உயர்தோளா!
செயல்களின் முடிவு நிலையைக் காட்டும் ஸாங்கியத்தில் எல்லாச் செயல்களின் வெற்றிக்கும் கூறப்பட்டுள்ள
இந்த 5 காரணங்களையும் என்னிடமிருந்து
உணர்வாய் (18-13)
அதிஷ்டானம்
ததா கர்த்தா காரணஞ்ச ப்ருதக்விதம்
விவிதாஸ்ச
ப்ருதக் சேஷ்டா தைவஞ் சைவாத்ர பஞ்சமம்
பகவத்
கீதை – 18-14
இருப்பிடமாகிய
உடலும், அவ்வாறே செயலைச் செய்பவனும், வெவ்வேறாண கருமேந்திரியங்களும்
ஞானேந்திரியங்களும் செய்யும் செயல்களும் ஐந்தாவதாக தெய்வமும்
சரீர
வாங்மனோபிர் யத் கர்மப்ர்ராரபதே நரஹ
ந்யாய்யம்
வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவஹ
—பகவத் கீதை 18-15
சரீரத்தாலும்
வாக்காலும் மனத்தாலும் நியாயமாகவோ, அநியாயமாகவோ எந்தச் செயல் செய்தாலும் அவை கரும பலனுக்கு
காரணங்களாகும்.
ஐந்து
காரணங்களில் ஒன்றான தெய்வம் எப்படிச் செயலாற்றும் என்பதற்கு ராமகிருஷ்ண மடம்
வெளியிட்ட பகவத் கீதை உரையில் அண்ணா சொல்லும் கதை:–
ஒரு பெண் புறா தன் நாயகனைப் பார்த்து
“நமது முடிவு காலம் வந்துவிட்டது; வேடன்
ஒருவன் வில்லையும் அம்பையும் ஏந்திக் கீழே நிற்கிறான்; மேலே வல்லூறு வட்டமிடுகிறது” என்று பயந்து
கூறிக்கொண்டிருக்கையில் ஒரு பாம்பு அவ்வேடனைக் கடித்தது; அவன் விட்ட அம்பு குறி தவறி வல்லூறைக் கொன்றது; புறா தப்பிப் பிழைத்தது. விதியின் போக்கு வெகு அதிசயம்.
தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள்
ஒன்று சிலப்பதிகாரம். சேரநாட்டை ஆண்ட மன்னன் நெடுஞ்சேரலாதனின் மகன் செங்குட்டுவன்.
கண்ணகிக்குச் சிலை அமைத்து பிரதிஷ்டை செய்தவன் அவன். அவனது தம்பி இளங்கோ.
கண்ணகியின் காவியத்தை அற்புதமாக
சிலப்பதிகாரமாகத் தந்தவர் இளங்கோ அடிகள். அண்ணனே முடி சூட வேண்டும் என்று துரவறம் பூண்ட
பெருந்தகை இளங்கோ. சீத்தலைச் சாத்தனாரின் வேண்டுகோளுக்கிணங்க அவர் சிலப்பதிகாரத்தை
இயற்றினார் என்பர்.
அந்தக் காப்பியத்தில் குன்றக்
குரவையில் செங்கோட்டு வேலரைக் குறித்து அவர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
இளங்கோவடிகளின் காலம் சுமார்
1850 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.
அப்படிப்பட்ட இளங்கோவடிகள் போற்றிப்
புகழ்ந்த திருச்செங்கோட்டுத் தலம் கொங்குமண்டலத்தில் தான் உள்ளது என்று கொங்குமண்டல
சதகம் தனது 61ஆம் பாடலில் பெருமையுடன் கூறுகிறது.
பாடல் இது தான்:-
உளங்கோ துறாம லொழுகுசெங் குட்டுவற்
கோர்துணையாம்
இளங்கோ வடிக ளியற்றிய காப்பியத்
தேவமுதங்
கொளுங்கோன் மதுவெனக் கூறுசெங்
கோட்டுவேற் குமரனமர்
வளங்கோ னிடாதசெங்கோடு வளர்கொங்கு
மண்டலமே
பாடலின் பொருள் : மனச்சான்றுக்கு
வழுவில்லாது நடக்கும் சேரன் செங்குட்டுவனது ஒப்பற்ற தலைவனான இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
என்னும் காப்பியத்துள், சொல்லியருளிய செங்கோட்டு வேலன் வீற்றிருந்தருளும் திருச்செங்கோடு
என்னும் திருத்தலமும் கொங்குமண்டலம் என்பதாம்.
திருச்செங்கோடு பண்டைக் காலத்திலிருந்தே
பெரும் புகழ் பெற்ற தலமாக இருந்து வந்திருப்பதை எண்ணி மகிழ முடிகிறது.