பக்தர்கள் ஆனாலும் மருந்து சாப்பிடுக: ஆதி சங்கரர் அறிவுரை (Post No.5473)

         

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 September 2018

 

Time uploaded in London – 6-56 am (British Summer Time)

 

Post No. 5473

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

பக்தர்கள் ஆனாலும் மருந்து சாப்பிடுக: ஆதி சங்கரர் அறிவுரை (Post No.5473)

 

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே-“

 

“உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்”- திருமந்திரப் பாடல்

 

உலகிலேயே மிகவும் விஞ்ஞான பூர்வமான மதம் இந்து மதம். ஆயுர் வேதம் என்னும் மருத்துவ சாஸ்திரத்துக்கும் கூட ‘வேதம்’ என்ற சொல்லைச் சேர்த்த மதம். வேதம் என்றால் ‘அறிவு’. சித்த மருத்துவத்திலும் கூட ‘சித்த’ என்ற புனிதச் சொல்லைச் சேர்த்த மதம். ‘சித்த’ என்பது, அடையமுடியாத அபூர்வ சக்திகளை, காய கல்பத்தைக் குறிக்கும்.

 

உலகிலேயே கடவுளுக்கும் டாக்டர் பட்டம் கொடுத்த மதம் இந்துமதம் ஒன்றே. கடவுளை டாக்டர் என்றும் மருந்து என்றும் யஜூர்வேத மந்திரம் சொல்லும். ‘பேஷஜம்= மருந்து, பிஷக்= மருத்துவர்’.

 

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் இறைவனை ‘ஔஷதம்’ என்று புகழும். மூலிகைகளுக்கு ஓஷதி என்று பெயர். அவற்றிலிருந்து வருவதே ‘அவுசதம்’.

எல்லா நோய்களிலும் பெரிய நோய்- பிறவிப் பிணி. அதாவது ஜனன-மரணச் சுழல். பிறப்பு, இறப்பு என்னும் சுழல் வட்டம். ஆகையால் சமய நூல்களில் வரும் நோய் என்பது பிறவிப் பிணியைக் குறிக்கும் என்பது வியாக்கியானக்காரர்கள் சிலரின் விளக்கம். அது சரியல்ல என்பது சமய நூல்க ளைக் கற்றோருக்கு விளங்கும்.

 

பரமஹம்ஸர் போன்ற பெரியோர்கள், ரமணர் போன்ற பெரியோர்களுக்கு மட்டுமே உடல் என்பது ஒரு அழுக்குச் சட்டை போல. அவர்கள் இந்த உடலை நாம் கழற்றித் தூக்கி எறியும் சட்டை, வேட்டி போலக் கருதுவர். அவர்கள் ஜீவன் முக்தர்கள். இவர்கள் இருவருக்கும் புற்று நோய். அப்படியும் நோய் போக இறைவனை வேண்டவில்லை. ஏனெனில் வாழ்க்கையின் உயரிய பலனை இருக்கும்போதே அடைந்துவிட்டார்கள்.

 

நம்மைப் போன்ற அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு உடம்பும், உடல் ஆரோக்கியமும் அவசியம். இதைத்தான் திருமூலர் போன்ற பெரியோர்கள், சித்தர்கள் ஏராளமான பாடல் மூலம் விளக்கினர். கிராமப் புறங்களில் கூட சுவரை வைத்துத் தான் சித்திரம் என்பர். அதாவது உடல் நல்ல நிலையில் இருந்தால்தான் உயரிய லட்சியங்களை அடையமுடியும். சுவாமி விவேகாநந்தரும் அடிக்கடி மேற்கோள் காட்டும் உபநிஷத மந்திரம் – ‘ஆத்மாவை பலவீனமுடையவன் அடைய முடியாது’ என்பதாம்.

 

ஆதிசங்கரர் போன்ற மஹா தத்துவ தரிசிகளும் கூட பாடலில் உவமைகளாக இந்தக் கருத்தைச் சொல்லுவதைப் பார்க்கையில் நமக்கு அதன் பெருமை விளங்குகிறது. திருவள்ளுவரும் கூட சரிவிகித உணவு, மருந்து, நோய்கள் பற்றிப் பத்து குறள்கள் பாடிவிட்டார்.

 

இதோ விவேக சூடாமணி என்ற அற்புதமான துதியில் ஆதி சங்கரர் சொல்லும் இரண்டு பாடல்கள்:

 

பத்யம் ஔஷத ஸேவா ச க்ரியதே யேன ரோகிணா

ஆரோக்யஸித்திர் த்ருஷ்டாஸ்ய ந அன்யானுஷ்டித கர்மணா-53

எந்த ஒருநோயாளி மருந்தையும் பத்தியத்தையும் சரியான முறையில் உபயோகிக்கிறானோ அவன்தான் பூரண குணம் அடைவான்; மற்றவர்கள் அவனுக்காக செய்யும் பணிகளினால் அல்ல”- ஸ்லோகம் 53

 

இதை ஒருவர் பரிபூரண ஞானத்தை அடைவது அவரவர் முயற்சியால்தான் முடியும் என்பதற்கு அவர் உதாரணமாகக் காட்டுகிறார்.

“சொற்களும் , சாஸ்திர அறிவும், துதிகளும் உண்மை ஞானம் ஏற்பட உதவாது (அவைகள் ஏணிப்படிகளே) என்று விளக்கும்போது சங்கரர் சொல்கிறார்:-

 

ந கச்சதி விநா பானம் வ்யாதிர் ஔஷதசப்ததஹ

விநா அபரோக்ஷ அனுபவம் ப்ரஹ்மசப்தைர் ந முச்யதே- 62

“மருந்தைச் சாப்பிடாமல் மருந்தின் பெயரை உரத்த குரலில் சொன்னால் மட்டும் நோய் போய் விடாது; அதே போல பிரம்மன்/ பிரம்மம் என்று சொல்லுவதால் மட்டும் முக்தி கிடைத்து விடாது. மருந்தை எடுத்துச் சாப்பிடுபவன் போல   அதை உணர வேண்டும்”.

 

இது போல பல பாடல்களில் போகிற போக்கில் மருந்து, நோய்கள் பற்றிச் சொல்கிறார். சில நோய்கள் பிராரப்த கர்மத்தினால்- முன் வினைப் பயனால் வரும் என்றும் கூறுகிறார்.

 

திருவள்ளுவர் நேரடியாக நோய்கள் பற்றிச் சொல்கிறார். ஆதி சங்கரர் உவமைகளாகக் காட்டிச் செல்கிறார்.

படித்துப் பயன் பெறுவோம்.

 

 

–சுபம்–

வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 2 (Post No.5472)

Written by S NAGARAJAN

Date: 26 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-22 AM (British Summer Time)

 

Post No. 5472

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

வில்லிபாரதம்

வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல் – 1 என்னும் கட்டுரை ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. (கட்டுரை எண் 5394 – பதிவு தேதி 5-9-2018)

 

வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 2

 

ச.நாகராஜன்

 

 

   வீர சோழியம், தண்டியலங்காரம் ஆகிய நூல்களில் சொல்லணியில் முதலாவதாக இடம் பெறும் அணி  மடக்கணி.

 

ஒரே சொல்லே வெவ்வேறு பொருளில் ஒரு பாடலில் வருவது மடக்கணியாகும்.

 

  வில்லிப்புத்தூரார் மகாபாரதத்தில் பல்வேறு இடங்களில் இந்த அணியைச் சிறப்பாக இடம் பெறச் செய்து கவிதா ரஸிகர்களை மனம் மகிழச் செய்கிறார்.

 

மடக்கணி இடம் பெறும் ஒரு பாடல் சபா பருவத்தில் சூது போர்ச் சருக்கத்தில் இடம் பெறுகிறது. பாடல் எண் 64.

அது வருமாறு:-

 

 

மூத்த தாதைதன் னோலையு மிளையவன் மொழியுமொத் தமை நோக்கி,

வார்த்தை வேறுமற்  றொன்றையு முரைத்திலன் மனுநெறி வழுவாதோன்,

சேத்த நாகவெங் கொடியவன் கொடியவன் சிந்தையின் நிலைதோன்றக்,

கோத்த கோவைநன் றாயினுந் தகுவதோ குருகுலத் தனக்கென்றான்.

 

 

பாடலின் பொருள் :- மனு நெறி வழுவாதோன் – மனு தர்மம் சிறிதும் வழுவாத தர்மபுத்திரன்

மூத்த தாதை தன் ஓலையும் இளையவன் மொழியும் ஒத்துமை நோக்கி – பெரிய தந்தையான திருதராஷ்டிரன் அனுப்பிய பத்திரிகையும் சிறிய தந்தையான விதுரன் சொன்ன வார்த்தையும் ஒத்திருப்பதைக் கண்டு

வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன் – நியாயத்துக்கு மாறான வேறொரு வார்த்தையையும் சொல்லாதவனாகி,

சேத்த நாக வெம் கொடியவன் – கோபத்தினால் கண் சிவந்த சர்ப்பத்தின் வடிவம் பொறித்த பயங்கரமான கொடியை உடையவனாகிய துரியோதனன்

கொடியவன் சிந்தையின் நிலை  தோன்ற – மிகக்  கொடிய மனத்தின் இயல்பு விளங்கும் வகையில் தனது சிந்தைக்கு ஏற்றபடி

 

கோத்த – தொடர்ச்சியாக ஆலோசித்த

கோவை – ஆலோசனைத் தொடர்

நன்று ஆயினும் – அவனுக்கு நல்லதாக இருப்பினும்

குருகுலம் தனக்குத் தருவதோ என்றான் – குருகுலத்தின் பெருமைக்குத் தகுமோ என்றான்.

வஞ்சனையாக சூதாட வருமாறு அழைக்கின்றான் துரியோதனன். அது துரியோதனனுக்கு நலம் பயக்கும். ஆனால் குடிப்பெருமைக்கு இழுக்கல்லவா ஏற்படுத்தும் என்பது தருமனின் கூற்று.

 

 

இப்பாடலில் நாக வெங்கொடியவன், கொடியவன் என்ற வரியில் கொடியவன் என்ற சொல் இரு பொருள்களில் வருவதால் இது மடக்கணியாகும்.

 

சீற்றமுடைய பாம்பின் கொடியைக் கொண்டவன், உண்மையில் இயல்பாலும் மனத்தாலும் கொடியவன் அல்லவா?

 

Picture posted by Lalgudi Veda

இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உள்ளது. கருத்துடையடைகொளியணி என்ற சிறப்பான ஒரு அணியும் இந்தப் பாடலில் உள்ளது.

 

இந்தச் செய்யுளில் தருமன் மனு நெறி வழுவாதோன் என குறிப்பிடப் படுகிறான். அதாவது எந்த நிலையிலும் தகுதி இல்லாத சொற்களை சொல்லாது தக்க மொழியையே பேசுபவன் தர்மன். ஆனால் அதற்கு நேர்மாறாக – நாக வெம் கொடியவன் – விஷப் பாம்பை கொடியிலே கொண்டு உள்ளத்திலும் தீக்குணங்களைக் கொண்டவன் துரியோதனன். எப்போதும் நல்லோர்க்குத் தீமை விளைவிப்பவன். தீயதையே சொல்வான்; தீயதையே செய்வான்.

 

ஆக இந்த இரண்டு கருத்துக்களையும் இந்தச் செய்யுள் கொண்டிருப்பதால் இது கருத்துடையடைகொளியணி எனப்படும் அணியைக் கொண்டுள்ளது.

வில்லிப்புத்தூரார் இடத்திற்கு ஏற்றபடி சொற்களையும் அணிகளையும் கையாளும் திறன் கொண்டவர் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சான்று.

***

குறிப்பு : பாடலின் உரை வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் இயற்றியதைப் பின்பற்றியதாகும்.

தமிழில் அலங்காரம் என்ற கட்டுரையில் 25 வது அணியாக இடம் பெறுவது கருத்துடையடைகொளணி. இந்தக் கட்டுரை எண் 5455. வெளியான தேதி 22-9-2018

***

 

அய்யங்காருக்கு பாரதியார் கடிதம் (5469)

அய்யங்காரின் அற்புத தமிழ் சேவை-3 (Post No.5469)

 

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 25 September 2018

 

Time uploaded in London – 9-17 am (British Summer Time)

 

Post No. 5469

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

இது பகுதி 3

 

பாரதியார், வ,உ. சிதம்பரம் பிள்ளை, உ.வே.சா. ஆகியோர் பல சமயங்களில் மு. இராகவையங்காரைப் பாராட்டி எழுதிய கடிதங்கள் இவை.

 

முதல் இரண்டு பகுதிகளைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.

 

 

 

 

–subham–

 

அய்யங்காரின் அற்புத தமிழ் சேவை-2 (Post No.5468)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 25 September 2018

 

Time uploaded in London – 7-30 am (British Summer Time)

 

Post No. 5468

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

UP TO 60 YEARS OF RAGHAVA IYANGAR

 

 

HIS RESEARCH PUBLICATIONS

 

TO BE CONTINUED IN PART 3

 

–SUBHAM–

 

அய்யங்காரின் அற்புத தமிழ் சேவை-1 (Post No.5467)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 25 September 2018

 

Time uploaded in London – 7-12 am (British Summer Time)

 

Post No. 5467

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மு.இராகவையங்கார்

பிறந்த ஆண்டு – 1878

இறந்த ஆண்டு- 1960

 

மு.ராகவ அய்யங்கார், தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவை மிகவும் அற்புதமான சேவை. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், மஹா கவி பாரதி, வ.உ.சி, உ.வே. சாமிநாத அய்யர் மற்றும் அவரது சம காலத்திய அறிஞர் பெருமக்கள் அனைவராலும் ஒருங்கே பாராட்டப்பட்டவர். மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட புகழ்மிகு செந்தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியர்.

 

40 ஆண்டுகளுக்கும் மேலாக அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். அவரது 60 ஆண்டு நிறைவின் போது வெளியான மலரில் அவரைப் பற்றிய முழு விவரங்களும் வெளியாகின. இதோ வையாபுரிப் பிள்ளை எழுதிய முகவுரை, ராமசந்திர தீக்ஷிதரின் கட்டுரை ஆகியன.

 

அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

 

 

அவரது ஆராய்ச்சியின் சிறப்பு

 

 

 

அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

 

to be continued in part 2 and 3…………………….

அவர் எழுதிய ஆராய்ச்சி நூல்கள்

அவரது வாழ்க்கைக் குறிப்பு ( 60 வயது வரை)

பாரதியின் பாராட்டும் வ.வு.சியின் பாட்டும்

–subham-

தமிழில் அலங்காரம்! (Post No.5455)

Written by S NAGARAJAN

Date: 22 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-42 AM (British Summer Time)

 

Post No. 5455

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தமிழில் அலங்காரம்!

 

.நாகராஜன்

 

ஒரு கவிதையை நன்கு ரசிக்க அலங்காரம் அல்லது அணி பற்றிய அறிவு நிச்சயம் தேவை.

 

முகம் அழகாக இருக்கிறது என்று சொல்வதை விட சந்திரன் போன்ற முகம் என்றால் நமக்கு இன்னும் நன்றாகப் புரியும்.

அவள் அழகில் ரம்பா என்று சொல்லும் போது ரம்பையை நாம் நேரில் கண்ட்தில்லை என்றாலும் அர்த்தம் என்னவோ புரிகிறது.

இப்படி உவமை, உருவகம் என பல்வேறு அணிகள் நமது புரிதல் தன்மையையும் அர்த்தத் தெளிவு காணலையும் தருவதோடு அழகு உணர்தலையும் மேம்படுத்துகின்றன.

 

பரத முனிவர் நாட்டிய சாஸ்திரத்தில் நான்கு அலங்காரங்களைப் பற்றிச் சொல்கிறார்.

 

சம்ஸ்கிருத இலக்கணத்திலோ சப்தாலங்காரம், அர்த்தாலங்காரம் என இரு வகை அலங்காரங்களைப் பார்க்கிறோம். இவற்றின் பட்டியல் நீளமானது.

 

தமிழில் சிறு எண்ணிக்கையில் ஆரம்பித்த அணிகளின் பட்டியல்  வீர சோழியம் நூலில் 35ஐ எட்டியது.

 

பின்னர் தண்டியலங்காரம் அலங்காரங்களின் பட்டியலில் 35ஐத் தர மாறனலங்காரமோ 64ஐத் தொட்டது.

 

திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அணியிலக்கணமோ 100 அணிகளைப் பட்டியலிட்டு விளக்கியுள்ளது.

இறுதியாக வந்த குவலயாநந்தம் என்ற நூலோ 120 அணிகளின் பட்டியலைத் தருகிறது.

 

அந்தப் பட்டியல் வருமாறு:-

1) உவமையணி

2) இயையின்மையணி

3) புகழ்பொருளொப்பணி

4) எதிர்நிலையணி

5) உருவக அணி

6) திரிபணி

7) பலபடப்புனைவணி

8) நினைப்பணி

9)  மயக்கவணி

10) ஐயவணி

11) வெற்றொளிப்பணி

12) தற்குறிப்பணி

13) உயர்வுநவிற்சியணி

14) ஒப்புமைக்குழுவணி

15) விளக்கணி

16) பின்வருவிலக்கணி

17) தொடர்முற்றுவுவமையணி

18) எடுத்துக்காட்டுவமையணி

19) காட்சியணி

20) வேற்றுமையணி

21) உடனவிற்சியணி

22) இன்மை நவிற்சியணி

23) சுருங்கச் சொல்லணி

24) கருத்துடையணி

25) கருத்துடையடைகொளணி

26) சிலேஷையணி

27) புனைவில்லிப் புகழ்ச்சியணி

28) புனைவுள்ளி வினையணி

29) பிறிதினவிற்சியணி

30) வஞ்சப்புகழ்ச்சியணி

31) வஞ்சப்பழிப்பணி

32) எதிர்மறையணி

33) முரண்மேல் வினையணி

34) பிறிதாராய்ச்சியணி

35) காரணவாராய்ச்சியணி

36) கூடாமையணி

37) தொடர்பின்மையணி

38) தகுதியின்மையணி

39) தகுதியணி

40) வியப்பணி

41) பெருமையணி

42) சிறுமையணி

43) ஒன்றுக்கொன்றுயுதவியணி

44) சிறப்புநிலையணி

45) மற்றதற்காக்கலணி

46) காரணமாலையணி

47) ஒற்றைமணிமாலையணி

48) மாலை விளக்கணி

49) மேன்மேலுயர்ச்சியணி

50) நிரல்நிறையணி

51) முறையிற்படர்ச்சியணி

52) மாற்றுநிலையணி

53) ஒழித்துக்காட்டணி

54) உறழ்ச்சியணி

55) கூட்டவணி

56) வினைநுதல் விளக்கணி

57) எளிதின் முடிவணி

58) விறல் கோளணி

59) தொடர்நிலைச் செய்யுட் பொருட் பேறணி

60) தொடர்நிலைச் செய்யுட்  குறிப்பணி

61) வேற்றுப்பொருள் வைப்பணி

62) மலர்ச்சியணி

63) கற்றோர் நவிற்சியணி

64) பேருய்த்துணர்வணி

65) பொய்த்தற்குறிப்பணி

66) வனப்பு நிலையணி

67) இன்பவணி

68) துன்பவணி

69) அகமலர்ச்சியணி

70) இகழ்ச்சியணி

71) வேண்டலணி

72) இலேசவணி

73) குறிநிலையணி

74) இரத்தினமாலையணி

75) பிறிதின் குணம்பெறலணி

76) தொல்லுருப் பெறலணி

77) பிறிதின்குணப்பேறின்மையணி

78) தன்குணமிகையணி

79) மறைவணி

80) பொதுமையணி

81) மறையாமையணி

82) சிறப்பணி

83) இறையணி

84) நுட்பவணி

85) கரவுவெளிப்படுப்பணி

86) வஞ்சநவிற்சியணி

87) குறிப்பு நவிற்சியணி

88) வெளிப்படை நவிற்சியணி

89) உத்தியணி

90) உலகவழக்கு நவிற்சியணி

91) வல்லோர் நவிற்சியணி

92) ம்டங்குதனவிற்சியணி

93) தன்மை நவிற்சியணி

94) நிகழ்வினவிற்சியணி

95) வீறுகோளணி

96) மிகுதி நவிற்சியணி

97) பிரிநிலை நவிற்சியணி

98) விலக்கணி

99) விதியணி

100) ஹேதுவணி

101) சுவையணி

102) கருத்தணி

103) வன்மையணி

104) சேர்க்கையணி

105) பாவகத் தோற்றவணி

106) பாவகச் சேர்க்கையணி

107) பாவகக் கலவையணி

108) காட்சிப் பிரமாணவணி

109) அநுமானப் பிரமாணவணி

110) ஒப்புப் பிரமாணவணி

111) சொற் பிரமாணவணி

112) பொருட்பேற்றுப் பிரமாணவணி

113) நுகர்ச்சியின்மை

114) பிறப்புப் பிரமாணவணி

115) எடுத்துக்காட்டுப் பிரமாணவணி

116) சேர்வையணி

117) உறுப்புறுப்பிக் கலவையணி

118) இரண்டு முக்கியமாகக் விளங்குங் கலவையணி

119) ஐயக் கலவையணி

120) ஒரே சொல்லையணுகி விளங்குங் கலவையணி

 

இப்படி 120 அணிகளைப் பற்றியும் தெரிந்து கொண்டால் கவிஞனின்  கவிதா ஞானமும் பொருள் வீச்சும் நன்கு புரியும்.

இதற்கான செய்யுள்கள் தமிழிலக்கியத்தில் ஏராளம் காணலாம்.

அவற்றை அணி விளக்கத்தோடு இனி வரும் கட்டுரைகளில் சிறிது காண்போம். சம்ஸ்கிருதத்தில் உள்ள அலங்காரங்களையும் தமிழ்க் கவிஞர்கள் விடவில்லை. அதையும் ஆங்காங்கே ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழின் அருமையும் பெருமையும் நன்கு புரியுமல்லவா! சிறிது தமிழிலக்கியக் களத்தினுள் இறங்குவோமா?

***

72 தமிழ்க் கவிஞர்களின் சரிதம் தந்த முருகதாஸ் சுவாமிகள் (POST No.5421)

WRITTEN by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 12 September 2018

 

Time uploaded in London – 8-29 AM (British Summer Time)

 

Post No. 5421

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தமிழுக்கு பெரும் சேவை செய்த பெரியார்களில் ஒருவர் முருகதாஸ் சுவாமிகள். இவர் பத்து வயதிலேயே கவி பாடியவர். கோலிக் குண்டு விளையாடும் இடை வேளையிலும் கவி எழுதுவாராம். எப்பொழுதும் இதற்காக எழுத்தாணியையும் பனை ஓலையையும் கூடவே எடுத்துச் செல்வாராம். அப்படிச் சிறுவயதிலேயே இவர் பாடிய முதல் நூல் பன்னிருமாலை ஆகும். முருகப் பெருமான் அவரது 12 கரங்களில் தாங்கிய ஆயுதம் முதலியவற்றை போற்றித் துதி பாடிய கவிகள் அவை. இவர் செய்த மஹத்தான சாதனை- எவரும் செய்யாத சாதனை- 72 தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைத் தாம் அறிந்த முறையில் செய்யுட்களில் தந்தமை ஆகும். அகத்தியர் முதல் துவங்கி நாம் அதிகம் அறியாத அறிவுத்தன்மைப் புலவர் வரை 2828  செய்யுட்களில் பாடிவிட்டார்.

 

 

‘புலவர் புராணம்’ என்ற பெயரில் 1901-ஆம் ஆண்டு முதல் 1906-ஆம் ஆண்டு வரை மூன்று தொகுதிகளில் இவை வெளியாகிற்று. திருவள்ளுவர், அவ்வையார் ஆகியோர் சஹோதர சஹோதரிகள் என்ற பழைய கதைப் படியே இவர் சரிதம் எழுதியுள்ளார். இவர் முருகன் மீது பக்தி பூண்டதால் முருக தாசர் என்று அழைக்கப்பட்டார். தண்டபாணி சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள் என்ற பெயர்களும் உண்டு. இவர் திருநெல்வேலியில் 1838ல் பிறந்து 1898-ல் இறந்தார் என்று 1901 ஆம் ஆண்டு வெளியான ‘புலவர் புராண’ முகவுரையில் வி. கிருஷ்ணமாச்சாரியார் எழுதியுள்ளார்.

 

 

இது ஒரு புது வகை இலக்கியம் என்றும் வருங்கால சந்ததியினர் இவர் விட்டுவிட்ட விஷயங்களைச் சேர்க்க வேண்டும் என்றும் கிருஷ்ணமாச்சாரி முகவுரை கூறுகிறது. முருகதாசர் இந்துக் கவிஞர் வரலாறு மட்டுமே யாத்துள்ளார். பௌத்த, சமணர்கள் எவரும் இல்லை. மேலும் அவர் அறிந்த வகையில் கால வரிசைப்படி கவிஞர்களை வைத்துள்ளார். நல்ல தூய, செம்மையான பாக்கள் அவை. முருக்தாசரின் மகன் கொடுத்த தகவலின் படி அவர் எழுதிய வேறு நூல்கள்:–

 

தில்லைத் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம்,தெய்வத் திருவாயிரம், பழனித் திருவாயிரம், அருணகிரிநாதர் புராணம், நான்கு நூல், திருச்செந்தூர் திருப்புகழ்,  திருச்செந்தூர் கோவை, திருவாமாத்தூர் தலபுராணம்,ஏகபாதத்திதழகலந்தாதி, பதிகச் சதகம், சதகப் பதிகம், திருமகளந்தாதி.

தமிழ் நாட்டிலுள்ள பல தலங்களையும் இலங்கையிலுள்ள தலங்களையும் இவர் தரிசித்தார். இவர் பல பெரியோர்களைச் சந்தித்து சைவ மடங்களுடன் தொடர்பு கொண்டார். ஆயினும் சைவ வைணவ வேற்றுமை இவருக்கில்லை என்பது சிதம்பரம், திருவரங்கம் ஆகிய இரு கோவில்கள் மீதும் பாடியிருப்பதிலிருந்து புலப்படும். இவர் இருபது வயதாகும் முன்னர் சென்னைக்கும் வந்து அங்குள்ள கந்தசாமிக் கோவிலில் தனது சொற்பொழிவாலும் கவி புனையும் திறத்தாலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை புரிந்தாலும் வேறு எவரும் செய்யாத ‘புலவர் புராணம்’ என்ற புதுமைப் படைப்பே இவருக்குப் புகழ் ஈட்டித் தந்தது. அறுபது வயது வரை தென் ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருவாமாத்தூர் கிராமத்தில் ஒரு குடிசையில் இவர் வாழ்ந்தார் என்றும் தெரிகிறது.

சென்னைத் தமிழ்ப் பண்டிதர் வி. கிருஷ்ணமாச்சாரி கையில் அவரது படைப்புகளை அவரது குடும்பத்தினர் தந்ததால் அவர் மூன்று பகுதிகளாக 72  புலவர் வரலாற்றையும் வெளியிட்டார்.

 

இதோ 72 புலவர்க்ளின் பெயர்கள்:

 

 

 

 

(ஒவ்வொரு புலவர் பற்றியும் முருகதாசர் பாடியதைத் தனியே இன்னொரு கட்டுரையில் தருகிறேன்)

 

-சுபம்-

 

பாரதி 97! – 3 (Post No.5416)

WRITTEN BY S NAGARAJAN

Date: 11 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-09 AM (British Summer Time)

 

Post No. 5416

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மஹாகவிக்கு அஞ்சலி

இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை!

பாரதி 97! – 3

 

ச.நாகராஜன்

 

  1. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரைப் போட்டிக்கு அழைக்க நினைத்தவர்.

மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹாலுக்கு தாகூர் வருவதை அறிந்து அவருடன் கவிதைப் போட்டி நடத்த விரும்பினார். ஆனால் அந்த விஷயத்தைப் பற்றித் தொடராமல் அப்படியே விட்டு விட்டார். தாகூரின் பாடலையும் கட்டுரைகளையும் மொழி பெயர்த்து வெளியிட்டவர்.

  1. சுயசரிதை எழுதியவர்

தன் சுயசரிதையைக் கவிதை வடிவில் யாத்தவர்.

 

  1. சர்வ மதம் சமரஸம் கண்டவர்

அனைத்து மதங்களையும் மதித்தவர். அல்லா,அல்லா, அல்லா என்று பாடியவர்.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் என்று ஏசு கிறிஸ்துவைப் பற்றிப் பாடியுள்ளார்.

 

  1. சிறந்த ரசிகர்

அனைத்துக் கலைகளையும் ரசிக்கும் சிறந்த ரசிகர். ஓவியர் ரவிவர்மா மறைந்ததை ஒட்டி இரங்கல் பா பாடினார்.சுப்பராம தீக்ஷிதர் மறைந்ததற்கும் இரங்கல் பா பாடியுள்ளார்.

 

  1. இயற்கை ஆர்வலர்

இயற்கையை ரசிப்பதில் அளவிலா ஆர்வம் கொண்டவர். பாஞ்சாலி சபதத்தில் சூரியாஸ்தமனம் பற்றி எழுதியுள்ளார். அநேக பாடல்கள் அவரது இயற்கை ஆர்வத்தை விளக்கும்.

70.நேரம் பயனுள்ளதாகக் கழிய விரும்பியவர்.

நேர நிர்வாகம் பற்றி மிகவும் அக்கறையுடனிருந்தவர். பொழுது வீணே கழிய சற்றும் இடங்கொடேன் என குறிப்பில் எழுதியவர்.சோம்பலின்றி தன் பணிகளைத் தொடர்ந்தவர்.

  1. நையாண்டி வல்லுநர்

எழுத்தாளர், நகைச்சுவை எழுத்தாளர் என்பதைத் தாண்டி நையாண்டி செய்வதில் வல்லுநர். ஒரு பெரிய நையாண்டி கதையையே எழுதியுள்ளார். கட்டுரைகளில் சரளமான நையாண்டி நடையைக் கையாண்டவர்.

 

  1. மதமாற்றம் எதிர்த்தவர்

மதமாற்றம் கண்டு பொங்கியவர். தனது அருமை நண்பர் சுரேந்திர நாத் ஆர்யா மதம் மாறியது கண்டு வருந்தி நொந்து அழுதார்.

 

  1. அழகிய கையெழுத்தைக் கொண்டவர்

சிறிய எழுத்துக்கள். இடம் விட்டு இடம் எழுதும் பாங்கு. அழகிய கையெழுத்தைக் கொண்டவர். அவரது கையெழுத்துப் பிரதிகள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

 

  1. நன்கு உடை அணிபவர்

சுத்தமான உடை.அழகிய உடை அணிய விரும்பியவர்.கோட்டு, தலைப்பாகை என அவரது கம்பீரமான உருவத்தை உடையால் இன்னும் மேம்படுத்திக் கொண்டவர்

 

  1. நண்பர்களை அரவணைத்தவர்

சுமார் 35க்கும் மேலான சீடர்களைப் புதுவையில் கொண்டிருந்தார்.ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்தார். அவர்கள் அனைவரையும் வெகுவாக மதித்து நட்பு பாராட்டி வந்தார்.

 

  1. புதிய பாரதம் அமைக்க எண்ணியவர்

வலிமையற்ற தோளினாய் போ போ போ என்று நலிந்த பாரதத்தை விரட்டியவர் ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா என்றும் எதிரிலா வலத்தினாய் வா வா வா என்றும் புதிய பாரதத்தை வரவேற்று அழைத்தார். அவரது பாரதம் உலக நாடுகளில் மேன்மையுற்ற பாரதம். அதையே அவர் அமைக்க விரும்பினார்.

  1. வெளிதேச வாசம் வெறுத்தவர்

புதுவை வெள்ளைக்காரர் வசம் ஆகும் என்ற ஒரு நிலை வந்த போது பிரான்ஸில் குடியேறலாமா என்ற பேச்சு எழுந்தது. ஆனால் பாரதியார் அப்படி பிரான்ஸுக்குச் செல்ல விரும்பவில்லை. வெளிதேச வாசத்தை அவர் வெறுத்தார். சிறந்த சுதேசி.

 

  1. மாதாமணி வாசகம் வெளியிட்டவர்

தன் நூலான மாதா மணிவாசகத்தை தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளியிட்டவர்.

 

  1. ஆங்கில பத்திரிகாசிரியர்

தமிழ் பத்திரிகை ஆசிரியர் என்பதோடு பால பாரதம் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கும் ஆசிரியராக ஆனார்.

 

80.தெய்வ அருள் பெற்றவர்

‘மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மாசக்தி வையத்தேவி’ என எழுதினார். விண்ணும் மண்ணும் தனி ஆளும் வீரை சக்தி நினதருளே என்றவர் அனைத்தும் சக்தி அருளினாலேயே நடக்கிறது என்று நம்பினார். அந்த சக்தியின் அனுக்ரஹத்தையும் பெற்றார்.

 

81.மரணம் வென்றவர்

காலா என் காலருகே வாடா, உன்னை சற்றே எட்டி மிதிக்கிறேன் என்றவர். சாகா வரம் அருள்வாய் -ராமா என்று பாடியவர்.பார் மீது நான் சாகாதிருப்பேன் என்று அறிவித்தவர்.

உண்மை தான்! தனது சாகா வரம் பெற்ற பாடல்களினால் இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார்.

  1. சகல உயிர்களையும் நேசித்தவர்

தின்ன வரும் புலியையும் அன்போடு நேசிக்க உபதேசித்தவர்; குருவிகளுக்கு அரிசி மணிகளைப் போட்டு ஆனந்தித்தவர். காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று முழங்கியவர்.

 

83.வ.வே.சு. ஐயரால் பெரிதும் போற்றப்பட்டவர்

புதுவை வாழ்க்கையில் வ.வே.சு ஐயரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். அவரது பாடல்களைக் கண்ட ஐயர் வெகுவாக அவரை வியப்புடன் போற்றினார். சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் போன்ற அக்ஷர லக்ஷம் பெறும் பாடல்களை பாடுபவர் என்று முகவுரை எழுதி அவரது நூல்களை அனைவரும் வாங்கி அவரை ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

 

84.விவேகானந்தரின் பக்தர்

விவேகானந்தரின் பக்தராக விளங்கினார். அவரது ஜீவித சரித்திரத்தையும் எழுதியுள்ளார். விவேகானந்தரை ‘பாபேந்திரியம் செறுத்த எங்கள் விவேகானந்தப் பரமன்’ என்று போற்றிப் பாடியுள்ளார்.

 

85.ரமணரை தரிசித்த கவிஞர்

திருவண்ணாமலை சென்ற போது பகவான் ரமணரை தரிசித்தார். அங்கு அவர் முன் மௌனமாக அமர்ந்திருந்தார்; பேசவில்லை.

86.நாடக ஆசிரியர்

குட்டி நாடகங்களைச் சிறப்பாக எழுதியவர். ஜகத் சித்திரம் உள்ளிட்டவற்றில் அவரது நாடகம் எழுதும் வல்லமையைப் பார்க்கலாம்.

 

  1. தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்த நினைத்தவர்

தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதை மாற்றி அமைத்து அதை புதிய பாணியில் மாற்ற நினைத்தவர். அது பற்றி அறிவிப்பும் வெளியிட்டவர். ஆயின் முயற்சி தொடரவில்லை.

  1. பிரெஞ்சு தேசீய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்.

பிரெஞ்சு தேசிய கீதமான லா மார்ஸ்லே என்ற கீதத்தை   “ அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம் மன்னு புகழ் நாள் இதுவே“ என்று தமிழில் மொழிபெயர்த்தார்.

 

ஆக வந்தேமாதரம் என்ற இந்தியாவின் தேசீய கீதத்தையும் பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதத்தையும் தமிழில் தந்ததால் இரு தேசங்களின் தேசீய கீதங்களையும் தமிழாக்கிய பெருமையைப் பெறுகிறார்.

 

 

  1. பாரதி பட்டத்தை பதினோரு வயதிலேயே பெற்றவர்.

இவரை மட்டம் தட்ட நினைத்த காந்தி மத நாதர் தந்த ஈற்றடியான, ‘பாரதி சின்னப் பயல்’ என்பதை ‘காந்திமதி நாதனைப் பார்; அதி சின்னப் பயல்’ என எழுதி அனைவரையும் இள வயதிலேயே  வியக்க வைத்தவர். இவரது கவிதா திறமையைக் கண்ட அறிஞர்கள் இவருக்கு பதினோரு வயதிலேயே – 1893ஆம் ஆண்டிலேயே – இவருக்கு பாரதி பட்டம் அளித்தனர்.

 

  1. புதிய கவிதா பாரம்பரியத்தை உருவாக்கியவர்

தனது புதிய கவிதா நடையினாலும், பொருளினாலும் தமிழில் புதிய கவிஞர்கள் பரம்பரையை உருவாக்கியவர். பாரதி காலம் தொட்டு இன்று வரை அவரது தாக்கம் இல்லாத கவிஞர் ஒருவர் கூட இல்லை.

91 பழையதையும் புதியதையும் இணைக்கும் பாலமாக இருந்தவர்

பெண் விடுதலை வேண்டியவர், ‘முன்னை அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து’ வாழ உபதேசித்தார். காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கை கொடுக்கச் சொன்னவர் மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழச் சொன்னார். பழமையைப் போற்றி அதில் உள்ள நல்லது அனைத்தையும் எடுத்துக் கொண்டு நவீன உலகின் சிறப்புக்களையும் ஏற்று வாழச் சொன்னவர். பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்க விரும்பியவர்.

 

 

  1. உலக அறிஞர்களின் தத்துவங்களைப் பாராட்டியவர்

லாவோட்சு, விட்மன், புத்தர் என உலக அறிஞர்கள் மற்றும் மகான்களின் தத்துவங்களை ஆங்காங்கே கட்டுரையில் தந்தவர். அரவிந்தர், தாகூர், காந்திஜி உள்ளிட்டோரின் சிறப்பான கருத்துக்களையும் தமிழில் தந்தவர்.

 

  1. புராணங்களைப் பரப்ப விரும்பியவர்

புராணங்களைப் பற்றி,’நன்று புராணங்கள் செய்தார்- அதில் நல்ல கவிதை பல பல தந்தார், கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்’ என்று பாடினார். ஆனால் புராணங்கள் என்று கட்டுரை எழுதி, (கற்பனை என்றாலும்) அவற்றை நாடெங்கும் பரப்ப வேண்டுமென்று அறிவுறுத்தினார். ஏனெனில், ‘புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவை தாம்’ என்று காரணத்தையும் தெரிவித்தார். ஸ்வாமி விவேகானந்தரும் புராணங்களை நாடெங்கும் வெள்ளமெனப் பாய்ச்சுங்கள் என்று கூறியதை நோக்கினால் இருவர் கருத்தும் ஒன்றாகிறது.

 

  1. ஆங்கில கவிதை, கட்டுரை, நூல் எழுதியவர்

ஆங்கிலக் கவிதைகளை எழுதியுள்ளார். தனது கும்மிப் பாடலைத் தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். The Fox with the golden Tail என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார்.

 

  1. சிறை சென்ற தியாகி

1918 நவம்பர் 20ஆம் தேதி புதுவையிலிருந்து குதிரை வண்டியில் குடும்பத்துடன் புறப்பட்ட பாரதியார் பிரெஞ்சு எல்லையைக் கடந்தவுடன் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். கடலூர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நவம்பர் 20 முதல் டிசம்பர் 14 முடிய சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

 

  1. ஏராளமான அதிசய அனுபவங்களைப் பெற்றவர்

வாழ்க்கையில் நம்ப முடியாத அதீத உளவியல் அனுபவங்களையும் அதிசய அனுபவங்களையும் பெற்றவர். கோவிந்தசாமி புகழ் என்ற கவிதையில். “ஒரு நாள் இறந்த எந்தை தன்னுருவம் காட்டினான், பின்னர் என்னைத் தரணிமிசை பெற்றவளின் வடிவம் உற்றான்’ என்று கூறி இறந்த தந்தையையும் தாயையும் கோவிந்த சாமி காட்டத் தான் பார்த்ததைக் கூறுகிறார். திருவனந்தபுரம் சென்ற போது மிருகக் காட்சிச் சாலையில் காவலாளி தடுத்த போதும் ஒரு சிங்கத்தின் அருகில் சென்று அதைத் தொட்டு, ‘அன்பு கொண்டோரை நீங்கள் ஒன்றும் செய்ய மாட்டீர்கள் என்பதை கர்ஜனை மூலம் தெரிவியுங்கள்’ என்று சொல்ல சிங்கம் கர்ஜித்தது. இப்படி ஏராளமான அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

  1. சிறந்த மனிதர்

மன்னுக்கு இதம் செய்பவர் மனிதர். அதாவது உலகிற்கு இதம் செய்பவர் என்ற அர்த்தத்திற்கு இலக்கணமாக வாழ்ந்த சிறந்த  வியக்க வைக்கும் மனிதர் மகாகவி பாரதியார்.

*

பாரதியாரின் புகழுக்கு முடிவில்லை. அவரது சிறப்பியல்புகளை

97 என்ற எண்ணுக்குள் கட்டுப்படுத்த முடியாது. இந்த எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர் அவர். பாரதியார் திரு நாமம் வாழ்க. தேச பக்தியும் தெய்வ பக்தியும் வெல்க! வந்தேமாதரம்!! பாரத் மாதா கீ ஜெய்!!!

 

முற்றும்

 

குறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.

 

இவற்றை இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள ஏராளமான பாரதியார் பற்றிய கட்டுரைகளில் காணலாம்.

(www.tamilandvedas.com பார்க்கவும்)

 

இந்தக் கட்டுரையாசிரியர் தொகுத்துள்ள பாரதி போற்றி 1000 என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ஆயிரம் பாடல்களிலும்

‘கொழ கொழ கண்ணே’ – எங்க அம்மா சொன்ன தமிழ் நர்ஸரி ரைம் (Post No.5415)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 10 September 2018

 

Time uploaded in London – 19-34 (British Summer Time)

 

Post No. 5415

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

கொழ கொழ  கண்ணே எங்க அம்மா சொன்ன தமிழ் நர்ஸரி ரைம் (Post No.5415)

 

இப்பொழுது ‘ட்வின்கிள் ட்வின்கிள் லிட்டில் ஸ்டார்’ (Twinkle twinkle Little Star) தெரியாத தமிழ்க் குழந்தைகள் கிடையாது. ஆனால் ‘நிலா நிலா ஓடிவா’ பாட்டோ, ‘கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு’ நர்ஸரி ரைமோ (Nursery Rhyme) தெரிந்த தமிழ்க் குழந்தை இருக்கிறார்களா என்பது ஐயப்பாடே.

 

நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது (65 ஆண்டுக்கு முன்னால்) என்னுடைய தாயார் எங்களுக்கு ‘கொழ கொழ கண்ணே’ கதையைச் சொல்லுவார்கள். அதை ஒவ்வொரு நாள் இரவிலும் சொல்லச் சொல்லிக் கேட்போம். இது தஞ்சைப் பகுதியில் மட்டும் வழங்கியதா அல்லது மற்ற பகுதிகளிலும் வழங்கியதா என்று தெரியவில்லை. ஆனால் மாவட்டம் தோறும் பல குழந்தைகள் பாடல்கள் வழங்கியதை அறிகிறோம். 1899ம் ஆண்டு வெளியான விவேக சிந்தாமணி என்ற சென்னை மாத இதழைப்  பார்த்தவுடன் மஹா சந்தோஷம்.அதில் இன்று படித்த, முன்னொரு காலத்திலென் தாயார் சொன்ன குழந்தைப் பாட்டு இதோ.

 

‘கொழ கொழ  கண்ணே’ என்று துவங்கி

 

‘என் பெயர் ஈ, இது தெரியாதா’? என்று முடிவடையும் தமிழ் நர்ஸரி ரைம்.

 

 

 

 

 

 

FULL  RHYME

தமிழ் வாழ்க

 

–சுபம்–

பாரதி 97!- PART 1 (post No.5406)

WRITTEN BY S NAGARAJAN

Date: 9 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-23 AM (British Summer Time)

 

Post No. 5406

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

 

மஹாகவிக்கு அஞ்சலி

பாரதி 97!- PART 1

 

ச.நாகராஜன்

 

மஹாகவி பாரதி அமராரான நாள் செப்டம்பர் 11. 1921 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். 97 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.அவரது சிறப்பியல்புகள் எத்தனையோ. அவற்றில் 97ஐ இங்கு காண்போம். அவருக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவோம். தேச பக்தியிலும் தெய்வ பக்தியிலும் சிறந்துயர்வோம்.

 

 

  1. சிறந்த சம்ஸ்கிருத விற்பன்னர்

1898 ஜூன் மாதம். பாரதியார் காசிக்குப் பயணமானார். அங்கே ஹிந்து கலாசாலையில் சேர்ந்தார். ஸம்ஸ்கிருதத்தில் நல்ல புலமையைப் பெற்றார்.அத்துடன்  ஹிந்தி பாஷையிலும் தேர்ந்தார்.

  1. பல்மொழி அறிந்தவர்

பாரதியார் இயல்பாகவே பல மொழிகளை அறிந்து கொண்டவர். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.புதுவை வாழ்க்கையில் பிரெஞ்சு மொழியையும் வங்காள மொழியையும் அறிந்து கொண்டார். சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்பதால் அவர் தெலுங்கு மொழியும் அறிந்தவரே. யாம் அறிந்த மொழிகளிலே’ என்ற அவரது பாடல் குறிப்பின் மூலமாக அவரது பன்மொழி அறிவைத் தெரிந்து கொள்ளலாம்.

 

  1. பள்ளி ஆசிரியர்

1903ஆம் ஆண்டு பாரதியார் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார்.மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக மூன்று மாதம் பணி புரிந்தார்.

  1. சிறந்த பத்திரிகாசிரியர்

இந்தியா உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகத் திகழ்ந்ததோடு தேசபக்தி உணர்வூட்டும் பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.

  1. சிறந்த பதிப்பாளர்

பல நூல்களை வெளியிட்டவர். மிகத் தரமான முறையில் குறைந்த விலையில் தன் கவிதை நூல்களை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குண்டு.

  1. கார்ட்டூனை அறிமுகப்படுத்தியவர்

இந்தியா இதழில் கார்ட்டுனை அறிமுகப்படுத்தி சிறந்த கருத்துக்களை சித்திரம் மூலம் வெளிப்படுத்தியவர்

7.சிறந்த கவிஞர்

பல நூறு பாடல்களை இயற்றியவர். இந்தப் பாடல்கள் சாகா வரம் பெற்றவை.

 

  1. சிறந்த கணவர்

தன் மனைவி செல்லம்மாவை உயிரினும் மேலாக நேசித்தார். சம உரிமை தந்து கை கோர்த்து தெரு வீதியில் அந்தக் காலத்திலும் சென்று புதுமை படைத்தார்.

  1. சிறந்த தகப்பன்

தன் குழந்தைகளை உயிரினும் மேலாக நேசித்தார். அவர்களுக்கு அன்பைக் குழைத்து அறிவைத் தந்தார். அவரைப் பற்றி அவரது குடும்பத்தினர் எழுதிய நூல்களில் அவரது அன்பைக் காட்டும் பல சம்பவங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

  1. சிறந்த கதாசிரியர்

ஞான ரதம் உள்ளிட்ட ஏராளமான படைப்புகள் அவர் சிறந்த கதாசிரியர் என்பதை உணர்த்தும்.

  1. சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்.

மகாகவியின் எழுத்துக்களில் ஆங்காங்கே நகைச்சுவை கொப்பளிக்கும்.சின்னச் சங்கரன் கதை நல்ல நகைச்சுவை கதையாக மிளிர்ந்தது.

  1. சிறந்த புதுக் கவிதை இயற்றிய புதுமையாளர்

வசன கவிதைகள் பலவற்றை இயற்றிய புதுமையாளர். காட்சி, புகழ் உள்ளிட்டவை இவரது வசன கவிதை  படைப்புகளை இனம் காட்டுபவையாகும்.

13.சிறந்த சொற்பொழிவாளர்

ஏராளமான மேடைகளில் அனல் பறக்கும் தேசிய உணர்வூட்டும் சொற்பொழிவுகளை ஆற்றியவர். ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் ஆற்றியவர்;

  1. சிறந்த மேலை இலக்கிய விற்பன்னர்.

ஷெல்லியின் பாடல்களில் தோய்ந்தவர். ஷெல்லி தாசன் எனப் புனைப்பெயரையே கொண்டார்.ஆங்கிலக் கவிஞன் பைரன், வால்ட் விட்மன் உள்ளிட்ட ஏராளமானோரின் கவிதைகளைப் படித்து உணர்ந்து அனுபவித்தவர்.

 

  1. மஹாத்மாவை இனம் கண்டவர்

மஹாத்மா காந்தி பஞ்சகத்தை இயற்றி இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்ற பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த மஹாத்மா என்று போற்றினார். மஹாத்மாவை சென்னையில் சந்தித்து அவரது தலைமைக்கும் இயக்கத்திற்கும் ஆசி கூறினார்.

  1. திலகரைப் போற்றியவர்

திலகரிம் பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். வாழ்க திலகன் நாமம் பால கங்காதர திலகர் ஆகிய பாடல்களைப் பாடி அவரைப் போற்றியவர்.

  1. தேசபக்தர்களைப் போற்றியவர்

தாதாபாய் நௌரோஜி, லாலா லஜ்பத்ராய் உள்ளிட்ட பெரும் தலைவர்களைப் போற்றியவர்.

18.வ.உ.சிக்கு நெருக்கமானவர்

‘வ.உ.சி.க்கு வாழ்த்து’ பாடியவர். அவருடன் நெருங்கிப் பழகியவர்.

 

19.நிவேதிதாவைக் குருவாகக் கொண்டவர்

விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியை 1906ஆம் ஆண்டு நடந்த கல்கத்தா காங்கிரஸில் கலந்து கொண்டு திரும்பும் போது சந்தித்து உபதேசம் பெற்றவர். நிவேதிதா தேவி துதி இயற்றிப் போற்றியவர். தனது இரு நூல்களை அவருக்கு சமர்ப்பணம் செய்தவர்.

  1. அரவிந்தருடன் நெருங்கிப் பழகியவர்

அரவிந்தரின் நட்பு புதுவையில் ஏற்பட்டது. அவருடன் அடிக்கடி அளவளாவி பல கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டவர். வேதத்தை அரவிந்தரிடம் கற்றார். அரவிந்தரும் பாரதியாரும் பரஸ்பரம் கொண்டிருந்த அன்பும் மதிப்பும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

  1. தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தியவர்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாடியவர். சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும் என அறிவுரை பகன்றவர். தமிழைப் புதிய சிகரத்தில் ஏற்றியவர்.

22.சிறந்த இசை விற்பன்னர்

பல பாடல்களை – கிருதிகளை – தாளம், ராகத்தோடு இயற்றியவர். அவற்றை பலருக்கும் சொல்லித் தந்தவர். தமிழில் உள்ள இசைப் பாடல்களையும் கச்சேரிகளில் பாடுதல் வேண்டும் என முதன்முதலில் முழக்கம் இட்டவர்.

  1. சிறந்த பாடகர்

கணீரென்ற குரலில் தனது பாடல்களை ஆவேசத்தோடு அவர் பாடியதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டு மெய் சிலிர்ப்பது வழக்கம்.

  1. தேவார திவ்ய பிரபந்த விற்பன்னர்

தேவாரத்திலும் திவ்ய பிரபந்தத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவற்றை அடியொற்றிய பாடல்களையும் இயற்றியவர்.

  1. சங்க இலக்கிய விற்பன்னர்

சங்க இலக்கியங்களைக் கற்றவர். இளங்கோ மீது ஈடுபாடு கொண்டவர். திருக்குறளைப் போற்றியவர்.

 

  1. கம்பனில் ஈடுபாடு கொண்டவர்

எல்லையற்ற தன்மையைக் கொண்டவர் என கம்பனைப் போற்றியவர்.கம்பன் பிறந்த தமிழ்நாடு என கம்பனையும் தமிழ் நாட்டையும் உச்சியில் ஏற்றிப் பாராட்டியவர்

  1. வேதம் புகழ்ந்தவர்

வேதம் உடையது இந்நாடு என வேதத்தைப் பெருமையாகப் பறை சாற்றிய ‘வேத அறிஞர்’ பாரதியார்.  ஏராளமான வேதக் கருத்துக்களை தன் கவிதைகளிலும்,கட்டுரைகளிலும் எடுத்துக் காட்டியவர். அரவிந்தருடன் வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.

27.ரஷிய புரட்சியை வரவேற்றவர்.

ஜார் மன்னன் வீழ, ஆஹா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி என ரஷிய புரட்சியை அழியாத கவிதை மூலம் பாராட்டியவர்.

இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்து விட்டான் ஜாரரசன் என்று பாடினார்.

28.பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து பாடியவர்

முதல் உலக மகா யுத்தத்தில் ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது படையெடுத்து அங்கிருந்த சுதந்திர அரசை வீழ்த்தியபோது திறத்தினால் எளியை ஆகிச் செய்கையால் உயர்ந்து நின்றதாக பெல்ஜியத்தைப் பாராட்டினார். துயருண்டோ துணிவுள்ளோர்க்கே என்று தன் கவிதையை முடித்தார்.

29.பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள் படும் பாட்டைக் கண்டு வருந்தியவர்

கரும்புத் தோட்டத்திலே ஹிந்து மாதர் படும் துன்பம் தீர ஒரு மருந்திலையோ என வேதனைப் பட்டார். எங்கு ஹிந்துக்கள் துன்பப்பட்டாலும் தனது வேதனைக் குரலை வெளியிட்டார்.

 

Hindu temple in Fiji

  1. உலக நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தவர்

தனது பத்திரிகை வாயிலாக அறத்தினால் நிமிர்ந்து நிற்கும் அரசுகளுக்கு ஆதரவு தந்தார். புரட்சியை வரவேற்றார். மறத்தினால் ஆளும் ஆட்சிகளை – பிரிட்டிஷ் ஆட்சி உட்பட அனைத்தையும் கண்டித்தார்.

  1. தீர்க்கதரிசி

ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று என்று தீர்க்கதரிசன வாக்குக் கூறியவர்.

  1. வெள்ளையரை விரட்ட குரல் கொடுத்தவர்

வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே என்று வெள்ளையரை இகழ்ந்து சுதந்திரத்திற்காக வெகு ஜன எழுச்சியைத் தன் பாட்டாலும் செயலாலும் சொற்பொழிவாலும் ஏற்படுத்தியவர். பாரத தேசம் பெற்ற சிறந்த தவப்புதல்வர்.

அடுத்த இரு கட்டுரைகளுடன் இந்தத் தொடர் முடியும்.

 

குறிப்பு: மேலே கண்ட சிறப்புக்களை விளக்கும் விதத்தில் ஏராளமான பாடல்களையும் கட்டுரைகளையும் பாரதியார் படைத்துள்ளார்.பல அரிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன.