எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657)

Written by London swaminathan

 

Date: 21 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 19-56

 

Post No. 3657

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்தில் ஆரம்பகால மன்னர்கள் (பழைய ராஜ்யம் Old Kingdom) இறந்தபோது அவர்களுடன் நூற்றுக்கணக்கான அடியாட்கள், காமக்கிழத்தியர் (Concubines), குள்ளர்களும் (Dwarves) புதைக்கப்பட்டதாகத் தெரிகிறது.இவர்கள் தானாக உயிர்த் தியாகம் செய்தார்களா அல்லது பலவந்தமாக நரபலி கொடுக்கப்பட்டதா என்பதே கேள்வி.

 

வால்மீகி ராமாயணத்தில் ராமன் சரயு ஆற்றில் விழுந்து உயிர்த் தியாகம் (ஜல சமாதி) செய்தபோது அவரோடு ஏராளமான பொது மக்களும் தாமாக முன்வந்து  உயிர்த் தியாகம் செய்த செய்தி உள்ளது.

 

திருஞான சம்பந்தர் திருமண நாளன்று  மனைவியுடன் அக்கினியில் புகுந்தபோது அவர் ஏராளமானோரை அழைத்துச் சென்றார். இது போல மன்னர்களும், புனிதர்களும் இறக்கும்போது அவர்களுடன் சென்றால் சுவர்க்கத்துக்குள் எளிதாகப் போக முடியும்; இது சொர்க்கத்துக்கு ஒரு சுருக்குவழிப்பாதை (Short cut route) என்பது மக்களின் நம்பிக்கை. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்தபோது பிசிராந்தையார் முதலியோரும் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததும் இந்தக் காரணத்தால்தான். வடக்கிருத்தல் என்பது ஒரு புனித நோன்பு.

மஹா பத்தினியான சித்துர் ராணி பத்மினி , அலாவுதீன் கில்ஜியின் கரங்கள் தன் மீது பட்டுவிடக்கூடாதென்பதற்காக தீக்குளித்தபோது அவளுடன் நூற்றுக்கணக்கான ராஜபுத்திர வீராங்கனைகள் தீக்குள் பாய்ந்து உயிர் நீத்ததற்கும் இதுவே காரணம். போரில் இறப்பவர்களுக்கு வீர சுவர்க்கம் கிர்டைக்கும் என்பது பகவத்கீதையிலும் புறநானூற்றிலும் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. போருக்கு முன்பாக தன்னைத்தானே பலிகொடுத்து வீரத்தைத் தூண்டிவிடும் வீரர்களின் சிலைகள் தமிழ்நாடு முழுதும் உள்ளன. இது  மஹாபாரத காலத்தில் துவங்கியது மஹாபாரதத்தில் வரையப்பட்டுள்ளது.

 

 

எகிப்தில் நடந்தது என்ன?

எகிப்திலும் தாமாக முன்வது இறந்தனரா என்பதே கேள்வி

பிளிண்டர்ஸ் பெற்றி Flinders Petrie என்பவர்தான் முதல் முதலில் எகிப்தில் பெரிய ஆராய்ச்சிகளைச் செய்தவர். அவர் ABYDOS அபிதோஸ் நகரில் 1900ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி நடத்தினார். முதல் அரச வம்சத்தைச் சேர்ந்த தஜெர் (Djer of First Dynasty) என்ற மன்னரின் புதைகுழிக்குப் பக்கத்தில் 317 துணைப் புதைகுழிகள் இருந்தன. இது தவிர நைல் நதி ஓரமாக ஏராளமான கல்லறைகள் இருந்தன.

 

முதல் அரச வம்சம் தொடர்பான சில விஷயங்கள் சின்னச் சின்ன கல்வெட்டு வில்லைகளாகக் கிடைத்தன. அதில் முக்கிய தர்பார் நிகழ்ச்சிகளும் சமயம் தொடர்பான சடங்குகளும் வரையப்பட்டுள்ளன.

 

இரண்டு வில்லைகளில் பயங்கரக் காட்சிகள் உள்ளன. உயிருடனுள்ள ஒரு கைதியின் நெஞ்சில் ஒருவன் கத்தியைப் பாய்ச்சுகிறான். அவனது ரத்தத்தைப் பிடிப்பதற்காக அருகிலேயே ஒரு கிண்னம் வைக்கப்பட்டுள்ளது. இதன் சரியான பொருள் தெரியவில்லை. ஆனால் போர்க்கைதிகள், குற்றவாளிகளை சமயச் சடங்குகளில் பலி கொடுப்பது தெரியவந்த்துள்ளது.

 

ஆனால் ஒவ்வொரு மன்னர் இறந்தபோதும் ஏராளமானோர் பலிகொடுக்கப்பதற்கான ஆதாரஙள் எதுவும் இல்லை. ஆரம்ப கால கிசா பிரமிடுக்குப் பக்கத்தில் வரிசை வரிசையாக கல்லறைகள் இருந்தபோதும் அவை எல்லாம் அரசாங்க திகாரிகள் இறந்தபின்னர் புதைப்பதற்காக ஒதுக்கப்பட்டவையே. இது அவர்களுக்குக் கிடைத்த ஒரு சலுகை!

முதல் அரசவம்ச (First Dynasty) கால கல்லறைகளில் ஒரு முக்கிய வேறுபாடு காணப்படுகிறது. இறந்தவரின் பெயரும் அவர் பதவியும் பொறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் உயர் அதிகாரிகள் இல்லை. அரசரின் சேவகர்கள், காமக் கிழ்த்தியர், குள்ளர்கள் ஆகியோரின் கல்லறைகளாகும்.

 

இந்தியாவிலும் அரண்மனைகளில் குள்ளர்களை வேலைக்கு வைக்கவேண்டும் என்று நீதி சாத்திரம் கூறுகிறது. இந்தியாவிலும் அரசனின் அந்தப்புரத்தில் இதுபோல கள்ளக் காதலிகள் இருப்பர்.

 

அவர்களுடைய சடலம் உள்ள நிலை, எந்தக் காலத்தில் புதைக்கப்பட்டனர் என்பதை ஆராய முடியாதவாறு கல்லறைத் திருடர்கள் அவைகளைத் தோண்டி நிர்மூலம் செய்துவிட்டதால் முறையான ஆராய்ச்சிக்கு வழி இல்லாமல் போய்விட்டது.

 

சீனா, மெசபொடோமியா, பழைய நூபியா(Old Nubia) ஆகிய நாடுகளின் கல்லறைகளில் சடலமோ, எலும்புக்கூடோ உடகார்ந்திருக்கும் நிலையைப் பார்த்து அது உயிருடன் புதைக்கப்பட்ட ஆசாமி என்பதை அறிந்தோம். சில இடங்களில் ஒரே கல்லறையில் நூற்றுக்கணக்கானோர் புதைக்கப்பட தையும் பார்த்திருக்கிறோம். ஆனால் எகிப்தில் அப்படி இல்லாமல் இற   ந்தோருக்கு மரியாதை கொடுத்திருப்பதைக் காண முடிகிறது. தனித்தனி கல்லறைகளில் சடலங்கள் புதைக்கப் பட்டன. தலையைச் சீவி பலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்களும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு புரியாத விசித்திரப் புதிர் மட்டும் இருக்கிறது! ஆஹா (Aha) என்ற மன்னரின் (பாரோவின்) கல்லறைக்கு அருகில் புதைக்கப்பட்ட எல்லோருடைய வயதும், 25-க்கும் குறைவு! அரசன் மறைவை அடுத்து அவர்களும் இறந்தது அல்லது இறக்கவைக்கப்பட்டது தெரிகிறது

நரபலி தடயங்கள்

முதல் அரச வம்சத்தின் இரண்டு அரசர்களின் (பாரோக்கள்) கல்லறைகளில் நரபலிக்கான நல்ல தடயம் கிடைத்தன. இவர்கள் கொலை செய்யப்பட்டனரா அல்லது மன்னரின் மீதுள்ள அபிமானத்தால் தற்கொலை செய்துகொண்டார்களா என்று சொல்ல முடியாது. சமர்கேட் Semerkhet (சமரகேது), கா (Qaa) (இந்துமதத்தில் கா என்றால் பிரம்மா என்று பொருள்) ஆகிய இருவரின் கல்லறைகளுக்கு அருகிலுள்ள சில கல்லறைகள் ஒரே நேரத்தில் மூடப்படுள்ளன. அவர்களாக உயிர்த் தியாகம் செய்திருக்கலாம். 1989ல் ஜப்பானிய மன்னர் ஹிரோஹிடோ இறந்தவுடன் அவருடைய பழைய நன்றியுள்ள ஒரு சேவகன் தற்கொலை செய்துகொண்டான்; காரணம்- மன்னருக்கு மேலுலகத்திலும் சேவை செய்ய!

 

எகிப்திலும் மக்களின் சமய நம்பிக்கை காரணமாக இறந்திருக்கலாமே! நமது நாட்டிலேயே ராமாயண, புறநானூற்றுச் சான்றுகள் உளவே!

-சுபம்–

ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654)

Written by London swaminathan

 

Date: 20 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 20-54

 

Post No. 3654

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

எகிப்தில் பழைய அரச வம்சம் (Old Kingdom) முடிந்தவுடன், கி.மு.2200 வாக்கில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன; கடவுள் என்று கருதப்பட்ட மன்னனின் அதிகாரங்கள் குறைந்து மனிதன் என்ற நிலையை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தார். மன்னரின் கால்களை முத்தமிடுவது கிடைத்தற்கரிய பாக்கியமாக கருதப்பட்ட நிலை மாறி, மன்னரைக் கவிழ்க்கும் முயற்சிகள் பெருகின. இதை நேரில் கண்ட ஒரு புலவர் நமக்காக எழுதிவைத்துச்  சென்றுள்ளார். சுமார் 4000 ஆண்டுகளுக்கு பின்னர் படித்தாலும் அதிலுள்ள கவிநயம் ரசிக்கத்தக்கதாக உள்ளது. இதே போல காளிதாசனும் ரகுவம்சத்தில் தோன்றிய கடைசி சில அ ரசர்கள் பற்றிப் புலம்பியுள்ளார். காஷ்மீரின் சரித்திரத்தை ராஜதரங்கிணி என்ற நூலாக எழுதிய கல்ஹணரும் இதே போல காஷ்மீரில் இந்து சாம்ராஜ்யம் எப்படி சரிந்தது என்று கவி பாடியுள்ளார். கவிஞர்கள் என்றுமே உண்மை விளம்பிகள்!

 

இந்தக் கவிஞரின் பெயர் இபுவேர் (Ipuwer) அல்லது அய்புவேர. அவருடைய கவிதை சிதைந்த நிலையிலேயே கிடைத்துள்ளது. ஆதிகால எகிப்திய இலக்கியத்தில் சிறந்த ஒரு பகுதி என்று கருதப்படுகிறது. இபுவேர் சொல்கிறார்:

 

“அரசன் கிழவன் ஆகிவிட்டான்; அரண்மனைக்குள் பாதுகாப்பாக உள்ளான். அவனுக்குத் தெரியுமா மக்கள் படும்பாடு! அவனைச் சுற்றியுள்ள அதிகாரிகள், அவனுக்கு இதுபற்றித் தெரியாமல் மறைத்துவிட்டனர். எகிப்தைப் பீடித்துள்ள நோய்கள் இரண்டு; அதிகமான வெளிநாட்டினர் தங்கு தடையின்றி உள்ளே வந்துவிட்டனர். அத்தோடு பழைய சமூக நிலை தலை  கீழாக மாறிவிட்டது

இதைப் பற்றித்தான் எல்லோரும் புகார் செய்கின்றனர். வேலைக்காரிகள், மஹாராணிகளின் இடத்தைப் பிடித்துவிடுகிறார்கள்; அதிகாரிகள் சட்டவிரோத ஆட்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டியுள்ளது. இளவரசர்களின் குழந்தைகளை சுவரில் மோதி கொல்கின்றனர்”.

கடவுள்- அரசன் தொடர்பு மாறியவுடன் அரசன்–மக்கள் தொடர்பும் மாறிவிட்டது நாலாவது (Fourth Dynasty) அரச வம்ச மன்னன் ஒருவன், தனக்கு வேண்டிய ஒரு அதிகாரியை தனது காலை முத்தமிட அனுமதித்தான். அதை அந்த அதிகாரி பெரிய பாக்கியமாகக் கருதினார். இவையெல்லாம் பிறகாலத்தில் நினைத்தும் பார்க்கமுடியாதவை

 

எகிப்தியர்களே இதற்கு முந்தைய ஆயிரம் ஆண்டுகளைப் பொற்காலம் (Golden Age) என்று வருணித்தனர். ரே (Re) என்னும் கடவுளே அக்காலத்தில் ஆண்டதாகக் கருதினர். ஆனால் இபுவேர் என்ற கவிஞர் சொல்கிறார்:

 

“ரே- வுக்கு வயதாகிவிட்டது! அவருடைய எலும்புகள் வெள்ளி ஆகிவிட்டன; சதை தங்கம் ஆகிவிட்டது; அவருடைய தாடி நீலநிறக் கற்களாகிவிட்டன.”

 

கஷ்டகாலத்திலும் கூட கவிஞரின் கற்பனைக்கு யாரும் தடை போட முடியவில்லை. அவர் வருணித்த பொருள்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து எகிப்துக்குள் வந்தவை.

 

இபுவேர் கி.மு.2000ல் வாழ்ந்தவர் என்றும் அவர் வருணிப்பது அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை என்றும் கருதப்படுகிறது. ஆனால் அவரது கவிதையை தவிர வேறு எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை.

 

காளிதாசன் புலம்பல்

உலகப் புகழ்பெற காளிதாசனும் ரகு வம்சத்தை துவக்கத்தில் புகழ்கிறான்; பிற்காலத்தில் அது க்ஷீண திசையை அடந்தபோது இகழ்கிறான். மக்களை மதிக்காத மன்னன் ஜன்னல் வழியே கால்களை நீட்டித் தெரியும்படி வைத்து மக்களை அவமானப் படுத்துகிறான்.

 

ரகுவம்சத்தில் 19-ஆவது சர்கத்தில் அக்னிவர்ணன் என்ற மன்னன் பற்றிக் காளிதாசன் கூறுவதாவது:-

 

அழகான ஸ்த்ரீக்களுடன் வசிக்கும் அக்காமுகனது வீட்டில் எப்போதும் மிருதங்க ஒலி கேட்டது. முதல் நாள் கொண்டாட்டத்தை விஞ்சும் அளவுக்கு இரண்டாம் நாள் கொண்டாட்டம் இருக்கும். அந்தப் புரத்தை விட்டு அவன் நகரவில்லை.  ஜனங்களைக் காண விரும்பவில்லை.

மந்திரிகள் கெஞ்சியதால் ஒரு முறை மக்களுக்கு தரிசனம் தந்தான். எப்படி என்றால் ஜன்னல் வழியே கால்களை மட்டும் நீட்டினான. அப்பாதத்தையே வணங்கி மக்கள் பேறுபெற்றதாக எண்ணி மகிழ்ந்தனர். மதுவிலும் மாதுவிடத்திலும் காலம் கழித்தான். அவனே மிருதங்கம் வாசித்து ஆடல் அழகிகளை ஆடச்செய்தான். வேலைக்கரிகளிடம் காதல் கொண்டான்.. இறுதியில் நோய்வாய்ப்படு இறந்தவுடன் அவன் மனைவி அரசாண்டாள்.

 

எகிப்திய கவிஞர் புலம்பல் போலவே காளிதாசனும் புலம்பியது குறிப்பிடத்தக்கது.

 

இதே போல இலங்கையில் நடந்த தீய செயல்களை மஹாவம்சமும் காஷ்மீரில் நடந்த தீய செயல்களை கல்ஹணரின் ராஜதரங்கிணியும் விளக்கமாகத் தந்துள்ளன.

 

சுபம்–

 

 

எகிப்தில் சூர்ய வம்சம்: எகிப்திய அதிசயங்கள்-பகுதி 4 (Post No.3651)

Written by London swaminathan

Date: 19 FEBRUARY 2017

Time uploaded in London:- 20–49

Post No. 3651

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

ஆர்ய தரங்கிணி என்னும் ஆங்கில நூலில் ஏ.கல்யாணராமன் (Aryatarangini by A.Kalyanaraman) எழுதிய விஷயங்களின் சுருக்கத்தை மூன்றாம் பகுதியில் கொடுத்தேன். அவர் சொல்லும் வேறு சில விஷயங்கள்:–

எகிப்திய பாரோக்கள் (மன்னர்கள் ) தங்களை சூரியனின் புதல்வர்கள் என்று கூறிக்கொண்டனர். கி.மு.2500ம் ஆண்டில் இப்படி அழைத்துக்கொண்ட முதல் மன்னன் ஆண்ட நாகரின் பெயரும் சூரியபுரி! இதை இந்தியாவிலுள்ள சூரியவம்சத்துடன் ஒப்பிடலாம். இக்ஷ்வாகு வம்சத்தில் திலீபன், ரகு, ராமன் ஆகியோர் தோன்றினர். இவர்கள் அனைவரும் சூரியகுலத்தில் உதித்த அரசர்கள். (தமிழ் மன்னர்களில் சோழர்களும் சூரிய குலத் தோன்றல்களே). இவர்கள் அனைவரும் 14 ஆவது மனுவான வைவஸ்வத மனுவின் வழியில் வந்தவர்கள். அவருடைய காலம் கி.மு.3000 ஆக இருக்கலாம்.

 

 

இந்திய மன்னர்கள் சூரிய தெய்வங்களான ஆதித்யர்கள் (அதிதியின் மகன்கள்= ஆதித்யர்கள்) வழி வந்தவர்கள் ஆவர். எகிப்தில் மன்னர்களின் மூச்சு, நைல் நதிக்கு உயிரோட்டம் கொடுத்ததாகச் சொல்லுவர். இந்தியாவில் நீர்க் கடவுளான வருணனை மன்னர்களுடன் ஒப்பிடுவர்.

 

இந்த ஒற்றுமைகளை எல்லாம் கண்ட சில ஆராய்ச்சியளர்கள், எகிப்திலிருந்தே, இந்திய கலாசாரம் வந்ததாகச் சொன்னார்கள். இதை நியாயப்படுத்துவதற்காக எகிப்திய மன்னர்களின் காலத்தை முன்போட்டனர். எகிப்தியர்களுக்கு மிகவும் முந்தையது சப்தசிந்து நாகரீகம் என்று நான் காட்டுவேன்.

எகிப்தில் நாகரீகம் தோன்றியது கி.மு.3200 -எனலாம்.. ரிக்வேதத்தில் காணப்படும் கலாசாரம் இதைவிட குறைந்தது 1000 ஆண்டுகளாவது பழமையானது. எகிப்தியர்கள்தான்,  இந்தியாவிலிருந்து கடன் வாங்கி இருக்க வேண்டும். இதற்கு ஆதாரங்கள் உள.

 

 

எகிப்துக்குள் கொஞ்சம் கொஞ்சமாக குதிரைகள், சக்கரம் பூட்டிய ரதங்கள், குயவர் சக்கரம், இரும்பு உபகரணங்கள், ஆயுதங்களூம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை துருக்கி, லெபனான் ஆகிய பகுதிகளை ஆண்ட மிட்டனி (Mitanni) அரசர்களிடமிருந்து கிடைத்திருக்கலாம்.

 

வில்- அம்பு

ரிக் வேதத்தில் வில்- அம்பு பிரயோகம் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. பயுவின் பிராரத்தனை (6-75) ஒரு எடுத்துக் காட்டு. இந்த வில்- எதனால் ஆனது என்பதை வேதம் சொல்லாவிடினும், உலோகம், கொம்பு, மரத்தால் வில்கள் செய்யப்படதாக அக்னி புராணம் சொல்லும். கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணிணி அம்புகளை கார்முக என்று குறிப்பிடுகிறார். பாணினி, கௌடில்யர் முதலியோர் பனைமரத்தால் ஆன வில்லைக் குறிப்பிடுகிறார்கள். மஹேச்வாச என்ற விசேஷ வில்லைப் பாணினி குறிப்பிடுகிறார். இது ஏழரை அடி நீளமானது. சாதாரண வில் ஆறு அடி நீளம் உடையது. எகிப்தியர்களும் இதே அளவுடைய வில் பயன்படுத்தினர். சம்ஸ்கிருதத்தில் வில்- அம்புக்கு உள்ள பெயர்களே அவஸ்தன், கிரேக்க, லதீன் மொழிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

 

எகிப்து மீது படையெடுத்த ஹிக்ஸோஸ் (Hyksos) குதிரை பூட்டிய ரதங்களைப் பயன்படுத்தியது, எகிப்தில் புதிய தாக்கத்தை உண்டாக்கியது. அதற்குப் பின்னர், எகிப்திய ராணுவத்தில் குதிரைப் படை வந்தது. ஆசிய நாட்டு மரங்களை தேருக்குப் பயன்படுத்துவது கொஞ்சம் காலம் நீடித்தது. இந்தப் படையெடுப்புக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து திமில் இருக்கும் பிராம்மணி காளைகள் இறக்குமதி செய்யப்பட்டன. போர் என்னும் கலையை ஹிக்ஸோஸ் படை எடுப்பு முழு அளவுக்கு மாற்றிவிட்டது என்று சர் எச். கார்டன் (Sir H.Gordon) கூறுகிறார்.

 

–subham–

எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம்: எகிப்திய அதிசயங்கள்- பகுதி 3 (Post No.3648)

Written by London swaminathan

 

Date: 18 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 20-59

 

Post No. 3648

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்து பற்றி பல ஆராய்ச்சியாளர்கள் கூறியதையும் அது குறித்து தனது கருத்தையும் ஏ.கல்யான்ணராமன் எழுதிய ஆரியதரங்கிணி என்ற நூலில் பல்வேறு பக்கங்களில் தனித்தனியே  அளித்துள்ளார். அவற்றைத் தொகுத்து (தமிழில்) தருகிறேன்:-

 

செமிட்டிக் மொழிகளில் குரங்கு, மயில், கிதார், நீலம் (ரத்தினக் கல்) முதலியவற்றின் சொற்கள் சம்ஸ்கிருத மொழியிருந்து வந்துள்ளன. இது ஹீப்ரு முதலிய மொழிகளில் இந்தியாவின் தாக்கததைக் காட்டுகிறது.

 

வேதத்திலுள்ள மனு- மீன் கதை (பிரளயம்) பைபிளின் பழைய ஏற்பாட்டில் (Jonah and the Whale) உள்ளது. இது இந்து கலாசாரத்தின் தாக்கத்தைக் காட்டுகிறது. கி.மு.3000 வாக்கில் இந்தியாவிலிருந்து பலர் அங்கு குடியேறினர்.

 

எகிப்தை டாலமி (Ptolemies) வம்ச அரசர்கள் ஆண்டபோது அங்கு ஆரிய புரோகிதர்கள் இருந்ததும் அங்குள்ள சம்ஸ்கிருதப் பயிற்சிப் பள்ளீகளில் அவர்கள் சொற்பொழிவாற்றியதும் தெரியவந்துள்ளது.

 

 

பல எகிப்திய தெய்வங்கள், வைதீக சமய தெய்வங்களைப் போல இருக்கின்றன. இது பற்றி இன்னொரு இடத்தில் விளக்கியுள்ளேன். எகிப்தியர்களின் முக்கியக் கடவுள் Ptah பிதா ( பரலோக பிதா) வேதத்திலுள்ள வானுலக பிதாவை Dyaus Pitar இது குறிக்கும் இதை கிரேக்கர்கள் ஜ்யூஸ் பேடர் Zeus Pater என்றும் ரோமானியர்கள் ஜூ+பிடர் Jupiter என்றும் வழிபட்டனர்.

 

எகிப்தியர் வழிபட்ட Hathor ஹதோர், வேத கால தெய்வமான சவிதர் (Savitur) என்பதைப் போன்றது எகிப்தியரின் ஹோரஸ் (Horus or Sorus) அல்லது சோரஸ் என்பது வேதத்திலுள்ள சூர்ய  (Surya=Sun)என்பதைப் போன்றது.

(கிரேக்க மொழியிலும் பாரசீக மொழியிலும்  S எஸ் என்பது H எச் என்று உச்சரிக்கப்படும்)

 

எகிப்தியர் மன்னர்களை பாரோ (Pharaoh) என்று அழைத்தனர். இது சம்ஸ்கிருதச் சொல்லான பர Para (உயர்ந்தது, சிறந்தது என்பதன் திரிபு ஆகும்.

மன்னர்களை எல்லோரையும் விட உயர்வாகக் கருதியதால் இவ்வாறு அழைத்தனர். அவரை வாழும் தெய்வாமாகக் கருதியதோடு, இறந்தபின்னர் ஆசிரிஸ் Osiris என்று கருதினர். ஆசிரிஸ் நைல் நதி வெள்ளத்துக்குக் காரணமானவர்; உயிர்கள் தோற்றத்திற்கான கடவுளும் ஆவார். ஆசிரிஸின் நகரம் Heliopolis ஹீலியோபோலிஸ். இது சூர்யபுரி Suryapuri என்பதன் திரிபு.

 

வேத இலக்கியமான பிராமணங்களில் அரசர் பற்றி கூறிய கொள்கைகளே எகிப்தியர் கொள்கையாகவும் இருந்தது.

பிரமிடுகளும் ராஜசூய யக்ஞமும்

 

பிரமிடுகளை ஏன் எகிப்தியர் கட்டினர்?

மன்னரின் ஆவி சுவர்க லோகத்துக்குச் செல்லும் ஏணிதான் பிரமிடு என்று எட்வர்ட் (Edward) காட்டுகிறார். இதற்கு ஆதாரமாக பபைரஸ் (Papyrus) காகிதத்திலுள்ள ஒரு பழைய வாசகத்தை அவர் சுட்டிக்காட்டினார். ரே (Eye of Re) கடவுளின் கண்ணாக நான் சுவர்கத்துக்கு ஏகுவேன். ரே கடவுளின் கிரணங்களை படியாகப் பயன்படுத்துவேன் என்பது எகிப்திய வசனம்.

 

ரிக்வேதத்தில் இறுதிச் சடங்கு பற்றிய மந்திரத்தில் இறந்தவரின் கண் சூரியனிடம் செல்லுவதாக உள்ளது:-

 

சூர்யம் தே சக்ஷுஹு கச்சந்து (10-15)

 

சோழ மன்னரும் தருமபுத்திரனும் மற்றும் பலரும் செய்த ராஜசூய யக்ஞத்தில் 17 படியுள்ள கம்பத்தில் (17 sided post) மன்னர் ஏறுவார் இது அந்த மன்னரை நப (வானத்துக்கு) என்ற இடத்துக்கு அழைத்துச் செல்லும். இதற்குப் பின்னர் மன்னர் அறிவிப்பார்:

வானத்துக்கும் அப்பாலுள்ள லோகத்துக்கு சென்று பிரஜாபதியின் மகன் ஆகிவிட்டேன்.

இது போன்ற பொருளுள்ள வசனங்கள் எகிப்திய புனித நூல்களிலும் உள.

 

இந்துக்களை போல அவர்களும் பார்லியைப் பயன்படுத்தினர். அதுதான எகி ப்தின் முக்கியப் பயிர்.

 

குப்ரு (Khufu) என்ற மன்னன் குரு வம்சத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம்.

ராம்செஸ் (Ramses) என்ற மன்னரின் பெயர் ராம ஈச என்று சில இந்தியவியலாலர் கருதுகின்றனர். அவர் மாதா மாரி அம்மனின் (Maat Meri Ammon)  மகன்.

 

வேத கால இந்துக்கள் விவசாயிகளாக இருந்ததால் நதிகளைத் தெய்வமாகக் கருதினர். இதுபோல எகிப்தியர்களும் நதியைப் புனிதமாகக் கருதினர். அவர்களும் விவசாயிகள்.

 

ஆதிகால எகிப்தியர்களுக்கு தங்கமும் தாமிரமும் மட்டுமே தெரியும். கி.மு.1600 ல் ஹிக்ஸோஸ் (Hyksos) தான் இரும்பு பற்றிச் சொல்லிக் கொடுத்தனர்.

 

மன்னர் ஏர் உழும் காட்சி எகிப்தில் சித்தரிக்கப்பட்டது. ரிக்வேதத்தில் நிறைய விவசாயக் குறிப்புகள் உள்ளன (7-6; 10-101; 10-8; 10-99; 3-45)

ஆரிய என்ற சொல்லே ஏர் என்னும் விவசாயச் சொல்லில் இருந்து உருவானதே.

பேராசிரியர் ஜே.பி.எஸ். ஹால்டேன் (J B S Haldane)  போன்றோர் ரொட்டிக்கான கோதுமை பஞ்சாபிலிருந்தே உலகம் முழுதும் பரவியது என்பர்.

அடுத்த பகுதியில் சூர்ய வம்சத்துக்கும் எகிப்துக்கும் உள்ள தொடர்பு பற்றி ஏ.கல்யாணராமன் சொல்லும் விஷயங்களைக் காண்போம்.

source:Aryatarangini by A Kalyanaraman, 1969

 

 

மெசபொடோமியாவில்,எகிப்தில் நாய் தெய்வம்! 1000 நாய்கள் கல்லறை! (Post No.3644)

Written by London swaminathan

 

Date: 17 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 6-24 am

 

Post No. 3644

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ஒருவன் நாய் போல அலைந்து திரிந்து, கண்டவர்களிடம் எல்லாம் உணவை பிச்சை எடுப்பதைவிட கேவலம் ஏதேனும் உண்டா? — மஹாபாரதம் 1-147-17

யாசமானா: பராத் அன்னம் பரிதாவே மஹீஸ்வவத்?

 

நாய்களைத்தான் மனிதன் முதல் முதலில் வீட்டு மிருகமாகப் பயன்படுத்தினான்; பழக்கப்படுத்தினான். ஓநாயிருந்து வந்தது நாய்!

 

இதற்குப் பின்னர் ஆடுகளையும், மாடுகளையும், குதிரைகளையும் பழக்கப்படுத்தி, பயன்படுத்தினான்.

b8ece-hachiko

டோக்கியோவில் ஹசிகோவுக்கு சிலை

 

உலகில் நாய்களை இலக்கியத்தில் ஏற்றிய முதல் நாடு இந்தியா! உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் சரமா என்ற நாயின் கதை உள்ளது. அதை கிரேக்கர்கள் ‘திருடி’ ஹெர்மிஸ் HERMES என்று கதை செய்துள்ளனர். கிரேக்கர்களுக்கும், பாரசீகர்களுக்கும் ஸ் (S) சப்தம் வராது ஸ என்பதை ஹ (H) என்று மாற்றிவிடுவார்கள். அதனால்தான் நமக்கு ஹிந்துக்கள் என்றும், இந்த நாட்டுக்கு இந்துஸ்தான், இந்தியா என்றும் பெயர் வந்தது. சிந்து நதிப் பிரதேசம் என்பதை ஹிந்து (S=H) என்று மாற்றி உச்சரித்தனர்.

 

இது தவிர 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மஹாபாரதத்தின் 18-ஆவது பர்வத்தில் தருமரின் (யுதிஷ்டிரரின்) பின்னால் சென்ற நாயின் கதை உள்ளது.

 

ராமாயண உத்தர காண்டத்திலும் ஒரு நாயின் கதை வருகிறது.

 

இதுபற்றியும், டோக்கியோ நகரில் ஹசிகோ (HACHIKO) என்ற நன்றியுள்ள நாய்க்கு சிலை வைத்திருப்பது பற்றியும், தமிழர்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே ஊரைக் காப்பாற்றிய கோவிதன் என்ற நாய்க்கு நடுகல் வைத்தது பற்றியும் அலெக்ஸாண்டரின் நாய், குதிரை பற்றியும், காஞ்சி சங்கராசார்யார் மடத்தின் நாய் பற்றியும் ஏற்கனவே எழுதிவிட்டேன். இன்று எகிப்திய சுமேரிய நாய்களைக் காண்போம்.

 

இஸ்ரேலின் தலைநகரான டெல் அவீவுக்கு 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஷ்கெலான் (ASHKELON)  என்ற நகரில் 1000 நாய்கள் புதைக்கப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பாரசீக ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது. இன்னொரு நகரான இசின் (ISIN) என்னுமிடத்தில் ஒரு கல்லறையும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை எல்லாம் ஆதிகால மெசபொடோமியா பிரதேசத்துக்கு உள்ள்டங்கிய பகுதி

 

எகிப்து நாட்டில் சேத் (SET), அனுபிஸ் (ANUBIS) நன்ற தெய்வங்கள் நாய் முகம் உடைய கடவுள் என்றும் நரிமுகம் உள்ள கடவுள் என்றும் இருவிதமாகப் பகர்வர்.

 c1190-horus_hieroglyphs

இறந்தவர்களின் இதயத்தை எடைபோடும் அனுபிஸ்.

92491-weighing_of_the_heart3

நாய்களின் கண்களுக்கு எமன் தெரியுமாம்!

 

எப்படி ரிக்வேத சரமா கதையை கிரேக்கர்கள் திருடி ஹெரமா என்று மற்றினரோ அப்படியே எமன் – நாய் தொடர்பையும் இந்துமதத்திலிருந்து உலகத்தினர் எடுத்துக் கொண்டனர்!

 

உலகம் முழுவதும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. நாய்களின் கண்களுக்கு எமன் தெரியும் என்று! உண்மையில் இக்கதை இந்துக்களின் கதை. மஹாபாரதத்தில் தருமனைப் பின்தொடர்ந்த நாய், தரும தேவதையின் மறு அவதாரம். இந்தியாவிலும் நாய்-எமன் தொடர்பு பற்றிய கதைகள் உண்டு. நாய்கள் ஊளையிட்டால் யாராவது இறப்பார்கள் என்று சொல்லுவர். இதற்கு விஞ்சான பூர்வ விளக்கமும் உண்டு.

 

நாய்களுக்கு 3000 மடங்கு மோப்ப சக்தி இருப்பதால், துப்புத் துலக்குவதோடு, சுனாமி, பூகம்பம் ஆகியவற்றின் நுண்ணலைகளை உணரும் சக்தியும் பெற்றுவிடுகிறது. இதனால் முன்கூட்டியே ஊளை இடும். இதனால்தான் நாயை யமனுடன் தொடர்பு படுத்துகின்றனர்.

 

சீன ராசிச் சக்கரத்தில் ஒரு மாதம் நாயின் மாதமாகும். இதே போல தென் அமெரிக்க அஸ்டெக் (AZTEC) நாகரீகத்திலும் இருபது நாள் (TWENTY DAYS A MONTH CALENDAR)  மாதத்தில் ஒரு நாளுக்கு நாயின் பெயர்.

நாய்களுக்கு நோயைக் குணப்படுத்தும் சக்தி உண்டு என்றும் மெசபொடோமியாவில் நம்பிக்கை இருந்தது.

fee5c-tutanhkamun_jackal

எகிப்தில்

 

அனுபிஸ், சேத் முதலிய கடவுளரின் முகம் நாய் போல இருக்கும். இதை சிலர் நாய் என்றும், மற்றும் சிலர் நரி என்றும் பகர்வர்.

 

ஆனால் நாய் என்பதே சரி. ஏனெனில் பிற பண்பாடு போலவே இறந்த மனிதனைக் கடைத்தேற்றும் பணியைச் செய்வது அனுபிஸ் என்ற கடவுள்தான். இது போல எல்லாக் கலாசாக்ரங்களிலும் இறந்த பின் நடக்கும் வாழ்வில் நாய்தான்  அணுசரணையாக உள்ளது.

 

எகிப்தில் முதல் அரச வம்ச மஹாராணியின் Queen Herneith of First Dynasty கல்லறையில் ஒரு நாயின் உடல் புதைக்கப் பட்டிருந்தது.. இன்னொரு அதிகாரி நாய்க்கு நீண்ட அடைமொழி கொடுத்து (One owner of such a dog, Senbi the Governor of Cusae in Upper Egypt (2000 BCE), named his hound ‘Breath of Life of Senbi”)   கல்வெட்டில் பொருத்தினார். இரண்டு பெரிய அதிகாரிகளின் நாற்காலிகளுக்கு கீழே நாய் அமர்ந்திருப்பது போல சித்திரம், சிலைகள் உள்ளன.

 

இடைக் காலத்தில் கல்லறைகளில் நாயின் வடிவத்தைச் செதுக்கினர். போர் வீரர்கள் தங்களின் பிரபுக்களிடம் விசுவாசமாக இருந்ததாலோ, கணவனிடத்தில் மனைவி விசுவாசமாக இருந்ததாலோ இந்த வழக்கம் ஏற்பட்டது.

 

இந்தியாவில் பைரவருக்கு நாய் வாஹனம். தத்தாத்ரேயர் அவதாரம் எப்போதும் நாய்களுடன் காணப்படுவார். இது போல கிறிஸ்தவ மத புனிதர்களில் மூன்று. (St Francis of Assisi, St.Hubert, St Eustace and St Roch) நான்கு பேர், எப்போதும் நாயுடனே சித்தரிக்கப்படுவர்.

Anubis

நாயின் விசுவாசமும், அன்பும் அறிவும் பற்றி நாள்தோறும் பத்திரிக்கை  செய்திகள்  வருகின்றன.

போலீஸ் துறையிலும் ராணுவத் சிறந்த சேவை ஆற்றிய நாய்களுக்கு பெரிய பரிசுகள் கொடுக்கப்பட்டன. நாய்கள் எதையும் விரைவாக கற்கும். அதனால் அதற்கு புதிய கட்டளைகளையும் பணிகளையும் கற்றுத் தருகின்றனர்.

 

எகிப்தியர் நாய் பற்றி சொல்லும் வசனம்: கடவுளும் நாயும் ஒருங்கே இருந்தனர். அம்புகளை விட வேகமாகப் பாய்வது நாய்கள்தான்” ( the dog was ‘one with the Gods, more swift than the arrows’).

 

–Subham–

 

எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2 (Post No.3641)

Egyptian God and the King

 

Written by London swaminathan

 

Date: 16 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 5-56 am

 

Post No. 3641

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்தில் எப்போது மன்னர்களின் முடியாட்சி துவங்கியது என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. கி.மு. 3150 முதல் வரலாற்றுக் காலம் துவங்கியது.

 

மன்னரின் மகனே அடுத்த ராஜாவாக நியமிக்கப் பட்டான். மன்னர்களைக் கடவுள் என்று மக்கள் கருதினார்கள். கீழ் எகிப்து, மேல் எகிப்து — என்று இரண்டு பிரிவுகளாக. எகிப்து இருந்தது. எல்லா மன்னர்களும் இரண்டு பிரிவுகளுக்கும் தலைவர் என்று பெருமையாகப் பிரகடனம் செய்தனர். முதல் வம்ச அரசர்கள்,  தற்போது எகிப்து நாட்டின் தலைநகராகவுள்ள கெய்ரோவுக்கு அருகில் தலைநகர் வைத்து ஆண்டனர். அந்த நகரத்தை கிரேக்கர்கள் மெம்பிஸ் MEMPHIS என்று அழைத்தனர்.

 

இரண்டு எகிப்துகளுக்கும் தலைவர் என்பதைக் குறிக்க இரட்டை கிரீடம் என்னும் வடிவமுடைய கிரீடத்தை அணிந்தனர்.

அரசனைச் சுற்றி சில கோட்பாடுகள் உருவாகின. அவருக்கு பிறந்தபோது சூட்டிய பெயரைத் தவிர புதிய மன்னரின் பெயர் சூட்டப்பட்டது. முதலில் மூன்று பெயர்கள் இருந்தன. பின்னர் இது வளர்ந்து ஐந்து பெயர்களாகப் பெருகின! பலவகைக் கிரீடங்களுடன், மன்னன் (பாரோ) புதிய  ராஜாங்க சின்னங்களை அணியத் துவங்கினான்.

Picture of Horus from Wikipedia

 

மன்னர்களின் பெயரகளைக் கல்வெட்டுகளில் பொறிக்கும்போது அதன் புனிதம் கருதி அதை ஒரு சிறிய செவ்வக கட்டத்துக்குள் (SEREK) எழுதினர்.

 

துவக்க காலத்தில் மன்னர்தான் கடவுள், அவர்தான் பிரபஞ்சத்தின் தலைவர் என்றெல்லாம் சொல்லப்பட்டது. மன்னரின் கட்டளையின் பேரில்தான் சூரியன் உதிக்கிறான், நைல் நதி வெள்ளப் பெருக்கெடுக்கிறது என்றும் நம்பினர்.

ஹோரஸ் (HORUS)  என்னும் தெய்வம்தான் எகிப்தின் பழம்பெரும் தெய்வம். பருந்து வடிவ முகம் கொண்டது. இந்து மதத்திலுள்ள கருடாழ்வார் போன்றது! “கருட” என்ற பெயரே ஹோரஸ் என்று திருந்தியதோ என்று எண்ண வேண்டி இருக்கிறது!

 

எகிப்திய மக்களின் வாழ்க்கை முழுதும் மன்னரைச் சுற்றியே இருந்தது. அவர் இறந்தவுடன் அடக்கம் செய்யப்படுவதற்கான பிரமிடு(PYRAMIDS)களைக் கட்டுவதே பெரும் தொழில்! இதற்கு அடுத்தபடியாக விவசாயம், போர்த் தொழில் இருந்தன.

 

அரசன் என்பவன் ஹோரஸ் என்னும் கடவுளின் மறு அவதாரம் எனக் கருதப்பட்டான். பின்னர் எகிப்துக்கு வந்த புதிய தெய்வமான ஆசிரிஸை, ஹோரசின் தந்தையாகக் கருதினர். பிறகு ஆசிரிஸ்(OSIRIS), மன்னர் இறந்தவுடன், அவரைக் கவனிக்கும் கடவுள் என்று கதைகள் உருவாக்கப்பட்டன!.

 

 

மன்னரின் பட்டாபிஷேகத்தின்போது நால் திசைகளிலும் பறவைகள் பறக்கவிடப்பட்டன. இந்து மத அரசர்கள் பட்டாபிஷேகத்தின்போது கைதிகளும் கூண்டுக் கிளி, மைனா முதலிய பறவைகளும் ‘விடுதலை’ செய்யப்பட்டதை இத்துடன் ஒப்பிடலாம்!

Horus from Roman period (looks like Garuda vahana of Vishnu)

மன்னரின் ஐந்து பெயர்களில் ஒன்று ஹோரஸ் என்ற அடைமொழியுடன்- பட்டத்துடன் துவங்கும். இதுதான் மிகவும் புனிதமான பெயர். பிறந்தபோது வைத்த பெயரை யாருக்கும் சொல்லமாட்டர்கள். அது ரஹசியமானது. குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்!

 

மன்னர் கடவுள் மட்டுமல்ல. சில நேரங்களில் கடவுளரும் மன்னருக்கு அடிபணியவேண்டும் என்று மக்கள் நம்பினர். இந்து மதத்தில் “குரு” என்பவர் கடவுளுக்கும் மேலாக அதிகாரம் உடையவர்; அவர் விருப்பப்படி, கடவுளும் விதியை மாற்ற முடியும் என்று கதைகள் உள்ளது போல! கோவில்களிலும் எகிப்திய மன்னரே தலைமை. மன்னர்கள் இறந்தபோது அவர்களுடன் நூற்றுக் கணக்கான அதிகாரிகளும் ஆயிரக்கணக்கான சேவகர்களும் உயிருடன் புதைக்கப்பட்டனர்.

 

ஆயினும் எகிப்திய வரலாறு 3000 ஆண்டுக் கால வீச்சுடையது. காலப்போகில் வெளிநாட்டுப் படை எடுப்புகளால், மன்னரின் நிலையும், அவர் பற்றிய நம்பிக்கைகளும் மாறிக்கொண்டே வந்தன.

மேலும் பல அதிசயங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்!

–தொடரும்

எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்? (Post No.3638)

Written by London swaminathan

 

Date: 15 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 8-50 am

 

Post No. 3638

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்துக்கு மிஸ்ர தேசம் என்று சம்ஸ்கிருதத்தில் பெயர். பாரதியாரும் தனது கவிதையில் எகிப்து தேசத்தை இவ்வாறு குறிப்பிடுவார்.

 

சீன மிசிரம் யவனரகம் – இன்னும்

தேசம் பலவும் புகழ் வீசிக் – கலை

ஞானம் படைத் தொழில் வாணிபமும் மிக

நன்று வளர்த்த தமிழ்நாடுபாரதியார் பாடல்

 

மிச்ரம் என்றால் கலப்பு என்று பொருள்; அங்கு பலதேச மக்களும் பலமொழி பேசும் மக்களும் குடியேறியதால் இப்படிப் பெயர். சம்ஸ்கிருத நூல்களில் இப்படிப் பெயர் வைத்தது எவ்வளவு பொருத்தம் என்பதை பிரபல எகிப்திய அறிஞர் கூறுவதைப் படித்தால் வியப்படைவோம்:-

 

எழுபது ஆண்டுக்காலம் எகிப்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட சர் ப்ளிண்டர்ஸ் பெற்றி (Sir Flinders Petrie) சொன்னார்:

 

“எகிப்து என்னும் நாடு எந்தப் புதிய நாகரீகத்தையும் தோற்றுவிக்கவில்லை. ஆனால் மற்ற நாட்டவர்களின் எண்ணங்களுக்கு விளை நிலமாக இது விளங்கியது. பல நாட்டவரும் இங்கே அவரவர் யோஜனைகளை விதைத்தனர். பாரதியார் பாடலின்படி பார்த்தால் தமிழ்நாட்டவர்களின் பங்களிப்பும் அங்கே இருந்துள்ளது!

 

 

மிஸ்ர என்பதற்கு வேறு ஒரு பொருளும் உண்டு

மிஸ்ர, மிஸ்ரா என்பது பிராமணர்களின் ஒரு பிரிவு. இந்தப் பிரிவு பிராமணர்கள், வடநாட்டில், குறிப்பாக பீஹார், உத்தரப் பிரதேசம், நேபாளத்தில் அதிகம். ஆனால் எகிப்தின் பெயருக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

 

எகிப்தியர்களுடன் மிகவும் தொடர்புடைய பண்ட் PUNT என்னும் தேசம் பாண்டிய நாடாக இருக்கலாம் அவர்களுடன் தொடர்புடைய ஓபிர் OPHIR என்னும் பிரதேசம் சோபிரSOPHORA என்னும் மேலைக் கடற்கரை நகருடனோ அல்லது புராணங்கள் குறிப்பிடும் ஆபீர ABHIRA தேசமாகவோ இருக்கலாம் என்று பல ஆராய்ச்சியளர்கள் குறிப்பிட்டு, எப்படியும் இவர்கள் கீழ் திசை நாட்டிலிருந்து (Eastern Origin) வந்தவர்களே என்று எழுதியுள்ளனர்.

 

எகிப்திய வரலாறு 5000 ஆண்டு வரலாறு ஆகும். வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு கடவுளர்களும், கலைகளும் தோன்றின. (Mixed= Misra) ஆயினும்  அதிகமாக மெசப்பொடோமிய செல்வாக்கு உடைய நாகரீகம் இது என்று பெற்றி கருதினார். அந்த நாகரீகத்தின் ஆதிகர்த்தாக்கள ஆப்பிரிக்க நாட்டவர் இல்லை என்றும் கருதினார். அவருடைய கருத்துப் படி எழுத்து, விவசாயம் ஆகியன ஓரிடத்தில் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவி இருக்க வேண்டும் என்பதாகும்.

அண்மைக் கால ஆராய்ச்சிகள், எகிப்திய நாகரீகம் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வளர்ச்சி அடைந்ததைக் காட்டுகின்றது. ஆகையால் ஆரம்ப கால எகிப்தியர்கள் நைல் நதிக்கரையில் மேய்ச்சலில் ஈடுபட்டவர்களே என்பது அவர்களுடைய கருத்து.

 

எழுத்து என்னும் தலைப்பை எடுத்துக்கொண்டாலும் மெசபொடோமியாவுக்கும் எகிப்துக்கும் நேரடி தொடர்பு இல்லை. எகிப்தின் சித்திர எழுத்துக்கள் (Hieroglyphs) முற்றிலும் வேறுபட்டவை.

 

 

 

இன்னொரு புதிர்: எகிப்தின் ஆதி அரசர்கள் யார்?

முதல் அரசர் பெயர் நர்மேர் Narmer ( நர+ மேரு) என்று இதுவரை கருதப்பட்டது. ஆனாம் அபிதோஸ் (Abydos) கல்லறையில் , அவருக்கும் முந்தைய அரசர் பெயர்கள் இருக்கக்கூடும். மெனெஸ் (மனு) Menes என்பவர் முதல் மன்னர் என்று அபிதோஸ் கல்வெட்டுகள் சொல்கின்றன. இன்னும் சிலர் நர்மேர், மனஸ் என்பன ஒரே ஆள்தான் என்றும் கருதுவர்.

 

மனிதர்கள் பலி- நர பலி

 

பூர்வீகக் கல்லறைகளில் நரபலி கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அரண்மனையின் உயர் அதிகாரிகள் மன்னனுடன் புதைக்கபட்டனர்

 

இன்னும் ஒரு புதிர் படகுப் புதையல்.

 

மன்னர்களுடன் பெரிய படகுகளும் புதைக்கப்பட்டன. ஏன் என்பது புதிராகவே இருக்கிறது. மேல் திசைப் பாலைவனப் பகுதியில் மன்னர் கல்லறைகளுக்கு அருகில் படகுகள் புதைக்கப்பட்டன.

 

 

இந்தியர்கள் தொடர்பு:

மிஸ்ர (கலப்பினம்) என்ற பெயரை நமது நூல்கள் மிகப் பழங்காலத்திலேயே சொல்லி இருப்பதால் வேறு எவரையும் விட நாமே எகிப்தை நன்றாகப் புரிந்து கொண்டுள்ளோம்.

 

மேலும் நர மேரு, மனு(ஸ்) என்பன இந்திய சம்ஸ்கிருத பெயர்களாக உள்ளன.

 

எகிப்திய வரலாறு

 

எகிப்திய வரலாற்றுக் காலத்தைப் பொதுவாக ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கலாம்:-

 

ஆரம்ப கால ராஜ வம்சம் Early Dynastic (முதல் இரண்டு வம்சங்கள்)

கி.மு.3000 (BCE)

 

…………….

 

பழைய ராஜ வம்சம் Old Kingdom (மூன்று முதல் எட்டு வரையான ராஜ வம்சம்)

கி.மு.2600

 

 

முதல் இடைக்காலம் First Intermediate Period ( 9 முதல் 11 வரையான ராஜக்கள்)

 

……………………

 

மத்திய கால ராஜ வம்சங்கள் Middle Kingdom

கி.மு.2400

 

இரண்டாவது இடைக்காலம் Second Intermediate Period (15 முதம் 17 வரையான ராஜ வம்சம்)

 

……………………..

 

புதிய ராஜ வம்சம் New Kingdom

கி.மு.1550

 

மூன்றாவது இடைக்கால ராஜாக்கள் Third Intermediate Period (21 முதல் 24 வரை வம்சங்கள்)

 

…………………………..

 

பிற்கால ராஜ வம்சங்கள் Late Period

கி.மு.715

 

கிரேக்க- ரோமானிய அரசுகள் Greco-Roman Period

 

முடிவு கி.பி.395 (CE)

 

……………………

 

மேலும் பல அதிசயங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.

 

–சுபம்–

பாரதத்தின் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்! (Post No.3625)

Written by S NAGARAJAN

 

Date: 11 February 2017

 

Time uploaded in London:-  6-24 am

 

 

Post No.3625

 

 

Pictures are taken from various sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 21

இரண்டாம் பாகம் – முதல் கட்டுரை

இந்தக் கட்டுரை சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்னர் 2-12-1973 தினமணி சுடர் இதழில் வெளியான எனது கட்டுரை.

 

பாரதத்தின் பழம்பெரும் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்!

 

                       by ச.நாகராஜன்

 

 

மனிதர்கள் கூட்டமைப்பாக ஓரிடத்திலே தங்கி வாழ்ந்து தமக்கெனச் சிறப்பான பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் என்று ஏற்படுத்திக் கொண்டார்களோ, அன்றே தேசம் பிறந்தது. இயற்கையான எல்லைகளைக் கொண்டு, பொதுவான இலக்கியம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், கருத்துக்கள் ஆகியவற்றைக் கொண்ட மனிதத் தொகுதியையே தேசம் என்று ஹோலி காம்ப் (Hole Combe) பர்கெஸ் (Burgess), கெட்டல் (Gettell) போன்ற மேனாட்டறிஞர் உரைப்பர். பூகோள எல்லையை வெறும் உடலாகவும், பழம் பெரும் பண்பாடு, மரபு, பழக்க வழக்கங்களை ஆன்மாகவும் உருவ்கப்படுத்துகிறார் சர் எர்னஸ்ட் பார்கர் (Sir Ernest Barrmer) என்ற தற்கால அறிஞர்.

இந்த நோக்கில் பாரதம் ஒன்றுபட்ட தனிப்பெரும் நாடாக பண்டு தொட்டு இலங்கி வந்திருக்கிறது. இதற்கான சான்றுகளை சங்க இலக்கியத்தில் பரக்கக் காணலாம்.

நாட்டு எல்லைகள்

இமயம் முதல் குமரி வரை பரவியுள்ள பூமியே பாரதம் என்று விஷ்ணு புராணம், மகாபாரதம், பாகவதம் ஆகிய நூல்கள் கூறுகின்றன. சங்க நூல்களிலும் நம் எல்லை பற்றிய இத் தெளிவான கருத்தைப் பல இடங்களில் காண்லாம்.

தென் குமரி, வட பெருங்கல்

 குண குட கடலா எல்லை”  (புறம் 17)

 

வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்

குணா அது க்ரைபொரு தொடுகடற் குணக்கும்

குடா அது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் (புறம் 5)

என்று புறநானூற்று அடிகளும்,

“ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்

தென்னங்  குமரியொ யாயிடை” (பதிற்றுப்பத்து 11)

“நெடுவரை

வடதிசை எல்லை இமயமாகத்

தென்னங் குமரியொடு ஆயிடை அரசர் (பதி-43)

என்ற பதிற்றுப்பத்து அடிகளாலும், பண்டாட்டால் ஒன்று பட்டிருந்த நாடு, பல அரசர்களால் ஆளப்பட்டதென்றாலும், அதை ஒவ்வொரு அரசனும் தன் ஆளுகைக்குக் கீழ்க் கொணர முயற்சித்து வெற்றி பெருவதைப் பெருமையாகக் கொள்வது வழக்கம் என்றும் அறிகிறோம்.

இலக்கிய ஒருமை

தேசம் முழுவதெற்கும் பொதுவான இலக்கியமெனத் திகழும் இராமாயண, மகாபாரதக் கதை நிகழ்ச்சிகள் சங்க இலக்கியம் முழுதும் காணப்படுகின்றன.

பீமன் அரக்கு மாளிகைத் தீயிலிருந்து பாண்டவர்களைக் காப்பாற்றியது (கல்-25), பீமன் துரியோதனன் தொடையை முறித்தது (கலி-52), துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றி இழுத்தது (கலி 101) ஆகிய பாரதக் கதை நிகழ்ச்சிகளையும் சீதையின் ஆபரணங்களைக் குரங்குகள் அணிந்தது, சீதையை இராவணன் தூக்கிச் சென்றது (புறம் 378), தனுஷ்கோடியில் இராமன் தன் கை கவித்துப் பறவைகளின் ஒலியை அடக்கியது (அகம் 70) ஆகிய இராமாயணக் கதை நிகழ்ச்சிகளையும் சங்க இலக்கியம் கூறுவதிலிருந்து இந்தப் பொதுவான இலக்கியம் பற்றிய உணர்வு பழங் காலத்திலேயே இருந்தது என்று தெரிகிறது..சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட புராணச் செய்திகளை சங்க இலக்கியம் கூறுகிறது.

 

பண்பாட்டு ஒருமை

பாரதப் பண்பாடு வலியுறுத்தும் உருவ வழிபாடு, இம்மை, மறுமை பற்றிய எண்ணம், மறுபிறப்பில் நம்பிக்கை, கங்கை, காவிரி, இமயம் போன்ற ஆறு, மலைகளைப் பற்றிய புனித உணர்வு, கற்பிற்கு அருந்ததியைக் காட்டல், வேள்வி இயற்றல் போன்றவற்றை சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.

திருமுருகாற்றுப்படையில் ஆறு முகங்களைப் பற்றி வரும் அருமையான விளக்கமும், பதிற்றுப்பத்தில் வரும் ‘க்டவுள் பத்தினிக் கற்கோள் வேண்டி’ (5ஆம் பதிகம்) என்ற வரியும் உருவ வழிபாட்டைச் சங்க கால மக்கள் ஏற்றிருந்தமையை வலியுறுத்துகின்றன. மேலும் க்டவுளை வாழ்த்தல், கடவுளுக்குப் பலி கொடுத்தல், கோவில் அமைத்தல் முதலானவற்றைப் பெரும்பாணாற்றுப்படை (வரி 39), நற்றிணை (358), பட்டினப்பாலை (வரி 286-287) ஆகியவற்றில் காண்கிறோம்.

தவறான வழியில் ஈட்டும் பொருள் இம்மைக்கும், மறுமைக்கும் பகையாக இருக்கும் என்ற நம்பிக்கையைக் கலித்தொகை (14) கூறுகிறது.

“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

மறுமை உலகமும் மறு இன்றி எய்துப”

என்ற அகநானூற்று (66) அடிகள் சங்க கால மக்களின் மறு உலக நம்பிக்கையை வலியுறுத்துகிறது.

“தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்

   மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்:” (புறம் 27)

  “உயர்ந்த வேட்டத்து  உயர்ந்தி சினோர்க்கு

   செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்

   தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்

   தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்

   மாறிப் பிறப்பின் இன்மையுங் கூடும்” (புறம் 214)

என்கின்ற புறநானூற்று அடிகளால் சங்க காலத்தில் பாரதப் பண்பாட்டின் அடிப்படையான மறுபிறப்பு நம்பிக்கையையும், வினைப்பயன் பற்றிய எண்ணமும் இருந்தது என்பது விளங்குகிறது.

சிவன் உறைந்திருப்பதால் புனிதம் பெற்ற இமயம் என்ற பொருளில் ‘கடவுள் உறைய கல்லோங்கு நெடுவரை’என்ற அடியைப் பதிற்றுப் பத்தில் காண்கிறோம். பத்தினித் தெய்வமான கண்ணகிக்கு இமயத்தில் கல் எடுத்து புனிதமான் கங்கையிலே நீராட்டலை ‘ பேரிசை இன்பல் அருவிக் கங்கை மண்ணி; என்று பதிற்றுப்பத்து (பதிகம் 5) குறிப்பிடுகிறது.

 

‘வடமீன் புரையும் கற்பின் மடமொழி’ என்று புறநானூறும் (122), ’வட்மீன் போல் தொழுதேத்தும் வயங்கிய கற்பினாள்’ என்று கலித்தொகையும் (2) கற்பிற்கு எடுத்துக்காட்டாக அருந்ததியைக் கூறுகின்றன.

பாரதம் முழுதும் வேள்வி இயற்றல் பண்டைக் காலத்தில் பரவி இருந்தது. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி  என்ற பாண்டிய மன்னம் பெயராலும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழன் பெயராலும் சங்ககால் மன்னர்கள்  வேள்வி இயற்றிய செய்தியை உணரலாம்.

பிணத்தைப் பாடையில் கொண்டு செல்லல் (புறம் 286) போன்ற பழக்க வழக்கங்களும் இறந்த கணவனுக்குக் காதலி பிண்டம் வைத்தல் போன்ற ச்டங்குகளும் நாடு முழுவ்தற்கும் பொதுவானவையாக இருந்தவை தான்.

 

ஒரே நாடு பாரதம்

இப்படி இயற்கையான பூகோள எல்லையால் பொதுவான உடலையும், ஒரே பண்பாடு, மரபு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் பொதுவான ஆன்மாவையும் பாரதம் கொண்டிருந்தது என்பது சங்க இலக்கியம் கூறும் உண்மை. அதாவது ஒரே தேசம் என்ற எண்ணம் சங்க இலக்கியம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானதாகும்.

****

 

கம்ப ராமாயணத்தில் கண்ணாமூச்சி! (Post No.3556)

Written by London swaminathan

 

Date: 18 January 2017

 

Time uploaded in London:- 22-14

 

Post No.3556

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

 

கண்ணாமூச்சி விளையாட்டு உலகெங்கிலும் விளையாடப்படுகிறது. இது தமிழன் கண்டுபிடித்த விளையாட்டோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மேலை உலகத்தில் கிரேக்கர்கள் முதல் முதலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதற்கும் முன்னரே 2000 ஆண்டுப் பழமையான சங்கத் தமிழ் இலக்கியத்திலும் அதற்கு ஆயிரம் ஆண்டுக ளுக்குப் பின்னர் வந்த கம்பராமாயணத்திலும் காணப்படுகிறது. ஒரே ஒரு வித்தியாசம் பழங்காலத்தில் இதைப் பெண்கள் விளையாடியதாகவே தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் சொல்கின்றன.

பார்வதி, சிவ பெருமானின் கண்களை மூடி விளையாடியதாகவும் உடனே உலகமே இருண்டதாகவும், அதன் காரணமாக உலகிற்கு ஒளியூட்ட சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்க நேரிட்டது என்றும் புராணங்கள் செப்பும்.

 

முதலில் கம்ப ராமாயணப் பாடலைப் படித்து ரசிப்போம்:-

 

கம்பராமாயணம், பால காண்டம்

 

பொன்னே தேனே பூமகளே காண் எனை என்னா

தந் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி

இன்னே என்னைக் காணுதி நீ என்று இகலி தன்

நல் நீலக் கண் கையின் மறைத்து நகுவாளும்

 

பொருள்:-

 

தனக்கு நிகராக எவரையும் பெறாத ஒரு மங்கை, “பொன் போன்றவளே! தேனே! இலக்குமி போன்ற செல்வமுடையாளே! நான் ஒளிந்து கொள்கிறேன். நீ என்னைக் கண்டுபிடி பார்க்கலாம் என்று தோழியிடம் கூறினாள். அந்த்ச் சோலையில் மலர்ச் செடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கும் இடத்தில் ஒளிந்து கொண்டாள். தோழி அவளைக் கண்டுபிடிக்க முடியாதபோது, பின்னே வந்து தோழியின் கருங்குவளை மலர் போன்ற பொத்திக் கொண்டு, “நீ இப்போது என்னைக் காண்பாயாக” என்று சொல்லி சிரித்தாள்.

 

 

கம்ப ராமாயணத்துக்கு முன்னரே சங்க கால இலக்கியத்தில் கண்பொத்தி விளையாடும் குறிப்பு கிடைக்கின்றது:

சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை யன்ன

நலம்பெறு கையின் என் கண்புதைத்தோயே

பாயல் இந்துணையாகிய பனைத்தோள்

தோகை மாட்சிய மடந்தை

நீயலது உளரோ என் நெஞ்சமர்ந்தோரே (293, ஐங்குறு நூறு)

 

 

பொருள்: மலையில் மணம் கமழும் காந்தள் போன்ற விரல்களால் என் கண்களைப் பொத்திய என் நங்காய், என் நெஞ்சில் என்றும் வீற்றிருப்பவர் பாயலில் என் மனதுக்கினிய துணைவியாகிய மயில் போன்றவளே. மனைத்தக்க மாண்புடைய மடந்தை நீயன்றி பிறர் யாருளர்? எதற்காக என் கண்ணைப் புதைத்தனை? (தலைமகன், தலைவியைப் பார்த்துச் சொன்னது)

 

 

இந்த விளையாட்டு எப்படி தோன்றியது?

தாய்மார்கள், குழந்தையை விட்டு விலகிச் சென்றால், சிறிது நேரத்தில் அழத் துவங்கும். சில நேரங்களில் குழந்தையை அழவிட்டு வேடிக்கை பார்க்க தாய்மார்கள் கதவுக்குப் பின்னாலோ, திரைக்குப் பின்னாலோ நிற்பர். குழந்தை அழுவதற்கு முன்னர், அதன் முன் தோன்றி கொஞ்சும் மொழிக ளைச் சொன்னவுடன் குழந்தை சிரிக்கும். அதைக் கண்டு தாய்மார்கள் மகிழ்வர். குழந்தை வளர்ந்த பின்னரும் இது நீடிக்கும். பின்னர் குழந்தை களே தமக்குள் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை ஆடத் துவங்கும். ஆதி மனிதன், குகைகளில் வாழ்ந்த காலத்தில் தன் மகன்களையும் கொஞ்ச நேரம் தவிக்கவிட்டுப் பின்னர் அவர்கள் முன் தோன்றி ஆனந்தப் படுத்தி இருப்பன். ஆகவே இது மிகப் பழங்கால விளையாட்டுகளில் ஒன்றாகும்.

 

இதை, கண்களில் துணியைக் கட்டிவிட்டு சுற்றி நின்றும் விளையடலாம். அல்லது ஒருவர் கண்ணைப் பொத்தி இருக்கையில் மற்றவர்கள் ஓடி ஒளிந்துகொண்ட வகையிலும் ஆடலாம்..

இந்த விளையாட்டில் பல சாதகங்கள் உள்ளன:

காசு பணம் தேவை இல்லை.

விளையாட விசேஷ பலகையோ, காய்களோ தேவை இல்லை

எத்தனை பேர் வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எவ்வளவு நேரம் ஆனாலும் விளையாடலாம்.

வயது வரம்போ, கால வரம்போ கிடையாது.

நல்ல உடற்பயிற்சியும் மனத் தெளிவும் பிறக்கும்.

பலருடன் தோளொடு தோள் உரசி ஆடுவதால் சகோதரத்துவம் வளரும்.

உலகிலேயே மிகப்பெரிய கண்ணாமூச்சி ஆட்டம் கேம்பிரிட்ஜ் அருகில் மில்டன் பூங்காவில் 2016 செப்டம்பரில்  நடந்தது. ஆயிரத்தும் மேலானோர் கலந்துகொண்டனர்..

–Subham–

 

இந்திய அதிசயம்: இந்தியாவின் நீண்ட நெடுஞ்சுவர் (Post No.3552)

 

Amid MP’s forests, mountains, fields and villages stands Raisen’s wall, a structure that evokes more questions than answers. (Pratik Chorge/HT Photo)

Written by London swaminathan

 

Date: 17 January 2017

 

Time uploaded in London:- 9-09 am

 

Post No.3552

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

Look closely, the two snakes are not knotted up but artfully entwined, indicating that the artist took care over the design. The icon stands at one end of the wall, near Gorakhpur. (Pratik Chorge/HT PHOTO)

 

உலக அதிசயங்களில் ஒன்று சீன நெடுஞ்சுவர். விண்வெளியிலிருந்தும் காணக்கூடியது. 5500 மைல் நீளம் உடையது. இடையிடையே சுவர் இல்லாத அல்லது மறைந்து போன பகுதிகளும் உண்டு. இதற்கு அடுத்த நீண்ட சுவர் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் இருப்பது பலருக்கும் தெரியாது. இதன் நீளம் ஐம்பது மைல்கள்தான். ஆயினும் இது ஒரு வரலாற்றுப் புதிராகவே இருந்து வருகிறது. இதை யார் கட்டினார்கள்? ஏன் கட்டினார்கள்?   என்று தெரியவில்லை.

 

இது மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபாலுக்கும் ஜபல்பூருக்கும் இடையே உள்ளது. இது கோரக்பூர் தேவ்ரி என்ற கிராமத்திலிருந்து —  சோக்கிகர் வரை செல்கிறது. விந்திய மலைப் பள்ளத்தாக்குகள், தேக்குமரக் காடுகள், லாங்கூர் இனக் குரங்குகள் வசிக்குமிடங்கள், கிராமங்கள், கோதுமை வயல்கள் ( ராய்சென் மாவட்டம்) வழியாக இந்த 80 கிலோமீட்டர் சுவர் கட்டப்பட்டுள்ளது. ஓரிடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஒரு அணையும் இதைத் தடுக்கிறது.

 

இந்தச் சுவர் வழியாக நடந்து சென்றால் போகப்போக பல அதிசயப் புதிர்கள் வந்து கொண்டே இருக்கும்! பாழடைந்த கோவில்கள், யாரும் வசிக்காத வீடுகள், உடைந்த சிலைகள், படிக்கட்டுகள் உடைய படிக் கிணறுகள், கரை எழுப்பப்பட்ட குளங்கள், விநோதமான நாகர் (பாம்பு) சின்னங்கள் என்று யாரும் விளக்கமுடியாத தடயங்களைக் காணலாம். இதைக் காணும் வரலாற்று ஆர்வலர்கள் நாம் இப்போது மேல்பரப்பை மட்டும் கண்டு ‘நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கிறோம்’. இன்னும் தோண்டத்தோண்ட ‘தொட்டனைத்து ஊறும் மணற்கேணி போல’ பல அதிசயங்கள் வரும் என்கின்றனர்.

 

இதுபற்றி ராய்சென் நகர மருந்துக்கடை வணிகர் ராஜீவ் சோபே (57) கூறியதாவது: “1980 ஆம் ஆண்டுகளில் இதைப் பார்த்தது முதல் நான் மோட்டார் சைக்கிளில் பலருடன் சென்று ஆராய்ந்து கொண்டே இருக்கிறேன். ஒருநாள் சுகதேவ் மஹராஜ் என்ற துறவி என் கடைக்கு வந்தார். தனது குடில் வரை இந்தச் சுவர் வருவதாகச் சொல்லி தனக்கும் இது பற்றி அறிய ஆர்வம் உண்டு என்றார். அது முதல் நானும் அவரும் பலரையும் காலில் செருப்பு இல்லாமல் அழைத்துச் சென்று, கோவில் பகுதிகளை ஆராய்ந்து வருகிறோம்”.

தொல்பொருட் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நாராயண வியாஸ் சொன்னார்: ” இந்த சுவர் இந்த ப்பகுதியில் கிடைக்கும் கற்களால் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் அதன் மீது நடந்து செல்லும் அளவுக்கு அகலம் உள்ளது. ஆயுதங்களும் ஆட்களும் மறைந்து இருக்க மாடங்கள் உள்ளன. இதைப் பார்க்கையில் இது ஒரு ராணுவப் பாதுகாப்புச் சுவர் போல உள்ளது.”

 

ஆனால் கோரக்பூர் ஜோதிடர் ராகவேந்திர கார்வே, “நடுக்காட்டில் எதற்கப்பா பாதுகாப்புச் சுவர்?” என்று இடை மறிக்கிறார். இவரும் நாராயண வியாசும் சுவரை பெரிய சர்வே செய்துள்ளனர்.

இது பத்து அல்லது பதினோராம் நூற்றாண்டுச் சுவர் என்றும் பார்மர் வம்ச மன்னர் ஆட்சிக் காலத்தில் தோன்றியது என்றும் அவர்கள் கருதுகின்றனர். ஆயினும் கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை.

 

காலசூரி வம்சத்தினர் போரில் ஆர்வமுடையோர். அவர்களைத் தடுத்து நிறுத்த பார்மர் வம்ச மன்னர்கள் இதைக் கட்டியிருக்கலாம் என்றும் கருதுகின்றனர். பார்மர் வம்ச கோவில்கள் கட்டிடங்களிலுள்ள உத்திகள் இங்கே காணப்படுகின்றன என்பது அவர்களுடைய வாதம்.

 

இந்த இடத்தைச் சுற்றி வசிப்பவர்கள், முன்னர் அங்கிருந்த சிம்மவாஹினி அம்மன், கால பைரவர் சிலைகள் எல்லாம் மாயமாய் மறைந்துவிட்டன. இப்போது உடைந்த சிலைகள் மட்டுமே உள்ளன. பலரும் இந்தச் சுவரின் கற்களை எடுத்துச் சென்று வீடு கட்டுகின்றனர். இதை முறையாகப் பாதுக்காக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

The wall zig-zags across the Vindhya mountains just north of the Bhopal Jabalpur Road in Raisen district, and alongside, a man-made pond has been discovered. (Pratik Chorge, Ashwin Patil/HT Photo)

 

In most Indian temples, elephant icons have been used at the base, their strength metaphorically holding up the stones. Could that have been the case with the temples inside Raisen’s wall too? (Pratik Chorge/HT PHOTO)

 

 

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் சுருக்கம் இது; நன்றி.

 

–Subham–