சூதாட்டத்துக்கு ரிக்வேதமும் தமிழ் வேதமும் எதிர்ப்பு (Post No.4905)

Picture posted by Lalgudi Veda

சூதாட்டத்துக்கு ரிக்வேதமும் தமிழ் வேதமும் எதிர்ப்பு (Post No.4905)

 


Written by London Swaminathan 

 

Date: 11 April 2018

 

Time uploaded in London –  21-20  (British Summer Time)

 

Post No. 4905

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

தமிழ் வேதம் என்று திருவள்ளுவ மாலையில் புகழப்பட்ட திருக்குறளும், அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட ரிக் வேதமும் சூதாட்டத்தின் கொடுமைகளை ஏசுகின்றன. சூதாட்டம் இன்றும் உலகெங்கிலும் இருக்கிறது. பல லட்சம் பேர் தினமும் லாட்டரி டிக்கெட் வாங்கி ஏமாறுகின்றனர். எங்கள் லண்டனுக்கு வந்தால் ஒவ்வொரு தெருவிலும் சூதாட்டக் கடைகள் (betting shops) இரண்டு மூன்று இருக்கும். பெட்’ bet கட்டி ஏமாறுவதற்கு ‘முன் காலத்தில் குதிரைப் பந்தயம் பின்னர் நாய் பந்தயம் என்று இருந்தன. இன்றோ பனி மழை பெய்யுமா, கால்பந்தில் யார் முதல் ‘கோல்’ போடுவார்கள் கிரிக்கெட்டில் எத்தனை ‘ரன்’களில் ஒரு அணி ஜெயிக்கும், தேர்தலில் யார் வெல்லுவார்கள்? என்று பல நூறு விஷயங்கள் சம்பந்தமாக பெட் BET கட்டி ஏமாறலாம்!

 

மஹாபாரதக் கதையின் அடிப்படையே சூதாட்டம்தான் என்பதை நாம் அறிவோம். மனு ஸ்ம்ருதியும் சூதாட்டத்தைக் கண்டிக்கிறது. இது போல திருவள்ளுவரும் ரிக்வேத ரிஷிகளும் சூதாட்டத்தைக் கண்டிக்கின்றனர்.

 

சூது என்ற தமிழ் சொல்லே ‘த்யூத’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லில் இருந்து வந்தது என்று மொழியியல் வல்லுநர்கள் மொழிவர். ஆனால் நானோ தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரே குடும்ப மொழிகள் என்றும் அவை கிளைவிட்டுப் பிரிந்து சில ஆயிரம் ஆண்டுகள் உருண்டு ஓடியதால் இரண்டும் வேறு மொழிகள் போல தோன்றுகின்றன என்றும் பல நூறு சொற்கள், சந்தி இலக்கணம், வேற்றுமை உருபுகள் மூலம் நிரூபித்து வருகிறேன். நிற்க.

 

 

சூது என்னும் தலைப்பில் வள்ளுவன் பத்து குறள் பாடி வசை பாடி இருக்கிறான். ஆகையால் மஹா பாரத காலத்துக்குப் பின்ன ரும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சூதாட்டம் நடைபெற்று வருவதை  அறிகிறோம். அந்தக் காலத்தில் இப்போது போல betting shop பெட்டிங் ஷாப் இல்லாவிடினும் மன்றம், கழகம், சபா (அவை) என்ற இடங்களில் சூதாட்டக்காரகள் சந்தித்து விளையாடியதை அறிகிறோம்.

குறள் 931 முதல் 940 வரை சூதாட்டக் கொடுமைகளைப் பகரும். ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலம் 34 ஆவது பாடல் கவச ஐலூஷன் பாடியது. அதிலுள்ள கருத்துகளை வள்ளுவனும் பிற்காலத்தில் சொல்லி இருக்கிறான்.

சூதாட்டத்தால்  உடை, செல்வம், உணவு, புகழ், கல்வி என்ற ஐந்தும் ஒருவன்  இடத்தில் வராது (939) என்பான் வள்ளுவன்.

 

ரிக் வேத சூதாட்ட துதியோ இதை நன்கு விளக்குகிறது: இதோ ரிக் வேத துதியின் சாராம்சம்:

 

1.சூதாட்டமும் சோம பானம் போல இன்பம் தருகிறது.

 

2.என் மனைவி என்னிடத்திலும் நண்பர்கள் இடத்திலும் அன்பாகவே இருந்தாள்; கோபித்ததே இல்லை; ஆனால் சூதாட்டம் காரணமாக நான் அவளை இழந்தேன்.

 

3.என் மாமியார் என்னை வசை பாடுகிறாள் என் மனைவி என்னை எதிர்க்கிறாள்; கிழட்டு குதிரை போல நான் உள்ளேன்.

4.சூதாட்டக் காரனை மனைவி முதல் எல்லோரும் ஏசுகின்றனர். தந்தையும் சகோதரரும் திட்டுகின்றனர்.

 

5.இனிமேல் ஆடக்கூடாது என்று நினைப்பேன் அந்த தாயக்கட்ட காயுருட்டும் சப்தம் என்னை இழுக்கிறது . நான் காதலியைச் சந்திக்கும் இடத்துக்கு ஓடுவதுபோல ஓடுகிறேன்.

6.காய் உருட்டுவதைப் பார்த்த உடனே ஆர்வம் வந்து விடுகிறது.

7.சூதாட்டக்காரனை காய்கள் வருத்துகின்றன.

8.எவருடைய கோபமும் சூதாட்டக் காய்களைப் பாதிப்பதில்லை. அரசனும் அதை வணங்குகிறான்.

 

9.இதோ காய்கள் மேலேயும் கீழேயும் உருண்டு போகின்றன. அவை இதயத் துடிப்பை அதிகரிக்கின்றன.

 

10.மனைவியும் மகனும் வருந்துகின்றனர். சூதாட்டக்காரன் கடன்பட்டதால் திருடவும் செய்கிறான்.

11.மற்றவர்களுடைய மனைவி மக்களைப் பார்த்து வருந்துகிறான்

 

12.இறுதியில் ஒரு புத்திமதியுடன் கவிதை முடிகிறது:

நான் சொல்லுவதை நம்பு;  சூதாட்டம் ஆடாதே; நிலத்தைப் பண்படுத்தி பயிர் செய்; இதனால் செல்வம் கிட்டும்; இன்பம் வரும்; பசுக்கள் அதிகரிக்கும்; மனைவியும் உடன் இருப்பாள்!

 

13.தானியங்களே! எங்களிடத்தில் நட்புடன் இருங்கள். உங்கள் கோபத்தை என் எதிரிமேல் திருப்பி விடுங்கள் எங்கள் எதிரிகள் உங்களிடம் மாட்டிக்கொள்ளட்டும்

 

பத்து குறள்களையும் ரிக் வேத தாயக்கட்டத் துதியையும் ஒப்பிட்டால் இரண்டிலும் ஒரே கருத்தைக் காணலாம்!!

எண் 53

1.இந்தப் பாடலில் வேறு சில சுவையான விஷயங்களும் வருகின்றன. ‘விபிதகா’ என்ற மரத்தின் விதைகள் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்டன.

 

2.மௌஜவம் என்ற மலையில் சோமரசச் செடிகள் வளருகின்றன.

 

3.பகடை ஆட்டத்தில் 53 காய்கள் உள்ளன. இதை லுட்விக் என்பவர் 15 காய்கள் என்று மொழி பெயர்த்துள்ளார். சம்ஸ்க்ருதத்தில் ‘த்ரி பஞ்ச’ என்ற சொல் உளது.

 

4.’மகத்தான படையின் சேனாபதி’ என்பதற்கு ‘பகடைக் காயின் மிக உயர்ந்த எண்ணிக்கை’ என்று மொழி பெயர்க்கின்றனர்.

 

5.ஒன்றுமில்லை என்று கையை விரிப்பதற்குப் ‘பத்து விரல்கள்’ என்ற சொற்றொடர் உள்ளது. சாயனருடைய பாஷ்யம் கொடுக்கும் தகவலை வைத்தே நாம் இப்படி மொழி பெயர்க்கிறோம்.

 

–சுபம்–

 

அட்லாண்டிஸ் மர்மம் – அதிசயத் தகவல்கள்! – 2 (Post No.4897)

Date- 9 April 2018

 

British Summer Time- 6-21 am

 

Written by S Nagarajan

 

Post No.4897

 

Pictures are taken from various sources; thanks.

 

பாக்யா 30-3-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு ஐந்தாம்) கட்டுரை

அட்லாண்டிஸ் மகா மர்மம்அதிசயத் தகவல்கள்! – 2

.நாகராஜன்

 

அட்லாண்டிஸ் என்பது கருங்கடல் வெள்ளத்தைப் பற்றிக் கூறும் பழைய புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது இன்னும் ஒரு கொள்கை. இந்தக் கொள்கையின் படி அட்லாண்டிஸ் ஒரு கற்பனைக் கதையே. ஆனால் அதன் மர்மமான மறைவு ஒரு உண்மையான வரலாற்று சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது! கிறிஸ்துவுக்கு முன் 5600ஆம் ஆண்டில் மெடிட்டரேனியன் கடலில்  பாஸ்பொரஸ் என்ற இடத்தில் ஏற்பட்ட உடைப்பையும் அதைத் தொடர்ந்து கருங்கடலில் ஏற்பட்ட ஒரு பெரிய வெள்ளத்தையும் அடிப்படையாகக் கொண்டது இந்தக் கொள்கை.

 

அப்போது கருங்கடலின் தண்ணீர் நல்ல ஏரியின் நீராக இருந்தது. இப்போதிருப்பதில் பாதி அளவு தான் அந்த ஏரி இருந்தது. கருங்கடலில் ஏற்பட்ட பெருவெள்ளம் கடற்கரையில் நூற்றுக்கணக்கான அடி அளவு கடற்கரைப் பகுதிகளை ஆழ அமுக்கி அங்கிருந்த நாகரிகங்களையும் மக்களையும் ஒருசேர ஒரே வருடத்திற்குள் அழித்தது! அழிக்கப்பட்ட பகுதியான பெரும் பரப்பளவு என்பதால் அங்கிருந்த மக்கள் பிரளயத்தைப் பற்றியும் அதைச் சுற்றி ஏற்பட்ட சம்பவங்களையும் கதைகளாகப் பரப்பினர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் பிளேட்டோ இதைப் பயன்படுத்திக் கொண்டார்.

இன்னொரு கொள்கை, அட்லாண்டிஸ் என்பது மினோயன் நாகரிகத்தின் கதை என்பதாகும். இது கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் கிரேக்கத் தீவுகளில் 2500 – 1600 ஆண்டுகளில் ஏற்பட்டது!

 

தேரா என்ற தீவு கடலிலிருந்து எழும்ப அந்தப் பெரும் அலைகள்

மினோயன்வாசிகளை முற்றிலுமாக அழித்தது!

கிரேக்கத் தீவுகளான க்ரீட் மற்றும் தேராவை மையமாக வைத்து மிகச் சமீபத்தில் ஒரு கொள்கை அறிஞர்களால் தரப்பட்டுள்ளது.

இந்தத் தீவுக்கு இப்போது சாண்டோரினி என்று பெயர். மினோஸ் என்ற புகழ்பெற்ற அரசனின் பெயரால் மினோயன் என்று பெயரிட்டனர் தங்கள் தீவை! 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதை இது!

மினோயன் நாகரிகம் ஐரோப்பாவின் முதல் பெரும் நாகரிகம் ஆகும். மினோயன்வாசிகள் அருமையான பெரிய அரண்மனைகளைக் கட்டினர். பெரிய சாலைகளை அமைத்தனர். முதன் முதலாக ஒரு மொழியையும் அமைத்ததோடு அதை எழுதும் மொழியாகவும் ஆக்கினர். புகழ் பெற்றிருந்த உச்ச கட்டத்தில் இந்த நாகரிகம் தீடீரென்று மர்மமாக மறைந்தது!

இந்த மகத்தான மர்மம் தான் பிளேட்டோவை வெகுவாகக் கவர்ந்தது! ஆகவே அட்லாண்டிஸைப் பற்றி எழுத ஆரம்பித்தார்.

வரலாற்று அறிஞர்கள் கிறிஸ்துவுக்கு முன் 1600 ஆம் ஆண்டில் ஒரு பெரும் பூகம்பம் தேரா தீவில் ஒரு எரிமலை வெடிப்பை ஏற்படுத்தியதென்றும் அது 100 லட்சம் டன் பாறையைக் கக்கியது என்றும் சாம்பலும் புகையும் வளிமண்டலத்தையே அலங்கோலமாக்கியது என்றும் கூறுகின்றனர்.

இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமிகள் மினோயன் நகரங்களையே அழித்து ஒழித்தது என்பதும் இவர்கள் கூற்று.

எது எப்படியோ அட்லாண்டிஸ் என்பது ஒரு கற்பனை இடமே; அதை பிளேட்டோ தான் கண்டு பிடித்தார் என்பது பல விஞ்ஞானிகள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் ஆகியோரின் ஒருமித்த கருத்து.

பிளேட்டோவின் கருத்துப் படி அட்லாண்டிஸ் ஒரு லட்சிய நாகரிகம் அது மறைந்ததன் காரணம் கடவுளர் மனிதனுக்கு அளித்த தண்டனையாகும் என்பதே!

ஒரு சுவாரசியமான விஷயம், அட்லாண்டிஸ் பற்றிய எந்த விதமான எழுத்துபூர்வமான தகவலும் பிளேட்டோவின் உரையாடலைத் தவிர்த்து வேறெங்கும் இல்லை என்பது தான். பழைய கால கிரேக்கத் தீவுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் பழைய சுவடிகள், புத்தகங்கள் கிடைத்துள்ளன. அதில் எதிலும் அட்லாண்டிஸ் குறிப்பிடப்படவில்லை!

இன்றைய நவீன அறிவியல் தரும் சுவாரசியமான ‘லேடஸ்ட்’ தகவல் இது:

இப்போது அதி நவீன தொழில்நுட்பத்தின்படி கடலைப் பற்றிய ஆய்வுகள் மிகப் பிரமாதமான முன்னேற்றத்தைக் கொண்டுள்ளன. கடலை அப்படியே வரைபடமாக ஆக்கும் கலை மிகவும் முன்னேறி உள்ளது; அதன் படி பார்த்தாலும் அட்லாண்டிஸைக் காணோம்!

அடுத்து, இன்னும் சில விவரங்களையும் இது பற்றி அலசி விடுவோம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

சமீபத்திய பாக்யா இதழில் (2-2-2018 இதழ்) ஸ்டீபன் ஹாகிங்கின் 76ஆம் ஆண்டை ஒட்டி ‘மெடிகல் மிராக்கிள்’ புகழ் ஸ்டீபன் ஹாகிங்கை வாழ்த்தினோம்.

ஆனால் விதி அந்த மாபெரும் விஞ்ஞானியை நம்மிடமிருந்து புதன்கிழமை – 14-3-2018 அன்று – அதிகாலை பறித்து விட்டது.அவர் கேம்பிரிட்ஜில் தனது இல்லத்தில் காலமானார்.

வீல் சேரிலிருந்து கொண்டே பிரபஞ்சம் எங்கும் சுற்றித் திரிந்த மாபெரும் விஞ்ஞானியின் இழப்பை உடனடியாக அறிவியல் இதழ்களும், பத்திரிகைகளும் சாமான்யர்களும் பரப்பியதோடு அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளன.

அவருக்கு நோபல் பரிசு கிடைக்காத குறையை அனைவரும் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆப்ஸர்வேஷன் எனப்படும் உற்றுக் கவனித்தல் என்பதன் அடிப்படையில் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே நோபல் பரிசு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால் மனோ சஞ்சாரம் மூலமாக புத்தியால் அலசி ஆராய்ந்து அவர் விளக்கிய பிரபஞ்ச மர்மங்கள் இந்த ஆப்ஸர்வேஷன் வகையில் வரவில்லை. ஆகவே தான் அவருக்கும் நோபல் பரிசு கிடைக்கவில்லை. போகட்டும், விடுங்கள்!

‘ப்ளாக் ஹோல்’ எனப்படும் கருந்துளை பற்றிய அவரது விளக்கம் அவரை ஐன்ஸ்டீனுக்கு அடுத்த மாபெரும் விஞ்ஞானியாக ஆக்கி விட்டது.

இறுதி வரை அவர் செயல்பாடுடன் கூடிய விஞ்ஞானியாகவே விளங்கினார்.

அன்னாருக்கு உலக மக்களுடன் பாக்யா வாசகர்களின் அஞ்சலியும் சேர்கிறது!

***

 

அட்லாண்டிஸ் மகா மர்மம் – அதிசயத் தகவல்கள்! – 1 (Post No.4893)

Date- 8 April 2018

 

British Summer Time- 7-19 am

 

Written  by S Nagarajan

 

Post No.4893

 

Pictures are taken from various sources; thanks.

 

 

 

23-3-2018 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு நான்காம்)  கட்டுரை

அட்லாண்டிஸ் மகா மர்மம்அதிசயத் தகவல்கள்! – 1

.நாகராஜன்

 

அட்லாண்டிஸ் என்னும் மர்மத் தீவு அட்லாண்டிக் பெருங்கடலின் மத்தியில் உள்ளது.

இந்த அட்லாண்டிஸ் என்னும் அற்புதத் தீவு திடீரென்று மறைந்து போனது. அது தான் மர்மம். மிக பிரம்மாண்டமான அதிசயக்கத்தக்க நாகரீகத்தைக் கொண்டிருந்த மக்கள் அட்லாண்டிஸ் மக்கள்! கனவு தேசம் என்றே அதைச் சொல்லலாம். அந்த நாகரிகத்தின் ஞானம் மட்டும் இருந்தால் போதும் உலகம் அமைதியின் சொர்க்கமாகத் திகழும்! ஆகவே தான் லட்சியவாதிகள், மாயாஜால நிபுணர்கள், புது யுகம் காண விழைவோர் ஆகியோர் இதைப் பற்றி ஆராய்கின்றனர்.

ஆயிரக் கணக்கான புத்தகங்கள் இது வரை அட்லாண்டிஸ் பற்றி வெளியாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கில் பத்திரிகைக் கட்டுரைகளும் இணையதளக் கட்டுரைகளும் சுவாரசியமான தகவல்களை அள்ளி வீசுகின்றன.

இதை ஆராய்வதிலேயே தன் கோடிக்கணக்கான பணத்தைச் செலவிட்டோர் ஏராளம். தன் இன்னுயிரை விட்டவர்களும் கூட உண்டு!

அட்லாண்டிஸ் பற்றிய முதல் தகவலைத் தருபவர் கிரேக்க தேசத்து அறிஞரான பிளேட்டோ! தனது டயலாக்ஸ் – உரையாடல்கள் – என்ற நூலில் அட்லாண்டிஸ் பற்றி அவர் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவுக்கு முன் 330ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூல் இது!

அகழ்வாராய்ச்சி நிபுணரான பேராசிரியர் கென் ஃபெடர் (Ken Feder – Encyclopedia of Dubious Archaeology) தனது என்சைக்ளோபீடியா ஆஃப் டியூபியஸ் ஆர்கலாஜி என்ற நூலில், “அட்லாண்டிஸ் எல்லோரும் நினைப்பது போல ஒரு அருமையான இடம் இல்லை.மாறாக செல்வம் நிரம்பிய தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய, ராணுவத்தில் பலம் வாய்ந்த ஒரு நாடு. இதனால் லஞ்ச லாவண்யம் பெருகிய நாடாகவும் அது திகழ்ந்தது” என்கிறார்! ஏதன்ஸின் புகழ் பாட பிளேட்டோ அட்லாண்டிஸைப் பயன்படுத்திக் கொண்டார். அட்லாண்டிஸ் இன்று இருக்குமானால்

நம் அனைவரையும் கொன்றிருக்கும் அல்லது அடிமைகளாக ஆக்கி இருக்கும். மற்றவர் யாரும் எழுதாத அட்லாண்டிஸ் பிளேட்டோவின் கற்பனையில் விளைந்த ஒன்று என்கிறார் பேராசிரியர்.

அட்லாண்டிஸ் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பல கொள்கைகளை வகுத்துள்ளனர். அவற்றில் சில:-

அட்லாண்டிஸ் நாகரிகம் சுமார் 9000 வருடங்களுக்கு முன்பு இருந்தது. ஒரு பிரம்மாண்டமான கடற்படையை அது கொண்டிருந்தது!  ஒரே நாளில் அது கடலுக்கடியில் மூழ்கியது!

பல நூற்றாண்டுகளாக சரித்திர ஆசிரியர்களும், விஞ்ஞானிகளும், அகழ்வாராய்ச்சியாளர்களும் அட்லாண்டிஸ் உண்மையில் இருந்ததென்றால் எந்த இடத்தில் இருந்தது என்று விவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

I

இக்னேஷியஸ் டானெலி (Ignatius Donnelly)  என்பவர் 1882ஆம் ஆண்டு எழுதியுள்ள புத்தகத்தில்  (Atlantis, the Antedivluvian World) இன்னொரு அதி முன்னேறிய நாகரிகம் ஒன்று தான் அட்லாண்டிஸுக்கு அனைத்தையும் வழங்கி இருக்க வேண்டும் என்கிறார். பிளேட்டோ சொன்ன இடத்திலேயே இது மூழ்கி இருக்கலாம் என்று கூறும் அவர் பிளேட்டோ குறிப்பிடும் ஹெர்குலிஸ் தூண்கள் எனப்படும் இரு தூண்கள் ஜிப்ரால்டர் ஜலசந்தியின் நுழைவாயிலைக் குறிப்பதாக இருக்கலாம் என்கிறார். இன்னும் சிலர் அட்லாண்டிஸை பெர்முடா ட்ரை ஆங்கிள் விழுங்கி இருக்கலாம் என்கின்றனர். டானெலியின் வழியைப் பின்பற்றி சார்லஸ் பெர்லிட்ஸ் என்பவர் 1970களில் அட்லாண்டிஸ் பஹாமா தீவுகளுக்குச் சற்றுத் தள்ளி இருக்கிறது என்கிறார்.

பெர்முடா ட்ரை ஆங்கிள் மர்மமான இடம். பல நூறு கப்பல்கள் காணாமல் போன இடம் இதுவே. இந்தக் கொள்கையை ஆதரிப்போர் பிமினி என்ற கடற்கரையில் மனிதன் அமைத்தது போல உள்ள பல கட்டுமானங்களைச் சுட்டிக் காண்பிக்கின்றனர்.

இது ஒரு கொள்கை.

இன்னும் ஒரு கொள்கை இது:

 

சார்லஸ் ஹாப்குட் என்பவர் 1958ஆம் ஆண்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இதற்கு பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு முன்னுரை தந்துள்ளார். இந்தப் புத்தகத்தின் பெயர் ‘எர்த் ஷிப்டிங் தி க்ரஸ்ட்’ (Earth Shifing the Crust) இதில் பூமியின் மேலோடு 12000 ஆண்டுகளுக்கு முன்னால் இடம் பெயர்ந்தது என்றும் அது அண்டார்டிகாவை இடம் பெயரச் செய்து விட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த கண்டமே முன்னேறிய நாகரிகத்தின் இடம் என்பது அவரது கருத்து. பூமியின் மேலோடு பெயர்ச்சியின் காரணமாக இந்த அருமையான நகரம் பனிக்கட்டிகளுக்கு அடியில் அமுங்கி விட்டது என்கிறார் அவர். இதைப் பல விஞ்ஞானிகளும் ஆதரிக்கின்றனர்.

இன்னும்  பல கொள்கைகள் உள்ளன. அவற்றை அடுத்துப் பார்ப்போம்.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அமெரிக்க விண்வெளி வீராங்கனையான பெக்கி விட்ஸன் குழந்தைகளை விண்வெளி ஆர்வம் ஊட்டி உத்வேகப்படுத்த அவர்களைச் சந்திக்கிறார்.

சமீபத்தில் ஒரு சனிக்கிழமை அன்று குழந்தைகள் வரவழைக்கப்பட்டனர்.

செவ்வாய் கிரகம் பற்றி முதன் முதலில் விஞ்ஞானிகள் அறிந்தது எப்படி என்ற கேள்வி முதலில் எழுப்பப்பட்டது.

உடனடியாக இரு குழந்தைகள் பளீரென்று ‘க்யூரியாஸிடி’ என்று பதிலளித்து அனைவரையும் திகைக்க வைத்தன.

செவ்வாய்க்கு கொண்டு போக வேண்டிய முக்கிய பொருள் என்ன என்று கேட்ட போது குழந்தைகள், “தண்ணீர், தண்ணீர் தான் மிக அளவில் வேண்டும்” என்று பதில் அளித்தனர்.

பெக்கி விட்ஸன் நீரை மறு சுழற்சி செய்து பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கும் போது குழந்தைகள் மௌனமாக உன்னிப்பாக அவர் சொல்வதைக் கேட்டன.

ரீ சைக்ளிங் என்ற வார்த்தை அவர்களது ஆழ் மனதில் நன்கு பதிந்து விட்டது.

விண்வெளி வீரர்களின் ஆரோக்கியம் பற்றி அவர்கள் கேட்ட கேள்விக்கு வீராங்கனை, “இதற்கு விஞ்ஞான முன்னேற்றமே காரணம்” என்றார்.

கூட்ட இறுதியில் எத்தனை பேர் செவ்வாய் கிரகம் செல்ல ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்ட போது அனைவரும் ஒரே குரலில் நாங்கள் அனைவரும் செல்ல ஆசைப்படுகிறோம் என்று கூறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்தியாவிலும் இப்படிப்பட்ட உத்வேகக் கூட்டம் நடக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவது நியாயம் தானே!

***

 

அதிசய ரத்தினக் கற்கள்- கம்பன் பாடல்களில்! (Post No.4884)

அதிசய ரத்தினக் கற்கள்- கம்பன் பாடல்களில்! (Post No.4884)

 

Research article Written by London Swaminathan 

 

Date: 5 April 2018

 

Time uploaded in London –  8-49 am (British Summer Time)

 

Post No. 4884

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழில் ராமாயணத்தைத் தந்தான் கவிச் சக்ரவர்த்தி கம்பன். அவன் காலத்தில் சோழ வள நாடு சோறு மட்டுமின்றி ரத்தினக் கற்களிலும் செழிப்பாக இருந்தது. இதை அ வனது பாடல்களில் காண முடிகிறது. அது மட்டுமா?

 

அதிசய நாக ரத்தினம் பற்றியும், தொட்டதை எல்லாம் தங்கமாக்கும் ‘ஸ்பர்ஸ்வேதிக்’ கல் பற்றியும் கம்பன் பாடுகிறான். இது அக்கால நம்பிக்கைகளை எடுத்துக் காட்டுகிறது

 

‘ஸ்பர்ஸவேதி’ என்னும் கல்லை சித்தர்கள் வைத்திருந்தார்கள் என்றும் அதனால் அவர்கள் வேண்டிய அளவுக்குத் தங்கக் கட்டிகளைப் பெற்றார்கள் என்றும் இந்துக்கள் நம்புவர். மேலை நாட்டிலும் மத்திய காலத்தில் இப்படி ஒரு நம்பிக்கை இருந்தது.

 

கம்பன் சொல்வான்; ராமன் ஒர் ஸ்பர்சவேதிக் கல் போலும்; அவன் தொட்டதெல்லாம் தங்கம் ஆகி விடுகிறதே என்று!

 

நாகரத்தினம் உண்டு என்றும், இதைக் கொண்டே நாகங்கள் இரை தேடும் என்றும் தமிழர்கள் நம்பினர் (காளிதாசன் காவியங்களிலும், சங்கத் தமிழ் பாடல்களிலும் உள்ள விஷயங்களை ஏற்கனவே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் கொடுத்துள்ளேன்)

 

கம்பன் இதைச் சொல்கிறான்:-

 

சுந்தர காண்டத்தின் நிந்தனைப் படலத்தில் சீதையைத் தேடி அசோக வனத்துக்குள் வந்த ராவணனை வருணிக்கும் கம்பன் செப்புவான்:-

 

ஒரு மணி தேடும் பல் தலை அரவின்

உழைதொறும் உழைதொறும் உலாவி

 

காம மயக்கத்தால் சீதை இருக்கும் இடத்தை மறந்து போன ராவணன், தன் ஒப்பற்ற மாணிக்கத்தை  இழந்த பல தலைப் பாம்பு போலப் பற்பல இடங்களிலும் அவளைத் தேடித் திரிந்தபடி வந்தான்.

 

 

அனுமன் கடலைத் தாண்டிய வேகத்தில் கடல் நீர் கிழிந்ததாம். அதில் பாதாள லோகமும் அங்கே வாழும் நாகர்களுடைய ரத்தினங்களும் மின்னியதாம்.

 

கீண்டது வேலை நல் நீர் கீழ் உறக் கிடந்த நாகர்

வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன

–கடல் தாவு படலம், சுந்தர காண்டம்.

 

உருக் காட்டுப் படலத்தில் ராமனின் மோதிரத்தை அனுமான் சீதையிடம் கொடுத்தவுடன், மாணிக்கத்தைத் தேடும் பாம்புக்கு அந்த ரத்தினம் கிடைத்து விட்டால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்ளுமோ அது போல சீதையின் மன நிலை இருந்ததாம்.

இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்– என்பான்.

 

வேதிகை மணி

அதிசயமான வேதிகை மணி பற்றிய பாடலும் சுந்தர காண்டம் உருக்காட்டுப் படலத்திலேயே வருகிறது:-

நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்

பூண்டது ஒளிர்பொன் அனைய பொம்மல் நிறம் மெய்யே

ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்

தீண்டு அளவில் வேதிகை செய்தெய்வ மணிகொல்லோ

 

பொருள்:-

நீண்ட கண்களையும் சிறந்த அணிகலன்களையும் உடைய சீதையின் மின்னல் போன்ற உடலின் நிறமானது, மோதிரத்தின் ஒளியால் பொன்னிறம் பெற்றுப் பொலிவும் பூண்டது. இது உண்மை! எனவே, இராமனது மோதிரம் தன்னை நெருங்கும் எல்லாப் பொருள்களும் தன்னைத் தீண்டுகிற மாத்திரத்தில் பொன்னாக மாற்றுகின்ற தெய்வத் தன்மை பெற்ற ஸ்பரிசவேதி என்னும் ரசவாத குளிகைதானோ?

 

ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலத்தில் ராவணன் மாணிக்கத் தேரில் ஏறி வந்ததாகவும் அங்கே ஒன்பது மணிகளால் (நவரத்னம்) ஆன மரங்கள் இருந்ததாகவும் கூறுகிறான்

மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான்

பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற

 

 

நவரத்தினத் தேர், நவரத்தின மோதிரம்!

 

 

ராமன் ஏறிய தேர் பற்றிய வர்ணனை மிகவும் சுவையானது;-

பொன் திரள் அச்சது வெள்ளிச் சில்லி புக்கு

உற்றது வயிரத்தின் உற்ற தட்டது

சுற்று உறு நவமணி சுடரும் தோற்றத்து

ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடும் ஒப்பதே

–பால காண்டம்

 

ராமனின் தேரின் அச்சு-தங்கம், சக்கரம்-வெள்ளி, தேர்த் தட்டு- வைரம், பார்டர்- நவ அர் ரத்தினக் கற்கள், சூரியனின் ஒற்றைச் சக்கரம் போன்றது.

 

 

கிட்கிந்தா காண்டம், கார்காலப் படலத்தில் நவ ரத்தின மோதிரம் பற்றிய வருணனை வருகிறது:

நானிறச் சுரும்பும் வண்டும் நவமணி அணியின் சார- என்ற பாடலில் பல நிறங்களுடைய சுரும்புகளும் வண்டுகளும் நவ மணிகள் இழைக்கப் பெற்றுக் கைகளில் அணிந்து கொள்ளும் மோதிரம் வளை போலக் காந்தள் மலரில் மொய்த்தன– என்று வருகிறது.

இவ்வாறு நவரத்தினம், தங்கம், வெள்ளி பற்றிய குறிப்புகள் நிறையவே உள்ளன. இவை சோழர் கால செல்வ வளத்தின் எதிரொலி என்றால் மிகையாகாது.

 

My Old Articles: –

 

கம்பன், காளிதாசன் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கம்பன்-காளிதாசன்/

18 Oct 2016 – விஷத்தை நீக்கும் இரத்தினக் கற்கள். மனு தம சாத்திரமும் விஷம் பாதிக்காமல் இருக்க அதற்கான ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்கிறது (மனு 7-218).காளிதாசன் சொல்லுகிறான்:- ரகுவம்சம் 2-32. திலீபன் மேய்த்த தெய்வீகப் பசுவை சிங்கம் தாக்கியது. உடனே கோபமடைந்த …

ரத்தினக் கற்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ரத்தினக்-கற்கள்/

22 வகை ரத்தினக் கற்கள். மனிதருள் மாணிக்கம் என்று சிலரைப் போற்றுகிறோம்; ஆங்கிலத்தில் அவன் ஒரு ரத்தினம்என்று நல்லோரைப் போற்றும் மரபுச் சொற்றொடர் உண்டு. மாமன்னன் விக்ரமாதித்தன் அரசவையில் உலக மஹா கவிஞன் காளிதாசன் உள்பட ஒன்பது அறிஞர்கள் இருந்ததை …

 

நாகரத்தினம் பற்றி வராகமிகிரர் கூற்று …

https://tamilandvedas.com/…/நாகரத்தினம்-பற்றி-…

13 Feb 2015 – முடிவுரை: யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது …

 

மாணிக்கம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மாணிக்கம்/

முடிவுரை: யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது உவமையே …

 

TAGS- ரத்தினக் கற்கள், நவரத்தினம், நாக ரத்தினம், வேதிகை மணி,  தங்கம் ஆக்கும் கல்

 

சுபம்–

எண்களின் ரகசியம்: பதிமூன்றும் முப்பதும்! (Post No.4879)

Date- 4 April 2018

 

British Summer Time- 6-03

 

Written by S Nagarajan

 

Post No.4879

 

 

எண்களின் ரகசியம்

 

பதிமூன்றும் முப்பதும்! : மேலை நாட்டினரின் மூட நம்பிக்கை!

 

ச.நாகராஜன்

 

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களை மூட நம்பிக்கை மிகுந்தவர்கள் என்று பிரிட்டிஷார் கேலி செய்வது வழக்கம். ஆனால் உண்மையில் சொல்லப் போனால் அதிக மூட நம்பிக்கைகள் கொண்டவர்கள் அவர்களே!

 

இதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம் உண்டு. இங்கு 13ஆம் எண்ணைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

 

13 என்றாலே மேலை நாட்டவர்களுக்கு அலர்ஜி. பல மாடி அடுக்குக் கட்டிடத்தில் 12ஆம் மாடிக்குப் பிறகு 14ஆம் மாடி தான். பதிமுன்றே கிடையாது.

 

பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவு இப்போது இந்தியாவிலும் கூட இதே நிலை தான். அதே போல 13ஆம் எண் அறையும் கிடையாது. 12 ஏ என்று இருக்கும்!

இதற்கான காரணங்கள் பல.

 

13 ஒரு அதிர்ஷ்டமற்ற எண்.

என்றாலும் ஏசு கிறிஸ்துவிடமிருந்து தான் இந்த எண்ணைப் பற்றிய கெட்ட அபிப்ராயம் தோன்ற ஆரம்பிக்கிறது.

ஏசுவின் இறுதி சாப்பாட்டில் அவர் 12 சீடர்களுடன் இருந்தார்.ஆகவே 13 என்பது அதிர்ஷ்டம் கெட்ட எண்!

தூக்குமரத்தில் தூக்குப் போடுபவனுக்கான கட்டணம் 13 பென்ஸ்.

ஆகவே 13 என்பது அதிர்ஷ்டமற்ற எண்ணாம்! உண்மையில் தூக்குப் போடுபவனுக்கு 13 ½ பென்ஸ் தரப்பட்டது. அரை பென்ஸ் தூக்குக் கயிறுக்கான பணம். ஆகவே 13 பென்ஸ் என்று கொள்ளப்பட்டது.

தூக்கு மேடைக்கு ஏறும் படிகள் 13. ஆகவே 13 அதிர்ஷ்டமற்ற எண்.

 

பெண்களின் மாதவிடாயும் கூட 13 எண்ணின்

அதிர்ஷ்டமின்மைக்கு ஒரு காரணமாம். ஆண்டுக்கு 13 முறை அவர்கள் மாதவிலக்கை அடைகின்றனராம்!

 

13 எழுத்துக்கள் பெயரில் இருந்தால் அபாயமாம். ஏனெனில் கொடும் கொலைகளைச் செய்த கொலையாளிகள் 13

எழுத்துக்களைக் கொண்ட பெயர்களையே உடையவர்களாக இருந்தார்களாம். இதற்கான பெரிய் பட்டியலே தயார்!

13ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக அமைந்தால் மாபெரும் ஆபத்து! அன்று எந்த வித வியாபாரமும் செய்யக் கூடாது. மீறிச் செய்தால் நஷ்டமும் துரதிர்ஷ்டமும் பீடிக்கும். ஆகவே பல பில்லியன் டாலர் அளவுக்கு வணிகம் முடங்குமாம் அன்று!

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

ஆகவே பிரிட்டிஷாரோ அல்லது இதர மேலை நாட்டினரோ ஹிந்துக்களைப் பற்றி இழிவாகக் கூறுவதற்கோ அல்லது விமரிசிப்பதற்கோ தகுதியானவர்கள் இல்லை.

அடுத்து எண் முப்பது சபிக்கப்பட்ட எண்ணாம் – அவர்களின் கருத்துப் படி! ஏனெனில் ஜுடாஸ் ஏசுவை காட்டிக் கொடுக்க அவன் பெற்ற பணம் 30 வெள்ளிக் காசுகள். இன்னொரு நம்பிக்கை ஏசு கிறிஸ்து தனது உபதேசங்களை அவரது 30ஆம் வயதில் செய்ய ஆரம்பித்தாராம்!

 

ஆக ஐஸ்பெர்க்கின் டிப் என்று சொல்வார்களே அது போல மேலை நாட்டினரின் ஏராளமான மூட நம்பிக்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே இந்த 13!

 

இப்படி ஏராளம் உண்டு. பின்னால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது விரிவாகக் காண்போம்!

***

 

விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 3 (Post No.4851)

Date: MARCH 26, 2018

 

 

Time uploaded in London- 6-26 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4851

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

பாக்யா 16-3-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு மூன்றாம் கட்டுரை

அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள்ஒரு அரிய தொகுப்பு! – 3

by .நாகராஜன்

 

முதல் விண்வெளி நடைகள்

முதன் முதலில் விண்வெளியில் நடந்தவர் அலெக்ஸி லியோனோவ் (Alexei Leonov). 1965, மார்ச், 18 அன்று வோஷ்காட் 2 இல் 12 நிமிடம் நடந்தார். அவர் விண்கலத்திற்குள் திரும்பிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதாகப் பின்னர் தெரிவித்தார்.ஆனால் பத்திரமாகப் பூமிக்கு வந்து சேர்ந்தார்.

1965, ஜூன் 3ஆம் தேதி அமெரிக்கரான எட் வொயிட் முதன் முதல் விண்வெளியில் நடந்த அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார். இதன் பின்னர் 20 வருடங்கள் எந்தப் பெண்மணியும் விண்வெளியில் நடக்கவில்லை. ஸ்வெட்லானா சவிசட்ஸ்கயா 1984, ஜூல 25ஆம் தேதி விண்வெளியில் நடந்தார். சல்யுட் 7 ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வெளியில் அவர் நடந்தார். விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கப் பெண்மணி காதரின் சல்லிவன்.ஸ்பேஸ் ஷட்டில் சாலஞ்சரில் 1984, அக்டோபர் 11ஆம் தேதி அவர் விண்வெளி சென்றார்.

கயிறு கட்டப்படாமல் ப்ரூஸ் மக் காண்ட்லெஸ் 1984 பிப்ரவரி 7ஆம் தேதி நடந்து அரிய சாதனை நிகழ்த்தினார்.

 

அதிக விண்வெளிநடைகள்

ரஷிய விண்வெளி வீரரான அனடோலி சொலொவியவ் 1980 முதல் 1990 முடிய 5 தடவைகளில் 16 முறை விண்வெளி நடைகளை மேற்கொண்டார். இதில் 82 மணி நேரம் அவர் விண்கலத்திலிருந்து வெளியில் இருந்திருக்கிறார். இது ஒரு சாதனையாகும்.

அமெரிக்க விண்வெளி வீரரான மைக்கேல் லோபஸ் -அல்ஜீரியா 10 முறை விண்வெளியில் நடந்தார். மொத்த நேரம் 67 மணிகள் 40 நிமிடங்கள். இவரைத் தொடர்ந்து அமெரிக்க வீராங்கனையான பெக்கி விட்ஸன் 10 விண்வெளி நடைகளை மேற்கொண்டார். மொத்த நேரம் 60 மணிகள் 21 நிமிடங்கள்!

நீண்டநேரம் நடந்த ஒரே விண்வெளிநடை

2001,மார்ச் 11ஆம் தேதி நாஸா விண்வெளி வீரர்களான ஜிம் வோஸ் மற்றும் சூசன் ஹெல்ம்ஸ் டிஸ்கவரி கலத்தின் வெளியே மற்றும் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் வெளியே STS 102 மிஷனின் போது 8 மணி நேரம் 56 நிமிடங்கள் கழித்தனர். சில பராமரிப்பு வேலைகளையும் இவர்கள் செய்தனர்! இதையே நீண்ட நேர விண்வெளி நடையாக வரலாறு பதிவு செய்கிறது.

அதிக மனிதர்கள் விண்வெளியில்..

நாசாவின் STS 127 மிஷனில் 13 வீரர்கள் 2009இல் எண்டவர் கலத்தில் இருந்தனர்! 2009 ஜூலையில் எண்டவர் கலம் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுடன் பொருத்தப்பட்டது. அதில் உள்ள 7 பேர்கள் லேபுக்குள் சென்றனர். அங்கு ஏற்கனவே 6 பேர்கள் இருந்தனர். ஒரே சமயத்தில் 13 பேர்கள் இருந்தது ஒரு பெரிய ரிகார்டாகும்!

அதிக பெண்கள் ஒரே சமயத்தில் விண்வெளியில்!

நான்கு பெண்கள் விண்வெளியில் இருந்தது ஒரு சாதனையாகும். 2010 ஏப்ரலில் நாஸாவின் ட்ரேசி களாட்வெல் டைஸன் ரஷிய சோயுஸ் கலத்தில் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார். அங்கு அவருடன் நாஸாவின் ஸ்டெப்னி வில்ஸன். டோராதி மெட்கால்ப் – லிண்டர்பெர்கர், ஜப்பானின் நயோகோ யமஸாகி ஆகியோர் இணைந்தனர். STS 131  மிஷனில் டிஸ்கவர் கலத்தில் இவர்கள் சென்றனர்!

அதிக செலவான விண்கலம்

இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒரு புட் பால் கிரவுண்ட் அளவு பெரியது. ஐந்து பெட் ரூம் வீடு போன்றது.இது 1998இல் நிலை. 2012இல் அது கட்டி முடிக்கப்பட்டபோது இன்னும் விரிவாக்கப்பட்டது.

இதற்கான செலவு 2011இல் 100 பில்லியன் டாலர்! இது இன்னும் கூடுதல் செலவை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

பெரிய விண்கலம்

இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் தான் பெரிய விண்கலம்! 15 நாடுகளின் பிரதிநிதித்வம் கொண்ட இது ஐந்து ஸ்பேஸ் ஏஜன்ஸிகளின் பொறுப்பில் உள்ளது. இதன் நீளம் 357.5 அடி.  சூரிய தகடுகள் இதில் உள்ளன. அதன் இறக்கை அகலம் 239.4 அடி!

இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனை பூமியிலிருந்து டெலஸ்கோப்பின் துணையின்றி வெறும் கண்களினாலேயே பார்க்கலாம்! இப்போது இதில் ஆறு வீரர்கள் உள்ளனர். உள்ளே உள்ள அறைகள் போயிங் 747 ஜம்போ ஜெட் அளவு பெரியது!

 

விண்வெளி வீரர்களின் சாதனைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. கலங்களின் பெருமைகளும் கூடிக் கொண்டே போகின்றன.

இனி வரும் காலம் விண்வெளிக் காலம் தான்!

(50 ஆண்டுக் கால சாதனைகளின் பட்டியல் முற்றும்)

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

உலகம் இதுவரை கண்டிராத ஜீனியஸ் லியனார்டோ டா வின்சி தான்!கலைஞர், விஞ்ஞானி, ஓவியர் என்று இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். பல அறிவியல் ஆய்வாளர்களும் இவரது வெற்றிக்குக் காரணம் என்ன என்பதை அறிய இவரைப் பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சியைச் செய்து கொண்டே இருக்கின்றனர் –  சில காரணங்கள் இதோ:-

 

டா வின்சி எதையும் கூர்மையாகக் கவனிப்பவர். உடனடியாக எதையும் நோட்ஸ் எடுத்துக் கொள்ளும் இயல்பினர்.ஒரு நாள் கலை, மறு நாள் ஸயின்ஸ் – இப்படித் தன் வாழ்க்கையை அவர் வகுத்துக் கொண்டார். இரண்டும் அவருக்கு ஒன்று தான். இன்னும் 7200 பக்கங்கள் கொண்ட இவரது நோட் புக்குகள் அதிசயிக்க்கத் தக்கவை. இதைப் போல மூன்று மடங்கு அவர் குறிப்பெடுத்து வைத்திருந்தார்! எனக்குத் தெரியாதவற்றைக் கேள்விகளாக்கி அவற்றுக்கு விடை கண்டுபிடிப்பதை வாழ்நாள் பணியாகக் கொண்டிருக்கிறேன் என்கிறார் அவர்!

ஓவியம் என்று எடுத்துக் கொண்டால் அது பெஸ்ட் என்று கூறும்படி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்படியே வைத்து விடுவார்! சிலவற்றைப் பல வருடங்கள் கழித்தே அவர் முடித்தார். மோனாலிஸாவை முடிக்க மட்டும் அவர் 10 முதல் 14 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். உலகின் மாஸ்டர்பீஸ் நம்பர் ஒன்றாக அது ஆகிவிட்டது!

கேள்விகள், பதில்கள், கூர்ந்து கவனித்தல், க்யூரியாஸிடி, பெர்ஃபெக் ஷன் _ இது தான் லியனார்டோ டா வின்சி என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். சரி தானே!

****

 

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 2 (Post No.4848)

Date: MARCH 25, 2018

 

 

Time uploaded in London- 6-32 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4848

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

நகைச்சுவை நடைச்சித்திரம்

 

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 2

 

ச.நாகராஜன்

 

 

T.Q.C.!  T.Q.C.!!

அப்படி என்றால்?

TOATAL QUALITY CONTROL!!!

ஜப்பானின் முன்னேற்றத்திற்குக் காரணம் தரம்!

தரம், தரம்,தரம்.

நிரந்தரம் வேண்டும் தரம்!

ஆஹா, கடைக்கு ஓடினேன்.

அள்ளினேன், அனைத்து டி.க்யூ.சி. புத்தகங்களையும்!

எல்லா ஜப்பானிய வார்த்தைகளையும் கற்றுக் கொண்டு அவ்வப்பொழுது அதை விடுவேன்.

அனைவரும் அசந்து விட்டனர்.

சற்று பயபக்தியுடன் பார்த்தனர்.

ஏதாவது சந்தேகம் என்றால் கூட என்னை வந்து பார்க்க ஆரம்பித்தனர்.

நிர்வாகம் சிந்தித்தது.

அப்போது தான் வந்தது க்யூ.சி.

அதாவது க்வாலிடி சர்க்கிள்.

தர வட்டம்.

தரத்தைக் கொண்டு வர தொழிலாளர்களின் சிறு குழுக்களை அமைத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது தர வட்டத்தின் நோக்கம்.

 

அனைத்து மானேஜர்களுக்கும் தர வட்டம் அமைக்க உத்தரவானது.

எனது தொழிலகத்தில் சுமார் ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.

அதிகமான தர வட்டம் யாருக்குக் கிடைத்தது?

ஊகிக்கவே வேண்டாம், எனக்குத் தான்!

 

மாலை 4 மணி முதல் இரண்டு ஷிப்டு தொழிலாளர்களையும் சந்தித்து இரவு 8 மணி வரை க்ளாஸ் எடுத்து அதற்கு மேல் அலுவலக பெண்டிங் வேலையைக் கவனித்து…

சுமார் 800 மனித மணிகள் (மேன் ஹவர்ஸ்) க்ளாஸ் எடுத்தேன்.

பாரடோ சார்ட் என்பது முக்கியம்.

சார், பரோடா கிடைக்குமா சார்!

 

பரோடா இல்லை, பாரடோ சார்ட்.

அதன் மூலம் உடனடியாக ஒரு பிரச்சினையை இனம் கண்டு தீர்த்து விடலாம்.

 

சார், அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஃபிஷ் போன் டயாகிராம் வரைய வேண்டும்.

சார், ஃபிஷ் என்ன ஃபிஷ் சார்? தருவார்களா, சார்!

அதில்லை, அப்படி ஒரு படம்.

வைடல் ஃபியூ, ட் ரிவியல் மெனி. (VITAL FEW TRIVIAL MANY)

அதாவது முக்கியமான காரணம் சில தான். குட்டி குட்டி வேண்டாத காரணங்கள் பல.

 

சார், புரியவில்லை.

உங்கள் வீட்டில் உள்ள ஒரு பிரச்சினையைச் சொல்லுங்கள்.

சார், பையன் படிக்கவே மாட்டேன் என்கிறான்.

சரி, அதற்கான காரணத்தை படத்தில் வரைவோம்.

ஏராளமான காரணங்களை படத்தில் ஏற்றினோம்.

வைடல் காரணம்,பணம் இல்லை!

அதை எப்படி சார் கொண்டு வருவது?

அவசரம் அவசரமாக க்ளாஸை முடித்தேன்.

தர வட்ட மாஸ்டர் ஆனதால் எல்லோரும் என்னை மதிப்புடன் பார்த்தனர். தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டனர்.

 

அதற்குள் நிர்வாகம் அதிரடியாக உத்தரவைப் போட்டது.

ஜஸ்ட் இன் டைம்! JUST IN TIME – JIT

ஜே ஐ டி வந்து விட்டதால் அந்தந்த சாமானை அன்றன்று வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டாக் என்ற பேச்சே இருக்கக் கூடாது.

ஜப்பானில் அப்படியே மூலப் பொருள்கள் லாரி லாரியாக வருகிறதாம். அது லைன் அசெம்பிளிக்கு நேராகப் போய் வண்டியாக – மோட்டார் சைக்கிளாக, காராக மாறுகிறதாம்!

சரி, ஜே ஐ டி வாழ்க.

 

 

ஆனால், துரதிர்ஷ்டம் ஆங்காங்கே வண்டிகள் முடியாமல் அலங்கோலமாக அரைகுறையாக நின்றன.

பல ஆண்டு வாடிக்கையாளர்கள் திகைத்தனர். என்ன சார், இது?

நிர்வாகம் அலறியது.

உடனடி மீட்டிங்!

 

 

லாரி ஸ்டிரைக், ஆகவே பல பொருள்கள் வரவில்லை.

வந்ததில் ஒரு ஷீட் உடைந்து விட்டது.

கூடவும் வாங்கக் கூடாது, அன்றன்று வந்து சேர்வது போல ஆர்டர் செய்ய வேண்டும்!

சப்ளை மானேஜர் அழுதார்.

வேண்டாம், ஜஸ்ட் இன் டைம்.

 

 

இனி அட்வான்ஸ்ட் ப்ளானிங் செய்யுங்கள்.

அப்பாடா, மள மளவென்று வண்டிகள் முடிந்தன.

அடுத்தாற் போல வந்தது – ஃப்ளெக்ஸிபிள் மானுபாக்சரிங் சிஸ்டம்! FLEXIBLE MANUFACTURING SYSTEM!

அதாவது எல்லா அசெம்பிளி பார்ட்டுகளும் நெகிழ்வாக இணைய வேண்டும்.

 

ஓடு, ஒரு கோர்ஸுக்கு.

ஓடினோம்.

என்ன செய்யலாம்?

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கஸ்டம் பில்ட் வண்டி நம்முடையது. அதில் இது ஒத்து வருமா?

 

முட்டி மோதி, வாடிக்கையாளர்களிடம் கேட்டது ஒண்ணு, தர்றது ஒண்ணு என்று வசவு வாங்கி, முழித்துக் கொண்டோம்.

அப்போது தான் எனக்கு வந்தது அபாயம்!

தேர்ந்தெடுத்த டாப் மானேஜர்கள் சுமார் நூறு பேரைக் கொண்ட ஒரு கூட்டம் மாதாமாதம் எங்கள் குழுமத்தில் நடக்கும்.

அதில் நான் புது டெக்னிக்கைப் பற்றிப் பேச வேண்டும்.

எனக்கு வந்தது – ரீ எஞ்சினியரிங்.

 

 

அதாவது இருக்கும் ஆதார வளத்தைக் கொண்டு போட்டியாளர்களை முந்திச் செல்வதோடு அவர்கள் நம்மை எளிதில் அணுகாதவாறு ஒரு தடையையும் ஏற்படுத்த வேண்டும்.

நூறு பேர்களும் புத்திசாலிகள். கேள்வி நேரத்தில் கொத்திக் கொத்தி குலை உயிரும் குற்றுயிருமாக ஆக்கி விடுவார்கள்.

தைரியமாக எனது பேப்பரை தயார் செய்தேன்.

கேள்விகளை குதர்க்கமாக நானே தயார் செய்து அதற்கு நகைச்சுவையுடன் கூடிய பதில்களைத் தயாரித்து முன்னதாகவே வைத்துக் கொண்டேன்.

 

வெற்றி, மாபெரும் வெற்றி.

இதற்கு நடுவில் ஐ ஆம் ஓகே, யூ ஆர் ஓகே வேறு.

I AM OK, YOU ARE OK!!!

 

பார்ப்பவர்கள் எல்லாம் ஐ ஆம் ஓகே, ஆர் யூ ஓகே என்று கேட்டுத் திரிந்தோம்.

 

அடுத்து வந்தது ஆடோ கேட்! கம்ப்யூட்டர் மானுபாக்சரிங்!

ஓடுங்கள், கம்ப்யூட்டர் கோர்ஸுக்கு. படியுங்கள் ஆட்டொ கேட்!

ஆக, இப்படியாக பல்லாண்டுகள் ஓடி விட்டன.

அடுத்தடுத்து ஒரு அலை!

 

கடைசியாக ஒரு முடிவுக்கு வர முடிந்தது.

புத்தியை உபயோகித்து, நிர்வாகத் தலைமையை அனுசரித்து, வாடிக்கையாளர்களின் தேவையை ப்ளான் செய்து அதைப் பூர்த்தி செய்வதே நமது இந்திய சூழ்நிலைக்கு உகந்தது.

ஆஹா, அருமையான ஞானோதயம் சார்!

 

 

ஆனால் அதற்குள் ரிடையர்மெண்ட் வந்து விட்டது.

இருந்தாலும் சொல்கிறேன். ஓடுகின்ற உலகத்தோடு ஓடுங்கள்.நீங்கள் நின்றால் தேக்கம். ஓடினால் சர்வைவல். அதிக ஸ்பீடுடன் ஓடினால் களைப்பீர்கள் அல்லது மற்றவரிடம் திட்டு வாங்குவீர்கள்!

 

 

ஓடுங்கள், சார், ஓடுங்கள்! உலகத்தோடு ஓடுங்கள்!!!

எனது ரிடையர்மெண்ட் காலத்தில் உங்களை வேடிக்கை பார்க்கிறேன்!

****

முற்றும்

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! (Post No.4845)

Date: MARCH 24, 2018

 

 

Time uploaded in London- 6-16 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4845

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நகைச்சுவை நடைச்சித்திரம்

 

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 1

 

ச.நாகராஜன்

 

நிர்வாகம் என்ன எதிர் பார்க்கிறது என்பதை எல்லா மேனேஜர்களும் அறிவது அவசியம் என்பதன் அடிப்படையில் எங்கள் அனைவருக்கும் புரிய வந்தது  தாரக மந்திரமான ஒரே வார்த்தை என்பது தான்!

 

எஃபிஸியன்ஸி – EFFICIENCY

ஆம், அது தான் வேண்டும்!

 

உடனடியாக ஒரு நண்பரைப் பார்க்கப் போனேன்.

அவர் நான் போனவுடன் ஒரு புத்தகத்தை ஓரமாக ஒளித்து வைத்துக் கொண்டார்.

 

எட்டிப் பார்த்தேன். ஊஹூம், ஒன்றும் தெரியவில்லை.

என்ன புத்தகம் என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று மழுப்பி விட்டார். மண்டை குடைந்தது! என்ன புத்தகம்?!

 

எஃபிஸியன்ஸி பற்றிப் பேசி விட்டுக் கிளம்பினேன்.

எங்கும் இதே தான் பேச்சு என்றார்.

அடுத்த நாளும் அவர் ரூமுக்குச் சென்றேன் – தேவையில்லாவிட்டாலும் கூட!

அவர் ஒரு நிமிடம் என்று பாத்ரூமுக்குச் சென்ற போது புத்தகங்களைக் குடைந்தேன்.ஆஹா, கிடைத்தது அவர் படித்த புத்தகம்.

 

ஒன்று டேல் கார்னீகி எழுதிய ‘ஹௌ டு வின் ஃப்ரண்ட்ஸ் அண்ட் இன்ஃப்ளூயன்ஸ் பீபிள்’ இன்னொன்று நெப்போலியன் ஹில் எழுதியது – தி சக்ஸஸ்.

 

ஆஹா, வந்த காரியம் முடிந்தது.

குட்டி அரட்டையுடன் அங்கிருந்து கிளம்பினேன்.

டேல் கார்னீகி புத்தகத்தை முதலில் வாங்கினேன்.

அட்டை டு அட்டை படித்தேன். அற்புதம்.குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.

 

என்ன கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்று நண்பர்களே கேட்டு விட்டனர்.

 

எஃபிஸியன்ஸி.

ஆனால் இது ரொம்ப நாள் ஓடவில்லை.

இன்னும் அதிக எஃபிஸியன்ஸி தேவையாம்.

ஓடினேன் கடைக்கு. நெப்போலியன் ஹில்லின் புத்தகத்தை வாங்கினேன். அடடா,சக்ஸஸ் ஃபார்முலா, எப்படித் தருகிறார்!

ஆழ்மனதை உபயோகியுங்கள்.

 

சரி, உபயோகிக்கிறேன்.

 

எல்லா டெக்னிக்கையும் அத்துபடி செய்து கொண்டு அலுவலகத்தில் ஆழ்மன எக்ஸ்பர்ட் போல நடந்தேன்.

சற்று விசித்திரமாக என்னப் பார்த்தார்கள்!

எல்லாம் ஆழ் மனம் பார்த்துக் கொள்ளும்!

இல்லை என்றது நிர்வாகம்.

சோம்பி இருக்கிறீர்களே!

 

வாருங்கள், தெரிந்து கொள்ளுங்கள் எம்.பி.ஓ -ஐ என்றது!

M.B.O.?!

 

MANAGEMENT BY OBJECTIVE!

ஆஹா, குறிக்கோளின்றிக் கெட்டேனே என்று அப்பர் பிரான் சும்மாவா பாடினார்?

 

இலக்கு என்ன?

எழுதி எழுதி நிர்வாகத்தின் குறிக்கோளை நோக்கி நடை பயில ஆரம்பித்தோம்.

 

அடடா, அதற்கு வந்தது அல்பாயுசு!

ஒரு நிமிடத்தில் ஒரு மேனேஜர் எல்லாவற்றையும் முடிக்க வேண்டுமாம்.

 

எப்படி ஐயா சாத்தியம் அது?!

ஒரு மேனேஜர் இருக்கிறார், அவர் டேபிளில் பேப்பரே கிடையாது. க்ளீன்! அவர் மாதிரி ஆகு!

யார் ஐயா அவர்? வியப்புடன் கேட்டேன்.

ஒன் மினட் மேனேஜர்!

ONE MINUTE MANAGER!

ஓடினேன் கடைக்கு!

சார், ஒன் மினட் மேனேஜர் புக் கொடுங்கள்.

சார், ஒரு சீரிஸே இருக்கிறது.

எல்லாவற்றையும் கொடுங்கள்.

 

இரவு முழுவதும் ஒன் மினட் மேனேஜர் ஆக ஐந்து மணி நேரம் – 300 நிமிடங்கள் செலவழித்தேன்.

டேபிளை க்ளினாக வைத்ததன் பலன், “அவருக்கு வேலையே இல்லை போல இருக்கிறது.இன்னும் கொஞ்சம் லோடை ஏற்றுங்கள்” என்று நிர்வாகம் கூற நான் முழி பிதுங்கி ‘ஙே’ என்று ஆனேன்.

 

ஒன் மினட்டைக் கழட்டி விட்டேன்.

மானேஜர்களுக்கு ஆரோக்கியம் தான் முக்கியம். ஓடுங்கள் ஒரு கோர்ஸுக்கு என்று துரத்தவே ஆரோக்கிய கோர்ஸுக்கு ஓடினேன்.

 

ஒரு நாள் முழுவதும் கேள்விகளால் துளைத்தனர்.

கடைசியில் கோர்ஸ் முடிய இன்னும் முப்பது நிமிடமே இருக்கும் சமயம் அரிய ஆரோக்கிய ரகசியத்தை அருளினர்.

இரு கைகளையும் விரல்களால் நன்கு மூடித் திறக்க வேண்டும்.

இதனால் ரத்தம் சீராக உடலில் பாயும்.

சீராக ரத்தம் பாய்ந்தால் ஆரோக்கியம் மேம்படும்.மன நலம் உயரும்!

 

அடடா, ஆரோக்கிய ரகசியத்தைக் கேட்டு அனைவரும் அலுவலகம் திரும்பினோம்.

வந்தது பாருங்கள், ஒரு ஜப்பானிய அலை!

அதில் மூழ்கியவன் பல ஆண்டுகளுக்கு அம்பேல் ஆகிப் போனேன்.

 

அது என்ன ஜப்பானிய அலை என்கிறீர்களா?

உலகின் டாப் நிறுவனங்களான டொயோடோ, சுஸுகி ஆகியவை மற்ற மேலை நாடுகளை விட அதிகம் உற்பத்தித் திறன் கொண்டுள்ளது.

 

அதன் டெக்னிக்குகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.

நிர்வாகத்தின் உத்தரவால் எல்லோரும் ஜப்பான் வாழ்க என்று கோஷம் போட்டோம்!

 

டசாடா இஷ்கு, குமுட்டி பஷ்கோ,கஸ்வாகி ..

என்ன, குழம்புகிறீர்களா?

 

பழைய ஜப்பானிய வார்த்தைகள் மனதில் நிழலாட ஒரு நிமிடம் குழப்பமாகி விட்டது.

 

வாருங்கள், ஜப்பானிய அலையில் மிதப்போம்.

 

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஒடுங்கள் – வெற்றி பெற என்பதல்லவா நமது தாரக மந்திரம்!

 

அடுத்த கட்டுரையுடன் முடியும்

***

 

விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 2 (Post No.4839)

Date: MARCH 22, 2018

 

 

Time uploaded in London- 7-18 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4839

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

9-3-18 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு இரண்டாம் கட்டுரை

அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள்ஒரு அரிய தொகுப்பு! – 2

.நாகராஜன்

 

உலகின் தலை சிறந்த அறிவியல் இதழ்களான நேச்சர், ஸயிண்டிஃபிக் அமெரிக்கன், ஸ்பேஸ், லைவ் ஸயின்ஸ் இவை அனைத்தையும் வாங்கிக் கட்டுபடியாகாது. மாதம் பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். அந்தக் கவலையின்றி அனைத்து முக்கிய அறிவியல் தகவல்கலையும் இங்கு படித்து மகிழலாம்.

50 ஆண்டு கால் சாதனைகளின் தொகுப்பு தொடர்கிறது:

குறுகிய கால விண்வெளிக் கல மிஷன்

நாஸா வீரரான ஆலன் ஷெப்பர்ட் விண்கலமான ஃப்ரீடம் 7இல் 15 நிமிடங்களே பறந்தார். இப்படிப் பறந்த முதல் அமெரிக்கர் என்ற புகழை  ஈட்டினார். 115 மைல் உயரத்தில் பறந்த அவர் புறப்பட்ட ஃப்ளோரிடா தளத்திற்கு 302 மைல் தள்ளி அட்லாண்டிக்கில் தொப்பென இறங்கினார். 1971இல் அபல்லோ 14இல் சந்திரனுக்கு அவர் சென்ற போது 47 வயதான அவர் இன்னொரு உலகின் பரப்பில் நடநத அதிக வயதானவர் என்ற சாதனையைப் படைத்தார்.

அதிக தூரம் சென்றவர்

பூமியிலிருந்து அதிக தூரம் சென்ற ரிகார்டு 47 வருடமாக முறியடிக்கப்படவில்லை.1970 ஏப்ரலில் அபல்லொ 13 மிஷனில் கலம் சந்திரனின் எதிர்ப் பக்கம் சென்றது. 158 மைல் உயரத்தில் பறந்த அது 2,48,655 மைல் தூரம் தள்ளி இருந்தது. இதுவே பூமியை விட்டுச் சென்ற அதிக பட்ச தூரமாகும்.

 

அதிக நேரம் விண்வெளியில் கழித்தோர்

ரஷிய விண்வெளி வீரர் ஜென்னடி பாடல்கா 878 நாட்கள் 5 விண்கலப் பயணங்களில் இருந்துள்ளார். அமெரிக்க பெண்மணி பெக்கி விட்ஸன் 665 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார்.

நீண்டகாலம் தொடர்ந்து விண்ணில் இருந்த கலம்

இந்தப் பெருமை இண்டர்நேஷனல்  ஸ்பேஸ் ஸ்டேஷனைச் சாரும்.100 பில்லியன் டாலர் செலவில் சுழலும் லாப் கலமான இது 2000, நவம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதில் தொடர்ந்து யாரேனும் இருந்து வருகின்றனர். அக்டோபர் 31, 2000இல் ஸ்டேஷனுக்கான க்ரூ அனுப்பப்பட்டதையும் சேர்த்தால் இரு நாட்கள் அதிகம். ஆக இது தான் விண்வெளியில் மனிதர் இருக்கும் அதி நீண்ட காலம்!

நீண்ட ஸ்பேஸ் ஷட்டில் மிஷன்

கொலம்பியா STS -80 கலம் 1996, நவம்பர் 19இல் விண்ணில் ஏவப்பட்டது. இது திட்டப்படி டிசம்பர் 5இல் திரும்பி இருக்க வேண்டும். ஆனால் காலநிலை சரியில்லை. ஆக இரு நாட்கள் கழித்துத் திரும்பியது. ஆக இது விண்ணில் இருந்த நேரம், 17 நாட்கள், 16 மணி நேரம். இது தான் அதிக பட்ச நேரம் கொண்ட ஷட்டில் மிஷன்!

சந்திரனில் அதிக நேரம்

1972, டிசம்பரில் ஹாரிஸன் ஷ்மிட், யூஜென் கெர்னான் ஆகியோர் அபல்லோ 17 இல் பறந்து 75 மணி நேரம் மூன்று நாட்களுக்கும் மேலாகக் கழித்தனர். சந்திரப்பரப்பை ஆராய்ந்தனர். மொத்தம் 22 மணி நேரம் மூன்று முறை நடந்தனர்.

1969 ஜூலை 20இல் அபல்லோ 11இல் பறந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் தனது ஈகிள் ல்யூனர் மாடுலில் இறங்கினார். அவரது சகா பஸ் அல்ட்ரின் பின்னால் இறங்கினார்.  2 மணி நேரம் 31 நிமிடம் நடை நீடித்தது. இது ஹாலிவுட் படம் ஒன்றின் நீளம் என்பது அதிசயிக்கத்தக்க ஒரு ஒற்றுமை!

அதிவேக விண் பயணம்

அபல்லோ 10 சந்திரப் பயணம் பயங்கர வேகத்தைக் கொண்டதாக இருந்தது. 24,701 மைல் பர் ஹவர். 1969 மே 26இல் இது திரும்பி பூமிக்கு வந்தது. இதுவே இதுவரையிலான உச்ச பட்ச ஸ்பீட்!

அடுத்த இரண்டு மாதத்தில் நிகழ விருக்கும் பிரம்மாண்ட உலக சாதனைக்கான ஒரு சோதனை முன்னோட்டமாக இருந்தது இது.

விண்வெளி வீரர் மேற்கொண்ட அதிகபட்ச பயணங்கள்

இரு நாஸா வீரர்களான ஃப்ராங்க்ளின் சாங்-டையஸ், ஜெர்ரி ரோஸ் ஆகிய இருவரும் ஏழு முறை நாஸா ஷட்டில்களில் பயணித்துள்ளனர். சாங் 1986 முதல் 2002 முடியவும் ரோ 1985 முதல் 2002 முடியவும் இந்தப் பயணங்களை மேற்கொண்டனர்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

கொரிய வீராங்கனையான சோயியான் யி (Soyeon Yi), இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் வெற்றிகரமான தனது பயணத்தை முடித்துக் கொண்டு ரஷிய சோயுஸ் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருநதார்.

ஸ்பேஸ்  ஸ்டேஷனிலிருந்து கலம் விடுபடும் போது அவசரமாக விடுவிக்கவேண்டியதாயிற்று..அத்னால் சீக்கிரம் வரும் பாதை மாறி பின்னர் மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யப்பட்டது..

க்லம் வளிமண்டலத்தில் கீழே தானாகவே அதன் அழுத்தத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. வேகமாக, அதலபாதாளத்தில் அபாயகரமாக கல்ம் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது. சாதாரணமாக் மூன்று நான்கு ஹெலிகாப்டர்கள் வட்டமடித்து பாதுகாப்பை உறுதி செய்யும். அன்று ஒரு ஹெலிகாப்டரையும் காணோம்.

கலம் தானாக தரையில் மோத சோயியான் யி கதவைத் தானே திறக்க அங்க சற்று தூரத்தில் இருந்த ஆட்டிடையர்கள் திகைத்துப் போனார்கள்.

 

புல்வெளியில் படுத்துக் கிடந்த அவரை கழகஸ்தானிய இடைப் பெண்மணி ஒருத்தி தூக்கி உதவினார்.  அவர்களுக்கு விண்வெளித் திட்டம் பற்றி ஒன்றும் தெரியாது. விண்வெளி சூட்டை அணிந்திருந்த அவர்கள் அயல்கிரக வாசிகள் போலவே தோற்றம்ளித்தனர். எல்லோருமாகச் சேர்ந்து சோயுஸ் க்லத்தில் மாட்டிக் கொண்டிருந்த ஒருவரை வெளியில் கொண்டு வந்து உதவினர்.

கள்ளங்கபடமில்லாத அவர்களிடம் மொபைல் இருக்கிறதா என்று கேட்க அவர்கள் திகைத்தனர்.. பின்னர் கலத்தினுள் சென்று ஜிபிஎஸ் உதவியுட்ன் இருக்குமிடத்தை நிரணயித்து கலத்தின் மூலமாகவே கீழே உள்ள தரை ஸ்டேஷனைத் தொடர்பு கொண்டனர்.

கடைசியாக 300 மைல் தொலைவிலிருந்து ஒரு ஹெலிகாப்டர் வந்து சேர்ந்தது.

முதல் முதலில் விண்ணுக்கு ஏகி பூமி திரும்பும் தங்கள் முதல் வீராங்கனை தரை இறங்குவதை கொரியர்கள் ஆவலாகப் பார்த்த போது இந்த விபரீதம் ஏற்படவே அனைவரும் கலங்கிப் போனார்கள்.

கடைசியில் எல்லாம் சுபம் என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

 

“வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபமாக இது ஆனது என்றார் சோயியான் யி!

 

சென்னைக்கு அருகில் ஒரு இயற்கை அதிசயம் (Post No.4838)

Written by London Swaminathan 

 

 

Date: 21 MARCH 2018

 

 

Time uploaded in London – 21-16

 

Post No. 4838

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

தமிழ்நாட்டில்  விழுப்புரம் அருகிலுள்ள திருவக்கரை– வக்ரகாளியம்மன் கோவிலாலும், பாடல் பெற்ற சிவன் கோவிலாலும் பக்தர்கள் இடையே பிரபலமான இடம். ஆனால் கோவிலுக்கு சில மைல் தொலைவில் ஒரு பெரிய இயற்கை அதிசயம் இருப்பது பலருக்கும் தெரியாது.

 

புவியியல் துறையினர் ஒரு போர்டா (board)வது வைத்து மக்களை ஈர்க்க வேண்டும்

என்ன அதிசயம்?

திருவக்கரையில் ஒரு கல் மரப் பூங்கா இருக்கிறது. அங்கே இரண்டு கோடி ஆண்டுப் பழமையான கல் மரங்கள் இருக்கின்றன. 247 ஏக்கர் பரப்புக்கு இந்தக் கல் மரங்கள் இருந்தாலும், சிறிய இடத்தை மட்டும் பொது மக்களின் பார்வைக்காக ஒதுக்கியுள்ளனர். அனுமதி இலவசம். ஒர் காவற்காரர் மட்டும் அங்கேயிருந்து வருவோர் போவோரிடம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்குகிறார்; பாராட்ட வேண்டிய பணி.

 

கல் மரம் என்றால் என்ன?

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் காடுகளில் இருந்த சில மரங்கள் மட்டும் காலப்போக்கில் கல் போல ஆகி விடுகின்றன. அதாவது மரத்தில் இருந்த செல் cell போன்ற உயிருள்ள பகுதிகளில் சிலிகா silica எனப்படும் மணல் புகுந்து கற்கள் ஆகி விடுகின்றன. ஆனால் தோற்றத்தில் மரங்கள் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கும். இவ்வாறு 30 மீட்டர் நீளம் வரை மரங்கள் இருக்கின்றன. குறுக்களவு சுமார் ஒன்றரை மீட்டர்.

 

இந்த மரங்கள் பக்கத்திலுள்ள காடுகளில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதாக ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர்.

 

அது எப்படித் தெரிந்தது?

இந்த மரங்களின் கிளைகள், இலைகள் இல்லாததால் இப்படி அடித்து வரப்பட்டிருக்கும் என்பது அவர்களின் துணிபு.

 

இந்த மரங்கள் பூக்கும் தாவரங்கள் (angiosperms), பூவாத் தாவரங்கள்(gymnosperms) ஆகிய இரண்டு வகையைச் சேர்ந்ததாகும்.

 

இவற்றைப் பாதுகாப்பதால் என்ன நன்மை?

உலகில் இப்படிப்பட்ட பல பூங்காக்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் அரியலூர் அருகில்கூட ஒரு கல் மரப் பூங்கா உளது. கல்லாகிப் போன மரங்களில் கூட ஆண்டுதோறும் ஏற்படும் வளையங்கள் (annular rings) இருப்பதால் இவை எவ்வளவு பழமையான மரங்கள் என்பதும் அக்கால காலநிலை எப்படி இருந்தது என்பதும் தெரியும்.

இதை முதலில் 1781ஆம் ஆண்டில் ஒரு ஐரோப்பியர் பார்த்து எழுதி வைத்துச் சென்றார். இப்பொழுது இது புவியியல் துறையின் (Geological Survey of India) கட்டுப்பட்டில் இருக்கிறது

மரங்கள் பற்றிய விவரங்கள், அவை எப்படித் தோன்றின என்ற விவரங்கள் அனைத்தும் பெரிய போர்டுகளில் இரு மொழிகளில் எழுதியும் வைத்துள்ளனர்.

 

சில பகுதிகளில், கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு, வறட்சி முதலியனவற்றை அறியக்கூட கல் மரங்கள் உதவுகின்றன.


(யாரைக் கடவுள் காப்பாற்றுவார்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படங்களையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

—சுபம்—