ஏழு லட்சம் புத்தகங்களை முஸ்லீம் வெறியன் எரித்தது ஏன்? (Post No.4686)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 17-03

 

Written  by LONDON SWAMINATHAN

 

Post No. 4686

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

எகிப்திலுள்ள அலெக்ஸாண்ட் ரியா நகரில் (Alexandrian Library) இருந்த நூலகத்தை மத வெறிபிடித்த காலிபா உமர் எரித்து அழித்தது எப்படித் தெரியுமா?

 

“இங்கேயுள்ள 700,000 புத்தகங்கள் எல்லாம் குரான் சொல்லுவதையே, சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம். அப்போது குரான் ஒன்றே போதுமே! இந்த நூல்கள் எதற்காக?”

 

இங்கேயுள் ள   புத்தகங்கள் எல்லாம் குரான் சொல்லுவதற்கு எதிரான கருத்துக்களைச் சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம்; அப்படியானால் உடனே தீக்கிரையாக்க வேண்டும்.

இரண்டு விதத்தில் நோக்கினாலும் தீ வைத்துக் கொளுத்துங்கள்!

 

இந்தியாவில் பீஹாரில் இருந்த நாளந்தா பல்கலைக் கழகத்துக்கும் அதன் நூலகத்துக்கும் முஸ்லீம்கள் தீ வைத்தபோதும் இதேதான் சொல்லியிருப்பார்கள்.

xxx

 

மதவெறியர்களுக்கு ஆப்ரஹாம் லிங்கன் பதிலடி

ஒரு முறை  ரெவரென்ட் திரு ஷ்ரிக்லி என்பவர் ராணுவத்தில் மருத்துவ மனைக்கான சமய குருவாக (Chaplain) நியமிக்கப்பட்டார். இது அமெரிக்க ஒய்.எம்.சி.ஏ. (Young Men’s Christian Association) நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. உடனே ஒரு கூட்டம் போட்டு, ஒரு கமிட்டியை அமைத்து, வாஷிங்டனுக்கு அனுப்பினர்.

 

ஆப்ரஹாம் லிங்கன் அறையில் நடந்த சம்பாஷனை:–

 

“ஐயா, நாங்கள் இந்த திருவாளர் ஷ்ரிக்லி நியமனம் விஷயமாகப் பார்க்க வந்திருக்கிறோம்.”

 

லிங்கன்: “ஓ, கவலையே படாதீர்கள். என்னுடைய தீவிர சிபாரிசுடன் நியமனத்தை செனட் சபைக்கு அனுப்பிவிட்டேன். வெகு விரைவில் அவர்கள் அதை உறுதிப்படுத்துவர்”.

“ஐயா, நாங்கள்……… நாங்கள்………. அந்த நியமனம் வேண்டாம், கூடாது என்று சொல்ல வந்திருக்கிறோம்”.

 

லிங்கன்:-

“அ ப்படியா சேதி! கதையே மாறுகிறதே. சரி, என்ன காரணத்தால் நீங்கள் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள்.

“ஐயா, அவர், நம்முடைய பைபிள் கூற்றுக்கு எதிரான பிராசாரத்தை முன்வைக்கிறார்.

லிங்கன்:-

அட, அப்படி என்ன சொன்னார்?

“ஐயா நம் சுதந்திரப் போருக்கு எதிர் தரப்பில் இருந்த எதிரிகளையும் பரம பிதா மன்னிப்பார் என்கிறார். அது எப்படி சரியாகும்? இறைவன் எல்லையற்ற தண்டனை தருவார் என்பதை அவர் ஏற்கவில்லை.

இவரை ஆஸ்பத்திரி சமய குருவாக நியமித்தால் நம் மதத்துக்கே ஆபத்து”.

மற்றவர்களும் ‘’ஆமாம், ஆமாம்’’ என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

 

ஆப்ரஹாம் லிங்கன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். என்ன சொன்னீர்கள்? எதிரிகளையும் இறைவன் மன்னிப்பார் என்று அவர் கருதுகிறார் என்று சொன்னீர்களா? அப்படியானால் இவர்தான் இந்தப் பதவிக்கு மிகவும் தகுதியானவர்”

 

ஆப்ரஹாம் லிங்கனின் பதில் அந்தக் குழுவுக்கு நெத்தியடி, சுத்தியடி கொடுத்தது போல இருந்தது.

xxx

 

கிறிஸ்தவர் என்ன செய்தார்கள்?

அமெரிக்க வரலாற்றுப் பாடம் முடிந்தது.

வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்:-

மாணவர்களே! இவ்வளவு நேரம் பாடம் கேட்டீர்களே! ப்யூரிடன் (Puritan) கிறிஸ்தவர்கள் அமெரிக்காவில் என்ன செய்தார்கள்?

ஒரு மாணவன் எழுந்தான்:-

“ஐயா, அவர்கள் தங்கள் வழியில் இறைவனைக் கும்பிட்டார்கள்; அதே வழியில் மற்றவர்களையும் கும்பிட வைத்தார்கள்.”

 

(கட்டாய மதமாற்றத்தை அந்தப் பையன் அழகாக சொல்லி முடித்தான். வாத்தியார் அதை ரசிக்கவில்லை!)

 

சுபம்–

வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு!!! (Post No.4683)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 7-17 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4683

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

ஷாக்கிங்! ஷாக்கிங்!!

 

வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு!!!

 

ச.நாகராஜன்

 

1

நிஜமாகவே ஏமாந்து போனேன். நண்பர் வைரமுத்துவிடம் வைரம், முத்து இன்ன பிற ரத்தினங்கள் இருக்குமோ என்று ஒரு நப்பாசை இருந்தது.

ஆனால் ஷாக்கிங், ஷாக்கிங்! இவரிடம் வைரமும் இல்லை; முத்தும் இல்லை; வெறும் ஓட்டாஞ்சல்லி தான் இருக்கிறது என்று தெரிந்து விட்டது!

ஆண்டாள் தமிழை ஆண்டாள்;

தமிழ் இதயங்களை ஆண்டாள்! உண்மைத் தமிழர்களின் இதயங்களைத் தான் சொல்கிறேன்.

போலிகளை அவள் வேண்டாள். (வேண்ட மாட்டாள்!)

 

 

2

மனிதர் ‘பெய்யெனப் பெய்யும் மழை என்று எப்படி குமுதத்திற்குத் தலைப்புக் கொடுத்தாரோ தெரியவில்லை.

ராங் டைடில்!

“உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்

தன்னம்பிக்கை தளரவிடாதே

இரட்டைப் பேச்சுப் பேசும் உலகம்

மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே!

 

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு

உலகின் வாயில் இரட்டை நாக்கு

எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்

உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது!

என்று 22-5-1997 குமுதம் இதழில் ‘பெய்யெனப் பெய்யும் மழை கவிதைத் தொடரில் எழுதிய போது மயங்கிப் போனேன்.

மனிதர் உண்மையத் தான் சொல்கிறாரோ என்று!

“இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்

இலக்கியம் இல்லை லேகியம் என்றது…

எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்

வடுக பட்டி வழியுது என்றது

 

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்

காதில்பூ வைக்கிறான் கவனம் என்றது

விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன்

குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது

 

உலகின் வாயைத் தைத்திடு; அல்லது

இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு

உலகின் வாயைத் தைப்பது கடினம்

உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்

 

   _ 22-5-1997 குமுதம் இதழில் வெளியான 68 வரிகள் கொண்ட உலகம் என்ற கவிதையில் சில வரிகள் மட்டும் மேலே தரப்பட்டுள்ளது.

 

அடடா, எவ்வளவு ‘இழிமொழி எல்லாம் அனாவசியமாக வாங்கி இருக்கிறார் என்று தோன்றியது.

 

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் உலகம் அவரை ஏன் உலகம் இப்படிப் பழிக்கிறது என்று எனக்குப் புரிகிறது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகார்; வையத்து

அலகையா வைக்கப்படும்

 

ஆம் இவரை உலகம் அலகையா – பேயாக வைத்து விட்டது இன்று!

சூடிக் கொடுத்த நாச்சியாரை உலகம் கொண்டாட, இவர் தன் வழி தனி வழி என்றார். உலகம் செய்ய வேண்டிய மரியாதையை இன்று செய்து விட்டது!

 

 

3

இவர் ஆண்டாளைப் பற்றிச் சொன்னதற்கு பக்தி லெவலில் சென்று மறுப்புரை கொடுக்கிறார்கள்.

அந்த அளவுக்கு இவர் தகுதியானவர் தானா! இல்லை என்று அல்லவா தோன்றுகிறது!!

இலக்கிய மட்டத்தில் கூட இவருக்கு இவ்வளவு மறுப்புரை தேவை இல்லை; வரலாற்று ரீதியாக கூட இவருக்கு இவ்வளவு ஆதார உரைகள் தேவை இல்லை.

தமிழ்ப் பைத்தியம் என்று நினைத்திருந்தேன்; ஆனால் தமிழைத் தவற விட்டு விட்டார் என்பது இப்போது எனக்குப் புரிகிறது!

 

 

இவர் சேர்ந்த இடமே சரியில்லை.

போலித் தமிழில் கொச்சை வார்த்தை பேசுபவர்களிடம் இச்சகம் கொண்டவர் இவர்; இச் ச(ஜ)கத்தை அவர்களிடம் கண்டவர் அவர்.

 

‘இவர் யார் என்றால் மனைவி; அவர் யார் என்றால் துணைவி;

‘இவள் யார் என்றால் துணைவிக்குப் பெண்; உனக்கு யார் என்றால் துணைவிக்குப் பிறந்த பெண்.

‘போதை முடிவுக்கு வந்து விட்டதா?

 

இப்போதைக்கு முடிவு தான்! (இப்போதைக்கு – அதாவது தற்காலிகமாக இப்போதைக்கு – மதுவுக்கு முடிவு தான்!)

இப்படி கொச்சையாகப் பேசி சொந்தக் கூட்டத்திடம் கை தட்டல் வாங்குபவர்களின் சேர்க்கை இவரை என்ன செய்யுமோ அதைச் செய்து விட்டது.

வேசி; தாசி! அடடா, என்ன தமிழ் அறிவு!

வேசிக்கும் தாசிக்கும் “இன்னிசைத் தமிழை எளிமை செய்தவர் தரும் விளக்கம் புல்லரிக்க வைக்கிறது.

 

 

4

 

இல்லாத ஒரு ஆய்வுக் கட்டுரையைக் கேடயமாக்கி தமிழையும் தமிழ்ப் பெண்ணையும் இழிவு படுத்திய இவருக்கு மறுப்புரையே தேவை இல்லை; இவரைப் பற்றிய மதிப்புரை தான் தேவை!

 

அதுவும் கிடைத்து விட்டது!

உலகளாவிய விதத்தில் இப்படி இழிவு பட்ட ஒரு கவிஞரை இனிமேல் தான் தமிழகம் காண வேண்டும்.

காணாது.

 

 எட்டிய மட்டும் காதைக் குடைந்து தோண்டி காதை அறுப்பதற்கு வில்லிப்புத்தூரார் இன்று இல்லை.

ஆகவே இவர் கவிஞர் என்று சொல்லிக் கொள்ளலாம். வில்லிப்புத்தூரிலும் சென்று பேசலாம் – வீ ரமாக, கோரமாக!

இவர் தமிழை இன்னும் எளிமைப் படுத்தினால்! ஒரேயடியாக தமிழ் …. !!!!

 

 

5

அது சரி, தினமணி வைத்தியநாதனுக்கு என்ன ஆயிற்று!

(திரு ஏ.என்.எஸ், எனது தந்தையார் இருந்த ஸ்தானத்தில் இப்படி ஒருவரா!)

 

ஐயகோ! கலியின் கொடுமையா? காலிகளின் சேர்க்கையா!

தினமணி என்ற ஒளி கொடுக்கும் சூரியனை இருள் கவ்வச் செய்து விட்டாரே! தினமணிக்கு கிரகண காலம்!!

 

6

ஒரே ஒரு வழி தான்! இவர்களை இனம் கண்டு கொண்டாயிற்று!

இவர்களை ஒதுக்குங்கள்; உள்ள வேலையைப் பாருங்கள்!

“அப்படி இருந்தால் அதுவும் தப்பு

இப்படி இருந்தால் இதுவும் தப்பு

கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்

தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்

என்று எழுதி இருக்கிறார் அல்லவா! (உலகம் கவிதை வரிகள்)

இப்போது புரிந்து விட்டது இதில் கூறியுள்ள ஜந்து யார் என்று!

“வைரமும் தப்பு; முத்தும் தப்பு – இவர்

தரமும் தப்பு; தமிழும் தப்பு

 

 

7

குரைப்பது கடிக்காது!

தெய்வீக ஆண்டாளும் சேமமுற இருப்பாள்; தெய்வத் தமிழும் தனது தெய்வத் தன்மையுடன் சிறந்து வாழும்.

 

 

8

ஒன்றும் தெரியாதார் உச்சத்தில் ஏறினார்

    அன்றும் இராவணன் உண்டு; இரண்யன் உண்டு

நன்று செய்யாதார் நலிந்தே செத்தார்

    நாயகன் தோன்றுவான் யுகம் தோறும்!

 

இப்போதைக்கு இவர் போதையில் ஆட்டம்

     போட்டாலும் பொட்டென வீ ழ்வார்

எப்போதைக்கும் வெல்வது அறம் தான்!

      ஆண்டாள் என்றுமே ஆள்வாள்!!

***

சைவத்தை விளக்குவது, சிம்பிளா, சிக்கலா?(Post No.4675)

Nataraja picture- posted by Karthik

Date: 29 JANUARY 2018

 

Time uploaded in London- 6-12 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4675

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 
(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

தென்னாடுடைய சிவன்!

 

சைவத்தை விளக்குவது, சிம்பிளா, சிக்கலா?!

 

ச.நாகராஜன்

 

1

சைவம் என்றால் என்ன?

அட, இது தானா கேள்வி! சிவனைக் கும்பிட்டு வழிபாடு செய்வது சைவம். சிவனைத் துதிப்போர் சைவர்கள்.

எளிய, சரியான விளக்கம் தான்! ‘சிம்பிளான’ விளக்கம்.

ஆனால் உண்மையில் சைவ சித்தாந்தத்தையும், சிவனின் பெருமையை உள்ளபடி அறியவும், சிவனை உரிய முறையில் வழிபடும் வழிபாட்டு முறைகளையும் அறிவது எளிதான ஒன்று அல்ல.

மனதைச் செலுத்தி அதில் தேர்ந்த பெரியோரை அணுகி அனைத்தையும் அறிய வேண்டும்.

சிக்கலான பல விஷயங்களை அறிவது சுலபமல்ல; ஏராளமான நூல்கள் இந்த விளக்கத்தைத் தர முனைந்துள்ளன. இவற்றிற்குள்ளும் இவற்றிற்கு அப்பாற்பட்டும் அமைவதே சிவனின் வழிபாடு!

தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லவா?

அவனைப் பற்றிய தமிழ் இலக்கிய நூல்கள் ஏராளம். அந்த நூல்களில் ஒரு சிறு நூலில் ஒரு சிறு துளியைப் பார்ப்போம்!

 

Dance before Nataraja, picture by Taitini Das

2

திருவேட்டீசுவரர் புராணம்

தொண்டை நாட்டில் திருவொற்றியூர், திருமயிலாப்பூர் ஆகிய திவ்ய தலங்கள் இரண்டிற்கும் இடையில் அமைந்துள்ளது திருவேட்டு நகர். இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார் திருவேட்டீடுவரர். அவரது புராணத்தை திருவேட்டீசுவரர் புராணம் என்று பண்டிதர் வெங்கடாசலம் பிள்ளை என்ற புலவர் பெருமான் இயற்றியுள்ளார்.

10 படலங்களில் 423 பாடல்களைக் கொண்டுள்ளது இது. கவிஞர் பிரான் சுமார் 112 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.

திருவல்லிக்கேணி பகுதியைச் சார்ந்த தலமான இதை வைப்புத் தலமாக அப்பர் பிரான் பாடி அருளியுள்ளார்.

தெண்ணீர் புனற்கெடில வீரட்டமுந் சீர்காழி வல்லந் திருவேட்டியும்

உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரண நல்லூர்

விண்ணார் விடையான் விளமா வெண்ணி மீயச்சூர் வீழி மிழிலை மிக்க

கண்ணார் நுதலாள் கரபுரமுங் கபாலியாரவர் தங்காப்புகளே

என்று இப்படி நாவுக்கரசர் காப்புத் திருத்தாண்டகத்தில் இந்தப் பதியைக் குறிப்பிட்டுள்ளார். ஆக தேவார வைப்புத் தலங்கள் 248இல் இதுவும் ஒன்றாக அமைகிறது.

 

Nataraja Idol- posted by Lalgudi Veda

3

திருவேட்டீசுவரர் புராணத்தில் திருநந்திதேவர் படலத்தில் சில பாடல்கள் சைவத்தில் நாம் அறிய வேண்டிய அருமையான விளக்கங்களைச் சுட்டிக் காட்டுகின்றன.

சைவ சமயத்தின் விபாகங்கள் பல என்பதை அறியும் போது  நாம் சைவம் பற்றி அறிந்தது ‘கை மண் அளவு’ என்பது புலப்படுகிறது. அறிய வேண்டியது உலகு அளவு!

ஊர்த்வ சைவம் என்பது சிவன் ஒருவன் உண்டெனவும் அவன் தத்வாதீனன் என்றும், சடை, விபூதி, ருத்திராட்ச தாரணத்துடன் சிவபூஜை செய்து பஞ்சாக்ஷரம் ஜெபித்து சிவவேடம் பொருளாகக் கொண்டு சிவத்தை தியானிப்பதே மூர்த்தி என்றும் சொல்லப்படும் சைவம்.

மற்ற சைவங்கள் :- அநாதி சைவம், ஆதி சைவம், மகா சைவம், பேத சைவம், அபேத சைவம், அந்தர சைவம், குண சைவம்,நிர்க்குண சைவம், அத்துவா சைவம், அவாந்தர சைவம், ஞான சைவம், அணு சைவம், கிரியா சைவம், நாலுபாத சைவம், வீர சைவம், சுத்த சைவம் என்பன.

இவற்றில் ஆதி சைவம், அனந்த சைவம், மகா சைவம், பேத சைவம், அபேத சைவம், அந்தர சைவம், எண்குணச் சைவம், நிற்குண சைவம் ஆகியவை பற்றி திருவேட்டீசுவரர் புராணம் ஆறு பாடல்களில் குறிப்பிடுகிறது.

 

ஆதி சைவம் என்றால் என்ன?

ஆதி சைவமாவது, சிவனிடத்து மோகமாய், மோக்ஷ சாதனங்களுக்கு வேண்டிய வேடங்களும், ஒழுக்கமும் பூண்டும் எல்லாம் சிவ போகமாய் அனுபவித்து விபூதி, ருத்திராக்ஷ சிவ வேடத்தின் மேல் நம்பிக்கையுடனிருந்து சிவனை அடைவதாகும்.

அனந்த சைவம் என்றால் என்ன?

அனந்த அல்லது அநாதி சைவமாவது, பதி, பசு, பாசம் மூன்றும் அநாதி நித்யம் எனவும், விபூதி, ருத்ராக்ஷ, சிவ வேடப் பொருளாகக் கொண்டு சிவத் தியானம் செய்து பாசம் நீங்கிச் சிவனை அடைவதே முக்தி என்பதாகும்.

மகா சைவம் என்றால் என்ன?

மகா சைவமாவது, விபூதி, ருத்ராக்ஷம், சடைமுடி தரித்துச் சிவ மூர்த்தியை சகுணமாகவும், நிர்க்குணமாகவும் தியானம் செய்து முக்தி  பெறுவதேயாகும்.

பேத சைவம் என்றால் என்ன?

பேத சைவமாவது, விபூதி, ருத்ராக்ஷ தாரணம் செய்து சிவனடியார் ஆசாரியார், சிவலிங்கம் ஆகிய் இவைகளை பூஜித்து முக்திஅடைதல் என்பதாகும்.

அபேத சைவம் என்றால் என்ன?

அபேத சைவமாவது,  விபூதி, ருத்ராக்ஷ தாரணம் செய்து பஞ்சாக்ஷர ஜெபம் செய்து சிவ பாவனை (சிவோஹம்) செய்து சிவம் ஆதல் என்பதாகும்.

அந்தர சைவம் என்றால் என்ன?

அந்தர சைவமாவது, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளாயிருத்தலால் சிவன் அந்தப்படியிருத்தலை ஆராய்ந்து நாடுதல் முக்தி எனக் கூறும் சைவமாகும்.

எண்குணச் சைவம் என்றால் என்ன?

இறைவன் எண்குணத்தான் எனக்கூறும் சைவம் இது.

நிற்குண சைவம் என்றால் என்ன?

விபூதி, ருத்ராக்ஷ தாரணம் செய்து பஞ்சாக்ஷரம் ஜெபித்து நிர்குணனான சிவமூர்த்தியை அருவமாகத் தியானித்தல் நிற்குண சைவம் ஆகும்.

 

4

இவ்வளவு சைவமா என்று மலைக்க வேண்டாம்.

இதற்கு மேலும் ஏராளமான தத்துவங்கள் உண்டு.

ஒரு நல்ல சிவ பக்தன் அறிய வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு.

சைவம் ‘சிம்பிள்’ தான்; ஆனால் நுட்பமாக உள்ள தத்துவங்களை அறிவதில் சிக்கல் ஏற்பட்டால் உரிய பெரியவரையோ அல்லது நூலையோ நாடினால் நல்ல விளக்கம் கிடைக்கும்.

திருவேட்டீசுவரர் புராணத்தில் 203,205,207 முதல் 211முடிய உள்ள பாடல்கள் மேலே கண்டவற்றைக் குறிப்பிடுகின்றன.

‘திருவேட்டீசுவரர் புராணம் – மூலமும் உரையும்’ என்ற நூல் 1976ஆம் ஆண்டு திருவேட்டீசுவரர் தேவஸ்தான திருப்பணிக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

நூலுக்கு சிறந்த உரையை இராவ்சாஹிப் நல். முருகேச முதலியார் அளித்துள்ளார்.

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

 

***

 

 

வள்ளுவனும் கண்ணனும் அப்பரும் சொன்ன எட்டாம் நம்பர்! (Post No.4672)

WRITTEN by London Swaminathan 

 

Date: 28 JANUARY 2018

 

Time uploaded in London – 7-17 am

 

Post No. 4672

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

எட்டு என்ற எண், ஆன்மீக உலகில் சிறப்படைந்து காணப்படுகிறது. வள்ளுவன் முதல் பல தத்துவ ஞானிகள் இதைப் பயன்படுத்துகின்றனர். ஏன்?

 

பிறந்த தேதி எட்டாம் எண் உடையவர்கள் மிகவும் கஷ்டப் படுவார்கள் அல்லது ஆன்மீகத்தில் சிறந்து நிற்பார்கள். ஏனெனில் இது தன்னம்பிக்கை (Self Confidence), நிலைத்த (Stability) தன்மையின் சின்னம். மேலும் சனைச்சரனுக்கு (சனிக் கிரஹம்) உரிய எண்.

கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் வள்ளுவன் செப்புவான்,

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை   (9)

 

பொருள் என்ன?

 

ஒருவனுக்கு ஐந்து புலன்கள் இருந்தாலும் அவை அதனதன் வேலையைச் செய்யாவிடில் பயன் இல்லை. அது போல தலை என்னும் உறுப்பு எவ்வளவு சிறந்து இருந்தும், எட்டு வகையான குணங்களை உடைய இறைவனின் திருப்பாதங்களில் பணிந்து வணங்கவில்லை என்றால் பயன் இல்லை.

 

இதில் வள்ளுவன், இறைவனுக்கு எட்டு குணங்கள் இருப்பதாக இயம்புவான். இது சைவ திருமுறைகளில் சிவ பெருமானுக்குச் சூட்டப்படும் அடைமொழி. அப்பர், சுந்தரர்  தேவாரத்திலும் காணலாம்.

 

 

இதற்குத் திருக்குறள் உரைகளில் காணப்படும் விளக்கம் பின்வருமாறு:

 

எட்டு குணங்கள் யாவை?

தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில்லாத இன்பம் உடைமை என்று சைவாகமத்துக் கூறப்பட்டது. ஸம்ஸ்க்ருதத்தில் இவைகளை சுதந்தரத்துவம், விசுத்த தேகம், நிராமயான்மா, சர்வக்ஞத்துவம், அநாதிபேதம், அநுபதசக்தி, அநந்தசக்தி, திருப்தி என்று கூறுவர்.

 

இன்னொரு விளக்கம் அஷ்டமா சித்திகள் என்றும் கூறும்; அவை அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் எட்டுவகைச் சித்திகள். இதை கி.வா.ஜகந்நாதன் எழுதிய திருக்குறள் ஆய்வுரையில் காணலாம்.

 

பரிதியார் உரையில் கூறுவதாவது: எட்டு குணங்கள் உடைய சிவனின்

சிவந்த தாளை வணங்காத் தலை, சித்திரத்தில் எழுதிய மரப்பாவைக்கு நிகராம். எட்டுக் குணமாவன: அநந்த ஞானம்,  அநந்த வீரியம், அநந்த குணம், அநந்த தரிசனம், நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, அவா இன்மை, அழியா இயல்பு என்பன. சிலப்பதிகாரத்தில் (நாடு காண் காதை) சமண நாமாவளியில் எண்குணங்கள் யாவை என்று அரும்பதவுரை ஆசிரியர் கூறியது இது.

 

 

சிலப்பதிகாரத்தில், பண்ணவன் எண்குணன் (நாடு காண் காதை)

என்று இளங்கோ அடிகளும் பகர்வதை சமணர் சொல்லும் எட்டு குணங்கள் என்பர் சிலர்.

 

அப்பர் தேவாரத்தில் பல இடங்களில் சிவ பெருமானை எட்டு குணம் உடையவர் என்பார்:

எட்டு கொலாமவர் ஈறில் பெருங்குணம்

குணங்கள்தோள் எட்டு மூர்த்தி

கலை ஞானிகள் காதல் எண் குணவன்காண்

எட்டு வான்குணத் தீசனெம்மான்

 

(அப்பர் விடந்தீர்த்த.8, வன்னியூர் 7, தென்குரங்கு 4, இடைமருது 4) பாடல்களில் இவற்றைக் காணலாம்.

 

திருவள்ளுவருக்கு உருவ வழிபாடு உடம்பாடு என்பது இதனால் புலப்படும் என்றும் உரைகாரர்கள் புகல்வர்.

புத்தர் பெருமான்:–

 

புத்தர் பெருமான், இறை வழிபாடு பற்றி யாதும் செப்பாமல் எட்டு வகைக் குணங்கள் இருந்தால் போதும் என்று செப்பிச் சென்றார்.

 

அவையாவன:

நல்ல எண்ணம், நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல செயல்,

நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சிநல்ல சிந்தனைநல்ல நோக்கம்

 

 

சீன தத்துவ ஞானி கன்பூசியஸ், ஜப்பானிய சாமுராய் வீரகள் ஆகியோரும் எட்டு குணங்கள் பற்றி விதந்தோதுகின்றனர்.

 

சீன தத்துவ ஞானி கன்பூசியஸ்:–

 

அன்புடைமை, அறம், மரியாதை, ஞானம், உறவினரிடத்தில் நம்பிக்கையைக் காப்பாற்றுதல், விசுவாசம், பெற்றோரிடத்தில் அன்பு பாராட்டல், பெரியோர்களை மதித்தல்

 

ஏற்த் தாழ இதே கொள்கைகளை சில மாறுதல்ளுடன் ஜப்பானிய சாமுராய் வீரர்களும் ஏற்றனர்.

 

கண்ணன் செப்பிய எட்டு:–

இவர்கள் எல்லோருக்கும் முன்னதாக கிருஷ்ண பரமாத்மா, பகவத் கீதையில் பகன்ற எட்டு குணம் பின்வருமாறு:–

பூமிராபோ அனலோ வாயுஹு கம் மனோ புத்திரேவ ச

அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதிரஷ்டதா

 

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டு விதமாக என் பிரக்ருதி பிரிவு பட்டிருக்கிறது (கீதை 7-4)

 

இது பற்றி ராமகிருஷ்ண மடம் அண்ணா எழுதிய பகவத் கீதை பேருரையில் விளக்குவார்:

அஹங்காரமே பின்னர் புத்தியாகவும் மனதாவும் பரிணமிகும். அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக ஆகாயம், வாயு, தேயு (அக்னி), அப்பு (ஜலம்), ப்ருத்வீ (மண்) இவற்றின் சிருஷ்டி (தைத்ரீய உபநிஷத் 2-1) எல்லாப் பிரவ்ருத்திக்கும் அஹங்காரமே மூல காரணம். இங்கு குறிப்பிட்ட மண் முதலிய பஞ்ச பூதங்கள் ஸூக்ஷ்மத் தன்மாத்திரைகளைக் குறிப்பன., ஸ்தூலமான பொருள்களையன்று.

மேலும் அண்ணா சங்கரரின் ஒரு மேற்கோளையும் எடுத்தாளுகிறார்:-

அந்தக் கரணம் என்பது என்ன?

மனது புத்தி சித்தம் அஹங்காரம் – இந்நான்கினையும் அந்தக் கரணம் என்பர். மனதின் ஸ்தானம் கழுத்து, அதன் வேலை சந்தேகித்தல்; புத்தியின் ஸ்தானம் முகம், வேலை- நிச்சயம்; அஹங்காரத்தின் ஸ்தானம் இருதயம், வேலை- அபிமானம்; சித்தம் புத்தியுடனும், அஹங்காரத்துடனும்,மனத்துடனும் சேரும் (சங்கர- ஆத்மனாத்ம விவேகம்)

 

ஆக, எட்டு என்ற எண் மஹாபாரத காலத்தில் இருந்து, அப்பர் காலம் வரை ஆன்மீகத்தில் பயன்பட்டு வந்து இருக்கிறது.

 

எண்குணத்தான் அருள் பெறுவோமாக!

TAGS:– எட்டு எண், ஆன்மீகத்தில், புத்தர், கன்பூசியஸ், சமணர், சாமுராய், கீதை, குறள்

–subham–

மாணிக்கவாசகரின் 28 பொன்மொழிகள் (Post No.4660)

COMPILED by London Swaminathan 

 

Date: 25 JANUARY 2018

 

Time uploaded in London – 8-10 AM

 

Post No. 4660

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவ்ர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

பிப்ரவரி 2018 ‘நற் சிந்தனை’ காலண்டர்

(ஹேவிளம்பி- தை- மாசி மாதம்)

இந்த மாத காலண்டரில் மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்திலிருந்து 28 பொன்மொழிகளைத் தந்துள்ளேன். படித்து இன்புறுக.

 

முக்கிய விழா – பிப்ரவரி 13- மஹா சிவராத்திரி

அமாவாசை- 15  (சூரிய கிரஹணம்; இந்தியாவில் தெரியாது)

ஏகாதஸி விரதம்-11, 26

 

பிப்ரவரி மாத முகூர்த்த தினங்கள்—4, 5, 7, 11, 18, 19, 26

 

பிப்ரவரி 1 வியாழக்கிழமை

 

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க

 

பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை

 

சிவனவனென்  சிந்தையுள் நின்ற அதனால்

அவனருளாலே அவன்றாள் வணங்கி

பிப்ரவரி 3 சனிக்கிழமை

 

புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகி

பல்விருகமாகி பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய் கண ங்களாய்

வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றவித் தாவரச் சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

பிப்ரவரி 4 ஞாயிற்றுக்கிழமை

 

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய்

பிப்ரவரி 5 திங்கட்கிழமை

 

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

பிப்ரவரி 6 செவ்வாய்க்கிழமை

சொல்லற்கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

 

 

பிப்ரவரி 7  புதன்கிழமை

தாயிற் சிறந்த தயாவாவன தத்துவனே

–சிவ புராணம் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

பிப்ரவரி 8 வியாழக்கிழமை

மன்னு மாமலை மகேந்திர மதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்

 

பிப்ரவரி 9 வெள்ளிக்கிழமை

மதுரைப் பெருநன் மாநகரிருந்து

குதிரைச் சேவகானாகிய கொள்கையும்

 

பிப்ரவரி 10 சனிக்கிழமை

தண்ணீர்பந்தர் சயம்பெறவைத்து

நன்னீர்ச் சேவகானாகிய நன்மையும்

–கீர்த்தித் திரு அகவல் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

 

 

பிப்ரவரி 12 திங்கட்கிழமை

 

இன்னிசை வீணையில் இணைந்தோன் காண்க

 

பிப்ரவரி 13 செவ்வாய்க்கிழமை

பத்தி வலையிற் படுவோன் காண்க

 

 

பிப்ரவரி 14  புதன்கிழமை

 

ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து

வாணுதற் பெண்ணென வொளித்துஞ் சேண்வயின்

–திருவண்டப்பகுதி (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

 

பிப்ரவரி 15 வியாழக்கிழமை

 

ஆத்த மானார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர்

 

பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை

உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்

கலாபேதத்த கடுவிடம் எய்தி

 

பிப்ரவரி 17 சனிக்கிழமை

 

ஆடக மதுரை அரசே போற்றி

கூடலிலங்கு குருமணி போற்றி

தென்றில்லை மன்றினுளாடி போற்றி

 

பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை

 

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

 

பிப்ரவரி 19 திங்கட்கிழமை

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

 

 

பிப்ரவரி 20 செவ்வாய்க்கிழமை

புலிமுலை புல்வாய்க்கருளினை போற்றி

 

பிப்ரவரி 21  புதன்கிழமை

மூவா நான்மறை முதல்வா போற்றி

பேராயிரமுடைப் பெம்மான் போற்றி

–போற்றித் திரு அகவல் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

 

பிப்ரவரி 22 வியாழக்கிழமை

நாடகத்தாலுன்னடியார்

போனடித்து நானடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

மிகப் பெரிதும் விரைகின்றேன்

 

பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை

வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி

ஊனாகி யுயிராகி உண்மையுமாயின்மையுமாய்க்

கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே

 

பிப்ரவரி 24 சனிக்கிழமை

யானே பொய்யென் நெஞ்சும்

பொய்யென் அன்பும் பொய்

யானால் வினையே னழுதா

லுன்னைப் பெறலாமே

 

பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை

யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்

 

பிப்ரவரி 26 திங்கட்கிழமை

பட்டிமண்டபமேற்றினை யேற்றினை

எட்டினோடிரண்டும் மறியேனையே

 

பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை

சடையுளே கங்கை வைத்த

சங்கரா போற்றி போற்றி

 

பிப்ரவரி 28  புதன்கிழமை

பிழைத்தவை பொறுக்கையெல்லாம்

பெரியவர் கடமை போற்றி

–திருச்சதகம் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

–subham–

 

 

 

 

மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்! (Post No.4659)

Date: 24 JANUARY 2018

 

Time uploaded in London- 6-06 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4659

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

மஹாபாரதம்

 

மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்!

 

ச.நாகராஜன்

1

உலகின் ஆகப் பெரும் இலக்கியமான மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள் மட்டும் சுமார் எட்டாயிரம் உள்ளன. ஒரு லட்சம் ஸ்லோகங்களில் 8000 என்றால் 8 % என்று ஆகிறது.

வியாஸர் மஹா கண்பதியை அணுகி தனக்கு இந்த இதிஹாஸத்தை எழுத உதவி புரிந்து அனுக்ரஹிக்குமாறு வேண்ட, அவரோ ‘எழுதுகிறேன், ஆனால் தங்கு தடையின்றி நிற்காமல் சொல்ல வேண்டும்’ என்று நிபந்தனை போடச் சற்றுத் திகைத்துப் போனார் வியாஸர். பதில் நிபந்தனையாக, ‘புரிந்து கொண்டு எழுத வேண்டும்’ என்று சொல்ல அதற்கு ஒத்துக் கொண்டார் விநாயகர். ஆகவே தான் எழுந்தன இந்த அற்புதமான புதிர் ஸ்லோகங்கள். ஆங்காங்கே முடிச்சுகளைப் போட, அதைப் புரிந்து கொள்ள விநாயகருக்குச் சற்று நேரம் ஆனது. அதற்குள் அடுத்த பல நூறு ஸ்லோகங்களை மனதிற்குள் கவனம் செய்து கொண்டார் வியாஸர்.

இந்த ஸ்லோகங்களுக்கு ‘ கூட ஸ்லோகங்கள்’ என்று பெயர்.

இவை அனைத்தையும் தொகுத்திருக்கும் புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆங்காங்கு பல காலமாக பல்வேறு விற்பன்னர்கள் நடத்திய உபந்யாசங்களில் இவை இடம் பெறும். கேட்போர்களின் மனதைக் கவரும். அவர்களையும் யோசிக்க வைக்கும்.

2

மஹாபாரத ஆராய்ச்சியில் ஈடுபட்ட அறிஞர் சி.வி. வைத்யா 1905ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட புத்தகம் ‘தி மஹாபாரதா – எ கிரிடிஸிஸம்’ (‘The Mahabharata: A Criticism” – C.V.Vaidya). இதில் அவர் மஹாபாரதத்தின் முதல் பர்வங்களில் நிறைய புதிர் ஸ்லோகங்களும், பின்னால் உள்ள பர்வங்களில் குறைந்த அளவு புதிர் ஸ்லோகங்களும் உள்ளன என்று கூறுகிறார்.

ஆதி பர்வத்தில் 3; சபா பர்வத்தில் 2; வன பர்வத்தில் 3; விராட பர்வத்தில் 4; உத்யோக பர்வத்தில் 3; பீஷ்ம பர்வத்தில் 1; துரோண பர்வத்தில் 5; கர்ண பர்வத்தில் 3; சாந்தி பர்வத்தில் 2;அஸ்வமேத பர்வத்தில் 1; ஆக மொத்தம் 27  புதிர் ஸ்லோகங்களை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார். ஆனால் எட்டாயிரம் ஸ்லோகங்களையும் புரிந்து கொண்டு தொகுப்பார் இல்லையோ என்னவோ!

1915ஆம் ஆண்டு  மஹாபாரதத்தைச் சிறந்த முறையில் தமிழில் மொழிபெயர்த்து அளிக்கும் மகத்தான பணியில் இறங்கிய கும்பகோணம் காலேஜ் ரிடையர்ட் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் பாஷாபாரத துரந்தர, மஹாமஹோபாத்யாய, ஸ்ரீ ம.வீ. இராமானுஜாசாரியார் பல ஸ்லோகங்களுக்கு மஹாபாரத விற்பன்னர்களாலும் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாமல் போனதென்றும் அதற்கான சரியான அர்த்தத்தைக் கண்டுபிடித்து வெளியிட முயன்றதால் சில பர்வங்களை வெளியிடுவதில் கால தாமதம் ஆனதாகவும் தெரிவிக்கிறார்.

ஆக புதிர் ஸ்லோகங்கள் அனைத்தையும் ஒரு சேரப் படிக்க முடியாமலேயே உள்ளது.

 

3

விநாயகருக்கே சவாலாக அமைந்த தனது ஸ்லோகங்களைப் பற்றி வியாஸர் கூறும் போது, “அதன் கருத்தை நான் அறிவேன்; சுகன் அறிவான்; ஸஞ்சயன் அறிவானோ! மாட்டானோ!” என்று குறிப்பிடுகிறார்.

எடுத்துக் காட்டாக ஒரு புதிர் ஸ்லோகத்தை இங்கே காண்போம்:

நதீஸ லங்கேஅ ஸவநாரி கேது: நகாஹ்வ யோநாம நகாரி |

ஸுநு: ஏஷோங்க நாவேஷதா: கிரீடி:|

ஜித்வாவய; நேஷ்ய திசாத்ய காவ: ||

இதில் உள்ள முடிச்சை அவிழ்ப்பது கஷ்டமான ஒன்று.

சரியான இடத்தில் பதத்தைப் பிரித்து அர்த்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்!

அர்ஜுனன பேடியாக மாறி உத்தரனை தேரோட்டும் சாரதியாகக் கொள்ளும் விராட பர்வத்தில் கோக்ரஹண காலத்தில் வரும் ஸ்லோகம் இது.

துரோணர், பீஷ்மர், துரியோதனன் ஒரு சேர இருக்கின்றனர்.

பக்கத்தில் உள்ள துரியோதனன் அறியாத வண்ணம் பீஷ்மருக்கு, துரோணர், “ அவன், பசுக்களை மீட்க வந்த அர்ஜுனன்” என்பதைப் பூடகமாகத் தெரிவிக்கும் ஸ்லோகம் இது.

விநாயகர் கூடச் சற்று திகைத்து விட்டு அர்த்தம் கண்டுபிடிக்கும் படியாக அமைந்த ஸ்லோகமும் இது தான்;

பொதுவாக கவனித்தால் அர்த்தமே விளங்காது!

“ நதீ ஜலம் கேசவ நாரி கேது நநாஹ்வயோ நாம நகாரி ஸுநு:”

ஆற்றின் ஜலம், கேசவன், பெண், கொடி, கொடி மரத்தின் பெயர், மலையின், சத்ரு, பிள்ளை – என்ன இது? ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத சொற்கள்!

இதில் என்ன அர்த்தம் இருக்க  முடியும்?

ஆனால் பதம் பிரிக்கும் போது நதீ ஜலம் என்று பிரிக்காமல் நதீஜ என்று கொண்டால் நதீஜ – நதியின் புத்திரனான பீஷ்மன்- அதாவது கங்கைக்குப் பிறந்த பீஷ்மன் என்று அர்த்தம் வரும்.

லங்கேசவந – இலங்கையில் உள்ள அசோக வனம்.

அரி சத்ரு  – அந்த அசோகவனத்திற்கு எதிரி ஆஞ்சநேயர்.

கேது – அவரைக் கொடியாக உடையவன்

நகாஹ் வய – அர்ஜுன என்ற மரத்தின் பெயரைப் பெற்றவன்

நகாரி ஸுநு: – மலைச் சத்ருவான இந்திரனின் குமாரனான அர்ஜுனன்

என்று இப்படிப் பிரித்து ஸ்லோகத்தின் சரியான பொருளை உணர வேண்டும்!

பெண் வேஷத்துடன் கிரீடம் தரித்த அர்ஜுனன் நம்மை ஜயித்து பசுக்களை ஓட்டிச் செல்வான் என்பது இதன் பொருள்.

4

 

சபா பர்வத்தில் வரும் ஒரு சொற்றொடர் இது: “மனஸாதாளம் பேரிம்”

மனஸா என்றால் 12;

தாளம் என்றால் ஒரு சிறிய இடைவெளி.

ஆக இதன் உண்மையான அர்த்தம் 12 வெளியை விட்டமாகக் கொண்ட ஒரு பேரிகை!( A Drum with 12 spans as diameter)

5

மஹா பாரதத்தை நூற்றுக் கணக்கான கோணங்களில் அலசி ஆராய்ந்து படித்து வியக்கலாம். அதில் ஒன்று தான் கூட ஸ்லோகம் – புதிர் கவிதைகள் – கண்டு படிப்பது! புத்திக்குச் சவாலாக அமையும் இந்த புதிர் ஸ்லோகங்கள் மஹாபாரத்தைப் படிக்க ஆவலைத் தூண்டுபவை மட்டும் அல்ல; விநாயகரையே மலைக்க வைத்த வியாஸரின் புத்தி கூர்மையைக் காட்டும் ஸ்லோகங்களும் ஆகும்!

இப்படி ஒரு புதிர் செய்யுள்களைக் கொண்டுள்ள இன்னொரு இலக்கியம் உலக மொழிகளில் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத் தகுந்தது!

படிப்போம்; வியப்போம்; புதிரை அவிழ்த்து மகிழ்வோம்.

***

 

தேர் ஓடத் தன் தலைமகன் பலி (Post No.4647)

Date: 22 JANUARY 2018

 

Time uploaded in London- 8-04 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4647

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இன்பம்

தேர் ஓடத் தன் தலைமகனைப் பலி கொடுத்த வேணாடன்!

 

ச.நாகராஜன்

கொங்கு மண்டலத்தின் பெருமையை நூறு பாடல்களில்  கூறும் கொங்கு மண்டலச் சதகம் தேர் ஓடுவதற்காகத் தன் தலை மகனைப் பறி கொடுத்த வேணாடனைப் பற்றிப் புகழ்ந்து கூறுகிறது.

சரித்திரம் இது தான்:-

தென்கரை நாடு தாராபுரத்தை அடுத்த கொற்றனூரில்           வீ ற்றிருக்கிறார் இறைவன் அப்பிரமேயர். அவர் எழுந்தருளியுள்ள தேர் ஒரு சமயம் நிலை விட்டுப் பெயரவில்லை.

அந்தக் காலத்தில் தேர் ஓட்டத் திருவிழா நடை பெறும் போது தேர் நிலைக்கு வந்து சேர்ந்த பின்னர் தான் பெரியோர் உண்ணுவது வழக்கம்.

இங்கோ தேரே நகரவில்லை. ஆகவே ஊர் மக்கள் அனைவரும் வருந்தினர். என்ன செய்வது என்று தெரியாத நிலை!

பல ஆட்களைக் கூட வைத்து தேரை இழுத்துப் பார்த்தனர்.

ஒவ்வொரு முறையும் தேர் வடம் அறுந்ததே தவிர தேர் நகர்ந்தபாடில்லை.

அப்போது அங்கு வந்திருந்த சிறுமி ஒருத்தி ஆவேசமுற்றுப் பேசலானாள்.

“மயங்க வேண்டா. இது ஒரு பூதத்தின் செய்கை. ஒரு மகனாக இருக்கும் தலைப் பிள்ளையை வெட்டிப் பலி கொடுத்தால் தேர் நிலை பெயரும். கவலை தீரும்” என்று கூறினாள் அவள்.

அந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த பெரிய குலத்தானான வேணாடன் இதனைக் கேட்டான்.

“ஏராளமானோர் நலனுக்காக ஒரு பிள்ளையை பலி இடுதல் ஒரு பெரிய காரியமா, என்ன” என்று கூறித் தன் தலைமகனான ஒரே பிள்ளையைத் தேர்க்காலில் பலி கொடுத்தான்.

உடனே தேர் நகர்ந்தது. பின்னர் நிலை வந்து சேர்ந்தது.

அனைவரும் அமுதுண்டனர்.

இதனைக் கேள்விப் பட்ட விஜயநகர மன்னன் (விஜயநகர ராயர்) இந்த அரிய செயலை மெச்சி அவருக்குப் பல மேன்மகளை அளித்தான்.

இப்படி ஒரு அரிய வீ ரன் வாழ்ந்த மண்டலம் கொங்கு மண்டலம் என்று புகழ்கிறா கொங்கு மண்டல சதகத்தை இயற்றிய விஜயமங்கலம் கார்மேகக் கவிஞர்.

பாடலைப் பார்ப்போம்:

கொற்றையிற் வீற்றரு ளப்பர மேயர் கொடிஞ்சி செலப்

பெற்ற தன் பிள்ளையை வெட்டிவிட் டானற் பெருமையுற

உற்றன ராயர் பொற் சிம்மா தனத்தி லுவந்து வைத்த

மற்றெறி நீள்புய வேணாடன் வாழ்கொங்கு மண்டலமே

(பாடல் எண் : 94)

இந்த மாவீரனைப் பாராட்டி உள்ள இன்னொரு வெண்பா இது:

 

நாத னிரதம் நடவாது செய்கொடிய

பூத மகலப் புதல்வனைவி – நோதமுற

வெட்டிப் புகழ்படைத்தான் வேணுடையான் கோற்றையான்

எட்டுத் திசைமகிழ வே

 

இப்படிப்பட்ட தியாகங்களை நினைக்கவே பிரமிப்பாயிருக்கிறது!

கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை (Post No.4643)

Date: 21 JANUARY 2018

 

Time uploaded in London- 6–37 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4643

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இன்பம்

கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை

.நாகராஜன்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

1

கவியரசு கண்ணதாசன் சம்ஸ்கிருதத்தில் கவிதை எழுதி இருக்கிறாரா? முதலில் அவருக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா?

கேள்விகள் நியாயமானவை தான்.

ஆரம்ப காலத்தில் சேரக் கூடாதாரோடு சேர்ந்திருந்த காலத்தில் அவர் எழுதிய் கவிதை இது:

 

“செத்த மொழி பெற்ற மகன், தமிழைப் பார்த்துத்

திணறுகிறான்! மயங்குகிறான்! வேற்று நாட்டுப்

பொத்தல்களைத் தமிழாக்கி விற்ப தற்குப்

புறப்பட்டோன், ஆதலினால் புலம்பு கின்றான்!

அத்தியிலே பூத்தம்லர் அனைய நாட்டில்

அழகுமொழி படைத்த மறைமலையைக் கண்டால்

சித்திரமும் தமிழ் பேசும்; திறமில் லாத

சிறுநரிதான் ஊளையிடும்; இட்டான் ஊளை!

வேரெடுத்த செம்மைமொழி தமிழல் லாமல்

வேறெது தான் தமிழாகும்! அத்திம் பேரும்

பூரிகளும் ஸ்வாமிகளும் ஆச்சார் யாளும்

பூரணமும் ஸ்வாகதமும் தமிழா?”

  • தமிழ் போலும் – மொழி இல்லை என்ற கவிதையில்

ஆனால் பக்குவப்பட்ட நிலையில், அவர் கூறியது:

“முட்டாள்தனமாக ‘வடமொழி செத்த மொழி’ என்று எவனெவனோ சொன்னதைக் கேட்டு நான் தான் காலத்தை வீணாக்கி விட்டேன். இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும். ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வ்டமொழி காப்பாற்றும். வடமொழியின் மூலம் சிறந்த எழுத்தாளனாகலாம்; பேச்சாளனாகலாம்; மொழிபெயர்ப்பாளனாகலாம்.”

 

 

2

“தமிழின் பெயரால் கூப்பாடு போடுவது அரசியல்; தமிழ் நம் உயிர்; அது போல் வடமொழி நமது ஆத்மா”

இதை விடச் சிறப்பாக இந்த இரு மொழிகளையும் பற்றி வேறு யார் தான் கூற முடியும்? என்னதான் கூற முடியும்!

இதைச் சொல்லி விட்டுச் சும்மா இருக்கவில்லை.

அவர் கூறுகிறார்:

“வடமொழி ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். இரண்டு ஆண்டுகளாக நான் வடமொழியில் பயிற்சி பெற்று வருகிறேன்.”

இந்தப் பயிற்சிக்கு அவரது உற்ற நண்பர் ஒருவர் – ஆல் இந்தியா ரேடியோ அதிகாரி ஒருவர் – துணை புரிந்தார்.

இந்த வட மொழிப் பயிற்சி தமிழுக்குப் பெரிய நலனை அளித்தது.

 

3

ஆம், என்ன நலன்? சில பல நல்ல நூல்கள் வடமொழியிலிருந்து அவர்  மூலமாக தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழுக்குக் கிடைத்தது.

அவரது வார்த்தைகளில் அதைப் பார்ப்போம்;

“வடமொழியைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக இப்போது பகவத்கீதை விளக்கவுரையைக் கவிதையிலும் உரைநடையிலும் எழுதியுள்ளேன்.

 

 

பஜகோவிந்தத்தில் வரும் முப்பத்தோரு பாடல்களையும் விவேக சிந்தாமனியைப் போல சந்தக் கவிகளாக்கியுள்ளேன்.”

மிக அருமையான மொழி பெயர்ப்புக் கவிதைகளாக இவை அமைந்துள்ளதைப் படித்துப் பார்த்து உணரலாம்.

இது மட்டுமல்ல, கீத கோவிந்தத்தில் மனதைப் பறி கொடுத்த அவர் அதை, “கோபியர் கொஞ்சும் ரமணன்” என்று தமிழில் தந்தார்.

 

 

ஜெயதேவரின் அஷ்டபதி பற்றி அவர் தனது கவிதையில் கூறும் போது சொல்வது இது:

கண்ணனின் லீலையை அஷ்டபதி – என்னும்

காவிய மாக்கிய ஜெயதேவன்

எண்ணி உரைத்ததை நானுரைத்தேன் – அதில்

இன்னும் பலப்பல போதையுண்டு!

 

கோலமிகும் இந்தப் பாடலினை – கீத

கோவிந்தம் என்றும் உரைப்பார்கள்

ஞால மொழிகளில் வந்ததிது – கண்ணன்

ரஸ லீலாவினைச் சொல்வதிது!

 

மொத்தம் இருபத்துநான்கு வண்ணம் – அது

மோகச்சுவை ரஸம் ஊறும் கிண்ணம்

அத்தனையில் இங்கு ஒன்பதையே – நான்

அள்ளிக் கொடுத்தனன் என் மொழியில்

 

போஜன் மகன் ஜெய தேவனவன் – இங்கு

போதனை செய்தது ஞான ரஸம்!

ராஜன் பராசரர் வம்சமவன் – அந்த

ஞானியின் பாடலைப் பாடுகவே”

24 அஷ்டபதியில் ஒன்பதைத் தமிழாக்கினார் கவிஞர்.

 

 

4

வடமொழியின் சுவையையும் அருமையையும் உணர்ந்த கவிஞர் அதில் தோய்ந்தே போனார்.

அதன் விளைவு தான் அவர் எழுதிய சம்ஸ்கிருதக் கவிதை.

“இதோ எனக்குத் தெரிந்த வடமொழியில் நான் எழுதிய ஒரு பாடல்:” என்று கூறி விட்டு அவர் தரும் அற்புத சம்ஸ்கிருதக் கவிதை இது தான்:-

 

அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்

முரளி மோகனம் சுவாமி அசுர மர்த்தனம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

 

நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம்

நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்

பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

 

ஸத்திய பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம்

சர்வ ரக்ஷகம் சுவாமி தர்ம தத்துவம்

ராத பந்தனம் சுவாமி ராஸ லீலகம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

எப்படி இருக்கிறது சம்ஸ்கிருதக் கவிஞர் கண்ணதாசனின் சம்ஸ்கிருத கவிதை!

 

 

5

என்ன ஒரு வருத்தம் நமக்கெல்லாம்..? நமது கவியரசு இன்னும் ஒரு நாற்பது ஆண்டுகளாவது கூட வாழ்ந்திருக்கலாம்.

“ஆண்டவன் எனக்கு இன்னும் பத்தாண்டுகள் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பானேயானால், ஆங்கிலத்தில் ஒரு சிறு காவியமும், வடமொழியில் ஒரு சிறு காவியமும் எழுதுவேன்.” என்றார் அவர்.

ஆனால் கொடுத்து வைக்கவில்லை – தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும்.

என்றாலும் கூட இறைவன் அருளால் அவர் தமிழில் எழுதியுள்ள ஆன்மீக இந்துக் களஞ்சியம் நிச்சயம் ஒரு அற்புத ஞான  ஓவியமே.

அதைப் படித்து அவரது மேன்மையைத் தெரிந்து கொள்ளலாம்; அப்போது இந்து மதச் சிறப்பும் தானாகவே தெரிய வரும்.

 

 

 

ஆதாரம் :

  1. முதல் பக்கம் – கல்கியில் வந்த கட்டுரை – தலைப்பு “மொழி வெறுப்பு – விழி இழப்பு”

2.கோபியர் கொஞ்சும் ரமணன் – கண்ணதாசன் மாத இதழ் ஜனவரி 1978

3.கண்ணதாசன் கவிதைகள் – முதல் இரண்டு தொகுதிகள்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

கலியுக முடிவு பற்றி சாணக்கியன் (Post No.4639)

 

Written by London Swaminathan 

 

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London 7-27 am

 

 

 

Post No. 4639

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

சாணக்கியன் அதி மேதாவி; பொருளாதார நிபுணன்; ராஜ தந்திரி; ஏழைப் பிராஹ்மணன்; கொஞ்சம் அவலட்சணமான, அழகில்லாத பிராஹ்மணன். நீதி நூலில் வல்லவன்; ஆயினும் அவன் தனக்கு சம்பந்தமில்லாத சில விஷயங்களையும் பிரஸ்தாபிப்பது வேடிக்கையாக உளது.

 

அவன் சொல்லுவதைப் படியுங்கள்:

கலௌ தச ஸஹஸ்ரேஷு ஹரிஸ்த்யஜதி மேதினீம்

ததர்த்தே ஜாஹ்னவீதோயம் ததர்த்தே க்ராமதேவதா.

சாணக்கிய நீதி, அத்தியாயம்11, ஸ்லோகம் 4

 

பொருள்

“கலியுகத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னர் ஹரி, பூமியில் இருந்து புறப்பட்டு விடுவார். அதில் பாதி காலத்துக்குள் கங்கை நீர் போய்விடும். அதில் பாதியில் கிராம தேவதை போய் விடுவாள்”.

 

இது, வியாக்கியானம் செய்ய கொஞ்சம் கடினமான ஸ்லோகம்.

நம்முடைய பஞ்சாங்கக் கணக்குப்படி கலியுகத்தின் ஆண்டு 5000-ஐ எப்போதோ தாண்டிவிட்டது. கிருஷ்ணரும் அதற்கு முன்னரே வேடனின் வில்லடி பட்டு இறந்து விட்டார்.

 

மேலும் கங்கை நதி இன்னும் பிரவாஹம் எடுத்து ஓடுகிறது. கிராம தேவதை வழிபாடும் உளது.

 

ஒரு வேளை சாணக்கியன், மனிதனின் ஆண்டு என்பதல்லாமல் தேவர்களின் ஆண்டு பற்றிச் சொல்லி இருந்தால், அதற்குப் பல காலம் இருக்கிறது. ‘ஹரி’ என்பதை இறைவனின் வழிபாடு மறையும் காலமென்று எடுத்தாலும் இன்னும் ஹரி வழிபாடும்/இறை வழிபாடும் இருக்கிறது. ஆகவே பொருள் சொல்லக் கடினமான ஸ்லோகம் இது. கங்கையின் புனிதமும், தூய்மையும் வேண்டுமானால் கெட்டுவிட்டது என்று சொல்லலாம்.

 

 

பிராமணர்கள் பற்றி சாணக்கியன்

இன்னும் ஒரு சுவையான செய்தி பிராஹ்மணர் பற்றியதாகும். பிராஹ்மணர் பற்றி லக்ஷ்மியின் வாய்மொழி மூலம் சில கருத்துக்களை முன்வைக்கிறார்.

 

இதோ ஸ்லோகத்தின் பொருள்

 

விஷ்ணுவிடம் லக்ஷ்மி செப்பியது யாது எனின்,

“என் பிராண நாதா; நான் பிராஹ்மணர்கள் மீது வெறுப்பு கொண்டு, அவர்கள் வீட்டுக்குப் போகாமல் எப்போதும் தவிர்த்து வருகிறேன்.ஏன் தெரியுமா? ஒரு கோபக்கார பிராஹ்மணன் என் தந்தையையே குடித்துவிட்டான் (அகஸ்த்ய மஹரிஷி கடல் குடித்த கதை) இன்னொரு மஹரிஷி என் புருஷனை காலால் உதைத்தார்.(பிருகு முனிவர் விஷ்ணுவைக் காலால்

உதைத்த கதை). மேலும் பிராமணர்கள் சிறு வயதிலிருந்தே

வாய்க்குள் ஸரஸ்வதியை வைத்துப் போற்றுகின்றனர். இதற்கெல்லாம் மேலாக என் வீட்டைக் கலைத்து சிவ பூஜை செய்கின்றனர் (லக்ஷ்மியின் வீடு தாமரை)

சாணக்கிய நீதி, அத்தியாயம் 15 ஸ்லோகம் 16

 

இது நிந்தா ஸ்துதி வகையினது. அதாவது இகழ்வது போல இறக்கி பின்னர் புகழ்வது ஆகும்.

 

இதில் பல விஷயங்களை அவர் தெரிவிக்க விரும்புகிறார்:

1.பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது. அதாவது லக்ஷ்மி இருக்கும் இடத்தில் ஸரஸ்வதி இருக்க மாட்டாள். பிராஹ்மணர்களும் கல்வியில் வல்ல புலவர்களும் வறுமையில் வாடியதை நாம் அறிவோம். நமது தந்தையர் காலத்தில் வாழ்ந்த உலக மஹா கவி பாரதியார் வறுமையில் உழன்றதை நாம் அறிவோம் ஆகையால் சாணக்கியன் சொன்னது புகழுரையே. மேலும் பிராஹ்மணர்கள் தாமரை மலரைக் கொண்டு சிவ பூஜை செய்வதையும் இது விதந்தோதுகிறது.

டேய், கிருஷ்ணா! நீ அதிர்ஷ்டக்காரண்டா?

 

இன்னொரு ஸ்லோகத்திலும் நிந்தா ஸ்துதியைக் காண்கிறோம்.

 

“ஒரு சிறு குன்றை கையில் உயர்த்திப் பிடித்தாய். இதனால் உன் பெயர் கோ வர்த்தனன் என்றாயிற்று. இதனால் மேல் உலகிலும் பூமியிலும் உன் புகழுரையை பாடுகின்றனர். நான் என் மார்பின் மீது சாய்த்து வைத்து உன்னைக் கொஞ்சுகிறேன். என்னை யாராவது புகழ்ந்தார்களா? எல்லா உலகங்களையும் தாங்கி நிற்கும் கேசவா! நீயே சொல். இனி நான் என்ன சொல்ல இருக்கிறது சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது!

 

சாணக்கிய நீதி, அத்தியாயம் 15, ஸ்லோகம் 16.

xxxx SUBHAM xxx

 

 

 

இராமானுஜரைச் சந்தித்து அருள் பெற்ற அபூர்வ பெண்மணி! (Post No.4638)

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London- 6–47 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4638

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

 

வைணவச் சிறப்பு

 

இராமானுஜரைச் சந்தித்து அருள் பெற்ற அபூர்வ, ஞானப் பெண்மணி!

 

ச.நாகராஜன்

 

1

இராமானுஜாசார்யார் கருணையே உருவாகக் கொண்ட பெரும் வைஷ்ணவ ஆசார்யர்.

 

எல்லோருக்கும் அருள் பாலிப்பவர்.

ஒரு சமயம் அவர் திருக்கோளூர் என்னும் புனிதப் பதியில் எழுந்தருளியிருந்தார்.

பக்தர்கள் திரளாக வந்து அவரை வணங்கி அவர் அருளைப் பெற்ற வண்ணம் இருந்தனர்.

 

அவர் அங்கிருப்பதைக் கேட்ட பலரும் திருக்கோளூர் நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்.

அப்போது ஒரு மாதரசி அந்த ஊரிலிருந்து கிளம்பப் போவதாகக் கூறினாள்.

 

அதைக் கேட்ட பலரும் வியந்தனர். அனைவரும் இங்கு வரும் போது நீங்கள் அயலூர் செல்லலாமா என்று அவர்கள் கேட்டனர்.

மாதரசியோ பிடிவாதமாக அங்கிருந்து செல்லப் போவதாக கூறினாள்.

உடனே அவளை ஆசார்யரிடம் அழைத்துச் சென்று விஷயத்தைக் கூறினர்.

 

2

கருணையே உருவான ஆசார்யர் அவளைப் புன்முறுவலோடு நோக்கினார். அவளது உயர்ந்த ஆன்ம நாட்டம் அவருக்குப் புரிந்தது. அவளது உயரிய ஆன்மிக பக்குவமும் அவருக்குத்த் தெரிந்து விட்டது.

அவரது முகக்குறிப்பு ‘சொல்’ என்றது.

மாதரசி, “ நான் திருக்கோளூரை விட்டுச் செல்லப் போகிறேன்” என்றாள்.

ஆசார்யர் கனிவோடு அவளை நோக்கி, “ திண்ணமென்னிளமான் புகுமூர் திருக்கோளூரே! அனைவரும் வந்து சேரும் இந்த புனிதத் தலத்தை விட்டு ஏன் வெளியே போக உத்தேசம்?” என்று வினவினார்.

 

 

அதற்கு அந்த மாதரசி பதில் அளித்தார் இப்படி:-

அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே,

அகமொழிந்து விட்டேனோ விதுரரைப் போலே,

தாய்க் கோலம் செய்தேனோ அநசூயையைப் போலே,

தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே,

மூன்று எழுத்து உரைத்தேனோ க்ஷத்ரபந்துவைப் போலே,

முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே,

அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே,

அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே,

‘அவன் தெய்வம்’ என்றேனோ மண்டோதரியைப் போலே,

‘அகம் வேத்மி’ என்றேனோ விசுவாமித்திரரைப் போலே

‘அநு யாத்ரம்’ செய்தேனோ அணிலங்களைப் போலே,

அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே,

ஆயுதங்கள் ஈந்தேனோ அகத்தியரைப் போலே,

கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே,

‘அனுப்பி வையும்’ என்றேனோ வசிஷ்டரைப் போலே,

மண் மலரை இட்டேனோ குருவநம்பியைப் போலே,

‘மூலம்’ என்றழைத்தேனோ கஜராஜனைப் போலே,

வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே,

வழியடிமை செய்தேனோ இலக்குவனைப் போலே,

அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாள் போலே,

இக்கரைக்கே சென்றேனோ விபீடணனைப் போலே,

இனியதொன்று வைத்தேனோ சபரியைப் போலே,

இங்குமுண்டு என்றேனோ பிரகலாதனைப் போலே,

இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே,

காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே,

கண்டு வந்தேனென்றேனோ திருவடியைப் போலே,

இரு கையும் விட்டேனோ திரௌபதையைப் போலே,

அனுகூலஞ் சொன்னேனோ மாலியவானைப் போலே,

தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே,

தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியைப் போலே,

 

 

இப்படி நீண்டு சென்றது அவளது பட்டியல்! 81 பேரைச் சொல்லி அவள் முடித்தாள்.

 

பின்னர் இராமானுஜாசார்யரை நோக்கி அவள் பணிவுடன் கேட்டாள்: “ இப்படிப்பட்ட உயர்ந்தோர் வாழும் ஊர் அல்லவா திருக்கோளூர். இங்கிருக்க இப்படிப்பட்ட தகுதியல்லவோ வேண்டும். எனக்கு ஒன்று கூட இல்லையே! ஆகவே தான் நான் வெளியூர் செல்லப் போகிறேன்” என்றாள் அவள்.

இப்படி ஒரு பெரும் ஆன்ம ஞானப் பட்டியலை அறிந்து அதைத் தான் அடைய வேண்டும் என்ற அவாவுவது ஒன்றே பெரும் தகுதி அன்றோ – திருக்கோளூரில் வசிக்க!

அது போதாதா என்ன?

 

ஆசார்யரின் கருணை வெள்ளம் அவள் மீது  பொங்கி வழிந்தது.

புன்முறுவல் பூத்தார்.

“இவ்விடத்திலேயே இரு” என்று மட்டும் சொன்னார்.

அவர் சொன்ன வார்த்தையின் பொருளை உணர்ந்து கொண்ட அந்த மாதரசி அவரது அனுக்ரஹத்தைப் பெற்றதைப் பெரும் பேறாக எண்ணினாள்.

திருக்கோளூரிலேயே தங்கி விட்டாள்.

 

 

குறிப்பு : விசுவாமித்திரரின் நான் அறிவேன் என்பதற்குப் பொருள் – அஹம் வேத்மி.

அணில் கூடப் போனது அல்லவா, அது தான் அநு யாத்ரம் – ஒரு பயணத்தில் கூடவே செல்லுதல்!

மூலம் என்பது கஜேந்திரன் ஆதி மூலமே என்று அழைத்தது.

 

3

பெண்களுக்கு ஆன்ம ஞானம் லபிக்காது என்று சொல்வதெல்லாம் பொய்.

பேரருள் பெற்ற பெண்மணிகளைப் பற்றிய அருமையான சரித்திரங்கள் நமது இதிஹாஸ, புராணங்களில் உள்ளன.

இராமானுஜாசார்யரைச் சந்தித்த புனிதவதியின் சரித்திரமும் நவீன கால வரலாற்றில் ஒன்று.

இங்கு 81 வரிகளில் 30 மட்டுமே தரப்பட்டுள்ளன.

இதை ‘ வைணவம்’ என்ற கட்டுரையில் படித்தேன்.(கட்டுரையாளர் பெயர் ‘ஓரன்பன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது)

வெளியான இதழ் : பழைய தமிழ்ப் பத்திரிகை: “ஆனந்த போதினி”.

1914ஆம் ஆண்டில் இது ஆரம்பிக்கப்பட்டது.

இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பாடல் வெளியான இதழ் பிரபவ வருடம் ஐப்பசி மாதம் தொகுதி – 13 பகுதி – 4 பக்கம் 161  1927ஆம் வருடம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதியிட்ட இதழ்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல்வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

***