தமிழில் ஒட்டக மர்மம்!- PART 1 (Post No.5290)

RESEARCH ARTICLE Written by London swaminathan

Date: 5 August 2018

 

Time uploaded in London – 14-03  (British Summer Time)

 

Post No. 5290

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஒட்டக ஆராய்ச்சியில் வரும் விஷயங்கள்

 

ரிக்வேதத்தில் ஒட்டகம்

பாணினியின் இலக்கண நூலில் ஒட்டகம்

பைபிளில் ஒட்டகம்

சங்க இலக்கியத்தில் ஒட்டகம்

தொல்காப்பியத்தில் ஒட்டகம்

சிலப்பதிகாரத்தில் ஒட்டகம்??

காளிதாசனில் ஒட்டகம்

ஸம்ஸ்க்ருதக் கதை  நூல்களில் ஒட்டகம்

அமர கோஷத்தில் ஒட்டகம்

மஹாபாரதத்தில் ஒட்டகம்

மனு ஸ்ம்ருதியில் ஒட்டகம்

சிந்து சமவெளியில் ஒட்டகம்

அகராதி, நிகண்டுக்களில் ஒட்டகம்

ஒட்டக வாஹனம்

எனது முடிபு

 

கட்டுரை இரண்டு பகுதிகளாக வருகின்றது; இதோ முதல் பகுதி:-

சங்க இலக்கியத்தில் சிறுபாணாற்றுப் படையிலும் அக நானூற்றிலும், ஒட்டகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஒட்டகம் என்பது பாலைவன மிருகம். மேலும் உஷ் ட் ர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே இப்படி ஒட்டை, ஒட்டகம் என்று மருவியது.

 

சிறுபாணாற்றுப்படை சங்க காலத்தின் முடிவில் தோன்றிய நூல். ஆகவே பொது ஆண்டு 300 முதல் 400-க்குள் இருக்கலாம். பிற்கால இலக்கியத்திலும் கூட ஒட்டகம் பற்றிய குறிப்புகள் சிலவே.

 

பனி நீர்ப்படுவின் பட்டினம் படரின்

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன

வீங்கு திரை கொணர்ந்த விரைமர விறகின்

1153-155 சிறு பாணாற்றுப்படை

 

பொருள்

கடல் நீர் அலைகள் எயிற்பாட்டினக் கரையில் அகில் கட்டைகளைக் கொண்டுவந்து ஒதுக்கின. அக்கட்டைகள் ஒட்டகம் உறங்குவது போலக் காட்சி தந்தன.

 

 

தொல்காப்பியத்தில் ஒட்டகம் வருகிறது

 

சூத்திரம் 1517

‘ஒட்டகம் அவற்றொடு ஒருவழி நிலையும்………………….’

ஒட்டகத்தின் குட்டியையும் கன்று எனலாம்

 

சூத்திரம் 1552

‘ஒட்டகம், குதிரை, கழுதை, மரை இவை

பெட்டை என்னும் பெயர்க் கொடைக்கு உரிய’

ஒட்டகம், குதிரை, கழுதை, மரைமான் ஆகியவற்றின் பெண்பால்- பெட்டை என்ற பெயர் பெறும். அதாவது ஒட்டகப் பெட்டை என்றால் அது பெண் ஒட்டகம்.

 

ஆக தொல்காப்பியர் காலத்திலேயே ‘உஷ்ட்ற’ என்பது தமிழில் ஒட்டகம் ஆகிவிட்டது.

XXX

 

அகநானூற்றில் ஒட்டகம்

முள் தின்றதா? எலும்பு தின்றதா?

 

அகநானூற்றில் மருதன் இளநாகனார் பாடிய பாடலில்

“குறும்பொறை உணங்கும் ததர் வெள் என்பு

கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்

கல்நெடுங் கவலைய கானம் நீந்தி,

அம்மா அரிவை ஒழிய– அகம்.245

 

இந்த வரிகளின் பொருள்

 

பாறையில் உதிர்ந்து கிடக்கும் இலவ மலர்கள் காய்ந்து எலும்புகள் போலக் காட்சி தரும். அவைகளை ஒட்டகங்கள் சாப்பிட்டுப் பசியைத் தீர்த்துக்கொள்ளும்.

 

இந்தப் பாடல் வரிகளை ஒட்டகம் எலும்பு சாப்பிட்டதாக் கொண்டோரும் உண்டு. ஆனால் ஒட்டகங்கள் சாக பட்சினிகள்; அவை எலும்பு தின்னாது.

 

ஆக எலும்பு போலக் காய்ந்த பூக்கள் அல்லது பூக்களைத் தாங்கிய , காய்ந்த சுள்ளிகள் என்றே கொள்ளல் வேண்டும்.

அகநானூறு, சிறுபாணாற்றுப் படை, தொல்காப்பியம் ஆகியவற்றில் ஒட்டகம் வருவதால் அக்காலத்தில் பாலைவனப் பகுதி மிருகமான ஒட்டகம் தமிழகம் வந்தது என்று கொள்ளவேண்டும். இல்லாவிடில் அதற்குத் தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியர் இடம் தந்திருக்க மாட்டார்!

XXXX

 

கோவேறுக் கழுதையில் கோவலன்

 

சிலப்பதிகாரத்தில் கோவலன் அத்திரி மீது சவாரி செய்ததாக ஒரு செய்தி உண்டு; அத்திரி என்றால் கழுதை, ஒட்டகம் என்று இரு பொருள் உண்டு. கோவலன் போன்ற பெரிய வணிகன் கழுதை மேல் சவாரி செய்தான் என்பதை விட ஒட்டகத்தின் மீது சென்றான் என்று பொருள் கொள்வது பொருந்தும்

 

பூம்புகாரில் பௌர்ணமி நாளன்று நடந்தது என்ன?

 

வான வண்கையன் அத்திரி ஏற

மான் அமர் நோக்கியும் வையம் ஏறிக்

கோடி பல அடுக்கிய கொழிநிதிக் குப்பை………………………

 

–கடலாடு காதை, சிலப்பதிகாரம்

 

பொருள்

வானத்து மழைபோல வழங்கும் கைகளை உடைய கோவலன், கோவேறுக் கழுதையின் மீது ஏறிக்கொண்டான்; மான் போன்ற பார்வையுடைய மாதவி மூடு வண்டியில் ஏறிக்கொண்டாள்; கோடிக் கணக்கான பொருள் உடைய வணிகரின் மாட வீதிகளைக் கடந்து சென்றனர்.

 

இதில் அத்திரி என்பதைக் கழுதை என்று உரைகாரர்கள் வியாக்கியானம் செய்த போதும் அத்திரி என்பதற்கு ஒட்டகம் என்றும் பொருள் உண்டு. ஆக கோவலன் ஒட்டகம் மீது ஏறிக் கடலாடச் சென்றான் என்றும் பொருள் சொல்ல முடியும்.

 

மதுரையில் ஒட்டக பவனி

 

மதுரை மீனாட்சி கோவிலில் சுவாமியும் அம்மனும் பவனி வருகையில் ஒட்டகம் யானை டமாரம் (முரசு) ஏந்திய மாடு முதலில் பவனி வரும் அவைகளுக்குப் பின்னர் சுந்தரேசரும் மீனாட்சி அம்மனும் பவனி வருவர்.

 

எருது ஒட்டகம், எருமை ஆகியவற்றுக்கும் திமில் இருந்தாலும் திமில் உள்ள மிருகம் என்றால் அது ஒட்டகத்தையே குறிக்கும். மாடு, ஆடு ஆகியவற்றுக்குக் கொம்புகள் இருந்தாலும் கொம்பு மிருகம் என்றால் அது காண்டா மிருகத்தையே குறிப்பது போல!

 

அகராதி, நிகண்டுக்களில்

ஒட்டகத்தின் தமிழ் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்

ஒட்டகம், ஒட்டை, அத்திரி, இரவணம், கனகதம், தாசோகம், நெடுங்கழுத்தன், உஷ் ட் ர,  க்ரமேல (இதிலிருந்து கேமல் CAMEL என்ற ஆங்கிலச் சொல் வந்தது; அராபிய மொழியில் கமல், கமலா என்று இருப்பதால்  அங்கிருந்தும் ஸம்ஸ்க்ருத்ததுக்கு வந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது.)

 

அமர கோசம் என்னும் புகழ் பெற்ற ஸம்ஸ்க்ருத நிகண்டில்

பெண் ஒட்டகத்துக்கு உஷ்ட்ரி கா (ம்ருத்தாண்டே) என்ற பெயர் உள்ளது

க்ரமேல, மய, மஹாங்காஹா, கரபஹ, தீர்க்கக்ரீவ, த்விகுடஹ, சரபஹ என்ற பெயர்கள் உள்ளன.

தமிழில் தாசேரம், நெடுங்கோணி, அயவனம், கூன்புறம் என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இவைகளில் பெரும்பாலானவை ஸம்ஸ்க்ருதப் பெயர்களே!

குட்டியாக இருந்தால்

கரபாஹா, ஸ்யுஹு, ஸ்ருல்லகா, தாரவைஹி, பாத பந்தனைஹி என்றும் உள்ளது.

 

TO BE CONTINUED………………………….

 

–SUBHAM–

சுற்றுப்புறம் காக்க வழிமுறைகள்! – 1 (Post No.5289)

 

Picture from Sevabharati.

Written by S NAGARAJAN

Date: 5 August 2018

 

Time uploaded in London – 6-40 AM  (British Summer Time)

 

Post No. 5289

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சென்னை வானொலி நிலையம் 21-7-18 முதல் 31-7-18 முடிய தினமும் காலை ஒலி பரப்பிய சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் ஐந்தாவது உரை

 

சுற்றுப்புறம் காக்க தனிமனிதனின் வழிமுறைகள்! – 1

 

சுற்றுப்புறச் சூழலைக் காப்பதும் சட்டம் இயற்றுவதும் அரசின் கடமை என்று எண்ணாமல் ஒவ்வொரு தனி  மனிதனும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க முன் வரவேண்டும்.

அரசு இயற்றும் சட்டங்களை பின்பற்றுவதுடன் கூட மற்றவர்களையும் சட்டங்களை மதித்து நடக்க உத்வேகமூட்ட வேண்டும்.

இது தவிர பல்வேறு வழிகளால் ஒவ்வொரு தனி மனிதனும் சுற்றுப்புறச் சூழலைக் காக்க முடியும்.

எடுத்துக் காட்டாக சிலவற்றை இங்கே கூற முடியும் :

ஷவரிலோ அல்லது குழாயிலிருந்து வரும் நீரிலோ நெடுநேரம் குளிக்காமல் தண்ணீரை வீணாக்காமல் தேவையான அளவு நீரில் குளித்தால் நீரைச் சேமிக்க முடியும்.

 

ஷேவிங் செய்யும் போதோ அல்லது பல் துலக்கும் போதோ குழாய்த்தொட்டியில் இருக்கும் குழாயை திறந்து விடாமல் மூடி வைக்க வேண்டும்.தேவைப்படும் போது நீரை எடுத்தாலே போதுமே!

ஒழுகுகின்ற குழாய்களை உடனடியாக ரிப்பேர் செய்து சரிவர பராமரிக்க வேண்டும். சிறுதுளி பெரு வெள்ளம் என்பதை அனைவரும் அறிவோம்.

வீட்டிலேயே நீரை மறுசுழற்சிக்கு உள்ளாக்க முடியும். தோட்டம், மாடியில் செடிகள் வளர்ப்பு உள்ளிட்டவற்றிற்கு சரியான நீரை சரியான அளவில் கொண்டு செல்ல வழி வகுக்க வேண்டும்.

சுத்தம் செய்வதற்கு எப்போதுமே அதிக அளவில் நீரைப் பயன்படுத்த வேண்டாம். தேவையான இடத்தில் பேகிங் சோடா, வினிகர் ஆகியவற்றைப் பயன்படுத்தி நீரைச் சேமிக்கலாம்.

நீரைச் சேமித்தல் மிக மிக இன்றியமையாதது. ஏனெனில் நீர் வரும் ஆதாரங்களிலிருந்தோ அல்லது நதிகளிலிருந்தோ ஒவ்வொருவரின் இல்லத்திற்கும் நீரைக் கொண்டுவருவதற்கான ஆற்றல் அளப்பரியது. அதற்கு ஆகும் செலவும் அதிகம்.

சார்ஜர்களை ப்ளக்கில் எப்போதும் போட்டு வைக்காமல் பயன்பாட்டில் இல்லாத நேரத்தில் அகற்றி விட வேண்டும்.

வீ ட்டில் உள்ள விளக்குகளை எப்பொழுதும் எரிய விடாமல் தேவையான நேரத்திம் மட்டுமே எரிய விட வேண்டும்.

பயன்பாட்டில் இல்லாத கம்ப்யூட்டர்கள், லேப் டாப்கள், மொபைல் போன்கள் ஆகியவற்றை உரிய முறையில் மின்சார இணைப்பிலிருந்து அகற்றி விட வேண்டும்

குண்டு பல்புகளை அகற்றி விட்டு காம்பாக்ட் ஃப்ளோரெஸண்ட் பல்புகளைப் (compact fluorescent bulbs) பொருத்த வேண்டும்.

வாகனப் பயன்பாட்டைக் குறைக்க பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம் அல்லது கார் பூல் எனப்படும் பல பேர் இணைந்து ஒரு காரில் செல்லும் முறைப்படி செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். இதனால் எரிபொருள் சேமிக்கப்படும், பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும். தனித்தனியாக காரை ஓட்டும் போது ஏற்படும் களைப்பு அறவே இருக்காது. பல பேர் அமர்ந்திருக்க ஒருவர் மட்டுமே ஓட்டுவதால் இந்த நன்மை ஏற்படும்.

இப்படிச் சிந்தித்தால் ஏராளமான வழிகளை நாமே முன்மாதிரியாக இருந்து அமைத்துக் காட்ட முடியும்!

***

 

அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்! (Post No.5270)

Written by S NAGARAJAN

 

Date: 30 JULY 2018

 

Time uploaded in London –   68-49 am (British Summer Time)

 

Post No. 5270

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சென்னை வானொலி நிலையம் ஏ அலை வரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலை 6.55 மணிக்கு சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய ஒலிபரப்பில் இடம் பெற்ற மூன்றாவது கட்டுரை!

அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்!

நவீன் தொழில்நுட்பம் வளர்ந்து உலகமே சுருங்கி விட்ட நிலையில் மனிதகுலத்தின் வளர்ச்சியை மட்டுமே மனிதர்கள் எண்ணாமல் உலகளாவிய பல்லுயிர் சமுதாயத்தில் தாங்களும் ஒரு அங்கமே என்று எண்ணி செயல்பட வேண்டும்.

 

பூமியில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களில் மனித இனமும் ஒன்று என்ற எண்ணத்துடன் மிருக இனங்கள், பறவை இனங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றைக் காத்து அவற்றுடன் இணக்கமாக வாழ்ந்து சுற்றுப்புறச் சூழலை சிறப்பாகப் பேணிக் காக்க வேண்டியது மனிதனின் கடமை.

 

ஆனால் இன்றைய நிலையில் தேனிக்கள் மற்றும் சிட்டுக்குருவியிலிருந்து பல உயிரினங்கள் வேகமாக அழிந்து பட்டு வருகின்றன. பல்வேறு உயிர்களும் ஒன்றுடன் ஒன்று இணக்கமாக வாழ்ந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும்.

 

சீதோஷ்ண நிலை மாறுதல், கடல் மட்டம் உயர்தல், விண்கற்கள் மோதுதல், மனித ஜனத்தொகை வெகு வேகமாக அதிகரித்து வருதல், சுற்றுப்புறச் சூழ்நிலை கேடு, உலகம் வெப்பமயமாதல், அரிய உயிரினங்களை வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பல மிருக, பறவையினங்கள் அருகி வருகின்றன.

 

இயற்கை சீற்றங்களினாலும் இப்படிப்பட்ட உயிரினங்கள் சில சமயம் அழிந்து பட்டாலும் மனிதனின் செயல்பாடுகளே இவை பெருமளவு அழியக் காரணம் என்பது வெளிப்படையான உண்மை.

 

பழைய காலத்தை விட நூறு மடங்கு அதிகமாக இவை அழிகின்றன என்பது வருத்தமூட்டும் ஒரு உண்மை. இது இன்னும் பத்து மடங்கு அதிகமாகும் என்பது நிபுணர்களின் கருத்து.

 

இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் வாழும் பெங்குயின்கள் வேகமாக அழிந்து வருகின்றன. உலகம் வெப்பமயமாதலும், நீரின் உஷ்ணநிலை நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும் உணவுக்கு வழியின்றி இவை தவிக்கின்றன

 

அடுத்து இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் வாழும் டுனா (BigeyeTuna) வகை மீன்கள் அருகி வருகின்றன. இவை வணிக ரீதியில் விற்கப்படுபவை. இவற்றைத் தொடர்ந்து வேட்டையாடிப் பிடிப்பதால் இவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. கடலின் சுற்றுப்புறச் சூழலுக்கு இன்றியமையாத இந்த மீன்கள் அருகி வருவது சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் கேட்டை விளைவிக்கும்.

 

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இந்தியாவின் வட பகுதியிலும் நேப்பாளத்திலும் காணப்படும் அரிய வகை மிருகம். இவற்றை வேட்டையாடுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவை வசிக்கும் பகுதிகளில் சுற்றுப்புறச்சூழல் சமச்சீருடன் இருக்க இவையே காரணமாகும். இவை மறைந்தால் பல உயிரினங்களும் சேர்ந்து மறையும்.

 

கலபாகாஸ் தீவில் காணப்படும் பெரிய ஆமை, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான்,சிலி ஆகிய நாடுகளின் கடற்புரங்களில் வாழும் பெரிய வெள்ளைச் சுறா உள்ளிட்டவை அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் மிகவும் அருகி வருகின்றன.

 

ஆர்க்டிக் பகுதிகளில் வாழும் துருவக் கரடிகள் உலகம் வெப்பமயமாகும் அபாயத்தால் அழிந்து வருகின்றன. இவற்றைத் தொடர்ந்து வேட்டையாடுவது தடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் இவற்றைப் பார்ப்பது இயலாது. ஆப்பிரிக்காவிற்கே பெருமை தேடித் தரும் ஆப்பிரிக்க யானைகள் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனிதர்கள் காட்டுப் பகுதியை குடியிருப்பாக ஆக்குவதாலும், வேட்டையாடுவதாலும் இவற்றின் எண்ணிக்கை வேகமாக  குறைந்து வருகிறது.

 

இந்த அரிய உயிரினங்களை மனித இனம் பாதுகாத்தால் மட்டுமே அவை அழியாமல் இருக்கும்; அத்துடன் சுற்றுப்புறச் சூழல் சிறப்பானதாகவும் அமையும்.

***

நவீன யுகத்தின் பொல்லாத அசுரன்கள்! (Post No.5267)

Written by S NAGARAJAN

 

Date: 29 JULY 2018

 

Time uploaded in London –   6-18 am (British Summer Time)

 

Post No. 5267

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நடைச்சித்திரம்

நவீன யுகத்தின் பொல்லாத அசுரன்கள்!

 

ச.நாகராஜன்

 

த்வாபர யுகத்தில் கம்ஸன், மற்ற யுகங்களில் வெவ்வேறு அசுரன்கள் இருந்ததைப் பற்றி புராணங்கள் வாயிலாகக் கேள்விப் பட்டிருக்கிறோம்.

 

நவீன விஞ்ஞான யுகத்தில் மனித குலத்தைக் கெடுக்கும் பொல்லாத அசுரன்கள் உண்டா என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டு அதற்கான பதிலையும் ஒருவாறு கண்டுபிடித்து விடலாம்.

 

சில அசுரன்களை இங்கு கோடி காட்டி விட்டால் பாக்கி அசுரன்களை நீங்களே பட்டியிலிட மாட்டீர்களா என்ன?

 

மொபைலாசுரன் : அடடா, இவன் இல்லாத இடமே இல்லை. அந்தஸ்து, மதம், பால், நாடு, மொழி என்று பார்க்காமல் எல்லோரிடமும் புகுந்தவன் இவன். பிச்சைக்காரி கையிலும் இருப்பான், பெரிய மந்திரி கையிலும் இருப்பான். ஒரு வேடிக்கை என்னவென்றால் ரோடில் போகும் போது சிரித்துக் கொண்டே போகும் பெண்களைப் பார்த்திருக்கிறீர்களா? இவர்கள் பைத்தியமா என்று எண்ணினால் எண்ணியவர்கள் தான் பைத்தியங்கள். மார்புக்குள் சொருகி வைத்திருக்கும் மைக் மூலமாக யாருடனாவது பேசிக் கொண்டே போவார்கள். காதில் மறைத்து வைத்திருக்கும் சிறிய பட்டன் மூலம் கேட்க வேண்டியதைக் கேட்பார்கள். இதில் என்ன சங்கடம் உனக்கு என்று கேள்வி கேட்போர்கள் தயவு செய்து சாலையைச் சிறிது நேரம் கண்காணிக்க வேண்டும். கார், ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு போவோர்கள் முன்னால் அலட்சியமாக நடப்பார்கள் இவர்கள்.

சற்று அஜாக்கிரதையாக இருந்தால் பெரும் விபத்து தான் ஏற்படும். மேடு பள்ளங்களைக் கவனிக்காமல் பேசிக் கொண்டே விழுபவர்கள் ஏராளம். காரில் டிரைவ் செய்து கொண்டு போனில் பேசிக் கொண்டே காரை மெதுவாக ஓட்டுவோரால் பின்னால் வருபவர்கள் படும் பாடு பெரும் பாடு! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆக இந்த மொபைலாசுரன் மனித குலத்தின் நண்பன் போல வந்து கெடுதலைச் செய்யும் அசுரன்.

 

 

இண்டர்நெட்டாசுரன் : இவன் இன்று புகாத நகர் இல்லை. ஆரம்பத்தில் யுகத்தில் புரட்சி செய்ய வந்தவன் போல அவதாரம் எடுத்தான். இன்றோ தகாத காரியங்கள் செய்வோருக்கும் உதவும் மோசமான அசுரன் ஆகி விட்டான்.

 

மெயிலாசுரன் : காலையிலிருந்து இரவு வரை வரும் ஸ்பாம்கள், தேவையற்ற ஊடுருவல் விளம்பரங்கள், இன்ன பிற வேண்டாத செய்திகளால் விரயமாகும் மனித மணிகள் எத்தனை கோடியோ, யாருக்குத் தெரியும்.

ப்ளாக்காசுரன்: இந்த நவீன யுகத்தில் எல்லோரும் டாக்டர்கள். எல்லோரும் விஞ்ஞானிகள்.எல்லோரும் ஜோதிடர்கள். எல்லோரும் எழுத்தாளர்கள். அவரவர் தனக்குத் தெரிந்தவற்றை அல்லது மற்றவர் மீது திணிக்க விரும்புவனவற்றை ப்ளாக்குகள் மூலம் வெளியிடும் காலம் இது. இதற்குத் துணை ப்ளாக்காசுரன். (எழுத்து அல்லது கருத்து )திருட்டை வளர்க்கும் ப்ளாக்குகள் ஏராளம்! சற்று அசந்தால் இந்த அசுரனிடம் அகப்பட்டு பல தொல்லைகளுக்கு உள்ளாவோர் ஏராளம்.

 

 

வாட்ஸாப்பாசுரன் : நல்லதை உடனடியாகப் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்த வாட்ஸ் ஆப்பை அசுரனாக மாற்றியவர்களைப் பற்றி என்னத்தைச் சொல்ல?! இன்று பல வம்புமடங்களின் தொகுதியாக அமைவது இது தான்! பல குடும்பங்களில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கும் இந்த அசுரனே காரணம்.

 

லெகோசுரன் : சிறுவர்களுக்கான விளையாட்டு லெகோ. அதில் இருக்கும் சின்ன சின்ன பீஸ்களால் ஏராளமான துன்பங்கள். சிறுவர்களுக்கு கிரியேடிவிடி வேண்டும் தான்! ஆனால் இவ்வளவு சிறிய பாகங்களாலும் அதை மென்மேலும் வாங்க வேண்டிய தேவையை உண்டு பண்ணுவதாலும் பல குடும்பங்கள் படும் அவஸ்தை தனியாக எழுதப்படவேண்டிய ஒன்று.

பொகேமானாசுரன் : போகேமான் வியாதி தனி. இவனிடம் மாட்டிக் கொண்ட சிறுவர்களின் கதி அதோகதி தான்.

சிறுவர்களுக்காக டெவலப் செய்யப்பட்ட ஒரு ஆப்  தண்டவாளத்திலெல்லாம் சிறுவர்களைத் தேட வைக்கச் செய்தது; மாடியிலிருந்து குதிக்க வைத்தது. அதன் பெயரைச் சொல்வது கூட பாவம் என்பதால் அதன் பெயரை இங்கு சுட்டிக் காட்டவில்லை.

 

 

மொபைல் போனில் வீடியோக்களை பார்த்துக் கொண்டே போவது தான் இன்றைய போக்கு. கண்டக்டரைப் பார்த்து ஏன் எனது ஸ்டாப் வந்ததைச் சொல்லவில்லை என்று ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்ப்பவர் கேட்க, அதை அப்போதே கத்தினேனே, காதில் கேட்காமல் வீடியோவைப் பார்த்துக் கொண்டே இருந்தீர்களே என்றார் கண்டக்டர். அசடு வழிய அவர் இறங்கிப் போனார். நல்ல வேளை இரண்டு ஸ்டாப் கடந்து வந்த தூரத்திற்கான எக்ஸ்ட்ரா டிக்கட் சார்ஜை கேட்காமல் விட்டாரே என்று நினைத்துக் கொண்டேன். 35 பேர் செல்லும் ஏசி பஸ்ஸில் மூன்று பேர் மட்டும் வீடியோ காட்சிகளை மொபைலில் பார்க்கவில்லை. டிரைவர்,கண்டக்டர்,அடியேன்!

நல்ல சாதனங்களை உடனடியாக தேவையற்ற வழிகளில் பயன்படுத்தி அவற்றை அசுரனாக்குவது நாம் தான்!

அமைதியாக உட்கார்ந்து எண்ணிப் பார்த்தால் இவை வரமா சாபமா என்பது புரியும்!

இது போன்ற எண்ணற்ற அசுரன்கள் இல்லாத வாழ்க்கை இன்று இல்லை.

 

தேவையான அளவு தேவையான விஷயத்திற்கு நவீன கண்டுபிடிப்புகளை உபயோகப்படுத்தினால் அவற்றிற்கு நாம் எஜமானர். இல்லையேல் அவை நமக்கு எஜமானர்கள்.

 

*** SUBHAM *****

மலைக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி (Post No.5261)

Picture shows plastic recycling in Kolkata.

 

Written by S NAGARAJAN

 

Date: 27 JULY 2018

 

Time uploaded in London –   7-15 am (British Summer Time)

 

Post No. 5261

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பப்படும் உரைகளில் இரண்டாவது உரை கீழே தரப்படுகிறது.

 

மலைக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி பற்றிய தகவல்கள்!

அமெரிக்க விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வறிக்கை நம்மை திடுக்கிட வைக்கும் ஒன்றாக அமைகிறது. உலகெங்கும் இதுவரை தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் எவ்வளவு என்பதை ஆராய்ந்து நிர்ணயிக்கப் புகுந்த அவர்கள் அது 8.3 பில்லியன் டன்கள் என்ற மலைக்க வைக்கும் எண்ணைக் கூறியுள்ளனர்.

ஒரு பில்லியன் என்றால் அது நூறு கோடியைக் குறிக்கும். ஆக 830 கோடி டன் பிளாஸ்டிக்கை கடந்த 65 ஆண்டுகளில் நாம் உற்பத்தி செய்திருக்கிறோம்.

இந்த 8.3 பில்லியன் டன்கள் என்பது 25000 எம்பயர் ஸ்டேட் பில்டிங்கைப் போல கனமானது. அல்லது நூறு கோடி யானைகளின் எடைக்குச் சமமானது.

ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பிளாஸ்டிக் பொருள்களை நாம் மிக குறுகிய காலமே பயன்படுத்துகிறோம், பின்னர் தூக்கி எறிந்து விடுகிறோம்.

இவற்றில் 70 சதவிகித பிளாஸ்டிக்  குப்பைகளாக நீரோடைகளிலும் , கடற்கரை உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளிலும், கடலிலும் தூக்கி எறியப்படுகின்றன.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாண்டா பார்பாரா (Santa Barbara) தனது சகாக்களுடன் செய்த ஆய்வை ஸயின்ஸ் அட்வான்ஸஸ் (Science Advances) என்ற இதழில் வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய அளவில் மிகப் பெரிதாக நடத்தப்பட்ட ஆய்வு என்பதால் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது. உலகில் இதுவரை எவ்வளவு பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, அது எந்தெந்த வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எங்கு இறுதியில் தூக்கி எறியப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இந்தச் சுவையான ஆய்வறிக்கை தருகிறது.

இதன்படி 83000 லட்சம் பிளாஸ்டிக் மூலப் பொருள் இதுவரை உற்பத்தியாகியுள்ளது.

இதில் பாதியளவு கடந்த 13 ஆண்டுகளில் தான்  உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதில் 30 சதவிகிதப் பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களில் 9 சதவிகிதம் மட்டுமே மறு சுழற்சி செய்யப்பட்டுள்ளது. 79 சதவிகிதம் நிலப்பரப்புகளில் எறியப்பட்டுள்ளது. பாக்கிங் செய்யப்படும் பொருள்கள் ஒரு வருடத்திற்குள்ளாகவே பயன்படுத்தப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. நீண்ட காலம் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் என கட்டுமானத்திலும் இயந்திரங்களிலும் பயன்படுத்தப்பட்டவற்றைக் கூறலாம்.

இதே போக்கு நீடிக்குமானால் 2050ஆண்டு வாக்கில் 1200 கோடி பிளாஸ்டிக் பொருள்களின் கழிவை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் என்று பார்த்தால் 2014ஆம் ஆண்டில் ஐரோப்பா 30 சதவிகிதமும் சீனா 25 சதவிகிதமும் அமெரிக்கா 9 சதவிகிதமும் பங்களிப்பைத் தந்துள்ளது.

இந்த அபாயகரமான போக்கை கவனித்து வரும் விஞ்ஞானிகள் நமது பூமியை பிளானட் பிளாஸ்டிக் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறுகின்றனர்.

ஆக பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிரித்து பூமியை பிளானட் எர்த் என்று அழைக்கும் நிலையை ஏற்படுத்துவோமாக!

***

 

 

வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 1 (Post No.5259)

Written by S NAGARAJAN

 

Date: 26 JULY 2018

 

Time uploaded in London –   8-19 am (British Summer Time)

 

Post No. 5259

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 27-7-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்தொன்றாம்) கட்டுரை

வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 1

ச.நாகராஜன்

 

எப்போதும் பரபரப்பாக இருப்பது, ஐ ஆம் ஆல்வேஸ் பிஸி ( I always busy) என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பது – இப்படிப்பட்ட நபர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இவர்களில் பெரும்பாலும் வெற்றி பெற்றவர்களை நீங்கள் பார்க்க முடியாது.

இவர்கள் சும்மா இருப்பதன் சுகத்தை அறிந்தவர்கள் இல்லை; குறிக்கோளுடன் சும்மா இருப்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வெற்றிக்கலை என்பது உண்மையே.

 

 

இதை விளக்கும் முதலைக் கதை ஒன்றைப் பார்ப்போம்.

 

வெள்ளமெனப் புரண்டோடும் பெரிய நதியின் கரையில் ஒரு வயதான முதலை சும்மா இருந்தது. குட்டி முதலை அதைப் பார்த்தது. அதனிடம் சென்று துள்ளிக் குதித்தவாறே கேட்டது:

“நீங்கள் தான் அபாரமான வேட்டைக்காரர் என்று அனைவரும் சொல்லக் கேட்கிறேன். நதியின் அடி வரை சென்று ஜாலங்கள் செய்வீர்களாமே. உங்கள் வித்தைகளை எனக்குச் சற்றுச் சொல்லித் தாருங்களேன்.”

 

 

நெடுநேரம் தூங்கி விழித்த பெரிய முதலை தன் கண்களில் ஒன்றின் மூலம் ஓரக் கண்ணால் குட்டியைப் பார்த்தது; எதுவும் பேசவில்லை. பின்னர் நீரின் மேல் இருந்தவாறே மீண்டும் தூங்க ஆரம்பித்தது.

குட்டி முதலைக்கோ ஏமாற்றம். நதியில் வேகமாக நீந்தியது. ஒரு குட்டி மீனைக் கவ்விப் பிடித்தது. ‘ஹஹ’ என்று சிரித்த அது, “அதற்குக் காட்டுகிறேன்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது.

 

சற்று நேரம் கழித்து குட்டி முதலை பெரிய முதலையிடம் வந்தது. அதுவோ அரைத் தூக்கத்தில் இருந்தது.

“பார்த்தீர்களா, என் சாமர்த்தியத்தை. இரண்டு கொழு கொழு மீன்களை நான் பிடித்து விட்டேன். நீங்கள் எதைப் பிடித்தீர்கள்.

ஒன்றுமில்லை! நீங்கள் ஒன்றும் செய்வதில்லை! மற்றவர்கள் சொல்வது போல நீங்கள் ஒன்றும் தீவிர வேட்டைக்காரன் இல்லை.”

 

 

பெரிய முதலை குட்டியைப் பார்த்தது. ஒன்றும் சொல்லவில்லை.

கண்களை மூடியது. நீரில் மிதந்தவாறே சும்மா இருந்தது.

குட்டி முதலைக்கு தன்னை அலட்சியம் செய்யும் பெரிய முதலையின் மீது கோபம் கோபமாக வந்தது. நேராக நதியை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டுச் சென்றது.

 

இந்த தடவை அதற்கு நல்ல வேட்டை தான். ஒரு பெரிய கொக்கு சிக்கியது. அதைத் தன் தாடையில் பிடித்துக் கவ்வியவாறே பெரிய முதலை அருகே வந்தது.

 

“இப்போது சொல்லுங்கள். யார் சிறந்த வேட்டையாடுபவர் என்று!”

குட்டி முதலையின் எகத்தாளத்தை பெரிய முதலை கண்டு கொள்ளவே இல்லை,

 

 

குட்டி முதலை சற்று திரும்பியது. பெரிய முதலை இன்னும் நதியின் ஓரத்திலேயே நீரில் மிதந்து கொண்டிருந்தது.

திடீரென்று அப்போது அது நிகழ்ந்தது.

 

 

ஒரு வகை மானினத்தைச் சேர்ந்த கொழுகொழுவென்று இருந்த மான்களில் பெரிய மான் ஒன்று நதிக்கரையில் நீர் அருந்த வந்தது. முதலையின் தலை அருகே அது நீருக்காகக் குனிந்தது.

ஒரு மின்னல்வெட்டு நேரத்தில் பெரிய முதலை பறந்தது. நீரிலிருந்து ஆகாயத்தில் எழும்பி மானின் குரல்வளையைப் பிடித்தது. நீரில் இழுத்துக் கொண்டது!

 

 

க்ஷண நேரத்தில் நடந்த இந்தக் காட்சியைப் பார்த்த குட்டி முதலை நடுநடுங்கிப் போனது. தனது வாயில் இருந்த ஐந்து பவுண்டு கொக்கு எங்கே? “பெரியவரின்” வாயில் பிடிபட்டிருக்கும் ஐநூறு பவுண்டு மான் எங்கே?

 

அதற்கு பேச வரவில்லை. நாக்குழறியவாறே பெரிய முதலையை பயபக்தியுடன் பார்த்துக் கேட்டது:” வந்து .. வந்து..தயவு செய்து சொல்லுங்களேன். நீங்கள் என்ன செய்தீர்கள்?”

வாயில் இருந்த பிடியை விடாமல் பெரிய முதலை இப்போது தான பேசியது. அது சொன்னது: “நான் ஒன்றும் செய்யவில்லை!”

 

கதையைப் புரிந்து கொண்டவர்கள் வெற்றிக்கான உத்தியைப் புரிந்து கொண்டிருப்பார்கள்.

 

 

பரபரப்பாக எதையாவது செய்து கொண்டிருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. எது பொருள் பொதிந்ததோ, எதைச் செய்தால் வெற்றி கிட்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

அதற்காகச் சும்மா இருப்பது ஒரு சிறந்த உத்தி!

வெற்றியை அடைவதற்காக எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்றால் அது தவறு. அப்படிப்பட பிஸினெஸ் (busyness) தேவையில்லை.

 

அதற்குப் பதில் சும்மா இருந்து கொழுகொழு மானைப் பிடிப்பதே மேலானது. ஆனால் இந்த சமூகமோ எதையாவது செய்து பிஸியாக இருப்பவனைத் தான் வியப்புடன் பார்க்கிறது. அடடா, என்ன சுறுசுறுப்பு என்று புகழ்கிறது.

 

 

கி.மு. 435இல் ஹோமர் வாழ்ந்தார். அவர் லோட்டஸ்-ஈட்டர்ஸ் – தாமரைகளை உண்போர் – பற்றி ஒடிஸியில் எழுதினார். அந்த இனம் சற்று விசித்திரமான இனம். நாள்முழுவதும் மெதுவாக தாமரைப் பழங்களைத் தின்னும் மக்கள் கூட்டத்தைக் கொண்ட இனம் அது. அந்த மக்கள் திருப்தியுடன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். ஹோமர் அந்த இனத்தை உன்னிப்பாக ஆராய்ந்து அவர்கள், தாமரைகளைத் தின்றதால் அது போலவே – திருப்தியுடனும், எப்போதும் நன்கு ஓய்வுடனும், சற்று சோம்பல் உடையவர்களாகவும் இருந்தனர் என்கிறார்.

 

 

தனது படைவீரர்களும் அவர்களைப் பார்த்து தாமரைகளைத் தின்ன ஆரம்பித்து விடுவார்களோ என்று பயந்த ஒடிஸிஸ் தனது கப்பலை உடனடியாகத் திருப்பிப் பயணிக்குமாறு ஆணையிட்டான். இதை ஹோமர் வர்ணிக்கிறார்!

வேகமான யுகத்தில் சற்று நிதானியுங்கள். குறிக்கோளை மனதில் வைத்து நிறைய நேரம் சிந்தியுங்கள். சமயம் வரும் போது மின்னல் வெட்டு நேரத்தில் – ஆக் ஷன் நேரத்தில் – செயல்பட்டு காரியத்தில் வெற்றி பெறுங்கள்.

 

 

இன்று மிகப் பெரிய வெற்றி பெற்றவர்கள் இப்படிப்பட்ட “சும்மா இருக்கும்” டெக்னிக்கைத் தான் – உத்தியைத் தான் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

உதாரணமாக – ? சிலரை அடுத்துப் பார்ப்போம்.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஃபிரிட்ஜ் ஸ்விகி (Fritz Zwicky 1898-1947) ஒரு வானவியல் விஞ்ஞானி. அவர் கலிபோர்னியாவிற்கு வந்து அங்கேயே படித்துப் பின்னர் பேராசிரியராகவும் ஆனார்.

அவரது பழக்க வழக்கங்கள் சற்று விசித்திரமாக இருக்கும்.

மவுண்ட் பாலோமர் ஆப்ஸர்வேடரியில் மிகப் பெரிய 200 அங்குல ஹேல் டெலஸ்கோப் நிறுவப்பட்டிருந்தது.

அந்த டெலஸ்கோப் மூலம் பூமிக்கு அருகில் வரும் அதிவேக விண்வெளிப் பொருள்களைக் கண்காணிப்பது வழக்கம். டெலஸ்கோப் வேகமாகச் சுழல வேண்டும். அதே சமயம் பொருள்களைச் சரியாகக் கண்காணிக்க வேண்டும். இது சவாலான ஒரு விஷயம்.

அந்த டெலஸ்கோப் எப்படி வேகமாகச் செல்லும் பொருள்களைத் துல்லியமாகக் கண்காணிக்கும் என்பதை நிர்ணயிக்க  ஃபிரிட்ஜ் ஸ்விகி எண்ணினார். இதற்காக ஒரு விசித்திரமான வழியை அவர் கையாண்டார்.

தனது உதவியாளரான பென் ட்ராக்ஸ்லரை அவர் ஒருநாள் இரவு அழைத்தார். இருவரும் சேர்ந்து பல துப்பாக்கிக் குண்டுகளை வானத்தை நோக்கிச் சுட்டனர். ஸ்விகி டெலஸ்கோப் வழியே அந்த குண்டுகளை செல்லும் பாதையைக் கண்காணித்தார். சோதனை வெற்றி பெற்றதா என்பது யாருக்கும் தெரியாவிட்டாலும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட விஞ்ஞானி என்று அவர் பிரபலமாகி விட்டார்.

உயர்ந்த லட்சியத்தை நோக்கி நடை போடுவதை ‘ஷீட்டிங் தி ஸ்டார்ஸ் (shooting the stars) என்று சொல்வது வழக்கம்.

 அவர் நிஜமாகவே நட்சத்திரங்களை நோக்கிச் சுட்டு விட்டார் என்று அனைவரும் பேசிக் கொண்டனர்.

ஆனால் இப்படிப்பட்ட விசித்திரமான சிந்தனையே  சூபர்நோவா பற்றிய ஆய்வில் அவர் பெற்ற வெற்றிக்குக் காரணமானது. முதலில் சாதாரணமாக எண்ணப்பட்டாலும் பின்னால் அவரது ஆராய்ச்சித் திறன் அனைவராலும் பாராட்டப்பட்டது!

***

 

பாட்டில் குடிநீரில் பிளாஸ்டிக் துகள் அபாயம்! (Post No.5257)

Written by S NAGARAJAN

 

Date: 25 JULY 2018

 

Time uploaded in London –   16-04 (British Summer Time)

 

Post No. 5257

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் இடம் பெறும் உரைகளில் முதலாவது உரை கீழே தரப்படுகிறது.

 

பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் பிளாஸ்டிக் துகள்களின் அபாயம்!

ச.நாகராஜன்

 

நமது உடல் 60 சதவிகித நீரைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. உடலில் உள்ள திரவங்களை சமனப்படுத்துவது, ஜீரணத்திற்கு உதவுவது, உடல் உஷ்ணநிலையைச் சீராக வைத்திருப்பது உள்ளிட்ட ஏராளமான பயன்களை நாம் அருந்தும் நீரே தருகிறது.

 

 

இன்றைய நாட்களில் பயணத்தின் போதும், வெளியிடங்களுக்குச் சாதாரணமாகச் செல்லும் போதும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை எடுத்துச் செல்வது வாடிக்கையாக இருக்கிறது.

 

 

இவை சுத்திகரிக்கப்பட்டவை என்ற எண்ணத்துடன் எடுத்துச் செல்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இதில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதாக இதைப் பயன்படுத்துவோர் உலக சுகாதார நிறுவனம் எனப்படும் World Health Organization இடம் தெரிவித்துள்ளனர்.

 

 

இதைப் பற்றி அக்கறை கொண்ட உலக சுகாதார நிறுவனம், பாட்டிலில் அடைத்து விநியோகிக்கப்படும் குடி நீரில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கும் அபாயம் பற்றி ஒரு மதிப்பீட்டைச் செய்யப் பணித்திருக்கிறது.

 

 

மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் கலந்து உட்கொள்கையில் உடலில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை அது ஆய்வு செய்ய முடிவெடுத்திருக்கிறது.

 

வாழ்நாள் முழுவதும் இப்படிப்பட்ட பாட்டில் நீரை அருந்தி வருவதால் ஏதேனும் தீய விளைவுகள் ஏற்படுமா என்பதை ஆராய்வது அவசியம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் குடிநீர் சுத்தம் பற்றிய ஒருங்கிணைப்பாளரான ப்ரூஸ் கார்டன் (Bruce Gordon) கூறியுள்ளார்.

பிளாஸ்டிக்கில் உள்ள நச்சுப்பொருள்கள் எந்த அளவுக்கு தீமை பயக்கும், உடலுக்கென்று ஒரு பாதுகாப்பு அளவு இருந்தாலும் கூட இப்படிப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் எந்த அளவுக்கு அபாயகரமானவை என்பது அறிவது அவசியம் என்பது நிபுணர்களின் கருத்து.

 

உலக சுகாதார நிறுவனம் 9 நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 11 வெவ்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் 250 பாட்டில்களில் ஆய்வைச் செய்துள்ளது.

இந்தச் சோதனைகள் அனைத்தும் ஸ்டேட் யுனிவர்ஸிடி ஆஃப்  நியூயார்க்கில் நடத்தப்பட்டுள்ளன.

 

ஆய்வின் முடிவில் ஒரு லிட்டர் குடிநீரில் சராசரியாக 10 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மிக நுண்ணிய துகள்கள் பிளாஸ்டிக் என்று கருதப்படுபவை ஒரு லிட்டருக்கு சராசரியாக 314 இருக்கிறது.

 

உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளுடன் இந்த நுண்ணிய துகள்கள் வெளியேற வாய்ப்பு உண்டென்றாலும் பிளாஸ்டிக், சிதைவுறாத அபாயகரமான மாசு என்பது குறிப்பிடத்தக்கது  காய்ச்சி ஆறிய நீர் எப்போதுமே நலம் பயக்கும் என்ற பண்டைய பழக்கம் இன்று அர்த்தமுள்ளதாக ஆகிறதல்லவா!

 

***

சுற்றுப்புறம் காப்போம்; எதிர்கால சந்ததியினரைக் காப்போம்!

 

நவீ ன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 2 (Post No.5248)

Written by S NAGARAJAN

 

Date: 23 JULY 2018

 

Time uploaded in London –   7-26  AM (British Summer Time)

 

Post No. 5248

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 20-7-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபதாம்) கட்டுரை

செயற்கை அறிவுடன் கூடிய நவீ ன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 2

ச.நாகராஜன்

 

செயற்கை அறிவால் என்ன பயன் என்று கேட்போருக்கு ஒரு சுவையான செய்தி உண்டு!

 

நடிலஸ் (Nautilus) என்ற செயற்கை அறிவூட்டப்பட்ட சூப்பர் கணினி தான் ஒஸாமா பின் லேடன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க உதவியது. உண்மை. அதற்குள் பத்து கோடி செய்திகளும் கட்டுரைகளும் பதிவு செய்யப்பட்டன. அது ஆராய ஆரம்பித்து ஒஸாமா பின் லேடன் ஒளிந்திருக்கும் இடத்தை 125 மைல் தூரத்திற்குள்ளாக இருப்பதாக அறிவித்தது.

 

 

லேரி பிர்ன்பாம் (Larry Birnbaum)என்ற பேராசிரியர் ஒரு கட்டுரையை கணினியில் செலுத்தினார். அது படித்தது. பின்னர் ஏராளமான செய்திகளை அதனுள் செலுத்த அது தானே ஒரு கட்டுரையை எழுதியது. கதைகளையும் அது எழுத ஆரம்பித்தது. ஆக எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இனி பலத்த போட்டி உண்டு.

இன்னொரு அச்சுறுத்தும் செய்தி! ரொபாட்டுகள் தன்னைத் தானே ரிப்பேர் செய்து புதுப்பித்துக் கொள்ளும். ஆம், உண்மை. ஆறு கால்கள் கொண்ட ஒரு ரொபாட்டின் இரு கால்கள் பழுதடைந்தன. அது பார்த்தது, தன்னைத் தானே ஆராய ஆரம்பித்தது. 13000 இயக்கங்களை அலசி ஆராய்ந்து சீர் தூக்கிப் பார்த்து தனது இரு கால்களை இயங்க வைக்கும் முறையைக் கண்டுபிடித்து “ஆரோக்கியமானது. எதிர்காலத்தில் அப்படியானால் சாவே இல்லாத சிரஞ்சீவி கம்ப்யூட்டர்கள் உருவாகிவிடுமோ என்ற பயமும் ஏற்படுகிறதல்லவா?

 

இனி இன்னும் ஒரு செய்தி இருக்கிறது, அதை ஏன் விட்டு வைக்க வேண்டும். ரொபாட்டுகளுடன் மனிதன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடியும் என்கிறார் ரொபாட் இயல் நிபுணர்  ஒருவர்.

 

ஆக இவற்றை உயரத் தூக்கி வைக்கவும் முடியாது, ஒதுக்கி வைக்கவும் முடியாது என்பதே இன்றைய நிலை!

 

 

நடிலஸ் (Nautilus)

 

சிந்திக்கும் இயந்திரங்களைப் பற்றி என்ன சிந்திப்பது என்ற கேள்வியை எழுப்பும் வில்லியம் பவுண்ட்ஸ்டோன் கணினி நிபுணரான எட்ஜெர் டிஸ்க்ஸ்ட்ரா கூறியிருப்பதை மேற்கோளாகக் காட்டுகிறார்:

 

 

“இயந்திரங்கள் சிந்திக்குமா என்ற கேள்வி, சப்மரீன்கள் நீந்துமா என்று கேள்வி கேட்பதைப் போல ஆகும். ஒரு திமிங்கிலமும் ஒரு சப்மரீனும் நீரில் வேகமாக முன்னேறும். ஆனால் அவை இரண்டும் அடிப்படையிலேயே வேறு விதமாக அதைச் செய்கின்றன. சிந்திப்பதும் கணினிசெய்வதும் ஒரே முடிவைத் தந்தாலும் அவை அதைச் செய்யும் முறை அடிப்படையிலேயே வித்தியாசமானது.

 

இன்னொரு பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஃப்ரீமேன் டைஸன் இந்தக் கேள்வியே அர்த்தமற்றது என்கிறார். “சிந்திக்கும் இயந்திரங்கள் இருப்பதாக நான் நம்பவில்லை அல்லது அவை சமீப காலத்தில் உருவாகக்கூடும் என்பதையும் நான் நம்பவில்லை. அடிக்கடி நான் எண்ணுவது தவறாகப் போகிறது. நான் தவறு என்றால், இந்தக் கேள்வியைப் பற்றிய சிந்தனைகள் கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாதவை. நான் சரி என்றால் இந்தக் கேள்வியே அர்த்தமில்லாது போகிறது.

1965ஆம் ஆண்டிலேயே கணித மேதையான இர்விங் குட், “ அல்ட்ரா இண்டெலிஜென்ட் மெஷின் மனிதன் வடிவமைப்பதை விட இன்னும் அருமையாக நவீன இயந்திரங்களை வடிவமைக்கும். அப்போது மனிதனின் அறிவை அது மிஞ்சி விடும். ஆக அந்த மெஷினே மனிதனின் கடைசி கண்டுபிடிப்பாக அமையும் என்கிறார்.

 

 

மனிதனின் கையை மீறி இயந்திரங்கள் தாங்களே சிந்திக்க ஆரம்பித்து விட்டால்..?

எப்போது செயற்கை அறிவுள்ள இயந்திரங்கள் மனித அறிவை மிஞ்சும். அப்போது நல்லது நடக்குமா, கெட்டது நடக்குமா?

செயற்கை அறிவு பற்றி ஆராயும் விஞ்ஞானியான மாக்ஸ் டெக்மார்க் இதை பல வகையாகப் பிரிக்கிறார்.

செயற்கை அறிவு மனித அறிவை இன்னும் சில ஆண்டுகளில் மீறி விடும் என்று நம்புவோர் – இப்படிப்பட்டவர் யாரும் இப்போது இல்லை.

 

 

செயற்கை அறிவு  இன்னும் 50 முதல் 100 ஆண்டுகளில் மனித அறிவை மிஞ்சி விடும். அது மனித குலத்திற்கே ஒரு வரபிரசாதமாக அமையும். இப்படி எண்ணுவோர் பலர்.

இதற்கு எதிர்மாறாக எண்ணுவோர் செயற்கை அறிவு இயந்திரங்கள் மோசமானவை என்கின்றனர்.

 

 

“இன்னும் நூறு ஆண்டுகளில் செயற்கை அறிவு வந்து விடும். அவை நல்லதையே செய்ய வேண்டும் என்பதற்கான வேலையை ஆரம்பிப்போம் என்கின்றனர் இன்னும் சிலர்.

கணினிகளிடம் ஒரு விஷயத்தைக் கொடுத்தால் எத்தனை முறை கேட்டாலும் ஒரே பதில் தான் வரும்.ஆனால்  மனித மூளையோ வெவ்வேறு விதமாகச் சிந்திக்கும்.கணினி துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளில் செயல்படும். மனித மூளையோ வாய்ப்புக்கேற்றபடி செயல்படும். கணினிகள் குறிப்பிட்ட சூத்திரங்கள் வழியேயும் புரோகிராம் செய்யப்பட்ட வழிமுறையிலும் செயல்படும். ஆனால் மனித மூளையோ மனத்தின் வழியே உள்ளர்த்தத்தைக் கண்டு விதவிதமாக செயல்படும். கணினிகள் கோட் என்ற பாஷை வழியே செயல்படும் போது மனித மூளையோ நியூரான்கள் வழியேயும் ரத்த ஓட்டம், மற்றும் ஹார்மோன்கள் வழியேயும் அபூர்வ வழியில் சிந்திக்கும்.

 

 

ஒரு ஆச்சரியகரமான விஷயம், செயற்கை அறிவு எப்படி செயல்படும் என்பதை நுணுக்கமாக விவரிக்கும் விஞ்ஞானிகள் மனித மூளை எப்படி செயல்படுகிறது என்பதை லட்சத்தில் ஒரு பங்கு கூட இன்னும் கண்டுபிடிக்கவில்லை!

மொத்தத்தில் பல அறிஞர்களின் கருத்து செயற்கை அறிவு நம்மை ஆளப்போகும் யுகத்தில், சினிமா, நடனம், நுண்கலைகள் போன்ற நுட்பமான விஷயங்கள் அறவே இருக்காது!,

 

 

மனிதர்கள் செயற்கை அறிவு சாதனங்களுக்கு அடிமையாக ஆகி, அவர்களை எஜமானராகக் கொண்டு செயல்பட வேண்டி வரும், என்பது தான்!

 

இன்னொரு முக்கிய விஷயம், செயற்கை அறிவு இயந்திரங்கள் பெருமளவில் உலகை ஆக்கிரமிக்கும் போது மனிதர்கள் இன்று பார்க்கும் வேலைகளில் 70 சதவிகிதம் இருக்காது! அப்போது அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

 

 

ஆகவே செயற்கை அறிவை வரவேற்பவர்கள் சற்று ஜாக்கிரதையாக வரவேற்பை நடத்த வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஏகோபித்த கருத்தாக அமைகிறது!

செயற்கை அறிவே உனக்கு ஒரு ஜே போட்டு வரவேற்கிறோம் – சற்று ஜாக்கிரதையுடன்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

செயற்கை அறிவு பற்றிய ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்தவர் பிரபல விஞ்ஞானியான மார்வின் மின்ஸ்கி (Marvin Minsky 1927-2016)

அவர் அறிமுகப்படுத்திய இரண்டு விதிகள் அனைவராலும் மேற்கோள் காட்டப்படுகின்றன.

 

முதல் விதி: வார்த்தைகள் உங்களது வேலைக்காரர்களாக இருக்க வேண்டும்; உங்கள் எஜமானர்களாக அல்ல! (Words should be your servants, not your masters)

இரண்டாவது விதி: எதையாவது செய்யவெண்டும் என்பதற்காகச் செய்யாதீர்கள். அதில் நிலைத்திருங்கள். (Don’t just do something. Stand there)

 

அவரது ஆராய்ச்சிக்கிணங்க அவரது வீட்டிலும் லாபரட்டரியிலும் நூற்றுக்கணக்கான வினோத பொருள்கள் இருக்கும். அவரது வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் உலகெங்கிலுமிருந்து ஆராய்ச்சி உரைகள் வந்தவண்ணம் இருக்கும். டெலிபோனுக்கு அருகில் உள்ள ஒரு மெஷினிலிருந்து விநோதமான ஒலிகள் எழுந்த வண்ணம் இருக்கும். அந்த விநோதமான ஒலிகளை வைத்து தனது சர்க்யூட்டில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வார்! பின்னால் இந்த உத்தியைப் பயன்படுத்தி பல விளையாட்டு பொம்மைகளைச் செய்யும் கம்பெனி ஒன்றை அவர் தொடங்கினார்.

 

அவரது சோதனைச்சாலயோ இன்னும் விநோதமான ஒன்று. பிளாஸ்டிக்கினால் ஆன ரொபாட் சிலை ஒன்று அங்கு இருக்கும்.

 

துணியினால் ஆன செடி ஒன்று தத்ரூபமாக செடி போல இருக்கும். பெரிய கம்ப்யூட்டர் ஒன்று உண்டு. அது அனைத்து வேலைகளையும் செய்யும் – கதவுகளைத் திறக்கும். லிப்டுகளை இயக்கும். அதற்கு இயந்திரக் கைகள் உண்டு! ரொபாட்டுகளை இயக்க ரிமோட் கண்ட்ரோலும் அதற்கு உண்டு! அது செஸ் போட்டியில் வென்றதற்காக அளிக்கப்பட்ட ட்ராபி அதன் மேல் காணப்படும்! 1963இல் புதுப்பிக்கப்பட்ட அவரது லாபரட்டரி ஒன்பது மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான சோதனைக் கூடம்! அவருக்கு உதவியாக ஒன்பது பேராசிரியர்களும் நூறு மாணவர்களும் அங்கு பணியாற்றினர்.

 

இசை கம்போஸ் செய்வது மின்ஸ்கியின் பொழுதுபோக்கு. உயிரியல் மற்றும் கணிதத்தில் மேதையான அவர் செயற்கை அறிவுக்குத் தாவி ஏராளமான கண்டுபிடிப்புகளைத் தந்து ‘செயற்கை அறிவின் தந்தை என்ற செல்லப் பெயரையும் பெற்றார்!

***

 

விட்ட குறை தொட்ட குறை- வள்ளுவன், மநு, கண்ணன் தரும் வியப்பான தகவல் (5229)

RESEARCH ARTICLE WRITTEN by London swaminathan

 

Date: 17 JULY 2018

Time uploaded in London – 14-56 (British Summer Time)

 

Post No. 5229

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

விட்ட குறை தொட்ட குறை- வள்ளுவன், மநு, கண்ணன் தரும் வியப்பான தகவல் ( POST No.5229)

இளம் வயது மேதைகள் பற்றி நிறைய கேள்விப்படுகிறோம்; படிக்கிறோம். நமது குடும்பங்களிலேயே சிலருக்கு இசையும் நடனமும் இயற்கையாகவே வருகிறது. சிலர் கணிதத்தில் புலிகளாக இருக்கின்றனர். சிலர் ஐந்து ஆறு வயதிலேயே கவி பாடுகின்றனர். இவற்றுக்கு எல்லாம் விஞ்ஞானத்தில் சரியான விளக்கம் காணப்படவில்லை. ஆனால் தமிழ் வேதமாகிய திருக்குறளில் தெய்வப் புலவன் இது பற்றித் திரும்பத் திரும்ப விளம்புகிறான். கண்ணனும் பகவத் கீதையில் மொழிகிறான். மநுவும் அவனது சட்டப் புத்தகமாகிய மனு ஸ்ம்ருதியில் நுவல்கிறான். கொஞ்சம் ஆழமாக உழுவோம்; அகலமாக உழுதல் பயன் தராது.

 

 

மநு சொல்கிறான்: ஒருவன் ரிக் யஜுர், சாம வேதத்தில் வல்லவனான ஒருவனுக்கு உணவு படைத்தால் அவனது ஏழு தலை முறை கடைத்தேறும் என்று.

அதாவது இந்துக்களின் நம்பிக்கை– ஒருவன் செய்யும் வினையானது ஏழு தலை முறைகளுக்குப் பயன்படும். அவனது ஏழு தலை முறைகளுக்கோ அவனது உறவினரின் ஏழு தலைமுறைக்கோ எப்படிப் பொருள் கொண்டாலும் சரியே.

 

கண்ணபிரான் பகவத் கீதையில் இன்னும் கொஞ்சம் விளக்குகிறான்:

நல்லது செய்பனுக்கு கெடுதி என்பதே வராது என்று சொல்லிவிட்டு அத்தகைய நல்லோர் யோகிகளின் வீட்டிலோ செல்வந்தர்களின் வீடுகளிலோ பிறப்பான் என்று சொல்லிவிட்டு:-

 

தத்ர புத்தி ஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம்

யததே ச ததோ பூயஹ சம்சித்தௌ குரு நந்தன- 6-43

பொருள்

“அங்கு முன் உடலில் உண்டாகிய அந்த புத்தியின் கூட்டுறவை அடைகிறான். குரு நந்தன! மேலும் அதைவிட மேலான நிலையை எய்த முயல்கிறான்”– என்கிறார்

 

இதற்கடுத்த ஸ்லோகம் ஒன்றில் (6-45) பல பிறப்புகளில் படிப் படியாக முன்னேறி உயர்ந்த கதியை அடைகிறான் என்கிறார்.

 

அதாவது ஒருவன் கற்ற விஷயங்கள் மறுபிறப்பிலும் உதவி, மேலும் மேலும் ஒருவனை உயர்த்துகிறது.

 

நாம் கற்கும் கல்வி FIXED DEPOSIT பிக்ஸட் டெபாஸிட் அல்லது லாங் டேர்ம் டெபாஸிட் LONG TERM DEPOSIT போல பலன் தரும்.

 

இதைக் காளிதாசனும் ஆமோதிக்கிறான்.

ரகுவம்சம் என்னும் காவியத்தில் மன்னன் திலீபனின் அரசாங்கப் பணிகள் அனைத்தும் ரஹஸியமாகவே இருந்தன; பலன் கிடைத்த பின்னரே அரசனின் செயல் என்ன என்பதை அறியமுடிந்தது. அதாவது இந்த ஜன்மத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் வெற்றியைக் கொண்டு அவனது முன் ஜன்ம புண்யத்தை அறிவது போல. ( ரகு 1-20) என்கிறார்.

 

சுதர்ஸனன் என்பவன் கல்வி கற்றது ஆசிரியர்களுக்குச் சிரமம் இல்லாமல் இருந்து. அவன் கற்பதெல்லாம் பூர்வ ஜன்மத்தில் கற்றதை நினைவு  படுத்திக்கொண்டது போல எளிமையாக இருந்தது (18-50)

இங்கும் பூர்வ ஜன்மக் கல்வி அடுத்த ஜன்மத்தில் பயன்பட்டதைக் காளிதாஸன் பாடுகிறான்.

 

இவர்கள் எல்லோரையும் விட வள்ளுவன்தான் தெளிவாகச் சொல்கிறான்:-

 

அவன் ஒன்றல்ல, இரண்டல்ல, ஆறு குறள்களில் செப்புகிறான்:

62, 107, 126, 398, 538, 835

எழு பிறப்பும் தீயவை தீண்டா  பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின் -62

 

பொருள்

நல்ல புதல்வர்களை பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தீயவை தீண்டாது. இது மநு சொன்னதைப் போல இருக்கிறது

 

எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு- 107

தமக்கு நேர்ந்த துன்பத்தை விலக்கியவரின் நட்பைப் பெரியோர்கள் ஏழு பிறவிகளிலும் நினைத்துப் பார்ப்பர்.

 

இதற்கு ஒரு பழைய உரை– தேவர், அசுரர், மனிதர், மிருகம், பக்ஷி, ஊர்வன, நீர் வாழ்வன என்றும் விளக்கம் தரும்; அப்படிப் பார்ப்பதும் இந்து தர்மமே.

 

ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்புடைத்து – 126

 

பொருள்

ஒரு பிறவியில் ஆமை போல புலன்களை அடக்கக் கற்றுக் கொண்டால் ஏழு பிறவிக்கும் பாதுகாவலாக அமையும்; இது கிருஷ்ணன் பகவத் கீதையில் சொன்னதை அப்படியே சொல்லுவது போல உள்ளது.

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்புடைத்து – 398

 

இதில் வள்ளுவன் மிக தெளிவாகச் சொல்லுகிறான்; ஒரு பிறப்பில் கற்ற விஷயங்கள் ஏழு பிறப்பிலும் தொடந்து வந்து உதவும்.

 

கற்ற கல்வியானது எந்தப் பிறப்பிலும் மறையாது.

 

எழு பிறப்பு என்பதை பல, எண்ணற்ற பிறப்புகள் என்றும் பெரியோர்கள் வியாக்கியானம் செய்வர்.

 

 

புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்-  538

 

அறிவுடையோர் சொன்ன விஷயங்களை நினைவிற் கொண்டு செயல்பட வேண்டும். அப்படிச் செய்யாதோருக்கு ஏழு பிறப்பிலும்  நன்மை உண்டாவது இல்லை.

 

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான் புக்கழுந்தும் அளறு-  835

பொருள்

பேதை என்பவன் யார்? ஏழு பிறவியில் அடையக்கூடிய , அனுபவிக்கக்கூடிய நரக துன்பத்தை ஒரே பிறவியில் செய்யக்கூடியவன் ஆவான்

காளிதாசனும் வள்ளுவனும் கண்ண பிரானும் மநுவும் சொன்னது என்ன?

நீங்கள் படித்த எந்த விஷயமும் வீண் போவது இல்லை; ஒவ்வொரு பிறவியிலும் வந்து உங்களுக்கு உதவும்; அங்கிருந்து மேற்கொண்டு கற்று அடுத்த படிக்கு முன்னேற உதவும்.

இனியும் தேவார திவ்வியப் பிரபந்தத்தையோ

வேத வேதாந்தங்களையோ (வேதாந்தம்= உபநிஷத்) படிப்பதை தாமதிக்கலாமா?

 

அடுத்த ஜன்மத்தில் நீங்களும் இளம் வயது மேதை ஆவீர்கள்!

TAGS-ஏழு பிறப்பு, விட்ட குறை தொட்ட குறை, இளம் வயது மேதை

–சுபம்–

நவீன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 1 (Post No.5213)

Written by S NAGARAJAN

 

Date: 13 JULY 2018

 

Time uploaded in London –   6-51 AM (British Summer Time)

 

Post No. 5213

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 13-7-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு பத்தொன்பதாம் கட்டுரை

செயற்கை அறிவுடன் கூடிய நவீ ன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 1

ச.நாகராஜன்

இயந்திர யுகம் முடிவுக்கு வந்து விட்டது. அறிவில்லாத ஜடங்கள் என்று விமானத்தையும், காரையும், ஸ்கூட்டரையும் இதர மெஷின்களையும் ஏசித் தூற்றிய காலம் முடிவுக்கு வந்து விட்டது.

சற்று அறிவுடன் கூடிய இயந்திரங்கள் – ரொபாட்டுகள் உள்ளிட்டவை – இப்போது உருவாக்கப்பட்டு விட்டன. இவை மனிதர்களைப் போல யோசிக்கும்; நிலைமைக்கு ஏற்ப தக்க முடிவுகள் எடுக்கும்.

இவற்றின் பயன்களைச் சொல்லப் போனால அயர்ந்து போய் விடுவோம்.

சாக்கடையில் ஓடும் கழிப்பறை நீரில் அடைப்புகள் ஏற்பட்டு விட்டனவா? அருவருக்கத்தக்கும் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியை சாக்கடையில் இறங்கி ரொபாட்டுகள் செய்து முடித்து விடும் – சில நிமிடங்களில்.

 அடுக்கு மாடிக் குடியிருப்பாக இருக்கும் வானளாவிய கட்டிடத்தில் தீ விபத்தா? உள்ளே பெண்கள், குழந்தைகளை தீ ஜுவாலைகளின் உள்ளே சென்று பத்திரமாக மீட்க வேண்டுமா?

ரொபாட்டுகள் ரெடி. அறிவுடன் கூடிய இவை புகையை விலக்கி, தீயை அணைத்து தனக்கான வழியை உருவாக்கிக் கொண்டு கட்டிடத்தில் சிக்கிக் கொண்டோரை பத்திரமாக மீட்கும்.

ஆழ்கடலில் விபத்தா? நீரில் மூழ்க அச்சமான சூழ்நிலையா? ரொபாட்டுகள் ஆழ்கடலில் மூழ்கி டைவ் அடித்து செய்ய வேண்டிய பணியைச் செய்து முடித்து விடும். இது போல அடர்ந்த காடுகளிலும் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு குறிக்கப்பட்ட பணியை முடித்து விடும்.

இது மட்டுமல்ல, உடல் வலிக்கிறதா? இதமாக மசாஜ் செய்ய உயிருள்ளது போலவே உள்ள ரொபாட் பணியாளர்கள் ரெடி.

பல வீ டுகளில் இப்போது நடைமுறையில் தரையைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் ரோபாட் கிளீனரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். சென்ஸர் மூலமாக ஒவ்வொரு இடமாக மூலைமுடுக்குகளில் எல்லாம் தானே சென்று தூசு தும்பை அகற்றி விடும்.

ஆக செயற்கை அறிவு ஊட்டப்பட்ட இவற்றின் எண்ணிக்கையும் பயன்பாடும் இப்போது அதிகரித்து வருகிறது.

ஜப்பானில் ஏராளமான கம்பெனிகள் செயற்கை அறிவுள்ள பல சாதனங்களைச் செய்து விற்கின்றன.

இப்போது ஜப்பானில் உருவாக்கப்பட்ட கே கம்ப்யூட்டர் ஒரு வினாடிக்கு 10,000,000,000,000,000 கணக்குகளைப் போட்டு முடித்து விடுகிறது. ஒரு வினாடிக்குள் இது செய்வதை மனிதர்கள் செய்வதாக வைத்துக் கொள்வோம். அப்போது இப்போது உலகில் உள்ள 700 கோடி பேர்களும் ஆளுக்கு ஒரு கணக்கை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து 17 நாட்கள் முயன்றால் கே கம்ப்யூட்டர் ஒரு வினாடியில் செய்வதை முடிக்க முடியும்!

மனித உயிருக்கு அபாயம் ஏற்படும் பணிகளில் செயற்கை அறிவு ஊட்டப்பட்ட சாதனங்கள் ஈடுபட்டு அரிய செயலை ஆற்றி வருகின்றன.

ஆனால் இவற்றின் அறிவு கூடக் கூட, செயல் திறன் கூடக் கூட அது மனிதர்களை விடத் திறம்பட சிந்தித்து, யோசித்து, செயலாற்றும் போது என்ன நடக்கும்?

தன்னைப் படைத்த மனிதனுக்கே சவால் விடுமா? அபாயத்தை ஏற்படுத்துமா?

இப்போதே இண்டர்நெட்டில் உலா வரும் ஜோக் ஒன்று உண்டு. இந்த ஏஐ – ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் – மெஷின்களின் திறன் அதிகரிக்கும் போது மனித குலம் ரொபாட் ஜமீந்தார்களை – ரொபாட் மன்னர்களை அடிபணிய வேண்டி வரும் என்பது தான் அந்த ஜோக்!

எதிர்கால யுத்தங்களில் நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களை அனுப்பாமல் ரொபாட் வீரர்களை அனுப்பி யுத்தம் செய்தால்?

 

நினைக்கவே பயமாக இருக்கிறது. செயற்கை அறிவுடன் கூடிய அபாயகரமான ஆயுதங்கள் பல்வேறு நகர்களை நோக்கி வீசப்பட்டால்?

மனித குலமே இல்லாமல் போய்விடும்! இது போன்ற ஏராளமான நியாயமான பயங்கள் செயற்கை அறிவு பற்றி உண்டு!

2001: எ ஸ்பேஸ் ஒடிஸி மற்றும் அவெஞ்சர்ஸ் – ஏஜ் ஆஃப் யூனியன்  (2001: A Space Odyssey – 1968)  (Avengers: Age of Ultron – 2015) ஆகிய இரு திரைப்படங்கள் செயற்கை அறிவு மனித அறிவை மிஞ்சி விட அதை உருவாக்கியவர்களின் எதிர்பார்ப்புகளை மீறி, அவர்களுக்குக் கீழ்ப்படியாமல் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி, மனித குலத்தை அழிக்க முயற்சிப்பதைச் சித்தரிக்கின்றன.

இப்போது அமெரிக்காவில் மூன்றாவது சீஸன் தொடங்கி சக்கை போடு போடும் ஹ்யூமன்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரும் கூட பிரக்ஞையுடன் கூடிய செயற்கை அறிவு படைத்த ஜீவன்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக மனிதர்களுடன் போராடுவதைச் சித்தரிக்கிறது.

கணினி உலகத்தில் விஞ்ஞானிகள் செயற்கை அறிவு சாதனங்கள் உருவாக்கப் போகும் பிரம்மாண்டமான சீர் கேட்டை நினைத்து பயப்படுகின்றனர்.

ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை நிறுவிய இலான் மஸ்க் 2017 ஜூலையில் நேஷனல் கவர்னர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில், “செயற்கை அறிவு என்னும் நவீன தொழில்நுட்பத்தை நன்கு அறிந்து கொண்டிருக்கும் நான் ,

அதைப் பற்றி மக்கள் மிகவும் கவலைப்பட வேண்டும் என்று கருதுகிறேன் என்றார். ‘இப்போதே எச்சரிக்கை மணி அடிக்கிறேன் ‘என்று தொடர்ந்த அவர், “ஆனால் ரொபாட்டுகள் தெருவில் இறங்கி மனிதர்களைக் கொன்று குவிக்கும் வரையில் மனிதர்கள் அதை எப்படி எதிர்கொள்வது என்று அறிய மாட்டார்கள். ஏனெனில் இது புலன்களால் உணரப்படாத ஒன்றாக இருப்பதால் தான்! என்றார்.

எல்லோரும் பயப்படுவது ஏன்? சூபர் இண்டெலிஜென்ஸான ‘ஏஐAI-  சாதனங்கள் பிரக்ஞையை அடைந்து சிந்திக்கும் திறன் பெற்று மனிதர்களை தங்களை விட கீழான அற்ப ஜந்துக்களாக மதித்து, இப்போது குரங்குகளை நாம் எப்படி நடத்துகிறோமோ அதைப் போல நம்மை நடத்தி விடக் கூடும் என்பதே விஞ்ஞானிகளின் பயம்!

மனிதர்களாகிய நமக்கு இது தேவையா என்பதே அவர்களின் கேள்வி!

  • தொடரும்

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

 

அறிவியல் ரீதியாக ஏற்றம் இறக்கம் உடைய ஒரு மலைப் பகுதியை சரியாக அளந்து வரைபடம் தயாரிப்பது என்பது பிரம்மாண்டமான ஒரு விஷயம்.

பண்டிட் நயின் சிங் ராவத் (தோற்றம் 21-10-1830 மறைவு 1-2-1882) பத்தொன்பதாம் நூற்றாண்டில் இமயமலை பிராந்தியத்தை அடி அடியாக அளந்த மாபெரும் வீரர் ஆவார். குமாவுன் கிராமத்தில் ஒரு பள்ளியின் ஹெட்மாஸ்டராகப் பணி புரிந்த இவர் பிரிட்டிஷ் அரசால் திபத்தின் வரைபடத்தை உருவாக்க அங்கு அனுப்பப்பட்டார். திபத்தில் வசிப்பவர் போல உடையணிந்து ஒரு யாத்ரீகராகக் கிளம்பிய நயின் சிங் திபத்தை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து அதன் வரைபடத்தைத் தயாரித்தார். திபத்தியரைப் போலவே அவர்கள் மொழியில் இவர் பேசி அங்குள்ள கடும் குளிரையும் தாங்கி தனது பணியைத் திறம்பட முடித்தார்.

லாஸா இருக்கும் இடத்தையும் அது எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதையும் சரியாக நிர்ணையித்தார்.பிரம்மபுத்திரா நதியின் பெரும் பகுதியின் வரைபடத்தையும் 33 இடங்களில் ஆய்வு செய்து தயாரித்தார். காங்டாக்கிலிருந்து லாஸா வரை 31 இடங்களில் ஆய்வு செய்தார். கண் பார்வையை இழந்ததால் வெற்றிகரமான தனது யாத்திரையை  அவர் நிறுத்த நேரிட்டது. ஐரோப்பாவின் பல பூகோள ஆய்வு நிறுவனங்கள் அவரை கௌரவித்தன. பிரிட்டிஷ் அரசு அவருக்கு சி.. விருதை வழங்கியது. இந்திய அரசு 27-6-2004 அன்று அவர் நினைவாக தபால்தலையை வெளியிட்டு அவரை கௌரவித்தது. மலையேறி ஆய்வு செய்யும் உலக வீ ரர்களில் தனி இடத்தை வகிப்பவர் பண்டிட் நயின் சிங்.

***