பத்து உலக மஹா இலக்கிய அதிசயங்கள் (Post No.4575)

Written by London Swaminathan 

 

Date: 2 JANUARY 2018

 

Time uploaded in London- 8-21 AM

 

 

Post No. 4575

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

உலக மஹா அதிசயம் இந்தியாவில் நடந்தது. அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது.  இது இந்திய நாகரீகத்தின் தனித் தன்மையைக் காட்டுகிறது. அதற்குப் பின்னர் மேலும் சில அதிசயங்கள் நடந்தன. சுருக்கமாக விளம்புகிறேன்.

 

ஒரு நாட்டின் நாகரீக முன்னேற்றத்தைக் காட்டும் அளவுகோல் எது?

அந்த நாட்டின் இலக்கியங்கள் ஆகும்.

அதிசயம் 1

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழியில் சுமார் 450 புலவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேலான கவி தைகளை எழுதினர். அதற்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்கிருதத்தில் இன்னும் 400 புலவர்கள் கவிபாடினர். அவர்கள் பாடியவை ஆயிரத்துக்கும் மேலான துதிப் பாடல்கள் ஆகும். இது முதல் அதிசயம் ஆகும். ஏனெனில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு 850 புலவர்கள் கூட்டாகக் கவி பாடியதில்லை. சங்க இலக்கியப் புலவர்கள் அத்தனை பேருடைய பெயர்களும் நம்மிடம் இருக்கின்றன இதே போல உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதம் பாடிய 400 கவிஞர்களின் பெயர்களும் நமக்குக் கிடைத்தன.

அதிசயம் 2

இரண்டாவது உலக அதிசயம் இதிலுள்ள பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை! உலகில் வேறு எங்கும் இவ்வளவு பெண்பாற் புலவர்களின் குழுவைக் காண முடியாது. தமிழில் குறைந்தது 25 பெண்பாற் புலவர்களையும் வேதத்தில் குறைந்தது 20 பெண் புலவர்களையும் காண்கிறோம்.

 

இந்த இரண்டு அதிசயங்களும் காட்டும் உண்மை என்ன?

உலகிலேயே மிகப் பழமையான நாகரீகம் இந்து அல்லது இந்திய நாகரீகமே. எந்த ஒரு நாடும் இவ்வளவு அறிஞர் பெருமக்களை அக்காலத்தில் அளிக்கவில்லை.

 

பழமையான நாகரீகம் என்பதோடு மிகவும் முனேறிய நாகரீகம் என்பதும் இதனால் அறியப்படுகிறது.

 

தமிழர்களுக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கர்கள் எழுதி இருந்தாலும் தமிழர்களைப் போல அவர்கள் மாபெரும் சங்கம் வைத்து மொழியை வளர்க்கவில்லை . வேதங்களோ கிரேக்க மொழிக்கு மிக மிக முந்தியவை.

அதிசயம் 3

மூன்றாவது இலக்கிய அதிசயம் வேதங்களைப் பாதுகாத்த முறையாகும்; பிரமாண்டமானதொரு இலக்கியத்தை — அதாவது 400 க்கும் மேலான புலவர் பாடியவை- ஆயிரத்துக்கும் மேலான துதிகளைக் கொண்டவை — உலகில் எங்குமே வாய் மொழியாகப் பாது காக்கப் படவில்லை இதுவும் இந்திய மக்களின் அறிவாற்றலுக்குச் சான்று பகரும்.

 

   

அதிசயம் 4

நாலாவது அதிசயம் பிரம்மாண்டமான இலக்கியக் குவியலாகும். தமிழர்களும், கிரேக்கர்களும், எபிரேயர்களும் எழுதுவதற்கு முன்னதாக பிரம்மாண்டமான துதிப்பாடல் தொகுப்பை- சமய உரை நடைத் தொகுப்பை– வேத கால இந்துக்கள் உருவாக்கிவிட்டனர். அதாவது நான்கு வேதங்களில் மட்டுமே 20,000 க்கும் மேலான மந்திரங்கள்; அதற்குப் பின்னர் பிராமண இலக்கியங்கள், ஆரண்யகங்கள் உபநிஷத்துக்கள் என்னும் உரை நடை இலக்கியங்கள் தோன்றின. இதையும் ஒப்பற்ற முன்னேற்றம் என்று சொல்லலாம்.

 

எகிப்திய நாட்டில் பபைரஸ் (Papyrus) என்ற புல்லில் பல நூல்கள் உள. சுமேரியாவில் – மத்திய கிழக்கில் — 60,000 களிமண் பலகைகள் (Clay Tablets) உள. ஆயினும் இலக்கியம் என்று சொல்லும் நயமுள்ள பகுதிகள் மிகச் சிலவே.

 

அதிசயம் 5

ஐந்தாவது அதிசயம் உபநிஷத்துக்கள் என்னும் தத்துவ நூல்களாகும். இந்தியாவில்  இந்த தத்துவ நூல்கள் உருவாகிய சில நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜொராஸ்டர், மோஸஸ், மஹாவீரர், புத்தர், கன்பூசியஸ் என்று உலகின் பல பகுதிகளில் மஹான்கள் தோன்றினர்.

 

அதிசயம் 6

ஆறாவது அதிசயம் மிக நீண்ட மன்னர் பட்டியலும், குருமார்கள் (Long List of Kings and Teachers) பட்டியலும் ஆகும். 140 தலைமுறைகளின் வரிசை அப்படியே புராணங்களில் உள்ளன. ஐம்பதுக்கும் மேலான ‘குரு’க்களின் பெயர்கள் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் உள்ளன. இப்படிப்பட்ட நீண்ட பட்டியல் உலகில் வேறெங்கும் இல்லை; வரலாற்று ஆசிரியர்களாகக் கஷ்டப்பட்டு நமக்குக் கொடுத்த பட்டியல்தான் உள்ளது– கி.மு இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பெரோரஸஸ் (Berossus) முதலியோர் கொடுத்த வரலாற்றுப் பட்டியல் பல முரண்பாடுகளுடன் இருந்ததை வரலாற்று ஆய்வாளர்கள் தட்டிக்கொட்டிச் சரிப்படுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் முன்னதாக கிரேக்க ஆசிரியர்கள் நம்முடைய 140 தலை முறை பற்றி வியப்போடு எழுதிவைத்துள்ளர்.

 

அதிசயம் 7

ஏழாவது இலக்கிய  அதிசயம் அசோகர் கல்வெட்டுகளாகும் . கி.மு மூன்றாம் நூற்றன்டில் திடீரென  ஆப்கனிஸ்தான் முதல் இலங்கையின் தென்கோடி வரை பிராமி லிபியில் (Brahmi script) பாலி மொழியில் கல்வெட்டுகள் தோன்றியதாகும். இதில் மிக முக்கியமான உண்மை வெளியாகியது. இந்தியர்கள் மஹா மேதாவிகள் — பட்டி தொட்டி தோறும் எழுத்தறிவு மிகுந்து இருந்தது. கர்நாடகத்தில் கூட அசோகர் கல்வெட்டுகள் கிடைத்து இருக்கின்றன. சீன யாத்ரீகர் குறிப்பிடும் காஞ்சீபுரக் கல்வெட்டுகள் மட்டும் படை எடுப்பில் அழிந்துவிட்டன. எழுத்தறிவு இருந்ததால்தான் இப்படி கல்வெட்டுகளைக் காண முடிகிறது. இது உலக அதிசயம் (Brahmi script from Afghanistan to Kandy in Sri Lanka). இப்படிப்பட்ட பெருநிலப்பரப்பில் உலகில் வேறு எங்கும் 2300 ஆண்டுகளுக்கு முன் காணக் கிடைக்காது. இந்தியர்கள் எந்த அளவுக்கு எழுத்து அறிவு பெற்று இருந்தனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

அதிசயம் 8

எட்டாவது உலக அதிசயம் பிராமி என்னும் எழுத்தாகும். இந்த லிபி மூலம் தமிழ் உள்பட தெற்காசிய எல்லா மொழிகளுக்கும் லிபியை/ எழுத்தை அளித்த இலக்கிய அதிசயம் ஆகும். இது பீனிசிய எழுத்தில் இருந்து வந்ததாகவும் வரவில்லை என்றும் இரு வேறு கருத்தூக்கள் உண்டு– ஆயினும் இதைக் கண்டு வெளிநாட்டினர் வியக்கின்றனர். ஏனெனில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய சம்ஸ்கிருத எழுத்து முறைக்குத் தக, அகர (alphabet) வரிசைப்படி, இந்த எழுத்து முறை அமைந்துள்ளது– மற்ற மொழி எழுத்துக்கள் இப்படி அமையவில்லை என்பது அவர்கள் கூற்று.

 

 

அதிசயம் 9

ஒன்பதாவது உலக மஹா இலக்கிய அதிசயம் பாணினியின் அத்புதமான ஸம்ஸ்கிருத வியாகரணம் ஆகும் அஷ்டாத்யாயீ என்னும் இந்த இலக்கண நூலைக் கண்டு வியக்காதோர் உலகில் இல்லை. பாரதி தனது பாடல்களில் வேத முரசு உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்று சொன்னதோடு பாணினியையும் உபநிஷத்துக்களையும் தனியாகப் புகழ்ந்து பாடியுள்ளார். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் வேறு எந்த மொழிக்கும் இலக்கண நூல் என்பதே இல்லை; இலக்கணம் இருந்ததா (?!?!) என்பதும் ஐயப்பாடே.

 

அதிசயம் 10

பத்தாவது உலக மஹா இலக்கிய அதிசயமும் இந்தியாவில் நிகழ்ந்ததே! மொழி தொடர்பான விஷயங்களை உவமையாகக் காட்டுவது, எண் தொடர்பான அடையாளக் குறியீடுகளை (Number symbolism) வைத்துப் பாடுவது. மொழி இயல் கருத்துக்களை (Linguistic remarks) வேதம் போன்ற துதிப்பாடல்களில் கூடச் சேர்ப்பது வேறு எங்கும் காணாப் புதுமை ஆகும். ஒரு சமுதாயம் இலக்கியத்திலும் மொழியிலும் (Language), மொழி இயலிலும் (Linguistics)  வளர்ச்சி அடைந்தால்தான் இத்தைகய ஜாலங்களைச் செய்ய இயலும். சொல் வேட்டுவர்களையும் வில் வேட்டுவர்களையும் ஒருங்கே கண்ட நாடு இது— அரசர்களும் கவி பாடிய நாடு இது. சங்கேத மொழியில் பாடுவதே (Secret, hidden language) எங்கள்  தொழில் என்று வேத கால முனிவர்கள் ஆடிப்பாடிய நாடு இது. இப்படிப்பட்ட ரஹஸிய விஷயங்கள் இருந்ததால் வேதத்தை எழுதாக் கற்பு என்றும் மறை (Secret, hidden meaning) என்றும் மொழி பெயர்தான் தமிழன்.

 

இவை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த  அ திசயங்கள். எகிப்திலும் பாபிலோனியாவிலும் கல் ஓவியம் இருக்கலாம்; சொல் ஓவியம் இல்லை. ஒரு தத்துப் பித்து ஜில்காமேஷை (Gilgamesh) வைத்துக் கொண்டு கூத்தாடலாம். ஆனால் ரிக் வேதத்தின் க டைசி துதிப்ப்பாடலுக்கு அது ஈடு இணையாகாது.

வேதத்தில் மொழி, மொழி இயல் பற்றி வரும் குறிப்புகளையும்        உலக நலன் பற்றி வரும் வேதத் துதிகளின் எண்களையும் குறிப்பிட்டு கட்டுரையை முடிப்பேன்

 

மொழி இயல் கூறும் துதிகள்

RV 1-164, 4-58, 8-59, 8-100, 10-71, 10-114, 10-125, 10-177

 

மொழி / பேச்சு பற்றிய துதிகள்

RV 1-164, 10-71, 4-3, 10-125

உலக நலன் பற்றிய துதிகள்

10-191, , YV 36, AV 19-60, AV 7-69, AV 3-30,

 

வாழ்க இந்தியா! வளர்க இலக்கியம்!!

 

–SUBHAM–

யவனர்களைத் தமிழர்களும் சாணக்கியனும் தாக்கியது ஏன்? (Post No.4564)

Image of Roman Wine

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 30 DECEMBER 2017 

 

Time uploaded in London- 7-54 am

 

 

Post No. 4564

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

யவனர்களைத் தமிழர்களும் சாணக்கியனும் தாக்கியது ஏன்? (Post No.4564)

 

 

யவனர்கள் யார்?, மிலேச்சர்கள் யார்? என்று மூன்று ஆண்டுகளாகச் சில ஆராய்ச்சிக்  கட்டுரைகளை எழுதிவிட்டேன். இப்பொழுது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் போலவே சாணக்கியன் காலத்திலும் ‘யவன வெறுப்பு’ இருந்ததைக் காட்டும் பாடல் கிடைத்துள்ளது அதையும் பார்ப்போம். காளிதாசன் கவிதைகளைக் கண்ட போது ஒரு புதிய எண்ணமும் மனதில் உதித்தது. அதையும் சொல்லுவேன்.

 

எனது துணிபு

 

யவனர் என்பது கிரேக்க, ரோமானிய, பாரசீக, அராபிய இனங்களைக் குறித்தது.

 

யவனர் மீது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலம் வரை இருந்த வெறுப்பு பின்னர் சிறிது சிறிதாகத் தணிந்தது.

 

யவனர்களை கடும் சொல் பேசுவோர், அவர்கள் காவல் வேலைக்கு உகந்தோர், அந்நாட்டு அழகிகள் அந்தப்புரத்தைக் காக்க உதவுவர்; நம் மொழி தெரியாததால் அரசு ரஹஸியங்களைப் பாதுகாக்க அவர்களை அரசனுக்குக் காவலாக வைக்கலாம், மதுபானம் கொடுத்து உபசரிக்க அந்த அழகிகளை அருகில் வைத்துக் கொள்ளலாம் என்ற தகவல்கள் தமிழ் , ஸம்ஸ்க்ருத நூல்களில் இருந்து தெரிகின்றன.

Image of Persian Wine

முதலில் சாணக்கியன் சொல்லும் செய்தியைக் காண்போம்:-

 

சாண்டாலானாம் ஸஹஸ்ரைஸ்ச ஸூரிபிஸ்தத்வதர்சிபிஹி

ஏகோ ஹி யவனஹ ப்ரோக்தோ ந நீ சோ யவனாத் பரஹ

 

 

 

 

“உண்மை நிலையை உணர்ந்த அறிஞர்கள் செப்பியது என்ன? ஒரு யவனன் ஆயிரம் சண்டாளர்களுக்குச் சமமானவன். யவனனை விடத் தாழ்ந்தது உலகில் எதுவுமே இல்லை”.

 

சாணக்கிய நீதி, அத்தியாயம் 8, ஸ்லோகம் 5

 

ஏன் இந்த வெறுப்பு? சாணக்கிய நீதி நூலை மொழி பெயர்த்த ஸத்ய வ்ரத சாஸ்திரி பகர்வது யாதெனில், இவர்கள் ஆட்சியைப் பிடிக்க வந்தவர்கள். மேலும் வெறுக்கத் தக்க பழக்க வழக்கங்களை உடையவர்கள் என்பதாகும்.

 

உண்மைதான் இந்துக்கள் வெறுக்கும் பசு மாமிசத்தைப் புசித்திருப்பர். அலெக்ஸாண்டர் இறந்தவுடன் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, வடமேற்கு இந்தியாவில் இந்திய-கிரேக்க வம்ஸத்தினரின் ஆட்சி நிலவியது. அவர்கள் படை எடுப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

மேலும் அவர்கள் படுத்துக் கொண்டே உணவு உண்பார்கள் என்பதும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் உள்ளது; ‘’சயானா முஞ்சதே யவனாஹா’’ என்று ஸ்லோகம் உள்ளதால் அவர்களுக்கு ‘’துர்யவனம்’’ என்ற அடைமொழி (கெட்ட யவனன்) கொடுக்கப்பட்டது. மேலும் இந்த ‘’துர் யவனம்’’ என்பதை ஸம்ஸ்க்ருத வியாகரணத்தில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை விளக்க எப்போதும் பயன்படுத்தினர். ஆக பழக்க வழக்கங்களாலும் கடும் சொற்களாலும் (மிலேச்ச பாஷை பேசியதாலும்) இவர்கள் தீண்டத் தகாதவர்கள் (சண்டாளர்) ஆனார்கள்.

 

நான்     இன்னும் ஒரு கருத்தையும் சேர்ப்பேன். ஆரம்ப காலத்தில் இவர்கள் மேலைக் கடற்கரையில் சென்ற நமது வணிகக் கப்பல்களைத் தாக்கிக் கொள்ளை அடித்திருப்பர். சந்திர குப்த மௌர்யன், அவனுக்குப் பின்னால் இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன் ஆகியோர் இவர்களை அடக்கி ஒடுக்கி வழிக்குக் கொண்டுவந்த பின்னர் கடுமை குறந்து இருக்கும்.

 

பாரஸிக மதுபானம்

என்னுடைய இன்னும் ஒரு ஆராய்ச்சி தமிழகத்துக்குப் பாரஸிக மதுபானம் வந்த செய்தியாகும். யவன அழகிகள் தமிழ் மன்னர்களுக்கு தங்கக் கிண்ணங்களில் மது பானம் வழங்கிய செய்தி சங்க இலக்கியத்தில் உள்ளது (கீழே எனது பழைய ஆய்வுக் கட்டுரைகளுக்கான லின்க் LINK உள்ளது. அவைகளில் சங்க இலக்கியம் பற்றிய விரிவான செய்திகள் காணக் கிடைக்கும்.

 

காளிதாசன் அவனது நாடகங்களான சாகுந்தலம், மாளவிகா அக்னிமித்ரம், விக்ரம ஊர்வஸீயம் ஆகியவற்றிலும் ரகு வம்ஸத்திலும் யவனர் பற்றிய பல காட்சிகளைத் தருகிறான்:

 

 

ரகுவம்ஸ ஸ்லோகம் இதோ:–

 

யவனீ முக பத்மானாம் ஸேஹே மதுமதம் ந ஸஹ

பாலாமிவாப்ஜானாம் அகால ஜலதோதுயஹ

ரகுவம்ஸம், அத்யாயம் 4, ஸ்லோகம் 61

 

 

பொருள்:

காலை வேளையில் சூரியன் உதயமானவுடன் தாமரை மலர்கின்றது. முன்பே செந்நிறம் பெற்றுள்ள தாமரை மலர்கள், சூரியனது இளம் வெய்யில் படும் பொழுது மேலும் அழகு பெறும். ஆயினும் மேகக் கூட்டம் வந்து ஒளியைத் தடுத்தால் அவை ஒளி குறைந்து காணப்படும் பாரஸீகப் பெண்களின் முகம் செக்கச் செவே என்று தாமரை போல உள்ளன. அந்த அழகிகள் மதுபானம் செய்து மேலும் அழகு பெற்றனர். ஆயினும் ரகு மன்னன், பாரஸீகம் (ஈரான் நாடு) மீது படை எடுத்து வருகிறான் என்ற செய்தியைக் கேட்டவுடன் வாடினர். ஏனெனில் மது பானம் செய்வதைத் தவிர்த்தனர்.

 

யவன என்பதற்கு வியாக்கியானம் செய்தவர்கள் கொடுக்கும் பொருள் பாரஸீகம்

 

இந்த பாரஸீக மதுதான் சங்கத் தமிழ் நூல்களிலும் பயிலப்பட்டது என்பது எனது துணிபு.

Yavana in Barhut Sculpture; 2300 year old.

ஸாகுந்தலம் என்னும் உலகப் புகழ் பெற்ற நாடகத்தில், இரண்டாம் காட்சியிலும் ஆறாம் காட்சியிலும் யவன ஸ்த்ரீகள் நடமாடுகின்றனர். மாமன்னன் துஷ்யந்தனின் படைகளுடன் வந்த பரிவாரத்தில் யவன அழகிகளும் இருந்தனராம் (இதைத் தமிழிலும் காண்கிறோம்). மன்னன் எங்கு எங்கெல்லாம் சென்றானோ அங்கெல்லாம் யவன மாது ‘வில்’லை எடுத்து வந்தாளாம்.

 

முற்கால மன்னர்களின் சபைகளிலும், அரண்மனைகளிலும் யவன மகளிருக்கு வேலைக்காரி வேலை கொடுக்கப்பட் டத்தை ஏனைய நாடகங்கள் காட்டுகின்றன. இதைத் தில் இலக்கியத்திலும் காண்கிறோம்.

 

ஆக யவனர்கள் என்பது கீழ் மட்ட வேலைக்காரர் அல்லது வேலைக் காரி என்ற பொருளிலேயே சாணக்கியனும் தமிழரும் பயின்றனர்.

 

 

காளிதாசனின் 200-க்கும் மேலான உவமைகள் சங்கத் தமிழ் நூல்களில் உபயோகிக்கப்பட்டதால் காளிதாசன், சங்க காலத்துக்கு முந்தையவன் என்பதைப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் காட்டினேன். இந்த பாரஸீக மது, யவன வேலைக்காரிகள் என்பதை இன்னும் ஒரு சான்றாகக் கொள்க!

 

 

Persia (Iran)

 

யவனர்கள் யார் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/யவனர்கள்-யார்/

 

ஆராய்ச்சிக் கட்டுரை வரைபவர்: லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண்.:–1207; தேதி:- ஆகஸ்ட் 1, 2014. சங்க இலக்கியத்திலும் பிற்காலத்தில் எழுந்த சிலப்பதிகாரத்திலும்யவனர்கள் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. இவை பெரும் புதிராக உள்ளன. யார் இந்த யவனர்? எப்போது இந்த சம்பவங்கள் நடந்தன …

சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்! | Swami’s …

swamiindology.blogspot.com/2014/08/blog-post.html

1 Aug 2014 – சேரர்கள் – யவனர் மோதல் மர்மம் நீடிக்கிறது. சேர மன்னர் ஆண்ட யவனர் நாடோ, கைகளைப் பின்னால் கட்டி தலையில் நெய் ஊற்றப்பட்ட யவனர்கள் யார் என்பதோ தெரியவில்லை.இதே போல புராணங்களும் சகர மன்னன், யவனர்களைப் பிடித்து மொட்டை அடிக்கச் செய்தான் என்று …

“மிலேச்ச” என்றால் என்ன? | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/…/மிலேச்ச-என்றால…

  1. 6 Sep 2012 – பலுச்சிஎன்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’ என்று அழைத்தனர்.

மிலேச்சர்களை அழிக்கும் கல்கி …

https://tamilandvedas.com/…/மிலேச்சர்களை-அழி…

21 Mar 2015 – … ‘மிலேச்ச பாஷை’யும் அல்ல என்பது இக்கட்டுரையின் துணிபு. முந்தைய கட்டுரைகள்:–. MLECHA: Most Misunderstood Word (Posted on 3 September,2012). “மிலேச்சஎன்றால் என்ன? (Posted on 6 September,2012) …

 

சுபம்–

மன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன்? ஏன்? ஏன்? (Post No.4553)

Written by London Swaminathan 

 

Date: 27 DECEMBER 2017 

 

Time uploaded in London- 8-09 am

 

 

Post No. 4553

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

மன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன்? ஏன்? ஏன்? (Post No.4553)

சாணக்கியன் சம்பந்தப்பட்ட கதைகளில் இன்னும் ஒரு சுவையான கதையைப் பார்ப்போம் ஏற்கனவே மெகஸ்தனீஸ்- சாணக்கியன் சந்திப்பு பற்றியும், அவலட்சண சாணக்கியனை மன்னன், பந்தியிலிருந்து தர தரவென இழுத்துவெளியேற்றியதையும், ஐயர் அன்று அவிழ்த்த குடுமியை மஹத சாம் ராஜ்யம் ஸ்தாபிக்கும் வரையும் முடியவில்லை என்பதையும் சொன்னேன்.

இதோ இன்னும் ஒரு கதை:

நந்தனின் அமைச்சர்களில் ஒருவன் சகதாரன். நவ நந்தர்கள் கொடூரமானவர்கள். ஏதோ ஒரு கோபத்தின் பேரில் சகதாரனையும் அவன் மனைவி, மகன் ஆகியோரையும் சிறையில் அடைத்தான். தினமும் ஊன்று பேருக்கும் சேர்த்து ஒரு கோப்பை பார்லி மாவு மட்டும் சாப்பிடக் கொடுத்தான். மனைவியும், மகனும் நாளடைவில் இறந்துவிட்டனர். காரணம் அவர்கள் உணவையும் சகதாரனுக்குக் கொடுத்ததே.

 

இது ஒரு புறம் இருக்க, ஒரு நாள் மன்னன் மஹாபத்ம நந்தன் உலாவச் சென்றான். அப்போது அவன் எதையோ பார்த்துச் சிரித்தான். எதிரே அரண்மனையில் பணிபுரியும் பெண் வந்தாள்;. மன்னன் சிரித்ததைக் கண்டு அந்த மாதுவும் சிரித்தாள்.

 

ஏன் சிரித்தாய் மகளே? ஏன் சிரித்தாய்? என்று வினவினான். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்புறம் சொல்கிறேனே என்று சொல்லிவிட்டு,     பயந்து ஓடிவிட்டாள். பலரையும் கேட்டாள் பதில் கிடைக்க வில்லை.

 

அவள் சிறைச் சாலைக்கும் செல்வதுண்டு. சிறையில் கிடக்கும் அமைச்சனுக்கே பதில் தெரியும் என்று அவனிடம் கேட்டாள்.

சகதாரன் உதவி செய்ய முன்வந்தான்

பெண்ணே! அரசன் சிரித்தபோது எதைப் பார்த்துக் கொண்டிருந்தான்?

பெண்:- ஒரு கால்வாய் அருகில் வந்தபோது மன்னன் சிரித்தான்.

அரசன் சிரித்தபோது அவனருகில் என்ன இருந்தது?

ஒரு பெரிய மரம் இருந்தது.

 

ஓஹோ! அந்தக் காலவாயில் ஒரு சிறிய விதை மிதந்து கொண்டிருந்தது. அது, அந்தப் பெரியமரத்தின் விதை. இந்தச் சின்ன விதையில் இருந்து இவ்வளவு பெரிய மரமா? என்று வியந்து சிரித்தான் நந்தன் என்றான் சகதாரன்.

மறுநாள் அரசனைச் சந்தித்த மாது, இதை அப்படியே சொன்னாள். இது ஒரு பணிப்பெண் சொல்லக்கூடிய விடை அன்று. யாரோ இவளுக்கு உதவி செய்திருக்க வேண்டும் என்று அரசன் எண்ணினான்.

 

அவளை அனுப்பிவிட்டு ஒற்றர்களை அழைத்து இப் பணிப்பெண் எங்கெங்கு சென்றாள் என்று விசாரித்ததில் சகதாரந்தான் இதைச் சொன்னான் என்று தெரிந்தது.

 

இவ்வளவு பெரிய அறிவாளியை சிறையில் அடைத்தோமே ஏன்று வருந்தி அவரை விடுதலை செய்தான்.

விடுதலையானபோதும் சகதாரனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. சின்னக் காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டு அதனால் மனைவியையும் மகனையும் பறி கொடுத்தோமே என்று  வருந்தினான்.

 

ஒருநாள் சகதாரன் சாலையில் போய்க்கொண்டிருந்த போது ஒரு உச்சிக் குடுமி பார்ப்பான் ஒரு புல்லின் மீது மோரை ஊற்றிக் கொண்டிருந்தான். அட! இது என்னடா அதிசயம் என்று வியந்து அவரிடமே காரணமும் கேட்டான். இந்தப் புல் தன்னை தடுக்கி விட்டதாகவும் அதை வேருடன் அழிக்க புளித்த மோரை விட்டதாகவும் சொன்னான். திட உறுதி உடைய இந்தப் பார்ப்பனன் தனது திட்டத்துக்கு உதவுவான் என்று எண்ணி அவனை பாடலிபுத்திரத்துக்கு அழைத்து வந்தான்.

 

சிறையிலிருந்து விடுதலையான சகதாரனுக்கு சடங்குகள் செய்யும் துறைக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு கிடைத்து இருந்தது. ஒரு ‘திதி’யின்போது உணவு உண்ண தான் அழைத்து வந்த பார்ப்பனனையும் அழைத்து இருந்தான். அவர்தான் சாணக்கியன். அழகு இல்லாத அவலட்சணமானவர். மன்னன் மஹாபத்ம நந்தன் மண்டபத்துக்குள் வந்தவுடன் அவலட்சணத் தோற்றம் உடைய சாணக்கியனைப் பார்த்து ஆத்திரம் அடைந்தான். முதல் வரிசையில் அவர் இருப்பதைப் பார்த்து அவரை இழுத்து வெளியே தள்ளினான். அன்றைய தினம் குடுமியை அவிழ்த்துப் போட்டு, நந்த வம்ஸத்தை வேரறுக்கும் வரை குடுமியை முடிய மாட்டேன் என்று சபதம் செய்து அப்படியே அந்த வம்ஸத்தை பூண்டோடு அறுத்து ஒழித்தான்.

 

 

இதை அவர் எப்படிச் செய்தார் என்று இன்னு ம் ஒரு கதை உண்டு. திமிர் பிடித்த மஹா பத்ம நந்தனுக்கு முறையான மஹா ராணி மூலம் எட்டுப் புதல்வர்களும் அரண்மனைப் பணிப்பெண் மூராவின் மூலம் ஒரு மகனும் உண்டு; மூரா மகன் மௌரிய சந்திர குப்தன் ஆவான். அவன் மீது எல்லோருக்கும் பொறாமை இருந்தது. சகதாரன் அவனையே மன்னன் ஆக்க எண்ணினான். ஒரு பணிப் பெண் மூலம் விஷ உணவைச் சமைத்து பரிமாறச் செய்தான் இதனால் மஹபத்மனும் எட்டு மகன்களும் இறந்தனர்.

 

நாட்டிலுள்ள குழப்ப நிலையில் அருகிலுள்ளோர் படை எடுக்கத் தயாராயினர்.

பர்வதக என்னும் மன்னனுக்குப் பாதி ராஜ்யம் தருவதாகச் சொல்லி மஹதப் பேரரசு மீது படை எடுக்க வைத்தான் சகதாரன். அவன் தன் மகன் மலைய கேதுவோடு படை எடுத்து வந்தான். நவ நந்தர்கள் இறந்ததில் வருத்தமுற்ற அமைச்சன் ராக்ஷசனும் பர்வதகனுக்குப் பாதி ராஜ்யம் தருவதாக வாக்களித்தான். ஆயினும் சாணக்கியன் அடுத்த சதியில் இறங்கினார்.  பர்வதனுக்கும் விஷ உணவு படைக்க வைத்தான் அவன் இறந்தவுடன்  மலைய கேது தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான். மாபெரும் மகத சாம்ராஜ்யத்தின் மன்னனாக மௌர்ய சந்திர குப்தன் பதவி ஏற்றான்.

 

இவை எல்லாம் செவி வழிச் செய்திகளும் நாடகம் மூலம் வந்த கதைகளும் ஆகும்.

 

எல்லாவற்றிலும் இழையோடிச் செல்லும்கருத்து சாணக்கியன் பெரிய ராஜ தந்திரி. நவ நந்தர்கள் க்ஷத்ரிய வம்ஸத்தவர் அல்ல; பிராமணர்களுக்கு எதிராக பெரும் கொடுமைகளை இழைத்தனர். அகந்தையின் உறைவிடமாக உலவினர். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும் என்னும் கொள்கைகொண்ட சாணக்கியன் ராஜ தந்திரம் மூலம் வென்றான்.

பாரத நாட்டுக்கு இதனால் கிடைத்த பரிசு– அர்த்த சாஸ்திரம் என்னும் உலகின்  முதல் பொருளாதார நூல்; மற்றும் பல நீதி சாஸ்திர நூல்கள். அலெக்ஸாண்டரையும் பயப்பட்டுத் திரும்பிப் போக வைத்த பிரம்மாண்டமான மகதப் பேரரசின் படை பலம்.  அதில் உதித்தவனே        மாமன்னன் அசோகன்.

–சுபம்–

 

அண்ணன் தலையைக் கண்டு ஆனந்தம் அடைந்த அவுரங்கசீப் (Post No.4540)

Image of Shah jahan

Written by London Swaminathan 

 

Date: 24 DECEMBER 2017 

 

Time uploaded in London- 12-42

 

 

Post No. 4540

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

மொகலாயர் வரலாறு கொலைகார வரலாறு; அப்பாவை மகன் கொல்வது பரம்பரையாக நடந்தது; சஹோதர்களை சஹோதரர்கள் தீர்த்துக்கட்டுவதும் தொடர்ந்து நடந்தது.

 

நிக்கலோ மனூச்சி (Nicolao Manucci  1638- 1717) என்பவர் இதாலிய பயணி; அவர் இந்தியாவுக்கு வந்து மொகலாய மன்னர்களிடம் வேலை பார்த்தார். தாரா சிகோஹ், ஷா ஆலம், ராஜா ஜெய் சிங், கிராட் சிங் ஆக்யோர் சபைகளில் வேலை பார்த்தார். அவர் நிறைய சுவையான — சோகமான- விஷயங்களை எழுதிவைத்துள்ளார். இதோ ஒரு சோகக் கதை.

Image of Aurangazeb

ஷாஜஹானின் மகன் தாரா சிகோஹ்; அவருடைய தம்பி மதவெறி பிடித்த அவுரங்கசீப்.

 

மொகலாய மன்னன் ஷாஜஹானுக்கு பல புதல்வர், புதல்வியர் உண்டு. அவருக்கு அடுத்தாற்போல அரசு கட்டிலைப் பிடிப்பது யார் என்பதில் அவருடைய புதல்வர் தாரா ஷிகோஹுக்கும் அவுரங்கசீப்புக்கும் இடையே பெரிய போட்டி நடந்தது போட்டி அல்ல; யுத்தமே நடந்தது. ஷாஜஹானைச் சிறைப்பிடித்து ஆக்ரா  சிறையில் வைத்தனர். இங்கிருந்தவாறே தாஜ் மஹலைப் பார்த்துக்கொண்டு செத்துப்போ என்று விட்டனர்.

 

 

தாரா சுகோஹ், தோற்கடிக்கப்பட்ட செய்தியை ஒரு தூதன் அவுரங்கசீப்பிடம் தெரிவித்தான். ஆனால் தோற்றுப்போன தாரா ஓடிவிட்டதாகவும் சொன்னான். உடனே அவுரங்கசீப் ஒரு சபதம் செய்தான். அண்ணனைச் சிறைப்பிடித்து தலையை வெட்டி அவர்களுடைய தந்தையான ஷாஜஹானுக்கு அனுப்பிவைப்பேன் என்று வீர சபதம் எடுத்தான். இதை இதாலிய பயணி மனூச்சி அப்படியே எழுதி வைத்துள்ளான்.

அவுரங்க சீப்பின் துஷ்ட ஆசையும் நிறைவேறியது. தாராவின் தலையை அவன் முன்னால் கொண்டு வந்தனர். ஒரு கத்தியை எடுத்து மூன்று வெட்டு வெட்டினான் . இதை கண் முன் காட்டாமல் தூக்கிக்கொண்டு போங்கள் என்று கட்டளையிட்டான்.

 

அவுரங்கசீப்பின் சஹோதரி (தாராவுக்கும் சஹோதரிதான்) ரோஷநாரா பேஹம் இந்தத் தலையை நமது தந்தை ஷாஜஹானிடம் கொண்டு காட்ட வேண்டும் என்று அவுரங்கசீப்பைத் தூண்டிவிட்டாள். அவள் அன்று மாலையே ஆக்ரா கோட்டையில் ஒரு விருந்தும் ஏற்பாடு செய்தாள்; தாரவைக் கொன்றதற்காக.

 

 

தலை வந்தபோது சிறைச் சாலையில் ஷாஜஹான் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தாரவின் தலையைப் பார்த்தவுடன்  ‘ஓ’ என்று கதறி ‘டின்னர் டேபிள்’ மீதே மயக்கம் போட்டு விழுந்தான்.

 

அவுரங்க சீப் அந்த தலையை மூன்றுமுறை வெட்டியபோது அந்தத் தலை ஹா, ஹா, ஹா என்று சிரித்ததாகவும் சொல்லுவர்.

 

ஆக்ராவில் தாஜ்மஹல் உள்ளேயுள்ள கல்லறையில் அந்தத் தலையைப் புதைக்குமாறு அவுரங்கசீப் கட்டளை இட்டதாக மனூச்சி எழுதியுள்ளார்.

அதே காலத்தில் இந்தியாவுக்கு வந்த பெர்னியர் என்ற மேல்நாட்டு யாத்ரீகரும் இதே சம்பவம் பற்றி எழுதிவைத்துள்ளார்.

 

 

தாராவின் மரண தண்டனையை நிறைவேற்றிய அவுரங்க சீப்பின் ஆட்கள், அவன் தலையை அவுரங்க சீப்பிடம் கொண்டுபோனபொது அதை ஹுஆமாயூன் கல்லறையில் புதைக்கச் சொன்னானாம்.

 

தாராவின் புகழைப் பாடும் பல பாடல்களை மக்கள் நாட்டுப் புறக் கதைப் பாடலாக பாடியதாகவும் அதைத் தடுக்க அவுரங்கசீப் முயன்றும் முடியவில்லை என்றும் அக்கால வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.

 

தாராவின் தலையை ஒரு அழகான பெட்டியில் வைத்து உங்கள் மகன் உங்களுக்கு அனுப்பிய பரிசு என்று படைவீரர்களிடம் சொல்லச் சொன்னானாம். அவர்கள் அப்படிச் சொன்னபோது ‘அட, என் மகன் என்னை ஞாபகமாவது வைத்துக் கொண்டிருக்கிறானே என்று சொல்லிக் கொண்டு பெட்டியைத் திறந்தானாம். தாராவின் தலை ரத்தவெள்ளத்தில் இருந்ததைக் கண்டு மூர்ச்சை அடைந்தானாம்.

 

தாராவின் தலையை சீவுவதற்கு முன்னர் அவனை விலங்கு மாட்டி யானை மீது வைத்து ஊர்வலமும் விட்டானாம் அவுரங்கசீப்.

 

தாராவின் மரணம் இந்துக்களுக்கு ஒரு பெரிய இழப்பு. அவன் ஏழாவது சீக்கிய குருவின் நண்பன். இந்து மத உபநிஷத்துகளை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவன்

 

–சுபம்–

கறுப்பு மான், ஸரஸ்வதி நதி மர்மங்கள்! ஆயுர்வேத ரஹசியங்கள்! (4526)

Written by London Swaminathan 

 

Date: 21 DECEMBER 2017 

 

Time uploaded in London- 7-46 am

 

 

Post No. 4526

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

மநு நீதி நூல்-9 (Post No.4526)

கறுப்பு மான், ஸரஸ்வதி நதி மர்மங்கள்! ஆயுர்வேத ரஹசியங்கள்– 

  1. லாப நோக்கும் காம நோக்கும் இல்லாதவர்களுக்கே தர்மத்தின் உபதேசம். (மற்றவர்களுக்கு அல்ல). தர்மத்தை அறியவிரும்புவோருக்கு வேதமே பிரமாணம் (2-13)

 

133.வேதம், ஒன்றுக்கொன்று முரண்பட்ட விஷயங்களைச் சொல்லுமானால் இரண்டும் சரி என்று அறிக; ஏனெனில் அறிஞர்கள் அவ்விரண்டும் சரி என்று சொல்லுவர்.

134.ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். வேள்வியை சூரிய உதயத்துக்கு முன்னாலும், சூர்ய அஸ்தமனத்துக்குப் பின்னாலும், சூர்யனோ நட்சத்திரங்களோ இல்லாத காலத்திலும் செய்யலாம் என்று வேதங்கள் விளம்பும். இதில் முரண்பாடு ஏதுமில்லை. இவை அனைத்தும் தர்மமே.

  1. எந்த மனிதனுக்கு பிறப்பு (கர்ப்பாதானம் முதல்)

முதல் இறப்பு வரை வேதமுறைப்படியான சடங்குகள் விதிக்கப்பட்டிருக்கிறதோ அவனுக்கே- அந்த இரு பிறப்பாளனுக்கே – இந்த சாஸ்திரத்தை ஓதும் அதிகாரமுண்டு. மற்றவர்க்கில்லை.

 

136.சரஸ்வதி நதிக்கும், த்ருஷத்வதி நதிக்கும் இடைப்பட்ட பிரதேசம் கடவுளால் உருவாக்கப்பட்ட பிரம்மாவர்த்த தேசம் ஆகும்.

137.அந்த தேசத்தில் எப்போதும் பெரியோர் வசிப்பதால் பிராமணர் முதலிய வருணத்தாருக்கும் கலப்பு ஜாதியாருக்கும் ஆதிகாலத்திலிருந்தே ஆசார விதிகள் பாரம்பர்யமாக உள்ளன.

 

Geography in Manu Smrti

 

138.குரு, மத்ஸ்ய, பாஞ்சால, சூரசேன தேசங்கள் பிரம்மரிஷி தேசம் எனப்படும். இவை பிரம்மாவத்தத்துக்கு அடுத்த நிலையில் உள்ளன.

139.இந்த தேசங்களில் பிறந்த பிராமணர் இடத்தில் ஒவ்வொருவரும் தர்மத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்

 

140.இமய மலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் விநாசன த்துக்கு கிழக்கேயும், பிரயாகைகு மேற்கேயும் உள்ள இடம் மத்திய தேசம் எனப்படும் (2-21)

 

 

141.கிழக்கு சமுத்திரத்திலிருந்து மேற்கு சமுத்திரம் வரையுள்ள பிரதேசத்துக்கு சாதுக்கள் வசிக்கும் ஆர்யாவர்த்தம் என்று பெயர்.(2-22)

 

Antelope Black buck picture from Wikipedia.

Zoology in Manusmrti

142.கிருஷ்ணசாரம் (BLACKBUCK) என்னும் மான் இயற்கையில் எங்கு வசிக்கிறதோ அந்த பூமியே யாகம் செய்வதற்குரிய பூமியாகும். மற்றவிடம் அசுத்தமான மிலேச்ச தேசம் என்பப்படும் (2-23)

 

143.இருபிறப்பாளர்கள் (BRAHMIN, KSHTRIA, VAISYA) இந்தப் பிரதேசத்தில் வாழ எல்லா முயற்சிகளும் எடுக்கவேண்டும். சூத்திரர்கள் ஊழியத்துக்காக எந்த தேசத்திலும் வசிக்கலாம்.

144.இதுவரையில்  உலகத்தின் உற்பத்தியையும் தர்மத்திற்குக்  காரணமான புண்ய தலங்களையும் எடுத்துச் சொன்னேன். இனி வர்ணாஸ்ரம தர்மங்களைக் கேளுங்கள் (2-25)

145.இருபிறப்பாளர்கள் வேத சாஸ்திரங்களில் சொல்லப்படிருக்கிற கர்ப்பாதானம் முதலிய சடங்குகளை, இம்மை நலனுக்காகவும், மறுமையில் புண்ணியப் பிறப்பெடுக்கவும் உரிய சரீர சுத்திகளைச்செய்ய வேண்டும்.

 

146.கர்ப்பாதான  மந்திர ததாலும், சீமந்த ஹோமத்தாலும் (வளைகாப்பு),

ஜாதகர்மம் (பிறப்பு தொடர்பான சடங்கு)  நாமகரணம் (பெயர் சூட்டல்), அன்னப் ப்ராசனம் (உணவூட்டுதல்)  சௌளம் (முடி இறக்கல்), உபநயனம் (பூணூல் போடுதல்) முதலிய சடங்குகளால் இருபிறப்பாளர்கள் செய்த பாவங்கள் நீங்கும்; புணர்ச்சி செய்யக்கூடாத நாட்களில் புணர்ந்த தோஷமும், அன்னையின் கருப்பையில் வசித்த தோஷமும் நீக்கப்படும் (2-27)

 

 

147.வேதம் ஓதுவதாலும், மது மாமிசம் சாப்பிடாத   விரதத்தாலும், ஔபாசனம் மு தலிய ஹோமங்களாலும், தேவரிஷி பிதுர தர்ப்பணத்தினாலும் (நீத்தார் நினைவுச் சடங்குகள்), ஐம்பெரும் வேள்விகளாலும் (பஞ்ச மஹா யக்ஞம்) அக்னிஷ்டோம ஹோமங்களாலும் , புதல்வர்களைப்  ச பெறுவதாலும், சரீரமானது மோட்சத்திற்குரிய தாக்கப்படுகிறது.(2-28)

Ayurveda in Manu smrti

 

148.தொப்புள்கொடியை அறுப்பதற்கு முன்,ஆண் குழந்தைக்கு ஜாத கர்மம் என்னும் பிறப்பு தொடர்பான சடங்கு செய்யப்படும். அப்போது வேத மந்திர முழக்கத்தோடு குழந்தைக்கு தங்கத்தை இழைத்து தேனும் வெண்ணையும் கொடுக்க வேண்டும்.

எனது கருத்து: Geography in Manu

மேற்கூறிய ஸ்லோகங்களில் உள்ள சுவையான விஷயங்களை ஆராய்வோம் அல்லது சிந்திப்போம். ஸரஸ்வதி நதி குறித்து மனு சொல்லும் விஷயம் ஆராய்ச்சிக்குரியது. மநு இன்னும் ஒரு இடத்திலும் இந்த நதி பற்றிப் பேசுகிறார். 11-78-லும் ஒரு விஷயத்தைச் சொல்லுகிறார். பிரம்மஹத்தி- அதாவது பிராமணனைக் கொன்ற பாவம்- போவதற்காகச் சொல்லப்படும் ஒரு பரிஹாரம் சரஸ்வதி நதியின் முழு நீளத்தையும் நீரோட்டத்துக்கு எதிராக நடந்து கடக்க வேண்டும் என்பதாகும்.

 

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. மனுவின் காலத்தில் ஸரஸ்வதி நதி ஓடியதை அறிகிறோம். அதே நேரத்தில் விநாஸன் என்ற சொல்லுக்கு ஸரஸ்வதி நதி பூமியில் மறையும் இடம் என்று வியாக்யானம் எழுதுவோர் உரை எழுதுகின்றனர். ஸரஸ்வதி,  த்ருஷத்வதி என்று இந்த அத்தியாயத்தில் மநு குறிப்பிடுவன வேத கால நதிகள். ஆகவே மநு, சரஸ்வதி ஓடிய கி.மு.2000ஐ ஒட்டி இதை எழுதியிருக்கவேண்டும். ரிக்  வேதமோ மலையில் தோன்றி கடலில் மறையும் பிரம்மாண்ட நதி பற்றிப் பேசுகிறது. மஹாபாரதமோ மறையும் (விநாசன்) நதி பற்றிக் குறிப்பிடுகிறது. 11-ஆம் அத்தியாயத்தின் ஸ்லோகத்தில் ஸரஸ்வதி நதியை எதிர் நீச்சல் போட்டுக் கடக்க வேண்டும் என்று மநு சொல்லுவதால் அவர் ஸரஸ்வதி நதி காலத்தவர் என்பது தெளிவாகிறது. ஆகவே மநுவின் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு அல்ல. கி.மு2000-க்கும் முன்னர் என்று அறியலாம். சதி (உடன்கட்டை ஏறும்  வழக்கம்) பற்றி எங்குமே குறிப்பிடாததும். விந்தியத்துக்கு அப்பாலுள்ள விஷயங்களைப் பே சாததாலும் தெற்கில் நாகரீகம் பரவியதற்கும் முன்னதாக வாழ்ந்தவர் என்று துணியலாம்.

இன்னும் இரண்டு சுவையான விஷயங்கள் (Medicine and Sociology in Manu):–

ஆயுர்வேதம்: சிறு வயதிலேயே குழந்தைக்குத் தங்கத்தில் இழைத்து — தங்கச் சத்துடன் வெண்ணை, தேன் கொடுக்கச் சொல்லுவது அக்கால மருத்துவ வளர்ச்சியைக் காட்டுகிறது.

 

மிலேச்ச என்ற சொல், ‘பண்பாடற்ற மக்கள்’ பிற இடங்களில் வசித்ததையும் காட்டுகின்றது. பிற்கால இலக்கியத்தில், இவை கிரேக்கர்களையும் ரோமானியர்களையும் குறித்தன. அதற்குப் பின்னர் இது அராபியர்களையும், துலுக்கர்களையும், கிறிஸ்தவர்களையும் குறித்தது. ஆகவே மநு காலத்தில் கிரேக்கர்கள்  அல்லது வேதத்தைப் பின்பற்றாத பிற ஜாதியினர்   பற்றிய அறிவு இருந்திருக்கலாம்.

 

பிராணி இயல் தகவல் (zoology in Manu)

 

எல்லாவற்றையும் விட சுவையான தகவல் கிருஷ்ண சாரம் (Blackbuck antelope) என்னும் மான் வகைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆகும்.

 

கிருஷ்ணசாரம் எனப்படும் மான் உலவும் இடம் எல்லாம் வேள்விக்குரிய பூமி என்று சொல்லப்படுகிறது. இது இந்தியாவின் தென் கோடி முனையில் இருந்து இப்போதுள்ள வங்க தேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய தேசங்களிலும் 1850 வரை இருந்தது வெள்ளைக்கார்கள் எழுதிய குறிப்புகளில் இருந்து தெரிகிறது. ஆக இந்திய பூமி முழுதும் புனித பூமி, வேள்விக்குரிய பூமி என்ற அரிய பெரிய உண்மையை மநு பறை சாற்றுகிறார். இதை சங்கத் தமிழ் இலக்கிய நூல்களும் உறுதிப்படுத்துகின்றன.

 

கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டம் செய்து வேள்வி இயற்றிய தையும், சோழ மன்னன் ராஜ சூய யாகம் செய்ததையும், முது குடுமிப் பெருவழுதியின் பாண்டிய நாடு முழுதும் வேள்வித் தூண்கள் பெருகி இருந்ததையும் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்கத் தமிழ் நூல்கள் பாடிப் பரவுகின்றன. ஆக கருப்பு மான் உலவிய புண்ய பூமி பாரதம்; அதிலும் குறிப்பாக புண்ணியப் பிரதேசம் சரஸ்வதி நதி தீரம், குருக்ஷேத்ரம், பாஞ்சாலம் எனலாம். காரணம் என்னவெனில் இங்கு தலைநகரை அமைத்துக் கொண்டு அவர்கள் ஆண்டனர். மேலும் வற்றாத ஜீவ நதிகள் அவை என்பதால் அபரிமித தான்ய விளைச்சலும் இருந்தது. நீர் இன்று அமையாது உலகு என்பது வள்ளுவன் வாசகம் அன்றோ!

TAGS:– மநுநீதி நூல், கறுப்பு மான், சரஸ்வதி, மர்மம்

 

to be continued………………………………

–SUBHAM–

 

நகைச்சுவை மன்னன் மஹேந்திர பல்லவன் (Post No.4434)

Written by London Swaminathan 

 

Date: 26 NOVEMBER 2017

 

Time uploaded in London- 9-09 am

 

 

Post No. 4434

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

அப்பர் என்னும் திருநாவுக்கரசரைப் படாதபாடு படுத்திய மன்னன் மஹேந்திரபல்லவன். சைவ சமயத்திலிருந்து சமணத்துக்குத் தாவி மீண்டும் சைவத்துக்கே திரும்பிய கட்சி மாறி; இக்கால ஆயாராம், கயாரம் கட்சிமாறிகளுக்கு முன்னோடி.

அப்பர் காலம் வரை நிலவிய அழியும் கோவில்களை அகற்றி முதலில் குகைக் கோவில்களை நிறுவியவன். திருச்சி வரை ஆட்சியை விஸ்தரித்து திருச்சி அருகில் பல கோட்டைகளை நிறுவியவன். மாபெரும் சம்ஸ்கிருத பண்டிதன்; பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் மகன். வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவனுக்குத் தந்தை.

 

ஷேக்ஸ்பியருக்கும் முன்னால் காமெடி (Comedy) எழுதி புகழ்பெற்றவன்.

பாஷா, சூத்ரகன், காளிதாசன் முதலானோர் எழுதிய நாடகங்களில் நகைச்சுவை (comedy) நடிகர்கள் (விதூஷகன்) உண்டு. ஆயினும் முழுக்க முழுக்க முதல் காமெடி நாடகம் எழுதியவன் இவனாகத்தான் இருக்க வேண்டும்.

இவன் எழுதிய நகைச் சுவை நாடகத்தின் பெயர் மத்த விலாசப் பிரஹசனம்.

 

காவியக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை விற்பன்னன். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் பல் கலை வித்தகன், ஒரு மாபெரும் மன்னனாக விளங்கமுடியும் என்பதற்கு இவன் ஒரு சான்று. வடக்கில் ஒரு போஜ மன்னன் என்றால் தெற்கில் ஒரு மஹேந்திர பல்லவன்.

 

மஹேந்திர பல்லவன் சகல கலா வல்லவன். இதோ அவனது பட்டப் பெயர்களையும் விருதுகளையும் பாருங்கள்:-

 

மத்தவிலாஸன்= ஆனந்த ஆட்டக்காரன்

குணபரன்= நற்குண நாயகன்

அவநிபாஜனன்= பூமியாகிய பாத்திரத்தில் தன் புகழை நிரப்பியவன்

சத்ரு மல்லன்= பகைவரை புறங்காட்டச் செய்த மாவீரன்

லளிதாங்குரன்= பல்லவ குல மரத்தின் இளம் தளிர்

விசித்திரசித்தன்= புதுமைகளைப் படைப்போன், சிந்திப்போன்

ஸங்கீர்ணஜாதி=பல நறுமணம் கமழும்ஜாதி மலர் போன்றவன்

சேதக்காரி= நினைத்தை முடிப்பவன்

பிரஹசனம் என்பது நகைச்சுவை நாடகம்; இதில் மூன்று வகை உண்டு:சுத்தம், விகிர்தம், சங்கீர்ணம்; அவைகளில், மத்தவிலாசப் பிரஹசனம் , சுத்தப் பிரஹசனம் வகையினது.

 

கதைச் சுருக்கம் பின்வருமாறு:-

காபாலி ஒருவனும், பாசுபதன் ஒருவனும், ஒரு பௌத்த பிக்ஷுவும், பைத்தியக்காரனும், சூத்திரதாரனும், காபலிகனுடைய காதலியும் ஆகிய அறுவர் இதில் நடிப்பவர்கள் ஆவர். அவர்கள் நகைச்சுவை வசனம் மொழிந்து அனைவரையும் மகிழ்விப்பர்.

 

நாடக சூத்திரதாரி முன்னுரை வழங்கிய பின்னர், காபாலியும் அவனது காதலியும் காஞ்சீபுர வீதிகளில் உலா வருவதுடன் காட்சி துவங்குகிறது.

 

முதல் காட்சியில் காபாலிகன் அவன் காதலி தேவசோமையுடன் வாதாடுகிறான். தனது பிக்ஷை ஏற்கும் கபாலத்தைக் காணவில்லை என்று சொல்கிறான். அதைத் தேட முயற்சி செய்கின்றனர்.

 

இரண்டாவது காட்சி:-மதுக்கடை வருணனை

மூன்றாம் காட்சி:- அவ்வழியே வந்த சாக்கிய (பௌத்த) பிஷுவிடம் இருந்த கப்பரை (கபாலம்) தன்னுடையது என்று பிடுங்க, அந்தப் பக்கம் வந்த பாசுபதனிடம் இருவரும் தங்கள் வழக்கை முறையிடுகின்றனர்

நாலாம் காட்சி:பைத்தியக்காரன் ஒருவன், ஒரு வெறி நாயிடமிருந்து பிடுங்கிய

கப்பரையுடன் வருகிறான்; அ தைக் கண்ட காபாலிகன் மகிழ்கிறான்.

பின்னர் அனைவரும் சமாதானமாகச் செல்கின்றனர். இது சம்ஸ்கிருத மொழியில் அமைந்த நாடகம். நாடகத்தில் மஹேந்திரனின் பட்டப்பெயர்கள், விருதுகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. குடிகாரன் பேச்சு,பைத்தியக்காரன் பேச்சு ஆகியவற்றில் நகைச்சுவை ததும்புகிறது.

TAGS:– மத்தவிலாசப் பிரகசனம், மகேந்திர, பல்லவன், மஹேந்திர,

நகைச்சுவை, நாடகம், மன்னன்

 

–Subham–

கடல் போல புத்தகங்கள்! அம்மாடியோவ்வ்வ்வ்வ்! (Post No.4419)

Written by London Swaminathan 

 

Date: 21 NOVEMBER 2017

 

Time uploaded in London- 8-16 am

 

 

Post No. 4419

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சம்ஸ்கிருதத்திலுள்ள நீதி நூல்கள் கடல் போலப் பெருகி இருக்கின்றன. தமிழில் திருக்குறள் முதலிய 18 நூல்களில் நீதிகள் குவிந்து கிடப்பதை நாம் அறிவோம். அவ்வையின் ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன், அதி வீரராம பாண்டியனின் வெற்றி வேற்கை, முனைப்பாடியாரின் அறநெறிச்சாரம், பெயர் தெரியாமல் அழிந்துபோன் ஆசிரியர்கள் யாத்த விவேக சிந்தாமணி, நீதி வெண்பா, குமரகுருபரின் நீதி நெறி விளக்கம், பாரதியாரின் புதிய ஆத்திச் சூடி– இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் சம்ஸ்கிருதத்தில் உள்ள நீதி நூல்களை அடுக்க முடியாது; தொகுக்க முடியாது; வகுக்க முடியாது; பகுக்க முடியாது!! அவ்வளவு இருக்கின்றன. சுபாஷித ரத்ன பாண்டாகாரத்தில் பலசுவைப் பாடல்கள் இடையே நீதி ஸ்லோகங்கள் காணப்படுகின்றன; மஹாபாரதத்தில் அனுசாசன பர்வத்திலும், சாந்தி பர்வத்திலும் ஆயிரக் கணக்கில் நீதிகள் , பொன் மொழிகள் காணப்படுகின்றன. பஞ்ச தந்திரம், ஹிதோபதேசம் போன்ற கதைகள், சிறு வயதிலிருந்தே நீதிகளை போதிக்க உதித்த நூல்கள். இது தவிர நீதிக்காகவே — அதாவது நீதி நெறி பற்றிய ஸ்லோகங்கள் மட்டுமே அடங்கிய நூல்களின் பட்டியல்– நீண்ண்ண்ண்ண்ண்ண்ட பட்டியல்:-

சுக்ர நீதி

சாணக்ய  நீதி

விதுர நீதி

பர்த்ருஹரியின் நீதி சதகம்

காமாந்தகீய நீதிசார

வரருசி நீதிசார

 

கடகாபரண நீதிசார

 

வேதாளபட்ட நீதிப்ரதாப

பல்லட சதக (வல்லாளன்)

பில்ஹணரின் சாந்தி சதக

சம்புவின் அன்யோக்திமுக்தலதா சதக

குசுமதேவனின் த்ருஷ்டாந்த சதக

குமானியின் உபதேச சதக

நாகராஜாவின் பாவசதக

சங்கரரின் சதஸ்லோகி

சாணக்ய நீதி

சாணக்ய சதக

சாணக்ய ராஜநீதி

வ்ருத்த சாணக்ய

லகு சாணக்ய

சாணக்ய சார சங்ரஹ ராஜநீதி சாஸ்திர

கௌடில்யரின் அர்த்த சஸ்திரம் (சாணக்ய)

 

சதகம் என்றால் நூறு ஸ்லோகங்கள் என்று பொருள்; பதிகம் என்றால் பத்து பாடல்கள் கொண்டது.

இவைகளிலுள்ள விஷயங்களைக் காணும் முன் ஒரு ஆறு நூல்களின் தொகுப்பை மட்டும் காண்போம்.

சாணக்யர், கௌடில்யர், குடிலர் என்ற பெயரால் அழைக்கப்படும் பிராமணன் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்துவிட்டு குடிசையில் போய் அமர்ந்து கொண்டார். இவ்வளவுக்கும் அவர் அலெக்ஸாண்டரை நடுங்க வைத்த மௌரியப் பேரரசின் — மகத சாம்ராஜ்யத்தின் மந்திரி — பிரதம மந்திரி!

 

நந்த வம்ச அரசர்கள் — இந்து மத வேள்விகளைக் கிண்டல் செய்து, அவைகளுக்குத் தடை போட்டு வந்தனர்; விடை ஏதும் கிடைக்காமல் நாடு தவித்தது. ஒருநாள் ஐயர் குடுமியுடன், சாணக்கியர் நடந்து கொண்டிருந்தார். புல்லோ கல்லோ தடுக்கியவுடன் தடுமாறினார். கெக்கெக்கென்று சிரித்தனர் நந்த வம்ச அரச குடும்பத்தினர். தடுமாற்றத்தில் ஐயருக்கு குடுமி வேறு அவிழ்ந்து போயிற்று.!

 

 

உங்கள் வம்சத்தை வேரறுக்கும் வரை இந்தக் குடுமியை முடிய மாட்டேன் என்று சபதம் செய்தார். (துரியோதனனின் ரத்ததைக் கூந்தலில் தடவும் வரை தலை முடியைப் பின்ன மாட்டேன் என்று சபதம் செய்து வெற்றி கண்ட திரவுபதி போல).

 

மயில்களை வளர்க்கும் முரா வம்சத்தில் உள்ள சில வீரர்களுக்கு பஞ்ச தந்திரங்களையும் சாம,தான பேத, தண்ட அணுகுமுறைகளையும் கற்பித்தார். நவ நந்தர்களை நடு நடுங்க வைத்தார். சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டது. மௌரியப் பேரரசு உதய சூரிய ன் போலத் தொடுவானத்தில் தோன்றியது. அசோகன் காலம் வரை இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டது.

அந்த சாணக்கியர் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய அர்த்த சாஸ்திரம்தான் உலகில் தோன்றிய முதல் பொருளாதார நூல். வரி விதிப்பு, எவ்வளவு வரி என்பது முதல் படை அமைப்பு வரை அவர் பேசுகிறார்.

 

அவர் பேசாத பொருளாதார விஷயம், அரசியல் கொள்கை ஏதுமில்லை. ஐயர் குடுமியை முடிந்து கொண்டு நீதி வாக்கியங்களை உதிர்த்தார்; பின்னர் மொழிந்தார்; இறுதியில் மழை போலப் பொழிந்தார். அவர் எழுதியதாக அவர்  பெயரிலுள்ள ஆறு நூல்களை ஒரு வெளிநாட்டு அறிஞர் ( Ludwik Sternbach லுட்விக் ஸ்டேன்பாக்) ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியிட்டார்.

 

சாணக்கிய சபதம் என்னும் நாடகம் தமிழ்நாட்டில் பலரால் இயற்றப்பட்டு, பலரால் நடிக்கப்பட்டும் இருந்தது; நூறு ஆண்டுகளுக்கு முன் வரை; வெள்ளைக்காரனுக்கு எதிராக போராட்டம் பெருகியவுடன் அவை எல்லாம் மறையத் தொடங்கின. பல தமிழ் நாடகங்கள் இன்றும் லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைக்கின்றன.

சாணக்கியர் பெயரில் உள்ள ஆறு நீதி நூல்கள்:-

  1. வ்ருத்த சாணக்ய

எளிய நடையில் உள்ளதை சாணக்ய நீதி தர்பண என்பர் (தர்பண= கண்ணாடி)

2.வ்ருத்த சாணக்ய

கடின நடையில் உள்ள நூல்

3.சாணக்ய நீதி சாஸ்த்ர

இதில் 109 கவிகள் உண்டு; வேறு ஒருவர் இதைத் தொகுத்து அளிப்பதாக முதல் ஸ்லோகத்திலேயே சொல்லிவிடுகிறார்.

4.சாணக்ய சார சம்க்ரஹக

இதில் 300 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன. இதுவும் வேறு ஒருவரால் தொகுக்கப்பட்டதே.  கங்கையையும் காசியையும் புகழ்வதால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.

 

5.லகு சாணக்ய

எட்டு அத்தியாயம் உடையது; ஒவ்வொன்றிலும் 10 முதல் 13 ஸ்லோகங்கள் வரை உள்ளன. இதை ஒருவர் கிரேக்க மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டதால் ஐரோப்பா முழுதும் பிரபலமாகியது.

6.சாணக்ய ராஜ நீதி சாஸ்த்ர

எட்டு அத்தியாயங்களில் 534 ஸ்லோகங்கள் இருக்கின்றன. திபெத்திய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது

இவை அனைத்தும் சாணக்யரால் எழுதப்பட்டவையா, சொல்லப்பட்டவையா என்று எவராலும் சொல்ல முடியவில்லை. ஆனால் சாணக்யர் என்றால் ‘ராஜ தந்திரம்’, ‘நீதி’ என்ற பொருள் வந்துவிட்டது

இவை தவிர ஏராளமான நீதி நூல்கள் சம்ஸ்கிருதத்தில் உண்டு. ஆன்மீக விஷயம் பற்றிச் சொல்லும் நீதி வாசகங்கள் அடங்கிய நூல்களும் உள்ளன. அவைகளைப் பொதுவாக இதில் சேர்ப்பதில்லை.

 

அடுத்த சில கட்டுரைகளில் சாணக்ய நீதியிலுள்ள விஷயங்களை தமிழ் நீதி நூல்களுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறேன்.

 

TAGS:– சாணக்கியர், நீதி நூல்கள், கௌடில்யர், நீதி சாஸ்திரம்

 

–சுபம், சுபம்–

ஒரு கிராமத்தின் சோகக் கதை! (Post No.4391)

Written by S.NAGARAJAN

 

 

Date: 13 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-35 am

 

 

Post No. 4391

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures are not related to the story.

 

 

 

ஜிஹாதி கொடுமை

 

ஒரு கிராமத்தின் சோகக் கதை!

 

ச.நாகராஜன்

 

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் வி.எஸ். கர்னிக் கூறுகின்ற சோகக் கதை இது.

ஒரு கிராமத்தில் பிராமணர்கள், ராஜபுத்திரர்கள், பனியா, தேலி மற்றும் ஹரிஜன்கள் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட மிகவும் சந்தோஷமாகவும் அன்யோன்யமாகவும் வாழ்ந்து வந்தனர்.

 

ஒரு நாள் ஒரு முல்லா முஸ்லீம் தனது மனைவியுடனும் எட்டுப் பிள்ளைகளுடனும் அந்த கிராமத்திற்கு வந்தார். கிராம அதிகாரியிடம் அவர்கள் சென்றனர். அவர் ஒரு ராஜபுத்திரர். அந்தக் கிராமத்தில் தங்களை வசிக்க அனுமதிக்குமாறு அவர்கள் கெஞ்சினர்.

 

தேலி மற்றும் ஹரிஜன சமூகங்கள் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர். மற்ற அனைவரும் முஸ்லீம் குடும்பத்தைத்  அனுமதிக்கலாம் என்றனர்.

 

சில வருடங்கள் கழிந்தன. எட்டுப் பிள்ளைகளும் கல்யாண வயதை அடைந்தனர். முஸ்லீம் முல்லா கிராமத் தலைவரை அணுகினார். “ஹூஸூர், பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது.எனக்கு ஒரே ஒரு வீடு தான் இருக்கிறது.” என்றார்.

 

ராஜபுத்திர தலைவர் தரிசாகக் கிடந்த நிலப்பகுதியை அவருக்குத் தந்து, கூறினார்: “இதில் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளுங்கள்.”

பனியாவிடன் சென்ற முல்லா அவரிடம் பணத்தைக் கட்னாகப் பெற்றுக் கொண்டார்.

 

காலம் கழிந்தது. எட்டுப் பிள்ளைக்ளுக்கு 72 பிள்ளைகள் பிறந்தன. 30 வருடங்களுக்கு அந்த கிராமத்தின் ஜனத்தொகையில் 40 சதவிகிதம் முஸ்லீமாக இருந்தது.

 

இப்போது முஸ்லீம் இளைஞர்கள் அவர்களது கலாசாரத்தின்படி ஹிந்து இளைஞர்களுடன் சண்டை போடத் துவங்கினர். ஹிந்து பெண்களுக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர்.

மெல்ல மெல்ல பிராமணர்களும் பனியாக்களும் அந்த கிராமத்தை விட்டுச் சென்றனர்.

 

ஒரு நாள் முல்லா அந்த கிராமத்தின் பிரதான கோவிலை இடித்தார். உடனே ராஜபுத்திரர்கள் இதற்கு வெகுவாக் ஆட்சேபணை தெரிவித்தனர்.

 

30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒண்டிப் புக்லிடம் கேட்க வந்த முஸ்லீம்கள், “ அல்லாவின் பணியை எதிர்க்கும் எவரும் துண்டு துண்டாக வெட்டப்படுவர்” என்றனர்.

 

ராஜபுத்திரர்களும் கிராமத்தை விட்டு அகன்றனர். அவர்கல் தேலி மற்றும் ஹரிஜன்களை நோக்கி, “உங்களின் பேச்சை அன்றே கேட்டிருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம். இந்த கிராமத்தின் பெயர் இப்போது பஞ்ச்வடி என்ற பெயரிலிருந்து ரஹிமாபாத் என்று ஆகி விட்டது.” என்றனர்.

 

இந்த கிராமம் மஹ்ராஷ்டிர மாநிலத்தில் அமராவதி மாவட்டத்தில் உள்ளது.

இது ஒரு உண்மைச் சம்பவம்.

 

இதே போன்ற பல சம்பவங்கள் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய  ப்ங்களாதேஷின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் நடந்துள்ளன.

 

முஸ்லீம் ஜனத்தொகை அதிகமாக் உள்ள் உத்தர பிரதேசம், கேரளா மற்றும் இதர் மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் இது சர்வ சகஜம்.

 

பிரிவினைக்குப் பிறகு காஷ்மீர் பண்டிட்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது.

ரோஹிங்யா முஸ்லீம்களை இந்தியாவிற்குள் நுழைய அனுமதித்தால் இந்த வேலை இன்னும் தீவிரமாக நடக்கும்.

தாராள் மனமுடையவர்களும், போலி செகுல்ரிஸ்டுகளும் மனித உரிமைக் கழகப் போராளிகளும்  இந்திய நீதித் துறையும் ரோஹிங்யாக்களுக்கு ஆதரவு தந்தால் . அடடா, பாராட்டுக்கள்,பாராட்டுக்கள்!

 

கொஞ்ச காலம் பொறுத்திருங்கள், ஐஎஸ ஐ எஸ் உங்களைத் துரத்தி விடுவார்கள்.பாரதத்தில் வசிப்போருக்கு பொறுமைக்கான் நோபல் பரிசு கிடைத்து விடும்.

*

மனம் நொந்து எழுதியுள்ள ஒரு உண்மைச் சமபவம் நம் கண்களைத் திறக்கட்டும். 11-9-2017 அன்று தனது பிளாக்கில இதை எழுதியுஅ வி.எஸ்.கர்னிக் நிர்வாகத் துறையில் பி.ஹெச் டி பட்டம் பெற்றவர்.

 

தனது கண்களால் கண்ட சொந்த அனுப்வத்தை இப்படி எழுதியுள்ளார்.

 

இதன் ஆங்கில மூலத்தைக் கீழே தருகிறோம்:

*

A (Retired) Major General’s observation : The True Story worth studying/ analyzing and ensuring this does not happen in future: Major General V S karnik (Retired) PhD ( Management) writes on 2017-09-11:

 

In one village, Brahamans, Rajputs, Baniyaas, Teli, and Harijan, all from different castes, were happily and peacefully staying. One day, one Muslim (Mulla) with his wife and their eight children came to that village.

 

They went to village pramukh, a Rajput man, and begged him that they be allowed to stay in that village. Except Teli and Harijan community, all agreed to allow the Muslim family to stay there.

 

After some years the eight children grown up and were of marriageable age. The Muslim man first went to Rajput and requested that “Huzoor,Baccho ki shadi hone wali hai. I have only one house.” The Rajput gave him some uncultivated land, and said that you build a house on it. Then the Muslim went to Baniya, and borrowed money.

 

After some time, his eight children had 72 children and after about 30 years the Muslim population of that village was 40 % of total population.

 

Now the Muslim youths, as per their culture, started having fights with Hindu youths and harassing Hindu girls. Slowly Brahmins and Baniyas left the village. One day Mulla started destroying the main temple of Hindus. To this, Rajputs of the village objected. The Muslim, who came 30 years ago, said that anyone objecting about the work for Allah, will be cut into pieces. The Rajputs also left the house.

 

While leaving the village, they said to Harijan and Telis, if we had listened to your advice and not trusted the Mulla, we would have not come to this stage of leaving the village. This village name is, now, changed from Panchvati to Rahimabad. This village is in Maharashtra, in Amvravti district. This is a true story.

 

(Similar experiences are not scarce but of common occurrence in Assam, West Bengal, districts bordering Bangladesh and many other districts with large Muslim population in UP, Kerala and other states). It happened after partition. It happened with Kashmiri Pundits. It is happening, now, in W. Bengal. Get Rohingyas Muslims in India and this process will speed up. Congratulations to liberals, secularists, Human right protectionists and Judiciary of India, for supporting the cause of Rohingyas. You all wait for some time, when you all will be driven out by ISIS. Bharatvasis should get “Noble Prize” for tolerance.

 

 

THANKS TO TRUTH 27-10-2017 ISSUE

***

 

 

மொழிக் கொள்கைகளை தோற்கடிக்கும் நாடு! அற்புதத்தீவு நியூகினி! (Post No.4390)

 

மொழிக் கொள்கைகளை தோற்கடிக்கும் நாடு! அற்புதத்தீவு நியூகினி! (Post No.4390)

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 12 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-01

 

 

Post No. 4390

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

நியூகினி என்னும் தீவு உலகின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்று. இது ஒரு தனி நாடு. ஆஸ்திரேலியாவுக்கும் இந்தோநேஷியாவுக்கும் இடையே, பசிபிக் மஹா சமுத்திரத்தில் உள்ளது. இங்கு சுமார் 750 மொழிகள் பேசப்படுகின்றன. இது ஏன் என்பதை, மொமழி ஆராய்ச்சியாளர்களாலும் விளக்க முடியவில்லை. சம்ஸ்கிருதம், தமிழ் என்னும் இரண்டு பழைய மொழிகளை உடைய பாரதத்துக்கு இது பல செய்திகளை அளிக்கும்.

 

தமிழ் என்னும் மொழி ஏன் உடைந்து போய் மலையாளம், கன்னடம், தெலுங்கு என்ற மொழிகளாக உருவாயின? சம்ஸ்கிருதம் என்னும் மொழி உடைந்து குஜராத்தி, மராத்தி, இந்தி என்று ஏன் பல மொழிகள் உருவாயின? பலமொழிகளைப் பேசியோர் வந்து குடியேறினரா? அல்லது பிற மொழிக் கலப்பால் இப்படி உருவாயிற்றா? அப்படிப் பல மொழி கலந்தால் அது ஒரு புறம் தெலுங்காகவும் இன்னொரு புறம் கன்னடமாகவும் மற்றொரு புறம் மலையாளமாகவும் இன்னும் துளு என்றெல்லாம் ஏன் பிரிந்தன? இப்படி ஒருமொழி உடைய எவ்வளவு காலம் பிடிக்கும்? — இவ்வறெல்லாம் கேள்விகள் கேட்டால் எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினாலும் அவைகளை எல்லாம் ‘பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போக்கடிக்கும்’ சில எடுத்துக் காட்டுகளும் கிடைக்கும்!

 

 

நான் நீண்ட காலமாக முன்வைத்துவரும் கொள்கை: உலகில் தமிழும் சம்ஸ்கிருதமும் மிகப் பழைய மொழிகள். ஒரே மூலத்திலிருந்து வளர்ந்த மொழிகள்; வேறு எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைவிட இவ்விரு மொழிகளுக்கு இடையே தான் ஒற்றுமை அதிகம். சந்தி இலக்கணமும் வேற்றுமை உருபுகளும் இரண்டு மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமையைக் காட்டும் முக்கிய அம்சங்கள். மேலும் தமிழில் உள்ள ஆயிரக்கணக்கான ஆங்கிலச் சொற்களுக்கு விளக்கம் காண ஒரே வழி– தமிழ் -சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள்தான் உலகிலுள்ள பெரும்பாலான சொற்களுக்கு வேர் என்று ஒப்புக் கொள்வதாகும். அது எனது கொள்கை.

 

பழைய மொழிகளில் உள்ள பெரும்பாலான சொற்களை இவ்விரு மொழிகளில் காட்டலாம். ஆகவே தமிழ் ஒரு தனி மொழி- அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதெல்லாம் பிதற்றல்; உண்மை என்ன என்றால் பாரத மண்ணில் வாழ்ந்த மக்கள் வடக்கு, தெற்கு எனப் பிரிந்து நீண்ட நெடுங்காலம் வாழ்ந்ததால் இரண்டும் தனித் தனி — ஆனால் சஹோதர மொழிகள் ஆயின. இந்த விஷயங்களைப் பல முறை எழுதி ஆதாரங்களும் கொடுத்துள்ளேன். தமிழ் மொழியில் ஆயிரக் கணக்கான ஆங்கிலச் சொற்கள் உள்ளன. இவைகளை எல்லாம் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பச் சொற்கள் என்று வெளிநாட்டினர் கூறுவர்; அது தவறு; பாரத நாட்டின் மூல மொழியிலிருந்து ஆங்கு குடியேறிய புராதன இந்தியர்கள் பரப்பிய சொற்கள் அவை. ஆகையால் அவைகளைத் தமிழ் சொற்களாகவும் கருதலாம் என்றேன்

நியுகினி மொழிகளின் வரலாறு எனது கொள்கைகளுக்குத் துணையாக வருகிறது.

 

 

முதலில் நியூகினி பற்றிய புள்ளி விவரங்களைக் காண்போம்:

 

நியூகினியில் 750-க்கும் மேலான மொழிகள் பேசப்படுகின்றன. அவை ஆஸ்திரேலியப் பழங்குடி மொழிகளுடன் தொடர்பு அற்றவை. இவர்களுடன் தொடர்பில்லாத மொழி பேசும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் 250 வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். இந்த மக்களின் முன்னோர்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன் குடியேறியவர்கள்; ஒருவர் பேசும் மொழி மற்றவர்களுக்குத் தெரியாது; புரியாது!

 

வெளி நாட்டினர் படை எடுத்ததில்லை; வணிகத் தொடர்பும் பிற நாட்டினருடன் இல்லை; எல்லோரும் மேலனேசியக் (Melanesia; Mela= mala= black) கருப்பர்கள்; ஏன் 750 மொழிகள்? இவைகளைப் பார்க்கும்போது ஆரிய-திராவிட மொழிக் கொள்கைகள் அடிபட்டுப் போகும்; அதா வது ஒருவர் வந்து குடியேறியதால் பல மொழிகள் உருவாயின என்பது தவறு. யாருமே வராத நியூகினி காட்டுக்குள் 750 மொழிகள்; ஆஸ்திரேலியப் பழங்குடி இடையே மேலும் 250    மொழிகள்!

இதில் இன்னும் ஒரு விந்தை என்ன வென்றால் அந்த மொழிகளுக்குள், சில கொஞ்சமும் மற்ற மொழிகளுடன் தொடர்பிலாத- தனிப்பெரும் மொழியாக நிற்கிறது. ஸ்பெயின் நாட்டிலுள்ள பாஸ்க் (Basque) மொழி போல! இதுவும் மொழியியல் வல்லுநர்களுக்குப் புரியாத புதிராக இருக்கிறது. அலை அலையாக மக்கள் குடி ஏறியிருந்தாலும் அவர்கள் வெவ்வேறு இடத்திலிருந்தா வந்தார்கள்? ஆக மொழிகள் உருவாக வெளி அம்சங்கள் தேவை இல்லை என்றே தோன்றுகிறது.

 

 

இன்னும் ஒரு பெரிய விந்தை பாபுவா நியூகினி (Papua New Guinea)  மொழிகள் தமிழ் சம்ஸ்கிருதம் முதலிய இந்திய மொழிகளைப் போல எழுவாய்- செயப்படுபொருள் – வினைச் சொற்கள் (subject, object, verb= SOV) வரிசையில் அமைந்துள்ளன. ஆனால் சற்றுத் தொலைவில் உள்ள ஆஸ்திரேலிய மொழிகள் எஸ். வி. ஓ (Subject, Verb, Object) வரிசையில் உள்ளன. அதாவது ஆங்கிலம் போல.

நான் இட்லி சாப்பிட்டேன் என்பது இந்திய மொழிகளின் வாக்கிய அமைப்பு; நான் சாப்பிட்டேன் இட்லி என்பது ஆங்கில மொழி அமைப்பு; ரஷியன் போன்ற மொழிகளில் எதை எங்கு வேண்டுமானாலும் போடலாம்: இட்லி நான் சாப்பிட்டேன்; சாப்பிட்டேன் நான் இட்லி;  நான் சாப்பிட்டேன் இட்லி.

 

 

மேற்கு பாபுவாவின் வளைகுடா மாகணத்தில் (Gulf Province of West Papua) ஆயிரம் பேர் மட்டுமே பேசும் போரோம் (Porome) மொழி மலையாளம் போல மூக்கொலி (nasal sound) அதிகம் உடையது; ஆனால் உலகிலுள்ள எந்த மொழிக்கும் தொ டர்புடையதல்ல; இது

மொழியியலாளருக்கு சவால் விடும் மர்ம மொழி; பாஸ்க் (Basque)  மொழி போல!

கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக சில மொழிகளைக் கற்று எளியதொரு அகராதியைத் தொகுத்தனர். இதனால் சில் புதிய சொற்கள் தோன்றின.

ஒவ் வொரு மொழி பேசுவோரும் சில ஆயிரம் மட்டுமே இருந்ததால் கல்யாணத்துக்கு மற்ற  மொழிக்குடும்பத்தை நாட வேண்டி இருந்தது. இதனால் ஒரே குடும்பத்தில் மூன்று நான்கு மொழி பேசும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பேரன் எனப் பெருகினர். இதனால் கலப்பின (Pidgin) மொழிகள் உருவாயின. ஆயினும் ஆதியில் எப்படி 750 வெவ்வேறு மொழி பேசுவோர் இங்கு வந்தனர்  என்பது  மொழியியல் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிடுகின்றன.

 

உலக ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம் உடைய பபுவா நியுகினி உலக மொழிகளில் ஆறில் ஒரு பங்கு மொழிகளை உடைத்தாயிருப்பது அதிசயமே.

  

இந்தியர்களைப் போலவே நெருங்கிய உறவினர்களின் பெயர்களையோ, இறந்தோரின் பெயரையோ சொல்ல மாட்டார்கள். பழங்காலத்தில் கணவர் பெயரைச் சொல்ல மாட்டாத தமிழ்ப் பெண்கள், ‘அவர்’ ‘வீட்டுக்காரர்’ ‘ஆத்துக்காரர்’, ‘இந்த ஊர் கோவிலில் உள்ளவரின் பெயர்’ என்றெல்லாம் சுற்றி வளைத்து கணவர் பெயரைச் சொல்லியது ;போல அங்கும் புதுப்புது சொற்களை உருவாக்கும் தேவை ஏற்பட்டது.

 

வேடிக்கை என்னவென்றால் மிக அ திகம் பேர் பேசுவது எங்கா ENGA மொழி; அதை சுமார் இரண்டு லட்சம் பேர் பேசுகின்றனர். அவர்களோவெனில் நாட்டின் நடுப்பகுதியில் யாரும் அணுகமுடியாத மலைப்பகுதியில் வசிப்பவர்கள்!

 

டான் லேகாக் (Late Don Laycock) என்பவர் வாழ்நாள் முழுதும் இந்தத் தீவின் மொழிகளை ஆராய்ந்தார்; அவர் சொல்கிறார்: இந்தத் தீவில் எப்படி இவ்வளவு மொழிகள் வந்தன? என்று கேட்காதீர்கள். உலகில் பெரிய நாடுகளில் ஏன் ஒரு சில மொழிகள் மட்டுமே உள்ளன? என்று கேள்வியை மாற்றிப்

போடுங்கள்; விடை கிடைத்துவிடும். ஏனேனில் அங்கெல்லாம் நாடு முழுவதையும் ஒரு குடைக் கீழ் ஆண்ட மன்னர் இருந்தனர்; ஒரே எழுத்து முறை இருந்தது; நீண்ட கால இலக்கியம் இருந்தது; போக்குவரத்து வசதிகள்– அதன் மூலம் வணிகத் தொடர்புகள் இருந்தன; இவை எதுவும் பபுவா நியூகினி நாட்டில் இல்லாததால் பல மொழிகள் உலா வந்தன என்பார்.

 

எது எவ்வாறாயினும் உலகில் இவ்வள வு மொழிகள் வேறு எங்கும் இல்லை; அதுவும்கூட ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத மொழிகள்!

750 மொழிகளை ஒரு சில தலைப்புகளில் சேர்த்து வகைப் படுத்தினாலும் மொழிகளில் உள்ள இலக்கண வேறுபாடுகள் பெரிய புதிர்களாக விளங்குகின்றன.

 

இந்தத் தீவின் மொழிகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன. காலனியாதிக்க காலத்திலேயே பிரிட்டன், ஜெர்மனி, ஹாலந்து ஆகியன பல பகுதிகளைப் பிடித்து ஆண்டன. ன்னர் ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் கீழ் வந்தது; ஒரு பகுதி – இரியன் ஜயா- என்பது இந்தோநேசியாவின் ஆட்சிக்குட்ப்பட்டது. சுசுவாமி என்னும் மொழி பேசுவோர் 50 பேர் மட்டுமே இருந்தனர். இன்னும் சில மொழிகளை 500 பேர் மட்டுமே பேசினர். ஆங்கிலக் கல்வி முதலியவற்றால் 750 மொழிகளில் பெரும்பாலானவை அழிந்து வருகின்றன அல்லது அழிந்துவிட்டன என்றே சொல்லலாம்.

 

மொத்தத்தில் மொழிக் கொள்கையாளர் சொன்ன பல விதிகளைப் பொய் என்று காட்டுகிறது பபுவா நியூகினி நாடு.

TAGS:– நியூகினி, மொழிகள் கொள்கை

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 7 (Post No.4385)

Written by S.NAGARAJAN

 

 

Date: 11 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-32 am

 

 

Post No. 4385

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 7

 

ச.நாகராஜன்

10

பாரிஸிலிருந்த தனது தாயாருக்கு அவர் 1845ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள அம்மா, உங்களிடமிருந்து பணம் வாங்கியதற்கு பதிலாக கொஞ்சம் மகிழ்ச்சியை நான் கொடுத்திருக்கலாம். ஆனால் அது முடியாத காரியம் – எனது எதிர்காலத்தை நான் முற்றிலுமாக தியாகம் செய்தாலொழிய…. லெடர்ஹோஸிடமிருந்து இன்னும் 200 ஃபிராங்குகளை நான் வாங்க வேண்டியிருந்தது. நீங்கள் இப்போது அனுப்பியுள்ள பணத்தை வைத்து ஜனவரி அல்லது பிப்ரவரி வரை ஓட்ட முடியும்” என்று எழுதியுள்ளார்.

கடிதத்தின் ஆங்கில மூலத்தைக் காண்போம்.

TO HIS MOTHER. PARIS, December 23, 1845.

“…instead of taking money from you, my dearest mother, I could have given you some little pleasure. But it was impossible, unless I sacrificed my whole future… I have again had to get 200 francs from Lederhose, and with the money you have just sent shall manage till January or February.”

1847ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று அவர் தன் தாயாருக்கு எழுதுகையில்,எனது லண்டன் அறைகள் பிரமாதமாக இருக்கின்றன.கீழ்த்திசை ஆராய்ச்சியாளரான டாக்டர் ட்ரிஹென்னும் அதே வீட்டில் தான் தங்கி இருக்கிறார். அவரை  எனக்கு பாரிஸிலேயே தெரியும். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவர் வெளியுறவு இலாகாவில் பணிபுரிந்து வந்தார். இன்னும் பல கீழ்த்திசை ஆராய்ச்சியாளர்கள் எனக்கு அருகிலேயே வசித்து வருகின்றனர். உலகின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களையும் கொண்டு ஒரு ஓரியண்டல் காலனியையே இங்கு உருவாக்கியுள்ளோம். நல்ல வேடிக்கை பொழுதுபோக்குகளை எங்கள் காஸ்மாபாலிடன் தேநீர் அருந்தும் மாலை நேரங்களில் கொண்டுள்ளோம் என்று எழுதுகிறார்.

கடிதத்தின் ஆங்கில மூலத்தைப் பார்ப்போம்:

TO HIS MOTHER. September 1, 1847.

“My rooms in London are delightful. In the same house lives Dr. Trithen, an orientalist, whom I knew in Paris, and who was once employed in the Office for Foreign Affairs in St. Petersburg. Then there are a great many other orientalists in London, who are mostly living near me, and we form an oriental colony from all parts of the world… We have a good deal of fun at our cosmopolitan tea-evenings.”

அதாவது மாக்ஸ்முல்லர் லண்டனில் ஒருவாறாகசெட்டில் ஆகி விட்டார்.

ஆக கடுமையான பணத்தட்டுப்பாட்டில் இருந்த மாக்ஸ்முல்லருக்கு ஈஸ்ட் இந்தியா கம்பெனி மூலம் ஒரு வழி பிறந்தது. மளமளவென்றுஎதையாவது செய்து அவர்களைத் திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார்.

மனம் போனபடி அவர் வேதங்களின் மொழி பெயர்ப்பைத்தயார்  செய்யலானார்.

தனது மொழி பெயர்ப்பைப் பற்றி அவரே தனது Vedic Hymns”  என்ற புத்தகத்தில், “எனது வேத மொழியாக்கம் ஊகத்திற்கிடமானது (“My translation of the Vedas is conjectural”) என்று கூறியுள்ளார்.

வேதத்திற்கு  பல பொருள்கள் உண்டு. அதை உள்ளுணர்வு பெற்றவர்களே சரியாக அறிய முடியும். வெறும் கற்றுக் குட்டிகளை வைத்து வார்த்தைகளைத் தனக்குத் தோன்றிய பொருளில் அவர்  மொழியாக்கம் செய்தது தவறு.

பல கொள்கைகளை அவர் உருவாக்கினார். ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள், வேதத்தின் காலம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது போன்ற கருத்துக்களை அவர் வித்திட்டார்.

இப்படிச் சொன்னதால் அவர்அறிஞராக்கப்பட்டார்.

மிஷனரிகளுக்குத் தேவையான அனைத்து விதைகளும் அவர் தந்து விட்டதால்செடிகளை வளர்ப்பது அவர்களுக்குச் சுலபமானது.

ஆனால் பின்னால் இதே மாக்ஸ்முல்லர் தன் கருத்துக்களைத் திருத்திக் கொள்ள முற்பட்டபோது அதே கிறிஸ்தவ மிஷனரிகளால் கடுமையாக விமரிசிக்கப்பட்டு தாக்கப்பட்டார்.

அதையும் பார்ப்போம்.

                                –தொடரும்

****