ஆகா கானின் அக்கிரம எண்ணம் (Post No.5108)

ஆகா கானின் அக்கிரம எண்ணம் (Post No.5108)

 

Written by S NAGARAJAN

 

Date: 14 JUNE 2018

 

Time uploaded in London –  10-32 am  (British Summer Time)

 

Post No. 5108

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

தேசப் பிரிவினையின் கதை

 

ஆகா கானின் அக்கிரம எண்ணம்: பிரிவினையின் சோகக் கதை!

 

ச.நாகராஜன்

1

உண்மையாக சொல்லப் போனால் நமது தேசப் பிரிவினையின் உண்மையான சோகக் கதை எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்?

1947இல் சுதந்திரக் குழந்தைகளாக  பிறந்தவர்களுக்கு இப்போது வயது 71 ஆகி இருக்கும். 30 வயதை ஒரு தலைமுறை என்று கொள்வது வழக்கம். ஆக அவர்களுக்கு 2 ¼ தலைமுறை ஆகி இருக்கும். இவர்களுக்கே கூட சுதந்திரம் பெறுவதற்கு ஹிந்துக்கள் கொடுத்த விலை முழுமையாகத் தெரிந்திருக்காது.ஏனெனில் செகுலர் என்ற பெயரில் போலி செகுலரிஸம் போதித்தவர்கள் வரலாறை மறைத்து விட்டார்கள்.

இஸ்லாமில் அனைவரும் கெட்டவர்கள் என்று சொல்ல முடியாது. வெறியர்களே அனைத்துத் தீங்குகளுக்கும் காரணமானவர்கள்.

அதே போல கிறிஸ்தவர்களில் அனைத்துக் கிறிஸ்தவர்களும் கெட்டவர்கள் என்று சொல்ல முடியாது.

மதம் மாறச் செய்ய எந்தச் செயலுக்கும் செல்லத் துணிந்தவர்களே அனைத்துத் தீமைகளுக்கும் காரணமானவர்கள்.

உண்மையில் சொல்லப் போனால் ஒரு நல்ல  முஸ்லீமும் ஒரு நல்ல கிறிஸ்தவரும் தீவிரமான தீய வழியில் செல்லத் தயங்குபவர்களே. அவர்களை மூளைச் சலவை செய்யப் பார்ப்பார்கள்; முடியாவிடில் அவர்களைப் பேச விடாமல் மௌனம் சாதிக்க வைத்து விடுவார்கள்.

ஆக அவர்களுக்கும் கூட, இந்தியாவில் சுதந்திரமாக இருப்பதால், பிரிவினையின் உண்மையான சோகக் கதை தெரிய வேண்டும்.

இதை ஒரு அத்தியாயத்தில் சொல்லி விட முடியாது; விளக்கி விட முடியாது. பல அத்தியாயங்கள் எழுத வேண்டும்.

பல நூற்றாண்டுகளாக பாரதத்தை ஆக்கிரமித்த முகம்மதிய வெறியர்கள் இந்த நாட்டைத் தனது பாட்டன் வீட்டுச் சொத்து என்று எண்ணி விட்டார்கள். ஆகவே தான் “உடமஸ்தன் (சொத்துக்கு உரிமை உடையவன்) அதற்கு உரிமை கொண்டாட விழையும் போது அவனைப் பல வழிகளிலும் துன்பப் படுத்துகிறார்கள்.

அதே போல சுமார் 300 வருடங்கள் அதிகார போதையாலும், செல்வத்தைக் கொள்ளை அடிப்பதாலும் சுகம் கண்ட பிரிட்டிஷார் இந்த நாட்டைக் கிறிஸ்தவ நாடாக ஆக்க எடுத்த முயற்சிகள் “முகம்மதிய கலாசாரத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல!

இவர்களும் “உடமஸ்தன் வந்து எனது சொத்து என்று சொல்லும் போது கோபப் பட்டு தீங்குகளை இழைக்க விழைகிறார்கள்.

ஆகவே இந்தப் பின்னணியை முதலில் புரிந்து கொண்டு, பிரிவினையுடன் சுதந்திரம் பெற்ற கதையைச் சற்று சுதந்திரமாக அணுக வேண்டும்.

 

2

சையத் அஹ்மத் கான். (Syed Ahmed Khan).

இவர் தான் பாரதம் துண்டாடப் பட வேண்டும் என்பதற்கு விதை விதைத்தவர்.

1888ஆம் ஆண்டு முஸ்லீம்கள் ஒரு தனி நாட்டைச் சேர்ந்தவ்ர்கள் என்று இவர் தான் முதலில் கூறினார்.

ஒன்று முஸ்லீம்கள் இந்த நாட்டை ஆள்பவர்களாக இருக்க வேண்டும் அல்லது தேசம் பிரிவினை செய்யப்பட வேண்டும் என்றார் சையத் அஹ்மத் கான்.

ஆனால் அலிகார் முஸ்லீம் யுனிவர்ஸிடியை அமைக்க தனது வேஷத்தைச் சற்று மாற்றிக் கொண்டார். எப்போதுமே தாராள மனமுள்ள ஹிந்துக்களின் தாராளமான நன்கொடைகளை “மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

1898இல் இவர் இறந்தார்.

இவர் “விட்டுச் சென்ற பணியைத் தொடர வந்தார் ஆகா கான்.

(Aga khan)

3

ஆகா கான் என்பது ஒரு பெயர் அல்ல. அது ஒரு அதிகார பதவியைக் குறிக்கும் தலைப்பு அதாவது Title.

இவரைப் பற்றி விக்கிபீடியா தரும் தகவலில் முதல் பாராவை இங்கு பார்க்கலாம்:

 

Aga Khan III

From Wikipedia, the free encyclopedia

Sir Sultan Muhammed Shah, Aga Khan III GCSI GCMG GCIE GCVO PC (2 November 1877 – 11 July 1957) was the 48th Imam of the Nizari Ismailireligion. He was one of the founders and the first president of the All-India Muslim League (AIML). His goal was the advancement of Muslim agendas and protection of Muslim rights in India. The League, until the late 1930s, was not a large organisation but represented the landed and commercial Muslim interests of the British-ruled ‘United Provinces’ (as of today Uttar Pradesh).[2] He shared Sir Syed Ahmad Khan‘s belief that Muslims should first build up their social capital through advanced education before engaging in politics. Aga Khan called on the British Raj to consider Muslims to be a separate nation within India, the so-called ‘Two Nation Theory’. Even after he resigned as president of the AIML in 1912, he still exerted major influence on its policies and agendas. He was nominated to represent India to the League of Nations in 1932 and served as President of the League of Nations from 1937–38

 

மூன்றாம் ஆகா கானின் பெயர் சர் சுல்தான் முஹம்மத் ஷா. (பிறப்பு 2-11-1877 மறைவு 11-7-1957)

இவர் 48வது இமாம்.

முஸ்லீம் லீகை நிறுவியவர்களுள் இவரும் ஒருவர்.

இவரது அக்கிரம எண்ணங்களுக்கு ஒரு அளவே இல்லை!

சையத் அஹ்மத் கானின் பிரிவினை வாதத்தை ஊக்கமுடன் ஏற்றுக் கொண்டவர் இவர். பிரிவினை கூடாது என்றால் பாரதம் முஸ்லீம்களால் ஆளப்பட வேண்டும்.

பிரிட்டிஷாருடன் இதற்காக அவர் கை கோர்த்துக் கொண்டார். இரு தேசக் கொள்கை என்பதை இவர் ஆதரித்தார். இவரது அட்டகாசத்தாலும் அக்கிரம எண்ணங்களா ஹிந்து-முஸ்லீம்களுக்குள் பிளவு மனப்பான்மை ஏற்பட்டது. இதனால் மகிழ்ந்தவர்கள் பிரிட்டிஷாரே.

மேலும் தகவல்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்

 

**

 

 

Aga Khan | Tamil and Vedas

tamilandvedas.com/tag/aga-khan

Posts about Aga Khan written by Tamil and Vedas

 

bath water | Tamil and Vedas

tamilandvedas.com/tag/bath-water

The Aga Khan, while not a ruling … https://tamilandvedas.com/2016/09/23/muslim-holy-water-sold-post-no-3182/ Categories. Categories Archives. March 2018; February …

 

 

நரேந்திர மோடி 20 மணி நேர உழைப்பு ரகசியம்! (Post No.5097)

Written by S NAGARAJAN

 

Date: 11 JUNE 2018

 

Time uploaded in London –  7-15 am  (British Summer Time)

 

Post No. 5097

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

நரேந்திர மோடி நாளுக்கு 20 மணி நேரம் உழைப்பதன் ரகசியம்!

 

ச.நாகராஜன்

 

ரிபப்ளிக் டி.வியில் ஆர்னாப் கோஸ்வாமி வெள்ளியன்று (8-6-18) பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மாவோயிஸ்டுகள் கொல்லச் சதி தீட்டும் கடிதத்தை வெளியிட்ட போது நாடே திடுக்கிட்டது.

 

பல கோடி ரூபாய் இதற்குத் தேவைப்படுகிறது என்றும் “ஒத்த மனமுடைய” நிறுவனங்களையும் கட்சிகளையும் இதற்கு உதவி கோரி நாடலாம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்ட வாக்கியத்தைக் காண்பித்து அந்த நிறுவனங்களும் கட்சிகளும் எவை எவை என்று கேட்டார் ஆர்னாப்.

நாடே அறியத் துடிக்கும் விஷயம் இது.

 

 

மாவோயிஸ்டுகளை இரக்கமின்றி நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்று அவர் கூறிய போது தேசமே ஆமாம் ஆமாம் என்று ஒரே குரலில் கூறியது.

ஹ்யூமன் ரைட்ஸ் என்ற பெயரில் அந்த இயக்கத்தில் இந்த வம்பு கோஷ்டிகள் புகுந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றின் பெயரிலும் பெண்ணியக்கம் பெயரிலும் மனித உரிமைகள் பெயரிலும் உள்ளே நுழைந்து தேசத்தைத் துண்டாட நினைக்கும் தேசத் துரோகிகள் கடையில் ராஜீவ் காந்தி ஸ்டைலில் நரேந்திர மோடியைக் கொலை செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பதை யாராலும் சகித்துக் கொள்ள முடியாது.

 

 

அருண் ஜேட்லியின் நான்கு விதமான தேசத் துரோகிகளின் பட்டியலையும் இந்த டி.வி.நிகழ்ச்சி அறிமுகப் படுத்தியது.

சரி, நரேந்திர மோடி என்ன ‘பாவம்’ செய்தார் – இந்த தேசத் துரோகிகளின் பார்வையில் விழுவதற்கு.

பதிலை அனைவரும் அறிவோம்.

நாட்டிற்காக நாளுக்கு இருபது மணி நேரம் உழைக்கிறார் என்பது தான் பதில்.

 

அதாவது இருபத்து நான்கு மணி நேரத்தில் 83.88 சதவிகிதம் அவர் உழைக்கிறார்.

 

நாடு ஒன்றுபட்டு முன்னேறி விட்டால் நாசகாரிகளால் பொறுத்துக் கொள்ள முடியாதே.

 

2

நரேந்திர மோடி லண்டனில் 18, ஏப்ரல், 2018 அன்று வெஸ்ட்மினிஸ்டர் சென்ட்ரல் ஹாலில் ‘பாரத் கி பாத் சப்கே சாத்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஒருவர் மோடி அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார் இப்படி:

 

 

“ நீங்கள் ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் உழைக்கிறீர்கள். உங்களுக்கு எப்படி இதற்கான சக்தியும் உந்துதலும் கிடைக்கிறது?!”

 

அதற்கு உடனே மோடி அவர்கள் நகைச்சுவையாக பதில் அளித்தார்:” நான் ஒரு நாளைக்கு 2 முதல் 3 கிலோ வரை திட்டலையும் ஏசலையும் ஜீரணிப்பதால்!”

பின்னர் அவர் கேள்விக்கான பதிலைக் கூறலானார்:

‘அவன் ஒரு பாரமல்ல; அவன் எனது சகோதரன்’ என்ற கதையை முதலில் கூறினார்.

 

 

ஒரு இளம் பெண் அவளது சின்னத் தம்பியை தூக்கி வைத்துக் கொண்டு மலையின் மீது தினமும் ஏறிக் கொண்டிருந்தாள். ஒரு சந்யாசி அவளைப் பார்த்து,” அவனைத் தூக்கிக் கொண்டு மலை மீது ஏறுகிறாயே, உனக்குக் களைப்பாக இல்லையா?” என்று கேட்டார்.

 

அதற்கு அந்த இளம் பெண் பதில் சொன்னாள்: “அவன் எனது தம்பி.”

 

சந்யாசி கேட்டார்:”அது எனக்குத் தெரியும். ஆனால் தினந்தோறும் அவனைச் சுமந்து மலை மீது ஏறுவது சிரமமாகத் தோன்றவில்லையா?”

 

ஒவ்வொரு முறை சந்யாசி இப்படிக் கேட்கும் போதும் அந்த இளம் பெண் கூறிய பதில்: “அவன் எனது தம்பி.”

கடைசியாக ஒரு நாள் முத்தாய்ப்பாக அவள் சந்யாசியிடம் கூறினாள் : “எனது தம்பியைத் தூக்கிக் கொண்டு போவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. சுமையாகத் தோன்றவில்லை.”

மோடி கதையைக் கூறி விட்டுத் தொடர்ந்தார் : “அந்தப் பெண் போல தேசத்திற்காகவும் எனது சகோதர சகோதரிகளான 125 கோடி பேருக்காகவும்  உழைக்கும் போது எனக்கு களைப்பே தோன்றவில்லை.”

 

 

உண்மையான அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் கூடிய ஒரு சிறந்த தேசத் தொண்டனின் பதில் இது.

இப்படிப்பட்ட தேசபக்தனை மாவோயிஸ்டுகளும் “ஒத்த மனமுடைய” நிறுவனங்களும் கட்சிகளும் விரும்பவில்லை; விரும்பாது என்பது நிதர்சனமான உண்மை.

 

ராஜீவ் காந்தி ஸ்டைலில் என்றால் தற்கொலைப் படையை தயார் செய்ய வேண்டும் அதற்காக பல கோடி ரூபாய்களும் ஏராளமான ஆயுத தளவாடங்களும் தேவை என்று கடிதம் குறிப்பிடுவதில் ஆச்சரியம் இல்லை.

 

தேசம் இந்த துரோகிகளால் ஒரு இளம் பிரதமரை இழந்தது போதும்.

இவர்களை இனம் கண்டு, கண்டு பிடித்து உடனடியாக நாடு கடத்த வேண்டும்.

 

ஜனநாயகத்தின் பெயரால் இந்த தேசத் துரோகிகள் தேசத்தைப் பிரிக்கும் எதை வேண்டுமானாலும் கூறிக் கொண்டு திரியலாம் என்று நினைத்தால் அதற்கு இந்திய மக்களின் பதில்”

“அது நடக்காது, ‘தோழா’! அதற்கு முன் உன் பாவச் சுமையால் நீயே அழிவாய்!” என்பது தான்!

 

ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டிய தருணம் இந்திய வரலாற்றில் இதுவே தான்!

 

சேர்வோம்; வெல்வோம்!

***

எனது கம்பெனியில் சேருகிறீர்களா, சார், நீங்கள்? (Post No.5074)

Written by S NAGARAJAN

 

Date: 4 JUNE 2018

 

Time uploaded in London –  6-56 am  (British Summer Time)

 

Post No. 5074

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நடைச்சித்திரம் : மேலாண்மை நகைச்சுவை

 

எனது கம்பெனியில் சேருகிறீர்களா, சார், நீங்கள்?

.நாகராஜன்

 

எனது கம்பெனியில் வேலைக்கு ஆட்களை எடுக்கிறோம்.

நீங்கள் சேருகிறீர்களா, சார்?

**

 

கம்பெனி தலைமை நிர்வாகிகளைப் பற்றிய அனுபவங்கள் அநேகமாகப் பலருக்கும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். பணியைப் பற்றிய அறிவு நன்கு இல்லாவிட்டாலும் மற்றவரை நன்கு வேலை வாங்கத் தெரிய வேண்டும்; அதாவது நன்கு செயல் திறமையுடனும் அறிவுடனும் இருக்கும் பலரையும் நன்கு பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்;

இன்னொரு வித தலைமை நிர்வாகிகள் உண்டு; அவர்கள் மானேஜ்மெண்டின் தலைமைக்கு தலைமையாக இருக்கும் கம்பெனி உரிமையாளர்களை “அனுசரித்து” நடப்பவர்கள்.

 

இதற்கு அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது “ஆமாம் சாமி” யாக இருக்க வேண்டும்!

சரி இன்றைய கம்பெனிகளின் நிர்வாகிகள் – பாஸ் – எப்படி இருக்கிறார்கள்?

ஒரு ஜோக் உண்டு.

 

கிளி ஒன்றை வாங்க வந்தவர் அதன் விலையைக் கேட்டார்.

500 டாலர் என்றார் கடைக்காரர்.

“500 டாலரா? கிளிக்கா” என்று வாயைப் பிளந்தார் விலையைக் கேட்டவர்.

“இதற்கு கம்ப்யூட்டர் ஆபரேட் பண்ணத் தெரியும் “ என்றார் கடைக்காரர்.

அடுத்த கிளியைப் பார்த்த அவர், “இதன் விலை என்ன?” என்றார்.

“இதன் விலை ஆயிரம் டாலர் என்றார் கடைக்காரர்.

 

“ஆயிரம் டாலரா? ஒரு கிளிக்கா இந்த விலை” மலைத்துப் போய்க் கேட்டார் அவர்.

“இந்தக் கிளிக்கு யூனிக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் தெரியும.புராகிராமும் பண்ணும்” என்றார் கடைக்காரர்.

மூன்றாவதாக இருந்த கிளியைப் பார்த்த அவர், “இதன் விலை என்ன?” என்று கேட்டார்.

இதன் விலை இரண்டாயிரம் டாலர் என்றார் கடைக்காரர்.

“என்ன இரண்டாயிரம் டாலரா?” என்று மயங்கி விழும் நிலையில் இருந்தார் கேட்டவர். “அப்படி என்ன இது செய்கிறது?”

 

“உண்மையைச் சொல்லப் போனால் இது ஒன்றுமே செய்து நான் பார்த்ததில்லை. ஆனால் மற்ற இரண்டு கிளிகளும் இதை “பாஸ்” என்று கூறி பவ்யமாக நடந்து கொள்கின்றன!” என்றார் கடைக்காரர்.

எக்ஸிகியூடிவ் என்பவர் யார் என்பதை இப்போது புரிந்து கொண்டால் சரி.

 

ஒரு நல்ல எக்ஸிகியூடிவ் திறமையானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல வேலை வாங்க வேண்டும். தலைமைக்கும் தலைமையாக இருக்கும் உரிமையாளர்களை “அனுசரித்து” நடக்க வேண்டும்.

 

 

ஒரு எக்ஸ்கியூடிவ் லேடி கார் ஓட்டும் போது ஒரு பஸ் மோதி இறந்தார்.

அவரை மேல் உலகில் செயிண்ட் பீட்டர் வரவேற்றார்.

 

“நீங்கள் பெரிய எக்ஸிகியூடிவ். அனைத்தும் அறிந்தவர். வேலையாட்களை எடுத்து அவர்களுடன் பணி புரிந்தவர். ஆகவே உங்களுக்கு ஒரு சலுகை.

ஒரு நாள் உங்களை நரகத்திற்கு அனுப்புகிறேன். அடுத்த நாள் உங்களை சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன். 48 மணி நேரம் கழித்து உங்கள் முடிவின் படி நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்களோ அங்கு செல்லலாம்”

செயிண்ட் பீட்டரின் இந்த அபார சலுகையால் மனம் மகிழ்ந்த பெண்மணி முதலில் நரகம் சென்றார்.

 

அபாரமான வரவேற்பு.அனைத்துப் பெண்களும் அழகிகள். பியூட்டி பார்லரின் செண்ட் வாசனை கமகமத்தது.

அவரை வரவேற்று கோல்ப் மைதானத்திற்கு கூட்டிச் சென்றனர். நல்ல விளையாட்டு.பின்னர் க்ளப் ஹவுஸில் டின்னர். அடாடாடா! அதுவல்லவா டின்னர்.

 

டெவில் நேரடியாக வந்து நமது பெண்மணியை வரவேற்று நலம் விசாரித்தார்.

பிறகு பார்ட்டி. நல்ல அரட்டை.

24 மணி நேரம் முடிந்தது.

 

இப்போது சொர்க்கத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

மேகக் கூட்டங்களின் நடுவே தேவதைகள்! அவரை வரவேற்றன. நல்ல பாடல். அழகிய நடனம். ஆனந்தமாக இருந்தது.

24 மணி நேரம் முடிந்தது.

 

அவர் செயிண்ட் பீட்டரிடம் தன் முடிவைச் சொல்லும் நேரம்.

“நன்கு யோசித்துப் பார்த்தேன். சொர்க்கம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆடலும் பாடலும் சரி தான். ஆனால் நரகத்தில் இருக்கும் சுகமே தனி. ஆகவே அங்கேயே செல்ல விரும்புகிறேன்.”

அவர் நரகத்திற்கு அனுப்பப்பட்டார்.

நரகத்தில் கோரமான உருவங்கள் ஹாஹா என்று இப்போது அலறிக் கொண்டிருந்தன. நாற்றம் தாங்க முடியவில்லை. பார்க்கும் இடமெல்லாம் சகிக்க முடியாத குப்பை கூளச் சாப்பாடு.

அலறிப் போன பெண்மணியை டெவில் – கோரமான உருவம் – பார்த்து அசிங்கமாகச்  சிரித்தது.

 

“நேற்று நான் வந்த போது இந்த இடம் பிரமாதமாக இருந்ததே” என்று வருத்தம் தோய பயத்துடன் எக்ஸ்கியூடிவ் பெண்மணி கேட்டார்.

அதற்கு டெவில் பதில் சொன்னது” “ நேற்று உங்களை தேர்ந்தெடுக்கும் நாள்.இன்றோ நீங்கள் பணியாளருள் ஒருவர்.” (Yesterday we were recruiting you; today you are staff!”)

 

கம்பெனிகளைப் பற்றியும் எக்ஸிகியூடிவ் பற்றியும் ஒரு நல்ல ஐடியா கிடைத்தால் சரி!

**

 

எனது கம்பெனியில் வேலைக்கு ஆட்களை எடுக்கிறோம்.

நீங்கள் சேருகிறீர்களா, சார்?

 

***

 

சர்ச்சிலின் டான்ஸ்! (Post No.5071)

Written by S NAGARAJAN

 

Date: 3 JUNE 2018

 

Time uploaded in London –  9-54 am  (British Summer Time)

 

Post No. 5071

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ச.நாகராஜன்

 

 

இந்தியா சுதந்திரம் பெற்று விடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.

அதை விட அவரது மோசமான எண்ணம் அப்படி ஒருவேளை சுயாட்சி தர நேர்ந்தாலும் அல்லது சுதந்திரமே தர நேர்ந்தாலும் இந்தியாவைத் துண்டாடி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளை உருவாக்கித் தீராத தலைவலியை இந்தியாவிற்குத் தந்து விட வேண்டும் என்பது தான்.

 

முதல் எண்ணம் வெற்றி பெறவில்லை.

இரண்டாவது எண்ணம் வெற்றி பெற்று விட்டது.

இந்தியர்களை அயோக்கிய ராஸ்கல்கள் என்று அவர் கூறிய அவரது பிரபலாமான மேற்கோள் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். (இந்தியர்கள் தங்கள் நாட்டை ஆளத் தகுதியற்ற நாள் சீக்கிரம் வரும் என்று அவர் குறிப்பிட்டார்; அது நிறைவேறி விடும் படி நமது அரசியல் கோமாளிகள் நடந்து கொள்வதை வருத்தத்துடன் குறிப்பிட்டு, அது நிறைவேறாமல் இருக்க இளைய தலைமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எழுதியுள்ளேன்)

 

ஆனால் நன்றி கெட்ட சர்ச்சில் தனது உயிரைக் காப்பாற்றிய ஹிந்து-சீக்கிய ஜவான்களின் நாடான இந்தியாவையே பிரிக்கத் திட்டம் போட்டது தான் மன்னிக்க முடியாத செயல்.

சர்ச்சில் தனது சுயசரிதத்தில் அவர் இளம் ராணுவ வீரராக கைபர் கணவாய் அருகே பணியாற்றிய போது நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அவரை முஸ்லீம் பத்தான்கள் சுற்றி வளைத்தனர்.

அவர் உயிர் போகவிருந்த தருணத்தில் அவரது ப்ளாட்டூனில் இருந்த ஹிந்து-சீக்கிய ஜவான்கள் குறுக்கிட்டு அவர் உயிரைக் காப்பாற்றினர். தனது உயிர் காப்பாற்றப்பட்டது ஹிந்து-சீக்கிய ஜவான்களாலேயே என்று அவரே எழுதியுள்ளார்.

 

ஆனால் அவர் பிரதம மந்திரியான போது நடந்த சம்பவங்கள் விசித்திரமானவை. இந்தியாவைப் பிரிப்பதே அவர் நோக்கமாக இருந்தது. 1940 மே 10ஆம் தேதி அவர் பிரிட்டனின் பிரதம மந்திரியாக ஆனார்.

 

முகம்மதலி ஜின்னாவை அவர் ஆதரித்துத் தயார் படுத்தினார்.

ஆனால் இரண்டாவது உலக மகா யுத்தம் எதிர்பாராத விதமாக வந்து பிரிட்டனை அச்சுறுத்தியது.

 

தனது மின்னல் வேகப் படையால் ஹிட்லர் ஒவ்வொரு நாடாக கபளீகரம் செய்து கொண்டு முன்னேறினான்.

 

அவனை மகாத்மா காந்திஜி உள்ளிட்ட அனைவரும் ஆதரிக்கவில்லை. பிரிட்டன் தனக்கு உதவி செய்யுமாறு கெஞ்சி வேண்டிய போது அதற்கு காந்திஜியின் தலைமையில் இந்திய மக்கள் சம்மதித்தனர். ஹிட்லரால் பாதிக்கப்பட்டு இந்தியாவிற்கு ஐரோப்பாவிலிருந்து வரும் யூத அகதிகளுக்குப் புகலிடம் தரவும் இந்திய தேசிய காங்கிரஸ் முன் வந்தது. ஆனால் பிரிட்டன் இதை ஏற்கவில்லை. என்றாலும் ஹிந்து-சீக்கிய மக்கள் சில யூதர்களை இங்கு குடியேறச் செய்தது.

ஆனால் முகம்மதலி ஜின்னாவோ ஹிட்லரின் வருகை பிரமாதமான ஒன்று என்றும் ஹிட்லரை தான் ஆதரிப்பதாகவும் பகிரங்கமாகக் கூறினார்.

 

 

1938 செப்டம்பரில் மூனிச் உடன்படிக்கை ஜனநாயக செக்கோஸ்லேவேகியாவை அழித்த போது ஜின்னா ஹிட்லர் தங்களுக்கு (இந்திய முஸ்லீம்களுக்கு)  உத்வேகம் ஊட்டும் ஒருவர் என்று கூறினார்.

 

பிரிட்டனுக்கு ஆதரவு தந்த காந்திஜிக்கும் இந்திய மக்களுக்கும் துரோகம் இழைத்த சர்ச்சில், பிரிட்டனின் எதிரியான ஹிட்லரை ஆதரித்த ஜின்னாவுக்கு ஆதரவு தந்தார்.

பாகிஸ்தானை உருவாக்குவதில் முனைப்பாக உதவி செய்தார்.

இந்த நீண்ட நெடிய சுதந்திரப் போரில் ஒன்று தான் கிரிப்ஸ் மிஷன். (Cripps Mission) கிரிப்ஸ் லேபர் கட்சி.சர்ச்சிலோ கன்ஸர்வேடிவ் கட்சி.

 

கிரிப்ஸ் இந்திய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் சில திட்டங்களை முன் வைத்தார். சுயாட்சி தரப்படும் என்ற அவரது தேனான திட்டம் பேப்பர் அளவிலேயே இருந்தது. ஆக்கபூர்வமான ஒன்றாக அது இல்லாததால் காந்திஜி உள்ளிட்ட அனைவரும் அந்தத் திட்டத்தை நிராகரித்தனர்.

 

கிரிப்ஸின் மிஷன் தோல்வி அடைந்தது.

இதைத் தான் சர்ச்சில் மிகவும் விரும்பினார்.

கிரிப்ஸின் இந்திய விஜயம் மகத்தான தோல்வியை அடைந்தது என்ற செய்தியைக் கேட்டவுடன் அளவிலா ஆனந்தம் அடைந்த சர்ச்சில் தனது அதிகாரபூர்வமான இல்லமான 10, டவுனிங் தெருவில் தனது இல்லத்தில் இருந்த காபினட் அறையில் டான்ஸ் ஆடினார். அவ்வளவு மகிழ்ச்சி!

இதை பிரிட்டிஷ் எழுத்தாளர் மைக்கேல் எட்வர்டஸ் (Michael Edwardes) எழுதியுள்ளார்.

 

 

அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்ட் இந்தியாவிற்கு உதவப் பெரிதும் விரும்பினார். யுத்தத்திற்கோ அமெரிக்க உதவி சர்ச்சிலுக்குத் தேவையாக இருந்தது. ஆகவே கண் துடைப்பிற்காக யுத்த கால மந்திரி சபை உறுப்பினரான கிரிப்ஸை இந்தியாவிற்கு அனுப்ப சர்ச்சில் சம்மதித்தார்.

இது அமெரிக்க ஜனாதிபதிக்காக – வெறும் கண் துடைப்பிற்காக. ஆனால் அவர் தோற்றவுடன் இந்தியாவை உருப்படாமல் செய்ய வேண்டும் என்ற தன் எண்ணம் பலித்ததற்கு ஆனந்த நடனம் ஆடினார் சர்ச்சில்.

சர்ச்சிலின் குள்ளநரித் தந்திரம் இந்தியாவைப் பிரிக்க வழிவகை செய்தது.

 

 

ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே பாகிஸ்தான் இரண்டு பட்டது – பாகிஸ்தான், பங்களாதேஷாக.

 

இதுவும் போய் அகண்ட பாரதம் உருவாகும் என அரவிந்தர் கூறியுள்ளார். அதைக் காலம் தான் மெய்ப்பிக்கும்!

***

சிரித்துக் கொண்டே பாகிஸ்தான்; சண்டையிட்டு ஹிந்துஸ்தான்! (Post No.5059)

 

Written by S NAGARAJAN

 

Date: 30 MAY 2018

 

Time uploaded in London –  8-16 am  (British Summer Time)

 

Post No. 5059

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சிரித்துக் கொண்டே பாகிஸ்தான்; சண்டையிட்டு ஹிந்துஸ்தான்!

 

ச.நாகராஜன்

 

1

காந்திஜியும் நேருஜியும் தான் கூறிய வார்த்தைகளைத் தவற விட்டதை சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

இந்தக் கட்டுரைக்கு உடனடி விமரிசனமாக திரு நஞ்சப்பா (மெத்தப் படித்த இவரின் விமரிசனக் கருத்துக்கள் அழகானவை; ஆழமானவை; இவர் யார், எந்த ஊர் என்பது எனக்கு இதுவரை தெரியாது) அவர்கள் பதிவிட்ட கருத்துக்கள் மிக்க மதிப்பு வாய்ந்தவை. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.

அதை விமரிசனப் பகுதியில் படிக்கத் தவறிய அன்பர்களுக்காக அதன் முக்கிய பகுதியை அப்படியே இங்கு தருகிறோம்:

 

  1. இரண்டாம் உலகப் போருக்குப்பின் , இங்கிலாந்து இந்தியாவிடம் கடன்பட்டது. இது காலனி ஆதிக்க முறைக்கே எதிர்மறையானது. இதை இங்கிலாந்து ஏற்கவில்லை.
  2. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவின் பாதுகாப்பு பெரிய பொறுப்பையும் செலவையும் இங்கிலாந்தின் மீது சுமத்தியது, இதை ஏற்க இங்கிலாந்து தயாராக இல்லை.

3.நேதாஜியின் இந்திய தேசியப் படையினால் நாட்டில் ஒரு புதிய உத்வேகம் பிறந்தது. ராணுவம், கடற்படை ஆகியவற்றில் இருந்த இந்தியர்கள் புதிய எழுச்சி பெற்றனர். பம்பாயில் கடற்படையினர் Mutiny யில் ஈடு பட்டனர்.ஆங்கில அரசினர் அரண்டுவிட்டனர். இனி இந்திய வீரர்களை அடக்கிவைக்க முடியாது என்ற கருத்து அவர்கள் மனதில் உதித்து நிலைத்தது. இந்தியாவிலிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். இதை பின்னாட்களில் அன்றைய பிரதமராக இருந்த அட்லி பிரபுவே கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் பற்றி ஜின்னா கூறியதை முழுதும் நம்ப முடியாது. ஜின்னாவை சர்ச்சில் மறைமுகமாக தூண்டிவந்தார். பாகிஸ்தான் பற்றி உறுதியாக இருக்குமாறு ஊக்குவித்து வந்தார். இது ஆதாரபூர்வமான விஷயம்.

இந்தியாவில் முஸ்லிம் பிரிவினை உணர்ச்சி வளர காந்தியே காரணமானார். 1857 புரட்சிக்குப் பிறகு இந்திய முஸ்லிம்கள் அடியோடு ஒடுக்கப்பட்டனர். முதல் உலகப் போரின்போது துருக்கிக்கு ஆதரவாக கிலாஃபத் இயக்கத்தை காந்தி ஆதரித்தார். துருக்கியே கைவிட்ட இந்த இயக்கம் இந்திய முஸ்லிம்களை ஒன்றுபடுத்தியது. முஸ்லிம்கள் எந்த நிலையிலும் எந்த நாட்டிலும் பிறருக்கு அடங்கி இருக்கமாட்டார்கள். இது குரானில் உள்ள நிலை. அதனால் பிரிவினை வாதம் முஸ்லிம்களின் அடிப்படை கோரிக்கையாகியது.
[மௌலானா ஆஸாத் போன்ற சிலர் பிரிவினையை ஆதரிக்காதது போல் இருக்கலாம்; ஆனால் இதன் அடிப்படை பிரிவினை வேண்டாம் என்பதல்ல, இந்தியா முழுதுமே முஸ்லிமாக மாறவேண்டும் என்பதே!]

 

காந்திஜியின் அரசியல் வாழ்க்கையை ஊன்றிப் படிப்பவர்கள் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேணும். 1921க்குப் பிறகு காந்திஜியின் எந்தப் போராட்டமும் வெற்றியடையவில்லை! அவர் எதையும் இறுதிவரை முழுமையாக நடத்தவில்லை! ( உப்பு சத்யாக்ரஹம் தனி நபர் போராட்டமாதலால் அது வேறுவிதமானது; ஆனால் அதன்பின் விளைவுகள் கடுமையாக இருந்தன). 1942 ஆகஸ்டு புரட்சியோ, அபத்தத்தின் உச்சம். ‘வெள்ளையனே வெளியேறு ‘ என்ற கோஷத்தைக் கொடுத்தார்; செய் அல்லது செத்து மடி என்றார்.ஆனால் தொண்டர்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்வதற்குமுன் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தலையில்லாத இயக்கம் ஆறு மாதத்திற்குள் முழுதும் ஒடுக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் , இங்கிலாந்து இந்தியாவை விட்டு வெளியேற அவசரமாக முடிவெடுத்தது; அவர்கள் நினைத்தவிட வேகமாகவே மௌன்ட்பேட்டன் செய்துமுடித்தார். இதற்குக் காரணம் காந்திஜியல்ல; இந்தியாவை வைத்திருப்பதால் தமக்கு ஆதாயமில்லை, விரயம் தான் என்பதை ஆங்கிலேயர் நன்கு உணர்ந்ததே ஆகும்.
பிரிவினைக்குப்பின் நடந்த வன்முறைக்கு பிரிவினை மட்டுமே காரணமாகாது.
பஞ்சாப், சிந்து, வங்காளம் ஆகிய பகுதிகளில், ஹிந்து-முஸ்லிம் கலந்து வசித்த பகுதிகளில் எந்த இடம் எப்படிப் பிரியும் என்பதை மவுன்பேட்டன் நிச்சயிக்கவில்லை; நமது தலைவர்களிடமும் கலந்துபேசவில்லை. 1947 ஜூலை மத்திய வாக்கில் [ இந்த விஷயத்தைப் பற்றி ஏதுமே அறிந்திராத ]ஒரு லண்டன் வக்கீலைப் பிடித்து வந்து, ஒரு தனி இடத்தில் அமர்த்தி , தேசப்படத்தைக்கொடுத்து நாட்டைப் பிரிக்கச் சொன்னார், மௌன்ட்பேட்டன். அவரும் படத்தில் பென்சிலால் கோடு போட்டு, ‘இது அங்கே, அது இங்கே’ என்று தன்னிச்சையாக முடிவுசெய்தார். சுதந்திர தினத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னதாக வந்த இந்த வரை படத்தை இரும்பு பீரோவில் வைத்துப் பூட்டினார் மவுன்பேட்டன். ஆக, சுதந்திர தினத்தன்று எந்தப் பகுதி இந்தியா, எந்தப் பகுதி பாகிஸ்தான் என்பது பிரதமர் நேருவுக்கே தெரியாது! மவுன்ட் பேட்டன் பெரிய எம்டனாகி, நேருவை முட்டாளாக்கினார்! இது ஹிந்துக்களையே அதிகம் பாதித்தது. இதை காந்தியோ நேருவோ கண்டுகொள்ள வில்லை. முஸ்லிம்கள் ஏரியாவில் ஹிந்துக்கள் சிக்கிக்கொண்டனர், இதுவே வன்முறையின் வித்து.

 

ஆகஸ்டு புரட்சியைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் 4 ஆண்டுகள் சிறையில் இருந்தனர்.. அவர்களுக்கு தேசியப் போராட்டத்தில் இருந்த ஊக்கம் போய்விட்டது. உடல் நிலை காரணமாக வெளியே வந்த காந்திஜி, ராஜாஜியின் யோஜனைப்படி ஜின்னாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் இதற்காக ஜின்னாவைச் சந்திக்க அவர் இருப்பிடத்திற்கே சென்றார். இந்த முட்டாள் தனமான செய்கை, ஜின்னாவின் மதிப்பை உயர்த்தியதுடன், அவர்தான் முஸ்லிம்களின் ஏகோபித்த பிரதிநிதி என்ற மாயையையும் உருவாக்கியது. இதன்பின் ஜின்னா பிடிகொடுக்கவில்லை. பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது ( காந்தி-ஜின்னா போட்டோவுடன்.)

1926க்குப் பிறகு எந்த இக்கட்டான நிலையிலும், எந்தப் பிரச்சினைக்கும் காந்திஜியால் ஒரு தீர்வோ, உருப்படியான யோசனையோ சொல்ல முடியவில்லை. 1946ல் சிறையிலிருந்து வெளிவந்த தலைவர்களுக்கு, ‘இன்னும் எத்தனை நாள் போராடுவது’ என்ற சலிப்பு உணர்ச்சி ஏற்பட்டது. பதவி யேற்போம் என்ற ஆசையும் தோன்றியது. நேருவும். படேலும் சுமுகமாக இல்லை; இருவருக்கும் காந்திஜியின் மேல் நம்பிக்கை யில்லை. [ அதாவது அவர் ஆக்கபூர்வமாக ஏதாவது சொல்வார் என்ற நம்பிக்கை இல்லை]. இந்த நிலையில் நேரு மவுன்ட் பேட்டனின் வலையில் சிக்கினார். அவர் சொல்வதற்கெல்லாம் சரியென்றார்.
‘பாகிஸ்தான் வேண்டும்’ என்பதில் ஜின்னா உறுதியாக இருந்தார்; பிரிவினை கூடாது என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் உறுதியாக இல்லை.
At that stage, Gandhiji was unfit to command. Nehru & Co were unwilling to obey.

இது தான் நடந்தது. இங்கு சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கும் ஆதாரமாக புத்தகங்களைச் சொல்லமுடியும். ஆனால் பட்டியல் நீண்டுவிடும். காந்திஜி-ராஜாஜியின் பேரரான ராஜ்மோஹன்  காந்தி எழுதிய காந்திஜி, படேல், ராஜாஜி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களிலேயே ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன.\

*

இந்த விமரிசனப் பகுதியைப் படித்த பின்னர் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க பல்வேறு உண்மைகளைத் தரும் புத்தகப் பட்டியலையும் அவர் விமரிசனப் பகுதியில் உடனே பதிவு செய்தார்.

மேலும் விஷயங்களை அறிய விரும்பும் பல அன்பர்கள் இந்தப் புத்தகங்களைப் படிக்கலாம். அவர் தந்த புத்தக விவரங்கள்:

 

I give below a short list of recent books which readily come to mind.

1.Land of the Seven Rivers by Sanjeev Sanyal. Penguin, 2013
Gives details of how the London lawyer divided India!

  1. Indian Summer: by Alex Von Tunzelman. Simon and Schuster, 2008.
Deals with the developments in the summer preceding Independence, esp ecially covers
Mountbatten-Nehru dealings.

3.Churchill’s Secret War: by Madhusree Mukerjee. Basic Books, 2010.
Clearly details how Churchill’s hatred of Hindus affected India during the Second World
War, and how Churchill encouraged Jinnah. This book is well researched.

4.Keeping the Jewel in the Crown: by Walter Reid. Penguin Random House, 2016.
It reveals British secret designs and how they thwarted and outwitted Indian efforts.

  1. History of the Freedom Movement In India : by R.C.Majumdar. It is difficult to find this book
as it has been suppressed by the Nehruvian establishment as it explodes many myths of
Gandhi-Nehru mystique.
  2. Biographies of Gandhiji, Rajaji, and Sardar Patel by Rajmohan Gaandhi. The first two are published by Penguin, and the last one by Navjivan Publishing House, Ahmedabad. These are detailed chronicles, and shed light on many subjects/issues from different standpoints. It makes for painful reading , as we realise how increasingly irrelevant Gandhiji became in the movement, especially towards the closing stages, how Gandhiji’s voice did not count, and even how he failed to find his voice!
  3. Mahatma Gandhi: The Last Phase, by Pyarelal,published by Navjivan, Ahmedabad.
Written by Gandhiji’s secretary, it is a painful chronicle of how Gandhiji struggled on all fronts in the last stages of his movement, how Congress leaders became power-hungry, how they increasingly disregard
ed Gandhiji, and became corrupt. I do not know whether this book is in print.
  4. Gandhi & Churchill by Arthur Herman , Arrow Books, 2008.
This is a voluminous book in small print. Well researched and detailed. It reveals how Churchill’s hatred for Gandhi made him support Jinnah secretly so that Gandhi would not succeed. Churchill supported and encouraged Jinnah even when he was out of office!

Among the British, Lord Wavell , the viceroy before Mountbatten alone appreciated the geographical integrity of India, and held that any division would jeopardise India’s security. But his bosses in London were in no mood to listen to him, and were impatient to drop India like a hot potato and thrust Mountbatten, a proven incompetent fellow as the viceroy to speed up their exit. It is ironical that an empire begun by a vagabond like Robert Clive was ended by one who carried Royal blood! But they destroyed the integrity of India. India is now surrounded by hostile neighbours, created by British malevolence matched, and perhaps exceeded by Indian incompetence.

மேலே கண்ட பகுதிகள் விளக்கமாக இருப்பதால் இதை இன்னும் அதிகமாக விளக்கத் தேவையில்லை.

 

2

உலக வரலாற்றை நன்கு ஊன்றிக் கவனித்தால் முஸ்லீம்கள் அதிரடியாகவோ அல்லது சமாதானமாகவோ வசிக்கச் சென்ற நாடுகளை அவர்கள் ஆக்ரமிப்பதோ அல்லது அங்குள்ளவர்களை மதமாற்றுவதோ வழக்கமாக இருப்பதைக் காணலாம்.

இப்போது பிரிட்டன் இதற்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவோ அரண்டு போய் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, “இங்கு இருக்கப் பிடிக்கவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று அதிரடியாகச் சொல்லி வருகிறது.

ஆயிரம் ஆண்டுகள் முகலாய ஆக்கிரமிப்பைத் தாங்கி, அதை விரிவு படுத்த விடாமல், வேரூன்ற விடாமல் செய்த ஒரே நாடு இந்தியா தான் என்பதை உறுதிபடச் சொல்லலாம்.

தனது உள்ளீடான சக்தியால் இந்து மதம் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் இந்த வெற்றியைத் தக்க வைப்பது ஹிந்துக்கள் கையில் தான் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

3

இனி பிரிவினையின் கதைக்கு வருவோம்.

ஆறு லட்சம் ஹிந்துக்களும் சீக்கியர்களும் அநியாயமாகப் பிரிவினையால் கொல்லப்பட்டனர்.

இவர்களைக் கொன்றவர்கள் முஸ்லீம்களே. இதை நேருஜியோ அல்லது மௌலானா அபுல்கலாம் ஆஜாதோ கண்டுகொள்ளவில்லை.

சில நூறு முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது ஆ, ஊ என்ற பல தலைவர்கள் அலறினர். ஆனால் லட்சக் கணக்கில் ஹிந்துக்களும், சீக்கியர்களும் கொல்லப்பட்ட போது இவர்களின் குரல் ஒலிக்கவில்லை.

இதே பாரம்பரியம் தான் இன்றும் நீடிக்கிறது. இது வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய ஒரு விஷயம்.

பண்டிட் ஜவஹர்லால் நேரு (பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே)

2, செப்டம்பர், 1946இல் பிரதம மந்திரியாக ஆனார்.

அதைத் தக்க வைத்துக் கொள்வது அவரது பிரதான நோக்கமாக இருந்தது.

ஹிந்துக்கள் கொலையைப் பற்றி அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

எது இந்திய எல்லை, எது பாகிஸ்தான் எல்லை என்பதே நேருஜி உட்பட யாருக்குமே தெரியவில்லை.

இப்படியா ஒரு பிரம்மாண்டமான தேசத்தைப் பிரிப்பது?

தேசம் சுதந்திரம் அடைந்த இரு தினங்களுக்குப் பின்னரே நேருஜி எது இந்தியப் பகுதி, எது பாகிஸ்தான் பகுதி என்பதை அறிவித்தார்.

அதற்குள் விஷயம் எல்லை மீறி விட்டது.

இந்தியப் பகுதியில் இருக்கிறோம் என்று நினைத்த ஹிந்துக்களும் சீக்கியர்களும் சந்தோஷமாக இருந்த சமயத்தில் அவர்கள் இருப்பது பாகிஸ்தான் பகுதியில் என்று தெரிய வந்த போது அவர்களை அடித்துக் கொன்று, அவர்களிடமிருந்த சொத்து மற்றும் இதர உடைமைகளை பாகிஸ்தானிய தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

இவர்களைக் காப்பதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை அல்லது எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு முன்பேயே கொலைகள் முடிந்து விட்டன!

என்ன ஒரு கோரம் இது!

இதனால் சந்தோஷப்பட்ட பாகிஸ்தானிய முஸ்லீம்கள்

சிரித்துச் சிரித்து பாகிஸ்தானைப் பெற்றோம் – இனி

சண்டையிட்டு ஹிந்துஸ்தானைப் பெறுவோம்

என்று கோஷமிட்டனர்.

ஹன்ஸ்தே ஹன்ஸ்தே லியே பாகிஸ்தான்

லட்தே லட்தே லேங்கே ஹிந்துஸ்தான்

என்பது அவர்களின் கோஷம்.

4

16, ஆகஸ்ட், 1946இல் கல்கத்தாவில் 5000 ஹிந்துக்களை முஸ்லீம் வெறியர்கள் கொன்றனர்.

இனி அரங்கேறப் போகும் காட்சிகளுக்குக் கட்டியமாக அது அமைந்தது.

பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களைக் கொல்வது, இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை மைனாரிடி உரிமையின் பேரில் பாதுகாப்பது என்ற நிலை உருவான போது காந்திஜிக்கே மிக்க கோபம் வந்தது.

கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களா தேஷ்) அவர்கள் ஹிந்துக்களை கொலை செய்த போது, இந்தியப் பகுதியில் அவர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் அலறி ஓடி வந்து மகாத்மாவின் காலில் விழுந்து பாதுகாப்புக் கேட்டனர்.

காந்திஜியோ, கிழக்கு பாகிஸ்தானில் கொலைகள் நிறுத்தப்படும் வரை நீங்கள் எந்த வித பாதுகாப்பையும் இந்தியாவில் எதிர்பார்க்க முடியாது என்று கண்டிப்பான குரலில் கூறினார்.

அடுத்து நடந்தது ஆச்சரியமான விஷயம்.

தந்திகள் பறந்தன. கிழக்கு பாகிஸ்தானில் கொலைகள் நின்றன!

 

இப்படி பல விசித்திர சம்பவங்களைக் கொண்ட இந்திய – பாகிஸ்தான் பிரிவினை போல உலக சரித்திரத்தில் இன்னொரு சம்பவம் இல்லை என்பது வேதனைக்கும் வியப்புக்கும் உரிய விஷயம்!

 

5

பழைய கதையைக் கிளறுவதால் வெறுப்பு உணர்ச்சி அல்லவா ஏற்படும் என்ற கேள்வி இதைப் படிப்பவர்க்கு எழலாம்.

இன்றைய அவல நிலைக்குக் காரணமே நமது தவறான கொள்கைகளே என்பதைச் சுட்டிக் காட்டவே இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது.

முஸ்லீம்களுக்கு மைனாரிடி உரிமைகள் இங்கு உண்டு; ஏராளமான பதவி சுகங்கள் உண்டு – ராஷ்டிரபதி பதவி உட்பட!

பாகிஸ்தானிலோ ஒரு அரசு பதவியைக் கூட ஒரு ஹிந்து பெற முடியாது!

இது இரட்டை நிலை – டபிள் ஸ்டாண்டர்ட்.

இதற்குக் காரணம் பிரிட்டிஷாரின் நயவஞ்சகத் தந்திரமும், அதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த ஜின்னா உள்ளிட்ட கோஷ்டிகளும், இதை எதிர்க்காமல் ஆமாம் சாமி போட்ட நமது கையாலாகாத ‘செகுலர் தலைவர்களுமே!

சுதந்திரம் பெற்றதில் அனைவருக்கும் சந்தோஷம் ஏற்பட்டது உண்மை தான்; அதை அனைவரும் வரவேற்றனர் என்பதும் உண்மை.

ஏனெனில் பிரிட்டன் என்னும் வஞ்சகக் குள்ளநரியை நாட்டை விட்டு ஓட்டினோம் அல்லவா.

ஆனால் அதற்காக நாம் கொடுத்த விலையும் வாங்கிக் கொண்ட தீராத தொடர் வியாதியும் (மைனாரிடி சலுகைகள்) தவிர்த்திருக்கக் கூடியதோ, என்னவோ!

காலம் தான் பதில் சொல்லும்!

***

காந்திஜி, நேருஜி – தவறிய வார்த்தைகள் (Post No.5053)

Written by S NAGARAJAN

 

Date: 28 MAY 2018

 

Time uploaded in London –  6-46 am  (British Summer Time)

 

Post No. 5053

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சத்திய சோதனை

காந்திஜி, நேருஜி – தவறிய வார்த்தைகள்! – தேசப் பிரிவினையின் சோகமான அம்சம்!

 

ச.நாகராஜன்

 

1

பாரத தேசத்தின் சரித்திரத்தின் 1947இல் நடந்த பிரிவினை சோகமான ஒன்று. தேவையற்ற ஒன்று.

இது பற்றி நமது தேசத்தின் பெரும் தலைவர்களான காந்திஜி, நேருஜி முதலில் தெளிவான கருத்தைக் கொண்டிருந்தார்கள்.

1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி பாரதம் சுதந்திரத்தை அடைந்தது.

பிரிவினையுடன்.

 

 

இதற்கு முன்னர் ஏப்ரல் 1947இல் பண்டிட் ஜவஹர்லால் நேரு

ஒரு பொதுக்கூட்டத்தில் இப்படிப் பேசினார்:

 

“All talk of a partition of India as fantastic nonsense. We shall never agree to it.”

  • Pandit Jawaharlal Nehru, addressing a public meeting in April 1947, two months before he accepted it.

 

இப்படி வீர முழக்கம் செய்த இரண்டே மாதங்களில் அவர் பிரிவினைக்கு ஒத்துக் கொண்டார்!

 

ஹிந்துக்கள் காந்திஜியையும் நேருஜியையும் மலை போல நம்பினார்கள்.

 

ஆனால் நேருஜி வார்த்தை தவறி விட்டார்.

அவர் ஏன் இப்படி தனது வார்த்தையைத் தவற விட்டார்?

அதற்கான காரணத்தை அவரே தெரிவித்துள்ளார்!

Leonard Mosley  என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர். அவர்  ‘The Twilight of the British Raj’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

நேரு தனக்கு அளித்த பேட்டியை அவர் இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

 

அதன் ஒரு பகுதி இது:

 

“I was getting old”, said the fart in effect, and I did not want to engage myself in another struggle and lose my post as Prime minister of India. Partition of the country began to look like a solution to my problems.”

ஆறு வாரங்களில் ஆறு லட்சம் பேர்கள் கொல்லப்பட்டனர் – பிரிவினையால்.

 

தனது பிரதம மந்திரி பதவி போய் விடக்கூடாது, இன்னொரு போராட்டத்திற்குத் தான் தயாராக இல்லை, வயதாகிக் கொண்டே போகிறது என்பது நேருவின் வாயிலிருந்தே வந்த வார்த்தைகள்!

 

 

2

ஜின்னா என்ன நினைத்தார்?

இதை மைக்கேல் எட்வர்டின் புத்தகம் தெரிவிக்கிறது.

Michael Edwardes  எழுதியுள்ள  ‘The Last years of British India’ என்ற புத்தகத்தில் ஜின்னா கூறிய வார்த்தைகள் அப்படியே தரப்பட்டுள்ளது.

“I never thought it would happen. I never expected to see Pakistan in my lifetime.”

ஜின்னாவே எதிர்பார்க்காத பிரிவினை ஏற்பட்டது!

 

3

மகாத்மா காந்திஜி பாகிஸ்தான் உருவாவதைப் பற்றி என்ன சொன்னார்?

“Even if the whole of India burns, we shall not concede Pakistan, even if the Moslem League demanded it at the point of a word.”

மகாத்மா காந்திஜி 1947 மே மாதம் 31ஆம் தேதி இப்படிக் கூறினார்.

 

இதை Michael Edwardes மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

ஆனால் மேயில் கூறிய வார்த்தைகளை உடனேயே அவர் தவற விட்டார். ஆகஸ்ட் பிரிவினை ஏற்பட்டது.

என் உடலின் மீது தான் பிரிவினை ஏற்பட்டால் ஏற்படும் என்ற மகாத்மாவின் கூற்றையும் நாம் அனைவரும் அறிவோம்.

அவர் ஏன் மனம் மாறினார்!

 

 

முப்பது கோடி மக்களின் நம்பிக்கை தெய்வமாக இருந்த அவர் ஏன் தன் வார்த்தையைத் தவற விட்டார்.

ஜவஹர்லால் நேரு தனது பதவி மோகமே தன்னை பிரிவினைக்கு ஒப்புக் கொள்ள வைத்தது என்று கூறி விட்டதாக அறிகிறோம்.

 

ஆனால் மகாத்மா?

அவர் ஏன் வார்த்தையைத் தவறவிட்டார்?

தெரியவில்லை.

 

அவரது சொற்களைத் தான் ஆராய வேண்டும்?

பிரிவினையால் எத்தனை லட்சம் மக்கள் இறந்தனர்.

புதிய எளிதில் தீர்வு காண முடியாத தொடர் பிரச்சினையாக மைனாரிட்டிகளுக்கு (அதிக!) உரிமை என்ற அபத்தமான வாதம் இந்தியத் திருநாட்டை இன்று எந்த நிலைக்குக் கொண்டு தள்ளி இருக்கிறது.

 

வியக்கிறோம்!

சத்தியத்திற்கே சோதனையா?

***

 

குறிப்பு : மிக அருமையான நூலான, Hindu Destiny by Nostradamus  என்ற நூலை ஜி.எஸ். ஹிரண்யப்பா என்பவர் எழுதியுள்ளார். அதை ஆதாரமாகக் கொண்டே இந்தக் கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது. இவரது நூலைப் பற்றியும் இவரைப் பற்றியும் நான் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையை அன்பர்கள் படிக்கலாம்.

 

xxxx

 

 

 

 

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு (Post No.5013)

RANI PADMAVATI; CHITTOOR RANI PADMINI

WRITTEN by London Swaminathan 

 

Date: 15 May 2018

 

Time uploaded in London – 10-23 AM (British Summer Time)

 

Post No. 5013

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

தமிழர்கள் வீரத்துக்குப் பெயர் எடுத்தவர்கள். புற நானூற்றில் காணப்படும் வீரத்தாய் வேத காலம் முதல் இருந்து வருவதை முந்தைய கட்டுரைகளில் மொழிந்தேன். வீர மாதா என்பதே ஸம்ஸ்க்ருதச் சொல். வீரம் என்பதும் ஸம்ஸ்க்ருதமே இதிலிருந்து ஆங்கிலச் சொல் ஹீரோ (VEERA=HERO) வந்தது. நிற்க.

 

இக்கட்டுரையில் யாம் உரைக்க வரும் விஷயம் காஷ்மீரப் புலவன் கல்ஹணன் உரைத்தது தமிழில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருப்பதைக் காட்டுவதாகும்.

 

கல்ஹணன் ராஜ தரங்கிணியில் சொல்கிறான்:

Courage
The heroic think an object attainable by courage, the timid by caution; otherwise between them there could be little difference. Rajatarangkini of Kalhana 6-363

 

துணிந்து செய்தால் எதையும் அடையலாம் என்று வீரன் எண்ணுகிறான்; கோழையோ எதிலும் உஷாராகப் போகவேண்டும், கவனமாகச் செல்ல வேண்டும் அப்பொழுதுதான் நினைத்ததைப் பெறலாம் என்கிறான். இதுதான் வீரனுக்கும் கோழைக்கும் உள்ள வேறுபாடு.

 

இதிலுள்ள தாத்பர்யம் என்ன?

 

துணிந்தவர்களுக்கே உலகம் கிடைக்கும். நின்று நிதானித்து அசைபோட நினைப்பவனை காலம், வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல அடித்துச் சென்றுவிடும். ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த வீர சிவாஜி, தென்னகத்தில் முஸ்லீம்களை வேரறுத்த விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் இத்தகைய வீரர்கள்.

 

பழந்தமிழகத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மாவீரர்களாகத் திகழ்ந்தனர். இதனால் சுமார் 1500 ஆண்டுகளுக்கு தமிழர்கள் ஆட்சி நடந்தது. இது ஒரு சாதனையே! அவர்கள் 1500 ஆண்டுகளுக்குத் தங்களுக்குள் போரிட்டு அழிந்ததும் ஒரு சாதனையே. அதாவது ரிக்கர்ட் புஸ்தகத்தில் (BOOK OF RECORDS)  இடம் பெறும் சாதனை. தமிழ் அரசர்கள் போல நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் உலகில் எவருமிலர்; உட் சண்டை போட்டவர்களும் எவருமிலர். இதற்குக் காரணம் வீரம்.

KITTOOR RANI CHANNAMMA

 

‘துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சு மெத்தை’ என்று எண்ணியதால்தான் வீர் பாண்டிய கட்ட பொம்மன், மருது சஹோதர்ரகள், சுக தேவ், ராஜகுரு, பகத் சிங், தாந்தியா தோபே முதலிய வீர ர்களைக் கண்டது இந்நாடு.

பெண்களும் வாள் எடுத்து போரிட்டதற்கும் இதுவே காரணம்.

ஜான்ஸி ராணி, துர்கா தேவி, ருத்ராம்பாள், ராணி மங்கம்மாள், கங்காதேவி, சம்யுக்தை எனப் பல வீராங்கனைகளைக் காண்கிறோம்.

 

‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ – என்பதை அறிந்து போரிட்டவர்களுக்கே வெற்றி கிட்டியது. அப்படி வெற்றி கிட்டாவிட்டாலும் காலத்தால் அழியாத புகழ் கிடைத்தது. அத்தனை வீர ர்களையும் பட்டியலிடுவது கட்டுரையின் நோக்கம் அன்று. கல்ஹணனின் கருத்து இமயம் முதல் குமரி வரை — குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தில் இருப்பதைக் காட்டவே எழுந்தது இக்கட்டுரை.

 

Death devours lambs as well as sheep

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

RANI LAXMIBHAI

‘க்லைப்யம் மா ஸ்ம கமஹ’ (2-3) (கோழைத்தனத்தை விட்டு எறி) என்று பகவத் கீதையில் கண்ணன் சொல்லும் ஸ்லோகம், ஸ்வாமி விவேகாநந்தருக்கு மிகவும் பிடித்த ஸ்லோகம். வீரனுக்கு உதவாத ஆண்மையின்மை உனக்கு எங்கிருந்து வந்தது? என்று அர்ஜுனனைத் தட்டி எழுப்புகிறான் கிருஷ்ணன். ‘உத்திஷ்ட’ (எழுந்திரு) என்று கட்டளையிடுகிறான்.

 

திரு வள்ளுவன் சொல்கிறான்:

 

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக்கெடும் (குறள் 763)

பொருள்:

பகைவரின் படை ஒரு எலிக்கூட்டம்;  அது எவ்வளவு சப்தம் போட்டு என்ன பயன்? பாம்பு மூச்சுவிட்டாலேயே அவை ஓடிவிடும் (763)

 

கூற்றுடன் மேல்வரினும் கூடிஎதிர் நிற்கும்

ஆற்ற லதுவே படை (765)

 

எமதர்மனே எதிர்த்து வந்தாலும் அஞ்சாமல் நிற்பதுவே படை எனப்படும்

 

கான முயல் எய்த அம்பினில் யானை

பிழைத்த வேல் ஏந்தல் இனிது (772)

 

முயல் மீது வேலை எறிந்து வெற்றி பெறுவதைவிட யானை மீது வேல் எறிந்து தோற்பது மேல். (வாழ்க்கையில் பெரிய குறிக்கோள் இருக்க வேண்டும்; பெரிய வீரனையும் விழுத்தாட்ட முயற்சிக்க வேண்டும்; சின்ன ஆளை அடித்து விட்டு மார் தட்டுதல் வீரம் அன்று.)

 

ஆக, கல்ஹணன் சொன்னதை வள்ளுவனும் அழகாகச் சொல்கிறான். அவனுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னான்.

 

புற நானூற்றில் உள்ள வீரத் தாய் முதலிய எழுச்சி மிகு பாடல்களை வீரத்தாய் பற்றிய என் கட்டுரையில் காண்க.

 

வீரத் தாயும் வீர மாதாவும் | Swami’s Indology Blog

https://swamiindology.blogspot.com/2012/09/blog-post_23.html

இந்தியா ஒரே நாடு! இந்திய சிந்தனை ஒரே சிந்தனை! “செப்பு மொழி …

 

September | 2012 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/09

All posts for the month September, 2012. … வீரத் தாயும் வீர மாதாவும் . … வீரத் தாய், வீர …

 

மேவார் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மேவார்

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) ராஜஸ்தானில், … அவள் ஒரு வீரத்தாய்!

 

–சுபம்–

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 2 (Post No.4848)

Date: MARCH 25, 2018

 

 

Time uploaded in London- 6-32 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4848

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

நகைச்சுவை நடைச்சித்திரம்

 

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 2

 

ச.நாகராஜன்

 

 

T.Q.C.!  T.Q.C.!!

அப்படி என்றால்?

TOATAL QUALITY CONTROL!!!

ஜப்பானின் முன்னேற்றத்திற்குக் காரணம் தரம்!

தரம், தரம்,தரம்.

நிரந்தரம் வேண்டும் தரம்!

ஆஹா, கடைக்கு ஓடினேன்.

அள்ளினேன், அனைத்து டி.க்யூ.சி. புத்தகங்களையும்!

எல்லா ஜப்பானிய வார்த்தைகளையும் கற்றுக் கொண்டு அவ்வப்பொழுது அதை விடுவேன்.

அனைவரும் அசந்து விட்டனர்.

சற்று பயபக்தியுடன் பார்த்தனர்.

ஏதாவது சந்தேகம் என்றால் கூட என்னை வந்து பார்க்க ஆரம்பித்தனர்.

நிர்வாகம் சிந்தித்தது.

அப்போது தான் வந்தது க்யூ.சி.

அதாவது க்வாலிடி சர்க்கிள்.

தர வட்டம்.

தரத்தைக் கொண்டு வர தொழிலாளர்களின் சிறு குழுக்களை அமைத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது தர வட்டத்தின் நோக்கம்.

 

அனைத்து மானேஜர்களுக்கும் தர வட்டம் அமைக்க உத்தரவானது.

எனது தொழிலகத்தில் சுமார் ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.

அதிகமான தர வட்டம் யாருக்குக் கிடைத்தது?

ஊகிக்கவே வேண்டாம், எனக்குத் தான்!

 

மாலை 4 மணி முதல் இரண்டு ஷிப்டு தொழிலாளர்களையும் சந்தித்து இரவு 8 மணி வரை க்ளாஸ் எடுத்து அதற்கு மேல் அலுவலக பெண்டிங் வேலையைக் கவனித்து…

சுமார் 800 மனித மணிகள் (மேன் ஹவர்ஸ்) க்ளாஸ் எடுத்தேன்.

பாரடோ சார்ட் என்பது முக்கியம்.

சார், பரோடா கிடைக்குமா சார்!

 

பரோடா இல்லை, பாரடோ சார்ட்.

அதன் மூலம் உடனடியாக ஒரு பிரச்சினையை இனம் கண்டு தீர்த்து விடலாம்.

 

சார், அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஃபிஷ் போன் டயாகிராம் வரைய வேண்டும்.

சார், ஃபிஷ் என்ன ஃபிஷ் சார்? தருவார்களா, சார்!

அதில்லை, அப்படி ஒரு படம்.

வைடல் ஃபியூ, ட் ரிவியல் மெனி. (VITAL FEW TRIVIAL MANY)

அதாவது முக்கியமான காரணம் சில தான். குட்டி குட்டி வேண்டாத காரணங்கள் பல.

 

சார், புரியவில்லை.

உங்கள் வீட்டில் உள்ள ஒரு பிரச்சினையைச் சொல்லுங்கள்.

சார், பையன் படிக்கவே மாட்டேன் என்கிறான்.

சரி, அதற்கான காரணத்தை படத்தில் வரைவோம்.

ஏராளமான காரணங்களை படத்தில் ஏற்றினோம்.

வைடல் காரணம்,பணம் இல்லை!

அதை எப்படி சார் கொண்டு வருவது?

அவசரம் அவசரமாக க்ளாஸை முடித்தேன்.

தர வட்ட மாஸ்டர் ஆனதால் எல்லோரும் என்னை மதிப்புடன் பார்த்தனர். தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டனர்.

 

அதற்குள் நிர்வாகம் அதிரடியாக உத்தரவைப் போட்டது.

ஜஸ்ட் இன் டைம்! JUST IN TIME – JIT

ஜே ஐ டி வந்து விட்டதால் அந்தந்த சாமானை அன்றன்று வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டாக் என்ற பேச்சே இருக்கக் கூடாது.

ஜப்பானில் அப்படியே மூலப் பொருள்கள் லாரி லாரியாக வருகிறதாம். அது லைன் அசெம்பிளிக்கு நேராகப் போய் வண்டியாக – மோட்டார் சைக்கிளாக, காராக மாறுகிறதாம்!

சரி, ஜே ஐ டி வாழ்க.

 

 

ஆனால், துரதிர்ஷ்டம் ஆங்காங்கே வண்டிகள் முடியாமல் அலங்கோலமாக அரைகுறையாக நின்றன.

பல ஆண்டு வாடிக்கையாளர்கள் திகைத்தனர். என்ன சார், இது?

நிர்வாகம் அலறியது.

உடனடி மீட்டிங்!

 

 

லாரி ஸ்டிரைக், ஆகவே பல பொருள்கள் வரவில்லை.

வந்ததில் ஒரு ஷீட் உடைந்து விட்டது.

கூடவும் வாங்கக் கூடாது, அன்றன்று வந்து சேர்வது போல ஆர்டர் செய்ய வேண்டும்!

சப்ளை மானேஜர் அழுதார்.

வேண்டாம், ஜஸ்ட் இன் டைம்.

 

 

இனி அட்வான்ஸ்ட் ப்ளானிங் செய்யுங்கள்.

அப்பாடா, மள மளவென்று வண்டிகள் முடிந்தன.

அடுத்தாற் போல வந்தது – ஃப்ளெக்ஸிபிள் மானுபாக்சரிங் சிஸ்டம்! FLEXIBLE MANUFACTURING SYSTEM!

அதாவது எல்லா அசெம்பிளி பார்ட்டுகளும் நெகிழ்வாக இணைய வேண்டும்.

 

ஓடு, ஒரு கோர்ஸுக்கு.

ஓடினோம்.

என்ன செய்யலாம்?

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கஸ்டம் பில்ட் வண்டி நம்முடையது. அதில் இது ஒத்து வருமா?

 

முட்டி மோதி, வாடிக்கையாளர்களிடம் கேட்டது ஒண்ணு, தர்றது ஒண்ணு என்று வசவு வாங்கி, முழித்துக் கொண்டோம்.

அப்போது தான் எனக்கு வந்தது அபாயம்!

தேர்ந்தெடுத்த டாப் மானேஜர்கள் சுமார் நூறு பேரைக் கொண்ட ஒரு கூட்டம் மாதாமாதம் எங்கள் குழுமத்தில் நடக்கும்.

அதில் நான் புது டெக்னிக்கைப் பற்றிப் பேச வேண்டும்.

எனக்கு வந்தது – ரீ எஞ்சினியரிங்.

 

 

அதாவது இருக்கும் ஆதார வளத்தைக் கொண்டு போட்டியாளர்களை முந்திச் செல்வதோடு அவர்கள் நம்மை எளிதில் அணுகாதவாறு ஒரு தடையையும் ஏற்படுத்த வேண்டும்.

நூறு பேர்களும் புத்திசாலிகள். கேள்வி நேரத்தில் கொத்திக் கொத்தி குலை உயிரும் குற்றுயிருமாக ஆக்கி விடுவார்கள்.

தைரியமாக எனது பேப்பரை தயார் செய்தேன்.

கேள்விகளை குதர்க்கமாக நானே தயார் செய்து அதற்கு நகைச்சுவையுடன் கூடிய பதில்களைத் தயாரித்து முன்னதாகவே வைத்துக் கொண்டேன்.

 

வெற்றி, மாபெரும் வெற்றி.

இதற்கு நடுவில் ஐ ஆம் ஓகே, யூ ஆர் ஓகே வேறு.

I AM OK, YOU ARE OK!!!

 

பார்ப்பவர்கள் எல்லாம் ஐ ஆம் ஓகே, ஆர் யூ ஓகே என்று கேட்டுத் திரிந்தோம்.

 

அடுத்து வந்தது ஆடோ கேட்! கம்ப்யூட்டர் மானுபாக்சரிங்!

ஓடுங்கள், கம்ப்யூட்டர் கோர்ஸுக்கு. படியுங்கள் ஆட்டொ கேட்!

ஆக, இப்படியாக பல்லாண்டுகள் ஓடி விட்டன.

அடுத்தடுத்து ஒரு அலை!

 

கடைசியாக ஒரு முடிவுக்கு வர முடிந்தது.

புத்தியை உபயோகித்து, நிர்வாகத் தலைமையை அனுசரித்து, வாடிக்கையாளர்களின் தேவையை ப்ளான் செய்து அதைப் பூர்த்தி செய்வதே நமது இந்திய சூழ்நிலைக்கு உகந்தது.

ஆஹா, அருமையான ஞானோதயம் சார்!

 

 

ஆனால் அதற்குள் ரிடையர்மெண்ட் வந்து விட்டது.

இருந்தாலும் சொல்கிறேன். ஓடுகின்ற உலகத்தோடு ஓடுங்கள்.நீங்கள் நின்றால் தேக்கம். ஓடினால் சர்வைவல். அதிக ஸ்பீடுடன் ஓடினால் களைப்பீர்கள் அல்லது மற்றவரிடம் திட்டு வாங்குவீர்கள்!

 

 

ஓடுங்கள், சார், ஓடுங்கள்! உலகத்தோடு ஓடுங்கள்!!!

எனது ரிடையர்மெண்ட் காலத்தில் உங்களை வேடிக்கை பார்க்கிறேன்!

****

முற்றும்

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! (Post No.4845)

Date: MARCH 24, 2018

 

 

Time uploaded in London- 6-16 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4845

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நகைச்சுவை நடைச்சித்திரம்

 

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 1

 

ச.நாகராஜன்

 

நிர்வாகம் என்ன எதிர் பார்க்கிறது என்பதை எல்லா மேனேஜர்களும் அறிவது அவசியம் என்பதன் அடிப்படையில் எங்கள் அனைவருக்கும் புரிய வந்தது  தாரக மந்திரமான ஒரே வார்த்தை என்பது தான்!

 

எஃபிஸியன்ஸி – EFFICIENCY

ஆம், அது தான் வேண்டும்!

 

உடனடியாக ஒரு நண்பரைப் பார்க்கப் போனேன்.

அவர் நான் போனவுடன் ஒரு புத்தகத்தை ஓரமாக ஒளித்து வைத்துக் கொண்டார்.

 

எட்டிப் பார்த்தேன். ஊஹூம், ஒன்றும் தெரியவில்லை.

என்ன புத்தகம் என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று மழுப்பி விட்டார். மண்டை குடைந்தது! என்ன புத்தகம்?!

 

எஃபிஸியன்ஸி பற்றிப் பேசி விட்டுக் கிளம்பினேன்.

எங்கும் இதே தான் பேச்சு என்றார்.

அடுத்த நாளும் அவர் ரூமுக்குச் சென்றேன் – தேவையில்லாவிட்டாலும் கூட!

அவர் ஒரு நிமிடம் என்று பாத்ரூமுக்குச் சென்ற போது புத்தகங்களைக் குடைந்தேன்.ஆஹா, கிடைத்தது அவர் படித்த புத்தகம்.

 

ஒன்று டேல் கார்னீகி எழுதிய ‘ஹௌ டு வின் ஃப்ரண்ட்ஸ் அண்ட் இன்ஃப்ளூயன்ஸ் பீபிள்’ இன்னொன்று நெப்போலியன் ஹில் எழுதியது – தி சக்ஸஸ்.

 

ஆஹா, வந்த காரியம் முடிந்தது.

குட்டி அரட்டையுடன் அங்கிருந்து கிளம்பினேன்.

டேல் கார்னீகி புத்தகத்தை முதலில் வாங்கினேன்.

அட்டை டு அட்டை படித்தேன். அற்புதம்.குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.

 

என்ன கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்று நண்பர்களே கேட்டு விட்டனர்.

 

எஃபிஸியன்ஸி.

ஆனால் இது ரொம்ப நாள் ஓடவில்லை.

இன்னும் அதிக எஃபிஸியன்ஸி தேவையாம்.

ஓடினேன் கடைக்கு. நெப்போலியன் ஹில்லின் புத்தகத்தை வாங்கினேன். அடடா,சக்ஸஸ் ஃபார்முலா, எப்படித் தருகிறார்!

ஆழ்மனதை உபயோகியுங்கள்.

 

சரி, உபயோகிக்கிறேன்.

 

எல்லா டெக்னிக்கையும் அத்துபடி செய்து கொண்டு அலுவலகத்தில் ஆழ்மன எக்ஸ்பர்ட் போல நடந்தேன்.

சற்று விசித்திரமாக என்னப் பார்த்தார்கள்!

எல்லாம் ஆழ் மனம் பார்த்துக் கொள்ளும்!

இல்லை என்றது நிர்வாகம்.

சோம்பி இருக்கிறீர்களே!

 

வாருங்கள், தெரிந்து கொள்ளுங்கள் எம்.பி.ஓ -ஐ என்றது!

M.B.O.?!

 

MANAGEMENT BY OBJECTIVE!

ஆஹா, குறிக்கோளின்றிக் கெட்டேனே என்று அப்பர் பிரான் சும்மாவா பாடினார்?

 

இலக்கு என்ன?

எழுதி எழுதி நிர்வாகத்தின் குறிக்கோளை நோக்கி நடை பயில ஆரம்பித்தோம்.

 

அடடா, அதற்கு வந்தது அல்பாயுசு!

ஒரு நிமிடத்தில் ஒரு மேனேஜர் எல்லாவற்றையும் முடிக்க வேண்டுமாம்.

 

எப்படி ஐயா சாத்தியம் அது?!

ஒரு மேனேஜர் இருக்கிறார், அவர் டேபிளில் பேப்பரே கிடையாது. க்ளீன்! அவர் மாதிரி ஆகு!

யார் ஐயா அவர்? வியப்புடன் கேட்டேன்.

ஒன் மினட் மேனேஜர்!

ONE MINUTE MANAGER!

ஓடினேன் கடைக்கு!

சார், ஒன் மினட் மேனேஜர் புக் கொடுங்கள்.

சார், ஒரு சீரிஸே இருக்கிறது.

எல்லாவற்றையும் கொடுங்கள்.

 

இரவு முழுவதும் ஒன் மினட் மேனேஜர் ஆக ஐந்து மணி நேரம் – 300 நிமிடங்கள் செலவழித்தேன்.

டேபிளை க்ளினாக வைத்ததன் பலன், “அவருக்கு வேலையே இல்லை போல இருக்கிறது.இன்னும் கொஞ்சம் லோடை ஏற்றுங்கள்” என்று நிர்வாகம் கூற நான் முழி பிதுங்கி ‘ஙே’ என்று ஆனேன்.

 

ஒன் மினட்டைக் கழட்டி விட்டேன்.

மானேஜர்களுக்கு ஆரோக்கியம் தான் முக்கியம். ஓடுங்கள் ஒரு கோர்ஸுக்கு என்று துரத்தவே ஆரோக்கிய கோர்ஸுக்கு ஓடினேன்.

 

ஒரு நாள் முழுவதும் கேள்விகளால் துளைத்தனர்.

கடைசியில் கோர்ஸ் முடிய இன்னும் முப்பது நிமிடமே இருக்கும் சமயம் அரிய ஆரோக்கிய ரகசியத்தை அருளினர்.

இரு கைகளையும் விரல்களால் நன்கு மூடித் திறக்க வேண்டும்.

இதனால் ரத்தம் சீராக உடலில் பாயும்.

சீராக ரத்தம் பாய்ந்தால் ஆரோக்கியம் மேம்படும்.மன நலம் உயரும்!

 

அடடா, ஆரோக்கிய ரகசியத்தைக் கேட்டு அனைவரும் அலுவலகம் திரும்பினோம்.

வந்தது பாருங்கள், ஒரு ஜப்பானிய அலை!

அதில் மூழ்கியவன் பல ஆண்டுகளுக்கு அம்பேல் ஆகிப் போனேன்.

 

அது என்ன ஜப்பானிய அலை என்கிறீர்களா?

உலகின் டாப் நிறுவனங்களான டொயோடோ, சுஸுகி ஆகியவை மற்ற மேலை நாடுகளை விட அதிகம் உற்பத்தித் திறன் கொண்டுள்ளது.

 

அதன் டெக்னிக்குகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.

நிர்வாகத்தின் உத்தரவால் எல்லோரும் ஜப்பான் வாழ்க என்று கோஷம் போட்டோம்!

 

டசாடா இஷ்கு, குமுட்டி பஷ்கோ,கஸ்வாகி ..

என்ன, குழம்புகிறீர்களா?

 

பழைய ஜப்பானிய வார்த்தைகள் மனதில் நிழலாட ஒரு நிமிடம் குழப்பமாகி விட்டது.

 

வாருங்கள், ஜப்பானிய அலையில் மிதப்போம்.

 

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஒடுங்கள் – வெற்றி பெற என்பதல்லவா நமது தாரக மந்திரம்!

 

அடுத்த கட்டுரையுடன் முடியும்

***

 

Rare Letters of Netaji, நேதாஜியின் அரிய கடிதங்கள்- Post No.4780

நேதாஜியின் அரிய கடிதங்கள் ( IN ENGLISH AND TAMIL)- Post No.4780

 

Date: 24 FEBRUARY 2018

Time uploaded in London- 7-38 am

Compiled by London swaminathan

Post No. 4780

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் (1897- 1945??) அரிய கடிதங்கள் எட்டும், அவர் கைப்பட எழுதிய நாட்குறிப்புகளும் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் பிரம்மச்சாரி கைலாசம் என்பவரால் வெளியிடப்பட்டது. இந்தக் கடிதங்களை பிரம்மச்சாரி கைலாசத்துக்கு நேதாஜி எழுதினார். அடித்தல், திருத்தல் இல்லாத அவரது எழுத்துகளும், போர் முனையில் கூடத் தெளிவான அவரது சிந்தனையும் கடிதங்களின் மதிப்பை உயர்த்துகின்றன. ஒவ்வொரு முறையும் சுவாமிஜிக்கு அவர் பணிவான வணக்கங்களைத் தெரிவிப்பது அவரது பணிவைக் காட்டுகிறது. மணிப்பூரில் மழை காரணமாக தோல்வி ஏற்பட்டபோதும் அவரது வெற்றி வேட்கையும் நம்பிக்கையும் கொஞ்சமும் குறையவில்லை என்பதை இந்தப் புத்தகத்தில் உள்ள எட்டுக் கடிதங்களும் காட்டுகின்றன. பிரிட்டிஷ் லைப்ரரியில் (லண்டன்) இந்த அரிய, சிறிய நூல் உள்ளது. காப்பிரைட் விதிகள் காரணமாக முழுப் புத்தகத்தையும் வெளியிடவில்லை.

 

 

 

 

 

 

 

Jai Hind

 

–Subahm–