மனு நீதியைக் கம்பன் புகழ்வது ஏன்? (Post No.3304)

 

 

Written  by London Swaminathan

 

Date: 30 October 2016

 

Time uploaded in London: 16-56

 

Post No.3304

 

Pictures are taken from various sources; thanks to Facebook friends.

 

 

மானவ தர்ம சாச்திரம் எனப்படும் உலகத்தின் முதல் சட்டப் புத்தகத்தில் உள்ள இடைச் செருகல்களைக் காட்டி அதற்கு அவப்பெயர் உண்டாக்குவதில் திராவிடக் கட்சிகளும், மார்கசீயவா ((ந்)) திகளும், வெள்ளைத் தோல் வெளிநாட்டினரும் சமர்த்தர்கள். ஆனால் இதற்கு நேர் மாறாகத் தமிழ் கல்வெட்டுகளும் தமிழ் இலக்கியமும், குறிப்பாக கம்பராமாயணமும் மனு நீதியைப் புகழ்ந்து தள்ளுகின்றன. மனுநீதிச் சோழன் பற்றிய இலக்கியக் குறிப்புகளைத் தந்து முன்னரே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிவிட்டதால், அதை மீண்டும் கூற விழையவில்லை.

 

கம்பராமாயணத்தில் சில பாடல்களை  மட்டும் ஈங்கு தருவன்.

 

அகத்தியனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகளை அழகாகப் பாடிவிட்டு கம்பன் மனு நீதி பற்றிக் கூறுகிறான் ஆரண்ய காண்ட, அகத்தியப் படலத்தில்:–

 

வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும்

தாழும் இமையோர் உயர்வர் தானவர்கள் தாழ்வார்

ஆழி உழவன் புதல்வ ஐயம் இல்லை மெய்யே

ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான்.

 

தமிழ் முனிவன்  பற்றி கம்பன் செப்பிய பாடல்களை அடுத்து இப்பாடல் வருவதால் இராமன் தென்னாட்டிற்கு வந்தது — தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வந்தது தெள்ளிதின் விளங்கும்.

 

பொருள்:–

“தசரத சக்ரவர்த்தியின் திருமகனே! நீ இங்கே தங்கினால் வேதங்கள் வாழும்; மனு நீதி வாழும்; அறம் வாழும்; இன்று வரை அரக்கரால் தாழ்வடைந்த தேவர்கள் (இமையோர்) உயர்வர்; அரக்கர்கள் (தானவர்கள்) தாழ்வு அடைவார்கள். இதில் சந்தேகமே இல்லை; அதனால் நீ இங்கேயே தங்கு” என்று இராமபிரானிடம் அகத்தியன் பகர்ந்தான்.

 

கிஷ்கிந்தா காண்டத்தில் நிறைய இடங்களில் மனு நீதியைப் பாராட்டும் பாடல்கள் வருகின்றன; சில பாடல்களை மட்டும் காண்போம்:–

 

இராமனை வாலி குறைகூறும் பாடல் இதோ:-

அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறுஓர்

குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ

இரக்கம் எங்கு உகுத்தாய் என்பால் எப்பிழை கண்டாய் அப்பா

பரக்கழி இது நீ பூண்டால் புகழையார் பரிக்கற்பாலார்

 

பொருள்:-

ஐயா! அரக்கர் செய்த தீமைக்காக குரங்குகளின் மன்னனைக் கொல்லுமாறு மனுநீதி கூறிற்றோ? நினக்கே உரித்தான அருளை எங்கு விட்டாய்? என்னிடத்தே என்ன பிழையைக் கண்டாய் பெரும்பழியை உன்னைப் போன்றவர் ஏற்றால் புகழை ஏற்க வல்லவர் வேறு எவர் உளர்?

 

இதற்கு இராமன் அளித்த பதில்:–

 

தக்க இன்ன தகாதன இன்ன என்று

ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள

மக்களும் விலங்கே மனுவின் நெறி

புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே

 

(எது சரி, எது சரியில்லை என்று தெரியாத மக்கள் விலங்குகளே; மனு நீதிப்படி நடக்கும் விலங்கும்கூட தேவர்களுக்குச் சமம்)

 

 

இன்னொரு பாடலில் இராமனைப் புகழும் கம்பன்,

மனுநீதியான் என்ற அடைமொழியைச் சூட்டுகிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் “மனு நூலில் சொன்னபடி அறநெறி தவறாது நடப்பவனான இராமன்” என்று வியாக்கியானம் செய்கின்றனர்.

 

இதை வலியுறுத்தும் ஒரு பாடலும் கிஷ்கிந்தா காண்டத்தில் உண்டு:

 

நஞ்ச மன்னவரை நலிந்தாலது

வஞ்சமன்று மனு வழக்காதலால்

அஞ்சில் ஐம்பதில் ஒன்றறியாதவன்

நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்

 

பொருள்:-

 

விஷம் போன்ற கொடியவரைத் தண்டித்தால் அது கொடுமை இல்லை ஏனெனில் அது மனு நீதியில் சொல்லப்பட்டதாகும் ஆகையால இதனை 5 வயதிலும் 50 வயதிலும் அறியாத சுக்ரீவனிடம் எடுத்துச்சொல்வாயாக என்று இராமன் கோபத்துடன் கூறியது கிட்கிந்தைப் படலத்தில் வருகிறது.

 

மனு நீதி என்பது என்ன என்பதை மனினுநீதிச் சோழன் கதையில் கண்டோம்; தவறிழைத்தவன் மன்னன்    மகனே ஆனாலும் மந்திரி மகனே ஆனாலும் பாமரனுக்குள்ள அதே நீதிதான் அவனுக்கும். தேரின் காலில் கன்றைக் கொன்றதால் அரண்மனைக்கு ஓடிச் சென்று மணி அடித்த பசுவுக்காக தன் மகனையே பலி கொடுத்த மாமன்னன் மனு நீதிச் சோழன்.

 

கொலை போன்ற கொடும் செயல்களில் ஈடுபடுவோரை தீர்த்துக் கட்டுவது அரசன் கடமை என்று வள்ளுவனும் (குறள் 550) மனுவும் (7-10) செப்புகின்றனர்.

 

இன்னொரு பாடலில் இலக்குவனையும் மனுவின் கோமகன் (மனுவின் வழியில் வந்தவன்) என்று புகழ்வான் கம்பன்.

 

 

 

இப்படிக் கம்ப ராமாயணம் முழுவதும் பல இடங்களில் மனுவைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறான் கம்பன். கல்வெட்டுகளில் மனு நீதி பற்றி வரும் விஷயங்களை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

 

–சுபம்–

 

 

 

 

 

பாம்பு மந்திரம்: அதர்வண வேதமும், கம்பனும் காளிதாசனும் (Post No.3264)

snake-nandhu-fb

Research Article by London Swaminathan

 

Date: 18 October 2016

 

Time uploaded in London: 14-59

 

Post No.3264

 

Pictures are taken from various sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

 

snakes-banded-egyptian-cobra

பாம்புகள் மணி மந்திர ஔஷதத்துக்குக் கட்டுப்படும் என்ற நம்பிக்கை வேத காலத்திலிருந்து இருந்து வருகிறது (மணி= இரத்தினக் கற்கள், மந்திரம்= மந்திர உச்சாடனம், ஔஷதம்= மூலிகை, மருந்துகள்).

 

இதைப் புலவர்களும் அடிக்கடி உவமையாகப் பயன் படுத்துவர். கம்பனும் காளிதாசனும் பயன்படுத்தியதால் மக்களிடையே இந்த நம்பிக்கை வேரூன்றி இருக்கிறது.

குயவர் ஜாதியினர், கோயமுத்தூர் பகுதியில் பாம்பு கடித்த ஒருவனைக் காப்பாற்றிய செய்தியை ஆர்தர் மைல்ஸ் என்பவர் குறிப்பிடுகிறார். அந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு பழுப்பு நிற பொடியைப் பாம்பு கடித்த இடத்தில் தூவி, விஷத்தை உடம்பிலிருந்து இறக்குவது போல பலவித சைகைகளைச் செய்த சிறிது நேரத்தில் அந்தப் பையன் பாம்பு கடிக்காத மாதிரி நடந்து சென்றான். அதற்கு முன் அவன் கைகள் எல்லாம் மரத்துப் போயிருந்தன் என்கிறார்.

 

 

துர் ஜனங்கள் (Bad people) பற்றி நீதி வெண்பா என்ற நூலில் வரும் பாடல்:

 

துர்ச்சனரும் பாம்புந்  துலையொக்கினும் பாம்பு

துர்ச்சனரையொக்குமோ தோகையே — துர்ச்சனர்தாம்

எந்தவிதத்தாலும் இணங்காரே பாம்புமணி

மந்திரத்தாலே வசம்

 

பொருள்:- மயில் போன்ற பெண்ணே! கீழ் மக்களும் பாம்பும் தீங்கு செய்வதில் தராசுத்தட்டில் சமமாக இருப்பினும், பாம்பானது கீழ் மக்களுக்குச் சமமாகுமோ! ஆகாது ஏனெனில் கீழ் மக்களை என்ன சொன்னாலும் திருத்த முடிவதில்லை. ஆனால் பாம்போ இரத்தினக் கல், மந்திர உச்சாடனங்களுக்கும் கட்டுப்படும்.

snakes-blessed

Christian Priest blesses Snakes

கந்த சஷ்டிக் கவசம் போன்ற கவசங்களைப் படிப்போருக்குத் தெரியும் அதை பக்தியுடன் சொல்லுவோரை விஷமும் ஒன்றும் செய்யாது. இதைக் கவச வரிகளிலேயே காணலாம்.

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க……. (கந்த சஷ்டி கவசம்)

 

அதர்வவேதம் அருளும் ஆனந்த வாழ்வு என்னும் நூலில் கவிமாமணி தமிழ்மாறன் பின்வரும் செய்தியை எழுதியுள்ளார்:

 

“கம்பநாடர் நாகபாசப்பாடலைப் பாடி (கம்ப ராமாயணம்) , பாம்புக்கடி விஷத்தை இறக்கி, தில்லை மூவாயிரர் மகனை உயிர்ப்பித்தார். வைத்தீஸ்வரன் கோயில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் பாம்புக்கடி விஷத்தை ஜபம் செய்தே போக்கி வந்துள்ளார்.”

 

கம்பர், வேளாளர்கள் பெருமையைப் பாடும் ஏர்ழுபது நூல் அரங்கேற்றத்துக்கு வந்திருந்த  புதுவைச் சேதிராயன் என்பவன் காலில் பாம்பு கடித்தது. உடனே கம்பர் ஒரு பாட்டுப் பாடவே ஒரு பாம்பு வந்து கடிபட்ட இடத்திலிருந்த விஷத்தை உறிஞ்சியது. அவரும் உயிர்தப்பினார்.

 

தேவாரம் பாடிய மூவரும் இப்படி விஷம் தீர்க்கும் பாடல்களைப் பாடி,  அற்புதங்களைச் செய்ததை நாம் அறிவோம்.

 

 

garuda-snake

அப்பூதி அடிகளாரின் மகனை அரவம் தீண்டியபோது அப்பர் பெருமான் பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.

 

திருமருகலில் வணிகர் குல மகனைப் பாம்பு தீண்டவே ஞான சம்பந்தர் பதிகம் பாடி உயிர்கொடுத்தார்

 

இப்படி புனித நூல்கள் முழுதும் உயிர்பெற்ற அதிர்ஷ்டசாலிகளின் கதைகளைப் படித்தறியலாம்.

 

பண்டரீபுரத்தில் வாழ்ந்த சுமதி-கமலாகர் என்ற பக்தர்களின் மகனான பத்மாகரை பாம்பு தீண்டி இறந்தபோது, நாமதேவர் துதி பாடி அவனை எழுப்பித்தார்.

 

 

விஷத்தை நீக்கும் இரத்தினக் கற்கள்

மனு தம சாத்திரமும் விஷம் பாதிக்காமல் இருக்க அதற்கான ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்கிறது (மனு 7-218)

 

காளிதாசன் சொல்லுகிறான்:- ரகுவம்சம் 2-32

 

திலீபன் மேய்த்த தெய்வீகப் பசுவை சிங்கம் தாக்கியது. உடனே கோபமடைந்த திலீபன் தனது அம்பை எடுக்க கையை பின்னே கொண்டு சென்றான். ஆனால் அக்கை செயலிழந்து மரத்துப் போனது. எப்படி மரத்துப் போனது என்றால் மந்திரத்தாலும் மூலிகை மருந்துகளாலும் கட்டப்பட்டுச் செயலற்றுப் போகும் பாம்பு போல அவனுடைய கைகள் செயலிழந்தன என்கிறான் காளிதாசன் (ரகு வம்சம் 2-32)

 

கம்பன் பாட்டு

ஆரண்ய காண்டம், அயோமுகிப் படலம்

 

நல் மதியார் புகல் மந்திர நாமச்

சொல் மதியா அரவின் கடுகிற்பாள்

தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்

மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள்

 

பொருள்:-

அந்த அரக்கி அயோமுகி, நல்லறிவு உள்ளவர்கள் சொல்லும் மந்திரங்களுக்கும் தெய்வீகச் சொற்களுக்கும் அடங்காத பாம்பைப் போல, இலக்குமணனைத் தொடந்து வந்தாள். அவன் அழகில் மயங்கி அவன் மன்மதனே என்று எண்ணினாள். அவனை அடைய வேண்டும் என்ற ஆசையால் தனது செருக்கையும் கொடுமையையும் குறைத்துக்கொண்டாள்.

 

(அதாவது பாம்பு கூட மந்திரம் , கவசம் போன்ற பாடல்களுக்கு அடங்கி விடும். ஆனால் அயோமுகியின் காம வெறியில் அவள் அடங்கவில்லை)

3-snakes

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் சம்ஸ்கிருத தனிப்பாடல் தொகுப்பிலும் இவ்விஷயம் உள்ளது:-

 

க்வசித் சர்போபி மித்ரத்வமாயாத் நைவ கல: க்வசித்

 

 

அதர்வண வேத ரகசியங்கள்

 

அதர்வண வேதத்தின் ஆறாவது காண்டத்தில் பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரம் உள்ளது:-

 

“சூரியனுக்கு பிரபஞ்சத்தின் ரஹசியங்கள் தெரியும். அது போல எனக்கு பாம்புகள் தோன்றிய கதைகள் தெரியும். சூரியன் இருளை விலக்குவது போல  நான் உனது உடலில் இருந்து விஷத்தை அகற்றுகிறேன்

 

முனிவர்களுக்கும் கடவுளருக்கும் பிராமணர்களுக்கும் பாம்பு விஷத்தை நீக்கும் உபாயம் தெரியும். அது எங்களுக்குக் கடந்த காலத்திலிருந்து வந்தது. இனி எதிர்காலத்திலும் இதை உபயோகிப்போம். அந்த அறிவைக் கொண்டு உனது உடலிலுள்ள விஷத்தை நீக்குகிறேன்.

 

இதோ மலைகளில் இருந்தும் ஆறுகளில் இருந்தும் கொண்டுவந்த நீரை உன் மீது தெளிக்கிறேன். பாருஷ்ணி, சிப்லா நதிகளின் நீரை உன் மீது தெளிக்கிறேன்.  . உனது முகத்தில் சாந்தம் தவழட்டும். உனது இருதயத்தில் அமைதி நிலவட்டும்.

 

(பாருஷ்ணி நதியின் தற்போதைய பெயர் ரவி, சிபலா நதி எது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை ஷைவல என்னும் நீர்த் தாவரம் வளர்ந்த நதியாக இருக்கலாம்)

 

 

எனது முந்தைய (Snake Vs Mongoose Fight) கட்டுரை:

அருகம் புல் ரகசியங்கள், ஜூலை 12, 2013

 

–subahm–

 

 

பார்ப்பனர்களை பாரதி சாடியது ஏன்? வர்ணம் வேறு, ஜாதி வேறு- பகுதி-3 (Post No.3161)

brahmin4

Written by London swaminathan

Date: 17 September 2016

Time uploaded in London: 7-30 AM

Post No.3161

Pictures are taken from various sources; thanks.

 

வேதங்களையும், பிராமணீயத்தையும் பல இடங்களில் புகழ்ந்து பாடிய பாரதி, சில இடங்களில் பிராமணர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளான். இது ஏன்? என்று பார்ப்போம்.

 

பாரதியே ஒரு பிராமணன் என்பதையும் வேதங்களைக் கற்றவன் என்பதையும்,  தீவிர தெய்வ நம்பிக்கை உடையவன் என்பதையும் மறந்து விடக்கூடாது.

 

சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பல தலைவர்கள் அந்தணர்களே. ஆனால் அதை    விட அதிக அளவுக்கு வெள்ளைக்காரனிடம் வேலை பார்த்ததும் அந்தணர்களே. இவர்களில் பலர்,  பாரதிக்கு எதிராக நின்றனர். உளவும் சொன்னார்கள்.

 

பாரதியின் சீர்திருத்தக் கருத்துகளை ஜீரணிக்கும் அளவுக்கு அறிவின் வளர்ச்சியும் பல பிராமணர்களுக்கு இல்லை. மனைவி செல்லம்மாவுடன் கைகோர்த்து, ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லி, தெருக்களில் நடந்தது அவர்களுக்குப் பிடிக்கவும் இல்லை. அதைக் கிண்டலும் செய்தார்கள்.

 

 

இதற்கெல்லாம் மேலாக பெரும்பாலான பிராமணர்கள் வேதங்களின் உண்மைக் கருத்துகளைப் பின்பற்றாமல் சடங்குகளில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்தனர். இன்னும் பலரோ எந்த வித அனுஷ்டானங்களையும் பின்பற்றாமல் — அதாவது சந்தியா வந்தனம் முதலியன செய்யாமல் — பிறப்பினாலும், பூணுல் போட்டதாலுமே — தாங்கள்தான் சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்று எதிர்பார்த்தனர். இந்த போலித் தனத்தை பாரதி ஏற்கவில்லை. மற்ற விஷயங்கள் அவனது பாடல் வரிகளிலேயே இலகு தமிழில், பழகு தமிழில் உள்ளன. நான் விளக்கத் தேவை இல்லை.

brahmin3

வேதம் அறிந்தவன் பார்ப்பான்

 

வேதங்களில், நான்கு வர்ணம் என்று தொழில் ரீதியில் ஜாதியை அணுகியதை, பாரதி ஏற்கிறான். அவனே அதைப் பாடலிலும் தருகிறான்:-

 

வேதம் அறிந்தவன் பார்ப்பான், பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி தவறாமல் – தண்ட

நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

(நாய்க்கன் = அரசன்)

 

 

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்

பட்டினி தீர்ப்பவன் செட்டி

தொண்டரென்றோர் வகுப்பில்லை – தொழில்

சோம்பலைப் போல் இழிவில்லை

 

நாலு வகுப்பும் இங்கு ஒன்றே- இந்த

நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே- செத்து

வீழ்ந்திடும் மானிடச் சாதி

 

இதே கருத்து ரிக் வேதத்தின் புருஷ சூக்த மந்திரத்தில் இருப்பதை முதல் பகுதியில் கொடுத்துள்ளேன்.( இது மூன்றாவது கட்டுரை.)

 

நாலு குலங்கள் அமைத்தான்; – அதை

நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்

சீலம் அறிவு கருமம் – இவை

சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

 

மேலவர், கீழவர் என்றே – வெறும்

வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்

போலிச் சுவடியை எல்லாம் – இன்று

பொசுக்கி விட்டால் எவர்க்கும்நன்மை யுண்டென்பான்

(கண்ணன் என் தந்தை – பாடல்)

 

 

bharati-stampz

பேராசைக்காரனடா பார்ப்பான்!

 

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் – ஓதுவார்

மூன்று மழை பெய்யுமடா மாதம்

இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார் — இவர்

ஏதுசெய்தும் காசு பெறப் பார்ப்பார்.

 

பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்

பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான்

யாரானாலும் கொடுமை…………….

………………………………………. (வரிகள் கிடைக்கவில்லை)

 

பிள்ளைக்குப் பூணூலாம் என்பான் – நம்மைப்

பிச்சுப் பணம் கொடு எனத் தின்பான்

கொள்ளைக் கேசெந்—————-(வரிகள் கிடைக்கவில்லை)

 

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் – வெறும்

சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்

 

……………………….

…………………………………(வரிகள் கிடைக்கவில்லை)

 

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு

நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு

பாயும் கடி நாய்ப் போலீசு – காரப்

பார்ப்பானுக்கு உண்டிதிலே பீசு (fees)”

 

பூணூல் போட்டுக் கொண்டதால் மட்டும் உயர்வு என்ற கொள்கையை பாரதி ஏற்கவில்லை. மஹாபாரதம் சொல்லுவது போல (முதல்  இரண்டு பகுதியில் காண்க), குண நலன்களால் பிராமணனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆகையால் வெள்ளைக்கரனை எப்படி “துரை” என்று சொல்லக்கூடாதோ அப்படி பிராமணர்களையும் இனிமேல் “ஐயர்” (பண்பாடுமிக்க உயர்ந்தோர்) என்று சொல்லாதீர்கள் என்றார்:-

bharati-b-w

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

வெள்ளைப் பறங்கியை துரை என்ற காலமும் போச்சே

ஆர்ய (சம்ஸ்கிருதம்)= அஜ்ஜ (ப்ராக்ருதம்)= ஐய(ர்)-தமிழ்

பொருள்: பண்பட்ட மக்கள், மதிப்பிற்குரியோர்.

 

சுங்க வம்ச பிராமணர் ஆட்சிக்காலத்தில் மனு ஸ்மிருதியில் ஏராளமான இடை செருகல் நுழைக்கப்பட்டன. அதில் பல ஸ்லோகங்கள் சூத்திரர்களுக்கு எதிராக உள்ளன. ரிக் வேதத்தில் முதற்கொண்டு இடைச் செருகல், பிற்சேர்க்கை கண்டு பிடித்த வெளி நாட்டு “அறிஞர்களும்”, அவர்களுடைய இந்திய அடிவருடிகளும் மனு ஸ்மிருதியை மட்டும் அப்படியே எடுத்துக்கொண்டனர். ஏனெனில் திட்டுவதற்கு அதில் நிறைய சரக்குகள் இருந்தன. அந்த மனு நீதி எங்கேயும் பின்பற்றப்பட்டு சூத்திரர்களை தண்டித்ததாக வரலாறு இல்லை. அவரவர் குற்றத்துக்கு ஏற்பவே தண்டனைகள் கொடுக்கப்பட்டன. வெள்ளைக்கா ரன் காலத்திலும் அவனை எதிர்த்த பிராமணர் அனைவரும் தூக்கில் போடப்பட்டனர் அல்லது சுட்டுக்கொல்லப்பட்டனர். இப்படி இறந்தோர் ஏராளம் (குறிப்பாக வங்கத்தில்). இந்த மனு நீதியைத் “தமது” என்று சொல்லிய சில பேதைகளைக் கண்டிக்கும் முகத்தான் பாரதியும் பாடினான்.

சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,

சாத்திரம் சொல்லிடு மாயின்
அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”.

 

பாரதிக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சங்கத் தமிழில் அதிகப் பாடல்களைப் பாடிய கபிலன் என்ற “புலன் அழுக்கற்ற அந்தணாளன்”, பாரியின் மகள்களை ஊர் ஊராக அழைத்துச் சென்று மாப்பிள்ளை வரன் தேடினான். இது போல ஜாதிக் கட்டுப்பாடுகளைத் தகர்த்து எறிந்து, மனு நீதியைப் பின்பற்றாமல், பணியாற்றியோர் ஏராளம். மயில் வளர்க்கும் கீழ் ஜாதி மக்களை அழைத்து மாபெரும் மௌர்ய சாம்ராஜ்யத்தை உண்டாக்கிய சாணக்கியன் கடைசி வரையில் குடிசையில் வாழ்ந்தான். மனு தர்மமும் கூட பிராமணன் பொருளே சேர்த்துவைக்கக் கூடாதென்கிறது..

 

இந்தப் பிண்ணனியில் பாரதியின் வரிகளைப் படித்தால் அவன் ஏன்

சாத்திரத்தை “சதி” என்று சொன்னான் என்று தெளிவடைவோம்.

brahmin2

முன்னாள் ராஷ்டிரபதியும், தத்துவ வித்தகருமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், அவரது பகவத் கீதை வியாக்கியானத்தில், ஜாதிகள்/வர்ணம் பற்றி விள்ளக்குகையில்,  கீழ்கண்ட ஸ்லோகங்களைக் கொடுத்துள்ளார்:-

 

அந்த்யஜோ விப்ர ஜாதி ச ஏக ஏவ சஹோதர:

ஏக யோனி ப்ரசூதஸ் ச ஏக சாகேன ஜாயதே

 

அந்தணர்களும், ஐந்தாவது ஜாதியினரும் சஹோதர்களே; அவர்கள் ஒரு தாயிடத்தில் பிறந்தவர்களே (பழைய கால ஸ்லோகம்)

 

ஏகவர்ணம் இதம் பூர்வம் விஸ்வம் ஆசீத் யுதிஷ்டிர

கர்மக்ரியா விஷேசேன  சாதுர்வர்ண்யம் ப்ரதிஷ்டிதம்

 

ஓ, யுதிஷ்டிரா! ஆதிகாலத்தில் ஒரே ஜாதிதான் இருந்தது; தொழில் வேறுபாட்டால் நான்கு பிரிவுகளாக அவை பிரிக்கப்பட்டன.

 

எல்லாரும் ஓர் குலம்

 

எல்லாரும் ஓர் குலம் – எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்;

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர்- நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் — ஆம்

 

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே — வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே — ஜய ஜய ஜய

பாரத சமுதாயம் வாழ்கவே  – சுப்பிரமணிய பாரதி

 

–Subham–

 

 

வாயு பகவான் சொன்ன ரகசியம்: கம்பன் தகவல் (Post No.3146)

hanuman-bomai

Written by london swaminathan

Date: 12 September 2016

Time uploaded in London: 6-27 AM

Post No.3146

Pictures are taken from various sources; thanks.

 

 

கம்பன் போகிற போக்கில் சில புதுத் தகவல்களை உதிர்த்துவிட்டுப் போவான்; அத்தனையும் முத்துக்கள்; வைரங்கள்; அவைகளைச் சேகரித்துப் பாதுகாப்பதும், படித்து சுவைத்து ருசிப்பதும் நம் கைகளில் உள்ளது.

 

அனுமனிடம், அவன் தந்தையான வாயு பகவான் இரண்டு முக்கிய விஷயங்களைச் சொல்லுகிறான். அதை அனுமன், சுக்ரீவனிடம் சொல்லி ராமனை நம்புங்கள் என்கிறான். அப்படியும் நம்ப முடியாவிட்டால் ராமனுக்கு ஒரு டெஸ்ட் TEST (குட்டித் தேர்வு) வைக்கலாம் என்கிறான். ஏழு மராமரங்களில் ஒன்றை அவனுடைய அம்புகளால் துளைக்கச் செய்வோம் என்கிறான்.

 

இதோ வாயு பகவான் சொன்ன ரகசியம்:-

 

 

என்னை ஈன்றவன் இவ்வுலகு யாவையும் ஈன்றான்

தன்னை ஈன்றவர்க்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே

உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான்

இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய்

 

பொருள்:-

 

தலைவா (சுக்ரீவா)! என்னைப் பெற்ற வாயுதேவன், இந்த உலகங்களை எல்லாம் படைத்த பிரம்மாவை தனது கொப்பூழிலிருந்து தோற்றுவித்த விஷ்ணுவுக்குப் பணி செய்; அதுதான் சிறந்த தவம்; அப்படி நீ செய்தால் எனக்கும் நல்ல நிலை கிட்டும் என்றான். இந்த இராமந்தான் அந்தத் திருமால்/விஷ்ணு

 

கடவுள்  என்பது எப்படித் தெரியும்?

 

உடனே அனுமன் கேட்டான்; அப்பா (வாயுதேவனே); விஷ்ணுவை நான் எப்படிக் கண்டு பிடிப்பது; எனக்குத் தெரியாதே; ஏதேனும் அடையாளங்கள் சொல்லுங்கள்;

 

(அனுமன் மனதில் எழுந்த சந்தேகங்கள்: –  அவர் என்ன கலர் சட்டை போட்டுக் கொண்டு வருவார்? கைகளில் பை (suitcase) கொண்டுவருவாரா? கண்ணாடி (Spectacles) போட்டிருப்பாரா? மீசை வைத்த ஆளா? என்ன உயரம்? குட்டையா? நெட்டையா?)

96910-kkish1

வாயுதேவன் சொன்னான்:

யாராவது கஷ்டப்பாட்டால் ஓடி வந்து உதவி செய்வான்; இது முதல் அடையாளம்.

 

அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே உன் உடலில் அன்பு சுரக்கும்; அளக்கமுடியாத காதல் உருவாகும். இது இரண்டாவது அடையாளம்

 

இதோ கம்பன் சொற்கள்:-

 

துன்பு தோன்றியபொழுது உடன் தோன்றுவன் எவர்க்கும்

முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் இயம்ப

அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை

என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ

 

பொருள்:-

 

நீ கூறிய அவனை அறிதற்கு என்ன வழி? – என்று நான் தந்தையான வாயுதேவனிடம் கேட்டேன். அதற்கு அவன், “அப் பெரியோன் எல்லார்க்கும் துன்பம் உண்டாகும் போது உடனே தோன்றுவான். மேலும் அவனைக் கண்ட அளவில் உனக்கு மனதில் அன்பு உண்டாகுவதே சான்றாகும்”- என்று கூறினான். அவன் சொன்ன படியே இந்த இராம பிரானைப் பார்த்த மாத்திரத்தில் என் உடல் எலும்பும் காணாதவாறு உருகிவிட்டது. இதற்கு மேலும் சந்தேகம் வருமா?

 

ஒருவருக்குத் துன்பம் வந்தால் கடவுளை நாடுவதை கிருஷ்ணனும் பகவத் கீதையில் சொல்கிறான். அதிலிருந்து துன்பப் பட்டோருக்கு கடவுள் உதவுகிறார் என்பது தெளிவு.

 

கண்ணன் சொல்லுகிறான்:-

1.துன்பம் அடைந்தவர்கள்

2.ஞானத்தைத் தேடுவோர்

3.செல்வத்தை விரும்புவோர்

4.ஏற்கனவே ஞானியானவன்

ஆகிய நாலு வகையான மனிதர்கள் என்னை வழிபடுகின்றனர் (பகவத் கீதை 7-16)

 

பாண்டவர்களின் தாயான குந்தீ சொல்கிறாள்:-

துன்பக் கண்ணீரைத் துடைக்கும் உன் தரிசனம் துன்பம் வரும்போது கிட்டுவதால் எனக்கு அடிக்கடி துன்பம் வரட்டும்; இதுவே என் பிரார்த்தனை– (பாகவதம்)

 

விஷ்ணு சஹஸ்ர நாமத்திலும் இறுதியில் “சங்கீத நாராயண

சப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் சுகினோ பவந்து” என்று சொல்லப்படுகிறது. நாராயண என்ற சப்தம் கேட்ட மாத்திரத்தில் துன்பம் பறந்தோடிப் போய்விடும்; சுகம் தழைக்கும்.

 

–சுபம்–

பாட்டிற்கோ பாரதியே தான்! (Post No 3145)

statue-bharati

Written by S NAGARAJAN

Date: 11 September 2016

Time uploaded in London: 21-24

Post No.3145

Pictures are taken from various sources; thanks.

 

செப்டம்பர் 11 : பாரதி நாள்!

.நாகராஜன்

 

bharati-malar

வெந்துயரில் வீழ்ந்திருந்த பாரதத்தை வாழவைக்கத்

தந்துயரம் பாராத சான்றோருள்இந்தியமா

நாட்டிற்கோ காந்தியெனில் நாமெழவே கூவிட்ட

பாட்டிற்கோ பாரதியே தான்

 

செய்யுநலம் சீரழிந்து செந்தமிழும் வாடுகையில்

உய்யுநலம் காட்டியவன் ஓர் கவிஞன்நெய்யுமொரு

கூட்டிற்கோ தேன்கூடு கொட்டுதமிழ்ச் சந்தமொழி

பாட்டிற்கோ பாரதியே தான்

 

வீட்டிற்கோ குலமகளிர் வீதிக்கோ நல்லோர்பள்ளி

காட்டிற்கோ உயிர்தருமொரு சஞ்ஜீவனிஇந்தியமா

நாட்டிற்கோ வேதரிஷிகள் கவிதையெனில் தமிழ்ப்

பாட்டிற்கோ பாரதியே தான்

வேறு

இந்தியர் தம் நெஞ்சினிலே தேசப்பற்றை ஊட்டினான்

வஞ்சக வெள்ளையரை நாட்டைவிட்டு ஓட்டினான்

தமிழர்க்குத் தமிழ் போற்றும் வழி காட்டினான்

புகழோங்கு பாரதத்தை நிலை நாட்டினான்

புதியதொரு பாதையைப் புவியினிலே காட்டினான்

புகழவோர் வார்த்தையிலை புகழுக்கே புகழ் ஊட்டினான்

புண்ணியன் சுப்பிரமணி பாரதியின் பெருமையினை

எண்ணியெண்ணி அவன்வழி நடப்போம் உயர்வோம்

********

 

 

 

‘பிறவிப் பெருங்கடல்’ பற்றி நம்பியும், வள்ளுவரும் (Post No. 3144)

tallship

Written by London Swaminathan

Date: 11 September 2016

Time uploaded in London: 21-00

Post No.3144

Pictures are taken from various sources; thanks.

 

வள்ளுவர் ஒரு கடைந்தெடுத்த இந்து என்பதற்கு  அவர் பாடிய 10 கடவுள் வாழ்த்துப் பாடல்களே சான்று பகரும்.

 

முதல் பத்து குறள்களில், ஏழு குறள்களில் பாதாரவிந்தம் பற்றிக் குறிப்பிடுகிறார். மலர் அடி, தாள் என்று இறைவனின் பாத கமலங்களைப் பாடுகிறார். இது வேறு எந்த மதத்திலும் கிடையாது; இந்துமதத்தில் மட்டுமே உண்டு. யாருடைய பாதாரவிந்தம் (பாத+ அரவிந்தம்= மலர்+அடி) என்று பிற்காலத்தில் எவருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாதே என்பதற்காக முதல் வரியிலேயே “கடவுள் வாழ்த்து” என்று தலைப்பும் கொடுத்து விடுகிறார். கடவுள் வாழ்த்து என்பது தொல்காப்பிய சொற்கள்!  கடவுள் பற்றியோ கடவுளின் பாதாரவிந்தம் பற்றியோ புத்த, சமண மதங்கள் பேசுவதில்லை. இரண்டு மதங்களும் கடவுள் பற்றி கதைப்பதில்லை.

 

மேலும் பத்தாவது குறளில் வரும் “பிறவிப் பெருங்கடல்” என்பது “சம்சார சாகரம்” என்பதன் மொழி பெயர்ப்பு. இது கிருஷ்ண பரமாத்மாவின் சொற்கள் (கீதை 12-7)

 

அதுமட்டுமல்ல கண்ணன் முதல் ஆதி சங்கரர் வரை எல்லா சமஸ்கிருத நூல்களிலும் ‘பிறவிப் பெருங்கடல்’ காணப்படுகிறது.

ஆதிசங்கரர் நூற்றுக் கணக்கான இடங்களில் சம்சார சாகரம் (பிறவிப் பெருங்கடல்) பற்றிப் பாடுகிறார். அவர் பாடிய விவேக சூடாமணியில் மட்டும் 9, 35, 37, 44, 136 எண் பாடல்களில் இந்தச் சொற்களைக் காணலாம்.

 

கடவுள் பற்றி  வள்ளுவர் சொன்ன எல்லா சொற்றொடர்களையும் தேவார, திருவாசக திவ்வியப் பிரபந்தங்களில் காணலாம். கம்பனும் இச்சொற்களை எடுத்தாள்கிறான்.

 

இரண்டே பாடல்களை மட்டும் பார்ப்போம்–

பிறவிஎனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவிஎனுந் தோற்றோணி கண்டீர் – நிறைஉலகில்
பொன்மாலை மார்பன்புனற் காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.
—நம்பியாண்டார் நம்பி 11-11 ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை

high-sea-e

பிறவிப் பெருங்கடலைப் பார்ப்பதற்கு முன் வேறு இரண்டு விஷயங்களையும் கவனியுங்கள். தமிழுக்கு எத்தனை பெயர்கள்? என்ற எனது கட்டுரையில் ஞானத்தமிழ் என்பதற்கு மூன்று பாடல்களைக் காட்டியிருந்தேன் அதில் ஒன்றுதான் நம்பியின் பாடல். ஆக, ஞானத் தமிழ் என்ற அடைமொழி சுவைத்துப் பருகவேண்டியது. அதைவிட அருமையான உவமை ஒன்றையும் கவனித்தல் வேண்டும். பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு ஞான சம்பந்ததர் பாடிய பாடல்கள் கப்பல் போல உதவும் என்கிறார். கடலைக் கடக்க கப்பல் தேவை; பிறவிக்கடலைக் கடக்க சம்பந்தர் தேவாரம் தேவை. அருமையான உவமை. அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது வள்ளுவர் பயன்படுத்தும் பிறவிப் பெருங்கடலை நம்பியும் பயன் படுத்துவதாகும்.

 

கடவுள் வாழ்த்தின் மூன்றாவது குறளில் மலர்மிசை ஏகினான் என்ற அடைமொழியை கடவுளுக்குச் சூட்டுகிறான் வள்ளுவன். தாமரை மலர் மீது வீற்றிருப்பவன் பிரம்மா. கடவுள் என்பதால் புத்தரையோ மஹாவீரரையோ அவன் குறிக்க முடியாது. மற்ற மதத்தினருக்கு உருவ வழிபாடு ஒவ்வாது; ஆகையால் அவர்கள் இ ந்தப் பத்துக் குறட்பாக்களையும் ஒதுக்கி விடுவர்.

மலர்மிசை ஏகினான் யார் என்று கம்பனும் புகல்வான்:-

 

கிஷ்கிந்தா காண்ட நட்புக் கோட் படலப் பாடல் ஒன்றில் அருங்கமலத்து அண்ணல் என்று பிரம்மாவை அழைக்கிறான் கம்பன்.

மராமரப் படலத்தில் வரும் பாடலைப் பாருங்கள்:-

 

கலைகொண்டு ஓங்கிய மதியமும் கதிரவந்தானும்

தலைகண்டு ஓடுதற்கு அருந்தவம் தொடங்குறும் சாரல்

மலைகண்டோம் என்பது அல்லது மலர்மிசை அயற்கும்

இலைகண்டோம் எனத் தெரிப்ப அருந்தரத்தன ஏழும்.

 

பொருள்

ஏழு மராமரங்களின் பெருமையை கம்பன் சொல்கிறான்:

அவற்றின் உயரம் சூரியனும் சந்திரனும் அவற்றின் உச்சியைத் தாண்டிச் செல்ல தவம் செய்ய வேண்டும்; தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மாவும் அவற்றின் நுனியின் உள்ள இலையைப் பார்த்தேன் என்று சொல்லமுடியாத அளவுக்கு உயரமானவை.

 

இங்கே நாம் கவனிக்க வேண்டிய சொற்கள் மலர்மிசை அயன் = தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மா! வள்ளுவன் சொன்ன மலர்மிசை ஏகினான் பிரம்மா என்பதற்கு வேறு சான்றும் வேண்டுமோ?

–Subam–

 

சாமுத்ரிகா லட்சணம்: கம்பன் தரும் தகவல் (Post No.3142)

sangu-chakra-reka

Written by London Swaminathan

 

Date: 11 September 2016

 

Time uploaded in London: 7-03 AM

 

 

Post No.3142

 

Pictures are taken from various sources; thanks.

 

 

உடலில் ஒவ்வொரு அங்கமும் எப்படி இருந்தால் அதனால் என்ன பலன் என்று கூறும் சாத்திரம் சாமுத்ரிகா லக்ஷண சாத்திரம் ஆகும். இது குறித்து வராஹ மிஹிரர் சொன்ன விஷயங்களை ஏற்கனவே எழுதினேன்.

 

கம்பனும் ராமாயணத்தில் இது பற்றி பல குறிப்புகளைக் கொடுக்கிறான். சம்ஸ்கிருதத்தில் ஆஜானு பாஹு என்பர். அதை அவன் நீண்ட நெடுந்தோள், தாள்தோய் தடக்கை என்றெல்லாம் வருணிப்பான்.

woman

இதோ ஒரு பாடல்:

 

சங்கு சக்கரக்குறி உள தடக்கையில் தாளில்

எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை

செங்கண் விற்கரத்து இராமன் அத் திரு நெடுமாலே

இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்.

-நட்பு கோட் படலம், கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்

 

பொருள்:–

சுக்ரீவனிடம் அனுமன் சொல்லுகிறான்

 

இராமனுக்கு பெரிய கைகளிலும் கால்களிலும் சங்கு, சக்கர அடையாளங்கள் உள்ளன. இததகைய உயர்ந்த இலக்கணங்கள் எந்த உலகத்திலும் எவர்க்கும் இல்லை. ஆகையால் சிவ ந்த கண்களையும் வில்லை ஏந்திய கைகளையும் உடைய இராமன் இப்போது அறத்தை நிலை நிறுத்துவதற்கா க உலகில் அவதரிக்கும் திருமாலே ஆவான். மேலும்……………..

 

கைகளில் மட்டும் சங்கு ச்க்கர ரேகை இருப்பதே ஆபூர்வம்; இவனுக்கோ கைகளிலும் கால்களிலும் இப்படி சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன.

 

(எனக்கு ஒரு சிந்தனை: இப்படிக் கை, கால்களில் சாமுத்ரிகா லட்சண ரேகைகள் இருந்ததைத் தான் பிற்காலத்தில் உண்மையிலேயே கைகளில் சக்கரமும் சங்கும் இருப்பது போல உருவம் செய்துவிட்டார்களோ? ஆராய்ச்சிக்குரிய விஷயம்!)

 

ஐந்து உறுப்புகள் நீண்டதாக இருப்பது நல்லது என்று சம்ஸ்கிருத நூல்களும் மொழியும்:

 

பாஹூ நேத்ரத்வயம் குக்க்ஷிர்த்த்வே து நாசே ததைவ ச

ஸ்தனயோரந்தரம் சைவ பஞ்ச தீர்கம் ப்ரசக்ஷதே

 

பொருள்:-

நீண்ட கைகள், நீண்ட கண்கள், மூக்கு, வயிறு, முலைகள் இருக்க வேண்டும் என்று சொல்லப்படும்.

 

My earlier post:

Scientific proof for Samudrika Lakshanam

Posted by Santhanam Swaminathan on 18 Mar 2013

 

 

–Subahm–

 

ஆரியம் முதல் பதினெண் பாடையில்…… கம்பன் மொழி (Post No.3130)

tamil-alphabet

Written by London swaminathan

 

Date: 7 September 2016

 

Time uploaded in London: 8-23 AM

 

 

Post No.3130

 

Pictures are taken from various sources; thanks.

 

பழங்கால இந்தியாவில் பதினெட்டு மொழிகள் பெரிய அளவில் பேசப்பட்டன என்பதை கம்பனும் பாரதியும் நமக்கு சொல்லும் அழகே தனி!

 

பம்பை நதியின் இயற்கை அழகை கம்பன் வருணிக்கும் அழகு படித்து இன்புறத் தக்கது. முதலில் பம்பை என்னும் நதி பற்றி ஓரிரு வார்த்தை; இது பழங்காலச் சொல். கேரளத்தில் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் வழியில் ஒரு பம்பை நதி உளது; தென் அமெரிக்காவில் ஒரு பம்பை நதி உளது; கிஷ்கிந்தா காண்டத்தில் ராம பிரான் கண்ட பம்பை நதி வட இந்தியாவில் உளது!

 

ஆரியம் முதலிய பதினெண் பாடையில்

பூரியர் ஒரு வழிப்புகுந்தது ஆம் என

ஓர்கில கிளவிகள் ஒன்றொடு ஒப்பில

சோர்வில விளம்பு புள் துவன்றுகின்றது

 

பொருள்:–

அந் நீர் நிலை சம்ஸ்கிருதம் முதலான பதினெட்டு மொழிகளில் நல்ல தேர்ச்சி பெறாத அற்பப் புலமை உடையவர்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து ஆரவாரம் செய்வது போல இன்ன இன்ன பறவையின் ஒலி இது இது என்று ஆராய்ந்து அறிய மாட்டாதவைகளும், ஒன்றுடன் ஒன்று ஒத்திராதவைகளுமாய் உள்ள ஒலிகளை ஓய்வின்றி ஒலிக்கும் பலவகைப்பட்ட பறவைகள் கூடி நெருங்கி இருக்கப்பெ ற்றதாகும்.

 

இதிலிருந்து தெரிவதென்ன?

sanskrit_vwl

1.இந்தியாவில் பதினெட்டு மொழிகள் பெரிய மொழிகளாகக் கருதப்பட்டன. அதில் சம்ஸ்கிருதமே முதலிடம் பெற்றது

2.ஆரியம் என்றால் ரிஷி முனிவர்கள், வடக்கில் வாழும் பண்பாடுமிக்கோர் என்னும் பொருள், சங்க இலக்கியம் முதல் கம்பன் காலம் வரை இருந்தது. அதாவது மாக்ஸ்முல்லர்களும், கால்டுவெல்களும் “சிவபூஜையில் கரடி புகுந்தது போல” புகும் வரை ஆரிய என்ற சொல்லுக்கு இனத் துவேஷப் பொருள் இல்லை. கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் இன வெறியைப் பரப்பியதால் ஹிட்லர் தன்னை ஆரியன் என்று சொல்லி மற்றவர்களைக் கொடுமைப்படுத்தியதை வரலாறு படித்தோர் அறிவர் (விவரங்களை எனது பழைய கட்டுரைகளில் காண்க)

 

  1. ஆரியருக்கு எதி ர்ப்பதம் பூரியர் என்பதாலும் இது உறுதியாகிறது அதுவே ஆங்கிலத்தில் இன்றும் ஸ்பூரியஸ் (Spurious = false, fake, illegitimate) என்று வழங்கப்படும்

 

4.கம்பன் பல்வேறு மொழிகளைப் பயின்றான் அவனே வால்மீகி புகழைப்பரப்ப அவனுடைய ராமாயணத்தை மொழிபெயர்ப்பதாக பால காண்டத்தில் கூறியதையும் அகத்தியனையும் தமிழையும் வானளாவப் புகழ்வதையும் எனது முந்தைய கட்டுரைகளில் காண்க

 

5.பறவைகள் பற்றிய தமிழனின் அறிவையும் இப்பாடல் விளக்கும். ஒவ்வொரு பறவையையும் அதனுடைய ஒலியைக்கொண்டே அறிவான் தமிழன்.ஆனால் பம்பை நதிக்கரையிலோ எல்லாப் பறவைகளும் சேர்ந்து ஒலித்தது “குறை குடம் தழும்பியது போல” இருந்தது!

 

பாரதி மொழியில்

முப்பது கோடி முகமுடையாள் உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்

செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனிற்

சிந்தனை ஒன்றுடையாள் (பாரதியார் படல்)

 

என்று பாரத தேவியைப் பாரதி புகழ்வதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது பேரின்பம் தரும்.

 

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

இறுதியாக ஒவ்வொரு மொழியும் அவரவர் காதுக்கு இனிமையானது என்பதை உணர்தல் வேண்டும். பார்லிமெண்டில் பேசிய சேத் கோவிந்த தாஸ், தமிழ் மொழி என்பது தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்கினால் எப்படி ஒலி வருமோ அது போலக் கடூரமானது என்று கிண்டல் செய்தார். உடனே தி.முக. உறுப்பினர்கள், இந்தி மொழியில் உள்ள மிகப்பெரும் இலக்கியம் டெலிபோன் டைரக்டரிதான் என்றும் செப்பினர். இரண்டும் மொழிப்பற்றினாலும், அறியாமையினாலும் வெளிப்பட்ட கூற்றுகள்!

 

பி.பி.சி. தமிழோசையில்…………

 

லண்டனில் புஷ் ஹவுசில் (Bush House, London) ஏழாவது மாடியில் நான் B.B.C. தமிழோசை ஒலிபரப்பளராக வேலை பார்த்த காலத்தில் நானும் சங்கர் அண்ணாவும் ஏதேனும் ஒரு விஷயம் பற்றி விவாத்தித்துக் கொண்டிருப் போம். அடுத்த அறையிலுள்ள நேபாளி ஒலிபரப்பாளர்கள் வந்து ஏன் இப்படிச் சண்டை போடுகிறீர்கள்?  என்று சிரித்துக்கொண்டே சொல்லுவர். அவர்களுக்குத் தெரியும் நாங்கள் சுவையான விவாதத்தில் இருக்கிறோம் என்பது. ஆயினும் தமிழ் மொழியின் குரல் அவர்களுக்குச் சண்டை போடுவது போலக் கடூரமாக இருப்பதை அவர்கள் சொல்லாமல் சொல்லுகின்றனர் என்பது எங்களுக்குப் புரிந்து விடும். இதே நேரத்தில் எம்.எஸ். சுப்புலெட்சுமி, .சுசீலா, ஜானகி போன்றோரி ன் பாடல்களைக் கேட்டிருந்தால் அவர்கள் கருத்து வேறு மாதிரி இருந்திருக்கும்!

 

–Subham–

ராமன்-சுக்ரீவன் நட்புறவு ஒப்பந்தம்! கம்பன் தரும் சுவைமிகு தகவல்

sugreeva

Written by London swaminathan

 

Date: 6 September 2016

 

Time uploaded in London: 9-42 AM

 

 

Post No.3127

 

Pictures are taken from various sources; thanks.

 

 

இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்னர் பல ராணுவ உடன்பாடுகள் ஏற்பட்டன. எல்லோருக்கும் நன்கு தெரிந்தது நேட்டொ (North Atlantic Treaty Organisation)  எனப்படும் மேலை நாடுகளின் கூட்டணியாகும். இதில் முக்கியமான விதி கூட்டணியிலுள்ள ஒரு நாட்டை ஏதாவது ஒரு நாடு தாக்கினால் உடனே இந்தக் கூட்டணியும் தலை யிடும். அங்கே தர்ம, நியாயம் என்பதெல்லாம் கிடையாது. என் நண்பனை நீ தாக்கினாய், ஆகையால் நான் உன்னத் தாக்குவது சரியே என்பது அவர்தம் கொள்கை.

 

இதே போல அரசியல் கட்சிக் கூட்டணிகள் பல அமைகின்றன ; போகின்றன. இ வைகளுக்கெல்லாம் மூலம் ராமாயணத்தில் உள்ளது! கம்பன் ஒரு பாட்டில் சொல்வது நமக்கே வியப்பைத் தரும். இதோ பாருங்கள்:–

 

 

என்ற அக் குரக்கு வேந்தை இராமனும் இரங்கி நோக்கி

உந்தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன் நாள்

சென்றன போக மேல்வந்து உறுவன தீர்ப்பல் அன்ன

நினறன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா

 

மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னைச்

செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னோடு

உற்றவர் எனக்கும் உற்றார் உன்கிளை எனது காதல்

சுற்றம் உன் சுற்றம் நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்.

 

பொருள்:-

 

நட்புறவு ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துகள் (அம்சங்கள்):-

1.இனி உனக்கு வரக்கூடிய துன்பங்களைத் தவிர்க்க உதவுவேன்

2.இதற்கு முன் உனக்கும் எவருக்கும் பகைமை, சண்டை சச்சரவுகள் இருந்தால் அதில் எனக்குப் பொறுப்பில்லை

3.இனி உனக்கு இன்பம் வந்தால் அதில் 50 சதவிகிதம் உனக்கு; மீதி 50 சதவிகிதம் எனக்கு; அதே போல துன்பம் வந்தாலும் இருவரும் சமமாக பங்கு போடுவோம்

4.உன்னை யார் தாக்குகின்றனரோ அவர் என்னையே தாக்கியதாகக் கருதப்படுவார்

5.கொடியவரே என்றாலும் உன்னுடன் நட்புடையவர் எமக்கும் நண்பரே

6.உன் உறவினர் யாவரும் என் உறவினர்; அன்புகாட்டும் எம் உறவினரும் உனக்குச் சொந்தம் (யாதும் ஊரே, யாவரும் கேளிர்).

7.நீ இன்றுமுதல் என் ஆருயிர்த் தோழன்

 

எவ்வளவு தெளிவான பேச்சு. இக்காலப் பத்திரிக்கைகள் கூட இப்படி இரண்டே பாடலில் — எட்டே வரிகளில் இப்படிச் சுருக்கி வரைய முடியாது!

ram lak

வாலியை, இராம பிரான் மறைந்திருந்து கொன்றதை, இந்த சமாதான உடன்பாட்டின் பின்ன்ணியில் நோக்கினால் தர்ம- நியாயம் விளங்கும்!

 

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஐந் தா வது எண்ணாகும். கொடியவரே என்றாலும் உன் நண்பன் எனக்கும் சிநேகிதனே. அதாவது நட்புறவு ஒப்பந்தம் வந்துவிட்டதால் அங்கே தர்ம நியாயம் கிடையாது! இது இன்றும் இன்டெர்நேஷனல் பாலிடிக்ஸில் INTERNATIONAL POLITICS கடைப்பிடிக்கும் கோட்பாடு.

 

இராக் அதிபர்  சதாம்ஹுசைனையும், லிபியா அதிபர் கர்னல் கடாபியையும் அநியாயமாகக் கொன்றது அமெரிக்கா. ஏன்? பெட்ரோல்

 

தர மறுத்தனர். உடனே அமெரிக்கவுக்கு வால் பிடிக்கும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி , பிரான்ஸ் போன்ற நாடுகள் படை அனுப்பி உதவி செய்தன. இன்று அதன் காரணமாக புதிய முஸ்லீம் பயங்கரவாதம் தலை தூக்கி இருக்கிறது.

 

ஹிட்லருக்குத் துணை போனதற்காக அப்பாவி புத்த மதத்தினர் மீது — பொது மக்கள் மீது – அணுகுண்டு போட்டு லட்சக் கணகானோரை அமெரிக்கா கொன்று குவித்தது ; யாரும் கண்டிக்கவில்லை; கா ரணம் நட்புறவு ஒப்பந்தம்!

 

ஆப்கனிஸ்தானத்துக்குள் ரஷ்யப் படைகள் புகுந்து நீண்ட நெடுங்காலம் நிலை கொண்டிருந்தன. அதை அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி ஆதரித்துக் குரல் கொடுத்தார். எத்தனை வெளிநாட்டு நிருபர்கள் எத்தனை முறை  கேள்வி கேட்டாலும் ரஷ்யா செய்தது நியாயமே என்றார். காரணம்? ரஷ்யா என்பது, இந்தியாவின் நீண்ட நெடுங்கா ல நட்புறவு நாடு. அதை விட்டுக்கொடுக்க முடியாது.

 

ஆனால் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டி கட்டு ரையை முடிப்பேன். ராமன் சொன்ன சொல் தவறாதவன்! சத்ய தர்ம பராக்ரமன்! ஆனால் மேலே குறிப்பிட்ட மேலை நாடுகளும் அரசியல் கூட்டணிகளும் தம் நிலையை மாற்றிக் கொண்டே இருப்பர்.

இந்த சத்தியத்தினால்தான் ராமனை இன்றும் வழிபடுகிறோம். அரசியல் கங்கை என்னும் தர்மப் பிரவாகத்தில் அரசியல் கட்சிக் கூட்டணிகள்அடித்துச் செல்லப்படும்.

 

-Subham–

ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? (Post No.3121)

96910-kkish1

Written by London swaminathan

 

Date: 4 September 2016

 

Time uploaded in London: 13-11

 

Post No.3121

 

Pictures are taken from various sources; thanks.

 

 

கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமன் என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும் நடைபெறுகிறது. இதை சுவையாக வருணிக்கிறான் கம்பன்.

 

அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய

மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு

(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்).

 

இராம இலக்குவரை மறைவில் நின்று பார்த்து கருணையின் கடல் அனையர் என்று மதிப்பிடுகிறான். பின்னர் அவன் மனதில் தோன்றியதை கம்பன் வருணிக்கும் அழகே தனி:-

 

சதமன் அஞ்சுறு நிலையர்

தருமன்  அஞ்சுறு சரிதர்

மதனன்  அஞ்சுறு வடிவர்

மறலி அஞ்சுறு விறலர்

 

jaya hanuman

பொருள்:–

 

இந்திரனும் (சதமன்) அஞ்சும் தோற்றத்தை உடையவர்,

தருமதேவனும் கண்டு அஞ்சும் ஒழுக்கம் உடையவர்,

மன்மதனும் (மதனன்) இவர்கள் முன் நிற்க அஞ்சும் அழகர்கள்,

யமனும் (மறலி) அஞ்சும் வீரர்கள்.

 

என்ன அழகான வருணனை!

 

அடுத்த ஒரு பாடலில் வள்ளுவன், கடவுளுக்குத் தரும் ‘தனக்குவமை இலாதான் என்ற  அடைமொழியை கம்பன், அனுமனுக்குச் சூட்டி மகிழ்கிறான். அனுமனை ” தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் – என்கிறான் கம்பன் .

 

ராமனையும் லட்சுமணனையும்  நேரில் பார்த்த அநுமன்

 

“வெல்கம் டு கிஷ்கிந்தா” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்

 

இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராமலெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..

 

உடனே அனுமன்,

யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன் ” என்று பதில் தருகிறான்.

உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான். அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம் ஆகும்!

 

 

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

 

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),

இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?

 

இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

 

–subham–