மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 40 (Post No.4278)

Written by S.NAGARAJAN

 

 

Date: 7 October 2017

 

Time uploaded in London- 5–19 am

 

 

Post No. 4278

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 40

மகாகவி பாரதி – சில புதிய உண்மைகள் – சீனி.விசுவநாதன் எழுதியுள்ள ஆய்வு நூல்

 

by ச.நாகராஜன்

 

மகாகவி பாரதியார் சமீப காலத்தில் வாழ்ந்திருந்தாலும் கூட அவரைப் பற்றிய செய்திகள் பல தவறாகவே உள்ளன.

இதற்குக் காரணம் பல.

அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தம் நினைவிலிருந்து கூறிய தகவல்கள் பல. இவற்றில் காலப் பிழை, இடப் பிழை, கருத்துப் பிழை ஆகியவை உள்ளன. இது இயல்பே.

பல செய்திகள் அரசு ஆவணங்களில் புதைந்துள்ளன. பல கட்டுரைகள், கவிதைகள் பழைய கால பத்திரிகைகளில் மறைந்துள்ளன.

இதையெல்லாம் சரி பார்த்து உள்ளதை உள்ளபடி தொகுப்பது உண்மையிலேயே பெரிய காரியம்.

இதற்கு கட்டுக்கோப்பான, நல்ல பண வசதி படைத்த நிறுவனம் ந்ல்லோரால் நடத்தப்பட வேண்டும்.

அது இதுவரை இல்லை.

ஆகவே இந்தக் குறையைப் போக்க பல பாரதி ஆர்வலர்கள் தம்மால் இயன்ற பணியைச் செய்துள்ளனர்.

எந்த வசதியும் இல்லாத குறையை நினைத்துப் பார்த்தால் இது ஒரு இமாலய முயற்சி தான்.

இந்த இமாலய முயற்சியில் ஏறி வெற்றி பெற பல டென்சிங்குகள் முயன்று சாதனை படைத்துள்ளனர்.

அந்த பல டென்சிங் ஒருவர் சீனி.விசுவநாதன்.

பாரதி அன்பர்கள் இகுகளில்வரை எப்படிப் பாராட்டினாலும் தகும்.

இவரது அரிய படைப்புகளில் ஒன்று – மகாகவி பாரதி – சில புதிய உண்மைகள்.

272 பக்கங்கள் முதல் பதிப்பு வெளியீடு 1984ஆம் ஆண்டு.

முழு நூலும் அத்தியாயங்களாகப் பிரிக்கப்படவில்லை.

செய்திகளின் தொகுப்பையே காண்கிறோம். நல்ல முறையில் பொருள்வாரியாக இதைப் பிரித்தால் நன்றாக இருக்கும்.

முதல் பகுதி மகாகவி பாரதி: சில புதிய உண்மைகள் (115 பக்கங்கள்)

அடுத்த பகுதி : சிந்தனைக்குச் சில (157 பக்கங்கள்)

ஏராளமான செய்திகள் அள்ளிக் குவிக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன.

நம்முடைய்  ஆர்வத்திற்கேற்ப நாம் தான் உரிய முறையில் அட்டவணைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுவையான பல செய்திகளில் சிலவற்றின் விவரம் கீழே தரப்படுகிறது. :

1) பாரதியார் கவிதைகள் பதிப்பு வரலாறு மிகவும் விரிவாகத் தரப்பட்டுள்ளது.

2) சக்கரவர்த்தினி, இந்தியா, சுதேசமித்திரன், கர்மயோகி ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ள பாரதி படைப்புகளின் அட்டவணை நூலில் தரப்பட்டுள்ளது.

3) ஏராளமான கவிதைகளின் தலைப்புகள் மாறி இருப்பதை சீனி. விசுவநாதன் சுட்டிக் காட்டுகிறார்.

4) ஆங்கிலம் மற்றும் வங்க மொழிப் பாடல்கள் ஒன்பதை பாரதி மொழி பெயர்த்திருக்கிறார். அவற்றின் பட்டியலை நூலில் காணலாம்.

5) பாரதி தன் கைப்பட எழுதிய கைப்பிரதிகளின் அடிப்படையில் 90 பாடல்களின் பட்டியலும் நூலில் இடம் பெற்றுள்ளது.

6) பாரதியின் கண்ணம்மா பாடல்களில் செல்லம்மா என்ற வார்த்தையே கவிதைகளில் முதலில் இடம் பெற்றிருந்தது.

ஆனால் “அப்பாதுரை மாமா விருப்பப்படி செல்லம்மா என்று வந்த் இடங்கள் எல்லாம் கண்ணம்மா என்று மாற்றப்பட்டது” என்பதை ச்குந்தலா பாரதி எழுதியுள்ளார்.

7) பாரதியார் தம் பாடல்களை எந்த ராகத்தில் எந்த தாள கதியில் பாட வேண்டுமென்று தெளிவு படுத்தியுள்ளார். அவரே எழுதியுள்ள சில பாடல்களின் ராகப் பட்டியலையும் நூலில் காண்கிறோம்.

8) காணி நிலம் வேண்டும் என்ற பாடலின் தலைப்பில் முதலில் பராசக்திக்கு ஒரு புலவன் வேண்டுகோள் என்று பாரதி எழுதியிருந்தார். பின்னர் அதை நீக்கி விட்டு காணி நிலம் என்பதையே தலைப்பாக ஆக்கி விட்டார்.

9) பாரதி வாழ்ந்த காலத்திலேயே அவரது பாடல்கள் சில தெலுங்கு மொழியில் பெயர்க்கப்பட்டன. பிரான்ஸ், இங்கிலாந்து கவியரசர்கள் பார்தி பாட்டை மொழி பெயர்த்தனர். அயர்லாந்து க்விஞரான ஜேம்ஸ் ஹெச். கஸின்ஸ் என்பவர் பாரதியாரின் சில கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

10) என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற பாடலை ஆங்கில அரசு மும்முறை மொழிபெயர்த்தது. அந்தப் பாடலின் ஆங்கில வடிவத்தை நூலில் பார்க்கலாம்.

 

11) தமிழ்நாடும் ஸ்ரீமான் ஸி.சுப்பிரமணிய பாரதியாரும் – ஓர் ஆராய்ச்சி என்ற தலைப்பில் தேசபக்தன் வருஷமலரில் திரு எ.எஸ்.நாகரத்தினம் என்பவர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். ஆனால் என்ன முயன்றும் அது கிடைக்கவில்லை. இப்படி பல அரிய கட்டுரைகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் சீனி.விசுவநாதன்.

12) பாரதி பாடல்கள் நாட்டுடமையாக்கப்பட்ட வரலாற்றை நூலில் காண்கிறோம்.

13) குரு கோவிந்தசிம்ஹன் விஜயம் இந்தியா பத்திரிகையில் நான்கு வாரங்கள் தொடர்ந்து பிரசுரமானது. இந்தப் பாடலின் வரலாறை நூலில் காணலாம். லண்டனில் நடந்த குருகோவிந்த சிங்கினுடைய விழா பற்றிய செய்தியை வ.வெ.சு ஐயர் பார்தியாருக்கு அனுப்ப அதைப் பிரசுரித்த பாரதியார் தன் பங்கிற்கு குரு கோவிந்த சிம்ஹ விஜயம் என்ற கவிதையைப் புனைந்து அதைப் பிரசுரித்தார்.

14) ‘பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்’ பாடலில் இல்லாத கண்ணிகள் நூலில் சுட்டிக் காட்டப்படுகின்றன – அதன் வரலாறுடன்.

15) நூலின் இறுதியில் “நான் செய்த தவறுகள்” என்ற தலைப்பில் சில தகவல்களைத் தான் “கண்மூடித்தனமாகப்” பின்பற்றித் தந்ததைச் சுட்டிக் காட்டும் சீனி.விசுவநாதன் ஆய்வின் களம் விரிய விரிய தனது தவறுகள் புலப்பட்டதை வெளிப்படையாக ஒப்புக்  கொள்கிறார்.

இது தான் ஆராய்ச்சியின் நேர்மை.

பாரதியைப் பற்றிய விரிவான ஆய்வு நூல் ஒன்று வெளியிடப்பட வேண்டும் காலப் போக்கில் கிடைக்கும் கூடுதல் தகவல்கள் -ரஸமான செய்திகள் – உள்ளிட்டவற்றைக் கொண்டு பாரதி நூல்கள் பற்றிய ஆராய்ச்சி விரிவாக நடைபெறலாம்; நடைபெற வேண்டும்  என்று தன் நம்பிக்கையை தெரிவிக்கிறார் ஆசிரியர்.

பாரதி ஆர்வலர்களுக்கு இந்த நூல் ஒரு பொக்கிஷம்.

ஏற்கனவே தாங்கள் படித்தவற்றுள் இருப்பதை “நேர் செய்து” கொள்ள இது ஒரு செய்திக் கருவூலம்.

உடனடியாக இதை பாரதி நூல்களுடன் வீட்டில் சேர்த்து விடலாம்.

***

 

வர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன? (POST No.4272)

Written by S.NAGARAJAN

 

 

Date: 5 October 2017

 

Time uploaded in London- 5-35 am

 

Post No. 4272

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Russian stamp for English Poet John Milton

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 5)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239-இன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

வர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன -வால்மீகி, கம்பரைத் தெரியாததால் தான்!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

 

பாடல் 11

குமுத வாயிற் குழவி மிழற்றுறும்

அமுத தாரை இனிதென் றசைத்தஅவ்

விபுதன் நூலொடு மெய்ப்ப்ல கைக்கணே

சமனில் நின்று தயங்கத் தகுவது

 

பொருள்: குமுத மலர் போலும் இதழ்களுடைய சிறு குழந்தைகள் குழறும் கொச்சைச் சொற்கள் குழலினிலும், யாழினிலும் இனிமையுடையனவென்று கூறிய தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார் செய்துள்ள தமிழ் மறையாகிய குறளோடு சங்கப் பலகையிற் சமனாக நிலவி நிற்கத் தகுதி வாய்ந்துள்ளது இக் கம்ப ராமாயண மகா காவியம்.

குறிப்பு: கம்ப ராமாயணம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்னே கடைச்சங்கம் இறந்து போயினமையால் இந்நூல் சங்கப்பலகை ஏறாதொழிந்தது எனக் கூறல்

மிகையாகாது.

Greek Poet Homer on coin

பாடல் 12

அங்கம் சேரும் அவயவ சாலத்துள்

துங்கம் சேரொண்மை சூட்டும் முகமன்றே;

திங்கள் போலும் முகத்திற் கெழில்நிலம்

தங்கச் செய்வ சலச விழியரோ

 

பொருள்: ஓர் உடலைச் சேர்ந்த உறுப்புக் கூட்டத்தில் அவ்வுடலுக்கு அழகைத் தருவது முகமே ஆகும். சந்திரன் போல ஒளிரும் அம்முகத்திற்கும் அழகைப் பொழிவன ஆங்குத் தாமரை மலர் போல் விகசிக்கும் இரண்டு விழிகளுமேயாம்.

 

பாடல் 13

பாஷை மாதர் பலருளும் இன்னிசை

ஓசை மாதர் உறும்தமிழ் ஒண்டொடி

வாச வாண்முகம் வாய்ந்த விழியுகம்

ஏசில் ராமன் கதைகுறள் என்பவே

 

பொருள்: குற்றமற்ற ராமன் கதை, குறள் என்னும் இரண்டு நூல்களையும், உலகத்தில் நின்று நிலவும் அநேக பாஷைகள் என்னும் அழகிய மாதர்கள் குழுமிய கூட்டத்தில் இனிய ஒலியின்பத்தாற் சொல்லோசையின் அழகு இத்தன்மைத்தென விளக்கிக் காட்டும் தமிழாய அணங்கின் முகத்தில் இன்பாய வாசத்தையும் அறிவாய ஒளியையும் ஊட்டி இலகும் இரண்டு விழிகளென்னச் சொல்லலாம்.

 Poet from Italy -Virgil

பாடல் 14

காவி யன்றக விஞர்பூங் கானரு

காவி யன்றழ காரலர் தூவுமங்

காவி யன்றரு வன்றேஇத் தென்கவி

காவி யமணம் கான்றொளிர் கற்பகம்

 

பொருள்: (கால தேச வேற்றுமையாலும், மொழி வேற்றுமையாலும், பல்வேறு கவித்துறை வேற்றுமையாலும்) பல தொகுதியாகச் சேர்ந்து நிற்கும் கவிஞராம் காக்கள் நிறைந்திருக்கும் அழகிய மொழி ஆரண்யத்திற்கு அடுத்துத் தங்கி அழகிய மலர்களைத் தூவி விளங்கி நிற்கும் ஒரு பெரிய தருவென இவ்வெழிற்கலைஞனை யான் ஒப்பிடேன்; இக்காட்டில் நின்றும் மிக்க தூரத்தில் காவிய மணம் எக்காலத்தும் வீசிக் கொண்டு நிற்கும் ஒரு நிகரில் கற்பகத் தருவென்றே அவனை யான் சொல்லத் துணிவேன்.

 

பாடல் 15

நாமகள் அருள் நண்ணும் வரகவி

ஹோமர் வர்ஜில் மில்ற்றன் என்ன ஓதுவார்

வாமமார் வடதேச வான்மீகர் தென்

சீமையத் தமிழ்க் கம்பர்த் தெரியலார்

 

பொருள்: ஸரஸ்வதி கடாக்ஷம் பெற்று விளங்கும் வரகவிகள் ஹோமர், வர்ஜில், மில்ற்றன் என்னும் மூவரே என்று மேற்றிசையோர் கூறுகின்றனர். ஆனால் அவர் அங்ஙனம் கூறுவதற்குக் காரணம் வடதேசத்தில் அழகிய ஆரியப் புலவனாம் வான்மீகியையும் தென் தேசத்தில் இனிய தமிழ்க்கவியரசனாம் கம்பனையும் அறியாமையேயன்றி வேறன்று.

**

மேலே உள்ள அழகிய ஐந்து பாக்களில் கம்பனைப் பற்றிய கவிஞரின் உன்னதமான புகழாரத்தைக் காண்கிறோம்.

குறளுக்குச் சமமாக சங்கப் பலகையில் ஏறும் தகுதி பெற்றது கம்ப ராமாயணம்.

 

உடலுக்கு அழகு முகம்.முகத்திற்கு அழகு இரு விழிகள். அப்படிப்பட்ட விழிகளாக குறளும் கம்ப ராமாயணமும் திகழ்கின்றன.

உலகில் பல மொழிகள் உண்டு; ஒலியின்பம் மீதுற இனிய  சொல்லோசையால் அழகுறத் திகழும் இன்ப வாசம், அறிவு ஒளி என்னத் திகழும் இரு கண்கள் அல்லவா அவை!

 

 

காட்டில் விளங்கும் பெரியதொரு மரம் என இவனை நான் ஒப்பிட மாட்டேன். ஆனால் நினைத்ததை எல்லாம் தரும் கற்பக மரம் என்றே கூறுவேன்.

மேலை நாட்டினர் கவிஞர்கள் என்றால் ஹோமர்,வர்ஜில், மில்டன் ஆகிய மூவர் மட்டுமே கவிஞர்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் அவர்கள் வடதிசைப் புலவனான வான்மீகியை அறிய மாட்டார். தென் திசைப் புலவனாகிய கம்பனை அறிய மாட்டார்.

Homer on Greek Stamp

 

இவர்களை அறிந்திருந்தால் அந்தக் கவிஞர்களின் நிலை என்ன ஆகுமோ

 

இப்படி அழகுற உலகளாவிய ஒரு சஞ்சாரத்தை மேற்கொண்டு வான்மீகியையும் கம்பனையும் உலக கவிஞர்கள் வரிசையில் முன்னணியில் நிறுத்தி அவர்கள் தகதிக்குத் தக்கபடி தர வேண்டிய மரியாதையை கவிஞர் சிவராஜ பிள்ளை அழகுத் தமிழில் தருகிறார்.

 

கம்ப ரஸிகரின் பாடல்கள் தொடரும்

***

 

சீதையிடம் அனுமன் கண்ட இரண்டு அதிசயங்கள்! (Post No.4264)

Written by London Swaminathan

 

 

Date: 2 October 2017

 

Time uploaded in London- 6-30 am

 

Post No. 4264

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ராமாயணத்தில் சுந்தர காண்டம் சிறப்பிடம் பெறுகிறது. இதைப் பாராயணம் செய்தால் நிறைய பணம் கிடைக்கும், வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் என்று நீண்ட காலமாக நம்பிக்கை உளது.

சுந்தரகாண்டம் பாஸிட்டிவ் எண்ணங்களுடன், விரைவில் கிடைக்கப்போகும் வெற்றியை அறிவிக்கும் காண்டமாக இருப்பதே இதற்குக் காரணம். அது மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், Fபேண்டம் கார்ட்டூன்களை எல்லாம் விஞ்சும் வீரதீரச் செயல்களை அனுமன் செய்கிறான். இது இளைஞர்களுக்கு படிக்கப் படிக்கத் தெவிட்டாதது. அது மட்டுமல்ல அனுமன் கடலைத் தாண்டுகையில் எதிர்கொண்ட இடையூறுகள் நாம் எல்லோரும் எதிர்நோக்கும் கஷ்டங்களே. (இதை முன்னொரு கட்டுரையில் விளக்கினேன்)

 

சுந்தர காண்டம் இறுதியில், அனுமன் தன் முகக்குறிகளால், நல்ல செய்தி வ ந்தைக் குறிக்கிறான். பின்னர் நேரடியாகவே,

“கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்” என்று தெளிவுபடக் கூறுகிறான்.

 

சீதை கற்பு நெறி தவறாதவள் என்பதைச் சில பாடல்களால் சொல்கிறான். இறுதியில் ராமனுக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட அதிசய நிகழ்ச்சிகளை உரைக்கிறான்.

 

இது நம்புவதற்குக் கடினமான ரசாயன — வேதி இயல் அதிசயங்களாகும். ஆகவே கம்பன் மிகைப்படுத்தும் செய்திகளில் ஒன்றாகவே இதைக் கொள்ளலாம். ராமாயணத்தில் எவ்வளவோ அதிசயங்கள் பற்றி வருகின்றன. அதில் இதுவும் ஒன்று என்றும் கொள்ளலாம். தங்கத்தின் உருகு நிலை எவ்வளவு டிகிரி செல்ஸியஸ் என்று வேதியியல் புத்தகததைப் புரட்ட வேண்டாம்.

 

அது என்ன இரண்டு அதிசயங்கள்?

அனுமனையும், வேடம் மாறும் ராக்கதர்களில் ஒருவர், என்று எண்ணி சீதை பயந்து விடக்கூடாதே என்று

கருதிய ராமன், தனது மோதிரத்தைக் கொடுத்து அனுப்புகிறான். அதைப் போல அனுமன் விடைபெற்றுச் செல்கையில் ராமனிடம் அளிக்க சீதையும் ஒரு மோதிரத்தை அனுப்புகிறாள்.

 

ராமன் கொடுத்த மோதிரத்தை (சூடாமணியை) சீதை அன்பின் காரணமாக மார்போடு மார்பாக அனைத்த போது அது உருகிவிட்டதாம். இதை அனுமன், அதிசயத்தோடு பார்க்கிறன். ஆனால் மோதிரத்தைக் கட்டி அணைத்த மாத்திரத்தில் அவளுடைய உளம் குளிர்ந்தது. இப்படி உடல் குளிர்ந்ததால் அந்த மோதிரம் இறுகி பழைய வடிவத்திலேயே நின்றதாம். நல்ல கற்பனை!!!

 

புலவர்களுக்கு மிகைப் படுத்தும்  உரிமை உண்டு. ஆகையால் மிகைப்படுத்திய கூற்றாகவே கொள்ள வேண்டும். இப்படி ஒரு அதிசயத்தை வால்மீகி ராமாயணத்தில் படித்த நினைவு இல்லை!

 

இதோ பாடலும் பொருளும்:–

 

ஒருகணத்து இரண்டு கண்டேன்;

ஒளிமணி ஆழி, ஆன்ற

திருமுலைதத்தடத்து வைத்தாள்;

வைத்தலும், செல்வ! நின்பால்

விரகம் என்பதனின் வந்த

வெங்கொழுந்தீயினால் வெந்து

உருகியது; உடனே ஆறி

வலித்தது; குளிர்ப்பு உள் ஊற

 

பொருள்:

எல்லாச் செல்வங்களையும் உடைய பெருமானே! ஒரு கணப் பொழுதில் இரண்டு அதிசயங்களைக் கண்டேன். ஒளிவீசும் மணிகள் பதித்த அந்த மோதிரத்தை வாங்கிய சீதாப் பிராட்டி தன் அழகிய கொங்கையில் வைத்துக் கொண்டாள்; அவ்வாறு வைத்தும் உன்னைப் பிரிந்ததனால் உண்டான வெப்பமாகிய நெருப்பினால் மோதிரம் வெந்து உருகியது. மீண்டும் அம்மோதிரம் உடலில் பட்ட மகிழ்ச்சியால், குளிர்ந்த தன்மை உடலில் மிகுதியாகி, உருகிய அந்த மோதிரம்  உடனே இறுகி முன்போல் ஆய்விட்டது.

TAGS:– அனுமன், 2 அதிசயங்கள், சீதை மோதிரம், உருகியது, இறுகியது

–Subham–

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 39 (Post No.4251)

Written by S.NAGARAJAN

 

 

Date: 28 September 2017

 

Time uploaded in London- 5-18 am

 

Post No. 4251

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 39

 

 

சீனி.விசுவநாதன் பதிப்பித்த காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்!

 

ச.நாகராஜன்

 

 

பாரதி இயலில் ஒரு அரிய பணியாக பாரதி அன்பர் சீனி.விசுவநாதன் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். முதலிடம் பெறும் நூலாக நாம் கருதும் ஒரு சிறந்த நூல் கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் என்ற நூல்.

பாரதியாரின் 123ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கால வரிசையிலான ஐந்தாம் தொகுதியை வெளியிட்டிருப்பதாக ‘என்னுரையில்’ கூறும் அன்பர், இந்த ஐந்தாம் தொகுதியில் 3-7-1909 முதல் 25-9-1909 முடிய உள்ள மூன்று மாதக் காலப் பகுதியில் இந்தியா பத்திரிகை இதழ்களில் பாரதி எழுதிய கருத்தோவியங்கள் இடம் பெற்றுள்ளன என்கிறார்.

 

நல்ல சீரிய முயற்சி.

 

432 பக்கங்கள். விலை ரூ 150/ 11-12-2004 வெளியீடு. மொத்தம் ̀116 கட்டுரைகள் உள்ளன.

 

பாரதி பொக்கிஷம் இது.

 

ஏனெனில் தம் காலத்திய வரலாற்று நிகழ்ச்சிகளை எல்லாம அழகுற பாரதியார் இந்த மூன்று மாத காலத்தில் பதிவு செய்துள்ளார்.

 

பதிப்பாசிரியராக வெறும் கட்டுரைகளை வெளியிட்டதோடு தன் பணி முடிந்து விட்டது என்று கருதாமல் ஆங்காங்கு விளக்க உரையாக  அவசியமான வரலாற்றுச் செய்திகளையும் தருகிறார் சீனி.விசுவநாதன்.

 

இந்த நூலின் இன்னொரு சிறப்பு. அழகாக அமைந்துள்ள பொருள் அட்டவணை.

 

அகோரநாத ச்ட்டோபாத்தியாயர், அசுதோஷ் விச்வாஸ், அசோக் நந்தி, அசோக் நந்தி, அசோக் சந்திர நந்தி, அநாத பால மடம், அப்துல் ஹ்மீது, அப்துல் ஹமீத், அப்பர் சுவாமிகள், அமலோக்ராம், அமீர், அரவிந்த கோஷ் என்று இப்படி அகரவரிசைப் பட்டியலாக சுமார் 324 பொருள் விவரங்கள் வரிசையாக இடம் பெற்றுள்ளன.

ஆய்வாளர்களுக்கு கோலாகலம் தான்!

 

Bharati Statue at Setupati High School, Madurai.

 

எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் பாரதியார் என்ன எழுதியுள்ளார் என்று உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அரவிந்த மஹரிஷி பற்றியும் அவரது கருத்துக்கள் பலவற்றையும் இந்தத் தொகுதியில் நாம் காணலாம்.

 

 

லண்டனில் நடந்த கொலை, மதன்லால் திங்க்ராவின் வாக்கு மூலம், ஹிந்து முஸ்லீம்களின் ஐக்கியம், மத த்வேஷம், ஐரோப்பியனாகப் பிறந்த புண்ணியம், இந்தியனாகப் பிறந்த பாபம்,உருட்சிக்கு நீட்சி, புளிப்புக்கு வளப்பன் பாரத ஜாதி என்பன சில கட்டுரைத் தலைப்புகள்.

 

 

காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதியின் படைப்புகளில் இதற்கு முந்தைய நான்கு தொகுதிகளில் 3-7-1909க்கு முற்பட்டதான பாரதியின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

இவற்றைத் தொகுப்பதே ஒரு பெரிய பணி. அதை அழகுற முடித்து அச்சிடுவது அதை விடப் பெரிய பணி.

அந்த வகையில் பாரதி அன்பர்களின் மிகப் பெரும் போற்றுதலுக்கு ஆய்வாளர் சீன் விசுவநாதன் உரியவ்ர் ஆகிறார்.

 

 

பாரதியார் பற்றிய ஏராளமான ஆய்வு நூல்களை எழுதியுள்ள இவரது உண்மை சார்ந்த அணுகுமுறை போற்றப்பட வேண்டிய ஒன்று.

 

தான் எப்படி பல சூழ்ச்சியாளர்களின் வலையில் சிக்க நேர்ந்தது என்பதை வேறு ஒரு நூலில் இவர் விவரித்துள்ளார்.

இயல்பு தான்.

 

நல்லவரை எப்படி விட்டு வைப்பார்கள்?

சுயநலத்திற்காக உபயோகித்து விட்டுத் தங்கள் பெயரைப் போட்டுக் கொள்வார்கள்.

அன்பர்கள் இவரது நூல்களை வாங்கிப் படித்தால் பாரதி இயலில் தெளிவு பெறுதல் நிச்சயம்.

 

ஏராளமான முரண்பட்ட செய்திகளுக்கு இவரது ஆய்வு முத்தாய்ப்பான விடையைத் தரும்.

 

எடுத்துக் காட்டாக இன்னொரு நூலை அடுத்துப் பார்ப்போம்.

***

 

31 சுந்தர காண்டப் பொன்மொழிகள் (Post No.4245)

COMPILED by London Swaminathan

 

Date: 25 September 2017

 

Time uploaded in London-  6-05 AM

 

 

Post No. 4245

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

 

அக்டோபர் 2017 காலண்டர்

 

முகரம்-1, காந்தி ஜயந்தி- 2, வால்மீகி ஜயந்தி-5,  தீபாவளி-18/19

கந்த சஷ்டி-25.

ஏகாதசி – 1, 15, அமாவாசை – 19, பௌர்ணமி – 5

சுபமுகூர்த்த தினங்கள்- 27, 30.

அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை

கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும் காலை

மிடல் உறு புலன்கள் வென்ற மெய்த்தவர் விசும்பின் உற்றார்

(அனுமன் புறப்பட்ட வேகத்தில் முனிவர்கள் வானில் பறந்தனர்)

 

அக்டோபர் 2 திங்கட் கிழமை

கீண்டது வேலை நல் நீர் கீழ் உறக் கிடந்த நாகர்

வேண்டிய உலகம் எல்லாம் வெளிபட மணிகள் மின்ன

(கடலடி நாகங்கள் நாகரத்தினத்தைக் கக்கின)

 

அக்டோபர் 3 செவ்வாய்க் கிழமை

துள்ளிய மகர மீன்கள் துடிப்பு அற சுறவு தூங்க

ஒள்ளிய பனை மீன் துஞ்சும் திவலைய ஊழிக்காலின்

(முதலைகள், சுறாமீன்கள், டால்பின்கள் தூக்கி எறியப்பட்டன)

 

அக்டோபர் 4 புதன் கிழமை

 

புட்பக விமானம்தான் AIR PLANE அவ் இலங்கை மேல் போவது ஒத்தான்

(இலங்கையை நோக்கி ஒரு புட்பக விமானம் பறப்பது போல அனுமன் பறந்தான்)

 

அக்டோபர் 5 வியாழக் கிழமை

ஆணி ஆய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல்

(உலகத்துக்கு அடிப்படையாய் விளங்கும் அறத்தைத் தழைக்கச் செய்யும் அனுமன்)

அக்டோபர் 6 வெள்ளிக் கிழமை

ஊழிநாள் வடபால் தோன்றும் உவா முழு மதியும் ஒத்தான்

(உலகம் அழியும் நாளில் வடதிசையில் தோன்றும் பவுர்ணமி போல)

 

அக்டோபர் 7 சனிக் கிழமை

தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலங்களோடும்

ஆசையை உற்ற வேலை கலங்க

(உலக மக்களும் புத்தகங்களும் சொல்லும் திமிங்கிலத்தைச் சாப்பிடும் திமிங்கிலங்கள் இறந்து கடலில் மிதந்தன)

 

 

அக்டோபர் 8 ஞாயிற்றுக் கிழமை

நூல் ஏந்து கேள்வி நுகரார் புலன் நோக்கல் உற்றார்

போல் ஏந்தி நின்ற தனியாள் மெய் பொறாது நீங்க

(ஞான நூற்பொருளை கல்லாது புலன் இன்பத்தில் மனதைச் செலுத்தும் சிறியார் போல பூமாதேவியும் உடல்வலி தாங்காமல் விலகினாள்)

 

அக்டோபர் 9 திங்கட் கிழமை

பெருந்தேன் பிறிசாலும் நின் அன்பு பிணித்தபோதே

இருந்தேன் நுகர்ந்தேன் நுகர்ந்தேன் இதன்மேல் இனி ஈவது என்னோ?

(உன் அன்பைக் காட்டியதே விருந்து உண்டது போல ஆய்விட்டேன். இதற்கும் மேல் நீ தருவதற்கு என்ன இருக்கிறது– மைநாக பர்வதத்திடம் அனுமன் சொன்னது)

 

அக்டோபர் 10 செவ்வாய்க் கிழமை

நீண்டான் உடனே சுருங்கா நிமிர்வாள் எயிற்றின்

ஊர்ந்தான் என உற்று ஓர் உயிர்ப்பு உயிராத முன்னா

(திடீரெனச் சுருங்கிய உடலுடன் சுரசையின் வாய்க்குள் புகுந்த அனுமன், அவள் ஒரு முறை சுவாசிப்பதற்குள் வெளியே வந்தான்)

 

அக்டோபர் 11 புதன் கிழமை

சாகா வரத் தலைவரில் திலகம் அன்னான்

ஏகா ரக்கிகுடர் கொண்டு உடன் எழுந்தான்

(இறவா வரம் பெற்றவர்களில் திலகம் போன்ற அனுமன் அங்காரதாரகை என்னும் அரக்கியின் வாயுள் புகுந்து குடல்களைச் சுற்றிக்கொண்டு மேலே எழுந்தான்)

 

அக்டோபர் 12 வியாழக் கிழமை

இராம! என எல்லாம்

மாறும் அதின்மாறு பிறிது இல் என வலித்தான்

(இது போன்ற கஷ்டங்கள் நீங்க ராம நாமத்தைச் சொன்னால் போதும்; அ தைத் தவிர வேறு வழி இல்லை- அனுமன்)

 

அக்டோபர் 13 வெள்ளிக் கிழமை

 

விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல் மேனி நோக்கக்

கண்ணடி வைத்தது அன்ன இலங்கையைத் தெரியக் கண்டான்

(தேவலோகம் ஆகிய மங்கை தன் வடிவழகினைப் பார்க்க ஒரு கண்ணாடி வைத்தது போலத் திகழ்ந்த இலங்கையை அனுமன் உற்றுப் பார்த்தான்)

 

அக்டோபர் 14 சனிக் கிழமை

நுண்புலம் நுணங்கு கேள்வி நுழைவினர் எனினும் நோக்கும்

கண்புலம் வரம்பிற்று ஆமே? காட்சியும் கரையிற்று ஆமே?

(நுண்ணிய அறிவினால் நுட்பமான கேள்வி ஞானத்தை ஆராய்ந்து தெளிந்தவர்களுக்கும் காணும் கட்புலன் வரம்பெற்றதாய் நீண்டிருக்குமோ? இலங்கையில் உள்ள காட்சிகளும் அளவுக்கு உட்பட்டவையா? இரண்டும் இல்லை).

 

அக்டோபர் 15 ஞாயிற்றுக் கிழமை

குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய

மழலை மென் மொழிகிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்

(மாளிகையில் உள்ள மங்கையர், தாம் வளர்க்கும் கிளிகளுக்கு, புல்லாங்குழலும் வீணையும் யாழும் தோற்கும் அளவுக்கு மழலைச் சொற்களைக் கற்றுக் கொடுத்தனர்)

 

அக்டோபர் 16 திங்கட் கிழமை

மூவர் தம்முளும் இருவர் என்றால் இனி முயலின்

தாஇல் மாதவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ?

 

மும்மூர்த்திகளையும்   விட இராவணன் உயர்ந்திருக்க, அவனது மாபெரும் தவமே காரணம்)

 

அக்டோபர் 17 செவ்வாய்க் கிழமை

நரகம் ஒக்குமால் நல்நெடுந்துறக்கம் இந்நகர்க்கு

(இலங்கையின் வளத்தைப் பார்த்தால் சுவர்கமும் நரகம் போலக் காட்சிதரும்!)

 

அக்டோபர் 18 புதன் கிழமை

ஆரியம் தனி ஐங்கரக் களிறும் ஓர் ஆழிச்

சூரியன் தனித் தேருமே இந்நகர் தொகாத

(ராவணன் நகரில் இல்லாத ஒரு யானை மேன்மைபெற்ற விநாயகன்; அவன் ஊரில் இல்லாத ஒரே தேர் சூரியனின் தேர்)

 

அக்டோபர் 19 வியாழக் கிழமை

தெய்வத் தச்சனை புகழ்துமோ?செங்கண் வாள் அரக்கன்

மெய் ஒத்து ஆற்றிய தவத்தை வியத்துமோ?

(இலங்கையின் இத்தகைய சிறப்புக்கு அதை உருவாக்கிய மயன் என்னும் தெய்வத் தச்சனைப் புகழ்வதா? அல்லது ராவணனின் மாதவத்தைப் புகழ்வதா. எனக்குத் தெரியவில்லையே- கம்பன் அங்கலாய்ப்பு)

 

அக்டோபர் 20 வெள்ளிக் கிழமை

ஏனை மணியாலும் இயற்றியவேனும் யாவும்

தேனும் மலரும் கனியும் தரச் செய்த செய்கை?

(இது என்ன உலக அதிசயம்? இலங்கையில் உள்ள எல்லா காடுகளும் சோலைகளும் நவரத்தினக் கற்களால் செய்யப்பட்டவை. ஆனால் இயற்கையான தேனும் , மலரும் ,கனியும் கிடைக்கிறதே)

அக்டோபர் 21 சனிக் கிழமை

திறம்பு காலத்துள் யாவையினும் சிதையா

அறம்புகாது இந்த அணி மதில் கிடக்கை நின்று அகத்தின்

(கம்பன் பயங்கரக் கிண்டல்:- தேவர்கள் இலன்கையில் புக முடியாது. உலகமே அழியும் போது, தான் மட்டும் அழியாமல் நிற்கிறதே அந்த தர்மம் கூட இந்நகருக்குள் புக முடியாது!!)

 

அக்டோபர் 22 ஞாயிற்றுக் கிழமை

செங்குருதி அன்ன செறி குஞ்சியர் சினத்தோர்

பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார்

(இலங்கை வாழ் அரக்கர்களுக்கு செம்பட்டை முடி; கோபத்தால்வேறு முகம் சிவக்கும்; இது பங்குனி மாதத்தில் செம்முருங்கை மரங்கள் உள்ள காடு பூத்துக் குலுங்கியது போலச் செக்கச் செவேல் என்று இருந்தது)

 

அக்டோபர் 23 திங்கட் கிழமை

எட்டுத் தோளாள் நாலு முகத்தாள் உலகு ஏழும்

தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள் சுழல் கண்ணாள்

( அனுமனை முறைத்துப் பார்த்த இலங்காதேவி என்னும் நகர காவல் தேவதைக்கு 8 தோள்கள், 4 முகங்கள், ஏழு உலகங்களுக்கும் சென்று திரும்பும் ஒளி படைத்தவள்; அவ்வளவு பிரகாசம்! சுழலும் கண்களை உடையவள்! சி சி டி வி C C TV காமெராக்கள் தோற்றுப் போகும்!)

 

அக்டோபர் 24 செவ்வாய்க் கிழமை

அளியால் இவ் ஊர் காணும் நலத்தால் அணிகின்றேன்

எளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு? என்றான்

ஊரைக் காணவேண்டும் என்ற ஆசையால் வந்தேன். எளியவனாகிய நான் இவ்வூருக்குச் செல்வதால் உனக்கு என்ன நஷ்டம்? இலங்காதேவியிடம் அனுமன் சொன்னது

அக்டோபர் 25 புதன் கிழமை

அறம் வெல்லும் பாவம் தோற்கும்

அறம் வெல்லும், பாவம் தோற்கும்- என்பதை இன்னும் சொல்ல வேண்டுமா?

 

 

அக்டோபர் 26 வியாழக் கிழமை

பூரியர் இலங்கை மூதூர்ப் பொன்மதில் தாவிப் புக்கான்

சீரிய பாலின் வேலைச்சிறு பிரை தெறித்தது அன்னான்

(இழிந்தவர் வாழும் இலங்கையின் பொன்மதிலைத் தாவி அனுமன் புகுந்தது பாலிலே சிறிதளவு மோர் சிந்தியது போல இருந்தது.)

 

அக்டோபர் 27 வெள்ளிக் கிழமை

 

சந்தப் பூம்பந்தர் வேய்த்த தமனிய அரக்கில் தம்தம்

சிந்தித்தது உதவும் தெய்வ மணிவிளக்கு ஒளிறும் சேக்கை

(அவரவர் நினைத்ததைக் கொடுக்கும் சிந்தாமணி என்னும் தெய்வ விளக்கு ஒளிர்ந்தது.)

 

அக்டோபர் 28 சனிக் கிழமை

தேன் உகு சரளச் சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர்

வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை

(தேன் பருகும் இனிய சோலையில், தேவ மகளிர், ஆகாய கங்கையின் தெய்வ நீரினால் அரக்க மகளிரை நீராட்டினர்)

 

அக்டோபர் 29 ஞாயிற்றுக் கிழமை

 

சந்தப் பூம்ப்பந்தர் வேய்த்த தமனிய அரக்கில் தம்தம்

சிந்தித்தது உதவும் தெய்வ மணிவிளக்கு ஒளிறும் சேக்கை

(அவரவர் நினைத்ததைக் கொடுக்கும் சிந்தாமணி என்னும் தெய்வ விளக்கு ஒளிர்ந்தது.)

அக்டோபர் 30 திங்கட் கிழமை

சங்கொடு சிலம்பும் நூலும் பாத சாலகமும் தாழ

பொங்கு பல்முரசம் ஆர்ப்ப இல்லுறை தெய்வம் பேணி

 

(அரக்க மகளிர் சிலம்பு, மேகலை, பாதரசம் ஆகிய அணிகலன்களை அணிந்து உண்டாக்கிய ஒலிகளை ஒடுக்கும் அளவுக்கு முரசுகள் முழங்கின. அப்போது அரக்க மகளிர், இல்லத்தில் உள்ள தெய்வங்களை மலரால் பூஜித்தனர்)

 

 

அக்டோபர் 31  செவ்வாய்க் கிழமை

தடைபுகு மந்திரம் தகைந்த நாகம்போல்

இடைபுகல் அரியது ஓர் உறக்கம் எய்தினான்

கடை யுக முடிவு எனும் காலம் பார்த்து அயல் புடை பெயரா நெடுங்கடலும் போலவே

(மந்திரத்தால் கட்டுண்ட நாகம் போலவும், ஊழிக்காலத்தில் சீறி எழ தயாராகக் காத்திருக்கும் கடல் போலவும் கும்பகர்ணன் தூங்கினான்)

 

–சுபம்–

 

கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பன் கவி இன்பம்-4 (Post No.4239)

Written by S.NAGARAJAN

 

Date: 24 September 2017

 

Time uploaded in London- 5-29 am

 

Post No. 4239

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை

4082 – 15-7-17; 4088 – 17-7-17; 4103 – 22-7-17 – இந்த மூன்று கட்டுரைகளின் தொடர்ச்சியாக வெளியாகும் நான்காவது கட்டுரை இது.

 

பண்ணின் சுவை, பாவையரைக் கண்ட களிப்பு, ஞானியர் பெற்ற  இன்பம்- இவற்றைப் பொலிவிழக்கச்  செய்யும் கம்பன் கவிதை!

 

ச.நாகராஜன்

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் அற்புதக் கவி உள்ளம் கம்பனின் பாக்களில் களித்ததோடு நம்மையும் களிக்க வைக்கிறது அழகிய் இனிய பாக்களால்.அவர் தரும் கவிதை வரிசையைத் தொடர்வோம்.

 

 

பாடல் 6

 

வேரி மாமணம் வீசும் தமிழணங்

காரும் ஆரமோ? ஆய்முத்தின் ஆரமோ?

பாரில் வானில் பயில்அழ கும்எழில்

சேரப் பூணும் செழுமணிப் பேழையோ?

 

உரை: (அன்றி இக்கம்பராமாயணத்தைத்) தேனையும் பெருமை பொருந்திய மணத்தையும் வீசுவதும் தமிழன்னை (தன் குழலில்) முடிப்பதுமாய ஒரு பூவாரத்தோடு ஒப்பிடுவேனோ? அன்றி  அம்மாதா ஆய்ந்தெடுத்துத் தன் மார்பில் அணியும் ஒரு முத்து வடத்தோடு ஒப்பிடுவேனோ? அன்றி, உலகத்தினிடத்திலும், வானத்தினிடத்திலும் நிரம்பிய அழகெல்லாம் (திரண்டு ஓர் உருவாய பாவை) தன்னை அலங்கரித்துக் கொள்ளப் பூணும் இரத்நாபரணங்களைச் சேமித்து வைக்கும் ஒரு பெட்டியோடு ஒப்பிடுவேனோ?

 

 

பாடல் 7

ஓசை இன்பம் ஓர் ஊற்றெடுத் தேமனம்

மாச யின்றிடா வாறு வருதலால்

பூசை இன்பப் புனிதர்க்கும் மேற்புலன்

ஆசை இன்ப அமுதினை ஊட்டுமால்

 

உரை: (இக் கம்பராமாயணக் கவியில் அமைந்த அழகிய) ஓசையினால் வரும் இன்பம் ஒரு ஊற்றெடுத்துப் பாய்ந்து (மனிதர்களுடைய) மனதில் அழுக்கே படியாத வண்ணம் (அதனைப் புனிதமாக்கிச்) செல்லுவதால் சரீர இன்பங்களைப் புல்லியவெனத் தள்ளி தெய்வ வணக்கமே தமக்கு இன்பமாகக் கருதும் பரிசுத்த மஹான்களுக்கும் கூட கண் காது என்னும் இரண்டு உயரிய கலைப்புலன் வழி பருகும் இன்னமுதப் பாய்வில் அஃது ஆசையை உண்டு பண்ணா நிற்கும்.

 

பாடல் 8

 

கூறில் அண்டரும் கொண்ட அமுதினால்

ஈறில் வாழ்க்கையை எய்தினரே னும்கைம்

மாறில் லாமகிழ் மீறுகம் பன்கவிப்

பேறிலா தின்றும் பேதுற் றழுங்கினார்

 

உரை: (இவ்வுலகத்தாரையும் வானுலகத்தாரையும் ஒப்பிட்டுச்) சொல்லுமிடத்து தேவர்கள் தாம் பெற்றுக் கொண்ட அமிர்தத்தினால் மரணமில்லாப் பெரு வாழ்க்கையை அடைந்தனரேயாயினும், இவ்வுலகத்தார் பெற்றுக் கொண்டது போல அவ்வாழ்க்கையை மகிழ்ச்சியாற் சிறப்புறும்படி செய்யக் கம்பனுடைய காவியம் என்னும் பெருஞ்செல்வத்தைத் தாமும்  பெற்றுக் கொள்ளவில்லையே என்று இன்றும் மனம் குழைந்து அலக்கண் உறுகின்றனர்.

பாடல் 9

 

பூவின் மென்மை பொலிவற் றிழிவது

காவின் தண்மை கனன்று தெறுவது

கோவின் தேசெதிர் கூசிக் குலைவது

பாவிற் பாவெனும் கம்பன்மெய்ப் பாட்டினால்

 

உரை: உண்மையான கவியினிமை ஒழுகிக் கவிக்கும் கவியாய் விளங்கும் கம்பன் கவித்தொகையின்  முன்னிலையில் பூவின் மெல்லிய குணமும் அழகிழந்து கீழடைகின்றது; செறிமரக்காவின் குளிர்ச்சியும் கொதித்துச் சூடா நிற்கின்றது; விலையுயர்ந்த ரத்தினங்களின் ஒளியும் ஒளியிழந்து மழுக்கம் அடைகின்றது.

குறிப்பு:- ‘மெய்ப்பாட்டினால்’ என்னும் தொடருக்கு உத்தம கவிஞனாம் கம்பன் தன்னுள்ளக் கருத்தை அல்லாது மனதிற் கற்பிதம் செய் பொருளைத் தன் கவியை வாசிப்போருக்கு அதில் நிரப்பும் சொற்களினால் கண்கூடாதல் செய்யும் வல்லமையும் பெற்று விளங்கினன் என்றும் பொருள் கொள்ளலாம்.

 

பாடல் 10

 

 

பண்ணில் வந்த சுவையையும் பாவைமார்

கண்ணில் வந்த களிப்பையும் ஞானியர்

எண்ணில் வந்தநல் லின்பையும் கம்பன்பா

நண்ணி வந்த நலம்நனி தீய்க்குமால்

 

உரை:- கம்பனுடைய கவியோடு பொருந்தி விளங்கும் அழகு, இராகங்களில் நின்றெழும் ஒலியின்பத்தையும், வனப்பு வாய்ந்த மாதர்களைக் கண்ணுறுவதாற் பொறிவழிப் புகுந்து பெருகும் இன்பத்தையும் தத்துவ ஞானிகள் தமது அந்தக்கரண வாயிலாய் அடைந்து அனுபவிக்கும் உயரிய இன்பத்தையும் அழகு கெட்டு இன்பிழக்கச் செய்கின்றது.

*

சொல்லின்பத்தையும் பொருளின்பத்தையும் ஓசையின்பத்தையும் தரும் ஐந்து பாடல்களில் கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜபிள்ளை

கம்பனது கவி தமிழன்னையில் கூந்தலில் முடிக்கப்பட்டிருக்கும் பூவாரமா என வியக்கிறார்.

அவனது கவிதையில் எழும் ஓசை தரும் இன்பம்  ஐம்புலனை வென்ற மஹான்களுக்கும் கூட கண் மற்றும் செவியின் மீது ஆசையை உருவாக்கும், என அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.

 

மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்ற தேவர்களும் கூட இவ்வுலகில் பிறந்து கம்பனுடைய காவியத்தை ரஸிக்க முடியவில்லையே என்று ஏங்குவர் என்று கூறுகிறார்.

 

பூவின் மென்மை பொலிவை இழக்கும்;  காட்டின் குளிர்ச்சி போய் விடும்; ரத்தினங்கள் ஒளி இழக்கும் – கம்பன் பாட்டின் முன்னே என்று வியந்து கூறுகிறார்.

 

பண்ணில் வந்த சுவை, அழகிய மகளிர் கண்ணில் பட அதனால் ஒருவன் பெறும் இன்பம்,  ஞானியர் அந்தக்கரணத்தில் அனுபவிக்கும் இன்பம் ஆகிய அனைத்தும் கூடக் கம்பன் கவிக்கு முன்னர் அழகு கெட்டு இன்பத்தை இழக்கும் என்று கம்பனை ரஸித்துக் கூறுகிறார்.

 

 

சும்மா சொல்லி விடவில்லை கவிஞர் கே.என்,சிவராஜ பிள்ளை; அனுபவம் பேசுகிறது; அதில் கம்பனின் மஹத்தான தமிழ் தாண்டவம் ஆடுகிறது!

ரஸியுங்கள். அமரரும அடைய முடியா இன்பம் பெறுங்கள்.

கம்ப ரஸிகரின் பாடல்கள் தொடரும்

***

அமிழ்தினிய பா ரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே! (Post No.4201)

Written  by S.NAGARAJAN

 

Date: 11 September 2017

 

Time uploaded in London-5-51 am

 

Post No. 4201

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாரதியாரின் நினைவுக்கு அஞ்சலி!

 

அமிழ்தினிய பா ரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே!

 

ச.நாகராஜன்

 

இருளகற்றும் இனிய தமிழ் பெருமையினை நிலை நாட்டினாய்

மருளகற்றும் விதமெனவே வெள்ளையரை விரட்டி ஓட்டினாய்

****

நல்லோர்கள் புகழ்தம்மை நாளும் சொல்லிக் கவி பாடினாய்

அல்லோர்கள் அரக்கர்தமை இனம் காட்டிச் சாடினாய்

**                        தெய்வ பக்தி தேசபக்தி இரு கண் என இனிய மொழி கூறினாய்

செய்வதறியா மக்களுக்கோர் வழிகாட்டிப் புகழேணியில் ஏறினாய்

***

தமிழ்க்கவியே! சொற்கள் எனும் தேர் ஓட்டும் சாரதியே!

அமிழ்தினிய பா ரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே!

***

 

ரா.பி.சேதுப்பிள்ளையின் பாரதி கட்டுரைகள்! (Post No.4198)

Written  by S.NAGARAJAN

 

Date: 10 September 2017

 

Time uploaded in London-5-29 am

 

Post No. 4198

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாரதி இயல்

செபடம்பர் 11 – பாரதியார் நினைவு தினம். அதையொட்டிய சிறப்புக் கட்டுரை!

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 38

ரா.பி.சேதுப்பிள்ளையின் பாரதி பற்றிய கட்டுரைகள்!

 

ச.நாகராஜன்

சிறந்த தமிழ் அறிஞரான ரா.பி.சேதுப்பிள்ளை (1896-1961) திருநெல்வேலியில் உள்ள ராஜவல்லிபுரத்தில் பிறந்தவர்.

சாஹித்ய அகாடமியின் விருதை முதன் முதலில் -1955ஆம் ஆண்டில் – பெற்ற தமிழர். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை மிக்க அவர் ஒரு வக்கீலாக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்தார். பின்னர் மதராஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் பணியாற்றினார். அவரது உரை நடையில் தமிழ் விளையாடும். பல நூல்களைப் படைத்தவர் அவர்.

கடற்கரையிலே என்ற அவரது நூலில் தமிழ் அறிஞர்கள் கடற்கரையில் ஆற்றும் உரைகள் அற்புதமானவை. கடற்கரையிலே என்ற அவரது நூலில் பாரதியாரின் உரையும் ஒன்று..

அதிலிருந்து சில பகுதிகள்:

“நல்லோர் போற்றும் அல்லிக்கேணியே! உன் மலர்க்கேணியின் அழகைக் கண்டுதான் மாமுகில் வண்ணன் அதனருகே கோயில் கொண்டானோ? அன்று பஞ்சவருக்குத் துணை புரிந்த அஞ்சன வண்ணன் – பார்த்தனுக்குப் பாகனாகிய பரந்தாமன்- அறப்பெருந் துணைவன் – அடியார்க்கு எளியன் – நின்னகத்தே நின்று அருள் புரிகின்றான். அந்தக்

“கண்ணைக் கண்டேன் – எங்கள்
கண்ணனைக் கண்டேன் மணி
வண்ணனை ஞான மயிலினைக் கண்டேன்.”


“தொல்புகழ் வாய்ந்த அல்லிக்கேணியே! இந்நாளில் உன் அருமையை அறிவார் யார்? உன் கடற்கரையில் அன்று தமிழ்த் தென்றல் தவழ்ந்தது; இன்று மேல் காற்று வீசுகின்றது. அன்று உன் அரங்கத்தில் எங்கள் தமிழன்னை ஆனந்த நடனம் புரிந்தாள்; இன்று, ஆங்கில மாது களியாட்டம் ஆடுகின்றாள். அவளுடைய வெள்ளை நாவிலே தெள்ளிய தமிழ் வளம் ஏறுமா? அவள் இறுமாந்த செவியிலே தேமதுரத் தமிழோசை சேருமா? அந்தோ! திருவல்லிக்கேணியே! வேற்றரசின் கொடுமையால், நீ சீர் இழந்தாய்; பேர் இழந்தாய்; ‘திரிப்பளிக்கே’னாகத் திரிந்துவிட்டாய்!

“அல்லிக் கருங்கடலே! உன் அழகமைந்த கரையிலே, வெள்ளையர் விளையாடித் திரிகின்றார்; வெறியாட்டயர்கின்றார்; உலாவுகின்றார்; குலாவுகின்றார். அவரைக் கண்டு அஞ்சி, நம்மவர் நெஞ்சம் குலைகின்றாரே! சிப்பாயைக் கண்டால் அச்சம்; துப்பாக்கியைக் கண்டால் நடுக்கம்; சட்டைக் காரனைக் கண்டால் குட்டிக் காரணம். இப்படி வாழ்வதும் ஒரு வாழ்வாகுமா? பிறந்த நாட்டில் பிறர்க் கடிமை செய்தல் பேதைமை யன்றோ?

“அறப்பெருங் கடலே! வீர சுதந்தர வேட்கை இந் நாட்டிலே வேரூன்றி விட்டது. இனி அதை அசைக்க எவராலும் ஆகாது. வந்தேமாதரம் என்ற மந்திர மொழியால் பாரத நாட்டைத் தட்டி எழுப்பிய பாலகங்காதர திலகரை அரசாங்கத்தார் சிறையில் மாட்டலாம். தென்னாட்டுத் திலகர் என்று பேர் பெற்ற எங்கள் சிதம்பரனாரைச் சிறைக் கோட்டத் தில் அடைக்கலாம்; செக்கிழுக்க வைக்கலாம்; துச்சமாக எண்ணித் தூறு செய்யலாம். ஆயினும், அவர் மூட்டிய கனல் வெள்ளையர் ஆட்சியை வீட்டியே தீரும்!

“சொந்த நாட்டில் பிறர்க்கடி மைசெய்தே
துஞ்சிடோம – இனி அஞ்சிடோம்”

என்ற வீர சுதந்தர வேகத்தை நிறுத்த யாரால் முடியும்? எரிமலையைத் தடுக்க – அதன் வாயை அடைக்க – எவரால் இயலும்?

*

தமிழ் இன்பம் என்ற அவரது நூலில் எட்டாம் பகுதி பாரதியார் பாட்டின்பம் என்ற தலைப்பைக் கொண்டதாகும். இப்பகுதியில் செந்தமிழ் நாடு, முப்பெரும் கவிஞர், கலையின் விளக்கம், பண்டாரப் பாட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து ஆகிய ஐந்து கட்டுரைகள் உள்ளன. அனைத்துமே அருமையானவை.

சில பகுதிகளை இங்கு காணலாம்:

“செந்தமிழ் நாடு” என்ற கட்டுரையிலிருந்து :-

 

“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே”


என்று கவிஞர் அழகாக எடுத்துரைத்தார். செந்தமிழ் நாடு என்று சொல்லும்பொழுது தென் தமிழின் தீந்தேன் செவிகளில் விரைந்து பாய்ந்து நிரம்புகின்றது. தாயின் செவிகளில் விரைந்து பாய்ந்து நிரம்புகின்றது. தாயின் இனிமையும் அன்பும் செந்தமிழ் நாடு என்னும் பெயரில் அமைந்திருத்தலால், நம் செவியின் வாயிலாக இன்பத்தேன் வந்து பாய்வதாகும். இத் தமிழ் நாட்டில் வாழ்ந்த அறிஞர், இனிமையும் தமிழும் வேறென்று அறிந்தாரல்லர்; தமிழ் என்னும் பதத்திற்கே இனிமை என்ற பொருள் கண்டார்கள். இத் தகைய இனிமை வாய்ந்த தமிழ் ஒலி, இன்னொலியாய், இன்ப ஒலியாய், ஆனந்தத் தேன் சொரியும் அழகிய ஒலியாய் இனிமை பயப்பது இயல்பே யன்றோ? இன்னும், இந் நாட்டைத் தந்தை நாடென்று கருதும் பொழுது, அத் தந்தையின் மக்களாய்ப் பிறந்த நமது உரிமை, மனத்தில் முனைந்து தோன்றவதாகும். இவ்வுரிமைக் கருத்து உள்ளத்தைக் கவரும்பொழுது வீரம் கிளம்புகின்றது. தாயை அன்பின் உருவமாகவும், தந்தையை வீரத்தின் வடிவமாகவும் கருதிப் போற்றுதல் தமிழ் வழக்காகும். அந்த முறையில் தமிழ்நாட்டைத் தாய் நாடு என்று நினைக்கும் பொழுது அன்பினால் இன்பம் பிறக்கும்; தந்தை நாடு என்று கருதும்போது, ஆண்மையால் வீரம் பிறக்கும். இவ் வுண்மையை உணர்த்தக் கருதிய பாரதியார், முதலில் தாயன்பை அமைத்து, பின்பு தந்தையின் வீரத்தைப் பேசும் முறை, அறிந்து போற்றுதற்குரியதாகும்.

*

தமிழ்த் தாய் வாழ்த்து என்ற கட்டுரையின் இறுதிப் பகுதி இது:-

ஆங்கிலம் முதலிய மேலை நாட்டு மொழிகளையறிந்த மாணவர் கடமையைப் பாரதியார் பண்புறக் கூறுகின்றார்; பிற நாட்டு நல்லறிஞர் இயற்றிய புத்தம் புதிய கலைநூல்களைத் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும். அக் கலைகளிலமைந்த புதிய கருத்துகளை உணர்த்தும் பெற்றி வாய்ந்த பழந்தமிழ்ச் சொற்கள் பண்டைப் பனுவலிற்பதிந்து கிடக்குமாயின் அவற்றை அகழ்ந்தெடுத்து வழக்காற்றில் உய்த்தல் வேண்டும். புதிய சொற்கள் வேண்டுமாயின், தமிழ்ச் சொல்லாக்க முறையறிந்து அவற்றைப் பிறப்பித்தல் வேண்டும். நல்ல நூல்களை மொழி பெயர்த்தும் நவீன நூல்களை மொழி பெயர்த்தும் நவீன நூல்களை இயற்றியும் மொழியின் கலைச்செல்வத்தைப் பெருக்க வேண்டும். இங்ஙனம் விரைந்து பணிசெய்ய முற்படாது, தமிழ்மொழியின் பழம்பெருமை பேசி மகிழ்வதாற் பயனில்லை. “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை.” ‘கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த பைந்தமிழ்’ என்று பாராட்டுவதனால் தமிழ் மொழி பரவிவிட மாட்டாது. என்றுமுள தென்றமிழ்’ என்று இறுமாந்து பேசுவதால் தமிழ்மொழி ஏற்றமுற மாட்டாது. ‘சங்கத் திருப்பிலே யிருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை’ என்று வாய்ப்பறை சாற்றுவதால் தமிழ்மொழி வளர்ந்துவிட மாட்டாது. தமிழ்மொழித் தொண்டு செய்யக் கருதும் தகை சான்ற அறிஞர் பழம் பெருமை பேசும் பழக்கத்தை விட்டொழித்து, தமிழ் மொழியின் குறைகளை அறிந்து, பணி செய்ய முற்பட வேண்டும். தமிழ் நாட்டிலமைந்த பல்கலைக் கழகங்கள் மேலை நாட்டுக் கலைகளை மொழி பெயர்க்கும் விழுமிய பணியை மேற்கொள்ள வேண்டும். தமிழன்னை மீண்டும் தலைசிறந்து விளங்கும் காலம் வருமோ என்று ஏங்கித் தளர்பவர் இந் நாளில் பலராவர். இங்ஙனம் தமிழ்ச் சேய்களிற் பலர் மயங்கித் தளர்ந்தாலும் தமிழ்த் தாய் மனம் தளரவில்லை; உரனிழந்த மக்கள் மனத்தைத் தேற்றுகின்றாள்; எத்திசையும் புகழ் மணக்க மீண்டும் தான் ஏற்றமுறும் காலம் அண்மையில் வருமென்று அறிவிக்கின்றாள். ஆதிசிவன் அருளாலும் அறிவறிந்த மக்கள் ஆர்வத்தாலும் வீறுபெற்று விளங்குவேன்’ என்று தமிழன்னை வாயிலாகப் பாரதியார் கூறும் வாய்மொழி கார்மேகத்தினிடையே இலங்கும் கதிரொளியாகும்.

“வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு”.

*

 

ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருப்பதால் அவற்றை எளிதில் பெற்று படித்து இன்புற இயலும்.

அவரது நூல்களில் கடற்கரையிலே, தமிழர் வீரம் மற்றும் தமிழ் இன்பம் ஆகிய நூல்களை www.projectmadurai.org   என்ற இணையதளத்தில் படித்து மகிழலாம், இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

ப்ராஜக்ட் மதுரைக்கு தமிழர்களின் நன்றி என்றும் உரித்தாகுக.

ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் பாரதியார் பற்றிய கட்டுரைகள் பாரதி அன்பர்களின் உள்ளங்களை மகிழ்விக்கும் தமிழ்ச் செல்வம் ஆகும்!

படிப்போம், மகிழ்வோம், பாரதி இயல் தொகுப்பில் அவற்றைச் சேர்ப்போம்!

***

 

 

 

தாலி பற்றி கம்பன் (Post No.4185)

Written by London Swaminathan

 

Date: 5 September 2017

 

Time uploaded in London- 14-36

 

Post No. 4185

 

Pictures are taken from various sources; thanks.

 

தாலி பற்றி அடிக்கடி சர்ச்சையை உண்டாக்கும் ஒரு முட்டாள் கூட்டம் தமிழ்நாட்டில் அவ்வப்பொழுது தலைதூக்கும் என்பது கம்பனுக்கும் கூட ஞான திருஷ்டியில் தெரிந்துள்ளது. ஒரு அழகான பாடல் சுந்தர காண்டத்தில் வருகிறது:

 

மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற

எண்ணற்கு அரிய ஏனையரை இகலின்  பறித்த தமக்கு இயைந்த

பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே இடை பிழைத்த

கண்ணில் கண்டவன் பாசம் எல்லாம்  இட்டுக் கட்டினார்

-பிணி வீட்டு படலம், சுந்தர காண்டம்

 

அனுமன் வாலில் பிரம்மாஸ்திரம் இருக்கும்போது தீ வைப்பது முறையன்று என்று எண்ணி, அனுமனை பிரம்மாஸ்திரத்தினில் இருந்து விடுவித்தான் இந்திரஜித். அப்போது வரும் பாடல் இது:–

 

பொருள்:

“இராவணன் நிலவுலகில் திக்விஜயம் மேற்கொண்டபோது அங்கிருந்து கொண்டுவரப்பட்ட கயிறுகள், தேவர்களிடமிருந்து வலியப் பறித்த கயிறுகள், வரத்தின் மூலம் பெற்ற கயிறுகள், எண்ணமுடியாத அசுரர் முத்லியவர்களோடு போரிட்டுப் பெற்று வந்த கயிறுகள், இன்னும் இவ்வாறான கண்ணில் பட்ட வலிய கயிறுகளை எல்லாம் கொண்டுவந்து அனுமானைக் கட்டினார்கள். தத்தமக்கு ஏற்ற பெண்களின் கயிற்றில் அவர்கள் கட்டியிருந்த  தாலிக் கயிறுகள் மட்டுமே அச்சமயத்தில் கவரப்படாமல் தப்பித் தங்கின”

இதிலிருந்து தெரிவதென்ன?

 

இராக்கத பெண்களுக்கும் தாலிக் கயிறுகள் உண்டு:

 

அது புனிதமானதால், அசுரர்களும் அதை மதித்துப் போற்றினர்.

 

அனுமானைக் கட்ட உலகிலுள்ள எல்லாக் கயிறுகளும் பயன்படுத்தப்பட்டன; ஆனால் தாலிக் கயிறு பயன்படுத்தப் படவில்லை.

 

தமிழ்நாட்டில் சில போலி சக்திகள் அவ்வப்போது தலைவிரித்தாடி ஆடி ஓய்ந்து விடும் என்பது கம்பனுக்கும் தெரியும்.

 

தமிழகத்தில் சில போலித் தமிழர்கள் பிறப்பர்; அவர்களுக்குச் செமை அடி கொடுக்க வேண்டும் என்று சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் கம்பன் எழுதிய பாடல் இது.

இராக்கதர்களுக்குக் கூடத் தெரிந்த தாலியின் புனிதம், சில அந்தகர்களுக்குத் தெரியாதது வருந்தத்தக்கது.

 

–சுபம்–

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி (Post No.4178)

Written by London Swaminathan

 

Date: 1 September 2017

 

Time uploaded in London- 20-50

 

Post No. 4178

 

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி

எனது பழைய பள்ளிக்கு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 2017ல் சென்றேன். இதற்கு மு மதுரை சென்றபோதெல்லாம் இருள் சூழ்ந்திருக்கும் அல்லது நான் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்து கொண்டிருபேன்.இப்பொழுது சூரிய பகவான் ஒளிவீச, அதில் அப்பள்ளியில் பணியாற்றிய பாரதியின் சிலை புதுப் பொலிவுடன் மிளிர நல்ல புகைப் படங்கள் எடுத்தேன்.

வீர பாரதி! கம்பீர பாரதி!! எனது பள்ளியில் பாரதி!
இந்தப் படத்தைப் பயன்படுத்துவோர் படம் எடுத்தவர் லண்டன் சுவாமிநாதன் என்ற பெயரையும் சேர்த்தால் பாரதியின் பரிபூரண ஆசியைப் பெறுவர்

My brother Suryanarayanan adds

Santanam Suriyanarayanan 1966.sslc படித்த ஆண்டு.பாரதி பேச்சுபோட்டியில்first prize.இந்த சிலை திறப்புவிழா பசுமையாக நினைவில் உள்ளது.அந்த ஆண்டு ,பள்ளிவிழாவில் பாரதியின்,ரா.பி.சேதுப்பிள்ளை வசனம் பேசினேன்.பக்தவத்சலம் எங்களுக்கு பரிசளித்தாா்.thanks for reminding this

 

 

Santanam Suriyanarayanan சிலை திறப்பின்போது மிக அருகில் நின்றிருந்தேன்.thanks to teachers,especially திரு.வி.ஜி.சீனிவாசன்

 

 

ஏதோ ஒரு காரணத்தினால் நான் அன்று (1966) அப்பள்ளிக்குப் போகவில்லை. மதுரைக் கல்லூரியில் சேர்ந்த உற்சாகத்தில் பழைய பள்ளியை மறந்திருக்கலாம்

 

எப்படியாகிலும் எங்கள் தமிழ் குரு வி.ஜி.எஸ்,ஸை நினைவுகூற, இப்பொழுது, ஒரு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியே.

முறுக்கு மீசையும் மொபைல் போனும் : எச்சரிக்கை

 

நான் படித்த, பாரதியார் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்குள் சென்றேன். சிருங்கேரி சங்கராசார்யாரின் அபூர்வ புகைப்படக் கண்காட்சியையும், எனது அருமை பாரதியார் சிலையையும் புகைப்படம் எடுப்பதற்கு முன்னர், ஒரு பெரிய போர்டு பளிச்செனத் தென்பட்டது. மொபைல் போன் பற்றி எச்சரிக்கை லண்டனிலுள்ள பள்ளிக் கூடங்களிலும் உள்ள து. ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மனின் முறுக்கு மீசைக்கும் தடை விதிக்கப்படதைப் பார்த்து ‘’சிரி சிரி’’ என்று சிரித்தேன். எங்கள் காலத்தில் யூனிfஆர்ம் (Uniform) கூடக் கிடையாது. இப்பொழுது எல்லோரும் சீருடையுடன் காணப்பட்டனர்.