மாக்ஸ்முல்லர் மர்மம்! – 8 (Post No.4451)

Written by S.NAGARAJAN

 

 

Date: 2 DECEMBER 2017

 

Time uploaded in London- 7-16 am

 

 

 

Post No. 4451

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 8

 

ச.நாகராஜன்

 

11

மாக்ஸ்முல்லரைப் பற்றிய செய்திகளில் அவர் யூஜின் பர்னாஃப் (Eugene Burnouf – 1801-1852) என்ற சம்ஸ்கிருத பேராசிரியரிடம் சம்ஸ்கிருதம் பயின்றார் என்பதும் ஒரு செய்தி.

யூஜின் பர்னாஃப் பாரிஸில் 20 வருடங்கள் சம்ஸ்கிருத பேராசிரியராக இருந்தவர். இவரிடம் மாக்ஸ்முல்லர் 1845ஆம் ஆண்டு சென்றார். 1846இல் அவர் இங்கிலாந்து சென்று விட்டார். அதாவது மாக்ஸ்முல்லர் தனது 22ஆம் வயதில் பர்னாஃப்பிடம் சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டார். ஒரே ஒரு வருடம் கற்றுக் கொண்டு, தனது 23ஆம் வயதில், இங்கிலாந்து சென்று விட்டார்,

 

வளமான இலக்கியத்தையும் இலக்கணத்தையும் மொழி நயத்தையும் அவர் ஒரே ஆண்டில் கற்றுக் கொண்டு தேர்ந்த சம்ஸ்கிருத நிபுணராக ஆகி விட்டாரா?

இதை நம்பியா ஈஸ்ட் இந்தியா கம்பெனி அவரிடம் வேதங்களை மொழி பெயர்க்கும் பணியைத் தந்தது.

 

இந்த சந்தேகம் இயல்பான சந்தேகமே.

 

பற்பல வருடங்கள் ஆழ்ந்து வேதம் கற்ற பாரம்பரியம் மிக்க  வேத குடும்பங்களில் வந்தவர்களே வேதங்களின் உண்மைப் பொருளை அறிந்திருப்பதாக மார் தட்டிச் சொல்ல மாட்டார்கள். அவ்வளவு நுட்பமான விஷயங்களை வேதம் கொண்டுள்ளது.

 

ஆக 23 வயது வாலிபர் ஒருவர் ஒரு வருடத்தில் சம்ஸ்கிருதத்தில் தேர்ச்செ பெற்றார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் நோக்கம் மாக்ஸ்முல்லருக்கு சம்ஸ்கிருத புலமை உண்டா இல்லையா என்பதை ஆராய்வதல்ல.

தாங்கள் கூறியபடி விஷக் கருத்துக்களை அவரால் வித்திட முடியுமா, அந்தத் தகுதி அவருக்கு உண்டா, தங்கள் வழிக்கு அவர் வருவாரா என்பது தான்.

 

மாக்ஸ்முல்லர் அவர்களது நிபந்தனைகளுக்கு உட்பட்டார். கிறிஸ்தவ மிஷனரிகள் குளிரும் விதமாகத் தன் பணியை ஆரம்பித்தார்!

 

12

மாக்ஸ்முல்லர் 1849ஆம் ஆண்டிலிருந்து 1874ஆம் ஆண்டு முடிய – அதாவது சுமார் 25 ஆண்டுகள் வேதங்களை மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதாவது அவரது 26ஆம் வயதிலிருந்து 41ஆம் வயது வரை இந்த ப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

இந்த 25 வருடங்களில் சம்ஸ்கிருதத்தை அவர் படித்துத் தேர்ச்சி பெற்று விட்டதாகச் சொல்லலாமா?

அவரே வேதங்களை மொழி பெயர்க்கவில்லை என்று சொல்கிறது வரலாறு.

 

அமெரிக்காவின் தலை சிறந்த அறிவியல் பத்திரிகை ‘ஸயிண்டிபிக் அமெரிக்கன்”.

அதில் 1900ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியிட்ட இதழில் மாக்ஸ்முல்லர் இறந்ததை ஒட்டிய இரங்கல் செய்திப் பகுதி வெளியானது.

 

அதில், மாக்ஸ்முல்லர் ரிக் வேதத்தை உண்மையில் அவரே மொழி பெயர்க்கவில்லை. அதைப் பெயர் தெரியாத ஒரு ஜெர்மானிய அறிஞரே செய்தார். முல்லர் அந்தப் பணியைப் பணம் கொடுத்து செய்யச் சொன்னார்.” என்று இருக்கிறது.

 

விக்கிபீடியா தரும் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:

 

Scientific American carried his obituary in the December 8th, 1900 edition of the magazine. It was revealed that Max Muller had in fact usurped the full credit for the translation of the Rig veda which was actually not his work at all, but of another unnamed german scholar whom Muller had paid to translate the text. To quote from his obituary in Scientific American, “What he constantly proclaimed to be his own great work, the edition of the “Rig Veda,” was in reality not his at all. A German scholar did the work, and Muller appropriated the credit for it.”

 

13

வேதங்களைப்பற்றிய தவறான கருத்தைக் கொண்டு அந்தப் பணியை ஆரம்பித்த மாக்ஸ்முல்லர் அதனுடைய சிறப்பை உணர்ந்து (தான் செய்ய வேண்டிய டாமேஜை எல்லாம் செய்து முடித்து விட்டு    – செஞ்சோற்றுக் கடன் கழித்த பின்னர் – ) இந்திய பாரம்பரியத்தையும் அதன் ஆழ்ந்த ஆன்மீக உணர்வையும் பாராட்ட ஆரம்பித்த போது கிறிஸ்தவ மிஷனரிகளால் அதைத் தாங்க முடியவில்லை.

அவரைக் கிறிஸ்தவ மதத்தின் எதிரி என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர்.

ஆடம் லார்ட் கிஃப்போர்ட் (Adam Lord Gifford) என்பவர் ஆண்டு தோறும் இறையியலில் ஒரு தொடர் சொற்பொழிவைச் செய்யுமாறு ஏற்பாடு செய்திருந்தார்.

அதற்கு கிஃப்போர்ட் லெக்சர்ஸ் (Gifford Lectures) என்று பெயர். மிகவும் பிரசித்தமான இந்த கிஃப்போர்ட் சொற்பொழிவாளராக 1888ஆம் ஆண்டு மாக்ஸ்முல்லர் க்ளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் நியமிக்கப்பட்டார். அடுத்த நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து வருடாவருடம் இந்த கிஃப்போர்ட் சொற்பொழிவுகளை மாகஸ்முல்லர் நிகழ்த்தினார்.

இந்தச் சொற்பொழிவை நிகழ்த்திய போது முல்லர் சொல்லிய கருத்துக்கள் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு உடன்பாடுடையதாக இல்லை.அதனால் அவரை கிறிஸ்தவ மத எதிரி என்று கூறிக் குற்றம் சாட்டினர்.

இதப் பற்றி விக்கிபீடியா தரும் தகவலின் ஆங்கில மூலம் இது:

Anti-Christian

During the course of his Gifford Lectures on the subject of “natural religion” Muller was severely criticized for being anti-Christian. In 1891, at a meeting of the Established Presbytery of Glasgow, Mr. Thomson (Minister of Ladywell) moved a motion that Muller’s teaching was “subversive of the Christian faith, and fitted to spread pantheistic and infidel views amongst the students and others”, and questioned Muller’s appointment as lecturer.

An even stronger attack on Muller was made ny Monsignor Alexander Munro in St Andrew’s Cathedral. Munro, an officer of the Roman Catholic Church in Scotland (and Provost of the Catholic Cathedral of Glasgow from 1884 to 1892), declared that Muller’s lectures “were nothing less than a crusade against Divine revelation, against Jesus Christ, and against Christianity”. The blasphemous lectures were, he continued, “the proclamation of atheism under the guise of pantheism” and “uprooted our idea of God, for it repudiated the idea of personal God”.

14

இப்படியாக எந்த ஒரு பணியை ஆற்றச் சொல்லி கிறிஸ்தவ மிஷனரிகள் பெரும் பணத்தைத் தந்து மாக்ஸ்முல்லரை நியமித்தார்களோ அவரது அந்தப் பணியில் அவர்கள் திருப்தி அடையவில்லை .

மாக்ஸ்முல்லர் ஆரிய இனம் என்ற பிரிவினைக் கொள்கையை ஏற்படுத்தினார். வேத காலத்தை மனம் போன படி மிகவும் குறைத்து மதிப்பிட்டார். வேதத்தின் பொருளை மாற்றினார்.

என்ற போதும் கூட கிறிஸ்தவ மிஷனரிகள் திருப்தி அடையவில்லை. ஏனெனில் மாக்ஸ்முல்லர் இந்தியாவைப் புகழத் தொடங்கியது அவர்களைத் திடுக்கிட வைத்தது.

சொந்தப் பணத்தில் சூன்யம் வைத்துக் கொண்டது போல அவர்கள் தவித்தனர்.

 

***      (தொடரும்)

ராக த்வேஷாதிகள் பதினாறு எவை, எவை? (Post No.4445)

Written by S.NAGARAJAN

 

 

Date: 30 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-02 am

 

 

 

Post No. 4445

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 3

முதல் இரு கட்டுரைகள்: எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

 

ராக த்வேஷாதிகள் பதினாறு எவை, எவை?

 

ச.நாகராஜன்

அத்வைத விளக்கத்தில் ராக, த்வேஷாதிகளைப் பற்றிப் பார்ப்போம்

*

 

ஐயா, அத்வைத விளக்கம் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு சந்தேகம்.மூன்று கரணங்கள் என்று சொன்னீ ர்கள் அல்லவா, அவற்றிற்கு ஸ்வயமாகவே கர்த்ருத்வம் உண்டா?

ஸ்வயமாக இல்லை. ராக, த்வேஷாதிகளால் பிரேரேபிக்கப்படுவதனால் உண்டாகிறது.

 

அப்படியா? ராக, த்வேஷாதிகள் எவை?

ராக,த்வேஷாதிகள் மொத்தம் பதினாறு.

ராகம், த்வேஷம், காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம், ஈருஷை, அசூயை, டம்பம், தருப்பம், அஹங்காரம்,

இச்சை, பக்தி, சிரத்தை என இவை பதினாறாகும்.

 

இவற்றைச் சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்!

ராகம் – பெண்களிடத்தில் சித்த விருத்தி

த்வேஷம் – அபகாரம் செய்தவனுக்கு பிரதியாக திருப்பிச் செய்ய ஆசைப்படுதல்

காமம் – பூமி, வீடு உள்ளிட்டவற்றை வாங்க, சம்பாதிக்க விரும்பல்

குரோதம் – மேற்படி இச்சையை அடைய எதிர்ப்பவரிடம் கோபித்தல்

லோபம் – பொருளை நல்ல காரியத்திற்காகச் செலவழிக்க விரும்பாமல் இருத்தல்

மோஹம் – பணச்செருக்கால் இன்னதைச் செய்யலாம், இன்னதைச் செய்யக்கூடாது என்பதை யோசிக்காமல் மந்த புத்தியுடையவனாக இருத்தல்

மதம்- செல்வச் செருக்கால் தன்னால் செய்ய முடியாத காரியமே இல்லை என்று எண்ணுதல்

மாச்சரியம் – செல்வத்தினால் தனக்குச் சமமாக இருக்கும் ஒருவனைக் கண்டு பொறாமை கொள்ளல்

ஈருஷை – பிறருடைய துக்கம் அவரை விட்டு நமக்கு எப்படி வந்தது என்று எண்ணுகிற சித்த விருத்தி

அசூயை – சுகம் தனக்கே உள்ளது (உரித்தானது), மற்றவர்க்கு இல்லை என்று எண்ணும் சித்த விருத்தி

டம்பம் – ஒரு தர்மம் செய்யும்போது அதில் தனக்கு பிரசித்தி அதிகம் உண்டாக வேண்டுமென்ற சித்த விருத்தி

தருப்பம் – தனக்குச் சமமானவனே இல்லை என்று எண்ணுதல்

அஹங்காரம் – சகல விஷயத்திலும் தனக்குச் சக்தி உண்டு என்று எண்ணுதல்

இச்சை – உண்ணல், கழிதல், கருமம் செய்ய விரும்பல்

பக்தி – குரு, நல்லோர், தேவதைகள் ஆகியோரிடமும் வேத வாக்கியத்திலும் ப்ரீதி கொள்ளல்

சிரத்தை – யாகம் முதலிய கர்மங்களில் நம்பிக்கை கொள்ளல்

இந்தப் பதினாறில் இச்சையைத் தள்ளுவது அசாத்தியம்; (முடியாத காரியம்)

பக்தி, சிரத்தை ஆகிய இரண்டையும் அனுஷ்டித்து, மற்ற பதிமூன்றையும் தள்ள வேண்டும்.

சரி, ஐயா, இந்த ராக, த்வேஷாதிகள் எதனால் வருகின்றன?

அபிமானத்தினால்

 

இந்த அபிமானம் எப்படி வருகிறது?

அவிவேகத்தினால்.

 

இந்த அவிவேகம் எப்படி உண்டாகிறது?

தனது உண்மையான சிதாத்ம ஸ்வரூபத்தை அனாதிகாலமாக மறைத்தலும், ஆத்ம ஞானத்தினாலேயே  நிவிருத்தியாகத் தக்கதுமாகிய அனாதி அஞ்ஞானத்தினாலும்.

இந்த அஞ்ஞானம் எப்படி வந்தது?

இது அனாதி என்று வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருப்பதால் இதற்குக் காரணம் சொல்வது முடியாது.

 

இந்த அஞானம் ஆதி இல்லாதது என்றால், அந்தமும் அதற்குக் கிடையாஞ்தா?

அஞ்ஞானத்திற்கு ஆதி இல்லை, உண்மை தான். ஆனால் ஆதி இல்லாவிட்டாலும் கூட அந்தம் உண்டு. எப்படி என்று கேளுங்கள்,

பிராகபாவத்திற்கு ஆதியில்லை, அந்தமுண்டு.

பிராகத்வம்சபாவத்திற்கு ஆதியுண்டு, அந்தமில்லை.

 

ஒன்றுமே புரியவில்லை, சற்று விளக்கமாகக் கூறுங்கள்!

சொல்கிறேன்.

குடம் உண்டாவதற்கு முன்னர் குடம் இல்லை எனப்படும் அபாவம் வெகு காலமாக இருக்கிறது.

குடம் இல்லை என்னும் அபாவ வாக்கியம் எப்போது உண்டாயிற்று என்பது தெரியாத போதிலும் கூட, குடம் உண்டானவுடனேயே ஆதி இல்லை என்கிற அபாவ வாக்கியத்திற்கு அர்த்தம் உண்டாகி விடுகிறது.

 

இது தான் பிராகபாவம் எனப்படுகிறது.

அடுத்து, நசிக்கச் செய்வதால் இல்லாமை உண்டாகிறது.

எப்படி என்று பாருங்கள். குடத்தை உடையுங்கள்.குடம் உடைக்கப்பட்டவுடன் குடம் இல்லாமை உண்டாகிறது.

உண்டான இல்லாமைக்கு அந்தமில்லை.

ஆகையால் இதுவே பிராகத்வம்ஸாபாவம்.

ஆகவே, வாதம்,பித்தம், கபம் ஆகியவற்றால் உண்டாகும் வியாதிகளுக்குக் காரணம் என்ன என்று தெரியாவிட்டாலும், மருந்துகளினால் அவைகளை நீக்கிக் கொள்ள முயல்வது போல, அஞ்ஞானத்துக்குக் காரணம் தெரியாவிட்டாலும் கூட,ஞானத்தினால் அது நாசமாகிறது. இது உண்மையே!

 

இந்த அஞ்ஞானத்தின் ஸ்வரூப லக்ஷணம் எப்படிப்பட்டது?

அது சத்துமல்ல; அசத்துமல்ல. அவயவம் உள்ளதல்ல; அவயவம் இல்லாததுமல்ல. இவ்விரண்டும் சேர்ந்ததுமல்ல. சேராததுமல்ல.

அது அநிர்வாச்சியம். அதாவது வாக்கினால் சொல்லத் தகுந்ததல்லாதது. (சொல்ல முடியாத ஒன்று)

ஏனெனில்,  ஸ்தூல ஆகாயமே சூக்ஷ்மமானது.

அதிலும் சூக்ஷ்மம்  (தன் மாத்திரை என்னும்) அபஞ்சீக்ருத ஆகாயம்,

அதிலும் சூக்ஷ்மம் சத்துவம் முதலிய குணங்கள்,

அவைகளிலும் சூக்ஷ்மம் அஞ்ஞானம்.

ஆகவே இப்படிப்பட்ட சூக்ஷ்மத்திற்கெல்லாம் மூல காரணமாக இருக்கின்ற காரணத்தினால் அவயவம் உள்ளதல்ல.

அன்றியும், அதுவே ஸ்தூல பதார்த்தமாகிய ஜகத்காரமாய் பரிணமிக்கின்ற காரணத்தினால்  அவயவம் இல்லாததுமல்ல.

இப்படி அநாதியாகவுள்ள அஞ்ஞானத்தினால் அவிவேகமும் – அவிவேகத்தினால் அபிமானமும் – அபிமானத்தினால் இராக த்வேஷாதிகளும் – இராக த்வேஷாதிகளால் கர்மமும் – கர்மத்தினால் சரீரமும் – சரீரத்தினால் சம்சார துக்கமும் – ஆத்மாவுக்குப் பரம்பரமாக வருகிறது.

ஆஹா!, ஐயா புரிகிறது, நன்றி!

***

பெண்டாட்டி தாசன், ராமானுஜ தாசனாக மாறிய சுவைமிகு கதை (Post No.4440)

 

COMPILED by London Swaminathan 

Date: 28 NOVEMBER 2017 

Time uploaded in London- 6-43 am

Post No. 4440

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

பிள்ளை உறங்காவில்லியார் சரிதத்தை கண்ணபிரான் பிள்ளை அவர்கள் 1938 ஆம் ஆண்டில் அழகான தமிழ் நடையில் எழுதியுள்ளார். ஆகையால் அதை அப்படியே இணைப்பாகக் கொடுக்கிறேன். பெண்டாட்டிதாசனாக இருந்த உறங்காவில்லி, ராமானுஜ தாசனாக மாறிய கதை மிக உருக்கமான கதை. சைவ நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் போல வைணவ மரபில் இவர் ஒரு வேடர் குல அடியார் ஆவார்.

இரண்டாவது பகுதியில் ஜாதியில் உயர்ந்ததாக நினைத்த அடியார்களுக்கு ராமானுஜர் தன் வழியில் பாடம் கற்பித்த ஒரு சம்பவமும் வருகிறது.

.இரண்டு சம்பவங்களும் மிக உருக்கமான சம்பவங்கள். அனைவரும் படித்து ஆனந்தமடைய வேண்டும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

 

 

 

 

 

 

 

 

 

 

—Subham–

 

 

யமகவந்தாதியின் பட்டியல்! (Post No.4439)

Written by S.NAGARAJAN

 

 

Date: 28 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-36 am

 

 

 

Post No. 4439

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இலக்கிய இன்பம்

யமகம் பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரைகளைப் படிக்க வேண்டுகிறேன். அதில் யமகம் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

யமகவந்தாதியின் பட்டியல்!

ச.நாகராஜன்

1

தமிழின் ஏராளமான சிறப்புகளில் ஒன்று மடக்கு அல்லது யமக அணியாகும்.

நூற்றுக் கணக்கான யமகப் பாடல்களைத் தமிழ் இலக்கியம் கொண்டுள்ளது.

இது சாதாரண விஷயமல்ல.

ஆழ்ந்த பொருள் தரும் அகன்ற சொல் வளம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இதைக் கொண்டுள்ள தமிழ் மொழி உண்மையிலேயே உலகின் அதிச்ய மொழி.

சம்ஸ்கிருதத்திலும் ஏராளமான யமகப் பாடல்கள் உள்ளன.தெலுங்கிலும் உண்டு.

 

 

2

2014ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி. இடம் : சென்னை.

சிற்றிலக்கியத்தில் மடக்கணி என்ற அருமையான ஒரு நூலைக் கண்டேன்.படித்தேன்.

முனைவர் பா. முனியமுத்து அவர்களின் ஆய்வு நூல் இது.

அவருக்கு உவமைப் பித்தன் என்ற புனைப்பெயரும் உண்டு.

நூலைப் படித்த மகிழ்ச்சியில் எனது இயல்பான வழக்கத்தையொட்டி அவரைப் பாராட்ட விழைந்தேன். தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவரைத் தொடர்பு கொண்டேன்.

“முனியமுத்து அவர்கள் இருக்கிறாரா?”

ஒரு பெண்மணி பதில் அளித்தார்: “இல்லீங்க”

“எப்ப வருவார்?”

“என்ன விஷயங்க?”

“அவரது அருமையான் நூலான ‘சிற்றிலக்கியத்தில் மடக்கணி’ என்ற நூலைப் படித்தேன். அவரைப் பாராட்டுவதற்காகத் தான் இந்த போன். அவர் எப்ப வருவார்?”

“ஓ. ரொம்ப சந்தோஷங்க. அவர் இப்ப இல்லீங்க. இப்படி யாராவது பாராட்ட மாட்டார்களா என்று அவர் ரொம்ப எதிர்பார்த்திருந்தாருங்க.”

ஒரு சின்ன மௌனம்.

அந்த அம்மையார் முதலில் சொன்ன ‘இல்லீங்க’ என்பதற்கும் இரண்டாவது தரம் சொன்ன ”இப்ப இல்லீங்க” என்பதற்கும் பெரிய வேறுபாடு இருந்தது.

என் மனம் கனத்தது. சோகம் இழையோட, “அவரைப் பாராட்டத் தான் இந்த போன்” என்று சொன்னேன்.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க”

போன் உரையாடல் முடிந்தது.

சற்று நேரம் ஒன்றுமே ஒடவில்லை. அந்தப் புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழுக்கு அரிய சேவை செய்த நல்ல மனிதர்.

முனியமுத்து அவர்களின் புகழ் வாழ்க!

 

 

3

தனது ஆய்வு நூலில் அவர், மடக்கு (யமக) அந்தாதி இலக்கியங்களின் பட்டியலை மிகுந்த சிரமத்தின் பேரில் தொகுத்துத் தந்துள்ளார். அதில் நூல்கள் இயற்றப்பட்ட காலமும் இருக்கிறது.

அந்தப் பட்டியல் அப்படியே கீழே தரப்பட்டிருக்கிறது. பிராக்கட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண் எந்த நூற்றாண்டில் நூல் இயற்றப்பட்டது என்பதைக் குறிக்கிறது.

அகர வரிசைப் பட்டியலில் இறுதியில் உள்ள இரண்டு நூல்கள் எனது ஆய்வின் விளைவாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

முனியமுத்து போன்றோரின் ஆய்வைத் தமிழ் உலகம் நல்ல முறையில் அங்கீகரிக்கவில்லையே என்ற ஏக்கம் அனைவருக்கும் வரவேண்டும். இனியேனும் நல்லோரை இனம் கண்டு உரிய முறையில் அவர்கள் வாழ்கின்ற காலத்திலேயே பாராட்டுவோம்.

4

இதோ பட்டியல்:

மடக்கு (யமக) அந்தாதி இலக்கியங்கள் – அகர வரிசை

1) அழகர் யமகவந்தாதி –

2) இரத்தினகிரியமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள் – (19)

3) கடம்பர் யமகவந்தாதி – பேரம்பலப் புலவர் – (19)

4) கணபதி யமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள் – (19)

5) கந்தர் யமகவந்தாதி – அருணகிரிநாதர் – (15)

6) கல்வளை யமகவந்தாதி – சின்னத்தம்பிப் புலவர் – (19)

7) கூடல் திருவிளையாடல் யமகவந்தாதி -சுப்பையா-(19)

8) சித்திர யமகவந்தாதி – தொழுவூர் வேலாயுத முதலியார் – (19)

9) சிவகிரி யமகவந்தாதி -பழநி மாம்பழக் கவிச்சிங்க நாவலர்-(19)

10) தன்னை யமகவந்தாதி – கார்த்திகேயப் புலவர்- (19)

11) தன்னை யமகவந்தாதி – திரிகூட ராசப்பக் கவிராயர்- (19)

12) தன்னை யமகவந்தாதி  முருகேசையர்-(19)

13) திரிச்சிராமலை யமகவந்தாதி -மீனாட்சிசுந்தரம் பிள்ளை -(19)

14) திருக்கடவூர் யமகவந்தாதி – தலைமலை கண்ட தேவர்-(19)

 

15) திருக்குருகூர் யமகவந்தாதி – வேலாமூர் கிருட்டிணமாச்சாரியார்-(20)

16) திருக்குற்றால யமகவந்தாதி -திரிகூட ராசப்பக் கவிராயர்-(18)

17) திருக்கோட்டற்றுப் பதிற்றுப் பத்து யமகவந்தாதி – செய்குத்தம்பி பாவலர் – (20)

18) திருச்சிற்றம்பல யமகவந்தாதி -சபாபதிப் பிள்ளை நாவலர்(19)

19) திருச்செங்காட்டங்குடி யமகவந்தாதி – நல்லூர்த்தியாகன்

20) திருச்செந்தில் யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

21) திருச்செந்தில் யமகவந்தாதி -சிவச்சம்பு புலவர்(இலங்கை)(19)

22) திருச்செந்தில் யமகவந்தாதி – இராமசாமி ஐயர்-(19)

23) திருச்செந்தூர் கரித்துறை யமகவந்தாதி – அருணாசலப் பிள்ளை-(19)

 

24) திருத்தணிகை யமகவந்தாதி – சொக்கலிங்க தேசிகர்-(19)

25) திருத்தில்லை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

26) திருப்புடை மருதீசர் யமகவந்தாதி – தலைமலை கண்ட தேவர்-(19)

27) திருநெல்வேலி யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

28) திருப்போரூர் யமகவந்தாதி – புரசை சபாபதி முதலியார்-(19)

29) திருப்பெருந்துறை ஆத்மநாதர் யமகவந்தாதி – மிதிலைப்பட்டி சிற்றம்பலக் கவிராயர் – (17)

30) திருமீதினத்துப் பதிற்றுப்பத்து யமகவந்தாதி – அ.கா.பிச்சை இபுராகீம் புலவர்-(19)

31) திருமதீனத்து யமகவந்தாதி – (19)

32) திருமயிலை யமகவந்தாதி – தாண்டவராயக் கவிராயர்

33) திருமயிலை யமகவந்தாதி – நெல்லையப்பக் கவிராச பண்டிதர்

34) திருவரங்கத்து யமகவந்தாதி-பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் (17)

 

35) திருவல்லிக்கேணி யமகவந்தாதி –

36) திருவல்லிக்கேணி யமகவந்தாதி- தண்டபாணி அடிகளார்-(19)

37) திருவாமாத்தூர் யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

38) திருவாலவாய் யமகவந்தாதி – சொக்கலிங்கச் செட்டியார்-(20)

39) திருவானைக்கா யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

40) திருவானைக்கா யமகவந்தாதி – சிங்காரவடிவேல் வ்ண்ணியமுண்டார்

41) திருவேகம்பர் யமகவந்தாதி – சிவஞான முனிவர்

42) திருவேரகம் யமகவந்தாதி – வேலையர் (20)

43) திருவேரக யமகவந்தாதி – சிவச்சம்புப் புலவர்-(19)

44) திருவேரக யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

45) தில்லைகற்பக வினாயகர் யமகவந்தாதி – சிதம்பரம் செட்டியார்-(19)

46) தில்லை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

 

47) துறைசை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

48) நகுலேசர் யமகவந்தாதி -அப்துல் காதர் நயினார் அலீம் -(19)

49) நெல்லை யமகவந்தாதி –

50) பட்டீச்சுர யமகவந்தாதி – அப்பாப்பிள்ளை-(19)

51) பத்மநாபப்பெருமாள் யமகவந்தாதி-தண்டபாணி அடிகளார்-(19)

52) பழநி யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

53) பழநி யமகவந்தாதி – பாலசுப்பிரமணியன்

54) புலியூர் யமகவந்தாதி – மயில்வாகனப் புலவர்-(18)

55) புலியூர் யமகவந்தாதி – கணபதி ஐயர், இலங்கை

56) புல்லை யமகவந்தாதி – ரா.இராகவையங்கார்-(20)

57) மதுரை யமகவந்தாதி – இராமநாதன் செட்டியார் அ. வயினாகரம் – (19-20)

58) மதுரை யமகவந்தாதி – சொக்கநாதக் கவிராயர்-(17)

59) மதுரை யமகவந்தாதி – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

60) மதுரை  யமகவந்தாதி – ஆறுமுகம் பிள்ளை-(19)

 

61) மருதாசலக் கடவுள் யமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள்-(19)

62) மருதூர் யமகவந்தாதி – தலைமலைக் கண்ட தேவர்-(19)

63) மாவை யமகவந்தாதி -பொன்னம்பலம் பிள்ளை,இலங்கை(19)

64) யமகவந்தாதி – மழலை சுப்பிரமணிய பாரதியார்-(19)

65) திருச்செந்தில் நீரோட்டக யமகவந்தாதி – சிவப்பிரகாச சுவாமிகள்

66) திருவாவடுதுறை யமகவந்தாதி -மீனாட்சிசுந்தரம் பிள்ளை(19)

 

5

எத்தனை அற்புதமான பாடல்களை தமிழ் கொண்டிருக்கிறது என்று எண்ணி எண்ணிப் பெருமைப்படலாம்.

இந்தப் பட்டியலில் அபிராமி அந்தாதி, கைலை பாதி, காளத்தி பாதி அந்தாதி போன்ற அந்தாதி நூல்கள் சேர்க்கப்படவில்லை.

யமக அந்தாதி இல்லாத அந்த அந்தாதி நூல்களுக்கு ஒரு தனிப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதைத் தயாரித்துக்  கொண்டிருக்கிறேன்.

***

ப்ரக்ருதியின் ஆசையும் புத்தரின் கேள்விகளும்! (Post No.4433)

Written by S.NAGARAJAN

 

 

Date: 26 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-27 am

 

 

 

Post No. 4433

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

புத்தபிரான் போதனை

ப்ரக்ருதியின் ஆசையும் புத்தரின் கேள்விகளும்!

 

.நாகராஜன்

 

1

புத்த பிரானின் சீடரான ஆனந்தரின் வாழ்க்கை சுவாரஸ்யமான ஒன்று. ஏராளமான சம்பவங்களைக் கொண்டுள்ள அவரது வாழ்க்கையில், ஒவ்வொரு சம்பவமும் ஒரு பெரிய உண்மையை விளக்கும். அத்துடன்  புத்தரின் அவதார மஹிமையையும் அருளையும் கூடவே விளக்கும்.

 

2

ஒரு நாள் ஆனந்தர் தன் உணவை முடித்துக் கொண்ட பின்னர் நீர் அருந்துவதற்காக அருகிலிருந்த ஒரு கிணற்றுக்குச் சென்றார். அங்கு ஒரு இளம் பெண் நீர் இறைத்துக் கொண்டிருந்தாள். அவளிடம் சென்ற ஆனந்தர், “சகோதரியே! கொஞ்சம் நீர் தா” என்றார்.

அவள் ஜாதியில் தாழ்ந்த ஜாதிப் பெண். தயங்கினாள்.அவள் பெயர் ப்ரக்ருதி.

“பூஜ்ய ஆனந்தரே! நான் ஒரு மாதங்கப் பெண்” என்று தன் ஜாதியைச் சுட்டிக் காட்டினாள்.

“ நான் உன் ஜாதி என்ன என்று கேட்கவில்லை. அருந்துவதற்கு நீர் தான் கேட்டேன்” என்றார் ஆனந்தர்.

 

பிறகு அவள் நீரைத் தந்தாள். அதை அருந்தி விட்டு ஆனந்தர் சந்தோஷமாகத் தன் வழியே சென்றார்.

ப்ரக்ருதிக்கு ஒரே மகிழ்ச்சி. பலவித கற்பனையில் அவள் ஈடுபடலானாள்.ஆனந்தர் ஏன் தன்னிடம் வந்து நீர் கேட்க வேண்டும்.

அவள் ஆனந்தரையே தனது கணவனாக நினைத்துக் கொண்டாள்.

அவளது போக்கைக் கண்ட அவளது தாய் அவளது நிலையை நன்கு புரிந்து கொண்டாள்.

அவள் மாயாஜாலக் கலையில் வல்லவள்.

தன் மகளுக்கு ஆனந்தரை மணமுடித்து வைப்பது என்ற தீர்மானத்திற்கு வந்த அவள் வசிய ஜாலத்தை ஆனந்தர் மீது ஏவி விட்டாள்.

ஆனந்தர் எப்படியும் தன் குகைக்கு வந்தே ஆக வேண்டும் என்பது அவளது தீர்மானம்.

ஆனந்தர் அப்போது உயர்நிலையான அர்ஹத்தாக ஆகியிருக்கவில்லை.

அவர் வசிய ஜாலத்தால் நிலை கொள்ளாமல் தவித்தார். ப்ரக்ருதியைப் பார்க்க வேண்டும் என்ற நினைவு இடைவிடாமல் வரவே என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

 

கடைசியில் புத்த பிரானை மனமுருக வேண்டிப் பிரார்த்தனை செய்தார்.

புத்தர் நடந்தது அனைத்தையும் உணர்ந்து கொண்டார்.

ப்ரக்ருதியின் தாயார் செய்த வசிய ஜாலத்தை முறியடிக்கும் விதமாகத் தன் அருளை ஆனந்தர் மீது பொழிந்தார்.

ப்ரக்ருதியின் தாயார் தான் தோற்கடிக்கப்பட்டதை உணர்ந்தாள்.

தன் மகளிடம் நடந்ததை அப்படியே கூறினாள்.

ஆனால் ப்ரக்ருதியோ ஆனந்தரின் நினைவை விடவில்லை.

ஆனந்தர் பிக்ஷை எடுக்கப் போகும் போதெல்லாம் முன்னே வந்து நிற்பாள்.

ஒருநாள் ஆனந்தர் அவளிடம், “ உன் மேல் எனக்கு இரக்கம் தான் வருகிறது. நீ நன்றாக இருக்க வேண்டும். என்னை விட்டு விடு” என்றார்.

ப்ரக்ருதி யோசித்தாள்.

புத்த பிரானிடமே சென்று விடலாம் என்று நினைத்து அவரிடம் சென்று முறையிட்டாள்.

புத்த பிரானுக்கு அவள் மீது கருணை பொங்கியது.

அவளை நோக்கி வினவலானார்:

“ப்ரக்ருதி! நீ எனது சீடனை மணந்து கொள்கிறாயா?”

“ஆமாம், பூஜ்யரே”

“எனது சீடனை மணந்து கொண்டால் அவன் செல்லுமிடமெல்லாம் நீயும் செல்ல வேண்டியிருக்குமே, அதற்குத் தயாரா?”

“தயார் தான், பூஜ்யரே”

“எனது சீடன் துவராடையை அணிந்து கொண்டிருப்பது போல அதே ஆடையைத் தான் நீ அணிய வேண்டியிருக்கும். அதற்குச் சித்தமா?”

“சித்தம் தான், பூஜ்யரே”

“என் சீடன் மரத்தடியே கூரையாக நினைத்து மரத்தடியில் உறங்குவது வழக்கம். அது போல உன்னால் உறங்க முடியுமா?”

“உறங்க முடியும், பூஜ்யரே”

 

கேள்விகள் வர வர, ப்ரக்ருதியின் மனம் உயர்நிலைக்குச் செல்ல ஆரம்பித்தது.

புத்தரின் கேள்விகள் அவளை ஒரு பெரிய உயரிய நிலைக்குக் கொண்டு செல்லவே அவள், அவர் தாள்களில் பணிந்து தனக்கு த்ரி ரத்னமே தேவை என்ற தனது முடிவைச் சொன்னாள்.

அவளைக் கருணையுடன் தனது சிஷ்யையாக ஏற்றுக் கொண்ட புத்த பிரான் அவளுக்குப் புகலிடத்தை அளித்தார்.

3

ப்ரக்ருதி சிறந்த சிஷ்யையாக மாறினாள். ஜாதியில் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பது இல்லை, தனது உபதேசம் அனைவருக்குமானது என்பதை புத்த பிரான் நிரூபித்தார்.

-subham-

பிரம்மா ஏன் தலையை இழந்தார்? தக்ஷன் ஏன் தலையை இழந்தான்? (Post No.4428)

Brahma from Cambodia

பிரம்மா ஏன் தலையை இழந்தார்? தக்ஷன் ஏன் தலையை இழந்தான்? (Post No.4428)

 


Written by London Swaminathan 

 

Date: 24 NOVEMBER 2017

 

Time uploaded in London- 10-30 am

 

 

Post No. 4428

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தலைகளை இழந்த இந்துக் கடவுள்கள்-1 என்ற முதல் பகுதியில் விஷ்ணு தலையை இழந்த விநோதக் கதையையும் விநாயகருக்கு யானைத் தலை வந்ததன் கார ணத்தையும் கொடுத்தேன். இந்த இரண்டாவது பகுதியில் பிரம்மா ஏன் தலையை இழந்தார்? தக்ஷனுக்கு ஏன் ஆட்டுத் தலை கிடைத்தது என்பதைக் காண்போம். பிருகுவின் தலை போனது எப்படி? பிருகுவின் மனைவி தலையை விஷ்ணு துண்டித்தது ஏன் ? என்பதையும் அறிவோம்.

பிருகு முனிவர் பற்றிய சுவையான கதை:–

தக்ஷ யக்ஞத்தில் தலை இழந்தவர்களில் இவரும் ஒருவர். தேவீ பாகவதத்தில் இவர் கதை உள்ளது. இவர் பிரம்மாவின் மானச புத்திரர்களில் ஒருவர். மனைவியின் பெயர் புலோமசை. இவருடைய புதல்வன் கவி. பேரன் சுக்ரன்.

 

பிருகு முனிவர் குளிப்பதற்காக ஆற்றுக்குச் சென்றபொழுது, புலோமன் என்ற அரக்கன், பிருகுவின் மனைவியை — நிறைமாத கர்ப்பிணியை  — தூக்கிச் சென்றான். அம்மா கதறிதையக் கேட்டு கர்ப்பத்தில் இருந்த சியவகன் வெளியே வந்து அரக்கனை எரித்தான்.

 

அரசர்களுக்குப் புத்திரப் பேறு இல்லாவிடில் ரிஷிகளை வேண்டுவர். அதன்படி ஒரு அரசனின் ஒரு புதல்வியை மணந்து அரச மரத்தைச் சுற்றச் செய்து பிள்ளை வரம் பெறச் செய்தார். அவளுடைய தங்கைக்கும் புத்திரப் பேறு இல்லாததால் பலாச மரத்தைச் சுற்றச் செய்து பிள்ளைவரம் கிடைக்கச் செய்தார்.

 

பிருகு முனிவர் ‘பெரிய கடவுளை’ அறியச் சென்ற காலையில் பிரம்மா, சிவன் ஆகியோர் கோபிக்க அவர்களுக்குச் சாபம் தந்தார். விஷ்ணுவிடம் சென்று அவரையும் உதைக்க எத்தனிக்கையில் , அவர் பிருகுவின் காலைப் பிடித்து உபசரிக்கவே அவரே உயர்ந்த கடவுள் என்று முடிவு செய்தார்.

 

தக்ஷ யக்ஞத்தில் வீரபத்ரரால் தலை, தாடி, மீசை ஆகியவற்றை இழந்தார். இவருடைய மனைவி அசுரர்க்கு அடைக்கலம் கொடுத்ததால் அவ ளை விஷ்ணு கொன்றார். அதனால் கோபித்த பிருகு இனி, விஷ்ணு பூமியில் பிறக்கக்கடவது என்று சபித்தார். விஷ்ணு, இவரது மனைவியின் தலையை வெட்டியதாகவும், அதை இவர் ஒட்டிவைத்து மீண்டும் உயிர்ப்பித்ததாகவும் புராணங்கள் சொல்லும்.

 

சில தத்துவங்களை விளக்க வந்த கதைகள் பிற்காலத்தில் தத்துவங்கள் இல்லாமல் கதைகளாக மட்டும் தனித்து நின்றன. இதனால் அவை எல்லாம் பொரிவிளங்காய் உருண்டை ஆகிவிட்டன! பொரி விளங்காய் உருண்டை = பொருள் விளங்காத புதிர்கள்.

Brahma Temple in Pushkar, Rajasthan

 

பிரம்மா தலை

பிரம்மா தலையை இழந்ததற்கும் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதல் கதை.

பிரம்மா ஐந்து தலைகளுடன் அவதரித்தார். அவர் அவதூறாகப்   பேசியதால் சிவ பெருமானுக்குக் கோபம் வந்து ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார்.

 

இன்னும் ஒரு கதை– அவர்  சத ரூபா என்ற பெண்ணைப் படைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்ததால் அந்தத் தலை கிள்ளி எறியப்பட்டது என்பர். மற்றொரு கதை:- சிவனுக்கும் ஐந்து தலை; பிரம்மாவுக்கும் ஐந்து தலை; இதனால் குழப்பம் அடைந்த பார்வதி பிரம்மாதான் சிவன் என்று நினைத்து அருகே சென்றதாகவும் உடனே சிவன் கோபம் அடைந்து ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்ததாகவும் சிவன் கையிலுள்ள கபாலம் பிரம்மாவின் கபாலம் (தலை) என்றும் கூறுவர்.

Stamp issued to honour of Brahma by France

தக்ஷன் தலை

 

தக்ஷன் என்பவன் பிரம்மாவின் புதல்வன் அவன் தன் மகள் சதியை சிவ பெருமானுக்கு மணம் முடித்தார். ஒரு பெரிய யாகம் நடந்தபோது சதி வேண்டியும் சிவ பெருமானை யாகத்துக்கு அழைக்கவில்ல. இதனால் கோபத்துடன் யாக சாலைக்கு வந்த சிவபெருமான் யாகத்தைச் சீர்குலைத்தார். பலருக்கு கை கால்கள் உடைந்தன. தக்ஷன் தலையையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் தேவர்கள் வேண்டவே அவனுக்கு ஆட்டுதலை ஒன்றை எடுத்துப்  பொருத்தினார்கள்.

.

–SUBHAM–

தலைகளை இழந்த இந்துக் கடவுள்கள்! (Post No.4425)

Written by London Swaminathan 

 

Date: 23 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-30

 

 

Post No. 4425

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

விஷ்ணு ஏன் தலையை இழந்தார்?

 

பிரம்மா ஏன் தலையை இழந்தார்?

 

பிருகு ஏன் தலையை இழந்தார்?

 

தக்ஷன் ஏன் தலையை இழந்தார்?

 

கணபதி ஏன் தலையை இழந்தார்?

 

 

புராண,  இதிஹாசங்களில் சுவையான கதைகள் உள்ளன. ஆனால் அவைகளுக்குப் பின்னுள்ள தத்துவங்கள் மறைந்து விட்டன. அவைகளை பின்னொரு சமயம்  தனிதனியாகக் காண்போம். முதலில் தலை இழந்த கடவுளரின் கதைகளைச் சுருக்கமாகக் காண்போம். விஷ்ணுவுக்குத் தலை போன கதை சதபத பிராமணம் முதலிய நூல்களில் மட்டும் உள்ளது; வேறு எங்கும் காணக் கிடைக்கில.

முதலில் கணபதி!

முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்குத் தலை கழன்று, யானைத் தலை வந்து, ஆனைமுகன் ஆனதற்கு இரண்டு வரலாறுகள் உண்டு. பார்வதி தேவி குளியல் அறைக்குள் நுழைந்த சமயம் ‘மகனே! எந்த ஆண்மகன் வந்தாலும் இந்தப் பக்கம் வராமல் பார்த்துக்கொள்’ என்று கண

பதியைக் காவல் வைவத்தாள் தேவி.

அவரும் ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார். அப்போது சிவ பெருமான் அங்கே வரவே அவரையும் தடுத்தார் கணபதி; யாரென்று பாராமல், அல்லது மகன் என்றும் பாராமல்– அவர் தலையைச் சிரச் சேதம் செய்தாராம் சிவ பெருமான்.

‘முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடிசெய்த அதிசூரனுக்கே’ இந்த கதி. பிள்ளைக்கு ஒரு குறை என்றால் தாய் வாளாவிருப்பாளா? சிவனைக் கோபித்தார்; உடனே தலை வேண்டும் என்றார். சிவனும் அருகில் இருந்த ஆனைத் தலையைத் தூக்கி அவர் தலையில் பொருத்தினார்.

அந்தக் காலத்தில் தலை அறுவைச் சிகிச்சை எல்லாம் சர்வ சாதாரணமாக நடந்தது போலும்! கண்ணை மாற்றி ஆபரேஷன் செய்த கண்ணப்ப நாயனாரை அறிவோம்; ஆயிரம் தாமரை மலரில் ஒன்று குறைந்ததே என்று சிவனுக்கு கண் தாமரையால் பூஜித்த விஷ்ணுவை அறிவோம்; பின்வரும் கதைகளில் தலை ஆப்ரேஷன் பற்றியும் அறிகிறோம்.

 

கணபதி பற்றிய இரண்டாவது கதை:-

சனைச்சரனைக் கண்டால் எல்லோருக்கும் பயம்; இந்துக் கடவுள்களுக்கும் பயம்! “டேய், சனியனே! அந்தப் பக்கம் சனைச்சரன் வருகிறான்; அவனைப் பார்த்து, கீர்த்து தொலைத்து விடாதே; பொல்லாத பயல்; அவனவன் கர்ம வினைக்கு ஏற்ப பலன் தருபவன்; பெரிய வீட்டுப் பிள்ளை என்றும் பார்க்க மாட்டான்” என்று எச்சரித்திருந்தாள் உமை;  கணபதி சிறு பிள்ளைதானே! தீராத விளையாட்டுப் பிள்ளை! சனைச் சரனைப் பார்த்துவிட்டார்; உடனே விநாயகப் பெருமானின் தலை சாம்பலாகப் போயிற்றாம்; ஒவென்று உமையம்மை கதற, அந்தப் பக்கம் வந்த பிரம்மதேவன் அம்மையாரே! உடனே வேறு தலையைப் பொருத்துங்கள்; மாற்று அறுவைச் சிகிச்சை செய்யும் உறுப்புகள் எல்லாம் ஒரு சில மணி நேரத்துக்குள் கிடைக்க ஆஸ்பத்திரிகள் விமானம் ஹெலிகாப்டர், அதி வேக டாக்ஸி எல்லாவற்றையும் பயன்படுத்துவதை நீர் அறியீரா? என்று பிரம்மதேவன் சொல்ல, அவரும் அருகில் கிடைத்த யானையின் தலையை அவசரம் அவசரமாகப் பொருத்தினாராம்.

கதை கேட்க வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் யானைக்குள்ள முழு அறிவும் சிறு வயதிலேயே பிள்ளையாருக்குக் கிடைத்ததைக் காட்ட இப்படி ஒரு கதை போலும்.

என்ன இருந்தாலும் அந்த ஆனைமுகத்தைக் காணும் போது நமக்கு ஆனந்தம் பெருகுகிறது.

ஒரு வேளை யானை வேட்டை பெருகி தந்தங்களை ஏற்றுமதி செய்தவுடன் உலக நிறுவனங்கள் யானை வேட்டைக்கும் தந்த ஏற்றுமத்திக்கும் தடை விதித்தது போல அந்தக் காலத்திலும் யானை வேட்டை அதிகரிக்கவே இப்படி கடவுள் தலையில் யானையை வைத்து அந்த வேட்டையைத் தடுத்தனர் என்று சொன்னாலும் பொருத்தமே. தசரதர் யானை வேட்டைக்குப் போய் முனிவர் மகனைக் கொன்ற கதைதான் நமக்குத் தெரியுமே.

இன்று லண்டன் முதலிய நகர்களில் யானைப் பாதுகாப்புக்காக, சிலை வைத்து நிதி சேகரிக்கின்றனர் வெள்ளைக்காரர்கள்; நாமோ சின்னக் கதை மூலம் யானை வேட்டையைத் தடுத்துவிட்டோம்!

 

லக்கி (Lucky) கடவுள் விஷ்ணு!

 

அடுத்ததாக விஷ்ணுவுக்குத் தலைபோன கதையைக் காண்போம்:-

கடவுளரிலும் ‘லக்கி’ கடவுள் உண்டாம். எல்லாக் கடவுள்களையும் விட விஷ்ணுதான் அதிர்ஷ்டசாலி என்று பிராமண நூல்கள் புகழ்கின்றன. அவரை சிரேஷ்ட (இதிலிருந்து வந்த தமிழ்ச் சொல் சிறப்பு) — சிறப்பான கடவுள் என்று அவை பகரும். ஒரு போட்டியில்     விஷ்ணு வெற்றி பெற்றார். இதனால்  இந்திரனுக்கு அவர் மீது பொறாமையாம். விஷ்ணுவின் தலையை சிரச் சேதம் பண்ணி விட்டாராம். இதற்கு முன் ரிக் வேதம், தமிழ் வேத மான திருக்குறள் ஆகியவற்றில் வாமானாவதாரம் மட்டுமே பேசப்பட்டது (அடி அளந்தான் என்பான் வள்ளுவன்) மூன்றடியால் உலகளந்தவன் என்று வேதம் கூறும். ஓங்கி உலகளந்த உத்தமனுக்கு இங்கோ தலையே போயிற்று; இது பற்றி தைத்ரீய ஆரண்யகம் முதலியவற்றில் இன்னும் ஒரு கதையும் உண்டு.

போட்டியில் விஷ்ணு வெற்றி பெறவே தேவர் தலைவனான இந்திரனுக்குப் பொறாமைத் தீ எழுந்ததாம்; உடனே ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டது. ஜேம்ஸ் பாண்டு ஸ்டைலில் ஒரு புதிய திட்டம் தீட்டினர் தேவர்கள்; எறும்புகளை அனுப்புவோம் அவை விஷ்ணுவின் வில்லில் உள்ள நாணைச் சாப்பிடட்டும் . அப்பொழுது வில் ‘டமார்’ என்று விலகும்; அதை வைத்திருக்கும் விஷ்ணுவும் தலை சாய்ப்பார் என்று.

 

அவர்கள் திட்டப்படியே நடந்தது! எறும்புகள் அரிக்க, நாண் கயிறு அறுந்து போக, வில்லின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்த பெருமாள் மீது வில் தெறிக்க, அவர் தலை உருண்டதாம். சதபத பிராமணத்தின் 14ஆவது பிரிவில் உள்ள கதை இது.

 

பிராமண நூல்கள் நிறைய தத்துவ கதைகளை  மறை மொழியில் மொழியும்; அது போன்ற ஒரு கதை இது.

தலை என்பது ஒருவரின் மதிப்பு, பெருமை என்ற பொருள் உடைய ஒரு சொல். ஒருவரைத் தலைவன் என்று சொன்னால் அவருக்கு மட்டும் தலை இருக்கிறது, தொண்டர்களுக்கு எல்லாம் தலை இல்லை என்று பொருளல்ல ; மந்திரி சபையில் பல தலைகள் உருண்டன என்றால் பலர் பதவி இழந்தனர் என்று பொருள்; அலுவலத்தில் நாளை மாற்றங்கள் வரப் போகிறதாம்; யார் தலை உருளப் போகிறதோ என்கிறோம்– ஆகவே தலை போதல் என்பதன் உட்பொருளைக் காண்பதே பொருத்தம்.

பிரம்மா, தக்ஷன் கதைகளை இன்னும் ஒரு பகுதியில் காண்போம்.

TAGS:– தலை போன, தலை இழந்த கடவுள், விஷ்ணு தலை, யானைத் தலை

–தொடரும்

அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன் ! (Post No.4415)

Written by London Swaminathan 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 13-15

 

 

Post No. 4415

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சோழநாட்டில் திருமங்கை என்னும் ஊரில் பிராமண குலத்தில் உதித்தவர். சிறுவயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுச் செந்தமிழில் விளையாடினார். ஆழ்வார்கள் பாடிய அமுதப் பாசுரங்களைப் பருகினார். இராமானுஜர் நூற்று அந்தாதி பாடிய திருவரங்கத்தமுதனார் வம்சத்தில் தோன்றியவர். கோனேரி அப்பனையங்கார் இவரது பேரன். ‘குலத்தளவே ஆகுமாம் குணமென்னும்’ ஔவையார் மொழிக்கேற்ப, வைணவ குலத்தின் ஆசார அனுஷ்டானங்களை அப்படியே பின்பற்றி வந்தார். வீர வைஷ்ணவராகத் திகழ்ந்தார். பெருமாளின் அருளில் பிறந்த பிள்ளை ஆதாலால் பிள்ளைப் பெருமாள் ஆனார். ஆனால் பெற்றோர் சூட்டிய திரு நாமம்- ரங்கநாததாசன். மற்றொரு பெயர் மணவாளதாசன்.

 

சுமார்  400 ஆண்டுகளுக்கு முன்னர்   திருமலை நாயக்கர் (1623-1659)  காலத்தில் வாழ்ந்த  பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் , நாயக்கரின் அரண்மனையில் செய்த அற்புதத்தை முன்னரே எழுதியுள்ளேன் ( கீழே இணைப்பு முகவரி உள்ளது). இப்பொழுது அவர் செய்த மேலும் சில அற்புதங்களைக் காண்போம். தவ வலிமையாலும், சொல் புலமையாலும் அவர் பல அற்புதங்களைச் செய்தார்; யமகம், சிலேடை, திரிபு என பல வகைப் பாடல்களை பாட வல்லவரான அவர் அஷ்டப் பிரபந்தம் என்று அழைக்கப்படும் எட்டு அருமையான தமிழ் நூல்களை மொழி அன்பர்களுக்கு வழங்கியுள்ளார். “அஷ்டப் பிரபந்தம் படித்தவன் அரைப் பண்டிதன்” என்னும் சொல் வழக்கினால் அதன் பெருமை நன்கு விளங்கும். அதாவது, அத்துணை சிறிய அளவு படித்துவிட்டாலே பண்டிதன் என்னும் பாதையில் பாதி தூரம் சென்றவர் ஆகிவிடுவோம்.

 

பாலும் தேனும் அமுதும் கைக்கும்படி பாட வல்லவர். கவிநயம் உணர்ந்த புலவரெலாம் இவரை திவியகவியெனக் கொண்டாடும் சிறப்பு வாய்ந்தவர் (திவிய= திவ்ய = தெய்வப் புலவர்)

இவர் தொடர்பாக வழங்கும் இன்னும் ஒரு சொல் வழக்கு, “அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன்” — என்பதாகும் இதற்கு இரு வேறு விளக்கங்கள் உண்டு.

ஐயங்காருக்கு ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டுள்ள அரங்கநாதனைப் பாடுவதிலே பேரின்பம் கிடைத்தது. ஆதலால் வேறு எவரையும் பாட மாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருந்தார். பார் புகழும் திருவேங்கடத்தானைப் பாடாத ஆழ்வார் இலையே; அவர் மீதும் உங்கள் செந்தமிழில் இனிய கீதம் இசைக்கக் கூடாதா? என்று அன்பர்கள் வேண்டினர். ஆனால் இவரோ மாட்டேன் என்று சொல்லிவிட்டார். திருப்பதி மலையில் வீற்றிருந்த வெங்கடாசலபதியைத்தான் இவர் மலை மேதுள்ள குரங்கன் என்று சொன்னார். இரு பொருள்படும் சிலேடைக் கவியில் வல்லவர் அல்லவா?

 

கிருஷ்ணமாச்சாரியார் சொல்லும் விளக்கம்

 

“ஒரு நாள் இரவில் இவர் கனவில் திருவேங்கடத்தான் தோன்றி எம்மையும் பாடுக என்றனன். அப்போது ‘மாட்டேன்’ என்று சொல்லி மறுத்து விட்டார் இதைத் தொடர்ந்து இவருக்கு கழுத்தில் கண்டமாலை தோன்றியது உடனே தம் தவற்றை உணர்ந்து திருவேங்கட மாலை, திருவேங்கடத்தந்தாதி என்று இரண்டு பிரபந்தங்களைப் பாடினார்; கண்டமாலை நோயும் காணாமற் போயிற்று!”

 

இது 1906 ஆண்டில் திவான் பகதூர் கிருஷ்ணமச்சாரியார் எழுதிய விளக்கம்.

இது சென்னை பல்கலைக் கழக பாடபுத்தகமாக அங்கீகரிக்கப்பட்டதால் இதுவே சரியான விளக்கம்.

 

சிலர் ஐயங்கார் குறிப்பிட்டது ‘மந்தி’ பாயும் வேங்கட மலை என்ற பொருள் அல்ல; குரங்கன் என்பது மானைக் (குரங்கம்) கையில் ஏந்திய சிவனைக் குறிப்பிட்டது என்பர். சைவர்கள் இவரிடம் வந்து சிவனைப் பாடும்படி கேட்ட போது இவ்வாறு சொன்னதாகக் கதை கட்டிவிட்டனர்.

 

 

இவருடைய கவிகளில் அப்பர் பெருமான், வள்ளுவப் பெருமான் ஆகியோரின் தாக்கத்தைக் காணலாம்.

“கற்றதனால் பயன் என் கொல் வாலறிவன்

நற்றாள் தொழா அர் எனின்” என்பான் வள்ளுவன்.

ஐயாங்காரோ 14 உலகம் சுற்றி வந்தாலும், பல நூல்கள் கற்றார் எனினும் அரங்க நாதனை வழிபடாவிட்டால் யாது பயன்? என்கிறார்:

கற்றாரெனினும் பதினாலுலகுங்

கண்டாரெனினுந் தண்டா மிருபற்

ற்றாரெனினுந்த் திருமாலடியார

ல்ரல்லாதவர் வீடில்லாதவரே

பொற்றாமரையாள் கணவன் றுயிலும்

பொற்கோயிலையே புகழ்வார் பணிவார்

மற்றாரெனினும் பெற்றாரவரே

வானோர் திருமாமணி மண்டபமே

–திருவரங்கக் கலம்பகம்

 

அரங்கனைப் புகழ்வார் மட்டுமே வைகுண்டத்திலுள்ள திருமாமணி மண்டபத்தைப் பெற்றவர்கள் என்பது இதன் பொருள்.

 

 

 

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து

    தரணியொடு வானாளத் தருவ ரேனும்

மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்

    மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்

அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்

    ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்

    அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே

 

என்று அப்பர் பாடினார் சிவபெருமான் மீது.

இதன் எதிரொலியை ஐயங்கார் பாடலில் காணலாம்:-

 

பாதியா யழுகிய கால்கையரேனும்

பழிதொழிலு  மிழிகுலமும் படைத் தாரேனும்

ஆதியா யரவணையா யென்பராகி

லவரன்றோ நாம் வணங்கு  மடிகளாவர்

சாதியா லொழுக்கத்தான் மிக்காரேனுஞ்

சதுர் மறையால் வேள்வியாற் றக்கோரேனும்

போதினான் முகன் பணியப் பள்ளி கொள்வான்

பொன்னரங்கம் போற்றாதோர் புலையர்தாமே.

 

 

இவர் பாடிய எட்டு நூல்கள் (அஷ்டப் பிரபந்தம்) பின் வருமாறு:

 

திருவரங்கத்தந்தாதி – 105 பாடல்கள்

திருவரங்கக் கலம்பகம் – 105

திருவரங்கத்து மாலை- 112

திருவேங்கட மாலை -103

திருவேங்கடத்தந்தாதி-101

அழகர் அந்தாதி- 101

108 திருப்பதி அந்தாதி-114

ரெங்கநாயகர் ஊசற்றிரு நாமப் பாடல்கள் -32

 

ஆகமொத்தம் – 773

 

இவர்  திரு நறையூர் நம்பி விஷயமாக மேக விடு தூது ( 205 பாடல்கள்), வீர வைணவ நிலையை நாட்டும் விடுதிக் கவிகள் 32  ஆகிய பாடல்களையும் பாடியிருக்கிறார்.

ஒருமுறை திருவரங்கத்துக் கோவில் பசு ஒன்று பொது நிலத்தில் மேய அதை சைவர்கள் பிடித்து வைத்துக்கொண்டனர். சிவன் மீது பாடல் பாடினால் அதை விடுவிப்போம் என்றனர். அவரும் சம்மதித்தார். அவர்கள் அருகிலுள்ள சிவத் தலமான திருவானைக் காவலைச் சேர்ந்தவர்கள். பசு இல்லாமல் விசுவ ரூப தரிசனம் தடைப்படுமே என்று அஞ்சிய ஐயங்கார் பாடலைப் பாடுவதாகவும் உடனே அதை விடுவிக்க வேண்டும் என்றும் நிபந்தனை போட்டார். அவர்கள் பாடலைப் பாடுங்கள் என்று சொன்னவுடன் மங்கை பாகன் என்று தொடங்கி பின்னர் முடித்துத் தருவதாகச் சொன் னார். பசுவும் விடுதலை பெற்றது பின்னர் அவர் பாடிய பாடலோ சிவனை விட உயர்ந்தவர் பெருமாள் என்று முடிந்தது! இதோ அந்தப் பாடல்:–

 

சிவனை விட உயர்ந்தவர்!

 

மங்கைபாகன் சடையில் வைத்த கங்கைநீர் யார்பதத்து நீர்

வன்சமேவு முனிவனுக்கு மைந்தனான தித்ல்லையோ

செங்கையாலிரந்தவன் பால மார கற்றினார்

செய்ய தாளின் மலரரன் சிரத்தினா தில்லையோ

வெங்கண் வேழமூலமென்ன வந்ததுங்கள் தேவனோ

வீறு வாண லமரில் அன்று விரலழிந்ததில்லையோ

அங்கண் ஞால முண்டபோது வெள்ளி வெற்பகன்றதோ

ஆதலா ரங்கனின்றி வேறு தெய்வமில்லையே

 

 

புராணக் கதைகளில் சிவனுக்கும் மேலாக விஷ்ணு செய்த விஷயங்களை உள்ளடக்கியது இப்பாடல்; கங்கை நீர் விஷ்ணுவின் பாதத்திலிருந்து சிவன் தலைமீது விழுந்தது. விஷ்ணு உல கையே உண்டபோது அதில் கயிலையும் சென்றது சிவன் கை  விரலில் சிக்கிய பிரம்மனின்  கபாலம்   விஷ்ணுவால் அகன்றது என்றெல்லாம் பாடித்தீர்த்தார்.

 

 

சுமார் எண்பது ஆண்டுக் காலம் வாழ்ந்த ஐயங்காரை, அவர் திருவரங்கத்தானை வழிபட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு நொண்டிப் ப்சு மோதியது ; அவர் அங்கேயே உயிரைவிட்டு அரங்கன் திருவடிகளை அடைந்தார்.

சைவ- வைணவ சண்டை ஒரு புறம் இருக்க,செந்தமிழ்க் கடலில்  ஐயங்கார் இயற்றிய பல கவிதை முத்துக்கள், ஐயங்கார் மூலம் சேர்ந்தது என்றால் அது மிகையல்ல!

 

ஐயங்கார் செய்த அற்புதம்

ஐயங்கார் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ஐயங்கார்/

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் என்பவர் செய்த அற்புதம்பற்றி 1908 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்ப் பெயரகராதியில் ஈக்காடு இரத்தினவேலு …

 

–Subham–

திருப்புகழ் ஓதுதல் : ஒரு வழிகாட்டி (Post No.4414)

Written by S.NAGARAJAN

 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-58 am

 

 

Post No. 4414

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

திருப்புகழ் பெருமை

திருப்புகழ் ஓதல் : ஒரு வழிகாட்டி (திருப்புகழ் கைட்)!

 

ச.நாகராஜன்

 

1

அருணகிரிநாதர் அருளியுள்ள திருப்புகழின் மஹிமையை முற்றிலுமாக யாராலும் உரைத்திடல் இயலாது.

திருத்தணிகையில் அவர் அருளியுள்ள திருப்புகழ் “வீ ர ஜெயத் திருப்புகழ் என்று கொண்டாடப்படுகிறது.

அந்தப் பாடல் வருமாறு:

 

 

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

    செகுத்தவ ருயிர்க்குஞ்               சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

    திருப்புகழ் நெருப்பென்               றறிவோம்யாம்

 

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

    நிசிக்கரு வறுக்கும்                  பிறவாமல்

    நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

நிறைப்புக ழுரைக்குஞ்                    செயல்தாராய்

 

தனத்தன தனத்தந் திமித்திமி  திமித்திந்

    தகுத்தகு தகுத்தந்                     தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

    தளத்துட னடக்குங்                   கொடுசூரர்

 

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

   சிரித்தெரி கொளுத்துங்

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

   திருத்தணி யிருக்கும்                 பெருமாளே

 

அற்புதமான இந்தத் திருப்புகழை எத்தனை தரம் படித்தாலும், பயின்றாலும் அதன் முழுப் பொருளையும் பெருமையையும் உணர்ந்ததாக ஆக முடியாது!

 

அத்துணை பொருள் செறிந்த புகழ்ப் பாட்டு.

 

திருப்புகழை ஓதினால் நினைத்ததும் அளிக்கும்.

மனத்தையும் உருக்கும்.

 

பிறவாமல் நிசிக் கருவறுக்கும்.

அடுத்து வரும் சொற்றொடர் அற்புதமான ஒரு சொற்றொடர்

எதையும் எரிக்கும்! நெருப்பையும் கூட எரிக்குமாம் திருப்புகழ்

 

மலையைக் கூடப் பொடிப் பொடி ஆக்கி விடும்.

அப்படிப்பட்ட பெருமையை உடைய அற்புதமான திருப்புகழை ஓதும் செயலை எனக்குத் தருவாயாக, திருத்தணி உறை பெருமாளே என்கிறார் அருணகிரிநாதர்.

அவர் பாடிய திருப்புகழுக்கான பெருமையும் இதில் தான் உள்ளது; அது உரைக்கும் முருகனின் பெருமையும் இதில் தான் உள்ளது.

 

 

2

    இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான், ஜெர்மனி ஆகிய பகை நாடுகள் இந்தியா மீது குண்டுகள் வீசும் அபாயம் ஏற்பட்டதால் மக்கள் மிகவும் பீதியுற்றனர்.

 

 

     அப்போது வள்ளிமலைத் திருப்புகழ் ஸ்வாமிகள் மக்களின் பீதியை அகற்ற திருப்புகழ் பாராயணக் குண்டு என்னும் நூலை 1942ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்டார்.

அந்த நூலின் முகவுரையில், “இத்திருப்புகழ்ப் பாராயணக் குண்டு ஜெர்மனி, ஜப்பான் குண்டுகளை அடக்கவல்ல பேராற்றல் வாய்ந்த எதிர் குண்டு. சூர சம்ஹார காலத்தும் முருகன் திருப்புகழ் வெற்றியே போர்க்களத்தில் முழங்கிற்று என்பது,

 

 

   “கஜரத பதாகிநி அரக்கர் துணி பட்டுவிழு

  களமுழுதும் வாழிய திருப்புகழ் முழக்குவன

கடிய குணத்த சினத்த ஸஹத்ர யோஜனை

     நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய

காத நூறாயிர கோடி வளைந்தன

   பூத வேதாளம அநேக விதங்களே

 

 

என வரும் பூத வேதாள வகுப்பால் ஏற்படுவதால், போர்க்களத்தும், மற்றும் எல்லாவிடத்தும் இறைவன் திருப்புகழை ஓதி எளிதில் ஸுகம் பெறலாம். திட புத்தியுடன் நித்திய பாராயணம் செய்தால் இத்திருப்புகழ்க் குண்டின் ஆற்றலையும் ப்ரபாவத்தையும் அநுபவத்தில் காணலாம் என்று இவ்வாறு ஸ்வாமிகள் அருளினார்.

அனைத்துத் துன்பங்களையும் விடுவிக்க வல்ல திருப்புகழ்த் தொகுப்பை ஸ்வாமிகள் அருளினார். அதைக் கீழே காண்போம்.

 

 

 

3

1.பாடும் பணி பெற – கந்தரனுபூதி – ஆடும் பரிவேல்

2.உயிர்க்கு ஆதரவு –  திருப்புகழ் –  உம்பர்தருத்தே

3.எழுந்தருள வேண்டுதல் – திருப்புகழ் – சென்றே இடங்கள்

4.கோள்கள் ஒடுங்க – கந்தரலங்காரம் – நாள் என் செயும்

  1. திருப்புகழ் நெருப்பு – திருப்புகழ் – சினத்தவர் முடிக்கும்
  2. தரிசனப் பாடல் – கந்தரலங்காரம் – ஓலையும் தூதரும்
  3. வேலும் மயிலும் துணை – கந்தரலங்காரம்-விழிக்குத் துணை
  4. வேலின் ப்ரபாவம் கூறி பகைவரை வெல்ல – வேல் வகுப்பு பருத்த முலை ; ஸுரர்க்குமுநிவரர்க்கும்; தருக்கி நமன்; திரைக்கடலை உடைத்து ; கந்தரலங்காரம்- தேரணியிட்டு;

வேல்வாங்கு வகுப்பு – திடவிய நெஞ்சுடை; அடவி படும்ஜடை;

வடவை இடும்படி;

 

 

  1. பிரார்த்தனை பாக்களின் அடிகள்
  2. கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும்

    என்றன் உள்ளத் துயரை ஒழித்தருளாய்

  1. அஞ்சா நெஞ்சாக்கம் தரவல பெருமாளே
  2. ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே
  3. இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே
  4. ஒருக்கால் முருகா பரமா குமரா உயிர்கா என ஓதருள் தாராய்
  5. நவர் வாட்டோமர சூலம் தரியாக் காதிய சூரும்

         தணியாச் சாகரம் ஏழும்      கிரி ஏழும்

        சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலும் நீலம்

         தரிகூத்தாடிய மாவும்         தினைகாவல்

       துவர்வாய்க் கானவர் மானும் சுரநாட்டாள் ஒரு தேனும்

           துணையாத் தாழ்வற வாழும்     பெரியோனே!

             துணையாய்க் காவல் செய்வாய்!

 

7.வேலுமயிலும் நினைத்தவர் தந்துயர் தீர அருள்தரு கந்த!

   

  1. பதினால் உல கத்தினில் உற்றுறு பக்தர்கள்

    ஏது நினைத்ததும் மெத்த அளித்தருள்    இளையோனே

  1. மொழியும் அடியார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு

          முனிய அறியாத தேவர்               பெருமாளே

  1. வேண்டிய போதடியர் வேண்டிய போகமது

      வேண்ட வெறாதுதவு               பெருமாளே

  1. வேல் எடுத்த ஸமர்த்தை உரைப்பவர்

       ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே

  1. அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன

          அவைதரு வித்தருள்          பெருமாளே

**

 

  

  1. நவக்ரஹ சேஷ்டை நீங்க- கந்தரனுபூதி – சேயவன் புந்தி

          கந்தரலங்காரம் – மயில் துணை -குசைநெகிழா

           கந்தரலங்காரம் – சேவல் துணை -படைபட்ட

11.மனக்கவலை நீங்க – கந்தரனுபூதி -எந்தாயும்

  1. அச்சமற்ற வாழ்வுற – கந்தரலங்காரம் – சேந்தனைக்
  2. தாழ்வின்றி வாழ கந்தரலங்காரம் – சேந்தனை
  3. நாம விசேஷப் பலன் – கந்தரலங்காரம் – முடியாத் துயர
  4. திக்பந்தனம் – கந்தரலங்காரம் – தடக்கொற்ற

குறிப்பு: சலங்காணும், மடங்கல் நடுங்கும், வேலன் வாய்த்த திருப்புகழ்,கருப்புகழாம்,ஏகாந்த வீரம் போற்றி ஆகிய பாடல்கள் மட்டும் இங்கு மேலே குறிப்பிடப்படவில்லை.

 

 

4

இந்தத் திருப்புகழ் பாராயணக் குண்டு யுத்த காலத்துக்கு மட்டுமானது அல்ல; தினசரி வாழ்க்கை என்னும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எந்தக் காலத்திற்கும் உகந்தது.

திருப்புகழைப் பாராயணம் செய்வோம்; இகபர சௌபாக்கியம் அடைவோம்.

*****

புறநானூற்றில் நரகம்! திருக்குறளில் நரகம்!! (Post No.4407)

Written by London Swaminathan 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 10-51 am

 

 

Post No. 4407

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழர்களின் பண்பாடு இந்துப் பண்பாடே. அவர்களுக்கு பாவம், புண்ணியம், சுவர்க்கம், நரகம், மறு பிறப்பு, உருவ வழிபாடு, விதி, கர்ம வினை, யாகம், யக்ஞம் முதலியவற்றில் நம்பிக்கை உண்டு என்பது சங்கத் தமிழ் இலக்கியத்தின் 18  மேல் கணக்கு நூல்களிலும் , திருக்குறள் அடங்கிய 18 கீழ்க்கணக்கு நூல்களிலும் விரவிக் கிடக்கின்றன. தொல்காப்பியமோவெனில் அறம், பொருள், இன்பம் (தர்ம-அர்த்த- காம) என்ற சொற்றொடரைப் பல இடங்களில் பகர்கின்றது.

 

இப்பொழுது நரகம் பற்றி மட்டும் காண்போம்.

 

ரிக் வேதத்தில் ஒரே ஒரு நரகம் பற்றி மட்டும் காண்கிறோம்.

மத நம்பிக்கையற்றோரை அவன் அதள பாதாளத்தில் தள்ளுகிறான் என்ற வாசகம் (9-73) ரிக்வேதத்தில் வருகிறது மனு நீதி நூல் 21 வகை நரகங்களை நாலாவது அத்தியாயத்தில் பட்டியல் இடுகிறது. சிவ புராணம் 28 வகை நரகங்களைச் சொல்லும். பவிஷ்ய புரா ணக் கதையில் யமலோகத்தில் நரகப் பகுதியில் நடக்கும் சித்திரவதைகள் பற்றி வருகிறது ஆனால் ரிக் வேதத்தில் சித்திரவதை முதலியன பற்றி இல்லை.

 

மரம் வெட்டினால் நரகம், பொய் சொன்னால் நரகம், பசுவைக் கொன்றால் நரகம்– என்று ஒவ்வொரு தப்புக்கும் ஏற்ற 21 வகையான நரகங்கள் பற்றி மனு பேசுகிறார். அதை மற்ற  ஒரு கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

 

தமிழில் அளறு (Tamil) , நிரயம் (Sanskrit word) என்ற இரு சொற்களில் நரகம் குறிப்பிடப்படுகிறது. சமயம் தொடர்பான சொற்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதமாகவோ, அல்லது தமிழ் மயமாக்கப்பட்ட சம்ஸ்கிருதச் சொற்களாகவோ இருக்கும் ( எ.கா. யூப, ஆகுதி). ஆனால் நிரயம், அளறு என்ற சொற்கள் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதால் இது இற க்குமதி செய்யப்பட்ட விஷயமன்று, தமிழர்களின் பழைய நம்பிக்கை என்பது புலப்படும்.

 

அளறு என்பது சங்க காலத்தில் சேறு, சகதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு, திருவள்ளுவர் காலத்தில் நரகம் என்ற பொருளுக்கு ‘பதவி உயர்வு’ பெற்றுவிடுகிறது!

சுவர்க்கம் (துறக்கம்) பற்றிப் பெரும்பாலான இடங்களில் வருவதால் தமிழர்கள் புண்ணியவான்கள் என்பதும் பெறப்படும்.

 

முதலில் புறநானூற்று நரகத்தைப் பார்ப்போம்:-

 

இது மிகவும் பழைய பாட்டு. சுமார் 2100 ஆண்டுகளுக்கு முன் நரிவெரூஉத் தலையார் பாடியது.

சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக! என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத் தலையார் பாடியது:-

 

எருமை அன்ன கருங்கல் இடை தோறு,

ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,

கானக நாடனை! நீயோ, பெரும!

நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:

அருளும் அன்பும் நீக்கி, நீங்கா

நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,

குழவி கொள்பவரின், ஓம்புமதி!

அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே”.

 

பொருள்:

எருமை போன்ற கரிய பாதைகள் உடைய இடமெல்லாம் பசுக்கூட்டம் போல யானைகள் உலவும் காட்டிற்கு உரிய சேர மன்னனே! நீயோ பெருமகன்! ஆகையால் ஒன்று சொல்கிறேன், கேள். அருளையும் (கருணை) அன்பையும் நீக்கியவர்கள் நரகத்தில் வீழ்வர். அத்தகையோரோடு சேராதே. பெற்ற தாய் குழந்தையைப் பாதுகாப்பது போல, உன்னுடைய நாட்டு மக்களைக் காத்து வருவாயாக. அரச பதவி எளிதில் கிடைப்பதன்று. ஆகையால் கருணையுடன் செயல்படு.

 

(நரகம் பற்றிய கருத்து, ரிக் வேதக் கருத்தை ஒட்டிச் செல்கிறது).

 

திருக்குறளில் நரகம்!

 

பேதை என்பவன் யார் தெரியுமா? ஒரு பிறவியிலேயே எல்லா அட்டூழியங்களையும் செய்து ஏழு பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்தைச் சேர்த்துக் கொள்பவன் பேதை!

 

ஒருவருக்கு லாட்டரி பரிசு கிடைத்துவிட்டால், அவனுக்கு என்ன கவலை? இனி ஏழு தலைமுறைகளுக்குக் கவலை இல்லை என்போம்.

ஒருவனுடைய தந்தை நிறைய பணத்தை ஒருவனுக்கு உயில் எழுதி வைத்துவிட்டு இறந்தால், அவன் எதற்கு வேலைக்குப் போகவேண்டும்;  அவன் அப்பன் ஏழுதலை முறைக்கான சொத்தை விட்டுச் சென்றிருக்கிறானே! என்று பேசுவது உலக வழக்கு.

 

இது போல ஒருவன் எல்லா தீய செயல்களையும் செய்வதைப் பார்த்தான் வள்ளுவன்; அம்மாடி! கவலையே இல்லை; இவன் ஏழு தலைமுறைகளுக்கு அல்லது ஏழு பிறவிகளுக்கு வேண்டிய நரகத் துன்பத்தை ஒரே பிறவியில் செய்து விட்டானே! சபாஷ்! சபாஷ்! என்கிறார் வள்ளுவர்.

 

இன்னுமொரு குறளில் செப்புவான்:

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு (919)

 

ஆரியர்களுக்கு எதிர்ப்பதம் பூரியர்கள்; இதிலிருந்து ஆங்கிலச் சொல் ஸ்பூரியஸ் SPURIOUS என்பது வந்தது

 

பொருள்

ஒழுக்கம் இல்லாத வேசிகளின் தோள், கீழ்மக்கள் (பூரியர்) சென்று விழும் நரகம் ஆகும்.

 

இதையே கிருஷ்ண பகவான் கீதையிலும் புகல்வார்:

 

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனமாத்மன:

காமக்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாதேதத் த்ரயம் த்யஜேத் (கீதை 16-21)

பொருள்:

ஒருவனுக்கு நாசத்தை விளைவிக்கும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன; அவை காமம், க்ரோதம், லோபம்; அதாவது பெண்வழிச் சேரல், சினம் அல்லது கோபம், பேராசை. ஆகையால் இம்மூன்றையும் விலக்கிவைக்க வேண்டும்.

 

 

கீதை போன்ற சமய நூல்களில் நிறைய இடங்களில் நிரயம் பற்றிக் காணலாம்.

இறுதியாக இன்னும் ஒரு குறள்:-

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு (255)

 

ஒருவன் மாமிசம் சாப்பிட மாட்டான் என்ற தர்மத்தின் அடிப்படையில் உயிர் வந்து, உடம்பில் தங்கி இருக்கிறது. அப்படி அவன் அதையும்  மீறி மாமிசம் சாப்பிட்டால், நரகம் வாயைத் திறந்து ‘லபக்’ என்று ஆளை விழுங்கிவிடும்.  பின்னர் நரகத்தின் வாய் திறக்காவே திறக்காது.

ஆளின் கதி– சகதி (அளறு என்பதற்கு சேறு, சகதி என்றும் நரகம் என்றும் பொருள் உண்டு; அலறு என்றாலும் பொருத்தமே. மக்கள் அலறும் இடம்தானே!!

திருவள்ளுவரின் கற்பனை மிகவும் அருமையான கற்பனை;  ‘நீ ஒரு உயிரைக் கொன்று முழுங்கினாய் அல்லவா? இப்பொழுது பார்! உன்னை நான் விழுங்கி விட்டேன்; இனி மேல் வாயைத் திறக்கவே மாட்டேன்’ என்று நரகம் சொல்லுமாம்.

 

திருக்குறள் பொது மறையன்று. யார் இந்து மதக் கொள்கைகள், கொல்லாமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளோரோ அவர்களின் மறைதான் திருக்குறள்.

 

இதோ நான் முன் சொன்ன கதை

பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் …

https://tamilandvedas.com/…/பவிஷ்ய-புராணத்தி…

 

1 Oct 2017 – பவிஷ்ய புராணத்தில் யமன் பற்றிய ஒரு சுவையான கதை உளது; அதை நான் இப்போது உரைப்பேன்: …யமன் கதை, பவிஷ்ய புராணம், விஜயா, பாவ புண்ணியம், நரகம் … கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி …

 

TAGS: நரகம், அளறு, நிரயம், பாவம், புறநானூறு, மனு

–சுபம், சுபம் —