Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
கொல்லிமலை சதுரகிரியில் வாழும் அறப்பளீச்சுரனே ! சிவ பெருமானே. நீ கீழ் கண்ட ஆறு செயல்களை ஏ ன் செய்தாய் ? (பதில் சொல்லாவிடில் என் தொகுதி எம்.எல்.ஏ. மூலம் சட்டசபையில் கேள் வி கேட்பேன். பார்லிமெண்டில் எங்கள் தொகுதி எம்.பி.யும் இதுபற்றிக் கதைப்பார். எச்சரிக்கை)
1.கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாதவர்களினிடையே, ஏனப்பா, கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்தாய்? சொல், சொல்.
2.அது சரி, போகட்டும். நல்ல புண்ணிய ஆத்மாக்களைப் பார்த்தால் ஏழைகளாக இருக்கிறார்களே. அவர்களிடம் ஏனப்பா வறுமை என்னும் கொடுமையை வைத்தாய்?
3.கொஞ்சம் கூட நீதி நெறி தெரியாத மூடர்களுக்கு கற்பு நெறி தவறாத அருந்ததி போன்ற கற்புக்கரசிகளை மனைவியாக வைத்தாயே . இது என்னப்பா, நியாயம்?
4.நிதானமாகச் சிந்தித்துச் செயல்படும் உத்தமர்க்கு பாசாங்கு செய்யும் நீலி போன்ற பெண்களைக் கொடுத்த்தனை . ஏன் , ஏன் ?
5.கற்றோரும் மற்றோரும் , குணமற்ற கீழ்மட்ட மக்களிடையே கைகட்டி, வாய் புதைத்து, அடிமை வேலை செய்ய வைத்தனையே . அது நியாயமா?
6.அதையெல்லாம்கூட பொறுத்துக்கொள்வேன். தமிழின் பெருமையே தெரியாத ஆட்கள் மீது நல்ல புலவர்களைக் கவிபாட வைத்தனையே. என்ன கொடுமை இது? பதிலைச் சொல்லிவிடப்பா.
அறப்பளீச்சுர சதகம்
அம்பலவாணக் கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
வேதகாலம் என்பது புத்தருக்கு முந்தைய சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஆகும் . இக்காலத்தில் பெண்களுக்கும் பூணுல் அணிவித்தனர். அதாவது முதல் மூன்று வருண மக்களுக்கு வேதம் கற்கும் உரிமை இருந்தது. பெண்களில் சிலர் திருமணம் செய்து இல்லறத்தில் நுழைந்தனர் . இன்னும் சிலர் ஆன்மீக நாட்டம் கொண்டு இறுதி வரை வேதக் கல்வி கற்று, வாதப் பிரதிவாதங்களில் பங்கு கொண்டனர்.
அக்காலத்தில் புகழ் பெற்ற யாக்ஞவால்கிய மகரிஷியை கேள்வி கேட்க யாரும் முன்வராதபோது , எல்லோரும் பயந்தபோது, கார்கி வாசக்னவி என்ற பெண் மட்டுமே கேள்வி கேட்டாள் . இது நடந்தது அகில இந்திய தத்துவ பேரறிஞர் மகாநாட்டில். 2800 ஆண்டுகளுக்கு முன்னர் பீஹார் மாநிலத்தில் இப்படி ஒரு அனைத்திந்திய மாநாடு நடந்த செய்தியையும். அதில் பெண்களும் பங்கு கொண்ட செய்தியையும், அதில் வெற்றி பெற்றவருக்கு ஆயிரம் பசுமாடுகளின் கொம்புகளில் கட்டப்பட்ட தங்கக் காசுகள் பரிசாகக் கிடைத்த செய்தியையும் பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத் நமக்குத் தெரிவிக்கிறது.
Xxx
மேலும் சில வியப்பான செய்திகள் வேதகால இலக்கியத்தில் கிடைக்கிறது. யாக குண்டங்கள் அமைக்கும்போது முதல் செங்கலை வைத்து துவக்க விழா நடத்தும் உரிமை பெண்க ளுக்கே இருந்தது.
சீதா , ருத்ர என்னும் அறுவடை , நிலம் தொடர்பான யாக யக்ஞங்களை பெண்கள் மட்டுமே செய்தனர்.
‘சமான’ என்னும் விழாக்களில் பெண்களே அவர்களுடைய கணவரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கமும் இருந்தது. பிறகாலத்தில் வந்த எண்வகைத் திருமண முறையிலும் காதல் திருமணம் அனுமதிக்கப்பட்டதை மநு நீதி நூலும், தொல்காப்பியமும் செப்புகின்றன
1.கல்யாணம் ஆகும் வரை படித்துக்கொண்டிருந்த பெண்களை ‘சத்யோத்வாஹா’ என்று அழைத்தனர் ;
2.கல்யாணமே செய்துகொள்ளாமல் சாகும் வரை ‘சாகாக் கல்வி‘ கற்ற பெண்களை ‘பிரம்மவாதினி’ என்று அழைத்தனர்.
இங்கே இரண்டு சுவையான செய்திகளை சொல்லவேண்டும்.
1. படித்த பெண்களுக்கு நல்ல கணவர்கள் கிடைத்த செய்தி ; அதர்வண வேதத்தில் ஒரு மந்திரம் வருகிறது 11-5-18,
‘வேதம் கற்கும் மாணவிகளுக்கு இளம் வயது ஆண்கள் கண வர்களாக வருவர்’ – என்கிறது அந்த மந்திரம். அதாவது பெண்கள் கற்றால், வாழ்க்கையில் நல்ல நிலைமையை அடையலாம் என்பது இங்கே தொனிக்கிறது. இரண்டாவது சுவையான செய்தி வணங்குதற்குரிய பெரியோரின் பெயர் வரிசையில் பெண்களின் பெயர்களும் இருக்கின்றன.
பிரம்ம யக்ஞத்தின்போது அஞ்சலி செலுத்தப்பட வேண்டியவர்களின் பெயர்களில் கார்கி வாசக்னவி, வடவா ப்ரா திதெயி, சுலபா மைத்ரேயி ஆகியோரின் பெயர்களும் உள்ளன. இதை ஆஸ்வலாயன கிருஹ்ய சூத்ரத்தில் காண்கிறோம் 3-4-4
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் , ஆசிரியர்களாகவும், தத்துவ வித்தகர்களாகவும் பட்டிமன்ற ராணிகளாகவும் வேத காலப் பெண்கள் திகழ்ந்தனர். ரோமானிய, கிரேக்க சாம்ராஜ்யப் பெண்களைவிட மிக உன்னத நிலையில் இருந்தனர் என்பதைத் தயக்கமின்றி முரசு கொட்டலாம்..
ரிக்வேதத்திலேயே லோபாமுத்ரா, அபாலா , விஷ்வாவாரா , சிகதா, நிவாவரி , கோஷா ஆகியோர் யாத்த கவிதைகள் பெண்களின் அறிவுக்கு ‘ஆயிரம் வாட் பல்பு’ வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
Source book – Great Women of India, Advaita Ashrama, Mayavati, Almora, Himalayas, year 1953 (with my inputs from Tamil literature )
கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள்.
தம்பதி என்ற சொல் வேதத்தில் வருகிறது. இதம் சம்ஸ்கிருதப் பொருள்- கணவனும் மனைவியும் குடும்பத்தின், வீட்டின் கூட்டுச் சொந்தக்காரர்கள் என்பதாகும். இதை விளக்கும் வகையில் சிவனும் உமையும் அர்த்தநாரீஸ் வரர் வடிவத்தில் காட்டப்பட்டுள்ளது . அதாவது உறவினில் ல் 50-50; உரிமையில் 50-50.
தம்பதி – ரிக் வேதம் 8-31-5/6
யா தம்பதி சமனஸா சுனுதா அ ச
தாவள: தேவஸோ நியயாசிர்
Xxx
தமிழில் இல்லாள், இல்லத்தரசி என்றெல்லாம் சொல்கிறோம். இதுவும் ரிக்வேதத்தில் தமிழில் வருவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உள்ளது.கல்யாண மந்திரங்களில் நீயே வீட்டுக்கு ராணி என்று வருகிறது.
சங்க இலக்கியப்பாடல்களில் மனைவியை குடும்ப விளக்கு என்று அற்புதமாக வருணிக்கிறர்ர்கள் .
ரிக் வேதம் (3-53-4) மனைவியே வீ டு என்கிறது.
கிருஹம் என்றால் வீடு/ இல்லம். கிருஹிணி என்றால் வீ ட்டுக்காரி , இல்லாள் , இல்லத்தரசி ; அதாவது இல்லத்தை ஆள்பவள். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இந்தக்கருத்து அப்படியே இருப்பது இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை, ஒரே அணுகுமுறை, ஒரே பண்பாடு என்பதைத் தெள்ளிதின் விளக்கும்.
Xxx
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்ட வே ண்டும் . வைத்து என்ற சொல் சம்ஸ்கிருதத்தில் மணப் பெண் என்ற பொருளிலும் வரும். சங்கத் தமிழ் பாடல்களிலும் இந்த ரிக் வேதச் சொல் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
Xxx
தொழிற்சாலைகளில் பெண்கள்
துணி நெய்தல், நூல் நூற்றல் ஆகிய தொழில்களில் வேதகாலப் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வியப்பனா விஷயம் அவர்கள் போர்க் கருவி செய்யம் ஆலைகளிலும் வேலை பார்த்ததை இஷு கர்த்ரயாக என்ற சொல் காட்டுகிறது.
வேத காலத்தில் ‘பர்தா’ முறை கிடையாது. இதை பாரதியார் பாடலிலும் வலியுறுத்துகிறார். இது தில்லித் துருக்கர் (துலுக்கர்) செய்தவழக்கம்டி என்று சாடுகிறார். துலுக்கர் என்று பாரதியார் எழுதியதை சில தமிழ் அறி ஞர்கள் ஒன்றுகூடி துருக்கர் என்று மாற்றியதாக எங்கள் தமிழ் குருநாதர் , மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் வி.ஜி.சீனிவாசன் சொல்லி வருத்தப்படுவார்.
xxx
கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள்.
வேதம் தோன்றிய சுமார் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் கிரேக்க மொழியில் ஹோமர் என்னும் அந்தகக் கவிராயர் இலியட், ஆடிஸி என்ற இரு பெரும் காவியங்களை எழுதினார். அதில் அக்களப் பெண்கள் எப்பாடு நடத்தப்பட்டனர் என்று வருகிறது. ஒரு மன்னர் வேற்று நாட்டை வென்றால் அந்த நாட்டிலுள்ள பெண்களை னைவரையும் வீரர்கள் பகிர்ந்து கொள்ளலாம். வாருங்கள் வீரர்களே, அணி திரண்டு வாருங்கள். நாம் வெற்றி பெற்று வேற்று நாட்டுப் பெண்களை பகிர்ந்து கொள்வோம் என்று ஹோமர் அறைகூவல் விடுக்கிறார். இந்து மன்னர்கள் வேற்று நாட்டு செல்வங்களை பகிர்ந்து வருவார்கள். அனால் பெண்களை மதிப்புடன் நடத்துவர். வீர சிவாஜி முஸ்லீம் மகளிரை எவ்வளவு மதிப்புடன் நடத்தினார் என்பதை நாம் அறிவோம்.
வேதத்தில் சில பாடல்களை சகோதர -சகோதரி திருமணம் நடந்ததாக சிலர் சித்தரிப்பர். எகிப்தில் இவ்வழக்கம் இருந்தது. தமிழ் நாட்டில் இப்போது காணப்படும் அத்தை மகன், மாமன் மக்கள் கல்யாணத்தையும் ஆங்கிலேயர் கஸின் மேரியேஜ் என்றே சொல்லுவர் அதாவது ஒன்றுவிட்ட சகோதர என்னும் பொருள். இது வேதகாலத்தில் இருந்திருக்கலாம். கிருஷ்ணர் விஷயத்திலும் இதைக் காண்கிறோம். அதாவது உறவு முறைத் திருமணம்- முறைப் பெண் கல்யாணம்.
கணவன் இறந்த பின் மனைவி உடன்கட்டை ஏறுவது பிற்கால வழக்கம். புற நானுற்று பாடலில் பாண்டிய ராணி பூதப்பாண்டியன் தேவி இப்படி உடன்கட்டை ஈரி,,,,,,,,,,,,,,,,,,,,யத்தைக் காண்கிறோம். வேதகாலத்தில் இது குறைவு . அதற்குப் பதிலாக இறந்து போன கணவரின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்பான் . இந்த வழக்கம் யூதர்களிடையேயும் இருந்தது.
பார்ஸி மதத்தினரின் வேத நூலான ஜெண்ட் அவஸ்தா பெண்கள், கணவனுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என்கிறது. இதையெல்லாம் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதிய டாக்டர் ராதாகிருஷ்ணன் , டாக்டர் ரமேஷ் சந்திர மஜூம்தார் போன்ற பேரறிஞர்கள் வேத கால பெண்கள் வாழ்வே சிறந்தது என்று உறுதிப்படப் பேசுகிறார்கள்
Source book – Great Women of India, Advaita Ashrama, Mayavati, Almora, Himalayas, year 1953 (with my inputs from Tamil literature )
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
விபூதியின் மஹிமை! – 2
ச.நாகராஜன்
தேவி பாகவதம் விபூதி எப்படித் தயாரிக்கப்பட வேண்டும், அவற்றின் வகைகள், பெயர்கள், பயன்கள் என்ன என்று விரிவாகக் கூறுகிறது.
சில முக்கிய விஷயங்களை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்: –
(உத்தூளனம் என்றால் நெற்றி முழுவதும் விபூதியைப் பூசுவது என்று பொருள்; திரிபுண்டரதாரணம் என்றால் நெற்றியில் மூன்று கோடுகளை கிடைமட்டமாக விபூதியினால் தரிப்பது என்று பொருள். இதை மனதில் கொண்டு கட்டுரைகளை மேலே படிக்கலாம்.) tamilandvedas.com, swamiindology.blogspot.com
பஸ்மம் இல்லாத நெற்றியைச் சுடு,
சிவாலயம் இல்லாத கிராமத்தைச் சுடு,
சிவார்ச்சனம் இல்லாத ஜன்மத்தைச் சுடு,
சிவாஸ்ரயம் இல்லாத வித்தையைச் சுடு, என்று இவ்வாறு வேதம் கூறுகிறது.
எப்படியெனில், அவர் நெற்றியைக் குறுக்காயும், ஊர்த்துவமாயும் படைத்திருக்கிறார், இல்லையா?!
விருத்தமாகச் சிருஷ்டிக்கவில்லை அல்லவா!
மானிடருக்கேயல்லாமல் சகல பிராணிகளுக்கும் நெற்றியில் திரியக் ரேகைகள் காணப்படுகிறதில்லையா!
அப்படிக் காணப்பட்டும் கூட மூட மனிதர்கள் திரிபுண்டரதாரணம் செய்கிறதில்லை!
எவன் ஒருவன் பஸ்மம் மற்றும் ருத்திராக்ஷம் தரிக்கின்றானோ, அவனது ரோகம், வியாதி, துர்பிக்ஷம், திருடு முதலியவை நாசகரமாகும். அவன் பிரம்மத்தை அடைகிறான்.
திருமூர்த்திகளாலும், இரண்யகர்ப்பனாலும் வருணன் முதலியவர்களாலும் உமை, லட்சுமி, சரஸ்வதி என்னும் மூவராலும் ஏனைய தேவதா ஸ்திரீகளாலும் யட்ச, ராட்ஸச, கந்தர்வ, சித்த ,வித்தியாதர்களாலும், முனிவர்களாலும் பஸ்மோத்தூளனமும் திரிபுண்டரமும் தரிக்கப்பட்டிருக்கின்றன.
முக்தி என்கிற ஸ்திரீயை வசீகரம் செய்து கொள்ள வேண்டியவனுக்கு சிவலிங்கம், ருத்திராக்ஷம் பஞ்சாக்ஷரம் பஸ்மம் என்னும் இவைகள் ஔஷதங்களாகும்.
ஐஸ்வர்யமாகிய விபூதி சாதனத்தை ஒருவன் கபடத்தினாலாவது அணிவான் என்றாலும் கூட அவன் அடையும் கதியை நூறு யாகம் செய்தவன் கூட அடைய முடியாது. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு அரசன் தனது அடையாளம் தரிக்கப்பட்ட ஒருவனை எப்படித் தன்னவனாக எண்ணுகிறானோ அதே போல மஹாதேவனும் தனது அடையாளமாகிய பஸ்ம திரிபுண்டரங்களை அணிபவனைத் தன்னவனாகவே எண்ணுகிறான்.
சுருதிகளும் ஸ்மிருதிகளும் எல்லாப் புராணங்களும் விபூதி மகிமையையே கூறுகின்றன.
பஸ்ம ஸ்நானத்தை விட வேறு சுத்தமான ஸ்நானம் பிறிதில்லை.
ஜல ஸ்நானத்தை பிரகிருதி என்றும் பந்தம் என்றும் சொல்கின்றனர். பிரகிருதியாகிய பந்தத்தைத் தொலைப்பதற்கே இந்த பஸ்ம ஸ்நானம் விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்நானத்தால் ஜுரம், பிரம்ம ராட்ஸச பிசாசம், பூத சேஷ்டைகள், குஷ்டம், குன்மம், பகந்தரம் முதலிய அறுபத்திநான்கு வாத ரோகங்களும், சிலேஷ்ம ரோகங்களும், வியாக்ரம் முதலிய துஷ்ட பயங்கர மிருகங்களும், திருடு போன்ற பயங்களும் சிங்கத்தைக் கண்ட யானையைப் போல நசித்துப் போகும். tamilandvedas.com, swamiindology.blogspot.com
விதியுக்தமாகிய வன்னி வீரியத்தினால் உண்டாகிய பஸ்மத்தைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இது நிச்சயம்.
இது போல் கழுத்தில் தரிப்பதால் கண்டத்தில் உண்டாகும் பாபமும்,மார்பில் தரிப்பதால் மனதால் செய்த பாவமும்,
நாபியில் தரிப்பதால் ஆண்குறியினால் செய்த பாவமும்,
பிருஷ்ட பாகத்தில் தரிப்பதால் அதனால் செய்த பாவமும்,
பக்கங்களில் தரிப்பதால் பர ஸ்திரீகளைத் தழுவிய பாவமும் நசித்துப் போகும்.
பஸ்மத்தைத் தரித்தே காயத்திரியை ஜபிக்க வேண்டும்.
ஒருமுறை துர்வாச முனிவர் பிதுர் லோகம் சென்றார்.அவரை அனைவரும் மரியாதையுடன் எதிர்கொண்டழைத்தனர்.
அப்போது அங்கிருந்த கும்பீபாகம் என்னும் நரகத்திலிருந்து ஐயோ ஐயோ, கொளுத்தப்பட்டோம், அறுக்கப்பட்டோம், பிளக்கப்பட்டோம் என்று பலரும் அலறும் குரல்கள் கேட்கப்பட்டன. tamilandvedas.com, swamiindology.blogspot.com
இதனால் துர்வாசர் துக்கமுற்று இது யாருடைய குரல்கள் எனக் கேட்க பாவிகளின் குரல்கள் இவை, கும்பீபாகம் என்ற நரகத்திலிருந்து எழும் குரல்களே இவை என பதில் வந்தது.
துர்வாசர் அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.
அந்தக் கணமே கும்பீபாகத்தில் இருந்த அனைவருக்கும் சொர்க்கத்திலிருக்கும் சுகத்திற்கும் மேலான சுகம் கிடைத்தது.
இதனால் ஆச்சரியம் அடைந்த யமதூதர்கள் விஷயத்தை எமனிடம் சொல்ல எமன் ஆச்சரியப்பட்டு விரைந்தோடி வந்தான். காரணம் புரியவில்லை அவனுக்கு. இந்திரனும் பிற தேவர்களும் வந்தனர்; பின்னர் விஷ்ணுவும் அங்கு வந்தார். அவர்களுக்கும் இதன் காரணம் புரியவில்லை!
காரணம் புரியாததால் மஹாதேவரை அனைவரும் அணுகினர்.
விஷயத்தைக் கேட்ட சிவபிரான் புன்னகை பூத்தார்.
“வேறொன்றுமில்லை, துர்வாசர் கும்பீபாக நரகத்தைக் குனிந்து பார்த்தார் இல்லையா, அவரது நெற்றியிலிருந்து சில விபூதி துளிகள் அந்த நரகத்தில் விழுந்தன. ஆகவே அந்த நரகம் சொர்க்கம் போல ஆயிற்று. இனி அதை பிதுர் தீர்த்தம் என அழையுங்கள்’ என அருளுரை புகன்றார்.
அனைவரும் விபூதி தாரண மகிமையையும் துர்வாசரின் விபூதி துளிகளின் மகிமையையும் அறிந்தனர்.
இப்படி தேவி பாகவதம் விரிவாக விபூதி மகிமையை எடுத்துரைக்கிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com
அடுத்து சைவ சமயக் குரவர் மந்திரமாவது நீறு என்று கூறி ஆற்றிய அற்புதத்தையும் அவர் கூறும் திருநீற்றின் மகிமையையும் உணர்ந்து, திருநீற்று மகிமைத் தொடரை முடிப்போம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
உலகில் மிகவும் அற்புதமான விஷயம் இந்தியாவின் பெண் அறிவாளிகளாகும் . உலகில் வேறு எந்த நாட்டிலும் பழங்காலத்தில் இவ்வளவு பெண் அறிவாளிகள் இருந்ததாக கிரேக்க, பாபிலோனிய, எகிப்திய வரலாறுகளில் இல்லை. அதிலும் குறிப்பாக பெண் கவிஞர்களை அங்கு விரல்விட்டு எண்ணிவிடலாம். வேதகாலம் என்பதை கி.மு.1500 அல்லது அதற்கு முந்தைய காலம் என்பதை இப்பொழுது பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தமிழ் சங்கப் புலவர் காலம் என்பது சுமார் 2000 ஆண்டுகளு க்கு முந்தையது என்பதிலும் கருத்து ஒற்றுமை உளது. ஆக இந்தக் காலத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலேயே 60 பெண் கவிஞர்களின் பெயர்களும் கவிதைகளும் கிடைக்கின்றன.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பழங்கால உலகில் இந்தியாதான் பெரிய நாடு. இமயம் முதல் குமரி வரையும் . மேற்கே ஆப்கனிஸ்தான் வரையும் பரவிய பிரம்மாண்டமான நிலப்பரப்பு. அ தில் இப்படி 60 பேர் இருந்ததை எண்ணி இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படலாம். மேலும் அவர்கள் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் பாடிய கவிதைகளிலும் பெரிய, அரிய கருத்துக்கள் உள்ளன. இதுதவிர அந்தக் காலத்தில் அரசாண்ட அரசிகள், கவிதை பாடாமல் புகழ் ஏணியின் உ ச்சியைத் தொட்ட பெண்மணிகள் என்று பட்டியலிட்டால் அது இரு நூற்றுக்கும் மேலாகப் போய்விடும் . வரலாற்றுக்கும் முந்தைய காலத்தில் ஆண்ட ஸ்த்ரீ ராஜ்ய அரசிகள் பற்றி எல்லா பழைய நூல்களும் குறிப்பிடுகின்றன.
இந்தக் கட்டுரையில் வேத கால பெண் புலவர்கள் பற்றி மட்டும் காண் போம் வேத காலம் என்பதில் சம்ஹிதை, பிராமண, ஆரண்யக, உபநிஷத்துக்கள் உருவான காலம் அடக்கம். உலகிலேயே பழமையான நூலான ரிக்வேதம், ஒவ்வொரு மந்திரத்தைக் ‘கண்ட/ கண்டுபிடித்த’ ரிஷி அல்லது ரிஷிகாவின் பெயரைச் சொல்கிறது. பெண் கவிஞர்களை ரிஷிகா என்பர்.
ரிக்வேதத்தில் 30 ரிஷிகாக்களின் பெயர்கள் இருக்கின்றன. ‘கில’/ பிற்சேர்க்கை சூக்தங்களில் காணப்படும் 5 பெயர்களும் இதில் அடக்கம் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
கோஷா, லோபாமுத்ரா,அப்பால, ரோமச, சூர்யா , ஜுஹு பிராஹ்மஜெய, சிராத்தா , யமீ , இந்த்ராணீ , மேதா , அகஸ்த்யவஸா , ஆத்ரேயீ , ஸாஸ்வதீ , விஷ்வாவாரா முதலிய பெயர்களை ரிக் வேதத்தில் பார்க்கலாம்.
30 பெண் புலவர்களையும் கீழ்கண்டவாறு பிரிக்கலாம் —
கடவுளராகக் கருதப்படும் பெண்கள் –
இந்த்ரமாதரஹ , இந்த்ரனுசா , இந்த்ராணி , அதிதி, சூர்யா, ஸாவித்ரீ , யமீவைவஸ்வதீ, சசி பௌலோமி முதலியோர் இந்த வகையின் கீழ் வருவார்கள் .
ஒரு மந்திரத்தில் இந்திரனின் மகனான வசுக்ராவின் மனைவி பாடியது என்று வரும். அப்படியானல் இந்திரனின் மருமகள் என்று பொருள்படும். இந்திரன் என்பது அரசனா , கடவுளா , இயற்கைச் சக்தியா அல்லது, பிரதமர், ஜனாதிபதி போன்ற பதவிப் பெயரா என்று ஆராய்ந்து முடிவு காண வேண்டும் tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் 10-86ல் 11 மந்திரங்களில் இந்திராணி துதிபாடுகிறார் .
ரிக் 10-85 என்பது கல்யாணத்தில் பயன்படுத்தும் மந்திரம் . இதன் ரிஷிகாக்கள் சூர்யா,சாவித்ரி ; இவ்விருவரும் விவஸ்வன் எனப்படும் சூரியனின் மனைவியர் என்றும், அவர்களை வ்ருஷகாபேயி என்று பல மந்திரங்கள் துதிபாடும் என்றும் பிருஹத்கதா என்னும் நூல் உரைக்கும்..
யமனுடைய சகோதரி யமீ. இருவருக்கும் இடையே நடந்த சம்பாஷணை க் கவிதை பத்தாவது மண்டலத்தில் வருகிறது.
யமி வைவஸ்வதி என்ற பெயரும் காணப்படுகிறது.
சசி பவுலோமி ஒரு கவிதை பாடியுள்ளார்
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
அரசர் தொடர்புடைய புலவர்கள்
கோஷா கக்ஷிவதீ , லோபாமுத்ரா,அபால, ரோமச, சூர்யா , ஜுஹு பிராஹ்மஜெய, சிராத்தா , யமீ , இந்த்ராணீ , மேதா , அகஸ்த்யவஸா , ஆத்ரே யீ , ஸஸ்வதீ ஆங்கிரஸி , விஷ்வாவாரா முதலிய பெயர்கள் அரசர் தொடர்புடைய பெண் புலவர்கள்.
அபால என்பவர் அத்ரியின் புதல்வி.
10-39, 10-40 ஆகிய இரண்டு சூக்தங்களும் கோஷா கக்ஷிவதியின் பெயரில் உள்ளன .
அகஸ்திய மகரிஷியை மணந்த லோபாமுத்ரா ஒரு மஹாராணி. இவர் பெயரிலும் மந்திரங்கள் இருக்கின்றன.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxx
சம்பாஷணைக் கவிதைகள்
உலகில் சம்பாஷணை (Conversational Poems) வடிவத்தில் அமைந்த ஒரே வேதப்புத்தகம் பகவத் கீதை. அர்ஜுனன் கேள்விக்கு கிருஷ்ணன் விடை தருகின்றார் . ஏனைய மதங்களின் வேதப்புத்தகங்களில் அங்குமிங்கும் கொஞ்சம் உரைநடையைக் காணலாம்.இதை சாக்ரடீஸ் பின்பற்றியதால் வெளிநாட்டினர் இதை சாக்ரடீஸ் முறை (Socratic Method) என்பர்.நம்முடைய புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் கேள்வியில் பிறந்தவையே . முக்கிய உபநிஷதங்களும் கேள்வி-பதில் வடிவில் அமைந்தவை. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் சம்பாஷணைக் கவிதைகள் இருக்கின்றன. உலகின் பழைய நூல்களில் இதைக் காண்பது அரிது. சொல்லப்போனால் இது இந்து மதத்தின் எல்லா புராண , இதிகாசங்களிலும் உள்ளது. வேதகால உபநிஷத்துகளிலும் உண்டு. மருத்துவ, ஜோதிட நூல்கள் அனைத்திலும் உண்டு. ஒருவர் கேள்வி கேட்டவுடன் மற்றொருவர் பதில் சொல்லுவார். ரிக் வேதத்தில் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் கவிதை நடை சம்பாஷணைகள் கல்யாண நலுங்குப் பாடல்கள் போல கிண்டல் தொனியில் இருக்கும். நலுங்குப் பாடல்களில் கொஞ்சம் செக்ஸ் விஷயங்கள் வரும். அதுபோலவே இந்தக் கவிதைகளிலும் உண்டு tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
வெள்ளைக்காரர்களுக்கு இதைப் படித்தவுடன் , அடடா, குறை சொல்ல ஒரு விஷயம் கிடைத்துவிட்டது என்று மகிழ்வர் .ரிக் வேதத்தின் முதல் மண்டலத்திலும், பத்தாவது மண்டலத்திலும் வரும் கவிதைகளைக் காலத்தால் பிந்தியவை என்று சொல்லி மகிழும் வெள்ளைத்தோல் அறிர்கள் இங்கு வாய் மூடி மௌனமாகி விடுவர் . உலகப் புகழ் பெற்ற காதல் பாட்டு இங்குதான் வருகிறது. அதை எல்லாக் கல்யாணங்களிலும் பிராமணர்கள் விரிவாக ஓதுவார்கள். அது இல்லாமல் கல்யாணம் நிறைவு பெறாது. அந்த அற்புதமான கவிதை ரிக் வேதத்தில்(10-85) 47 மந்திரங்களுடன் இருக்கிறது. அது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
tags – ரிக் வேதம், பெண் புலவர்கள், சம்பாஷணை , கவிதைகள் , அறிவாளிகள்
வடலூர் வள்ளலாரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ஏராளம். அவர் ஆற்றிய அற்புதங்கள் பிரமிக்க வைப்பவை. (வள்ளலார் தோற்றம் : 5, அக்டோபர் 1823, ஒளியுருவாய் மறைந்தது 30,ஜனவரி 1874).
ஆனால் இந்த அற்புதங்களுக்கெல்லாம அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அருகிலிருந்தோர் பார்த்து பிரமித்தனர்; வியப்படைந்தனர்.
சுமார் 43 அற்புதங்களை நேரில் பார்த்தும் அன்பர்கள் சொல்லக் கேட்டும் அதிகாரபூர்வமாக வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் தொழுவூர் வேலாயுத முதலியார் ‘வள்ளலாரின் சரித்திரச் சுருக்கம்’ என்ற நூலில் எழுதியுள்ளார்.
பிரம்மாண்டமான வேத, இதிஹாச, புராணங்களின் உட்பொருளை உணர்வது, அனாயாசமாக அற்புதமான தமிழில் ஆழ்ந்த பொருளடங்கிய தமிழ்ப் பாக்களை உடனுக்குடன் யாப்பது, வீண் வாதுக்கு வந்தோரை சில நிமிடங்களில் வெல்வது, சமரச சன்மார்க்கத்தை உலகிற்கு உணர்த்துவது என்று இப்படி ஏராளமான விஷயங்களை வள்ளலாரின் வாழ்க்கையில் காணலாம்.
ஒரு முறை திருவொற்றியூர் வடிவாம்பிகை அம்மன் சந்நிதி முன் வள்ளலார் நின்று தோத்திரம் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு அன்பர் சதுர்வேத சார சங்கிரகம் என்று நூலின் ஏட்டுச் சுவடியைக் கொடுத்து விட்டு மறைந்தார்.
தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட வள்ளலார் பலரது சந்தேகங்களையும் உடனுக்குடன் தீர்த்து வைத்தார்.
ஒரு முறை சங்கராச்சாரியார் சென்னைக்கு வந்த போது சம்ஸ்கிருத நூல் ஒன்றில் ஒரு பகுதியில் அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இந்த நூலில் ஏற்படும் ஐயங்களைத் தீர்த்து வைக்க வல்ல புலவர்கள் இங்கு உண்டோ என்று அவர் ஒரு பிராமணரை வினவ, அவர் வள்ளல் பெருமானைச் சுட்டிக் காட்டினார். உடனே சங்கராசாரியார் அவரிடம் நூலைத் தந்து தனக்கு சந்தேகம் ஏற்பட்ட இடத்தைக் காண்பிக்கவே அதை ஒரு முறை பார்த்தார் வள்ளலார். பின்னர் தன் முதல் மாணவராகிய தொழுவூர் வேலாயுத முதலியாரிடம் சந்தேக நிவர்த்தி செய்து வைக்குமாறு பணிக்கவே அவரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்.
இது மட்டுமல்ல, பல வருடங்களாக குஷ்ட நோயினால் வருந்திய ஒருவர் அடிகளைக் கண்டு வணங்கித் தன் நோயைத் தீர்த்து வைக்குமாறு வேண்டினார். அவருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் வலத்தால் திருநீறு கொடுத்து அதை நொடிப்பொழுதில் போக்கினார் வள்ளலார்.
இன்னொரு சமயம் வித்வான் கண்ணாடி சுப்பராய முதலியார் என்பவர் பல ஆண்டுகளாகத் தன்னை வருத்தும் வாத நோயைத் தீர்த்தருளுமாறு வள்ளலாரை வேண்டினார். உடனே கருணையுள்ளம் கொண்ட அடிகளார் அவரது நோயைத் தீர்த்தருளினார்.
இதனால் மிக்க மகிழ்ச்சி கொண்ட சுப்பராய முதலியார்,
அகத்தியனோ வான்மீகியோ ஆதிசேடன் றானோ
மகத்துவமாஞ் சம்பந்த மாலோ – சகத்திலகுஞ்
சச்சிதா னந்தத்தின் தண்ணாளியோ என்னென்பேன்
மெச்சுமதி ராமலிங்க வேள்
என்று ஒரு புகழ்மாலையை அவருக்குச் சூட்டித் தன் நன்றியைத் தெரிவித்தார்.
அற்புதங்கள் ஒரு புறமிருக்க சமுதாயச் சீர்திருத்தத்தை அவர் பெரிதும் வலியுறுத்தினார்; பக்தி, ஞானம், கர்ம யோகம் உள்ளிட்ட அனைத்து ஆன்மீக விஷயங்களிலும் தெள்ளத் தெளிவாக எளிய தமிழில் அவர் தனது உபதேச உரைகளை அருளினார்.
தமிழ் மொழியின் வல்லமையை அனைவரும் உணருமாறு செய்தார்.
‘தைப்பூசம் தவறாதீர்கள்’ என்ற அவரது அருளுரை பொருள் பொதிந்த ஒன்றாக அமைந்தது.
தைப்பூசத்தன்று ஆண்டு தோறும் சன்மார்க்கச் சங்கத் திருக்கூட்டம் வடலூரில் நடைபெற்று வருகிறது.
அன்று ஏழு திரைகள் விலக ஜோதி தரிசனம் காணலாம்.
அவர் ஏற்றி வைத்த தீபம் இன்று வரை தொடர்ந்து எரிகிறது.
பசித்தோர்க்கு அன்னமிட வேண்டும் என்ற அவரது எண்ணப்படி இன்றளவும் அவர் மூட்டி வைத்த அடுப்பு அணையாமல் தொடர்ந்து எரிந்து அன்னம் வழங்கப்பட்டு வருவது உலக அதிசயங்களுள் ஒன்று.
வள்ளலாரின் வாழ்க்கையை ஊன்றிப் பார்ப்பதோடு, அவரது பாடல்களை – அருட்பாவை – படித்து ஓர்ந்து உணர்ந்தால் ஜோதி தரிசனம் கிட்டும் என்பதில் ஐயமில்லை!
கிருஷ்ணனை 800 மைல் விரட்டிய கால யவனன் ! (Post No.7546)
RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7546
Date uploaded in London – – 7 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
மஹாபாரத பிற்சேர்க்கையான ஹரி வம்ச புராணம், பாகவதம் முதலியவற்றில் கிருஷ்ணனைப் பற்றிய ஒரு உண்மைக்கதை- வரலாற்றுச் சிறப்புமிக்க கதை உள்ளது. யாதவர்களை ஓடஓட விரட்டிய நிகழ்ச்சி இது. உத்தர பிரதேச மாநிலமான மதுராவில் இருந்த ஒரு சமூகத்தை 802 மைல் — 1291 கிலோமீட்டர் தொலைவில் குஜராத் மாநிலத்தில் உள்ள துவராகா புரிக்கு விரட்டிய வரலாற்று நிகழ்வு இது – அதைவிட வியப்பான விஷயம், கிருஷ்ணனையும் யாதவர்களையும் விரட்டிய மன்னன் பெயர் ‘கால யவனன்’ . யமன் போன்ற யவனன் அல்லது கருப்பு யவநன் என்று பொருள் சொல்லலாம். அந்த யவனன் கிரேக்கனா, அராபியான , ரோமானியனா என்றும் தெரியவில்லை . இதை எல்லாவற்றையும் விட சுவையான விஷயம் கிருஷ்ணன் அனுப்பிய கறுப்புப் பாம்புக்குப் பதிலாக அவன் அனுப்பிய எறும்பு டப்பா கதை! tamilandvedas.com, swamiindology.blogspot.com
இதோ முழு விவரம்-
இந்த வரலாற்று நிகழ்வினைச் சொன்னால் மக்களிடையே கிருஷ்ணன் மதிப்பு குறைந்துவிடும் என்று பவுராணிகர்கள், இதை அதிகம் பிரஸ்தாபிக்கவில்லை போலும் !
கால யவனன் கதையில் மூன்று பகுதிகள் காணப்படுகின்றன. முதல் பகுதி கார்க்யர் என்ற ரிஷி பற்றிய கதை; அவர் வ்ருஷ்ணி குல, அந்தக குல (யாதவ) மக்களுக்கு குரு . அவரை ஒரு சமயம் யாதவர்கள் அவமானப்படுத்தவே அவர் 12 ஆண்டு தவம் செய்து சிவபெருமான் அருளால் ஒரு அப்சரஸ் மூலம், குழந்தை பெறுகிறார். அந்தக் குழந்தை யாதவ குலத்தைப் பழி வாங்கும் என்றும் சிவன் சொல்கிறார். இதை அறிந்த பக்கத்து தேச யவன மன்னன் அவரையும் அவரது குழந்தையையும் தனது அரண்மனையில் வளர்த்தான். காரணம்? அவனுக்குக் குழந்தை கிடையாது. அவன் இறந்தபின்னர் கார்க்யரின் மக ன் பட்டம் சூட்டப்பட்டான் . tamilandvedas.com, swamiindology.blogspot.com
இது ஒரு புறமிருக்க, கம்சனின் மாமனாரும் மகா சக்திவாய்ந்த மகத சாம்ராஜ்யத்தின் மன்னனும் ஆன ஜராசந்தன், கம்சனை சம்ஹாரம் செய்த கிருஷ்ணனைக் காலி செய்ய தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது காலயவனனுடன் இமயமலைப் பகுதியில் உள்ள குட்டி நாடுகளை ஆளும் எல்லா மன்னர்களும் சேர்ந்து கொ ண்டனர். அவன், ஜராசந்தன் ஆதரவோடு மதுராபுரி மீது படையெடுத்தான். அவனுடைய படைகளுடன் வந்த குதிரைகளும் ஓட்டக்கங்களும் போட்ட லத்திகளும் மூத்திரமும் ஆறு போல பெருக்கெடுத்தது ; அந்த ஆற்று க்கு அஸ்வகிருத் என்ற பெயரும் ஏற்பட்டது.
மாபெரும் படை மதுராபுரியை நோக்கி வருவதை அறிந்த கிருஷ்ண பரமாத்மா யாதவ மக்களின் மாபெரும் கூட்டத்தைக் கூட்டி சொற்பொழிவைத் துவக்கினார்-
“எனது அருமை மக்களே, நான் சொல்லுவதைக் கேளீர் . மாபெரும் படை மதுராபுரியை சுற்றி வளைத்து இருக்கிறது. இது வெல்ல முடியாத படை. கால யவனன் , சிவ பெருமானிடம் வரம் பெற்றவன் . நானும் சமாதானத்துக்கு எவ்வளவோ முயன்று பார்த்தேன். இதுவரை பலன் கிட்டவில்லை. காரணம்? ஜராசந்தனின் கோபம் தணியவில்லை. அவன் காழ்ப்பு உணர்வு கொண்டுள்ளான். கால யவனனோ , ‘நானே ஆளப் பிறந்தவன்’ என்று மமதையுடன் கொக்கரிக்கிறான். இந்த செய்தியை நாரதர் என்னிடம் இயம்பினார்” tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
ஹரி வம்சத்தில் உள்ள சம்ஸ்கிருத ஸ்லோகங்களில் மேலும் சொல்லப்படுவதாவது —
“கிருஷ்ணர் ஒரு டப் பியை எடுத்து அதற்குள் அதி பயங்கரமான கரு நாகப் பாம்பை உள்ளே போட்டு ஒரு தூதனிடம் கொடுத்தார் இதை காலா யவன னிடம் காட்டி நான் சொல்லுவதைச் சொல்லிவிட்டு வா என்று தூது அனுப்பினார் கண்ணன். தூதன் , கால யவனனி டம் சென்று டப்பாவைத் திறந்து காட்டி, யது குல நந்தன னான கிருஷ்ணன் சீறும் கரும் பாம்பு போன்றவன் என்றான். கால யவன னுக்குப் புரிந்துவிட்டது. அதி பயங்கரமான கூரிய பற்களுடைய எறும்புகளை பிடித்துவரச் சொல்லி அதை டப்பா முழுதும் போட்டு நிரப்பினான் . அந்தப் பாம்பை அவை கடித்துக் குதறி சாப்பிட்டு விட்டன.. இதைப்போய் உங்கள் கிருஷ்ணனிடம் கொடு என்றான் கால யவனன் .
எறும்புடன் வந்த டப்பாவில் அதி பயங்கர கரும்பாம்பு பிணமானதைக் கண்டு கிருஷ்ணன் பயந்தான்; யாதவகுலத்தை அழைத்துக் கோடு 800 மைல் பயணம் செய்து கடலோரப் பட்டினமான துவாரகா நகருக்கு சென்றான் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
யாதவ குல மக்கள் அனைவரும் வீ ட்டு வாசலுடன் வாழத் துவங்கிய ஒரு நாள், கிருஷ்ணன் மட்டும் தனியாக, நிராயுதபாணியாக மதுரா புரிக்கு நடந்தே சென்றான் . கா லயவனனை ஒற்றைக்கு ஒற்றை சண்டைக்கு வா என்றான் . அவன் இத்தகைய தருணத்தை நழுவ விடக்கூடாது .கிருஷ்ணன் கதையை இன்றுடன் முடிப்போம் என்று புறப்பட்டான். கிருஷ்ணர் ஓட்டம் பிடித்தார் எல்லாம் ஒரு திட்டத்தோடு தான் .
ஹரிவம்சத்தில் உள்ள மூன்றாவது கதை.
மாந்தாதா என்ற மாமன்னனின் மகன் முசுகுந்த சக்ரவர்த்தி. அவன் தேவாசுரப் போரில் தேவர்களுக்கு வெற்றி வாகை பெற்றுத் தந்தவன் . இனி போரே வேண்டாம் . நான் நிம்மதியாகத் தூங்க அருள்புரியுங்கள் என்று தேவர்களிடம் வேண்ட, இந்திரன் மூலமாக ஒரு வரம் பெற்றான். என து தூக்கத்தை எவனாவது கெடுப்பானாகில், நான் விழித்தவுடன் பார்க்கும் மனிதன் எரிந்து போ க வேண்டும் என்றான். இந்திரனும் ததாஸ்து (அப்படியே ஆகட்டும்) என்றான். அவர் ஒரு குகையில் சென்று உறங்கி விட்டார் . இந்த விஷயம் முழுவதையும் நாரத முனிவர் ஆதியோடு அந்தமாக கிருஷ்ணனிடம் இயம்பி இருந்தார் . இது எல்லாம் கிருஷ்ணனுக்கு நினைவுக்கு வரவே முசுகுந்த மன்னன் தூங்கும் குகைக்குள் மெதுவாக சப்தமின்றி நுழைந்து முசுகுந்தனின் தலை மாட்டில் அமர்ந்தார் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
கால யவனனும் அந்தக் குகைக்குள் நுழைந்தான். கால யவனனுக்கு விநாச காலே விபரீத புத்தி; ஒரு உறங்கும் ஆசாமி அருகில், தலை மாட்டில், கிருஷ்ணன் அமர்ந்து இருப்பதைப் பார்த்து, உறங்கும் ஆசாமியை கால்களால் எத்தி உதைத்தான். கோபத்தோடு எழுந்த முசுகுந்தன் கோபப் பார்வையை அவன் மீது வீசவே கால யவனன் எரிந்து சாம்பலானான் . . கிருஷ்ணனுக்கு ‘புத்திமான் பலவான் ஆவான்‘ என்ற பழமொழி பொருந்தும்.
இதற்குப் பின்னர், முசுகுந்த மன்னனிடம், அவன் தூங்கிய காலத்தில் உலகில் என்ன என்ன நடந்தன என்ற தலைப்புச் செய்திகளை ‘புல்லட் பாயிண்டு’ (Bullet Points) களில் கிருஷ்ணன் மொழிந்தார். முசுகுந்தனும் மகிழ்ந்து, இனி சுவர்க்கம் புகும் நேரம் வந்துவிட்டது என்று சொல்லி பூவுலகில் இருந்து புறப்பட்டார்.
xxx
என் கருத்து
பைபிளில் (Bible) இரண்டாவது அத்தியாயத்தில் எக்ஸோடஸ் (Exodus) என்ற தலைப்பில் மோசஸ் என்ற தலைவன் யூத மக்களை அடிமைத் தளையில் இருந்து விடுவித்து இஸ்ரேலுக்கு அழைத்துச் சென்றான்என்ற செய்தி வருகிறது . மூன்று மதங்கள் போற்றும் மோசஸ் உண்மையில் இருந்ததற்கு இதுவரை வரலாற்றுச் சான்றுகளோ தொல்பொருட் துறை சான்றுகளோ கிடைத்தில ; ஆயினும் எக்ஸோடஸ் என்னும் மாபெரும் வெளியேற்றம் பற்றி பல சினிமாக்களும் புஸ்தகங்களும் வெளியாகியுள்ளன. அது போன்ற நிகழ்ச்சி யாதவர் வெளியேற்றமும் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
மோசஸ் இஸ்ரேலை நோக்கி சென்ற காலையில் அவருக்கு செங்கடல் வழி திறந்துவிட்டது என்று பைபிள் இயம்பும். இது எல்லாம் ஹரிவம்சத்தைக் காப்பி அடித்து எழுதியது என்பர் ஆன்றோர். கிருஷ்ணர் பற்றி சொல்லும் விஷயங்கள் அத்தனையையும் பைபிளும் காப்பி அடித்து இருக்கிறது .
1.பிறக்கும் முதல் குழந்தை குலத்துக்கு ஆபத்து என்றவுடன் ரோம மன்னர் குழந்தைகளைக் கொன்றதை கம்சன் செய்த கொடுஞ் செயல்களுடன் ஒப்பிடலாம்.
3.கூடையில் மோசஸை நைல் நதியில் மிதக்கவிட்டதை கர்ணன் கதையுடன் ஒப்பிடலாம் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
4..செங்கடல் திறந்து மோசஸ் முதலியோருக்கு வழிவிட்டதை யமுனை நதி திறந்து வசுதேவனுக்கு வழிவிட்டதை ஒப்பிடலாம்.
5.ஆதம் (Adam) ஏவாள்(Eve) கதை என்பது உபநிஷத்தில் உள்ள இரண்டு பறவைக் கதை என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஏற்கனவே ஒப்பிட்டுள்ளார் . ஆதம் (Adam=Adma) என்பது ஆத்மா என்பதன் திரிபு. ஏவாள் என்பது ஜீவ (Eve-Jeev) என்பதன் மருவு. அதாவது உபநிஷத்தில் வரும் இரண்டு பறவைக் கதை– ஒரு பறவை பழம் சாப்பிட்டது– என்பதை பைபிள் ஒரு ஆப்பிள் சாப்பிட்டதாகக் கூறும் . இது பரமாத்மா , ஜீவாத்மா கதை
6.ஆதம் தனது இடது எலும்பை ஒடித்து பெண் இனத்தை உருவாக்கினான் என்பது அர்த்த நாரி கதை. சிவ பெருமானின் இடப்புறம் சக்தி/ பெண் இனம்.
7. ஏசு சொல்லும் குட்டிக்கதைகள் உபநிஷத் கதைகள் போன்றவை tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
8.இதுதவிர பைபிளில் ஏராளமான சம்ஸ்கிருத் சொற்கள் இருக்கின்றன.
பைபிள் என்பது இந்துமத நுல்களைக் காப்பி அடித்து எழுதியது என்பதற்கு இவைகள் சான்றுகள். மோசஸ் எக்ஸோடஸ் அத்தியாயம் எழுதப்பட்டது கி.மு ஆறாம் நூற்றாண்டு . கிருஷ்ணர் கதைகளோ கி.மு 3100க்கு முந்தையது.
xxx
Krishna appears in Yaga Fire
இதை எல்லாம் விட்டுவிட்டு ஒரிஜினல் கதைக்குத் திரும்புவோம்
கால யவனன் கருப்பு கிரேக்கனா (Black Greek?), கருப்பு அராபியனா (Black Arabian)? என்ற ஆராய்சசியும் நீடிக்கிறது. யவன என்ற சொல்லை சங்க இலக்கியம் ரோமானியர் என்ற பொருளில் பயன்படுத்துகிறது. அலெக்சாண்டர் படை எடுப்புக்குப் பின்னர் கிரேக்கர் என்ற பொருளில் வருகிறது. குதிரை விற்பனைக் கதைகளில் அராபியர் என்ற பொருளில் வருகிறது . யவன என்ற சொல் வரும் பல்லாயிரம் இடங்களைத் தொகுத்து ஹெல்சிங்கி (பின்லாந்து) நகர புஸ்தக வெளியீடு 2015ல் வெளியாகி யிருக்கிறது. அதில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் ஆங்கிலத்தில் அப்படியே உள்ளன. கால யவனனுடன் சேர்ந்த மன்னர்கள், இனங்கள் பெயர்கள் நிறைய உள்ளன . அத்தனையையும் ஆராய்ந்தால் புதிய இந்திய வரலாறு tamilandvedas.com, swamiindology.blogspot.com
எழுதலாம்.
இதைவிட மிக மிக சுவையான விஷயம் ஹெலிகாப்டர் பற்றியது. ஹரி வம்சத்தில் ஓரிடத்தில் கால யவனனுக்கு வானில் பறக்கும் (aerial car) வாகனத்தில் தூது விடுவோம் என்ற ஸ்லோகம் வருகிறது. போகிற போக்கில் இதைச் சொல்லுவதால் அக்கால மக்களுக்கு விமானம், ஹெலிகாப்டர் என்பன அத்துப்படி என்பதும் ஆனால் மன்னர்கள் மட்டுமே அரிதாகப் பயன்படுத்தினர் என்றும் தெரிகிறது.
இதை எல்லாம்விட மிக மிக அதிசயமான விஷயம் போக்குவரத்து வசதிகள். கிருஷ்ணர், துவாரகைக்கும் ஹஸ்தினாபுரத்துக்கும், துவரகை க்கும் மதுராபுரிக்கும் இடையே சென்று வந்த செய்திகள் நிறைய உள்ளன. துவாரகா- மதுரா தொலைவு 1291 கிலோ மீட்டர். அதாவது 802 மை லகள். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வதற்கு புல்லட் ரயில் (Bullet Trains) இல்லை ; அப்படியும் எப்படி கிருஷ்ணன் அடிக்கடி பயணம் செய்தார்? அதுவும் யாதவ குல மக்கள் கால் நடையாக எப்படி வந்தனர்? பின்னர் கிருஷ்ணர் மட்டும் எப்படி கால்நடையாக தனியே சென்றார்.? tamilandvedas.com, swamiindology.blogspot.com
புற நானுற்றுக்கு உரை எழுதிய மதுரை பாரத்வாஜ கோத்ர பிராமணன், உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர், விளம்புவது போல யாதவ குலத்தினர் தமிழ் நாட்டில் எப்படி குடியேறினர்? இரண்டாயிரம் மைல்கள் நடந்து வந்தனரா ? மதுரை அரசி மீனாடசியின் அம்மா காஞ்சன மாலை , அவளோ உக்ரசேனனின் குமாரத்தி ஆயிற்றே . அவர்கள் எப்படி தமிழ் நாட்டு மதுரைக்கு குடியேறினர் ? ஆதி சங்கரர் எப்படி இரு முறை இமயம் முதல் குமரி வரை வலம் வந்தார்? பாஹியானும் யுவாங் சுவானும் சீனாவில் இருந்து எப்படி காஞ்சிபுரம் வரை வந்தனர்? இவை எல்லாவற்றையும் ஒப்பிட்டு புது வரலாறு எழுதுவோமாக . புரியாத பல புதிர்களை விடுவிப்போமாக .
Tags – துவாரகா , மதுரா , கிருஷ்ணன் , குடியேற்றம்,யாதவர், கால யவனன் , கார்க்யர் , ஜராசந்தன், கிருஷ்ணர்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
நான் தினமணிக் கதிரில் 1992ம் ஆண்டு டிசம்பரில் பார்சி மத மக்கள், இறந்த பின்னர் சடலங்களை கழுகுகளுக்கு இரை யாகப் போடுவது பற்றி எழுதிய கட்டுரை இது. மொத்தத்தில் அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்பதால் இது பெரிய பிரச்சனையாக உருவெடுக்கவில்லை.
கொங்குமண்டலத்தில் உள்ள கஞ்சமலையில் ஏராளமான வியத்தகும் மூலிகைகள் உள்ளன. இவற்றில் நரை திரை போக்கி வயோதிகரை வாலிபராக்கும் மூலிகையும் ஒன்று.
தான் குமரனாக விரும்பிய வயோதிகரான மூலன் என்ற ஒரு அந்தணர் இதை அடைய விரும்பினார்.
கஞ்சமலையின் உள்ள கருங்காட்டினுள் சென்று மூலிகையை தேடலாம் என்று நினைத்த அவர் தன் மாணாக்கனிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார்.
அவர் வெளியே சென்ற சமயம் அவரது மாணாக்கன் உலையில் இருந்த சோறை ஒரு கருநெல்லிக் கோலால் கிளறினான். குச்சி கறுப்பாக இருந்ததால் உலையில் இருந்த சோறு அனைத்தும் கறுப்பாயிற்று. சமைத்த சாதம் இப்படிக் கறுப்பாகி விட்டதே, குரு வந்தால் கோபிப்பாரே என்று சீடன் பயந்தான்.
நிறம் மாறிய அன்னத்தைத் தானே சாப்பிட்டு விட்டு வேறு புதிதாக அன்னத்தைச் சமைத்து வைத்தான்.
அந்த கறுப்பு அன்னத்தைப் புசித்ததால் சீடன் நரை திரை நீங்கி இளமை எய்தினான்.
தனது குருவுக்குப் பயந்து அவன் ஒளிந்து கொண்டான்.
மலை மீதிலிருந்து இறங்கி வந்த மூலன் தன் சீடன் எங்கே என்று தேடி, உரக்கக் கூவினான். நீ எங்கே இருக்கிறாய் என்ற குருவின் குரலைக் கேட்ட சீடன் அவர் முன்னே வந்து நின்றான். அவன் யார் என்று தெரியாத குரு அவனை யார் என்று கேட்க அவனோ நான் தான் உங்கள் சீடன் என்று சொல்ல அவர் வியந்து போனார்.
எப்படி இப்படி ஆனாய் என்று அவர் கேட்க சமைத்த சாதம் கறுப்பான சம்பவத்தைக் கூறினான்.
அந்தக் குச்சி எங்கே என்று கேட்டார் குரு.
அதை முறித்து அடுப்பில் வைத்து எரித்து விட்டேன் என்றான் சீடன்.
ஒரு கணம் திகைத்துப் போனார் குரு.
பின்னர் ஒரு யோசனை செய்தார். அவன் வாயில் விரலை விட்டு அவன் உண்ட சாதத்தைக் கக்க வைத்தார். அதைத் தான் எடுத்து உண்டார்.
அவரும் வாலிபர் ஆனார்.
இந்த அரிய சம்பவத்தைக் கொங்கு மண்டல சதகம் தன் 69வது பாடலில் கூறிப் போற்றுகிறது.
உலை வைத்துச் சமைத்துச் சாப்பிட்டுத் தன் உருவம் மாறி விட்டதால் சீடனுடைய முன் உருவம் தெரியாமல் நரைதிரை நீங்கி இருக்கக் கண்ட அவனது சற்குரு, (உண்மை அறிந்து) தன் சீடன் அருந்தியிருந்த உணவைக் கக்கச் செய்து அதைத் தானும் அருந்தி குமரன் ஆனதுவும் கொங்கு மண்டலமேயாம்.
இந்த வரலாறைக் கரபுரநாதர் புராணம் கஞ்சமலைச் சருக்கத்தில் இப்படி விவரிக்கிறது:
கரபுரநாதர் புராணம்
அந்தமா ணாக்கன் றன்னை யடுகைநீ செய்யென் றோதி
புந்தியின் மருந்து தேடிப் போயின னயலிற் சீட
னுய்ந்திடக் கருநெல் லிக்கொம் பொன்றினா வனந் துழாவ
வெந்தனங் கரிபோ லாக வெருவியன் னத்தை யுண்டான்
நரைதிரை மாறி மேனி நடந்தவீ ரெட்டாண் டேபோற்
புரையிலா வழகு பெற்றுப் புடமிடு பொன்போ லானான்.
துழாவிய கொம்பெங் கென்றான் சுல்லியிற் போட்டே னென்ன
வழாதுநீ யுண்ட சோற்றை வாயினிற் கக்கென் றோத
விழாத சோ றதனைக் கக்க மிச்சிலைக் குருவு முண்டான்
றொழாரெவ ரிவர்க டம்ப்பைச் சுந்தரப் பால ரானார்
கஞ்சமலைச் சருக்கம்
இப்படிப்பட்ட அரிய மூலிகைகள் இருப்பது பற்றி வியத்தகும் நல்ல பாடல்கள் மூலமாக அல்லவோ அறிய முடிகிற!
ஸ்வாமி சின்மயாநந்தா ஆதி சங்கரர் நூல்கள் பற்றி பவன்ஸ் ஜர்னல் இதழில் மே 1988-1989 இல் எழுதிய கட்டுரையில் 139 நூல்களின் பட்டியலைத் தருகிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com ஆதி சங்கரர் இயற்றிய நூல்களின் விளக்கத்தை ஆன்மீக சிகரத்தில் ஏறிய மகான்கள் மட்டுமே தர முடியும். இந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள். ஸ்வாமி விவேகானந்தர் தனது அருளுரைகளில் சங்கரர் பற்றிய ஏராளமான விளக்கங்களை அளித்துள்ளார். சமீப காலத்தில் காஞ்சி காமகோடி மஹா பெரியவாள் ஏராளமான உபதேச அருளுரைகளிலும் கட்டுரைகளிலும் ஆதி சங்கரரின் நூல்கள் பற்றிய விளக்கங்களைத் தந்து அருளியுள்ளார். கல்கி இதழில் வாரா வாரம் வெளியாகிய ஜகத்குருவின் அருளுரைகள் குறிப்பிடத் தகுந்தவை. அடுத்து ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த பல்வேறு துறவிகள் பல நூல்களில் விளக்கங்களை அளித்துள்ளனர். சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடத்து வெளியீடான சௌந்தர்ய லஹரி குறிப்பிடத்தகுந்த ஒன்று. அண்ணா எழுதிய இந்த விளக்க உரையில் பதத்திற்குப் பதம் தமிழில் அர்த்தம், இரகசியங்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அடுத்து ஸ்வாமி சின்மயாநந்தரின் நூல்கள் மிகத் தெளிவான விளக்க உரைகளை தந்துள்ளது. தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் பற்றிப் பலரும் எழுதிய விளக்க நூல்களை எடுத்துக் கொண்டால் பல நூறு பக்கங்களில் அதிசய விளக்கங்களைக் கண்டு பிரமித்துப் போகிறோம். இன்னும் சிலர் ஆதி சங்கரரின் ஸ்தோத்திரங்களை மொழி பெயர்த்துத் தமிழிலும் தந்துள்ளனர். tamilandvedas.com, swamiindology.blogspot.com தெய்வீக ஸ்தோத்திரங்களை சங்கரர் அருள்வாக்கில் இயற்றியதை அப்படியே கூற வேண்டும் என்றாலும் அர்த்தம் புரிந்து கொள்ள இந்தத் தமிழ்/ ஆங்கில மொழி பெயர்ப்புகள் உதவும் என்பதில் ஐயமில்லை. அடுத்து வரும் சில கட்டுரைகளில் ஆதி சங்கரரின் நூல்கள் பற்றிய சிறு குறிப்புரைகளைக் கண்டு மகிழலாம்.
Tags – ஆதி சங்கரர், இயற்றிய நூல்கள், ஸ்துதிகள், Adi Shankara Hymns
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Written by London swaminathan
நான் பேஸ் புக் (FACEBOOK) ரசிகன்; ஆனால் வாட்ஸ் அப்- (Whats up) பின் எதிரி. இருந்தபோதிலும் இவ்விரு ‘வீண் அரட்டை அரங்கங்களிலும்’ (Anti Social Media?!) பயன்படுத்தும் ‘கடவுள் இருக்காண்டா குமாரு’ என்ற வாசகம் எனக்கு மிகவும் பிடித்த கவர்ச்சிகரமான வாக்கியம் ஆகும்.
இந்தச் சொல்லாக்கத்தை யார் உருவாக்கினாரோ, அவர் வாழ்க!
தினமும் பத்திரிக்கையைத் திறந்தால் கலிபோர்னியாவில் காட்டுத் தீ (Wild Fire) ; மக்கள் ஓட்டம்; பலர் சாவு ; கருகிய காட்டு மிருகங்களின் சடலங்களில் இருந்து நாற்றம்.
இன்னொரு பக்கத்தைத் திருப்பிப் பார்த்தால் ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத புஷ் பயர் (Bush Fire) – புதர்களில் காட்டுத் தீ – அரிய கங்காரு, கோவாலா கரடிகள் சாவு- லட்சக் கணக்கில் அழிந்தன. ஹெலிகாப்டரில் இருந்து அணைக்க முயன்ற தீயணைக்கும் படையினர் பரிதாப சாவு.
மனிதனுக்கே தண்ணீர் இல்லாததால் 10,000 ஒட்டகங்கள் சுட்டுக் கொலை!
xxx
இன்னொரு நாள் பத்திரிக்கையைத் திறந்தால் கோர்னோ வைரஸ் (Corona virus) – சீன நகங்களில் இருந்து மக்கள் ஓட்டம் – எங்கும் மரண ஓலம்- உலகை மரண பயம் கௌவிக் கொண்டது. உலக சுகாதார ஸ்தாபனம் எமர்ஜென்சி அறிவிப்பு.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி (Tsunami) பேரலைகள் எழும்பி ஒரே இரவில் பல லட்சம் உயிர்களைக் காவு கொண்டது .
இது தவிர ஆண்டு தோறும் படிக்கும் வெள்ளம், வறட்சி, பஞ்சம் பட்டினி, போக்குவரத்து விபத்துகள், பூகம்பம், எரிமலை சீற்றம் , இடி மின்னல் தாக்குதல், பாம்புக்கடி சாவுகள்!!!
இவை யாரையும் துயரத்துக்கு ஆளாக்குவதில்லை. ஏனெனில் உலகில் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டே இருக்கும். நம்முடைய உணர்வுகள் மரத்துப் போய்விட்டன
புதியது என்ன?
முன்னர் போரில் (War) செத்தார்கள். இப்போது பயங்கரவாதிகளின் (Terrorists’ Bomb attacks) குண்டு வெடிப்பில் சாகிறார்கள். அதாவது மனிதன் இன்னும் மிருக மாகிவிட்டான் .
எவ்வளவு விஞ்ஞான முன்னேற்றம் இருந்தும் ஒரு எய்ட்ஸ் (AIDS) நோய் வந்து பயமுறுத்துகிறது; ஒரு கோர்னோ வைரஸ் வந்து பயமுறுத்துகிறது. இவை அனைத்து ம் பொருளாதார தாக்கங்களையும் (Economic Impact) உண்டுபண்ணுகின்றன.
மேல் உலகத்தில் இருந்து கடவுள் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கிறாரோ??
கடவுள் இருக்காண்டா குமாரு.
நம்புங்கடா ! கடவுள் இருக்காண்டா குமாரு!
xxx
லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து
எல்லோரும் இன்புற்றிருப்பது அன்றி யாம் ஒன்றும் அறியோம் பராபரமே !