிர்வாண,,,, இல்லை முழு நிர்வாண அழகிகள், கணவர்களுடன் (???) படுத்திருப்பர். அவ்வப்பொழுது கடலில் குதிப்பர். சன் க்ரீமைத் (Sun Cream)  தடவிச் சூரியக் குளியல் எடுப்பர். எதற்காக இப்படிச் செய்கின்றனர்? சன்கிரீமைத் தடவி சூரியக்(Sun bath) குளியல் எடுத்தால் தோலின் நிறம் தாமிரக் கலராக — Copperகாப்பர் கலராக மாறிவிடும். நம்முடைய கோவில் செப்புத் திருமேனிகள் போல அழகிகள் ஜொலிப்பர்!!

 

 

அடுத்த கட்டுரையில் கழுதைக்கு ஏற்பட்ட கிராக்கி, சூரிய அஸ்தமன தரிசனம், தொல்பொருட் துறை மியூசியம், கி.மு 1660 வாக்கில் ஏற்பட்ட (Volcanic Eruption) எரிமலை வெடிப்பு அதனால் ஒரு (Minoan Civilization) நாகரீகம் அழிந்த கதை, அது நமது நாகரீகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம், சுனாமிப் பேரலைகளால் (Atlantis) அட்லாண்டிஸ் அழிந்த கதை, கிரேக்க அர்த்தடாக்ஸ் (Greek Orthodox Monastery) மொனாஸ் ட் ரீ, இயா (Oia) கிராமம், வரவு செலவுக் கணக்கு பற்றிச் சொல்லுகிறேன்

 

TAGS: சாண்டோரினி தீவு, எரிமலைப் பாறை, கருப்பு மணல், வெப்ப நீரூற்று

 

–Subham–

கடல் பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.4115)

ஆகஸ்ட் 2017 காலண்டர்

 

Compiled by London Swaminathan
Date: 26 July 2017
Time uploaded in London-6-32 am
Post No. 4115
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

விழா நாட்கள்:- – ஆடிப் பெருக்கு -August 3; வரலெட்சுமி விரதம்—August 4; ரக்ஷாபந்தன்—7; காயத்ரி ஜபம்—8; ஜன்மாஷ்டமி/ கிருஷ்ணன் பிறப்பு—14 & 15;  சுதந்திர தினம்-15; விநாயக சதுர்த்தி—25

 

முகூர்த்த நாள்:- August 31

ஏகாதசி:-  3, 18

பௌர்ணமி- August 7

அமாவாசை- August 21

 

ஆகஸ்ட் 1 செவ்வாய்க்கிழமை

கடலிலே ஏற்றம் போட்ட கதை

 

ஆகஸ்ட் 2 புதன் கிழமை

கடலிலே துரும்பு கிடந்தாலும்,  மன திலே ஒரு சொல் கிடவாது

ஆகஸ்ட் 3 வியாழக் கிழமை

கடலிலே பிறக்கும் உப்புக்கும் மலையிலே விளைகிற நார்த்தங்காய்க்கும் தொந்தம்

 

ஆகஸ்ட் 4 வெள்ளிக் கிழமை

கடலிலே போட்டு சாக்கடையிலே தேடுகிறதா?

 

ஆகஸ்ட் 5 சனிக்கிழமை

கடலிலிட்ட புளி போல

ஆகஸ்ட் 6 ஞாயிற்றுக் கிழமை

கடலில் கையைக் கழுவி விடுகிறதா?

 

ஆகஸ்ட் 7  திங்கட் கிழமை

கடலை அடைக்க கரை போடலாமா?

 

ஆகஸ்ட் 8 செவ்வாய்க்கிழமை

கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற்போல

ஆகஸ்ட் 9 புதன் கிழமை

கடல் தண்ணீர் வற்றினாலும் பள்ளச்சி தாலி வற்றாது

ஆகஸ்ட் 10 வியாழக் கிழமை

கடல் திடலாகும், திடல் கடலாகும்

ஆகஸ்ட் 11 வெள்ளிக் கிழமை

கடல் நீர் நிறைந்து என்ன? காஞ்சிரை பழுத்து என்ன?

ஆகஸ்ட் 12 சனிக்கிழமை

கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?

ஆகஸ்ட் 13 ஞாயிற்றுக் கிழமை

கடல் பெருகினால் கரையும் பெருகுமா?

ஆகஸ்ட் 14  திங்கட் கிழமை

கடல் மீனுக்கு நீச்சுப் பழக வேண்டுமா?

 

ஆகஸ்ட் 15 செவ்வாய்க்கிழமை

கடல் மீனுக்கு நுளையன் இட்டது சட்டம்

ஆகஸ்ட் 16 புதன் கிழமை

கடலில் கரைத்த பெருங்காயம் போல

ஆகஸ்ட் 17 வியாழக் கிழமை

கடலில் கையைக் கழுவி விடுகிறதா?

ஆகஸ்ட் 18 வெள்ளிக் கிழமை

கடலுக்கு கரை போடுவார் உண்டா?

ஆகஸ்ட் 19 சனிக்கிழமை

கடலை அடைக்க கரை போடலாமா?

ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக் கிழமை

கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை

 

ஆகஸ்ட் 21 திங்கட் கிழமை

கடல் வற்றில் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு

ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமை

கடலைத் தூர்த்தாவது காரியத்தை முடிக்க வேண்டும்

ஆகஸ்ட் 23 புதன் கிழமை

கலக்கினும் தண்கடல் சேறு ஆகாதே—வெற்றிவேற்கை

ஆகஸ்ட் 24 வியாழக் கிழமை

கடலாற்றாக் காம நோய், குறள் 1175

 

ஆகஸ்ட் 25 வெள்ளிக் கிழமை

பிறவிப் பெருங்கடல், குறள் 10

ஆகஸ்ட் 26 சனிக்கிழமை

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் – குறள் 17

 

ஆகஸ்ட் 27 ஞாயிற்றுக் கிழமை

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடாநிலத்து –குறள் 496

 

ஆகஸ்ட் 28 திங்கட் கிழமை

கடலன்ன காமம் – குறள் 1137

ஆகஸ்ட் 29 செவ்வாய்க்கிழமை

கப்பல் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல

ஆகஸ்ட் 30 புதன் கிழமை

கப்பல் அடிப்பாரத்துக்கு, கடற்கரை மண்ணுக்குத் தவுகெட்டாற்போல

 

ஆகஸ்ட் 31 வியாழக் கிழமை

நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்

வெந்தலைப் புணரிக் குட கடற் குளிக்கும் (புறம்.2)

 

–Subham–

 

கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)

கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)

 

Written by London Swaminathan


Date: 21 July 2017


Time uploaded in London- 13-45


Post No. 4101


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இந்த நாட்டை வெள்ளைக்காரன்தான் ஒற்றுமைப் படுத்தினான், அதற்கு முன்பாக இந்தியர்களுக்கு  பரந்த இந்த பாரத நிலப்பரப்பு ஒரே நாடு என்பதே தெரியாது என்று பல திராவிடங்களும் மார்கஸீயங்களும் பிதற்றுவதைக் கேட்டிருப்பீர்கள். அவர்கள் சாலை போடாவிடில், ரயில்வே லைன் போடாவிடில் நாடே ஒற்றுமை அடைந்திருக்காது என்று அதுகளும் இதுகளும் திண்ணையில் உட்கார்ந்து அங்கலாய்ப்பதையும் பார்த்திருப்பீர்கள் இதெல்லாம் உண்மையில்லை என்பதற்குச் சான்று சங்கத் தமிழ் நூல்கள் முதல் பாரதி பாடல் வரை உள்ளது.

ஒரு சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்-

கங்கை- காவிரி இணைப்பு பற்றி அடிக்கடி பேசுகிறோம். ‘கங்கையை விட புனிதமான காவிரி’ என்று ஒரு ஆழ்வார் பாடுகிறார். இன்னும் ஒரு இடத்தில் ‘கங்கை ஆடிலென், காவிரி ஆடிலென்’ என்று புண்ய தீர்த்தத்தில் குளிப்பது பற்றிப் பாடுகிறார்.

இதோ அப்பர் வாக்கு:-

கங்கை யாடிலென் காவிடி யாடிலென்

கொங்கு தண்குமரித்துறை யாடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்

எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே

–ஐந்தாம் திருமுறை

 

 

 

நமது தந்தையர்  காலத்தில் வாழ்ந்த பாரதியோ ‘கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என்கிறான்.

 

கம்ப வர்மனின் திருவாமூர்க் கல்வெட்டில் ‘கங்கையிடை குமரி இடை எழுநூற்றுக் காதமும்’ – என்ற வரி உள்ளது.


கம்பவர்மனின் திருவாமூர்க் கல்வெட்டு

 

ஸ்ரீ கம்ப பருமற்கு

யாண்டு இருபதாவது

பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்க

தித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று

படாரிக்கு நவகண்டங் குடுத்து

குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்

வைத்தானுக்கு

திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது

எமூர்ப் பறைகொட்டக்

கல்மேடு செய்தராவிக்குக் குடுப்பாரானார்

பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்

குடுத்தார்கள்

இது அன்றென்றார்

கங்கையிடைக் குமரி இடை எழுநூற்றுக் காதமும்

செய்தான் செய்த பாவத்துப் படுவார்

அன்றென்றார் அன்றாள் கோவுக்கு

காற்ப்பொன் றண்டப்படுவார்

 

கங்கை நதி உலகின் மிகப் பழமையான, உலகின் முதல் கவிதைத் தொகுப்பான ரிக் வேதத்திலும் உள்ளது. எதற்காக இப்படி கங்கையையும் காவிரியையும் இணைத்துப் பேசுகின்றனர்?

 

இந்த நாடு ஒன்றே!

இந்தப் பண்பாடு ஒன்றே!!

 

என்பதை எடுத்துரைக்கத்தான்  காரிகிழார் முதல் (புறநானூறு பாடல் 6) பாரதி வரை இமயம்-குமரி பற்றிப் பாடுகின்றனர்.

சேரன் செங்குட்டுவனும், கரிகால் சோழனும் இமயம் வரை சென்று சின்னங்களைப் பொறித்தது  ஏன்?

கண்ணகி சிலைக்காக, இமயத்தில் கல் எடுத்து, கங்கையில் அதைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்தது ஏன்?

 

காளிதாசனின் ரகு வம்ச காவியத்தில் ஈரான் முதல் பாண்டியநாடு வரை ரகுவின் திக்விஜயம் செல்கிறது. இந்துமதி சுயம்வரத்துக்கு வந்த அரசர்களும் பாண்டியநாடு முதல் ஆப்கனிஸ்தான் வரை பல நாடுகளிலிருந்து வந்துள்ளனர். ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் ஒரு நாடு, நாம் ஒரே பண்பாடு என்ற கொள்கை மனதில் ஆழ வேரூன்றிவிட்டது.

 

திருமூலர் இமயத்தையும் சிதம்பரத்தையும் இலங்கையையும் இணைத்துப் பாடியது ஏன்?

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூரும் இவ்வானில் இலங்கைக் குறியுறுஞ்

சாருந்திலை வனத் தன் மாமலயத்து

ஏறுஞ் சுழுனை இவை சிவபூமியே”. (திருமந்திரம் – 2747)

 

 

(திருமூலரும் தீர்க்கரேகையும் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இப்பாடல் பற்றி மேல்விவரம் காண்க)

கல்வெட்டிலும் கூட கங்கை காவிரி பற்றி இருக்கிறது! ஆக நமது நாட்டில் அப்பர் காலத்துக்கு முன்னரே, காளிதாசன் காலத்துக்கு முன்னரே, சங்க காலத்துக்கு முன்னரே இமயம் முதல் குமரி வரை ஒன்று என்ற கொள்கை இருந்திருக்கிறது.

 

வெள்ளைக்காரன் ரோடு போட்டதும், ரயில் பாதை போட்டதும் அவனுடைய படைகளையும் விற்பனைப் பொருட்களையும் கொண்டு வந்து நம்மை அடக்கி வைக்கவும், கோஹினூர் போன்ற பொக்கிஷங்களைக் கடத்தவும்தான் என்பதை அறிக.

 

தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுக்க அகத்தியனை இமய மலையிலிருந்து சிவபெருமான் அனுப்பியதும் வரலாற்று உண்மை. தொல்காப்பியம் முதல் பாரதி பாடல் வரை இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

நமது வரலாற்றுப் புத்தககங்களை மாற்றி எழுதி நம் பிள்ளைகளுக்கு சரியான வரலாற்றைக் கற்பிக்க வேண்டும்.

இது நமது தலையாய கடமை!

–SUBHAM–

TAGS:– கங்கை, காவிரி, குமரி, ஒற்றுமை, வெள்ளைக்காரன்